Search This Blog

21.12.07

மகா மகா அறியாமை

என்னை நாத்திகன்,மதத்துவேசி என்று ஆஸ்திகன் சொல்லுவது மகா மகா அறியாமையும் அலட்சியபுத்தியும் ஆகும்.இதை ஒரு உதாரணம் காட்டி விளக்குகிறேன்.
ஒரு ஊரில் ஒரு பிச்சைப் பிழைப்புப் பார்ப்பனன் ஒரு நல்ல காரியம் நடந்ததற்காகப் பிச்சை கொடுக்கு ஒரு வீட்டிற்கு வந்து பிச்சை கேட்டான்.அவ்வீட்டுக்காரன் மற்றவர்களுக்கு கொடுத்தது போல் இவனுக்கும் 4 அணா கொடுத்தான்.அதற்கு அந்தப் பிச்சைக்காரப் பார்ப்பனன் அந்த வீட்டுக்காரனைப் பார்த்துக் கோபித்துக்கொண்டு"ஏ ஓய்! தற்பெருமை, அன்னியர்களைக் குறைகூறுதல்,பணத்தாசை ஆகிய மூன்றையும் துறந்து, நான்கு வேதம்,ஆறுசாஸ்திரம்,பதினெண்புராணம்,தர்க்கம்,மிமாம்சை,தத்துவஞானம் ஆகியவைகளைக் கற்ற மிக மேதாவியும் மகா பண்டிதனுமான எனக்கும் 4 அணா? இந்த ஒன்றும் தெரியாத முட்டாள் கழுதைக்கும் 4 அணாவா? வெகு யோக்கியமாய் இருக்கிறதே உம்முடைய தர்மம்" என்று கேட்டானாம்.
அதுபோல் இருக்கிறது ஒரு ஆஸ்திகன் என்பவன் ஒருவனைப் பார்த்து நாஸ்திகன் என்று சொல்லுவது என்கிறேன்.
--------தந்தைபெரியார்-"குடியரசு"-23.11.1946

0 comments: