Search This Blog

28.5.11

தனி அறையில் உதட்டோடு உதடாக முத்தமிட்ட சாய்பாபாவின் காம லீலைகள்!

சாய்பாபாவின் மறுபக்கம் 3

இந்தியாவில் தற்போதைக்கு பாபா மீது குற்றச்சாற்றுகள் எதுவும் பதிவாக வில்லை. அப்படியெனில் பெரும் பாலான பாபாவின் பாலியல் ஒழுங்கீனங்கள் மேற்கத்திய நாட்டினருடன் மட்டுமே நடந்ததா? அமெரிக்கரான ஜெட் கேயெஹார்ன் இதை மறுக்கிறார்.

பாபா தன்னை 16 வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சொல்லும் அவர் மேற்கத்திய இளைஞர்கள் பயமின்றி வெளியே சொல்கிறார்கள். இந்திய சிறுவர்கள் உள் நாட்டிலேயே இருப்பதால் பயத்தில் மூச்சு விடுவ தில்லை; அவ்வளவுதான் என்கிறார். பாபாவிற்கு இந்தியாவெங்கும் செல்வாக்கு இருப்பதை விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேற்கத்திக்காரர்களில் கூட ஒருவரைத் தவிர வேறு யாரும் பாபாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வில்லை. எல்லா குற்றச்சாற்றுகளும் இந்திய சட்ட வரம்பிற்கு உட் பட்ட வையாதலால் பாபாவை நீதிமன்றத்துக்கு இழுக்கும் செல்வாக்கு தங்களுக்கு இல்லை என்பதை பாதிக்கப்பட்ட வர்கள் உணர்ந்திருப்பதே காரணம் என்கிறார்கள் விமர்சகர்கள்.

தவிர, இந்தியாவில் வழக்கை பதிவு செய்தாலும் ஓரினச் சேர்க்கை வன்முறையை நிரூபிப்பது கடினம். அத்தகைய குற்றம் இ.பி.கோ. பிரிவு 377_இன் கீழ் வரும் என்றும் இதன்படி ஹோமோ செக்ஸூவல் வன்முறை (ஸோ டோமி) உறவு சட்டப்படி தவறு என்று வகைப் படுத்தப்பட்டுள்ளது என்று கிரிமினல் சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் எழுந்துள்ள புகார்களில் எதுவுமே வன்முறை பற்றிச் சொல் லாததால் முறைகேடாக நடந்து கொண்டதை நிரூபிப்பது கடினம் என்கிறார்கள்.

ஆனால் முன்னாள் சாய்பாபா பக்தர்கள் விடுவதாக இல்லை என் கிறார்கள். ஏதாவது ஒரு வகையில் சட்ட நடவடிக்கையை முடுக்கிவிட்டால் நெருக்கடி தாங்காமல் ஏதேனும் நடக்கும் என்று அவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. பாபாவின் பக்தராக 26 வருடங்கள் இருந்த க்ளென் மெலாய் என்பவர் தற்போது பாபாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒன்று திரட்டி வருகிறார் ஒரு காலத்தில் பாபாவை கடவுளுக்கும் கடவுளாக ஈடுபாடு காட்டி மதித்தேன். இப்போது அவரது முகத்திரையைக் கிழிப்பதில் உறுதியாக இருக்கும் ஒருவருடன் நீங்கள் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். என்கிறார் உறுதியோடு. ஆனால் உண்மைதான் பிடிபடாமல் நழுவுகிறது.

_ சான்ஃபிரான்ஸிஸ்கோவிலிருந்து ஆர்தர் ஜே. பயஸுடன்.

சிட்னியைச் சேர்ந்த ஹனஸ் டி க்ரேகர் 5 ஆண்டுகள் பாபாவின் தீவிர பக்தராக இருந்தார்.

நவம்பர் 12 தேதியிட்ட த சண்டே ஏஜ் என்ற பத்திரிகையில் முதல்முதலில் பாபாமீது செக்ஸ் குற்றம் சுமத்தினார்.

குற்றச்சாற்று (அவர் இந்தியா டுடேக்கு கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தின்படி): நான் அவர் காலைத் தொட்டு வணங்கியபோது அவர் என் தலையை அவரது இடுப்புப் பகுதியில் வைத்து அமுக்கினார். அவர் பிடி லேசாகத் தளர்ந்ததும் நான் என்னை விடுவித்துக் கொண்டேன். பாபா அவர் ஆடையை விலக்கி அரை குறையாக எழும்பியிருந்த அதைக் காட்டினார். நீ அதிர்ஷ்டசாலி என்று சொல்லி அவர் இடுப்பை என் முகத்தில் அழுத்தப் பார்த்தார். நன்கு யோசித்த பிறகு நான் இதைச் செய்ய இங்கு வரவில்லை என்று முடிவு செய்தேன். அவர் மனம்தான் எனக்கு வேண்டும் என்று பாபாவிடம் சொன்னேன். அவர் தன் உடைகளை களைந்துவிட்டு, அவர் மனம் என்னிடம்தான் இருப்பதாகச் சொன்னார்.

இப்படி கையும் களவுமாக மாட்டிக் கொண்டார் பாபா

என்ன நிலை? பாபாவுக்கு எதிராக க்ரேகர் காவல் துறையில் புகார் எதுவும் இதுவரை கொடுக்கவில்லை. ஆசிரம நிருவாகமோ பதில் சொல்ல மறுக்கிறது.

ஜேன் சேத்தி ம்யூனிச்சுக்குக் குடி யேறிய ஜெர்மானியர். பத்து ஆண்டுகள் பாபாவின் விசுவாசியாக இருந்தார். செப்டம்பர், 18 தேதியிட்ட ஃபோகஸ் என்ற இதழில் பாபாமீது செக்ஸ் குற்றம் சுமத்தினார்.

குற்றச்சாற்று (அவர் இந்தியா டுடேக்கு கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தின்படி):

ஒரு தனி அறையில் வைத்து பாபா என்னை அருகில் வரச் சொன்னார். என் உதட்டோடு உதடாக முத்தமிட்டார். பயப்படாதே, இது நல்ல வாய்ப்பு, இதற்காக பலர் மாதக் கணக்கில் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் கிடைக்காதது உனக்குக் கிடைத்திருக்கிறது என்றார். பேன்ட் ஜிப்பை அவிழ்த்து, அந்தப் பாகத்தில் கை வைத்தார். ஆனால் என்னுடைய அது எழும்பவில்லை. காரணம் எனக்கு செக்ஸில் ஆர்வ மில்லை.

நான் மிகவும் வெறுத்துப் போனேன். அது ரொம்ப தளர்வா இருக்கு. ஆற்றலை வீணாக்காதே என்று அசிங்கமாகப் பேசினார். அன்றுதான் அவர் சுய ரூபத்தைப் புரிந்துகொண்டேன்.

என்ன நிலை: சேத்தி ம்யூனிச்சில் பாபாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய் திருக்கிறார். ஆசிரமம் இந்த விஷயத்திலும் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

ஸ்வீடனின் கானி லார்சான் 21 வருடங் களாக பாபா பக்தர். அவரது குற்றச்சாற்றுகளின் ஒரு பகுதி லண்டன் த டெய்லி டெலிகிராப் நாளிதழில் அக்டோபர் 20 அன்று வெளியானது.
குற்றச்சாற்றுகள் (இந்தியா டுடேயிடம் கூறியபடி):

பாபா என்னை பல தனிப்பட்ட நேர்காணலுக்காக அழைத்தார். அவர், தான் கடவு ளென்றும் எனது பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறேன் என்றும் சொன்ன போது நம்பினேன். ஆனால் அவர் எனது பிறப்புறுப்புகளைத் தொட்டு எண்ணெய் பூசிவிட்டார். மைதுனம் செய்துவிட்டார்.

அவருக்கும் அதையே செய்யுமாறு என்னையும் கேட்டார். அவர் என்னோடு பலமுறை ஓரல் செக்ஸிலும் ஈடுபட்டார். அவர் என்னிடமும் அப்படியே செய்யும்படி கேட்டபோது நான் பின்வாங்கினேன்.

நிலைமை: முறையான புகார் பதிவு செய்யப்படவில்லை. ஆசிரமம் வாய் திறக்க மறுக்கிறது.

நிழல் ஆட்டம்


சர்ச்சை என்பது சாய்பாபாவுக்கு இன்னொரு பெயர். ஒன்றுகூட நிரூபிக் கப்படவில்லையென்றாலும் அவர்மீது அடுக்கடுக்கான குற்றச்சாற்றுகள் கூறப்பட்டுள்ளன.

கோடையில் ரத்தக்களரி: 1993 ஜூன் 6 அன்று பாபாவின் ஆசிரமத்தில் துப்பாக்கிக் குண்டுகள் பறந்தன. அசம்பாவிதத்தால் நான்கு பக்தர்கள் கொல்லப்பட்டார்கள். அது தெய்வீக மனிதன்மீதான கொலை முயற்சி என்று கூறப்பட்டது.

இதுபற்றி ஏராளமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. போலீஸ் ஏன் நால்வரைக் கொன்றது? நீண்ட கால பக்தர்கள் 4 பேர் திடீரென தங்கள் கடவுளுக்கெதிராகத் திரும்பிய தேன்? 4 கொலையாளிகளும் பாபாவின் அறையில் கத்தியோடு நின்றிருந்ததால் தங்களுக்கு வேறு வழியில்லை என்று போலீஸ் தமது செயலை நியாயப் படுத்துகிறது. வழக்கம்போல் பாபா மவுனம் சாதித்தார்.

புத்தகப் பதிவு


1980_களின் நடுவில் தான் ப்ரூக் அவதார் ஆஃப் நைட் நூலை எழுதி னார். பாபாவின் 20 வருடங்களுக்கு முந்தைய காம லீலைகளை அவர் விவரித்திருந்தார். பாபாவின் பக்தர்கள் அதை மறுத்தார்கள். பணம் சம்பாதிக் கும் குறுக்கு வழி என்று குறிப்பிட் டார்கள்.

இப்போது அதன் இரண் டாம் பதிப்பு வந்திருக்கிறது.

பாபாவுக்கு எதிராக செக்ஸ் குற்றம் சுமத்தும் முன்னாள் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. வெளி நாட்டவர்கள் மட்டுமின்றி இந்தியர் களும்கூட அவ்வாறு புகார் கூறுகி றார்கள். ஆனால், புகார் கூறும் யாரும் இந்தியாவில் வசிக்கவில்லை.

எந்தக் குற்றச்சாற்றுக்கும் சாய்பாபா ஆசிரமத்திடமிருந்து பதில் இல்லை.
(இந்தியா டுடே டிசம்பர் 6, 2000)

எவ்வளவு அருவருப்பான மனிதத் தன்மைக்குச் சற்றும் பொருந்தாத கேவலமான மனிதர் இந்தப் பேர் வழி என்று உணர்ந்து கொள்ள இன்னும் தயக்கமா?

ஒழுக்கத்தைப் பாழடிக்கும் பக்தி, அறிவை அபகரித்து அறியாமைக் குழிக்குள் நம்மைத் தள்ளும் பக்தி போதை யிலிருந்து விடுபட வேண்டாமா? ஆண் சேர்க்கையில் ஈடுபடும் அசல் அய்யப்பன் - இந்த சாய்பாபா

எய்ட்ஸ் நோய் தடுப்புப் பிரச்சாரம் ஒருபுறம்; மற்றொருபுறம் ஆணை ஆணே விரும்பி குழந்தை பெற்றதாக அரி _ அரன் _ புத்திரன் அய்யப்பன் என்ற ஆபாச அய்யப்பன் பூஜை அவனி எங்கும்! புட்டபர்த்தி சாய்பாபா என்ப வர் நிஜ அய்யப்பனாகவே _ அதிலும் உலக மயம், தாரளமயம், (புட்டபர்த்தி ஆசிரமத்திற்கு உரியதான) தனியார் மயம் என்பதுபோல வெளிநாட்டு ஆசாமி தேர்வு செய்து தேசிய , பன்னாட்டு அமலாக்கம் செய்து வருகிறார் போலும்!

இந்தியர்கள் என்பவர்களின் கடவுள் அவதாரங்களும், குரு, சிஷ்ய பாரம் பரியமும் எப்படிப்பட்ட யோக்கியதை உடையவர்களாக இருக்கின்றனர் என்று உலகம் நம்மீது காரித் துப்பாதா என்பதை உண்மையாக தேச பக்தி மனித பக்தி கொண்ட மக்கள், விருப்பு, வெறுப்பின்றி சிந்தித்து பக்தி போதை யிலிருந்து தெளிவு பெறவேண்டும்.

ஆரிய காட்டுமிராண்டித்தனம்


ஆண் ஆணுடன் இச்சை கொண்டு தனது காம விகாரத்தைத் தீர்த்துக் கொள்ளுவதற்கு புட்டபர்த்தி சாயிபாபா என்ற பெயரில் உலவும் பழைய சத்திய நாராணராஜு அர்த்தமுள்ள இந்து மதத்தினையேகூட முன் மாதிரியாகக் காட்டக் கூடும்.

இதோ சில ஆதாரங்கள்:


1. சூரியனுடைய ரத சாரதியின் பெயர் அருணன். இவன் இரு கால்களும் அற்ற முடவன். தாயால் அவயங் காக்கப்பட்ட முட்டையிலிருந்து வந்த இவன் இந்திர சபை வினோதங் காண் பதற்கென்று பெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான். இதனால் வாலி என்பவன் பிறந்தான். இந்நிகழ்ச்சியில் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு நடந்ததை அறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வர வேண்டி, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் _ இதனால் சுக்ரீவன் என்பவன் பிறந்தான்.

2. நாரதர் என்னும் மகரிஷி ஒரு நாள் பெண் வேடம் தாங்கியிருக்க அதைக் கண்ட கிருஷ்ண பரமாத்மா நாரதனைக் கண்டு மோகித்துப் புணர, அதன் பயனாய் 60 பிள்ளைகள் நாரதருக்குப் பிறந்தார்கள்.

3. தவ வலிமை மிக்க பஸ்மாசுரன், சிவன் தலையில் கையை வைத்து அழித்துவிட நாடியபோது மகா விஷ்ணு, மோகினி வேடம் பூண்டு பஸ்மாசுரனை மயக்கி, அவன் கையை அவன் தலையிலேயே வைத்து எரிந்து போகுமாறு செய்தபின், அந்த மோகினி வேடத்திலிருந்து விஷ்ணுவை உயிருக் குப் பயந்து அய்வேலங்காயில் ஒளிந்திருந்த சிவன் மோகித்துப் புணர, அதன் பலனாக அரிஹர புத்திரன் பிறந்தான்.

இவை ஆணை ஆண்புணரும் வழக்கம் ஆரியக் காட்டுமிராண்டிக் கற்பனைகள் என்பது புரியவேண்டும்.

திருவண்ணாமலையில் ஓர் ஏமாற்றுப் பேர்வழி!


இன்னொரு செய்தி: திருவண்ணா மலை விசிறி சாமியார் என்ற ஒரு வடநாட்டுச் சாமியாரிடம் ஓடும் நீதிபதிகளும், நிருவாக அதிபதிகளும். தலைவர்களும், டாக்டர்களும், ஏராளம் ஏராளம்! அவருக்குப் புற்றுநோய் வந்து, அவர் தனியார் மருத்துவ மனையொன்றில் அறுவைச் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.

அவர் திரும்பும்போதும், அந்த மருத்துவமனைக்கே பக்தர்கள் படையெடுத்து அவரிடம் ஆசி வழங்கக் கேட்டு, ஆசி பெற்றார்களாம்.

தன்னுடைய நோயையே அவர் குணப்படுத்த முடியாமல்தானே, அறுவைச் சிகிச்சைக்கு மருத்துவ மனைக்கு வந்தார். அவரிடம் உள்ள சக்தி புரியவில்லையா?

மழைக்காகக் கழுதைக்கும் -
கழுதைக்கும் கல்யாணமாம்!


மழை வேண்டி கழுதைகளுக்குத் திருமணம் செய்திடும் மக்கள் திருமணத் தடையின்றி பெண் கிடைக்க, கல்யாணி கழுதையைத் தேடி ஓடிட ஆலோசனை கூறும் கேரள ஜோதிடம், தமிழ்நாடு அரசின் குடிநீர் வடிகால் வாரியமே மழை வேண்டி யாகம் மற்றும் சில தலைவர்கள் தங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்ய யாகம் என்பதெல்லாம் எவ்வளவு கேலிக் கூத்து!

21ஆம் நூற்றாண்டில் காலடி வைக்கவேண்டிய நாம் மீண்டும் இரண்டாம் நூற்றாண்டுக்கல்லவா பின்னோக்கிச் செல்லுவதாக உள்ளது! மகாமகா வெட்கக்கேடு!


மக்களே சிந்தியுங்கள்!

ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், அறிவுக்கும் கேடு பயக்கும் பக்தி தேவையா? சிந்தியுங்கள் _ எனதருமை தமிழ்ப் பெரு மக்களே!

---------------------திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய
சாய்பாபாவின் மறுபக்கம் எனும் நூலிலிருந்து

1 comments:

சி.பி.செந்தில்குமார் said...

துணீச்சலான கட்டுரை.. சபாஷ்