Search This Blog

8.10.13

அச்சம் விடுங்கள்; அறிவுபெற்றெடுங்கள் --பெரியார்

றிவோடு வாழ வேண்டுமென்றால் பொருட்காட்சி சாலைக்குச் செல்லுங்கள். வெளியூர் சென்று ஆங்காங்குள்ள தொழிற் சாலைகளைக் காணுங்கள். மற்ற மதக்காரர்கள் நடப்பதைப் பாருங்கள். ஆங்காங்குள்ள மக்களோடு பழகி ஒற்றுமை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு வரும் விஞ்ஞான உண்மைகளை அறிந்து கொள்வதில் ஆசை கொள்ளுங்கள். அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது எப்படி வீண் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கிறதோ, அது போல் கும்பிட்ட குழவிக் கல்லையே கும்பிட்டுக் கொண்டிருப்பதும் வீண் என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் சூத்திரப்பட்டம் நீங்க வேண்டும் என்பதை முக்கியமாகக் கொள்ளுங்கள்.

நீங்கள் எவ்வளவுதான் உயர்ந்த பதவியிலிருந்தாலும், எவ்வளவுதான் பணம் படைத்திருந்தாலும் உங்கள் சூத்திரப் பட்டம் நீங்காதவரை, நீங்களும், உங்கள் மனைவி மக்களும் சமுதாயத்தில் உயர்வான யோக்கியதை அற்றவர்களாகவே, பார்ப்பனர்களுக்குத் தாழ்ந்தவர்களாகவே கருதப்படுவீர்கள் என்பதை உணர்ந்து இந்த இழிவுப் பட்டம் ஒழிய எங்களோடு சேர்ந்து உழையுங்கள். பத்திரிகை வாயிலாகவும், சித்திரங்களின் வாயிலாகவும், சட்டம் வாயிலாகவும், படக்காட்சிகளின் வாயிலாகவும், நாடகங்கள் வாயிலாகவும் மேடைப் பிரசங்கங்கள் வாயிலாகவும் கதாகலாட்சேபங்கள் வாயிலாகவும் உங்களை என்றென்றும் பார்ப்பனரின் அடிமை மக்களாக வைத்திருக்க இன்று பலமான சூழ்ச்சி செய்யப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து உறுதியோடு பணியாற்ற முன்வாருங்கள்.
******
ங்களுக்காகவே இல்லாவிட்டாலும், உங்களின் பிற்கால சந்ததிகளின் முன்னேற்றத்திற்காகவேணும் நீங்கள் மூட நம்பிக்கையை ஒழிக்க முன்வாருங்கள். கல் சாமிக்கு கை தூக்கித் தண்டனிடாதீர்கள். நெற்றியில் மதக்குறி தீட்டிக் கொள்ளாதீர்கள்.

என்ன மதத்தினர் என்று கேட்டால் வள்ளுவர் மதம் என்று சொல்லுங்கள் உங்கள் நெறியென்னவென்றால் குறள் நெறி என்று சொல்லுங்கள். குறள் நெறி என்று சொல்வீராயின் உங்கள் முன் எந்த பிற்போக்குவாதியும், எப்படிப்பட்ட சூழ்ச்சிக்காரனும் முன் நிற்கக் கூசி ஓடிவிடுவான். குறளை எவனாலும் மறுத்துக் கூற முடியாது. அவ்வளவு இயற்கைக்கும், அறிவுக்கும் இயைந்ததாக இருக்கிறது அது. எனவே, குறளைப் படியுங்கள். அதன் வழிப்படி நடவுங்கள். அதையே எங்கும் பிரசாரம் செய்யுங்கள். உங்களுக்கு மனத் தூய்மை ஏற்படும். முன்னேற்ற அறிவில் ஆசையும், நம்பிக்கையும் ஏற்படும்.
ஆரியப் பித்தலாட்டத்திற்குச் சரியான மருந்து, சரியான மறுப்பு திருக்குறள்தான். இதை நான் மட்டுமே கூறவில்லை. திருவள்ளுவ மாலையிலேயே பல புலவர்கள் கூறியுள்ளார்கள், ஆரியப் புரட்டை வெளியாக்கி, மடமையைப் போக்கும் நூலே திருக்குறள் என்று. எனவே, குறள் வழிபட்டு நீங்கள் புத்தறிவு பெற்ற புது மனிதராகுங்கள். அதில் ஆரியப் போக்கு காணப்படலாம். அதைச் சரிவர உணரும்வரை தள்ளி வைத்து விடுங்கள்.
தோழர்களே, பட்டிக்காட்டானை விட இந்தச் சென்னைப் பட்டினத்துக்காரர்களே பெரிதும் மூட நம்பிக்கைக்காரர்களாக இருக்கிறார்கள். இங்குதான் சாமியாட்டம் மிக அதிகமாயிருக்கிறது. நமது பெண்கள் சாமியாடுவதைப் பார்த்தால் சாமி என்று ஒன்று இருக்குமானால், அதுகூட ரொம்ப வெட்கப்படும். கண்ட பயல்கள் இன்று சாமியாட்டம் ஆடி அல்லது பிறரை ஆட்டி வைத்து காசு பிடுங்கித் தின்ன ஆரம்பித்து விட்டிருக்கின்றனர். அந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம் நல்ல பிரம்பால் நாலு சூடான அடி கொடுத்துப் பார்க்க வேண்டும். அப்போது காணலாம் எவ்வளவு சீக்கிரமாக அந்தச் சாமி மலையேறி விடுகிறது என்பதை. கிராமங்களி-லெல்லாம் இப்போது சாமி ஆடினால் நல்ல உதை கிடைக்கிறது. அதனால்தான் சாமியாட்டம் அங்கு குறைந்துவிட்டது.

தஞ்சை சப்ஜெயிலில் ஒரு வேடிக்கை நடந்தது. என்னோடு ஜெயில் சூப்பரின்டெண்-டென்ட், அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது 14 வயது பையன் ஒருவன் ஜெயிலில் ரிமாண்டாக அனுமதிக்கப்பட அழைத்து வரப் பட்டான். ஜெயில் சூப்பரின்டெண்டென்ட் இதோ பார் உன் சிஷ்யன் வந்து விட்டான் என்று கூறினார். என்ன சங்கதி என்றேன். புரோகிதன் எவனோ திவசம் செய்வித்து விட்டு அரிசி, பருப்பு வாங்கிக் கொண்டு போனானாம். அவனை மடக்கி இவன் அடித் தானாம். அதனால் ரிமாண்டு செய்யப் பெற்று வந்திருக்கிறான் என்று கூறினார். தஞ்சை சப் ஜெயில் சூப்பரின்டெண்டென்ட் ஜெயில் வாரண்டைக் காட்டிக் கூறினார். நான் அந்தப் பையனுக்குக் கூறினேன். இது தவறு. அந்தப் பார்ப்பானுக்கு இதைக் கொடுத்தவனைப் போய் ஏண்டா முட்டாள் பயலே அரிசி, பருப்பு அவனுக்கு அழுதே. பாட்டாளி பட்டினி கிடப்பது உன் கண்ணுக்குத் தெரிய வில்லையா? என்று கேட்டு, அவன் கோபம் கொண்டு அடித்தால், நீ அந்த அடியை வாங்கிக் கொண்டு அவனுக்கும் விளக்கம் சொல்வதை விட்டு, நீ இப்படி அவனால் கொடுக்கப்பட்டு வாங்கி வந்த பார்ப்பானை அடிக்கலாமா என்று கேட்டேன்.

அதெல்லாம் சொல்லாதீங்க. இந்தப் பார்ப்பானுங்களே இப்படித்தானுங்க என்று ஏதோ சொல்லவே, அவனை அவர் வைது (திட்டி) அனுப்பி விட்டார். இப்படியாக நாம்தான் முட்டாள் தனமாக பார்ப்பானுக்கு அழுது வருகிறோமே ஒழிய, நாம்தான் நம் மனைவியை இழுத்துக் கொண்டு மொட்டை அடித்துக் கொண்டு, கோவிந்தா போட்டுத் தெருவில் வெட்க-மில்லாமல் நடந்து கொண்டு, காவடி தூக்கிக் கொண்டு, குரங்கு போல் குதித்துக் கொண்டு, பார்ப்பானுக்கு அழுது, அவன் வயிற்றை வீங்க வைத்து, முட்டாளாகிக் கொண்டு வருகிறோமே ஒழிய, அவனொன்றும் அப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதில்லை.

எனவே, நீங்கள் அறிவு பெற்று முட்டாள்-தனத்தைக் கைவிடுவீர்களேயானால் அவனொன்றும் உங்களை அசைத்து விடவோ, அழித்து விடவோ முடியாது.
நான் எனது 17-ஆவது வயதிலேயே இந்தக் கடவுளர்களையும், இந்தப் பார்ப்பனர்களின் பித்தலாட்டங்களையும் எதிர்க்க ஆரம்பித்து விட்டேன்.
அதிலிருந்து இன்று வரைக்கும் அதாவது சுமார் 53 ஆண்டுகளாக நானும்தான் இதே பகுத்தறிவுப் பிரசாரம் செய்து வருகிறேன். இதனால் நானென்ன சீக்கிரத்தில் செத்துப் போய் விட்டேனா? அல்லது என் சொத்தெல்லாம் அழிந்து போய் விட்டதா? அல்லது எனக்கு இழிவு ஏற்பட்டு விட்டதா? இல்லையே. பின் ஏன் நீங்கள் பகுத்தறிவு வழி நடக்க அஞ்சுகிறீர்கள். அச்சம் விடுங்கள்; அறிவு பெற்றெழுங்கள்.

---------------------------(26.12.1948 அன்று சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை - விடுதலை 31.12.1948)

21 comments:

தமிழ் ஓவியா said...


மோடி ஆளும் ஆட்சியின் பரிதாபம் குஜராத்தில் மூன்றில் ஒரு குழந்தை எடை குறைவு மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தகவல்


ஆமதாபாத், அக்.8- குஜராத் மாநிலத்தில், மூன்றில் ஒரு குழந்தை, எடை குறைவாக பிறப்பதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., தெரிவித்துள்ளது.

சி.ஏ.ஜி., சார்பில், குஜராத் சட்டசபை யில், நேற்று முன்தினம் தாக்கல் செய்யப் பட்ட அறிக்கை: குழந்தைகள், ஊட்டச் சத்து குறைவாக இருப்பதை தடுப்பதற்காக, நாடு முழுவதும், ஒருங்கிணைந்த குழந்தை கள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத் தப்படுகிறது. குஜராத்திலும், இந்த திட்டம் செயல் படுத்தப்படுகிறது. ஆனாலும், குஜராத்திலும், 63 லட்சம் குழந்தைகளுக்கு, இந்த திட்டத்தால் பயன் கிடைக்கவில்லை.

குஜராத் மாநிலத்தின் மக்கள் தொகையை ஒப்பிடுகையில், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, 75 ஆயிரம் அங்கன்வாடி மய்யங்கள் தேவை. ஆனால், 50 ஆயிரம் அங்கன்வாடி மய்யங்கள் தான் செயல்படுகின்றன. குஜராத்தில், மூன்று குழந்தைகள் பிறந்தால், அதில் ஒரு குழந்தை, எடை குறைவாகப் பிறக்கிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், சரியாகச் செயல்படாதது தான், இதற்கு காரணம். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கருத்து

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஷகீல் அகமது தனது டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:-

குஜராத்தில் ஊட்டச்சத்து குறைபாட் டுடன் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறது. இதன்மூலம் குஜராத்தின் வளர்ச்சி குறித்து கேள்வி எழுந்துள்ளது.

மோடியின் மாதிரி இப்போது வெளிப் படுத்தப்பட்டுள்ளது. ஆட்சி அதிகாரம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காந்தி நகருக்கு மிக அருகிலுள்ள அகமதாபாத் நகரிலும் மிகவும் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. மேலும் 8 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கட்டடம், பாதுகாப்பான குடிநீர், கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...


மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2 அமெரிக்கர்கள் - ஒரு ஜெர்மானியர் தேர்வு


ஸ்டாக்ஹோம், அக். 8- அறிவி யல், இலக்கியம் மற்றும் சமூக அமைதிக்கு பாடுபட்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில், மருத் துவத்துக்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படுகிறது. அந்த வகை யில், இந்த ஆண்டின் மருத்துவத் துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் ஜெர்மனியின் தாமஸ் சுடாப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மனித உடலில் உள்ள செல்களின் இயக்கம் குறித்த ஆராய்ச்சிக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. மனித உடலில் உள்ள குறிப்பிட்ட செல்கள், மனித உடலுக்குத் தேவையான திரவங்களை உற்பத்தி செய்கின்றன. இந்த திரவம், உடலின் எந்த பாகத்திற்கு தேவைப்படும் என்ற தகவல் அந்த செல்லுக்கு கிடைக்கும். தகவல் கிடைத்ததும் அந்த பகுதிக்கு சரியான இடத்திற்கு, சரியான நேரத்திற்கு அந்த திரவம் அனுப்பப்படுகிறது.

இந்த துல்லியமான போக்கு வரத்து கட்டுப்பாட்டு அமைப் பினை பேராசிரியர்கள் ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் தாமஸ் சுடாப் ஆகியோர் தங்கள் ஆராய்ச்சியின்மூலம் கண் டறிந்து வெளியிட்டுள்ளனர். நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப் பட்டிருக்கும் ஜேம்ஸ் ராத்மேன், யாலே பல்கலைக்கழகத்திலும், ஷேக்மேன் கலிபோர்னியா பல் கலைக்கழகத்திலும், சுடோப், ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத் திலும் பேராசிரியர்களாக பணி யாற்றி வருகின்றனர்.

இயற்பியல், வேதியியல், இலக் கியம், அமைதி மற்றும் பொருளா தாரத்துக்கான நோபல் பரிசுகள் இந்த வாரத்திலும், அடுத்த வாரத் திலும் அறிவிக்கப்படுகின்றன. ஒவ் வொரு பரிசும் 8 மில்லியன் ஸ்வீடன் கரோனா (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.7 கோடி) மதிப்புடையதாகும்.

தமிழ் ஓவியா said...

சங்கரராமன் படுகொலை மற்றும் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்டதில் சங்கராச்சாரியாருக்குத் தொடர்பு உண்டு
கொலை செய்யப்பட்ட சங்கரராமனின் மகன் சாட்சியம்

சென்னை, அக். 8- எனது தந்தையார் சங்கர ராமன் கொலை செய்யப் பட்டதிலும், ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக் கப்பட்டதிலும் காஞ்சி புரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வ திக்குத் தொடர்பு உண்டு என்று படுகொலை செய் யப்பட்ட சங்கரராமனின் மகன் ஆனந்த சர்மா சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தெளி வாக சாட்சி சொன்னார்.

ஜெயேந்திரர் ஆள் வைத்து தாக்கினார் என்று ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கரராமன் மகன் சாட்சியம் அளித்தார்.

2002 செப்டம்பர் 20ஆம் தேதி மந்தை வெளியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் அவ ரது மனைவி, வேலைக் காரர் ஆகியோர் தாக் கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, அப்பு, கதிரவன், லட்சுமணன் உள்ளிட்ட 12 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய் தனர். இந்த வழக்கு சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசார ணையில் உள்ளது.

ராதாகிருஷ்ணன் அவரது மனைவி உள் ளிட்ட 17 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று (7.10.2013) 5ஆவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி தண்டபாணி முன்பு இந்த வழக்கு விசார ணைக்கு வந்தது. சங்கர ராமனின் மகன் ஆனந்த் சர்மா ஆஜராகி சாட்சி அளித்தார். அவ ரிடம் அரசு சிறப்பு வழக் குரைஞர் என். விஜயராஜ் விசாரணை நடத்தினார். ஆனந்த் சர்மா அளித்த சாட்சியம் வருமாறு:

எனது தந்தை சங்கர ராமன் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பணி செய்து வந்தார். அதேபோல் ராதாகிருஷ்ணனும் திருப்பணி செய்து வந்தார். இதனால் இரு வருக்கும் பழக்கம் இருந்தது. இந்நிலையில், 2001இல் ஜெயேந்திரர் சீனாவுக்குப் போக முடிவு செய்தபோது, எனது தந்தை எதிர்ப்பு தெரிவித்து உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால், எனது தந்தைக்கும், ஜெயேந்திர ருக்கும் பகை இருந்தது. எனது தந்தை காஞ்சி மடத்தில் நடக்கும் பிரச் சினைகள், தவறுகள் குறித்து அடிக்கடி கண் டித்து வந்தார். இதை யடுத்து, 2002இல் நசரத் பேட்டையில் உள்ள வெங்கடேஸ்வரா ஆயுர் வேத கல்லூரியில் எனது தந்தை, ரிசர்வ் வங்கி வைத்தியநாதன் ஆகி யோரை வரச்சொல்லி சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற் படவில்லை.

இதையடுத்து, சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் மடத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி எனது தந்தை கடிதம் எழுதி னார். அதை மடத்தின் அபிமானிகளுக்கு அஞ்சல் மூலம் அனுப் பினார். நான்தான் அந்த அஞ்சல்களை அனுப் புவேன். அந்த கடிதங் களை ரிசர்வ் வங்கி வைத்தியநாதன், ராதா கிருஷ்ணன், பாம்பே சங்கர், டெக்கான் சுப் பிரமணியம், ஆடிட்டர் சங்கர், ரிக்வேதி வைத் தியநாதன் உள்ளிட்ட பலருக்கும் அனுப்பப் பட்டன.

இந்த நேரத்தில்தான் மந்தைவெளியில் உள்ள வீட்டில் ராதாகிருஷ் ணன் தாக்கப்பட்டார். சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் கடிதம் எழுதியது ராதாகிருஷ் ணன்தான் என்று நினைத்து அவரை ஜெயேந்திரர் ஆள்வைத்து தாக்கியுள் ளார். இதையறிந்த எனது தந்தை ரிசர்வ் பாங்க் வைத்தியநாதனுக்கு போன் செய்தார். போனில், கடிதத்தை ராதாகிருஷ் ணன் எழுதியதாக தவ றாக புரிந்துகொண்டு அவரை தாக்கியுள்ளனர் என்று பேசினார்.

இதையடுத்து, நானும் எனது அம்மாவும் கடி தம் எழுத வேண்டாம் என்று எனது தந்தை யிடம் கூறினோம். அத னால் 6 மாதங்கள் கடி தம் எழுதாமலிருந்தார். தாக்கப்பட்ட ராதா கிருஷ்ணன் பட்டினப் பாக்கம் காவல் நிலை யத்தில், கடிதத்தை நான் எழுதவில்லை. ஆனால், நான் எழுதியதாக நினைத்து என்னை ஆள்வைத்து தாக்கியுள்ளனர்.

எனக் கும் எனது குடும்பத் தினருக்கும் ஆபத்து வந் தால் அதற்கு ஜெயேந் திரர்தான் காரணம் என்று கூறியுள்ளார். இந்நிலையில்தான் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள தேவராஜசுவாமி தேவஸ்தான அலுவல கத்தில் எனது தந்தையை கொலை செய்தனர். காவல்துறையினர் விசாரித்த போது நடந்த சம்பவங்களைத் தெரி வித்தேன்.இவ்வாறு சாட்சியம் அளித்தார்.

விசாரணை முடிந்தவு டன், சாட்சி ஆனந்த் சர்மாவிடம் வேறொரு நாள் குறுக்கு விசாரணை நடத்துமாறு நீதிபதி யிடம் ஜெயேந்திரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வெங்கட்ராமன் கோரி னார். அதற்கு அரசு சிறப்பு வழக்குரைஞர் கடும் எதிர்ப்பு தெரி வித்தார். இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மேலும், காலதாமதம் செய்தால் சாட்சியை மிரட்டு வதற்கு வாய்ப்பு ஏற் படும். முடிந்தால் நாளை குறுக்குவிசாரணை நடத்தட்டும் என்றார்.

ஆனால், ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் ஏற்கெனவே சாட்சியம் அளித்த ராதாகிருஷ் ணனிடம் குறுக்கு விசா ரணை நடத்தியபிறகு தான் ஆனந்த் சர்மா விடம் குறுக்கு விசா ரணை நடத்துவோம் என்று கூறி ஒரு மனு வைத் தாக்கல் செய்தார். இதையடுத்து, விசா ரணையை நீதிபதி வரும் 22ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார். அன்று ரிசர்வ் வங்கி வைத்தியநாதன் சாட்சியளிக்க உள்ளார்.

தமிழ் ஓவியா said...


அக்டோபர் எழுச்சி


உலகில் அக்டோபர் புரட்சி பற்றிப் பேசுகிறோம். திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் இந்த அக்டோபர் மாதம் பல முக்கிய நிகழ்வுகளின் சங்கமமாக அமைகிறது.

செப்டம்பரின் இறுதிப் பகுதி அதற்கான தொடக்கத்தைக் கொடுத்து விட்டது என்று சொல்லலாம்; செப்டம்பர் 28இல் விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாணவர் அணியின் மண்டல மாநாடும் அதனையொட்டி, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர், மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது மதவெறியர்களும், ஜாதி வெறியர்களும் மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலும் பெரிய அலைகளை நாட்டில் எழுப்பி விட்டன.

திராவிடர் கழகத் தலைவர் மீது தொடுக்கப்பட்ட அந்தத் தாக்குதல் தனி நபர் மீதான ஒன்றல்ல - ஜாதி ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு மற்றும் பிற்போக்குச் சக்தி களை நோக்கிய எதிர்ப்பு என்கிற வகையில் கட்சி களைக் கடந்து பேரலையைத் தட்டி எழுப்பி விட்டது.

இவற்றின் குறியீடாக இருக்கக் கூடிய திராவிடர் கழகம், அதன் தலைவர் மீதான தாக்குதலை முற்போக்குச் சக்திகள் தங்களுக்கான ஒன்றாகக் கருதி எடுத்துக் கொண்டது - நல்லதோர் அறிகுறி யாகும். தமிழ்நாட்டு மக்கள் அப்படி ஒன்றும் கெட்டுப் போகவில்லை; தந்தை பெரியார் விதைத்த வித்து, வீறு கொண்ட எழுச்சியாக - சில நேரங்களில் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதை உணர முடிகிறது.

பச்சையான அரசியல் நோக்கு என்ற சுயநலச் சிறையில் சிக்கிக் கொண்ட ஒரு சிறு எண்ணிக்கை கொண்டவர்களைத் தவிர, மற்றபடி பொதுவாகத் தமிழ் மண்ணில் முற்போக்குச் சிந்தனை வீறு கொண்டு இருப்பதை இந்த நிகழ்வுகள் ஆவணப் படுத்திக் காட்டி விட்டன.

குறிப்பாக ஜாதி அமைப்புகள் ஒன்றுகூடி ஏதோ பெரிய புரட்சி நடத்தப் போவதாக தத்தம் முதுகுகளில் தம்பட்டங்களைக் கட்டிக் கொண்டு டாம் டாம் செய்து கொண்டு இருக்கின்றன. அவற்றின் நோக்கம் எல்லாம் தேர்தலில் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்று நாக்கில் எச்சில் ஊறிக் கிடக்கும் சமாச்சாரம் தான்.

அற்பக் கணக்கில்கூட ஜாதிக் கூட்டங்கள் வெற்றி பெற முடியாது தமிழ்நாட்டில் என்பது - இதற்கு முன்பும் எத்தனையோ முறை தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண் பாடம் புகட்டி இருந்தும், இதுவரை புத்திக் கொள் முதல் பெறவில்லை என்பது பரிதாபமே!

இன்னும் - சிலருக்கு மதவாத சக்திகளோடு ஆலிங்கனம்! அவர்கள் பெரியார், அண்ணா பெயரைக் கூட உச்சரிப்பார்கள். ஏன் சில நேரங்களில் பகுத்தறிவு கூடப் பேசுவார்கள்; மேலும் மதச் சார்பின்மை பற்றியும் ஆவேசமாக பேசுவார்கள். இவர்கள் அத்தனைப் பேர்களும் முகத்திரை கிழிந்து பரிதாபகரமான பள்ளத்தாக்கில் விழுந்து எலும்புகளை இழந்து விடப் போகிறார்கள்.

தேர்தலுக்குமுன் ஒரு கூட்டு - தேர்தலுக்குப்பின் ஒரு கூட்டு என்ற முதுகுக்குப் பின்னால் முணுமுணுத்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள். அதில்கூட அறிவு நாணயம் இல்லையே!

என்னதான் மோடிகளை முன்னிறுத்தினாலும், கோடி கோடியாகப் பண வெள்ளத்தை கரை உடைத்து ஓடச் செய்தாலும் பிள்ளை பிழைக்கப் போவதில்லை.

விருத்தாசலம் மாநாடு எடுத்துக் கொடுத்து விட்டது - அக்டோபர் 20 திண்டிவனம் கழகப் பொதுக் குழுவும் சங்கநாதம் செய்யும் - திருச்சிராப்பள்ளியில் நவம்பர் 9ஆம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடும் - இந்தியாவுக்கே பல செய்திகளைக் கொடுக்கப் போகிறது.

பிஜேபிக்கான, குறிப்பாக அவர்களின் பிரதம ருக்கான வேட்பாளர் திரு. நரேந்திரமோடி, மதச் சார்பின்மை என்பதை வேறு ஒரு தடத்திற்கு இழுத் துச் சென்று, ஏதேதோ தமது மனதிற்குப்பட்டவற்றை எல்லாம் சம்பந்தமில்லாமல் பிதற்றிக் கொண்டு இருக்கிறார்.

மதச் சார்பின்மையை மறு தலிக்கவும் முடிய வில்லை. அதே நேரத்தில் ஒப்புக் கொள்ளவும் மனம் இல்லை; ஆகவே மதச்சார்பின்மை என்பதற்கு தங்கள் இஷ்டத்திற்கு விளக்கம் சொல்ல முற்பட் டுள்ளனர்.

மதச் சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் இல்லை என்பதுதான். அதனை மறைத்து விட்ட நிலையில், தன்னை இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லிக் கொள்பவர் இந்தியாவின் பிரதமர் ஆவதற்கான அடிப்படைத் தகுதியை எப்படிப் பெற முடியும்?

இந்த அடிப்படையை இந்தியாவிலேயே சற்றும் பிசிறு இல்லாமல் செவ்விய முறையில் சொல்லிக் கொடுக்கும் பாடம் நமது இயக்கத்திற்குத்தான், நமது தலைவருக்குத் தான் உண்டு.

அக்டோபர் மாதம் நமது கழகத்திற்கு முக்கிய மானது. திண்டிவனம் பொதுக் குழுவில் அதற்கான வெளிச்சம் கிடைக்கும்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களைச் சந்திப் பார்கள் சந்திப்போம்!

தமிழ் ஓவியா said...


இந்து மதம்


இந்து மதம், இந்துச் சட்டம், இந்து ஆட்சி என்பவையெல்லாம் பார்ப்பன மதம், பார்ப்பனச் சட்டம், பார்ப்பன ஆட்சியே ஆகும்.

விடுதலை, 22.9.1972

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் அவர்களுக்கு அரணாவோம்!


தந்தை பெரியார் அவர்கள் சுய மரியாதை இயக்கத்தைத் தோற்று வித்து அதன் மூலம் நம்மையெல்லாம் மனிதர்களுக்கு பாதுகாப்பாய் வாழ வழி வகுத்துள்ளார்கள்.

அவர்கள் போட்டுத் தந்த பாதை யில் எந்த வித சபலத்திற்கும் ஆளா காமல், ஆளாக்காமல் நம்மை வழி நடத்திச் செல்கிறார் நம் தமிழர் தலைவர் அவர்கள்.

தலைவர் அவர்களின் பெருமை களைப் பொறாதவர்கள் அவர்கள் மீது அபாண்டமாய் பழிகளை வீசி வருகின்றனர். அவற்றால் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல், அப்பழிகளே பூமராங் போல வீசியவர்களிடமே சென்றடைகின்றன.

மனைவிமீது கோபங் கொண்ட பார்ப்பனன், தன் மனைவியை பார்த்து, உனக்கு மொட்டையடித்து, வெள்ளைப் புடவை உடுத்தி மூலை யில் உட்கார வைக்க வேண்டுமடி என்றானாம். கோபத்தின் உச்சியிலி ருந்த பார்ப்பனன் தான் செத்தால் தான் இது நடக்கும் என்பதைக் கூட உணர முடியவில்லை.

இது போலவே மகன் செத்தாலும் பரவாயில்லை, மருமகன் தாலியறுக்க வேண்டும் என்றெண்ணுகிற மாமியார் களும் உண்டு. இப்படிப்பட்ட அவலச் சிற்றின்பக்காரார்கள் நாட்டில் நிறைய உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அரசு இயந்திரங்களிலும், ஆட்சியிலும் அமர்ந்துவிடுகிறார்கள். இதற்குச் சரியான எடுத்துக்காட்டு விருத்தாசலத்தில் நடந்த விரும்பத் தகாத நிகழ்ச்சியாகும்.

இக்கொடுஞ்செயலைச் செய்தவர்கள், தந்தை பெரியார் அவர்களின் பேராற்ற லால், மானமிகுவாளர்கள் முத்தையா முதலியார், கர்மவீரர் காமராசர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட் சித் தலைவர் எம்.ஜி.ஆர். போன்றோரின் முயற்சியால் கிடைத்த பட்டம் பதவிகளை அனுபவித்துக் கொண்டு, மேற்சொன்ன தலைவர்களைப் பின்பற்றி வரும் ஆசிரியர் அவர்களை பயணத்தின்போது தாக்கு கிறார்கள் என்றால் அவர்களை என்ன சொல்லி அழைப்பது? இதற்குத் தூண்டு கோலாய் இருந்தவர்களை என்ன செய்வது? இவர்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் செய்து விட்டார்கள் என்று மன்னித்து விடுவதா? அல்லது அவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் நடவடிக்கைகள் எடுப்பதா?

சட்டத்திற்குட்பட்ட கத்தியை எப்போ தும் கையில் வைத்துக் கொள்ளுங்கள். நம்மைத் தாக்கவருபவனைக் கொல்லும் முயற்சியில் செத்துப் போனாலும் பரவா யில்லை என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் வழியா? நீதிமன்றம் வழியா? மக்கள் மன்றம் வழியா? அல்லது மூன் றையும் கொண்ட வழியா என்பதை யோசிக்க வேண்டும்.

எதற்கும் ஆயத்தமாகவே திராவிடர் கழகத்தொண்டர்கள் இருக்கிறார்கள். கட்டளை கிடைத்தவுடன் அதனைச் செயல்படுத்த ஆயிரமாயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள். இளைஞர்கள் என்பது இருபாலரையும் சேர்த்துத்தான்.

மம்சாபுரம் நிகழ்ச்சியை இலேசாக விட்டு விட்டதால் தான் இப்போதைய நிகழ்வு. இரண்டுமே அண்ணாவை கொடியிலும் கட்சியின் பெயரில் வைத்துக் கொண்டு, அவரது கொள்கைக்கு நாமம் போடுபவர்கள் ஆட்சியில் தான் என்பது கவனிக்கத்தக்கது.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர், அவர் களது கொள்கைகளைத் தெரியாதவர் களை; தொ(கு)ண்டர்களாகக் கொண்ட கட்சி, தெரிந்தும் தெரியாதவர்கள் போலிருக்கும் குட்டித்தலைவர்களைக் கொண்ட கட்சி, கண்டதே காட்சி கொண்டதே கோலம், எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அவ மானப்படுத்தும் மனோநிலை கொண்ட தலைமை இப்படிப்பட்ட அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தமிழகம். ஏ தாழ்ந்த தமிழகமே என்ற அண்ணாவின் தலைப்புத்தான் நினைவிற்கு வருகிறது.

இக்கொடிய செயலில் ஈடுபட்ட குண்டர்கள், அவர்களுக்குத் துணை போன காவல்துறை மண்டையர்கள் அனைவரும் தண்டனைக்கு உட் பட்டே ஆகவேண்டும். நம் முயற்சி களால் பட்டம், பதவி கிடைத்த அலுவலர்கள் தம்மைத் தாக்குவதை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஏதேனும் செய்தே ஆக வேண்டும்.

நம்முடைய பிரச்சாரங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும். சாதிச் சங்கங்கள் அரசியலில் ஈடுபடு வதைத் தடுத்தாக வேண்டும். சாதிச் சங்கங்கள் செயல்பட முடியாத அளவிற்கு நம் பிரச்சாரங்களை, முயற்சிகளைப் பலப்படுத்த வேண்டும்.

பாடுபடுவோம், வெற்றி பெறு வோம்; சாதிப்பகைவர்களைப் புறங் காண்போம்.

- ப. சங்கரநாராயணன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், நாகர்கோயில்-2)

தமிழ் ஓவியா said...


உ.பி. உயர்நீதிமன்றத்தின் விசித்திர உத்தரவு

அலகாபாத், அக்.8- உத்தரபிரதேசத்தில் காவலர் பணியில் போதிய பிரதிநிதித்துவம் பெற்றுள்ள பிற் படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலை வாழ் பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 40 ஆயிரம் காவலர் பணியிடங்களுக்கு கடந்த ஜூனில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் 17 ஆயிரம் இடங்கள் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. பிற்படுத்தப்பட்ட ஜாதியினரில் ஆஹிர், யாதவ், யாதுவன்ஷி மற்றும் குவாலா ஆகிய ஜாதியை சேர்ந்தவர் களும், எஸ்சி பிரிவில் சாமர், துரியா மற்றும் ஜாதவ் ஜாதியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் இடஒதுக்கீடு பலன்களை பெற்றிருப்பதாக மனுவில் கூறப் பட்டிருந்தது.

இந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் காவல் துறையில் ஏறக்குறைய 60 சதவீதம் அளவுக்கு நிறைந்திருப்ப தாகவும், இவர்களுக்கு மீண்டும் இடஒதுக்கீடு அளித்தால் மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படு வார்கள் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சுதிர் அகர்வால் விசாரித்து, போதிய பிரதிநிதித்துவம் பெற் றுள்ள ஜாதியினருக்கு மீண்டும் இடஒதுக்கீடு அளிக்கக் கூடாது என உ.பி. அரசுக்கு உத்தரவிட்டார்.

இது அரசி யல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்பதாக காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. உடனடியாக இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் மாநில காங்கிரஸ் தலைவர் நிர்மல் கத்தாரி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி பொது செயலாளர் பிரசாத் மவுரியா கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்த பின்னரே கருத்து தெரிவிக்க முடியும் என பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் விஜய் பகதுர் பதக் கூறினார். சட்ட வல்லுநர்களின் கருத்தை கேட்ட பின்னர் உயர்நீதிமன் றத்தில் உ.பி. அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப் படும் என மூத்த அமைச்சரும் சமாஜ் வாடி மாநில செய்தித் தொடர்பாளருமான ராஜேந்திர சவுத்ரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுத் துறைகளில் பார்ப்பனர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்களே, அதற்கு இப்படி ஓர் உத்தரவைப் பிறப்பிப்பார்களா?

தமிழ் ஓவியா said...


வளர்ச்சியற்றவர்கள்



பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவதால், சிறுவயதிலேயே அவர்கள் தலைமீது குடும்பப் பொறுப்பு விழுந்துவிடுகிற காரணத்தினால், சுதந்திரம் அற்றுக் கவலை, தொல்லை இவைகளுக்கு ஆளாகிப் போதிய வளர்ச் சியற்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். - (விடுதலை, 13.9.1972)

தமிழ் ஓவியா said...


அக்டோபர் 15 இல் ஆர்ப்பாட்டம்!


7.10.2013 அன்று சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் ஈழத் தமிழர், தமிழக மீனவர்கள் பிரச்சினை களை வலியுறுத்தி முக்கிய தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது.

இலங்கை வடக்கு மாகாணத்தில் இராணுவக் கெடுபிடிகளுக்கிடையே தேர்தல் நடத்தப்பட்டும், தமிழ்த் தேசிய கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. ஆனாலும், மாநில அரசுக்குக் காவல்துறை அதிகாரம் உள்ளிட்ட எவ்வித முக்கிய உரிமைகளை யும் வழங்கப் போவதில்லை.

13 ஆவது சட்டத் திருத்தத்தையும் அமல்படுத்தப் போவதில்லை என்று திட்டவட்டமாக ராஜபக்சே அறிவித்திருப்பதை இந்தியா உள்பட அனைத்து நாடுகளும் கண்டிப்ப தோடு இதனை அடிப்படையாகக் கொண்டு காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கை அரசை நீக்கி வைக்கவேண்டும் என்று திராவிடர் கழகச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது.

1987 ஜூலை 29 அன்று இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி அன்றைய இலங்கை அதிபர் ஜூனியர் ரிச்சர்ட் (ஜெ.ஆர்.) ஜெயவர்த்தனே ஆகியோர் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, தமிழர்கள் அதிகம் வாழும் இலங்கை யின் வடக்கு - கிழக்கு மாகாணத்தை இணைப்பது உள்பட பல முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றி ருந்தன.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பை உச்சநீதிமன் றத்தின் வாயிலாக ஒரு தீர்ப்பைப் பெற்றுக்கொண்டு இணைப்பு இல்லை என்றாகி விட்டது.

(நியாயமாக ஒப்பந்தப்படி 1988 டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டு இருக்கவேண்டும் - ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பிறகுதான் வடக்கு மாநிலத்திற்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது என்பதை மறந்துவிடக்கூடாது).

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்காஸ் ஆகிய இன மக்களைக் கொண்ட பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒரு நாடு என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.

சிங்கள மொழியோடு, தமிழும் ஆட்சிமொழி என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டும். அவ்வாறு செய்யப் பட்டதா?

ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதற்குப் பிறகும்கூட ஜெயவர்த்தனே என்ன மனவோட்டத்தில் இருந்தார்?

சிங்களமும், தமிழும் ஆட்சிமொழிகளாகும் என்ற ஒப்பந்தப் பிரிவுபற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அதிபர் ஜெயவர்த்தனே கூறினார். அப்படி இரண்டு மொழிகள் இலங்கைக் கல்வி முறையில் தேவையா என்பதைப்பற்றி இனிமேல்தான் ஆராய வேண்டும் (இந்தியன் எக்ஸ்பிரஸ், 30.7.1987, பக்கம் 9) என்று கூறியவர்தானே!


13 ஆவது திருத்தப்படி தமிழர்களுக்கு ஓரளவு சுயாட்சி மணம் இருக்கத்தான் செய்தது. ஆனால், அவ்வாறு திருத்த இலங்கை அரசு தயாராகவில்லை.

இதனை எதிர்த்து புத்தத் துறவிகளைத் தூண்டி விட்டு போராட்டங்களை நடத்தச் செய்திருப்பதும் இலங்கை அரசுதான்.

நிலவுரிமை, காவல்துறை அதிகாரம் போன்றவைகூட இல்லாமல் ஒரு மாநிலத்தின் ஆட்சி என்பது நகைப்புக் குரியதாகவே இருக்கும். மாநில முதலமைச்சரைவிட ஆளுநருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் என்ற ஒரு நிலை சட்ட ரீதியாக உருவாக்கி வைக்கப் பட்டுள்ளது.

நியாயமாக 13 ஆவது சட்டத் திருத்தத்தை நிறை வேற்றிச் செயல்படுத்தவேண்டும் என்று இலங்கையை வலியுறுத்த இந்தியாவுக்குக் கடமை இருக்கிறது. ஏனெனில், இந்தியப் பிரதமரும் கையொப்பமிட்ட ஒப்பந்தம் அது.

இரத்து செய்வதாக இருந்தால்கூட இரண்டு நாடுகளும் இணைந்துதான் அந்த முடிவை எடுக்க வேண்டுமே தவிர, தன்னிச்சையாக ஒரு சார்பாக (Unilateral) முடிவு எடுப்பது சட்ட விரோதமாகும்.

உலக நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவிடவே தேர்தல் நடத்தப்பட்டுள்ளதே தவிர, அதன் நோக்கத்தை நிறைவேற்றும் மனப்பான்மை இலங்கை அரசுக்குக் கிடையவே கிடையாது.

இலங்கை சென்று வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எந்த அளவுக்கு இந்தப் பிரச்சினையில் அழுத்தம் கொடுத்தார் - எந்த அளவுக்கு இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என்பது தெரிவிக்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் வலியுறுத்தியே 61 கழக மாவட்டங் களில் திராவிடர் கழகம் வரும் 15 ஆம் தேதி ஆர்ப் பாட்டத்தை நடத்துகிறது. தோழர்களே, எழுச்சியோடு செயல்படுத்துவீர்!

தமிழ் ஓவியா said...


இயற்பியல் நோபல் பரிசு: இரு விஞ்ஞானிகளுக்கு!


ஸ்டாக்ஹோம், அக்.9- கடவுள் துகளைக் கண் டறிந்த 2 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7 கோடியை இருவரும் பகிர்ந்துகொள்கின்றனர்.

இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட் டுள்ளது. அந்த விஞ்ஞானிகள் இங்கிலாந்தின் பீட்டர் க்ஸ் (வயது 84), பெல்ஜியத்தின் பிராங் கோயிஸ் இங்கிலெர்ட் (80) ஆவார்கள்.

இவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.7 கோடி) ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்த பரிசுத் தொகையை இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கப்படுகிற கடவுள் துகளை கண்டு பிடித்து உலகுக்கு முதலிலேயே சொன்ன சாதனை யாளர்கள் இவர்கள்.

அதென்ன கடவுள் துகள் என்ற கேள்வி எழு கிறது அல்லவா? அதற்கு முதலில் இந்த பிரபஞ்சம் உருவானது எப்படி என தெரிந்து கொள்ள வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக பிக் பேங் என்றழைக்கப்பட்ட பெருவெடிப்பு ஏற்பட்டது. அப்போது வாயுக்கள் தோன்றி அதில் இருந்த அணுக்கள் ஒன்றுசேர்ந்துதான் இந்தப் பிரபஞ்சம் உண்டானது என்பது விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

ஒட்டும் பொருள் அணுவில் எலெக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகிய மூன்று துகள்கள் உண்டு என்பது விஞ்ஞானி ரூதர் போர்டின் கண்டு பிடிப்பு. ஆனால் அந்த அணுவுக்கு அடிப்படை 16 துகள்கள் என்று கண்டறியப்பட்டது. இந்த 16 துகள்களும்தான் கல், மண், பேனா, பென்சில், விமானம், கார், ரயில் என அனைத்து பொருள்களின் உருவாக்கத்துக்கும் அடிப்படை எனவும் தெரிய வந்தது.

ஆனால் இந்த 16 துகள்களையும் ஒன்று சேர்க்கிற ஒட்டும்பொருள் ஒன்று உண்டு என்று அரை நூற்றாண்டுக்கு முன்பாக 1964-ம் ஆண்டு உலகுக்கு சொன்னவர்கள் பீட்டர்க்ஸ், பிராங்கோயிஸ் இங்கி லெர்ட் ஆவார்கள். பீட்டர்க்ஸ் பெயரால் அது க்ஸ்போஸான் என அழைக்கப்படுகிறது. இதை கடவுள் துகள் என கருதுகின்றனர்.

போஸான்க்ஸ் இதைக் கண்டறிவதற்காக பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே ஜெனீவா அருகில் 574 அடி ஆழத்தில், 27 கி.மீ. நீளத்தில் ஒரு சுரங்கப்பாதையில் செர்ன் என்ற அய்ரோப்பிய அணு ஆராய்ச்சி மய்யம் உருவாக்கப் பட்டது. இதில் அதிவேக புரோட்டான்களை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டனர்.

அதில் இதுவரை பார்த்திராத துகளின் தடயம் காணப்பட்டது. அதன் நிறை, இதற்கு முன்பு விஞ்ஞானிகள் கணித்து கூறிய அதே வரையறைக்குள் இருந்தது. அதுதான் க்ஸ் போஸான் துகள். இந்த போஸான் துகள் கண்டு பிடித்தவரின் பெயரால் போஸான்க்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தக் கண்டுபிடிப்புக்கு காரணமான விஞ் ஞானி பீட்டர்க்ஸ், பிராங்கோயிஸ் இங்கிலெர்ட் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் விஞ்ஞானிகள் இருவரும் மகிழ்ச்சி வெளியிட்டனர்.

தமிழ் ஓவியா said...

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது!

50 சதவிகிதத்திற்குமேல் இட ஒதுக்கீடு கூடாது என்பதைக் காரணமாக்கக் கூடாது என்ற தீர்ப்பு சிறப்பானது

கடவுளை மற - மனிதனை நினை என்ற பெரியார் கொள்கைக்கு வெற்றி!

தமிழர் தலைவரின் மனிதநேய அறிக்கை

மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

1. மாற்றுத் திறனாளிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் அனைத்துத் துறைகளிலும் 3 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கவேண்டியது கட்டாயம் ஆகும். இன்னும் 3 மாதங்களுக்குள் இதனை நடைமுறைப்படுத்திட வேண்டும்.

2. 50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்பதை ஒரு காரணமாகக் காட்டி, இதனை மறுக்கவோ, செயல்படுத்தாமல் நிராகரிக்கக் கூடாது. அதற்குமேல் என்றாலும், மூன்று விழுக்காடு தர மறுக்கக் கூடாது.

- இவ்வாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் ப.சதாசிவம் அவர்கள் தலைமையில் அமைந்த அமர்வு ஆணையிட்டு இருப்பது,

பல லட்சணக்கணக்கான மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றி அவர்களுக்கு ஒரு புது வாழ்வையும், புத்தாக்கத்தையும் தரும் சமூகநீதிப் பயணத்தில் ஒரு அருமையான மைல்கல் ஆகும்!

கலைஞர் உருவாக்கிக் கொடுத்த சொல்லாக்கமே மாற்றுத் திறனாளிகள்!

ஊனமுற்றவர்கள் என்ற பெயரை மாற்றி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக சென்ற முறை இருந்தபோது, ஒரு புது சொல்லாக்கமாக மாற்றுத் திறனாளிகள் என்று அரசுக் குறிப்புகளில் இடம்பெறச் செய்தார்கள்; முதன்முதலில் அவர்களுக்கென தனி இட ஒதுக்கீடும் தருவதற்கு ஏற்பாடு செய்து நடை முறைப்படுத்தினார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் அந்த மாற்றுத் திறனாளிகள் தங்கள் உரிமைகளைக் காக்க நடத்திய போராட்டத் தின்போது, காவல்துறையினர் அவர்களிடம் சற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொண்டனர்; உயர்நீதிமன்ற நெருக்குதல் காரணமாகவே பிறகு அவர்களது உரிமைக் குரலுக்குச் சற்று பயன் ஏற்பட்டது.

இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பின்மூலம் இந்திய நாடு முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் சட்டபூர்வமான உரிமையாகவே - சலுகையாக அல்ல - வேலை வாய்ப்பை இனி மத்திய - மாநில அரசுகளிடம் பெற்று சுயமரியாதை யோடு வாழ வழி ஏற்படும்.

வெளிநாடுகள் காட்டும் மனிதாபிமானம்

வெளிநாடுகளில் குறிப்பாக, மாற்றுத் திறனாளி களுக்கு எதிலும் முன்னுரிமை, சலுகை, வாகனங்கள் நிறுத்தப்படும் இடம் தொடங்கி, அலுவலகம், கல்வி நிலையங்கள் எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்கும்.

இப்போது நம் நாட்டிலும் அந்த நிலை செயல்படத் தொடங்கியுள்ளது, மகிழ்ச்சிக்குரியது.

உச்சநீதிமன்ற ஆணையில், ஒரு செய்தியை தெளிவு படுத்தியுள்ளார்கள் நீதியரசர்கள்; அது மிகவும் பாராட்டத் தக்கது!

50 விழுக்காடுப் பிரச்சினை - உண்மை நிலை என்ன?

50 விழுக்காட்டிற்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்ற விதியைக் காரணம் காட்டி, இந்த மூன்று விழுக்காடு மாற்றுத் திறனாளி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தாமல் எந்த அரசும் விடக்கூடாது என்று கூறி இந்த 3 விழுக்காடு காரணமாக இட ஒதுக்கீடு வரையறை 50-க்கு மேலாகவும் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்!

1. 50 விழுக்காட்டிற்குமேல் போகக்கூடாது என்பது இந்திய அரசியல் சட்டத்தில் எந்தப் பிரிவிலும் கூறப்படவே இல்லை.

பாலாஜி ஏள (கர்நாடகா) மாநிலம் என்ற வழக்கில் போகிற போக்கில் கூறப்பட்ட கருத்தை ஏதோ மிகப்பெரிய ஆணைபோல ஆதிக்க சக்திகள் காட்டி விட்டன.

2. இந்திரா சகானி வழக்கு என்ற மண்டல் குழுவின் வழக்கில் (9 நீதிபதிகள் கொண்ட அமர்வு) 50 சத விகிதத்திற்குமேல் விலக்காக இருக்கலாம் என்றும், விளக்கம் தரப்பட்டது இங்கு சுட்டிக்காட்டப்படல் வேண்டும்.

தமிழ் ஓவியா said...

3. தமிழ்நாட்டில் உள்ள 69 சதவிகித சட்டம், அத் தீர்ப்புக்கு முன்னதாகவே செயல்படுத்தப்பட்ட ஒன்று. சட்டம், அது சட்ட வலிமையைப் பெற்று, 9 ஆவது அட்ட வணைப் பாதுகாப்பினைப் பெற்றுள்ளது என்பதும் முக்கியம்.

இதனை ஒழிக்க இங்குள்ள உயர்ஜாதி பார்ப்பனீயம் எத்தனையோ முயற்சிகளை இன்னும் செய்து வந்த வண்ணமே உள்ளது! ஆனால், இது செயலில் 33 ஆண்டு களாக இருக்கும் நிலையில், இனி எந்த அரசும் இதில் கை வைக்க முடியாது; கை வைத்தால் குளவிக் கூட்டி னைக் கலைக்க கை வைத்தவர் கதையாகிவிடும்.

பெரியார் சொன்ன கடவுளை மற; மனிதனை நினை!

எனவே, 50 விழுக்காடு பற்றிக் கவலைப்படாமல், இந்த 3 விழுக்காடு உடனடியாக மாற்றுத் திறனாளிகளுக்கு (கூடுதலாகவே) வழங்க உச்சநீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டிவிட்டது என்பது வரவேற்கத்தக்கது.

சமூகநீதிக் கொடி அங்கேயும் இப்போதுதான் உயர்ந்து பறக்கத் தொடங்குகிறது என்று உலகம் தெரிந்து கொள்கிறது!

நம்பிக்கையாளர்களின் கருத்துப்படி, கடவுளர்கள் அவர்களை அப்படிப் படைத்தனர் என்பதாகும். இத் தகைய நீதியரசர்களோ (மனிதர்கள்) அவர்களை வாழ வைக்கின்றனர்!

தந்தை பெரியார் கூறிய கடவுளை மற; மனிதனை நினை! எப்படி செயல் வடிவம் பெறுகிறது பார்த்தீர்களா?

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
9.10.2013

தமிழ் ஓவியா said...


இந்நாள்... இந்நாள்....


1987 இல் இதே நாளில்தான் புதுக்கோட் டையில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க ஒரு மாநில அரசே இந்திய அர சமைப்புச் சட்டத்தின் 31(சி) பிரிவின்படி சட்ட மியற்றலாம் என்ற கருத் துருவைத் தீர்மானமாக வடித்துக் கொடுக்கப் பட்டது.

தமிழ்நாட்டில் 69 சத விகிதம் நிலைபெற்றதற்கு இந்த அடிப்படையில் செயல்படுத்துவதுதான் காரணம்!

தமிழ் ஓவியா said...


கருங்காலிகள் கூட்டம்

கடந்த 28.9.2013 அன்று கடலூர் மாவட்டம் விருத்தாச லத்தில் நடைபெற்ற கடலூர் மண்டல மாணவர் அணி மாநாட்டுக்கு செல்லும் வழியில் சில காவி காலிகளும், ஜாதி சங்கத் தினரும் சேர்ந்து, கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களை தாக்க முயன்றனர். கழகத் தோழர் களைத் தாக்கினர் மற்றும் தமிழர் தலைவரின் வாகனத்தை சேதப் படுத்தினர் என்பது, தமிழ் சமுதா யமும், ஒடுக்கப்பட்ட சமுதாயத் தினரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு நிகழ்வு ஆகும். 80 ஆண்டு வாழ்வு முற்றுப் பெற்று 81 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்க உள்ள 73 ஆண்டு பொது வாழ்வுக்குச் சொந்தமான தமிழகத்தின் மூத்த தலைவரை, ஒரு காவிக் கும்பல் தாக்கியதும், அதைக் காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்ததும், அநாகரி கமான செயல்.

வீரமணி என்பவர் தனிப் பட்ட மனிதரல்ல. அவர் நம் இனத்தின் முகவரி, சமூகநீதியின் தலைமகன், ஒட்டுமொத்தத் தமி ழர்களின் உரிமைக் காவலர். சிறு வயதில் யாரும் ஏற்றுக் கொள்ளத் துணியாத கொள்கையினை ஏற்று, கல்லூரிப் பருவத்தில் தங்கப்பதக்கம் பெற்று, இளம் பருவத்தில் நாடெங்கும் பகுத்தறிவுக் கொள்கையினைப் பரப்பியவர். 1980-ஆம் ஆண்டில் தமிழகத்தில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு ரூ. 9000/- வருமான வரம்பு) என்ற அரசு ஆணையை எதிர்த்து, களம் கண்டு 31 சதவிகிதமாக பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு இருந்த இட ஒதுக்கீட்டை 50 சதவிகிதமாக உயர்த்தக் காரணமான தலைவர்; காவிரி நீர்ப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என, 1982 ஆம் ஆண்டு முதல் குரல் கொடுத்து பிரச்சாரம் செய்து, போராடி வந்த தலைவர்; 1983 ஆம் ஆண்டு இலங் கையில் இன அழிப்பு போர் நடை பெற்ற நிலையில் சரியான அமைப்பை, சரியான தலைவரை அடையாளம் கண்டு தமிழர்களுக்கு அறிவித்த தலைவரை, பிற்படுத்தப்பட்ட மக்கள் நிலை பற்றி அறிய அமைக்கப்பட்ட மண்டல் குழுவின் தலைவர் மண்டல் அவர்கள், பரிந்துரையை நான் மத்திய அரசிடம் கொடுத்துவிட்டேன். அதனை செயல்படுத்த வைக்க வேண்டியது பெரியார் திடலே, சமூகநீதிக்குச் சொந்தமான பெரியார் கண்ட இயக்கத்தின் தலைவர் வீர மணியே என தனக்கு வழங்கப்பட்ட பாராட்டுக்கு நன்றி தெரிவித்து உரை யாற்றிய மண்டல் அவர்களின் வாக் கிற்கு ஏற்ப நாடெங்கும் 42 மாநாடு களையும், 16 போராட்டங்களையும் நடத்தியவர். மண்டல் குழுவை நடைமுறைப் படுத்திய முன்னாள் பிரதமர் மாண்பு மிகு வி.பி.சிங் அவர்கள் சமூகநீதி பாடத்தை எனக்கு கற்று தந்த தலைவர் வீரமணியே! என சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டில் பிரகடனப்படுத்தப் பட்ட தலைவரை, அனைத்து சாதி யினரும், அர்ச்சகர் ஆக உரிமை வேண்டும் என 40 ஆண்டு காலமாக போராடி வரும் தலைவரை, இடஒதுக் கீடு 50 சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு இட்டபோது அதற்கு எதிராக 31சி என்ற சட்டத்தை கண்டெடுத்து அதனை அரசியல் அமைப்பு சட்டத் தின் 9 ஆவது அட்டவணையில் வைத்துவிட்டால் இடஒதுக்கீட்டிற்கு சட்டப்படியான அங்கீகாரம் கிடைத்து விடும் என தமிழக அர சிற்கே சட்டத்தை எடுத்துக் கொடுத்து அதனை குடியரசுத் தலைவர் (சங்கர் தயாள் சர்மா), பிரதமர் (பி.வி.நரசிம் மராவ்), முதலமைச்சர் (ஜெ.ஜெய லலிதா) என்ற மூன்று பார்ப்பனர் களைக் கொண்டே நிறைவேற்றச் செய்து இடஒதுக்கீட்டிற்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத் தந்த தலை வரை, வடநாட்டு தலைவர்களான சந்திரஜித், பி.பி.மவுரியா, ராம்விலாஸ் பஸ்வான், சீதாராம் கேசரி, கன்சிராம், லாலு பிரசாத், முலாயம்சிங், மாயா வதி போன்ற தலைவர்களின் அன்பை யும், அமெரிக்கா, கனடா, சிங்கப் பூர், மலேசியா, இலங்கை, மியான்மா, லண்டன், குவைத் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களது உயிராகப் போற்றும் தலைவரை, உலக நாத்திகர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவரை, இருதய மாற்று அறுவை சிகிச்சை மூன்று முறை செய்து இருந்த நிலையிலும், ஓய்வு எடுக்க வேண்டிய நிலையிலும், தமிழர்களுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட மக்களின் நலனுக்காக இரவு, பகல் பாராமல் இடைய றாது உழைத்துவரும் தலைவரை, நான் தற்போது வாழ்வது போனஸ் வாழ்க்கையே என்று அறிவித்து ஓய்வில்லாது உழைக் கும் தலைவரின் உயிருக்கு குறி என்பது நமது இன எதிரிகளுக்கு வேண்டுமானால் லாபகரமாக இருக்கலாம், துணைபோன கருங் காலி தமிழினத் துரோகிகளுக்கும், சமூக நீதியை, உரிமையை மீட்டுக் கொடுப்பதற்கு இவரைவிட்டால் பட்டம், பதவி, ஓய்வு, சலிப்பு இல் லாது உழைக்கக்கூடிய இன் னொரு தலைவர் யார் என்பதை இரவில் உறங்கப் போகும் போது, ஒரு கணம் சிந்தித்துப் பார், நாதியற்ற தமிழினமே!

- இரா.நீலகண்டன், திராவிடர் கழகம், பேராவூரணி

தமிழ் ஓவியா said...


ஏற்காடு சட்டமன்ற இடைத்தேர்தல்: தலைவர்களுக்கு கலைஞர் கடிதம்


சென்னை, அக். 9- தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திடவும் சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திடவும் ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத் தேர் தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிடுங்கள்! என தி.மு.க. தலைவர் கலைஞர், தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சி களின் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

அன்புடையீர்,
வணக்கம்.

வருகிற 4.12.2013 அன்று நடை பெறவுள்ள ஏற்காடு (எஸ்.டி.) சட்டப் பேர வைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத் தின் சார்பில் போட்டியிடுவதென முடிவெடுத் துள்ளோம். ஆளுங்கட்சியான அ.தி.மு.க. தொ டர்ந்து தமிழகத்தில் நடத்தி வரும் ஜனநாயக விரோத நடவடிக் கைகளுக்கு எச்சரிக்கை செய்கின்ற வகையில், இந்த இடைத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றி ணைந்து நல்கிடும் உறுதியான ஆதர வோடு போட்டியிடுவது ஆக்க பூர்வமான தென்று நினைத்து இந்த முடிவினை எடுத்துள்ளோம். தமிழகத்தில் ஜனநாயகத்தைக் காத்திட வும், சர்வாதிகார எண்ணத்தை வீழ்த்திட வும் மேற்கொள்ளப்பட்டுள்ள கழகத்தின் இந்த முடிவிற்கு உதவிடும் வகையில், இந்த இடைத் தேர்தலில் கழக வேட்பாள ருக்குத் தங்கள் கட்சியின் ஆதரவினை வழங்கிட வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புள்ள,

(ஒப்பம்)
( மு. கருணாநிதி )

இந்தக் கடிதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், தமிழகச் சட்டப்பேரவை யின் எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க.வின் நிறுவனருமான விஜயகாந்த், பா.ஜ.க. வின் தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா.பாண் டியன், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹருல்லா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன், எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப், உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கு.செல்லமுத்து, மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜி.எம்.சிறீதர் வாண்டையார், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பொன். குமார், பெருந் தலைவர் மக்கள் கட்சியின் அமைப்பாளர் என்.ஆர். தனபாலன், தேசிய லீக் கட்சியின் தலைவர் பஷீர் அகமது , சிறுபான்மையினச் சமூகப் புரட்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவர் கா.லியாகத் அலிகான், எஸ்.டி.பி.அய்., கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹலான் பாகவி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் பொதுச் செயலாளர் எல்.சந்தானம், அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் மத்தியக் குழுவின் நிறுவனத் தலைவர் பி.என்.அம்மா வாசி ஆகியோர் களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


அறிவுலக ஆசானுக்கு அமீரகத் தமிழர்கள் எடுத்த விழா

துபை, அக். 9- அமீரகத் தமி ழர்கள் அமைப்பின் (அஜ்மான்) சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 135ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா 03.10.2013 மாலை 7.00 மணியளவில் அஜ்மான் சிவ்ஸ் டார் பவனில் சிறப்பாக நடை பெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந் தினர்களாக திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்பு ராஜ், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநிலத் துணை கொள்கை பரப்புச்செயலாளர் திரு. சங்கத்தமிழன், உம்-அல் குவைன் நேஷனல் ஏஜென்சி பொது மேளாளர் திரு. லிங்கண் ணன் ஆகியோர் கலந்துகொண் டனர்.

அமீரகத் தமிழர்கள் அமைப் பின் நிறுவனத் தலைவர் திரு. ஏ.எஸ்.மூர்த்தி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். வளைகுடா நாடுகளில் தமிழர் களுக்கென ஒரு வாரியம் அமைக்க திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்கள் முயற்சி எடுத்திருப் பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செயல் என்றும், வெளிநாடு களில் வாழும் தமிழர்கள் சமத் துவத்தோடு வாழ வழிவகுத் துள்ள தந்தை பெரியாரின் 135ஆம் ஆண்டு பிறந்தநாளை அமீரகத் தமிழர்களோடு கொண்டா டுவது பெருமிதத்தை அளிக் கிறது என்றும் அவர் தனது வரவேற்புரையில் கூறினார்.

மேலும், அமீரகத்தையும் தமிழகத்தையும் இணைக்கும் பாலமாக திராவிடர் கழகத் துடன் அஜ்மான் தமிழர்கள் அமைப்பு திகழ்கிறது என்றும் கூறினார். இதுபோன்ற சமூக ஆர்வமுள்ள நிகழ்ச்சிகளை நடத்த இடமும், அனைவருக் கும் விருந்தும் வழங்கும் புரவ லர் சிவ்ஸ்டார் பவனின் நிறு வனர் திரு. எல்.கோவிந்தராஜன் அவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண் டார்.

இந்த நிகழ்ச்சியோடு அமைப் பின் பொருளாளர் திரு. அப் துல் லத்தீப் அவர்களின் பிரிவு உபசரிப்பு விழாவும் இணைந்து நடப்பதில் பெருமிதம் கொள் வதாக தெரிவித்தார். தொடர்ந்து திரு. லிங்கண்ணன், திரு. மதியழ கன், திரு. சங்கத்தமிழன் ஆகி யோர் உரை நிகழ்த்தினர்.

இவர்களைத் தொடர்ந்து திராவிடர் கழக பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் தமது சிறப்புரையை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், தந்தை பெரியார் அவர்களின் 135வது பிறந்தநாள் விழா தமிழகம், புதுச்சேரி, புதுதில்லி, கொல் கத்தா, மும்பை, பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இந்திய மாநிலங்களிலும், சிங் கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆப்ரிக்கா (கானா), துபாய், சவுதி உள்ளிட்ட வெளிநாடுக ளிலும் சிறப்பாக நடைபெறு வது குறித்து மகிழ்ச்சி தெரி வித்தார்.

பெரியார் மற்றும் அவரது தத்துவங்கள் உலகமயமாக்கப் படுவது பற்றியும் அதற்காக தமிழர் தலைவர் மேற்கொண் டிருக்கும் முயற்சிகள் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். தமிழர் தலைவர் அவர்களின் 75ஆம் பிறந்தநாளை அஜ்மான் தமிழர்கள் அமைப்பு அமீரகத் திலுள்ள பெரியார் தொண்டர் களுடன் இணைந்து கொண் டாடியதை நினைத்து பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெரியார் அவர் களின் பல்வேறு கருத்துகளை விளக்கியும் குறிப்பாக இல்ல றம், துறவறம் தவிர்த்து தந்தை பெரியார் அவர்கள் அறிமுகப் படுத்திய தொண்டறத்தின் தேவை பற்றியும் விரிவாக கூறினார். பள்ளி மாணவர்களிடையே பெரியார் பற்றி அறிந்து கொள் ளும் வகையில் தமிழகம் முழு வதும் சிறப்பாக நடைபெற்ற பெரியார் 1000 வினா-விடை போட்டியின் பயன் பற்றி கூறி யதுடன், வெளிநாடுகளிலும் இப்போட்டிகளை தொடர்ந்து நடத்திட வேண்டுகோள் விடுத் தார்.

இவ்விழாவின் சிறப்பு நிகழ் வாக அமீரகத் தமிழர்கள் அமைப்பின் பொருளாளர் திரு. அப்துல் லத்தீப் அவர்களுக்கு அவரின் சமூக சேவையைப் பாராட்டி மனிதநேய பண் பாளர் விருது வழங்கப்பட்டு பாராட்டப் பெற்றார். அஜ் மானில் அமீரகத் தமிழர்கள் அமைப்பை நிறுவி வெற்றிகர மாக நடத்திட பல்லாண்டு களாக உழைத்த திரு. அப்துல் லத்தீப் அவர்களுக்கு பிரிவு உப சரிப்பு விழா இனிதே நடை பெற்றது.

இவ்விழாவில் வானலை வளர்தமிழ் அமைப்பின் தலை வர் திரு. சிவ்ஸ்டார் எல்.கோவிந் தராஜன், அஜ்மான் தமிழர்கள் அமைப்பின் துணைத் தலைவ ரும் ஆர்யா கிரைன்டிங் பேக்கேஜிங் நிறுவனத்தின் தலைவருமான திரு. ஏ.ஆர். மதி யழகன், அமைப்பின் செயலா ளரும் சஃபையர் ரெஸ்டா ரண்ட்டின் உரிமையாளருமான திரு. இரா.சாமிநாதன், எமி ரேட்ஸ் ஏர்லைன்ஸ் திரு. சதீஷ்ராஜ், துபாய் மினரல் வாட்டர் திரு. செல்வதுரை, குலாம் முஸ்லீம் அமைப்பின் திரு.ஜான், ஓவியர்கள் ரவிச்சந் திரன், குமார் உள்ளிட்ட ஏராள மான அமீரகத் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிவ்ஸ்டார் பவன் நிறுவனத்தின் சார்பில் விருந்து வழங்கப்பட்டது.

பெரியார் கல்வி நிறுவன முன்னாள் மாணவி செல்வி. நிவேதிதா ஆனந்த் இந்நிகழ்ச் சியை இனிதே தொகுத்து வழங்கினார்.

தமிழ் ஓவியா said...


பட்டாச்சார்யாக்கள்

பெண்கள் பெரும் பதவிகளுக்கு வருவதில் லையே என்ற ஆதங்கங் கள் அவ்வப்பொழுது எழுவதுண்டு.

இப்பொழுது கொஞ் சம் கொஞ்சம் வர ஆரம் பித்துள்ளனர். அவர்கள் எல்லாம் யார்? யார்?
பாரத ஸ்டேட் வங்கி யின் முதல் பெண் தலை வர் அருந்ததி பட்டாச் சார்யா, அலகாபாத் வங்கியின் தலைவர் சுபலட்சுமி பான்சே, பாங்க் ஆஃப் இந்தியாவின் தலைவர் விஜயலட்சுமி ஆர்அய்யர், யூனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா வின் தலைவர் அர்ச்சனா பார்க்கவா, அய்.சி.அய். சி.அய். வங்கியின் தலை வர் சந்தா கோச்சார், ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் சிகா சர்மா.

இந்தப் பெயர்களை பார்க்கும் பொழுதே இவர்கள் எல்லாம் யார்? எந்தப் பிரிவைச் சேர்ந்த வர்கள் என்பது வெளிப் படை! கைப் புண்ணுக்குக் கண்ணாடி தேவைப் படாது அல்லவா!

என்னதான் சமூக நீதி, இடஒதுக்கீடு என்று நாம் குரல் கொடுத்தா லும், பாடுபட்டாலும் அவா ளின் ஆதிக்கம் இன் னொரு வகையில் வளர்ந்து கொண்டேதான் இருக் கிறது.

அதுவும் தனியார்த் துறைகள் வளர்ந்து வரும் இந்தக் கால கட்டத்தில் அவற்றில் தலைமைப்பீட இயக்குநர்கள் எல்லாம் யார்? பெரும்பாலும் பார்ப்பனர்களே! பணிய மர்த்தம் செய்யும் இடத் திலே பத்திரமாக உட் கார்ந்து கொண்டு முதுகைத் தட்டிப் பார்த்து, பூணூல் தட்டுப்படுகிறதா என்று அடையாளம் கண்டு, ஆயிரக்கணக்கில் தனியார்த் துறைகளில் அவாளைத் திணித்துக் கொண்டு தானிருக் கிறார்கள். இது அடக்க மாக, ஆர்ப்பாட்டம் இல் லாமல் நடந்து கொண்டு தானிருக்கிறது.

சமூகநீதியில் நமது அடுத்தக் கட்ட களம் தனியார்த்துறைகளில் இடஒதுக்கீட்டைப் பெறு வதே என்று திராவிடர் கழகத் தலைவர் மான மிகு கி.வீரமணி அவர் கள் கூறியிருப்பது எவ் வளவுத் தொலைநோக்கு!

சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு தேவை என்று திராவிடர் கழகம் வலி யுறுத்துவதன் முக்கியத் துவத்தை இந்தக் கண் ணோட்டத்தில் பார்த்தால் தான் பளிச் சென்று துல்லியமாகப் புரியும்.

உள் ஒதுக்கீடு இல்லை யென்றால் வங்கிகளில் தலைமைப் பொறுப்பு களில் உயர் ஜாதி பெண் களின் ஆக்கிரமிப்புப் போலவே இதுவும் அவா ளின் (கிராப்பு தலை வாசிகள்) ஏகபோகக் காடாகத்தான் மாறும்.

இதை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமா னால் ஈரோட்டுக் கண் ணாடி தேவைப்படும்!

- மயிலாடன் 10-10-2013

தமிழ் ஓவியா said...


தொல்லை


வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)

தமிழ் ஓவியா said...


கடமை தவறாத மனிதநேயர் ஓட்டுநர் சம்பத் ஓர் எடுத்துக்காட்டு!


நெஞ்சுவலியால் துடித்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு இறந்தார்

துரைப்பாக்கம் அக்.10- ஓடும் பஸ்சில் திடீர் நெஞ்சு வலியால் துடித்த டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்திவிட்டு பலியானார். சென்னை, பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (45). இவர் பிரபல தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் வந்த விமானி மற்றும் பணிப்பெண்களை ஏற்றிக் கொண்டு எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக் குத் திரும்பிக் கொண்டு இருந்தார். மீனம்பாக்கத்தில் இருந்து எழும்பூருக்குத் திரும்பி வரும்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக பஸ்ஸில் இருந்த கிளீனரிடம் சம்பத் கூறி, தண்ணீர் அருந்தியதும் நெஞ்சு வலி குறைந்ததால், மீண்டும் பஸ்ஸை இயக்கினார்.
கத்திப்பாரா மேம்பாலம் அருகே பஸ் வந்தபோது, மீண்டும் தனக்கு நெஞ்சு வலிப்பதாக சம்பத் கூறினார். ஒரு கையால் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையால் பஸ்ஸை இயக்கி, சாலையோரமாக நிறுத் தினார்.

இந்நிலையில் மீண்டும் மயக்க மடைந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பஸ்ஸில் இருந்த விமானி, பணிப்பெண்கள் ஓடிவந்து சம்பத்தை மருத்துவர்களிடம் கொண்டு சென்றதில் அவர் இறந்து போனது தெரிய வந்தது அனைவரும் அதிர்ச்சிகுள்ளாயினர்.

மேலே காட்டிய செய்தி மிகவும் நெஞ்சை உருக்கும், துயரத்திற்குரிய செய்தி!

வெறும் உரிமைகளை மட்டும் பேசிப் பேசி, கடமைகளை - பொறுப்புகளைக் காற்றில் பறக்கவிடும் மக்களே, பெரிதும் நிறைந்த இந்த பாலைவனச் சமுதாயத் தில் ஓர் ஒயாசிஸ் - சோலைவனமாக திகழும், இந்த சம்பத் போன்ற ஓட்டு நர்கள், மனித குலத்தில் நல்லவர்களும், பொறுப்பை உணர்ந்து கடமையாற்றும் சீலர்களும், இன்னும் இருந்து வருவதால் இந்த உலகம் மனித நேயத்தை மரண மடையச் செய்யாமல், காத்து வருகிறது போலும்!

பாராட்டுதலுக்குரிய அந்த ஓட்டுநர் ஒரு ஓரத்தில் அவர் ஒட்டி வந்த பேருந்தை நிறுத்தாமல், நெஞ்சு வலியுடன் ஒட்டி வந்திருப்பாரேயானால் என்ன நிகழ்ந் திருக்கும்?

அதுவும் நெருக்கடி மிகுந்த அண்ணா சாலையில்? வண்டி, தானே ஓடி பெரும் விபத்து ஏற்பட்டு, பல உயிர்களும் - பேருந்தில் விமான நிலையத்திலிருந்து வந்த விமானி பணிப் பெண்கள் உட்பட பலரும் சிக்கியிருப்பார்களே, எதிரே வந்த வாகனங்களும் தப்பி இருக்க முடியாதே!

அவர்தம் பொறுப்புணர்ச்சியை நாடும் அரசும், சமூக நல அமைப்புகளும் பாராட்டி, அவர் தம் குடும்பத்திற்கு ஆறுதல் - இரங்கல் கூறுவதோடு, பரிசும் விருதும் அளிக்க முன்வர வேண்டும். நமது கழகமும் சிறப்புச் செய்யும்!

இதுபோல முன்பு, மின்சார ரயிலை ஒட்டி வந்த அரக்கோணம் அருகே ராஜூ என்ற ஓட்டுநர் (டிரைவர்) நெஞ்சு வலி ஏற்பட்டதைச் சமாளித்து நடு வழியில் நிறுத்திடாமல் அரக்கோணம் நிலையம் வந்து நிறுத்திய நிலையில் சுருண்டு விழுந்து இறந்தார்!

அதில் பயணம் செய்த அவ்வளவு ரயில் பயணிகளையும் காப்பாற்றிய பொறுப்புணர்ச்சியின் சின்னமாக அவர் வாழ்ந்து காட்டி மறைந்தார்.


அதை நாம் பாராட்டி எழுதினோம்; கழகச் சார்பில் பாராட்டுத் தீர்மானம் கும்மிடிப்பூண்டி மாநாட்டில் போட்டு அக்குடும்பத்தினரைக் கழகத்த வர்கள் சென்று சந்தித்து ஆறுதல் கூறினர்.

அவரை ரயில்வே துறை பாராட்டி விருது (மறைந்தாலும்) அக்குடும்பத் தினருக்கு வழங்கி சகோதரர் டி.ஆர். பாலு - எம்.பி. மூலம் ஏற்பாடும் செய்தோம்!

இந்த முறை மறைந்தும் மறை யாதவராக உயர்ந்த ஓட்டுநர் சம்பத் அவர்களின் குடும்பத்தினருக்கு, அரசும் பாராட்டு வழங்க வேண்டும்.

அடுத்த விழாவில் அவர்தம் குடும்பத்தினரை அழைத்து பெரியார் மனிதநேய விருது அளித்துப் பாராட் டுவோம்!

தம் உயிர் பெரிது - எனினும்
கடமை அதனினும் பெரிது!

- எனக் காட்டிய அத்தகைய மா மனிதர்கள்!

அவர்தம் புகழ் வாழ்க! வாழ்க!!

தமிழ் ஓவியா said...


சபாஷ்! கருநாடக முதல் அமைச்சர் மூடநம்பிக்கையை உடைத்து எறிந்தார்


பெங்களூரு, அக்.10- பெங்களூரு சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழைந்தால் பதவி பறி போகும் என்ற மூடநம்பிக்கையை முறியடித்தார் கருநாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா.

கர்நாடக மாநில முதல்வர் சித்த ராமையா திங்கட்கிழமை சாம்ராஜ் நகர் மாவட்டத்துக்குள் நுழைந்தார். சாம்ராஜ் நகருக்குள் நுழைந்த ஒரே மாதத்தில் கர்நாடகத்தின் முன் னாள் முதல்வர்கள் பலர் தங்கள் பத வியை பறி கொடுத்திருக்கிறார்களாம்.

கன்னட சலுவளிக் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், ''தைரியம் இருந் தால் எங்க ஊர் மண்ணை மிதித்துப் பாருங்கள். இல்லையென்றால் சாம் ராஜ் நகரை கர்நாடகத்திலிருந்து பிரித்து தனி மாநிலமாக்கித் தாருங் கள்'' என முதல்வர்களை சீண்டும் வகையில் சவால் விடுவார்.

கடந்த 1980-ஆம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த தேவராஜ் அர்ஸ் சாம்ராஜ் நகருக்குள் நுழைந்த ஒரே மாதத்தில் ஆட்சியை பறிகொடுத்தார். அவரைத்தொடர்ந்து ஆட்சிக்கு வந்த குண்டு ராவ் 1982-ஆம் ஆண்டு சாம் ராஜ் நகருக்கு வந்தார். அவருடைய முதல்வர் பதவி ஒரே மாதத்தில் பறி போனது. ராமகிருஷ்ண ஹெக்டே, சாம்ராஜ் நகருக்குள் காலடி எடுத்து வைத்த 15 நாள்களில் ஊழல் புகாரில் சிக்கி முதல்வர் பதவியைப் பறி கொடுத்தார்.

இப்படி சாம்ராஜ் நகருக்குள் நுழைந்து ஆட்சியை பறி கொடுத்த முதல்வர்களின் பட்டியல் சதானந்த கவுடா வரை நீள்கிறது.

இதனால், சில முதல்வர்கள் சாம் ராஜ் நகர் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்து விட்டு, நொண்டிச் சாக்குகளை சொல்லி மாதேஸ்வரன் மலை அடிவாரத்திலே நிகழ்ச்சியை முடித்து விட்டு பெங்களூரு திரும்பி விடுவர்.

கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது சாம்ராஜ் நகருக்கு சென்ற சித்தராமையா ''நான் ஆட் சிக்கு வந்தால், தைரியமாக சாம்ராஜ் நகருக்கு வரு வேன்'' என அறிவித்தார். பதவியேற்று 5 மாதங் களானாலும் சாம்ராஜ் நகருக்கு செல்லாமல் இருந்தார். இதனால் எதிர் கட்சியினர் 'பதவிக்கு ஆசைப்பட்டே சித்தராமையா சாம்ராஜ் நகருக்கு வருவதை தவிர்த்து வருகிறார் 'எனப் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

சித்தராமையா ஏற்கெனவே தேதி குறித்தபடி கடந்த திங்கள்கிழமை அன்று காலை 11.35 மணிக்கு சாம்ராஜ் நகருக்குள் நுழைந்தார். ரூ. 1,700 கோடி செலவில் நலத்திட்டங்களை அறிவித் தார். சட்டமேதை அம்பேத்கர் பவன் கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டி, அம்பேத்கரின் ஆளுயர சிலையைத் திறந்து வைத்து முழங்க ஆரம்பித்தார்.

கர்நாடக மாநிலத்தின் எல்லைக் குள் இருக்கும் சாம்ராஜ் நகருக்கு நான் வந்ததில் எந்த பெருமை யும் இருப்பதாகக் கருத வில்லை. ஏனென்றால் எனக்கு மூடநம்பிக்கை இல்லை. இந்திய மக்க ளிடம் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை ஒழிக்க, அறிவே சிறந்த ஆயுதம் என அம்பேத்கர் போராடினார். கர்நாடகத் திலும் சமூக சீர்திருத்தவாதிகளான பசவண்ணரும், மகாகவி குவெம்புவும் தொடர்ந்து போராடினர். இனியும் தொடர்ந்து சாம்ராஜ் நகருக்கு வந்து மூடநம்பிக்கைகளின் கோட்டையை தகர்த்தெறிவேன்''எனச் சூளுரைத்தார்.

முந்தைய முதல்வர்களின் நாற்காலி களை காவு வாங்கிய சாம்ராஜ் நகர், சித்தராமையாவின் நாற்காலியையும் காவு வாங்குமா என்ற கேள்வி கர்நாடக அரசியல் வட்டாரத்தில் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் ஓவியா said...


வேதியலுக்கான நோபல் பரிசு 3 அமெரிக்கர்கள் தேர்வு


ஸ்டாக்ஹோம், அக். 10-அமெ ரிக்காவை சேர்ந்த மைக் கேல் லெவிட், மார்டின் கர் பிளஸ் மற்றும் அரை வார் செல் ஆகியோ ருக்கு வேதியிய லுக்கான நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வேதியலுக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பரிசு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக த்தை சேர்ந்த இங்கிலாந்து மற்றும் அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் மைக்கேல் லெவிட், ஸ்ட்ராஸ்போர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெ ரிக்க ஆஸ்திரியரான மார்டின் கர்பி ளஸ் மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமெ ரிக்க இஸ்ரேலியரான அரை வார்செல் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

வேதியல் மாற்றங்கள் மின்னல் வேகத்தில் நடைபெறும். எலக்ட் ரான்கள் அணுவின் மய்யப்பகுதியை நோக்கி பாய்ந்து வருவது வழக்கம். இவை கண்களுக்கு புலப்படாது. இந்த வேதியல் மாற்றங்களை கணினிகள் புரிந்து கொள்ளும் வகையில் அவற் றை தயார்படுத்தியுள்ளனர். இது சிக்கலான மருந்து தயாரிப்புக்கு பயன்படுகிறது. இதற்காக இவர் களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப் பட்டுள்ளது.