Search This Blog

22.10.13

இதுதான் பெரியாரைப் புரிந்து கொண்ட லட்சணமா? டாக்டருக்குத் தெரிய வேண்டாமா?

தாழ்த்தப்பட்டவர்களை ஒதுக்கி வைத்து ஜாதி அடிப்படையில் கூட்டணியா? தமிழ்நாட்டில் நடக்கவே நடக்காது!
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதே முக்கியமானது!
திண்டிவனத்தில் தமிழர் தலைவரின் வரலாற்றுப் பிரகடனம்

நமது சிறப்புச் செய்தியாளர்
திண்டிவனம், அக்.21- திண்டிவனத்தில் நேற்று மாலை (20.10.2013) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் உரையாற்று கையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்  முக்கியமாக வெளி யிட்ட கருத்துரை இதோ:

தாழ்த்தப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி ஜாதி கூட்டணி அமைப்பது தமிழ்நாட்டில் எடுபடாத ஒன்று- நியாயமாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதே உண்மையான சமூகநீதி என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

பிறப்பின் அடிப்படையில் வேற்றுமையா?

உலகத்திலேயே பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கும் மதம் இந்த இந்து மதம்தான்.
ஒரு கேள்விக்கு யாராக இருந்தாலும் பதில் சொல்லட்டும். ஜாதிக் கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டுச் சேர்ந்திருப்பவர்களும் பதில் சொல்லட்டும்.
ஜாதி என்பதற்கு என்ன அடையாளம் இருக் கிறது என்று சொல்ல முடியுமா? காட்டத்தான் முடியுமா?

அமெரிக்காவில்கூட கறுப்பர்களுக்குக் கல்வித் தடை கிடையாதே!

அமெரிக்காவில்கூட வெள்ளை - கருப்பு நிறப் பேதம் உண்டு. அங்குக்கூட கருப்பன் படிக்கக் கூடாது என்ற நிலை உண்டா? இந்த அர்த்தமுள்ள இந்து மதம் இருக்கும் நாட்டில் தானே பிர்மாவின் நெற்றியில் பிறந்தவன் பிராமணன் என்றும், தோளில் பிறந்தவன் சத்திரியன் என்றும் தொடையில் பிறந் தவன் வைசியன் என்றும், காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும், பிராமணன் மட்டும்தான் படிக்க வேண் டும், சூத்திரன் படிக்கக் கூடாது. சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்பதும் இந்த இந்து மதத்தில் தானே? மறுக்க முடியுமா? யார் அந்நியன்?
யார் அந்நியன் என்ற கேள்வியை எழுப்பித் தந்தை பெரியார் ஒரு கேள்வியை எழுப்பினார். என் வீட்டுக் குப் பக்கத்தில் ஒருவன் இருக்கிறான்.என்னைத் தொட்டால் தீட்டு என்கிறான் - என்னைப் பார்க்கவே கூசுகிறான். அதே நேரத்தில் பத்தாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து ஒருவன் வருகிறான், என் கையைக் குலுக்குகிறான் கட்டியணைக்கிறான். இந்த இருவரில் எனக்கு யார் அந்நியன்? என்னைத் தொட்டால் தீட்டு என்பவன் தானே அந்நியன்? வெகு தூரத்திலிருந்து வந்தாலும் என்னோடு தழுவுபவன் தானே என் நண்பன், உறவினன் என்று தந்தை பெரியார் கேட்டாரே! என்ன பதில்?

சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா?

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டதாகப் பாட்டுப் பாடுகிறோம். ஒவ்வொரு ஆகஸ்டு 15லும் தேசியக் கொடி ஏற்றுகிறோம், பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுக்கிறோம்; தந்தை பெரியார் கேட்ட கேள்விக்கு மட்டும் இன்னும் விடையில்லையே!

சுதந்திர நாட்டில் சூத்திரன் இருக்கலாமா? என்று பெரியார் கேட்ட கேள்விக்கு இதுவரை பதில் இல்லையே!

இந்த கேள்வியைப் பெரியாருக்கு முன் யார் கேட்டார்கள்?

பெரியாரைப் பற்றியும் ஒரு பக்கத்தில் புகழ்ந்து விட்டு, இன்னொரு பக்கத்தில் ஜாதிக்காரர்களைத் தேடிச் செல்லலாமா? ஜாதிக் கூட்டணியை அமைக்கும் எண்ணம் வரலாமா?

புரட்சிக் கவிஞர் பாடினாரே!
புரட்சிக்கவிஞர் கேட்டாரே!

இருட்டறையில் உள்ளதடா உலகம்
ஜாதி இருக்கிறதென்பானும்
இருக்கின்றானே?

என்று கேட்டாரே.

பார்ப்பான் மட்டும்தான் படிக்க வேண்டும். பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் சூத்திரர்கள் அவர்கள் படிக்கக் கூடாது என்கிறது மனுதர்மம் - பார்ப்பனர் இந்து தர்மம் - அதுதானே நம் அரசர்கள் காலந்தொட்டு இருந்து வந்திருக்கிறது.
எந்தப் பார்ப்பனர் அல்லாதார் படிக்கக் கூடாது என்று ஆக்கி வைத்தார்களோ, அந்தப் பார்ப்பனர் அல்லாதார்க்காக அவர்களின் உரிமைகளுக்காக, கல்விக்காக, அரசுப் பணிகளுக்காகப் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை ஏற்படுத்தினார் தந்தை பெரியார் - ஏற்படுத்தினார்கள் திராவிட இயக்கத் தலைவர்கள். பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் ஊட்டிய உணர்ச்சியால் போராட்டங்களால் இனவுணர்வு பெற்றோம் - உரிமை உணர்வுகள் பெற்றோம் - கல்வி வாய்ப்பு பெற்றோம் - உத்தியோக வாய்ப்புகளைப் பெற்றோம்.

பார்ப்பனர் எதிர்ப்பு ஏன்?

எந்தப் பார்ப்பனர் எதிர்ப்பு - பார்ப்பனர் அல்லாதார் உணர்வும் நம்மை வாழவைத்துக் கொண்டு இருக்கிறதோ, உரிமைகளை  ஈட்டித் தந்திருக்கிறதோ அதைப் புறந்தள்ளி பார்ப்பனர் களையும் சேர்த்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு  அரசியல் நடத்த ஆசைப்படலாமா? இதுதான் பெரியாரைப் புரிந்து கொண்ட லட்சணமா?

சமஸ்கிருதம் படித்திருந்தால்தான் டாக்டருக்குப் படிக்க முடியும் என்று தானே வைத்திருந்தார்கள். அந்தப் பார்ப்பனச் சூழ்ச்சியை ஒழித்துக் கட்டியது - தந்தை பெரியாரும் திராவிடர் இயக்க ஆட்சியும் அல்லவா? மற்றவர்களைவிட டாக்டருக்கு முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டாமா?

மீண்டும் பார்ப்பனர் ஆதிக்கமா?

ஜாதியை எந்த வகையிலோ புதுப்பித்தால் உயிர் கொடுத்தால் மீண்டும் பார்ப்பனீயத்துக்கு - அதன் ஆதிக்கத்துக்கு, அதன் கலாச்சாரத்துக்கு - அதன் வருணாசிரம தர்மத்துக்கு துணைபோவது, மீண்டும் பார்ப்பன ஆதிக்கத்துக்குத் துணை போகும் துரோகமே!

மருந்தில் கொஞ்சம் விஷம் சேர்ப்பது போல, ஜாதி என்பது  கல்வி வேலை வாய்ப்பில் நீண்ட காலமாக அந்த உரிமைகள் மறுக்கப்பட்டுக்கிடந்த மக்களுக்கு - இடஒதுக்கீட்டை அளிப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஓர் அளவுகோல் அவ்வளவே!

மருந்தில் விஷம் இருக்கிறது என்பதற்காக விஷத்தை சாப்பிட்டு விடலாமா?
இடஒதுக்கீட்டுக்கு ஜாதி அளவுகோல் பயன் படுகிறது என்பதற்காக ஜாதி அடிப்படையில்  பதவிகளுக்காக அணி திரட்டலாமா?

கருப்புச் சட்டைக்காரன் உள்ளவரை

ஒன்றை இங்கு சொல்லிக் கொள்ள விரும்பு கிறேன். கருப்புச் சட்டைக்காரன் உள்ளவரை ஜாதியை வைத்துச் சாதித்துவிடலாம் என்று யாரும் கனவுகாண வேண்டாம் - அத்திரி பாட்சா கொழுக்கட்டை இங்கு வேகாது - வேகவே வேகாது.

பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்ற உணர்வின் அடிப்படையில்தான் உரிமை மறுக்கப் பட்ட மக்கள் அணி திரட்டப்பட்டனர். அதன் அடிப்படையில் தான் வகுப்புவாரி உரிமை கம்யூனல் ஜி.ஓ.வும் வந்தது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கே முன்னுரிமை!

உரிமைகள் அறவே ஒதுக்கப்பட் டவர்கள் வரிசையில் தாழ்த்தப்பட் டவர்களுக்கு முன்னுரிமை அளிக் கப்பட்டது.

இந்த வரலாற்றையெல்லாம் புரிந்து கொள்ளாமல் பார்ப்பனர் களையும் சேர்த்துக் கொண்டு, ஜாதி கட்சிகளையும் இணைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான அணி என்று திரட்டுவது என்றால் எவ்வளவு மோசமானது பிற்போக்குத்தனமானது.

ஜாதி என்பது ஒரு கொள்ளிக்கட்டை

ஜாதி என்பது சோப்பு அல்ல; சீப்பும் அல்ல; தலையில் சீவிக் கொள்ள; அது கொள்ளிக் கட்டை! அது உங்கள் தலைக்கும் ஆபத்து, உங்கள் வீட்டுக்கும் ஆபத்து - ஏன்; நாட்டுக்குமே ஆபத்து!

ஏதோ ஒரு சில இடங்களில் தவறுகள் நேர்ந்திருக்கலாம். அந்தத் தவறினை சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர தாழ்த்தப்பட் டவர்களே மோசம்  என்று கூறி ஆண்டாண்டுக் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட, தீண்டத்தகாதவர்கள் என்று சேரிகளில் ஒதுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக அணி திரட்டுவது என்றால் அது என்ன கொடுமை!

காவல்துறையில் எங்கோ தவறு நடக்கிறது என்பதற்காக காவல்துறையே கூடாது என்று கூற முடியுமா? காவல்துறை என்ற ஒன்று இல்லா விட்டால் மக்களுக்குப் பாதுகாப்பு எங்கே? இராணுவத்தில் ஏதோ சிலர் தவறுகள் செய்கிறார்கள் என்பதற்காக இராணுவமே கூடாது என்றால் நாட்டின் பாதுகாப்புக்கு எங்கே தேடுவது?

வெறுப்பல்ல - பொறுப்பே!

நம் நண்பர்கள் இதைச் சொல் லுவதற்காகச் சங்கடப்படக் கூடாது. சண்டை போடுவதற்காகவோ தனிப் பட்ட வெறுப்பின் காரணமாகவோ இதனை நாங்கள் எடுத்துக் கூற வில்லை வெறுப்பல்ல - பொறுப்பே இவற்றைச் சுட்டிக்காட்டுவதற்கு முக்கிய காரணம்! தாக்குவதற்கு அல்ல - திருத்துவதற்கே எங்கள் கருத்து.

யாருக்கு முதல் உரிமை?

இந்தக் கூட்டத்தின் வாயிலாக நாங்கள் அறிவிப்பது -  நீண்ட காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னு ரிமை கொடுப்போம். அவர்களிடத் தில் பிளவுகள் இருப்பதையும் நீக்கி ஒன்றுபட்ட சக்திகளாக அவர்களை அணி திரட்ட வேண்டியது நமது கடமை அதனைத் திராவிடர் கழகம் செய்யும் என்று கூறினார் தமிழர் தலைவர்.
********************************************************************************

டாக்டருக்குத் தெரிய வேண்டாமா?

குருதிக் கொடை கொடுக்கிறோமே - ஜாதியைப் பார்த்தா கொடுக்கிறோம்? இந்தந்த ஜாதிக்கு இந்தந்த குரூப் ரத்தம்தான் என்ற நிலை உண்டா? இந்த அடிப்படை உண்மை மற்றவர்களுக்குத் தெரியாமல்கூட இருக்கலாம். டாக்டருக்குத் தெரிய வேண்டாமா? (கைதட்டல்). மனிதன் மரணம் அடைந்த பிறகு  - அவன் உறுப்புகளை நோய் வாய்ப்பட்டவர்களுக்கு அளித்து அவர்களை வாழ வைக்கிறார்கள். மனிதன் செத்தாலும் அவன் உறுப்புகளை வேறு ஒருவனுக்கு மாற்றுவதன் மூலம் அவன் வேறொரு வகையிலே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான். குருதிக் கொடை கொடுக்கும்போது  வராத ஜாதி - உடல் உறுப்புத்தானம் செய்யும்போது வராத ஜாதி - திடீரென்று சில பதவிகளுக்காக குதிக்கிறதே!

----------------------------- திண்டிவனம் கூட்டத்தில் தமிழர் தலைவர் 
**********************************************************************************


தேசிய முன்னணியில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்தபோது தான் மண்டல்குழுப் பரிந்துரைகளின் அடிப் படையில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் அந்த வி.பி.சிங் தமிழ்நாட்டுக்கு வந்தபோது கதவைச் சாத்திக் கொள்ளுங்கள் என்று சொன்னவர்கள் யார்,  கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்து ஆதரவு தெரிவி யுங்கள் என்று சொன்னவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
------------------ திண்டிவனம் பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் 20.10.2013
 **********************************************************************************

இதுவரை சீரங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்த மக்கள் இனி சிறுக னூரைப் பார்க்கப் போகிறார்கள்.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ் சாலையில் உள்ள சிறுகனூரில் நமக்குச் சொந்தமான இடத்தில் 95 அடி உயரத் தில் முழு உருவ வெண்கலச் சிலையை உருவாக்க இருக்கிறோம் - திண்டிவனம் பொதுக் குழு வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த முடிவைத் தீர்மானமாக நிறை வேற்றியிருக்கிறது.

ஏசுநாதருக்குப் பிறகு அவரின் சீடர்கள்தான், அவர் கருத்துக்களைப் பரப்பியதாகச் சொல்லுகிறார்கள்.

புத்தருக்குப் பிறகும், அவரின் சீடர்கள் அந்தப் பணியைச் செய்தனர்.
அது போலவே தந்தை பெரியாருக் குப் பிறகு அவர்களின் சீடர்களாகிய நாம், அவர் விட்ட பணிகளைத் தொடர் கிறோம்.

இன்றைக்கு இந்தக் கூட்டத்தில் நாம் எடுத்த முடிவு சாதாரணமானதல்ல. பெரியார் பேருருவச் சிலையை நிறுவும் பணியை முடிக்க மூன்று ஆண்டுகள் தேவைப்படலாம். 15 டன் வெண்கலம் தேவை - இதற்கு மட்டுமே இன்றைய மார்க்கெட் நிலவரப்படி இரண்டரைக் கோடி ரூபாய் ஆகும்.

எந்தப் பெரும் பணியை நாம் தொடங் கிய போதும் கையில் பணத்தை வைத்துக் கொண்டு தொடங்கிடவில்லையே!

நாம் அணியும் துண்டு எதற்கு?

நாம் நம் தோளில் போட்டுக் கொண் டுள்ள துண்டு எதற்கு? விரிப்பதற்காகத் தான். நீங்களும், உங்களின் முயற்சியால் மக்களும் உதவிய நிதியிலிருந்துதான் இந்தப் பணிகள் எல்லாம் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

சிறு துளி பெரு வெள்ளம் தான் மக்கள் பல்கலைக் கழகமாம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் உருவாகக் காரணமாக இருந்தது. என்னுடைய பிறந்த நாளில் ஆயிரம் சவரன் தங்கம் தருவதாகக் கூறியுள் ளீர்கள். அதற்காக எனது பிறந்த நாள் விழாவை நடத்திட மகிழ்ச்சியோடு உங்களுக்கு அனுமதி தருகிறேன் (பலத்த கரஒலி).

காணாமல் கண்மூட மாட்டோம்!

நம் வாழ்நாளில் இந்த மகத்தான பணியான நமது அறிவு ஆசானுக்கு 95 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவிவிட்டுத்தான் அந்தக் காட்சியைப் பார்த்து விட்டுத்தான் நாம் கண் மூடுவோம்! (பலத்த கரஒலி).

----------------------- திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் கழகத் தலைவர் கி.வீரமணி (20.10.2013)
***********************************************************************************
                      ---------------------------"விடுதலை” 21-10-2013      

13 comments:

தமிழ் ஓவியா said...


இதோ ஒரு பெரியார் உலகம்


திராவிடர் கழக வரலாற்றிலும், தமிழின வரலாற்றிலும் அக்டோபர் 20 (2013) மறக்க முடியாத மகத்தான பொன்னாள்.

இந்நாளில்தான் திண்டிவனத்தில் திராவிடர் கழகப் பொதுக்குழு நடைபெற்றது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 16 - முக்கியத்துவம் வாய்ந்தவை - இன்றைய கால கட்டத்தில் நாடு எதிர்நோக்கக் கூடிய சவால்கள்பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளன - தீர்வுகளை நோக்கி நம் மக்களை மேலாக உந்தித் தள்ளக் கூடியவையாகும்.

மிக முக்கியமாக பொன்னிழைகளால் அடிக்கோடிட் டுத் தெரிவிக்க வேண்டியது சிறப்புத் தீர்மானமாகும்.

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் 95 அடி உயரமுள்ள தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையை நிறுவுவது என்பதுதான் அந்தச் சிறப்புத் தீர்மானமாகும்.

அந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்ட போது, மாநிலக் கழகப் பொறுப்பாளர்களும், தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், மண்டலக் கழகத் தலைவர்களும், செயலாளர்களும், மாவட்டக் கழகத் தலைவர்களும், செயலாளர்களும், பொதுக் குழு உறுப்பினர்களும், தோழர்களும் அடைந்த உணர்வும், உற்சாகமும், கரை புரண்டு ஓட அனைவரும் ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று கையொலி எழுப்பி வரவேற்ற அந்தக் காட்சிதான் என்னே! என்னே!! என்றென்றும் பசுமையாக நம் நெஞ்சக் கண்ணாடியில் நிழலாகக் கூடிய அரிய காட்சியாகும். நமது கழகத் தலைவரின் எண்ணத்தில் உதித்த இந்தக் கருத்துரு - திட்டம் அவர்தம் சிந்தனையில் தந்தை பெரியார் பற்றியே சதா அசைபோட்டுக் கொண்டிருக்கும் விளைவின் விளைச்சல் ஆகும்.

தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளில் (டிசம்பர் 2) முதற் கட்டமாக ஆயிரம் சவரன் தங்கத்திற்கான தொகையை வழங்குவது என்று சிறப்புத் தீர்மானம் கூறுகிறது.

வரலாற்றில் என்றும் நிலைக்கத் தக்க - நினைக்கத்தக்க பொன்னெழுத்துக்களால் பொறிக் கத்தக்க வரலாற்றுச் சாதனையை - தந்தை பெரியாருக்குத் தமிழர்கள் ஆற்றித் தீர வேண்டிய நன்றிக் கடனை வெற்றிகரமாகச் செய்து சாதித்துக் காட்டிட இப்பொதுக்குழு உறுதி கொள்கிறது! உறுதி கொள்கிறது!! என்ற சிறப்புத் தீர்மான வாசகம் என்றென்றும் பேசப்படக் கூடியது.

அந்த உறுதியை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அந்தத் தருணத்திலேயே கழகத் தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளிப்படுத்தியது சாதாரணமானதல்ல.

61 கழக மாவட்டங்கள் இருக்கின்றன. மாவட்டத்திற்கு 15 சவரனுக்கான தொகையைத் திரட்டினால்கூட ஆயிரம் சவரன் என்பது எளிதான இலக்கே!

தமிழர் சமுதாயமே தந்தை பெரியார் அவர்களின் தனிப் பெருந் தொண்டின் கருணை மழையால் செழித்துக் குலுங்குகிறது என்றாலும் நேரடியாகப் பயன் பெற்ற வர்கள் ஓராயிரம் பேர்களாவது இருக்க மாட்டார்களா?

நம் தோழர்கள் பட்டியலிட்டு அவர்களை அடையாளங் காண வேண்டியதுதான் முக்கியம். கழகத்திற்கு அப்பாற்பட்ட எத்தனையோ நன்றி உணர்வு மிக்க பெரு மக்கள் இருக்கத்தான் செய்வார்கள். பட்டியல் தயார் செய்து விட்டால் முயற்சி திருவினை ஆக்கும் என்பதில் அய்யமில்லை.

அத்தகையவர்களின் பட்டியலை தயார் செய்ய முன்கூட்டியே சூட்டோடு சூடாக அனைத்துக் கழக மாவட்டங்களிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர். மாநில தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், இந்தக் கலந்துரையாடல் கூட்டங்களை சிறப்பாக ஏற்பாடு செய்து ஒரு தோழர்கூட விடுபடாமல் அனைவரும் பங்கு கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்னும் 40 நாட்கள் இடைவெளி இருக்கிறதே என்று எண்ண வேண்டாம் - ஒரே வாரத்தில் இந்த இலக்கை எட்டும் வகையில் வீதியில் இறங்கினாலே போதும் - நாங்களே எதிர்பார்க்கவில்லை - எளிதாக இந்தப் பணி நிறைவேறி விட்டதே என்று வியப்புக்குறியாக மாறும் அளவுக்கு - பெரியாருக்குப் பேருருவச் சிலை என்ற தகவலை நம் தமிழர்கள் கேட்ட அளவிலேயே அவர்கள் மத்தியில் ஆர்வப் பெருக்கு கரை புரண்டு ஓடுவதை நாம் அறிய முடியும்!

கழகத் தோழர்களே! நம் வாழ்வில் எத்தனை எத்தனையோ களங்களைக் கண்டுள்ளோம், பிரச்சாரக் களங்கள் உண்டு, போராட்டக் களங்களுக்கு பஞ்சமே யில்லை.

இந்தக் களமோ வரலாற்றுக் களம் - வருங்கால சந்ததியினருக்கு ஓர் உலகத் தலைவரை - உயர் எண்ணங்கள் மலரும் சோலையை - புத்துலகம் பூக்க புரட்சிக் கருத்துக்களை வாரி வாரி வழங்கிச் சென்றுள்ள வரலாற்று நாயகராம் உலகத் தலைவர் பெரியாருக்கு 95 அடி உயரத்தில் வெண்கலத்தால் சிலை செதுக்கி வைப்பதற்காக நாம் மேற்கொள்ளும் இந்தக் களம் - இன்பக் களம் - நம் வாழ்வில் நாம் ஆற்ற வேண்டிய கடமைக்களம் - நன்றிக்களம் - இந்த வரலாற்றுச் சாதனையில் நமது பங்கும் உண்டு என்று எண்ணிப் பார்க்கும் பொழுது இறும்பூதெய்தும் இணையற்ற களம் இது என்பதை மறவாதீர்! மறவாதீர்!!

தமிழ் ஓவியா said...


சிறப்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழு


திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம் 20.10.2013 ஞாயிறு காலை 11 மணிக்கு திண்டிவனம் எம்.ஆர்.எஸ். வண்ணமயில் திருமண மண்டபத்தில் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு தலைமையில் நடைபெற்றது.

மாநில மாணவரணி செயலாளர் பிரின்ஸ் என்.ஆர்.எஸ். பெரியார் கடவுள் மறுப்புக் கூறினார். திண்டிவனம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கா.மு.தாஸ் அனைவரையும் வரவேற்று உரையாற் றினார்.

முதலாவதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் கடந்த திண்டுக்கல் பொதுக் குழுவுக்குப் பிறகு இதுவரை நடைபெற்ற கழகச் செயல்பாடுகளைச் சிறப்பாக எடுத்துரைத்தார்.

ஆப்பிரிக்கா கண்டத்தில் தந்தை பெரியார் கருத்துக்கள் பரவி வரும் தன்மையை விளக்கினார்.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் தீர்மானங்களை முன்மொழிந்தார் (தீர்மானங்கள் நேற்று விடுதலையில் வெளி வந்து விட்டன).

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூரில் 95 அடி உயரத்தில் முழு உருவ வெண்கலச் சிலை, பெரியார் அருங்காட்சியகம், நூலகம் - குழந்தைகள் பூங்கா, உள்ளிட்ட பெரியார் உலகம் உருவாக்குவது தொடர்பான சிறப்புத் தீர்மானத்தினை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் முன்மொழிந்தார். பெரியார் உலகம் என்று கழகத் தலைவர் பெயர் சூட்டியுள்ளார்.

தமது குடும்பத்தின் சார்பில் ஒரு சவரனுக்கான ரூ.25 ஆயிரத்துக்கான காசோலையை கழகத் தலைவரிடம் துணைத் தலைவர் அளித்தார். அனைவரும் எழுந்து நின்று பலத்த கரஒலி எழுப்பி அத்தீர் மானத்தினை ஆதரித்து வரவேற்றனர்.

குறும்படம்

பெரியார் உலகம் எப்படி இருக்கும் என்பதற்கான முன்னோட்டக் குறும்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. எல்லோரும் பார்த்து மகிழ்ந்தனர். தொடர்ந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி, கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை ஆகியோர் உரையாற்றிய பிறகு நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

விடுதலை சந்தாக்களையும், 95 அடிஉயர முழு உருவப் பெரியார் வெண் கலச் சிலை அமைப்புக்கு நிதியையும் உற்சாகமாக வழங்கிய வண்ணமே இருந்தனர்.

மாவட்டக் கழகச் செயலாளர் நவா. ஏழுமலை நன்றி கூறிட, திண்டிவனம் திராவிடர் கழகப் பொதுக் குழு பெருஞ் சிறப்புடன் நிறைவுற்றது. அனைவருக்கும் சிறப்பான மதிய விருந்து அளித்து உபசரிக்கப்பட்டது.

தமிழ் ஓவியா said...


உயர் தர்மம்!


இன்று பார்ப்பனர்கள் எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்பதை உயர் தர்ம மாக அல்லவா கொண்டிருக்கிறார்கள்!
(விடுதலை, 11.9.1972)

தமிழ் ஓவியா said...


அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - பார்க்கலாம்

கேள்வி: பி.ஜே.பி.யுடன் தி.மு.க. கூட்டணி வைத்துக் கொண்டால் திராவிடர் கழகம் ஆதரிக்குமா?

பதில்: அத்தைக்கு மீசை முளைக்கட்டும் - அதன்பின் பார்க்கலாம்.

- திண்டிவனத்தில் செய்தியாளர்கள் கூட்டத்தில் கழகத் தலைவர் கி.வீரமணி (20.10.2013)

தமிழ் ஓவியா said...

கடவுளை எதிர்த்து

செய்தி: திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோயிலில் மேலும் ஒரு கன்று சாவு. இந்து முன் னணி உண்ணாவிரதம்!

சிந்தனை: நியாய மாக அருணாசலேஸ்வரரை எதிர்த்து அல்லவா போராட வேண்டும்? உம் மிடம் காணிக்கையாக அளிக்கப்பட்ட கன்றைக் காப்பாற்றாத நீயும் ஒரு கடவுளா என்று அல்லவா கேட்க வேண்டும்?

தமிழ் ஓவியா said...


புருடா விட்ட சாமியார்


பொய் அம்பலமானதால் மொட்டை அடித்து கொண்ட பரிதாபம்!

லக்னோ, அக். 22- உ.பி.சாமியார் முதல் கனவுப்படி குறிப்பிட்ட கோவிலில் தங்கம் இல்லை என்பதால் அவர் மன முடைந்து மொட்டை அடித்து விட்டு ஆசிரமம் திரும்பினார். 2-ஆவது முறை கனவு கண்டதாக கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட் டுள்ளதை கனவில் கண்டதாக சாமியார் அறிவித்துள்ளார்.

உ.பி.மாநிலம் உண் னாவ் நகரில் தோண்டியா கேடா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத் தில் உள்ள ராஜாராவ் ராம் பக்ஸ்சிங் என்ற மன்னரின் கோட்டை யில் 1000 டன் தங்கம் புதைந்திருப்பதாக சோபன் சர்க்கார் என்ற சாமியார் கூறினார். தங் கம் புதைக்கப்பட்டிருப் பதை, தான் கனவில் கண்டதாக சாமியார் அறிவித்தார். இதனால் இந்திய தொல்லியல் துறை அதி காரிகள் அங்கு தங்க வேட்டைக்குச் சென் றனர். அவர்கள் அந்த கிராமத்தில் மண்ணைத் தோண்டும் பணியைத் தொடங்கினர். இந்த சம் பவம் இந்தியா முழு வதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் தொல் பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் அந்த கோவி லில் எதிர்ப்பார்த்தப்படி தங்கம் இல்லை என்று தெரிவித்ததாக கூறப் படுகிறது. இதனால் மனம் நொந்த சாமியார் மொட்டை அடித்து விட்டு தன் ஆசிரமத் திற்கு திரும்பிவிட்டார். மேலும் தங்க வேட்டைப் பற்றி பத்திரி கைகளுக்கு சொல்வதற்காக அமைத்த குழுவையும் கலைத்துவிட்டார்.
தற்போது அவர் கான் பூரில் தங்கி யுள்ளார்.

இன்னொரு கனவாம்!

இந்நிலையில் சாமி யார் சோபன் சர்க்கார் தான் 2-ஆவது முறை கனவு கண்டதாகக் கூறியுள் ளார். உ.பி. மாநிலத்தில் உள்ள பதேபூர் மாவட் டத்தில் ஆதம்பூர் என்ற கிராமம் உள்ளது. சாமி யார் சோபன் சர்க் காரின் 2-ஆவது கனவு பற்றிய அவரது செய்தித் தொடர்பாளர் சுவாமி ஓம் அறிவிப்பினை வெளி யிட்டார். ஆதம்பூர் கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட்டி ருப்பதாக சாமியார் கனவில் கண்டுள்ளார் என சுவாமி ஓம் அறி வித்தார்.

ஆதம்பூர் கிராமம் கங்கை நதிக் கரையில் அமைந்துள்ளது. சாமி யாரின் செய்தித் தொடர் பாளர் சுவாமி ஓம் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள் ளார். சாமியார் கூறி யுள்ள இடத்தில் பூமியைத் தோண்டும் பணியைத் தொடங்கும் படி சுவாமி ஓம் கோரிக்கை விடுத் துள்ளார்.

மாவட்ட மாஜிஸ் திரேட் அபய் குமார் இதுபற்றி விளக்கம் அளித்தார். சாமியார் கனவில் கண்டு கூறி யதைப் போல் ஆதம்பூர் கிராமத்தில் 2500 டன் தங்கம் புதைக்கப்பட் டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண் டும். இதற்காக இந்திய தொல்லியல் துறை அதி காரிகள் குழுவினையோ அல்லது மற்ற புவியியல் நிபுணர்களையோ அனுப் பும்படி மத்திய அரசுக்கு தான் கோரிக்கை விடுத் துள்ளதாக அபய்குமார் கூறினார்.

சாமியார் கூறியுள்ள இடத்தில் சமூக விரோ திகள் ஏதாவது தீமை புரியாமல் இருப்பதற் காக பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட் டுள்ளதாக அபய்குமார் தெரிவித்தார்.

சமூக விரோதிகள்

சாமியாரின் 2-ஆவது கனவு பற்றி தகவல் ஆதம்பூர் கிராமத்தில் வெளி யானவுடன் சில சமூக விரோதிகள் சட்ட விரோத செயலில் ஈடு பட்டனர். ஆதம்பூர் கிராமத்தில் கங்கை நதியின் முக்கிய படித் துறையில் பழங்கால சிவன் கோயில் உள்ளது. தங்கம் புதைக்கப்ட்டுள் ளதாக சாமியார் கூறிய தால் இந்த சமூக விரோ திகள் சிவன் கோயிலின் உறுதியான நடை மேடையை நேற்று முன்தினம் இரவு தோண்ட ஆரம்பித்து விட்டனராம்.

தமிழ் ஓவியா said...


ஜாதீய கூட்டணியை முறியடிப்போம்!

திண்டிவனத்தில் 20.10.2013 ஞாயிறு அன்று, நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத் தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றுள், மதவாதக் கூட்டணியையும், ஜாதீய கூட்டணியையும் முறியடிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஜாதீய கூட்டணியை ஏன் எதிர்க்க வேண்டும்? என்பது குறித்து, திண்டிவனத்தில் அன்று மாலை நடைபெற்ற திராவிடர் கழக தீர்மான விளக்கப் பொதுக் கூட்டத்தில் விரிவாக எடுத்து வைத்தார் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்.

சில வாரங்களுக்கு முன் சென்னையில் தாழ்த்தப்பட்ட மக்களைத் தவிர்த்து ஜாதீய கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது. பார்ப்பனர் சங்கமும் இடம் பெற்றிருந்தது குறிப் பிடத்தக்கதாகும்.

தாழ்த்தப்பட்டவர்கள் புறக்கணிப்பு - பார்ப் பனர்கள் இணைப்பு என்பதன் மூலம் இந்தக் கூட்டணியின் ஆணி வேர் நாசகரமானது - பிற்போக்குத்தனமானது; முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக தந்தை பெரியார் அவர்களும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் இயக்கமும் அரும்பாடுபட்டு உருவாக்கிய அடிப்படை சமூக நீதித் தத்துவத்துக்கு எதிரான பிற்போக்கு அமைப்பு இது என்பது வெளிப்படை.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனர்களை உள்ளடக்கிய எந்த ஓர் அமைப்பும் தமிழ்நாட்டு மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டே தீரும் என்பது கடந்த கால வரலாறு உணர்த்தும் உண்மையான பாடமாகும்.

பல தேர்தல்களில் ஜாதிக் கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது உண்டு, அவற் றிற்குத் தமிழ் நாட்டு மக்கள் அளித்த தண்டனையை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது. மறந்தனர் என்றால், அவர்கள் மற்றுமொரு முறை மரண அடி வாங்கத் தயாராகி விட்டனர் என்று பொருள்.

தந்தை பெரியார் பெயரை அடிக்கடி உச்சரித்தும், தொண்டர்களைச் சில நேரங்களில் கறுப்புடை அணியச் செய்தும் நாங்கள்தான் பெரியார் வழி வந்தவர்கள் என்று மார் தட்டும் ஒரு கட்சியின் தலைவர் எங்கள் கட்சியில் பார்ப்பனர்களைச் சேர்ப்பதில்லை என்றெல்லாம் பேசி வந்தவர்கள் இன்று ஜாதிகளைத் தேடி அலைகிறார்கள்; பார்ப்பனர்களின் அமைப்பு தங்களிடம் இணைந்து கொண்டது குறித்துப் புளகாங்கிதம் அடைகின்றனர் என்றால் இத்தகையவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் எளிதாக அடையாளம் காண்பார்கள் என்பதை, இப்பொழுதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

ஜாதியின் பெயரில் அமைப்பை உண்டாக்கி, அது சரிப்பட்டு வராது என்று அனுபவத்தில் உணர்ந்து அரசியலில் எடுபடும் என்று ஜாதியை அடையாளம் காட்டாத பெயரைச் சூட்டிக் கொண்டவர்கள் மறுபடியும் ஜாதி அடையாளங்களைத் தேடி அலைவது அவர்களின் வீழ்ச்சியைப் பறைசாற்றக் கூடியதாகும்.

கொள்கைகளும், சித்தாந்தங்களும், இலட்சியங் களும் கைவிடப்பட்ட கையறு நிலையில், ஜாதியை ஆலிங்கனம் செய்வதானது அவர்களின் வெறு மையையே வெளிப்படுத்தும்.

இதற்குமேல் தமிழ் உணர்வு, இனவுணர்வு ஈழத் தமிழர் பிரச்சினை, பெரியார் கொள்கை பற்றிப் பேச முயன்றால் அதனை மிகப் பெரிய கேலியாகத்தான் தமிழினப் பெரு மக்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த முடிவு அனேகமாக அரசியலில் ஒரு முடிவு ரையைத் தங்களுக்குத் தாங்களே எழுதி முடித்துக் கொண்டார்கள் என்பதற்கான முன்னறிவிப்பாகும்.

இடஒதுக்கீட்டுக்கு எதிரான பார்ப்பனர்களைத் தங்கள் கூட்டில் இணைத்துக் கொண்டு சமூக நீதியைக் குறித்து வாய் திறக்க இயலாத நிலையைத் தங்களுக்குத் தாங்களே, உருவாக்கிக் கொண்டு விட்டனரே!

திண்டிவனம் பொதுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையில் திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டினை, மிக உறுதியாக தெளிவாக திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

சமூகத்தில் மிகவும் கடுமையாக ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இழிவுப்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுத்து முன்னேற்றப் பாதையில் அழைத்து வருவது, நமது முதற் கடமை என்று பிரகடனப்படுத்தி விட்டார்.

எந்தத் தாழ்த்தப்பட்ட மக்களைத் தள்ளி வைக்க முனைகிறார்களோ அந்தத் தாழ்த்தப்பட்டவர் களுக்கு அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை கொடுத்து முதன்மையான இடத்துக்குக் கொண்டு வரவேண்டியதுதான். உண்மையான சமூக நீதி யாகும். அதனைத் திராவிடர் கழகம் செய்யும்.

தமிழ் ஓவியா said...


பெரிதாக்குகிறார்கள்

தண்ணீரில் வீழ்ந்து உயிருக்கு மன்றாடுபவன் ஒரு புல் மிதந்து வந்தாலும் அதைப் பிடித்துக் கொண்டு கரையேற நினைப்பது போல், இன்று பார்ப்பனரும், அவர்கள் கூட்டாளிகளும் பதவி ஆசையால் அற்பக் காரியங்களை யும் பெரிதாக்குகிறார்கள்.
(விடுதலை, 12.7.1972)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம் - காவல் துறையின் கடமை


மானமிகு ஆசிரியர் விடுதலை அவர்களுக்கு வணக்கம்.

தமிழ்நாட்டில் யாரும் செய்ய முன்வராத, பயப்படுகிற சமுதாயப் பெரும் பணியை துணிவுடன் செய்து, மனித சமத்துவம் இழிவு நீக்கம், கல்வி பொருளாதாரம், வேலை வாய்ப்பு, தமிழ் இன உணர்வு, சுயமரியாதை வாழ்வு ஆகியனவற்றை அளித்த வள்ளல் பெரியார் தமிழர்களுக்கு உத்தியோக உரிமை அரசு உரிமைகளும் பெறச் செய்தார்.

தனது 95 ஆண்டு கால வாழ்க்கை யில் தொடர்ந்து சுமார் 60 ஆண்டு காலம் பொது சேவையில் உடல் பொருள் தனது அறிவு ஆற்றல் யாவற்றையும் அளித்து பெரியார் தமிழர்களை நல்வாழ்வு பெறச்செய்ததார். அதே பெரும் பணியை திராவிடர் கழகத் தலைவர் பெரியார் காட்டிய வழியில் நேர்மையாகவும் அமைதியாகவும் வன் முறைக்கு இடங்கொடாது சமுதாயத் தொண்டு சுமார் 70 ஆண்டுகளாக செய்து வருகின்றார். தமிழ் நாட்டுக்கும் மக்களுக்கும் பல சாதனைகளை செய் துள்ளார் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவரை பார்ப்பனர் தூண்டுதலால் நம் தமிழ் மக்கள் சரியான புரிதல் அறிவில் லாமல் வன்முறை கொலைவெறித் தாக்குதலில் 28.92013 விருத்தாசலத் தில் ஈடுபட்டு இருக்கின்றனர். தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு சரியான பாதுகாப்பு அளிக்கக் காவல்துறையும் பாராமுகமாய் கண்டு கொள்ளவில்லை. பெரியார் யார்? திராவிட இயக்கக் கொள்கை எப்படிப்பட்டது. ஒரு உதாரணம் (மனித நேயம்) 10.8.1948-இல் இரண்டாம் இந்தி கிளர்ச்சியின் போது கும்பகோணத்தில் தி.க.தொண் டர்களுக்கு அறிவுரை கட்டுப்பாடு அமைதி தேவை, வன்முறைக்கு இடங் கொடுக்க கூடாது. காவலர்கள் உங்களை அடிக்க நேர்ந்தால் அவர் களுக்கு வசதியாக உடலைக் காட்ட வேண்டும் என்று கூறுகிறார். அதுவே தலைவர் கி.வீரமணி அவர்களின் கொள்கையாகும் திராவிடர் இன உணர்வு லட்சியமாகும்.

அதனாலேயே 1965 காங்கிரசு இயக்கம் பக்தவத்சலம் அவர்களின் ஆட்சியின் போது திமுக கிளர்ச்சி மிகவும் கடுமையாக மணப்பாறையிலி ருந்து அதனால் மிகவும் பாதிக்கப்பட்ட காவல்துறையினர் சுமார் 30 பேர் களுக்கு மேல் திராவிடர் கழக தோழர்கள் உதவியுடன் இடத்தெரு என் வீட்டிற்கு இரவில் காட்டுப் பாதையில் அழைத்து வரப்பட்டு அவ் விதமாகவே காட்டுப் பாதை வழியே இனஉணர்வுடன் அவர்களை பாது காப்பாக காவல் நிலையத்தில் சேர்த் தது, எங்கள் நினைவில் பசுமையாக உள்ளது. மேலும் மறுநாள் பெரும் அளவு காவல் துறையினர் பலப்படுத்தப்பட்டு கலவரம் முடிவுக்கு வந்தது மேலும் பெரியார் காமராசர் காங்கிரசை ஆதரித்த நேரம் தமிழ்நாடு சமூக ஆர்வலர்கள் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உரிய பாதுகாப்பு அளிப்பது காவல்துறை கடமையாகும்.

- அ.இனியன் பத்மநாபன், ஈரோடு

தமிழ் ஓவியா said...


இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது: சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற கலைஞர் வேண்டுகோள்


சென்னை, அக்.22- இலங்கையில் நடைபெற வுள்ள காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறினார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:-

இலங்கைத் தமிழர்கள் மீது சிங்கள அரசு மனிதாபிமானம் சிறிதுமின்றி தொடர்ந்து தாக்குதல் நடத்துவதை எதிர்த்தும், இலங்கை அரசின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களை சுட்டிக்காட்டியும், 2009 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை கொன்று குவித்து இனப்படுகொலை நடத்திய தைக் கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று டெசோ இயக்கத்தின் மூலமாக பேரழுத்தம் கொடுத்திடும் வகையில் கடுமையாகவே தெரிவித்திருக்கிறோம்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

நம்மைப்போலவே தமிழகத்திலே வேறு சில முக்கியமான கட்சிகளும், மாணவர் இயக்கங் களும், குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் 15.10.2013 அன்றும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் 16.10.2013 அன்றும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்த அறிக்கைகளில், இலங்கை யில் நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்றும், அந்த மாநாட்டினை இந்தியா புறக்கணிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

தமிழக அரசின் சார்பிலும் 18.10.2013 அன்று முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு இதே வேண்டுகோளை கடிதத்தின் மூலம் தெரி வித்திருக்கிறார். ஏன் அதற்கு முன்பே 25.3.2013 அன்றும் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கொழும்பில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கவேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

கனடா இந்த மாநாட்டை புறக்கணித்து ஏற்கெனவே தகவல் தெரிவித்திருப்பதும், இங்கிலாந்து நாட்டிலே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையிலே இந்த மாநாடு நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவித்தி ருப்பதும் குறிப்பிடத்தக்க திருப்பங்களாகும்.

தோழர் தியாகு இதே வேண்டுகோளையும் இணைத்து சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு கடிதம் எழுதி இருந்தார்.

பிரதமர் எழுதிய கடிதத்தில், காமன்வெல்த் மாநாட்டில் நான் பங்கேற்பது குறித்து, உங்கள் கட்சி (தி.மு.க.) மற்றும் தமிழர்களின் உணர்வு களை மதித்தே இந்த விஷயத்தில் முடிவு எடுப் போம். தி.மு.க. தலைவர் கலைஞர் தலையிட்டு, தியாகு உண்ணாவிரதத்தை கைவிடவேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

சட்டசபையில் தீர்மானம்

அதன் அடிப்படையில் மீண்டும் ஒருமுறை இந்த பிரச்சினையில் ஒட்டுமொத்த தமிழகத் தின் உணர்வும் ஒருமுகப்பட்டிருக்கிறது என் பதை தெரிவிக்கும் வகையிலும் - தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளும் மற்ற பிரச்சினை களில் வெவ்வேறு கருத்திலே இருந்தாலும், ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதில் அனைவரும் ஒன்றிணைந்து ஈடுபட்டிருக்கிறோம் என்பதை உலக சமூகத்திற்கு நிரூபிக்கும் வகையிலும் தமிழக சட்டமன்றத்தின் வாயிலாக ஏகமனதாக ஒரு தீர்மானத்தினை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பது சிறப்புடையதாக இருக்கும்.

எனவே சட்டமன்றத்தில் அத்தகையதொரு தீர்மானத்தை நிறைவேற்றிட ஆளுங்கட்சி முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...


மதவாத சக்திகளை முறியடிப்போம்!


திண்டிவனத்தில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுள் மற்றொரு முக்கியமான ஒன்று - மதச் சார்பின்மைக்கு விரோதமான மதவாத சக்திகளை முறியடிப்பதாகும்.

தீர்மானம் வருமாறு:

மதச்சார்பின்மைக்கு விரோதமான, இந்துத்துவா என்கிற நிகழ்ச்சி நிரலை (ஹழுநுசூனுஹ) கையில் எடுத்துக் கொண்டு, குஜராத் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராகப் பெரும் வன்முறைகள் தூண்டப்பட்டதற்குக் காரணமாக இருந்த ஒருவர் பிரதமருக்கான வேட்பாளர் என்கிற முறையில் திக்விஜயம் போல் புறப்பட்டு இருப் பதும், அதற்கு இந்த நாட்டில் உள்ள பார்ப்பன ஊடகங் களும், இந்துத்துவா சக்திகளும், பெருமுதலாளிகளும் பின்புலத்தில் பலமாக இருந்து வருவதையும் எச்சரிக் கையுடன் சுட்டிக்காட்டி, இந்த ஆபத்திலிருந்து நாட்டி னைக் காத்திட மதச்சார்பின்மைக் கொள்கை உடையோர் மற்றும் சமூகநீதி கொள்கையாளர்கள் அரசியல் வேறுபாடுகளை ஒதுக்கிவைத்து ஒன்று சேரவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

திராவிட இயக்கம் என்று சொல்லிக்கொள்ளும் எந்த அரசும், எந்த கட்சியும் பி.ஜே.பி.க்குத் துணை போகு மானால், அது திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கும், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஊட்டிய உணர்வுகளுக்கும், கொள்கைகளுக்கும் முற்றிலும் முரணானது என்பதோடு, அத்தகைய வர்கள் வரலாற்றுக் குற்றத்தைச் செய்த பழிக்கு ஆளாவார்கள் என்பதையும் இப்பொதுக்குழு தொலைநோக்கோடு வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியாவைப்பற்றிச் சொல்லும்பொழுது எல்லோரும் ஒன்றைச் சொல்லுவது உண்டு. பன்முகத்தன்மை கொண்டது என்பதுதான் அது. பல இனங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள், மத நம்பிக்கையற்றவர்கள் எல்லோரையும் கொண்ட சீனாவுக்கு அடுத்தபடியாக பெரும் மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். அரசமைப்புச் சட்டப்படி மதச்சார்பின்மைக் கொள்கையைக் கொண்டது மாகும்.

பி.ஜே.பி. என்பது இவற்றை ஏற்றுக்கொள்கிறதா? திருச்சியில் பேசிய பிரதமருக்கான பி.ஜே.பி. வேட்பாளர் நரேந்திர மோடி என்ன கூறினார்?

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைக் குறைகூறிப் பேசினாரே - மாநிலங்களே இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் கொள்கை என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதே!

மொழிவாரி மாநிலங்கள் கூடாது என்றால் இதன் பொருள் என்ன? இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி பேசும் இன மக்களும் தங்கள் அடையாளங்களை இழந்துவிட்டு, இந்துத்துவா கடலில் கரைந்துவிட வேண்டும். ஒரே நாடு- பாரத நாடு, ஒரே மதம்- ஹிந்து மதம், ஒரே மொழி - சமஸ்கிருதம் என்கிற ஹிந்துத்துவா நிகழ்ச்சி நிரலைத் (அஜெண்டா)தானே மறைமுகமாக மோடி கூறிச் சென்றுள்ளார்.

அரசமைப்புச் சட்டத்தில் கூறியுள்ள மதச்சார்பின்மைக் கொள்கையை இவர்கள் ஏற்றுக்கொள்வது உண்மையானால், எங்களுக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அயோத்தியில் ராமன் கோவில் கட்டுவோம் என்று சொல்லுவார்களா?

ஹிந்துராஷ்டிரம் அமைப்பதுதான் எங்கள் கொள்கை என்று சொல்லுபவர்கள் எப்படி மதச்சார்பின்மைக் கொள்கைக்கு உரியவர்கள்?

சுருக்கமாகச் சொல்லப்போனால், இந்தக் கொள்கைகள் எங்களுக்கு உடன்பாடானவையல்ல என்று திட்டவட்டமாக எழுத்துபூர்வமாக, அதிகாரபூர்வமாக அறிவித்த நிலை யில்தான் தேர்தலில் நிற்கவே சட்டப்படி உரிமைப் படைத்தவர்கள் ஆவார்கள்.
உள்ளொன்று வைத்து வெளியில் ஒன்று பேசும் நயவஞ்சக அமைப்பு ஒன்று இந்தியாவை ஆளவேண்டும் என்று துடிக்கிறது - இது ஆரோக்கியமானதுதானா?

உச்சநீதிமன்றத்திலே உத்தரவாதம் கொடுத்த பிறகு, அதற்கு மாறாக அயோத்தியில் ராமன் கோவிலை இடித்தார்களே! அதற்குப் பி.ஜே.பி.யின் பெருந்தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்களே துணை போனார்கள், வழிகாட்டினார்கள் என்றால், எத்தகைய ஆபத்தான நிலை!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாற்றுப் பட்டியலில் முதல் வரிசையில் உள்ள இவர்கள், அதற்குப் பிறகு இந்தி யாவின் துணைப் பிரதமராகவும், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்த வெட்கக்கேட்டை என்னவென்று சொல்ல!

இன்றைக்கு பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ள மோடி யார்? அவர் முதல மைச்சராக இருந்த நிலையில்தானே - மாநிலத்தில்தானே இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்?

குறைந்தபட்சம் அதற்கு ஒரு வருத்தம் தெரிவிக்கக் கூடத் தயாராக இல்லையே! தான் காரில் செல்லும்பொழுது ஒரு நாய்க்குட்டி அடிபட்டால் ஏற்படும் சோகம் போன்றதுதான், குஜராத்தில் கொலை செய்யப்பட்டதும் என்று ஆயிரம் ஆயிரம் இடிஅமீன்கள்போல பேசக்கூடிய ஒரு மத வெறியர்தான் இந்தியாவுக்கான பிரதமரா? இப்படிப்பட்ட ஒருவரை அறிவிப்பதற்கு அந்தக் கட்சிக்குத்தான் எப்படிப்பட்ட புத்தி இருக்கவேண்டும்?

குஜராத் ஒளிர்கிறது என்று பொய் வெளிச்சத்தைக் காட்டிக் கண்களைக் கூசச் செய்து வாக்குகளைத் திருடி விடுவார்கள் - எச்சரிக்கை! எச்சரிக்கை!!

தமிழ் ஓவியா said...


பதவி ஆசை


பதவி ஆசையில் மிதக்கிறவர்கள் எப்படிப்பட்ட அற்ப இழிவான அயோக்கியத்தனமான காரியத்தையும் செய்து வெற்றி பெறவே பார்ப்பார்கள். அவர்களிடம் சுயநலம் தவிர மனிதப் பற்றோ நாட்டுப் பற்றோ சிறிதளவும் காண முடியாது.
(விடுதலை, 3.5.1965)

தமிழ் ஓவியா said...


சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு


சென்னை, அக்.23- உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சீனம் மற்றும் அரபு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்படுவதாக அரசு செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம் தெரிவித்தார்.

இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- உலகத் தமிழாராய்ச்சி நிறு வனத்தில் நேற்று முன் தினம் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மூ.ராசாராம் தலை மையில் மொரீசியஸ் நாட்டின் முன்னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் கலந்து கொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அரசு செயலாளர் மூ.ராசாராம், உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் நிறுவப்பட இருக்கும் திருக்குறள் காட்சி கூடம் பற்றியும், சீனம் மற்றும் அரபு உலக மொழிகளில் திருக் குறள் மொழி பெயர்க்கப்படுவது பற்றியும் எடுத்துக்கூறினார்.

மொரிசியஸ் நாட்டு அமைச்சர்

மொரிசியஸ் நாட்டின் முன் னாள் கல்வி அமைச்சர் ஆறுமுகம் பரசுராமன் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், மொரி சீயஸ் நாட்டின் அமைச்சராக இருந்த 1983 முதல் 1995 வரை யிலான காலத்தில் மொரீசியஸ் நாட்டில் தமிழ் வளர்ச்சிக்கென்றும், தமிழர்களுக் கென்றும் தாம் ஆற்றிய பல்வேறு பணிகளைப் பற்றி எடுத்துக் கூறினார்.

நிறைவாக, உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் நன்றி கூறினார்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.