Search This Blog

24.2.08

“நடைப்பாதைக்கோயில்களை எல்லாம் சிறிதும் தயக்கமின்றி இடித்துத்தள்ளுங்கள்”

இந்த மாபெரும் விழாவில் ஒன்றே ஒன்றை மட்டும் கூறி அமையவிரும்புகிறேன். பெரியாருக்கு தியாகி மான்யம் கொடுப்பது பற்றி யோசிக்கப்படுமா என்று சட்டசபையில் கேட்கப்பட்டது. அப்பொழுது முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், “இந்தத்தமிழக அரசே பெரியாருக்குக் காணிக்கை என்று கூறினார்கள். அவ்வளவு தூரம் வேண்டாம்-இந்த அரசை நான் உங்கள் சார்பாக கேட்டுக்கொள்வதெல்லாம், “நடைப்பாதைக்கோயில்களை எல்லாம் சிறிதும் தயக்கமின்றி இடித்துத்தள்ளுங்கள்” என்று; இதை இடிப்பதால் பக்தர்கள் மனம் புன்படாதா என்று உடனே கொதித்து எழுவார்கள். அவர்களுக்கெல்லாம் நான்கூறுவேன். இப்படிக் கொதித்து எழுபவர்கள் போலிப் பகதர்கள்; மத்த்தைப் பற்றி, ஆகமத்தைப்பற்றி அறியாத அறிவிலிகள். ஆகமத்தில் என்ன கூறியிருக்கிறது என்றால், 31 கலச நீராட்டி, மதச் சடங்குகளோடு நிறுவப்பட்டவுடன்தான் அந்தச் சிலை வடிவாக இருக்கின்ற சாமிக்குத் தெய்வீக சக்தி வருகிறது. இவ்வாறு நான் கூறவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அர்ச்சகர் வழக்கின்போது ஜஸ்டிஸ் பாலேகர் அவர்கள் கூறினார். ஆகவே, ஆகமத்தின்படி இவை ஆலயங்கள் இல்லை- நமக்கோ அதைப்பற்றிக் கவலையே இல்லை-போக்குவரத்திற்கோ இடைஞ்சல்-இந்த நிலையில் இடித்தால் யாருக்கு நஷ்டம்? இந்த அரசு தயங்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.

எந்தெந்தக் கொள்களைகளுக்காக வாழ்ந்து மடிந்தாரோ அந்தக் கொள்களைகளைப் பின்பற்றி நட்டப்பதுதான் அய்யாவுக்குச் சிறந்த அஞ்சலியாகும். அஞ்சல் தலையோடு நின்றுவிடக்கூடாது என்று கூறி அமைகிறேன்.

(17-9-78 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற “தந்தைப் பெரியார் நூற்றாண்டு விழா’வில் கலந்து கொண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு மோகன் அவர்கள் ஆற்றிய உரை)

0 comments: