Search This Blog

13.10.13

சரஸ்வதி பூஜை - நவராத்திரியின் விளைவு இதுதான்!

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜை என்பது ஓர் அர்த்த மற்ற பூஜை, கல்வியையும், தொழிலையும், ஒரு பெண் தெய்வமாக்கி அதற்குச் சரஸ்வதி என்று பெயர் கொடுத்து அதை பூஜை செய்தால் கல்விவரும், வித்தை வரும் என்றும் சொல்லி நம்மை நமது பார்ப்பனர்கள் ஏமாற்றி கல்வி கற்க சொந்த முயற்சி இல்லாமல் சாமியையே நம்பிக்கொண்டு இருக்கும்படி செய்து விட்டு நாம் அந்த சாமி பூஜையின் பேரால் கொடுக்கும் பணத்தைக் கொண்டே அவர்கள் படித்துப் பெரிய படிப்பாளிகளாகிக் கொண்டு நம்மை படிப்பு வரமுடியா மக்குகள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். 

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையை கவனித்தால் அது பார்ப்பனர்கள் புராணக் கதை களின்படியே மிக்க ஆபாசமானதாகும். அதாவது சரஸ்வதி என்கிற ஒரு பெண் பிரம்மனுடைய சரீரத்தில் இருந்து உண்டாக்கப்பட்ட பிறகு அவளுடைய அழகைக் கண்டு அந்த பிரம்மாவாலேயே மோகிக்கப்பட்டு அவளைப் புணர அழைக்கையில், அவள் பிரம்மாவைத் தகப்பன் என்று கருதி, அதற்கு உடன் படாமல் பெண்மான் உரு எடுத்து ஓடவும், பிரம்மன் தானும் ஒரு ஆண் மான் உருவெடுத்து அவளைப் பின் தொடர்ந்து ஓடவும், சிவன் வேட உருவெடுத்து ஆண் மானைக் கொல்லவும், பிறகு சரஸ்வதி அழுது சிவபிரானால் மறுபடியும் உயிர்ப் பிக்கச் செய்து, பிரம்மாவுக்கு மனைவி யாக சம்மதித்ததாக சரஸ்வதி உற்பவக் கதை சொல்லுகிறது. அதாவது தன்னைப் பெற்றெடுத்த தன் தகப்பனையே மணந்து கொண்டவள் என்று ஆகிறது- 

மற்றொரு விதத்தில் பிரம்மாவுக்குப் பேத்தி என்று சொல்லப் படுகின்றது அதாவது, பிரம்மா ஒரு காலத்தில் ஊர்வசியின் மீது ஆசைபட்டபோது, வெளியான இந்திரியத்தை ஒரு குடத்தில் விட்டுவைக்க அக்குடத் திலிருந்து அகத்தியன் வெளியாக அவ்வகத்தியன் சரஸ்வதியைப் பெற்றான் என்று சொல்லப் படுகின்றது. இதனால் பிரம்மாவுக்குச் சரஸ்வதி மகன் வயிற்று பேத்தி ஆகிறாள், எனவே சரஸ்வதியின் பிறப்பும் வளர்ப்பும் நடவடிக்கையும் கூடி பார்ப்பனப் புராணப்படி மொத்த ஆபாசமும் ஒழுக்க ஈனமுமான தாகும்.

நிற்க, இந்த யோக்கியதையுடைய அம்மாளை எதற்காக மக்கள் பூஜை செய்கிறார்கள் என்பது இதைவிட மிகவும் வேடிக்கையான விஷயமாகும். அதாவது சரஸ்வதி வித்தைக்கு அதிபதி யான தெய்வமாதலால் வித்தையின் பயன் தொழிலென்றும், தொழிலுக்கு ஆதாரமானது ஆயுதங்கள் என்றும் கருதிக் கொண்டு, சரஸ்வதி பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் ஒரு நாளைக் குறித்துக் கொண்டு அந்த நாளை விடுமுறையாக்கி புஸ்தகங்களையும், ஆயுதங்களையும் வைத்து பூஜை செய்கிறார்கள். இந்தப் பூஜையில் அரசன் தனது ஆயுதங்களையும், வியாபாரி தனது கணக்குப் புத்தகங்கள், திராசு, படிக்கல், அளவு மரக்கால்படி, உழக்கு, பெட்டி முதலியவைகளையும் தொழி லாளிகள் தங்கள் தொழில் ஆயுதங் களையும் இயந்திரச் சாலைக்காரர்கள் இயந்திரங்களையும், மாணாக்கர்கள் புத்தகங்களையும், குழந்தைகள் பொம்மை களையும், தாசிகள் தங்கள் ரவிக்கை களையும், சீலைகளையும், நகைகளையும், வாத்தியக்காரர்கள் வாத்தியக்கருவி களையும் மற்றும் இதுபோலவே ஒவ் வொருவர்களும் அவரவர்கள் லட்சியத் திற்கு ஆதாரமாக வைத்திருக்கும் சாமான்களை வைத்து பூஜை செய்கின் றார்கள். இதனால் அந்த தினத்தில் தொழில் நின்று அதனால் வரும் வரும் படிகளும் போய் பூஜை ஓய்வு முதலிய ஆடம்பரங்களுக்காக தங்கள் கையில் இருக்கும் பணத்திலும் ஒரு பாகத்தைச் செலவு செய்தும் போதாவிட்டால் கடன் வாங்கியும் செலவு செய்வதைவிட யாதொரு நன்மையும் ஏற்படுவதாக சொல்லுவதற்கே இல்லாமல் இருக்கின் றது. 

ஆயுதத்தை வைத்து பூஜை செய்து வந்த, வருகின்ற அரசர்கள் எல்லாம் இன்றைய தினம் நமது நாட்டில் ஆயுதத்தை வைத்து பூஜை செய்யாத வெள்ளைக்கார அரசனுடைய துப்பாக்கி முனையில் மண்டி போட்டு சலாம் செய்து கொண்டு இஸ்பேட் ராஜாக்களாக இருந்து வருகின்றார்களே ஒழிய ஒரு அரசனாவது சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகிய பூஜைகள் பலத்தால் தன் காலால் தான் தைரியமாய் நிற்பவர் களைக் காணோம்.

சரஸ்வதி பூஜை செய்யும் வியா பாரிகளில் ஒரு வியாபாரியாவது சரஸ்வதிக்குப் பயந்து பொய்க்கணக்கு எழுதாமலோ, தப்பு நிறை நிறுக்காமலோ குறை அளவு அளக்காமலோ இருக் கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கைத்தொழிலாளிகளும் தங்கள் ஆயுதங்களிடத்தில் வெகு பக்தியாய் அவைகளைக் கழுவி விபூதி, சந்தனம், குங்குமப் பொட்டு முதலிய வைகள் போட்டு விழுந்து கும்பிடு வார்களே தவிர ஒருவராவது நாணய மாய் நடந்து கொள்கின்றார்கள் என்றாவது அல்லது அவர்களுக்குத் தாராளமாய் தொழில் கிடைக்கின்றது என்றாவது சொல்லுவதற்கு இல்லாமலே இருக்கிறார்கள். அதுபோலவே புஸ்த கங்களையும் பென் சிலையும் கிழிந்த காகிதக்குப்பைகளையும் சந்தனப் பொட்டுப் போட்டு பூஜை செய்கின் றார்களே அல்லாமல் காலோ கையோ பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒத்திக் கும்பிடுகின்றார்களே அல்லாமல் நமது நாட்டில் படித்த மக்கள் 100-க்கு 5 பேர்களுக்குள்ளாகவே இருந்து வருகின்றார்கள். இவ்வளவு ஆயுத பூஜை செய்தும், சரஸ்வதி பூஜை செய்தும் இவ்வளவு விரதங்கள் இருந்தும், நமது அரசர்கள் அடிமைகளாக இருக்கின் றார்கள். நமது வியாபாரிகள் நஷ்ட மடைந்து கொண்டு வருகிறார்கள். நமது தொழிலாளர்கள் தொழிலில்லாமல் பிழைப்பைக் கருதி வேறு நாட்டிற்கு குடிபோகின்றார்கள். நமது மக்கள் நூற்றுக்கு அய்ந்து பேரே படித்திருக் கின்றார்கள். சரஸ்வதியின் ஜாதியைச் சேர்ந்த பெண்கள் ஆயிரத்திற்கு ஒன்பது பேரே படித்திருக்கிறார்கள்.
இதன் காரணம் என்ன?

நாம் செய்யும் பூஜைகளைச் சரஸ்வதி தெய்வம் அங்கீகரிக்க வில்லையா? அல்லது சரஸ்வதி தெய்வத்திற்கும் இந்த விஷயங்களுக்கும் ஒன்றும் சம்பந்த மில்லையா? அல்லது சரஸ்வதி என் கின்ற ஒரு தெய்வமே பொய்க் கற்பனையா? என்பவையாகிய இம் மூன்றில் ஒரு காரணமாகத்தான் இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரையில் இவைகள் சுத்த முட்டாள்தனமான கொள்கை என்பதே எனது அபிப்பிராயம்.

வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என்கின்ற எண்ணமோ சுத்தமாய்க் கிடையாது.

அன்றியும் நாம் காகிதத்தையும் ஒழுக்கத்தையும் சரஸ்வதியாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வமிருக்குமானால் பூஜை செய்ப வர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும். கல்விவான்களாகவும் செய்யுமா? என்பதை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத் தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகியவைகள் உண்மையிலேயே சரஸ் வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்கு மானால் அதை பூஜை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும் வியாபார மற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூஜை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்து டனும், வியாபாரிகள் அரசாட்சியுடனும் தொழிலாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்! இந்த பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியா கின்றது பாருங்கள்!

ராஜாக்கள் கொலுவிருப்பது, பொம் மைகள் கொலுவிருப்பது, சாமிகள் கொலுவிருப்பது. இதற்காக ஜனங்கள் பணம் செலவு செய்வது, நேரம் செலவு செய்வது, அறிவு செலவு செய்வது, பத்து லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு பொம்மைகள் சந்தனம், குங்குமம், கற்பூரம், சாம்பிராணி, கடலை பொரி, சுண்டல்வடை, மேளவாத்தியம், வாழைக் கம்பம், பார்ப்பனர்களுக்குத் தட்சணை, சமாராதனை, ஊர்விட்டு ஊர்போக ரயில் சார்ஜு ஆகிய இவைகள் எவ்வளவு செலவாகின்றது என்பதை எண்ணிப்பாருங்கள். இவை கள் எல்லாம் யார் வீட்டுப் பணம்? தேசத்தின் செல்வமல்லவா என்று தான் கேட்கின்றோம். ஒரு வருஷத்தில் இந்த ஒரு பூஜையில் இந்த நாட்டில் செலவாகும் பணமும் நேரமும் எத்தனை கோடி ரூபாய் பெறுமானது என்று கணக்குப் பார்த்தால் மற்ற பண்டிகை, உற்சவம், புண்ணியதினம், அர்த்தமற்ற சடங்கு என்பவைகளின் மூலம் செல வாகும் தொகை சுலபத்தில் விளங்கி விடும். இதை எந்த பொருளாதார, இந்திய தேசிய நிபுணர்களும் கணக்குப் பார்ப்பதே இல்லை.

------------------------ - தந்தை பெரியார் --”குடிஅரசு” - சொற்பொழிவு - 20-10-1929

 ******************************************************************************
 

நவராத்திரி நவராத்திரி என்று இந்து மதத்தில் ஒன்பது நாள்கள் விழா கொண்டாடப்படுகிறதே தெரியுமா?

மூன்று நாள் சக்திக்கு (பார் வதிக்கு), மூன்று நாள் லட்சுமிக்கு, மூன்றுநாள் சரஸ்வதிக்கென்று கொலு வைத்துக் கும்மாளம் அடிக்கிறார்களே -_ அந்த ஒன்பது நாள்களில் நடக்கும் அசிங்கம், ஆபாசம் பற்றி அறியுமா இந்த இந்து முன்னணி சங்பரிவார் வட்டாரம்? மும்பையையே கதிகலங்க வைக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மாலையில் தொடங்கி நள்ளிரவில் களை கட்டும். இவற் றில் 50 லட்சம் பேர் பங்கேற்று ஆட்டம் பாட்டத்தில் ஜமாய்ப் பார்கள். இவர்களில் 90 சதவிகிதம் பேர் இளை ஞர்கள், இளம் பெண்கள். வழக்கமாக இரவில் நீண்ட நேரத்துக்கு வெளியே இருக்க இளம் பெண்களைப் பெற்றோர் அனுமதிப்பதில்லை. ஆனால் தசரா கொண்டாட்ட சீசன் முழுதும் இந்தக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதால் நள்ளிரவு இரண்டு அல்லது மூன்று மணி வரைகூட இளம்பெண்கள் வெளியே நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுண்டு.
இந்தக் கொண்டாட்டங்களின் போது இளசுகளிடையே ஆண், பெண், தெரிந் தவர், தெரியாதவர், நல்லவர், கெட்டவர் என்ற வித்தியாசங்கள்  பார்க்கப்படுவ தில்லை. நடன நிகழ்ச்சிகளில் ஆண்களு டன் இளம்பெண்கள் கைகோத்து ஆடுவதும் கச்சேரிகளில் ஆடிப் பாடுவதும் சகஜம். இதனால் இரவில் நீண்ட நேரம் வெளியில் தங்கும் இளம் பெண்கள் அவர் களது காதலர்களுடன் ஊர் சுற்றுவதும், காதலர் வீட்டில் தங்குவதும் நடப்பதால் பெண்கள் கற்பிழக்கும் நிலை ஏற்படுகிறது. தவிர, மும்பை நகரெங்கும் கட்டுக்கடங்காத கூட்டத்தை இரவு நேரத்தில் பார்க்கும் விபசாரப் பெண்களும், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி பணம் குவிப்பதில் ஈடுபடுகின்றனர். இந்தக் காரணங்களால் தசரா பண்டிகைக்குப் பிறகு கர்ப்பம் அடையும் திருமணம் ஆகாத இளம்பெண்கள் எண்ணிக்கையும் எய்ட்ஸ் பாதித்தவர்கள் எண்ணிக் கையும் அதிகரிப்பதாக மும்பை மகப்பேறு இயல் அமைப்பு நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு தசராவுக்குப் பிறகு திருமணமாகாமல் கர்ப்பம் அடைந்த இளம் பெண்கள் எண் ணிக்கை 30 முதல் 50 சதவிகிதம் அதிகரித்ததாக  ஆய்வில் கூறப் பட்டுள்ளது. தசராவுக்குப் பிறகு மூன்று மாத கால கட்டத்தில், ஆஸ்பத்திரிகள், கிளினிக் குகளில் நடந்த கருக்கலைப்புகளைக் கணக்கிட்டு இது தெரிவிக்கப் பட்டது. 16 முதல் 19 வயதுக் குட்பட்ட பெண்களே இதில் அதிகம்.

இவ்வளவுத் தகவல்களையும் வெளியிட்டது. விடுதலை ஏடு அல்ல. 26.9.2005 நாளிட்ட தினகரன் தான்.  கலாச்சாரத்தைக் காப்பதற்காகவே அவதாரம் எடுத் ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சிவசேனா என்ன செய்யப் போகிறது? இந்த ஆண்டு தசராவில் அகம தாபாத், சூரத், வடோதரா ஆகிய நகரங்களில் நிகழ்ந்த ஆபாசம் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை (25.11.2009) விரிவாகவே செய்தி வெளியிட்டதே. பெண்கள் மருந்துக் கடைகளுக்குப் போய் காண்டம் (சிஷீஸீபீஷீனீ) வாங்கு கிறார்களாம். இந்தக் கால கட்டத்தில் 50 சதவிகிதம் அளவுக்கு பெண் களுக்கான கர்ப்பம் தடுக்கும் காண்டம் விற்பனை அதிகமாம்.

The sale of condoms has reportedly gone up by 25-50 per cent in Ahmadabed, Vadodara and Surat. And Chemists will tell you how  the fair sex is unabashedly asking for branded stuff. ‘’The sale of condoms has doubles in the past three days of Navratri,’’ says Naitik Kapadia of Apollo Pharmacy, a 24-hour chemist shop close to the SG Highway.

‘’Condom companies are also offering special promotional schemes during Navratri,’’ says Jaswant Patel, Secretary of the Ahmedabed Chemists Association,who admits women have  become bold enough to ask for condoms from chemists as well as panwallahs.

‘’The sale has already increased by two to three times during past week, ‘’said Sanjay Patel of Alkapuri Medicals, Vododara. The UInice of has also opened a counter at United Way of Baroda garba. In surat, sale of condoms is particularly high at shops located near garba grounds.

News form ‘’The Times of India’’ 25.11.2010

                 -----------------------"விடுதலை” 13-10-2013

27 comments:

தமிழ் ஓவியா said...


கவிதைக்குப் பாராட்டு!



06.10.2013 தேதியிட்ட விடுதலை - ஞாயிறு மலரில் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் படைத்து எழுதியுள்ள இடியும், அடியும் இனி யாருக்கு? ஓர் அரிய கவிதைப் படைப்பு. கழகத்தின் பாரம்பரிய அடிப்படை மாண்புகளில் ஒன்றான, உணர்ச்சி பிரவாகத்தின் சுழற்சிகளிடையே அறிவும், பண்பும், அடிப்படை மனித உறவைச் சிதைக்காத நாகரிகமும் என்ற கோட்பாடு, மிகத் தெளிவாகவே காணக் கிடக்கிறது.

அடித்தவன் பெயர் யாருக்கடா தெரியும்? அடிபட்டவர் அல்லவா ஒளிர்கிறார் என்ற வரிகள், அவரின் முதிர்ச்சியையும், பண்பையும், காட்டுவது மட்டுமின்றி, ஒரு மிக உயர்ந்த கவிதை வளத்தையும் காட்டுகிறது. அடைவடிஉ ழுசயனே ளுவலடந என அறியப்படும் எளிய சொற்கள் அரிய கருத்துக்கள் என்ற அடிப்படையில் அமைந்துள்ளன.

கவிஞருக்கு என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.

பேராசிரியர் எஸ்.எஃப்.என். செல்லையா, சென்னை-40

தமிழ் ஓவியா said...

யாருக்கும் ஓட்டு இல்லை வசதியை ஏற்படுத்த உத்தரவு மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

புதுடில்லி, அக்.13- வாக்குப்பதிவு இயந்திரத்தில், யாருக்கும் ஓட்டு இல்லை வசதியை ஏற்படுத்துமாறு உத்தரவிட்டு, மாநில தலைமை தேர்தல் அதிகாரி களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

தேர்தலில் யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை என்றால், வேட்பாளர்களை புறக்கணிக்கும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு ஏற்படுத்தி தரவேண் டும் என்று கோரி, சிவில் உரிமைகளுக்கான மக்கள் இயக்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் வாக்கு அளிக்க விரும்பாத வாக்காளர்களுக்கு அதற்கான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என்றும், இதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், வேட் பாளர்களின் பெயர் பட்டியலுக்கு அடியில் யாருக்கும் வாக்கு இல்லை (ஆங்கிலத்தில் நோட்டா) என்ற வாசகத்துடன் ஒரு பொத்தானை அமைக்க வேண் டும் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி தீர்ப்பு கூறியது. யாருக்கும் ஓட்டுப் போட விரும்பாத வாக்காளர்கள், தற்போது அதற்காக வாக்குச் சாவடியில் வைக்கப்படும் பதிவேட்டில் கையெழுத் திடும் முறை ரகசியத்தை காப்பதாக இல்லை என்பதால் அந்த முறையை ரத்து செய்வதாகவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

வருகிற நவம்பர், டிசம்பர் மாதங்களில் ராஜஸ் தான், மத்தியபிரதேசம், டில்லி, சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதி இருக்கிறது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, இனி வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களில் யாருக்கும் ஓட்டு இல்லை என்ற வசதியை ஏற்படுத்த வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள் முடிந்ததும் கடைசியாக, யாருக்கும் வாக்கு இல்லை என்ற வாசகத்தையும் அதற்குரிய பொத்தானையும் அமைக்க வேண்டும். யாருக்கும் வாக்கு இல்லை என்ற வாசகம் அந்தந்த மாநில மொழிகளில் இடம்பெற வேண்டும்.

ஆங்கிலம் அலுவல் மொழியாக இருக்கும் வட கிழக்கு மாநிலங்களில், யாருக்கும் வாக்கு இல்லை என்ற வாசகம் ஆங்கிலத்தில் இடம் பெற வேண்டும்.

ஓட்டு எண்ணிக்கையின் போது, யாருக்கும் வாக்கு இல்லை என்று பதிவான ஓட்டுகளையும் எண்ணி அறிவிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் யாருக்கும் ஓட்டு இல்லை வசதியை ஏற்படுத்தி செயல்படுத்த தேவையான பயிற்சிகளை தேர்தல் அதிகாரிகளுக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


சி(ற)வப்புப் பூஜை!


கொல்கத்தாவில் துர்கா பூஜை விமர்சை யாகக் கொண்டாடப்படும் மூடப் பண்டிகை. மார்க் ஸிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி ஆட்சியில்கூட துர்கா பூஜைக்குத் தான் அரசு விழா முன் பணம் வழங்கப்படும்.

தோழர் ஜோதிபாசு அவர்கள் தலைமையி லான அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராகவிருந்த சுபாஷ் சக்ரவர்த்தி கொல் கத்தா காளி கோயிலுக் குச் சென்று நேர்த்திக் கடன் கழித்து, கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தும் அளவுக்கு (2006 செப்டம்பர்) துர்க்கா பூஜை பெரும் பாதிப்பை அங்கு ஏற் படுத்தி விட்டது. (முதல் வர் ஜோதிபாசு அதனைக் கண்டித்தார் என்பது மகிழ்ச்சியான சேதி!)

இப்பொழுது ஒரு தகவல் கொல்கத்தாவிலி ருந்து கிடைத்திருக்கிறது. கொல்கத்தாவில் குறிப் பாக சோனாக்க்ஷி பகுதி யில் சிவப்பு விளக்குப் பகுதியில் 10 ஆயிரம் பாலியல் தொழிலாளர் கள் இருக்கிறார்கள். ஆசியாவிலேயே இங்கு தான் அதிகம்!

அவர்களுக்கு மட்டும் பக்தி இருக்காதா? இவர் கள் துர்கா பூஜைக்காகத் தனிப் பந்தல் அமைத்துப் பூஜை கொண்டாடுகிறார் கள் என்பதுதான் அந்தத் தகவல்!

ஆயுதப் பூஜை கொண் டாடுவது சாதாரணமான தல்ல; செய்யும் தொழிலே தெய்வம் அந்தத் தெய் வத்துக்குச் சமமாக தொழிலுக்குத் தேவைப் படும் தளவாடங்களை, கருவிகளைக் கும்பிடு வது அவசியம் அல்லவா? என்று வெண்டைக்காய், விளக்கெண்ணெய் விளக்கங்களைச் சொல் லுவதுண்டு பக்த சிரோன் மணிகள்.

தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களில், போகிற போக்கில் சில கேள்விகளைக் கேட்ப துண்டு. ஆயுத பூஜையில் நகரசுத்தி தொழிலாளி எதை வைத்துப் படைப் பான்? விலை மகளிர் (அந்தக் காலத்தில் புழக் கத்தில் இருந்த சொல் லாடல் அது!) பூஜைக் குரிய பொருள் எது? என்று கேட்பார்கள்.

ஆயிரக்கணக்கில் கூடி தந்தை பெரியார் உரையைச் செவி மடுக் கும் மக்களிடையே வெடிச் சிரிப்புக் கிளம்பும் - கை தட்டி வரவேற் பார்கள்.

காலுக்கு மிகவும் பாதுகாப்புக்கு பயன்படக் கூடியது செருப்பு தானே? வீட்டைச் சுத்தப்படுத்த அவசியமானது விளக்க மாறு தானே?

ஆயுத பூஜையின் போது இவைகளுக்கும் பூஜை உண்டா? கோபப் படாமல் புத்தியைக் கொஞ்சம் செலவிட்டுப் பார்த்தால் - பகுத்தறிவு வாதிகளின் இந்தக் கேள்விகளில் அடங்கி இருக்கும் நியாயமும், நேர்மையும், சிந்தனையும் புலப்படுமே! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


மதவாத சக்திகளுக்கு எதிராக மதச் சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்

ஜாதிக் கூட்டணியைப் புறக்கணிப்போம்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தீர்மானங்கள்

சென்னை, அக்.13- மதவாத சக்திகளுக்கு எதிராக மதச் சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்; தமிழ்நாட்டில் அணி சேரும் ஜாதிய சக்திகளைப் புறக்கணிக்க வேண்டும் என்பது உட்பட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 11 தீர்மானங் களை நிறைவேற்றியுள்ளது.
ஜாதி வெறியர்களைக் கட்டுப்படுத்துக
தமிழ்நாட்டில் ஜாதி வெறியர்கள் மீண்டும் வெளிப்படையாக அணி சேர்ந்திருப்பது இங்குள்ள சனநாயக சக்திகளுக்கு விடப்பட்டுள்ள சவாலாகும். வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு அரசியல் ஆதாயம் தேடுவதற்கு அவர்கள் திட்டமிட்டுள் ளனர். அதை இப்போதே தடுத்து நிறுத்துவது தமிழக அரசின் கடமையாகும். ஜாதியவாத சக்திகள் மீது தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக் கைகளை இச்செயற்குழு பாராட்டுகிறது. அதில் தமிழக அரசு உறுதியோடு இருக்க வேண்டு மெனவும் கேட்டுக்கொள்கிறது. தலித் மக்களுக்கு மட்டுமின்றி நாட்டின் சனநாயக நெறிமுறை களுக்கும், அமைதிக்கும், முன்னேற்றத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கின்ற ஜாதிய சக்திகளைப் புறக்கணிக்க வேண்டுமென அனைத்துச் சனநாயக சக்திகளையும் இச்செயற்குழு அறைகூவி அழைக் கிறது.

தமிழக மீனவர்களைக் காப்பாற்றுக

தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற் படையின் தாக்குதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அவர்களைக் காப்பாற்ற வேண்டிய மத்திய அரசோ, மெத்தனம் காட்டுகிறது. எல்லைப் புறத்தில் இராணுவ வீரர்களின் மீதான தாக்குதல் எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரான சவாலாகக் கருதப்படுகிறதோ அதுபோன்றே தமிழக மீனவர்களின் மீதான தாக்குதலும் இந்திய இறை யாண்மைக்கு எதிரான சவாலாகவே கருதப்பட வேண்டும். தமிழக மீனவர்களின் பாரம்பரியமான மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு அவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான பயிற்சியும், சாதனங்களும் வழங் கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மெனவும் இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது

2013 நவம்பரில் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியப் பிரதமரோ, பிரதிநிதிகளோ பங்கேற்கக் கூடாது என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் நிலைப்பாடு. இதை வலியுறுத்தி முதலில் அறிக்கை வெளியிட்டது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். தற்போது இக்கோரிக்கைக்கான பட்டினிப் போராட்டம் மேற்கொண்டிருக்கும் தோழர் தியாகு அவர் களுக்கு இச்செயற்குழு தனது ஆதரவைத் தெரி வித்துக் கொள்கிறது. காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என மத்திய அரசு உடனடி யாக அறிவிக்க வேண்டும். இந்திய அரசுக்கு அழுத்தம் தரும் விதமாக தமிழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் ஒருமித்த குரலில் போராட முன்வரவேண்டுமென இச்செயற்குழு அழைப்பு விடுக்கிறது.

ஏற்காடு இடைத்தேர்தல் - திமுகவுக்கு ஆதரவு

ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கேட்டு, திமுக தலைவர் கலைஞர் அவர்கள் கடிதம் அனுப்பி யுள்ளார். அந்த வேண்டுகோளை ஏற்று திமுக வேட்பாளரை ஆதரிப்பது எனவும், அவரது வெற்றிக்கு அயராது தேர்தல் பணியாற்றுவது எனவும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது. இடைத் தேர்தல்களில் ஆளும்கட்சி வெற்றி பெறுவதே அண்மைக்கால நடைமுறையாகிவிட்டது. எனினும், ஏற்காடு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது ஆளும் அதிமுக ஆட்சிக்கு ஒரு அறிவுறுத்தலாக அமையும். ஆகவே, இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுமாறு ஏற்காடு தொகுதி மக்களை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதற்கு அரசியல் கட்சிகள் யாவும் தயாராகி வருகின்றன. பாரதிய சனதா கட்சி, தனது பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடியை அறிவித்துள்ளதையடுத்து இந்தத் தேர்தல் மதவாத சக்திகளுக்கும் மதச்சார்பற்ற சக்திகளுக்கும் இடையிலான போட்டியாக உருவெடுத்திருக்கிறது. மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால், அது சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல சனநாயக சக்திகள் அனைவருக்குமே ஆபத்தாகிவிடும். நாட்டை மதவாத ஆபத்திலிருந்து பாதுகாப்பது இன்று முதன்மையான கடமையாக உள்ளது. எனவே, மதவாத சக்திகளுக்கு எதிராக இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியில் திரள வேண்டுமென இச் செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...


உமாபாரதி இப்படி...


மத்தியப் பிரதேசத்தில் செல்வி உமாபாரதி முதல் அமைச்ச ராகவிருந்தார். அவர் காலையில் எழுந்து வெளியில் செல்லுவதாக இருந்தால் பசு மாடு தரிசனம் தான் முதலாவது: வெளியூர் சென்றாலும் அங்கும் பசு மாடு தயாராக இருக்க வேண்டுமாம். முதல் அமைச்சராக இருந்தபோது கடைப்பிடிக்கப்பட்ட இந்தச் சடங்கு முதலமைச்சராக இல்லாதநிலையில் இப்பொழுதும் தொடரப்படுகிறதா என்று தெரிய வில்லை.

ஒரு கேள்வி: இவ்வளவு சாஸ்திர சம்பிரதாயங் களைக் கறாராகக் கடைப்பிடித்த உமாபாரதி - ம.பி. முதல் அமைச்சர் பதவியில் தொடர்ந்து இருக்க முடியவில்லையே ஏன்! சிந்திக்க வேண்டாமா?

தமிழ் ஓவியா said...


மோடியின் கலக்கம்


உத்தரப்பிரதேச மாநி லத்தில் உள்ள மக்களவை உறுப்பினர்களின் எண் ணிக்கை 80. எல்லா அரசியல் கட்சிகளும் அம்மாநிலத் தையே குறி வைக்கின்றன.

பி.ஜே.பி.யின் பிரதமருக் கான வேட்பாளர் மோடி தன் விசுவாசியான அமித்ஷாவை உ.பி.க்குப் பொறுப்பாளராக நியமித்துள்ளார். ஆனால், உ.பி.யில் ஏற்பாடு செய்யப்பட்ட பா.ஜ.க விழாவில், காணும் விளம்பரங்களில் எல்லாம் அத்வானி படம் தானாம்; வெறுத்துப் போனார் அமித்ஷா. வேறு வழியில்லை. விழாவையே புறக்கணித்து விட்டார். சிறப்பு விருந்தினர் அத்வானிக்கு அவ்விழாவில் ஏகப்பட்ட புகழ் மாலைகளாம். மோடி கலங்குகிறாராம்.

தமிழ் ஓவியா said...

முதல் அமைச்சர் ஜெயலலிதா சொல்லுவதும் - அண்ணா கூறியதும்

நவராத்திரி பண்டிகையின் இறுதி நாளில் ஆயுத பூஜையையும், அதற்கு அடுத்த நாளில் விஜய தசமியையும் கொண்டாடி மகிழும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த ஆய்த பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆதிபராசக்தியை துர்க்கை வடிவில் வழி பட்டால் வீரம் பிறக்கும், லட்சுமி வடிவில் வழி பட்டால் செல்வம் பெருகும், சரஸ்வதி வடிவில் வழிபட்டால் கல்வி சிறந்தோங்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் நவராத்திரி, பண்டிகையின் முதல் மூன்று நாட்களில் துர்க்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்களில் லட்சுமி தேவியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதி தேவியையும் மக்கள் வணங்கி வழிபடுகிறார்கள்.
ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் ஆதாரமாகத் திகழ்கின்ற அவரவரது தொழிலின் மேன்மையைப் போற்றும் வகையில் மக்கள் தத்தமது தொழிற் கருவிகளுக்கெல்லாம் பூஜை செய்து வழிபடும் திருநாளே ஆயுதபூஜையாகும்.

விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக் கையில் மக்கள் அன்னை மகாசக்தியை வழிபட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றித் திருநாளே விஜயதசமி பண்டிகையாகும், செய்யும் தொழிலே தெய்வம் என்பதையும், உழைப்பின் மூலமே வெற்றி என்பதையும் உணர்த்தும் வகையில் ஆயுத பூஜையையும், விஜயதசமியையும் கொண் டாடும் தமிழக மக்கள் அனைவரும் அனைத்து வளமும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்திட எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

- ஜெ.ஜெயலலிதா, நமது எம்.ஜி.ஆர், நாள்: 13.10.2013


ஆயுதபூஜை - சரஸ்வதி பூஜை பற்றி அண்ணா

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடாகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுதபூஜை செய்தவர்களல்லார் நவராத்திரி கொண்டாடினவர்களல்லர்.

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே

சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை!

ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும், மண்வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை

கர்ப்பூரம் கூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூஜை அறியாதவன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒரு கணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம். உலகுக்குத் தந்தோம் என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும், மிரளாமல் யோசி, உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாள்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்த பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டு பிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!

தமிழ் ஓவியா said...

அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய; அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!

எல்லாம் மேனாட்டன் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப்பார்.

சரஸ்வதி பூசை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராயட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள்

சரஸ்வதி பூசை; ஆயுத பூஜை,

செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவில் இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச்சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரஸ்வதி பூஜை; ஆயுத பூஜை நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூஜைகள் செய்தறியாதவர், நாம் ஆச்சரியப்படும் படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலே கூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

யோசித்துப்பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

திராவிட நாடு - (26.10.1947)

கட்சியின் பெயரில் அண்ணா!

அண்ணாவின் கொள்கையோ படுகுழியில், அண்ணா திமுக தொண்டர்களே சிந்திப்பீர்! சிந்திப்பீர்!

தமிழ் ஓவியா said...


கழகத் தோழர்களே, களம் காண வாரீர்!


கழகத் தோழர்களே!

வரும் 15.10.2013 செவ்வாயன்று திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

ஈழத் தமிழர்களின் உரிமைகள் கோரி, கொடுங்கோலன் ராஜபக்சே தலைமையேற்று நடத்த உள்ள காமன் வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி -
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையாலும், சிங்கள மீனவர்களாலும் நாளும் தாக்கப்படும் - சிறை பிடிக்கப்படும் கொடுமையைத் தடுக்க வலியுறுத்தி - தமிழ்நாடெங்கும் கழக மாவட்டங்களில் வரும் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

சென்னையில் தமிழர் தலைவர் தலைமை தாங்குகிறார்.

கழகப் பொறுப்பாளர்களே, செவ்வாயன்று நாம் காணும் களம் - தமிழ்நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும்! வேண்டும்!!

இந்திய அரசின் காதுகளில் ஒலிக்க வேண்டும். அவர்களின் கண்களையும் திறக்க வேண்டும்! - வேண்டும்!!

தோழர்களே ஒருங்கிணைப்பீர்!

தோள் தூக்கி வெண்கலக் குரல் கொடுப்பீர்! குரல் கொடுப்பீர்!!

தமிழ் ஓவியா said...

அண்ணா தி.மு.க.வுக்குச் சொல்லுங்கள்!


ஆயுத பூஜையைக் கலைஞர் ஏற்கவில்லை; ஆரியர் - திராவிடர் என்றெல்லாம் பேசுகிறார் என்று திமிரடியான வார்த்தைகளைப் பயன் படுத்தும் தினமணியே! தினமணியே!

கலைஞர், பெரியார், அண்ணா கொள்கை களைத்தான் சொல்லு கிறார். நியாயமாக பெரியார் அண்ணா கொள்கைகளைப் பின்பற் றாமல் அதற்கு எதிராக பார்ப்பனீயத்துக்கு வக் காலத்து வாங்கும் வகை யில் ஆயுத பூஜைக்கு வாழ்த்துச் சொல்லும் அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரைத் தான் விமர்சித்திருக்க வேண்டும், தினமணி! ஆயுத பூஜைபற்றி அண்ணாவின் அபிப் பிராயம் என்ன? இதோ! எண்ணிப்பார் கோபியாமல்! எலக்ட்ரிக் இரயில்வே,

மோட்டார் கப்பல், நீர் மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இவை களுக்காக மருந்து ஆப்ரே ஷன், ஆயுதங்கள், தூரதிருஷ் டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப்மெஷின் அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத் துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின்,

இன்னும் எண்ணற்ற புதிய, பயன் தரும், மனி தனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் ஊழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவற் றைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும் கண்டு பிடிக்கும் வேலையிலே ஈடு பட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம்.

ஆயுதபூசை, சரசுவதி பூசை கொண்டாடாதவர்கள்! அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர்; நவராத்திரி கொண்டாடி னவர்களல்லர்! நூற்றுக்கு நுறுபேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே

சரசுவதி பூசை, ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும், கலப்பையும், ஏரும், மண் வெட்டியும், அரிவாளும், இரட்டை வண்டியும், மண் குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.

தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை

கர்ப்பூரம் கூட நீ செய்த தில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாத வன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒருகணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இது வரை, என்ன, புதிய , அதி சயப் பொருளைக் கண்டு பிடித்தோம்? உலகுக் குத் தந்தோம் என்று யோசித் துப் பாரப்பா! கோபப் படாதே! உண்மை அப்படித் தான் நெஞ்சைக் கொஞ்சம் உறுத்தும். மிர ளாமல் யோசி. உன்னையும் அறி யாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாள்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல் களை எல்லாம் கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கி லேயன் வருவதற்கு இடையே இருந்த காலத் திலே அச்சு இயந்திர மாவது கண்டுபிடித்திருக் கக்கூடாதா? இல்லையே!

தமிழ் ஓவியா said...


மேனாட்டான் கண்டு பிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங் கத்தை அச்சடித்துப் படித்து அகமகிழ்கிறாயே! அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே! அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாடவைத்து மகிழ்கிறாயே! எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோ கப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்.

சரசுவதி பூசை - விமரி சையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அசோசி யேடட் அல்லது இராயட்ர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில் லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை! சிபி, சினிமா பார்த்த தில்லை! தருமராசன், தந் திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளையெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கி றோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள் களைத் தந்த அறிவாளர் களை மறந்துவிடுகிறோம், அவர்கள்

சரசுவதி பூசை; ஆயுத பூசை செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவில் ராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கி றோம். இது முறைதானா?

பரம்பரைப் பரம்பரை யாக நாம் செய்து வந்த சரசுவதி பூசை; ஆயுத பூசை நமக்குப் பலன் தரவில் லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவர், நாம் ஆச்சரியப்படும்படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதாரப் புருடர்கள் காலத்திலே கூட இல் லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டு பிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக் கும். அதையும் தாண் டினால் விவேகம் பிறக் கும். யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக் குள்ளாவது! - (திராவிட நாடு- 26.10.1947)

இதுதான் அண் ணாவின் கொள்கை! அந்த அண்ணாவின் கொள்கையைப் பின்பற்றும் கலைஞரைச் சாடுவதும், அந்த அண் ணாவின் பெயரைக் கட்சியிலும், உருவத் தைக் கொடியிலும் வைத்திருக்கும் அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளரைச் சாடாமல் விடுவதும் எதற்காக?

மனுவாதி ஒரு குலத் துக்கொரு நீதி என்பார் களே - அது இது தானோ!

தமிழ் ஓவியா said...

எண்ணிப்பார் கோபியாமல்!

சரசுவதி பூசை ஆயுத பூசை நமக்குப் பலன் தந்ததா? எண்ணிப்பார் கோபியாமல்!
எலக்ட்ரிக், இரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, டார்ப்பிடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷப்புகை, அதைத் தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆப்ரேஷன் ஆயுதங்கள்

தூரதிருஷ்டிக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன் டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், சினிமாப் படம் எடுக்கும் மெஷின், விமானம் ஆளில்லா விமானம், டைப் மெஷின், அச்சு இயந்தரம், இரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரைபோக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின், இன்னும் எண்ணற்ற புதிய, பயன் தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகிய வைகளைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாம், இன்னமும், கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக் கொண்டிருப்பவர் எல்லாம் ஆயுத பூசை சரசுவதி பூசை கொண்டாடாதவர்கள்!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடாகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூசை செய்தவர்களல்லர் நவராத்திரி கொண்டாடினவர்களல்லர்

தமிழ் ஓவியா said...

நூற்றுக்கு நூறு பேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே சரசுவதி பூசை ஆயுத பூசை இல்லை! ஏனப்பா கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

ஓலைக் குடிசையும் கலப்பையும் ஏரும் மண்வெட்டியும் அரிவாளும் இரட்டை வண்டியும் மண்குடமும் உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள். தீக்குச்சிப் பெட்டிகூட நீ செய்ததில்லை. கற்பூரம்கூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூசை அறியாதவன் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.

ஒருகணமாவது யோசித்தாயா, இவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம், என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை. அப்படித்தான் கொஞ்சம் நெஞ்சை உறுத்தும். மிரளாமல் யோசி. உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.

உன் பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களை எல்லாம்கூட, ஓலைச் சுவடியிலேதானே எழுதினார்கள். அந்தப் பரம்பரையில் வந்த நீ, அவர்கள் மறைந்து, ஆங்கிலேயன் வருவதற்கு இடையே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டுபிடித்திருக்கக் கூடாதா? இல்லையே!

மேனாட்டான் கண்டுபிடித்துத் தந்த அச்சு இயந்திரத்தின் உதவிக் கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அக மகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த இரயிலில் ஏறிக் கொண்டு உன் பழைய, அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!

எல்லாம் மேனாட்டான் கண்டுபிடித்துக் கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே, சரியா? யோசித்துப் பார்.

சரசுவதி பூசை - விமரிசையாக நடைபெற்றது என்று பத்திரிகையிலே சேதி வருகிறதே! அது நாரதர் சர்வீஸ் அல்லவே! அசோசியேடட் அல்லது இராய்ட்டர் சர்வீஸ் - தந்தி முறை - அவன் தந்தது. தசரதன் வீட்டிலே இருந்ததில்லையே! இராகவன் ரேடியோ கேட்டதில்லை. சிபி, சினிமா பார்த்ததில்லை! தருமராசன், தந்திக் கம்பம் பார்த்ததில்லை! இவைகளெல்லாம் மிக மிகச் சாமான்யர்களான நமக்குச் சுலபமாகக் கிடைக்கிறது அனுபவிக்கிறோம்.

அனுபவிக்கும்போது கூட, அரிய பொருள்களைத் தந்த அறிவாளர்களை மறந்து விடுகிறோம், அவர்கள்

சரஸ்வதி பூசை ஆயுத பூசை செய்தறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம். ரேடியோவிலே இராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவில் சிபிச் சக்கரவர்த்தி கதையும் கேட்டும், பார்த்தும் ரசிக்கிறோம். இது முறைதானா?

பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த சரசுவதி பூசை ஆயுத பூசை

நமக்குப் பலன் தரவில்லையே, அந்தப் பூசைகள் செய்தறியாதவர், நாம். ஆச்சரியப்படும் படியான அற்புதங்களை, அற்புதம் செய்ததாக நாம் கூறும் நமது அவதார புருடர்கள் காலத்திலேகூட இல்லாத அற்புதங்களை அறிவின் துணை கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும். பிறகு வெட்கமாக இருக்கும். அதையும் தாண்டினால் விவேகம் பிறக்கும்.

யோசித்துப் பார் - அடுத்த ஆண்டுக்குள்ளாவது!

-------------------------------- பேரறிஞர் அண்னா 'திராவிட நாடு', 26.10.194

தமிழ் ஓவியா said...

மனித சமுதாயம்



நாட்டினுடைய வளப்பம் மனித சமுதாயத்தின் அத்தனைப் பேரையும் பொறுத் ததே ஒழிய, மூன்றே முக்கால் பேர்களைப் பொறுத்தது அல்ல.
(விடுதலை, 2.4.1966)

தமிழ் ஓவியா said...


பிராமின் டுடே!


பிராமின் டுடே என்ற ஒரு இதழைப் பார்ப்பனர்கள் நடத்தி வருகிறார்கள். அதனைப் புரட்ட நேர்ந்தபோது பிரா மணர்களும் உயர் கல்வியும் எனும் தலைப்பில் ஒரு கட் டுரை.

கடந்த 5 வருடங்களில் அரசு மருத்துவக் கல்லூரி களில் தகுதியான அடிப் படையில் அனுமதி பெற்று உள்ளே நுழைந்த பிராமணர் கள் ஒற்றை இலக்கத்தை ஒரு போதும் தாண்டியதில்லை

பணம் படைத்த பார்ப் பனர்கள் தனியார் கல்லூரி களில் தகுதியின் அடிப் படையில் படித்து மருத்துவ ராக முடியுமேயன்றி, தன் மான இனக்குஞ்சுகளுக்குக் கிட்டியதுபோக மருத்துவக் கல்லூரியை ஏழைப் பிராம ணர்கள் எட்டிப் பார்க்க முடி யாது என்று எழுதுகிறது. அந்த ஏடு.

அவர்களை அறியாம லேயே, ஒன்றை ஒப்புக் கொண்டுள்ளதைக் கவனிக்க வேண்டுமே! கடந்த 5 ஆண் டுகளாகத்தான், அவாளுக்கு மருத்துவக் கல்லூரியில் ஒற்றை இலக்கத்தைத் தாண்ட முடியவில்லை - அப்படியானால் 5 ஆண்டு களுக்குமுன் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்பட்டன என்பது சொல்லாமலே விளங்கும்.

இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்த வர்களை எப்படி அடைமொழி கொடுத்து அந்த ஏடு எழுது கிறது என்பதைக் கவனித் தீர்களா?

தன்மான இனக்குஞ்சு களாம் இதற்குள்தான் எவ் வளவு ஆத்திரமும் ஏகடியமும் அலை அடித்து நிற்கின்றன!

தன்மான இனக்குஞ்சு என்பதில் உள்ள தன்மானம் என்பது பார்ப்பனர் அல்லா தார் உணர்வினைத் தட்டி எழுப்பிய இயக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது - இனக்குஞ்சு என்பது அவாள் வேறு இனம், திராவிடர்கள் வேறு இனம் என்பதை இனம் பிரித்துக்காட்டுகிறதா இல்லையா?

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்தி ருக்க வேண்டும், என்று நிபந்தனை வைத்திருந்த போது, எந்த இனக்குஞ்சுகள் மருத்துவக் கல்லூரி இடங் கள் முழுவதையும் முழுச் சுளையாக முழுங்கின?

இந்த நேரத்தில், தமிழர் செல்வம் சர். ஏ.டி. பன்னீர் செல்வம் கூறியதை, நினைத் துப் பார்க்க வேண்டும்.

திரு. பனகல் அரசர் காலத்தில்தான், மருத்துவ இலாக்கா வெள்ளையரிட மிருந்து பிடுங்கித் தமிழர் கையில் ஒப்படைக்கப்பட் டது. ஆனால் அதன் பயன் என்ன ஆயிற்று என்றால் டாக்டர் ராஜன் அய்யங்கார் என்ற ஒரு பார்ப்பனர் வைத்திய இலாகா மந்திரி யாக வந்தவுடன், கவுரவ டாக்டர்களை நியமிக் கிறேன் என்கிற பெயரால், ஒரு சில மாதங்களுக்குள் 225 பேர்களைக் கவுரவ டாக்டர்களாக நியமித்தார். இந்த 225 பேர்களில் 125 பேர் பார்ப்பனர்கள்; இதில் ஒரு பெரிய அக்கிரமம் என்னவென்றால், ஜெனரல் ஆஸ்பத்திரியில் பிரபல டாக்டராக இருந்த டாக்டர் சடகோபனை வெளியேற்றி விட்டு, அவருக்குப் பதி லாக, மூன்று பார்ப்பனர் களைத் திணித்தார். இவ்வித ஆட்சியை இனி நடத்தவிட மாட்டோம் என்பதன் அறிகுறிதான் பெரியார் அவர்கள் கூறும் தமிழ்நாடு தமிழருக்கே ஆகும் என்று சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சொன் னதைக் கொஞ்சம் நினைத் துப் பார்த்தால் பிராமின் டுடேயின் அங்கலாய்ப்பில் சற்றும் நியாயம் இல்லை என்பது விளங்காதா?

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


கருணையே வடிவானவன் கடவுளா? ம.பி.யில் பக்தர்கள் 120 பேர் பலி!

ரத்தன்கர், அக்.14- மத்தியப் பிரதேச மாநி லம் ரத்தன்கர் கோயி லில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, குறைந் தது 120 பேர் உயிரிழந் திருப்பர் என்று அஞ்சப் படுகிறது. பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் நீதி விசா ரணைக்கு உத்தரவிட் டுள்ளார். மேலும், டிஜிபி, தலைமைச் செயலர் ஆகியோரை தாதியா பகுதிக்கு விரைந்து சென்று நிலைமையைக் கண்காணிக்குமாறும், பாதுகாப்பில் ஈடுபடு மாறும் உத்தரவிட் டுள்ளார்.

தேர்தல் கால நன்ன டைத்தை நெறிமுறை கள் அமலில் உள்ள மாநிலம் என்பதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் இழப் பீடு அறிவித்துள்ளார் சிவராஜ் சிங் சவுஹான். உடனடி இழப்பீடாக ரூ.1.5 லட்சம் உயிரிழந் தோரின் குடும்பத்தின ருக்கும், ரூ. 50 ஆயிரம் பலத்த காயமடைந்தோ ருக்கும், ரூ. 25 ஆயிரம் லேசான காயமடைந் தோருக்கும் என அறி வித்துள்ளார் முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான்

ஞாயிற்றுக்கிழமை அன்று துர்கா பூஜை நேரத்தில், கோயிலுக்குச் செல்லும் சிந்த் ஆற்றின் பாலத்தில் சுமார் 25 ஆயிரத்துக்கும் அதிகமா னோர் கடந்து செல்ல முற்பட்டுள்ளனர். அப் போது நெரிசல் அதிக ரித்து உயிரிழப்பு ஏற் பட்டுள்ளது. அதேநேரத் தில், கூட்டத்தைக் கட் டுப்படுத்தி கோயிலுக்கு வரிசையாகச் செல்ல வைக்க காவல்துறையி னர் முயன்றுள்ளனர். அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டுள் ளது. இதனால், நூற்றுக் கும் அதிகமான பக்தர்கள் அலறியடித்து, சிந்த் ஆற்றின் பாலத்தை நோக்கி ஓடியுள்ளனர். அந்த நேரத்தில் நெரிசல் அதிகரித்துள்ளது. இதில் சிக்கியும் சிலர் உயிரிழந் தனர் என்று கூறப்படு கிறது.

ஆனால், காவல்துறை யினர் லேசான தடியடி நடத்தினர் என்று கூறப் படுவதை டிஜிபி சம்பால் ரான்சே மறுத்துள்ளார். இது, கூட்டத்தில் குழப் பத்தை ஏற்படுத்தி நெரி சலை ஏற்படுத்த ஒரு சில ரால் பக்தர்களிடையே பரப்பட்ட வதந்தி என்று கூறியுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்தோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட் டனர். நிலைமை சீரடைய சுமார் 2 மணி நேரம் ஆனது. இந்தக் களேபரத்தில் ஆற்றினுள் சுமார் 40 பக்தர்கள் விழுந்திருக்கலாம் என் றும் அவர்களை மீட்கும் முயற்சிகளில் ஈடுபட்டி ருப்பதாகவும் கூறப்படு கிறது.

தமிழ் ஓவியா said...


புகைஞ்சர்களே, ஏன் வீணே 10 ஆண்டு ஆயுளை இழக்கிறீர்கள்?


ஆஸ்திரேலியாவில் சாக்ஸ் என்ற மருத்துவ ஆய்வு அமைப்பு ஒன்று சுமார் 2,00,000 பேர்களை வைத்து - அவர்கள் எல்லாம் புகைஞ்சர்கள் (Smokers) - வயது 45க்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

இவர்களைக் கொண்டு நடத்திய ஆய்வுபற்றி ஆஸ்திரேலிய மருத்துவப் பேராசிரியர் எமிலி பேங்க்ஸ் (Emily Banks) என்பவர் கொடுத் துள்ள பேட்டி 12.10.2013 டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தியாக வெளி வந்துள்ளது!

அதில் அவர்கள் இப்படி புகை பிடிக்கும் புகைஞ்சர்கள் - வாழ்வில் அகால மரணமடைகிறார்கள்; சுமார் 10 ஆண்டுகள் தங்கள் ஆயுளை இழக்கின்றனர்; லேசான புகையிலையின் தாக்கமே - பழக்கமே இவர்களது ஆயுள் குறைப்பானாக ஆகி விடுகிறதாம்.

இந்நிலையில் இளைஞர்கள், மாணவர்கள் நாகரிக உணர்வைக் காட்டி பெண்களும்கூட புகைஞ்சர்களாக, குடிகாரர்களாக மாறி வரும் கொடுமை நாளும் அதிகமாகி வருகிறது.

கணினியுகத்தில் பொறியாளர்களாகி, திடீரென்று அளவுக்கு மீறிய சம்பளத்தைப் பார்க்கையில் திசை தடுமாறி, குடி, புகைத்தல் மற்றும் சில ஒழுக்கக் கேடுகளில் இளைஞர்கள் பலியாகி விடும் கொடுமை - மிக அதிகமாகி வருகிறது!

புகைபிடிக்கும் பழக்கம் ஒருமுறை ஏற்பட்டு விட்டால் எளிதில் அதைக் கைவிட்டு விட முடிவதில்லை பலரால்; தேவையின்றி தானே இப்படி தற்கொலை மாத்திரைகளை ஒவ்வொரு புகைப்பிடித்தலின் போதும் விழுங்குகின்றனரே! இழுக்க இழுக்க இன்பம்; இன்னும் வேகமாக விரட்டும் துன்பமும் முடிவும் என்பது செத்த பின்பு தான் தெரியும்!

புற்று நோய் அபாயம் போன்றவை புகைபிடித்தல், புகையிலை மெல்லுதல், பொடி போடுதல் போன்ற பழக்க வழக்கங்களால் என்பது ஒரு புறம்.

அது இல்லாமல் இது சாதா ரணமாக புகைஞ்சர்கள் ஆயுளே 10 ஆண்டு குறைகிறது.

அதைவிட பொருளாதாரத் தினைக் கணக்கிட்டுப் பார்த்தீர்களா?

என் வாழ்நாளில் நான் புகைஞ்சனாகியிருந்தால் எவ்வளவு அனாவசியப் பொருள் விரையம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.

உடலையும் வாழ்வையும் காப்பாற்றிட நீங்கள் புகைஞ்சர்களாக இருந்தால் உடனே கை விடுங்கள்;

நமது மதிப்பிற்குரிய தமிழ்நாட்டுத் தலைவர்களைக் கூட நாம் இழந்துள்ளோமே!

அதனால் அவர்கள் வீட்டுக்கு ஏற்பட்ட நட்டத்தை விட நாட்டுக்கு ஏற்பட்ட நட்டம் மிகவும் அதிகம் அல்லவா?

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இசையமுது முதல் தொகுதியில் இந்த ஆபத்தினை நன்றாக புகைச் சுருட்டு என்ற தலைப்பில் மிக அருமையாக விளக்கியுள்ளாரே!

புகைச் சுருட்டு

புகைச்சுருட்டால் இளமை பறிபோகும்
பொல்லாங் குண்டாகும்
புகைச் சுருட்டால்!

முகமும் உதடும் கரிந்துபோகும்
முறுக்கு மீசையும் எரிந்து போகும்
புகைச் சுருட்டால்!

மூச்சுக் கருவிகள் முற்றும் நோய் ஏறும் - பிள்ளை
முத்தம் தருநே ரத்தில் வாய் நாறும்
ஓய்ச்சல் ஒழிவில் லாதிருமல்சீறும் - நல்
ஊரோ உன்னைச் சீ என்றே கூறும்
பேச்சுக் கிடையில் பிடிக்கச் சொல்லும்
பெரியார் நெஞ்சம் துடிக்கச் சொல்லும்
புகைச் சுருட்டால்!

காசு பணத்தால் தீச்செயலை வாங்கிப் - பின்
கைவிட எண்ணினும் முடியாமல் ஏங்கி
ஏசிக் கொண்டே விரலிடையில் தாங்கி - நீ
எரிமலை ஆகா திருதுன்பம் நீங்கி
மாசில்லாத செந்தமிழ் நாடு
வறுமை நோய்பெற ஏன் இக்கேடு?
புகைச் சுருட்டால்!

தமிழ் ஓவியா said...


தொண்டறம் தொடரும்!... முடிவில் வெல்லும்!!...

மதிப்பிற்குரிய தமிழினத் தலைவர் மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள் 28.9.2013 அன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாண வரணி கடலூர் மண்டல மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற வருகை தந்தபோது கருத்துக் குருடர்கள் சிலர் காரை மறித்துத் தாக்கியதாக வந்த செய்தி கேட்டு ம

னிதநேயம் கொண்ட அத்தனை உள்ளங்களும் துடிதுடித்துப் போயின!.

21-ஆம் நூற்றாண்டிலும், ஏனிந்த கொலை வெறி? நம் நாடு குடியரசு நாடே தவிர கொடுங்கோல் மன்னர்கள் வாழ்ந்த அரசியல் பண்பாடே அறியாத காட்டுமிராண்டிகள் வாழ்கின்ற நாடல்லவே!

நாட்டின் வரலாறோ... மொழியின் வரலாறோ... இனத்தின் வரலாறோ சிறிதும் அறியாத சில மதவெறியர்கள் தான் இத்தகைய கீழ்த்தரமான செயல் களிலே ஈடுபட்டு அவமானத்தைத் தேடிக்கொள்கிறார்கள்!...

வன்முறை சிறிதும் கலவாது அறப் போராட்டங்களின் வாயிலாகவே ஒரு பெரிய சமுதாய மாற்றத்தையே உருவாக் கிக் காட்டினாரே தந்தை பெரியார்! அன்று கற்களை வீசியும் முட்டைகளை வீசியும், செருப்பை வீசியும் அவரை அவமானப்படுத் முனைந்தவர்கள் எல் லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள்! ஆனால்

தந்தை பெரியாரின் புகழோ இன்று உலக மயமாகி வருகிறது! அவருடைய பகுத்தறிவுக் கருத்துக்களை மதித்துப் போற்றி பாராட்டாத நாடுகளே, இல்லை என்ற நிலை இன்று ஏற்பட்டிருக்கிறதே. இது யாரால்?

தன்னலம் கருதாது... உடல் நலத் தையும் பாராமல் தமிழினத்தின் மேன் மைக்கு உழைத்துக் கொண்டிருக்கிற அய்யா ஆசிரியர் அவர்களது அயராத தொண்டறத்தால் தானே!

திராவிடர் கழகம் என்ற சமுதாய இயக்கமும், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் அமைப்பும் இல்லை யென்றால்... தமிழ்ச் சமுதாயமே இன்று பூண்டற்றுப் போயிருக்குமே!. அமெரிக்கர் களின் வருகையால் அமெரிக்க ஆதி குடிகளான செவ்விந்தியர் அடியோடு அழிந்து போனதுபோல...

ஆரியர்களின் வருகையால் தமிழினம் அழிந்து ஒழிந்து போயிருக்குமே! அந்த அழிவைத் தடுத்து நிறுத்தி தமிழி னத்தைக் காத்தது மட்டுமல்ல; இன்று வரை காப்பாற்றி அவர்களை மீண்டும் உச்சிக்கு உயரச்செய்ய இன்றுவரை களத் திலே நின்று போராடிக்கொண்டிருப்பது இவ்விரு இயக்கங்களும், அதன் தலை வர்களும் தானே! அதற்குப் பரிசா இது? சிந்திக்க வேண்டாமா?

மதத்தையோ, கடவுளையோ, காப்பாற்றப் புறப்பட்டிருக்கும் இவர்களுக்கு அந்த அதிகாரத்தைத் தந்தவர்கள் யார்? இவர்கள் காப்பாற்றித் தீரவேண்டிய அளவுக்கு அவ்வளவு பலவீனமானவையா அவைகள்?

கருவறையில் தேவனாதனே கடவுள் இல்லை என்பதை தனது செய்கையால் நிரூபித்துக் காட்டி விட்டதற்குப் பிறகுமா இத்தகைய கொலை வெறி? இந்து மதத்தின் அதாரிட்டி காஞ்சிப் பெரியவாள் (!) ஜெயிலுக்கும் பெயிலுக் குமாக அலைந்து கொண்டிருப்பதைக் கண்ட பிறகுமா கருத்துக்குருடர்களாக இருப்பது? சிறிதேனும் சிந்திக்க வேண் டாமா? அய்யனார் கோயில் குதிரை சவாரிக்கு உதவாது! பந்தயத்திற்கும் பயன்படாது!!

சினத்தை ஒதுக்கிவிட்டு.. சற்று சிந்திப்பார்களா? அதுவரை திராவிட இயக்கங்களின் தொண்டரம் தொடரும்!

முடிவில் வெல்லும்!!

- குடந்தை நெய்வேலி தியாகராசன்

தமிழ் ஓவியா said...


சபரிமலை வரும் பக்தர்களுக்கு கைதிகள் தயாரித்த உணவாம்


திருவனந்தபுரம், அக்.14 சபரிமலை வரும் பக்தர்களுக்கு கைதிகள் தயாரிக்கும் உணவை குறைந்த விலையில் விற்க கேரள சிறைத்துறை தீர்மானித்துள்ளது.

திருவனந்தபுரம் மத்திய சிறையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கைதி கள் தயாரிக்கும் சப்பாத்தி விற்பனை தொடங்கப்பட்டது. 1 சப்பாத்தி ரூ.2 என மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாலும், தரமானதாக இருந்ததாலும் பொது மக்களிடையே இந்த சப்பாத்திக்கு அமோக வரவேற்பு காணப்பட்டது. பொதுமக்களின் ஆதரவு அதிக ரித்ததை தொடர்ந்து கேரளாவின் மற்ற பகுதிகளான கண்ணூர், திருச்சூர், பத்தனம்திட்டா உட்பட மேலும் பல சிறைகளிலும் உணவு தயா ரிக்கப்பட்டது. சப்பாத்தி, இட்லி, சிக்கன் ஆகிய வற்றை வாங்க சிறை வாசலில் நீண்ட வரிசை யில் மக்கள் நின்றனர். அரசு மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதி கம் கூடும் இடங்களில் கைதிகள் தயாரிக்கும் உணவு விற்பனை தற் போது அமோகமாக நடைபெற்று வருகிறது.

ஒரு நாளைக்கு கேரள சிறைகளில் 4 லட்சம் சப்பாத்தியும், 1 டன் கோழிக் குழம்பும் விற்கப்படுகிறது. திருவனந்த புரத்தில் மட்டும் தினமும் 1 லட்சம் சப்பாத்தியும், 30 ஆயிரம் இட்லியும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் சபரிமலை வரும் பக்தர்களுக்கும் கைதிகள் தயாரிக்கும் உணவை விற்பனை செய்ய கேரள சிறைத்துறை தீர்மானித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பத்தனம் திட்டா சிறையில் நடந்து வருகிறது.

தற்போது முதல்கட்டமாக சபரிமலை செல்லும் வழியில் மைலப்ரா, வடசேரிக்கரை மற்றும் நிலைக்கல் ஆகிய இடங்களில் வாகனங்கள் மூலம் இட்லி, சாம்பார், சப்பாத்தி மற்றும் காய் கறிக் குழம்பு ஆகிய வற்றை விற்பனை செய்ய தீர்மா னிக்கப்பட்டுள்ளது.

ரூ.2க்கு சப்பாத்தி, இட்லி கிடைக் கும். காய்கறிக் குழம்பு ரூ.10-க்கும், சாம்பார் ரூ.5-க்கும் கிடைக்கும். பம்பையில் தேவசம் போர்டு இடம் கொடுத்தால் அங்கும் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக சிறைத் துறை இயக்குநர் அலெக்சாண்டர் ஜேக்கப் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...

விண்வெளிக்குச் சென்றது கடவுளுக்கு விரோதம்: விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்


விண்வெளியில் கடவுளைக் காணவில்லை - யூரி ககாரின்

- நி.சித்து முருகானந்தம் எம்.எஸ்.சி., (இயற்பியல்)


பெரியார் நூலக வாசகர் வட்ட சார்பில் நடை பெற்ற பெரியார் - அண்ணா விழாவில் பாராட்டப் பெற்ற அறிவியல் அறிஞர்களில் ஒருவரான நி.சித்து முருகானந்தம் அவர்கள் ஆற்றிய முக்கியவுரையின் முக்கிய தகவல்கள்:-

அறிவியல் பணிக்காக நாங்கள் இந்தக்கூட்டத்தில் பாராட்டப்படுகிறோம். தகுதியானவர்களிடமிருந்து, பொருத்தமானவர்களிடமிருந்து, நாத்திகர்களிட மிருந்து, பகுத்தறிவு வாதிகளிடமிருந்து இந்தப் பாராட்டு எங்களுக்குக் கிடைத்திருப்பது மகிழ்ச்சி யாகவும், பெருமையாகவும், நிறைவாகவும் இருக்கிறது. விஞ்ஞானிகளில் இரண்டுவகையுண்டு. நாத்திக விஞ்ஞானிகள், ஆத்திக விஞ்ஞானிகள். ஆத்திக விஞ்ஞானிகள், விஞ்ஞானக் கண்டுபிடிப்பு களைச் செய்யும்போது அவை அவர்கள் இது நாள்வரை நம்பிய மத, கடவுட்கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிராக இருக்கிறபோது சங்கடத்துடன் நெளிவார்கள்.

நமது நாட்டிலேயே இது நடந்திருக்கிறது. சர்.சி.வி.ராமன். இவர் 1930-இல் நோபல் பரிசு வாங்கியவர், 1961-இல் யூரி ககாரின் உலகின் முதல் மனிதராக விண்வெளிக்குச் செல்கிறார். 1930-க்கும், 1961-க்கும் இடையில் 31 வருடங்கள். எந்த மனிதருக்கும் வயது ஆக ஆக அறிவும், அனுபவமும், பக்குவமும் வளரும். அதுதான் இயற்கை. ஆனால் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்றதைப் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

பார்ப்பனர்களின் மதக்கோட்பாட்டின்படி விண்ணுலகு கடவுள்கள் வாழ்கிற இடமாதலால், கடவுள்கள் வாழ்கிற விண்வெளிக்கு மனிதன் இந்த பூத உடலுடன் செல்வது மிகப்பெரிய பாவம் என்று பத்திரிகையாளரிடம் பேட்டி கொடுத்துவிட்டார். விடுவார்களா பத்திரிக்கையாளர்கள்? நேரே யூரி ககாரினிடம் சென்று கேட்டுவிட்டார்கள், விண் வெளி கடவுள்கள் வாழ்கிற இடமென்றும் மனிதன் தன் பூத உடலுடன் அங்கு செல்வது பெரிய பாவம் என்று நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் சொல்கிறாரே என்று. இதற்கு யூரி ககாரின் என்ன சொன்னார் தெரியுமா? நானும் விண்வெளியில் சுற்றிப்பார்த்தேன் அங்கு எந்தக்கடவுளும் இல்லை என்றார் சாட்டையால் அடித்தது போல் இதைவிட பெரிய சங்கடம் சர்.சி.வி.ராமனுக்கு வேண்டுமா? இது சாதாரணக் சங்கடம் இல்லை, இதற்குப் பெயர்தான் தர்மசங்கடம். அவாளின் தர்மத்துக்கே ஏற்பட்ட சங்கடம், இந்த மாதிரி சங்கடங்களெல்லாம் நாத்திக விஞ்ஞானிகளுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. அவர்கள் மகிழ்ச்சியுடனேயே விஞ்ஞான உண்மை களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ப்ராங்க் வில்செக் என்பவர் ஒரு மிகச்சிறந்த விஞ்ஞானி, 2004-இல் அசிம்டோடிக் ப்ரீடம் என்ற அணுவுக்குள் இருக்கும் ஒரு இயக்கத்திற்காக நோபல் பரிசு பெற்றவர். தன்னைப்பற்றி எழுதும்போது தான் ஒரு பாதிரியாரின் மகனென்றும் மதக்கருத்துகளால் வளர்க்கப்பட்டவனென்றும் விஞ்ஞானத்தில் ஆர்வம் ஏற்பட்டு விஞ்ஞான உண்மைகளை படிப்படியாகத் தெரிந்து கொண்டபோது மதக்கருத்துகள் எவ்வளவு மோசடியாகவும் மக்களை ஏமாற்றுபவையாகவும் இருக்கின்றன என்பது தெரிந்து அதிர்ச்சியடைந்து அவற்றைப் புறக்கணித்து விஞ்ஞானத்தை ஏற்றுக் கொண்டதாகவும் கூறுகிறார்.

தமிழ் ஓவியா said...

சமீபத்தில் நீங்கள் ஒரு செய்தியைப் படித்திருப் பீர்கள். வாயேஜர் 1, என்ற விண்கலம் சூரியக் குடும்பத்தின் எல்லையைத் தாண்டிச் சென்றுவிட்டது என்பது பற்றி 1977-இல் அனுப்பப்பட்ட அந்த விண்கலம் 36 வருடங்கள், ஏறக்குறைய 1900 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து இப்போதும் சென்று கொண்டிருக்கிறது. அதில் நமது பூமியைப் பற்றிய விவரங்கள் ஏராளமாக இருக்கின்றன. நமது விண்மீனாகிய சூரியன் இந்த பால்வெளி மண்ட லத்தில் எந்த இடத்தில் இருக்கிறது. இந்த பூமி என்ற கோள் சூரியனின் மூன்றாவது கோளாக இருப்பது, பூமியில் ஆறுகள் ஓடுகிற சத்தம், பிரபலமான இசை, இங்கு மனிதர்கள் எப்படியிருப்பார்கள் என்பது பற்றிய ஆண், பெண் படம் அதிகமாக மக்கள் பேசக்கூடிய பல மொழிகளைத் தேர்ந்தெடுத்து அந்தந்த மொழிகளின் வாழ்த்துச் செய்திகள் போன்ற பல சிறப்பான செய்திகளை ஒரு தங்க ரிக்கார்டில் பதிவு செய்து அணுப்பியிருக்கிறார்கள். மிகவும் பிரபலமான விண்வெளி அறிஞர் கால் சேகன் தான் இந்த செயல்களுக்கு பொறுப்பேற்று செய்திருக்கிறார். யாராவது வெளியுலகவாசிகள் இருந்தால் நமது பூமியைப்பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக அப்படிப் பதிவு செய்யப்பட வாழ்த்துச் செய்திகளில் இந்திய மொழிகளில் மட்டும் 9 வாழ்த்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நான் 1999-இல் நாசாவின் வாயேஜர் இணைத்தளத்தைப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தேன். ஏனென்றால் அந்த இந்திய மொழிகளில் நமது தமிழ் இல்லை. எனக்கு ஆத்திரமாக வந்தது. ஏழுகோடி மக்கள் பேசுகிற மொழி, 4 நாடுகளின் ஆட்சி மொழியாக இருபது, உலகின் தொன்மையான மொழி எப்படி விடுபட்டுப் போனது என்று இந்த விவரங்களைச் சொல்லி நீங்கள் என்ன சமாதானம் சொன்னாலும் அது ஏற்புடையது அல்ல என்று சற்றுக்கடுமையாகவே அவர்களுக்கு இமெயில் கடிதம் எழுதினேன்.

உடனேயே ஒன்றரை மணி நேரத்துக்குள் இரண்டு பக்கத்துக்கு அவர்கள் எனக்கு பதில் அனுப்பியிருந் தார்கள். அந்த பதில் ஒரு விஷயத்தினை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பார்ப்பனர்கள் சூழ்நிலையை, சின்ன புத்தியை. அவர்கள் சொன்னது இதுதான். தமிழ் எங்கள் பட்டியலில் இருந்தது. இங்கிருக்கும் இந்தியச் சங்கங்களைத் தொடர்புகொண்டு வணக்கம் என்ற தமிழ் வாழ்த்துச் சொல்லை பதிவு செய்வதற்கு நேரம் குறித்து வரச்சொல்லியிருந்தோம். ஆனால் யாரும் வரவில்லை. பார்ப்பனர்களின் ஆதிக்கத்த்திலிருக்கும் இந்தியச் சங்கங்கள் இதை வேண்டுமென்றே புறக் கணித்துவிட்டனர். ஏனென்றால் ஹிந்தி, உருது, தெலுங்கு, பெங்காலி, ஒரியா, குஜராத்தி, மராத்தி, கன்னடம், ராஜஸ்தானி இவையெல்லாம் இருக் கின்றன தமிழ் மட்டும் இல்லை. அது சூழ்ச்சி இல்லாமல் வேறென்ன?

திராவிட மொழியான தமிழுக்கு இந்தச் சிறப்பு ஒரு போதும் போய்ச்சேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகக்குறியாக இருந்திருக்கிறார்கள். நாசா நிறுவனத் தினர் சமஸ்கிருதம் ஒரு வழக்கொழிந்து போன மொழியாதலால், அதைத் தேர்ந்தெடுக்கவில்லை. அப்படி அவர்கள் அதை தேர்ந்தெடுத்திருந்தால் சமஸ்கிருதத்தில் வாழ்த்துச் சொல்லை சொல்வதற்கு அங்கு கியூவில் நின்றிருப்பார்கள். வணக்கம் என்று ஒரு சொல்லைச் சொல்வதற்கு ஒரு ஆளும் இல் லாமல் போய்விட்ர்களா அதற்கு நேரம் தான் இல்லையா? உண்மை அதுவல்ல. மனம் இல்லை.

தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்; என்பது நமது ஆசை ஆனால் இந்தப்போராட்டம் முழுவதும் தேமதுரத் தமிழோசை கேட்பதற்கான வாய்ப்பைத் திட்டம் போட்டுக்கெடுத்துவிட்டார்கள். ஒரு வெளிஉலக மனிதனுக்கு இந்தச்செய்தி போய்ச்சேர்ந்தால் அது அங்கு வாழும் கோடிக்கணக்கானவர்களைப் போய்ச் சேர்ந்ததற்குச் சமம். பொறுக்குமா இவர்களுக்கு? எவ்வளவு குறுகிய புத்தி பாருங்கள்.

தமிழ் ஓவியா said...


மனிதனின் கடமை


மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும், ஆண்மை யோடும் நின்று விசயங்களை நன்றாய் ஆராய்ச்சி செய்து, காலத்துக்கும், அவசியத்துக்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்யவேண்டி யது பகுத்தறிவு கொண்டவன் என்னும் மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.

- (குடிஅரசு, 20.1.1935)

தமிழ் ஓவியா said...


ராமன் கோயில்


கேள்வி:ராமர் கோயில் பிரச்சினை தேர்தலில் முக் கியத்துவம் பெறும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: ஏதோ சில மேடை களில் இது பேசப்படலாம் சம்பிரதாயத்துக்காக; பா.ஜ.க. வின் தேர்தல் பிரகடனத் திலும்கூட இது ஒரு சிறிய இடத்தைப் பெறலாம். மற்றபடி தேர்தலில் இந்த விஷயத் திற்கு எந்த முக்கியத்துவமும் கிட்டாது என்றே நான் நினைக்கிறேன்.
- துக்ளக் 16.10.2013 பக்கம் 2

ராமன் கோயில் பிரச் சினை தேர்தலில் முன்னி றுத்தப்படக் கூடாது; தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறக் கூடாது என்று சொல்லும் அறிவு நாணயம் இந்த சோ அய்யருக்கு இல்லை என்பது இதன்மூலம் வெளியாக வில்லையா?

மேடைகளில் பேசுவார் களாம், தேர்தல் அறிக்கை யிலும்கூட ஒரு சிறிய இடத்தைப் பெறலாமாம் -ஆனாலும் அதற்கு எந்தவித முக்கியத்துவம் கிட்டாதாம்.

எந்தவித முக்கியத்துவ மும் கிட்டாத ஒன்றை எதற்குத்தான் மேடையில் பேச வேண்டும்? எதற்காகத் தான் அது சிறிய இடத்திலும் இடம் பெற வேண்டும்? விளக் குவாரா வேதியபுரத்தார்.

ராம பக்தர்களையும் குறிப் பாக சங்பரிவார்க் கும்பலை யும் ஏமாற்ற வேண்டும்; இன்னொரு பக்கத்தில் வாக்காளர்களையும் ஏமாற்ற வேண்டும் என்ற இரட்டை நாக்குப் புத்திதான் இது.

ராமன் என்பது ஒரு பிரச்சினையே இல்லை என்று காலங் கடந்தாவது சோ ஒப்புக் கொண்டதற்காகக் கொஞ்சம் பாராட்டலாம் தான்!

சேலம் 1971அய் அவர் மறந்திருக்க மாட்டார் அல்லவா!

ராமன் கோயில் கட்டு வதுதான் எங்கள் கொள்கை, பாபர் மசூதி இடிக்கப்பட்ட அந்த இடத்தில் ராமன் கோயிலை எழுப்பியே தீரு வோம் என்று மார்தட்டித் தேர்தலைச் சந்திக்கும் திராணி, அறிவு நாணயம் பி.ஜே.பி.க்கு உண்டா? அதைத் தேர்தல் பிரச்சினை யாக வைத்துத்தான் தீர வேண்டும் என்று கட்டாயப் படுத்தும் திரில் ஆர்.எஸ். எசுக்குத்தான் உண்டா?

பிரதமர் வாஜ்பேயி அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவில் நடைபெற்ற விசுவ ஹிந்து பரிஷத் மாநாட்டில் பேசும்போது, நாங்கள் பெரும்பான்மை பெற்றால் ராமன் கோயிலைக் கட்டு வோம் என்றாரே - அதையே தேர்தல் பிரச்சாரக்களத்தில் முன் வைப்பார்களா?

பெரும்பான்மை தாருங் கள் ராம பிரான் கோயிலைக் கட்டிக் காட்டுகிறோம் என்று இந்திய வாக்காளர்கள் மத்தியில் வைக்க வேண்டி யது தானே - யார் தடுத்தது?

இரட்டை நாக்கில் பேசு வதில் இவர்களை அடித்துக் கொள்ள யார் இருக்க முடியும்?

காசியும், மதுராவும் எங்கள் அஜண்டாவில் இல்லை. ஆனால் இவை இரண்டும் எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ளன. ஆனால் இந்தத் தேர்தலில் ஸ்திரமான, நேர்மையான அரசு என்பது தான் பிரதான அஜண்டா வாக இருக்கும் என்றார் அத்வானி (இந்து 30.12.1997)

அத்வானி பேசியது குறித்து வாஜ்பேயிடம் கேட்ட போது அவர் என்ன சொன் னார்? அஜண்டாவில் இல்லையென்றால் அதன் பொருளென்ன? தற்சமயம் அஜண்டாவில் இல்லை; அவ்வளவுதான். எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் உறுதி யிட்டுக் கூற முடியாது. (தி டைம்ஸ் ஆஃப் இந்தியா 8.1.1998) பேசு நா இரண்டு டையாய்ப் போற்றி என்று ஆரிய மாயையில் அண்ணா அர்ச்சித்ததுதான் நினை விற்கு வந்து தொலைக்கிறது!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத் தலைவரைத் தாக்குவதா?

மக்களாட்சியின் அடிப்படையே புரியாத காட்டுமிராண்டிகளின் தடித்தனம்
- சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பொன்னீலன்

கடந்த செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதியன்று விருத்தாசலத்தில் நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் இயக்க மாணவர் மாநாட்டுக்குச் செல்லும் வழியில் திராவிடர் கழகத் தலைவரும், விடுதலை இதழாசிரியரும், சமூக நீதிக்காகவும் மூடத்தன ஒழிப் புக்காகவும் தம் வாழ்வு முழுவதும் துணிந்து போராடிப் பல வெற்றிகளை நமக்கு ஈட்டித்தந்த பகுத்தறிவுப் பகலவன் பெரியார் அவர்கள் வழியில் தொடர்ந்து பணியாற்றி வருபவருமான கி.வீரமணி அவர்கள் வந்த வாகனத்தை வன்முறைக் கும்பல் ஒன்று தாக்கிச் சேதப்படுத்தியிருக் கிறது என்ற செய்தி அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அளிக்கிறது. மதவெறியும், ஜாதி வெறியும் கைகோர்த்து இந்த மிருக வெறித் தாக்குதலை நிகழ்த்தியிருப்பது மக்க ளாட்சிக் கோட்பாட்டுக்கே முற்றி லும் முரணான பாசிச வழிமுறை.

இதில் மேலும் அதிர்ச்சி தரும் காரியம் என்னவென்றால், வீரமணி அவர்களைப் பாதுகாக்க ஓடி வந்த திராவிடர் இயக்கத் தொண்டர் களைக் காவல்துறையினரே தடுத்துத் தாக்கியிருக்கிறார்கள் என்ற சேதி, வீரமணி அவர்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினர் அதைச் செய்யாமல் பாதுகாக்க ஓடிவந்த திராவிட இயக்கத் தொண்டர்களை தாக்கியிருக்கிறார்கள் என்று அறியும் போது மனம் கொந்தளிக்கிறது.

இன்னும் ஒரு கொடுமை இந்தக் கொடுஞ்செயல்களைப் பற்றிப் புகா ரளிக்கக் காவல் நிலையத்துக்குச் சென்ற திராவிடர் கழகத் தோழர் களிடமிருந்து தோழர் வீரமணியின் கார் தாக்கப்பட்டது பற்றிய புகார் மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர், காவல் துறையினரின் தாக்குதல் பற்றிய புகார் மனுவைப் பெற்றுக்கொள்ள மறுத்து விட்ட தாகவும் அறியவரும் செய்தி.

மக்களாட்சியின் அடிப்படைப் பண்பே சமூக மனிதர்களுக்குரிய கருத்துச் சுதந்திரம். நீண்ட வரலாற் றுக்குரிய திராவிட இயக்கம் இந்த நாட்டின் ஆகப்பெரிய நோயான வர்ணாசிரம் நோயையும் அதன் உள் நோய்களான மூடத்தனங்களையும் ஒழித்து அறிவு பூர்வமான ஒரு சமத்துவ சமூகத்தை உருவாக்கத் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்தக் கொள்கைகளை ஏற் றுக் கொள்ளாதவர்கள் இவற் றைச் சனநாயக வழிகளில் எதிர்த் துப் பிரச்சாரங்கள் செய்யலாம். அதை விட்டு வன்முறையில் ஈடுபடுவது அவர்களுடைய கொள்கைகளின் உள்அழுகலை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, அவர்கள் நம்பும் அடிப்படை ஆயுதமான வன்முறையின் வெளிப்பாடும் ஆகும்.

இந்தக் கொடூரமான சட்ட மீறலுக்கும், வம்முறைக்கும் எதி ரான கடுமையான சட்டபூர்வ மான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனத் தமிழக அரசைக் கோருகிறேன்.

தமிழ் ஓவியா said...


கலைஞர் சார்பில் பிரதமரிடம் டி.ஆர். பாலு முறையீடு


புதுடில்லி, அக். 15- இலங்கையில் நடை பெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது! என்ற தி.மு.க. தலைவர் கலைஞர் அவர் களின் கோரிக்கையினை இந்தியப் பிரதமர் மன் மோகன்சிங் அவர்களி டம், நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு நேற்று நேரில் உறுதிபட எடுத்துரைத் தார்.

இந்தக் கோரிக்கை யினை வலியுறுத்தி தொடர் பட்டினிப் போராட்டம் நடத்தி வரும் தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தோழர் தியாகு வின் மோசமான உடல் நிலை குறித்தும் டி.ஆர். பாலு, பிரதமரிடம் எடுத்துவிளக்கினார்.

அதனைக் கனிவுடன் கேட்டறிந்த இந்தியப் பிரதமர் அவர்கள், இவ் விஷயத்தில் தி.மு.க. மற்றும் தமிழர்களின் உணர்வுகளை மதித்து உரிய நல்ல முடிவு எடுப்போம்! என்று உறுதியளித்தார். தியாகு பட்டினிப் போராட் டத்தைக் கைவிட கலை ஞர் அவர்கள் நடவ டிக்கை எடுக்க வேண் டும்! என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

அதனை பிரதமர் மன்மோகன்சிங் அவர் கள், கடிதமாகவே வடித்து கலைஞர் அவர்களுக்கு டி.ஆர்.பாலு மூலம் கொடுத்தனுப்பினார்.

புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் அவர்களை அவரது இல்லத்தில், நேற்று இரவு 8 மணியளவில் தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்கள் சந்தித்துப் பேசினார்.

சுமார் 25 நிமிடத் திற்கு மேல் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது டி.ஆர்.பாலு இந்த ஆண்டு நவம்பர் திங் களில் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர் களின் கூட்டத்தில் இந் தியா கலந்துகொள்ளக் கூடாது என்கின்ற கோரிக் கையினை கலைஞர் அவர் கள் சார்பில் வைத்து, அதனை வற்புறுத்திக் கேட்டுக் கொண்டார்.

ஓரணியில் நின்று தமிழ் இன உணர்வாளர்கள் நடத்தும் போராட்டம்!

நான்கு ஆண்டுக ளுக்கு முன்னால் இலங் கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட உள் நாட் டுப் போரின் போது, ஒரு இலட்சத்து அய்ம் பதாயிரத்திற்கும் மேற் பட்ட அப்பாவி இலங் கைத் தமிழர்களின் உயிரைப் பறித்த சிங்கள இனவெறி அரசு நடத் தும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்ற தமிழகத்தின் ஒரு மித்த குரலுக்கு பிரதமர் செவி சாய்க்க வேண்டும் என்றுதமிழகத்தின் பல்வேறுஅரசியல் இயக் கங்களும் - நாடாளு மன்ற உறுப்பினர்களும் - மாணவர்களும் - உலகத் தமிழ் இன அமைப்பு களும் பல்வேறு கால கட்டங்களில்தொடர்ந்து போராடி வருவதை கலைஞர் அவர்களின் சார்பில் டி.ஆர். பாலு சுட்டிக் காட்டினார்.

தமிழ் ஓவியா said...


தீர்வு காண முடியாத பிரச்சினையே கிடையாது

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு தமிழர் தலைவர் அளித்த பேட்டி

சென்னை, அக். 15- ஈழப் பிரச்சினை மட்டுமல்ல; எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு உண்டு என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. இன்று (15.10.2013) சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறிய தாவது:- கேள்வி: காமன்வெல்த் மாநாட்டு அமைப் பிலிருந்து இலங்கையை நீக்கவேண்டும் என்று கோரிக்கையை வைத்திருக்கிறீர்கள்; அது எந்த அளவிற்குச் சாத்தியமாகும்?

பதில்: சட்டத்திற்காக மனிதர்கள் அல்ல; மனிதர்களுக்காகத்தான் சட்டம். இதற்கு முன்னால் எங்கும் இதுபோன்ற கொடுமைகள் நடைபெற்றது கிடையாது. ஆகவே, அந்தக் கொடுமைகள் இலங்கையில் நடைபெற்றதின் காரணமாக, நீக்கக் கூடிய அளவிற்கு அய்.நா.விற்கு சக்தி இருந்து, நியாயங்கள் தோன்றுமேயானால், நிச்சயமாக அதனை செய்யவேண்டும். சமூகத்திற் காகத்தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக சமூகம் கிடையாது.

கேள்வி: தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்று இந்திய அரசாங்கம் குற்றம் சொல்வதுபற்றி...?

பதில்: எல்லை தாண்டி செல்கிறார்கள் என் றால், காஷ்மீரில் பாகிஸ்தான் பக்கத்தில் முள் வேலி போட்டிருப்பதைப்போல, கடலில் ஒன்றும் முள்வேலி போட முடியாது. எல்லோரும் தெரிந்த ஒன்று என்னவென்றால், காற்றடித்தால், தானாக அந்தப் படகுகள் நகர்ந்து போகும். உடனடியாக அதனைத் தடுக்கவேண்டியதும், பாதுகாக்கவேண்டியதும் நம்முடைய கப்பற் படையின் கடமையாகும். தமிழக மீனவர்களின் வலைகளைப் பிடுங்கிக் கொள்கிறார்கள்; மீன்களைக் கொள்ளையடிக்கிறார்கள்; இரண்டு நாள்களுக்கு முன்னாலேகூட தமிழக மீனவரை கத்தியைக் கொண்டு வெட்டி இருக்கிறார்கள். இதைவிட வெட்கக்கேடு வேறு எதாவது உண்டா?

கேள்வி: இரு தரப்பு மீனவர்களும் (தமிழக - இலங்கை) பேச்சுவார்த்தையின்மூலம் தீர்வு ஏற்படும் என்று சொல்கிறார்களே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

பதில்: இரு தரப்பு அமைச்சர்களே பேசி முடிவுக்கு வரவில்லையென்றால், இரு தரப்பு மீனவர்கள் பேசி என்ன முடிவிற்கு வர முடியும்? இது ஒரு சடங்காச்சாரமாக இருக்குமே தவிர, இதனால் எந்தவித பயனும் ஏற்படாது. சட்ட பூர்வமாக எப்படி மற்றவர்களைக் கண்டிக்கிறீர் களோ, அதுபோல சட்டபூர்வமாக செய்யுங்கள். ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொடுப் பதை நிறுத்துங்கள்; போர்க் குற்றம் இன்னும் செய்துகொண்டிருப்பவர்களுக்கு, பயிற்சிக்கு போர்க் கப்பல்களை அனுப்புவோம் என்று சொல்வதையெல்லாம் முதலில் நிறுத்திவிட் டோம்; உங்களுடைய செயல்பாடுகளில் எங் களுக்கு திருப்தி இல்லை என்று அழுத்தந்திருத்த மாக வார்த்தைகள் இருக்கவேண்டும். ஆனால், இதுவரையில், கவலைப்படுகிறோம், அதனைப் பற்றி யோசிக்கிறோம், இது தடுக்கப்பட வேண்டும் என்று எவ்வளவு மென்மையான மொழியிலே, செல்லக் கோபமாகத்தான் காட்டு கிறார்களே தவிர, அவர்கள் அழுத்தந்திருத்த மாக தமிழக மீனவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கில் அவர்கள் செய்வதில்லை.
கேள்வி: தமிழக மீனவர் பிரச்சினை என்பது ஆண்டாண்டு காலமாக இருந்து கொண்டு வருகின்றது; இதற்கு ஒரு தீர்வு என்பது உண்டா?

பதில்: தீர்வு இல்லாத பிரச்சினைகளே உலகத் தில் கிடையாது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு. அண்மையில், ரசாயனக் குண்டு வைத்திருக்கிறது என்று சொல்லி, சிரியாமீது அமெரிக்கா படையெடுக்கப் போகிறது என்கிற வுடன், மற்ற நாடுகள் அதனைத் தவிர்த்து, போர் வரக்கூடாது என்று ஒரு தீர்வு கண்டார்கள். ஆகவே, மனமிருந்தால் மார்க்கம் உண்டு. அறி விருக்கிறதுபொழுது தீர்வுக்குப் பஞ்சமிருக்காது. அதை செய்வதற்கு தெம்பும், திராணியும், மன உறுதியும் அரசாங்கத்திற்கு வேண்டும்.
கேள்வி: அடுத்த கட்ட நடவடிக்கையாக திராவிடர் கழகம் என்ன மாதிரி நடவடிக்கை எடுக்க உள்ளது?

பதில்: டெசோ அமைப்பிலும் திராவிடர் கழகம் அங்கம் வகிக்கிறது. இந்த நேரத்தில், மற்றவர்கள் தெளிவான ஒரு சூழ்நிலையில் என்னென்ன செய்யவேண்டும் என்பதை அணுகு கிறபொழுது, தமிழகத்தில் இருக்கின்றவர்கள் தனித்தனியாக இந்தக் காரியங்களைச் செய் கிறார்கள்; எல்லோரும் ஒன்றுபடமாட்டார்கள் என்கிற நிலையை மாற்றக்கூடியது மிகமிக முக் கியம். குறைந்தபட்சம் அதற்கு ஒத்தக் கருத்துள்ள வர்கள் அவரவர்கள் அவரவர் இடத்திலிருந்து ஆதரவு கொடுத்தால்கூட போதும் ஒருவருக்கொ ருவர் தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

இரண்டாவதாக, அடுத்தகட்டமாக எதைச் செய்தால், மத்திய அரசுக்கு மிகப்பெரிய அள விற்கு உரைக்குமோ, மத்திய அரசு நல்ல இணக்க மாக சிந்திக்கிறோம் என்று ஒரு உறுதியை கலைஞர்மூலமாக அளித்திருக்கிறார்கள். நாம் பொறுத்திருந்து பார்ப்போம். அதற்கு அடுத்தபடி யாக நேரிடையாக நடவடிக்கைகள் இருக்கும். திண்டிவனத்தில் வருகிற 20 ஆம் தேதி கூடவிருக் கின்ற திராவிடர் கழக மத்தியக் குழுவில் அறி விப்போம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கலைஞர் தொலைக்காட்சிக்கு பேட்டி யளித்தார்.

தமிழ் ஓவியா said...


ஈழத் தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்றது

சென்னை, அக்.15- ஈழத் தமிழர் உரிமைகள், தமிழக மீனவர் பாதுகாப்புகளை வலியுறுத்தி திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (15.10.2013) காலை தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சென்னை பெரியார் திடலில் 7.10.2013 அன்று திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி இன்று (15.10.2013) தமிழகம் முழுவதும் கழக மாவட்டங்கள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்!

சென்னைமாவட்டஆட்சியர் அலுவலகம் முன் இன்று (15.10.2013) காலை 11 மணியளவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர் தோழியர்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் கீழ்க்கண்ட ஒலி முழக்கங்கள் எழுப்பப்பட்டன!

மத்திய அரசே புறக்கணிப்பாய், இலங்கையில் கூடுகின்ற, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப் பாய்.

இனப்படுகொலையாளன் ராஜபக்சே தலைமை யில் கூடுகின்ற காமன்வெல்த் மாநாட்டை புறக் கணிப்பாய்,

மத்திய அரசே, வழங்காதே இலங்கை அரசுக்கு போர்க்கப்பலை வழங்காதே,

தமிழர்களைக் கொன்று குவித்த இனவெறி அரசுக்கு போர்க்கப்பலா? தமிழன் என்றால் நாதியற்ற கும்பலா,

மத்திய அரசே, தடுத்து நிறுத்து, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்து,

கச்சத்தீவை மீட்டெடு, தமிழக மீனவர்களை காத்திடு.

போராடுவோம், வெற்றி கிட்டும் வரை போராடுவோம். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கழகத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.