Search This Blog

29.2.08

ஜாதியை ஒழிக்க விரும்புவோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்யவேண்டும்!

ஜாதியை ஒழிக்க விரும்புவோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்ய வேண்டுமென இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் சி.மகேந்திரன் பேசினார்.நாளை விடியும் சிற்றிதழின் 10 ஆண்டு பணிகள் - ஓர் மீள் பார்வை நிகழ்ச்சி அய்க்கப் அரங்கில் நடைபெற்றது. அப் போது பேசிய சி.மகேந்திரன்,

"அரசியல் இலக்கியப் பின்புலம் இல்லாமல் ஒரு இதழை நடத்து வது பெரும் சிரமம். ஆனால் இவ்விதழை தனி மனிதராக 10 ஆண்டுகள் நடத்தி வருவது சாதனைதான். தமிழ்ச் சமூகம் குறித்து எல்லோரும் கவலைப் படுகிறார்கள். ஆனால் உழைப்பு குறைவாக இருக்கிறது. பலரும் இயங்கிக் கொண்டே, இருக்கும் போதுதான், ஒரு சமூகம் விழிப்பு ணர்வுடன் இருக்கும்.

இந்தி எனும் ஒரு மொழியே கிடையாது. வட இந்தியாவின் பல்வேறு மொழிகளையும் சிதைத்து உருவான மொழி தான் இந்தி. சமஸ்கிருதத்தை எதிர்த்து சமரசம் செய்து கொள்ளாமல் நிமிர்ந்து நிற்கிற ஒரே மொழி தமிழ்தான்! மொழி குறித்து சில பொது வுடமைக்காரர்கள் கூட தவறாக எண்ணுகின்றனர். பொருளா தார வளர்ச்சிக்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ, அது போல சமுதாய மேம்பாட்டிற்கு மொழி முக்கியம்.
தமிழர்களின் பண்டைக் கால அறிவு, ஆற்றல்கள் மிகவும் அற்புதமானவை. இன்றைக்கு இடையில் வந்த ஜாதியால் தமிழன் பிளவுபட்டு நிற்கின் றான். ஜாதி மறுப்புத் திருமணங் கள் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் ஜாதி ஒழியும். நான் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவன்.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்த தோழர்கள் தொடர்ந்து போராடத் தயங்குகின்றனர். அவர்களுக்கு ஒரு குழந்தை வருகிற போது மீண்டும் அவர்கள் இருவரில் எந்த ஜாதி பலமிக்கதோ அதில் ஒட்டிக் கொள்கிறார்கள். ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்தவர்கள் ஒருங்கிணைய வேண்டும். அவர் களுக்குள் உதவிக் கொள்கிற, உணர்வுகளைப் பாதுகாத்துக் கொள்கிற அமைப்புகள் வேண்டும்.

கருப்பையை வெட்டி எறியாமல் பெண் விடுதலை பெற முடியாது எனத் துணிச்ச லாகச் சொன்ன ஒரே தலைவர் உலகில் பெரியார் மட்டுமே! மொத்தத்தில் மனுதர்மத்தைத் தகர்க்காமல் சமூகம் மேன்மை யுற முடியாது" என சி.மகேந்திரன் பேசினார்.

------------------- "விடுதலை"-27.2.2008

0 comments: