Search This Blog

21.12.07

பாரதியார் பற்றி பாரதிதாசன்

பாரதியார் பாடிய ஆயிரக்கணக்கான பாக்களில் தமிழனின் தனித்த நாகரிகத்தையோ, பண்பாட்டைப் பற்றியோ பாடவில்லை. காரணம் கூடாது என்பதல்ல. அவரறிந்த வகையில் தமிழன் நாகரிகமெல்லாம் ஆரியச்சார்புடையவேயாகும். சங்க நூற்களை அறிந்தவர்கள் தான் தமிழனின் தனித்த பண்பாடுகளை அறியமுடியும். அத்தகைய நூற்றொகுதிகள் உண்டு என்பது பாரதியாருக்குத் தெரியாது.இவருக்கு மட்டுமல்ல தமிழ்புலமை சான்ற இவருடைய தகப்பனாருக்கே தெரியாது.இதனை அவரே கூறியுள்ளார்.
எட்டையபுர அரசரோடு இவருடைய தகப்பனார் அளாவளாவிக் கொண்டிருக்கும் போதேல்லாம் இராமாயணம்,மகாபாரதம் போன்ற நூற்களின் கருத்துக்களே பேசப்படும்.ஆராயப்படும். ஆகவே இவை பற்றிய செய்திகளே பாரதிக்குத் தெரியும்.
கதைகளின் போக்கை மாற்றியும், கூட்டியும் தமிழில் இராமாயணம்-பாரதமாகிய நூற்களை அமைத்திருப்பினும்,அவைகளில் காணப்படும் அடிப்படையான சில பண்பாடுகள் தமிழருக்கு எட்டுணையும் பொருந்தாது.

-------------"குயில்"-10.6.1967

0 comments: