Search This Blog

19.7.12

50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு செய்யக் கூடாதா?


69% இடஒதுக்கீடு

தமிழ் நாட்டில் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கென இட ஒதுக்கீடு என்பது செயல்பட்டு வருகிறது.

76 ஆவது இந்திய அரசியல் சாசனத் திருத்தம் பெற்று, ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்புடன் இருந்து வருகிறது. இந்த அளவு பாதுகாப்பாக வேறு எந்த மாநிலத்திலும் இட ஒதுக்கீடு இல்லை.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே முதன் முதலாக நீதிக்கட்சி ஆட்சிக் கால கட்டத்தில் தான் தமிழ்நாட்டில் சமூக நீதிக் கொடி உயர்த்தப்பட்டது. அந்த ஆணை செல்லாது என்று உச்சநீதிமன்றம் வரை தீர்ப்புக் கூறிய நிலையில், எதிர்த்துப் போராடி, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முதல் திருத்தம் கொண்டு வருவதற்குக் காரணம் தமிழ்நாடே - தந்தை பெரியாரே - திராவிடர் இயக்கமே!

கடந்த 60 ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வளவோ இடர்பாடுகள் - முட்டுக் கட்டைகள் இருந்தன என்றாலும், சமூக நீதி வளம் - பலம் வாய்ந்த தந்தை பெரியார் அவர்களின் தமிழ் மண் அவற்றையெல்லாம் முறியடித்து, இந்தியாவுக்கே வழிகாட்டிக் கொண்டுள்ளது.

50 விழுக்காட்டுக்கு மேல் இட ஒதுக்கீடு செய்யக் கூடாது என்று இந்திரா-சகானி வழக்கில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பு ஒன்றை வழங்கிய நிலையிலும் கூட, அதிலிருந்து மீண்டிட, புதிய சட்டம் ஒன்றினைக் கொண்டு வர வரைவுச் சட்டம் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களே!

முதல் சட்டத்திருத்தம் என்று வருகிறபோது எப்படி தந்தை பெரியார் நினைவு கூரப்படு கிறார்களோ, அது போல 76 ஆவது சட்டத் திருத்தம் என்கிறபோது, தந்தை பெரியார் அவர்களின் அருமைச் சீடர் மானமிகு கி.வீரமணி அவர்கள் நினைவு கூரப்படுவார் என்பது வரலாற்றுக் கல்வெட்டே!

இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. என்றாலும், இதுவரை இந்தச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறிடவில்லை. 69 சதவிகித இட ஒதுக்கீடு கறாராகச் செயல்பட்டுதான் வருகிறது.


13-7-2010 முற்பகலில் இந்தப் பிரச் சினையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கபாடியா, ராதாகிருஷ்ணன், சுதந்திர குமார் ஆகியோர் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் முக்கியமாகக் குறிப்பிட்டு இருப்பதாவது:

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் கருத்து - மொத்த மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர் விகிதாசாரம் இவற்றையெல்லாம் ஆராய்ந்து 50 சதவிகி தத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து ஓராண்டுக்குப் பின் முடிவு செய்யலாம் என்று மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கூறியது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறை யில் இருந்து வரும் 69 விழுக்காடு இட ஒதுக் கீட்டை எதிர்த்து 12 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். 12 வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது, உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கினை அனு மதிக்கலாமா என்ற வினா ஒரு பக்கம் இருந் தாலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்னும் முற்றுப் பெறாத நிலையில், இது தொடர்பான எந்த ஆணையையும் நீதிமன்றம் வழங்கிட வாய்ப்பில்லை என்பதுதான் இன்றைய நிலை யாக இருக்க முடியும்.
தமிழ்நாடு அரசும் உரிய முறையில் ஆய்வு செய்து, போதிய கவனம் எடுத்துக் கொண்டு செயல்படவேண்டும் என்பதே நமது முக்கிய வேண்டுகோளாகும்.

-------------------”விடுதலை”தலையங்கம் 19-7-2012

17 comments:

ttpian said...

உண்மைதான்:

கடைசி பாப்பானும்,

கடைசி பாப்பாத்தியும்

இருக்கும்வரை,

தமிழ் இனம் மற்றுமல்ல

வேறு எந்த இனமும் வாழவோ வளரவோ முடியாது.....

தமிழ் ஓவியா said...

காஞ்சி சங்கராச்சாரியார்மீது திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வழக்கு


சென்னை, ஜூலை 19: காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் தினமலர் ஆசிரியரும், பதிப்பாளரும் வெளியீட்டாளருமான ஆர்.ராகவன் ஆகியோர் மீது திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ. அன்புராஜ் சென்னை எழும்பூர் முதன்மைப் பெருநகர மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் தொடுத் துள்ள அவதூறு வழக்கின் விபரம் பின்வருமாறு:

அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ள தாவது:

திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் செயலாளர் என்ற முறையிலும், திராவிடர் கழகத் தலைவர் திரு.கி.வீரமணி அவர்களின் மகன் என்ற முறையிலும், எங்கள் குடும்பத்தைப் பற்றி அவதூறான பேச்சினை காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி பேட்டியில் தெரிவித் துள்ளார்; அதனை தினமலர் பத்திரிகையில் பதிப்பாளர், வெளியீட்டாளர், ஆசிரிய ருமான ஆர்.ராகவன் தனது பத்திரிகையில் வெளியிட்டுள்ளார்.

நாத்திகக் கருத்தைப் பின்பற்றி, பரப்பி வரும் எங்கள் குடும் பத்தின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் செய்தியை பரப்பி உள்ளது. தினமலர் வெளியிட்டிருந்த செய்தியில் திரு.கி. வீரமணி அவர்களின் இளைய சகோதரர் ஜெயேந்திரரை சந்தித்துப் பேசியதாகக் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஒரு மடத்தின் தலைவர் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் ஜெயேந்திரர் திரு.வீரமணி அவர்களுக்கு இளைய சகோதரர் எவரும் இல்லை என்பதை நன்கு அறிந்திருப்பவர்.

மேலும் திருமதி வீரமணி அவர்களும் ஜெயேந்திரரை சந்தித்துப் பேசியதாகக் கூறியிருப்பதும் முற்றிலும் அவதூறான செய்தியாகும்.

10-5-2012 அன்று தினமலர் திருச்சி பதிப்பில் கீழ்க்கண்ட தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

கருணாநிதி எதிர்த்தாலும் ஸ்டாலின் சந்தித்தார்

ஆன்மீக நாட்டம் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் பேட்டி

. . . ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், தி.க.தலைவர் வீரமணியும் ஆன்மீகத்துக்கு எதி ராகவே செயல்பட்டு வருகின்றனர். பேசி வருகின்றனர். ஆனால் கருணாநிதி மகன் ஸ்டாலின் 3 முறை என்னை வந்து சந்தித் துள்ளார். வீரமணியின் மனைவி யும், மத்திய அமைச்சர் அழகிரி மனை வியும் என்னை வந்து சந்தித்துப் பேசியுள்ளனர். வீரமணியின் தம் பியும் என்னை வந்து சந்தித்துப் பேசியுள்ளார். கருணாநிதியும், வீரமணியும் ஆன்மிகத்துக்கு எதி ராக செயல்பட்டாலும் அவர்கள் குடும்பத்தினர், ஆன்மிகத்துக்கு ஆதரவாகவே உள்ளனர்.

தமிழ் ஓவியா said...

எங்கள் கட்சிக்காரர்கள், அனுதாபிகள், நலம் விரும்பிகள் 10-5-2012 தினமலர் திருச்சி பதிப்பு நாளிதழில் டூர்-ஊர் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செய்தியைப் படித்தவுடன், கேள்விப் பட்டவுடன் அதிர்ச்சி அடைந்தனர். திராவிடர் கழகத்தினர் மற்றும் குடும்பத் தினரின் நற்பெயருக்கும், புகழுக்கும் ஊறு விளைவிப்பதாக இந்தச் செய்தி இருக் கிறது.

ஜெயேந்திர சரஸ்வதி 10-5-2012 அன்று கிருஷ்ணகிரியில் அளித்த பேட்டி யில், தி.க.தலைவர் கி.வீரமணியும், தி.மு.க.தலைவர் மு.கருணாநிதியும் நாத்திகத்தைப் பிரச்சாரம் செய்தாலும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் நான் பிரச்சாரம் செய்யும் ஆன்மிகத்துக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்று கூறி யிருந்தார்.

மனுதாரரும், அவரது குடும்பத்தினரும், அவரது கட்சியினரும் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்குப் போராடுபவர்கள்; மதவாதிகளால் உரு வாக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை வெளிச் சத்துக்குக் கொண்டு வந்து எதிர்ப் பவர்கள். இத்தகைய சூழ்நிலையில் எனது தாயார் ஜெயேந்திர சரஸ்வதியை எப்போ துமே சந்தித்தது இல்லை; சந்தித்ததாகக் கூறப்படும் செய்தி உள்நோக்கம் கொண்ட, பொய்யான, அவதூறான செய்தியாகும்.

பேட்டியில் ஜெயேந்திர சரஸ்வதி கூறியதாகக் கூறப்பட்டுள்ள செய்தி அவ தூறானது என்பதையும், அது எனது மற்றும் எனது குடும்பத்தின் நற்பெய ருக்குக் களங்கம் விளைப்பது என்பதையும் அவரே நன்கு அறிவார். இவ்வாறு அவ தூறு பரப்பிய ஜெயேந்திரரும், அச் செய்தியினை வெளியிட்டவரும், அச்சிட்ட வரும், பத்திரிகையின் ஆசிரியருமான ஆர். ராகவன் இந்திய குற்றவியல் தண்டனை சட்டத்தின் 500 ஆவது பிரிவின் கீழ் தண் டனைக்குரியவர்கள். இவர்கள் இருவரும் சட்டத்தைப் பற்றியும், அதை மீறினால் ஏற் படும் விளைவுகளைப் பற்றியும் அறியாத வர்கள் அல்ல.

தமிழ் ஓவியா said...

எனவே இந்த இருவர் மீதும் குற்றவியல் வழக்கு தொடர முகாந்திரம் உள்ளது. எனவே, இவ்வாறாக அவதூறாகப் பேசியதற்காக ஜெயேந்திர சரஸ்வதிக்கும், அச்செய்தியை தினமலர் பத்திரிகையில் அச்சிட்டதற்கும், வெளியிட்டதற்கும், ஆசிரியர் ஆர். ராகவனுக்கும், என் சார்பாக வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்று 15-5-2012 அன்று அனுப்பப்பட்டது.

அதில் 7 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், அதனை அதே பத்திரிகையில் வெளியிட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு வழக்கு தொடரப்படும் என்றும், அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நோட்டீசை அவர்கள் இருவரும் 16.5.2012 அன்று பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஆனால், அதில் கேட்டிருந்தபடி அவர்கள் இருவரும் அவ்வாறு மன்னிப்பு கேட்கவோ, அதுபற்றி மறுப்பு செய்தி வெளி யிடவோ எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதால், எனக்கு சென்னை எழும்பூர் முதன்மைப் பெருநகர மாஜிஸ்டிரேட் அவர்களின் நீதிமன்றத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் 499 ஆவது மற்றும் 500 ஆவது பிரிவின் வழக்கு ஒன்று தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் இந்த வழக்கை போட்டுள்ளேன்.

மேன்மை தங்கிய நீதிபதி அவர்கள் இந்த மனுவை விசாரித்து, உண்மைகளை சீர்தூக்கிப் பார்த்து நீதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.

மனுதாரர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் த. வீரசேகரன், ஆர். ரத்தினகுமார், ஜி.எஸ். பாஸ்கர், ஜெ. துரைசாமி ஆகியோர் ஆஜராகினர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி நசீர்அகமது அவர்கள் இந்த வழக்கை ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு மறு விசாரணைக்காக ஒத்தி வைத் துள்ளார். 19-7-2012

தமிழ் ஓவியா said...

பெரிய - வாள் சொன்ன பெரியார்


ஆனந்தவிகடன் இதழில் சு.சாமி யின் பேட்டிகள் வந்து கொண்டு இருக்கின்றன. அதில் ஒரு கேள்வி. நீங்கள் யாரை அதிகம் நேசிக் கிறீர்கள்? என்ற கேள்விக்கு காஞ்சி மகாபெரியவரை என்று பதில் சொல்லியுள்ளார்.

அவர் அப்படித்தான் சொல்லு வார். பார்ப்பனர்கள் வேறு யாரைத் தான் சொல்லுவார்கள்?

உத்தரப் பிரதேசம் கான்பூரில் சு.சாமி முன்னின்று ஒரு பார்ப்பன மாநாட்டையே நடத்தியவராயிற்றே!

பிராமண சுயாபிமான் அந் தோலன் சமிதி என்ற அமைப்பு தான் என்றாலும் (1995 பிப்ரவரி) அதன் முதுகெலும்பாக இருந்து பல பகுதிகளில் இருந்தும் பார்ப்பனர் களைக் கொண்டு வந்து சேர்க்க மிகவும் பாடுபட்டவர் சு.சாமிதான் என்று இந்துஸ்தான் டைம்ஸ் (8-2-1995) ஏடு வெளியிட்டுள்ளதே!

அப்படிப்பட்டவர் காஞ்சிப் பெரிய-வாளைத்தான் நேசிப்பார்.

இந்த நேரத்தில் இன்னொன் றையும் நாம் நினைவூட்ட வேண்டும். ஒரு முறை இதே சு.சாமி இதே காஞ்சி - பெரியவாளிடம் நான் யாரைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று கேட்டபோது, பெரியாரைப் பின்பற்று என்று சொன்னதாக இதே சு.சாமி சொன்னது இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் வெளிவந்த துண்டே! அதையும் ஆனந்த விகடன் பேட்டியில் சு.சாமி சொல்லி இருக்கலாமே!

அடிக்குறிப்பு: இந்தச் சு.சாமி பற்றி கலைஞர் சொன்னது ஒரு மன நோயாளி! இராமகிருஷ்ண ஹெக்டே சொன்னதோ - கழிவறைச் சுவர் களில் ஆபாசப் படங்களை வரை கின்ற மனநோயாளி!

ஆகக் கூட்டிக் கழித்துப் பார்த் தால் இருவரும் சொன்னது மனநோயாளி என்பதே! 19-72012

தமிழ் ஓவியா said...

நடிகைகளுக்கு கடவுள் பக்தி

சினிமா நடிகைகள் சிலருக்கு ஆன்மீகத்தின் மீது நாட்டம் ஏற் பட்டு, கோயில்கள் கூட கட்டு கிறார்களாம் - வார இதழ் ஒன்று ஒரு பட்டியலையே வெளியிட் டுள்ளது.

சினிமா உலகில் திருமணம் - விவாகரத்து - இத்தியாதி இத்தி யாதி நடப்புகள் எல்லாம் சர்வ சாதாரணம்தான். இப்படி வாழ்க் கையையே தீர்மானித்துக் கொள்ள முடியாதவர்கள் தடுமாற்றத்தின் காரணமாக எதையாவது ஒரு பிடிமானம் என்று கருதி, குளிக்கப் போய் சேற்றில் விழுந்த கதைதான் இது.

இமயமலைச் சாரல் என்றும், பாபா என்றும் ஓடித் திரியும் ஆனானப்பட்ட ரஜினிகாந்தே என்ன சொன்னார் தெரியுமா?

எல்லாம் தெய்வச் செயல், கடவுளே எல்லாம் பார்த்திருப்பா ருன்னு விட்டிருந்தா நான் இன்னும் கண்டக்டராகவே இருந்திருப்பேன். அந்தச் சூழ்நிலையில் உத்தியோ கத்தை விட்டுவிட்டு தைரியமாக சென்னைக்கு வந்து, ஒரு வாசல்ல காத்திருந்தது என் முயற்சிதான் - (ராணி 20-7-2008) என்று இதே ராணிதான் செய்தி வெளியிட்டி ருந்தது.

பக்தி என்பது ஒரு மனநோய் அவ்வளவுதான். தன்மானக்காரனி டத்திலும், தன்புத்திக்காரனிடத்தி லும் இந்நோய் அண்டாது - அண் டவே அண்டாது! 19-7-2012

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும் வாழ்க ஆம்ஸ்ட்ராங் குழுவினர்!

அப்போலோ 11 விண்வெளி வீரர்கள் - நீல் ஆர்ம்ஸ்ட்ராங், காலின்ஸ், ஆல்ட்ரின்

நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் முதல் அடி எடுத்து வைத்த நாள் இந்நாள். இறங்கிய பகுதி நிலாவில் அமைதிக் கடல் பகுதி - நேரமோ காலை 9.18 இந்நாள் (1969). அவ ருடன் கர்னல் மைக்கேல் காலின்ஸ், எட்வின் இயூஜின் ஆகியோர் பயணித்த பெருமைக்குரியவர்கள்.

