Search This Blog

3.10.13

காந்தியார் கொலையும், பார்ப்பனர்களும்!



 
பெரியார் அவர்கள் பேசுகையில் குறிப்பிட்டதாவது:

சமுதாயத்தில் நம் மக்கள் சூத்திர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் ஆக்கப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே அதே நிலையில் இழி ஜாதி மக்களாகவே இருந்து வருகிறோம்.

இழி ஜாதி மக்கள் என்று இருப்பதால்தான் நம் மக்களே தொழிலாளர்களாகவும், கூலி வேலை செய்பவர்களாகவும், உடல் உழைப்புக் கொண்டு உழைத்தும் போதிய வருவாய் இன்றி அரை வயிற்றுக் கஞ்சிக்கு மட்டும் போதிய வருமானம் கொண்டவர்களாக வாழுகிறோம்.

ஒரு சிலர் உயர்ந்த ஜாதி என்ற காரணத்தால், ஒருவித உடல் உழைப்பும் இன்றிச் சுகமான வாழ்க்கை கொண்டு வாழ்கிறார்கள்.

இன்றைக்கு அரசாங்கம் முதற்கண் பார்ப்பனர்களிடமும், வடவர்களிடமும் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறது. பார்ப்பனர்கள் இயற்றி வைத்த சாஸ்திர புராணத்தில் மட்டுமின்றி இன்றைக்குள்ள ஜனநாயக ஆட்சி என்று கூறப்படும் பார்ப்பனர்களும், வடவர்களும் ஆளுகின்றன ஆட்சியின் சட்டத்தில் கூட நாம் சூத்திரர்கள் என்று தான் எழுதப்பட்டு இருக்கிறது. பார்ப்பனருக்கு ஒரு நீதியும் சூத்திரர்களுக்கு ஒரு நீதியுமாக வழங்கப்படுகிறது.

ஒரு நாட்டின் நலனுக்கும், நாட்டு மக்கள் பிழைக்கவும், சுகமாக வாழ்வும் தொழிலாளர் மக்கள் தேவை. இவ்வூர் சுத்தமாக இருக்க கக்கூஸ் எடுக்கும் தொழிலாளியும், குப்பை கூட்டும் தொழிலாளியும் தேவை. வீடு கட்டிக் கொடுக்க கொல்லத்துக்காரன் தேவை. விவசாயி இல்லையேல், உணவு கிடைக்காது. நாவிதன் இல்லையேல், நாகரிகத்துக்குத் தகுந்தபடி தலை அலங்காரமோ, முக அலங்காரமோ செய்து கொள்ள முடியாது.

அப்படி ஒவ்வொருவராலும் ஒவ்வொரு விதத்தில் நன்மை கிடைக்கிறது. யாராவது ஒரு தொழிலாளி இல்லாவிடினும் அந்தத் தொழில் தடைப்பட்டுவிடும். ஆனால், பார்ப்பான் இல்லையேல் எந்த வேலை நின்று போய்விடும்? பார்ப்பானால் என்ன வேலை நடை பெறுகிறது?

ஆனால், இப்படி ஒருவித வேலையும் இன்றி இருப்பவன் மேல் ஜாதிக்காரன் என்றும், நாட்டின் நலனுக்கென்று பாடுபடுகிறவன் கீழ் ஜாதி, தாழ்ந்த ஜாதி, இழி ஜாதி என்றும் ஆக்கப்பட்டிருக்கிறான். இவ்விதக் கொடுமை எந்த நாட்டிலும் இல்லை. இந்நாட்டில்தான் அப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடக்கின்றன.

மதம், சாஸ்திரம், புராணம் இவையெல்லாம் என்றைக்கு ஒழிகிறதோ அன்றுதான் நம் மக்களுக்குள்ள சூத்திரப்பட்டம் போகும். எந்தக் கடவுள்கள் பேரால் ஜாதி உண்டாக்கப்பட்டனவோ அந்தக் கடவுள்கள் ஒழிந்தால்தான் ஜாதி ஒழியும். எவை எவை ஜாதியை நிலை நாட்டுகின்றனவோ அவை ஒழிந்தால் அன்றி ஜாதியும், மதமும் அழியப்போவதில்லை. இப்படிப்பட்ட அடிப்படைகளை அழித்தால்தான் நம்மிழிவு நீங்கி வாழ முடியும்.

ஆனால் இன்றைக்கு என்னைப் போன்று இப்படிப்பட்ட காரியத்தில் இறங்கியவர்கள் ஒருவர் கூடக் காண முடியாது. எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன என்றாலும், அவை அத்தனையும் பார்ப்பனத் தெருக்களில் பொறுக்கும் எண்ணத்துடன்தான் இருக்கின்றன. எத்தனையோ தேசபக்தர்கள், தியாகிகள், அரசியல் தலைவர்கள் இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஜாதியைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ கவலை கொள்பவர்கள் இல்லை. அவரவர்களுக்கு ஏதாவது தன்னைப் பொறுத்த மட்டில் சுகம் கிடைத்தால் போதும் என்று பார்த்துக் கொள்ளுகிறார்கள்.

இப்போதுதான் இதுபோன்று இருக்கிறார்கள் என்றால், முற்காலத்தில் கூட யாரும் தோன்றவில்லை. எத்தனையோ சித்தர்கள், யோகிகள், மகான்கள், மகாத்மாக்கள், ரிஷிகள், வெங்காயங்கள் எல்லாம் தோன்றி இருக்கின்றனர். அவர்கள் அத்தனை பேரும் ஜாதியைப் பற்றிய கொடுமையை உணர்ந்து கண்டிக்கவே இல்லை.

புத்தரும் வள்ளுவரும் தோன்றினார்கள் என்றால், அவர்களின் கொள்கைகள் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் போய்விட்டன. வள்ளுவர் என்பவரும் புத்தர் என்பவரும் நம் நாட்டில் இருந்ததாகவே தெரியாதபடி அழித்துவிட்டனர். இப்படி அவர்களைத் தவிர வேறு யாரும் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதற்கே புராணங்களை ஏற்படுத்தினார். மதத்துக்கும், ஜாதிக்கும் புறம்பாக நடந்தால் கடவுள் அவதாரம் எடுத்துக் கொன்று விடுவார் என்ற பயம் காட்டுவதற்குக் கடவுள் அவதாரம் எடுத்ததாகக் கட்டுக் கதைகள் எழுதினார்கள். இராமாயணமும் அப்படித்தான். இராமாயணத்தில் புத்த தர்மத்தைக் கடைப்பிடித்த புத்தபிட்சுக்களைக் கண்டிக்க வேண்டும், துரத்த வேண்டும், அழிக்க வேண்டும் என்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. எனவே இராமாயணமும் புத்தரின் காலத்திற்குப் பிறகு எழுதப்பட்ட கதை என்பதுடன் இனி புத்தரைப் போன்று வேறு யாரும் பேசக்கூடாது என்பதற்காகவே இராமாயணம் எழுதப்பட்டது என்றும் கூறலாம். இப்படி ஓரிருவர் தோன்றி பார்ப்பனப் புரட்டுகளை வெளிப்படுத்தி இருந்தாலும் அவர்கள் எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டனர்.
இன்னமும் முற்காலத்தில் மூவேந்தர்கள் என்பவர்களும் மற்றும் பல பிரக்கியாதி பெற்ற வீரர்களும், சூரர்களும், அயல் நாடுகளில் சென்று கூட வெற்றி கொண்ட தமிழ் மன்னர்களும், இமயம் கண்ட வீர அரசர்களும் இருந்ததாகச் சரித்திரத்தின் மூலம் காணுகிறோமே அப்படிப்பட்ட அரசர்களின் புத்தியும் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டதாகத்தான் இருந்திருக்கிறது.
இன்றைக்குள்ள கோயில்களும், மடாலயங்களும் அந்த மூடர்கள் கட்டியவைதான். அவர்களும் பார்ப்பனர்கள் வலையில் சிக்கி இருக்கிறார்கள். எப்படிப்பட்ட வீரனாகவோ சூரனாகவோ இருந்திருந்தாலும் அப்படிப்பட்ட மன்னாதி மன்னர்கள் எல்லாம் பார்ப்பனர்களின் மாய்கையில் எப்படியோ சிக்கிச் சீரழிந்து விட்டார்கள்; அந்த மன்னர்கள் காலத்தில் பொருளை வாரி இறைத்து கோவில்களைக் கட்டி இருக்கிறார்கள். கோடிக்கணக்கில் பொருளைச் செலவிட்டு கோவில்களைக் கட்டி அதன் மூலம் பார்ப்பனர்கள் வாழும் வகையைத்தான் அமைத்து விட்டுப் போயினர். இதைப் போன்றே எல்லாரும் பார்ப்பனர்களின் புரட்டை அறிந்து கொள்ளாததும் அன்றி பார்ப்பனர்களுக்குச் சாதகமாகவே எதையும் செய்திருக்கின்றனர்.

இது மட்டுமல்ல - இன்றைக்குள்ள படித்தவர்களும், பட்டம் பெற்றவர்களும் கூட அப்படித்தான் இருக்கின்றனர். முற்காலம் தான் பகுத்தறிவற்ற காட்டுமிராண்டிக் காலம் என்றால், இன்றைக்கு ஆராய்ச்சியும் விஞ்ஞானமும் கண்ட இப்படிப்பட்ட காலத்தில் கூட அறிவிழந்திருத்தல் மிகவும் பரிதாபப்படத்தக்கதாகும். அதுவும் சயின்ஸ் படித்த மேனாட்டுப் படிப்பு படித்தவன் எல்லாம் கூட நம் நாட்டுக் கடவுள்களையும், புராணங்களையும் நம்புகிறேன் என்றால் மிகவும் வெட்கக்கேடானதாகும்.

சுயராஜ்யம் அடைவதற்கென்றும் நாட்டின் விடுதலைக்கென்றும் பாடுபட்ட தலைவர்கள் கூட இதில் கைவைக்க முடியவில்லையே? எங்களைத் தவிர வேறு யாரும் துணிந்து மதத்தையும், புராணத்தையும், கடவுளையும் ஒழிக்க வேண்டும் என்று பேசக்கூட முடியவில்லையே? இதுவரை எங்கள் முயற்சி இல்லையேல் பார்ப்பனர்கள் நம் நெற்றியில் சூத்திரர்கள் என்று சட்டம் கூட இயற்றியிருப்பார்கள்
. நாட்டு மக்களுக்கும், நாட்டு விடுதலைக்கும் பாடுபட்ட காந்தியார் கூட ஜாதி ஒழியவேண்டும் என்று கூறவில்லை. காந்தியும் சாதாரண ஆசாமிதானே? உள்ள ஒரு ஆள் "மகாத்மாவாக" ஆனார் என்றால் காரணம் வேண்டும் அல்லவா? மகாத்மா என்ற பட்டம் கொடுத்தவர்கள் அவருக்கு சும்மா கொடுத்துவிடவில்லை. அது மட்டுமல்ல; அவருடைய மூத்திரம் பன்னீர் வாசனை அடிக்கும். அவருடைய மலம் ஜவ்வாது வாசனை வீசும் என்றெல்லாம் போற்றிப் புகழ்ந்தார்கள். காந்தி படம் இல்லாத பார்ப்பான் வீடே கிடையாது.

ஏனெனில் காந்தியார் பாடுபட்டது "ராமராஜ்யம்" அமைக்க வேண்டும் என்பதற்கே ஆகும். விஷ்ணு ராமன் அவதாரம் எடுத்தது ஜாதியைக் காப்பாற்ற என்று எழுதியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வர்ணாசிரம ஆட்சியை நிலைநாட்டத்தான் காந்தியும் பாடுபட்டார். ஆதலால்தான் அவர் மகாத்மாவானார்.

ஆனால், எப்படியோ ஒரு சமயம் அவரும் பார்ப்பனர்களின் அயோக்கியத்தனத்தை உணர்ந்து கொண்டார். பார்ப்பனர்கள் செய்யும் கொடுமையை வாய்விட்டுக் கூறவும் துணிந்தார். அதுவரை சும்மா இருந்ததும் அன்றி அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடினர். விஷ்ணு மறுஅவதாரம் எடுத்து வந்திருக்கிறார் என்று கூடக் கூறினர்.

இப்படியெல்லாம் புகழ்ந்துவிட்டு அவர் ஜாதியில் கைவைக்க ஆரம்பித்தவுடன் இனிமேல் விட்டு வைத்தால் ஆபத்து என்று கருதி ஒரு பார்ப்பானே அவரைச் சுட்டுக் கொன்றான்!

நம் மக்கள் ஒரு சில பார்ப்பனர்கள் மட்டுமே திட்டம் செய்து கொன்றனர் என்று கருதலாம். ஆனால் அந்த விஷயத்தை வெளியே தெரியாதபடி அப்படியே மறைத்து விட்டனர். காந்தியைக் கொல்லத் திட்டம் போட்டவர்கள் இந்நாட்டிலுள்ள பார்ப்பனர்கள் அத்துனை பேரும்தான்!

காந்தி அன்றைய தினம் சுட்டுக் கொல்லப்படப் போகிறார் என்ற செய்தி முன் கூட்டியே இந்த ஊரில் (அரிமளம்) இருந்த பார்ப்பனர்களுக்குச் கூட தெரிந்திருக்கிறது. அன்று இத்தனை மணிக்கு சுடப்படுவார் என்று முன்கூட்டியே திட்டத்தின் மீது அறிந்திருந்த இங்கிருந்த பார்ப்பனர் அத்தனை பேரும் சரியாக சுடப்படும் அந்த நேரத்தில் மிட்டாய் வழங்கினார்கள்! அது மட்டுமல்ல, பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் என்ற பார்ப்பனர்கள் எல்லாம் அதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள்! காந்திக்கு உற்ற நண்பர்களைப் போல் இருந்த பெரிய பணக்காரர்கள் முதற்கொண்டு அரசியல் தியாகிகள், தேச பக்தர்கள் முதற்கொண்டு திட்டம் போட்டுச் செய்த காரியம்தான். அப்படி இருந்தும் ஒரு சிலர் மட்டும்தான் தண்டிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்கள். அவர்கள் மட்டும்தான் அப்பாவி மனிதர்கள்.

ஆனால், உண்மையில் தண்டனை கொடுத்திருக்க வேண்டுமானால் இந்நாட்டுப் பார்ப்பனர்கள் அத்தனை பேரையும் தூக்கிலிட்டிருக்க வேண்டும். அப்படி பார்ப்பனர்களில் ஒரு குஞ்சு கூட தவறாமல் அத்தனையும் சேர்த்துதான் காந்தியின் உயிருக்கு உலை வைத்தன. இன்னமும் கூறவேண்டுமானால் அவருக்கு நல்ல பிள்ளைகள் போல் நடந்து கொண்டு அவருடன் உறவாடிக் கொண்டிருந்த வடநாட்டு பெரும் தனக்காரர்கள், அரசியல் தலைவர்கள் பார்ப்பனர் கூட்டத்தில் கலந்து சேர்ந்து செய்த தீர்மானமேயாகும். எனவே, அப்படி இருந்தும் அப்பேர்ப்பட்ட மலையைப் போன்ற சதித் திட்டம் வெளியே வராமல் காற்றில் பறந்து போய்விட்டது. இன்றைக்குக் காந்தியைச் சுட்டுக் கொன்றவன் ஒரு பார்ப்பனன் தான் என்பதை யார் கூறுகிறார்கள்.

காந்தியாருக்கு நினைவுச் சின்னங்களும் ஞாபகார்த்த ஸ்தூபிகளும் கட்டுகிறார்களே தவிர அவரைச் சுட்டுக் கொன்ற பார்ப்பன வம்சத்தை அடியுடன் களைந்தெறிய யார் முற்பட்டார்கள்? எப்படியாவது ஒரு பார்ப்பான் கொன்றான் என்ற செய்தி பரவாமலிருக்க வேண்டுமே என்பதற்காக மேற்பூச்சு வேலை செய்கிறார்கள். காந்தியைச் சுட்டவனின் வர்க்கம் இந்நாட்டில் இருக்க இடம் கொடுக்கலாமா? நாட்டின் விடுதலைக்குப் போராடிய தன்னலம் கருதாத அரும்பெரும் தியாகி காந்தியாரின் உயிரைக் குடித்த ஒருவன் இந்நாட்டில் இருக்க இடம் கொடுக்கலாமா? இன்றைக்கும் காந்தியின் பெயரைக் கூறிக் கொண்டு காங்கிரஸ் என்ற வார்த்தையை ஒலித்துக் கொண்டு அதன் மூலம்தான் வாழுகிறதே அன்றி அதை யார் சிந்திக்க முடிகிறது?

காரணம் அப்படிப்பட்ட தன்மையில் காந்தியின் நிலையை யாரும் கவனிப்பார் அற்றுப் போய்விட்டது. பார்ப்பனர்கள் அவரைக் கொண்டாடியதெல்லாம் வெறும் வாய் ஜாலங்கள் தில்லு முல்லுகள் நிறைந்த பாசாங்கு வித்தைகளேயாகும்.

எப்படியோ நாட்டை வாங்கி பார்ப்பனர்கள் கையில் ஒப்படைத்தார். அதை நிரந்தரமாக தங்கள் கையைவிட்டு நழுவ விடாமல் செய்து கொள்ள வேண்டுமே என்பதற்காகச் செய்த திட்டங்களில் ஒன்றுதான் காந்தியைச் சுடும்படி ஆனது.

இப்படி அவருடைய பக்கத்தில் இருந்து கொண்டே அவரைப் போற்றிப் புகழ்ந்த பார்ப்பனர்களே அவருக்கு வெடி வைத்தவுடன் வேறு யார் அதைக் கவனிக்க முடியும்? கவனிப்பதற்கு ஆள் இல்லாமல் போய்விட்டது. அனுதாபப்படுவதைப் போல பாசாங்கு செய்தனர். அவர் சுடப்பட்டவுடன் பார்ப்பனன் சுட்டுக் கொன்றிருப்பான் என்று யாருமே நினைக்கவில்லை. ஒன்றும் அறியாத முஸ்லிம்களின் தெருக்களில் ஒரு சில காலிகள் சென்று அட்டூழியங்கள் செய்தனர். காரணம் அப்போதிருந்த நிலையில் முஸ்லிம்தான் கொன்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. ஆனால் உண்மையில் முஸ்லீம் கட்டியிருப்பானேயானால் இப்போது பார்ப்பனன் சுட்டதைப் போல நடந்திருக்காது. இந்தப் பார்ப்பனர்களே இன்னமும் பறைசாற்றிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால், பார்ப்பனன் கொன்ற காரணத்தால் அதைக் கவனிக்க ஆளே இல்லாமல் போய்விட்டது. அப்பேர்ப்பட்ட காந்தியார் கேட்பதற்கு நாதியற்ற நிலையில் உயிர் விட்டார். யாருமே லட்சியம் செய்யாமல் செய்து விட்டனர். ஏதோ பொதுமக்கள் கேள்வி கேட்பார்களே என்பதற்காக வீண் கண் துடைப்புக்காகிலும் வழக்கு நடத்தினார்கள்.

