Search This Blog

22.3.08

ஆரிய மாயையில் மாயாவதி அகப்பட்டதால்

இந்தியா முழுவதும் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகள் பரவி வருகின்றன என்பதை இங்கு பெருமையோடு தோழர்கள், தோழியர்கள் எடுத்துச் சொன்னார்கள். அதே நேரத்தில் அதற்குரிய அறை கூவல்களும் ஆரியம் விடாமல் தொடர்ந்து நமக்கு இடையூறு செய்து கொண்டிருக்கின்றது.

உங்களுக்கெல்லாம் அதிர்ச்சியடையக் கூடிய செய்தி ஒரு செய்தி. நமக்கு எல்லோருக்குமே அதிர்ச்சி அடையக்கூடிய செய்தி ஒன்று பத்திரிகையில் வந்திருக்கிறது.

கன்சிராம் நடத்திய ஆட்சி

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி அரசை கான்சிராம் அவர்கள் முன்னின்று நடத்திய நேரத்திலே, தந்தை பெரியார் அவர் களுடைய கொள்கைகளை அவர் தெளிவாகப் புரிந்துகொண்டு நடத்தினார்.

இந்தியாவிலே அய்ந்து புரட்சியாளர்கள் உண்டு. அவர்களிலே ஜோதி பாஃபுலே, அடுத்து தந்தை பெரியார். அடுத்து மராட்டியத்தைச் சார்ந்த சாகுமகராஜ் அவர்கள். அவர்தான் மராட்டியத்திலே முதன்முதலாக இட ஒதுக்கீடு வழங்கியவர்கள். சமுதாயத்திற்கு வழிகாட்டிய ஒரு சிற்பி அவர்.

அதே போல டாக்டர் அம்பேத்கர், அதேபோல கேரளத்தைச் சார்ந்த நாராயணகுரு என்று அய்ந்து பேரை அறிவித்திருந் தார்கள். கன்சிராம் அவர்கள் சிறப்பாக ஆட்சியை நடத் தினார்கள். அதன் காரணமாக மாயாவதி தலைமை தாங்கிய பி.ஜே.பி. ஆதரவோடு கூடிய ஆட்சியை கொஞ்சம் ஆட்டிப் பார்த்தார்கள். ஆட்சி போனாலும் பரவாயில்லை என்ற துணிச்சலை கன்சிராம் அவர்கள் தந்தார்கள்.

ஆரிய மாயையில் மாயாவதி அகப்பட்டதால்

ஆனால், இன்றைக்கு அதே இயக்கம் அந்த உணர்வை அடித்தளமாகக் கொண்டிருந்தாலும் கூட, பார்ப்பனர்கள் ஆரிய மாயை உள்ளே புகுத்தியதினுடைய விளைவு அவர்களையும் வசப்படுத்திக் கொண்டு விட்டது. உத்தரபிரதேச முதலமைச்சர் மாயாவதி அவர்கள் ஆரிய மாயைக்கு சிறைப்பட்டுவிட்டதினாலே எப்படிப்பட்ட ஒரு சூழல் வந்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கெல்லாம் வியப்பாக இருக்கும். என்னு டைய கையிலே இருக்கின்ற ஏடு தி டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிகை.
தமிழகத்தில் உள்ள ஏடுகளில் வரவில்லை

இந்த செய்தி தமிழகத்திலுள்ள ஏடுகளில் வரவில்லை. லக்னோவைச் சார்ந்த தந்தை பெரியார் கொள்கைமீது பற்று கொண்ட ஒரு முன்னாள் மேயர் ராவோஜி குப்தா என்பவர் இருக் கிறார். அவர் தமிழ் பேசுவார். தமிழிலே கையெழுத்து போடுவார். அவர் சென்னை வரும்பொழுதெல்லாம் என்னை சந்திப்பார்.

இப்பொழுது கூட ஒரு வாரத்திற்கு முன்னாலே வந்து என்னை சந்தித்தார். ஒரு பெரிய அறைகூவலை ஏற்பாடு செய்ய வேண்டும், சந்திக்கவேண்டும். அதற்கு நீங்கள் வரவேண்டும் என்றெல்லாம் அழைத்த நேரத்திலே இந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரி கையை எனக்குக் கொடுத்தார்கள்.

பெரியார் பெயரை நீக்கியிருக்கிறது

இந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா டிசம்பர் 6 ஆம் தேதி வந்த ஏடு. அதாவது மூன்று மாதங்களுக்கு முன்னாலே வந்த ஏடு. இந்த ஏட்டிலே உள்ள செய்தியைச் சொல்லுகின்றேன். உத்தரபிரதேசத் திலே மாயாவதி அரசு ஏற்பட்டது என்றெல்லாம் நாம் மகிழ்ந்து கொண்டிருக்கின்ற நேரத்திலே அங்கு சட்டமன்றத்தில் ஒரு எதிர்ப்பைக் கிளப்பியவுடனே பார்ப்பனர்கள் வழி நடத்தக் கூடிய ஆட்சியாக மாயாவதி ஆட்சி அமைந்திருக்கின்ற காரணத்தினாலே தந்தை பெரியார் பெயரை சிறந்த தலைவர்கள் என்ற பட்டியலிலிருந்து மாயாவதி அரசு நீக்கிவிட்டது. எல்லோரும் அதிர்ச்சியும், வெட்கமும், வேதனையும் படக்கூடிய அளவிலே இருக்கக் கூடிய ஒரு செய்தி.
உத்தரபிரதேச அரசாங்கம் ஒரு அய்ந்து பேரை சிறந்த தலைவர்கள் என்று ஒரு பட்டியலை உருவாக்கிக் காட்டியி ருக்கிறது. அந்தப் பட்டியலிலே பெரியார் பெயரையும் அவர்கள் அமைத்திருந்தார்கள்.

கவுதம புத்தர், ஜோதி பாஃபுலே, பீமராவ் அம்பேத்கர், நாராயணகுரு, கன்சிராம் என்று வரிசையாகப் பெயரை வைத் திருந்தார்கள். இதில் மகாத்மா காந்தி பெயர் கூட கிடையாது என்றெல்லாம் இந்தப் பத்திரிகையில் சொல்லி இன்னொரு செய்தியை மகிழ்ச்சியோடு இந்தப் பத்திரிகைகாரர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

பார்ப்பனர்கள் வற்புறுத்தல் காரணமாக

சட்டமன்ற எதிர்க்கட்சியின் வற்புறுத்தல் காரணமாக மாயாவதி அரசாங்கத்தின் சார்பில் சிறந்த தலைவர்கள் என்ற பட்டியலில் இருந்த பெரியார் பெயரை மாயாவதி நீக்கவிட்டார்.
பெரியார் பெயரை நீக்கினால்தான் சட்டமசோதா கொண்டு வர முடியும் என்று உத்தரபிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் பார்ப்பனர் உட்பட எல்லா பார்ப்பனர்களும் சேர்ந்து முயற்சி எடுத்தவுடனே மாயாவதி அதற்கு அடிபணிந்து பெரியார் சிறந்த தலைவர் இல்லையென்று நீக்கிவிட்டார். கன்சிராம் பெயரை மாத்திரம் வைத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் முடிவு செய்ததாக இந்த இதழில் செய்தி வெளியிட்டிருக்கின்றார்கள்.

`டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகை முன் பக்கத்திலும் இந்த செய்தி. உள் பக்கத்திலேயும் இந்த செய்தியை வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது.

அரசாங்கங்கள் வரும் - போகும்
அய்யா அவர்கள் இதுபோன்ற ஆயிரம் எதிர்ப்புகளை தாண்டி வரலாற்றை நிலை நாட்டக் கூடிய தலைவர் அவர்கள்



------சென்னை - பெரியார் திடலில் 16-3-2008 அன்று காலை நடைபெற்ற அன்னை மணியம்மையார் நினைவுநாளில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை

0 comments: