Search This Blog

15.2.12

இந்து முன்னணியினர் காதலர் தினத்தை எதிர்ப்பது ஏன்?


காதலர் நாள் உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டுள்ளது. குறிப் பிட்ட வயது அடைந்தவர்கள் - காதலர்கள் தங்களின் உணர்வுகளுக்கும், மகிழ்வுக்கும் அடை யாளமாக இந்நாளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

காதல் என்பது உயிர் இயற்கை, அது கட்டில் அகப்படும் தன்மையதோ? என்றார் புரட்சிக் கவிஞர்.

வயது அடைந்த ஓர் ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது கூட தனிப்பட்ட இருவர் பிரச்சினை. இதில் மூன்றாவது மனிதனுக்கு என்ன வேலை? என்ற வினாவை எழுப்பியவர் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார்.

இந்த நிலையில் காதலர் நாள் எதிர்ப்பு என்று கூறி இந்து முன்னணிக் கும்பல், காதலர் சந்திப்பு இடங்களுக்குச் சென்று முண்டா தட்டி கலகம் விளைவிப்பதும், அடிப்பதும், உதைப்பதும், கட்டாயமாக தாலி கட்டச் செய்வதும் எந்த வகையில் நியாயம்?

சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொள்ள இந்து முன்னணியினருக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?

இந்து மதத்தில் கடவுளர்களே காதல் செய்ய வில்லையா? காதலையும் தாண்டி காமலீலைகளில் 60 ஆயிரம் கோபிகைகளுடன் கிருஷ்ண பகவான் ஆடாத ஆட்டமா? செய்யாத அசிங்கமா, ஆபாசமா? குளிக்கும் பெண்களின் ஆடைகளைத் திருடி தன்னிடம் வைத்துக் கொண்டு நிர்வாணமாகக் கரையில் வந்து இரு கை களையும் தூக்கிக் கும்பிட்டால்தான் ஆடைகளைத் தருவேன் என்று அடம் பிடித்த அயோக்கியனைப் படம் போட்டு மாட்டி வைத்து, வீட்டில் விழுந்து கும்பிடுபவர்கள் காதலர் தினத்தைக் கண்டிக்கலாமா?

சட்டமன்றம் நடக்கும் நேரத்திலேயே கைப்பேசி யில் ஆபாசப் படங்களை ரசித்த கூட்டமா காதலைக் கொச்சைப்படுத்துவது?

காதலர் தினத்தை இந்து முன்னணி, ஆர்.எஸ். எஸ்., சங் பரிவார்க் கும்பல் எதிர்ப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருக்கிறது.

ஜாதியைப் பார்த்து, மதத்தைப் பார்த்து காதல் வருவதில்லையே. இதனால் ஜாதி ஒழிகிறது, மதம் மாண்டு போகிறதே! இவற் றைக் கட்டிக் காப்பதற்கே அவதாரம் எடுத்ததாகக் காட்டிக் கொள்ளும் இந்து முன்னணியினர் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள் என்பதை மனதில் வையுங்கள்.

சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள இந்து முன்னணியினர் அனுமதிக் கப்பட்டால், அதனைத் தடுத்து நிறுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ளும் நிலை ஏற்படும் - எச்சரிக்கை!

---------- -------------- மயிலாடன் அவர்கள் 15-2-2012 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

3 comments:

தமிழ் ஓவியா said...

இந்து முன்னணி சொன்னால்... இரு ஆசிரியர்களை சிறையில் தள்ள வேண்டுமா?


சென்னை மீஞ்சூரில் தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 10ஆம் தேதி நடந்த ஆண்டு விழாவில் நவீன இராமாயணம் எனும் பெயரில் மாணவர்கள் பங்கேற்ற நாடகம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அந்த நாடகத்தில் இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் காட்சி அமைந்து விட்டதாகக் கூறி இந்து முன்னணியினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததோடு காவல் நிலையத்தின் முன்பு முற்றுகைப் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் இருவ ரைக் கைது செய்து வழக்குத் தொடுத்ததன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இது என்ன கொடுமை! பள்ளிக் கூடங் களில் ஆண்டு விழாக்களில் கலை நிகழ்ச்சி கள் நடத்துவது என்பது இயல்பான ஒன்று தான். இதில் என்ன குற்றம் கண்டுபிடித்து விட்டனர்?
எந்த வகையில் இழிவுபடுத்திவிட்டனர்? இராமாயணமே ஒரு குப்பைதான் - ஆபாசக் களஞ்சியம்தான். கம்பன் சீதையை வருணிப் பது என்ற பெயரில் அசிங்கப்படுத்தியிருப் பதைவிட, ஆபாசப்படுத்தியதைவிட வேறு யாராவது அசிங்கப்படுத்திவிட முடியுமா? அதுவும் பிரம்மச்சாரியான அனுமானிடம் போய் சீதையின் உள்ளுறுப்புகள் வரை எப்படி எப்படி இருக்கும் என்று வருணித்தானே - இராமாயண பக்தர்கள், இந்து முன்னணி வகையறாக்கள், கம்ப இராமாயணத்தைக் கொளுத்தியிருக்க வேண்டாமா? செய்தார் களா?
பிள்ளையார் ஊர்வலம் என்று கூறி புதுப்புது டிசைன்களில் பிள்ளையாரை உருவாக்கி இழுத்துச் செல்லவில்லையா? பிள்ளையாரின் கைகளில் ஏ.கே.47 துப்பாக்கி யைக் கொடுத்து கார்கில் பிள்ளையார் என்று அழைக்கவில்லையா?

எந்தப் புராணத்தில் கார்கில் பிள்ளையார் சொல்லப்பட்டு இருக்கிறது? அப்படி எடுத்துச் செல்லப்பட்ட பிள்ளை யார்ப் பொம்மைகளை ஆற்றிலும், கடலிலும் போட்டு என்ன பாடுபடுத்துகிறார்கள் - மிதிக்கிறார்கள் - அடிக்கிறார்கள் - துவம்சம் செய்கிறார்கள் இதே இந்து முன்னணி வகையறாக்கள்.

வல்லப கணபதி என்று கூறி ஒரு பெண் ணின் குறியில் பிள்ளையாரின் துதிக்கையை நுழைய விடும் உருவத்தை கோவில்களில் வைத்துப் பூஜை செய்கிறார்களே - இதைவிட

இழிவும், ஒழுக்கக் கேடும், ஆபாச சாக்க டையும் வேறு என்னவாம்?

இந்து மதக் கோவில்களிலும், தேர்களி லும், கோபுரங்களிலும் கொக்கோகம் வெட் கப்படும் அளவுக்கு உருவங்களைச் செதுக்கி வைத்துள்ளனரே - இந்து முன்னணி வகை யறாக்கள் கோடாரியை தூக்கிக் கொண்டு கிளம்பி இருக்க வேண்டாமா?

சிவலிங்கத்தைக் கும்பிடுகிறார்களே, அதன் விளக்கம் என்ன?

சிவன் - பார்வதிகளின் குறிதானே? ஓம் என்னும் தத்துவம் இதற்குள் குந்திக் கொண்டு இருக்கிறது என்று பரப்புரை, பொழிப்புரை சொல்லிக் கொண்டு அலையும் ஒரு கும்பல் பள்ளி ஒன்றில் பிள்ளைகள் நடத்திய கலை நிகழ்ச்சியில் ராமனை அவமதித்து விட்டனர். ஆகா, எங்கள் மனம் ரத்தக் காயமாகி விட்டது என்று ஒப்பாரி வைப்பதில் ஒரு துளி அளவாவது அறிவு நாணயம் உண்டா?

இவ்வளவுக்கும் அந்தப் பள்ளி நிகழ்ச்சியில் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டு இருக்கிறாரே!

அவர் ஏதாவது அந்த நிகழ்ச்சி பற்றிக் கருத்துத் தெரிவித்து உள்ளாரா?

இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் செய்தால், மனு கொடுத்தால் காவல் துறை கச்சை கட்டிக் கொண்டு கிளம்பிவிட வேண்டுமா? இந்து முன்னணி ஆட்சியா நடக்கிறது?

இராமாயணத்தைப்பற்றி தந்தை பெரியார், அண்ணாவின் கணிப்பென்ன - கருத் தென்ன? அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டிருக்கும் ஆட்சியில் இராமாயணக் கதை அடிப்படையில் கலை நிகழ்ச்சியை நடத்திய ஒரு பள்ளியின் ஆசிரியர்களை கைது செய்வதா? சிறையில் அடைப்பதா? பள்ளிகளின் நிருவாகிகளைக் காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரிக்க வேண்டுமா? சிறையில் அடைத்தது இரு ஆசிரியர்களை அல்ல - அண்ணாவை என்பதை அண்ணா தி.மு.க. ஆட்சி மறந்து விட வேண்டாம்!

அந்தப் பள்ளி ஆசிரி யர்கள் மீது போடப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற்று அவர்களை விடுவிக்கும் வேலையை உடனே செய்ய வேண்டும். சென்னையில் இராவண லீலா நடத்தி ராமன், சீதை, இலட்சுமணன் உருவங்களை எரித்த வழக்கில் அவ்வாறு செய்தது குற்றமல்ல என்ற நீதிமன்ற தீர்ப்பைத் திராவிடர் கழகம் வாங்கி வைத்துள்ளது என்பதை நினைவூட்டுகிறோம்.

வழக்கு விசாரணையில் இந்த உண்மை கள் எல்லாம் தெரிய வந்தால் சட்ட விரோத மாக கைது செய்யப்பட்டதற்குக் காவல்துறை பொறுப்பேற்க வேண்டிவரும், எச்சரிக்கை! எச்சரிக்கை!!

- கறுஞ்சட்டை -”விடுதலை” 15-2-2012

தமிழ் ஓவியா said...

இந்து முன்னணியினர் முகத்தில் கரியைப் பூசிய காதல் ஜோடி!

புதுவை: புதுவையில் காதலர் தின கொண்டாட்டத்தை எதிர்த்த இந்து முன்னணியினர் முகத்தி்ல் ஒரு காதல் ஜோடி கரியைப் பூசியது.

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதை எதிர்த்து இந்து முன்னணியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்து முன்னணி தலைவர் சனில் குமார் மற்றும் முருகையா தலைமையிலான 9 பேர் புதுவையில் உள்ள பாரதி பூங்காவிற்கு சென்றனர். அவர்கள் வருவதைப் பார்த்த காதல் ஜோடிகள் அங்கிருந்து ஓடிவிட்டன. ஆனால் வடிவேலு, உமாமகேஸ்வரி ஜோடி மட்டும் தைரியமாக பெஞ்சில் அமர்ந்திருந்தது.

இது தான் நேரம் என்று வந்த அந்த 9 பேர் அந்த ஜோடியிடம் காதலிக்கவா செய்கிறீர்கள், அப்படி என்றால் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தாலியை நீட்டினர். உடனே வடிவேலு எந்தவித பதட்டமும் இன்றி அந்த தாலியை வாங்கி உமா கழுத்தில் கட்டினார்.

இதை இந்து முன்னணியில் எதிர்பார்க்கவில்லை. கெஞ்சுவார்கள், வேண்டுவார்கள் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வடிவேலு தாலியை வாங்க, உமா மகேஸ்வரி கழுத்தை நீட்டவே, சற்றே குழம்பிப் போயினர்.

இருப்பினும் சுதாரித்துக் கொண்ட அவர்களில் ஒருவர் ரூ.1001 மற்றும் இன்னொருவர் ரூ.501 மொய்யாகக் கொடுத்தனர். அந்த ஜோடி பணத்தை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொண்டு டக் டக்கென வீறு நடை போட்டு இடத்தைக் காலி செய்தது.

அப்பாடா திருமணம் நடத்தி வைத்துவிட்டோம் என்று அந்த 9 பேர் பெருமிதம் கொண்ட வேளையில் அந்த ஜோடி பைக்கில் ஏறிக் கொண்டது. புறப்படும் முன்பு தங்களுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் அந்த பெண் தாலியைக் கழற்றி வீசிவிட்டும் சென்றார்.

இதைப் பார்த்த இந்து முன்னணியினர் முகத்தில் ஈயாடவில்லை. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.

இருந்தாலும் அந்தப் பெண் தாலியைக் கழற்றி வீசாமல் போயிருக்கலாம்...!
---------http://tamil.oneindia.in/

தமிழ் ஓவியா said...

காதலர் தின எதிர்ப்பு: கழுதைக்கும் நாய்க்கும் திருமணம் செய்த இந்து முன்னணியினர் கைது

சென்னை: காதலர் தின கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் கழுதைக்கும், நாய்க்கும் இந்து முன்னணியைச் சேர்ந்த 25 பேர் கூடி கல்யாணம் செய்து வைத்தனர். அவர்கள் அத்தனை பேரையும் போலீஸார் வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.

உலகம் முழுவதும் நேற்று காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி காதலர்கள் பரிசுப் பொருட்களை பரிமாறி கொண்டனர். சில காதலர்கள் ஜாலியாக ஊர் சுற்றினர். நிலைமை இப்படி இருக்க இந்து முன்னணியினர் காதலர் தினத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

காதலர் தினக் கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சென்னை ஆர்.கே.நகரில் கழுதைக்கும், நாய்க்கும் இடையே திருமணம் செய்து வைக்கப்பட்டது. அப்போது கழுதை மற்றும் நாய்க்கு அலங்காரம் செய்து, பெண் மாப்பிள்ளை சார்பாக தலா 4 பேர் வீதம் கலந்து கொண்டு மாலை மாற்றி திருமணத்தை நடத்தி வைத்தனர். திருமணத்தின்போது காதலர் தினத்தை எதிர்த்து கோஷமிட்டனர்.

இதேபோல புளியந்தோப்பு காந்தி சிலை அருகே 2 நாய்களுக்கு மாலை மாற்றி திருமணம் செய்து வைக்கப்பட்டது. இத்திருமணத்திற்காக அலங்கரிக்கப்பட்ட பெண் மாப்பிள்ளை நாய்கள் மேளதாளம் முழங்க, குதிரையில் ஏற்றப்பட்டு அழைத்து வரப்பட்டன. காதலர் தினத்திற்கு எதிர்ப்புதெரிவித்து நடத்தப்பட்ட மேற்கண்ட 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 25 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
http://tamil.oneindia.in/