அந்த வழக்கு நடத்தும் போது கூட எவ்வளவு அயோக்கியத்தனங்கள் நடந்தன என்பதை பொது மக்கள் அறியமாட்டார்கள். எல்லாத் தலைவர்களும் பயந்து கொண்டேதான் இருந்தார்கள். எங்கே நமது விஷயம் வெளிப்பட்டு விடுமோ என்று வடநாட்டு மார்வாரி பணக்காரர்களும், இன்றைக்குள்ள அரசியல் தலைவர்களும் பயந்து கொண்டுதான் இருந்தார்கள். ஆனால், தந்திரமாக மறைத்துவிட்டார்கள். அதன் சம்பந்தப்பட்ட தஸ்தாவேஜிகளை ரயிலில் கொண்டு வருகையில் யாரோ ஒரு திருடன் அவற்றை எடுத்துப் போய்விட்டானாம். உடனே கேட்டதற்கு நான் என்ன செய்வேன் திருடன் தூக்கிக் கொண்டு போய்விட்டான் என்று சொல்லிவிட்டானாம். உண்மையில் அவை திருடனால் கொண்டு போகப்படவில்லை. அவற்றை மட்டும் அலசி ஆராய்ந்து பார்த்திருப்பார்களானால் எல்லா பேர்வழிகளும் அகப்பட்டிருப்பார்கள். இன்றைக்குப் பெரிய தியாகி, தேசபக்தன், அரசாங்கத் தலைவன் என்றெல்லாம் பெருமை அடித்துக் கொள்ளும் அத்தனை பேர்களின் அயோக்கியத்தனமும் அன்றைக்கு வெளிப்பட்டிருக்கும். சுருங்கக் கூறினால் பல்லாயிரக்கணக்கான காங்கிரஸ்காரர்கள் அதுவும் காந்தியின் சமீபத்திலேயே இருந்து நல்ல பிள்ளையாக நடந்து கொண்ட அத்தனை பேர்களும் அன்றைக்குக் கூண்டுடன் தூக்கிலிடப்பட்டிருப்பார்கள்.

ஆனால், அவ்வளவு அக்கறையுடன் அந்த வழக்கை நடத்துவதற்கு யாரும் பொறுப்பு கொண்டவர்கள் இல்லாமல் நேராக அகப்பட்டுக் கொண்ட ஒரு சிலர் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டார்கள். இப்படி காந்தியாரின் நிலை கவனிப்பாரற்ற அனாதை போல் ஆகிவிட்டது.


ஆனால், இன்றைக்கு என்னுடைய பிரசாரத்தைக் கண்டு பார்ப்பனர்கள் எல்லாம் ஆத்திரம் அடைகிறார்கள். என்றைக்கு நான் இறந்து போவேன் அன்றைய தினத்தை தீபாவளி போல கொண்டாடலாமே என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என்னுடைய மனதில் மட்டும் உறுதியான நம்பிக்கை ஒன்று உண்டு. என்றைக்காவது என்னுடைய முடிவு ஒரு பார்ப்பனன் அல்லது பார்ப்பனன் அடிமை ஒருவனால்தான் முடியும் என்பது தெரியும். பார்ப்பான் இல்லாவிட்டாலும், பார்ப்பனத் தெருவில் பொறுக்கித் தின்னும் எவனாவது முற்படுவான் என்பது தெரியும். ஆனால் அப்படி நேருமானால் நான் காந்தியின் நிலையை அடைய மாட்டேன். காந்தியைப் போல அனாதையாக செத்துப் போக மாட்டேன்.கொலை செய்யப்பட்டவுடன் கேட்பாரற்ற பிணமாக ஆகமாட்டேன்.

என்னுடைய முடிவு ஒரு நல்ல காரியத்தைச் செய்தே தீரும். என்னுடைய உயிர் போனால் அந்த நிமிடத்திலேயே நம் மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். நான் இறந்து பிணமாகும் அந்த வினாடியிலேயே ஆயிரக்கணக்கான பார்ப்பனப் பிணங்கள் அங்கங்கே சுடுகாட்டுக்கு இழுத்துச் செல்லப்படும். என்னுடைய பிணத்தைத் தொடர்ந்து எண்ணிறந்த பார்ப்பனப் பிணங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூற முடியும்.

ஏனெனில் அவ்விதம் என் மீது பற்றுக் கொண்ட தன்மான வீரர்கள் மலிந்து விட்டார்கள். பார்ப்பனச் சேரிகளுக்கு இறுதிக் காலம் வரும் வழியை நான் வகுத்துக் கொடுக்கும் அந்த நேரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் எண்ணிறந்த தமிழர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


ஆனால், என்னுடைய கிளர்ச்சியோ, போராட்டமோ சாந்தமான முறையில் நடைபெற வேண்டும் யாருக்கும் துன்பம் இன்றி பிறருக்கு இன்னல் இன்றி பொருள் நஷ்டமின்றி உயிர் நஷ்டமின்றி நடைபெற வேண்டும் என்ற குறிக்கோள்களின் மீதே இதுவரை செய்து வந்திருக்கிறேன். இனியும் அப்படிப்பட்ட கிளர்ச்சிகள் நடத்துவதையே விரும்புகிறேன். ஆனால் தீராத முடிவுக்கு எல்லை இல்லை என்பதையும், அப்படிப்பட்ட நிலை வந்தால் சமாளிக்க வேண்டும் என்ற மன தைரியத்தையும் கொண்டுதான் இருக்கிறேன்.

----------------------------------- 23.01.1956-இல் புதுக்கோட்டை - அரிமளம் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. ”விடுதலை”05.02.1956




5 comments:

தமிழ் ஓவியா said...


நாத்திகன்


நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...


விருத்தாசலம் மாநாட்டுத் தீர்மானங்கள்


விருத்தாசலத்தில் கடந்த 28.9.2013 சனியன்று நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் மாணவர் கழக மாநாடு, பல வகைகளிலும் சிறப்பு நிலையைப் பெற்றது. குறிப்பாக அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் முத்தாய்ப்பானவைகளே.

முதல் தீர்மானம், பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதாகும். தமிழ் மொழியில் ஊடுருவிய ஆரியப் பார்ப்பனர்களின் சமஸ்கிருதம் தமிழைப் பல கூறுகளாக்கி மணிப்பிரவாள நடையையும் உருவாக்கியது.

தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், துளுவும் ஆரிய மொழியின் ஊடுருவலால் தனித்தனி மொழி எனும் தோற்றத்திற்கு ஆளாகி விட்டன.

தமிழ்நாட்டு மக்களின் பெயர்களும், ஊர்களும் சமஸ்கிருதமயமாயின. புளியந்தோப்பு, திண்டிவனம் ஆனதும், குடமூக்கு கும்பகோணம் ஆனதும், திருமரைக்காடு வேதாரண்யம் ஆனதும், திருமுது குன்றம், விருத்தாசலம் ஆனதும் ஆரிய சமஸ்கிருத ஊடுருவலின் அடையாளங்களாகும்.

விருத்தாசலத்தை, திருமுதுகுன்றம் என்று மீண்டும் மாற்ற வேண்டும் என்பதற்குத் திராவிடர் கழகம் உள்பட பல அமைப்புகளும், முயற்சிகளை மேற்கொண்டதுண்டு. ஆனாலும், வலுவாக இருக் கும் ஆரிய நிருவாகம் - ஆட்சி முறை - பெரும் இடையூறாக உள்ளது.

மயிலாடுதுறையை மீட்டதுபோல திருமுதுகுன்றத் தையும் மீட்க வேண்டும் - மாநாட்டின் முதல் தீர்மானம், இந்த வகையைச் சேர்ந்ததாகும்.

தந்தை பெரியார் தமது தலைமையிடமாகக் கொண்ட திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது இரண்டாவது தீர்மான மாகும்.

திமுக தலைவர், கலைஞரும் இதற்குத் தம் ஆதரவைத் தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான எழுச்சித் தமிழர் தொல். திருமா வளவன் அவர்களும், இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதாகத் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட வில்லையா? அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப் பையும் செய்தால் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.

மூன்றாவது தீர்மானம் - தந்தை பெரியார் இறுதியாகக் களம் அமைந்த - அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியதாகும்.

ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு என்பது பகுத் தறிவும், மனித உரிமை ஆர்வமும் கொண்டவர்களின் மகத்தான கோட்பாடாகும். இன்றைக்கு அது அதிகார பூர்வமாக நிலை கொண்டு இருப்பது கோயில் கருவ றைகளில்தான். பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் யாரும் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியாது. காரணம் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் சூத்திரர்கள்; - சூத்திரர்கள் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று ஆகமங்கள் சொல்லுவதாக உச்சநீதிமன் றத்தில் எடுத்துக் கூறி தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான சட்டத்தை முடக்கி விட்டனர். இது 2013 ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்களின் ஜாதி ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துவதாகும்.

திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையை முன்னி றுத்தித் தன் பணிகளைத் தொடர இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு ஒட்டு மொத்தமாக, தமிழர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இதன் வெற்றியை சுவைக்க அனைவரின் ஒத்துழைப்பையும், திராவிடர் கழகம் கோருகிறது.

நான்காவது தீர்மானம், ஈழத் தமிழர் பிரச் சினையைப் பற்றியதாகும். தமிழர்களின் தொப்புள் கொடி உறவினராகிய ஈழ மக்கள் எல்லா உரிமை களையும் இழந்து நிற்கின்றனர். அவர்களின் அடிப்படை வாழ்வுரிமைக்காகத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றனர். (இதில் அரசியலைப் புகுத்தும் கேவலமும் குடி கொண்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை).

இந்திய அரசு போதிய ஒத்துழைப்பைக் கொடுக் குமேயானால் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வைப் பெறுவார்கள்.

கச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, தமிழக மீனவர்கள் அந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை இழந்து தவிக்கிறார்கள். இலங்கைக் கடற்படையால் தினமும் பெரும் துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டும் வருகின் றனர்.
கச்சத் தீவை மீட்க வேண்டும் - அதுவே நிரந்தரத் தீர்வு என்பதை விருத்தாசலம் மாநாடு தெளிவு படுத்தியுள்ளது - தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் இதிலும் வெற்றியை ஈட்ட முடியும் என்று திராவிடர் கழகம் உறுதியாக நம்புகிறது - தமிழர்கள் ஒன்று சேர்வார்களாக!

தமிழ் ஓவியா said...


தெலுங்கானாவிலும் பெரியார் விழா


வெளியூர் 27.9.2013 விடுதலை இதழ் கடைசி பக்கத்தில் தெலுங்கானா - ஆந்திரா நாத்திக சமாஜத்தினர் வெளி யிட்டுள்ள தெலுங்கு சுவரொட்டியைப் பார்த்து பூரித்துப்போனேன். 65 ஆண்டு கட்கும் மேலாக திராவிட இனப்பற்றுடன் செயல்படும் எனக்குத் தெலுங்கு படிக்கத் தெரியும் என்பதால் பிரஜா நாஸ்திக சமாஜம்
மதம் அன்டேனே மாண யாகம்
மூடநம் மகாளு விடுச்சி - முந்தடுகு வேயண்டி

என்ற வேண்டுகோள் மட்டுமல்ல, நமது திராவிடர் கழகக் கொடியையும், மய்யத்தில் அய்யா படத்துடன் பெரியார் என்றும் தெலுங்கில் எழுதியிருப்பதானது திராவிட இன உணர்வு ஆந்திர - கர் நாடக - கேரள மாநிலங்களிலும் ஓசைப் படாமல் வளர்ந்து வருவதை அடிக்கடி விடுதலை செய்தியாக அறிந்து மகிழ்ந் தேன். தமிழர் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்கள் திராவிடர் தலைவராக வளர்கிறார்.

- வேலை.பொற்கோவன், வேலம்பட்டி

தமிழ் ஓவியா said...

வினை விதைத்த விநாயகன்

விநாயகர் சதுர்த்தி விழா ஒற்றுமை யாக இருந்த கிராம மக்களை இரண் டாக்கியது. வேலூர் மாவட்டம், திருப்பத் தூர் வட்டம், பொம்மிகுப்பம், பழத்தோட்டம் கிராமத்திலும், கிராமத்திலுள்ள இளைஞர் ஒன்று சேர்ந்து தங்களின் பொருளாதார வசதிக்கேற்ற விநாயகர் சிலையை வைத் தார்கள். வழக்கம்போல மின்விளக்கு, ஒலி பெருக்கி வைக்க, மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பைப் எடுத்துக் கொண் டார்கள். மின்சார வாரிய ஊழி யருக்கு சொல்ல வேண்டியவர் முன் கூட்டியே சொல்ல வில்லை. மின் ஊழியர் வந்து பார்த்து விட்டு ரூ. 2000/- அபராதம் விதிப்பேன் என்று மிரட்டினார். கையூட்டு கொடுத் ததும் அமைதியாகப் போனார். ஏன் முன் கூட்டியே தகவல் சொல்ல வில்லை என்ற தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் நவீன், திருப்பதி, சிலம்பரசன், சந்துரு ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இரத்தகாயம் ஏற்பட்டது. சாமியப்பாரு எல்லாம் இந்த விநாயகனால் வந்த தொல்லை தானே, என்று கூறி சந்துரு விநாயகனின் கை கால்களை மயில் வாகனத்தை உடைத் தெறிந்தார்.

பின்னர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்கள். பின்னர் ஊர் பஞ்சாயத்து கூடியது அவரவர் அடித்த தற்கேற்ப ரூ. 8000/- வரைக்கும் அபராதம் விதித்தார்கள். ஒற்றுமையாக இருந்த கிராமமக்கள் விநாயகனால் இரண்டாகப் பிளவுப்பட்டார்கள்.

- இளங்குமரன், திருப்பத்தூர்

தமிழ் ஓவியா said...



இதுதான் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியா? பூனைக்குட்டி வெளியில் வந்தது!


விருத்தாசலத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது காலிகள் திட்டமிட்டுத் தாக்கியது கண்டு உலகத் தமிழர்கள் பதறுகிறார்கள்! தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கண்டன அறிக் கைகளை வெளியிட்டுள்ளார்கள்.

தமிழர் தலைவரை நேரில் சந்தித்தும் கவலை தெரிவித்த வண்ணம் உள் ளனர். தக்க பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பயணம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். உங்கள் உயிர் எங்களுக்கு உரியது. தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும், ஏன், உலகம் முழுவதும் உள்ள மனித நேயர்களுக்கும், பகுத்தறிவாளர் களுக்கும், சமத்துவவாதிகளுக்கும் உரியது என்று கண்ணீர்மல்க தங் களின் உணர்வுகளை வெளிப்படுத் திக் கொண்டுள்ளனர்.

ஏடுகள் விருத்தாசலத்தில் நடந்த தாக்குதல் குறித்து படத்துடன் வெளியிட்டுள்ளன. முறைப்படி காவல் துறைக்கும் புகார் கொடுக்கப்பட் டுள்ளது.

இவ்வளவு நடந்திருந்தும், எதுவுமே நடக்காததுபோல காவல்துறையும், அதற்குச் சைகை காட்டும் அரசும் பழிப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

தாக்குதல் தொடுத்தவர்கள் யார் என்பது மிக வெளிப்படையாக தெரிந் திருந்தும், ஏடுகள் படம் பிடித்துக் காட் டிய பிறகும், காவல்துறை தூங்குவது ஏன்? நடவடிக்கை எடுக்காதது ஏன்?

தாக்குதல் தொடுக்கப்பட்ட இடத் தில் பத்திரிகையாளர்கள் வந்தது எப்படி? தொலைக்காட்சி ஒளிப்பதி வாளர்கள் தயாராகக் காத்துக் கொண்டிருந்தது எப்படி?

ஆக, வன்முறை திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவ்வளவும் நடந்ததற்குப் பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை - விழித்துக் கொள்ள வில்லை என்றால், இந்தத் தாக்குதல் காவல்துறைக்குத் தெரிந்துதான் நடந்திருக்கிறது என்ற முடிவுக்குத் தானே வரவேண்டியுள்ளது.

வேறு ஒரு கட்சியின் தலைவருக்கு இதுபோல தாக்குதல் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? மாநாட்டில் கூடியிருந்த உணர்ச்சிமிகுந்த மக்கள் வெள்ளத்தின்முன் தலைவர் வீரமணி அவர்கள் கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால், என்ன நடந்திருக் கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

பொறுமையுடனும், சகிப்புத் தன் மையுடனும் பொதுவாழ்வில் கடைபிடிக் கப்பட வேண்டிய, வன்முறைக்கு அப்பாற்பட்ட நன்முறையும், ஒரு தலை வரால், அமைப்பால் கடைப்பிடிக்கப் பட்டால், அவர்களுக்குக் கோழைகள் என்று அ.இ.அ.தி.மு.க. அரசு முத்திரை குத்துகிறதா?

தமிழ்நாட்டில் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் என்பவை அன்றாடம் நடைபெறும் வழமையான செயல்களாக ஆகிவிட்டனவே - நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கு தல்கள் நடந்திருக்கின்றனவே!

தலைவர்கள் தாக்கப்படுதலும், அந்தப் பட்டியலில் இடம் பெற்று விட்டதோ இந்த ஆட்சியில்!

1.10.2013 நாளிட்ட ஆளும் கட்சி யின் அதிகாரப்பூர்வமான நாளேட்டில், (பக்கம் 4) நெத்தியடி எனும் தலைப் பின்கீழ் ஜனநாயகத்திலும் - கருத் துச் சுதந்திரத்திலும் நம்பிக்கை உள் ளோர் அனைவரும் கண்டிக்கனும்...! என்று தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையைக் கிண்டல் செய்து எழுதியுள்ளது.

விருத்தாசலத்திற்குப் போன கி.வீரமணி மீது நாலு பேருதாக்குதல் நடத்த எத்தனித்ததற்காக இப்படி எம்பிக் குதிக்கிறீர்களே! என்று வித்தாரமாக எழுதுகிறது ஆளும் கட்சி ஏடு. நாலு பேர் தாக்குதல் நடத் தினார்கள் என்பதை அ.இ.அ.தி.மு.க. ஏடு ஒப்புக் கொண்டுள்ளதே அந்த நாலு பேர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே கேள்வி.

எதிலும் அரசியல்தானா? ஒரு தலைவர் தாக்கப்பட்டதற்கு அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கண்டனம் தெரிவிக்கிறார் என்றால், அதன் அடிப்படையில் விசா ரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்தால், அதற்குப் பெயர்தான் மக்கள் நல அரசாகும் (Welfare State).

அதற்கு மாறாக வன்முறையை ஏவியவர்களுக்காக ஆளும் கட்சியின் நாளேடு வக்காலத்து வாங்கி எழுது கிறது என்றால், இதற்குப் பெயர் என்ன?

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எங்குப் பயணம் செய்தாலும், தாக்குதலை மேற்கொள் ளுங்கள் - அ.இ.அ.தி.மு.க. அரசு அதனைக் கண்டுகொள்ளாது என்று ஆளும் கட்சி ஏடு சமிக்ஞை செய்வ தாகத்தானே பொருள்?

காவல்துறை இதுவரை நட வடிக்கை எடுக்காததற்கான பின் னணி இப்பொழுது வெட்ட வெளிச் சமாகிவிட்டது! - பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே!

தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி என்பதை உணர்ந்து அவர வர்களும் தங்களுக்குத் தாங்களே பாதுகாப்புக்கு உரியதைச் செய்து கொண்டாக வேண்டும் என்று சொல் லாமல் சொல்லிவிட்டது ஆளும் கட்சி ஏடு.

அ.தி.மு.க. ஆட்சி பற்றி தமிழ் நாட்டு மக்கள் நிலைமையைத் தெரிந்து கொள்வார்களாக! தமிழ் நாட்டுத் தலைவர்களும் இது குறித்து உரத்த முறையில் சிந்திப்பார்களாக!

- கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்

3.10.2013
சென்னை