மைனஸ் 279 ஃபாரன்ஹீட் (மைனஸ் 193 பாகை செல்சியஸ்) தட்ப வெப்ப நிலையில் உள்ள துணைக் கோளில்தான் அவர்கள் அடி எடுத்து வைத்தனர் என்றால், அதன் விபரீத நிலைப்பாட்டை மனிதனின் கற்பனைக்கே விட்டு விடுவோம்.

1969 ஜூலை 21 அதிகாலை 3.56 மணிக்கு நிலவில் காலடி பதித்தார் ஆம்ஸ்ட்ராங்.

அவர் சொன்ன சொற்கள் உலகப் பந்தின் ஒவ்வொரு மூலையிலும் எதிரொலித்தது மட்டுமல்ல - காலா காலத்திற்கும் இந்தக் கால் பதிப்பு கல்வெட்டாகப் பதிந்திருக்கும்.

That’s one small step for a man. One giant leap for man kind.

மனிதனுக்கு இது சிறியதோர் கால் வைப்பு. ஆனாலும் மனித குலத்துக்கோ பெருந்தாவல்

இந்தச் சொற்கள் என்னும் கூட்டுக்குள் எவ்வளவுப் பெரிய தகவல்களும், பொருள்களும் நிமிர்ந்து நிற்கின்றன.

அதே நேரத்தில் இந்தியாவி லிருந்தும் விண்வெளியில் பறந்த துண்டு. அவன் பெயர் ராகேஷ் சர்மா.

அவன் விண்வெளி கலத்தில் காலடி எடுத்து வைத்த போது சொன்னது என்ன தெரியுமா?

காயத்ரி மந்திரம், அதுவும் மூன்று முறை பார்ப்பனர்கள் நடத்திய தாம்பிராஸ் ஏடு என்ன எழுதியது தெரியுமா?

ராகேஷ் சர்மா! ஆம் விண்வெளியிலே பறந்த உலகத்தின் உச்சியிலே பறந்த முதல் இந்தியன்! பாரதமே தலை நிமிர்ந்து நிற்கிறது! நாமும் தலை வணங்கி நிற்கிறோம்! எதற்காக?

அவன்நம் இனத்தைச் சார்ந் தவன் என்பதனாலா? இல்லை, இல்லவே இல்லை! பின் எதற்காக?

விண்வெளிக் கலத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு முன் உச்சரித் தானே மூன்று முறைகள் அந்த காயத்ரி மந்திரத்திற்காக!! (பார்ப் பன சங்கத்தில் தாம்பிராஸ் ஏடு 19.5.1962).

ராகேஷ் சர்மா ஏதோ ஒரு அம்பி, எப்படியோ தொலைந்து போகட்டும்!

நோபல் பரிசு பெற்றாரே டாக்டர் சர்.சி.வி. இராமன் என்ன சொன் னார்?

முதல் மனிதன் ககாரின் 1962ல் விண்வெளி - அகண்ட காஸ்மாஜில் (Cosmos) சென்றதை விஞ்ஞானி யாக இருந்தும் கடவுள் நம்பிக்கை கொண்ட நல்லவர் டாக்டர் சி.வி. ராமன் அவர்கள் அழுத்தமாகக் கண்டித்தார். கடவுள் வசிக்கும் இடத்திற்கு மனிதன் தன் பூத உடலுடன் செல்லுவது மிக மிகப் பாவம் செய்வதாகும் என்றார்.

அறிஞர் என்று பட்டம் சூட்டப்பட்ட அவரே அவ்வாறு எண் ணங் கொண்டவராக இருந்தார் என்றால், நம் நாட்டின் பாமர மக்களின் நிலைமையை நான் சொல்லித்தான் தெரிய வேண்டி யதில்லை; கூறாமலே அது விளங் கும்! - என்று இவ்வாறு வேதனை கலந்த வார்த்தைகளில் நாகரிக மாகக் கண்டித்தவர் மூத்த பொது வுடைமைவாதியான ஏ.எஸ்.கே. (அய்யங்கார்) தமது நூலில். (கடவுள் கற்பனையே, புரட்சிகர மனித வரலாறு எனும் நூல் பக்கம் IV)

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவில் காலடியைப் பதித்த இந்நாளில் இந்தியாவின் இந்துத்துவ மனப் பான்மையின் நிறம் எந்தத் தரத்தில் இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சந்திரன் தனது குருவாகிய வியாழ பகவானின் மனைவியாகிய தாரை என்பவளிடம் காதல் கொண்டு, அந்தப் பெண்ணைக் கற்பழித்தான்; அதில் பிறந்தவன் தான் புதன் என்றும், உண்மையை யறிந்த வியாழ பகவான் சந்திரனுக் குச் சாபமிட்டான்; அதன் காரண மாகவே அவன் உடல் தேய்ந்து கொண்டு போனது (அதாவது தேய் பிறை) என்று இப்படி உபதேசித்துக் கொண்டு இருக்கிறார்களே புராண (அதிகப்) பிரசங்கிகள் - அவர்களை என்ன சொல்ல!

குறிப்பு: ருசியா அனுப்பிய விண் கலத்தில் சென்ற ககாரினிடத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொன்னார்?

கடவுளா? அப்படி ஒருவரையும் நான் காணவில்லையே! என்று காது செவிடாகும்படி ஓங்கி ஒலித்துச் சொன்னதையும் நினைவு கூர்வோம்.

ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்று கால் பதித்ததை அந்தக் கால கட்டத்தில் பல மதவாதிகள் மறுத் ததும் உண்டு என்பதும் இந்த நேரத்தில் நினைவுபடுத்தத்தக்க தாகும். தங்கள் அறியாமையை எண்ணிப் பிற்காலத்தில் வருந்தவே செய்தனர். 20-7-2012

தமிழ் ஓவியா said...

கவுதம புத்தர் ஒரு நாத்திகர்


உலகில் தோன்றிய சிந்தனையாளர்கள் வரி சையில் புத்தர் சிறப்பிடம் வகிக்கிறார். இன்று தமிழினத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நாத்திகக் கருத்துகளுக்கு எவ்வாறு புத்தர் கொள்கைகள் முன்னோடியாக திகழ்ந்தது என்பன பற்றி அறிய போதி மாதவன் சரித்திரம் என்னும் நூல் உதவும். அதில் புத்தரின் அறிவுரைகளை அப்படியே வெளியிட்டுள்ளனர்.

கடவுள் மறுப்பு

தெய்வங்களை நினைத்து இரங்கி ஏங்குவதில் பயனில்லை. பிரம்மனே இவ்வுலகை படைத்தான் எனில், இதை ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி வைக்க வேண்டும். (பக்கம் 73)

புனிதம்

தண்ணீரைத் தெளித்து விட்டு இது புனிதத்தலம் என்று கூறுவதால் ஓர் இடம் புனிதமாகி விடாது. புனிதத்தன்மை இதயத்தைப் பற்றிய உணர்ச்சி யேயாகும். தண்ணீரால் பாவத்தை கழுவ இயலாது (பக்கம் 108)

மனிதன் மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் மீன் புலால் முதலிய உணவுகளை விலக்குவதாலோ அம்மணமாக அலைவதாலோ, தலையை மழிப்பதாலோ, அக்கினிக்கு ஆகுதிகள் செய்வதாலோ அவன் பரிசுத்தமாகி விடமுடியாது.

ஆன்மா மறுப்பு

உடல் ஆன்மாவற்றது. பிக்குகளே; உடலே ஆன்மாவாயிருந்தால் இந்த உடல் நோய்க்கு உட்படாது. (பக்கம் 186)

உடலின் தோற்றத்தின் போது உள்ளே புகுந்து கொண்டு, அது மடியும் போது வெளியேறும் ஆன்மா ஒன்று இல்லையென்று அவர் (புத்தர்) மறுத்துள்ளார் (பக்கம் 188)

சுவர்க்கம் - நரகம்

நீருள் நின்று தவம் புரிவதால் சுவர்க்கம் கிடைக்கும் என்றால் மீன்களே முதலில் சுவர்க்கத்திற்கு உரியவை (பக்கம் 108)
பலியிடும் உயிர் உடனே சுவர்க்கம் செல்வதானால், ஒருவன் முதலில் தன் தந்தையையே பலியாக்கி அனுப்பி விடலாமே (பக்கம் 125)

பிரார்த்தனை

பிரார்த்தனை செய்து என்ன பயன்? இது வெளுத்துவிடாது. தெய்வங்களை வேண்டி உயிர்ப் பலி இடவேண்டாம். பண்டம் பழங்கள் வைத்து பூஜை செய்து பலனை எதிர்பார்த்து இருக்க வேண்டாம். (பக்கம் 233)

பொது உடைமை

செல்வர்களுடைய வானளாவிய மாளிகைதான் துயரத்தின் இருப்பிடம் 20-7-2012

தமிழ் ஓவியா said...

மனுதர்ம நூலை அம்பேத்கர் எரிக்கச் சொல்கிறார்


சிலவற்றைத் தீர்த்துக் கட்ட வேண்டுமென்பதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே மனுஸ்மிருதி.

அநீதிகளைச் செய்தாவது சிலவற்றை அழிக்காவிட்டால் பார்ப்பன இனம் அழிந்து போகும் என்றெண்ணி, அதற்காகச் சிதறி - ஒற்றுமையின்றிக் கிடந்த பார்ப்பனர்களை ஒன்று திரட்டி, சதி வேலைகளை நரித் தந்திரத்தின் மூலம் செய்து முடிப்பதற்காக விடப்பட்ட அறைகூவல் தான் மனுஸ்மிருதி.

சிதைந்த ஒற்றுமையை மீட்க அவ்வப்போது இதுபோன்ற முயற்சிகள் நடைபெறுவது வரலாற்று உண்மை. முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்கிற பழமொழிக்கேற்ப, மிக மிக முயன்று, புதிய கொடுமையான பார்ப்பன (அ)நீதியை உருவாக்கியவன் மனு.

இந்த மனுஸ்மிருதி, நீதியும் நேர்மை மிக்கத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. அப்படிப்பட்ட நீதி நூலை உருவாக்குமளவுக்கு அவன் (மனு) ஒரு சமூகவியல் அறிஞனும் அல்ல. அவன் ஒரு அயோக்கியன்.

ஒரு குலத்துக்கொரு நீதி வழங்கும் இந்த மனுஸ்மிருதி தீ வைத்துக் கொளுத்தப்பட வேண்டும். மீளமுடியாக் கொடுமைச் சேற்றில் எங்களை புதைக்க எண்ணிய மனுஸ்மிருதியை, உயிரைப் பணயம் வைத்தாவது ஒழித்துக் கட்டியே தீர வேண்டுமென்று நாங்கள் முடிவு செய்தது இதனால் தான்.

அம்பேத்கர் சிந்தனைகள் என்ற நூலிலிருந்து 20-7-2012

தமிழ் ஓவியா said...

கடவுள் ஒருவர் இருக்கிறாரா?


கடவுளை நம்பும் முட்டாள்களே!

அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து, காத்து, நடத்தி வருகிறார். அவரன்றி ஒரு அணுவும் அசையாது, அவரே உலக நடப்புக்குத் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே! கடவுளால் உலகத்திற்கு, மனித சமுதாயத்திற்கு, ஜீவகோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

கடவுள் இருக்கிறார் என்றால், ஜீவன்களுக்கு பசி, தாகம், புணர்ச்சி, உணர்ச்சி, ஆசை, கவலை, நோய், வேதனை, சாவு முதலியவை ஏன் ஏற்பட வேண்டும்?

பிறப்பு, சாவு, தோற்றம், அழிவு எதற்குத் தேவை? இவைகளால் உலகமோ, மக்களோ அடைகிற லாபம் என்ன?

கடவுள் தோன்றி எத்துணையோ காலம் ஆகியும் எத்துணையோ காலமாக மக்கள் கடவுளை நம்பியும், வணங்கியும் வந்தும், யோக்கியனாகவோ கவலையற்றவனாகவோ ஒரு மனிதனைக் கூட காண முடியவில்லையே, ஏன்?

- தந்தை பெரியார் (உண்மை, 14.7.1970

தமிழ் ஓவியா said...

மதம் தேவையா?


மதத்தைக் காப்பாற்றவே கோளல்களும், சொத்துக்களும், அவற்றைக் காக்க மடங்களும், மடாதிபதிகளும் ஏற்பட்டனர். இவை மக்கள் வாழ்க்கைக்கு அவசியமா?அதனால் மக்கள் கஷ்டம் நீங்குமா? நீங்காதா? என்பதைத்தான் கவனிக்கவேண்டும்.

பெரியார்-(விடுதலை, 3.12.1962

தமிழ் ஓவியா said...

அய்யா பெரியார் வரலாற்று நாயகன்


வடநாட்டில் எத்தனையோ மதக் கலவரங்கள் நடக் கின்றன. ஆனால், தென்னிந்தியாவில் நடப்பதில்லை. அப்படி நடக்காமல் இருப்பதற்கான விதையை ஊன்றி யவர் பெரியார்தான். நான் இஸ்லாமியன். இறை நம்பிக்கை உள்ளவன். ஆனால், மூட நம்பிக்கை களை எதிர்ப்பவன். அவர் வரலாற்று நாயகன் என்பதில் சந்தேகமே இல்லை. திரைப்பட இயக்குநர் அமீர் - (குமுதம் ரிப்போர்ட்டர், 12.7.2012)

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


நாம் செய்றது நல்ல காரியமா இருந்தாப் போதும். பக்தனா இருக்கிறத விட யோக்கியனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிக்கிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா? என்று கேள்வி எழுப்பிய பகுத்தறிவாளர் பெருந்தலைவர் காமராஜர் என்பது உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

காரணம் அவர்கள் ஜாதி...


இணைந்த தொலைநோக்கு, இணைந்த நன்மைகள் என்றெல்லாம் பேசுகிறபோது இதில் என்னுடைய குறைபாடுகளை நான் எண்ணிப்பார்க்கவே செய்கிறேன். என் இதயத்தை நொறுங்கவைத்த நிகழ்வுகளில் ஒன்று திரு. பேஜ்வாடா வில்ஸன், மனித மலத்தை மனிதர்களே அள்ளி அப்புறப்படுத்துவது பற்றிப் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தது. அந்த உணர்வை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை.

46 வயதை எட்டிய பிறகுதான் இதை நான் பார்க்கிறேன், இப்படி ஒரு நடைமுறை இருந்துகொண்டிருப்பதை உணர்கிறேன் என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்கிறேன். இத்தனை வயதான பிறகுதான் இதன் கொடுமையையும் மனிதத்தன்மையற்ற நிலையையும் நான் முதல் முறையாக உணர்கிறேன். நம் நாட்டின் சக மனிதர்களில் ஒரு பகுதியினர் தங்களது பிழைப்புக்காக மற்றவர்களின் கழிவைத் தங்களது கைகளால் அள்ளி அப்புறப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை இத்தனை காலமாக என்னால் எப்படி இமை கொட்டாமல் ஒப்புக்கொள்ள முடிந்தது? இதிலிருந்து தப்பிச் செல்ல அவர்களுக்கு வழியில்லை, காரணம் அவர்கள் பிறந்த சாதி என்ற உண்மையை என்னால் எப்படி இத்தனை ஆண்டுகளாக கண்டுகொள்ள முடியாமல் இருந்தது? இதை ஏன் நான் இதற்கு முன்னரே பார்க்கத் தவறினேன், ஏன் எதிர்வினையாற்றத் தவறினேன்? என் அருகாமையில் இப்படி நடக்கவில்லை என்பதால் அல்ல. ஆனால் சிறுவயதிலிருந்தே இதை நான் பார்த்து வந்திருக்கிறேன் என்பதால், அது ஒரு பழகிப்போன விசயமாகிவிட்டது, அது ஒன்றும் அசாதாரண மான விசயமாக என் மனதை உறுத்தத் தவறிவிட்டது என்பதே உண்மை! பாதிக்கப்பட் டவன் நான் அல்ல என்பதால் இதன் கொடுமை யும் அநீதியும் என் மனதில் உறைக்கவில்லை என்பதே உண்மை. இப்படி உணர்வற்றுப் போன குற்றத்தைச் செய்திருக்கிறேனோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. மனித மலத்தை மனிதர் அகற்றும் நிலை தொடர்கிறவரையில், பொது நலன்களை எல்லோருமாக இணைந்து பகிர்ந்துகொள்வது பற்றி என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியுமா?

இப்போது இது உறைக்கத் தொடங்கி விட்டதால், இது தொடர்பாக ஏதேனும் செய்தாக வேண்டிய நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். ஒரு பொதுவான நன்மையை, ஒரு பொதுவான தொலைநோக்கை, இந்தியர்கள் எல்லோருக்குமான ஒரு கனவை எல்லோருக்குமாகப் பகிர்ந்து கொள்ளும் நிலையை உருவாக்க நாம் இணைந்து செயல்பட்டாக வேண்டும் என நான் நம்புகிறேன்.

இந்தி திரைப்பட நடிகர் அமீர் கான்
சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில்

தமிழ் ஓவியா said...

பெரியாரின் தொண்டு வியந்த அமெரிக்கப் பேராசிரியை


அமெரிக்காவின் பாஸ்டன் அருகில் உள்ள (Studbury) ஸ்டட்பர்ரி என்ற சிறு நகரத்தில் அமைந்துள்ள பிரபல ஆங்கிலக் கவிஞர் ஹென்ரி வேர்ஸ்ஒர்த் லாங்பெல்லோ (H.W.Longfellow) அவர்கள் பெயரில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவத்துடன் அமைக்கப்பட்டுள்ள லாங்க்பெலோ இன் (Longfellow Inn) உணவகத்தில், World Teach உலக நாடுகளுக்கு ஆங்கிலத்தினை நன்கு எழுதப் பேச உதவிடும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் பேராசிரியை ஹெலன் கிளாரி செலிவெர்ஸ் (Helan Clariessievers) நமது உண்மை ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு சிறப்பான மதிய உணவுக்கொப்ப சிற்றுண்டி விருந் தினை (Breakfast) 8.7,2012 ஞாயிறு காலை 9.30 மணி அளவில் கொடுத்து வரவேற்றார். சுமார் ஒன்றரை மணி நேரம் - பெரியார் கல்வி நிலையங்கள், தமிழ்நாட்டில் தந்தை பெரியார் அவர்களின் சீரிய சமூகப் புரட்சித் தொண்டு பற்றியும் பாராட்டி, ஊக்கமூட்டும் வகையில் கலந்துரையாடினார்.

சென்னை, திருச்சி, தஞ்சை கல்வி நிறுவனங்களை பெரியார் அறக்கட்டளைகள் நடத்துவதை நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்த அந்த அம்மையார் (இவர் ஹார்டு வேர்டு பல்கலைக்கழக அமைப்பில் உள்ள உலக நாடுகளுக்கு ஆங்கில ஆசிரியர்களை அனுப்பி உதவும் தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆவார்). நமது நிறுவனங்களுக்கு அமெரிக்காவின் உயர் நிலைப் பள்ளி - குழந்தைகள் இல்லம் குழந்தைகள் பயன்படும் வகையில் ஆசிரியைகளை அனுப்பியுள்ளார். நமது இயக்கம், சமூகப் புரட்சியை அமைதியான வழியில் நடத்தி வருகிறது என்றும் இந்திய அரசியல்வாதிகள் பெரியார், காந்தி போன்ற தலைவர்களைப் பின்பற்றி தங்களின் நாட்டில் ஒரு புதிய சமூகத்தை அமைக்கலாம் என்று கூறினார். கி.வீரமணி அவர்களுடன் அசோக்ராஜ் அவர்களும் சென்றிருந்தார். பெரியார் உலகமயமாகி வருவதற்கு இது ஒரு அருமையான சான்று ஆகும்.

இச்சந்திப்பு குறித்து அசோக்ராஜ் அவர் களுக்கு பேராசிரியை ஹெலன் கிளாரி செலிவெர்ஸ் மின்னஞ்சலில் அனுப்பியுள்ள கடிதத்தில், மகிழ்ச்சியெல்லாம் என்னுடையதே! அன்று காலை உணவு அருந்திய நிகழ்ச்சி எனக்கு மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. நீங்கள் இருவரும் கூறியவை அனைத்தும், நீங்களும் உங்கள் தந்தையும், சகோ தரரும் செய்துவரும் நற்செயல்கள் அனைத்தும் மிகுந்த ஆர்வமும் தூண்டுதலும் அளிப்பதாக இருந்தன. என்னை சந்தித்துப் பேச டாக்டர் வீரமணி முன்வந்ததை நான் மிகவும் பாராட்டுகிறேன் எனக்காக அவரிடம் எனது நன்றியைத் தெரிவிக்கவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கையும், உணவுப் பொருளும்


- திருமதி.வாசுகி திருவள்ளுவர்

இந்தியா இன்னும் ஏன் வல்லரசாகவில்லை, லண்டன் பத்திரிகையில் படித்தவை, மூடநம்பிக்கையினால் உணவுப் பொருள்களை வீணடிக்கின்றனர்.

முதலாவது, எலுமிச்சம் பழம். அது படும்பாடு மிகவும் சுவாரசியமானது. அதை இரண்டாக வெட்டி குங்குமத்தை தடவி வாசற்படி இரு மருங்கிலும் வைத்தல், மனிதனை முன்நிறுத்தி எலுமிச்சையை காலால் நசுக்கி அதை நாலாப் பக்கமும் பிய்த்து எறிதல், மாலையாக கட்டி காயும் வரை நிலையில் கட்டி தொங்க விடுதல், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தின் சக்கரங்களில் வைத்து நசுக்குதல், வாகனத்தின் முகப்பில் மாலையாக தொங்க விட்டு திருஷ்டி கழித்தல், தற்சமயம் கடைகளில் கண்ணாடி குவளை நீரில் மிதக்க விடுதல்.

இரண்டாவது, தேங்காய். இதை சூரைத் தேங்காய் என்று வீதியில் போட்டு உடைத்தல். இது சிதறி மண்ணோடு கலந்து யாருக்கும் பயன்படாமல் செய்வது. மேலும் வாகனங்களின் டயர்களை குத்தி சேதப்படுத்துகிறது. மலையாளிகள் தென்னம்பாளையை வெட்டி குவளை (உலோகப் பானையில்) வைத்து அனைத்து விழாக்களிலும் வைக்கின்றனர். அது தேங்காயை கருவிலேயே அழிப்பதாகும்.

