Search This Blog

6.7.12

பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - பக்திரசமா? காமரசமா?

பாகவதம் ஓர் ஆராய்ச்சி புராணங்கள் - 6
பக்தி ரசமா? காம ரசமா?

ஸ்ரீமகா பாகவதம் (சித்திரப்படங்களுடன்) என்ற புனித இதிகாச பாகவதத்தில் கடவுள் லீலைகளைப் பாருங்கள் - படியுங்கள்.

இவ்விதமாக முப்பது நாளும் விரத யாத்திரையாகச் செல்லும்போது கடைசி நாள் முன்போலவே கோபகன்னியா ஸ்திரீகள் யாவரும் ஸ்ரீ கிருஷ்ண குண கீர்த்தனங்களைச் செய்து கொண்டு நதிதீர சமீபத்திற்கு வந்து

பரிசுத்தமான ஏகாந்த பிரதேசத்தில் தங்கள் விலையுயர்ந்த வஸ்திரங்களைக் களைந்து அடையாளமாக வைத்து நிர்ப்பயர்களாய் அம்மகா நதியிலி றங்கி ஸ்ரீ ஹரியோஹரியென்று ஸ்ரீபகவன் நாமங்களை தியானித்துக் கொண்டு ஸ்நானஞ் செய்து, அந்த ஜலமத்தியில் சரஸாநந்தத்துடன் ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய லீலாகுண வைபவங்களைப் பாடி, அந்த ஜலத்தை வாரிவாரி யொருவர்க்கொருவர் ஜலவசந்தங்களாடி அடை தற்கரிய பகவத் குணாதிசயங்களையனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில் சர்வ லோகரக்ஷகரான ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகைகள் தீர்த்தமாடுகிற வைபவங்களை அறிந்து தாம் வெகுதூரத்திலிருந்து ஏதோ ஒரு கார்யார்த்தமாய் வருகின்றவரைப் போலத் தன்னுடன் கூட வந்தவர்களை கண்ஜாடை காட்டி ஒரு பிரதேசத்தில் செய்யாமிருக்கச் செய்து, சந்தடி செய்யாமல் தாம் ஒருத்தரம் புறப்பட்டு அங்கங்கு ஒளித்து மெதுவாய் மறைந்து வந்து தாமே களைந்து வைத்தவரைப் போல எல்லா வஸ்திரங்களையும் கிரகித்துக் கொண்டு உடனே கனைத்து மத யானையைப் போலக் கம்பீரமாக நடந்துவிட புருஷனைப் போல அந்த வஸ்திரங்களையெல்லாம் கைகளில் சேர்த்துப் பிடித்துக் கொண்டு தமது லீலைக்கனுகுணமாய் ஒத்த பருவங்களையுடைய இந்த கோப கன்யாகுமரிகளைப் பார்த்து ஏளனமாகிய வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு அந்நதிக் கரையில் தழைத்து புஷ்பித்து விருத்தியடைந்திருக் கின்ற ஒரு கடம்ப விருக்ஷத்தின்மீது தாவி ஏறி, அதன்மீது இவ்வஸ்திரங்களை வைத்துத் தாம் அவ்விருக்ஷத்தின்மேல் நின்று, அதன் பூர்வ கர்ம பாபத்தை நீக்கிப் பரிசுத்தஞ்செய்து மோக்ஷத்திற்குக் காரணமாகும்படி கிருபை செய்தார்.

அத்தருணத் தில் அந்தச் சுந்தரவதிகள் கழுத்தளவு ஜலத்திலிருந்து ஸ்ரீ பகவானுடன் சுகுமாரமாக வசனிக்கலாயினர்.- இந்தப் பகுதியை அப்படியே வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டால் அதை அவர்கள் - வெளிநாட்டவர்கள் - கடவுளின் லீலைகள் என்று கூறுவார்களா? அல்லது Pornographyஆபாச எழுத்துக்கள் என்று கூறுவார்களா?

சராசரி மனிதர் எவராவது, பெண்கள் குளிக்குமிடத்திற்குச் செல்லுவார்களா?

சென்றாலும் அங்கு தங்கி (மரத்தின்மீது ஏறிக்கொண்டு வேடிக்கைப் பார்ப்பார்களா?

அதற்கு மேலும் அந்த கோபிகைகளின் சேலைகள் கரையில் களைந்து வைக்கப்பட்டவைகளை திருடி, மரத்தின்மேல் உட்கார்ந்து நிர்வாண அம்மண, அம்மணிகளை நீரைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரச் சொல்லி அழகை சுவைத்து ஆபாச காட்சிகளை அரங்கேற்றி கைகளை மேலே உயர்த்திக் கேட்க சொல்லுவதைப் பற்றி பாகவத வசனம் படிப்போற்கு சொட்டுவது பக்தி ரசமா? காம ரசமா? இதைப் படமாகவும் அல்லவா வரைந்து பாகவதம் மொழிபெயர்த்தோர் போட்டுப் பரவசம் அடைந்திருக்கிறார்கள்.

என்னே கொடுமை! ஸ்ரீ கோபகன்யா சமூகங்களினுடைய சம்வாதம்ஹே! எமதுயிர்க்குயிரான ஸ்ரீ முத்துகிருஷ்ண பகவானே! நீரிந்த நந்தவிரஜத்தில் அவதரித்து, எங்கள் மனதை யபகரித்ததுமன்றி, எங்களுடைய மர்மாவயவமான தனங்களையும் அபகரிக்கின்றது தர்மமோ? ஈதென்ன ஆச்சரியம்.

நாங்கள் களைந்து வைத்த விழுப்பு வஸ்திரங்களை ஸ்பரிசித்து அவற்றைச் சுமந்து போகக்கூடுமோ? உமது கிருபையினால் எங்களை யடிமைகொண்டு எங்கள் இஷ்டங்களைத் தீர்க்கும்படியான அம்மான் மகனாகிய மைத்துனனாகவே இருக்கின்றீர்.

இப்போது எங்களை மன்னித்து அவைகளை கிருபையோடுக் கொடுத்து எங்கள் மானதனங் களை நிலை நிறுத்தி ரக்ஷிக்கக் கடவீர் என்று பிரார்த்தித்தார்கள்.

சிலர் ஸ்ரீ கோபாலகிருஷ்ணனே! அன்யர்கள் நம்மிடவர்கள் என்பதில்லாத அபேதகுணங்களை வகித்துச் சர்வத்திர்களிடத்திலும் முறை தப்பின வரே! நன்றாய் விளங்கிற்றே இச்செய்கை! சர்வ சம்பத்கர நித்யைஸ்வர்ய பிரதனாய் விளங்கவோ? சமஸ்தமான சேதனா சேதனங்களுக்கும் ஆகார பூதையான இப்பூமிதேவியை மஹார்ணவத்தில் மூழ்கிக் கரைந்து போகாமல் நிலை நிறுத்தவோ? மானிட சிம்ஹனாய் பிரகாசித்துச் சர்வாசுரசம் மாரம் செய்து பக்த பராதீனராய்க் காட்டி மறைக்கவோ? பலிச் சக்ரவர்த்தியினிடத்தில் யாசிக்கின்றவரைப்போல மாயாசிறு குட்டனாய் வந்து அவனுடைய ஐஸ்வரியகர்வங்களை யபகரித்து ஸ்ரீ திரிவிக்கிரமராய்ப் பிரகாசித்துக் கீர்த்தி வகிக்கவோ? சகல அரசர்களுக்கும் பிரபுவாய் ராஜராஜேஸ்வரராய்ச் சகல சத்துருசங்காரஞ் செய்து நிகில ஜனங்களையும் இரக்ஷித்து உத்தரிக்கவோ? சர்வ குருஜனங்களுக்கும் குருசிகாமணியாகி மஹா மஹனீய குணாதிசயங் களை வகிக்கவோ? அல்லது மிகவும் பேதைகளாகிய எங்களையொத்த ஸ்திரீ ஜனங்களுக்கு வசியராய் நாங்களிட்ட வழக்குக் குரியராய் எங்களுக்குப் பணி செய்யவோ? அறிகின்றிலோம்.

இவ்வளவு பெருமை வகித்தது போதும் எங்களுக்குக் கிருபை செய்து எங்கள் கலைகளைத் தருவீர்என்று வேண்டிக் கொண்டார்கள். சிலர் பக்தவத்ஸலனாகிய ஸ்ரீ கிருஷ்ணா! நன்றாயிருந்தது.

நீ சுலபனாய் முன்னமே எங்கள் மனதை யபகரித்தாய். கிரமக்கிரமமாய் எங்கள் மர்மாவயமான தனங்களையும், சுபாவ தர்மங்களாகிய நாண யங்களையும், வஸ்திரங்களையும் அபகரித்தது மன்றி, எங்கள் சர்வேந்திரியங்களையும் உனக்கு அடிமையாக வெழுதிக் கொண்டாய்.

பின்பு இன்னமுமென்ன செய்வாயோ வென்றார்கள். ஸ்ரீ பத்ம தளாக்ஷனாகிய எங்கள் பிரபுவே! நீங்கள் ரஜோகுணப் பிரபாவங்களினால் இந்த சர்வப் பிரபஞ்சங்களிலும் மிகவும் ஆச்சரியமாகிய விசித்திர சிருஷ்டி முதலிய செய்கைகளை யாசரிக்கிறவனென்று அறிந்தேயிருக்கின் றோம்.

உனது சத்வ குணத்தினால் சகல புவனங்களையும் மங்களகரமாக ரக்ஷித்துச் சதுர்வித புருஷார்த்தங்களைக் கொடுக்கத்தக்க ஐசுவரியமுடையவனாகியும், அன்னியர்களால் ஜயிக்க வொண்ணாதவனாகியும் விளங்குகின்ற உன்னை நாங்கள் தியானித்துக்கொண்டே இருக்கின்றோம்.

உனது தமோகுணா விசேஷத்தி னால் பயங்கரமான சக்திகளை வகித்து லோகாரி ஷ்ட நிவாரணங்களைச் செய்து எப்போதும்போல மூன்று குணங்களையும் ஒருமிக்க அடைந்து மிகவும் சோதிமய விக்ரஹனாகியும் ஏகனாகியும் விளங்குகின்றாயென்று நாங்கள் கேள்விப்பட்டு உன்னையே பர்த்தாவாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

இப்படிப்பட்ட நீ மகா மாயாவியாய் விசித்திர லீலாதிசயங்களை யநுஷ்டித்துக் கொண்டு பல மூர்த்தியாய் நானாவித ஜாடைகளை வகித்து ஒருவராலும் இப்படிப்பட்ட தன்மையை யுடையவனென்று அறிதற்கரியவனாகி சற்றுநேரமும் ஒழிவில்லாமல் வியாபித்துச் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற உன்னுடைய வல்லமைக்கு எங்கள் மனதைச் சோதிப்பது தகுமோ?

தயவுசெய்து கடாக்ஷத்திற்குப் பாத்திரைகளாகிய எங்கள் வஸ்திரங்களைக் கொடுத்தருள்வாய் விபுவே யென்றார்கள். இவ்விதம் கோபிகைகள் பிரார்த்திக்க மகா மாயா சாதுர்ய நடன மூர்த்தியாகிய ஸ்ரீ பகவானானவர் புன்னகையுடன் அந்தக் கன்னியாஸ்திரீகளைப் பார்த்துக் கம்பீரமாகச் சொல்லுகின்றார்.

--------------------------- கி.வீரமணி அவர்கள் ஜீலை 1 15 2012 “உண்மை” இதழில் எழுதிய கட்டுரை

3 comments:

தமிழ் ஓவியா said...

தாம்பரத்திலிருந்து சிங்கள வீரர்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் பயிற்சி: மத்திய அரசு


சென்னை: தமிழ்நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த 9 சிங்கள வீரர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவின் வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சார்க் நாடுகளின் விமானப் படை வீரர்களுக்கு 9 மா தொழில்நுட்பட பயிற்சி சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த பயிற்சி தொடங்கியது. இதில் சிங்கள வீரர்கல் 9 பேரும் இடம்பெற்றிருந்தனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தாம்பரம் விமானப் படை தளத்தை முற்றுகையிட்டு மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி போராட்டமும் நடத்தின. மத்திய அமைச்சர் வாசனும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்ற 9 சிங்கள வீரர்களையும் வெளியேற்றவும் அவர்களுக்கு வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்கவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.6-7-2012

தமிழ் ஓவியா said...

தாம்பரத்திலிருந்து சிங்கள வீரர்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் பயிற்சி: மத்திய அரசு


சென்னை: தமிழ்நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்பால் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்று வந்த 9 சிங்கள வீரர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு இந்தியாவின் வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சார்க் நாடுகளின் விமானப் படை வீரர்களுக்கு 9 மா தொழில்நுட்பட பயிற்சி சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப் படை தளத்தில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த பயிற்சி தொடங்கியது. இதில் சிங்கள வீரர்கல் 9 பேரும் இடம்பெற்றிருந்தனர். இதற்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தாம்பரம் விமானப் படை தளத்தை முற்றுகையிட்டு மதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி போராட்டமும் நடத்தின. மத்திய அமைச்சர் வாசனும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தாம்பரம் விமானப் படை தளத்தில் பயிற்சி பெற்ற 9 சிங்கள வீரர்களையும் வெளியேற்றவும் அவர்களுக்கு வேறு ஒரு இடத்தில் பயிற்சி வழங்கவும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளது.6-7-2012

ttpian said...

so, SL Airforce bastards will be asked to take training from Bangalur:
Ha...ha...
so srilankan airforce man cannot reach Chennai air base?
who is cheating who?