Search This Blog

11.11.10

சங்கராச்சாரி வழக்கு தாமதம் ஏன்?


தாமதம் ஏன்?

கேள்வி: சமீப காலமாக மக்களை ஏமாற்றும் போலிச்சாமியார்கள் நிறைய பிடிபடு கிறார்கள். யார்மீது தவறு?

ஜெயேந்திரர் பதில்: மனிஷனுக்குப் பேராசை இருக்கிறவரைக்கும் இந்தப் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஏன்னா சுருக்கு வழியில் சம்பாதிக்கனும்னு ஆசைப்படுகிற நிறைய பேர் போலிச்சாமியாராக எழுந்தருளி இருக்காங்க. ஜனங் களும் இவங்கள நம்பிப் போறாங்க. இதனால ஜனங்க, சாமியார்கள் இரண்டு பேருக்குமே ஆபத்து வருது. ஆனா ஜனங்க தப்பிச்சு வேறொரு சாமியார்கிட்ட போயிடுறாங்க. இவங்களை நம்பி வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. அதனால இந்த விஷயத்தில் சாமியார்கள் தான் பொது ஜனங்ககிட்ட இருந்து பயந்து ஒதுங்கியிருக்க வேண்டும் (சொல்லி விட்டு, வாய்விட்டு ரசித்துச் சிரித்தார்).

- (குங்குமம், 27.3.1998).

எவ்வளவு தொலைநோக்கோடு சாமியார்களைப்பற்றி விஸ்தாரமாகப் பேசி சிரித் திருக்கிறார். தான் சொன்னது தனக்கே வரும் என்று அவர் கிஞ்சிற்றும் எதிர்பார்த் திருக்கமாட்டார். அவர் தொலைநோக்கோடு சொன்னபடி, இப்பொழுது மக்கள் வாய்விட்டு ரசித்துச் சிரிக்க வேண்டியதுதான்.

வேஷம் போட்ட சாமியார்கள்தான் ஜெயிலுக்குப் போறாங்க. ஆம், அப்படித்தான் ஜெயேந்திர சரஸ்வதியும், குட்டி சங்கராச்சாரியார் விஜயேந்திரசரஸ்வதியும் ஜெயிலுக்குப் போனாங்க.

என்ன திடீரென்று சங்கராச்சாரியார்பற்றி இன்று... பொருத்தம் இல்லாமலா? ஆறு ஆண்டுகளுக்குமுன் (2004) இதே நாளில்தான் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார் ஜெயேந்திரர்.

இந்தியன் கிரிமினல் கோட் 302, 120-பி, 34, 201 ஆகிய பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்டார். 61 நாள்கள் ஜெயேந்திரர் மாமியார் வீட் டுக்குச் சென்று ஜெயில் கம்பிகளை எண்ணிக் கொண்டிருந்தார்.

இவரது ஜூனியர் 31 நாள்கள் மாமியார் வீட்டில் இருந்தார். ஜாமீனில் வெளியே வந்து சென்னை ஆயிரம் விளக்குப் பகுதி காவல் நிலையத்தில் மூன்று வாரம் கையொப்பம் போட்டுக் கொண்டு கடந்தார் - சென்னையை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று ஆணை.

ஜெகத்துக்கே குருக்களின் யோக்கியதை இத்தி யாதி - இத்தியாதிதான்.

ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டனவே, இவர்கள் மீதான வழக்கு என்னாயிற்று? சாட்சிகள் எல்லாம் பல்டி அடிப்பது ஏன்? இதுபற்றி அரசு ஆய்வு செய்யவேண் டும். என்னென்ன காரணங்களால் பிறழ் சாட்சிகளாயினர் என்பது மிகவும் முக்கியம். வழக்கு விசாரணையைக் காலம் கடத்த கடத்த குற்றவாளிகளுக்குத்தான் கொண்டாட்டம். இதற்குப் பின் நடந்த பல கொலை வழக்குகளில் தீர்ப்புகள் வந்துவிட்டனவே! இவர் வழக்கு மட்டும் ஏன் இப்படி? சங்கராச்சாரி என்றால் அசல் நெய்யில் பொரித்த அப்பளமோ!

--------------- மயிலாடன் அவர்கள் 11-11-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

3 comments:

Unknown said...

2 வது அலை வரிசை உலக மெகா ஊழல், வழக்கு போடவே இன்னும் முடியவில்லை!சாமியார் வழக்கே இப்படியென்றால், திராவிட வழக்கின் கதி என்ன!?ஆனால், திராவிடத் தனையன் கொலை வழக்கு மட்டும் விரைவில் முடிந்து விட்டது!ஆச்சரியம்!

தமிழ் ஓவியா said...

மத்திய அமைச்சர் ஆ. இராசா அவர்களைப் பதவியிலிருந்து வெளியேற்றிட நடைபெறும் சூழ்ச்சிகளைப்பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. இராசா அவர்களை பதவி விலக வைத்து, அதன்மூலம் தி.மு.க.விற்குப் பழியை - களங்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது, வெறும் வாயை மெல்லும் எதிர்க்கட்சியினருக்கு அவலாவது கிடைக்காதா என்ற ஏக்கத்துடன் திட்டமிட்டு நடத்தப்படுவதாகும்.

இதில் உள்ள முக்கிய காரணம் - உயர்ஜாதி ஆதிக்கவாதிகளான அரசியல் கட்சிகள், ஊடகங்கள், தொலைக்காட்சியினருக்கு மத்திய அமைச்சர் ஆ. இராசா ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் என்பதேயாகும்.

இரண்டாவது, தி.மு.க.வை காங்கிரஸ் கூட்டணியிலிருந்து எப்படியாவது வெளியேற்றிவிட இதுவரை செய்த முயற்சிகள் - காங்கிரஸ் தலைமை, தி.மு.க.வின் நம்பகத்தன்மை, நாணயம் மிக்க நட்புறவு இவற்றை மதித்து - பலிக்க இடந்தராமல், தொடர்ந்து அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க.வும், காங்கிரசும் நல்ல நட்புறவுடன் இருக்கும் என்று புரிய வைத்துவிட்டதால், காங்கிரஸ் கட்சியுடன் தமிழ்நாட்டில் கூட்டுச் சேர தனது பல்லவி, அனுபல்லவி எல்லாம் முடிந்து சரணம் பாடியும் அ.தி.மு.க.விற்கு அழைப்பு வராது போலுள்ளதே என்று கருதிய ஜெயலலிதா, இப்படி இதை சாக்காக பிடித்துக்கொண்டு, ஊழலை ஒழிக்க திடீரென பரசுராம அவதாரியாக ஆர்ப்பரிக்கிறார்!

மற்ற அரசியல் கட்சிகளும் காங்கிரஸ் - தலைமையில் உள்ள கூட்டணியில் ஒரு களங்கத்தை ஏற்படுத்த இதுதான் சமயம் என்று கருதி, குழிப் பிணத்தைத் தோண்டி எடுத்து மீண்டும் மீண்டும் ஒப்பாரி வைத்து அழுது நாடகம் ஆடுகின்றனர்.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்கெனவே முன்வைத்துப் பிரச்சாரமும் செய்து - தோல்வி கண்ட ஓராண்டுக்குப் பிறகு, ஏன் திடீரென இராசாவின் பதவி ரத்தம் குடிக்க இந்த நரியார்கள் - நாரியர்கள் துடிக்கிறார்கள்?

மத்திய அமைச்சர் இராசா இதில் தனியே சொந்தமாக முடிவு எடுத்தாரா? எடுக்கத்தான் இயலுமா?


டிராய் என்ற தொலைத்தொடர்பு அமைப்புதானே இதனை முடிவு செய்தது - பிரதமர் ஒப்புதலுடன்தானே இத்தகைய நடவடிக்கைகள் நடந்துள்ளன?

இவற்றை நாடாளுமன்ற மக்களவையிலே அமைச்சர் இராசா மிகத் தெளிவாக, ஆணித்தரமாக விளக்கினாரே, அதை மறுக்க முடியுமா?

மராத்தியத்தில் ஆதர்ஷ் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என்றால், அது மத்திய நிதி அமைச்சர் அவர்கள் சொன்னதைப் போல இரு மாநிலங்கள் பிரச்சினை (மகாராஷ்டிரா, டில்லி) அதனைக் காங் கிரஸ் கட்சி ஆதாரபூர்வ மாகத் தெரிந்து அந்த முடிவை எடுத்தது அவர் களது உரிமை. கமிட்டி சொன்னதை வைத்து நடவடிக்கை.

ஆனால், இங்கே அமைச்சர் இராசா செய்யாத குற்றத்திற்காக ஜென்ம தண்டனை என்பதுபோல இப்போது ஏன் பதவி விலகவேண்டும் - அவர் வேறு இலாகாவிற்கு ஏன் செல்ல வேண்டும்?


சி.பி.அய். வழக்கு உள்ளது. உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் இவர் குற்றவாளியாக்கப்பட்டுள்ளரா? குற்றம்சாற்றி நிரூபிக்கப்பட்டு, தீர்ப்பு வந்துள்ளதா?

ஆடிட்டர் - ஜெனரல் (GAG) அறிக்கைகூட அதிகார பூர்வமாக இன்னமும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லையே? குடியரசுத் தலைவரிடம் சமர்ப் பிக்கப்பட்டது என்பதிலிருந்து காகிதப் புலிகளின் ரத்த வேட்டைதானே இப்படி ஆவேசங் காட்டச் செய்கிறது?

இதே இராசா 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பல கோடி ரூபாய்கள் அதிகம் விட்டு, மத்திய அரசின் கருவூலத்திற்கு 66,980 ஆயிரம் கோடி ரூபாய் பெரு வருவாய் தந்தாரே - அதற்கு சிறு பாராட்டினை இவர்கள் யாரும் தெரிவித்தார்களா?

மத்திய அமைச்சரவை என்பது பிரதமரின் தலைமையில் கூட்டுப் பொறுப்பு(Collective Responsibility) உள்ள ஒன்று அல்லவா? இதில் தனியாக ஒருவரை பலிகடாவாக்க முயற்சிப்பது எந்த வகையில் ஜனநாயகம் - அமைச்சரவையின் அறம் ஆகும்?

ஜெயலலிதாவின் வழக்குகள் - ஊழல்கள் பலவும் மக்கள் மன்றம் அறிந்ததே! வெளிநாட்டிலிருந்து யாரோ அனுப்பிய நன்கொடையை தன் கணக்கில் வரவு வைத்தாரே - அளவுக்கு அதிகமான சொத்து சேர்ப்பு, டான்சி வழக்கில் நிலத்தை திருப்பித் தந்து வெளியே வந்தது எல்லாம் மக்களுக்கு மறந்துவிடுமா?

இராசாவை பதவி விலகல் கூச்சலில் பல உள்நோக்கங்கள் பலருக்கு!

இது பந்தலிலே பாவக்காய் என்ற ஒப்பாரி வைத்து அழுத பெண்கள் கதைபோல...

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு உள்நோக்கம்!


இதில் மற்றொரு முக்கிய பின்னணி - முன்பு ஏகபோகமாக அனுபவித்த கொள்ளையைத் தடுத்து, லாபக் குபேரர்களின் ஏகபோகமில்லாது - பலருக்கும் பிரித்தளிக்க பிரதமர் ஒப்புதல் முதற்கொண்டு பெற்று, அரசு கருவூலத்திற்கு ஏராள வருவாய் வரும்படி செய்த இராசாவின்மீது ரவுத்திரம் - கோபாக்கினி ஊடகங் களை ஏவிவிடுகின்றனர்!

அசுரன் திராவிடன் said...

ஸ்பெக்ட்ரம் குறித்தும் ஆ.ராசா குறித்தும் படித்த மேதாவிகளுக்கும் ,புரியாத பாமரர்களுக்கும் சிலவிளக்கங்கள்
ராசாவுக்கு மத்திய அரசு முழு ஆதரவு -நக்கீரன்

நான் செய்தது தவறா ?கொந்தளிக்கும் மத்திய அமைச்சர் ஆ.ராசா

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு: முறைகேடு நடைபெறவில்லை உச்சநீதிமன்றத்தில் அரசு மனு தாக்கல்


இதற்கு பின்னால் உள்ள சக்தி எவை? சதி என்ன? அதுதான் இங்கே 'மில்லியன் டாலர் கேள்வி!-ஆ.ராசா