Search This Blog

31.12.07

பூப்பு நீராட்டு விழா தேவையா?

பூப்பு நீராட்டு விழா என்பது சம்பந்தப்பட்ட பெண்-உடற்கூறு ரீதியில் உடலுறவிற்கும் அதன் மூலம்-கருவுறுவதற்கும் தயாராகிவிட்டாள் என்பதை உணர்த்தும் அறிவிப்பேயாகும்.நாகரிகம் வளர்ச்சி பெறாத நிலையில் தகவல் தொடர்பு முறை பின்தங்கி இருந்த நிலையில் பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இச்சடங்கினை இன்றும் தொடர்வது அநாகரிகமான,பெண்களை இழிவுபடுத்தும் செயலாகும்.இதுபோல், உடற்கூறு ரீதியில் உடலுறவிற்கும் பெண்னைக் கருவுறச் செய்வதற்கும் தயாரான ஆணிற்கு இத்தகைய சடங்குகள் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.பெண்களை போகப்பொருளாக பாவிக்கும் ஆண் ஆதிக்க செயல்பாடே- இந்நிகழ்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.

மாதவிலக்கு என்பது சிறுநீரைப்போல் மலத்தைப்போல் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருளேயாகும்.இத்தகைய மாதவிலக்கு காலத்தை "தீட்டு" என்று கூறுவது பெண்களை இழிவுபடுத்தும் மூடநம்பிக்கையான செயலாகும்.

0 comments: