Search This Blog

30.7.08

"சேது"என்பது இருந்ததே கிடையாத - "டைம்ஸ் ஆப் இந்தியா"வின் படப்பிடிப்பு

"சேது"என்பது இருந்ததே கிடையாது!

தொல்லியல், புவியியல் அறிஞர்களின் தெளிவான கருத்து இது!
அரசு இதன் அடிப்படையிலேயே நீதிமன்றத்தில் கூறியுள்ளது

"டைம்ஸ் ஆப் இந்தியா"வின் படப்பிடிப்பு


புதுடில்லி, ஜூலை 29- "ராம சேது" என ஒன்று இருந்ததே கிடை யாது என்று அரசு கூறியதற்கு அடிப்படையான ஆதாரமே புகழ் பெற்ற தொல்லியல் ஆய்வாளர்கள், பூகோளவியல் அறிஞர்களின் கருத்துக் குறிப் புகள்தான்; இவ்வகை ஆய்வா ளர்களில் ஆர்.எஸ்.எஸ்.கார ரான பி.பி. லால் என்பவரும் அடக்கம். ராமசேனை பாலம் கட்டியது என்பதை மறுத்து இவர் அசைக்க முடியாத ஆதாரங்களைத் தந்துள்ளார்.

(இந்திய அரசின்) பண் பாட்டு அமைச்சகம் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் கூறி, இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தை (ICHR) அணுகி அதன் கருத்துகளைப் பெறு மாறு கேட்டுக்கொண்டது. இந்திய வரலாற்று ஆய்வு மய்யம் தொல்லியலாளர்களாகிய எச்.டி.சங்காலியா, பி.பி. லால், எச்.பார்க்கர், பூகோளவியலாளர் ஓ.எச்.கே. ஸ்பேட் மற்றும் 1909 ஆம் ஆண்டைய இந்திய அரசு கெஜட்டீர் ஆகியவற்றை மேற்கோள் காண்பித்து பாலம் என்பது கற்பனைப் புனைவு என்றும் அதற்கு வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடை யாது என்றும் தெரிவித்தது.

சங்காலியாவின் ஆராய்ச்சி நூலான வரலாற்றுப் பார்வை யில் ராமாயணம் எனும் நூல் ராமன் தன் அம்புகளால் கட லைப் பணிய வைக்கத் தன் அக்னி அஸ்திர அம்புகளை விட்டது, மனித உருவில் கடல் ராமன் முன்பு தோன்றியது, பாலம் கட்ட உதவி செய்வேன் என உறுதி கூறியது போன்ற வற்றை விளக்குகிறது. பின்னர், வானரங்கள் எல்லா வகை யான மரங்களைக் கொண்டும் (சால், அசுவாபரணா, குடாஜூ, அர்ஜூனா, தடா, ரிலோகா, திமிடா, வில்வகா, சடாபரணா, கார்னிகாரா, சூடா அசோகா முதலியவை) கடலைத் தூர்த் தன. அதன்பின், பெரிய பாறைக் கற்கள் கடலில் போடப்பட்டன. இப்படியாக பெரிய பாலம் ஒன்று (மகா சேது) பத்து யோஜனை அக லம், நூறு யோஜனை நீளத்தில் நளனால் கட்டப் பட்டது என்றும் அந்நூலில் உள்ளது.

மணல்மேடுதான்

இவற்றை ஆதாரமாகக் கொண்டு - நிலவியல் எப்படி இருக்கிறது என்பதையும் சங் காலியா கூறுகிறார்: ராமேசு வரத்தில் தேரி எனப்படும் மணல்மேடுகளைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை; இவையும் மூன்று வகையாக இருக்கின் றன - செம்பு போன்ற சிகப்பு, பழுப்பு மற்றும் வெண்மை அல்லது சாம்பல் நிறம் - முதல் வகை மிகப் பழைமையானது. அந்தப் பகுதி எப்படி அந்தக் காலத்தில் இருந்தது, அதாவது 5 ஆயிரம், 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முன் இருந்தது என்ப தைக் காண்பிக்கிறது. இன் றைக்கும் கூட, அந்தப் பகுதி யில், சில பனைமரங்களும் ஒன்றிரண்டு வேறு வகை மரங் களும் மட்டுமே இருக்கின்றன, வேறு எதுவுமே அங்கு முளைத்து வளர்வதில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். கல் அந்தப் பகுதியில் காணக் கிடைக்கவில்லை, பல மைல் கள் தூரம் உள்ளே போனால் தான் கல் இருக்கிறது. அங்கே யும்கூட, பாறைக் குன்றுகளை உடைத்துத்தான் கல் பாளங்களைக் கொண்டு வர முடியும் எனவும் எழுதுகிறார்.

பாலத்தின் நீளம் (100 யோஜனா) அகலம் (10 யோஜனா) பற்றி இதிகாசத்தில் என்ன கூறப்பட்டிருந்தாலும், அந்த இடத்தைப் பார்க்கும் எவரும், அந்த இரண்டு முனை களுக்கிடையே உள்ள தூரத்தை அறிந்த எவரும், உலகில் எந்த இடத்திலும் இல் லாத வகையில் மரத்துண்டு களையும் கல்பாளங்க ளையும் வைத்துக் கட்டப்பட்ட பாலம் இதுவாகத்தான் இருக்க முடி யும் என்று எளிதாகச் சொல்லி விடுவார்கள்(!). உண்மையைச் சொன்னால், இது முழுக்க முழுக்கக் கற்பனையில் புனையப்பட்ட மிகப் பெரிய அற்புதம் என்றும் அது போலவே இலங்கையைப் பற்றியும் கருத வேண்டும்.

லால்கூறும் கருத்து


லால் தெளிவாகத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்: தெற்கு ஆசியாவின் ஆகப் பழைய நாகரிகம் எனும் நூலில் (இலங்கையின்) வட முனையான யாழ்ப்பாணம் (இந்திய) எல்லைப் பகுதியிலி ருந்து 30 கி.மீ. தூரமே உள்ளது. இதனிடையில் உள்ள கடல் பகுதி ஆழம் அற்றது, இமய மலைப் பகுதியில் கடல் நீர் பனிக்கட்டியாக உறைந்து இருந்த காலத்திலும் கூட, நிலப் பகுதியுடன் இலங்கை இணைந்திருக்கும் வகையில் சில நிலப் பகுதிகள் தோன்றியிருக்கலாம் என்று எழுதியுள்ளார்.

கவிஞனின் கற்பனை தான் பாலம் என எழுதிப் பாலம் கட்டிய கதையைப் புறம் தள் ளிய பார்க்கர், மிகச் சிறிய அஸ்திவாரத்தின் மேல் தெற்கத்திய இனத்தாரிடம் இந்து மதம் அல்லது ஆரிய கலாச் சாரத்தைப் பரப்பிவிடுவது இலங்கையைப் பொறுத்த மட்டில் அழிந்துபட்டது; எப்படி என்றால், தீவின் பூர்வக் குடிகளின் வழி வந்தவர்கள் - உள்நாட்டுப் பகுதியைச் சேர்ந்த வேத்தர்கள் எப்போதுமே இந்துக் கடவுள்களைக் கும்பிட வில்லை. வரலாறு அறிந்தவரை ஆரிய கலாச்சாரத்தைப் பின் பற்றவில்லை என்று எழுதுகிறார்.

"ஆதாம் பாலம் என்பது பவழப் பூச்சித் தொகுப்புகள் கடல் மட்டம் உயர்ந்ததால் கொல்லப்பட்டுப் பவழப் பாறைகளாகிவிட்டவை" என்றுதான் ஸ்பேட் கூறியுள்ளார்.

------------------------- நன்றி: "டைம்ஸ் ஆஃப் இந்தியா", 29.7.2008

0 comments: