Search This Blog

21.12.07

செருப்புத் தோரணத்திற்கு நன்றி.

ஒரு சமயம் பெரியாரும் அண்ணாவும் சிவகங்கையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற போது ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டனர். அந்த வழியில் இரண்டு மூன்று இடங்களில் பழைய செருப்புக்களைக் கொண்டு தேசியவாதிகள் தோரணம் கட்டியிருந்தனர். அண்ணா அவர்கள் பேசும்போது அதைக்குறிப்பிட்டு "எங்களை வரவேற்க தேசியவாதிகள் எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதைத்தான் நான் எண்ணிப்பார்க்கிறேன்.இத்தனை பழைய செருப்புக்களை பொறுக்குவதற்கு அவர்கள் எத்தனை நாட்கள் பாடுபட்டிருப்பார்கள்!அதற்காக அவர்களுக்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றாராம்.
-----நூல்:பேராசிரியரின் நீங்களும் பேச்சாளர் ஆகலாம்.

0 comments: