Search This Blog

2.10.13

காந்தியார் பிறப்பும்- காமராசர் மறைவும்!





அக்டோபர்-2 என்பது காந்தியார் அவர்களின் பிறந்த நாள் - பச்சைத் தமிழர் காமராசர் மறைந்த நாள்.

இந்த இருபெரும் தலைவர்களைப்பற்றிச் சிந்திப்ப தற்கும், இந்தக் காலகட்டத்தில் பொருத்தமான வகையில் எடுத்துக்கொள்வதற்கும் இந்நாள் பயன்படும் என்பதில் அய்யமில்லை.

காந்தியார் அவர்களைப் பொறுத்தவரை உலகம் புகழும் தலைவர் - எளிமையானவர் என்றாலும், அரசியலில் மதத்தைக் கலந்தவர் என்ற கணிப்பு உண்டு.

பஜனை என்பது அவரோடு தொடர்ந்துகொண்டே இருந்தது. ரகுபதி ராகவ ராஜாராம் என்பதைப் பெரும் அளவுக்குக் கொண்டு சென்றவர். பிகாரில் 1934 இல் பூகம்பம் ஏற்பட்டதற்குக் காரணம் இந்துக்கள் தீண்டா மையை அனுசரிப்பதுதான் என்று (ஹரிஜன் 2.2.1934) காந்தியார் சொன்னபோது, ஜவகர்லால் நேரு அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

தீண்டாமை ஒழிப்பில் காந்தியாருக்கு ஆர்வம் இருந்தாலும்கூட, அதற்கு மூலகாரணம் ஜாதிதான் - வருணாசிரமம்தான் என்பதைப் புரிந்துகொள்வதில் காந்தியாருக்குத் தடுமாற்றம் இருந்தது.

ஜாதி அமைப்பு முறை - வருணாசிரம அமைப்பு முறை மிகச் சிறந்தது - ஓர் இராணுவ அமைப்பு முறை - என்ற எண்ணத்தில் அழுத்தமாகவே இருந்தார். அதனால் பார்ப்பனர்கள் காந்தியாரைப் பெரிதும் புகழ்ந்தார்கள் - மகாத்மா காந்தி என்றனர்.

பிற்காலத்தில் பார்ப்பனர்களின் போக்கைக் காந்தியார் புரிந்துகொள்ளத் தலைப்பட்டார்.

அதுவும் தமிழ்நாட்டுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்த காலகட்டங்களில் அதனைத் தெளிவாகவே உணர்ந்தார்.

வேதம் படிக்க வேண்டிய பிராமணர்கள் கையில், பிணம் அறுக்கும் கத்தி (டாக்டர்), டி ஸ்கொயர் (பொறியியல்) எதற்கு என்று கேள்வி கேட்கும் அளவுக்குத் தமிழ்நாடு காந்தியாருக்கு உணர்வை ஊட்டியது.

இந்து - முஸ்லிம் கலவரத்தின்போது சிறுபான்மையினர் பக்கம் காந்தியார் இருந்தார் என்ற எண்ணம்- இவையெல்லாம் சேர்ந்து - இவரை இனியும் விட்டு வைத்தால் அவர் செல்வாக்குப் பார்ப்பனர் அல்லாதார் பக்கம் போய்விடும் என்பதைத் தெள்ளிதின் உணர்ந்து இந்துத்துவா சக்திகள் - பூணூல் மேனியர் காந்தி யாரைத் தீர்த்துக் கட்டினார்கள்.

மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி நடந்தபோது வடமாநிலங் களில் மை நாதுராம் கோட்சே போல்தா! எனும் நாடகத்தினை நடத்த ஆரம்பித்தார்கள். கோட்சேயை கடவுளாக்கி, காந்தியார் என்ற அரக்கனைச் சுட்டுக் கொன்றவர் கோட்சே என்று அந்த நாடகத்தில் குறிப் பிடப்பட்டது.

2014 இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் காந்தியாரின் உயிரைக் குடித்த மதவெறிக் கும்பல், இந்தியாவின் ஆட்சியைப் பிடித்து, மனுதர்மத்தை இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக்கிடத் துடித்துக் கொண்டிருக்கிறது.
அதற்கான சரியான பிரதமர் நரேந்திர மோடி என்று ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ளது. காந்தியாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவோர்க்கு இதுபற்றிய உரத்த சிந்தனை ஏற்படவேண்டும்.
 

இரண்டாவதாக காமராசர் நினைவு நாளில் சிந்திக்க வேண்டியவை ஏராளம் உள்ளன. அவரைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி என்பது அவருக்கு உடலும் உயிரும் போன்றது. அதன் வாழ்விலும், தாழ்விலும் உறுதியாக நின்றவர்.
அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் கிடைக்கப் பெற்றது மிகப்பெரும் வாய்ப்பு! சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்கிற மனுதர்மப் போக்கை தந்தை பெரியாரின் துணை கொண்டு ஆழமாகப் புதைத்தவர்.

கல்விக் கண்ணைத் திறந்த வள்ளல் - பச்சைத் தமிழர் காமராசர் என்று தந்தை பெரியார் பாராட்டினார் என்றால், அது சாதாரணமல்ல!

ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.9 கோடி; காமராசர் ஆட்சி யிலோ அது ரூ.25 கோடியாக உயர்த்தப்பட்டது.

இன்றைக்குக் கல்வி வளர்ச்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னணியில் தமிழ்நாட்டில் இருக்கின்றனர் என்றால், காரணம் தந்தை பெரியாராகவும், காரியம் காமராசராகவும் இருக்கின்றனர். நன்றியுடன் இந்நாளில் நினைவு கூர்வோம்.

காமராசர் சமதர்ம சங்கநாதம் செய்ய ஆரம்பித்தார் - பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்தார் - தகுதி, திறமை என்பது புரட்டு என்று வெளிப்படையாகப் பேச ஆரம்பித்ததும், காந்தியாரைக் கொன்ற அதே மதவாதக் காவிக் கூட்டம் பட்டப் பகலில் காமராசர் தங்கியிருந்த வீட்டைக் கொளுத்தி அவரின் உயிரைக் குடிக்க முனைந்தது என்பதையும் இன்று நினைத்துப் பார்த்தால், அந்த இந்துத்துவா அதிகாரத்தைக் கைபிடிக்க தோள் தட்டி எழுவதில் உள்ள ஆபத்தை இந்திய வாக்காளர்கள் தெளிவாக உணரவேண்டும் - எச்சரிக்கை!

                  ---------------------------------” விடுதலை” தலையங்கம் 2-10-2013

11 comments:

தமிழ் ஓவியா said...


காந்தியார் பிறந்த நாள் சிந்தனைகள்!


- ஊசிமிளகாய்

அண்ணல் காந்தியடி கள் பிறந்த இந்நாளில் அவரது சிலைக்கு மாலை, அவரது சமாதி அருகில் மலர்வளையம், ரகுபதி ராகவ ராஜாராம் பஜனை பாடினால் மட்டும் போதுமா?
125 ஆண்டுகள் வாழ் வேன் என்று கூறி, வாழ விரும்பிய காந்தியாரை அப்படி வாழ விடாமல் சுட்டுக்கொன்றது ஏன்? எதற்காக? சுட்டவன் யார்? யாரிடம் பயிற்சி பெற்றவன்?
இந்நாளிலாவது உரக்கச் சிந்திக்கவேண்டாமா?

எந்தப் பார்ப்பன மதவெறிச் சக்திகள் சதி நடத்தி காந்தியார் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தனவோ, அவைகளும் சேர்ந்தல்லவா காந்தி பஜனை செய்து மக்கள் கண்ணில் மண்ணைத் தூவுகின்றன!

காந்தி பிறந்த மண், இன்று காவி மண்ணாக ஆக்கப்பட்டுவிட்டது!

அதுபோதாது என்று இந்திய நாட்டையே காவி மயமாக்கி, இந்து நாடாக்கிட எல்லாவித சாம, பேத, தான, தண்ட முயற்சிகளையும் மேற்கொள்ளு கின்றன!

பெரியார் பிறந்த மண்ணையும், காவி மண் ணாக்கிட முயலுகின்றனர்!

இதில் மிகப்பெரிய வெட்கக்கேடு - காந்தி பெயரில் வசன வியாபாரி ஒருவர், அரசியல் தரகராக முதலில் ஒரு சாமி செய்த கூட்டும் முயற்சியை குதூ கலமாகச் செய்கிறாராம்!

திராவிடத்தில் பெரியார் - அண்ணா முத்திரைகளைப் பொறித்துக் கொண்டுள்ள, அரசியலில் பதவிப் பசி அதிகம் உள்ள அமைப்பு ஒன்று, மீண்டும் காவி அணியிடம் சரணடைந்து, பதவி லோக வழி தேடுவது, பெரியார் - அண்ணாவுக்குப் பெருமை சேர்ப்பதா?
அவர்கள் கட்டிக்காத்த சிறுபான்மையோர் பாதுகாப்பு - உரிமை எல்லாம் பலி பீடத்தில் நிறுத்துவதுதானா? பல கதவுகள் மூடிவிட்ட நிலையில், இந்தக் கதவாவது நமக்குத் திறந்துள்ளதே! கதவு மட்டுமா? கருவூலமும் சேர்ந்து அல்லவா திறந்துவிடப்பட்டுள்ளது என்ற தாகம்தான் மோடிக்கு சேடியாக்கிடுகிறது போலும்!

ஆசை வெட்கமறியாது; அதிலும் பதவி ஆசை, மானமும் அறியாது!

காங்கிரஸ்காரர்களைவிட கோட்சே கும்பல்தான் இன்று ஏதோ காந்தியின் பரம பக்தர்கள்போல காட்டிக்கொண்டு, ஓநாய் சைவமாகிவிட்டதுபோல் அறிவிப்புக் கொடுத்துக்கொண்டே காவி உலா நடத்திக் காட்டி, வாக்காளர்கள் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவிட முயலுகிறது!

மதவெறியை வளர்ப்பது காந்திக்குச் செய்யும் அஞ்சலியா? மதக் கலவரங்கள் பெருகுவதா?

வன்முறையால் திட்டமிட்டு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் உரிமையை ஒழிப்பதா காந்திக்குச் செய்யும் பிரார்த் தனை?

கோவில்களை விபச்சார விடுதிகள் என்றவர் காந்தியார் - காஞ்சிபுரம் தேவநாதன்கள் வழக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே!

வேதம் ஓதும் உங்களுக்கு பார்ப்பனர்களுக்கு, ஸ்டெதஸ்கோப்பும் (டாக்டர் படிப்பு), டி ஸ்கொயரும் (பொறியியல் படிப்பு) எதற்கு என்று கேட்டு, சமூகநீதி தராசைச் சரியாகப் பிடித்ததினால்தானே பார்ப்பன, மதவெறியாளர்களால் காந்தியார் கொல்லப்பட்டார்!
எனவே, காந்தி பிறந்த நாளில், மதச்சார்பின்மை, சமூகநீதி, இவைகளையே முன்னெடுத்துச் செல்ல உறுதி எடுப்பதே - உண்மையாக அவருக்குக் காட்டும் மரியாதையாகும்.

தமிழ் ஓவியா said...


ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபடும் தமிழர் தலைவரைத் தாக்குவதா? கண்டனங்கள் வலுக்கின்றன!


சென்னை, அக்.2- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மதவெறி, ஜாதி வெறி, பிற்போக்குக் கும்பலால் தாக்கப்பட்ட நிகழ்ச்சி நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. கண்டனங் களை தலைவர்கள், அமைப்புகள் தெரிவித்த வண்ணம் உள்ளன.

அகில இந்திய யாதவ மகாசபை கண்டனம்

75 ஆண்டுகளாக அகில இந்திய யாதவ மகாசபையாக இயங்கிவரும் இந்த அமைப்பின் துணைத் தலைவர் எல்.நந்தகோபால் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபடும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களை விருத்தாசலம் அருகே வழிமறித்து தாக்க முனைந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. குறிப்பாக, யாதவர் மகாசபை என்கிற பெயரில் சிலர் அவ் வன்முறையில் ஈடுபட்டது, வெட்கக்கேடானது, வேதனைக்குரியது என்று அகில இந்திய யாதவ மகாசபையின் துணைத் தலைவர் எல்.நந்தகோபால் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது:

அண்மையில் விருத்தாசலம் திராவிடர் கழக மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற தமிழர் தலைவர் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளிவீசச் செய்த தந்தை பெரியார் அவர்களின் வழிநின்று, புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்ற அல்லும் பகலும் பாடுபடும் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் வேனை வழிமறித்துத் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்கும் தலைவர் வீரமணி

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் வழியில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, சுயமரியாதை வீரராக அவர் இன்று உலக அளவில் உயர்ந்து புகழ் பெற்றுள்ளார். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக அரும்பாடு படுபவர்.

தமிழ் ஓவியா said...

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசில் இட ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று பரிந்துரை களைச் செயல்படுத்த யாதவ சமுதாயத் தலைவர் களான சந்திரஜித் யாதவ், டி.பி.யாதவ் போன்ற பெருந்தலைவர்களோடு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல மாநில முதல்வர்களைச் சந்தித்து, பல்வேறு அறப்போராட்டங்களை முன் னின்று நடத்தி வெற்றி கண்ட மாமனிதர்.

தந்தை பெரியார் அவர்களின் உயிர்மூச்சான வருணாசிரம தருமத்தை ஒழிக்க அவர் வழி நின்று அரும்பாடுபடும் தலைவர் கி.வீரமணி அவர்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் வன்முறையைக் கையாள்வது வேதனைக்குரியது.

யாதவ மகாசபைக்குத் தொடர்பில்லாத - முகவரியில்லாதவர்களின் இழிசெயல்!

யாதவ மகாசபை என்கிற பெயரில் சிலர் இத் தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள தாகத் தெரிகிறது - தமிழ்நாட்டில் அகில இந்திய யாதவ மாநாடும், அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் ஒற்றுமை மாநாடும் மறைந்த தலைவர் எஸ்.இலட்சுமண யாதவ் அவர்கள் தலைமையில், பெரியார் திடலில் நடைபெற பெருந்துணையாக இருந்தவர் தலைவர் வீரமணி அவர்கள்; அகில இந்திய யாதவ சமுதாய தலைவர்களின் உள்ளத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்; அவருக்கு யாதவ சமுதாயம் என்றும் நன்றி செலுத்திப்போற்ற கடமைப்பட்டுள்ளது.

விருத்தாசலத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கும், அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய யாதவ மகாசபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், அது முகவரி இல்லாத பேர்வழிகளின் இழிசெயலாக மட்டுமே இருக்க முடியும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.

- இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

எஸ்.டி.பி.அய். கோரிக்கை

எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச்செய லாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

கடந்த மாதம் 28 ஆம் தேதி விருத்தாசலத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாணவரணி மாநாடும், அதையொட்டி கருத்தரங்கமும், மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் நடைபெற்றன. இதில் கலந்துகொள்ள வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது காவிக்கொடியுடன் திரண்டு வந்து ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தினர் என்பது கடும் கண்டனத்திற்குரியது.

காவல்துறை அதிகாரிகள் ஆரம்பம் முதலே ஒருபக்க சார்புடனும், எதிர்ப்புணர்வுடனும், திராவிடர் கழகத்தினரோடு நடந்துள்ளனர். இதுவே தாக்குதல் நடத்திய ஆதிக்க சக்திகளுக்கு தைரி யத்தை வரவழைத்துள்ளதாகத் தெரிகிறது. நடந்த சம்பவங்களுக்குக் காரணமான ஆதிக்க சக்திகள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தோடு தமிழகத்தில் சமூக, அரசியல் தலைவர் களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

- இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித் துள்ளார்.

பரமத்தி சண்முகம் கண்டனம்

கரூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பரமத்தி சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:

தூங்கும் புலியை இடறாதே
அய்யா மூட்டிய சுயமரியாதைச்
சுடர் வீசிக் கொண்டே இருக்கிறது

விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களை காவிப் படை யினர் அதாவது இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்த கூலிப் படையினர், தலைவர் சென்ற ஊர்தி மீது தாக்குதல் நடத்தியுள் ளனர்.

திராவிடர் கழக மாணவர் அணியினர் மிகச் சிறப்பாக விருத்தாசலம் நகரில் பகுத்தறிவுப் பேரணியும், மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சார வீதி நாடகங்களையும் நடத்தியுள்ளனர்.

காலையிலிருந்தே மாநாட்டில் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருந்திருக்கின்றன.

தமிழ் ஓவியா said...

ஆனால், மாநாட்டின் இறுதிப் பேருரையாற்றச் சென்ற தமிழர் தலைவர் தாக்கப்பட்டுள்ளார். அவரது ஊர்தி மீது நடந்த தாக்குதல் தலைவரின் உயிர் குடிக்கும் கொலை வெறி எண்ணத்தோடு திட்டமிட்டே நடந்ததுதானே. காவல்துறையினருக் கும், செய்தியாளர்களுக்கும் கூட தெரிந்த சதி தானே? இது திராவிடர் கழகத்தவர்களை மட்டும் சார்ந்த விவகாரமல்ல! ஒட்டுமொத்த தமிழ் இனமே அதிர்ச்சியடையக்கூடிய ஒன்று.
இது தொடருமா? இதற்குப் பின்னால் யார்? ஏன் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?

நடப்பது அண்ணா பெயரை கட்சிக்கும், கொடியில் அண்ணாவின் படத்தையும் பொறித்து ஆட்டங்காட்டும் ஆட்சி! இதில் ஓர் உண்மை என்ன வென்றால், மோடியினுடைய ஆட்களும் கலந் திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன!

மாநாட்டை நடத்தியவர்கள் திராவிடர் மாண வர்கள்; அதிலே அவர்கள் உயிரினும் மேலாக மதிக் கும் தலைவருடைய உயிருக்குக் குறி வைக்கப் படுவதை தென் தமிழினம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இத்தனை நாட்களாக இல்லாத வன் முறை ஆட்டம் ஏன் இப்போது தலைகாட்டு கிறது?

யார் செய்த மோடி வித்தை? மாண்டு விடவில்லை தமிழர் இனம்? மீண்டும் மோடி மஸ்தான்கள் தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்க யாரோ தூண்டிவிட்ட தீய சக்திகள் தலைதூக்குமானால், தமிழன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட் டான்; தூங்கும் புலியை இடறினால் என்னவாகும்? மதவாத ஜாதீய வெறிக்கெதிராக தந்தை பெரியார் மூட்டியது இன்னும் அப்படியேதான் சுடர்வீசிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் கரூர் பகுத்தறிவாளர் மன்றம் எச்சரிக்கிறது.
- இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

மலேசிய சிங்கப்பூர் தோழர்கள்

மலேசிய மற்றும் சிங்கப்பூர் கழகப் பொறுப் பாளர்களும், தமிழ் அன்பர்களும் தொலைபேசியில் தமிழர் தலைவரைத் தொடர்புகொண்டு விசாரித்தனர்.

இனமுரசு சத்யராஜ்

இனமுரசு சத்யராஜ் கழகத் தலைவருடன் தொடர்பு கொண்டு விசாரித்தார்.

சுப.சீத்தாராமன்

பாளையங்கோட்டை சுப.சீத்தாராமன் நேரில் வந்து கழகத் தலைவரைச் சந்தித்தார்.
குவைத்திலிருந்து...

குவைத் பெரியார் படிப்பகப் பொறுப்பாளர்கள் செல்லபெருமாள், லியாகத் அலிகான் ஆகியோர் தொலைப்பேசிமூலம் தொடர்புகொண்டு கழகத் தலைவரை விசாரித்தனர்.

தமிழ் ஓவியா said...


முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.

- (விடுதலை, 22.11.1964)

தமிழ் ஓவியா said...

சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கு.முத்துசாமி - மலர்விழி ஆகியோரின் செல்வன் மு.வினோத் குமார் என்பவருக்கும், ஓமலூர் வட்டம் நச்சுவாயனூர் சி.மாரி யப்பன் சிங்காரம் ஆகியோர் களது மகள் மா.அன்புச்செல்வி என்கிற மணமகளுக்கும் 29.9.2013 அன்று ஓமலூர் நடராஜன் திரு மண மண்டபத்தில் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடைபெற்றது.

மணவிழாவிற்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண் முகம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் முன்னி லையில் மேட்டூர் மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியன் வர வேற்புரையுடன் துவங்கியது.

பெரியார் பெருந்தொண்டர் வி.ஆர்.வேங்கன், கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

தமிழர் தலைவர் மண மக் களுக்கு உறுதிமொழி கூறி மண விழாவை நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் தமது வாழ்த் துரையில் குறிப்பிட்டதாவது: இங்கே மா.அன்புச்செல்வி - மு.வினோத்குமார் ஆகியோர் களது திருமணம் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

பழனி.புள்ளையண்ணன், சுப்பிரமணி ஆகியோர் எடுத்துச் சொன்னதைப் போல இத்திரு மணத்தை நடத்தி வைப்பதிலே பெருமை கொள்கிறேன். மாரி யப்பன் அவர்களின் சம்பந்தியான முத்துசாமி - மலர்விழி ஆகி யோரை பாராட்ட கடமைப்பட் டிருக்கிறேன்.

இந்த மணவிழா விலே மாரியப்பன் கருப்புச் சட் டையுடன் இருக்கிறார் என்றால் அதற்கு சுப்பிரமணியன் போன்ற வர்கள்தான் காரணமாக இருக்க முடியும். மணவிழாவே மாநாடு போல இங்கே மக்கள் கூடி இருக் கிறார்கள். பெரியார் கொள்கை இங்கே வெற்றி பெற்றுள்ளது. என்றைக்கும் பெரியார் கொள்கை தோற்காது. நேற்று கூட விருத்தாசலத்தில் நடை பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சென்றபோது அங்கே கூலிப்படையினரால் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நான் சொல்கிறேன். இயற்கை மரணம் அடைவதைவிட கொள்கைக் காக போராட்டக்களத்தில் சாவது நல்லது. அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.

இத்திருமணத்தில் தாலி உள்ளதா என சுப்பிரமணியிடம் கேட்டேன். அதற்கு தாலி இருந் தால் உங்களை அழைத்திருப் பேனா என்று பதில் சொன்னார். தாலி என்பது திருமணத்தில் இடையிலே புகுத்தப்பட்ட ஒன்று இங்கே கருப்புச் சட்டைக் காரர்களுக்கு ஜாதி என்பது கிடையாது.

இன்று பெரியார், காமராஜர் அண்ணா போன்றவர்களின் உழைப்பினால் நம் பிள்ளைகள் நன்றாக படித்துள்ளார்கள் மண மக்கள் இருவரும் பட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். இது நமக்கு பெருமையாக உள்ளது.

எல்லாத் திருமணங்களையும், எங்களைப் போன்றவர்களை வைத்து நடத்த வேண்டியதில்லை. நம் குடும்பத்தில் உள்ள தமிழர் களை வைத்து பகுத்தறிவு, சுயமரி யாதை முறைப்படி நடத்திட வேண்டும். திருமண வாழ்க்கை முறை என்பது இத்தோடு முடிவ தில்லை. நாளைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுங்கள்.

சுப்பிரமணி குடும்ப மண விழா என்பது அது எங்கள் குடும்ப திருமணம் போன்றது. இப்பகுதியிலே அவர்கள் பல ஆசிரியர்களை உருவாக்கி இருக் கிறார்கள். பெரியார் திருமண முறை என்பது வேகமான, ஆவேச மான திருமண முறை அல்ல அது படிப்படியாக அறிவை வளர்த்து செய்யக்கூடியது.

பணக்காரரைவிட கொள்கை காரர்களே சிறந்தவர்கள். அந்த கொள்கை சுப்பிரமணி போன்ற குடும்பத்தினரிடம் உள்ளது. அந்த வகையில் மணமக்களின் திரு மணத்தை நடத்தி வைக்கிறேன் வாழ்க மணமக்கள் என்று தமிழர் தலைவர் வாழ்த்துரை வழங் கினார்.

தமிழ் ஓவியா said...


நாத்திகன்


நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


விருத்தாசலம் மாநாட்டுத் தீர்மானங்கள்


விருத்தாசலத்தில் கடந்த 28.9.2013 சனியன்று நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் மாணவர் கழக மாநாடு, பல வகைகளிலும் சிறப்பு நிலையைப் பெற்றது. குறிப்பாக அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் முத்தாய்ப்பானவைகளே.

முதல் தீர்மானம், பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதாகும். தமிழ் மொழியில் ஊடுருவிய ஆரியப் பார்ப்பனர்களின் சமஸ்கிருதம் தமிழைப் பல கூறுகளாக்கி மணிப்பிரவாள நடையையும் உருவாக்கியது.

தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், துளுவும் ஆரிய மொழியின் ஊடுருவலால் தனித்தனி மொழி எனும் தோற்றத்திற்கு ஆளாகி விட்டன.

தமிழ்நாட்டு மக்களின் பெயர்களும், ஊர்களும் சமஸ்கிருதமயமாயின. புளியந்தோப்பு, திண்டிவனம் ஆனதும், குடமூக்கு கும்பகோணம் ஆனதும், திருமரைக்காடு வேதாரண்யம் ஆனதும், திருமுது குன்றம், விருத்தாசலம் ஆனதும் ஆரிய சமஸ்கிருத ஊடுருவலின் அடையாளங்களாகும்.

விருத்தாசலத்தை, திருமுதுகுன்றம் என்று மீண்டும் மாற்ற வேண்டும் என்பதற்குத் திராவிடர் கழகம் உள்பட பல அமைப்புகளும், முயற்சிகளை மேற்கொண்டதுண்டு. ஆனாலும், வலுவாக இருக் கும் ஆரிய நிருவாகம் - ஆட்சி முறை - பெரும் இடையூறாக உள்ளது.

மயிலாடுதுறையை மீட்டதுபோல திருமுதுகுன்றத் தையும் மீட்க வேண்டும் - மாநாட்டின் முதல் தீர்மானம், இந்த வகையைச் சேர்ந்ததாகும்.

தந்தை பெரியார் தமது தலைமையிடமாகக் கொண்ட திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது இரண்டாவது தீர்மான மாகும்.

திமுக தலைவர், கலைஞரும் இதற்குத் தம் ஆதரவைத் தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான எழுச்சித் தமிழர் தொல். திருமா வளவன் அவர்களும், இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதாகத் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட வில்லையா? அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப் பையும் செய்தால் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

மூன்றாவது தீர்மானம் - தந்தை பெரியார் இறுதியாகக் களம் அமைந்த - அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியதாகும்.

ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு என்பது பகுத் தறிவும், மனித உரிமை ஆர்வமும் கொண்டவர்களின் மகத்தான கோட்பாடாகும். இன்றைக்கு அது அதிகார பூர்வமாக நிலை கொண்டு இருப்பது கோயில் கருவ றைகளில்தான். பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் யாரும் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியாது. காரணம் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் சூத்திரர்கள்; - சூத்திரர்கள் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று ஆகமங்கள் சொல்லுவதாக உச்சநீதிமன் றத்தில் எடுத்துக் கூறி தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான சட்டத்தை முடக்கி விட்டனர். இது 2013 ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்களின் ஜாதி ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துவதாகும்.

திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையை முன்னி றுத்தித் தன் பணிகளைத் தொடர இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு ஒட்டு மொத்தமாக, தமிழர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இதன் வெற்றியை சுவைக்க அனைவரின் ஒத்துழைப்பையும், திராவிடர் கழகம் கோருகிறது.

நான்காவது தீர்மானம், ஈழத் தமிழர் பிரச் சினையைப் பற்றியதாகும். தமிழர்களின் தொப்புள் கொடி உறவினராகிய ஈழ மக்கள் எல்லா உரிமை களையும் இழந்து நிற்கின்றனர். அவர்களின் அடிப்படை வாழ்வுரிமைக்காகத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றனர். (இதில் அரசியலைப் புகுத்தும் கேவலமும் குடி கொண்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை).

இந்திய அரசு போதிய ஒத்துழைப்பைக் கொடுக் குமேயானால் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வைப் பெறுவார்கள்.

கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, தமிழக மீனவர்கள் அந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை இழந்து தவிக்கிறார்கள். இலங்கைக் கடற்படையால் தினமும் பெரும் துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டும் வருகின் றனர்.
கச்சத் தீவை மீட்க வேண்டும் - அதுவே நிரந்தரத் தீர்வு என்பதை விருத்தாசலம் மாநாடு தெளிவு படுத்தியுள்ளது - தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் இதிலும் வெற்றியை ஈட்ட முடியும் என்று திராவிடர் கழகம் உறுதியாக நம்புகிறது - தமிழர்கள் ஒன்று சேர்வார்களாக!

தமிழ் ஓவியா said...


தெலுங்கானாவிலும் பெரியார் விழா


வெளியூர் 27.9.2013 விடுதலை இதழ் கடைசி பக்கத்தில் தெலுங்கானா - ஆந்திரா நாத்திக சமாஜத்தினர் வெளி யிட்டுள்ள தெலுங்கு சுவரொட்டியைப் பார்த்து பூரித்துப்போனேன். 65 ஆண்டு கட்கும் மேலாக திராவிட இனப்பற்றுடன் செயல்படும் எனக்குத் தெலுங்கு படிக்கத் தெரியும் என்பதால் பிரஜா நாஸ்திக சமாஜம்
மதம் அன்டேனே மாண யாகம்
மூடநம் மகாளு விடுச்சி - முந்தடுகு வேயண்டி

என்ற வேண்டுகோள் மட்டுமல்ல, நமது திராவிடர் கழகக் கொடியையும், மய்யத்தில் அய்யா படத்துடன் பெரியார் என்றும் தெலுங்கில் எழுதியிருப்பதானது திராவிட இன உணர்வு ஆந்திர - கர் நாடக - கேரள மாநிலங்களிலும் ஓசைப் படாமல் வளர்ந்து வருவதை அடிக்கடி விடுதலை செய்தியாக அறிந்து மகிழ்ந் தேன். தமிழர் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்கள் திராவிடர் தலைவராக வளர்கிறார்.

- வேலை.பொற்கோவன், வேலம்பட்டி

தமிழ் ஓவியா said...

வினை விதைத்த விநாயகன்

விநாயகர் சதுர்த்தி விழா ஒற்றுமை யாக இருந்த கிராம மக்களை இரண் டாக்கியது. வேலூர் மாவட்டம், திருப்பத் தூர் வட்டம், பொம்மிகுப்பம், பழத்தோட்டம் கிராமத்திலும், கிராமத்திலுள்ள இளைஞர் ஒன்று சேர்ந்து தங்களின் பொருளாதார வசதிக்கேற்ற விநாயகர் சிலையை வைத் தார்கள். வழக்கம்போல மின்விளக்கு, ஒலி பெருக்கி வைக்க, மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பைப் எடுத்துக் கொண் டார்கள். மின்சார வாரிய ஊழி யருக்கு சொல்ல வேண்டியவர் முன் கூட்டியே சொல்ல வில்லை. மின் ஊழியர் வந்து பார்த்து விட்டு ரூ. 2000/- அபராதம் விதிப்பேன் என்று மிரட்டினார். கையூட்டு கொடுத் ததும் அமைதியாகப் போனார். ஏன் முன் கூட்டியே தகவல் சொல்ல வில்லை என்ற தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் நவீன், திருப்பதி, சிலம்பரசன், சந்துரு ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இரத்தகாயம் ஏற்பட்டது. சாமியப்பாரு எல்லாம் இந்த விநாயகனால் வந்த தொல்லை தானே, என்று கூறி சந்துரு விநாயகனின் கை கால்களை மயில் வாகனத்தை உடைத் தெறிந்தார்.

பின்னர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்கள். பின்னர் ஊர் பஞ்சாயத்து கூடியது அவரவர் அடித்த தற்கேற்ப ரூ. 8000/- வரைக்கும் அபராதம் விதித்தார்கள். ஒற்றுமையாக இருந்த கிராமமக்கள் விநாயகனால் இரண்டாகப் பிளவுப்பட்டார்கள்.

- இளங்குமரன், திருப்பத்தூர்

தமிழ் ஓவியா said...



இதுதான் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியா? பூனைக்குட்டி வெளியில் வந்தது!


விருத்தாசலத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது காலிகள் திட்டமிட்டுத் தாக்கியது கண்டு உலகத் தமிழர்கள் பதறுகிறார்கள்! தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கண்டன அறிக் கைகளை வெளியிட்டுள்ளார்கள்.

தமிழர் தலைவரை நேரில் சந்தித்தும் கவலை தெரிவித்த வண்ணம் உள் ளனர். தக்க பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பயணம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். உங்கள் உயிர் எங்களுக்கு உரியது. தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும், ஏன், உலகம் முழுவதும் உள்ள மனித நேயர்களுக்கும், பகுத்தறிவாளர் களுக்கும், சமத்துவவாதிகளுக்கும் உரியது என்று கண்ணீர்மல்க தங் களின் உணர்வுகளை வெளிப்படுத் திக் கொண்டுள்ளனர்.

ஏடுகள் விருத்தாசலத்தில் நடந்த தாக்குதல் குறித்து படத்துடன் வெளியிட்டுள்ளன. முறைப்படி காவல் துறைக்கும் புகார் கொடுக்கப்பட் டுள்ளது.

இவ்வளவு நடந்திருந்தும், எதுவுமே நடக்காததுபோல காவல்துறையும், அதற்குச் சைகை காட்டும் அரசும் பழிப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

தாக்குதல் தொடுத்தவர்கள் யார் என்பது மிக வெளிப்படையாக தெரிந் திருந்தும், ஏடுகள் படம் பிடித்துக் காட் டிய பிறகும், காவல்துறை தூங்குவது ஏன்? நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தாக்குதல் தொடுக்கப்பட்ட இடத் தில் பத்திரிகையாளர்கள் வந்தது எப்படி? தொலைக்காட்சி ஒளிப்பதி வாளர்கள் தயாராகக் காத்துக் கொண்டிருந்தது எப்படி?

ஆக, வன்முறை திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவ்வளவும் நடந்ததற்குப் பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை - விழித்துக் கொள்ள வில்லை என்றால், இந்தத் தாக்குதல் காவல்துறைக்குத் தெரிந்துதான் நடந்திருக்கிறது என்ற முடிவுக்குத் தானே வரவேண்டியுள்ளது.

வேறு ஒரு கட்சியின் தலைவருக்கு இதுபோல தாக்குதல் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மாநாட்டில் கூடியிருந்த உணர்ச்சிமிகுந்த மக்கள் வெள்ளத்தின்முன் தலைவர் வீரமணி அவர்கள் கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால், என்ன நடந்திருக் கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

பொறுமையுடனும், சகிப்புத் தன் மையுடனும் பொதுவாழ்வில் கடைபிடிக் கப்பட வேண்டிய, வன்முறைக்கு அப்பாற்பட்ட நன்முறையும், ஒரு தலை வரால், அமைப்பால் கடைப்பிடிக்கப் பட்டால், அவர்களுக்குக் கோழைகள் என்று அ.இ.அ.தி.மு.க. அரசு முத்திரை குத்துகிறதா?

தமிழ்நாட்டில் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் என்பவை அன்றாடம் நடைபெறும் வழமையான செயல்களாக ஆகிவிட்டனவே - நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கு தல்கள் நடந்திருக்கின்றனவே!

தலைவர்கள் தாக்கப்படுதலும், அந்தப் பட்டியலில் இடம் பெற்று விட்டதோ இந்த ஆட்சியில்!

1.10.2013 நாளிட்ட ஆளும் கட்சி யின் அதிகாரப்பூர்வமான நாளேட்டில், (பக்கம் 4) நெத்தியடி எனும் தலைப் பின்கீழ் ஜனநாயகத்திலும் - கருத் துச் சுதந்திரத்திலும் நம்பிக்கை உள் ளோர் அனைவரும் கண்டிக்கனும்...! என்று தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையைக் கிண்டல் செய்து எழுதியுள்ளது.

விருத்தாசலத்திற்குப் போன கி.வீரமணி மீது நாலு பேருதாக்குதல் நடத்த எத்தனித்ததற்காக இப்படி எம்பிக் குதிக்கிறீர்களே! என்று வித்தாரமாக எழுதுகிறது ஆளும் கட்சி ஏடு. நாலு பேர் தாக்குதல் நடத் தினார்கள் என்பதை அ.இ.அ.தி.மு.க. ஏடு ஒப்புக் கொண்டுள்ளதே அந்த நாலு பேர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே கேள்வி.

எதிலும் அரசியல்தானா? ஒரு தலைவர் தாக்கப்பட்டதற்கு அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கண்டனம் தெரிவிக்கிறார் என்றால், அதன் அடிப்படையில் விசா ரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்தால், அதற்குப் பெயர்தான் மக்கள் நல அரசாகும் (Welfare State).

அதற்கு மாறாக வன்முறையை ஏவியவர்களுக்காக ஆளும் கட்சியின் நாளேடு வக்காலத்து வாங்கி எழுது கிறது என்றால், இதற்குப் பெயர் என்ன?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எங்குப் பயணம் செய்தாலும், தாக்குதலை மேற்கொள் ளுங்கள் - அ.இ.அ.தி.மு.க. அரசு அதனைக் கண்டுகொள்ளாது என்று ஆளும் கட்சி ஏடு சமிக்ஞை செய்வ தாகத்தானே பொருள்?

காவல்துறை இதுவரை நட வடிக்கை எடுக்காததற்கான பின் னணி இப்பொழுது வெட்ட வெளிச் சமாகிவிட்டது! - பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே!

தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி என்பதை உணர்ந்து அவர வர்களும் தங்களுக்குத் தாங்களே பாதுகாப்புக்கு உரியதைச் செய்து கொண்டாக வேண்டும் என்று சொல் லாமல் சொல்லிவிட்டது ஆளும் கட்சி ஏடு.

அ.தி.மு.க. ஆட்சி பற்றி தமிழ் நாட்டு மக்கள் நிலைமையைத் தெரிந்து கொள்வார்களாக! தமிழ் நாட்டுத் தலைவர்களும் இது குறித்து உரத்த முறையில் சிந்திப்பார்களாக!

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

3.10.2013
சென்னை