மூன்றாவது, பூசணிக்காய் காய்கறிகளிலேயே மிகவும் சத்துள்ளது. மிகவும் குளிர்ச்சியானது. அதை நடு வீதியில் போட்டு உடைத்தல் அல்லது அதில் விகாரமான உருவத்தை வரைந்து நிலையில் கட்டி தொங்க விட்டு அழுகச் செய்வது. நடுவீதியில் போட்டு உடைப்பதால் அதன் மீது ஏறும் வாகனங்கள் சறுக்கி நிறைய விபத்துகள் உண்டாகின்றது. மேலம் பூசணிப் பூக்களை பறித்து சாணியில் சொருகி வைத்து கருவிலேயே அதை அழித்து அழகு பார்க்கின்றனர்.

தினமும் சூடம் (கற்பூரம்) கொளுத்தும் பக்தர்கள் அது வலிநிவாரணி மற்றும் தேமலுக்கு தயாரிக்கும் மருந்து என்று தெரியாமல் வீணடிக்கின்றனர். அதை வெளிநாட்டினர் மருந்தாக்கி இந்தியரிடமே ஒரு குப்பி 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர்.

ஆடி மாதமானால் வேப்ப மரங்களை மொட்டையாக்கி விடுகின்றனர் அம்மன் பக்தர்கள். வேப்பிலை ஆடை அணிந்து கற்கால மனிதனாகின்றனர். அந்த வேப்பக் கொட்டையை எடுத்து வெளிநாட்டினர் பல நோய் எதிர்ப்பு மருந்துகளை தயாரிக்கின்றனர்.

அபிஷேகம் என்ற பெயரில் கற்சிலைகளுக்கு பால், தேன், நெய், தயிர், இளநீர் ஆகியவற்றை ஊற்றி வீணடிக்கின்றனர்.

யாகம் என்ற பெயரில் நெய், பொரி போன்ற உணவுப் பொருள்களையும் விலையுயர்ந்த பட்டுத் துணிகளையும் தீயில் போட்டு பொசுக்குகின்றனர்.

கடவுளை வழிபடும் பக்தர்கள் சிந்தித்தால் இதைத் தவிர்க்கலாம். மற்றவர்களுக்கு இக்கருத்தைத் தெளிவுபடுத்தினால் இந்தியாவின் பொருளாதாரத் தையும், நிதியையும் பெருக்கலாம். விலைவாசியைக் கட்டுப்படுத்தி அரசாங்கத்தைக் குறை கூறுவதைத் தவிர்க்கலாம். இப்படி பக்தியின் பெயரால் உணவுப் பொருள்களை வீணடிக்காமல் இருந்தால் நாமும் நம் நாட்டை வல்லரசாக்கலாம் என்று நம்புவோமாக.

தகவல்: சேக்கிழான், சென்னை _ 81.

தமிழ் ஓவியா said...

சமஉரிமை போராளி

அமெரிக்காவில் ஜியார்ஜியா அட்லாண்டா நகரில் மார்ட்டின் லூதர் கிங் பிறந்தார். இவரது தந்தை அந்த வட்டாரத்தில் கிறித்துவத் தலைவராக இருந்தமையால் மகனும் மதகுருவாக விரும் பினார். பாஸ்டன் பல்கலைக் கழகத்தில் கிறித்துவ மதத் தத்துவங்களைக் கற்று 1954ஆம் ஆண்டில் சமயத் துறைக்கான டாக்டர் பட்டம் பெற்றார்.

நீக்ரோ மக்கள், வெள்ளையரின் கொடுமை களால் துன்பப்பட்டதைக் கண்டு கொதித்தார். பேருந்துக் கிளர்ச்சி அறப்போரினை முதலில் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 26.

அமெரிக்காவில் நீக்ரோக்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது வெள்ளையர்கள் ஏறினால் நீக்ரோக்கள் எழுந்து தமது இருக்கையைக் கொடுக்க வேண்டும். கொடுக்க மறுப்பவர்களுக்கு அடி, உதை கிடைக்கும். பேருந்தின் அதிபர்களாக ஆங்கிலேயர்கள் இருந்தமையால், அவர்களும் நீக்ரோக்களுக்கு எதிராகவே செயல்பட்டனர்.

இந்த நடைமுறையினைக் கடுமையாக எதிர்த்தார் கிங். நீக்ரோக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பேருந்துகளைப் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நீக்ரோ மக்களும் கிங் சொன்னதைப் பின்பற்றினர். பேருந்துகளில் கூட்டம் குறைந்தது.

பேருந்து நிறுவனங்களில் வேலை செய்துவந்த நீக்ரோக்களும் தங்களது வேலையை விட்டு வெளியேறினர். இதனால் பேருந்துத் தொழிலே நலிவடைந்தது.

பேருந்து உரிமையாளர்கள் லூதர் கிங்கிற்குப் பணம் கொடுக்க முன்வந்தனர்; பின்பு மிரட்டினர். எதற்கும் அசையவில்லை கிங். இறுதியில், பேருந்து தொழிலே லூதர் கிங்கால் நலிவடைந்துவிட்டதாகக் குறைகூறி கிங் மீது வழக்குத் தொடுத்தனர்.

பெரிய பெரிய வழக்குரைஞர்கள் பேருந்து உரிமையாளர் களுக்காக வாதாடினர். தனித்து நின்று வெள்ளையர்களை எதிர்த்த கிங், தன் இன மக்களுக்காக தானே வாதாடினார்.

வெள்ளையருக்குச் சமமான உரிமை நீக்ரோ மக்களுக்கு உண்டு என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கின் தீர்ப்பினால் கிங் உலகப் புகழைப் பெற்றதோடு உலகம் புகழும் தலைவரானார். பெரியார் பிஞ்சு -ஜூலை 2012