Search This Blog

30.5.11

பார்ப்பன அர்ச்சகர்களின் காமவெறி - கோயில்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் உழைப்புக்கு முக்கியத்துவம் தரும் ஊர் அது. தொழிலில் உலகமே உற்று நோக்கக் கூடிய அளவுக்கு பிரமிப்பான வளர்ச்சி கண்டதற்கு தங்களின் ஆன்மிக ஈடுபாடே காரணம் என்று அந்த ஊரின் மெஜாரிட்டி சமுதாயத்தினர் உறுதி யாக நம்புகிறார்கள். அதனால், தேரோட்டம், சாமி விக்கிரக வீதி உலா, கும்பாபிஷேகம், பூஜை, புனஸ்காரங்கள் என கோயில் காரியங்களில் ஒரு குறையும் வைக்காமல் பக்தி சிரத்தையோடு செய்து வருகிறார்கள்.

மூடி மறைத்தனர்

பணம் வேண்டுமா? பத்ரகாளி கோயிலுக்கு போ! அவளிடம் முறையிடு! நீ கேட்டது கிடைக்கும் என்று சமுதாய பெரியவர்கள், பணக் கஷ்டத்தில் உழலும் தம் மக்களுக்கு ஆறுதல் கூறி அந்தக் கோயிலுக்கு அனுப்பி வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக் கிறார்கள். இந்த அளவுக்கு பிரசித்த பெற்ற அந்தக் கோயிலில் தவறான ஒரு காரியம் நடந்து இப்போது கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் அச்சமுதாய பிரமுகர்கள். தப்பு செய்தது அய்யராச்சே! அவருக்கு சட்டப்படியான தண்டனை கிடைக்கச் செய்தால் வேதம் ஓதும் வாயால் பிராமணர்கள் நம்மை சபித்து விடுவார்களே! புனிதமான இத்திருக்கோயிலில் தெய்வ குற்றம் நடந்து விட்டதே! வெளியில் இது தெரிந்துவிட்டால் அம்மனுக்கு சக்தி இருந்தால் அவள் சன்னிதியில் இப்படியெல்லாம் இது தெரிந்து விட்டால் அம்மனுக்கு சக்தி இருந்தால் அவள் சன்னிதியில் இப்படியெல்லாம் நடக்குமா? என்று பேச ஆரம்பித்து விடுவார் களே! கோயிலுக்கு வரும் கூட்டம் குறைந்து விடுமே என்று பலவாறாக சிந்தித்து, விவாதித்து விவகாரத்தை மூடி மறைத்து விட்டார்கள். ஆனா லும் அரசல் புரசலாக அந்த சமாச் சாரம் வெளியில் கசிந்துவிட்டது.

அர்ச்சகன் ஒட்டம்

அது என்ன தெய்வ குற்றம்?

அந்தக் கோயில் பிரகாரத்தில் உள்ள அஷ்டலட்சுமியை வழிபடுவதில் ஆர்வம் காட்டுவார்கள் பெண்கள். அதற்கென்றே பிரத்யேகமாக அர்ச்சகர் ஒருவரை நியமித்திருந்தது கோயில் நிர்வாகம். அந்த அர்ச்சகரின் பெயர் முத்து சீதாராமன். (வயது 63). மணி அடித்து தீபாராதனை காட்டும் அவருக்கு விபூதி தட்டில் காணிக்கை நிறைய விழும். சாமி கொஞ்சம் குங்குமம் கொடுங்கோ, இல்ல சாமி நீங்களே வச்சு விடுங்கோ என பெண்கள் அவர்முன் பயபக்தியாக நெற்றியை காட்டி நிற்பார்கள். வயதில் முதியவர் என்பதால் அவர் கையால் குங்குமம் இட்டுக் கொள்வதை ஒரு பாக்கியமாக கருதுவார்கள். ஆன்மிகத்தின் பெயரால் பெண்களின் நெற்றியை அவர்களின் அனுமதியோடு தொட முடிந்த அந்த அர்ச்சகருக்கு அன்று ஒரு விபரீத எண்ணம் தோன்றிருக்கிறது. அதை தனியாக வந்த ஒரு சிறுமியிடம் செயல்படுத்த, அவள் போட்ட கூச்சலில் பக்தர்கள் அவரை நையப்புடைத்திருக்கிறார்கள். உடனே இந்த விவகாரத்தை அந்தச் சிறுமியின் பெற்றோரே தொலைபேசி மூலம் காவல் நிலையத்துக்கு தெரிவிக்க, கோயிலுக்கே வந்து அர்ச்சகரை அள்ளிக்கொண்டு போயிருக்கிறது காவல்துறை. கோயில் நிர்வாகமோ எதுக்கு இந்தச் சின்ன விஷயத்தை பெரிசுபடுத்துறீங்க அய்யரு இந்த வயசுல தப்பு பண்ணுவாரா? கீழே விழுந்த உங்க புள்ளய தூக்கி விட குனிஞ்சிருக்காரு, அப்ப மேல விழுந்துட்டாரு போல, ஒருவேளை அய்யரு தப்பு பண்ணியிருந்தா ஆத்தா தண்டிப்பா, அவளை நம்புங்க என்று சிறுமியின் பெற்றோரை சமாதானப் படுத்த முனைந்திருக்கிறது. பெற்றோர் அதற்கு உடன்படாமல் காவல்நிலை யத்தில் புகார் கொடுக்க ஆயத்தமா யிருக்கிறார்கள். அப்போது காவல் துறையினர் நீங்க புகார் கொடுங்க, அய்யருமேல நாங்க நடவடிக்கை எடுக்கிறோம்.

ஆனா, உங்க மக இந்த சின்ன வயசுல கோர்ட், கேஸுன்னு அலைஞ்சு தேவையில்லாம அவமானப்பட வேண்டியிருக்கும் என்று நடைமுறையை விளக்கியிருக்கிறார்கள். உடனே யோசித்த பெற்றோர். காக்கிகள் கூறியபடி சாமி கும்பிட்ட போது வீண் விவாதம் பண்ணி தகராறு செய்தார் என்று அர்ச்சகர் மீது பெயரளவுக்கு புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள். பிறகென்ன? தப்பித்தோம்; பிழைத்தோம் என கோயில் பணியை ராஜினாமா செய்து விட்டு அர்ச்சகர் நடையைக் கட்டி யிருக்கிறார்.

நாம் அந்தக் கோயில் கமிட்டியின் செயலாளரைச் சந்தித்தோம். என்னமோ நடந்து போச்சு. இதையெல்லாம் எழுதி கோயில் பேரைக் கெடுத்திடாதீங்க. இப்பதான் அந்த அய்யரு வேலைல இல்லியே பக்தை ஒருவர் கொடுத்த நன் கொடைக்கு ரசீது போட்டவாறே நமக்கும் பதில் சொன்னார்.

மற்ற அர்ச்சகர்கள் மட்டும் யோக்கியர்களா?

அந்தக் கோயிலின் மற்ற அர்ச்சகர்களின் நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் பேசினார் கடைக்காரர் ஒருவர். அந்தக் கோயில்ல இருக்கிற அர்ச்சகர்களுக்கு பான் பராக் பழக்கம் உண்டு. ராத்திரி ஆனா தண்ணி அடிப்பானுக. அதனால கோயில்லையும் போதையிலேயே இருப்பானுக. அங்க ஆஞ்சநேயருக்கு பூஜை பண்ணுற அர்ச்சகர் ஒருத்தரு இன்னொரு அர்ச்சகருகிட்ட பேசிக்கிட்டிருந்த நானே கேட்டிருக்கேன். அவன் தீர்த்தம் கொடுப்பானாம். அத குடிக்கிற இளம் பெண் பக்தைகளோட உதடுக தீர்த்தத்தோட ஈரம் பட்டு ரொம்ப கவர்ச்சியா இருக்குமாம். அப்ப அந்த அர்ச்சகருக்கு ரொம்ப மூடாயிருக்குமாம். இதயெல்லாம் கண்ட்ரோல் பண்ணிக்கிட்டுத்தான் இந்த வேலையை பார்க்க வேண்டி யிருக்குன்னு ரொம்பவும் சலிச்சுக் கிட்டு சொன்னான். இந்த அர்ச்சகருக கையில இருக்கிற செல்போன்ல அந்த மாதிரி அசிங்கம் நெறய இருக்கு. உன் போன்ல என்ன இருக்கு? என் போன்ல என்னெல்லாம் இருக்குன்னு மாற்றி மாற்றி பார்த்துக்குவானுக. இந்த அளவுக்கு வக்கிரம் பிடிச்சு அலையற அர்ச்சகருக பூஜை பண்ணித்தான் சாமி யோட அருள் நமக்கு கிடைக்கு தாக்கும். ரொம்பக் கொடுமையா இருக்கு. சாமி பேரைச் சொல்லிக் கிட்டு இந்தக் காலத்துலயும் இன்ன மும் ஏமாத்திக் கிட்டிருக்கிறவங்கள நாமதான் அறியாமையில சாமி சாமின்னு சொல்லிக் கிட்டிருக்கோம். எல்லா அர்ச்சகரையும் நான் பொதுவா குத்தம் சொல்லல... ஆச்சாரமா இருக்கிற நல்ல அர்ச்சர்களும் இருங்காங்க என்றார்.

--------------------- - சி.என்.இராமகிருஷ்ணன் -=
நன்றி: நக்கீரன் மே 28-31 - 2011

0 comments: