Search This Blog

1.2.08

கிருஸ்ணபகவானுக்கு புத்தி உண்டா?

குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தன. குடும்பம் பெருத்துவிட்டது.அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக்கதை சொல்லுகிறது. குசேலர் பெண் சாதி குறைந்தது வருடத்திற்கு ஒரு பிள்ளையாகப்பெற்று இருந்தாலும் கைகுழந்தைக்கு ஒரு வருடமாவது இருக்குமானால், மூத்த பிள்ளைக்கு 27 -வது வருடமாவது இருக்கும் 20 வயசுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள் இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசு கூட சம்பாதிக்காத சோம்பேறிகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருடத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு பிச்சைக்குப் போகக் குசேலருக்கு வெட்கமிருந்திருக்காதா? அல்லது பிச்சை போட்ட கிருஸ்ணபகவானுக்காவது "என்ன பெரிய வயது வந்த பிள்ளைகளை தடிப்பயல்களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே,வெட்கமாக இல்லையா?" என்று கேட்கக்கூடிய புத்தி இருந்திருக்காதா?


--------------தந்தைபெரியார் - "84 ஆம் ஆண்டு பெரியார் பிறந்த நாள் மலர்" பக்கம் 43

---------நன்றி: www.jaathiolippu.blogspot.com

0 comments: