Search This Blog

12.10.13

சூத்திரப் பட்டம் ஒழிய இந்து மதப் பண்டிகைகளைக் கொண்டாடாதீர்! பெரியார் வெறும் படமா? பாடமா?



ஹிந்து மதம் என்பதை ஏற்றுள்ள தமிழர்களாகிய திராவிடப் பெருங்குடி மக்களால், பண்டிகைகளாக விழாக் களாகக் கொண்டாடப்படுபவைகளுக்கு -
தமிழ் மொழி,
தமிழ்ப் பண்பாடு,
தமிழர் நாகரிகம்

இவைகளுடன் தொடர்புடை யனவா? தமிழ்ப் பெயர்களா?

தீபாவளி
சரஸ்வதி பூஜை - ஆயுத பூஜை
கிருஷ்ண ஜெயந்தி
கோகுலாஷ்டமி
விஜயதசமி தசரா நவராத்திரி
ராமநவமி
கந்தர்சஷ்டி,
விநாயகர் சதுர்த்தி,
சூரசம்ஹாரம்
தமிழ் வருஷப் பிறப்பு - இது எது தமிழ்? எது தமிழ்மொழி தமிழன் பண்பாட்டை உள்ளடக்கிய விழா?

நம் இனத்தவரை அசுரர்கள் அரக்கர்களாக்கி,

சூது
சூழ்ச்சி
தந்திரம்
ஏமாற்று வேலை
மோகினி அவதாரம் (பெண் களை அனுப்பி) 

ஆகியவைகளால் அவர்களை ஒழித்து, அழித்து ஆரியர் மகிழும் நாள் - விழா வெல்லாம் அவாளுக்குப் பண்டிகைகள் என்றால் புரிகிறது! நமக்கு எப்படி அவை விழாவாகும்? நம்மை, பிறர் வீழ்த்தியதை நாமே கொண்டாடி மகிழும் அளவுக்கு நமது மூளைகளில் ஆரியச் சாயம் ஏற்றப்பட்டு விட்டதே! போதையில் தள்ளாடுகிறானே தமிழன்!

தமிழால் வாழும் தமிழ்ப் புலவர்களே, பெரும் அறிஞர்களே,  தனித் தமிழ் பற்றி வாய் கிழியப் பேசும் வக்கணையாளர் களே! இந்தப் பண்பாட் டுப் படையெடுப்பை முறியடித்து, நம் மக்க ளுக்குப் பகுத்தறிவு ஊட்ட நீங்கள் ஒரே ஒரு கண நேரமாவது சிந்தித்தது உண்டா?

உங்கள் பங்களிப்பு தான் என்ன?

தந்தை பெரியாரும் அவர்தம் சுயமரியாதை இயக்கமும் தோன்றி யிராவிட்டால்...?

நம்மைச் சூத்திர - பஞ்சமர் களாக்கி, இழி பிறவிகள் என்பதை சட்டப்படி, சாஸ்திரப்படி நடைமுறைப் படி இன்னமும் கோயில் கருவறைக் குள் நிலை நாட்டிவரும் அவமானத்தைப் பற்றி புரிந்து கொண்டாவது இருப்போமா?
அவற்றின் பெயர்களே விளக்கு கின்றனவே!

பொங்கல் விழா தவிர, வேறு என்ன விழா தமிழர்களுக்கு விழா?

தை முதல் ஆண்டுத் தொடக்கம் என்பதேகூட கலைஞர் செய்ததை  தலைகீழாக இன்றைய ஆரிய ஆட்சி மாற்றி விட்டதே!

மவுனம் தான் பதிலா? இல்லை எம்மீது வசை புராணம் தானா?

கேட்டால் வயிறு, வயிறு என்று காட்டினால் போதுமா? - அட வெட்கங் கெட்ட இனமே!

பெரியார் சொன்னார். தமிழர் களே உங்கள் சூத்திரப் பட்டம் ஒழிய, இந்து மதப் பண்டிகை களைக் கொண்டாடாதீர்! என்று. பெரியார் வெறும் படமா? பாடமா?
மூளையைச் சாக விட்ட பிறகு வயிறு இருந்தென்ன? போயென்ன? சிந்தியுங்கள்!

 --------------- ஊசி மிளகாய் அவர்கள் 12-10-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

31 comments:

தமிழ் ஓவியா said...


தேவையில்லாதவர்கள்



ஆரியர்கள் இனி நம் நாட்டுக்குத் தேவையில்லாதவர்கள்; ஒழிக்கப்பட வேண்டியவர்கள். இவர்கள் இல்லாம-லிருந்தால் இந்த இழி நிலைக்கு நாம் வந்திருப்போமோ?
(விடுதலை, 21.3.1954)

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் அல்ல கர்நாடகாவில்! விதவைப் பூசாரிகள்

மங்களூர் அருகே உள்ள குத்ரோலி கிராமத்தில் இருக்கும் கோகர்ணநாத ஈஸ்வரன் கோவிலில் இரு விதவைப்பெண்கள் மூலவருக்கு அர்ச்சனை நடத்தியுள்ளனர். அம்பாள் அன்னபூரணேஷ்வரிக்கும் அவர்கள் பூசை நடத்தினர். அவர்கள் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தீர்த்தமும் பிரசாதமும் அளித்துள்ளனர். வெளிர் மஞ்சள் புடவைகள் அணிந்து வந்த விதவைப் பெண்கள் இருவரும் மேளதாளத்துடன் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜனார்த்தன பூசாரி தலைமையேற்று நடத்தினார். ஒரு பெண் பூசாரி புத்தூர் தாலுகாவைச் சேர்ந்த பன்னூர் கிராமத்தைச் சேர்ந்த இந்திரா சாந்தி என்றும் மற்றொருவர் பண்ட்வால் பகுதியைச் சேர்ந்த மூடா கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி சாந்தி என்றும் அவர் அடையாளம் கூறினார். இவர்கள் இருவரும் மங்களூரில் உள்ள குரு மந்திராவில் வேதபாடங்களைக் கற்றுள்ளனர் என்றும் அவர் கூறினார். இந்திரா சாந்தி பீடி சுற்றும் தொழில் செய்து வந்தவர் என்று கோவில் வட்டாரங்கள் கூறின. இருவரும் கோவிலுக்குள் நுழைந்தவுடன் கேரளாவைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதியும், கோவிலின் நிறுவனருமான சிறீநாராயண குருக்களின் சிலைக்கு முதலில் பூசை செய்தனர். பின்னர் கோவிலில் உள்ள பிற தெய்வங்களுக்கு பூசை செய்தனர்.

தமிழ் ஓவியா said...


மந்திரிகள் நியமனம்


ஜஸ்டிஸ் கட்சி மந்திரிபதவியில் இருந்த காலத்தில் யாருக்காவது ஸ்தல ஸ்தாபனங்களில் நியமனம் செய்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நமது பார்ப்பனர்கள் ஒவ்வொரு பொய்க்கதையைக் கட்டி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தூஷித்துக் கொண்டு பாமர மக்களுக்கு அவ்வியக்கத்தினிடம் அருவருப் புண்டாகும்படி எவ்வளவோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து கொண்டு வந்தது பொதுஜனங்களுக்கு தெரிந்ததுதான்.

ஆனால் அம்மாதிரி நியமனங்கள் பார்ப்பனர்களுக் காவது அக்கோஷ்டியைச் சேர்ந்த பார்ப்பனரல்லாதாருக் காவது கிடைத்துவிட்டால் அதைப் பற்றி வெளியிலே பேசாமல் ரகசியமாக அனுபவித்துக் கொண்டு வந்ததும் யாவரும் அறிந்தது.

உதாரணமாக ஸ்ரீமான் சி.வி. வெங் கட்டரமண அய்யங்காருக்குக் கோயமுத்தூர் ஜில்லா போர்டுக்கு நியமனம் செய்த காலத்தில் இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையாவது பேசவே இல்லை. அதே சமயத்தில் சென்னை முனிசிபாலிடிக்கு ஸ்ரீமான் தணிகாசலம் செட்டியாரை அதே மந்திரிகள் நியமனம் செய்த காலத்தில் கொல்லை வழி பிரவேசமென்று எழுதி இருந்தார்கள்.

அதற்குச் சமாதானமாக தேர்தலில் தோற்றவர்களை நியமணம் செய்வதுதான் கொள்ளைவழி பிரவேசமே யொழிய தேர்தலுக்கு நின்று வெற்றிபெறத் தக்க யோக்கியதை இல்லாதவர்களை நியமிப்பது கொல்லை வழிப் பிரவேசமல்லவென்று சொல்லி விட்டார்கள். ஆனால் கீழே குறிப்பிடப்போகும் சம்பவத்தை நமது பார்ப்பனர்கள் என்னவென்று சொல்வார்களோ? தெரிய வில்லை.

கோயமுத்தூர் ஜில்லா கல்விச் சபைக்குச் சமீபத்தில் நியமனம் செய்யப் பெற்றிருக்கும் மாதிரியும் அப்பொழுது சத்தம் போட்ட பார்ப்பனப் பத்திரிகை களுக்கு இப்பொழுது கண்ணே இல்லையா? புத்திதான் இல்லையா? என்பதும் வாசகர்களால்தான் நிர்ண யிக்கப்பட வேண்டும் அதாவது மேற்படி சபைக்குச் சமீபத்தில் சர்க்காரால் நியமனம் செய்யப்பட்ட ஸ்ரீமான், டி.எம். ராமசந்திரன் செட்டியார் என்பவர் ஜில்லா ஸ்தலஸ்தாபன மூலமாய் செனட்டிற்கு நின்று வெகு வித்தியாசமான ஓட்டுகளால் தோல்வி யுற்றவர்.

அதாவது இவர் பட்டதாரி என்கிற பெருமையு டையவராக இருந்து கோயமுத்தூர் டவுன் முனிசிபல் கவுன்சிலிலேயே 30 ஓட்டுகளுக்கு மேல் இருந்தும், இவருக்குப் போட்டியாக நின்றவர் பட்டதாரி அல்லாத வராக இருந்தும், வெளியூர்க்காரராக இருந்தும், அவருக்கு சுமார் 60 ஓட்டுகள் கிடைத்ததுமல்லாமல் திரு. செட்டியார் 10 ஓட்டுகள் தான் பெற்று தோல்வி யடைந்தார்.

எஜுகேஷன் கவுன்சிலுக்கும் கோயம்புத்தூர் முனிஸி பாலிடி மூலமாக நின்று வேறொரு பட்டதாரி அல்லாதவர் இவருக்குப் போட்டியாக நிற்க இவர் வெற்றி பெற முடியாமல் பின்வாங்கிக் கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது.

தவிர திரு. செட்டியார் அவர்களுடைய வகுப்பில் யாருக்கும் அந்த ஸ்தானமில்லை. ஆதலால் அவ்வகுப் பாருக்காக செட்டியாருக்குக் கொடுக்கப்பட்டது என்று சொல்லுவதாக இருந்தாலோ அதுவும் இல்லை. ஏனெனில் அதே வகுப்பில் ஸ்ரீமான் செட்டியார் குடும்பத்திலேயே ஸ்ரீமான் செட்டியாரின் தமயனாருடைய குமாரரின் மனைவியாரும் தமது சின்ன மாமனாரின் குமாரத்தியும் ஆகிய ஸ்ரீமதி லலிதாம்பாள் அவர்கள் ஏற்கனவே அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

அப்படியிருக்க தோல்வியுற்றவரும், அதே வகுப்பில் மற்ற ஒரு நியமனம் பெற்ற வகுப்பினரும் ஆகிய கனவானை எதற்காக மந்திரி நியமித்தார்? அந்தச் சபைக்கு லாயக்குள்ள வேறு கனவான்களாவது அல்லது அச்சபையில் பிரதிநிதித்துவமடையாத வேறு வகுப்பாராவது இல்லை என்கிற காரணத்தினாலா?

அல்லது மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்கட்கு நியமனம் பெற்ற ஸ்ரீமான் செட்டியாரிலிருந்து முதலானது செய்து மரியாதை செய்தார் என்பதற்காகவா? இதைப் பற்றி எந்தப் பார்ப்பனப் பத்திரிகையாவது இதை அவர்களது நிருபர்களாவது பிரஸ்தாபித்தார்களா? எந்த சட்டசபை வாயாடிகளாவது வெளிப்படுத் தினார்களா என்று கேட்கின்றோம்? இது எப்படியோ இருக்கட்டும்.

இந்த நியமனத்தினால் பெரிய தீமையோ நன்மையோ ஏற்பட்டதாக நாம் சிறிதும் கவலைப் படவில்லை. அல்லது ஸ்ரீமான் செட்டியார் அந்த ஸ்தானத்திற்கு லாயக்கில்லாதவர் என்றும் சொல்வதற்கு வரவில்லை. நமது நாட்டுப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் கட்சி மந்திரிகளின் பேரில் சொல்லிக்கொண்டு வந்த குற்றங்களும் அவர்களுக்கு விரோதமாகச் செய்து கொண்டு வந்த பிரசுரங்களும் யோக்கிய மானதா? அயோக்கியத்தனமானதா? என்பதையும் இவை தேசத்திற்காகச் செய்யப்பட்டனவா? அல்லது பார்ப்பனர் ஆதிக்கத்திற்காகச் செய்யப் பட்டனவா? என்பதைப் பொதுஜனங்கள் அறிவதற்காகவே இதை குறிப்பிடு கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 19.06.1927

தமிழ் ஓவியா said...


கோவில்பட்டி திராவிடர் கழகம் தலைமைச் சொற்பொழிவு


அன்பர்களே! நமது நண்பரும் அரசியல் தலைவருமான திருவாளர் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் என்னைப்பற்றி சொல்லியவை யாவும் என்னிடம் உள்ள அன்பினா லல்லாது அவ்வளவும் உண்மை என்று தாங்கள் நம்பிவிடக் கூடாது என்று தங்களை கேட்டுக்கொள்ளு கிறேன். என்னை அவர் தலைவர் என்று சொன்னதற்கு ஆக நான் மிகுதியும் வெட்கப்படுகிறேன்.

அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவ ராயிருந்து நடத்திய பெருங்கிளர்ச்சியின்போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக் கொண்டிருந்தேன்.

அவரையும் அவர் போன்றோரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன். அன்றியும் நான் சிவஞான யோகிகள் வாசித்துக் கொடுத்த உபசாரப்பத்திர வாக்கியங்களுக்கும் நான் ஒரு சிறிதும் பொருத்தமுடையவன் அல்லன் ஆகிலும் அப்பத்திரத்தில் எனது கொள்கைகளைப் புகழ்ந்திருக்கும் விஷயங்களைப் பொருத்தவரை அக்கொள்கைக்கு அதை ஒரு நற்சாட்சிப் பத்திரமாக எடுத்துக்கொண்டு அதற்காக எனது நன்றியைச் செலுத்துகிறேன்.

இத்திராவிட சங்கம் 18ஆவது ஆண்டு விழா என்று சொல்லப்படுவதால் இதற்கு 18 ஆண்டுகள் முடிந் திருக்கிறது. நமது நாட்டில் திராவிடர் முன்னேற்ற சம்பந்தமாய் ஏதாவது இயக்கங்கள் மூலம் பேசுவதா யிருந்தால் நமது எதிரிகள் உத்தியோகத்திற்காசைப்பட்ட யாரோ சில பார்ப்பனரல்லாதாரால் சமீபத்தில் திரா விடர்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு சுயநல இயக்கம் என்று சொல்லிவருவது உங் களுக்குத் தெரியும் ஆனால் இக்கழகம் அப்பேர்ப்பட்ட வர்களால் ஆக்கப்பட்டதா என்பதும் சுவாமி சிவஞான யோகிகள் ஏதாவது உத்தியோகத்திற்கு ஆசைப்பட்டு கிடைக்காமல் போனதற்காக ஆரம்பித்தாரா என்பதையும் அவருக்கு ஏதாவது உத்தியோகம் வேண்டியிருக் கிறதா என்பதையும் திருவள்ளுவருக்கு உத்தியோகம் வேண்டியிருந்ததா, புத்தருக்கு உத்தியோகம் வேண்டி இருந்ததா, கபிலருக்கு உத்தியோகம் வேண்டி இருந்ததா, அவ்வைக்கு உத்தியோகம் வேண்டி இருந்ததா என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

அன்றியும் சுவாமி சிவஞான யோகிகள் காலத்தில் மாத்திரம் இம்மாதிரி முயற்சிகள் தோன்றிற்று என்பதாக நினைக்கிறீர்களா என்று இந்த நாட்டில் ஆரியர்கள் என்று கால் வைத்தார்களோ அன்று முதலே ஆரியர்-திராவிடர் என்கிற வேற்றுமையும் ஆரியர் சங்கம், திராவிடர் சங்கம் என்கிற இயக்கங்களும் சுயமரியாதை கிளர்ச்சிகளும் நாட்டில் ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இவைகளை எவ்வளவோ பாடுபட்டு நமது எதிரிகள் மறைக்க முயன்றாலும் இயற்கைத் தத்துவம் மறைக்கமுடியாமல் செய்துவருகிறது.

எதுவரையில் ஆரியர் வேதம் என்பது நமது நாட்டில் இருக்குமோ எதுவரை ஆரியர் ஆதிக்கம், ஆரியதர்ம பிரச்சாரசபை, வருணாசிரம தர்ம பிரச்சாரசபை நமது நாட்டில் இருக்குமோ அதுவரை நமது இயக்கம் அதாவது திராவிடர் முன்னேற்ற இயக்கம், சுய மரி யாதை இயக்கம், சமரச இயக்கம் இருந்து தீர வேண்டியதுதான்.

சமீப காலத்தில் ஆரியர்களால் தஞ்சை ஜில்லா துவார் என்கிற கிராமத்தில் கூட்டப்பட்ட பிராமண சம்மேளனம் என்னும் கூட்டத்தை அதன் நடவடிக் கைகளையும் பார்த்தவர்களும் இம்மாதிரி இருக்கப்பட்ட சங்கங்கள் அவசியமா இல்லையா என்பது யாவருக்கும் தெரிந்திருக்கும்.

மேலும் நமது நாட்டில் மதம் அடங்கிய வேதம் சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம், புராணம் முதலியவை களின் பேரால் ஆரிய பிரச்சாரம் செய்துவரும் வரையில் நாம் இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபட்டு இருந்து தீரவேண்டியதுதான். எனவே இம்முயற்சிகள் வெற்றி பெற வேண்டும்.

- குடிஅரசு- சொற்பொழிவு - 26.06.1927

தமிழ் ஓவியா said...


ஆர்ப்பாட்ட முழக்கங்கள் (15.10.2013)


1. வாழ்க வாழ்க வாழ்கவே,
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வாழ்க வாழ்க வாழ்கவே
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

3. பணி முடிப்போம், பணி முடிப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே,
தமிழர் தலைவர் தலைமையிலே
பணி முடிப்போம், பணி முடிப்போம்!

4. மத்திய அரசே மத்திய அரசே!
புறக்கணிப்பாய், புறக்கணிப்பாய்!
இலங்கையில் கூடுகின்ற, இலங்கையில் கூடுகின்ற
காமன்வெல்த் மாநாட்டை, காமன்வெல்த் மாநாட்டை
புறக்கணிப்பாய், புறக்கணிப்பாய்!

5. இனப்படு கொலையாளன்
இனப்படு கொலையாளன்
ராஜபக்சே தலைமையில்,
ராஜபக்சே தலைமையில்
கூடுகின்ற, கூடுகின்ற
காமன்வெல்த் மாநாட்டை, காமன்வெல்த் மாநாட்டை
புறக்கணிப்பாய், புறக்கணிப்பாய்!

6. மத்திய அரசே, மத்திய அரசே
வழங்காதே, வழங்காதே!
இலங்கை அரசுக்கு, இலங்கை அரசுக்கு
போர்க்கப்பலை, போர்க்கப்பலை
வழங்காதே, வழங்காதே!

7. தமிழர்களைக் கொன்று குவித்த
தமிழர்களைக் கொன்று குவித்த
இனவெறி அரசுக்கு, இனவெறி அரசுக்கு
போர்க்கப்பலா? போர்க்கப்பலா?
தமிழன் என்றால், தமிழன் என்றால்,
நாதியற்ற நாதியற்ற
கும்பலா, கும்பலா?

8. மத்திய அரசே, மத்திய அரசே!
தடுத்து நிறுத்து, தடுத்து நிறுத்து
தமிழக மீனவர்கள், தமிழக மீனவர்கள்
தாக்கப்படுவதை தாக்கப்படுவதைத்
தடுத்து நிறுத்து, தடுத்து நிறுத்து!

9. கச்சத்தீவை கச்சத்தீவை!
மீட்டெடு, மீட்டெடு!
தமிழக மீனவர்களை தமிழக மீனவர்களைக்
காத்திடு, காத்திடு!

10. போராடுவோம், போராடுவோம்
வெற்றி கிட்டும்வரை, வெற்றி கிட்டும்வரை
போராடுவோம், போராடுவோம்!

11. பணி முடிப்போம், பணி முடிப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே,
தமிழர் தலைவர் தலைமையிலே,
பணி முடிப்போம், பணி முடிப்போம்!

12. வெல்க, வெல்க, வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

தமிழ் ஓவியா said...


விஷ வித்து

-அவிஜெய்

1) அண்ணனுக்கு ஒரு தம்பியுண்டு - அவர்
அன்புடன் வாழ்ந்திட்ட காலம் உண்டு;
அண்ணனுக்குப் பிள்ளை நூறு என்பார் - தம்பி
ஐந்து பிள்ளைகளின் தந்தையானான்!ஹீ

2) மூத்தவன் பிள்ளைகள் கவுரவராம் - தம்பி
பாண்டுவின் புத்திரர் பாண்டவராம்!
நேத்திரம் இல்லாத அண்ணன் மகன் - அங்கு
நாட்டினை ஆண்டிடல் நீதியென்றார்!

3) பாசமும் நேசமும் போனதப்பா - பகைப் பங்காளிகள் என்று ஆனதப்பா;
தேசம் துண்டுதுண்டாய் மாறினதே - கொடும்
சூதாட்டம் பேயாட்டம் ஆடினதே!

4) சொத்து, சுகம், வீடு வைத்திழந்தான் - தங்கள்
தந்தையர் நாட்டினை வைத்திழந்தான்;
புத்திர, மித்திரர் வைத்திழந்தான் - அந்தப்
பாண்டவர் மூத்தவன் தர்மன் என்பான்!

5) தம்பியர் நால்வரை வைத்திழந்தான் - பின்னர்
தன்னையே தோற்றவன் தலைகுனிந்தான்!
எஞ்சியது ஒன்று உண்டல்லவா - உங்கள்
ஐவருக்கும் அவள் பெண்டல்லவா?

6) சோதரன் சொற்படி சூதுவைத்தான் -அந்தோ
தங்கக்குலமகள் நாதியற்றாள்!
பாதகன் துரியனே வென்றுவிட்டான் - அவன்
பாரதப் பண்பினைக் கொன்று விட்டான்!

7) சேலை உரிந்திடு! ஆணையிட்டான் , - ஐவர்
சேர்ந்தவள் விலைமகள்! ஊளையிட்டான்! - கதை
மாலையும் காலையும் கேட்டலுத்தார் - மக்கள்
மங்கையின் மாண்பினைப்போட்டுடைத்தார்.

8) சினிமாவில் ஆடிடும் பெண்கள் பலர் - மூடும்
சேலையே இல்லாமல் ஆடுகின்றார்!
மனித உடல் வைத்துச் சூதாடுவார் - ஒரு
மங்கையை நூறுபேர் கூறாடுவார்.

9) அனுதினம் டி.வி.யில் பெண் விருந்து - வஸ்த்ர
அபகரணம் தினம் கண்விருந்து!
வினைவிதைத் திட்டனர் ஓரிடத்தில் - விஷ
விருட்சமானது பாரதத்தில்!

தமிழ் ஓவியா said...


எல்லோரும் தமிழரென்றால் ஏன் நமக்குள் சாதிமத பேதம்?


- வீ.இரத்தினம், பெங்களூரு

மானத்தோடு தமிழர்கள் நாம்
மதிப்பாய் வாழவேண்டு மென்றால்,
முதலில் நாம் ஒன்றுபட வேண்டும் - வேற்றுமை
உணர்வுகளைக் கொன்றுவிட வேண்டும்.
ஈனமுற்று ஊனமுற்று
இருப்பதை நாம் ஒழித்துவிட்டு,
இரும்புத்தூண்போல் நிமிர்ந்துநிற்க வேண்டும் - கழகத்தமிழ்
ஏடுகளை முனைந்து கற்கவேண்டும்

கழகத்தமிழ் ஏடுகளைக்
கசடறநாம் கற்கா விட்டால்
கடந்தகால உண்மை தெரியாது - நம்மைக்
கவிழ்த்து விட்டோர் சூதும் புரியாது.
இழந்துவிட்ட பெருமைகளை
இப்போதே நாம் மீட்காவிட்டால்
அன்னைத் தமிழ் நாடுநமக்கில்லை - இதை
ஆராய்ந்து நீ ஏன் உணரவில்லை

எல்லோருமே தமிழரென்ற
எண்ணத்தை நாம் கொண்டிருந்தால்
ஏன் நமக்குள் சாதிமத பேதம் - இதை
ஒழிக்காதது ஏன் இறையவன் வேதம்?
வெல்லத்தமிழ் இலக்கியத்தை
விலக்கிவிட்டுக் கண்ணைமூடி
வீழ்ந்தோமே நாம் வீணர்களின் வழியில் - தனித்தனியே
தாழ்ந்தோமே நாம் சாதிப்படுகுழியில்

கடவுள் மதம் சாதி என்று
கண்ணை மூடி நம்பவைத்து
காலடியில் போட்டு மிதித்தாரே! - கேள்வி
கேட்கக்கூடாதென்றும் விதித்தாரே!
திடமாய் இதை எதிர்த்து வந்த
தந்தை பெரியார் வழிதான்
தீமைகளைக் கொல்லுமடா தம்பி - அதனால்
திரள்வோம் ஒன்றாய் அவர் வழியை நம்பி.

தமிழ் ஓவியா said...


வழக்கும் இல்லே வாய்தாவும் இல்லே!


- சிவகாசி மணியம்

கிட்டுப் பயல இப்படியே விட்டுவைக்கக் கூடாதுப்பா. பஞ்சாயத்து போர்டு தேர்தல்ல நம்மை எதிர்த்துவேலை செஞ்சான். அதோட விட்டானா? பஞ்சாயத்துல ஊழல்னு பெட்டிசன் மேல பெட்டிசன் போட்டுக்கிட்டிருக்கான். எத்தனை நாளைக்கு பொறுக்க முடியும்? ஏதாவது செய்தாகணும் வீருசாமி என்றார் அவ்வூர் ஊராட்சித் தலைவர் மாடசாமி

என்ன செய்யணும் சொல்லுங்கண்ணே...

கைய கால எடுத்துட்டு நொண்டி நொடமா அவன் அலையணும். நான் பார்க்கணும்...

அதெல்லாம் வெட்டி வேலைண்ணே. போலீசு, கோர்ட்டு, கேசுன்னு நாமதான் அலையணும். காதும் காதும் வச்ச மாதிரி கச்சிதமா முடிக்கணும். செஞ்சது யார்னு தெரியப்படாது...

மண்டையில இருக்குதே அதுக்கு கொஞ்சம் வேலை கொடுத்துப் பாரு

மண்டைனு சொன்னீங்களா. உடனே மூளை வேலை செய்ய ஆரம்பிச்சுடுச்சு. இப்படி கொஞ்சம் காதக் கொடுங்க... மாடசாமியின் காதில் மட்டும் கேட்கும்படி எதையோ சொன்னான் வீருசாமி. அவனது கையைப் பிடித்து குலுக்கியபடி பிரமாதம் அருமையான அய்டியா அதுபடி செஞ்சிரு. எவ் வளவு செலவானாலும் சரி என்றான் மாடசாமி

அந்த நாளும் வந்தது. வீரமாகாளி அம்மன் கோயில் திருவிழா நேர்த்திக் கடன் கழிக்கும் நாள். ஆணும், பெண்ணுமாக பக்தர்கள் வரிசை கட்டி உட்கார்ந்திருந்தார்கள். பூசாரி ஒருவன் சாமி ஆடியபடி வந்து கொண்டிருந்தான். அவனுடன் வந்த இன்னொரு பூசாரி கூடையிலிருந்து ஒவ் வொரு தேங்காயாய் எடுத்துத் தர, எதையோ முணுமுணுத்தபடி பக்தனின் மண்டையில் போட்டு உடைக்க பதற்றமும் பரபரப்பும் அங்கிருந்தோர் எல்லோரிடத்திலும்!

அந்த வரிசையில் கிட்டு பூசாரியை எதிர் பார்த்து உட்கார்ந்திருந்தான். மாடசாமியும் வீருசாமியும் ஓர் ஓரமாய் நின்றபடி நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

உடல் முழுக்க சாம்பல் பூச்சும் மாலையும் கழுத்துமாய் கிட்டு அருகில் பூசாரி வந்தபோது அவன் கையில் தேங்காய் ஒன்று தரப்பட்டது... அவன் மண்டையில் போட்டபோது அது உடையவில்லை. மறுபடியும் பூசாரி தன் பலத்தை பிரயோகித்தபோது தேங்காய் மட்டுமா உடைந்தது? கிட்டுவின் மண்டையும் தான். இரத்தம் ஊற்றெடுத்து அவன் உடலை நனைத்தது. கிட்டு மயங்கி விழுந்தான். உறவினர்கள் பதறியடித்து ஓடிவந்தார்கள்.

மருத்துவ மனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லும் பணி துரித கதியில் நடந்தது. ஆத்திரம் தீர அந்தக்காட்சியை நான்கு கண்கள் மட்டும் பார்த்து ரசித்துக் கொண் டிருந்தன.

பூசாரிக்கு நாம கொடுத்த பணம் வீண் போகலே... என்று மாடசாமியின் காதில் கிசு கிசுத்தான் வீருசாமி!

தமிழ் ஓவியா said...


மார்பகப் புற்றுநோயை தடுக்கும் அத்திப்பழம்!


அத்திப்பழம் ஆரோக்கியமான அழகைத் தரக்கூடிய ஊட்டச்சத்து மிக்க பழம் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அத்திப்பழத்தைத் தொடர்ந்து உட்கொள் பவர்களுக்கு மெனோபாஸ் பருவத்தில் பெண்களுக்கு வரக்கூடிய மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழத்தில் உள்ள பென்சால்டைஹைடு என்ற இரசாயனப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராகப் பணிபுரியக்கூடியது.

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்பருமனைக் கட்டுப்படுத்துகிறது. அத்திப்பழத்தில் வைட்டமின் பி, கே ஆகியவை அடங்கியுள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அடங்கியுள்ளது. இதில் அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு போன்றவை காணப்படுகின்றன.

அத்திப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது இதற்குக் காரணம் அதில் உள்ள பொட்டாசிய சத்துதான். பரபரப்பான இன்றைய சூழ்நிலையில் சமைத்து உண்பதை விட ரெடி மேட் உணவு வாழ்க்கைக்கு பெரும்பாலா னோர் மாறிவருகின்றனர். டின்களில் பதப்படுத் தப்பட்ட பொருட்கள், வறுத்த பொரித்த உணவு கள், துரித உணவுகள் இவற்றை அதிகம் உண்ண தொடங்கிவிட்டனர். இதில் அதிக அளவில் சோடியம் அடங்கியுள்ளது. இதுவே உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே அத்திப் பழத்தை உட்கொள்வதன் மூலம் உயர் ரத்த அழுத்த நோயை கட்டுப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள். இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சோகை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. அதே போல் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்புத் தேய்மானத்தையும் தடுக்கிறது. இப் பழத்தில் காணப்படும் பொட்டாசியம், சிறுநீரில் ஏற்படக்கூடிய கால்சிய இழப்பைக் குறைக்க உதவுகிறது. எனவே எலும்புகளை வலுவாக்க இருவிதங்களில் செயல் புரிகிறது அத்திப்பழம்.

இதில் உள்ள ஆக்ஸலேட் ரசாயனம் சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கிறது. அத்தி மர இலைகளைச் சாப்பிட்டு வந்தால் இன்சுலின் சுரப்பு சரியாவதோடு நீரிழிவு நோயில் இருந்து விடுபடலாம். இதயநோய் ஏற்படாமல் தடுக்கிறது மேலும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. நீரில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ப்பெருள் அத்தியில் காணப்படுவ தால் மலச்சிக்கல் பிரச்னைக்கும் தீர்வாக உள்ளது.

தமிழ் ஓவியா said...


மனச்சாட்சியை விற்காதீர்!


தமிழ்நாட்டில் நான் செய்துள்ள சிறிய தொண்டை முன்னிட்டும், எமது மேல்நாட்டுப் பிரயாணத்தை முன்னிட்டும் எம்மை உபசரிக்கும் நோக்கமாகச் செய்த வந்தனோபசாரங்களுக்கு நான் எனது உண்மையான நன்றியறிதலைச் செலுத்துகிறேன்.

நீங்கள் என்னை அதிகம் புகழ்ந்து விட்டீர்கள். இருந்தும் எனது கொள் கையை நீங்கள் பூரணமாக ஒப்புக் கொள்ளுகிறீர்கள் என்று இதனால் எனக்கு தோன்றுகிறது.

இன்று உலகத்தில் விடுதலையின் பேரால், சுதந்திரத்தின் பேரால் எவ்வளவு அக்கிரமங்கள் நடக்கின்றன.

மனிதாபிமானம், தேசாபிமானம், கடவுளபிமானம் என்ற பேரால் எத்தனை பேர் வயிறு பிழைக்கின்றனர்.

லட்சக்கணக்கான நமது சகோதரர், உடன் பிறந்தார், ஊனுடையின்றிக் கஷ்டப்பட்டுச் சாகின்ற இந்நாட்களில் அவர்களுடைய இன்னல்களை நீக்க வழி தேடுவதை விட்டுக் கடவுளைப் பற்றிப் பேசி என்ன பயன்?

நாம் ஆலோசனைக்காரர்
அதுவே நமது கொள்கை;
அதுவே சுயமரியாதைக் கட்சியின் அடிப்படையான கொள்கை

நமக்குத் தோன்றுகிற எண்ணங் களை ஆலோசித்து அலசிப்பார்க்க வேண்டும்.

அதற்குப் பயப்படக்கூடாது.

எனக்குக் கடவுளைப் பற்றியே கவலையில்லை.

உலகத்தில் எத்தனை பேர் இருக் கிறார்கள்?

அது போல் கடவுளும் ஒருவர் இருக் கட்டும் அதைப்பற்றி என்ன விசாரம்?

ஆனால் நாள் முழுவதும் பாடுபட்டும் வேலை செய்தும் குடிக்கக் கஞ்சிக்கு வழியில்லாது அலையும் நம் சகோதரர்களைத் திரும்பிப் பார் என்றால் நமது மதப்பிரசாரகர்கள் கடவுளைப் பார் என்கின்றார்கள்.

மக்கள் கஷ்டத்தினின்றும் விடுதலை யடைய வேண்டும்.

இதற்குச் சம்மதமான கடவுள் இருக் கட்டும் மற்றக் கடவுள்கள் வேண்டாம்.

இவ்வளவு தான் நாம் சொல்வது.

மக்கள் கஷ்டங்களை நிவர்த்தி பண்ண முடியாத தேசாபிமானம் வேண்டாம்.
தேசாபிமானம் நாளைக்கு;

இன்றைக்கு வயிற்றுச் சோற்றுக்கு
விசயங்களைப் பரிசோதனை செய்து பாருங்கள்.

பார்த்து அதற்கேற்றவாறு நட வுங்கள். உள்ளதை உள்ளவாறே நோக்குங்கள்.
நான் மனிதன்.

என் அறிவைக் கொண்டு விஷ யங்களைத் தேடி இம்முடிவுக்கு வந்தேன்.
ஒன்றையும் வெறுக்க வேண்டாம்.
ஒன்றையும் மறுக்கவும் வேண்டாம்.

அவர் சொல்லிவிட்டார் என்று ஒன்றையுஞ் செய்யாதேயுங்கள்.

இன்னொருவனுக்கு அடிமையாய் உங்கள் மனசாட்சியை விற்றுவிட வேண்டாம்.

(நூல்: அய்ரோப்பாவில் பெரியார், பக், 37)

தமிழ் ஓவியா said...


ஸ்டெம்செல் மூலம் குழந்தை பிறக்கச் செய்யலாம்!


இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மருத்துவ முன்னேற்றம் ஸ்டெம்செல் சிகிச்சை. புற்றுநோய் உள்பட பல பயங்கர நோய்களைக் குணமாக்குவ தாகக் கூறப்படுகிற ஸ்டெம் செல் சிகிச்சையின் மூலம், குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பது லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு. அதை பற்றி விளக்கமாகப் பேசுகிறார் குழந்தை யின்மை சிகிச்சை மருத்துவர் மகா லட்சுமி.

நமது உடலில் ரத்த அணுக்கள் உற்பத்தியாகிற இடங்கள் இரண்டு. 2 மார்பகங்களுக்கும் இடையில் உள்ள எலும்பிலும், இடுப்பெலும்பிலும்தான் உற்பத்தியாகும். அந்த இடங்களில் ஊசியைச் செலுத்தி, திசுக்களை எடுத்து, அதிலிருந்து ஸ்டெம் செல்களை பிரித்தெடுக்க வேண்டும். அப்படி எடுத்த செல்களை, உடலின் எந்த உறுப்பில் செலுத்தினாலும், அந்த உறுப்புக்குரிய செல்களாக உருமாறிக் கொள்ளும்.

உதாரணத்துக்கு ஒருவருக்கு கல்லீரல் பழுதடைந்து விட்டது என வைத்துக் கொள்வோம். வேலை செய்யாத கல்லீரல் பகுதியில் அவரது ஸ்டெம் செல்களை செலுத்தினால், அந்த செல்கள் கல்லீரல் செல்களாகவே மாறி, ஊட்டம் கிடைத்து, அந்த உறுப்பின் வளர்ச்சிக்கு உதவும். இப்படி இன்று சிறுநீரகம், இதயம், நுரையீரல் என எல்லா உறுப்பு மாற்று சிகிச்சை களுக்கும் ஸ்டெம் செல் பயன்படுகிறது. அதே டெக்னிக்தான் குழந்தையின்மை சிகிச்சையிலும் பயன்பட ஆரம்பித் திருக்கிறது.

பெண்களின் கருப்பையின் உள் சுவர் என்டோமெட்ரியம் எனப்படும். மாதவிலக்கின் போது அது உறைந்து, ரத்தப் போக்காக வெளியேறும். மாதவிடாய் நின்றதும், மறுபடி அந்தச் சுவர் வளர ஆரம்பிக்கும். கருத்தரித்து விட்டால், அது உறையாது. அதில்தான் கருவானது ஒட்டி வளர ஆரம்பிக்கும். பெண்களுக்கு வயது கூடக் கூட, அதாவது, மெனோபாஸ் கட்டத்தை நெருங்கும் போது, இந்த என்டோ மெட்ரியம் வளர்ச்சியும் குறைய ஆரம்பிக்கும்.

30 பிளஸ்சிலேயே சில பெண்களுக்கு திசுக்களின் பாதிப்பினால், இந்த என்டோமெட்ரியம், ப்ரீ மெச்சூர் ஏஜிங் எனப்படுகிற முன்கூட்டிய முதுமை நிலையை அடையும். உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை என இதற்கு எத்தனையோ கார ணங்கள்... அதன் தொடர்ச்சியாக, குழந்தையின்மைக்காக ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது, எல்லாம் நல்லபடியாக முடிந்தாலும், கடைசியில் கருவானது, ஒட்டாமலேயே போகும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதைத் தவிர இவர் களுக்கு வேறு வழியில்லை.

ஸ்கேன் மூலம் இதைக் கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பெண்ணின் உடலி லிருந்தே ஸ்டெம் செல்களை எடுத்து, உடனடியாக கருப்பையின் உள்ளே செலுத்தி, என்டோமெட்ரியத்தை வளரச் செய்யலாம். அதன் பிறகு ஐ.வி.எஃப் சிகிச்சை மேற்கொள்ளும் போது, கருவானது ஒட்டி, நன்கு வளரும் என நிரூபிக்கப்பட்டு வரு கிறது.

ஸ்டெம் செல்களை செலுத்திய பிறகு, அடுத்த மாதவிலக்கு வரும் வரை காத்திருந்து, என்டோமெட்ரியம் வளர்ச்சியடைகிறதா எனப் பார்த்து, பிறகு குழந்தையின்மைக்கான சிகிச் சையைத் தொடரலாம். குழந்தை யில்லாத தம்பதியருக்கு இது நிச்சயம் இனிப்பான செய்தியாக அமையும்... என்கிறார் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவர் மகாலட்சுமி.

தமிழ் ஓவியா said...


கொள்கைக்கா - வருமானத்திற்கா?


கும்பகோணத்தில் ஆர்.சி. வெங்கட்ராமன் என்ற பெரியவர் ஒருவர் இருந்தார். தந்தை பெரியார் அபிமானி. 1928இல் குற்றாலத்திற்குக் குடும்பத்துடன் சென்று தங்கி இருந்தார். தந்தை பெரியார் அவர்களும் அந்தக் கால கட்டத்தில் குற்றாலம் சென்று தங்கினார். ஒரு நாள் காலை குற்றாலத்தில் மத்தாளம் பாறை பாட்டையில் தந்தை பெரியார், குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன், தந்தை பெரியாரின் மாப்பிள்ளை ஆகிய மூன்று பேரும் பேசிக் கொண்டு சென்றார்கள்.

அப்பொழுது குடந்தை ஆர்.சி. வெங்கட்ராமன் தந்தை பெரியாரிடம் கூறினார். நமது குடிஅரசு இதழுக்கு ஒரு லட்சம் சந்தாதார் சேரும்வரை இராமாயண ஆராய்ச்சி போன்ற கட்டுரைகளை நிறுத்தி வைப்பது நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது என்று கூறினார். உடன் வந்த மாப்பிள்ளையும் இந்த கருத்தை ஏற்றுக் கொண்டு இதைப் பெரியார் ஏற்க மறுக்கிறார் என்றும் கூறினார்.

அதற்குத் தந்தை பெரியார் புன்னகையுடன் பதில் கூறினார்.

நான் வருமானத்தை முன்னிட்டு பத்திரிகை நடத்தவில்லை; ஒரே ஒரு சந்தாதாரர் மட்டும் இருந்தாலும் நான் எனது கொள்கையைத் தெரிவித்தே தீருவேன். இதுவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நம் மக்கள் அறியாமையில் மூழ்கி இருந்தது போதாதா என்று பளிச் சென்று பதிலளித்தார்.

- குடந்தை ஆர். வெங்கட்ராமன் எழுதிய கட்டுரையிலிருந்து விடுதலை 17.5.1959)

தமிழ் ஓவியா said...


கவிதைக்குப் பாராட்டு!



06.10.2013 தேதியிட்ட விடுதலை - ஞாயிறு மலரில் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் படைத்து எழுதியுள்ள இடியும், அடியும் இனி யாருக்கு? ஓர் அரிய கவிதைப் படைப்பு. கழகத்தின் பாரம்பரிய அடிப்படை மாண்புகளில் ஒன்றான, உணர்ச்சி பிரவாகத்தின் சுழற்சிகளிடையே அறிவும், பண்பும், அடிப்படை மனித உறவைச் சிதைக்காத நாகரிகமும் என்ற கோட்பாடு, மிகத் தெளிவாகவே காணக் கிடக்கிறது.

அடித்தவன் பெயர் யாருக்கடா தெரியும்? அடிபட்டவர் அல்லவா ஒளிர்கிறார் என்ற வரிகள், அவரின் முதிர்ச்சியையும், பண்பையும், காட்டுவது மட்டுமின்றி, ஒரு மிக உயர்ந்த கவிதை வளத்தையும் காட்டுகிறது. அடைவடிஉ ழுசயனே ளுவலடந என அறியப்படும் எளிய சொற்கள் அரிய கருத்துக்கள் என்ற அடிப்படையில் அமைந்துள்ளன.

கவிஞருக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பேராசிரியர் எஸ்.எஃப்.என். செல்லையா, சென்னை-40

தமிழ் ஓவியா said...

யாருக்கும் ஓட்டு இல்லை வசதியை ஏற்படுத்த உத்தரவு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடில்லி, அக்.13- வாக்குப்பதிவு இயந்திரத்தில், யாருக்கும் ஓட்டு இல்லை வசதியை ஏற்படுத்துமாறு உத்தரவிட்டு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

தேர்தலில் யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை என்றால், வேட்பாளர்களை புறக்கணிக்கும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தி தரவேண் டும் என்று கோரி, சிவில் உரிமைகளுக்கான மக்கள் இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்கு அளிக்க விரும்பாத வாக்காளர்களுக்கு அதற்கான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்றும், இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், வேட் பாளர்களின் பெயர் பட்டியலுக்கு அடியில் யாருக்கும் வாக்கு இல்லை (ஆங்கிலத்தில் நோட்டா) என்ற வாசகத்துடன் ஒரு பொத்தானை அமைக்க வேண் டும் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி தீர்ப்பு கூறியது. யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாத வாக்காளர்கள், தற்போது அதற்காக வாக்குச் சாவடியில் வைக்கப்படும் பதிவேட்டில் கையெழுத் திடும் முறை ரகசியத்தை காப்பதாக இல்லை என்பதால் அந்த முறையை ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராஜஸ் தான், மத்தியபிரதேசம், டில்லி, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருக்கிறது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இனி வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களில் யாருக்கும் ஓட்டு இல்லை என்ற வசதியை ஏற்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் முடிந்ததும் கடைசியாக, யாருக்கும் வாக்கு இல்லை என்ற வாசகத்தையும் அதற்குரிய பொத்தானையும் அமைக்க வேண்டும். யாருக்கும் வாக்கு இல்லை என்ற வாசகம் அந்தந்த மாநில மொழிகளில் இடம்பெற வேண்டும்.

ஆங்கிலம் அலுவல் மொழியாக இருக்கும் வட கிழக்கு மாநிலங்களில், யாருக்கும் வாக்கு இல்லை என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம் பெற வேண்டும்.

ஓட்டு எண்ணிக்கையின் போது, யாருக்கும் வாக்கு இல்லை என்று பதிவான ஓட்டுகளையும் எண்ணி அறிவிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் ஓட்டு இல்லை வசதியை ஏற்படுத்தி செயல்படுத்த தேவையான பயிற்சிகளை தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


சி(ற)வப்புப் பூஜை!


கொல்கத்தாவில் துர்கா பூஜை விமர்சை யாகக் கொண்டாடப்படும் மூடப் பண்டிகை. மார்க் ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியில்கூட துர்கா பூஜைக்குத் தான் அரசு விழா முன் பணம் வழங்கப்படும்.

தோழர் ஜோதிபாசு அவர்கள் தலைமையி லான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராகவிருந்த சுபாஷ் சக்ரவர்த்தி கொல் கத்தா காளி கோயிலுக் குச் சென்று நேர்த்திக் கடன் கழித்து, கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தும் அளவுக்கு (2006 செப்டம்பர்) துர்க்கா பூஜை பெரும் பாதிப்பை அங்கு ஏற் படுத்தி விட்டது. (முதல் வர் ஜோதிபாசு அதனைக் கண்டித்தார் என்பது மகிழ்ச்சியான சேதி!)

இப்பொழுது ஒரு தகவல் கொல்கத்தாவிலி ருந்து கிடைத்திருக்கிறது. கொல்கத்தாவில் குறிப் பாக சோனாக்க்ஷி பகுதி யில் சிவப்பு விளக்குப் பகுதியில் 10 ஆயிரம் பாலியல் தொழிலாளர் கள் இருக்கிறார்கள். ஆசியாவிலேயே இங்கு தான் அதிகம்!

அவர்களுக்கு மட்டும் பக்தி இருக்காதா? இவர் கள் துர்கா பூஜைக்காகத் தனிப் பந்தல் அமைத்துப் பூஜை கொண்டாடுகிறார் கள் என்பதுதான் அந்தத் தகவல்!

ஆயுதப் பூஜை கொண் டாடுவது சாதாரணமான தல்ல; செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் தெய் வத்துக்குச் சமமாக தொழிலுக்குத் தேவைப் படும் தளவாடங்களை, கருவிகளைக் கும்பிடு வது அவசியம் அல்லவா? என்று வெண்டைக்காய், விளக்கெண்ணெய் விளக்கங்களைச் சொல் லுவதுண்டு பக்த சிரோன் மணிகள்.

தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில், போகிற போக்கில் சில கேள்விகளைக் கேட்ப துண்டு. ஆயுத பூஜையில் நகரசுத்தி தொழிலாளி எதை வைத்துப் படைப் பான்? விலை மகளிர் (அந்தக் காலத்தில் புழக் கத்தில் இருந்த சொல் லாடல் அது!) பூஜைக் குரிய பொருள் எது? என்று கேட்பார்கள்.

ஆயிரக்கணக்கில் கூடி தந்தை பெரியார் உரையைச் செவி மடுக் கும் மக்களிடையே வெடிச் சிரிப்புக் கிளம்பும் - கை தட்டி வரவேற் பார்கள்.

காலுக்கு மிகவும் பாதுகாப்புக்கு பயன்படக் கூடியது செருப்பு தானே? வீட்டைச் சுத்தப்படுத்த அவசியமானது விளக்க மாறு தானே?

ஆயுத பூஜையின் போது இவைகளுக்கும் பூஜை உண்டா? கோபப் படாமல் புத்தியைக் கொஞ்சம் செலவிட்டுப் பார்த்தால் - பகுத்தறிவு வாதிகளின் இந்தக் கேள்விகளில் அடங்கி இருக்கும் நியாயமும், நேர்மையும், சிந்தனையும் புலப்படுமே! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


மதவாத சக்திகளுக்கு எதிராக மதச் சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்

ஜாதிக் கூட்டணியைப் புறக்கணிப்போம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தீர்மானங்கள்

சென்னை, அக்.13- மதவாத சக்திகளுக்கு எதிராக மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்; தமிழ்நாட்டில் அணி சேரும் ஜாதிய சக்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என்பது உட்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 11 தீர்மானங் களை நிறைவேற்றியுள்ளது.
ஜாதி வெறியர்களைக் கட்டுப்படுத்துக
தமிழ்நாட்டில் ஜாதி வெறியர்கள் மீண்டும் வெளிப்படையாக அணி சேர்ந்திருப்பது இங்குள்ள சனநாயக சக்திகளுக்கு விடப்பட்டுள்ள சவாலாகும். வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவதற்கு அவர்கள் திட்டமிட்டுள் ளனர். அதை இப்போதே தடுத்து நிறுத்துவது தமிழக அரசின் கடமையாகும். ஜாதியவாத சக்திகள் மீது தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக் கைகளை இச்செயற்குழு பாராட்டுகிறது. அதில் தமிழக அரசு உறுதியோடு இருக்க வேண்டு மெனவும் கேட்டுக்கொள்கிறது. தலித் மக்களுக்கு மட்டுமின்றி நாட்டின் சனநாயக நெறிமுறை களுக்கும், அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கின்ற ஜாதிய சக்திகளைப் புறக்கணிக்க வேண்டுமென அனைத்துச் சனநாயக சக்திகளையும் இச்செயற்குழு அறைகூவி அழைக் கிறது.

தமிழக மீனவர்களைக் காப்பாற்றுக

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற் படையின் தாக்குதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அவர்களைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசோ, மெத்தனம் காட்டுகிறது. எல்லைப் புறத்தில் இராணுவ வீரர்களின் மீதான தாக்குதல் எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரான சவாலாகக் கருதப்படுகிறதோ அதுபோன்றே தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலும் இந்திய இறை யாண்மைக்கு எதிரான சவாலாகவே கருதப்பட வேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு அவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான பயிற்சியும், சாதனங்களும் வழங் கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது

2013 நவம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமரோ, பிரதிநிதிகளோ பங்கேற்கக் கூடாது என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு. இதை வலியுறுத்தி முதலில் அறிக்கை வெளியிட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். தற்போது இக்கோரிக்கைக்கான பட்டினிப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் தோழர் தியாகு அவர் களுக்கு இச்செயற்குழு தனது ஆதரவைத் தெரி வித்துக் கொள்கிறது. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என மத்திய அரசு உடனடி யாக அறிவிக்க வேண்டும். இந்திய அரசுக்கு அழுத்தம் தரும் விதமாக தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் போராட முன்வரவேண்டுமென இச்செயற்குழு அழைப்பு விடுக்கிறது.

ஏற்காடு இடைத்தேர்தல் - திமுகவுக்கு ஆதரவு

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, திமுக தலைவர் கலைஞர் அவர்கள் கடிதம் அனுப்பி யுள்ளார். அந்த வேண்டுகோளை ஏற்று திமுக வேட்பாளரை ஆதரிப்பது எனவும், அவரது வெற்றிக்கு அயராது தேர்தல் பணியாற்றுவது எனவும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது. இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சி வெற்றி பெறுவதே அண்மைக்கால நடைமுறையாகிவிட்டது. எனினும், ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது ஆளும் அதிமுக ஆட்சிக்கு ஒரு அறிவுறுத்தலாக அமையும். ஆகவே, இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுமாறு ஏற்காடு தொகுதி மக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதற்கு அரசியல் கட்சிகள் யாவும் தயாராகி வருகின்றன. பாரதிய சனதா கட்சி, தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்துள்ளதையடுத்து இந்தத் தேர்தல் மதவாத சக்திகளுக்கும் மதச்சார்பற்ற சக்திகளுக்கும் இடையிலான போட்டியாக உருவெடுத்திருக்கிறது. மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், அது சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல சனநாயக சக்திகள் அனைவருக்குமே ஆபத்தாகிவிடும். நாட்டை மதவாத ஆபத்திலிருந்து பாதுகாப்பது இன்று முதன்மையான கடமையாக உள்ளது. எனவே, மதவாத சக்திகளுக்கு எதிராக இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரள வேண்டுமென இச் செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...


உமாபாரதி இப்படி...


மத்தியப் பிரதேசத்தில் செல்வி உமாபாரதி முதல் அமைச்ச ராகவிருந்தார். அவர் காலையில் எழுந்து வெளியில் செல்லுவதாக இருந்தால் பசு மாடு தரிசனம் தான் முதலாவது: வெளியூர் சென்றாலும் அங்கும் பசு மாடு தயாராக இருக்க வேண்டுமாம். முதல் அமைச்சராக இருந்தபோது கடைப்பிடிக்கப்பட்ட இந்தச் சடங்கு முதலமைச்சராக இல்லாதநிலையில் இப்பொழுதும் தொடரப்படுகிறதா என்று தெரிய வில்லை.

ஒரு கேள்வி: இவ்வளவு சாஸ்திர சம்பிரதாயங் களைக் கறாராகக் கடைப்பிடித்த உமாபாரதி - ம.பி. முதல் அமைச்சர் பதவியில் தொடர்ந்து இருக்க முடியவில்லையே ஏன்! சிந்திக்க வேண்டாமா?

தமிழ் ஓவியா said...


மோடியின் கலக்கம்


உத்தரப்பிரதேச மாநி லத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண் ணிக்கை 80. எல்லா அரசியல் கட்சிகளும் அம்மாநிலத் தையே குறி வைக்கின்றன.

பி.ஜே.பி.யின் பிரதமருக் கான வேட்பாளர் மோடி தன் விசுவாசியான அமித்ஷாவை உ.பி.க்குப் பொறுப்பாளராக நியமித்துள்ளார். ஆனால், உ.பி.யில் ஏற்பாடு செய்யப்பட்ட பா.ஜ.க விழாவில், காணும் விளம்பரங்களில் எல்லாம் அத்வானி படம் தானாம்; வெறுத்துப் போனார் அமித்ஷா. வேறு வழியில்லை. விழாவையே புறக்கணித்து விட்டார். சிறப்பு விருந்தினர் அத்வானிக்கு அவ்விழாவில் ஏகப்பட்ட புகழ் மாலைகளாம். மோடி கலங்குகிறாராம்.

தமிழ் ஓவியா said...


முதல் அமைச்சர் ஜெயலலிதா சொல்லுவதும் - அண்ணா கூறியதும்

நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளில் ஆயுத பூஜையையும், அதற்கு அடுத்த நாளில் விஜய தசமியையும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த ஆய்த பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழி பட்டால் வீரம் பிறக்கும், லட்சுமி வடிவில் வழி பட்டால் செல்வம் பெருகும், சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி, பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.
ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில் மக்கள் தத்தமது தொழிற் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுதபூஜையாகும்.

விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக் கையில் மக்கள் அன்னை மகாசக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும், செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும், உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண் டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

- ஜெ.ஜெயலலிதா, நமது எம்.ஜி.ஆர், நாள்: 13.10.2013


ஆயுதபூஜை - சரஸ்வதி பூஜை பற்றி அண்ணா

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடாகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுதபூஜை செய்தவர்களல்லார் நவராத்திரி கொண்டாடினவர்களல்லர்.

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே

சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை!

ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும், மண்வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை

தமிழ் ஓவியா said...

கர்ப்பூரம் கூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூஜை அறியாதவன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம். உலகுக்குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும், மிரளாமல் யோசி, உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாள்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்த பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டு பிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய; அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!

எல்லாம் மேனாட்டன் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப்பார்.

சரஸ்வதி பூசை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராயட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள்

சரஸ்வதி பூசை; ஆயுத பூஜை,

செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவில் இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச்சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரஸ்வதி பூஜை; ஆயுத பூஜை நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூஜைகள் செய்தறியாதவர், நாம் ஆச்சரியப்படும் படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலே கூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

யோசித்துப்பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

திராவிட நாடு - (26.10.1947)

கட்சியின் பெயரில் அண்ணா!

அண்ணாவின் கொள்கையோ படுகுழியில், அண்ணா திமுக தொண்டர்களே சிந்திப்பீர்! சிந்திப்பீர்!

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களே, களம் காண வாரீர்!


கழகத் தோழர்களே!

வரும் 15.10.2013 செவ்வாயன்று திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

ஈழத் தமிழர்களின் உரிமைகள் கோரி, கொடுங்கோலன் ராஜபக்சே தலைமையேற்று நடத்த உள்ள காமன் வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி -
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், சிங்கள மீனவர்களாலும் நாளும் தாக்கப்படும் - சிறை பிடிக்கப்படும் கொடுமையைத் தடுக்க வலியுறுத்தி - தமிழ்நாடெங்கும் கழக மாவட்டங்களில் வரும் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

சென்னையில் தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார்.

கழகப் பொறுப்பாளர்களே, செவ்வாயன்று நாம் காணும் களம் - தமிழ்நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்! வேண்டும்!!

இந்திய அரசின் காதுகளில் ஒலிக்க வேண்டும். அவர்களின் கண்களையும் திறக்க வேண்டும்! - வேண்டும்!!

தோழர்களே ஒருங்கிணைப்பீர்!

தோள் தூக்கி வெண்கலக் குரல் கொடுப்பீர்! குரல் கொடுப்பீர்!!

தமிழ் ஓவியா said...

பெரியார் ஒருவர்தான் பெரியார்
அவர் போல் பிறர் யார் அவர் பெருமைக்கு உரியார் -
தந்தை பெரியார்

பகைவர் தமை காட்டி வதைத்த கூர் ஈட்டி
தமிழர் புகழ்நாட்டி வாழந்த வழிகாட்டி -
தந்தை பெரியார்

மாட்டைத் தீண்டுவான் ஆட்டைத் தீண்டுவான்
மனிதனைத் தீண்ட மறுத்தானே!

நாட்டை உலுக்கினான் பெரியார் அவர் தொண்டன்
நரிகளின் வாலை அறுத்தானே!

கோடை எழில் கொஞ்சும் பெண்களை உலகினில்
கொடியவன் கூட்டில் அடைத்து வைத்தான்!

காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரை
கிழவன்; துடைத்து வைத்தான் - தந்தை பெரியார்

மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!

வானம் உள்ள வரை வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை - தந்தை பெரியார்

கவிஞர் காசி ஆனந்தன்..

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயம்



நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்தின் அத்தனைப் பேரையும் பொறுத் ததே ஒழிய, மூன்றே முக்கால் பேர்களைப் பொறுத்தது அல்ல.
(விடுதலை, 2.4.1966)

தமிழ் ஓவியா said...


பிராமின் டுடே!


பிராமின் டுடே என்ற ஒரு இதழைப் பார்ப்பனர்கள் நடத்தி வருகிறார்கள். அதனைப் புரட்ட நேர்ந்தபோது பிரா மணர்களும் உயர் கல்வியும் எனும் தலைப்பில் ஒரு கட் டுரை.

கடந்த 5 வருடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி களில் தகுதியான அடிப் படையில் அனுமதி பெற்று உள்ளே நுழைந்த பிராமணர் கள் ஒற்றை இலக்கத்தை ஒரு போதும் தாண்டியதில்லை

பணம் படைத்த பார்ப் பனர்கள் தனியார் கல்லூரி களில் தகுதியின் அடிப் படையில் படித்து மருத்துவ ராக முடியுமேயன்றி, தன் மான இனக்குஞ்சுகளுக்குக் கிட்டியதுபோக மருத்துவக் கல்லூரியை ஏழைப் பிராம ணர்கள் எட்டிப் பார்க்க முடி யாது என்று எழுதுகிறது. அந்த ஏடு.

அவர்களை அறியாம லேயே, ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளதைக் கவனிக்க வேண்டுமே! கடந்த 5 ஆண் டுகளாகத்தான், அவாளுக்கு மருத்துவக் கல்லூரியில் ஒற்றை இலக்கத்தைத் தாண்ட முடியவில்லை - அப்படியானால் 5 ஆண்டு களுக்குமுன் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்பட்டன என்பது சொல்லாமலே விளங்கும்.

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்த வர்களை எப்படி அடைமொழி கொடுத்து அந்த ஏடு எழுது கிறது என்பதைக் கவனித் தீர்களா?

தன்மான இனக்குஞ்சு களாம் இதற்குள்தான் எவ் வளவு ஆத்திரமும் ஏகடியமும் அலை அடித்து நிற்கின்றன!

தன்மான இனக்குஞ்சு என்பதில் உள்ள தன்மானம் என்பது பார்ப்பனர் அல்லா தார் உணர்வினைத் தட்டி எழுப்பிய இயக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது - இனக்குஞ்சு என்பது அவாள் வேறு இனம், திராவிடர்கள் வேறு இனம் என்பதை இனம் பிரித்துக்காட்டுகிறதா இல்லையா?

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்தி ருக்க வேண்டும், என்று நிபந்தனை வைத்திருந்த போது, எந்த இனக்குஞ்சுகள் மருத்துவக் கல்லூரி இடங் கள் முழுவதையும் முழுச் சுளையாக முழுங்கின?

இந்த நேரத்தில், தமிழர் செல்வம் சர். ஏ.டி. பன்னீர் செல்வம் கூறியதை, நினைத் துப் பார்க்க வேண்டும்.

திரு. பனகல் அரசர் காலத்தில்தான், மருத்துவ இலாக்கா வெள்ளையரிட மிருந்து பிடுங்கித் தமிழர் கையில் ஒப்படைக்கப்பட் டது. ஆனால் அதன் பயன் என்ன ஆயிற்று என்றால் டாக்டர் ராஜன் அய்யங்கார் என்ற ஒரு பார்ப்பனர் வைத்திய இலாகா மந்திரி யாக வந்தவுடன், கவுரவ டாக்டர்களை நியமிக் கிறேன் என்கிற பெயரால், ஒரு சில மாதங்களுக்குள் 225 பேர்களைக் கவுரவ டாக்டர்களாக நியமித்தார். இந்த 225 பேர்களில் 125 பேர் பார்ப்பனர்கள்; இதில் ஒரு பெரிய அக்கிரமம் என்னவென்றால், ஜெனரல் ஆஸ்பத்திரியில் பிரபல டாக்டராக இருந்த டாக்டர் சடகோபனை வெளியேற்றி விட்டு, அவருக்குப் பதி லாக, மூன்று பார்ப்பனர் களைத் திணித்தார். இவ்வித ஆட்சியை இனி நடத்தவிட மாட்டோம் என்பதன் அறிகுறிதான் பெரியார் அவர்கள் கூறும் தமிழ்நாடு தமிழருக்கே ஆகும் என்று சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சொன் னதைக் கொஞ்சம் நினைத் துப் பார்த்தால் பிராமின் டுடேயின் அங்கலாய்ப்பில் சற்றும் நியாயம் இல்லை என்பது விளங்காதா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


கருணையே வடிவானவன் கடவுளா? ம.பி.யில் பக்தர்கள் 120 பேர் பலி!

ரத்தன்கர், அக்.14- மத்தியப் பிரதேச மாநி லம் ரத்தன்கர் கோயி லில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குறைந் தது 120 பேர் உயிரிழந் திருப்பர் என்று அஞ்சப் படுகிறது. பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் நீதி விசா ரணைக்கு உத்தரவிட் டுள்ளார். மேலும், டிஜிபி, தலைமைச் செயலர் ஆகியோரை தாதியா பகுதிக்கு விரைந்து சென்று நிலைமையைக் கண்காணிக்குமாறும், பாதுகாப்பில் ஈடுபடு மாறும் உத்தரவிட் டுள்ளார்.

தேர்தல் கால நன்ன டைத்தை நெறிமுறை கள் அமலில் உள்ள மாநிலம் என்பதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இழப் பீடு அறிவித்துள்ளார் சிவராஜ் சிங் சவுஹான். உடனடி இழப்பீடாக ரூ.1.5 லட்சம் உயிரிழந் தோரின் குடும்பத்தின ருக்கும், ரூ. 50 ஆயிரம் பலத்த காயமடைந்தோ ருக்கும், ரூ. 25 ஆயிரம் லேசான காயமடைந் தோருக்கும் என அறி வித்துள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான்

ஞாயிற்றுக்கிழமை அன்று துர்கா பூஜை நேரத்தில், கோயிலுக்குச் செல்லும் சிந்த் ஆற்றின் பாலத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் கடந்து செல்ல முற்பட்டுள்ளனர். அப் போது நெரிசல் அதிக ரித்து உயிரிழப்பு ஏற் பட்டுள்ளது. அதேநேரத் தில், கூட்டத்தைக் கட் டுப்படுத்தி கோயிலுக்கு வரிசையாகச் செல்ல வைக்க காவல்துறையி னர் முயன்றுள்ளனர். அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டுள் ளது. இதனால், நூற்றுக் கும் அதிகமான பக்தர்கள் அலறியடித்து, சிந்த் ஆற்றின் பாலத்தை நோக்கி ஓடியுள்ளனர். அந்த நேரத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. இதில் சிக்கியும் சிலர் உயிரிழந் தனர் என்று கூறப்படு கிறது.

ஆனால், காவல்துறை யினர் லேசான தடியடி நடத்தினர் என்று கூறப் படுவதை டிஜிபி சம்பால் ரான்சே மறுத்துள்ளார். இது, கூட்டத்தில் குழப் பத்தை ஏற்படுத்தி நெரி சலை ஏற்படுத்த ஒரு சில ரால் பக்தர்களிடையே பரப்பட்ட வதந்தி என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட் டனர். நிலைமை சீரடைய சுமார் 2 மணி நேரம் ஆனது. இந்தக் களேபரத்தில் ஆற்றினுள் சுமார் 40 பக்தர்கள் விழுந்திருக்கலாம் என் றும் அவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டி ருப்பதாகவும் கூறப்படு கிறது.

தமிழ் ஓவியா said...


நீதிப் போதனையா?


மாணவர்கள் மத்தியில் ஒழுக்கக் கேடு தலை விரித்தாடுகிறது, பள்ளியில் படிக்கும் மாண வர்களே ஆசிரியரைக் கொலை செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகப் போய் விட்டது என்று பொதுவான அலறல் சத்தம் நாடு எங்கும் கேட்கிறது.

மாணவர்களை மட்டும் தனியே பிரித்துக் குற்றப் பத்திரிகை படிப்பதில் பயனில்லை; ஒட்டு மொத்த சமூகத்தின் சுற்றுச் சூழலேகூட ஒரு வகையில் பொறுப்புதான்.

ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள்? வழக்குரைஞர்கள் எப்படி இருக்கிறார்கள்? மருத்துவர்கள் எப்படி இருக்கிறார்கள்? அரசியல்வாதிகள் எப்படி இருக்கிறார்கள்? ஏன், சில நீதிபதிகளே எப்படி நடந்து கொள் கிறார்கள்?

உலகத்துக்கே புத்திமதி சொல்லப் புறப் பட்டுள்ளதாக மார்தட்டிக் கொள்ளும் ஊடகங்களின் யோக்கியதை தான் என்ன?

மதவாதிகள் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்? காவி வேடம் தரிக்கும் சாமியார்களின் லீலைகள் தான் சாதாரண மானவையா? அர்ச்சகப் பார்ப்பான் தேவநாதன் எப்படி நடந்து கொண்டான்? லோகக் குரு சங்கராச்சாரியாரின் உண்மை சுயரூபம் தான் என்ன... என்ன?

நாம் வணங்கும் கடவுள்களின் கதை என்ன? கற்பழிக்காத கடவுள் உண்டா, சண்டை போடாத கடவுள் உண்டா? திருமங்கை ஆழ்வார் நாகப்பட்டினத்தில் இருந்த அய்ம்பொன் னாலான புத்தர் சிலையைத் திருடித்தானே சிறீரங்கம் ரெங்கநாதன் கோயிலுக்கு மதிற் சுவர் எழுப்பினான்? இப்படிப்பட்டவன்முக்கிய ஆழ்வார் பட்டியலில் இடம் பிடித்து விட்டானே.

பவுத்த, சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள் தருவாயாக என்று கடவுளிடம் விண்ணப்பம் போடுபவன் தானே சைவ சமயக் குரவனான திருஞானசம்பந்தன் - இவன் சாதாரணமானவனா? பார்வதித் தேவியாரின் ஞானப் பால் உண்டவனாயிற்றே!

சர்வமும் கந்தையாக ஒழுக்கக் கேடாக மலிந்து கிடக்கும் ஒரு நாட்டில் மாணவர்களை மட்டும் பிரித்துப் பார்ப்பதில் பயன் என்ன?

பிள்ளைகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு தானே அரைகுறை ஆடை ஆபாசப் படக் காட்சிகளைப் பார்க்கிறார்கள் பெற் றோர்கள்.

தந்தை பெரியார் சொன்ன பகுத்தறிவும், மனிதநேயம், ஒழுக்கம் இவை சிறுவயதிலிருந்து கற்பிக்கப்பட்டாலொழிய மீட்சிக்கு மார்க்கம் இல்லை.

பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு முன்பு போல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிலர் இதோபதேசம் செய்யப் புறப்பட்டுள்ளனர்.

முன்பு இத்தகு வகுப்புகள் இருந்ததுதான்; அந்த வகுப்பில் எதைச் சொல்லிக் கொடுத் தார்களாம்? புராண இதிகாச மூடத்தன கதாபாத்திரங்கள் பற்றித்தானே சொல்லிக் கொடுத்தார்கள் - கிருஷ்ண பகவானைப்பற்றி சொல்லிக் கொடுத்தால் மாணவன் திருடாமல் இருப்பானா? பெண்களைக் கேலி செய் யாமல்தான் இருப்பானா?

தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் விழுந்ததுபோல மாணவர்களுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பது என்ற பெயரால் நமது புராணக் குப்பைகளை மாணவர்கள் மூளையில் திணித்தால் அறிவு வளர்ச்சி ஏற்படுமா? ஒழுக்க ரீதியான மனப்பான்மை தான் வருமா?

இவற்றிற்கும் பதிலாக நூலகம், உடற்பயிற்சி, அறிவியல் கண்காட்சி இவற்றில் ஈடுபடுத் தினால் மாணவர்களின் சிந்தனையில் மாற்றம் வருவதற்கு வாய்ப்புண்டே!

பாடத் திட்டத்தில் ஒழுக்க நெறியும், அறிவு நெறியும், பயிற்சியும் அளிக்கப்படுவது அவசியம்.

குளிக்கப் போய்ச் சேற்றில் விழுந்த கதையாக ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுக் கிறேன் என்று கூறி நீதி போதனை என்ற பெயரால் பழைய குப்பைகளை மாணவர்களின் மூளையில் கொட்ட வேண்டாம் -வேண்டவே வேண்டாம்!

தமிழ் ஓவியா said...


புகைஞ்சர்களே, ஏன் வீணே 10 ஆண்டு ஆயுளை இழக்கிறீர்கள்?


ஆஸ்திரேலியாவில் சாக்ஸ் என்ற மருத்துவ ஆய்வு அமைப்பு ஒன்று சுமார் 2,00,000 பேர்களை வைத்து - அவர்கள் எல்லாம் புகைஞ்சர்கள் (Smokers) - வயது 45க்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

இவர்களைக் கொண்டு நடத்திய ஆய்வுபற்றி ஆஸ்திரேலிய மருத்துவப் பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் (Emily Banks) என்பவர் கொடுத் துள்ள பேட்டி 12.10.2013 டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தியாக வெளி வந்துள்ளது!

அதில் அவர்கள் இப்படி புகை பிடிக்கும் புகைஞ்சர்கள் - வாழ்வில் அகால மரணமடைகிறார்கள்; சுமார் 10 ஆண்டுகள் தங்கள் ஆயுளை இழக்கின்றனர்; லேசான புகையிலையின் தாக்கமே - பழக்கமே இவர்களது ஆயுள் குறைப்பானாக ஆகி விடுகிறதாம்.

இந்நிலையில் இளைஞர்கள், மாணவர்கள் நாகரிக உணர்வைக் காட்டி பெண்களும்கூட புகைஞ்சர்களாக, குடிகாரர்களாக மாறி வரும் கொடுமை நாளும் அதிகமாகி வருகிறது.

கணினியுகத்தில் பொறியாளர்களாகி, திடீரென்று அளவுக்கு மீறிய சம்பளத்தைப் பார்க்கையில் திசை தடுமாறி, குடி, புகைத்தல் மற்றும் சில ஒழுக்கக் கேடுகளில் இளைஞர்கள் பலியாகி விடும் கொடுமை - மிக அதிகமாகி வருகிறது!

புகைபிடிக்கும் பழக்கம் ஒருமுறை ஏற்பட்டு விட்டால் எளிதில் அதைக் கைவிட்டு விட முடிவதில்லை பலரால்; தேவையின்றி தானே இப்படி தற்கொலை மாத்திரைகளை ஒவ்வொரு புகைப்பிடித்தலின் போதும் விழுங்குகின்றனரே! இழுக்க இழுக்க இன்பம்; இன்னும் வேகமாக விரட்டும் துன்பமும் முடிவும் என்பது செத்த பின்பு தான் தெரியும்!

புற்று நோய் அபாயம் போன்றவை புகைபிடித்தல், புகையிலை மெல்லுதல், பொடி போடுதல் போன்ற பழக்க வழக்கங்களால் என்பது ஒரு புறம்.

அது இல்லாமல் இது சாதா ரணமாக புகைஞ்சர்கள் ஆயுளே 10 ஆண்டு குறைகிறது.

அதைவிட பொருளாதாரத் தினைக் கணக்கிட்டுப் பார்த்தீர்களா?

என் வாழ்நாளில் நான் புகைஞ்சனாகியிருந்தால் எவ்வளவு அனாவசியப் பொருள் விரையம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

உடலையும் வாழ்வையும் காப்பாற்றிட நீங்கள் புகைஞ்சர்களாக இருந்தால் உடனே கை விடுங்கள்;

நமது மதிப்பிற்குரிய தமிழ்நாட்டுத் தலைவர்களைக் கூட நாம் இழந்துள்ளோமே!

அதனால் அவர்கள் வீட்டுக்கு ஏற்பட்ட நட்டத்தை விட நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் மிகவும் அதிகம் அல்லவா?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இசையமுது முதல் தொகுதியில் இந்த ஆபத்தினை நன்றாக புகைச் சுருட்டு என்ற தலைப்பில் மிக அருமையாக விளக்கியுள்ளாரே!

புகைச் சுருட்டு

புகைச்சுருட்டால் இளமை பறிபோகும்
பொல்லாங் குண்டாகும்
புகைச் சுருட்டால்!

முகமும் உதடும் கரிந்துபோகும்
முறுக்கு மீசையும் எரிந்து போகும்
புகைச் சுருட்டால்!

மூச்சுக் கருவிகள் முற்றும் நோய் ஏறும் - பிள்ளை
முத்தம் தருநே ரத்தில் வாய் நாறும்
ஓய்ச்சல் ஒழிவில் லாதிருமல்சீறும் - நல்
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்
பேச்சுக் கிடையில் பிடிக்கச் சொல்லும்
பெரியார் நெஞ்சம் துடிக்கச் சொல்லும்
புகைச் சுருட்டால்!

காசு பணத்தால் தீச்செயலை வாங்கிப் - பின்
கைவிட எண்ணினும் முடியாமல் ஏங்கி
ஏசிக் கொண்டே விரலிடையில் தாங்கி - நீ
எரிமலை ஆகா திருதுன்பம் நீங்கி
மாசில்லாத செந்தமிழ் நாடு
வறுமை நோய்பெற ஏன் இக்கேடு?
புகைச் சுருட்டால்!

தமிழ் ஓவியா said...


தொண்டறம் தொடரும்!... முடிவில் வெல்லும்!!...

மதிப்பிற்குரிய தமிழினத் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள் 28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாண வரணி கடலூர் மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வருகை தந்தபோது கருத்துக் குருடர்கள் சிலர் காரை மறித்துத் தாக்கியதாக வந்த செய்தி கேட்டு ம

னிதநேயம் கொண்ட அத்தனை உள்ளங்களும் துடிதுடித்துப் போயின!.

21-ஆம் நூற்றாண்டிலும், ஏனிந்த கொலை வெறி? நம் நாடு குடியரசு நாடே தவிர கொடுங்கோல் மன்னர்கள் வாழ்ந்த அரசியல் பண்பாடே அறியாத காட்டுமிராண்டிகள் வாழ்கின்ற நாடல்லவே!

நாட்டின் வரலாறோ... மொழியின் வரலாறோ... இனத்தின் வரலாறோ சிறிதும் அறியாத சில மதவெறியர்கள் தான் இத்தகைய கீழ்த்தரமான செயல் களிலே ஈடுபட்டு அவமானத்தைத் தேடிக்கொள்கிறார்கள்!...

வன்முறை சிறிதும் கலவாது அறப் போராட்டங்களின் வாயிலாகவே ஒரு பெரிய சமுதாய மாற்றத்தையே உருவாக் கிக் காட்டினாரே தந்தை பெரியார்! அன்று கற்களை வீசியும் முட்டைகளை வீசியும், செருப்பை வீசியும் அவரை அவமானப்படுத் முனைந்தவர்கள் எல் லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள்! ஆனால்

தந்தை பெரியாரின் புகழோ இன்று உலக மயமாகி வருகிறது! அவருடைய பகுத்தறிவுக் கருத்துக்களை மதித்துப் போற்றி பாராட்டாத நாடுகளே, இல்லை என்ற நிலை இன்று ஏற்பட்டிருக்கிறதே. இது யாரால்?

தன்னலம் கருதாது... உடல் நலத் தையும் பாராமல் தமிழினத்தின் மேன் மைக்கு உழைத்துக் கொண்டிருக்கிற அய்யா ஆசிரியர் அவர்களது அயராத தொண்டறத்தால் தானே!

திராவிடர் கழகம் என்ற சமுதாய இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் அமைப்பும் இல்லை யென்றால்... தமிழ்ச் சமுதாயமே இன்று பூண்டற்றுப் போயிருக்குமே!. அமெரிக்கர் களின் வருகையால் அமெரிக்க ஆதி குடிகளான செவ்விந்தியர் அடியோடு அழிந்து போனதுபோல...

ஆரியர்களின் வருகையால் தமிழினம் அழிந்து ஒழிந்து போயிருக்குமே! அந்த அழிவைத் தடுத்து நிறுத்தி தமிழி னத்தைக் காத்தது மட்டுமல்ல; இன்று வரை காப்பாற்றி அவர்களை மீண்டும் உச்சிக்கு உயரச்செய்ய இன்றுவரை களத் திலே நின்று போராடிக்கொண்டிருப்பது இவ்விரு இயக்கங்களும், அதன் தலை வர்களும் தானே! அதற்குப் பரிசா இது? சிந்திக்க வேண்டாமா?

மதத்தையோ, கடவுளையோ, காப்பாற்றப் புறப்பட்டிருக்கும் இவர்களுக்கு அந்த அதிகாரத்தைத் தந்தவர்கள் யார்? இவர்கள் காப்பாற்றித் தீரவேண்டிய அளவுக்கு அவ்வளவு பலவீனமானவையா அவைகள்?

கருவறையில் தேவனாதனே கடவுள் இல்லை என்பதை தனது செய்கையால் நிரூபித்துக் காட்டி விட்டதற்குப் பிறகுமா இத்தகைய கொலை வெறி? இந்து மதத்தின் அதாரிட்டி காஞ்சிப் பெரியவாள் (!) ஜெயிலுக்கும் பெயிலுக் குமாக அலைந்து கொண்டிருப்பதைக் கண்ட பிறகுமா கருத்துக்குருடர்களாக இருப்பது? சிறிதேனும் சிந்திக்க வேண் டாமா? அய்யனார் கோயில் குதிரை சவாரிக்கு உதவாது! பந்தயத்திற்கும் பயன்படாது!!

சினத்தை ஒதுக்கிவிட்டு.. சற்று சிந்திப்பார்களா? அதுவரை திராவிட இயக்கங்களின் தொண்டரம் தொடரும்!

முடிவில் வெல்லும்!!

- குடந்தை நெய்வேலி தியாகராசன்

தமிழ் ஓவியா said...


சபரிமலை வரும் பக்தர்களுக்கு கைதிகள் தயாரித்த உணவாம்


திருவனந்தபுரம், அக்.14 சபரிமலை வரும் பக்தர்களுக்கு கைதிகள் தயாரிக்கும் உணவை குறைந்த விலையில் விற்க கேரள சிறைத்துறை தீர்மானித்துள்ளது.

திருவனந்தபுரம் மத்திய சிறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கைதி கள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை தொடங்கப்பட்டது. 1 சப்பாத்தி ரூ.2 என மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாலும், தரமானதாக இருந்ததாலும் பொது மக்களிடையே இந்த சப்பாத்திக்கு அமோக வரவேற்பு காணப்பட்டது. பொதுமக்களின் ஆதரவு அதிக ரித்ததை தொடர்ந்து கேரளாவின் மற்ற பகுதிகளான கண்ணூர், திருச்சூர், பத்தனம்திட்டா உட்பட மேலும் பல சிறைகளிலும் உணவு தயா ரிக்கப்பட்டது. சப்பாத்தி, இட்லி, சிக்கன் ஆகிய வற்றை வாங்க சிறை வாசலில் நீண்ட வரிசை யில் மக்கள் நின்றனர். அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதி கம் கூடும் இடங்களில் கைதிகள் தயாரிக்கும் உணவு விற்பனை தற் போது அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஒரு நாளைக்கு கேரள சிறைகளில் 4 லட்சம் சப்பாத்தியும், 1 டன் கோழிக் குழம்பும் விற்கப்படுகிறது. திருவனந்த புரத்தில் மட்டும் தினமும் 1 லட்சம் சப்பாத்தியும், 30 ஆயிரம் இட்லியும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கும் கைதிகள் தயாரிக்கும் உணவை விற்பனை செய்ய கேரள சிறைத்துறை தீர்மானித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பத்தனம் திட்டா சிறையில் நடந்து வருகிறது.

தற்போது முதல்கட்டமாக சபரிமலை செல்லும் வழியில் மைலப்ரா, வடசேரிக்கரை மற்றும் நிலைக்கல் ஆகிய இடங்களில் வாகனங்கள் மூலம் இட்லி, சாம்பார், சப்பாத்தி மற்றும் காய் கறிக் குழம்பு ஆகிய வற்றை விற்பனை செய்ய தீர்மா னிக்கப்பட்டுள்ளது.

ரூ.2க்கு சப்பாத்தி, இட்லி கிடைக் கும். காய்கறிக் குழம்பு ரூ.10-க்கும், சாம்பார் ரூ.5-க்கும் கிடைக்கும். பம்பையில் தேவசம் போர்டு இடம் கொடுத்தால் அங்கும் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக சிறைத் துறை இயக்குநர் அலெக்சாண்டர் ஜேக்கப் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

விண்வெளிக்குச் சென்றது கடவுளுக்கு விரோதம்: விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்


விண்வெளியில் கடவுளைக் காணவில்லை - யூரி ககாரின்

- நி.சித்து முருகானந்தம் எம்.எஸ்.சி., (இயற்பியல்)


பெரியார் நூலக வாசகர் வட்ட சார்பில் நடை பெற்ற பெரியார் - அண்ணா விழாவில் பாராட்டப் பெற்ற அறிவியல் அறிஞர்களில் ஒருவரான நி.சித்து முருகானந்தம் அவர்கள் ஆற்றிய முக்கியவுரையின் முக்கிய தகவல்கள்:-

அறிவியல் பணிக்காக நாங்கள் இந்தக்கூட்டத்தில் பாராட்டப்படுகிறோம். தகுதியானவர்களிடமிருந்து, பொருத்தமானவர்களிடமிருந்து, நாத்திகர்களிட மிருந்து, பகுத்தறிவு வாதிகளிடமிருந்து இந்தப் பாராட்டு எங்களுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி யாகவும், பெருமையாகவும், நிறைவாகவும் இருக்கிறது. விஞ்ஞானிகளில் இரண்டுவகையுண்டு. நாத்திக விஞ்ஞானிகள், ஆத்திக விஞ்ஞானிகள். ஆத்திக விஞ்ஞானிகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்பு களைச் செய்யும்போது அவை அவர்கள் இது நாள்வரை நம்பிய மத, கடவுட்கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறபோது சங்கடத்துடன் நெளிவார்கள்.

நமது நாட்டிலேயே இது நடந்திருக்கிறது. சர்.சி.வி.ராமன். இவர் 1930-இல் நோபல் பரிசு வாங்கியவர், 1961-இல் யூரி ககாரின் உலகின் முதல் மனிதராக விண்வெளிக்குச் செல்கிறார். 1930-க்கும், 1961-க்கும் இடையில் 31 வருடங்கள். எந்த மனிதருக்கும் வயது ஆக ஆக அறிவும், அனுபவமும், பக்குவமும் வளரும். அதுதான் இயற்கை. ஆனால் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்றதைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

பார்ப்பனர்களின் மதக்கோட்பாட்டின்படி விண்ணுலகு கடவுள்கள் வாழ்கிற இடமாதலால், கடவுள்கள் வாழ்கிற விண்வெளிக்கு மனிதன் இந்த பூத உடலுடன் செல்வது மிகப்பெரிய பாவம் என்று பத்திரிகையாளரிடம் பேட்டி கொடுத்துவிட்டார். விடுவார்களா பத்திரிக்கையாளர்கள்? நேரே யூரி ககாரினிடம் சென்று கேட்டுவிட்டார்கள், விண் வெளி கடவுள்கள் வாழ்கிற இடமென்றும் மனிதன் தன் பூத உடலுடன் அங்கு செல்வது பெரிய பாவம் என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் சொல்கிறாரே என்று. இதற்கு யூரி ககாரின் என்ன சொன்னார் தெரியுமா? நானும் விண்வெளியில் சுற்றிப்பார்த்தேன் அங்கு எந்தக்கடவுளும் இல்லை என்றார் சாட்டையால் அடித்தது போல் இதைவிட பெரிய சங்கடம் சர்.சி.வி.ராமனுக்கு வேண்டுமா? இது சாதாரணக் சங்கடம் இல்லை, இதற்குப் பெயர்தான் தர்மசங்கடம். அவாளின் தர்மத்துக்கே ஏற்பட்ட சங்கடம், இந்த மாதிரி சங்கடங்களெல்லாம் நாத்திக விஞ்ஞானிகளுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அவர்கள் மகிழ்ச்சியுடனேயே விஞ்ஞான உண்மை களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ப்ராங்க் வில்செக் என்பவர் ஒரு மிகச்சிறந்த விஞ்ஞானி, 2004-இல் அசிம்டோடிக் ப்ரீடம் என்ற அணுவுக்குள் இருக்கும் ஒரு இயக்கத்திற்காக நோபல் பரிசு பெற்றவர். தன்னைப்பற்றி எழுதும்போது தான் ஒரு பாதிரியாரின் மகனென்றும் மதக்கருத்துகளால் வளர்க்கப்பட்டவனென்றும் விஞ்ஞானத்தில் ஆர்வம் ஏற்பட்டு விஞ்ஞான உண்மைகளை படிப்படியாகத் தெரிந்து கொண்டபோது மதக்கருத்துகள் எவ்வளவு மோசடியாகவும் மக்களை ஏமாற்றுபவையாகவும் இருக்கின்றன என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்து அவற்றைப் புறக்கணித்து விஞ்ஞானத்தை ஏற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார்.

தமிழ் ஓவியா said...

சமீபத்தில் நீங்கள் ஒரு செய்தியைப் படித்திருப் பீர்கள். வாயேஜர் 1, என்ற விண்கலம் சூரியக் குடும்பத்தின் எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டது என்பது பற்றி 1977-இல் அனுப்பப்பட்ட அந்த விண்கலம் 36 வருடங்கள், ஏறக்குறைய 1900 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து இப்போதும் சென்று கொண்டிருக்கிறது. அதில் நமது பூமியைப் பற்றிய விவரங்கள் ஏராளமாக இருக்கின்றன. நமது விண்மீனாகிய சூரியன் இந்த பால்வெளி மண்ட லத்தில் எந்த இடத்தில் இருக்கிறது. இந்த பூமி என்ற கோள் சூரியனின் மூன்றாவது கோளாக இருப்பது, பூமியில் ஆறுகள் ஓடுகிற சத்தம், பிரபலமான இசை, இங்கு மனிதர்கள் எப்படியிருப்பார்கள் என்பது பற்றிய ஆண், பெண் படம் அதிகமாக மக்கள் பேசக்கூடிய பல மொழிகளைத் தேர்ந்தெடுத்து அந்தந்த மொழிகளின் வாழ்த்துச் செய்திகள் போன்ற பல சிறப்பான செய்திகளை ஒரு தங்க ரிக்கார்டில் பதிவு செய்து அணுப்பியிருக்கிறார்கள். மிகவும் பிரபலமான விண்வெளி அறிஞர் கால் சேகன் தான் இந்த செயல்களுக்கு பொறுப்பேற்று செய்திருக்கிறார். யாராவது வெளியுலகவாசிகள் இருந்தால் நமது பூமியைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அப்படிப் பதிவு செய்யப்பட வாழ்த்துச் செய்திகளில் இந்திய மொழிகளில் மட்டும் 9 வாழ்த்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான் 1999-இல் நாசாவின் வாயேஜர் இணைத்தளத்தைப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் அந்த இந்திய மொழிகளில் நமது தமிழ் இல்லை. எனக்கு ஆத்திரமாக வந்தது. ஏழுகோடி மக்கள் பேசுகிற மொழி, 4 நாடுகளின் ஆட்சி மொழியாக இருபது, உலகின் தொன்மையான மொழி எப்படி விடுபட்டுப் போனது என்று இந்த விவரங்களைச் சொல்லி நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் அது ஏற்புடையது அல்ல என்று சற்றுக்கடுமையாகவே அவர்களுக்கு இமெயில் கடிதம் எழுதினேன்.

உடனேயே ஒன்றரை மணி நேரத்துக்குள் இரண்டு பக்கத்துக்கு அவர்கள் எனக்கு பதில் அனுப்பியிருந் தார்கள். அந்த பதில் ஒரு விஷயத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பார்ப்பனர்கள் சூழ்நிலையை, சின்ன புத்தியை. அவர்கள் சொன்னது இதுதான். தமிழ் எங்கள் பட்டியலில் இருந்தது. இங்கிருக்கும் இந்தியச் சங்கங்களைத் தொடர்புகொண்டு வணக்கம் என்ற தமிழ் வாழ்த்துச் சொல்லை பதிவு செய்வதற்கு நேரம் குறித்து வரச்சொல்லியிருந்தோம். ஆனால் யாரும் வரவில்லை. பார்ப்பனர்களின் ஆதிக்கத்த்திலிருக்கும் இந்தியச் சங்கங்கள் இதை வேண்டுமென்றே புறக் கணித்துவிட்டனர். ஏனென்றால் ஹிந்தி, உருது, தெலுங்கு, பெங்காலி, ஒரியா, குஜராத்தி, மராத்தி, கன்னடம், ராஜஸ்தானி இவையெல்லாம் இருக் கின்றன தமிழ் மட்டும் இல்லை. அது சூழ்ச்சி இல்லாமல் வேறென்ன?

திராவிட மொழியான தமிழுக்கு இந்தச் சிறப்பு ஒரு போதும் போய்ச்சேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகக்குறியாக இருந்திருக்கிறார்கள். நாசா நிறுவனத் தினர் சமஸ்கிருதம் ஒரு வழக்கொழிந்து போன மொழியாதலால், அதைத் தேர்ந்தெடுக்கவில்லை. அப்படி அவர்கள் அதை தேர்ந்தெடுத்திருந்தால் சமஸ்கிருதத்தில் வாழ்த்துச் சொல்லை சொல்வதற்கு அங்கு கியூவில் நின்றிருப்பார்கள். வணக்கம் என்று ஒரு சொல்லைச் சொல்வதற்கு ஒரு ஆளும் இல் லாமல் போய்விட்ர்களா அதற்கு நேரம் தான் இல்லையா? உண்மை அதுவல்ல. மனம் இல்லை.

தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்; என்பது நமது ஆசை ஆனால் இந்தப்போராட்டம் முழுவதும் தேமதுரத் தமிழோசை கேட்பதற்கான வாய்ப்பைத் திட்டம் போட்டுக்கெடுத்துவிட்டார்கள். ஒரு வெளிஉலக மனிதனுக்கு இந்தச்செய்தி போய்ச்சேர்ந்தால் அது அங்கு வாழும் கோடிக்கணக்கானவர்களைப் போய்ச் சேர்ந்ததற்குச் சமம். பொறுக்குமா இவர்களுக்கு? எவ்வளவு குறுகிய புத்தி பாருங்கள்.