Search This Blog

29.5.08

கோழி முதல் உண்டானதா? அல்லது முட்டை முதல் உண்டானதா?

முதலில் உண்டானது கோழியா, முட்டையா? என்று வரைந்து அதனை விளக்குவோம். இந்த கேள்வி புராதனக் கேள்வி. உயிர்கள் உற்பத்தியைப் பற்றி, மெய்ஞ்ஞானம் தனது வெளிச்சத்தை வீசுவதற்கு முந்தி கேட்டுவரும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

ஜீவப் பொருள்கள் அதாவது தாவரங்களும், பிராணிகளும் வந்த விதத்தை அறிவதற்கு முன் இவ்விதக் கேள்விகள் கேட்கப்பட்டு வந்தன. உலகம் வந்தவிதமென்ன? உயிர்கள் வந்தவிதமென்ன? பிரபஞ்சம் வந்தவிதமென்ன? மனிதன் வந்தவிதமென்ன? ஆகிய இந்தக் கேள்விகளை பல அறிஞர்கள், பல தேசங்களில் கேட்டு வந்தார்கள். மதத்தர்கள் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே விடை அளித்து வந்தார்கள். அதாவது பிரபஞ்சம் ஈராகவுள்ள உயிர்கள் உள்பட சகல வஸ்துகளும் சிருட்டி என்றார்கள். ஆனால் சில தத்துவ ஞானிகள் ஆதிகாலம் முதல் பிரபஞ்சப் பொருள்கள் யாவும் பரிணாமத்தால் வந்தனவென்று யூகித்து வந்தார்கள். இதைத்தான், சத்தமாம் சோதி தன்னில், சொல்லிய விண்ணும் விண்ணில்.... என்று பிரபஞ்ச உற்பத்தியைப் பற்றி கைவல்ய அதிகாரி எழுதியுள்ளார். ஆனால், இவைகள் யாவும் வெறும் உத்தேசங்களாக இருந்து வந்தன.

சென்ற 100 வருடங்களுக்கு முன் நான் பிரபஞ்ச உற்பத்தியைப் பற்றியும், உலக உற்பத்தியைப்பற்றியும் மனித உற்பத்தியைப் பற்றியும் விஞ்ஞானம் விசாரிக்கப் புகுந்தது. அதுமுதல் தனது ஆராய்ச்சியாலும் பிரத்தியட்ச அனுபவத் தாலும் இந்தக் கேள்விகளுக்கு இயற்கையாயுள்ள விடைகளைக் கொடுத்துவர விஞ்ஞானம் சக்தி பெற்று வருகிறது. முட்டை முந்தியதா? அல்லது கோழி முந்தியதா? என்றால், கோழி முட்டையும், கோழியும், இவை இரண்டில் ஒன்றும் முந்தியவை அல்ல. நாம் பார்க்கும் கோழியும் அதன் முட்டையும் ஒரு காலத்தில் தோன்றியவைகள் அல்ல. பல கோடி வருடங்களாக இவை இரண்டும் வேறு உருவங்களாக இருந்து பரிணமித்து வந்தவை. கோழி, பட்சி வகையை சேர்ந்தது. பட்சிகள் ஓணான், பல்லி முதலிய ஊர்வன மூலமாக பெறப்பட்டவை. ஊர்வனங்கள், தவளைக் கூட்டங்களிலிருந்து மாறியவை. தவளைகள், மீன் வடிவங்களிலிருந்து உண்டானவை. மீன்கள் புழுப் பூச்சிகளாக இருந்து மாறியவை. புழுப் பூச்சிகள் சிறு சிறு கிருமிகளால் சையோகம் பெற்று வந்த உயிர்கள். கிருமி இன்னும் சிறு சிறு முட்டைகளால்தான் உலகிலுள்ள உயிர் பெற்ற பொருள்கள் யாவும் கட்டப்பட்டுள்ளன. நாமும் நமக்குக் கீழேயுள்ள மிருகாதிகள், பட்சி, பறவைகள், தவளை, மீன், புழுபூச்சி முதலியவை யாவும் சிறு சிறு முட்டைகளால் ஆக்கப்பெற் றுள்ளன. இந்த கோடானுகோடி கோடி முட்டைகளில் ஒன்று தமது தேகத்தினின்றும், அல்லது கோழி தேகத்தி னின்றும் சுக்கில சுரோணிதங்களாக மாறி சையோகத்தில் கர்ப்பத்தில் வந்து மனித உருவமாகவும் கோழி முட்டை யாகவும் அந்தந்த உயிருக்குத் தக்கப்படி வளர்கின்றன. எல்லா உயிர்களும் மேற்கூறிய முட்டை வடிவத்திலிருந்தே கர்ப்பத்தில் தரித்து அந்தந் உயிர் வகையாக வளர்கின்றன. மனிதன் ஈறாகவுள்ள சக உயிர்களும், செடி, புல், மரமாக இருந்தாலும் சரி கிருமி, மீன், கோழி, மிருகம், மனிதனாக இருந்தாலும் சரி, சகல உயிரும் விந்து அல்லது முட்டையிலிருந்தே உண்டாகின்றன.

தாவர விந்துக்கும், பிராணி முட்டைக்கும் வித்தியாசம் அதிகமில்லை. உயிர்கள் யாவும் அதனதன் முட்டையி லிருந்தே உற்பத்தியாகின்றன. உயிர்கள் உண்டாகும் முட்டைக்கு செல் என்று பெயர். கோழிமுட்டையில் உயிர் முட்டை நடுவில் கண்ணுக்கு எட்டாத வடிவமாக இருக் கின்றது. மற்ற வெள்ளை அம்பிலியும், மஞ்சள் அம்பிலியும் அந்தச் சிறு முட்டையிலிருந்தே பரிணமிக்கின்றன. நாமெல்லோரும் உற்பத்தியாகும் விந்து 120 பங்காக ஒரு அங்குலத்தை வகுத்து, அதில் ஒரு பாக மாத்திரையைக் கொண்டுள்ளது என அறிக. இந்த அற்ப உருவந்தான் புத்தராகவும், ஏசுவாகவும், மகம்மது ஆகவும் அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகராகவும் பரிணமித்து உலகில் இன்று வசித்துவரும் பலகோடி ஜீவராசிகள் ஆதியில் இச்சிறு முட்டையிலிருந்து பரிணமித்தவைகள் என்றால், அந்த ஆதி முட்டை ஆதியில் எங்கிருந்து பெறப்பட்டு இருக்கலாமெனக் கேட்கலாம். இதற்கு விடை அளிக்கத்தான் பிராணி விஞ்ஞானிகளும் யூத, பவுதிக விஞ்ஞானிகளும் ஆராய்ச்சி ஸ்தாபனங்களில் கண்டறியப் பாடுபட்டு வருகின்றார்கள். இதன் இரகசியம் எந்தக் காலத்தில் விளங்கினாலும் விளங்கட்டும். இப்பொழுது தெரிந்தவரையில் எல்லா உயிர்களும் சிறு கிருமியாகிய முட்டையிலிருந்தே உண்டா கின்றன. இரண்டாவது, எல்லா உயிர்களும் நாளடைவில் ஆதிகால உயிர்களிலிருந்து பெறப் பட்டவை. தற்கால உயிர்கள் முற்கால உயிர்களிலிருந்தும், முற்கால உயிர்கள் அவைகளுக்கும் சிறிய உயிர்களிலிருந்தும் உண்டானவை. அத்தகைய சிறிய உயிர்கள் ஆதியில் சிறு சிறு முட்டைகள் ஓர் சிறிய ஆதி முட்டையிலிருந்து வளர்ந் திருக்கவேண்டும்.

அந்த ஆதி முட்டை அதற்கும் சிறிய முட்டையிலிருந்தும் இவைபோன்ற உயிரும் உயிருமில்லாத பொருள்களிலிருந்தும் உற்பத்தியாகியிருக்கலாமென்பது தற்கால மெஞ்ஞான யுக்தி என்று சொல்லலாம். உலகம் ஒரு காலத்தில் உயிரற்று இருந்தது. உயிர் முளைக்க உலகம் பக்குவமடைந்த காலையில் கல்லாய்டு என்ற குழம்பிய பதார்த்தங்கள் உண்டாயிருக்க வேண்டும். அந்தப் பதார்த்தத்திலிருந்து பிரோடபிலாசம் என்ற ஆதி உயிர் கல்லாய்டு பொருள் பிறந்தது. அதிலிருந்து ஆதி முட்டை உண்டாகி அது பரிணமித்து பல்வேறு உயிர்களாகப் பரிணமித்தது என்பது மெய்ஞ்ஞான யூகை.

---------------------- ம. சிங்காரவேலர் அவர்கள் எழுதிய கட்டுரை -நன்றி:"விடுதலை" 29-5-08

0 comments: