tag:blogger.com,1999:blog-1474608369333206681.post9060036013905213850..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: இந்து முஸ்லீம் பற்றி பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-76664280242920643292013-10-27T06:09:01.149+05:302013-10-27T06:09:01.149+05:30தந்தைபெரியார்தம் தகுதிமிகு வழித்தோன்றல்!
கலைமாமணி...தந்தைபெரியார்தம் தகுதிமிகு வழித்தோன்றல்!<br /><br />கலைமாமணி அ. மறைமலையான்<br /><br />தந்தை பெரியார்தம் தகுதிமிகு வழித்தோன்றல்<br />சிந்தை ஒளிவீச்சுச் செயல்தலைவர் வீரமணி!<br />பத்தாம் அகவைமுதல் பகுத்தறிவுச் சொற்பொழிவால்<br />புத்தம் புதுக்கருத்து பொழிகின்ற தேன்மழையே!<br /><br />பீரங்கிப் பேச்சாளர் டார்ப்பிடோ/ சனார்த்தனமே<br />வீரமணி தமைமுதலில் பெரியார்முன் பேச வைத்தார்<br />ஆசான்ஆ திராவிடமணி அளித்ததூய தமிழ்ப்பெயரால்<br />வீசுபுகழ் முடிபுனைந்தார் வீரமணி மாணவரே!<br /><br />பேரறிஞர் அண்ணாவே ஞானசம் பந்தர்என<br />வீரமணி சிறுவரையே வியந்தந்நாள் போற்றினரே!<br />இந்தியினை எதிர்த்தேதான் இளைஞரேறு வீரமணி<br />செந்தமிழின் காவலராய்ச் சிறைச்சாலை ஏகினரே!<br /><br />சாதியெனும் ஆரியரின் சதிநாகப் பல்லுடைத்தே<br />வேதஇந்து மதம்வீழ்த்தும் வெடிகுண்டே வீரமணி!<br />இடஒதுக்கீட் டுரிமையினால் ஏற்றமுற திராவிடரே!<br />தடவைபல சிறைசென்ற வேங்கையே வீரமணி!<br /><br />விடுதலை நாளிதழின் ஆசிரியர் பொறுப்பேற்றார்;<br />இடியெனவே ஆரியரை எழுத்தாலே நடுங்கவைத்தார்!<br />செயலாக்க வல்லுநராய்த் திராவிடர் கழகத்தை<br />உயிராக மதித்ததற்கே உழைக்கின்ற மாத்தலைவர்!<br /><br />உலகமெங்கும் பெரியார்பேர் ஓங்கிடவே அவர்பெயரால்<br />பொலிவுமிகு மய்யங்கள் பூக்கவைத்த சிற்பிஇவர்!<br />ஆழ்கடல்போல் உலகத்தின் அறிவுநூல்கள் பலபடித்தே<br />வாழ்வியல் சிந்தனைகள் வடித்துவரும் வழிகாட்டி!<br /><br />எழுத்தாற்றல் பேச்சாற்றல் செயலாற்றல் மூன்றிலுமே<br />பழுத்தபடைத் தளபதியாய்ப் பார்போற்றப் பணிபுரிவார்!<br />பெரியார் மணியம்மை பல்கலைக் கழகமதை<br />உருவாக்கி வேந்தர்என ஓங்கிநின்றார் வீரமணி!<br /><br />ஆருயிர் இளவல்என முதலமைச்சர் கலைஞருமே<br />பேரன்பால் அழைக்கும்உயர் பெருமையுற்றார் வீரமணி!<br />எழுபத்தே ழாம் அகவை எட்டுகின்றார்; இளைஞரைப்போல்<br />எழில்தோற்றம் தரும்தலைவர் நூறாண்டு வாழியவே!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21410736052867170982013-10-27T06:04:21.745+05:302013-10-27T06:04:21.745+05:30
இராமன்தான் மிகப்பெரிய பயங்கரவாதி
மக்களவையில் தொல...<br /><br />இராமன்தான் மிகப்பெரிய பயங்கரவாதி<br />மக்களவையில் தொல். திருமாவளவன் உரை<br /><br />மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே நேற்றும் இன்றும் லிபரான் அறிக்கை தொடர்பாக நடைபெற்றுக்-கொண்டிருக்கிற விவாதங்களை நாடே உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்-கிறது. இந்த விவாதங்களுக்குப்பின்னர் ,அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் நடுநிலையான அரசியல் ஆர்வலர்கள் மிகுந்த ஆவ-லுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்-கிறார்கள் வழக்கமான கமிஷன் அறிக்கைகளைப் போல இதுவும் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டு-விடுமோ என்கிற அய்யமும் பொது மக்களிடையே உள்ளது. எனவே அரசு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்-பட்டுள்ள, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்து-கிறேன்.<br /><br />ஊருக்குத் தெரிந்த உலகத்திற்கே தெரிந்த உண்மையைத்தான் 17 ஆண்டுகளுக்குப்பிறகு ,லிபரான் இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார் .இதில் புதிய உண்மைகளையோ அதிர்ச்-சியடையக்கூடிய புதிய சதிகளையோ கூறிவிடவில்லை இந்த அறிக்கையில் எமக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. எனினும் துணிவாக சில உண்மைகளை லிபரான் பதிவு செய்துள்ளார்.அதற்காக அவரைப் பாராட்டுகிறேன் .குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக் காரண-மானவர்கள் என்றும் ஆர்எஸ்எஸ், சிவசேனா, பாரதிய ஜனதா ஆகிய அமைப்புகளைச்சார்ந்தவர்களும் திட்டமிட்டே மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனனர் என்றும் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் லிபரான் கூறியுள்ளார்.<br /><br />இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகை யிலாவது ,இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் இது முஸ்லிம்களுக்கு காங்கிரசு கட்சி துரோகமிழைத்ததாக அமையும், இந்த மண்ணில் ராமனின் பெயரால், பாபர் மசூதியை மட்டுமல்ல பௌத்த ,சமண மடங்களையும் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்துத் தள்ளி ,அங்கே இந்து கோயில்களை எழுப்பி யுள்ளனர் .ராமனின்பெயரால் சிவபக் தனான இராவணனையே அழித்திருக் கிறார்கள் என்பதை இராமாயணம் என்கிற புராணத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இராமன் தான் மிகப்பெரிய பயங்கரவாதி என்று தெரிய வருகிறது.<br /><br />அந்த வகையில் இராமனின் வாரிசுகளாகத்தங்களைச் சொல்-லிக்கொள்ளும் வாஜ்பேயி ,அத்வானி, ஜோஷி போன்ற இந்துத்துவப் பயங்கரவாதிகள் அனைவரையும் அரசு உடனே கைதுசெய்ய வேண்டும்.<br /><br />அமெரிக்காவில் இரட்டைக்கோபுர கட்டடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது, பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா? அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பேயி, அத்வானி போன்றவர்களை போலி மிதவாதிகள் என்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகமாக கூறுகிறார்.<br /><br />எனவேஇந்துத்துவப்பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மத-வெறியர்களுக்கு இதன்மூலம் ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன். இவ்வாறு கூறி-னார்..<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89404691718080209892013-10-27T06:02:59.496+05:302013-10-27T06:02:59.496+05:30கூடாதென்று...
தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது...கூடாதென்று...<br /><br />தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியலில் ஒரு கொள்கையாய் உள்ளதே தவிர, முதலாளி இவ்வளவு இலாபத்திற்குமேல் சம்பாதிக்கக் கூடாதென்று யாராவது திட்டம் போடுகிறார்களா?<br /><br />(விடுதலை, 26.7.1950தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-10865937204537215832013-10-27T05:58:55.944+05:302013-10-27T05:58:55.944+05:30
தமிழர் தலைவர் காலத்தில் வளர்ச்சி! வளர்ச்சி! வளர்ச...<br />தமிழர் தலைவர் காலத்தில் வளர்ச்சி! வளர்ச்சி! வளர்ச்சிதான்!<br /><br />காஞ்சிபுரம் கலந்துரையாடலில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்<br /><br />காஞ்சிபுரம், அக். 26- தந்தைபெரியாருக்கு தமிழர் தலைவர் கிடைத்ததினால்தான் இப்படிப் பட்ட சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. தமிழர் தலைவர் காலத்தில் எங்கு நோக்கினும் வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி தான் என்று திரா விடர் கழ கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:-<br /><br />திண்டிவனம் திராவிடர் கழகப்பொதுக் குழுவின் தீர்மானங்களை விளக்கும் கலந் துரையாடல் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடை பெற்றது. இதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் காஞ்சி மாவட்ட செயலாளர் செ.ரா.முகிலன் வரவேற்றுப் பேசினார்.<br /><br />மாநில மாணவரணி துணைச் செய லாளர் நம்பியூர் மு.சென்னியப்பன் தொடக்க உரையாற்றினார். இதில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து உரையாற்றினார்.<br /><br />அவரது உரையில்..<br /><br />தந்தை பெரியாரால் பயனடைந்தவர்களில் குறைந்த பட்சம் ஆயிரம் பேர் இருக்கமாட் டோமா? நாடே பயன்பெற்றிருக்கிறது என்பது வேறு, தந்தை பெரியாரைப்பற்றி ராமசந்திரா குகா எழுதுகையில் இந்தியாவில் 19 சிந்தனை யாளர்களில் தென்னாட்டில் தந்தை பெரியாரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டார். காரணம் ஈடு இணை யற்ற சுய சிந்தனையாளர் தந்தை பெரியார்.<br /><br />தந்தை பெரியார் வாழ்ந்த காலத்தை விட இப்போதுதான் அதிகம் பேசப்படுகிறார். அவர் காலத்தில் அவர் பேசாத பகுதிகளில்கூட இன்றைக்கு இயக்கம் வளர்ந்தோங்கி நிற்கிறது. இந்தியா எதிர்கொண்டுள்ள இந்துத்துவா பிரச் சினையை எதிர்கொள்ள தந்தை பெரியாரின் கருத்துகள் தான் மிகச்சிறந்த ஆயுதம்.<br /><br />வடக்கில் உள்ள சமூகநீதி ஆர்வலர்கள் கூட இதனையே வழிமொழிகிறார்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பே ராமன் என்பதை அம்பலப்படுத்தினார். இன்று ராமராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என்கிறது இந்துத்துவா.<br /><br />டில்லியில் பெரியார் மய்யத்தை உருவாக்கி வடக்கிலும் பெரியாரின் கருத்துகள் பரவி வரு கின்றன. இந்தியாவில் தோன்றிய சமூக சிந்த னையாளர்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு தந்தை பெரியாருக்கு இருக்கிறது. காரணம், அவர்கள் உருவாக்கிய இயக்கங்கள் இன்று இல்லை.<br /><br />காரணம் தமிழர் தலைவரைப் போன்ற சீடர்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அத னால் தான் அவர்களின் இயக்கங்கள் இல் லாமல் போயின, நம்முடைய தலைவர் காலத்தில் எங்கு நோக்கினும் வளர்ச்சி, வளர்ச்சி, வளர்ச்சி தான். பெரியார் காலத்தில் ஒன்றிரண்டு சிறிய கல்வி நிலையங்கள், இன்று அதனை 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் பெரிய பல்கலைக் கழகத்தையே உருவாக்கி இருக்கிறார்.<br /><br />விடுதலை ஏடு நவீன அச்சு இயந்திரத்தைக் கொண்டு பல வண்ணங்களில் வெளிவருகிறது. நாம் எந்தத் திட்டத்தைத் தொடங்கினாலும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு தொடங் குவதில்லை. ஆனால் நாம் தொடங்கிய எத்திட் டமும் கைவிடப்பட்டதில்லை.<br /><br />அது போலவே எதிர்வரும் டிசம்பர் 2 இல் தமிழர் தலைவர் பிறந்த நாளில் 1000 பவுன் வழங்கியே தீருவோம் முதற்கட்டமாக தமிழர் தலைவரின் தொலை நோக்குத் திட்டம் வெற்றிபெறும். அய்யாவின் கொள்கை உலகையே ஆளும். இவ்வாறு பேசினார்.<br /><br />தொடக்கத்தில் கழகத்தோழர்கள் தந்தை பெரியாரின் 95 அடி உயர வெண்கலச்சிலையை அமைக்க பெரிதும் ஆர்வத்துடன் போட்டி போட் டுக் கொண்டு நிதிஅளிப்பதாக அறிவித்தனர்.<br /><br />கழக தோழர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டதை நேரடியாகக் காண முடிந்தது. தமிழர் தலைவருக்கு பெரிதும் நன்றி சொல்ல வேண்டும் இவ்வாய்ப்பை அளித்தமைக்கு என்று கழகத் தோழர்கள் உணர்ச்சிப் பொங்கக் கூறினர்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-28352512157627359232013-10-27T05:56:56.547+05:302013-10-27T05:56:56.547+05:30
பாவிடயர்
பஞ்சாபில் நடந்த படுகொலைக்கு காரணஸ்தர்க...<br />பாவிடயர்<br /><br /><br />பஞ்சாபில் நடந்த படுகொலைக்கு காரணஸ்தர்களில் ஒருவரான ஜெனரல் டயர் துரை செத்துப்போனதற்கு அனேகப் பத்திரிகைகள் சந்தோஷம் கொண்டாடுவதன் மூலமாய் டயரை பலவாறாக கண்டபடி வைது எழுதி வருகின்றன. செத்துப்போன ஜெனரல் டயர் துரையைவிட கொடுமையானவர்கள் நம் நாட்டில் உயிரோடு இருந்து கொண்டு, பிள்ளை குட்டிகள் பெற்றுக்கொண்டு சுகமாய் வாழ்கிறார்கள்.<br /><br />இந்த டயர் களைப்பற்றி எந்த பத்திரிகை யாவது எழுதுகின்றார்களா? ஒன்றுமேயில்லை. காரணம் என்ன? (நமது பத்திரிகைகளுக்கு பெரும்பாலும் சுயபுத்தி கிடையாது. ஒரு பார்ப்பனப் பத்திரிகை வழி காட்டினால் அதைக் குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டு கங்காதரா மாண்டாயோ? கங்காதரா மாண்டாயோ? என்று கத்த வேண்டியதுதான்).<br /><br />பாவி டயராவது அவரது வகுப்புப் பெண்மீது கல் போட்டார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி அந்த வீதியில் வயிற்றினால் ஊர்ந்து கொண்டுபோ, மூக்கி னால் உரைத்துக் கொண்டுபோ என்பதான நிபந்தனைகள் போட்டாவது அவர் களுக்கு இஷ்டமான தெருவில் போகும்படி இடம் கொடுத்தார். நமது நாட்டில் இருக்கும் படுபாவி டயர்கள் நாம் ஒரு குற்றமும் செய்யாமல், ஒருவன் மீதும் கல் போடாமல் இருப்பதுடன், அவர் கூட்டத்திற்கும் நாம் நன்றாகச் சோறு போட்டும், பணம் கொடுத்தும் வரும் போதே, அடியோடு தெருவிலே போகக் கூடாது, கிட்டத்திலே வரக் கூடாது என்கிறார்களே,<br /><br />இதைப்பற்றி யாருக்காவது உரைக்கிறதா, இதனால் நமக்கு அவமானமாக இருக்கிறதே என்று படுகிறதா? எந்தப் பத்திரிகையாவது இம்மாதிரி நடவடிக்கைகள் படுபாவி டயர்கள்தான் என்று எழுதுகிறதா என்று பார்த்தால் இல்லவேயில்லை. பாவி டயர் தன்னுடைய பிறந்த நாட்டிற்காக நன்மை செய்கிறோம் என்கிற எண்ணத்தின் பேரில் கொடுமை செய்தான். நம்முடைய நாட்டுப் படுபாவி டயர்கள் நம்மை தங்கள் நாட்டையும் காட்டிக் கொடுத்து,<br /><br />தங்கள் நாட்டாரையும் வயிற்றுப் பிழைப்புக்கு மாத்திரம் கொடுமை செய்கிறார்கள். அதோடு நம் நாட்டுப் படுபாவி டயர் கூட்டத்தார் பாவி டயர் செய்த காரியத்தையும் தாங்கிப்பேசி பெரிய பெரிய உத்தியோகமும் பெறுகிறார்கள். அதைப்பற்றியும் பேசுவாரைக் காணோம். எழுதுவாரைக் காணோம். தவிரவும் ஒருவர் செத்துப் போனபிறகு பாவி செத்தான் என்பது அவ் வளவு மனிதத் தன்மையாகாது.<br /><br />அதிலும், உயிருடன் இருந்துகொண்டு அதைவிட எத்தனையோ மடங்கு அதிகமான கொடுமைகளைச் செய்கிறவர்களை மூடிவைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்படிச் சொல்வது மிகமிக அக்கிரமமானது என்றே சொல்லுவோம்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 21.08.1927<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-61153753310266414122013-10-27T05:56:17.353+05:302013-10-27T05:56:17.353+05:30
பார்ப்பனரல்லாதவர்க்கு
நீங்களெல்லோரும் சூத்திரர்...<br />பார்ப்பனரல்லாதவர்க்கு<br /><br /><br />நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப் பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர் ஆட்சேபித்து வருவதும் உங்களுக்குத் தெரியும்.<br /><br />தஞ்சை ஜில்லா துவார் என்ற கிராமத்தில் பார்ப்பனர்கள் ஒன்றுகூடி அங்கு கூடின சபையில், நீங்கள் எல்லோரும் சூத்திரர்கள் என்றே தீர்மானமும் செய்துவிட்டார்கள். இத்தீர்மானம் ராஜ்யவாதிகளாக நடிக்கும் பார்ப்பனர்களுக்கும், திருப்தியாக சம்மதந் தான் என்பதற்கு உங்களால் பிழைத்து வரும் சுதேச மித்திரன் இந்து முதலிய பார்ப்பனப் பத்திரிகைகள் கண்டிக்காமல் இருப்பதே போதுமான சாட்சியாகும்.<br /><br />ஆராய்ச்சிக் குறைவினால் உண்டான குருட்டுத் தனமான மூடக் கொள்கைகளின் பாசத்தால், கட்டுப் பட்டிருக்கும் உங்களை உள்ளே ரம்பப் பொடியை நிறைத்து வெளியே பொன்முலாம் பூசின நயவஞ்சகப் பேச்சால் இதுவரை ஏமாற்றி வந்த தைரியமும் குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்பு போன்றும் கோழை களான உங்களில் சிலர் அப்பார்ப்பனர்களுடன் சேர்ந்திருக்கும் தைரியமும், உங்களின் இழிவை நிலைநிறுத்தக் காரணமாய் இருந்தது.<br /><br />நான்கு ஜாதியான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்கிற நான்கு பதத்திற்கும் அவர்களின் இந்து சாஸ்திரத்தில் அர்த்தமெழுதப்பட்டிருக்கிறது. அதில் சூத்திரன் என்ற பதத்தின் அர்த்தம் அநேகருக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந் திருக்கு மென்று பார்ப்பனர்களுக்குத் தெரிந்திருந்தால் இத்தனை தைரியமாக நீங்களெல்லாம் சூத்திரர்கள் என்று தீர்மானம் செய் திருக்கமாட்டார்கள்.<br /><br />சூத்திரன் என்னும் பதத்திற்குக் கிலேசமுடையவன், துக்கி, வேசிமகன், ஆசார மில்லாதவன், தேஜசில் லாதான், ஒழுக்க மில்லாதவன், ஏவற்றொழில் செய் வோன், சுத்தி இல்லாதவன், கண்டதைப் புசிப்போன், அடிமை என்று இதே இந்து சாஸ்திரத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்த அர்த்தத்தையுடையவர்கள் நீங்களானால் எங்களுக்குப் பார்ப்பாரிடம் இனிச் சண்டையேயில்லை.<br /><br />இந்த இழிவான பட்டத்தை ஏற்றுக் கொள்ள உங்களுக்கு இஷ்டமில்லை என்பதுண்மை யானால் உங்களின் வைதீகச் சடங்குகளைப் பூர்வீக உங்கள் வழக்கத்திற்குக் கொண்டு வந்துப் பார்ப்பாரப் புரோகிதர்களை நீக்கி விடுங்கள்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 03.07.1927<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31661900526576437432013-10-27T05:55:38.890+05:302013-10-27T05:55:38.890+05:30
காங்கிரஸ் தலைவர் பதவி விநியோகம்
இவ்வருடக் கோடிய...<br />காங்கிரஸ் தலைவர் பதவி விநியோகம்<br /><br /><br />இவ்வருடக் கோடியில் சென்னையில் கூடும் காங்கிரஸ் என்னும் கூட்டத்திற்கு தலைவராக நமது பார்ப்பனர்கள் டாக்டர் அன்சாரி அவர்களைத் தெரிந்தெடுத்திருக் கிறார்கள் என அறிகிறோம்.<br /><br />சென்ற வருடக் காங்கிரசுக்குத் தெரிந்தெடுக்கப்பட்ட ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் அப்பதவி பெறுவதற்குச் செலவு செய்தது போல் பணம் கொடுக்கா விட்டாலும், டாக்டர் அன்சாரி அவர்களிடம் அதற்கும் மேற்பட்டதான பெரிய மதிப்புள்ள விலை பெற்றுக் கொண்ட பிறகு தான் நமது பார்ப்பன தேச பக்தர்கள் என்போர்கள் டாக்ட ரைத் தெரிந்தெடுத்திருக்கிறார்கள்.<br /><br />அந்த விலை எது என்றால் அது தான் மகமதியர் களுக்குத் தனித்தொகுதி வேண்டியதில்லை என்று சொன்னதாகும். டாக்டர் அன்சாரி அவர்கள் மகமதிய சமூகத்திற்காக ஒப்புக்கொண்டதாகச் சொல் வதை மற்ற மகமதியர்கள் ஒப்புக் கொள்ளுகிறார்களா இல்லையா என்பதைப்பற்றி நமது பார்ப்பனர்களுக்கு அவசிய மில்லை. எப்படியாவது அவர்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ள ஒரு சந்து கிடைத்தால் போதும்.<br /><br />இப்போது ஸ்ரீமான்கள் கந்தசாமி செட்டியாரையும், முத்துரங்க முதலியாரையும், குப்புசாமி முதலியாரையும் பிடித்துக் கொண்டு அவர்களையே பார்ப்பனரல்லாதார் பிரதிநிதிகள் என்பதாக ஊர் ஊராய் கூட்டிக் கொண்டு போய் காட்டி எப்படித் தங்கள் காரியத்தைச் சாதிக் கிறார்களோ, அது போல் டாக்டர் அன்சாரி அவர்கள் மகமதியர்களுக்குத் தனித்தொகுதி வேண்டாம் என்றால் அதுவே மகமதிய சமூக பிரதிநிதித்துவம் என்பதாகச் சொல்லி வரப் போகும் கமிஷனில் சரிப்படுத்திக் கொள்ளலாம் என்கிற எண்ணத்தின் பேரிலேயே இந்தப் பதவி கொடுத்திருக்கிறார்கள்.<br /><br />பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு விரோதமாய்ப் பேசினதினாலும், பார்ப்பன ரல்லாதார் சமுகத்தை வைததினாலுமே ஸ்ரீமான் முத்துரங்க முதலியாருக்குச் சட்டசபை வேலை சம்பாதித்துக் கொடுத்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு உப தலைவராக் கினதும், வரப்போகும் காங்கிரசுக்குத் தற்கால வரவேற்பு கமிட்டி தலைவராக்கினதும் யாவரும் அறிவார்கள். டாக்டர் அன்சாரி அவர்களை காங்கிரஸ் தலைமையில் இருந்து கொண்டு மகமதிய சமூகத்திற்கு தனித்தொகுதி வேண்டியதில்லை என்று சொல்லும்படி செய்தாலும்கூட,<br /><br />நமது மகமதிய சகோதரர்கள் ஏமாந்து விடமாட்டார்கள் என்பதே நமது உறுதி. இப்பொழு திருந்தே அதற்கு வேண்டிய வேலைகள் செய்து கொண்டு வருவதையும் நாம் அறிவோம். ஆனாலும், இப்பதவிகளைப் பார்ப்பனர்கள் தங்களுக்கு எப்படி அனுகூலப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதற்கே இதைக் குறிப்பிட்டோம்.<br /><br />- குடிஅரசு - கட்டுரை - 24.07.1927<br />காங்கிரஸ் தலைவர் பதவி விநியோகம்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-54378459072919872822013-10-26T22:21:49.254+05:302013-10-26T22:21:49.254+05:30
நீதிப் போதனையா?
விடுதலை வெளியூர் 15.10.2013 இதழ...<br />நீதிப் போதனையா?<br /><br /><br />விடுதலை வெளியூர் 15.10.2013 இதழில் நீதிப் போதனையா? என்ற அற்புதமான தலையங்கத்தைப் பலமுறை படித்துப் பார்த்து மகிழ்வுடன் இம்மடலைத் தீட்டுகிறேன்.<br />மாணவர்களை மட்டும் தனியே பிரித்துக் குற்றப்பத்திரிகை படிப்பதில் பயனில்லை. ஒட்டு மொத்த சமூகத்தின் சுற்றுச் சூழலேக் கூட ஒரு வகையில் பொறுப்புத்தான் என்று கேட்டதோடு நிற்காமல்<br /><br />ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள்?<br /><br />வழக்குரைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்?<br /><br />மருத்துவர்கள் எப்படி இருக்கிறார்கள்?<br /><br />அரசியல்வாதிகள் எப்படி இருக்கிறார்கள்?<br /><br />ஏன் சில நீதிபதிகளே கூட எப்படி நடந்துக்கொள்கிறார்கள்?. மதவாதிகள் எப்படி நடந்து கொள்கிறார்கள்? காவிவேடதாரிகள் - சாமி யார்கள் தேவநாதன், சங்கராச்சாரியார் எப்படியெல்லாம் நடந்திருக் கிறார்கள் என்று கேட்பதோடு நிற்காமல் இன்னும் மேலே போய்<br /><br />கற்பழிக்காத கடவுள் உண்டா?<br /><br />சண்டை செய்யாத கடவுள் உண்டா?<br /><br />திருமங்கை ஆழ்வாரே திருடியவர்தானே. என்றெல்லாம் ஆதங்கத்தைக் கொட்டி தீர்த்து - புராணப் புளுகுகளைப் புகட்டும் பாடத்திட்டம் இருக்கும்வரை குறுக்கே போய் சேறு பூசிக்கொள்ள வேண்டிதான் இருக்கும் என்று சாட்டையடி கொடுத்துள்ளீர்கள்.<br /><br />1946-ஆம் ஆண்டு முதல் விடுதலையோடு தொடர்பு கொண்டவன் என்ற முறையிலேயே ஆண்டு தவறாது தசரா தீபாவளி சமயங்களில் புராணக் குப்பைக் கதைகளை வெளியிட்டு தமிழ் சமுதாயத்தைக் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கி வருவது மேலும் இன்றைய முதல்வரின் அறிக்கையும் - அண்ணா அவர்கள் கூறியது பற்றிய (திராவிடநாடு 26.10.1947) செய்தியையும் எடுத்துக்காட்டி வெளியிட்டுள்ள விடுதலையின் பங்கு மகத்தானது.<br /><br />அறிஞர் அண்ணா அவர்கள் எத்தகு மேற்கோளுடன் சாமான்யரும் விளங்கிக் கொள்ளும்படியாக எடுத்தியம்பியுள்ள பாங்கு இன்றைய மாணவர், இளைஞர் சமூகம் அறியாத ஒன்று அந்தப்பணியை விடுதலை நிறைவாக அவ்வப்போது செய்தே வருகிறது.<br /><br />யான் இதைப்படித்த பின் என் இனிய நண்பர் - நாகரசம்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் உடன் பிறப்பு க.சின்னகாடி அவர்களிடம் (முரசொலி இதழின் ஆயுள் சந்தாதாரர்) கொடுத்து படிக்கச் செய்தேன்.<br /><br />அவர் அந்த விடுதலை செய்தியை படித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு நூறு (ஜெராக்ஸ்) நகல் எடுத்து அவரே முன்னின்று மாணவர்கள். இளைஞர்களுக்கு வழங்கி மேலும் பகுத்தறிவுக் கருத்துக்களை விளக்கி உள்ளார். இதற்கு எங்கள் எல்லா ஊரிலும் நிகழ்தல் நலம் பயக்கும் என நம்புகிறேன் என்றும் பகுத்தறிவு கருத்துக்கு நிச்சயம் வரவேற்பு இருந்தே தீரும் என்பதையும் உணர்ந்தேன்.<br /><br />- பொற்கோவன், வேலம்பட்டி<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-68059066681176320242013-10-26T22:21:11.616+05:302013-10-26T22:21:11.616+05:30
இருவகை துண்டறிக்கைகள்
தோழர்களே, தலைமைக் கழகத்தி...<br />இருவகை துண்டறிக்கைகள்<br /><br /><br />தோழர்களே, தலைமைக் கழகத்தில் இரு வகைத் துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.<br /><br />விருத்தாசலத்தில், திராவிடர் கழகம் நடத்திய கடலூர் மண்டல மாணவர் கழக மாநாட்டின்போது, மதவெறியர்களும், ஜாதி வெறியர்களும் தமிழர் தலைவர்மீது மேற்கொண்ட வன்முறை முயற்சி பற்றியது ஒன்று.<br /><br />தமிழ்நாட்டின் தலைவர்கள் கண்டன அறிக்கை களை வெளியிட்ட பின்பும், தமிழ்நாடு தழுவிய அளவில், திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டனக் கூட்டங்கள் நடத்திய சூழ்நிலையில் இரண்டு பேர்களை மட்டும் காவல்துறை கைது செய்தது.<br /><br />ஒருவர் பிஜேபிகாரர், இன்னொருவர் இந்து முன்னணிக்காரர். மீதி 28 பேர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.<br /><br />காவல்துறையின் இத்தகு ஒரு சார்பான போக்குதான் நாட்டில் அன்றாடம் குற்றங்கள் பெருகி வழிந்து ஓடுவதற்கு முக்கிய காரணமாகும்.<br /><br />தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் நாட்டில் குடிமக்களுக்குப் பாதுகாப்பு எந்த கதியில் இருக்கும்?<br /><br />நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுக் குட்டிச் சுவராய்ப் போயிற்று என்பதை அதே விருத்தாசலம் மாநாட்டுத் தீர்மானமும் சுட்டிக் காட்டியதை, இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவதும், இடித்துக் காட்டுவதும் பொருத்தமாகும்.<br /><br />இரண்டாவது துண்டறிக்கை - தீபாவளி மூடத்தனத்தை விளக்கி பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டும் துண்டறிக்கையாகும்.<br /><br />தீபாவளிபற்றிக் கூறப்படும் நரகாசுரன் கதை அறிவுக்குப் பொருத்தமற்றது என்பது ஒருபுறம் இருந்தாலும் ஆரியப் பார்ப்பனர்கள், திராவிடர்களை, அரக்கர்கள் என்றும், அசுரர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் இழிவுபடுத்திக் கொன்றொழித்த தத்துவத்தை உள்ளடக்கிக் கொண்டதாகும்.<br /><br />இதை தந்தை பெரியாரும், அவர் வழி வந்த திராவிடர் கழகத்தவர்களும் கூறுகின்றார்கள் என்று கூறிட முடியாது; வரலாற்றுப் பேராசிரியர்களே குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி எல்லாம், கழகம் வெளியிட்டுள்ள துண்டறிக்கையில், ஆதார பூர்வமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.<br /><br />வெகு காலத்திற்கு முன்புகூடப் போக வேண்டாம்; மத்தியில் பிஜேபி ஆண்ட காலத்தில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்கள், வட மாநிலங்களில். மை நாதுராம் கோட்சே போல்தே - என்பது அந்த நாடகத்தின் பெயர். நான்தான் கோட்சே பேசுகிறேன் என்பது அதன் பொருளாகும்.<br /><br />அந்த நாடகத்தின் கருப்பொருள் என்ன தெரியுமா? காந்தியாரைக் கொன்ற நாதுராம் கோட்சே கடவுள் அவதாரம் என்றும், காந்தியார் ஓர் அரக்கன் என்றும் அந்த நாடகத்தில் சித்தரிக்கப் பட்டு இருந்தது.<br /><br />காந்தியார், தங்களுக்குப் பயன்பட்ட வரை அவரை மகாத்மா என்று போற்றிப் புகழ்ந்தனர். இன்னொரு கட்டத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்க உணர்வைப் புரிந்து கொண்ட நிலையில், இந்துத்துவாவாதிகளின் நச்சு மனப்பான்மையை அவர் அறிந்த தன்மையில், அவர் போக்கில் சற்று மாறுதல் தெரிகிறது என்பதை நுகர்ந்து, அக்கணமே அவரைத் தீர்த்துக் கட்டி விட்டனர்.<br /><br />அப்பொழுது ஒரு முறை கொன்றனர் என்றால் பிஜேபி ஆட்சியில் இன்னொரு முறை அவரை அரக்கன் என்று கூறி அவரைக் கொச்சைப்படுத்திக் கொன்றுள்ளனர்.<br /><br />ஆரியப் பார்ப்பனர்களை எதிர்த்தால், அவர்கள் கையில் வைத்திருக்கும் அக்மார்க் முத்திரை அரக்கர்கள் என்பதுதான்.<br /><br />அந்த ஆரிய ராஜ்ஜியத்தை மீண்டும் உயிரூட்டத் தான் - ஹிந்துராஷ்டிரம் என்ற குரலை முன்னெடுக்க முனைந்துள்ளனர்.<br /><br />பிஜேபியின் குரலில் சற்று மந்தமாக இது ஒலித்தாலும் அவர்களின் ஆர்.எஸ்.எஸ். குருநாத ரான மோகன் பகத் தெளிவாகவே கூறிவிட்டார் -ஹிந்து ராஷ்டிரக் கொள்கையில் மாற்றம் சமரசம் இல்லை என்று. தீபாவளி வரும் இந்தக் கால கட்டத்தில் இதைப் பற்றிய சிந்தனை தேவை. நாம் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கைகளை வீட்டுக்கு வீடு - கடைக்குக் கடை பரப்புவீர்! பரப்புவீர்!!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-32143168602928630282013-10-26T22:20:36.660+05:302013-10-26T22:20:36.660+05:30
முட்டாள்தனம்
மனிதனின் செல்வம், புகழ், பெருமை நி...<br />முட்டாள்தனம்<br /><br /><br />மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத்திலேயே மாறும். அவன் சந்ததிக் காலத்திலும் மாறும். ஆகவே, அதைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள்தனம்.<br /><br />(விடுதலை, 28.4.1943)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-23639599078604763872013-10-26T22:17:54.580+05:302013-10-26T22:17:54.580+05:30
பெரியார் உலகம் தோழர்களின் வெள்ளமென உற்சாகம் பெரு ...<br />பெரியார் உலகம் தோழர்களின் வெள்ளமென உற்சாகம் பெரு மகிழ்ச்சியை அளிக்கிறது முதற் கட்டப் பணியை உடனே முடித்திடுவீர்!<br /><br /><br />கழகப் பொறுப்பாளர்களே, கழகக் குடும்பத்தவர்களே, பகுத்தறிவாளர்களே, பெரியார் பற்றாளர்களே,<br /><br />அன்பு வணக்கம்.<br /><br />பெரியார் உலகம் என்று (திருச்சி - சென்னை நெடுஞ் சாலையில் சிறுகனூரில்) உருவாக்க பலரும் முனைப்புடன் நிதி திரட்டும் அரிய பணியில் - தொண்டில் திளைத்து வருகிறீர்கள்!<br /><br />ஆங்காங்கு தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட மாவட்டக் கலந்துரையாடலில் உற்சாகம் கரை புரண்ட வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது என்பதை அறிய பெரு மகிழ்ச்சியும், புத்தாக்கமும் கிடைக்கின்றன.<br /><br />எனவே விரைந்து டிசம்பரில் முதல் கட்டப் பணியை முடித்து, செயல் திறனை உறுதிப்படுத்துங்கள்!<br /><br />நம்மால் முடியாதது வேறு யாராலும் முடியாது<br />வேறு யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்!<br /><br />சென்னை <br />26.10.2013<br /><br />கி.வீரமணி<br />தலைவர்,திராவிடர் கழகம்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-43375472351924499962013-10-26T22:17:11.874+05:302013-10-26T22:17:11.874+05:30திட்டமிட்ட பிரச்சாரத்தினால் மாணவர்களை, இளைஞர்களை ஈ...திட்டமிட்ட பிரச்சாரத்தினால் மாணவர்களை, இளைஞர்களை ஈர்க்க இந்துத்துவா சக்திகள் மேற்கொள்ளும் முயற்சியை அலட்சியப்படுத்தக் கூடாது<br />மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் மதச் சார்பற்ற அரசியலுக்கான தோழமை முன்னணிக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்<br /><br />சென்னை அக்.26- மதச் சார்பின்மையைக் கட்டிக் காக்க மதச் சார்பற்ற சக்திகள் ஒன்று திரட்டப்பட வேண்டும் என்று சென்னையில் 24.10.2013 அன்று மாலை நடைபெற்ற ஒருங்கி ணைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.<br /><br />திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன்<br /><br />ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தந்தை பெரி யார் ஹிந்துத்துவா பற்றித் தோலுரித்துக் காட்டியதை கூட்டத் தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் சுட்டிக் காட்டினார். 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், மாணவர் களிடம் உண்மைகள் போய்ச் சேர திட்ட மிட்ட செயல்பாடுகள் தேவை என்று திராவிடர் கழகத் துணைத் தலை வர் கூறியதை அனை வரும் வரவேற்றனர். அது சிறந்த கருத்து என்றும் கூறினர்.<br /><br />மதவெறி சக்திகளின் கோரப்பிடியில் இந்தியா சிக்கிவிடக் கூடாது எனும் கவலையும், எச் சரிக்கை உணர்வும், நாடு முழுவதுமுள்ள ஜன நாயக சக்திகளிடையே வேகமடைந்துள்ளது. இனப்படுகொலைக் குற்றவாளியான மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.க அறிவித்த மறுநொடியே மதச்சார்பற்ற அரசிய லுக்கான களமும் கூர் மையாகி விட்டது. அந்த வகையில் அகில இந்திய அளவில் இடதுசாரிகள் முன்னெடுக்கும் அரசி யல் ரீதியிலான ஒருங் கிணைவு ஒருபுறமிருக்க, அரசியல் கட்சிகளுக்கு அப்பால் மக்களை ஒருங்கிணைக்கும் செயல்திட்டத்துடன் 'மதச்சார்பற்ற அரசிய லுக்கான தோழமை முன்னணி' தொடங்கப் பட்டுள்ளது.<br /><br />பூரி சங்கராச்சாரி யார், ஜம்மியத் உலமா இ ஹிந்த் தலைவர் ஹர்ஷத் மதானி, உச்சநீதிமன்ற வழக்குரைஞர் ஜோஸ் ஆகியோரை ஒருங் கிணைப்பாளர்களாகக் கொண்டு, தேசிய அள வில் பெரும் பாய்ச்ச லுடன் புறப்பட்டுள்ள இம்முன்னணியின் தமிழக அறிமுகக் கூட் டம், 24-10-2013 வியாழன் அன்று சென்னையி லுள்ள சவேரா ஹோட் டலில் நடைபெற்றது.<br /><br />தமிழக ஒருங்கி ணைப்பாளர் ஜெகத் கஸ்பார், திராவிடர் கழ கத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், சென்னை மயிலை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஆண்டனி சாமி, பேராயர் எஸ்றா சற்குணம், இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங் கிணைப்பாளர் முஹம் மது ஹனீபா, எழுத்தா ளர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர் பாமா, அருந்தமிழர் இயக்கத் தலைவர் ஜக்கையன், தமிழ் ஆன்றோர் பேரவைத் தலைவர் பத்மநாபன், சமூக ஆர் வலர் அழகரசன் மற்றும் சமூக நல்லிணக்க சிந் தனையாளர்கள், பெரியாரிஸ்டுகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள், தலித் - இஸ்லாமிய - கிறித்தவ இயக்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற் றனர்.<br /><br />டில்லியிலிருந்து வருகை தந்திருந்த ஹர் ஷத் மதானி அவர்களின் உரையை, சென்னை மக்கா பள்ளி தலைமை இமாம் சம்சுதீன் காசிமி தமிழில் வழங்கினார்.<br /><br />முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜோஸ் நன்றி கூறினார். தமிழக ஒருங்கிணைப் புக் குழுவில் இடம் பெற்றுள்ள ஆளூர் ஷாநவாஸ் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்.<br /><br />பன்முகச் சமூக அமைப்புள்ள இந்தியா வில் வகுப்பு வெறியைத் தூண்டி பிளவுபடுத்தத் துடிக்கும் பா.ஜ.க.வை தனிமைப்படுத்துவ தென்றும், மதச்சார்பற்ற கொள்கையில் உறுதி யுடன் களமாடும் கட்சி களை ஆதரிப்பதென் றும் தீர்மானிக்கப்பட் டது. அதன் அடிப்படை யில் நாடு முழுவதும் தீவிர பரப்புரையையும், பயணங்களையும் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-21551669733251542013-10-26T22:16:18.441+05:302013-10-26T22:16:18.441+05:30
மாதுளைபழம்
உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடிய ப...<br />மாதுளைபழம்<br /><br />உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடிய பழங்களில் ஒன்று மாதுளை. அனைவரும் விரும்பி சாப்பிடும் மாதுளையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. உடலுக்கு நல்ல எனர்ஜியை தரக்கூடியது மாதுளை. மேலும், இதய நோய்கள், புற்று நோய் போன்றவை வராமல் தடுக்கிறது. கொழுப்பை குறைக்கும் தன்மை உடையது. மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும்.<br /><br />மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.<br /><br />ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது. வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். தோலில் ஏற்படும் எரிச்சல், தொண்டையில் பிரச்சினை போன்றவற்றிற்கு சிறந்தது. பிளட் சர்குலேசனுக்கு ஏற்றது மாதுளை. இதுபோன்ற பல்வேறு நன்மைகளை கொண்ட மாதுளம் பழத்தை நாமும் சாப்பிடலாமே.<br /><br />மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்பந்தமான அனைத்து உடல்நலக் குறைபாட்டிற்கும் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு வரலாம்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-41981227892705964842013-10-26T22:13:55.099+05:302013-10-26T22:13:55.099+05:30
உடலுக்கு வலிமை தரும் முளைக்கீரை
நாம் உண்ணும் உண...<br />உடலுக்கு வலிமை தரும் முளைக்கீரை<br /><br /><br />நாம் உண்ணும் உணவில் தினமும் ஒரு கீரையை சேர்த்துக் கொண்டால் நோயின்றி வாழலாம் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முளைக்கீரை உடல் வலிமை தரும் கீரையாகும். இதனை சிறுவர் முதல் பெரியவர் வரை உண்ணலாம். தண்டுக் கீரை யின் இளம் செடியே முளைக் கீரையாகும். இதனால் இளங்கீரை என்ற மற்ற பெயரும் இதற்கு உண்டு.<br /><br />முளைக்கீரை உணவுச் சத்துக்கள் மிகுந்த ஒரு கீரையாகும். இக்கீரையை சமையல் செய்துண்ண நாவுக்கு ருசியைத்தரும். வருடம் முழுவதும் வளரக்கூடிய முளைக்கீரை அனைத் துப் பகுதிகளிலும் தடையின்றி வளரும் தன்மை கொண்டது. கால்சியம் சத்து நிறைந்துள்ள இந்த கீரையில் ஏ,பி, வைட்டமின்கள் அதிகம் காணப்படுகின்றன..<br /><br />எலும்புகள் வலுவடையும்: முளைக் கீரையில் சுண்ணாம்புச் சத்து அதிகம் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கும், வாலிபர்களுக்கும் அதிகம் கொடுக்கலாம். இதனால் எலும்பு வலுவடைவதோடு உடல் வளர்ச்சி அதிகரிக்கும். வயதானவர்கள் இந்தக் கீரையை தினசரி உண்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. நரம்பு களுக்கும், எலும்பு களுக்கும் தேவை யான சக்தியை அளிக்கும்.<br /><br />மாலைக்கண் நோய் குண மடையும்: முளைக்கீரை ஒன்றே எல்லா வகையான தாதுக்களையும் உள்ளடக்கியுள்ளது. இக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிரச் சத்துக்கள் இரத்தத்தை சுத்தம் செய்து, உடலுக்கு அழகும் மெருகும் ஊட்டவல்லது. இதில் அடங்கியுள்ள மணிச்சத்து மூளைவளர்ச்சி மற்றும் எலும்பினுள்ளே ஊண் அல்லது மேதஸ் என்னும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றது. நூறு கிராம் முளைக் கீரையில் 9000 (அகில உலக அலகு ) வைட்டமின் உள்ளது.<br /><br />இது மாலைக் கண்நோய்க்கு சிறந்த மருந்தாகும். முளைக் கீரை சாப்பிடுவ தால் சொறி சிரங்கு மறையும், மூக்கு தொடர்புடைய வியாதிகள் குணமடை யும்., பல்நோய் குணமடையும். நரம்புத் தளர்ச்சி பலமடையும். பலவீனத்தை போக்கி பலம் உண்டாகும். பசியைத் தூண்டும். வயிற்றுப் புண்ணை ஆற் றும். கண்பார்வையைத் தெளிவு படுத்தும். சோம்பலை ஒழித்து சுறு சுறுப்பை உண்டு பண்ணும். அறிவைக் கூர்மையாக்கும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-86533621815798965462013-10-26T22:12:51.558+05:302013-10-26T22:12:51.558+05:30
மனு (அ) தர்மம்
பார்ப்பானுடைய தர்மம் உடல் வியர்க...<br />மனு (அ) தர்மம்<br /><br /><br />பார்ப்பானுடைய தர்மம் உடல் வியர்க்கப் பாடுபடக்கூடாது.<br /><br />பிச்சை எடுத்தே புசிக்க வேண்டும்.<br /><br />பார்ப்பான் கேட்டால் எந்தப் பொருளையும் உடனே கொடுக்க வேண்டியது நம்முடைய (சூத்திரன்) தர்மம்.<br /><br />பார்ப்பான் யாரிடம் பிச்சை கேட்டாலும், தன் பொருளையே - சொத்தையே வாங்கிக் கொள்ளுகிறான்.<br /><br />பூமி, பணம் எல்லாம் பார்ப்பானுடையது. அதைக் கொடுக்காவிட்டால் உதைத்து வாங்கலாம் என்பது பார்ப்பான் தர்மம்.<br /><br />ஏர், கலப்பை, வட கயிற்றை பார்ப்பான் கையால் தொட்டாலே பாவம்.<br /><br />நாம் தான் உழைக்க வேண்டும்.<br /><br />அதன் உணவை எல்லாம் பார்ப்பான் உண்டு களிக்க வேண்டும்.<br /><br />சூத்திரன் படிக்கக் கூடாது என்பது அவன் தர்மம்.<br /><br />இதனால்தான் அவன் படித்து மேலே போகவும் நாம் கீழே இறங்கவுமான நிலைமை ஏற்பட்டது.<br /><br />இதை எல்லாம் நான் சும்மா சொல்லவில்லை பி.ஏ., எம்.ஏ., படிப்பதை விட அதிகம் படித்தே சொல்லுகிறேன்.<br /><br />பார்ப்பான் உயர் வாழ்வுக்கே மதமும் கடவுளும். நாம் பாடுபடுகிறோம்<br /><br />கல் உடைக்கிறோம்;<br /><br />மரம் வெட்டுகிறோம்; வண்டி இழுக்கிறோம்.<br /><br />இவ்வளவு கடின வேலைகள் செய்யும் நாம் கூரை வீட்டில் தான் குடி இருப்போம்.<br /><br />நம் வீட்டுக் கருமாதிக்கு வந்து பிச்சை வாங்கிப் பிழைப் பவனுக்கெல்லாம் மாளிகை வாசம், கார், பங்களா மற்றும் பல வசதிகள் என்றால், நாம் அந்த வாழ்வு வாழ வேண்டும் என்கின்ற ஆசை இருக்காதா?<br /><br />(நூல்: ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள்)<br />- க.பழனிசாமி, தெ.புதுப்பட்டி<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-59322634354304650932013-10-26T22:12:16.094+05:302013-10-26T22:12:16.094+05:30ஆத்திகர்களுக்கு சமயபுரம் என்றால் நாத்திகர்களுக்கு ...<br />ஆத்திகர்களுக்கு சமயபுரம் என்றால் நாத்திகர்களுக்கு விடயபுரம்<br /><br /><br />ஆத்திகர்களுக்கு சமயபுரம் என்றால் நாத்திகர்களுக்கு விடயபுரம் அறிவுலக பேராசான் தலைவர் தந்தை பெரியார் எனும் மாபெரும் நோய் தீர்க்கும் பச்சிலை மருந்து தயாரிக்கப்பட்ட இடம்தான் "விடயபுரம்".ஆம்.உலகில் எத்தனையோ பெரிய புரட்சியாளர்கள் தோன்றிய வரலாறுகளை நாம் படித் திருக்கின்றோம்!<br /><br />ஆனால் ஒரே ஒருவராவது தன் மக்களின் இந்த இழி நிலைக்கு காரணம் நீ தெய்வமாக நினைத்து வழிபடும் இந்த கல்தான் காரணம் என்று மண்டையில் அடித்தாற்போல் சொன்னவர் உண்டா?தந்தை பெரியாருக்கு சிறு வயதிலேயே கடவுள் மறுப்பு சிந்தனைகள் தோன்றி இருந்தாலும் அதை முழு வீச்சுடன் பிரகடனபடுத்தியது என்னவோ இந்த விடயபுரத்தில்தான்.<br /><br />அந்த விடயபுரத்தைக் காண ஆவலாய் ஒரு நாள் சென்றேன்.அங்கே நான் கண்டது வெறும் கருவை முள் செடிகள் நிறைந்த அடர்ந்த பகுதி.24.05.1967 அன்று தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இந்த இடத்தில் நின்றுதான் கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை!!, கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்பியவன் அயோக்கியன்!! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி!!! என்ற வரலாற்று சிறப்புமிக்க வாசகங்களை போர் பிரகடனம் செய்தார்.<br /><br />இன்றைக்கு 80 வயது இளைஞர், எனது தாத்தா சுயமரியாதை சுடரொளிமறைந்த காரைக்குடி என்.ஆர்.சாமி. அவர்கள் எப்போதும் சொல்லும் "இரண்டாம் பெரியார்"நமக்கு மட்டுமல்ல இந்த இனத்திற்கு என்றென்றும் ஆசிரியராய் திகழும் தமிழர் தலைவர் அய்யா அவர்கள் விடயபுரத்தில் நினைவு சின்னம் அமைக்க உத்தர விட்டுள்ளார்கள். இனி ஒவ்வொரு கழக குடும்பத்தினரும் ஆண்டுக்கொரு முறை செல்லும் சுற்றுலாவில் இந்தவிடயபுரத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.<br /><br />நமது குழந்தைகளை அழைத்து சென்று காட்ட வேண்டிய இடங்களில் இந்த விடயபுரமும் ஒன்றாகும். பக்தர்கள் வேண்டுமானால் கால்கள் வலிக்க கற்சிலையை காண கால்நடையாக சமயபுரம் செல்லட்டும்.பகுத்தறிவாளர்கள் நாம் சொகுசான வாகனங்களில் குடும்பத்தினரோடு நண்பர்களையும் அழைத்துக் கொண்டு விடயபுரம் செல்வோம்.<br /><br />நினைவு சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு கோடானுகோடி பகுத்தறிவாளர்களின் நன்றி.நன்றி வாழ்க தந்தை பெரியார்! வாழ்க தமிழர் தலைவர் வீரமணி!!<br /><br />- தி.என்னாரெஸ் பிராட்லா, காரைக்குடி தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15050088782753640132013-10-26T22:11:31.476+05:302013-10-26T22:11:31.476+05:30
நடையை மாற்று!
பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு ...<br />நடையை மாற்று!<br /><br /><br />பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்! என்பதுபோல மனிதர்களும் பலவிதம். என்ன காந்தியைச் சுட்டுக் கொன்னூட்டாங்களா? எனக் கேட்பார்கள் சிலர். அதுபோல நாட்டில் எவ்வளவோ மாற்றம் வந்து, பகுத் தறிவும் வளர்ந்துவிட்டது. பேருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பல நூறு ஆண்டு கள் ஆகிவிட்டன. ஆனாலும் அதுகூடத் தெரியாமல் பலர் வாழ்கிறார்கள்.<br /><br />அது எப்படி என நீங்கள் ஆச்சரியப் படலாம். திருச்சி-வேளாங்கண்ணி, திருச்சி - சபரிமலை, திருச்சி- சமயபுரம், திருச்சி - பழனி இப்படி எண்ணற்ற வழித் தடங்களில் இன்னமும் மக்கள் நடந்தே பயணம் செய்கிறார்கள். இடைநில்லா பேருந்து, இடைநிற்கும் பேருந்து, சொகுசுப் பேருந்து, குளிர் சாதனப் பேருந்து என வகை, வகையாய் பேருந்துகள் வந்துவிட்டாலும், அதுகுறித்து எதுவும் அறியாமல் இருக்கிறார்கள் இம்மக்கள்!<br /><br />திருச்சியில் இருந்து மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எல்லா ஊர்களில இருந்தும் இப்படி நடைப் பயணம் மேற்கொள்வோர் அதிகம். நாடு வளர்ந்து விட்டது, பேருந்து கண்டு பிடித்து விட்டார்கள் என்று நாம் சொன்னால் அவர்களுக்குக் கோபம் வருகிறது. எங்களுக்கு எல்லாம் தெரியும்(?) நாங்கள் வேண்டுதலுடன் கோவிலுக்குப் பக்தியாய் நடக்கிறோம், என்கிறார்கள் சரி! நீங்கள் வேண்டு மானால் கால நடை போங்கள்.<br /><br />சின்னஞ்சிறு குழந்தைகளை ஏன் நடக்க வைத்துக் கொடுமைப்படுத்துகிறீர்கள்? என்றால், கோவிலுக்கு நடப்பதால் குழந்தைகளுக்கு கால் வலி வராது என மனம் வலிக்காமல் கூறுகிறார்கள்.<br /><br />இது இப்படியிருக்க சில நாட்களுக்கு முன்னர் திருச்சியிலிருந்து வேளாங் கண்ணிக்குப் பலர் நடந்து சென்றனர். அச் சமயம் வல்லம் பேருந்து நிலையத் தில் கண்ட காட்சி நமக்கு மட்டுமல்ல, பலருக்கும் வேடிக்கையாகவும், விலா நோகச் சிரிக்க வைப்பதாகவும் இருந்தது.<br /><br />அது என்னவெனில், 30 வயது மதிக் கத்தக்க மூன்று இளைஞர்கள், வேளாங்கண்ணிச் சீருடையுடன் (!!) வல்லம் பேருந்து நிலையம் நோக்கி வந்தனர். பேருந்து நிலையம் வந்ததும் அங்கிருந்த மர நிழலில் சிறிது இளைப் பாறினர். பின்னர் ஒரு விதப் பதற்றத் துடன் சுற்றும், முற்றும் பார்த்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்து நின்ற தஞ்சாவூர் பேருந்தில் வீர்ரென்று ஏறி உட்கார்ந்து கொண்டனர்.<br /><br />அவர்கள் பதற்றத்துடன் சுற்றும் முற்றும் பார்க்கக் காரணம், தங்களோடு நடந்து வருகிறவர்கள் தங்களைப் பார்த்துவிடக் கூடாதே என்கிற பதற்றம். இவர்கள் பதறவே தேவையில்லை. ஏனெனில் இவர்களோடு வந்தவர்கள் செங்கிப் பட்டியில் வேறொரு பேருந் தில் ஏறிப் போய்க் கொண்டிருப்பார்கள்.<br /><br />ஆக, அறிவியலையும், பயன்படுத்தா மல், அறிவையும் பயன்படுத்தாமல் இவர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவில் லாமல் போகிறது. வாழ்க்கையின் நடையை மாற்றினால், இவர்களுக்கு நல்ல விடை கிடைக்கும் என்பதை நாம் தொடர்ந்து சொல்வோம்.<br /><br />- வி.சி. வில்வம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83871848807766792012013-10-26T22:10:30.425+05:302013-10-26T22:10:30.425+05:30
அறிவியல்
அசோகன் இந்தியாவை ஆண்ட சில காலத்துக்கெல...<br />அறிவியல்<br /><br /><br />அசோகன் இந்தியாவை ஆண்ட சில காலத்துக்கெல்லாம் (கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகள் முன்பு) ஏராஸ்தனஸ் (Erosthenes) எனும் கிரேக்க பூகோள அறிஞர் இருந்தார். அலெக்சாண்டிரியாவில், தன் ஆராய்ச்சிக் கூடத்தை அமைத் திருந்தார். அவர் பூமியின் சுற் றளவு என்ன என்பதைக் கணக் கிட்டார்.<br /><br />சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இதை எப்படிச் செய்தார் என்று வியப்பே தோன்றும். எகிப்து நாட்டிலுள்ள இரண்டு ஊர் களை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த இரண்டு ஊர்களிலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில், சூரியனுடைய நிழல் எப்படி விழுகிறது என்பதைக் கணக் கெடுத்தார்.<br /><br />அ, ஆ எனும் இரண்டு கல் தூண்கள். ஆ தூணை அலக் சாண்டிரியாவில் நட்டார் அ தூணை செயன் எனும் ஊரில் நிறுத்தினார். இரண்டும் ஒரே அளவில் ஒரே மாதிரியாக நிறுத் தப்பட்டன. இரண்டு ஊருக்கும் இடையிலிருந்த தூரம் கிரேக்கக் கணக்குப்படி 5000 ஸ்டேடியா (551 மைல்கள் ஆகும்) நண் பகலில், சூரியன் உச்சியிலிருக் கும்போது செயனில், நிழல் விழாததைக் கண்டார், அதே நேரத்தில், அலெக்சாண்டிரியா வில் நாட்டப்பட்ட தூணில் நிழல் விழுவதை இன்னொரு நாள் கணக்கெடுத்தார்.<br /><br />எவ் வளவு சாய்வு இருக்கிறதென் பதை நிழலைக் கொண்டு அளந்து தெரிந்து கொண்டார். சூரியகிரணம் 7/50 சாய்வாக வருவதை உணர்ந்தார். உலகம் உருண்டையானது என்பதையும் அப்போதே கிரேக்க விஞ் ஞானிகள் அறுதியிட்டிருந்தனர். அதனால், உருண்டையின் சுற்றளவு 360 டிகிரி என்பதும் பகுக்கப் பட்டிருந்தது.<br /><br />அதனால்:<br />அ, ஆ, பூமியின் சுற்றளவு: 7 1/5 0:360<br />அதாவது,<br /><br />பூமியின் சுற்றளவு: 551 X 36D X 5/36<br /><br />அதாவது<br /><br />27,500 மைல்கள் என்று கணக் கிடப்பட்டது. இந்தக் கணக்குச் சரியென்று 2000 ஆண்டுகளுக் குப் பிறகே கண்டு பிடிக்கப்பட்டது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-5721077527951148222013-10-26T22:09:57.450+05:302013-10-26T22:09:57.450+05:30
பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!
நெற்றியிலே சாம்பலைந...<br />பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!<br /><br /><br />நெற்றியிலே சாம்பலைநீ பூச வேண்டாம்<br />திருக்கோயில் வாசலையே மிதிக்கவேண்டாம்<br />புற்றினிலே பூசைநீ செய்யவேண்டாம்<br />பிள்ளைகளைத் தேரோட்டத்துக் கனுப்பவேண்டாம்<br />கற்கையிலே திருக்குறளை மறக்கவேண்டாம்<br />கழிசடைகள் விரதம்கடைப் பிடிக்கவேண்டாம்<br />சற்றேனும் மூடத்தனம் பரப்பாத<br />தன்மானப் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!<br /><br />புத்திதரும் விடுதலையை ஒதுக்க வேண்டாம்<br />பூப்பெய்தின பேரில்விழா எடுக்கவேண்டாம்<br />பித்தசா மியார்வலையில் வீழ வேண்டாம்<br />பேயோட்டும் பூசாரியை நம்பவேண்டாம்<br />சத்திரத்தில் சோம்பேறி வளர்க்கவேண்டாம்<br />சாமிசரண மென்பானைச் சேர்க்கவேண்டாம்<br />வித்தகனாய் வேலையிலே விகிதாசாரம்<br />வேண்டுமென்ற பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!<br /><br />உரிமைகளை உணராதார் போற்றவேண்டாம்<br />ஒத்தாசை செய்வாரைத் தூற்ற வேண்டாம்<br />கரிசனத்தை அறிவினிலே காட்ட வேண்டாம்<br />கப்பல்கவிழ்ந் தாலும் இறை தேட வேண்டாம்<br />நரபலியின் யோகத்தைக் கேட்க வேண்டாம்<br />நான்மறைகள் வேதத்தைப் புதுக்க வேண்டாம்<br />மருவிலாத சிந்தனையின் பெரியாரை<br />வாழ்நாளில் மறவாமல் வாழ்த்தாய் நெஞ்சே!<br /><br />குலம்பேசித் திரிவாரை மதிக்கவேண்டாம்<br />குணங்கெட்ட மதமுடன் சேர வேண்டாம்<br />சிலைகோவில் சேவிப்பான் நாடவேண்டாம்<br />சிந்திக்க மறுப்பானுக் குதவவேண்டாம்<br />கலைஇசையில் மடத்தனமும் வளர்க்கவேண்டாம்<br />கர்மபலன் என்பாரைக் கூடவேண்டாம்<br />பலமரத்தை வாழ்நாளில் கண்டதச்சன்<br />வழுவில்லாப் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!<br /><br />கருமாதி திவசத்தைக் கருதவேண்டாம்<br />கடவுளுக்காய் மொட்டைநீ போட வேண்டாம்<br />பிரதோசப் பலன்களைநீ நம்பவேண்டாம்<br />கோயில்குளம் யாத்திரைக்குப் போகவேண்டாம்<br />அரோகரா கோஷத்தில் குதிக்கவேண்டாம்<br />ஆரியன்வரு மானத்தைக் கூட்டவேண்டாம்<br />நேருக்கு நேர்நின்று வாதில்வென்ற<br />நிகரில்லாப் பெரியாரை வாழ்த்தாய் நெஞ்சே!<br /><br />- பட்டுக்கோட்டை தமிழ்அன்பன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-12285344974653162422013-10-26T22:09:21.784+05:302013-10-26T22:09:21.784+05:30
என்னதான் சொன்னார் பெரியார்?
கருத்துரிமை: ஒருவனு...<br />என்னதான் சொன்னார் பெரியார்?<br /><br /><br />கருத்துரிமை: ஒருவனுடைய எந்தக்கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்ப தற்கு யாருக்கும் உரிமை கிடையாது.<br /><br />பேராசை - நாணயம்: பேராசை யில்லாவிட்டால் எந்த மனிதனும் தனது புத்திக்கும், அனுபவத்துக்கும் ஒவ்வாததை ஒருகாலமும் நம்ப மாட்டான்; பின்பற்றமாட்டான்.<br /><br />வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பார்கள்.<br /><br />அறிவுக்கு முதலிடம்: உன் சொந்தப் புத்திதான் உனக்கு வழி காட்டி; அதை நல்ல முறையில் பயன் படுத்து, பிறரிடமுள்ள அவநம்பிக் கையைக் கைவிடு. உன் பகுத்தறிவுக்கே வேலி போட்டதால்தான் அறிவு வெள்ளாமை கருகிப்போயிற்று. முன் னோர் சொல்லிப் போனது அற்புத மல்ல, அதிசயமுமல்ல, அதை அவர் களிடமே விட்டுவிடு. அதில் நீ சம்பந் தப்படாமல் நீயே செய்ய, கண்டுபிடிக்க, முயற்சி செய், அறிவுக்கே முதலிடம் கொடு.<br /><br />நமக்கு வேண்டியது என்ன? : தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்புமட்டும் அல்ல, அறிவும் வேண்டும், சுயமரியாதையும் வேண்டும், தன்மான உணர்ச்சியும், எதையும் பகுத்துணரும் திறனும், ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவை.<br /><br />படிப்பு எப்படி இருக்க வேண்டும்? : நமது கல்விமுறை மாற வேண்டும், படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயில வேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறுத்தி னாலும் அவன் தொழில் செய்து பிழைக்கக்கூடியவனாக இருக்க வேண்டும். மக்கள் அத்தனை பேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்.<br /><br />பெண் அடிமையாவது ஏன்? : ஒவ்வொரு பெண்ணும் - தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதி பெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக் குப் போதுமான அளவாவது சம் பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால் எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான்.<br /><br />பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகின்றது.<br /><br />வாலிபர்கள் கவனிக்க : வாலி பர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாக புத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை, தீமையை அறியும் குணமும், சாத்தி யம், அசாத்தியம், அறியும் குணமும், ஆய்ந்து ஓர்ந்து பார்க்கும் தன் மையும் இருந்தால்தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக்கூடியவர்கள் ஆவார்கள்.<br /><br />சேவை என்றால் என்ன? : சேவை என்பது கூலியை உத்தே சித்தோ தனது சுயநலத்தை உத்தே சித்தோ செய்வதல்ல, மற்றவர்கள் நன்மை அடைவதைப் பார்த்து மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவ தற்கு ஆகவே செய்யப்படும் காரியம்தான்.<br /><br />ஜாதியும் - ஒழுக்கமும் : மனிதன் திருடுகிறான், பொய் பேசுகிறான், பாடுபடாமல் வயிறு வளர்க்கப் பார்க்கிறான், இவனை மக்கள் இகழ்வதில்லை. சாதியை விட்டுத் தள்ளுவதில்லை; ஆனால், சாதியை விட்டுச் சாதியில் சாப்பிட்டால் கல்யாணம் செய்தால், சாதியை விட்டுத் தள்ளிவிடப்படுகிறான். இந்த மக்களின் ஒழுக்கம் - நாணயம் எப்படிப்பட்டது என்று பாருங்கள்.<br /><br />வெளியீடு: கும்முடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழகம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-89874590517943001342013-10-26T22:08:21.221+05:302013-10-26T22:08:21.221+05:30
வன்முறையால் பகுத்தறிவு இயக்கத்தை அழிக்க இயலாது
...<br />வன்முறையால் பகுத்தறிவு இயக்கத்தை அழிக்க இயலாது<br /><br /><br />தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் 28.9.2013 அன்று விருத்தாசலத்தில் திராவிடர் கழக மாண வர் அணியின் கடலூர் மண்டல மாநாட்டில் சிறப்புரை ஆற்ற வருகை தந்த போது சில பிற் போக்குவாதிகள் அவர் காரை மறித்துத் தாக்க வந்த செய்தி கழகத் தொண்டர்களின் உள் ளத்தைக் குமுறும் எரிமலையாக ஆக்கியிருக்கும். தமிழர் தலைவருக்கு இதைப்போன்ற தாக்குதல்கள் புதிதல்ல. தமிழர் தலைவரே அவற்றை வெளிப் படுத்தி இருக்கிறார். 1981-இல் பழனியில் என்னைப் போல் உருவம் செய்து பாடையில் வைத்துத் தூக்கிச் சென்றவர்கள் பார்ப்பனர்கள் அல்லவா? வீரமணி ஒழிக என்று முழக்கமிட்டார்கள் (விடுதலை நாள்: 5.11.2012)<br /><br />எனது கொள்கைப் பயணத்தில் எனது வாழ்வை முடிக்க கொள்கை எதிரிகள் மூன்று முறை முயன்று தோல்வியுற்றனர். திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள மம்சாபுரம் அருகிலும் (1982), வடசென்னை, வண்ணாரப்பேட்டைப் பகுதியிலும் (1985), சேலம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம் பட்டியிலும் (1987) தடம் புரளாது பயணிக்கிறேன் என்று நான் சான்றிதழ் பெற்ற நிகழ்வுகள் அவை (விடுதலை நாள் 2.12.2012)<br /><br />தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ் என்று யுனெஸ்கோ நிறுவனத்தால் விருது வழங்கப்பட்ட தந்தை பெரியாரை நோக்கிக் கடலூர் பொதுக் கூட்டத்தில் எதிரிகள் செருப்பு வீசவில்லையா? இன்று அதே இடத்தில் பெரியாருக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பகுத்தறிவு மேதை ஆர்.ஜி.இங்கர்சாலுக்கும், கிறித்தவ மத வெறியர்களிடமிருந்து பல அச்சுறுத்தல் கடிதங்கள் வந்துள்ளன. முட்டாளே! நாளை முதல் நீ மேடை ஏறினால் உன் தலை அட்லாண்டிக் பெருங்கடலில் மிதக்கும்.<br /><br />ஆஸ்திகர்களான எங்கள் கோபத்திற்கு ஆளா னால் பைபிளை ஏந்தும் கைகள் தீப்பந்தத்தை ஏந்தி உன் வீட்டிற்குத் தீ வைத்து உன்னையும் உன் குடும்பத்தையும் கொளுத்தி விடுவோம்.<br /><br />இந்த இழிவான அச்சுறுத்தல்களையெல்லாம் மீறி இங்கர்சால் கிறித்தவ மத நூல்களின் மூடக் கருத்துக்களை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் பிரச்சாரம் செய்தார்.<br /><br />தமிழ் நாட்டு இங்கர்சால் தமிழர் தலைவர் மாணவப் பருவத்திலிருந்து கடந்த எழுபது ஆண்டு களாக பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறார். இங்கர்சாலுக்குப் பின்னால் ஓர் இயக்கம் இருந்த தில்லை. ஆனால் தமிழர் தலைவருக்குப் பின்னால் குமரிமுனையிலிருந்து திருத்தணி வரை பல இலட்சம் தொண்டர்களையும், ஆதரவாளர்களை யும் கொண்ட இயக்கம் செயல்படுகிறது என்பதை அவரைத் தாக்கத் துணிந்த பிற்போக்குவாதிகள் மறந்து விடவேண்டாம்.<br /><br />மூடப் பழக்கங்கள் தமிழ் நாட்டில் இருக்கும் வரை தமிழர் தலைவரின் பகுத்தறிவுப் பிரச்சாரம் தொடரும் எந்தப் பார்ப்பானாவது பக்தியின் பெய ரால் முதுகில் அலகு குத்திக்கொண்டு லாரியை இழுக்கிறானா? நெருப்பு மிதிக்கிறானா? நேர்த்திக் கடன் என்று சொல்லி உடம்பைக் கத்தியால் கீறிக் கொள்கிறானா? எந்தப் பார்ப்பனப் பெண்ணாவது பேய் பிடித்தது என்று பூசாரியால் சாட்டை அடி வாங்குகிறாளா? இந்த மூடத்தனங்களையெல்லாம் எதிர்த்துதான் நாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வருகிறோம்.<br /><br />அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உரிமை, சேது கால்வாய் திட்டம், தமிழக மீனவர்கள் இலங் கைக் கடற்படையால் தாக்கப்படுதல், கச்சத்தீவைத் தமிழகத்தோடு இணைத்தல் இவற்றைப் போன்ற பிரச்சினைகளில் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக்கழகமும் தீவிர அக்கறை எடுத்துக் கொள்ளவில்லையென்றால் வேறு நாதி ஏது? திராவிடர் கழகம் தமிழக மீனவர்களின் நலனைப் பாதுகாக்கவும், கச்சத்தீவை மீட்கவும் 15.10.2013 அன்று தமிழகம் முழுவதும் அறப்போர் நடத்தி யதைப் போல் காங்கிரசோ, கம்யூனிஸ்ட்டோ, பி.ஜே. பி.யோ இதுவரை போராட்டம் நடத்தியதுண்டா?<br /><br />ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமு தாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத் தினரைப்போல் மானமும் அறிவும் உள்ள சமுதாய மாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன் என்று தந்தை பெரியார் தன் வாழ்க்கை இலட்சியத்தை வெளி யிட்டிருக்கிறார். பெரியார் விட்டுச் சென்ற தொண்டை அல்லும் பகலும் ஆற்றிவருபவர் நம் தமிழர் தலைவர், அவருக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கவேண்டியது அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை ஆகும்.<br /><br />- இர.செங்கல்வராயன் (முன்னாள் துணைத் தலைவர், ப.க. செய்யாறு)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-55053549652423868372013-10-26T22:07:10.733+05:302013-10-26T22:07:10.733+05:30
மரண தண்டனை
பிறந்த அடுத்தகணமே
மரண தண்டனை
பெற்றது...<br />மரண தண்டனை<br /><br /><br />பிறந்த அடுத்தகணமே<br />மரண தண்டனை<br />பெற்றது!<br />அம்மனுக்கு<br />நேர்ந்து விடப்பட்ட<br />ஆட்டுக்குட்டி!<br /><br />கணபதி ஹோமம்<br /><br />வீட்டை கழுவி<br />சுத்தம் செய்தாள் அம்மா!<br />கோமியத்தை<br />தெளித்து அசுத்தம்<br />செய்தார் அய்யர்!<br /><br />- த. செண்பகம், அய்யம்பாளையம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-24211043621417012832013-10-26T22:04:48.465+05:302013-10-26T22:04:48.465+05:30
விடுதலை மின்சாரம்- விடுகதை மின்சாரம் ஆன கதை
மின...<br /><br />விடுதலை மின்சாரம்- விடுகதை மின்சாரம் ஆன கதை<br /><br />மின்சாரம் எழுதுகின்ற தலையங்கமோ! ஒற்றைப்பத்தியோ! பெட்டிச் செய்தியோ! எதுவோ அது தாக்க வேண்டிய இலக்கை சரியாக சென்றடைந்து விடும். அதற்கு அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவரும் ஒன்றுதான். அதிகாரமே இல்லாத பாமரனும் ஒன்றுதான். அல்லது செய்யின் தட்டிக் கேட்பதும், நல்லது செய்யின் தட்டிக் கொடுப்பதும் அவர் வழக்கம்.<br /><br />அப்படிப்பட்ட மின்சாரம் தஞ்சை வல்லத்தில் அமைந் துள்ள பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பழகு முகாம் 2010இல் விடுதலை மின்சாரம் விடுகதை மின்சாரமாக மாறி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி னார். பழகு முகாமின் முதல் நாளிலிருந்து பிஞ்சுகளிடம் பேசும்போது பெரியாரியல் கருத்துகளுக்கு இடை இடையே விடுகதைகளையும், வெடிச் சிரிப்பு துணுக்குகளையும், அறிவியல் கேள்விகளையும் கூறி பிஞ்சுகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அது மட்டுமல்ல, விடுகதைகளையும், துணுக்குகளையும் கேட்ட பிஞ்சுகளுக்கு மிகுந்த உள்ளக் கிளர்ச்சி ஏற்பட்டு, நான், நீ என்று முந்திக் கொண்டு தங்களுக்கு தெரிந்தவற்றை கூற அனுமதி கேட்டதும், அனுமதி தந்து அவர்களையும் பேச வைத்து ரசித்து மகிழ்ந்தார். மேடையேறி பேசிய பிஞ்சுகளுக்கு தாங்கள் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டு மன நிறைவுடன் தங்கள் இருக்கை களுக்குத் திரும்பினர். அத்தோடு மின்சாரம் பிஞ்சுகளை விட்டுவிடவில்லை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கருத்துகளை அழுத்தம் திருத்தமாக அவர்கள் மனதில் பதிய வைக்கத் தவறவில்லை. அத்தோடு பிஞ்சுகள் கட்டுப்பாட்டை இலேசாக மீற முற்படும் போதெல்லாம் இதமாக கண்டிக்கவும் தவறவில்லை. இதற்காகவே மின்சாரம் ஏராளமான குறிப்புகளைத் திரட்டி (ஹோம்ஒர்க்) வைத்துக் கொண்டு பேசி வருகிறார். ஆக, பிஞ்சுகளோடு உரையாடும் போது அவரும் பிஞ்சுகளின் நிலைக்கு இறங்கி வந்து - விடுதலை மின்சாரம் விடுகதை மின்சாரமாக மாறியது குறிப்பிடத்தக்கது.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-35193108749698708922013-10-26T22:03:27.824+05:302013-10-26T22:03:27.824+05:30 பிரார்த்தனை
பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப்... பிரார்த்தனை<br /><br />பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும்; அவர் சர்வ வல்லமையும், சர்வ வியாபகமும், சர்வ அறிவும் ஞானமும் உடையவர் என்பதும்; அப்படிப்பட்ட அக் கடவுளை வணங்குவதால், ஒருவனுக்கு வேண்டிய சகல காரியங்களிலும் சித்தி பெறலாம் என்பதுமான வைகள்தாம் பிரார்த்தனைக்காரர்களின் கருத்தாயிருக்கிறது. இப்படிப்பட்ட பிரார்த்தனைக்கு அக்கடவுளை வணங்குவது, தோத்திரம் செய்வது, புகழ்வது, பஜனை செய்வது முதலிய காரியங்கள் ஒருபுறமிருக்க, பொருள்களைக் கொண்டும் கடவுளைத் திருப்தி செய்து அவற்றால் பயன்பெறலாம் என்பதும் இந்தப் பிரார்த்தனையில் சேர்ந்ததாகும்.<br /><br />அதாவது, கடவுளுக்கு இன்னது இன்னது செய்வதாக நேர்ந்து கொள்வது, ஜீவப்பலி கொடுப்பது, கோயில் கட்டுவது, உற்சவம் செய்வது முதலிய காரியங்கள் செய்யப்படுவனவாகும்.<br /><br />ஆகவே, இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாறுபெயர் சொல்ல வேண்டுமானால் பேராசை என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது என்பதே ஆகும்...<br /><br />பேராசையும், சேம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமில்லை<br /><br />தந்தை பெரியார் பகுத்தறிவு மலர்-1, இதழ் 9, 1935தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-83542620295311995872013-10-26T22:02:59.501+05:302013-10-26T22:02:59.501+05:30பக்தி - ஒழுக்கம்
கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்த...பக்தி - ஒழுக்கம்<br /><br />கடவுளாகட்டும், மதமாகட்டும், பக்தியாகட்டும், மோட்சமாகட்டும் வைத்துக் கொள். எதுவானாலும் அது தனிப்பட்ட மனிதனுடைய தனிச் சொத்து. உலகத்துக்கு பொதுச் சொத்தல்ல. ஒழுக்கம், நாணயம் - பொதுச் சொத்து. நான் பக்தியில்லாமல் நரகத்திற்குப் போகிறேன் என்றால் உங்களுக்கு என்ன? நான் போய் விட்டுப் போகிறேன். நான் கடவுளை நம்பவில்லை, அதைக் கொழுக்கட்டை என்று சொல்லுகிறேன்; நஷ்டமில்லை பாருங்கள். அதனாலே எனக்குப் பக்தி இல்லை என்பதனாலே, உங்களுக்கென்ன நஷ்டம்?<br /><br />ஆனால் ஒழுக்கமில்லையென்றால் என்னவாகும் பாருங்கள்? நாணயமில்லை என்றால் என்னவாகும்? உண்மை உணர்வு இல்லை என்றால் என்னவாகும்? இது மூன்றும் இல்லாதது இன்னொரு மனிதனுக்குச் செய்கிற கெடுதிக்கு பேர்தானே?<br /><br />ஒழுக்கமாக இல்லை என்றால், எங்கெங்கேயோ ஒழுக்கக் கேடாக நடந்து இல்லை தொல்லை பண்ணிக் கொண்டிருக்கின்றான்; நாணயமாக இல்லையெனில், யாரையோ ஏமாற்றி வேதனையை உண்டாக்கி இருக்கின்றான்; உண்மையாக இல்லையென்றால் என்னத்தையோ எவனையோ ஏமாற்றிப் பொய் பேசித் தப்பிக்க இன்னொரு தவறைக் கொண்டிருக்கிறான் என்றுதானே பொருள்? ஆகவே ஒழுக்கம், நாணயம், உண்மை என்ற உயர்ந்த குணங்களெல்லாம் பொதுச் சொத்து. மனித சமுதாயத்திலே இது கேடாக இருந்தால் சமுதாயத்துக்குக் கேடு. ஒரு மனிதன் இந்தக் காரியங்களில் குற்றவாளியாக இருந்தானானால் கண்டிப்பாக இன்னொரு மனிதனுக்குக் கேடு விளைந்திருக்கும். இது முக்கியமில்லை. பக்தி கடவுள் நம்பிக்கை மதக் கோட்பாட்டின்படி நடக்கிறது. இவைதான் முக்கியமென்றால், மக்களுக்கு என்ன பிரயோஜனம் அதனாலே?<br /><br />-தந்தை பெரியார், 24.11.1964 பச்சையப்பன் கல்லூரிப் பேருரைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com