Search This Blog

24.10.13

இந்து முஸ்லீம் பற்றி பெரியார்

இந்து முஸ்லீம்

இந்த நாட்டில், இந்துக்கள், முஸ்லீம்கள் என்கின்ற இரண்டு சமூகங் களும் பெரும்பான்மையான மக்கள் எண்ணிக்கையுடைய சமூகங்களாகும். ஆனால் அவை இரண்டும் தங்கள் தங்களது நடை உடை ஆச்சாரம் அனுஷ் டானம் ஆகியவைகளில் ஒன்றுக்கொன்று நேர் விரோதமான சமூகங்கள் என்பதோடு உண்மையைப் பேச வேண்டுமானால் இவ்விரு சமூகங்களும் அரசியலிலும் மத விஷயத்திலும் ஒவ்வொருவருடைய இலக்ஷியங்க ளிலுங்கூட வேறுபட்ட தென்று சொல்லும்படியான சமூகங்களாகும்.

உதாரணமாக நடை உடை ஆசார அனுஷ்டானங்களிலுள்ள மாறு பாட்டைப் பற்றி நாம் யாருக்கும் எதுவும் எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை என்று கருதினாலும், அரசியல் மத இயல் இலட்சியங்களில் இருவரும் வேறுபட்டவர்கள் என்பதில் சிலருக்காவது விவரம் தெரிய வேண்டியிருக் கலாம். ஆதலால் அதைப் பற்றிக் கவனிப்போம்.

இந்தியாவிலிருக்கும் இந்துக்களில் 1000க்கு 998 பெயர்கள் மத உணர்ச்சியின் பயனாகவே மகமதியர்களை வெறுக்கின்றார்கள் என்று சொல்லுவதிலும் அதுபோலவே இந்தியாவின் பெரும் பகுதியில் உள்ள மகமதியர்களில் 1000க்கு 999 பெயர்கள் இந்துக்கள் என்பவர்களை வெறுக் கின்றார்கள் என்பதிலும் யாருக்கும் சந்தேகமிருக்காது. இதில் ஒரு சமயம் எண்ணிக்கைகளிலும் ஏதாவது ஒரு சிறு அளவு வித்தியாசம் இருந்தால் இருக்கலாமே யொழிய ஒருவரையொருவர் வெறுக்கின்றார்கள் என்கின்ற உண்மையில் வித்தியாசம் இருக்குமென்று யாரும் சொல்லமுடியாதென்றே கூறுவோம்.

ஏனெனில் மகமதியர்களை இந்துக்கள் மிலேச்சர்கள் என்றும், முரடர் கள் என்றும் கருதும்படியாக இந்துமத ஆதாரங்களிலும் இந்தியாவின் சரித்திரங்கள் என்று சொல்லப்படுபவகைகளிலும் காணப்படுவதுடன் இன்றைய உண்மையான இந்துக்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களால் மகமதியர்கள் தொடுவதற்கோ - உண்பவை தின்பவைகளில் கலந்து கொள்ளு வதற்கோ அருகரற்றவர்கள் என்றே கருதியிருக்கின்றார்கள் என்பதில் ஆnக்ஷபணையிருக்க முடியாது. அதுபோலவே இந்துக்களைப் பற்றியும் மகமதியர்களுக்கு தங்களது மத சம்பிரதாயப்படி இந்துக்களை இழிவாய் கருதவும் தங்களுக்கு நிரந்திர எதிரியாய்க் கருதவுமான உணர்ச்சிகள் தான் இருந்தும் வருகின்றது. இன்னும் மதக்கொள்கைகள் என்பது அந்தந்த மதக்காரர்கள் அல்லாதவர்களுக்கு உலகத்தில் இட மில்லை என்று கருதக் கூடிய அளவில் தாண்டவமாடிக் கொண்டி ருக்கின்றன.

ஆகையால் தான் இந்துக்கள் இந்தியநாடு தங்களுடையது என்ற மனப்பான்மை மீது இந்தியாவில் தாங்களே ஆதிக்கம் செலுத்த வேண்டு மென்று ஆசைப்படுகின்றார்கள் என்பதையும் அதுபோலவேதான் மகமதியர்கள் இந்தியா முழுவதும் மகமதிய இராஜ்யமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள் என்பதையும் பார்த்து வருகின்றோம். இருவருடைய மதசம்பந்தமான ஆதாரங்களும் இந்த இலட்சியத்தை வலியுறுத்துவதாகக் கொண்டதென்றே சொல்லுவோம்.

இந்திய அரசியல் தலைவர் திரு. காந்தி அவர்கள் அடிக்கடி தனது ‘சுயராஜ்யத் திட்டத்தின் கருத்து ராமராஜ்யம்’ என்று சொல்லுவதே இந்துக் களின் அரசியல் மனப்பான்மையை விளக்கக்கூடியதாகும்.

அதோடு மகமதியர்கள் மாட்டுமாமிசம் சாப்பிடுவதை இந்துக்கள் அருவறுப்பதும், இந்துக்கள் தெருவில் மேளம் அடிப்பதை மகமதியர்கள் தடை செய்வதும் போதிய உதாரணங்களாகும். ஏனெனில், இந்த இரண்டு தத்துவங்களிலும் மத உணர்ச்சியிருக்கின்றதே தவிர மற்றபடி பொது நோக்கு உணர்ச்சியில்லை என்பது விளங்கும்.

நிற்க, இந்நாட்டில் இந்துக்கள், மகமதியர்கள் என்கின்றதான பெயர் கொண்ட இரு சமூகங்களென்பதில், எண்ணிக்கையில் இந்தியாவில் மகமதியர்களைவிட இந்துக்கள் என்பவர்கள் அதிக எண்ணிக்கையுள்ளவர் களென்று சொல்லுவதானாலும் அதாவது மகமதியர்களைவிட இந்துக்கள் 3 பங்கு அதிகமான எண்ணிக்கையுடையவர்கள் என்று கணக்கு சொல்லு வதானாலும் உண்மையில் மகமதியர்களே இந்தியாவில் வலிமைபொருந்திய சமூகத்தார் என்றுதான் சொல்லவேண்டும்.

ஏனெனில் இந்துக்களின் ஜனசங்கை எவ்வளவு பெரிய எண்ணிக்கை யாயிருந்தாலும் அதில் பல பிரிவுகள் ஏற்பட்டு சின்னா பின்னப்பட்டு தங்களை ஒரு சமூகம் என்ற சொல்லிக்கொள்ளமுடியாத நிலைமையில் பிரிக்கப்பட்டுக் கிடப்பதால் மகமதியர்களே இந்துக்களை விட பெரிய சமூகமாவார்கள் என்கின்றோம்.

மேலும் இந்துக்கள் என்கின்ற கூட்டத்திலிருந்து பஞ்சமர்கள் அல்லது ஆதிதிராவிடர்கள் என்கின்ற சமூகத்தாரான 4ல் ஒரு பங்கு ஜனத்தொகைக் கொண்ட சமூகத்தை விலக்கித்தான் இந்து சமூக எண்ணிக்கை யைக் கணக்குப் போடவேண்டும். ஏனெனில் அவர்களை ஒரு வித அடிமை யாகவும் மிருக ஜீவன்களைவிட கேவலமாகவும் இந்துக்கள் கருது கிறார்கள். இதுபோலவே இந்துக்களில் மற்றும் பலசமூகங்கள் ஒன்றுக் கொன்று உயர்வு தாழ்வு என்று சொல்லிக்கொள்ளும் முறையில் சமத்துவம் பாராட்டப்பட முடியாத - ஒற்றுமை பாராட்ட முடியாத நிலைமையிலுள்ள பல பிரிவு களையும் கூர்ந்து பார்த்தால் தானாகவே மகமதிய சமூகம் தான் அதிக எண்ணிக்கையுடையது என்பதும் விளங்கும்.

அன்றியும் மகமதியர்கள் தங்களை எல்லோரும் இஸ்லாமானவர்கள் என்று சொல்லிக்கொள்வது போல் இந்துக்கள் எல்லோரும் தங்களை ஒரு கூட்டத்தில் சேர்த்துச் சொல்லிக் கொள்ள வார்த்தையே கிடையாது. ஒருவித பாவனையும் கிடையாது. தனித்தனி சமயம், ஜாதி, வகுப்பு, உட்பிரிவு ஆகியவைகளைச் சொல்லிப் பிரித்துக்காட்டிக் கொண்டே தீரவேண்டிய வர்களாய் இருக்கிறார்கள்.

வேண்டுமானால் வேறு ஒருவனை ஏமாற்றும் போதும் வேறு ஒருவனுடன் சண்டைக்குப் போகும்போதும் மாத்திரம் தான் இந்து என்றால் என்ன என்று உணர்ந்து கொள்ளமுடியாத மக்களைப்பிடித்து “நாம் எல்லோரும் இந்துக்கள்” என்று உரிமை பாராட்டுவதும், அது தீர்ந்த பிறகு அந்த மக்களையே “எட்டி நில் தொடாதே” என்பதுமான குணங்கள் இந்து சமூகத்தி லுள்ள, சகல பிரிவார்களிடமும் இருந்துவருவது வழக்கமாகயிருந்து வருகின்றது. இது பார்ப்பனனானாலும், சைவனானாலும், வைணவனானாலும், வேளாளனானாலும், “எந்த வருண”த்தானானாலும் மற்றும் யாரானாலும் இவர்களுக்கெல்லாம் இந்த உணர்ச்சி இயற்கை உணர்ச்சியாயி ருந்தே வருகிறது.

ஆகவே இத்தியாதி காரணங்களால் இந்துக்கள் என்பவர்கள் தங்களை ஒரு சமூகம் என்று சொல்லிக் கொள்ளமுடியாத நிலைமையில் வெகுகாலமாய் இருந்து வருவதும் இந்துக்கள் தவிர மற்ற சமூகங்கள் எவ்வளவு சிறியதாயிருந்தாலும் அவை ஆதிக்கத்திலிருந்து வருவது மாயிருந்து வருகிறது. மற்றும் இந்தக் காரணமேதான் இந்தியாவை வெளிநாட்டு மக்களே அதாவது “இந்துக்கள் அல்லாத சமூகமே” ஆளக் கூடியதாகவும் இருந்து வருகின்றது. ஆகவே இந்து சமூகமும் இஸ்லாம் சமூகமும் இந்தியாவில் இப்போதுள்ள ஆக்ஷியின் பயனாய் எவ்வளவு கஷ்டப்பட்டு வருவ தாயிருந்தாலும் ‘அன்னிய ஆக்ஷியை’ ஒழிக்கும் விஷயத்தில் ஒன்றை யொன்று நம்பி ஒத்து வேலை செய்யமுடியாமல் இருந்துவருவதுடன் மூன்றாவதொருவனுடைய தீர்ப்பே இவர்களது வாழ்வுக்கு வேண்டியதாய் இருக்கின்றது.

ஆதலால் புதிய அரசியல் சீர்திருத்தக் கிளர்ச்சியில் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்பதான முயற்சிகள் யார் யாரோலோ எவ்வளவு முயற்சிகள் செய்தும் முடிவு பெறாமல் முறிந்துபோய்விட்டது நமக்கு சிறிதும் ஆச்சரிய மாக இல்லை. இம்முயற்சியின் அஸ்திவாரமே ஒருவரையொருவர் யேய்க்கும் தத்துவத்தில் இருந்து முளைத்ததே தவிர உண்மையில் நல்ல எண்ணத்தின் மீது சிறிதும் யேற்பட்டதல்லவென்றே சொல்லுவோம். இருவருக்கும் உள்ள தகராறு என்பதே பிரதிநிதித்துவம் என்பதில் மாத்திரம்தான் இருந்து வருகின்றதேயொழிய இன்னமாதிரி சீர்திருத்தம் வேண்டும் என்பதில் இருப்பதாகக் காணவில்லை.

ஆகவே ஒருவர் கோரும் பிரதிநிதித்துவம் மற்றொருவர் கொடுக்க சம்மதிக்காததும் ஒருவர் கொடுக்கும் பிரதிநிதித்துவம் மற்றொருவருக்கு திருப்தி இல்லாததும் ஒருவரிடம் ஒருவருக்குள்ள அவநம்பிக்கையே யாகும்.

ஆதலால் இருவரும் அவநம்பிக்கைப் படுவதிலிருந்தே ஏமாற்றும் தன்மைதான் ஒற்றுமை என்கின்ற ரூபத்தில் இருந்துவருகின்றது என்பது விளங்கும். இந்த நிலையில் நாம் யார் மீதாவது அதிகமான குற்றம் சொல்ல வேண்டுமானால் இந்துக்கள் என்பவர்கள் மீதுதான் அதிக குற்றம் சொல்ல வேண்டியதாய் இருக்கின்றது. அதாவது இந்துக்கள் இடம் தான் ஏய்க்கும் எண்ணம் அதிகமாய் இருக்கின்றது என்று சொல்லுவோம். எப்படியெனில் இந்தியாவில் இந்துக்கள், மகமதியர்களை நினைப்பதைவிட இன்னும் அதிக இழிவாய்க் கருதும் 5, 6 கோடி மக்கள் தீண்டாதவர்களாய் தெருவில் நடக்கா தவர்களாய், கல்வியின்றி, நல்ல உடையின்றி, நல்ல ஆகாரமின்றி, இருக்க வீடு இன்றி, குளிக்க தண்ணீர் இன்றி, தொழில் செய்ய உரிமை இன்றி அடிமைப் படுத்திக் கொடுமைப்படுத்தி இம்சிக்கப்பட்டு வருகின்றார்கள். இவர்களைப் பற்றி எந்த இந்து தலைவருக்கும் மகாத்மாக்களுக்கும் சிறிதும்- கடுகளவும் கூட இந்த அரசியல் கிளர்ச்சி ராஜியில் - திட்டத்தில் சேர்த்துக் கொள்ள கவலையே இல்லாமல் இருந்து வருகின்றார்கள். அவர்களுடைய நிலைமையைப் பற்றிய யோக்கியமான பேச்சே இந்து தலைவர்களுடைய இலக்ஷியத்தில் கிடையவே கிடையாது. மகமதியர்களுடன் ராஜி செய்து கொள்ளவேண்டும் என்கின்ற கவலையுள்ளஅரசியல் ஸ்தாபனமானது தீண்டாதவர்களுடன் ராஜி செய்து கொள்வதைப்பற்றி இலக்ஷியப்படாமல் இருப்பதற்குக் காரணம் தீண்டாதவர்கள் பலமற்றவர்கள், அறிவற்றவர்கள் என்கின்ற எண்ணங்களை விட வேறு ஒரு காரணமு மிருக்கமுடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில் தீண்டாதவர்கள் என்பவர்களும் அரசியல் ஒற்றுமையில் தங்களுடைய அபிப்பிராயங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது இந்துக்களிடம் நம்பிக்கை இல்லை என்பதை காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அரசியலில் தங்களுக்குத் தனி பிரதிநிதித்துவம் வேண்டுமென்று கேட்டிருக் கிறார்கள். இந்திய அரசியல் ஸ்தாபனத்தில் அவர்கள் கலந்து கொள்ளா மலேயே இருந்து வருகின்றார்கள். இப்படியெல்லாம் இருந்தும் இவர்களைப் பற்றி இந்துத் தலைவர்கள் சிறிதும் இலக்ஷியமில்லாமல் இருப்பதும், மகமதியர்கள் விஷயத்தில் இவ்வளவு கவலைப்படுவதும் என்றால் இதில் ஏமாற்றும் தன்மை இல்லை என்று எப்படி சொல்லமுடியும்? அன்றியும், 5 கோடி ஜனத்தொகையுள்ள அந்த ஒரு சமூகத்திற்கு 2, 3 பேர்களே வட்ட மேஜை மகாநாட்டுக்கு பிரதிநிதிகளாய் இருக்கின்றார்கள் என்றால் இந்துக்கள் மாத்திரமல்லாமல் அரசாங்கத்தாரும் அவர்களை ஏய்த்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

இவர்கள் இப்படி ஏன் செய்கின்றார்கள் என்றால் மகமதியர்கள் ‘உதைப்பதற்கு’ தயாராய் இருக்கிறார்கள். உயிரை விடத் தயாராய் இருக்கி றார்கள். வேறு மதஸ்தனை கொன்றாலும் கொல்லுவதின் மூலம் செத்தாலும் மோக்ஷமென்று கருதி இருக்கிறார்கள். அந்த உணர்ச்சிதான் அவர்களை மனிதர்களாக வாழச்செய்கின்றது.

நமது தீண்டாதவர்கள் என்பவர்களோ காலில் விழுந்து கும்பிடுவதை- சாமி சாமி என்று கெஞ்சுவதை - உதைக்க உதைக்க உதைத்த காலுக்கு முத்தம் கொடுப்பதை ‘மோக்ஷம்’ என்று கருதுகின்றார்கள். ஆதலால், மகமதியர் களது மோக்ஷ வழியை கண்டு உலகம் நடுங்குகின்றது. தீண்டாதவர்கள் என்பவர்களின் மோக்ஷ வழியைக்கண்டு உலகம் அவர்கள் மீது ஏறி சவாரி செய்கின்றது. இந்த நிலைமையில் ஒருவருக்காவது ஒருவருக்கு உண்மை ராஜியோ, ஒற்றுமையோ, நம்பிக்கையோ எப்படி உண்டாகக் கூடும் என்பதை யோசித்தால் உண்மை விளங்கும்.

இந்த நிலைமையில் ‘சுயராஜியம்’ எப்படி சாத்தியம் என்பதை யோசித்தாலும் உண்மை விளங்கும். இந்தியாவானது சுயராஜியத்திற்கு தகுதியாய் இருந்தால் அதைப் பெறுவதினின்றும், தடுக்க இந்த உலகத்தில் யாராலும் முடியவே முடியாது. இந்து, இஸ்லாம் சமயங்களும் வருணாச்சிரம தர்மமும், தீண்டாமையும் உள்ளவரை உண்மையான விடுதலை ‘சுயராஜ்யம்’ இந்தியா ஒருநாளும் பெற முடியவே முடியாது என்பதை மனதில் வைத்து அவை ஒழியத் தகுந்த வேலை செய்வதுதான் ஒற்றுமையும் விடுதலையும் அடையும் மார்க்கமாகுமே தவிர வேறில்லை.

இன்றையத் தினம் இந்தியாவில் ஏதோ பிரமாதமாய் விடுதலைப் போர் நடப்பதாக கூறப்படுவதும் காணப்படுவதும் வெறும் புரட்டேயாகும். இது ஒரு இந்தியப் பணக்காரனும், மேல் ஜாதிக்காரனும், ஒரு புறமாகவும், வெள்ளைக்காரப் பணக்காரன் ஒரு புறமாகவும் இருந்து கொண்டு தங்கள் தங்கள் நன்மைக்கு என்று செய்து வரும் ஒரு போராட்டமேயாகும். அதாவது வெள்ளைக்காரப் பணக்காரன் தனது அரசாக்ஷி என்னும் தந்திரத்தை ஒரு ஆயுதமாகவும், இந்தியப் பணக்காரனும், மேல்ஜாதிக் காரனும் இந்திய பாமர ஜனங்களின் முட்டாள்தனத்தையும், சில மக்களின் வேலையில்லாத்தனத் தையும் வயிற்றுப் பிழைப்பையும் ஆயுதமாக வைத்துக்கொண்டு செய்யப் படும் யுத்தமேயாகும்.

யுத்த நிறுத்த ராஜியின் போதும் இதே காரணம்தான் திரு. காந்தி இந்திய வர்த்தக சங்கத்தின் கௌரவ அங்கத்தினராகவும் லார்டு இர்வின் ஐரோப்பிய வர்த்தக சங்கத்தின் கௌரவ அங்கத்தினராகவும் இருந்துதான் ராஜி பேசினார் கள். ஆகவே முறையே இருவரும் இந்திய வர்த்தகர்கள் சார்பாகவும் ஐரோப்பிய வர்த்தகர்களின் சார்பாகவுமே பேசி ராஜி செய்து கொண்டார்கள்.

ஆகவே இவை முதலாளிகளுடைய போராட்டங்கள் என்பதும் இதற்கு பாமர மக்களையும் தொழிலாளிகளையும் பலி கொடுக்கின்றார்கள் என்பதும் அரசியல் கிளர்ச்சிகளில் சிறிது கலந்து அனுபோகப்பட்டிருந் தாலும் கண்ணாடியில் பிரதி பிம்பம் தோன்றுவது போல் விளங்கும்.

இந்த யுத்தம் ஒருவாறு முடிந்தவுடன் இதே பாமர மக்களும் வயிற்றுக் கில்லாத ஆட்களும் உண்மை விடுதலைக்குப் பாடுபட திரும்பக் கூடும் என்றாலும் இப்பொழுது நடக்கும் போராட்ட முடிவு நிபந்தனையில் அப்படிப் பட்ட ஒரு யுத்தம் அதாவது உண்மை விடுதலைக்கு உரித்தான யுத்தம் மறுபடியும் ஏற்படாமல் இருக்கும்படியான பந்தோபஸ்து செய்வதும் ஒரு பெரிய காரியமாய் இருந்து வருகின்றதை உணருகின்றோம்.

அதுதான் புதிய சுயராஜ்ய திட்டம் என்பதில் உள்ளஅதாவது சமஷ்டி அரசாங்கமுறை என்று சொல்லப்படுவதான, சுதேச அரசர்களின் ஆக்ஷி யையும் இந்த சீர்திருத்தத் திட்டத்தில் சேர்த்திருப்பதும், மத நடுநிலைமையும், ஒவ்வொரு சமூகத்தினுடைய உரிமையும் காப்பாற்றுவது என்பதுமான நிபந்தனைகளுமாகும். சுதேச இராஜாக்கள் நமது ஆக்ஷியில் கலந்து கொள்வது என்பது ‘பணக்காரர்கள் காப்பாற்றப்படுவார்கள்.’ என்பதும், மத நடு நிலைமை என்பது ‘இரண்டு மதத்தின் பேராலும் பல சோம்பேறிகள் வாழலாம்’ என்பதும், ஒவ்வொரு வகுப்பு உரிமையும் காப்பாற்றப்படும் என்பது ‘பார்ப்பனர்கள் காப்பாற்றப்படுவார்கள்’ என்பதும் தானே தவிர வேறில்லை. ஆகவே இந்த சுயராஜியக் கிளர்ச்சி என்பது பணக்காரன், சோம்பேறி, பார்ப்பான் ஆகிய கூட்டம் பிழைப்பதற்கும் நிலையாய் தங்கள் நிலைமையை பந்தோபஸ்து செய்து கொள்வது என்பதற்குமே அல்லாமல் வேறு ஒன்றுமில்லை என்பதாக உறுதி கூறுவோம்.

இந்தப் போராட்டமானது முதலாளிகள் சண்டை என்பதற்கு உதாரணம் என்னவென்றால் வெளிநாட்டுச் சாமான்களை பகிஷ்கரிப்பது என்பதே யாகும். எப்படியெனில் இந்தப் பூச்சாண்டியை அரசியலில் 1907ம் வருஷம் முதலிலிருந்தே கையாளப்பட்டு வரும் தந்திரமாகும்.

இந்த பகிஷ்காரம் என்பது புரட்டு என்பதற்கு அத்தாக்ஷி வெளி நாட்டுத்துணியை பகிஷ்கரிப்பதற்காக கதரைப் பர்த்தி செய்ய ஏற்பாடு செய்திருக்கும் காரியமேயாகும். கதரில் இயந்திரம் முதலிய முதலாளியை காப்பாற்றுவதும், கூலிக்காரனை, தொழிலாளியை அடக்கி வைப்பதுமான தத்துவம் அடங்கியிருப்பது நன்றாய் விளங்கும். ஒவ்வொரு அரசியல் கிளர்ச்சியின் போது (க்ஷடிலஉடிவவ) “பாய்காட்” “பகிஷ்காரம்” என்று சொல்லிக் கொண்டு கலவரம் செய்துவிட்டு, ஏதாவது ஒரு அதிகார - உத்தியோக சௌகரியம் கிடைத்தவுடன் அந்நிய நாட்டு வியாபாரத்தை தாராளமாய் விட்டுவிட்டு எலக்ஷன்களில் போட்டிபோடுவதும் யாவரும் அறிந்த தேயாகும்.

இந்தியாவில் ஒரு பழமொழியுண்டு. அதாவது “கொட்டை நூற்று பஞ்சம் விடியுமா?” என்று சொல்லுவதுண்டு. இதன் கருத்து என்னவென்றால் நூல் நூற்பதினால் தரித்திரம் ஒழியுமா என்பதேயாகும்.

ஆகவே இன்றைய சுயராஜ்ய முயற்சிக்கும் ஏழைகள் பணக்காரர்கள் ஆவதற்கும் தொழிலாளிகள் பிழைப்பதற்கும் கள்ளுக்குடி ஒழிவதற்கும் கொட்டை நூற்க வேண்டியது (ராட்டினத்தில் நூல் நூற்கவேண்டியது) தான் முக்கிய மார்க்கமாயிருக்கின்றது என்பது எவ்வளவு தந்திரமானது என்பதை யோசித்தால் சிறிதளவு மூளையுள்ளவர்களுக்கும் தெரியாமல் போகாது.

இதுபோலவே கள்ளுக்கடை மறியல் என்பதும் எலக்ஷன் நெருங்க நெருங்க இது ஒரு எலக்ஷன் பிரசாரமாய் புறப்படுவதும், எலக்ஷன் முடிந்த வுடன் மறியல் ஒழிந்து போவதுமல்லாமல் வேறு அதில் ஏதாவது நாணய மிருக்கின்றது அல்லது இருந்தது என்றாவது யாராவது சொல்ல முடியுமா என்று யோசித்தால் அதன் புரட்டும் விளங்காமல் போகாது.

ஆகவே கதரும், மறியலும், இந்து, முஸ்லீம் ஒற்றுமை முதலிய காரியங்களாலும் ஏற்படப்போகும் பயன் என்ன என்பதை அறிவுடைய - சுயநலமற்ற மக்கள் உணர்ந்து பாமர மக்களுக்கு எடுத்துரைக்க வேணுமாய் விரும்புகின்றோம்.

இதைப்பற்றிய மற்றும் விபரங்களையும் சுதேச சமஸ்தானங்கள் என்பவைகளின் யோக்கியதைகளையும் மற்றொரு சமயம் புள்ளி விவரங் களுடன் எழுதுவோம்.

-------------------தந்தைபெரியார் - “குடி அரசு” - தலையங்கம் - 28.06.1931

43 comments:

தமிழ் ஓவியா said...


பெரியார் வீச்சு நாட்டுக்குத் தேவை தாராபுரம் கண்டனப் பொதுக்கூட்டத்தில் அதிரடி அன்பழகன் முழக்கம்

தாராபுரம், அக். 24- அறிவு ஆசான் தந்தை பெரியார் 135-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டமும், தமிழர் தலைவர் அவர்கள் மீது நடத் தப்பட்ட தாக்குதலைக் கண் டிக்கும் கண்டனப் பொதுக் கூட்டமுமாக திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் தாராபுரம் நகர திக சார்பில் 4.10.2013 வெள் ளிக்கிழமை இரவு 7 மணி யளவில் தாராபுரம் அண்ணா சிலை அருகில் தொடங்கி நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு கழக பொதுக்குழு உறுப்பினர் தாரா புரம் ப.வடிவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எழுச்சியுரையாற்றிய திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தமது ரையில் குறிப்பிட்டதாவது:-
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கை முழக் கங்கள் நாட்டிற்குத் தேவை யான அருமருந்தாகும். அத்த கைய கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி பெரியார் பணி முடிப்பதையே ஒரு குறிக் கோளாகக் கொண்டு செயல் படுபவர் தான் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாதத்தின் 30 நாட்களிலும் மக்கள் மத்தியில் உரையாற்றும் தலைவர் கி.வீரமணி அவர்கள் 10 வயதில் தொடங்கி 80 வயதிலும் ஒரே கட்சி, ஒரே கொடி, ஒரே தலைவன் என்று வீறு நடைபோடுகின்ற புரட்சி யாளர் தான் கி.வீரமணி அவர்கள்

69 சதவிகித இடஒதுக்கீட் டிற்கு ஆபத்து வந்த போது 31 சி என்ற தனிச்சட்டத்தை இயற்றி அதை அரசியலமைப்புச் சட்ட அட்டவணை 9-இல் இடம் பெறச் செய்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையை எந்த சக்தியாலும் சீர் குலைக்க முடியாத நிலையை ஏற்படுத்தி யவர் தான் கி.வீரமணி அவர்கள்

அத்தகைய தலைவர் மீது விருத்தாசலத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு தமிழக முதல்வர் ஏன் கண்டனம் தெரிவிக்க வில்லை?

வார்த்தை பேசினால் வழக்கு என்றால்! உயிருக்கு உலை வைத்து திக தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றதுக்கு ஏன் நடவடிக்கை இல்லை?

அப்படியென்றால் இது சமூக விரோதிகளை ஊக்கு விக்கும் ஏற்பாடா?

ஒரு மூத்த தலைவருக்கே இப்படி பாதுகாப்பற்ற நிலைமை என்றால் நாட்டில் குப்பனுக் கும், சுப்பனுக்கும் என்ன பாது காப்பு?

இது தான் தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சியின் இலட்சணமா, நடப்பது நாட் டாட்சியா? காட்டாட்சியா? வீரமணி தனி மனிதரல்ல! தமிழர்களின் முகவரி! தமிழர் களின் தலைவர், பெரியாரின் இடத்தில் இருப்பவர், தமிழி னத்தின் மூச்சுக்காற்று இவரை அசைக்க நினைத்தால் நடக் காது. வீரமணியைப் பாதுகாக்க கருப்புச் சட்டைக்காரனுக்குத் தெரியும்.
பெட்ரோலும், தீப்பந்தமும் அப்படியே இருக்கிறது. பெரி யார் கட்டளையும் அப்படியே இருக்கிறது.

ஒருவேளை திராவிடர் கழகத் தலைவரின் உயிருக்கு ஊறு நேர்ந்தால்... ஒரு பார்ப் பானும் இல்லாத நாடு உரு வாக்கப்படும்.. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


சட்டமன்ற தீர்மானம்: வழிமொழிந்து பேசினார் மு.க.ஸ்டாலின்


சென்னை, அக். 24- இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை டெசோ அமைப்பு வலியுறுத்திய தீர்மானம் போட்டுள்ள நிலையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் இக் கருத்தை வலியுறுத்தி முன்மொழிந்து கொண்டு வந்துள்ள இத்தீர்மா னத்தை, வழிமொழிந்து வரவேற்க கடமைபட்டுள்ளதாக சட்டமன்றத்தில் இன்று திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இன்று (24.10.2013) காலை கேள்வி நேரம் முடிந்தவுடன், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இத்தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்து பேசிய திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இத்தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வழிமொழிந்து வரவேற்க கடமைப் பட்டுள்ளேன்.

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில் அந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலி யுறுத்தி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய பிரதமருக்கு இரண்டு முறை கடிதமும் எழுதியிருக்கிறார்.

டெசோ அமைப்பின் சார்பில் 16.7.2013 அன்று நடைபெற்ற இப்பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை தீர்மான மும் நிறைவேற்றி பிரதமருக்கு தெரிவித்துள்ளோம்.

திமுக மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பாக தமிழ கத்தில் இப்பிரச்சினை தொடர்பாக ஆர்ப்பாட்டங் களும், போராட்டங்களும் நடைபெற்று இருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
காமன்வெல்த் மாநாட்டை கனடா அரசு புறக் கணித்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் இது தொடர்பாக கையெழுத்து இயக்கமும் தொடங் கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானம் கொண்டு வந்திருப்பதும் ஒன்றுபட்டு குரல் கொடுத்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெற்றால் அடுத்த மாநாட்டிற்கு ராஜபக்சேதான் தலைவராக இருப்பார். எனவே இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவேண்டும். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வரவேற்று அமர்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் இத்தீர்மானத்தை வரவேற்று பேசினார்.

முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட் டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இன்று கொண்டு வந்த தீர்மானத்தினை ஒருமனதாக ஆதரித்து கீழ்க்கண்ட கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கதிரவன் (பார்வர்டு பிளாக்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவஹருல்லா (மக்கள் மனிதநேய கட்சி), கோபிநாத் (காங்கிரஸ்), ஆறுமுகம் (சிபிஅய்), சவுந்தரராஜன் (சிபிஎம்), பண்ருட்டி ராமச் சந்திரன் (தேமுதிக) ஆகிய உறுப்பினர்கள் பேசினர்.

இதையடுத்து பேரவைத் தலைவர் பா.தனபால் அவர்களும் இத்தீர்மானத்தின்மீது தனது கருத்தை பதிவை செய்தார். பின்னர் முதலமைச்சர் எழுந்து தான் கொண்டுவந்த இத்தீர்மானத்தை சட்டமன்ற உறுப் பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்.

பேரவைத் தலைவர் இத்தீர்மானத்தை நிறைவேற் றும் வகையில் குரல் வாக்கெடுப்பு நடத்தி, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...


அட கடவுளே!


தாம்பரம், துரைப்பாக்கம், திருவொற்றியூரில்
ஒரேநாளில் 4 கோயிலில் கொள்ளைகள்

தாம்பரம், அக். 24-தாம்பரம் மற்றும் துரைப் பாக்கத்தில் ஒரே நாளில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் கிரீடம் உள்பட 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு தாம்பரம்

மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் வங்கி காலனியில் ஆர்டிஓ அலுவலகம் எதிரே அருள் தந்த விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் பட்டம்மாள் (70) என்பவர், தினமும் சுத்தம் செய்து தீபம் ஏற்றுவது வழக்கமாம்.

நேற்று காலை கோயிலைத் திறக்க பட்டம் மாள் வந்தபோது கோயிலின் பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோயில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப் பட்டு பணமும், விநாயகருக்கு பூஜை காலங்களில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்பட 21 கிலோ வெள்ளி பொருட் களையும் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோயிலில் பதிவாகி இருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.

தாம்பரத்தில்....

இதேபோல் தாம்பரம் திருநீர்மலை சாலையில் மகமாயி அம்மன் கோயிலிலும் நேற்று முன்தினம் இரவு சில நபர்கள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க தாலியை

கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

துரைப்பாக்கத்தில்...

துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் செங்கழுநீர் விநாயகர் கோயில் உள்ளது. இதையொட்டி அய்யப்பன், முருகன் கோயில்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டிவிட்டு பூசாரி வேணு, வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை நடையை திறக்க முயன்றபோது முடியவில்லை. அப்போதுதான் கிரில் கேட் அருகே வைக்கப்பட்டிருந்த கோயில் உண்டியல் கடப்பாரை யால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருந்தது தெரிந்தது. சில்லரை காசுகள் சிதறிக்கிடந்தன. இதுபோல பக்கத்தில் உள்ள முருகன் கோயில் உண்டியலும் கடப்பாரையால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது.

உடனே கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையரைத் தேடி வருகின்றனர்.

கிறிஸ்தவ கோயிலில்
உண்டியல் கொள்ளை

திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் கிறிஸ்தவ கோயில் உள்ளது. நேற்று அதிகாலை சர்ச் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் உடைக்கப் பட்டு இருப்பதை அங்கு வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து திருவொற்றியூர் காவல்துறை யினர் விரைந்து வந்து விசாரித்தனர். சிலுவைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. 2 உண் டியல்களில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருந்தி ருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

ஒரேநாளில் 4 கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ கோயிலில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்தந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளன.

தமிழ் ஓவியா said...

ஏற்காடு தேர்தல்

திண்டிவனம் - திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஏழாவது தீர்மானம் நடக்க இருக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றியதாகும்.

தீர்மானம் வருமாறு:

தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்புத் திட்டமான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் வலியுறுத்தி வந்த சேது சமுத்திரத் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் அந்தத் திட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத்திருப்பதை, தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாக இப்பொதுக்குழு கருதுகிறது.

அ.இ.அ.தி.மு.க.வின் இருதேர்தல் அறிக்கைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திவிட்டு, இப்பொழுது அந்தத் திட்டமே கூடாது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத - சந்தர்ப்பவாதமும், அரசியல் உள்நோக்கமும் கொண் டது என்று இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரி வித்துக் கொள்கிறது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில், சமூகநீதிக்கு எதிரான போக்கு, மதச் சார்பின்மைக்கு விரோதமான செயல்முறைகள், கடுமையான வகையில் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு - இவற்றின் காரணமாக, ஆளும் கட் சிக்கு ஒரு கடிவாளம் தேவைப்படுவது அவசியம் என்ப தாலும், நடைபெறவிருக்கும் ஏற்காடு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் தி.மு.க. வேட்பாளருக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்யத் தேவையான ஒத்துழைப்பைக் கொடுப்பது என்று திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட தீர்மானத்தில் ஏற்காடு தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பதற்கான காரணம் தெளிவாக, காரண காரியத் தோடு விளக்கப்பட்டுள்ளது.

அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். அதில் பெரிய குற்றத்தைக் கண்டுபிடித்ததுபோல துள்ளிக் குதிக்கிறது.

ஆளும் கட்சிக்குக் கடிவாளம் என்று இருக்கிறதாம் - அதனைப் பிடித்துக்கொண்டு சிலம்பம் ஆடிப் பார்க்கிறது.

ஆளும் கட்சிக்குக் கடிவாளம் என்றால், தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்குக் கடிவாளம் போட எதிர்க்கட்சியை ஆதரித்ததா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தீர்மானத்தின் முன்பகுதி வாசகங்களை மறைத்துவிட்டு ஒட்டு வெட்டு வேலை செய்து வினா எழுப்புவது அறிவு நாணயம் ஆகுமா?

சேது சமுத்திரத் திட்டம் என்பது திராவிடர் இயக்கத்தின் நீண்ட காலத் திட்டம் - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் வரவேற்ற திட்டத்தை, ராமனைக் காட்டி எதிர்ப்பது, சமூகநீதிக்கு எதிரான போக்கு, கடுமையான வகையில் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு - இவற்றின் காரணமாக ஆளும் கட்சிக்கு, அவசியம் ஒரு கடிவாளம் தேவைப்படுகிறது என்பதை மறைப்பானேன்?

தமிழ் ஓவியா said...

மேலே கூறப்பட்டுள்ள காரணங்களை மறுத்து எழுத சரக்கு இருந்தால் தாராளமாக சிலம்பம் ஆடலாமே!

அவற்றை மறுக்க முடியாது என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் ஏன் வீண் வம்பு என்று அதற்குள் சிக்கிக் கொள்ளாமல், அரைகுறை கிணறு தாண்டும் வேலையில் இறங்கி இருப்பது பரிதாபமே!

அ.இ.அ.தி.மு.க.வை இந்த இடைத்தேர்தலில் தோற் கடிக்க இன்னும் எத்தனை எத்தனையோ காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றையெல்லாம் ஏன் மறந்துவிட்டீர்கள் - அவை பற்றியும் விளாசுங்கள் என்று நமக்கு எடுத்துக் கொடுத் திருக்கிறது என்றே எடுத்துக்கொள்வோம்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் திராவிடர் இயக்கக் கொள்கைக்கும், கலாச்சாரத் தன்மைக்கும் ஏற்ப தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று மானமிகு கலைஞர் அவர்கள் ஆட்சியின்போது அறிவிக்கப் பட்ட தமிழர் பண்பாட்டுத் தொடர்பான சட்டத்தை மாற்றி, நாரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்த அறுபது பிள்ளை கள்தான், சித்திரையில் தொடங்கும் தமிழ் வருடங்கள் என்று அறிவித்தது ஒன்று போதாதா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களை உச்சரிக்கும் தகுதியை இதன்மூலம் அ.இ. அ.தி.மு.க. ஆட்சி இழந்துவிடவில்லையா?

இவர்கள் கூறும் அந்த அறுபது வருடங்களில் ஒரே ஒரு பெயராவது தமிழில் உண்டா? மொழிக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு, சமஸ்கிரு தத்துக்கு அல்லவா ஆலவட்டம் சுழற்றியிருக்கின்றனர்!

எந்தப் பெயரை - எந்தக் குழந்தைக்குச் சூட்டினாலும், மருந்துக்கும்கூட தமிழ் அதில் ஒட்டிக்கொண்டு இருக்கக் கூடாது என்ற தன்மையில் சமஸ்கிருதப் பெயர்களாகத் தேடிப்பிடித்து, பொறுக்கி எடுத்துச் சூட்டுபவர்தானே செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்?

அந்த நிலையில் உள்ளவர் - தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்னும் தமிழர் பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் அதனை எப்படி அணுகுவார் என்று எதிர்ப்பார்க்க முடியும்?
அண்ணா அவர்களின் நூற்றாண்டையொட்டி உரு வாக்கப்பட்டுள்ள நூலகத்தையே குப்பைத் தொட்டியாக ஆக்கி வைத்திருக்கும் அந்த ஒரு காரணம் போதாதா - இந்த ஆட்சிக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்பதற்கு?

துறைமுகத்திலிருந்து, மதுரவாயல் வரை போடப்பட வேண்டிய விரைவு பாலத்தையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.இ.அ.தி.மு.க. அரசு வழக்கு போட்டுத் தடுத்துள்ளதே - இது ஒன்று போதாதா நாட்டின் வளர்ச்சிக்குக் கேடான அரசு அ.தி.மு.க. அரசு, என்பதற்கு?

நமது எம்.ஜி.ஆர். சீண்டினால் வண்டி வண்டியாக எடுத்துக்கொட்ட ஏராளமான சரக்குகள் நம் கைவசம் உண்டு என்பதை மட்டும் அடக்கமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...


அட கடவுளே!


தாம்பரம், துரைப்பாக்கம், திருவொற்றியூரில்
ஒரேநாளில் 4 கோயிலில் கொள்ளைகள்

தாம்பரம், அக். 24-தாம்பரம் மற்றும் துரைப் பாக்கத்தில் ஒரே நாளில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் கிரீடம் உள்பட 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு தாம்பரம்

மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் வங்கி காலனியில் ஆர்டிஓ அலுவலகம் எதிரே அருள் தந்த விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் பட்டம்மாள் (70) என்பவர், தினமும் சுத்தம் செய்து தீபம் ஏற்றுவது வழக்கமாம்.

நேற்று காலை கோயிலைத் திறக்க பட்டம் மாள் வந்தபோது கோயிலின் பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோயில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப் பட்டு பணமும், விநாயகருக்கு பூஜை காலங்களில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்பட 21 கிலோ வெள்ளி பொருட் களையும் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோயிலில் பதிவாகி இருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.

தாம்பரத்தில்....

இதேபோல் தாம்பரம் திருநீர்மலை சாலையில் மகமாயி அம்மன் கோயிலிலும் நேற்று முன்தினம் இரவு சில நபர்கள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க தாலியை

கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

துரைப்பாக்கத்தில்...

துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் செங்கழுநீர் விநாயகர் கோயில் உள்ளது. இதையொட்டி அய்யப்பன், முருகன் கோயில்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டிவிட்டு பூசாரி வேணு, வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை நடையை திறக்க முயன்றபோது முடியவில்லை. அப்போதுதான் கிரில் கேட் அருகே வைக்கப்பட்டிருந்த கோயில் உண்டியல் கடப்பாரை யால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருந்தது தெரிந்தது. சில்லரை காசுகள் சிதறிக்கிடந்தன. இதுபோல பக்கத்தில் உள்ள முருகன் கோயில் உண்டியலும் கடப்பாரையால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது.

உடனே கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையரைத் தேடி வருகின்றனர்.

கிறிஸ்தவ கோயிலில்
உண்டியல் கொள்ளை

திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் கிறிஸ்தவ கோயில் உள்ளது. நேற்று அதிகாலை சர்ச் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் உடைக்கப் பட்டு இருப்பதை அங்கு வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து திருவொற்றியூர் காவல்துறை யினர் விரைந்து வந்து விசாரித்தனர். சிலுவைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. 2 உண் டியல்களில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருந்தி ருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

ஒரேநாளில் 4 கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ கோயிலில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்தந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளன.

தமிழ் ஓவியா said...

அதிக சக்தி!

செய்தி: ஆந்திர மாநி லம் புத்தூரில் பயங்கர வாதிகள் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து ஏழுமலையான் கோவி லுக்குச் சிறப்புப் பாது காப்புப் படை அமைக் கப்பட்டுள்ளது.

சிந்தனை: இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவெனில், திருப்பதி ஏழுமலையானைவிட பயங்கரவாதிகள் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்க!

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்புகிறாயா?


ருஷ்ய நாட்டு பிரஜை ஒருவன் வேலை தேடுகிறான் என்றால் அவனைப் பார்த்து ஒரு பேட்டியாளர் நீ கடவுளை நம்புகிறாயா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது இல்லை. அவ்வாறு கேட்பதை சட்டம் தடை செய்கிறது.

- ருஷ்ய வெளியீடு: 100 வினாக்களும் விடைகளும் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 48.
தகவல்: ந.சுப்ரமணியன், கோவை

தமிழ் ஓவியா said...

காய்மீது காய்ச்சல்!



அத்திக் காய் கோவை தேத் தானை
ஹிலிக் காய் வெள்ளைக்
கத்தரி சோற்றுக் காந்தல்
கண்டிதை யாவரேனும்
நத்தியே யுண்பார்க் கெல்லாம்
நாரணன் தாளின் மீது
புத்திதான் வாரா தென்றும்
பரமனார் அருளினாரே. (நீதிச் சாரம்)
இதன் பொருள்: அத்திக்காய், கோவைக்காய், தேத்தரங்காய், சோற்றுக்காந்தல் இவைகளை உண்டால் நாராயணக் கடவுள் மீது பக்தி ஏற்படாது - அக்கடவுளை மறக்கச்செய்யும்.

தமிழ் ஓவியா said...

இப்போ பிராமணனும் இல்லே பிராமண தர்மமும் இல்லே!

வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா?

புரோகிதர் பதில்: எல்லாம் காலக்கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு. நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே.. பிராமண தர்மமும் இல்லே.

வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது?

புரோகிதர் விடை: பக்தியாவது. ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி, அம்பாளை நெனச்சுக்கிறா!

- துக்ளக், 1-6-1981 இதழ், பக்கம் 32
தகவல்: கிருட்டினசாமி, செகந்திராபாத்

தமிழ் ஓவியா said...


ஒழிக்கப்பட வேண்டியவை

1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழி லாளர்களிடையே சுகமும், நாணய மும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

கொடிது கொடிது (ஈ.வெ.ரா)



கொடிது கொடிது கோவிலுக்குப் போதல். அதனினும் கொடிது பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்குப் போதல்.

அதனினும் கொடிது குழவிக்கல்லையும் செம்பையும் கும்பிடுதல். அதனினும் கொடிது தேர்த் திருவிழா உற்சவத்திற்குப் போதல். அதனினும் கொடிது பெண்களை அங்கு கூட்டிப்போதல். அதனினும் கொடிது கோவில் கட்டுதல். அதனினும் கொடிது காணிக்கை போடுதல். அதனினும் கொடிது (அர்ச்சகப்) பார்ப்பானுக்கு ஈதல். -

விடுதலை 21.10.1957

தமிழ் ஓவியா said...

இந்துவாய் சாகமாட்டேன்

மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விட்டன.

இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது முறைகளும் இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத்தான் அளிக்கும்.

இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம்முடிவு என்னவென்றால், நாம் இந்து மதத்தைவிட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்.

நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்பந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் நம்மை இந்துக்கள் என்று கூறிக்கொள்வது கூடாது. அதனால்தான் மேல் ஜாதிக்காரர்கள் நம்மை இழி வாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள். நாம் வேறு மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படி கொடுமைப்படுத்த அவர் களுக்கு துணிவு இருந் திருக்காது.

எந்த மதத்தினர் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ அப்படிப் பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள். பிறக்கும் போதோ நான் தீண்டப்படாத வனாய் பிறந்தேன். என்றாலும் அது நான் செய்த குற்றமல்ல.

ஆனால் இறக்கும் போது தீண்டப்படாத வனாய் இறக்கமாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது. அதாவது நான் ஒரு இந்துவாய் இறக்கப் போவதில்லை

(நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் குடிஅரசு 20.10.1935)

தமிழ் ஓவியா said...


பொன்மொழிகள்


தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது. - காண்டேகர்

ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது. - ஸ்டேட்ஸ்மென்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்

சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்

நம்நாடு முன்னேற வேண்டுமானால், ஜாதகத் தையோ, ஜோதிடத்தையோ நம்பி பயன் இல்லை. உழைப்பு - உழைப்பு கடுமையான உழைப்புதான் தேவை.
- நேரு

முன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் சோம்பேறி அவன் ஒரு காலும் உயர்வடையமாட்டான். தன் உழைப்பை நம்புகிறவனே மனிதன். நிச்சயம் அவன் உயர்வடைவான். - இப்ஸன்

எதைச் சொன்னாலும் நம்பிவிடுவது சரியல்ல. சந்தேகிக்கும் பண்பே சிறந்தது. - பிராகன்

பலவீனர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். பலமுடையவரோ காரணகாரியத் தொடர்பிலேயே நம்பிக்கை வைக்கின்றனர். - எமர்சன்

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்



பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும். -(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


ராகுல் சொன்னது உண்மை


மத்தியப் பிரதேச தேர்தல் - பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி, பி.ஜே.பி. மீது ஒரு பொதுவான குற்றச்சாற்றை வீசியுள்ளார்.

குளிர் சாதனம் பொருத்தப்பட்டுள்ள அறை களில் சுகமாக வாழும் முதலாளிகளுக்கானது பிஜேபி என்பதுதான் அந்தக் குற்றச்சாற்று.

ராகுல்காந்தி கூறியிருக்கிறார் என்றாலும் அது நூற்றுக்கு நூறு உண்மையே!

எடுத்துக்காட்டாக, குஜராத் ஒளிர்கிறது என்றும், நரேந்திர மோடியைப் பிரதமர் ஆக்கினால் இந்தியாவையே குஜராத்தாக ஆக்கிக் காட்டுவார் என்றும் திட்டமிட்ட பிரச்சாரத்தை வாரி இறைத் துக் கொண்டு இருக்கிறார்களே - உண்மையில் குஜராத்தில் முதலமைச்சர் மோடி, யார் பக்கம் இருக்கிறார்? யாருக்காக ஆட்சி நடத்துகிறார் என்பதைத் தெரிந்து கொண்டால் ராகுல் காந்தி சொன்னதன் உண்மைக்கான அர்த்தம் புரியும்.


மேற்கு வங்காளத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது நானோ கார் தொழிற்சாலையை உருவாக்க டாட்டா திட்டமிட்டிருந்தார் விவசாய நிலங்கள் அவருக்காகத் தாரை வார்க்கப்பட்ட தாகக் கூறி பெரும் கிளர்ச்சி, அம்மாநிலத்தில் ஏற்பட்டதால் அங்கு நினைத்தபடி டாட்டா கார் தொழிற்சாலையைத் தொடங்கிட முடியவில்லை.

சும்மா இருந்து விடுவாரா குஜராத் முதல் அமைச்சர் மோடி, தொழிலதிபர்களை ஈர்ப்பதில் பன்னாட்டு நிறுவனங்களைத் தூண்டில் போட்டு இழுப்பதில் மோடிக்கு நிகர் யார் என்று நலுங்கு பாடுவதில் பொருள் உண்டு.

மேற்கு வங்கத்திலிருந்த டாட்டாவின் நானோ கார் தொழிற்சாலையை தம் மாநிலத்தில் தொடங்குமாறு டாட்டாவுக்குத் தாம்பூலம் வைத்து அழைத்தார் மோடி அதற்காக முதல் அமைச்சர் மோடி, கொட்டிக் கொடுத்த சலுகைகள், விட்டுக் கொடுத்த தொகை அசாதாரணமானது.

1100 ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டது. அதற்கு முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்பட்டது. மேற்கு வங்கத்திலிருந்து இயந்திரங்களை குஜராத்துக்குக் கொண்டு வர வேண்டுமே - அதற்காக ஆன போக்குவரத்துச் செலவு ரூ.700 கோடி. அந்தத் தொகையையும் ஏற்றுக் கொண்டார் முதல் அமைச்சர் மோடி.

ஏழையல்லவா டாட்டா - அதற்காகக் கடனாக கொடுக்கப்பட்ட தொகை ரூ.9750 கோடி 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தினால் போதும் அதற்கு விதிக்கப்பட்ட வட்டி - கேட்பவர்கள் அதிர்ந்து போய்விட வேண்டும்.

புள்ளி ஒரு சதவீதம் (.1ரூ)

ஒரு விவசாய நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றினால் குஜராத் மாநில அரசின் விதிமுறைப்படி சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.6 அரசுக்குச் செலுத்த வேண்டும். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

தொழில் வரியிலும் சலுகையாம். அம்மாநில சட்டப்படி எந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட் டாலும் உள்ளூர்க்காரர்களுக்கு 85 சதவீதம், வேலை வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும். இது தவிர, மேலாண்மை மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீதம் உள்ளூர் மக்களால் நிரப்பப்பட வேண்டும். இதற்கும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொத்த சலுகைகளின் கணக்கைப் பார்த்தால் குஜராத் மக்களின் வரிப் பணம் ரூ.30ஆயிரம் கோடி, பரம ஏழை(?) டாட்டாவுக்கு தாராளமாக தாரை வார்க்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் 50 லட்சம் நானோ கார்களை உற்பத்தி செய்வதாக டாட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.கார் ஒன்று ஒரு லட்சம் ரூபாய் என்று கணக்கிட்டால் 50 லட்சம் கார்களுக்கு குஜராத் மக்கள் கார் ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் மான்யமாக அளிக்கிறார் கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்று சாலைகளில் ஓடும் ஒவ்வொரு நானோ காரும் பெட்ரோலில் ஓடவில்லை. குஜராத் மக்களின் வரிப் பணம் என்னும் ரத்தத்தில்தான் ஓடுகிறது.

இப்பொழுது எளிதாகப் புரிந்து கொண்டு இருக்கலாமே - காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிஜேபி பற்றி சொன்ன குற்றச்சாற்று துல்லிய மானது நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதை!

தமிழ் ஓவியா said...


அக். 25: தகவல் அறியும் உரிமை சட்ட தினம்


அரசு மற்றும் அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ஆம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ஆம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2004 டிச., மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே 11இல் மக்களவையிலும், மே 12இல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ஆம் தேதி குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். ஜூன் 21இல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், பொதுமக்கள் யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப் பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. நாடாளுமன்ற, சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம்.
குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை குடிமக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு இயந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.

தமிழ் ஓவியா said...

இடி விழுந்தது எனும் பொய்க்கதை

போதிமங்கை என்ற ஓர் ஊர்; அங்கே புத்தநெறி தழைத்தோங்கி இருந்தது. ஏராளமான புத்த நெறியாளர்கள் அங்கு வாழ்ந்து வந்தார்கள். திருஞான சம்பந்தர் தம் பரிவாரங்களுடன் அங்குப் பவனி வந்தார். அப்பொழுது அங்கிருந்த புத்தப் பிட்சுகள் தங்கள் தலைவர் புத்த நந்தியுடன் திருஞானசம்பந்தரைச் சந்தித்து உங்கள் வெற்றிச் சின்னங்கள் எதற்கு எங்களுடன் வாதாடி வென்ற பிறகு அல்லவா அவற்றை முடிக்க வேண்டும்? எங்களுடன் வாதாடத் தயாரா? என்று வினா தொடுத்தனர்.

வினாவை விவேகத்துடன் சந்திக்க முடியாத திருஞான சம்பந்தனோ, ஒரு பாடல் பாடினாராம். புத்தர்சமண் கழுக்கையர் பொய்கொளாச்

சித்தத்தவர்கள் தெளிந்து தேறின

வித்தக நீறணிவார் வினைப்பகைக்கு

அத்திரமாவன அஞ்செழுத்துமே

இந்தப் பாடலை திருஞான சம்பந்தன் பாடியதுதான் தாமதமாம்; புத்த நந்தி என்ற தலைவன்மீது இடி விழுந்ததாம்; பவுத்தர்கள் நிலை கலங்கி ஓடினராம்.

இப்படியெல்லாம் ஏராளமான கதை கட்டி பவுத்தர்களை வென்றதாக கூறுகிறார்கள். அவர்கள் கூற்றுப்படியே பார்த்தாலும் கூட, விவாதம் செய்து வெல்ல வக்கு இல்லாமல், வேறு கொல்லைப்புற வழிகளில் சூழ்ச்சிகள் செய்து பவுத்த நெறியாளர்களைப் பச்சைப் படுகொலை செய்து பரவசம் அடைந்திருக்கிறார்கள்.

கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதிய நூல்:

மனித வாழ்க்கைக்குத் தேவை நாத்திகமா? ஆத்திகமா?

தமிழ் ஓவியா said...

பக்தி - ஒழுக்கம்

கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய் விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம்பவில்லை, அதைக் கொழுக்கட்டை என்று சொல்லுகிறேன்; நஷ்டமில்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே, உங்களுக்கென்ன நஷ்டம்?

ஆனால் ஒழுக்கமில்லையென்றால் என்னவாகும் பாருங்கள்? நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்கு பேர்தானே?

ஒழுக்கமாக இல்லை என்றால், எங்கெங்கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து இல்லை தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான்; நாணயமாக இல்லையெனில், யாரையோ ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கின்றான்; உண்மையாக இல்லையென்றால் என்னத்தையோ எவனையோ ஏமாற்றிப் பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்? ஆகவே ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களில் குற்றவாளியாக இருந்தானானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். இது முக்கியமில்லை. பக்தி கடவுள் நம்பிக்கை மதக் கோட்பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கியமென்றால், மக்களுக்கு என்ன பிரயோஜனம் அதனாலே?

-தந்தை பெரியார், 24.11.1964 பச்சையப்பன் கல்லூரிப் பேருரை

தமிழ் ஓவியா said...

பிரார்த்தனை

பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால், ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமான வைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கிறது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.

அதாவது, கடவுளுக்கு இன்னது இன்னது செய்வதாக நேர்ந்து கொள்வது, ஜீவப்பலி கொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படுவனவாகும்.

ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறுபெயர் சொல்ல வேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்...

பேராசையும், சேம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமில்லை

தந்தை பெரியார் பகுத்தறிவு மலர்-1, இதழ் 9, 1935

தமிழ் ஓவியா said...



விடுதலை மின்சாரம்- விடுகதை மின்சாரம் ஆன கதை

மின்சாரம் எழுதுகின்ற தலையங்கமோ! ஒற்றைப்பத்தியோ! பெட்டிச் செய்தியோ! எதுவோ அது தாக்க வேண்டிய இலக்கை சரியாக சென்றடைந்து விடும். அதற்கு அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவரும் ஒன்றுதான். அதிகாரமே இல்லாத பாமரனும் ஒன்றுதான். அல்லது செய்யின் தட்டிக் கேட்பதும், நல்லது செய்யின் தட்டிக் கொடுப்பதும் அவர் வழக்கம்.

அப்படிப்பட்ட மின்சாரம் தஞ்சை வல்லத்தில் அமைந் துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பழகு முகாம் 2010இல் விடுதலை மின்சாரம் விடுகதை மின்சாரமாக மாறி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி னார். பழகு முகாமின் முதல் நாளிலிருந்து பிஞ்சுகளிடம் பேசும்போது பெரியாரியல் கருத்துகளுக்கு இடை இடையே விடுகதைகளையும், வெடிச் சிரிப்பு துணுக்குகளையும், அறிவியல் கேள்விகளையும் கூறி பிஞ்சுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அது மட்டுமல்ல, விடுகதைகளையும், துணுக்குகளையும் கேட்ட பிஞ்சுகளுக்கு மிகுந்த உள்ளக் கிளர்ச்சி ஏற்பட்டு, நான், நீ என்று முந்திக் கொண்டு தங்களுக்கு தெரிந்தவற்றை கூற அனுமதி கேட்டதும், அனுமதி தந்து அவர்களையும் பேச வைத்து ரசித்து மகிழ்ந்தார். மேடையேறி பேசிய பிஞ்சுகளுக்கு தாங்கள் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டு மன நிறைவுடன் தங்கள் இருக்கை களுக்குத் திரும்பினர். அத்தோடு மின்சாரம் பிஞ்சுகளை விட்டுவிடவில்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கருத்துகளை அழுத்தம் திருத்தமாக அவர்கள் மனதில் பதிய வைக்கத் தவறவில்லை. அத்தோடு பிஞ்சுகள் கட்டுப்பாட்டை இலேசாக மீற முற்படும் போதெல்லாம் இதமாக கண்டிக்கவும் தவறவில்லை. இதற்காகவே மின்சாரம் ஏராளமான குறிப்புகளைத் திரட்டி (ஹோம்ஒர்க்) வைத்துக் கொண்டு பேசி வருகிறார். ஆக, பிஞ்சுகளோடு உரையாடும் போது அவரும் பிஞ்சுகளின் நிலைக்கு இறங்கி வந்து - விடுதலை மின்சாரம் விடுகதை மின்சாரமாக மாறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...


மரண தண்டனை


பிறந்த அடுத்தகணமே
மரண தண்டனை
பெற்றது!
அம்மனுக்கு
நேர்ந்து விடப்பட்ட
ஆட்டுக்குட்டி!

கணபதி ஹோமம்

வீட்டை கழுவி
சுத்தம் செய்தாள் அம்மா!
கோமியத்தை
தெளித்து அசுத்தம்
செய்தார் அய்யர்!

- த. செண்பகம், அய்யம்பாளையம்

தமிழ் ஓவியா said...


வன்முறையால் பகுத்தறிவு இயக்கத்தை அழிக்க இயலாது


தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 28.9.2013 அன்று விருத்தாசலத்தில் திராவிடர் கழக மாண வர் அணியின் கடலூர் மண்டல மாநாட்டில் சிறப்புரை ஆற்ற வருகை தந்த போது சில பிற் போக்குவாதிகள் அவர் காரை மறித்துத் தாக்க வந்த செய்தி கழகத் தொண்டர்களின் உள் ளத்தைக் குமுறும் எரிமலையாக ஆக்கியிருக்கும். தமிழர் தலைவருக்கு இதைப்போன்ற தாக்குதல்கள் புதிதல்ல. தமிழர் தலைவரே அவற்றை வெளிப் படுத்தி இருக்கிறார். 1981-இல் பழனியில் என்னைப் போல் உருவம் செய்து பாடையில் வைத்துத் தூக்கிச் சென்றவர்கள் பார்ப்பனர்கள் அல்லவா? வீரமணி ஒழிக என்று முழக்கமிட்டார்கள் (விடுதலை நாள்: 5.11.2012)

எனது கொள்கைப் பயணத்தில் எனது வாழ்வை முடிக்க கொள்கை எதிரிகள் மூன்று முறை முயன்று தோல்வியுற்றனர். திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள மம்சாபுரம் அருகிலும் (1982), வடசென்னை, வண்ணாரப்பேட்டைப் பகுதியிலும் (1985), சேலம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம் பட்டியிலும் (1987) தடம் புரளாது பயணிக்கிறேன் என்று நான் சான்றிதழ் பெற்ற நிகழ்வுகள் அவை (விடுதலை நாள் 2.12.2012)

தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனத்தால் விருது வழங்கப்பட்ட தந்தை பெரியாரை நோக்கிக் கடலூர் பொதுக் கூட்டத்தில் எதிரிகள் செருப்பு வீசவில்லையா? இன்று அதே இடத்தில் பெரியாருக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை ஆர்.ஜி.இங்கர்சாலுக்கும், கிறித்தவ மத வெறியர்களிடமிருந்து பல அச்சுறுத்தல் கடிதங்கள் வந்துள்ளன. முட்டாளே! நாளை முதல் நீ மேடை ஏறினால் உன் தலை அட்லாண்டிக் பெருங்கடலில் மிதக்கும்.

ஆஸ்திகர்களான எங்கள் கோபத்திற்கு ஆளா னால் பைபிளை ஏந்தும் கைகள் தீப்பந்தத்தை ஏந்தி உன் வீட்டிற்குத் தீ வைத்து உன்னையும் உன் குடும்பத்தையும் கொளுத்தி விடுவோம்.

இந்த இழிவான அச்சுறுத்தல்களையெல்லாம் மீறி இங்கர்சால் கிறித்தவ மத நூல்களின் மூடக் கருத்துக்களை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பிரச்சாரம் செய்தார்.

தமிழ் நாட்டு இங்கர்சால் தமிழர் தலைவர் மாணவப் பருவத்திலிருந்து கடந்த எழுபது ஆண்டு களாக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறார். இங்கர்சாலுக்குப் பின்னால் ஓர் இயக்கம் இருந்த தில்லை. ஆனால் தமிழர் தலைவருக்குப் பின்னால் குமரிமுனையிலிருந்து திருத்தணி வரை பல இலட்சம் தொண்டர்களையும், ஆதரவாளர்களை யும் கொண்ட இயக்கம் செயல்படுகிறது என்பதை அவரைத் தாக்கத் துணிந்த பிற்போக்குவாதிகள் மறந்து விடவேண்டாம்.

மூடப் பழக்கங்கள் தமிழ் நாட்டில் இருக்கும் வரை தமிழர் தலைவரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் தொடரும் எந்தப் பார்ப்பானாவது பக்தியின் பெய ரால் முதுகில் அலகு குத்திக்கொண்டு லாரியை இழுக்கிறானா? நெருப்பு மிதிக்கிறானா? நேர்த்திக் கடன் என்று சொல்லி உடம்பைக் கத்தியால் கீறிக் கொள்கிறானா? எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது பேய் பிடித்தது என்று பூசாரியால் சாட்டை அடி வாங்குகிறாளா? இந்த மூடத்தனங்களையெல்லாம் எதிர்த்துதான் நாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறோம்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை, சேது கால்வாய் திட்டம், தமிழக மீனவர்கள் இலங் கைக் கடற்படையால் தாக்கப்படுதல், கச்சத்தீவைத் தமிழகத்தோடு இணைத்தல் இவற்றைப் போன்ற பிரச்சினைகளில் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக்கழகமும் தீவிர அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையென்றால் வேறு நாதி ஏது? திராவிடர் கழகம் தமிழக மீனவர்களின் நலனைப் பாதுகாக்கவும், கச்சத்தீவை மீட்கவும் 15.10.2013 அன்று தமிழகம் முழுவதும் அறப்போர் நடத்தி யதைப் போல் காங்கிரசோ, கம்யூனிஸ்ட்டோ, பி.ஜே. பி.யோ இதுவரை போராட்டம் நடத்தியதுண்டா?

ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமு தாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத் தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாய மாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன் என்று தந்தை பெரியார் தன் வாழ்க்கை இலட்சியத்தை வெளி யிட்டிருக்கிறார். பெரியார் விட்டுச் சென்ற தொண்டை அல்லும் பகலும் ஆற்றிவருபவர் நம் தமிழர் தலைவர், அவருக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டியது அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை ஆகும்.

- இர.செங்கல்வராயன் (முன்னாள் துணைத் தலைவர், ப.க. செய்யாறு)

தமிழ் ஓவியா said...


என்னதான் சொன்னார் பெரியார்?


கருத்துரிமை: ஒருவனுடைய எந்தக்கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்ப தற்கு யாருக்கும் உரிமை கிடையாது.

பேராசை - நாணயம்: பேராசை யில்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும், அனுபவத்துக்கும் ஒவ்வாததை ஒருகாலமும் நம்ப மாட்டான்; பின்பற்றமாட்டான்.

வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பார்கள்.

அறிவுக்கு முதலிடம்: உன் சொந்தப் புத்திதான் உனக்கு வழி காட்டி; அதை நல்ல முறையில் பயன் படுத்து, பிறரிடமுள்ள அவநம்பிக் கையைக் கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டதால்தான் அறிவு வெள்ளாமை கருகிப்போயிற்று. முன் னோர் சொல்லிப் போனது அற்புத மல்ல, அதிசயமுமல்ல, அதை அவர் களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பந் தப்படாமல் நீயே செய்ய, கண்டுபிடிக்க, முயற்சி செய், அறிவுக்கே முதலிடம் கொடு.

நமக்கு வேண்டியது என்ன? : தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்புமட்டும் அல்ல, அறிவும் வேண்டும், சுயமரியாதையும் வேண்டும், தன்மான உணர்ச்சியும், எதையும் பகுத்துணரும் திறனும், ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவை.

படிப்பு எப்படி இருக்க வேண்டும்? : நமது கல்விமுறை மாற வேண்டும், படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயில வேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறுத்தி னாலும் அவன் தொழில் செய்து பிழைக்கக்கூடியவனாக இருக்க வேண்டும். மக்கள் அத்தனை பேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்.

பெண் அடிமையாவது ஏன்? : ஒவ்வொரு பெண்ணும் - தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதி பெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக் குப் போதுமான அளவாவது சம் பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.

பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது.

வாலிபர்கள் கவனிக்க : வாலி பர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாக புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை, தீமையை அறியும் குணமும், சாத்தி யம், அசாத்தியம், அறியும் குணமும், ஆய்ந்து ஓர்ந்து பார்க்கும் தன் மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்கூடியவர்கள் ஆவார்கள்.

சேவை என்றால் என்ன? : சேவை என்பது கூலியை உத்தே சித்தோ தனது சுயநலத்தை உத்தே சித்தோ செய்வதல்ல, மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவ தற்கு ஆகவே செய்யப்படும் காரியம்தான்.

ஜாதியும் - ஒழுக்கமும் : மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான், இவனை மக்கள் இகழ்வதில்லை. சாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால், சாதியை விட்டுச் சாதியில் சாப்பிட்டால் கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம் - நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.

வெளியீடு: கும்முடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!


நெற்றியிலே சாம்பலைநீ பூச வேண்டாம்
திருக்கோயில் வாசலையே மிதிக்கவேண்டாம்
புற்றினிலே பூசைநீ செய்யவேண்டாம்
பிள்ளைகளைத் தேரோட்டத்துக் கனுப்பவேண்டாம்
கற்கையிலே திருக்குறளை மறக்கவேண்டாம்
கழிசடைகள் விரதம்கடைப் பிடிக்கவேண்டாம்
சற்றேனும் மூடத்தனம் பரப்பாத
தன்மானப் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!

புத்திதரும் விடுதலையை ஒதுக்க வேண்டாம்
பூப்பெய்தின பேரில்விழா எடுக்கவேண்டாம்
பித்தசா மியார்வலையில் வீழ வேண்டாம்
பேயோட்டும் பூசாரியை நம்பவேண்டாம்
சத்திரத்தில் சோம்பேறி வளர்க்கவேண்டாம்
சாமிசரண மென்பானைச் சேர்க்கவேண்டாம்
வித்தகனாய் வேலையிலே விகிதாசாரம்
வேண்டுமென்ற பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!

உரிமைகளை உணராதார் போற்றவேண்டாம்
ஒத்தாசை செய்வாரைத் தூற்ற வேண்டாம்
கரிசனத்தை அறிவினிலே காட்ட வேண்டாம்
கப்பல்கவிழ்ந் தாலும் இறை தேட வேண்டாம்
நரபலியின் யோகத்தைக் கேட்க வேண்டாம்
நான்மறைகள் வேதத்தைப் புதுக்க வேண்டாம்
மருவிலாத சிந்தனையின் பெரியாரை
வாழ்நாளில் மறவாமல் வாழ்த்தாய் நெஞ்சே!

குலம்பேசித் திரிவாரை மதிக்கவேண்டாம்
குணங்கெட்ட மதமுடன் சேர வேண்டாம்
சிலைகோவில் சேவிப்பான் நாடவேண்டாம்
சிந்திக்க மறுப்பானுக் குதவவேண்டாம்
கலைஇசையில் மடத்தனமும் வளர்க்கவேண்டாம்
கர்மபலன் என்பாரைக் கூடவேண்டாம்
பலமரத்தை வாழ்நாளில் கண்டதச்சன்
வழுவில்லாப் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!

கருமாதி திவசத்தைக் கருதவேண்டாம்
கடவுளுக்காய் மொட்டைநீ போட வேண்டாம்
பிரதோசப் பலன்களைநீ நம்பவேண்டாம்
கோயில்குளம் யாத்திரைக்குப் போகவேண்டாம்
அரோகரா கோஷத்தில் குதிக்கவேண்டாம்
ஆரியன்வரு மானத்தைக் கூட்டவேண்டாம்
நேருக்கு நேர்நின்று வாதில்வென்ற
நிகரில்லாப் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!

- பட்டுக்கோட்டை தமிழ்அன்பன்

தமிழ் ஓவியா said...


அறிவியல்


அசோகன் இந்தியாவை ஆண்ட சில காலத்துக்கெல்லாம் (கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகள் முன்பு) ஏராஸ்தனஸ் (Erosthenes) எனும் கிரேக்க பூகோள அறிஞர் இருந்தார். அலெக்சாண்டிரியாவில், தன் ஆராய்ச்சிக் கூடத்தை அமைத் திருந்தார். அவர் பூமியின் சுற் றளவு என்ன என்பதைக் கணக் கிட்டார்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இதை எப்படிச் செய்தார் என்று வியப்பே தோன்றும். எகிப்து நாட்டிலுள்ள இரண்டு ஊர் களை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த இரண்டு ஊர்களிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில், சூரியனுடைய நிழல் எப்படி விழுகிறது என்பதைக் கணக் கெடுத்தார்.

அ, ஆ எனும் இரண்டு கல் தூண்கள். ஆ தூணை அலக் சாண்டிரியாவில் நட்டார் அ தூணை செயன் எனும் ஊரில் நிறுத்தினார். இரண்டும் ஒரே அளவில் ஒரே மாதிரியாக நிறுத் தப்பட்டன. இரண்டு ஊருக்கும் இடையிலிருந்த தூரம் கிரேக்கக் கணக்குப்படி 5000 ஸ்டேடியா (551 மைல்கள் ஆகும்) நண் பகலில், சூரியன் உச்சியிலிருக் கும்போது செயனில், நிழல் விழாததைக் கண்டார், அதே நேரத்தில், அலெக்சாண்டிரியா வில் நாட்டப்பட்ட தூணில் நிழல் விழுவதை இன்னொரு நாள் கணக்கெடுத்தார்.

எவ் வளவு சாய்வு இருக்கிறதென் பதை நிழலைக் கொண்டு அளந்து தெரிந்து கொண்டார். சூரியகிரணம் 7/50 சாய்வாக வருவதை உணர்ந்தார். உலகம் உருண்டையானது என்பதையும் அப்போதே கிரேக்க விஞ் ஞானிகள் அறுதியிட்டிருந்தனர். அதனால், உருண்டையின் சுற்றளவு 360 டிகிரி என்பதும் பகுக்கப் பட்டிருந்தது.

அதனால்:
அ, ஆ, பூமியின் சுற்றளவு: 7 1/5 0:360
அதாவது,

பூமியின் சுற்றளவு: 551 X 36D X 5/36

அதாவது

27,500 மைல்கள் என்று கணக் கிடப்பட்டது. இந்தக் கணக்குச் சரியென்று 2000 ஆண்டுகளுக் குப் பிறகே கண்டு பிடிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


நடையை மாற்று!


பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! என்பதுபோல மனிதர்களும் பலவிதம். என்ன காந்தியைச் சுட்டுக் கொன்னூட்டாங்களா? எனக் கேட்பார்கள் சிலர். அதுபோல நாட்டில் எவ்வளவோ மாற்றம் வந்து, பகுத் தறிவும் வளர்ந்துவிட்டது. பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பல நூறு ஆண்டு கள் ஆகிவிட்டன. ஆனாலும் அதுகூடத் தெரியாமல் பலர் வாழ்கிறார்கள்.

அது எப்படி என நீங்கள் ஆச்சரியப் படலாம். திருச்சி-வேளாங்கண்ணி, திருச்சி - சபரிமலை, திருச்சி- சமயபுரம், திருச்சி - பழனி இப்படி எண்ணற்ற வழித் தடங்களில் இன்னமும் மக்கள் நடந்தே பயணம் செய்கிறார்கள். இடைநில்லா பேருந்து, இடைநிற்கும் பேருந்து, சொகுசுப் பேருந்து, குளிர் சாதனப் பேருந்து என வகை, வகையாய் பேருந்துகள் வந்துவிட்டாலும், அதுகுறித்து எதுவும் அறியாமல் இருக்கிறார்கள் இம்மக்கள்!

திருச்சியில் இருந்து மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எல்லா ஊர்களில இருந்தும் இப்படி நடைப் பயணம் மேற்கொள்வோர் அதிகம். நாடு வளர்ந்து விட்டது, பேருந்து கண்டு பிடித்து விட்டார்கள் என்று நாம் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வருகிறது. எங்களுக்கு எல்லாம் தெரியும்(?) நாங்கள் வேண்டுதலுடன் கோவிலுக்குப் பக்தியாய் நடக்கிறோம், என்கிறார்கள் சரி! நீங்கள் வேண்டு மானால் கால நடை போங்கள்.

சின்னஞ்சிறு குழந்தைகளை ஏன் நடக்க வைத்துக் கொடுமைப்படுத்துகிறீர்கள்? என்றால், கோவிலுக்கு நடப்பதால் குழந்தைகளுக்கு கால் வலி வராது என மனம் வலிக்காமல் கூறுகிறார்கள்.

இது இப்படியிருக்க சில நாட்களுக்கு முன்னர் திருச்சியிலிருந்து வேளாங் கண்ணிக்குப் பலர் நடந்து சென்றனர். அச் சமயம் வல்லம் பேருந்து நிலையத் தில் கண்ட காட்சி நமக்கு மட்டுமல்ல, பலருக்கும் வேடிக்கையாகவும், விலா நோகச் சிரிக்க வைப்பதாகவும் இருந்தது.

அது என்னவெனில், 30 வயது மதிக் கத்தக்க மூன்று இளைஞர்கள், வேளாங்கண்ணிச் சீருடையுடன் (!!) வல்லம் பேருந்து நிலையம் நோக்கி வந்தனர். பேருந்து நிலையம் வந்ததும் அங்கிருந்த மர நிழலில் சிறிது இளைப் பாறினர். பின்னர் ஒரு விதப் பதற்றத் துடன் சுற்றும், முற்றும் பார்த்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்து நின்ற தஞ்சாவூர் பேருந்தில் வீர்ரென்று ஏறி உட்கார்ந்து கொண்டனர்.

அவர்கள் பதற்றத்துடன் சுற்றும் முற்றும் பார்க்கக் காரணம், தங்களோடு நடந்து வருகிறவர்கள் தங்களைப் பார்த்துவிடக் கூடாதே என்கிற பதற்றம். இவர்கள் பதறவே தேவையில்லை. ஏனெனில் இவர்களோடு வந்தவர்கள் செங்கிப் பட்டியில் வேறொரு பேருந் தில் ஏறிப் போய்க் கொண்டிருப்பார்கள்.

ஆக, அறிவியலையும், பயன்படுத்தா மல், அறிவையும் பயன்படுத்தாமல் இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவில் லாமல் போகிறது. வாழ்க்கையின் நடையை மாற்றினால், இவர்களுக்கு நல்ல விடை கிடைக்கும் என்பதை நாம் தொடர்ந்து சொல்வோம்.

- வி.சி. வில்வம்

தமிழ் ஓவியா said...


ஆத்திகர்களுக்கு சமயபுரம் என்றால் நாத்திகர்களுக்கு விடயபுரம்


ஆத்திகர்களுக்கு சமயபுரம் என்றால் நாத்திகர்களுக்கு விடயபுரம் அறிவுலக பேராசான் தலைவர் தந்தை பெரியார் எனும் மாபெரும் நோய் தீர்க்கும் பச்சிலை மருந்து தயாரிக்கப்பட்ட இடம்தான் "விடயபுரம்".ஆம்.உலகில் எத்தனையோ பெரிய புரட்சியாளர்கள் தோன்றிய வரலாறுகளை நாம் படித் திருக்கின்றோம்!

ஆனால் ஒரே ஒருவராவது தன் மக்களின் இந்த இழி நிலைக்கு காரணம் நீ தெய்வமாக நினைத்து வழிபடும் இந்த கல்தான் காரணம் என்று மண்டையில் அடித்தாற்போல் சொன்னவர் உண்டா?தந்தை பெரியாருக்கு சிறு வயதிலேயே கடவுள் மறுப்பு சிந்தனைகள் தோன்றி இருந்தாலும் அதை முழு வீச்சுடன் பிரகடனபடுத்தியது என்னவோ இந்த விடயபுரத்தில்தான்.

அந்த விடயபுரத்தைக் காண ஆவலாய் ஒரு நாள் சென்றேன்.அங்கே நான் கண்டது வெறும் கருவை முள் செடிகள் நிறைந்த அடர்ந்த பகுதி.24.05.1967 அன்று தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இந்த இடத்தில் நின்றுதான் கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை!!, கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்பியவன் அயோக்கியன்!! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!!! என்ற வரலாற்று சிறப்புமிக்க வாசகங்களை போர் பிரகடனம் செய்தார்.

இன்றைக்கு 80 வயது இளைஞர், எனது தாத்தா சுயமரியாதை சுடரொளிமறைந்த காரைக்குடி என்.ஆர்.சாமி. அவர்கள் எப்போதும் சொல்லும் "இரண்டாம் பெரியார்"நமக்கு மட்டுமல்ல இந்த இனத்திற்கு என்றென்றும் ஆசிரியராய் திகழும் தமிழர் தலைவர் அய்யா அவர்கள் விடயபுரத்தில் நினைவு சின்னம் அமைக்க உத்தர விட்டுள்ளார்கள். இனி ஒவ்வொரு கழக குடும்பத்தினரும் ஆண்டுக்கொரு முறை செல்லும் சுற்றுலாவில் இந்தவிடயபுரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நமது குழந்தைகளை அழைத்து சென்று காட்ட வேண்டிய இடங்களில் இந்த விடயபுரமும் ஒன்றாகும். பக்தர்கள் வேண்டுமானால் கால்கள் வலிக்க கற்சிலையை காண கால்நடையாக சமயபுரம் செல்லட்டும்.பகுத்தறிவாளர்கள் நாம் சொகுசான வாகனங்களில் குடும்பத்தினரோடு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு விடயபுரம் செல்வோம்.

நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு கோடானுகோடி பகுத்தறிவாளர்களின் நன்றி.நன்றி வாழ்க தந்தை பெரியார்! வாழ்க தமிழர் தலைவர் வீரமணி!!

- தி.என்னாரெஸ் பிராட்லா, காரைக்குடி

தமிழ் ஓவியா said...


மனு (அ) தர்மம்


பார்ப்பானுடைய தர்மம் உடல் வியர்க்கப் பாடுபடக்கூடாது.

பிச்சை எடுத்தே புசிக்க வேண்டும்.

பார்ப்பான் கேட்டால் எந்தப் பொருளையும் உடனே கொடுக்க வேண்டியது நம்முடைய (சூத்திரன்) தர்மம்.

பார்ப்பான் யாரிடம் பிச்சை கேட்டாலும், தன் பொருளையே - சொத்தையே வாங்கிக் கொள்ளுகிறான்.

பூமி, பணம் எல்லாம் பார்ப்பானுடையது. அதைக் கொடுக்காவிட்டால் உதைத்து வாங்கலாம் என்பது பார்ப்பான் தர்மம்.

ஏர், கலப்பை, வட கயிற்றை பார்ப்பான் கையால் தொட்டாலே பாவம்.

நாம் தான் உழைக்க வேண்டும்.

அதன் உணவை எல்லாம் பார்ப்பான் உண்டு களிக்க வேண்டும்.

சூத்திரன் படிக்கக் கூடாது என்பது அவன் தர்மம்.

இதனால்தான் அவன் படித்து மேலே போகவும் நாம் கீழே இறங்கவுமான நிலைமை ஏற்பட்டது.

இதை எல்லாம் நான் சும்மா சொல்லவில்லை பி.ஏ., எம்.ஏ., படிப்பதை விட அதிகம் படித்தே சொல்லுகிறேன்.

பார்ப்பான் உயர் வாழ்வுக்கே மதமும் கடவுளும். நாம் பாடுபடுகிறோம்

கல் உடைக்கிறோம்;

மரம் வெட்டுகிறோம்; வண்டி இழுக்கிறோம்.

இவ்வளவு கடின வேலைகள் செய்யும் நாம் கூரை வீட்டில் தான் குடி இருப்போம்.

நம் வீட்டுக் கருமாதிக்கு வந்து பிச்சை வாங்கிப் பிழைப் பவனுக்கெல்லாம் மாளிகை வாசம், கார், பங்களா மற்றும் பல வசதிகள் என்றால், நாம் அந்த வாழ்வு வாழ வேண்டும் என்கின்ற ஆசை இருக்காதா?

(நூல்: ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்)
- க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி

தமிழ் ஓவியா said...


உடலுக்கு வலிமை தரும் முளைக்கீரை


நாம் உண்ணும் உணவில் தினமும் ஒரு கீரையை சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழலாம் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முளைக்கீரை உடல் வலிமை தரும் கீரையாகும். இதனை சிறுவர் முதல் பெரியவர் வரை உண்ணலாம். தண்டுக் கீரை யின் இளம் செடியே முளைக் கீரையாகும். இதனால் இளங்கீரை என்ற மற்ற பெயரும் இதற்கு உண்டு.

முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும். இக்கீரையை சமையல் செய்துண்ண நாவுக்கு ருசியைத்தரும். வருடம் முழுவதும் வளரக்கூடிய முளைக்கீரை அனைத் துப் பகுதிகளிலும் தடையின்றி வளரும் தன்மை கொண்டது. கால்சியம் சத்து நிறைந்துள்ள இந்த கீரையில் ஏ,பி, வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன..

எலும்புகள் வலுவடையும்: முளைக் கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கும், வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம். இதனால் எலும்பு வலுவடைவதோடு உடல் வளர்ச்சி அதிகரிக்கும். வயதானவர்கள் இந்தக் கீரையை தினசரி உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. நரம்பு களுக்கும், எலும்பு களுக்கும் தேவை யான சக்தியை அளிக்கும்.

மாலைக்கண் நோய் குண மடையும்: முளைக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. நூறு கிராம் முளைக் கீரையில் 9000 (அகில உலக அலகு ) வைட்டமின் உள்ளது.

இது மாலைக் கண்நோய்க்கு சிறந்த மருந்தாகும். முளைக் கீரை சாப்பிடுவ தால் சொறி சிரங்கு மறையும், மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடை யும்., பல்நோய் குணமடையும். நரம்புத் தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும். பசியைத் தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற் றும். கண்பார்வையைத் தெளிவு படுத்தும். சோம்பலை ஒழித்து சுறு சுறுப்பை உண்டு பண்ணும். அறிவைக் கூர்மையாக்கும்.

தமிழ் ஓவியா said...


மாதுளைபழம்

உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடிய பழங்களில் ஒன்று மாதுளை. அனைவரும் விரும்பி சாப்பிடும் மாதுளையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. உடலுக்கு நல்ல எனர்ஜியை தரக்கூடியது மாதுளை. மேலும், இதய நோய்கள், புற்று நோய் போன்றவை வராமல் தடுக்கிறது. கொழுப்பை குறைக்கும் தன்மை உடையது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும்.

மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.

ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். தோலில் ஏற்படும் எரிச்சல், தொண்டையில் பிரச்சினை போன்றவற்றிற்கு சிறந்தது. பிளட் சர்குலேசனுக்கு ஏற்றது மாதுளை. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை கொண்ட மாதுளம் பழத்தை நாமும் சாப்பிடலாமே.

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்பந்தமான அனைத்து உடல்நலக் குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வரலாம்.

தமிழ் ஓவியா said...

திட்டமிட்ட பிரச்சாரத்தினால் மாணவர்களை, இளைஞர்களை ஈர்க்க இந்துத்துவா சக்திகள் மேற்கொள்ளும் முயற்சியை அலட்சியப்படுத்தக் கூடாது
மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் மதச் சார்பற்ற அரசியலுக்கான தோழமை முன்னணிக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்

சென்னை அக்.26- மதச் சார்பின்மையைக் கட்டிக் காக்க மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரட்டப்பட வேண்டும் என்று சென்னையில் 24.10.2013 அன்று மாலை நடைபெற்ற ஒருங்கி ணைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தந்தை பெரி யார் ஹிந்துத்துவா பற்றித் தோலுரித்துக் காட்டியதை கூட்டத் தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் சுட்டிக் காட்டினார். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், மாணவர் களிடம் உண்மைகள் போய்ச் சேர திட்ட மிட்ட செயல்பாடுகள் தேவை என்று திராவிடர் கழகத் துணைத் தலை வர் கூறியதை அனை வரும் வரவேற்றனர். அது சிறந்த கருத்து என்றும் கூறினர்.

மதவெறி சக்திகளின் கோரப்பிடியில் இந்தியா சிக்கிவிடக் கூடாது எனும் கவலையும், எச் சரிக்கை உணர்வும், நாடு முழுவதுமுள்ள ஜன நாயக சக்திகளிடையே வேகமடைந்துள்ளது. இனப்படுகொலைக் குற்றவாளியான மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க அறிவித்த மறுநொடியே மதச்சார்பற்ற அரசிய லுக்கான களமும் கூர் மையாகி விட்டது. அந்த வகையில் அகில இந்திய அளவில் இடதுசாரிகள் முன்னெடுக்கும் அரசி யல் ரீதியிலான ஒருங் கிணைவு ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகளுக்கு அப்பால் மக்களை ஒருங்கிணைக்கும் செயல்திட்டத்துடன் 'மதச்சார்பற்ற அரசிய லுக்கான தோழமை முன்னணி' தொடங்கப் பட்டுள்ளது.

பூரி சங்கராச்சாரி யார், ஜம்மியத் உலமா இ ஹிந்த் தலைவர் ஹர்ஷத் மதானி, உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஜோஸ் ஆகியோரை ஒருங் கிணைப்பாளர்களாகக் கொண்டு, தேசிய அள வில் பெரும் பாய்ச்ச லுடன் புறப்பட்டுள்ள இம்முன்னணியின் தமிழக அறிமுகக் கூட் டம், 24-10-2013 வியாழன் அன்று சென்னையி லுள்ள சவேரா ஹோட் டலில் நடைபெற்றது.

தமிழக ஒருங்கி ணைப்பாளர் ஜெகத் கஸ்பார், திராவிடர் கழ கத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், சென்னை மயிலை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஆண்டனி சாமி, பேராயர் எஸ்றா சற்குணம், இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் முஹம் மது ஹனீபா, எழுத்தா ளர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் பாமா, அருந்தமிழர் இயக்கத் தலைவர் ஜக்கையன், தமிழ் ஆன்றோர் பேரவைத் தலைவர் பத்மநாபன், சமூக ஆர் வலர் அழகரசன் மற்றும் சமூக நல்லிணக்க சிந் தனையாளர்கள், பெரியாரிஸ்டுகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள், தலித் - இஸ்லாமிய - கிறித்தவ இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற் றனர்.

டில்லியிலிருந்து வருகை தந்திருந்த ஹர் ஷத் மதானி அவர்களின் உரையை, சென்னை மக்கா பள்ளி தலைமை இமாம் சம்சுதீன் காசிமி தமிழில் வழங்கினார்.

முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜோஸ் நன்றி கூறினார். தமிழக ஒருங்கிணைப் புக் குழுவில் இடம் பெற்றுள்ள ஆளூர் ஷாநவாஸ் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.

பன்முகச் சமூக அமைப்புள்ள இந்தியா வில் வகுப்பு வெறியைத் தூண்டி பிளவுபடுத்தத் துடிக்கும் பா.ஜ.க.வை தனிமைப்படுத்துவ தென்றும், மதச்சார்பற்ற கொள்கையில் உறுதி யுடன் களமாடும் கட்சி களை ஆதரிப்பதென் றும் தீர்மானிக்கப்பட் டது. அதன் அடிப்படை யில் நாடு முழுவதும் தீவிர பரப்புரையையும், பயணங்களையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


பெரியார் உலகம் தோழர்களின் வெள்ளமென உற்சாகம் பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது முதற் கட்டப் பணியை உடனே முடித்திடுவீர்!


கழகப் பொறுப்பாளர்களே, கழகக் குடும்பத்தவர்களே, பகுத்தறிவாளர்களே, பெரியார் பற்றாளர்களே,

அன்பு வணக்கம்.

பெரியார் உலகம் என்று (திருச்சி - சென்னை நெடுஞ் சாலையில் சிறுகனூரில்) உருவாக்க பலரும் முனைப்புடன் நிதி திரட்டும் அரிய பணியில் - தொண்டில் திளைத்து வருகிறீர்கள்!

ஆங்காங்கு தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட மாவட்டக் கலந்துரையாடலில் உற்சாகம் கரை புரண்ட வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது என்பதை அறிய பெரு மகிழ்ச்சியும், புத்தாக்கமும் கிடைக்கின்றன.

எனவே விரைந்து டிசம்பரில் முதல் கட்டப் பணியை முடித்து, செயல் திறனை உறுதிப்படுத்துங்கள்!

நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது
வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!

சென்னை
26.10.2013

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


முட்டாள்தனம்


மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத்திலேயே மாறும். அவன் சந்ததிக் காலத்திலும் மாறும். ஆகவே, அதைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள்தனம்.

(விடுதலை, 28.4.1943)

தமிழ் ஓவியா said...


இருவகை துண்டறிக்கைகள்


தோழர்களே, தலைமைக் கழகத்தில் இரு வகைத் துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

விருத்தாசலத்தில், திராவிடர் கழகம் நடத்திய கடலூர் மண்டல மாணவர் கழக மாநாட்டின்போது, மதவெறியர்களும், ஜாதி வெறியர்களும் தமிழர் தலைவர்மீது மேற்கொண்ட வன்முறை முயற்சி பற்றியது ஒன்று.

தமிழ்நாட்டின் தலைவர்கள் கண்டன அறிக்கை களை வெளியிட்ட பின்பும், தமிழ்நாடு தழுவிய அளவில், திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடத்திய சூழ்நிலையில் இரண்டு பேர்களை மட்டும் காவல்துறை கைது செய்தது.

ஒருவர் பிஜேபிகாரர், இன்னொருவர் இந்து முன்னணிக்காரர். மீதி 28 பேர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காவல்துறையின் இத்தகு ஒரு சார்பான போக்குதான் நாட்டில் அன்றாடம் குற்றங்கள் பெருகி வழிந்து ஓடுவதற்கு முக்கிய காரணமாகும்.

தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் நாட்டில் குடிமக்களுக்குப் பாதுகாப்பு எந்த கதியில் இருக்கும்?

நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போயிற்று என்பதை அதே விருத்தாசலம் மாநாட்டுத் தீர்மானமும் சுட்டிக் காட்டியதை, இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவதும், இடித்துக் காட்டுவதும் பொருத்தமாகும்.

இரண்டாவது துண்டறிக்கை - தீபாவளி மூடத்தனத்தை விளக்கி பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டும் துண்டறிக்கையாகும்.

தீபாவளிபற்றிக் கூறப்படும் நரகாசுரன் கதை அறிவுக்குப் பொருத்தமற்றது என்பது ஒருபுறம் இருந்தாலும் ஆரியப் பார்ப்பனர்கள், திராவிடர்களை, அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் இழிவுபடுத்திக் கொன்றொழித்த தத்துவத்தை உள்ளடக்கிக் கொண்டதாகும்.

இதை தந்தை பெரியாரும், அவர் வழி வந்த திராவிடர் கழகத்தவர்களும் கூறுகின்றார்கள் என்று கூறிட முடியாது; வரலாற்றுப் பேராசிரியர்களே குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி எல்லாம், கழகம் வெளியிட்டுள்ள துண்டறிக்கையில், ஆதார பூர்வமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

வெகு காலத்திற்கு முன்புகூடப் போக வேண்டாம்; மத்தியில் பிஜேபி ஆண்ட காலத்தில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள், வட மாநிலங்களில். மை நாதுராம் கோட்சே போல்தே - என்பது அந்த நாடகத்தின் பெயர். நான்தான் கோட்சே பேசுகிறேன் என்பது அதன் பொருளாகும்.

அந்த நாடகத்தின் கருப்பொருள் என்ன தெரியுமா? காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே கடவுள் அவதாரம் என்றும், காந்தியார் ஓர் அரக்கன் என்றும் அந்த நாடகத்தில் சித்தரிக்கப் பட்டு இருந்தது.

காந்தியார், தங்களுக்குப் பயன்பட்ட வரை அவரை மகாத்மா என்று போற்றிப் புகழ்ந்தனர். இன்னொரு கட்டத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்க உணர்வைப் புரிந்து கொண்ட நிலையில், இந்துத்துவாவாதிகளின் நச்சு மனப்பான்மையை அவர் அறிந்த தன்மையில், அவர் போக்கில் சற்று மாறுதல் தெரிகிறது என்பதை நுகர்ந்து, அக்கணமே அவரைத் தீர்த்துக் கட்டி விட்டனர்.

அப்பொழுது ஒரு முறை கொன்றனர் என்றால் பிஜேபி ஆட்சியில் இன்னொரு முறை அவரை அரக்கன் என்று கூறி அவரைக் கொச்சைப்படுத்திக் கொன்றுள்ளனர்.

ஆரியப் பார்ப்பனர்களை எதிர்த்தால், அவர்கள் கையில் வைத்திருக்கும் அக்மார்க் முத்திரை அரக்கர்கள் என்பதுதான்.

அந்த ஆரிய ராஜ்ஜியத்தை மீண்டும் உயிரூட்டத் தான் - ஹிந்துராஷ்டிரம் என்ற குரலை முன்னெடுக்க முனைந்துள்ளனர்.

பிஜேபியின் குரலில் சற்று மந்தமாக இது ஒலித்தாலும் அவர்களின் ஆர்.எஸ்.எஸ். குருநாத ரான மோகன் பகத் தெளிவாகவே கூறிவிட்டார் -ஹிந்து ராஷ்டிரக் கொள்கையில் மாற்றம் சமரசம் இல்லை என்று. தீபாவளி வரும் இந்தக் கால கட்டத்தில் இதைப் பற்றிய சிந்தனை தேவை. நாம் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கைகளை வீட்டுக்கு வீடு - கடைக்குக் கடை பரப்புவீர்! பரப்புவீர்!!

தமிழ் ஓவியா said...


நீதிப் போதனையா?


விடுதலை வெளியூர் 15.10.2013 இதழில் நீதிப் போதனையா? என்ற அற்புதமான தலையங்கத்தைப் பலமுறை படித்துப் பார்த்து மகிழ்வுடன் இம்மடலைத் தீட்டுகிறேன்.
மாணவர்களை மட்டும் தனியே பிரித்துக் குற்றப்பத்திரிகை படிப்பதில் பயனில்லை. ஒட்டு மொத்த சமூகத்தின் சுற்றுச் சூழலேக் கூட ஒரு வகையில் பொறுப்புத்தான் என்று கேட்டதோடு நிற்காமல்

ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள்?

வழக்குரைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்?

மருத்துவர்கள் எப்படி இருக்கிறார்கள்?

அரசியல்வாதிகள் எப்படி இருக்கிறார்கள்?

ஏன் சில நீதிபதிகளே கூட எப்படி நடந்துக்கொள்கிறார்கள்?. மதவாதிகள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? காவிவேடதாரிகள் - சாமி யார்கள் தேவநாதன், சங்கராச்சாரியார் எப்படியெல்லாம் நடந்திருக் கிறார்கள் என்று கேட்பதோடு நிற்காமல் இன்னும் மேலே போய்

கற்பழிக்காத கடவுள் உண்டா?

சண்டை செய்யாத கடவுள் உண்டா?

திருமங்கை ஆழ்வாரே திருடியவர்தானே. என்றெல்லாம் ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்து - புராணப் புளுகுகளைப் புகட்டும் பாடத்திட்டம் இருக்கும்வரை குறுக்கே போய் சேறு பூசிக்கொள்ள வேண்டிதான் இருக்கும் என்று சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்.

1946-ஆம் ஆண்டு முதல் விடுதலையோடு தொடர்பு கொண்டவன் என்ற முறையிலேயே ஆண்டு தவறாது தசரா தீபாவளி சமயங்களில் புராணக் குப்பைக் கதைகளை வெளியிட்டு தமிழ் சமுதாயத்தைக் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி வருவது மேலும் இன்றைய முதல்வரின் அறிக்கையும் - அண்ணா அவர்கள் கூறியது பற்றிய (திராவிடநாடு 26.10.1947) செய்தியையும் எடுத்துக்காட்டி வெளியிட்டுள்ள விடுதலையின் பங்கு மகத்தானது.

அறிஞர் அண்ணா அவர்கள் எத்தகு மேற்கோளுடன் சாமான்யரும் விளங்கிக் கொள்ளும்படியாக எடுத்தியம்பியுள்ள பாங்கு இன்றைய மாணவர், இளைஞர் சமூகம் அறியாத ஒன்று அந்தப்பணியை விடுதலை நிறைவாக அவ்வப்போது செய்தே வருகிறது.

யான் இதைப்படித்த பின் என் இனிய நண்பர் - நாகரசம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் உடன் பிறப்பு க.சின்னகாடி அவர்களிடம் (முரசொலி இதழின் ஆயுள் சந்தாதாரர்) கொடுத்து படிக்கச் செய்தேன்.

அவர் அந்த விடுதலை செய்தியை படித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு நூறு (ஜெராக்ஸ்) நகல் எடுத்து அவரே முன்னின்று மாணவர்கள். இளைஞர்களுக்கு வழங்கி மேலும் பகுத்தறிவுக் கருத்துக்களை விளக்கி உள்ளார். இதற்கு எங்கள் எல்லா ஊரிலும் நிகழ்தல் நலம் பயக்கும் என நம்புகிறேன் என்றும் பகுத்தறிவு கருத்துக்கு நிச்சயம் வரவேற்பு இருந்தே தீரும் என்பதையும் உணர்ந்தேன்.

- பொற்கோவன், வேலம்பட்டி

தமிழ் ஓவியா said...


காங்கிரஸ் தலைவர் பதவி விநியோகம்


இவ்வருடக் கோடியில் சென்னையில் கூடும் காங்கிரஸ் என்னும் கூட்டத்திற்கு தலைவராக நமது பார்ப்பனர்கள் டாக்டர் அன்சாரி அவர்களைத் தெரிந்தெடுத்திருக் கிறார்கள் என அறிகிறோம்.

சென்ற வருடக் காங்கிரசுக்குத் தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் அப்பதவி பெறுவதற்குச் செலவு செய்தது போல் பணம் கொடுக்கா விட்டாலும், டாக்டர் அன்சாரி அவர்களிடம் அதற்கும் மேற்பட்டதான பெரிய மதிப்புள்ள விலை பெற்றுக் கொண்ட பிறகு தான் நமது பார்ப்பன தேச பக்தர்கள் என்போர்கள் டாக்ட ரைத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.

அந்த விலை எது என்றால் அது தான் மகமதியர் களுக்குத் தனித்தொகுதி வேண்டியதில்லை என்று சொன்னதாகும். டாக்டர் அன்சாரி அவர்கள் மகமதிய சமூகத்திற்காக ஒப்புக்கொண்டதாகச் சொல் வதை மற்ற மகமதியர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா இல்லையா என்பதைப்பற்றி நமது பார்ப்பனர்களுக்கு அவசிய மில்லை. எப்படியாவது அவர்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள ஒரு சந்து கிடைத்தால் போதும்.

இப்போது ஸ்ரீமான்கள் கந்தசாமி செட்டியாரையும், முத்துரங்க முதலியாரையும், குப்புசாமி முதலியாரையும் பிடித்துக் கொண்டு அவர்களையே பார்ப்பனரல்லாதார் பிரதிநிதிகள் என்பதாக ஊர் ஊராய் கூட்டிக் கொண்டு போய் காட்டி எப்படித் தங்கள் காரியத்தைச் சாதிக் கிறார்களோ, அது போல் டாக்டர் அன்சாரி அவர்கள் மகமதியர்களுக்குத் தனித்தொகுதி வேண்டாம் என்றால் அதுவே மகமதிய சமூக பிரதிநிதித்துவம் என்பதாகச் சொல்லி வரப் போகும் கமிஷனில் சரிப்படுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தின் பேரிலேயே இந்தப் பதவி கொடுத்திருக்கிறார்கள்.

பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு விரோதமாய்ப் பேசினதினாலும், பார்ப்பன ரல்லாதார் சமுகத்தை வைததினாலுமே ஸ்ரீமான் முத்துரங்க முதலியாருக்குச் சட்டசபை வேலை சம்பாதித்துக் கொடுத்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு உப தலைவராக் கினதும், வரப்போகும் காங்கிரசுக்குத் தற்கால வரவேற்பு கமிட்டி தலைவராக்கினதும் யாவரும் அறிவார்கள். டாக்டர் அன்சாரி அவர்களை காங்கிரஸ் தலைமையில் இருந்து கொண்டு மகமதிய சமூகத்திற்கு தனித்தொகுதி வேண்டியதில்லை என்று சொல்லும்படி செய்தாலும்கூட,

நமது மகமதிய சகோதரர்கள் ஏமாந்து விடமாட்டார்கள் என்பதே நமது உறுதி. இப்பொழு திருந்தே அதற்கு வேண்டிய வேலைகள் செய்து கொண்டு வருவதையும் நாம் அறிவோம். ஆனாலும், இப்பதவிகளைப் பார்ப்பனர்கள் தங்களுக்கு எப்படி அனுகூலப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதற்கே இதைக் குறிப்பிட்டோம்.

- குடிஅரசு - கட்டுரை - 24.07.1927
காங்கிரஸ் தலைவர் பதவி விநியோகம்

தமிழ் ஓவியா said...


பார்ப்பனரல்லாதவர்க்கு


நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப் பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர் ஆட்சேபித்து வருவதும் உங்களுக்குத் தெரியும்.

தஞ்சை ஜில்லா துவார் என்ற கிராமத்தில் பார்ப்பனர்கள் ஒன்றுகூடி அங்கு கூடின சபையில், நீங்கள் எல்லோரும் சூத்திரர்கள் என்றே தீர்மானமும் செய்துவிட்டார்கள். இத்தீர்மானம் ராஜ்யவாதிகளாக நடிக்கும் பார்ப்பனர்களுக்கும், திருப்தியாக சம்மதந் தான் என்பதற்கு உங்களால் பிழைத்து வரும் சுதேச மித்திரன் இந்து முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் கண்டிக்காமல் இருப்பதே போதுமான சாட்சியாகும்.

ஆராய்ச்சிக் குறைவினால் உண்டான குருட்டுத் தனமான மூடக் கொள்கைகளின் பாசத்தால், கட்டுப் பட்டிருக்கும் உங்களை உள்ளே ரம்பப் பொடியை நிறைத்து வெளியே பொன்முலாம் பூசின நயவஞ்சகப் பேச்சால் இதுவரை ஏமாற்றி வந்த தைரியமும் குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்பு போன்றும் கோழை களான உங்களில் சிலர் அப்பார்ப்பனர்களுடன் சேர்ந்திருக்கும் தைரியமும், உங்களின் இழிவை நிலைநிறுத்தக் காரணமாய் இருந்தது.

நான்கு ஜாதியான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நான்கு பதத்திற்கும் அவர்களின் இந்து சாஸ்திரத்தில் அர்த்தமெழுதப்பட்டிருக்கிறது. அதில் சூத்திரன் என்ற பதத்தின் அர்த்தம் அநேகருக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந் திருக்கு மென்று பார்ப்பனர்களுக்குத் தெரிந்திருந்தால் இத்தனை தைரியமாக நீங்களெல்லாம் சூத்திரர்கள் என்று தீர்மானம் செய் திருக்கமாட்டார்கள்.

சூத்திரன் என்னும் பதத்திற்குக் கிலேசமுடையவன், துக்கி, வேசிமகன், ஆசார மில்லாதவன், தேஜசில் லாதான், ஒழுக்க மில்லாதவன், ஏவற்றொழில் செய் வோன், சுத்தி இல்லாதவன், கண்டதைப் புசிப்போன், அடிமை என்று இதே இந்து சாஸ்திரத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த அர்த்தத்தையுடையவர்கள் நீங்களானால் எங்களுக்குப் பார்ப்பாரிடம் இனிச் சண்டையேயில்லை.

இந்த இழிவான பட்டத்தை ஏற்றுக் கொள்ள உங்களுக்கு இஷ்டமில்லை என்பதுண்மை யானால் உங்களின் வைதீகச் சடங்குகளைப் பூர்வீக உங்கள் வழக்கத்திற்குக் கொண்டு வந்துப் பார்ப்பாரப் புரோகிதர்களை நீக்கி விடுங்கள்.

- குடிஅரசு - கட்டுரை - 03.07.1927

தமிழ் ஓவியா said...


பாவிடயர்


பஞ்சாபில் நடந்த படுகொலைக்கு காரணஸ்தர்களில் ஒருவரான ஜெனரல் டயர் துரை செத்துப்போனதற்கு அனேகப் பத்திரிகைகள் சந்தோஷம் கொண்டாடுவதன் மூலமாய் டயரை பலவாறாக கண்டபடி வைது எழுதி வருகின்றன. செத்துப்போன ஜெனரல் டயர் துரையைவிட கொடுமையானவர்கள் நம் நாட்டில் உயிரோடு இருந்து கொண்டு, பிள்ளை குட்டிகள் பெற்றுக்கொண்டு சுகமாய் வாழ்கிறார்கள்.

இந்த டயர் களைப்பற்றி எந்த பத்திரிகை யாவது எழுதுகின்றார்களா? ஒன்றுமேயில்லை. காரணம் என்ன? (நமது பத்திரிகைகளுக்கு பெரும்பாலும் சுயபுத்தி கிடையாது. ஒரு பார்ப்பனப் பத்திரிகை வழி காட்டினால் அதைக் குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டு கங்காதரா மாண்டாயோ? கங்காதரா மாண்டாயோ? என்று கத்த வேண்டியதுதான்).

பாவி டயராவது அவரது வகுப்புப் பெண்மீது கல் போட்டார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி அந்த வீதியில் வயிற்றினால் ஊர்ந்து கொண்டுபோ, மூக்கி னால் உரைத்துக் கொண்டுபோ என்பதான நிபந்தனைகள் போட்டாவது அவர் களுக்கு இஷ்டமான தெருவில் போகும்படி இடம் கொடுத்தார். நமது நாட்டில் இருக்கும் படுபாவி டயர்கள் நாம் ஒரு குற்றமும் செய்யாமல், ஒருவன் மீதும் கல் போடாமல் இருப்பதுடன், அவர் கூட்டத்திற்கும் நாம் நன்றாகச் சோறு போட்டும், பணம் கொடுத்தும் வரும் போதே, அடியோடு தெருவிலே போகக் கூடாது, கிட்டத்திலே வரக் கூடாது என்கிறார்களே,

இதைப்பற்றி யாருக்காவது உரைக்கிறதா, இதனால் நமக்கு அவமானமாக இருக்கிறதே என்று படுகிறதா? எந்தப் பத்திரிகையாவது இம்மாதிரி நடவடிக்கைகள் படுபாவி டயர்கள்தான் என்று எழுதுகிறதா என்று பார்த்தால் இல்லவேயில்லை. பாவி டயர் தன்னுடைய பிறந்த நாட்டிற்காக நன்மை செய்கிறோம் என்கிற எண்ணத்தின் பேரில் கொடுமை செய்தான். நம்முடைய நாட்டுப் படுபாவி டயர்கள் நம்மை தங்கள் நாட்டையும் காட்டிக் கொடுத்து,

தங்கள் நாட்டாரையும் வயிற்றுப் பிழைப்புக்கு மாத்திரம் கொடுமை செய்கிறார்கள். அதோடு நம் நாட்டுப் படுபாவி டயர் கூட்டத்தார் பாவி டயர் செய்த காரியத்தையும் தாங்கிப்பேசி பெரிய பெரிய உத்தியோகமும் பெறுகிறார்கள். அதைப்பற்றியும் பேசுவாரைக் காணோம். எழுதுவாரைக் காணோம். தவிரவும் ஒருவர் செத்துப் போனபிறகு பாவி செத்தான் என்பது அவ் வளவு மனிதத் தன்மையாகாது.

அதிலும், உயிருடன் இருந்துகொண்டு அதைவிட எத்தனையோ மடங்கு அதிகமான கொடுமைகளைச் செய்கிறவர்களை மூடிவைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்படிச் சொல்வது மிகமிக அக்கிரமமானது என்றே சொல்லுவோம்.

- குடிஅரசு - கட்டுரை - 21.08.1927

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவர் காலத்தில் வளர்ச்சி! வளர்ச்சி! வளர்ச்சிதான்!

காஞ்சிபுரம் கலந்துரையாடலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்

காஞ்சிபுரம், அக். 26- தந்தைபெரியாருக்கு தமிழர் தலைவர் கிடைத்ததினால்தான் இப்படிப் பட்ட சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. தமிழர் தலைவர் காலத்தில் எங்கு நோக்கினும் வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி தான் என்று திரா விடர் கழ கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:-

திண்டிவனம் திராவிடர் கழகப்பொதுக் குழுவின் தீர்மானங்களை விளக்கும் கலந் துரையாடல் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் காஞ்சி மாவட்ட செயலாளர் செ.ரா.முகிலன் வரவேற்றுப் பேசினார்.

மாநில மாணவரணி துணைச் செய லாளர் நம்பியூர் மு.சென்னியப்பன் தொடக்க உரையாற்றினார். இதில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து உரையாற்றினார்.

அவரது உரையில்..

தந்தை பெரியாரால் பயனடைந்தவர்களில் குறைந்த பட்சம் ஆயிரம் பேர் இருக்கமாட் டோமா? நாடே பயன்பெற்றிருக்கிறது என்பது வேறு, தந்தை பெரியாரைப்பற்றி ராமசந்திரா குகா எழுதுகையில் இந்தியாவில் 19 சிந்தனை யாளர்களில் தென்னாட்டில் தந்தை பெரியாரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டார். காரணம் ஈடு இணை யற்ற சுய சிந்தனையாளர் தந்தை பெரியார்.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தை விட இப்போதுதான் அதிகம் பேசப்படுகிறார். அவர் காலத்தில் அவர் பேசாத பகுதிகளில்கூட இன்றைக்கு இயக்கம் வளர்ந்தோங்கி நிற்கிறது. இந்தியா எதிர்கொண்டுள்ள இந்துத்துவா பிரச் சினையை எதிர்கொள்ள தந்தை பெரியாரின் கருத்துகள் தான் மிகச்சிறந்த ஆயுதம்.

வடக்கில் உள்ள சமூகநீதி ஆர்வலர்கள் கூட இதனையே வழிமொழிகிறார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பே ராமன் என்பதை அம்பலப்படுத்தினார். இன்று ராமராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்கிறது இந்துத்துவா.

டில்லியில் பெரியார் மய்யத்தை உருவாக்கி வடக்கிலும் பெரியாரின் கருத்துகள் பரவி வரு கின்றன. இந்தியாவில் தோன்றிய சமூக சிந்த னையாளர்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு தந்தை பெரியாருக்கு இருக்கிறது. காரணம், அவர்கள் உருவாக்கிய இயக்கங்கள் இன்று இல்லை.

காரணம் தமிழர் தலைவரைப் போன்ற சீடர்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அத னால் தான் அவர்களின் இயக்கங்கள் இல் லாமல் போயின, நம்முடைய தலைவர் காலத்தில் எங்கு நோக்கினும் வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி தான். பெரியார் காலத்தில் ஒன்றிரண்டு சிறிய கல்வி நிலையங்கள், இன்று அதனை 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பெரிய பல்கலைக் கழகத்தையே உருவாக்கி இருக்கிறார்.

விடுதலை ஏடு நவீன அச்சு இயந்திரத்தைக் கொண்டு பல வண்ணங்களில் வெளிவருகிறது. நாம் எந்தத் திட்டத்தைத் தொடங்கினாலும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு தொடங் குவதில்லை. ஆனால் நாம் தொடங்கிய எத்திட் டமும் கைவிடப்பட்டதில்லை.

அது போலவே எதிர்வரும் டிசம்பர் 2 இல் தமிழர் தலைவர் பிறந்த நாளில் 1000 பவுன் வழங்கியே தீருவோம் முதற்கட்டமாக தமிழர் தலைவரின் தொலை நோக்குத் திட்டம் வெற்றிபெறும். அய்யாவின் கொள்கை உலகையே ஆளும். இவ்வாறு பேசினார்.

தொடக்கத்தில் கழகத்தோழர்கள் தந்தை பெரியாரின் 95 அடி உயர வெண்கலச்சிலையை அமைக்க பெரிதும் ஆர்வத்துடன் போட்டி போட் டுக் கொண்டு நிதிஅளிப்பதாக அறிவித்தனர்.

கழக தோழர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டதை நேரடியாகக் காண முடிந்தது. தமிழர் தலைவருக்கு பெரிதும் நன்றி சொல்ல வேண்டும் இவ்வாய்ப்பை அளித்தமைக்கு என்று கழகத் தோழர்கள் உணர்ச்சிப் பொங்கக் கூறினர்.

தமிழ் ஓவியா said...

கூடாதென்று...

தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியலில் ஒரு கொள்கையாய் உள்ளதே தவிர, முதலாளி இவ்வளவு இலாபத்திற்குமேல் சம்பாதிக்கக் கூடாதென்று யாராவது திட்டம் போடுகிறார்களா?

(விடுதலை, 26.7.1950

தமிழ் ஓவியா said...



இராமன்தான் மிகப்பெரிய பயங்கரவாதி
மக்களவையில் தொல். திருமாவளவன் உரை

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே நேற்றும் இன்றும் லிபரான் அறிக்கை தொடர்பாக நடைபெற்றுக்-கொண்டிருக்கிற விவாதங்களை நாடே உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்-கிறது. இந்த விவாதங்களுக்குப்பின்னர் ,அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் நடுநிலையான அரசியல் ஆர்வலர்கள் மிகுந்த ஆவ-லுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்-கிறார்கள் வழக்கமான கமிஷன் அறிக்கைகளைப் போல இதுவும் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டு-விடுமோ என்கிற அய்யமும் பொது மக்களிடையே உள்ளது. எனவே அரசு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்-பட்டுள்ள, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்து-கிறேன்.

ஊருக்குத் தெரிந்த உலகத்திற்கே தெரிந்த உண்மையைத்தான் 17 ஆண்டுகளுக்குப்பிறகு ,லிபரான் இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார் .இதில் புதிய உண்மைகளையோ அதிர்ச்-சியடையக்கூடிய புதிய சதிகளையோ கூறிவிடவில்லை இந்த அறிக்கையில் எமக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. எனினும் துணிவாக சில உண்மைகளை லிபரான் பதிவு செய்துள்ளார்.அதற்காக அவரைப் பாராட்டுகிறேன் .குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக் காரண-மானவர்கள் என்றும் ஆர்எஸ்எஸ், சிவசேனா, பாரதிய ஜனதா ஆகிய அமைப்புகளைச்சார்ந்தவர்களும் திட்டமிட்டே மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனனர் என்றும் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் லிபரான் கூறியுள்ளார்.

இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகை யிலாவது ,இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் இது முஸ்லிம்களுக்கு காங்கிரசு கட்சி துரோகமிழைத்ததாக அமையும், இந்த மண்ணில் ராமனின் பெயரால், பாபர் மசூதியை மட்டுமல்ல பௌத்த ,சமண மடங்களையும் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்துத் தள்ளி ,அங்கே இந்து கோயில்களை எழுப்பி யுள்ளனர் .ராமனின்பெயரால் சிவபக் தனான இராவணனையே அழித்திருக் கிறார்கள் என்பதை இராமாயணம் என்கிற புராணத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இராமன் தான் மிகப்பெரிய பயங்கரவாதி என்று தெரிய வருகிறது.

அந்த வகையில் இராமனின் வாரிசுகளாகத்தங்களைச் சொல்-லிக்கொள்ளும் வாஜ்பேயி ,அத்வானி, ஜோஷி போன்ற இந்துத்துவப் பயங்கரவாதிகள் அனைவரையும் அரசு உடனே கைதுசெய்ய வேண்டும்.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுர கட்டடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது, பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா? அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பேயி, அத்வானி போன்றவர்களை போலி மிதவாதிகள் என்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகமாக கூறுகிறார்.

எனவேஇந்துத்துவப்பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மத-வெறியர்களுக்கு இதன்மூலம் ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன். இவ்வாறு கூறி-னார்..

தமிழ் ஓவியா said...

தந்தைபெரியார்தம் தகுதிமிகு வழித்தோன்றல்!

கலைமாமணி அ. மறைமலையான்

தந்தை பெரியார்தம் தகுதிமிகு வழித்தோன்றல்
சிந்தை ஒளிவீச்சுச் செயல்தலைவர் வீரமணி!
பத்தாம் அகவைமுதல் பகுத்தறிவுச் சொற்பொழிவால்
புத்தம் புதுக்கருத்து பொழிகின்ற தேன்மழையே!

பீரங்கிப் பேச்சாளர் டார்ப்பிடோ/ சனார்த்தனமே
வீரமணி தமைமுதலில் பெரியார்முன் பேச வைத்தார்
ஆசான்ஆ திராவிடமணி அளித்ததூய தமிழ்ப்பெயரால்
வீசுபுகழ் முடிபுனைந்தார் வீரமணி மாணவரே!

பேரறிஞர் அண்ணாவே ஞானசம் பந்தர்என
வீரமணி சிறுவரையே வியந்தந்நாள் போற்றினரே!
இந்தியினை எதிர்த்தேதான் இளைஞரேறு வீரமணி
செந்தமிழின் காவலராய்ச் சிறைச்சாலை ஏகினரே!

சாதியெனும் ஆரியரின் சதிநாகப் பல்லுடைத்தே
வேதஇந்து மதம்வீழ்த்தும் வெடிகுண்டே வீரமணி!
இடஒதுக்கீட் டுரிமையினால் ஏற்றமுற திராவிடரே!
தடவைபல சிறைசென்ற வேங்கையே வீரமணி!

விடுதலை நாளிதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார்;
இடியெனவே ஆரியரை எழுத்தாலே நடுங்கவைத்தார்!
செயலாக்க வல்லுநராய்த் திராவிடர் கழகத்தை
உயிராக மதித்ததற்கே உழைக்கின்ற மாத்தலைவர்!

உலகமெங்கும் பெரியார்பேர் ஓங்கிடவே அவர்பெயரால்
பொலிவுமிகு மய்யங்கள் பூக்கவைத்த சிற்பிஇவர்!
ஆழ்கடல்போல் உலகத்தின் அறிவுநூல்கள் பலபடித்தே
வாழ்வியல் சிந்தனைகள் வடித்துவரும் வழிகாட்டி!

எழுத்தாற்றல் பேச்சாற்றல் செயலாற்றல் மூன்றிலுமே
பழுத்தபடைத் தளபதியாய்ப் பார்போற்றப் பணிபுரிவார்!
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமதை
உருவாக்கி வேந்தர்என ஓங்கிநின்றார் வீரமணி!

ஆருயிர் இளவல்என முதலமைச்சர் கலைஞருமே
பேரன்பால் அழைக்கும்உயர் பெருமையுற்றார் வீரமணி!
எழுபத்தே ழாம் அகவை எட்டுகின்றார்; இளைஞரைப்போல்
எழில்தோற்றம் தரும்தலைவர் நூறாண்டு வாழியவே!