Search This Blog

19.2.08

இராமாயணக் கதை தமிழனை இழிவுபடுத்துகிறது-

இராமன் தமிழன் அல்லன்; இராமன் நமிழ் நாட்டவனுமல்லன்; அவன் வடநாட்ட-வன்; இராமன் கொன்ற மன்னன் இராவணனோ-தென்னாட்டவன்.

இராமனிடம் தமிழர் பண்பு (குறள் பண்பு) என்பது சிறிதும் இருந்ததாக இல்லை; இராமன் மனைவியும் அதுபோலவே வடநாட்டவள்.

அவளிடம் தமிழ்ப்பெண் பண்பு இல்லவே இல்லை.
அதில் தமிழ்நாட்டு ஆண்களைக் குரங்கு, அரக்கன் என்று குறிப்பிட்டு இருக்கிறது.
தமிழ் நாட்டுப் பெண்களை அரக்கி என்று குறிக்கப்பட்டு இருக்கிறது.
இராமாயணப் போராட்டத்தில் ஒரு பார்ப்பனர்கூட சிக்க(கிடைக்க)வே இல்லை. போரில் ஒரு வடநாட்டானோ, ஆரியனோ, பார்ப்பானோ (தேவரோ) சிக்கவே இல்லை.
கொல்லப்பட்டவர்கள், செத்தவர்கள் எல்லோரும் தமிழ் நாட்டவர்களே ஆவார்கள்.
இராவணன், இராமன் மனைவியைக் கொண்டு போனதற்காக இலங்கைக்கு ஏன் நெருப்பு வைக்க வேண்டும்? இராமாயணக் கதை தமிழனை இழிவுபடுத்துவது தவிர, அதில் வேறு கருத்து இல்லை. தமிழ்நாட்டில் இராமாயணத்தையோ, இராமனையோ வைத்திருப்பதானது மனித சுயமரியாதைக்கும், இன சுயமரியாதைக்கும், தமிழ் நாட்டுச் சுயமரியாதைக்கும் மிகமிகக் கேடும், இழிவுமானதாகும்.

இராமாயண இராமன், சீதை ஆகியவர்-களைப் பொறுத்தவரைக்கும் கடுகளவாவது கடவுள் தன்மை என்பது காணப்படவில்லை. நாடு சுதந்திரம் பெற்றவுடன் நாட்டிலுள்ள இடங்களுக்கும், பல ஸ்தானங்களுக்கும் வெள்-ளையர் பெயர்களை மாற்றி இந்நாட்டவர் பெயர்களை வைத்தது போலும்;
வெள்ளையர் உருவங்களைப் பெயர்த்து அப்புறப்படுத்தியிருப்பது போலும்;
தமிழன் சுயமரியாதை உணர்ச்சி பெற்ற பிறகு, தமிழர்களை இழிவுபடுத்திக் கீழ்சாதி மக்களாக்கிய ஆரியச் சின்னங்களையும், ஆரியக் கடவுள்கள் என்பதான உருவங்-களையும் அழித்து ஒழிக்க வேண்டியது சுத்த இரத்த ஓட்டமுள்ள தமிழன் கடமையாகும்.

--------- தந்தைபெரியார் -- "விடுதலை" அறிக்கை-29.7.1956

இராமாயணம் புனைந்ததன் இலட்சியம்

இந்நாளில் வெளியிடப்படும் வால்மீகி இராமாயணங்களின் புதிய பதிப்புகளில் மாறுதல்கள் செய்துகொண்டு வருகிறார்கள். உண்மையை மறைத்து விடுகிறார்கள். இராமாயணத்தின் உட்கருத்து என்ன? ஆரியர்-கள் தமக்கு உரிமையில்லாத நாட்டில் தாம் வாழ்வதற்கு வழிதேட முயன்றதைப்போலவே இராமாயணம் அமைந்திருக்கிறது; பார்ப்பனர்-ஆரியர்கள் மானம் அவமானத்துக்கு கவலைப்-படுவதாகவோ, நேர்மை, ஒழுக்கம், நீதியுடைய மக்களாகவோ இராமாயணத்தில் சுட்டிக்காட்-டப்பெறவில்லை. மானத்தை விற்றேனும் உயிரைக் காப்பாற்ற வேண்டும்; வாழ்க்கை நடத்தவேண்டும் என்றே பார்ப்பனரைச் சிந்தரித்து எழுதிவைத்துள்ளனர். இராவண-னைக் கொல்ல வேண்டுமானால், அவனைச் சீதைமூலம் சுவாதினப்படுத்த வேண்டும்; சீதையைக் கெடுத்தவன் என்ற காரணத்தைக் காட்டி அவனைத் தொலைக்க வழி வகுக்-கலாம் என்று முன் கூட்டியே தீர்மானித்-திருப்பதாகத் தெரிகிறது. இராமன் ஒரு பேடியே. நேர்மை, ஒழுக்கம் இவற்றால் காரியம் சாதிக்க வழி கிடையாது என்பது அவர்கள் கருத்து. பேடித்தனமாக, சூதாக-மறைந்து நின்றே இராமன் தாடகையைக் கொன்றிருக்கிறான். வாலியையும் மறைந்திருந்தே-மரத்தின் மறைவில் ஒளிந்திருந்தே கொன்றிருக்கிறான். இராவண-னையும் அப்படித்தான்; இராவணனுடைய அந்தரங்க விஷயங்களையும் (மறைபொருளையும்) இன்னும் பிற செய்திகளையும் விபீஷணன் மூலம் அறிந்து கொண்ட பிறகே, இராவணன் தம்பியான விபீஷணனுக்கு இலஞ்சத்தைக் (நாட்டாட்சி) கொடுத்தே-இராவணனைக் கொன்றிருக்கிறான். இராமனுக்கும், இராவணனுக்கும் நடந்த போர் நேருக்கு நேர் நின்று சட்டையிட்ட போர் என்பதற்கில்லை. பார்ப்பனர் ஏமாற்று வாழ்வு, தங்கள் நன்மைக்காக ஒழுக்கக் கேடான காரியங்களைச் செய்துகொள்ளலாம். சுயநல வாழ்வுக்கு வேண்டிய புரட்டுகளை-பித்தலாட்டங்களை ஒரு மார்க்கமாக அமைந்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது குறிக்கோள். அதற்காகவே கடவுள்களைப் படைத்து, அவைகளுக்குப் பல அவதாரங்கள் உண்டு என்று புளுகித் தாம் வழுதியவற்றைப் பண்ணிய சரித்திரம் எனச்-சொல்லித் தமிழர்களை ஏமாற்றி வாழ்ந்து வருகின்றனர். வேத சாஸ்திர இதிகாசம் அனைத்தும் இயற்கைக்கு மாறானவை. அவற்றை எல்லாம் சிந்தத்துப் பார்ப்பதும்-பகுத்தறி-வைக் கொண்டு ஆராய்வதும் மதத்துக்கே விரோதம், வகுப்புத் துவேஷம், நாத்திகம் என்று நம்மேல் பழி சுமத்துவார்கள்.

34 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னோம். திருப்பூரில் 1922ல் காங்கிரஸ் மாநாடு நடந்தது; வாசுதேவ அய்யர் தலைமை தாங்கினார். நான் அப்போது தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவனாக ஆக்கப்பட்டேன். அதுவரை தமிழ்நாடு காங்கிரசின் காரியதரிசியாக இருந்தேன். அம்மாநாட்டில் நான் ஒரு தீர்மானம் கொண்டுசென்றேன். இந்து மதத்திலே சாதி வேற்றுமையும், தீண்டாமையும் இடம் பெறுகின்றன. அத்தீர்மானத்தைப் பல வகையில் பார்ப்பனர்கள் தடைசெய்ய முயற்சி செய்தார்கள். இந்து மதத்தில் சாதி இடம் பெறுவதாக ஒப்புக் கொள்ளவில்லை. இராமாணத்தில் பல இடங்களில் சாதி குறிப்பிடப்படுகிறது. சூத்திரன் தவம் செய்ததற்காகக் கொல்லப்-படுகிறான். பார்ப்பான் என்று 1000 இடங்-களுக்கு மேல் இராமாயணத்தில் வருகிறது.

-----தந்தைபெரியார் அங்கேரிபாளையத்தில், 11.8.19576-ல் சொற்பொழிவு விடுதலை-17.8.1956

இராமாயணத்தில் அவரவர் சாதி-களையும், பிரிவுகளையும் தானே நிலை-நாட்டுகிறது. ஒரு இடத்தில் அனுமார், இராமன் காலில் விழுகிறான். இராமன் அனுமாரைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கிறான். நீயோ ஒரு பிராமணன், நான் ஷத்ரியன், என் காலில் வந்து விழலாமா? இந்தப் பாவத்தை நான் எங்கே போய்த் தீர்ப்பேன் என்று கூறுகிறான். இராமன் அயோத்தியிலிருந்து காட்டுக்குப் புறப்படும் சமயம், என் பணத்-தையும், சொத்துக்களையும், என்னிடத்-தில் இப்போதிரு-க்கும் மாடுகளையும் கொண்டு-வாருங்கள். முழுவதையும் பிராமணருக்குக் கொடுத்து விடுகிறேன் என்பதாகச் சொல்லு-கிறான். சீதை, என் நகைகள் முழுவதையும் கொண்டுவாருங்-கள். பிராமணனுக்குக் கொடுத்து-விட்டுப் போனால் புண்ணியம் என்பதாகச் சொல்-கிறாள். சூர்ப்பனகை, என்னைத் திருமணம் செய்துகொள் என்று கேட்கும்-போது, நீ ஒரு சாதி, நான் சாதி, எப்படித் திருணம; செய்து கொள்வது? என்கிறான். ஒரு இடத்தில் தாடகை மகனை இலட்சுமணன் கொன்று-விட்டு, இந்தப் பாவத்திற்கு என்ன செய்வேன் என்று வருத்தப்பட்டுக் கொள்-கிறான். அதற்கு இராமன் சூத்திரனைத்தானே கொன்றாய், அதனால் பாவமில்லை. கவலையை விடு என்று கூறுகிறான். சம்புகன் ஒரு சூத்திரன். அவன் தவம் செய்ய உரிமை-யில்லை என்று கூறி அவனைக் கண்டங்-கண்டமாக வெட்டி விடுகிறான். இப்படி எங்கு பார்த்தாலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வருணாசிரம தர்மம் தாண்டவமாடுகிறது. இப்படி இருக்கும் இராமாயணத்தைக் கொளுத்த வேண்டும் என்பதில் என்ன தப்பு, ஓட்டு கேட்க இதைக் காட்டி உங்களை ஏமாற்றுகி-றோமா? இதைச் செய்து யாராவது வயிறு வளர்க்கிறோமா?

------ தந்தைபெரியார் மேலகற்கண்டார் கோட்டையில் சொற்பொழிவு-விடுதலை 13-9-1956

0 comments: