Search This Blog

23.10.13

இறுதிப் போராட்டத்திற்கு அழைப்பு - பெரியார்

தோழர்களே,

நாம் இதுபோது மிக்க நெருக்கடியான நிலையில் பரிதபிக்கத்தக்க விதமாய் இருக்கிறோம். நாம் இன்று நாடு முழுவதும் மிக்க உற்சாகத்தோடு நடைபெறும் தேர்தல் காரியங்களில் அடியோடு விலகி நிற்க வேண் டியவர்களாக இருக்கிறோம்.

இதைப் பல அரசியல்வாதிகள் நாம் அரசியல் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லுகிறார்கள். உண்மையாய் இருந்தாலும் இருக்கலாம்.

அரசியலை வெறுத்து இப்படி இருக்கவில்லை. இன்றைய நம் தகுதிக்கு, நிலைக்கு இதுதான் சாத்யமானதும் ஏற்றதுமானது மான காரியமாகும். நாம் கட்டுப்பாடற்றதும் நாட்டுணர்ச்சி, இன உணர்ச்சி அற்றதுமான ஒரு சமுதாய மாக ஆக்கப்பட்டு விட்டோம். தேர்தலுக்கு நின்றால் என்ன செய்வது? வெற்றி பெறுவோமா? தேர்தல் செலவுக்கு நம்மிடம் பணமிருக்கிறதா? இருக்கிறவர்கள் முன் வருகிறார்களா? அவர்கள் நம்பத்தக்கவர்களா? இவை ஒருபுறம் இருக்கட்டும்.

இன்றைய தேர்தல் ஜனநாயகமானதாக இருக்கிறதா? நாம் 100க்கு 90 பேர்களாய் இருக்கிறோம். நம்மவர்களில் 100க்கு 10 பேருக்குத் தான் ஓட்டு. அந்த 10பேர்களும் மீதி 80 பேர்களுக்குப் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதி அற்றவர் கள் என்பது மாத்திரமல்லாமல் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதுகூடத் தெரியாதவர்கள். பெரிதும் தங்கள் சுயநலத்துக்கு எதையும் செய்யத் தயாராய் இருந்து கொண்டு அரசியல் வாழ்வில் புகுந்தவர்கள் - புகுகிறவர்கள்.
இன்று நம்மவர்கள் என்பவர்களில் அரசியலில் புகுந்த மக்களில் 100க்கு 75பேர் எதிரிகளுக்குக் கூலியானவர்கள். மீதி 25 பேர்களில் 20 பேர்கள் தங்கள் நலனுக்கு ஆக மற்றவர்களைக் காட்டிக் கொடுத்து, அந்தக் காட்டிக் கொடுக்கும் தன்மையை படிக்கட்டாக வைத்து மேலேறி பட்டம், பதவி, பணம் தேடிக் கொண்டவர்கள். இந்த நிலையில் நாம் தேர்தலுக்கு நிற்காதது தற்கொலை என்று சொல்லப்பட்டாலும் சரி, அதைப் புத்திசாலித்தனமான தற்கொலை என்றாவது சொல்லுவேன்.

அன்றியும், நமது சர்க்கார் நடந்து கொண்ட மாதிரியானது யோக்கியனுக்கும், உண்மையான தன்மையில் மக்கள் நலம் கோருபவருக்கும் தேர்தலில் இடமில்லாத படியாக நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இந்தச் சர்க்காரார் யோக்கியர்களை மதிப்பது மில்லை. அன்றியும் சர்க்காரார் நாணயம், நீதி, பொதுஜன அமைதி, சமாதானம் ஆகியவைகளைக் காப்பதில் மிக்க அலட்சியம் காட்டி நாட்டில் நாணயக் கேடும் காலித்தனமும் வளரும்படி விட்டுவிட்டார்கள்.

இன்று இந்தியா கண்டம் முழுவதும், நமது நாடு முழுவதும் பித்தலாட்டமும், காலித்தனமும் தாண்டவ மாடுகின்றன. கவர்னர்கள் கவலையற்ற சுகவாசிகளாக இருக்கிறார்கள். வைசிராய் அனுபவமற்றவரும் நிருவாகத் திறமை அற்றவருமாக இருக்கிறார். ஓலைக்குடிசைகளில் தீப்பற்றிக் கொண்டு பரவுவது போல் காலித்தனங்கள் வளர்ந்து நாடு முற்றும் பரவிக் கொண்டு இருப்பதைத் தடுக்க, பரவவொட்டாமல் செய்யப் பயனளிக்கும்படியான முயற்சி சர்க்காரால் செய்யப்படவே இல்லை. நம் எதிரிகள், காலிகள் இந்த நிலையை மிகுதியும் பயன்படுத்தி நலன்பெற்று வருகிறார்கள்.

இந்த தன்மைக்கோ அல்லது இதைச் சமாளிக்கும் தன்மைக்கோ நாம் நம்மை இன்னும் தகுதி ஆக்கிக் கொள்ளவில்லை. ஆதலாலும் தேர்தலில் நாம் விலகி இருப்பது தவிர இன்று நமக்கு வேறு வகை இல்லை.

நாட்டில் 4 வருடங்களுக்கு முன் நடந்த நாச வேலைகளான தண்டவாளம் பெயர்த்தல், தந்தி அறுத்தல், கட்டடங்கள் கொளுத்தல், அதிகாரிகளைக் கொல்லுதல் ஆகிய காரியங்களிலும், சர்க்கார் யுத்த முயற்சிக்கு ஆகச் செய்யப்பட்ட காரியங்களை எதிர்த்து ஒரு கூட்டத்தார் தடை செய்த காரியங்களிலும் நாம் கலவாமல் இருந்ததும், அக்காரியங்களை எதிர்த்ததும் இன்று நமக்குத் தேர்தலில் நிற்க யோக்கியதைக் குறைவாகி விட்டதுடன், அம்மாதிரி கெட்ட காரியம் செய்தவர்களுடன் குலாவ வேண்டிய தாழ்ந்த நிலை சர்க்காரிடம் ஏற்பட்டுவிட்டதாலும், (ஓட்டர்களால்) அப்படிப்பட்டவர்களே விரும்பப்படு கிறார்கள். சர்க்காரின் இந்தத் தன்மையை நாம் வெறுக்கிறோம் என்பதற்கு ஆகவே முக்கியமாய்த் தேர்தலில் விலகி இருக்க வேண்டியவர்களாகிறோம்.

ஆகையால், நாம் தேர்தலில் விலகி இருப்பது குறித்து வருந்த வேண்டியதில்லை. எதிரிகள் பதவிக்கு வரட்டும், அவர்களைக் கொண்டு இந்தச் சர்க்கார் தங்கள் நலத்தை பெருக்கிக் கொள்ளட்டும் நமக்குக் கவலையில்லை. ஆனால் நாம் இம்மாதிரி அலட்சியப் படுத்தப்படவும், புறக்கணிக்கப்படவும், ஏமாற்றப்படவும் தகுதி உடையவர்களாகவே நாம் வாழ்நாள் முழுவதும் இருப்பதா அல்லது நாம் ஒரு கட்டுப்பாடான மான வுணர்ச்சி உள்ளவர்களான, துணிவும், வீரமும், உயிரையும் கொடுத்து நம் உரிமையைப் பெறும்படியான ஒரு மனித சமுதாயமாக ஆகி நம் எதிரிகள் செய்ததை எல்லாம் நாமும் செய்யக்கூடியவர்கள் என்பதாக ஆகி நம் நாட்டை நாம் அடைந்து மனிதத் தன்மை பெறுவதா என்பதுதான் இன்றைய நமது பிரச்சனையாகும். இதை அடைய நம்மைத் தகுதியுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவும் நாம் இன்று வீண் வேலையில் ஈடுபடாமல் மக்களைத் தயாராக்கும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறோம்.

தோழர்களே! முதலாவதாக நாம் ஒரு கட்டுப்பாட்டுக் குள் அடங்கியவர்களாக ஆகாமல் நம்மால் ஒரு காரியமுமாகாது. நமக்குப் புத்தி, பணம், சக்தி இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. சர்.ராமசாமி, சர்.சண்முகம் போன்ற டஜன் கணக்கான சர்கள், நாட்டுக்கோட்டை யார்கள், மில் முதலாளிகள், ஆயிரக்கணக்கான வேலி நிலம் கொண்ட நூற்றுக்கணக்கான மிராசுதார்கள், இராஜாக்கள், ஜமீன்தாரர்கள் ஆன கோடீவரர்கள் இல்லையா? மற்றும் நினைத்தால் தண்டவாளம் பெயர்க்க, கட்டடம் இடிக்க, கடையை மூட, பள்ளியை மறியல் செய்யச் சக்தி உள்ள நாசவேலை வீர ஆண்கள் இல்லையா? எதிரிகளுக்கு ஆதரவளித்து, அன்னக்காவடிகளையும் ஆட்சி பீடத்தில் அமர்த்தி தலைவர்களாக்கி நம்மை அடக்க கைதூக்கும் 5ஆம் படை இல்லையா? என்ன இல்லை நம்மிடம்? ஆனால் மானம், இன உணர்ச்சி, நாட்டுவுணர்ச்சி நம் சமுதாய இழிவைக் கண்டு வெட்கப்படும் தன்மை, பொது நலத்துக்கு ஆகச் சிறிதாவது தன்னலம் விட்டுப் பாடுபட வேண்டும் என்கின்ற மனிதத் தன்மை ஆகியவை இல்லை என்பது தான் நமக்கு பெருங்குறையாக இருக்கிறது.

இந்தக் குறை நமக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நமது மதம், நமது உயர்தரக் கல்வி நம் பண்டிதத் தன்மை என்பவை ஒருபுறமிருந்தாலும் நமக்குப் பயன்படாதவும் நம் எதிரிகளுக்கு கூலியாக, கையாளாக, ஒற்றர்களாக இருக்கத் துணிந்து, வாழ்க்கை நடத்தவும் துணிந்து நம் பிரதிநிதிகள் என்று வேஷம் போட்டு நம்மை ஏமாற்றும் ஆட்களை நாம் சரிவர வெறுப்பதில்லை. அவர்களைச் சரிவர மக்கள் உணர்ந்து வெறுக்கும்படி நாம் எடுத்துக் காட்டுவது இல்லை, அப்படிப்பட்ட ஆளுக்கொருவர் இடம் அற்ப காரணங்களுக்கு நமது மான உணர்ச்சி உள்ள மக்களும், மாணவர்களும், சலுகை காட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். இது தான் நம் நாட்டில் நம்மவர்களில் இத்தனை கேடானவர்கள், பயனற்றவர்கள் இருந்து கொண்டு நம் சமுதாயத்தின் பேரால் மதிப்பும், பயனும் அடையக் காரணமாகும்.

உதாரணமாகச் சென்ற மாதம் நமது நாட்டுக்கு வந்திருந்த தோழர் காந்தியாரை அவர் நம் எதிரிகளின் கைஆள் என்று யாருக்குத் தெரியாது? அவர் எதற்கு ஆக வந்தார்? என்ன செய்தார்? என்ன சொன்னார்? எவ்வளவு லாபத்தோடு போனார்? என்பதெல்லாம் யாருக்குத் தெரியாத இரகசியம்? சொல்லுங்கள் பார்க்கலாம்.

அவரை அழைத்தவர்கள் பார்ப்பனர்கள்; அவர் இருமருங்கிலும் அர்த்தநாரி போல் ஓட்டிக்கொண்டிருந்த வர்கள் பார்ப்பனர்கள்; அவர் இறக்கப்பட்டது பார்ப்பனக் கோட்டையில்; அவர் உடலை ஒரு பார்ப்பனரிடம் சிகிச்சைக்கு விட்டுவிட்டார்; அவர் புத்தியை ஒரு பார்ப்பனரிடம் நடத்த விட்டுவிட்டார், அவர் பிரசாரம் செய்தது பார்ப்பன (இந்தி) மொழியில்; அவர் வேலை செய்தது பார்ப்பன உயர்வுக்கு ஏற்ற (இராம) பஜனை, அவர் உபதேசித்தது பார்ப்பனப் புராணம்; அவர் காட்சியளித்தது பார்ப்பன பக்த சிகாமணி (மகாத்மா)யாக; அவர் இந்தத் தமிழ்நாட்டில் நாணயமும் சக்தியும், திறமையும், தகுதியும் உடையவராக ஒருவர் இருக்கிறார் என்று எடுத்துக் காட்டியது ஒரு (ஆச்சாரிய) பார்ப்பனரை, அவரைக் கண்டு இரகசியம் பேசி அறிவுறுத்திவிட்டுப் போனவர்கள் யாவரும் பார்ப்பனர்கள்; அவரே (காந்தியாரே) நேராக இரண்டு மூன்று தடவை தேடிப்போய்ப் பேட்டி கண்டு மரியாதை செலுத்திப் பொதுமக்களுக்கும் காந்தியார் மரியாதை பெற்ற பிரம்மாண்டமான பெரிய மனிதர் என்று கருதும் படியான பெருமை கொடுக்கப்பட்டதும் ஒரு பார்ப்பன (ஸ்ரீனிவாச சாதிரியா)ருக்கு, அவர் காரியங்களில் கலந்து கொண்டது அத்தனைபேரும் பார்ப்பனர்கள், அவருக்கு ஆலாத்தி எடுத்து, குங்குமம் வைத்தது பார்ப்பனத்திகள் என்கின்ற இவைகள் யாருக்குத் தெரியாத இரகசியம் என்று கேட்கின்றேன்.

ஆனால் அவர் காலில் விழுந்தவர்கள் அத்தனை பேரும் பார்ப்பனர் அல்லாத தமிழர்கள், அவர் காலைத்தொட்டு கும்பிட்டவர்கள் தமிழர்கள், பஜனையில் கலந்து கொண்டு சொரணை அற்றுச் சொக்கினவர்கள் தமிழர்கள், அவருக்கு மூட்டை மூட்டையாகப் பணம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்றவர்கள் தமிழர்கள்; அதுவும் வெறும் தமிழர்கள் அல்ல, தமிழ் இனம் என்று சொல்லிக் கொள்ளும் நாட்டுக் கோட்டையார்கள், மில் முதலாளிகள், மிராசுதார்கள் ஆகிய தமிழர்கள். நகைகள் கழற்றிக் கொடுத்து விழுந்து கும்பிட்டு நல்வாக்குப் பெற்றவர்கள் இவர் (தமிழர்)களின் மனைவி மக்கள்மார்கள்.

இவ்வளவு மாத்திரமா, கண்ணில் படக்கூடிய தூரத்தில், காதுக்கு எட்டும் தூரத்தில்தான் நான் காத்துக்கிடந்தேன். என்னை ஏன் என்றுகூடச் சட்டை செய்யவில்லை, என் மீது என் எதிரி (பார்ப்பனர்)கள் சுமத்திய குற்றத்தை விசாரிக்கக் கூட என்னைச் சமாதானம் கேட்டுப் பார்க்கக் கூட கருணை காட்டாமல் ஒருதலைப் பட்சமாய் தண்டித்து விட்டாரே என்று அழுதவரும் (தமிழர் தலைவர், தமிழ்நாட்டு ராஷ்டிரபதி) தமிழரே ஆவார். காந்தியாரால் கெட்ட அர்த்தத்தில் படும்படியான (விஷமக்கும்பல் என்ற) கடுஞ்சொல் சொல்லப்பட்டவர்கள் தமிழர்கள், இதற்காகக் குறை இரந்து நின்றவர்கள் தமிழர்கள், ஆம் நான் அப்படித்தான் சொன்னேன், இனியும் சொல்லுவேன். இஷ்டமிருந்தால் தலைவராக இரு, இல்லாவிட்டால் போ என்று உதாசீனப்படுத்தப்பட்டவன் தமிழன்.

இவ்வளவு போதாதா காந்தியார் நம் எதிரிகள் கூலி என்பதற்கும் தமிழ் மக்கள் மானமற்றும் எதிரிகளுக்கு கையாட்களாக இருப்பதில் பெருமை கொள்ளுபவர்கள் என்பதற்கும் அத்தாட்சி என்று கேட்கிறேன்.
காங்கிரசில் இருக்கும் தமிழ் மக்களுக்குக் காங்கிரசும், காந்தியார் போலவே தமிழ் மக்களின் எதிரிகளது கையா யுதம் என்பது உண்மையிலேயே தெரியாதா என்று கேட்கிறேன்.

தமிழ்நாட்டில் தமிழன் சட்டசபை மெம்பர் ஆவதற்கோ மந்திரி ஆவதற்கோ பார்ப்பனர் கடாட்சம் இல்லாவிட்டால் பார்ப்பனர்களது அடிமையாய் இல்லாவிட்டால் முடியாது என்பது எந்தக் காங்கிர தமிழராவது தனக்குத் தெரியாது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறேன்.

பார்ப்பனரை விரோதித்துக் கொண்டால் தம்மால் வாழ முடியாது என்பது இந்த நாட்டில் எந்த சர் தமிழராவது, கோடீசுவரர் தமிழராவது, மில் முதலாளி தமிழராவது, மிராதார் தமிழராவது, இராஜா தமிழராவது, ஜமீன்தார் தமிழராவது அறியாததா என்று கேட்கிறேன். அல்லது இவர்களில் யாராவது காந்தியாரோ, பார்ப்பனரோ, காங்கிரசோ நம் இனத்திற்கு விரோதமானதென்றும் பார்ப்பன வாழ்வுக்கு ஏற்றதென்றும் தெரியாதவர்கள் உண்டா என்று கேட்கிறேன்.
இப்படிப்பட்ட மானமற்ற இன உணர்வற்ற இழிதன்மை யில் சுயநலம் தேடுகிற மக்கள் பார்ப்பனர்களில் யாராவது இருக்கிறார்களா என்று சொல்லுங்கள் பார்க்கலாம். முசுலிம்களில் யாராவது இருக்கிறார்களா? கிறிதவர்களில் யாராவது இருக்கிறார்களா? வெள்ளையர்களில் யாராவது இருக்கிறார்களா? ஆங்கிலோ இந்தியர்களில் தானாகட்டும் யாராவது இருக்கிறார்களா?
உலகத்தில் இல்லாத இழிகுணங்கள், மானமற்ற தன்மைகள் தமிழனுக்குத் தானா, பிதுரார்ஜித சொத்தாக இருக்க வேண்டும்?

மாணவர்களே, இளைஞர்களே, இந்த இழிநிலை நீக்கப்படுவதற்கு ஆக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்; இந்த உங்கள் பிதுரார்ஜித சொத்தை தூ வென்று காரித்துப்புங்கள். இப்படிப்பட்ட உங்கள் பெற் றோர்களை மனித உருவம் தாங்கிய கீழ்த்தரப்பிராணி என்று கருதுங்கள். அவர்கள் யாராய் இருந்தாலும், சர் முதல் சாஹேப் வரை, கோடீவரர் முதல் மில்முதலாளி முதல் மிராசுதார் வரை மற்றும் எப்படிப்பட்ட பட்டம், பதவி, பணம், பெருமை, நாளைக்கு முதல் மந்திரி, கவர் னர் வைசிராய் ஆகக்கூடிய தன்மை உடையவர்களாக இருந்தாலும், வெறுத்துக் கொடும்பாவி கட்டி இழுங்கள். அவர்கள் வயிற்றில் பிறந்த இழிவுக்காக கொடும் பாவிக்கு முன் கொள்ளிச் சட்டி தூக்கிக் கொண்டு நடவுங்கள்.

நாம் யார்? நம் உண்மை சரித்திரம் எப்படிப்பட்டது? உலகில் நம் பழைய அந்தது என்ன? எதிரிக்கு ஜே போடுவது, எதிரியைக் கண்டு நடுங்கி நரித் தந்திரம் செய்வது, எதிரியைக் கைகூப்பித் தொழுது ஈன வாழ்வு வாழுவது ஆகிய குணம் தானா நமக்கு நம் கடவுள் களும் மதமும் கலை காவியங்களும் கற்பித்தது? நம் சரித்திரத்தில் இதுதானா சொல்லி இருக்கிறது? கலை இரசிகர்களே, காவிய ரசிகர்களே, பாவம் கண்டு பரவசப்படுபவர்களே, இலக்கிய இரசிகர்களே, இராம பக்தர்களே, முருக பக்தர்களே, செந்தூர் வேலன் பக்தர் களே புராண காவியங்களுக்குப் புதுப்பொருள், கருப் பொருள் நுண்பொருள் கண்டு கலை இரசத்தில் மூழ்கி, கரை காணாமல் இருக்கும் பண்டிதர்களே இவை எல்லாம் உங்களுக்கு கற்றுக் கொடுத்ததும் இவை களால் எல்லாம் உங்களுக்கு ஏற்பட்டதுமான பிரசாத பாக்கியம் இதுதானா என்று கேட்கிறேன்.

இன மானம், தன்மானத்தினும் பெரிது, உண்மையில் பெரியது. அது பட்டம் பெற்ற கல்வியிலும் பெரிது. பணம் ஊற்றுள்ள உத்தியோக தடாகத்திலும் பெரிது. பரம்பரை மகாராஜா பட்டத்திலும், சர்ரிலும் பெரிது. மணிக்கு ஒரு லட்சம் வருவாய் குவியலுக்கும் பெரிது. இதை உணர வேண்டும் என்பதுதான் தேர்தலை வெறுத்ததின் பெரு நோக்கமாகும்.

ஆகவே இனி நம் வாழ்வு, மனித வாழ்வு ஆவ தற்கு மாணவர் இளைஞர்களே நீங்கள் மனம் வைத் தால்தான் உண்டு, உங்கள் எண்ணம் இதைவிடப் படிப் பிலும், பதவியிலும் பணம் தேடுவதிலும் செல்லுமே யானால் உங்கள் பெற்றோர்கள் கொண்டாடும் மதத்தில் பார்ப்பனர்கள் உங்களை வைத்து இருக்கும் இடம் மிகமிகப் பொருத்தமானது என்றே சொல்லுவேன். ஒருபுறம் நீங்கள் அந்த இடத்தை வாயில் வெறுத்துக் கொண்டு காரியத்தில் அந்த நடத்தையைக் கட்டித் தழுவிக் கொண்டிருந்தால் அது நம் இழிநிலையை வலியுறுத்துவதேயாகும்.

தோழர்களே வாருங்கள் வெளியில்! உங்களுக்கு கல்யாணமாகி இருந்தால் உங்கள் மனைவியையும் அழையுங்கள், வராவிட்டால் விட்டொழியுங்கள்!! பிள்ளை குட்டிகள் இருந்தால் அவற்றை அனாதை ஆசிரமத்தில் கொண்டு போய் விடுங்கள், ஆச்சிரமம் இல்லாவிட்டால் மகமதிய அனாதை காப்பு இடத்திலேயோ, கிறிதவ அனாதை காப்பு இடத்தி லேயோ விட்டுவிட்டு வாருங்கள்.

உங்களுக்கு இனி காலம் இல்லை. நாளை இப்படிப்பட்ட காலம் வராது, நாள் ஆக ஆக நீங்களும் உங்கள் பெற்றோர்கள் போல ஆகி உங்களைப் போன்ற பிள்ளைகளைப் பெற்று எதிரிக்கு கையாளான, அடிமையான பிள்ளைகளைப் பெற்று விடத்தான் நேரும்.

எதிரிகளின் அரண் இப் போது கட்டப்படுகிறது. அதை முளையிலேயே இடித்துத் தள்ளத் தயாராகுங்கள், உங்கள் தனிப்பட்ட நலனை அலட்சியம் செய்வது என்கின்ற அந்த ஒரு ஒப்பற்ற ஆயுதம் அணுக்குண்டையும் வெடிக் காமல் செய்துவிடும். ஆதலால் எழுங்கள் வரிந்து கட்டுங்கள் புறப்படத் தயாராகுங்கள், சங்கநாதம் ஒலிக்கப் போகிறது. என்பதாக வீர முழக்கம் செய்தார்.

------------------------------------2.3.1946இல் திருச்சி உறையூரில் நடைபெற்ற திராவிடர் கழக ஆண்டுவிழாவிலும், 3.3.1946 காலை திருச்சி சோழங்கநல்லூரில் நடைபெற்ற திருச்சி ஜில்லா மாநாட்டிலும் 3.3.1946 மாலை திருச்சி புத்தூர் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய சொற்பொழிவுத் தொகுப்பு - ”குடிஅரசு” - சொற்பொழிவு - 09.03.1946

20 comments:

தமிழ் ஓவியா said...


மதவாத சக்திகளை முறியடிப்போம்!


திண்டிவனத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் மற்றொரு முக்கியமான ஒன்று - மதச் சார்பின்மைக்கு விரோதமான மதவாத சக்திகளை முறியடிப்பதாகும்.

தீர்மானம் வருமாறு:

மதச்சார்பின்மைக்கு விரோதமான, இந்துத்துவா என்கிற நிகழ்ச்சி நிரலை (ஹழுநுசூனுஹ) கையில் எடுத்துக் கொண்டு, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகப் பெரும் வன்முறைகள் தூண்டப்பட்டதற்குக் காரணமாக இருந்த ஒருவர் பிரதமருக்கான வேட்பாளர் என்கிற முறையில் திக்விஜயம் போல் புறப்பட்டு இருப் பதும், அதற்கு இந்த நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங் களும், இந்துத்துவா சக்திகளும், பெருமுதலாளிகளும் பின்புலத்தில் பலமாக இருந்து வருவதையும் எச்சரிக் கையுடன் சுட்டிக்காட்டி, இந்த ஆபத்திலிருந்து நாட்டி னைக் காத்திட மதச்சார்பின்மைக் கொள்கை உடையோர் மற்றும் சமூகநீதி கொள்கையாளர்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து ஒன்று சேரவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும் எந்த அரசும், எந்த கட்சியும் பி.ஜே.பி.க்குத் துணை போகு மானால், அது திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஊட்டிய உணர்வுகளுக்கும், கொள்கைகளுக்கும் முற்றிலும் முரணானது என்பதோடு, அத்தகைய வர்கள் வரலாற்றுக் குற்றத்தைச் செய்த பழிக்கு ஆளாவார்கள் என்பதையும் இப்பொதுக்குழு தொலைநோக்கோடு வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவைப்பற்றிச் சொல்லும்பொழுது எல்லோரும் ஒன்றைச் சொல்லுவது உண்டு. பன்முகத்தன்மை கொண்டது என்பதுதான் அது. பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், மத நம்பிக்கையற்றவர்கள் எல்லோரையும் கொண்ட சீனாவுக்கு அடுத்தபடியாக பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். அரசமைப்புச் சட்டப்படி மதச்சார்பின்மைக் கொள்கையைக் கொண்டது மாகும்.

பி.ஜே.பி. என்பது இவற்றை ஏற்றுக்கொள்கிறதா? திருச்சியில் பேசிய பிரதமருக்கான பி.ஜே.பி. வேட்பாளர் நரேந்திர மோடி என்ன கூறினார்?

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைக் குறைகூறிப் பேசினாரே - மாநிலங்களே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் கொள்கை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே!

மொழிவாரி மாநிலங்கள் கூடாது என்றால் இதன் பொருள் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி பேசும் இன மக்களும் தங்கள் அடையாளங்களை இழந்துவிட்டு, இந்துத்துவா கடலில் கரைந்துவிட வேண்டும். ஒரே நாடு- பாரத நாடு, ஒரே மதம்- ஹிந்து மதம், ஒரே மொழி - சமஸ்கிருதம் என்கிற ஹிந்துத்துவா நிகழ்ச்சி நிரலைத் (அஜெண்டா)தானே மறைமுகமாக மோடி கூறிச் சென்றுள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள மதச்சார்பின்மைக் கொள்கையை இவர்கள் ஏற்றுக்கொள்வது உண்மையானால், எங்களுக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அயோத்தியில் ராமன் கோவில் கட்டுவோம் என்று சொல்லுவார்களா?

ஹிந்துராஷ்டிரம் அமைப்பதுதான் எங்கள் கொள்கை என்று சொல்லுபவர்கள் எப்படி மதச்சார்பின்மைக் கொள்கைக்கு உரியவர்கள்?

சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்தக் கொள்கைகள் எங்களுக்கு உடன்பாடானவையல்ல என்று திட்டவட்டமாக எழுத்துபூர்வமாக, அதிகாரபூர்வமாக அறிவித்த நிலை யில்தான் தேர்தலில் நிற்கவே சட்டப்படி உரிமைப் படைத்தவர்கள் ஆவார்கள்.
உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசும் நயவஞ்சக அமைப்பு ஒன்று இந்தியாவை ஆளவேண்டும் என்று துடிக்கிறது - இது ஆரோக்கியமானதுதானா?

உச்சநீதிமன்றத்திலே உத்தரவாதம் கொடுத்த பிறகு, அதற்கு மாறாக அயோத்தியில் ராமன் கோவிலை இடித்தார்களே! அதற்குப் பி.ஜே.பி.யின் பெருந்தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்களே துணை போனார்கள், வழிகாட்டினார்கள் என்றால், எத்தகைய ஆபத்தான நிலை!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாற்றுப் பட்டியலில் முதல் வரிசையில் உள்ள இவர்கள், அதற்குப் பிறகு இந்தி யாவின் துணைப் பிரதமராகவும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்ல!

இன்றைக்கு பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ள மோடி யார்? அவர் முதல மைச்சராக இருந்த நிலையில்தானே - மாநிலத்தில்தானே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்?

குறைந்தபட்சம் அதற்கு ஒரு வருத்தம் தெரிவிக்கக் கூடத் தயாராக இல்லையே! தான் காரில் செல்லும்பொழுது ஒரு நாய்க்குட்டி அடிபட்டால் ஏற்படும் சோகம் போன்றதுதான், குஜராத்தில் கொலை செய்யப்பட்டதும் என்று ஆயிரம் ஆயிரம் இடிஅமீன்கள்போல பேசக்கூடிய ஒரு மத வெறியர்தான் இந்தியாவுக்கான பிரதமரா? இப்படிப்பட்ட ஒருவரை அறிவிப்பதற்கு அந்தக் கட்சிக்குத்தான் எப்படிப்பட்ட புத்தி இருக்கவேண்டும்?

குஜராத் ஒளிர்கிறது என்று பொய் வெளிச்சத்தைக் காட்டிக் கண்களைக் கூசச் செய்து வாக்குகளைத் திருடி விடுவார்கள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு


சென்னை, அக்.23- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படுவதாக அரசு செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- உலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்தில் நேற்று முன் தினம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம் தலை மையில் மொரீசியஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் கலந்து கொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அரசு செயலாளர் மூ.ராசாராம், உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட இருக்கும் திருக்குறள் காட்சி கூடம் பற்றியும், சீனம் மற்றும் அரபு உலக மொழிகளில் திருக் குறள் மொழி பெயர்க்கப்படுவது பற்றியும் எடுத்துக்கூறினார்.

மொரிசியஸ் நாட்டு அமைச்சர்

மொரிசியஸ் நாட்டின் முன் னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், மொரி சீயஸ் நாட்டின் அமைச்சராக இருந்த 1983 முதல் 1995 வரை யிலான காலத்தில் மொரீசியஸ் நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கென்றும், தமிழர்களுக் கென்றும் தாம் ஆற்றிய பல்வேறு பணிகளைப் பற்றி எடுத்துக் கூறினார்.

நிறைவாக, உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் நன்றி கூறினார்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


பெரியார் வீச்சு நாட்டுக்குத் தேவை தாராபுரம் கண்டனப் பொதுக்கூட்டத்தில் அதிரடி அன்பழகன் முழக்கம்

தாராபுரம், அக். 24- அறிவு ஆசான் தந்தை பெரியார் 135-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டமும், தமிழர் தலைவர் அவர்கள் மீது நடத் தப்பட்ட தாக்குதலைக் கண் டிக்கும் கண்டனப் பொதுக் கூட்டமுமாக திராவிடர் கழகப் பொதுக்கூட்டம் தாராபுரம் நகர திக சார்பில் 4.10.2013 வெள் ளிக்கிழமை இரவு 7 மணி யளவில் தாராபுரம் அண்ணா சிலை அருகில் தொடங்கி நடை பெற்றது.

இக்கூட்டத்திற்கு கழக பொதுக்குழு உறுப்பினர் தாரா புரம் ப.வடிவேல் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எழுச்சியுரையாற்றிய திராவிடர் கழகத்தின் தலைமை நிலையச் சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் தமது ரையில் குறிப்பிட்டதாவது:-
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் கொள்கை முழக் கங்கள் நாட்டிற்குத் தேவை யான அருமருந்தாகும். அத்த கைய கொள்கையை உலகம் முழுவதும் பரப்பி பெரியார் பணி முடிப்பதையே ஒரு குறிக் கோளாகக் கொண்டு செயல் படுபவர் தான் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாதத்தின் 30 நாட்களிலும் மக்கள் மத்தியில் உரையாற்றும் தலைவர் கி.வீரமணி அவர்கள் 10 வயதில் தொடங்கி 80 வயதிலும் ஒரே கட்சி, ஒரே கொடி, ஒரே தலைவன் என்று வீறு நடைபோடுகின்ற புரட்சி யாளர் தான் கி.வீரமணி அவர்கள்

69 சதவிகித இடஒதுக்கீட் டிற்கு ஆபத்து வந்த போது 31 சி என்ற தனிச்சட்டத்தை இயற்றி அதை அரசியலமைப்புச் சட்ட அட்டவணை 9-இல் இடம் பெறச் செய்து 69 சதவிகித இட ஒதுக்கீட்டு முறையை எந்த சக்தியாலும் சீர் குலைக்க முடியாத நிலையை ஏற்படுத்தி யவர் தான் கி.வீரமணி அவர்கள்

அத்தகைய தலைவர் மீது விருத்தாசலத்தில் நடைபெற்ற தாக்குதலுக்கு தமிழக முதல்வர் ஏன் கண்டனம் தெரிவிக்க வில்லை?

வார்த்தை பேசினால் வழக்கு என்றால்! உயிருக்கு உலை வைத்து திக தலைவர் மீது தாக்குதல் நடைபெற்றதுக்கு ஏன் நடவடிக்கை இல்லை?

அப்படியென்றால் இது சமூக விரோதிகளை ஊக்கு விக்கும் ஏற்பாடா?

ஒரு மூத்த தலைவருக்கே இப்படி பாதுகாப்பற்ற நிலைமை என்றால் நாட்டில் குப்பனுக் கும், சுப்பனுக்கும் என்ன பாது காப்பு?

இது தான் தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சியின் இலட்சணமா, நடப்பது நாட் டாட்சியா? காட்டாட்சியா? வீரமணி தனி மனிதரல்ல! தமிழர்களின் முகவரி! தமிழர் களின் தலைவர், பெரியாரின் இடத்தில் இருப்பவர், தமிழி னத்தின் மூச்சுக்காற்று இவரை அசைக்க நினைத்தால் நடக் காது. வீரமணியைப் பாதுகாக்க கருப்புச் சட்டைக்காரனுக்குத் தெரியும்.
பெட்ரோலும், தீப்பந்தமும் அப்படியே இருக்கிறது. பெரி யார் கட்டளையும் அப்படியே இருக்கிறது.

ஒருவேளை திராவிடர் கழகத் தலைவரின் உயிருக்கு ஊறு நேர்ந்தால்... ஒரு பார்ப் பானும் இல்லாத நாடு உரு வாக்கப்படும்.. இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தமிழ் ஓவியா said...


சட்டமன்ற தீர்மானம்: வழிமொழிந்து பேசினார் மு.க.ஸ்டாலின்


சென்னை, அக். 24- இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை டெசோ அமைப்பு வலியுறுத்திய தீர்மானம் போட்டுள்ள நிலையில், சட்டமன்றத்தில் முதலமைச்சர் இக் கருத்தை வலியுறுத்தி முன்மொழிந்து கொண்டு வந்துள்ள இத்தீர்மா னத்தை, வழிமொழிந்து வரவேற்க கடமைபட்டுள்ளதாக சட்டமன்றத்தில் இன்று திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இன்று (24.10.2013) காலை கேள்வி நேரம் முடிந்தவுடன், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இத்தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்து பேசிய திமுக சட்டமன்ற கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
முதலமைச்சர் கொண்டுவந்துள்ள இத்தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வழிமொழிந்து வரவேற்க கடமைப் பட்டுள்ளேன்.

காமன் வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற இருக்கின்ற சூழ்நிலையில் அந்த மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலி யுறுத்தி தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து குரல்கொடுத்து வந்திருக்கிறார். இது தொடர்பாக இந்திய பிரதமருக்கு இரண்டு முறை கடிதமும் எழுதியிருக்கிறார்.

டெசோ அமைப்பின் சார்பில் 16.7.2013 அன்று நடைபெற்ற இப்பிரச்சினை தொடர்பான கூட்டத்தில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை தீர்மான மும் நிறைவேற்றி பிரதமருக்கு தெரிவித்துள்ளோம்.

திமுக மற்றும் பல்வேறு கட்சிகள் சார்பாக தமிழ கத்தில் இப்பிரச்சினை தொடர்பாக ஆர்ப்பாட்டங் களும், போராட்டங்களும் நடைபெற்று இருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
காமன்வெல்த் மாநாட்டை கனடா அரசு புறக் கணித்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டில் இது தொடர்பாக கையெழுத்து இயக்கமும் தொடங் கப்பட்டுள்ளது. இன்று தமிழக சட்டமன்றத்தில் இதுதொடர்பான தீர்மானம் கொண்டு வந்திருப்பதும் ஒன்றுபட்டு குரல் கொடுத்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெற்றால் அடுத்த மாநாட்டிற்கு ராஜபக்சேதான் தலைவராக இருப்பார். எனவே இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்கவேண்டும். முதலமைச்சர் கொண்டு வந்துள்ள இந்த தீர்மானத்தை தி.மு.க. சார்பில் வரவேற்று அமர்கிறேன் என்று மு.க.ஸ்டாலின் சட்ட மன்றத்தில் இத்தீர்மானத்தை வரவேற்று பேசினார்.

முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட் டினை இந்தியா முற்றிலுமாக புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முதலமைச்சர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் இன்று கொண்டு வந்த தீர்மானத்தினை ஒருமனதாக ஆதரித்து கீழ்க்கண்ட கட்சிகளின் சார்பில் உறுப்பினர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.

செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி), தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), கதிரவன் (பார்வர்டு பிளாக்), சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி), டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்), ஜவஹருல்லா (மக்கள் மனிதநேய கட்சி), கோபிநாத் (காங்கிரஸ்), ஆறுமுகம் (சிபிஅய்), சவுந்தரராஜன் (சிபிஎம்), பண்ருட்டி ராமச் சந்திரன் (தேமுதிக) ஆகிய உறுப்பினர்கள் பேசினர்.

இதையடுத்து பேரவைத் தலைவர் பா.தனபால் அவர்களும் இத்தீர்மானத்தின்மீது தனது கருத்தை பதிவை செய்தார். பின்னர் முதலமைச்சர் எழுந்து தான் கொண்டுவந்த இத்தீர்மானத்தை சட்டமன்ற உறுப் பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டார்.

பேரவைத் தலைவர் இத்தீர்மானத்தை நிறைவேற் றும் வகையில் குரல் வாக்கெடுப்பு நடத்தி, தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தமிழ் ஓவியா said...


அட கடவுளே!


தாம்பரம், துரைப்பாக்கம், திருவொற்றியூரில்
ஒரேநாளில் 4 கோயிலில் கொள்ளைகள்

தாம்பரம், அக். 24-தாம்பரம் மற்றும் துரைப் பாக்கத்தில் ஒரே நாளில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் கிரீடம் உள்பட 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு தாம்பரம்

மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் வங்கி காலனியில் ஆர்டிஓ அலுவலகம் எதிரே அருள் தந்த விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் பட்டம்மாள் (70) என்பவர், தினமும் சுத்தம் செய்து தீபம் ஏற்றுவது வழக்கமாம்.

நேற்று காலை கோயிலைத் திறக்க பட்டம் மாள் வந்தபோது கோயிலின் பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோயில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப் பட்டு பணமும், விநாயகருக்கு பூஜை காலங்களில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்பட 21 கிலோ வெள்ளி பொருட் களையும் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோயிலில் பதிவாகி இருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.

தாம்பரத்தில்....

இதேபோல் தாம்பரம் திருநீர்மலை சாலையில் மகமாயி அம்மன் கோயிலிலும் நேற்று முன்தினம் இரவு சில நபர்கள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க தாலியை

கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

துரைப்பாக்கத்தில்...

துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் செங்கழுநீர் விநாயகர் கோயில் உள்ளது. இதையொட்டி அய்யப்பன், முருகன் கோயில்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டிவிட்டு பூசாரி வேணு, வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை நடையை திறக்க முயன்றபோது முடியவில்லை. அப்போதுதான் கிரில் கேட் அருகே வைக்கப்பட்டிருந்த கோயில் உண்டியல் கடப்பாரை யால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருந்தது தெரிந்தது. சில்லரை காசுகள் சிதறிக்கிடந்தன. இதுபோல பக்கத்தில் உள்ள முருகன் கோயில் உண்டியலும் கடப்பாரையால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது.

உடனே கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையரைத் தேடி வருகின்றனர்.

கிறிஸ்தவ கோயிலில்
உண்டியல் கொள்ளை

திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் கிறிஸ்தவ கோயில் உள்ளது. நேற்று அதிகாலை சர்ச் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் உடைக்கப் பட்டு இருப்பதை அங்கு வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து திருவொற்றியூர் காவல்துறை யினர் விரைந்து வந்து விசாரித்தனர். சிலுவைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. 2 உண் டியல்களில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருந்தி ருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

ஒரேநாளில் 4 கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ கோயிலில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்தந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளன.

தமிழ் ஓவியா said...

ஏற்காடு தேர்தல்

திண்டிவனம் - திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட ஏழாவது தீர்மானம் நடக்க இருக்கும் ஏற்காடு இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுப்பது என்பது பற்றியதாகும்.

தீர்மானம் வருமாறு:

தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்புத் திட்டமான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் வலியுறுத்தி வந்த சேது சமுத்திரத் திட்டத்தை அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றத்தில் அந்தத் திட்டமே கூடாது என்று வழக்குத் தொடுத்திருப்பதை, தமிழர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்யும் மாபெரும் துரோகமாக இப்பொதுக்குழு கருதுகிறது.

அ.இ.அ.தி.மு.க.வின் இருதேர்தல் அறிக்கைகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்திவிட்டு, இப்பொழுது அந்தத் திட்டமே கூடாது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத - சந்தர்ப்பவாதமும், அரசியல் உள்நோக்கமும் கொண் டது என்று இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரி வித்துக் கொள்கிறது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வில், சமூகநீதிக்கு எதிரான போக்கு, மதச் சார்பின்மைக்கு விரோதமான செயல்முறைகள், கடுமையான வகையில் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு - இவற்றின் காரணமாக, ஆளும் கட் சிக்கு ஒரு கடிவாளம் தேவைப்படுவது அவசியம் என்ப தாலும், நடைபெறவிருக்கும் ஏற்காடு சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்குப் பாடம் கற்பிக்கும் வகையில் தி.மு.க. வேட்பாளருக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்யத் தேவையான ஒத்துழைப்பைக் கொடுப்பது என்று திராவிடர் கழகப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேற்கண்ட தீர்மானத்தில் ஏற்காடு தேர்தலில் தி.மு.க.வை ஆதரிப்பதற்கான காரணம் தெளிவாக, காரண காரியத் தோடு விளக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். அதில் பெரிய குற்றத்தைக் கண்டுபிடித்ததுபோல துள்ளிக் குதிக்கிறது.

ஆளும் கட்சிக்குக் கடிவாளம் என்று இருக்கிறதாம் - அதனைப் பிடித்துக்கொண்டு சிலம்பம் ஆடிப் பார்க்கிறது.

ஆளும் கட்சிக்குக் கடிவாளம் என்றால், தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்தபோது நடைபெற்ற இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிக்குக் கடிவாளம் போட எதிர்க்கட்சியை ஆதரித்ததா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

தீர்மானத்தின் முன்பகுதி வாசகங்களை மறைத்துவிட்டு ஒட்டு வெட்டு வேலை செய்து வினா எழுப்புவது அறிவு நாணயம் ஆகுமா?

சேது சமுத்திரத் திட்டம் என்பது திராவிடர் இயக்கத்தின் நீண்ட காலத் திட்டம் - தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் வரவேற்ற திட்டத்தை, ராமனைக் காட்டி எதிர்ப்பது, சமூகநீதிக்கு எதிரான போக்கு, கடுமையான வகையில் சட்டம் ஒழுங்குப் பாதிப்பு - இவற்றின் காரணமாக ஆளும் கட்சிக்கு, அவசியம் ஒரு கடிவாளம் தேவைப்படுகிறது என்பதை மறைப்பானேன்?

மேலே கூறப்பட்டுள்ள காரணங்களை மறுத்து எழுத சரக்கு இருந்தால் தாராளமாக சிலம்பம் ஆடலாமே!

அவற்றை மறுக்க முடியாது என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியும். அதனால் ஏன் வீண் வம்பு என்று அதற்குள் சிக்கிக் கொள்ளாமல், அரைகுறை கிணறு தாண்டும் வேலையில் இறங்கி இருப்பது பரிதாபமே!

அ.இ.அ.தி.மு.க.வை இந்த இடைத்தேர்தலில் தோற் கடிக்க இன்னும் எத்தனை எத்தனையோ காரணங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றையெல்லாம் ஏன் மறந்துவிட்டீர்கள் - அவை பற்றியும் விளாசுங்கள் என்று நமக்கு எடுத்துக் கொடுத் திருக்கிறது என்றே எடுத்துக்கொள்வோம்.

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் திராவிடர் இயக்கக் கொள்கைக்கும், கலாச்சாரத் தன்மைக்கும் ஏற்ப தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று மானமிகு கலைஞர் அவர்கள் ஆட்சியின்போது அறிவிக்கப் பட்ட தமிழர் பண்பாட்டுத் தொடர்பான சட்டத்தை மாற்றி, நாரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் பிறந்த அறுபது பிள்ளை கள்தான், சித்திரையில் தொடங்கும் தமிழ் வருடங்கள் என்று அறிவித்தது ஒன்று போதாதா?

தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களை உச்சரிக்கும் தகுதியை இதன்மூலம் அ.இ. அ.தி.மு.க. ஆட்சி இழந்துவிடவில்லையா?

இவர்கள் கூறும் அந்த அறுபது வருடங்களில் ஒரே ஒரு பெயராவது தமிழில் உண்டா? மொழிக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் தமிழைத் தூக்கி எறிந்துவிட்டு, சமஸ்கிரு தத்துக்கு அல்லவா ஆலவட்டம் சுழற்றியிருக்கின்றனர்!

எந்தப் பெயரை - எந்தக் குழந்தைக்குச் சூட்டினாலும், மருந்துக்கும்கூட தமிழ் அதில் ஒட்டிக்கொண்டு இருக்கக் கூடாது என்ற தன்மையில் சமஸ்கிருதப் பெயர்களாகத் தேடிப்பிடித்து, பொறுக்கி எடுத்துச் சூட்டுபவர்தானே செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்?

அந்த நிலையில் உள்ளவர் - தைமுதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்னும் தமிழர் பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் அதனை எப்படி அணுகுவார் என்று எதிர்ப்பார்க்க முடியும்?
அண்ணா அவர்களின் நூற்றாண்டையொட்டி உரு வாக்கப்பட்டுள்ள நூலகத்தையே குப்பைத் தொட்டியாக ஆக்கி வைத்திருக்கும் அந்த ஒரு காரணம் போதாதா - இந்த ஆட்சிக்குப் பாடம் கற்பிக்கவேண்டும் என்பதற்கு?

துறைமுகத்திலிருந்து, மதுரவாயல் வரை போடப்பட வேண்டிய விரைவு பாலத்தையே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அ.இ.அ.தி.மு.க. அரசு வழக்கு போட்டுத் தடுத்துள்ளதே - இது ஒன்று போதாதா நாட்டின் வளர்ச்சிக்குக் கேடான அரசு அ.தி.மு.க. அரசு, என்பதற்கு?

நமது எம்.ஜி.ஆர். சீண்டினால் வண்டி வண்டியாக எடுத்துக்கொட்ட ஏராளமான சரக்குகள் நம் கைவசம் உண்டு என்பதை மட்டும் அடக்கமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் ஓவியா said...


அட கடவுளே!


தாம்பரம், துரைப்பாக்கம், திருவொற்றியூரில்
ஒரேநாளில் 4 கோயிலில் கொள்ளைகள்

தாம்பரம், அக். 24-தாம்பரம் மற்றும் துரைப் பாக்கத்தில் ஒரே நாளில் 4 கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் மற்றும் கிரீடம் உள்பட 20 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு தாம்பரம்

மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் வங்கி காலனியில் ஆர்டிஓ அலுவலகம் எதிரே அருள் தந்த விநாயகர் ஆலயம் உள்ளது. இந்தக் கோயிலில் பட்டம்மாள் (70) என்பவர், தினமும் சுத்தம் செய்து தீபம் ஏற்றுவது வழக்கமாம்.

நேற்று காலை கோயிலைத் திறக்க பட்டம் மாள் வந்தபோது கோயிலின் பூட்டு உடைக் கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோயில் நிர்வாகி கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தார்.

தாம்பரம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கோயில் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப் பட்டு பணமும், விநாயகருக்கு பூஜை காலங்களில் பயன்படுத்துவதற்காக வைத்திருந்த வெள்ளி கிரீடம் உள்பட 21 கிலோ வெள்ளி பொருட் களையும் கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கோயிலில் பதிவாகி இருந்த ரேகைகளைப் பதிவு செய்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையடித்தவர்களைத் தேடி வருகின்றனர்.

தாம்பரத்தில்....

இதேபோல் தாம்பரம் திருநீர்மலை சாலையில் மகமாயி அம்மன் கோயிலிலும் நேற்று முன்தினம் இரவு சில நபர்கள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த 2 கிராம் தங்க தாலியை

கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

துரைப்பாக்கத்தில்...

துரைப்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவில் செங்கழுநீர் விநாயகர் கோயில் உள்ளது. இதையொட்டி அய்யப்பன், முருகன் கோயில்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜை முடிந்ததும் கோயில் நடையை பூட்டிவிட்டு பூசாரி வேணு, வீட்டுக்கு சென்றுள்ளார்.

நேற்று காலை நடையை திறக்க முயன்றபோது முடியவில்லை. அப்போதுதான் கிரில் கேட் அருகே வைக்கப்பட்டிருந்த கோயில் உண்டியல் கடப்பாரை யால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப் பட்டு இருந்தது தெரிந்தது. சில்லரை காசுகள் சிதறிக்கிடந்தன. இதுபோல பக்கத்தில் உள்ள முருகன் கோயில் உண்டியலும் கடப்பாரையால் உடைக்கப்பட்டு பணம் கொள்ளை போயிருந்தது.

உடனே கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. காவல்துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையரைத் தேடி வருகின்றனர்.

கிறிஸ்தவ கோயிலில்
உண்டியல் கொள்ளை

திருவொற்றியூர் தியாகராயபுரத்தில் கிறிஸ்தவ கோயில் உள்ளது. நேற்று அதிகாலை சர்ச் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் உடைக்கப் பட்டு இருப்பதை அங்கு வந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து திருவொற்றியூர் காவல்துறை யினர் விரைந்து வந்து விசாரித்தனர். சிலுவைப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. 2 உண் டியல்களில் ரூ.50ஆயிரத்துக்கு மேல் இருந்தி ருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

ஒரேநாளில் 4 கோயில்கள் மற்றும் கிறிஸ்தவ கோயிலில் நடந்த கொள்ளை சம்பவங்கள் அந்தந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளன.

தமிழ் ஓவியா said...

அதிக சக்தி!

செய்தி: ஆந்திர மாநி லம் புத்தூரில் பயங்கர வாதிகள் கைது செய்யப் பட்டதைத் தொடர்ந்து ஏழுமலையான் கோவி லுக்குச் சிறப்புப் பாது காப்புப் படை அமைக் கப்பட்டுள்ளது.

சிந்தனை: இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவெனில், திருப்பதி ஏழுமலையானைவிட பயங்கரவாதிகள் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதைத் தெரிந்து கொள்க!

தமிழ் ஓவியா said...


கடவுளை நம்புகிறாயா?


ருஷ்ய நாட்டு பிரஜை ஒருவன் வேலை தேடுகிறான் என்றால் அவனைப் பார்த்து ஒரு பேட்டியாளர் நீ கடவுளை நம்புகிறாயா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்பது இல்லை. அவ்வாறு கேட்பதை சட்டம் தடை செய்கிறது.

- ருஷ்ய வெளியீடு: 100 வினாக்களும் விடைகளும் என்ற புத்தகத்திலிருந்து பக்கம் 48.
தகவல்: ந.சுப்ரமணியன், கோவை

தமிழ் ஓவியா said...

காய்மீது காய்ச்சல்!



அத்திக் காய் கோவை தேத் தானை
ஹிலிக் காய் வெள்ளைக்
கத்தரி சோற்றுக் காந்தல்
கண்டிதை யாவரேனும்
நத்தியே யுண்பார்க் கெல்லாம்
நாரணன் தாளின் மீது
புத்திதான் வாரா தென்றும்
பரமனார் அருளினாரே. (நீதிச் சாரம்)
இதன் பொருள்: அத்திக்காய், கோவைக்காய், தேத்தரங்காய், சோற்றுக்காந்தல் இவைகளை உண்டால் நாராயணக் கடவுள் மீது பக்தி ஏற்படாது - அக்கடவுளை மறக்கச்செய்யும்.

தமிழ் ஓவியா said...

இப்போ பிராமணனும் இல்லே பிராமண தர்மமும் இல்லே!

வினா: வேத மந்திரத்தை இந்த மாதிரி விலை பேசி விற்கலாமா?

புரோகிதர் பதில்: எல்லாம் காலக்கோளாறுதான். காலம் ரொம்பத் தப்பாப் போச்சு. நாங்கள்ளாம் இந்த மாதிரி வந்துட்டோம். இப்ப பிராமணனும் இல்லே.. பிராமண தர்மமும் இல்லே.

வினா: நீங்க முன்னே பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது?

புரோகிதர் விடை: பக்தியாவது. ஒண்ணாவது? கோவிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? சைட் அடிக்கன்னா வர்றான். பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி, அம்பாளை நெனச்சுக்கிறா!

- துக்ளக், 1-6-1981 இதழ், பக்கம் 32
தகவல்: கிருட்டினசாமி, செகந்திராபாத்

தமிழ் ஓவியா said...


ஒழிக்கப்பட வேண்டியவை

1. மக்களிடம் உள்ள உணர்ச்சி, ஒழுக்கம் ஏற்பட வேண்டுமானால் சினிமா ஒழிக்கப்பட வேண்டும்.

2. நீதி நேர்மை ஏற்பட வேண்டுமானால் வக்கீல் முறை ஒழிக்கப்பட வேண்டும்

3. நாட்டில் காலிகள், அயோக்கியர்கள் ஒழிக்கப்பட வேண்டும்.

4. அரசியலில் நல்ல ஆட்சியும், நாணயமும் ஏற்பட வேண்டுமானால் தேர்தல் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

5. வியாபாரத்தில் நாணயக் குறைவும் கள்ள வியாபாரமும் ஒழிக்கப்பட வேண்டுமானால் லைசன்ஸ், பெர்மிட், கட்டுப்பாடு முறை ஒழிக்கப்பட வேண்டும்.

6. தொழில்துறையில் தொழி லாளர்களிடையே சுகமும், நாணய மும், பொறுப்பும் ஏற்பட வேண்டு மானால், லாபத்தில் பங்கு கொடுத்து, தொழிலாளர் கூட்டம் ஒழிக்கப்பட வேண்டும்.

7. அய்கோர்ட்டில் சமூக நீதி வேண்டுமானால் பார்ப்பனரை ஜட்ஜாக நியமிப்பது ஒழிக்கப்பட வேண்டும்.

- தந்தை பெரியார்

தமிழ் ஓவியா said...

கொடிது கொடிது (ஈ.வெ.ரா)



கொடிது கொடிது கோவிலுக்குப் போதல். அதனினும் கொடிது பார்ப்பான் பூசை செய்யும் கோவிலுக்குப் போதல்.

அதனினும் கொடிது குழவிக்கல்லையும் செம்பையும் கும்பிடுதல். அதனினும் கொடிது தேர்த் திருவிழா உற்சவத்திற்குப் போதல். அதனினும் கொடிது பெண்களை அங்கு கூட்டிப்போதல். அதனினும் கொடிது கோவில் கட்டுதல். அதனினும் கொடிது காணிக்கை போடுதல். அதனினும் கொடிது (அர்ச்சகப்) பார்ப்பானுக்கு ஈதல். -

விடுதலை 21.10.1957

தமிழ் ஓவியா said...

இந்துவாய் சாகமாட்டேன்

மேல் ஜாதிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்களிடத்தில் நம்மீது கருணை ஏற்படும்படி நாம் செய்து வந்த முயற்சிகள் எல்லாம் வீணாய்ப் போய்விட்டன.

இனி அவர்களிடத்தில் சமத்துவமாயும், ஒற்றுமையாயும் வாழ முயற்சித்து நம் சக்தியையும், உழைப்பையும், பணத்தையும் செலவழிப்பது வீண் வேலையாகும். நமது முறைகளும் இழிவுகளும் மேல் ஜாதிக்கார இந்துக்களால் தீர்க்கப்படும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்தைத்தான் அளிக்கும்.

இனி நாம் செய்ய வேண்டியது என்ன என்கின்ற விஷயத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். அம்முடிவு என்னவென்றால், நாம் இந்து மதத்தைவிட்டு அடியோடு விலகி விடுவது என்பதுதான்.

நமக்கு யார் சுதந்திரம் கொடுக்க மறுக்கிறார்களோ அவர்களை இனி நாம் கெஞ்சக் கூடாது. அவர்களது சம்பந்தத்தை இனி நாம் விலக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் நம்மை இந்துக்கள் என்று கூறிக்கொள்வது கூடாது. அதனால்தான் மேல் ஜாதிக்காரர்கள் நம்மை இழி வாகவும் கொடுமையாகவும் நடத்துகிறார்கள். நாம் வேறு மதத்தைச் சார்ந்தவர்களாய் இருந்தால் நம்மை இப்படி கொடுமைப்படுத்த அவர் களுக்கு துணிவு இருந் திருக்காது.

எந்த மதத்தினர் உங்களுக்கு சம அந்தஸ்து கொடுத்து சமத்துவமாய் நடத்துகிறார்களோ அப்படிப் பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள். பிறக்கும் போதோ நான் தீண்டப்படாத வனாய் பிறந்தேன். என்றாலும் அது நான் செய்த குற்றமல்ல.

ஆனால் இறக்கும் போது தீண்டப்படாத வனாய் இறக்கமாட்டேன். அதற்கு மார்க்கம் என் கையிலேயே இருக்கிறது. அதாவது நான் ஒரு இந்துவாய் இறக்கப் போவதில்லை

(நாசிக்கில் கூடிய பம்பாய் மாகாண ஆதி இந்துக்கள் மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் குடிஅரசு 20.10.1935)

தமிழ் ஓவியா said...


பொன்மொழிகள்


தன்னை எதிரி வென்று விடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - நெப்போலியன்

சதுரங்க விளையாட்டினைப் போல், வாழ்க்கையிலும் முன் யோசனையே வெல்கிறது - பக்ஸ்டன்

மதம் எப்போதும் கலைகளுக்கும், ஆராய்ச்சிக்கும் அறிவியலுக்கும் எதிரியாக இருந்து வருகிறது. - இங்கர்சால்

பெண்ணின் வடிவழகை விட அறிவழகே மிகவும் கவர்ச்சிகரமானது. சிறந்தது. - காண்டேகர்

ஒரு நாட்டில் நல்ல மனிதர்கள் நமக்கு ஏன் என்று இருந்து விட்டால், கெட்ட மனிதர்களின் அராஜகத் திற்கு அளவிருக்காது. - ஸ்டேட்ஸ்மென்

தன்னம்பிக்கை இல்லாதவனின் வாழ்க்கை காலால் நடப்பதற்கு பதிலாக தலையால் நடப்பதற்கு இணை யாகும். - எமர்சன்

சோம்பேறித்தனம் என்பது மனித சமுதாயத்தின் கொடுமையான விரோதி. ஊக்கத்தை வளர்த்துக் கொள்வார்களானால் ஒருபோதும் தோல்வி என்பது இல்லை. - டென்னிசன்

நம்நாடு முன்னேற வேண்டுமானால், ஜாதகத் தையோ, ஜோதிடத்தையோ நம்பி பயன் இல்லை. உழைப்பு - உழைப்பு கடுமையான உழைப்புதான் தேவை.
- நேரு

முன்னேற்றத்திற்கு அதிர்ஷ்டத்தை நம்புகிறவன் சோம்பேறி அவன் ஒரு காலும் உயர்வடையமாட்டான். தன் உழைப்பை நம்புகிறவனே மனிதன். நிச்சயம் அவன் உயர்வடைவான். - இப்ஸன்

எதைச் சொன்னாலும் நம்பிவிடுவது சரியல்ல. சந்தேகிக்கும் பண்பே சிறந்தது. - பிராகன்

பலவீனர்கள் அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை வைக்கின்றனர். பலமுடையவரோ காரணகாரியத் தொடர்பிலேயே நம்பிக்கை வைக்கின்றனர். - எமர்சன்

தமிழ் ஓவியா said...


சொல்லவேண்டும்



பார்ப்பனியமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கியமான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர்பார்க்க முடியாது. பார்ப்பனிய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும். -(குடிஅரசு, 17.8.1930)

தமிழ் ஓவியா said...


ராகுல் சொன்னது உண்மை


மத்தியப் பிரதேச தேர்தல் - பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரசின் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி, பி.ஜே.பி. மீது ஒரு பொதுவான குற்றச்சாற்றை வீசியுள்ளார்.

குளிர் சாதனம் பொருத்தப்பட்டுள்ள அறை களில் சுகமாக வாழும் முதலாளிகளுக்கானது பிஜேபி என்பதுதான் அந்தக் குற்றச்சாற்று.

ராகுல்காந்தி கூறியிருக்கிறார் என்றாலும் அது நூற்றுக்கு நூறு உண்மையே!

எடுத்துக்காட்டாக, குஜராத் ஒளிர்கிறது என்றும், நரேந்திர மோடியைப் பிரதமர் ஆக்கினால் இந்தியாவையே குஜராத்தாக ஆக்கிக் காட்டுவார் என்றும் திட்டமிட்ட பிரச்சாரத்தை வாரி இறைத் துக் கொண்டு இருக்கிறார்களே - உண்மையில் குஜராத்தில் முதலமைச்சர் மோடி, யார் பக்கம் இருக்கிறார்? யாருக்காக ஆட்சி நடத்துகிறார் என்பதைத் தெரிந்து கொண்டால் ராகுல் காந்தி சொன்னதன் உண்மைக்கான அர்த்தம் புரியும்.


மேற்கு வங்காளத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியின் போது நானோ கார் தொழிற்சாலையை உருவாக்க டாட்டா திட்டமிட்டிருந்தார் விவசாய நிலங்கள் அவருக்காகத் தாரை வார்க்கப்பட்ட தாகக் கூறி பெரும் கிளர்ச்சி, அம்மாநிலத்தில் ஏற்பட்டதால் அங்கு நினைத்தபடி டாட்டா கார் தொழிற்சாலையைத் தொடங்கிட முடியவில்லை.

சும்மா இருந்து விடுவாரா குஜராத் முதல் அமைச்சர் மோடி, தொழிலதிபர்களை ஈர்ப்பதில் பன்னாட்டு நிறுவனங்களைத் தூண்டில் போட்டு இழுப்பதில் மோடிக்கு நிகர் யார் என்று நலுங்கு பாடுவதில் பொருள் உண்டு.

மேற்கு வங்கத்திலிருந்த டாட்டாவின் நானோ கார் தொழிற்சாலையை தம் மாநிலத்தில் தொடங்குமாறு டாட்டாவுக்குத் தாம்பூலம் வைத்து அழைத்தார் மோடி அதற்காக முதல் அமைச்சர் மோடி, கொட்டிக் கொடுத்த சலுகைகள், விட்டுக் கொடுத்த தொகை அசாதாரணமானது.

1100 ஏக்கர் விவசாய நிலம் தாரை வார்க்கப்பட்டது. அதற்கு முத்திரைத்தாள் கட்டண விலக்கு அளிக்கப்பட்டது. மேற்கு வங்கத்திலிருந்து இயந்திரங்களை குஜராத்துக்குக் கொண்டு வர வேண்டுமே - அதற்காக ஆன போக்குவரத்துச் செலவு ரூ.700 கோடி. அந்தத் தொகையையும் ஏற்றுக் கொண்டார் முதல் அமைச்சர் மோடி.

ஏழையல்லவா டாட்டா - அதற்காகக் கடனாக கொடுக்கப்பட்ட தொகை ரூ.9750 கோடி 20 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தினால் போதும் அதற்கு விதிக்கப்பட்ட வட்டி - கேட்பவர்கள் அதிர்ந்து போய்விட வேண்டும்.

புள்ளி ஒரு சதவீதம் (.1ரூ)

ஒரு விவசாய நிலத்தை வேறு பயன்பாட்டுக்கு மாற்றினால் குஜராத் மாநில அரசின் விதிமுறைப்படி சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூ.6 அரசுக்குச் செலுத்த வேண்டும். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

தொழில் வரியிலும் சலுகையாம். அம்மாநில சட்டப்படி எந்தத் தொழிற்சாலை தொடங்கப்பட் டாலும் உள்ளூர்க்காரர்களுக்கு 85 சதவீதம், வேலை வாய்ப்புக் கொடுக்கப்பட வேண்டும். இது தவிர, மேலாண்மை மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களில் குறைந்தபட்சம் 60 சதவீதம் உள்ளூர் மக்களால் நிரப்பப்பட வேண்டும். இதற்கும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மொத்த சலுகைகளின் கணக்கைப் பார்த்தால் குஜராத் மக்களின் வரிப் பணம் ரூ.30ஆயிரம் கோடி, பரம ஏழை(?) டாட்டாவுக்கு தாராளமாக தாரை வார்க்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளில் 50 லட்சம் நானோ கார்களை உற்பத்தி செய்வதாக டாட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.கார் ஒன்று ஒரு லட்சம் ரூபாய் என்று கணக்கிட்டால் 50 லட்சம் கார்களுக்கு குஜராத் மக்கள் கார் ஒன்றுக்கு ரூ.60 ஆயிரம் வீதம் மான்யமாக அளிக்கிறார் கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்று சாலைகளில் ஓடும் ஒவ்வொரு நானோ காரும் பெட்ரோலில் ஓடவில்லை. குஜராத் மக்களின் வரிப் பணம் என்னும் ரத்தத்தில்தான் ஓடுகிறது.

இப்பொழுது எளிதாகப் புரிந்து கொண்டு இருக்கலாமே - காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிஜேபி பற்றி சொன்ன குற்றச்சாற்று துல்லிய மானது நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதை!

தமிழ் ஓவியா said...


அக். 25: தகவல் அறியும் உரிமை சட்ட தினம்


அரசு மற்றும் அரசிடம் உதவி பெறும் நிறுவனங்களிடமிருந்து, தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ள, இந்திய அரசு 2005ஆம் ஆண்டு கொண்டு வந்தது தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம். இச்சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும் அக்.25ஆம் தேதி, தகவல் அறியும் உரிமை சட்ட தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2004 டிச., மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2005 மே 11இல் மக்களவையிலும், மே 12இல் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஜூன் 15ஆம் தேதி குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். ஜூன் 21இல் அரசிதழில் வெளியிடப்பட்டு, அக்.12ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒவ்வொரு இந்திய குடிமகனும், அறிய விரும்பும் தகவல்களை பெற உரிமை உடையவர்கள் என தெரிவிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வெளிப்படையாக இருப்பதும், பொதுமக்கள் யார் கேட்டாலும் அவர்களுக்கு தகவல்களை தெரிவிப் பதும் அரசின் கடமை என இதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட தகவல்களை தாமாக முன் வந்து தெரிவிக்கவும் இச்சட்டம் வழி செய்கிறது.

தகவலை பெற விரும்புவோர் அது குறித்து எழுத்து மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். விண்ணப்பிப்போர் பெயர், முகவரி மற்றும் கையெழுத்துடன் அனுப்பப்படும் விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளார். அவசரத் தகவலுக்கு 48 மணி நேரத்துக்குள் பதிலளிக்க வேண்டும். நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, போர்யுக்தி போன்ற சில பிரிவின் கீழ்வரும் தகவல்களை அரசு தெரிவிக்க தேவையில்லை. நாடாளுமன்ற, சட்டசபைக்கோ மறுக்கப்படாத தகவல்கள், தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது என்பது இச்சட்டத்தின் நோக்கம்.
குறித்த நேரத்தில் தகவல் தராமலும், தவறான தகவலை தருவதும் குற்றம். இதன்படி தவறு செய்யும் அரசு அதிகாரிகளை தண்டிக்கவும், அபராதம் வழங்கவும் மத்திய, மாநில தகவல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. இச்சட்டத்தை குடிமக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் லஞ்சம், ஊழலை தடுக்கலாம். பயனற்ற தகவல்களை பெறுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். அரசு இயந்திரம் சரியாக செயல்படவும், அதன் மூலம் மக்களுக்கு நன்மை கிடைக்கவும் இச்சட்டம் வழி வகுக்கிறது.