Search This Blog

2.3.08

தினமலருக்கு- ரத்தக் கொதிப்பு!

மத்திய நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் நிதிநிலை அறிக்கை தயாரிப்பதற்கு முன்பு பலதரப்பினரிடமும் ஆலோசனைகளைப் பெற்றார்.

சமூகநீதிக் கண்ணோட்டத்தில் பலரும் கருத்துகளைக் கூறியுள்ளனர்.
புதுவை மாநிலங்களவை உறுப்பினர் நாராயணசாமி அவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தனி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
சுர்ஜிவாலா கூறும்போது விவசாயிகளுக்குத் தனி ஒதுக்கீடும், சலுகைகளும் அளிக்கப்பட வேண்டும் என்ற யோசனையைத் தெரிவித்துள்ளார். ஆதிதிராவிடர்களுக்கும், தனி ஒதுக்கீடு தேவை என்ற கருத்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் விஷயத்திலும் கவனம் தேவை என்றெல்லாம் கருத்துக் கூறப்பட்டது.

இந்தத் தகவல்களையெல்லாம் வெளியிட்ட கருமாதி பத்திரிகையான தினமலர் (28.2.2008) என்ன தலைப்பைப் போட்டிருக்கிறது தெரியுமா?

ஜாதிக்கு ஜாதி தனி பட்ஜெட் போடுங்க...! என்று தலைப்பை வெளியிட்டு கடைசியில் தன் ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்துவிட்டது.

ஏழைகள், விவசாயிகள் நலனுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கீடு அளிக்கும் போக்கு போய், ஜாதி வாரியாக அளிக்கவேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு வந்துவிட்டது என்று வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொள்கிறது.

சமுதாயத்தை பிறப்பின் அடிப்படையில் ஜாதியைச் சொல்லி பிளவு ஏற்படுத்தியவர்கள் யார்?
ஒரு ஜாதிக்கு மட்டும்தான் கல்வி, ஒரு ஜாதிக்கு மட்டும்தான் உத்தியோகம் - ஒரு ஜாதி மட்டும்தான் பிரம்மாவின் நெற்றியில் பிறந்தது என்று ஏற்பாடு செய்தவர்கள் யார்?
பள்ளத்தில்தான் வாழவேண்டும் என்று கூறி பள்ளர்களாக ஆக்கியது யார்? சேரிகளில்தான் வாழவேண்டும் என்று கூறி தீண்டத்தகாத மக்களாக ஒதுக்கி வைத்தது யார்?
இந்தக் கேடுகள் காரணமாகத் தானே அவர்கள் படிக்கவில்லை - சமூக அந்தஸ்து பெறவில்லை - இந்தச் சூழ்நிலை காரணமாகத்தானே அவர்கள் வறுமையின் பல் சக்கரத்தில் சிக்கிச் சீரழிந்தனர்?
இன்றைக்கும் சேரியில்லையா - அக்கிரகாரம் இல்லையா?
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் வளர்ச்சிக்கு உரிமை கோருவதில் என்ன குற்றம்?
எல்லாம் பார்ப்பான் வயிற்றில் அறுத்து வைத்தபோது ஆனந்தம் பிடி கொள்ளவில்லை. அதில் மற்றவர்களுக்கும் உரிய பங்கு கேட்கும்போது பதறுவதா?
ஜாதி உள்ளவரை அது தொடர்பான கோரிக்கைகளும், உரிமைக் குரல்களும் கேட்டுக்கொண்டுதானேயிருக்கும்!ஜாதியால் தங்களுக்குக் கேடு வந்துவிட்டது என்று பார்ப்பனர்கள் உண்மையில் உணருவார்களேயானால், வீதிக்கு வரட்டும்; பூணூலை அறுத்து நெருப்பு வைத்துக் கொளுத்தட்டும்; சங்கர மடத்தில் சாம்பான் மகன் தீத்தானை சங்கராச்சாரியாக்கட்டும்!
மனுதர்மத்தைக் கொளுத்தட்டும்; கீதையைக் கிழித்து கழுதைக்குப் போடட்டும் - சூத்திரன் சம்பூகனைக் கொன்ற ராமன் படத்துக்குப் பாதுகையால் சாத்துப்படி நடத்தட்டும்!
இவ்வளவும் செய்து முடிந்த பின் ஜாதியைச் சாடட்டும்!
அதற்குப் பின் நாம் ஒரு முடிவுக்கு வருவது பற்றி யோசிக்கிலாம்!
குறிப்பு: விவசாயத்துக்கு நிதி ஒதுக்கீடுபற்றி கசிந்துருகும் தினமலருக்கு சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், தினமலர்க் கூட்டத்தின் அபிமானத்துக்குரிய பா.ஜ.க. ஆட்சியின் கடைசி நிதி ஆண்டில் (2003-04) விவசாயத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் சதவிகிதம் என்ன தெரியுமா? வெறும் 1.3. தான்!
காரணம் என்ன? அவாள் கண்ணோட்டத்தில் விவசாயம்தான் பாவத் தொழிலாயிற்றே!
பயிரிடுதலை மேலான தொழிலென்று சிலர் கருதுகின்றனர்; ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில், இரும்புக்கொதி நுனியுடைய கலப்பை, மண்வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ? (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாம் 10, சுலோகம் 84) இதற்கு விளக்கம் தேவையில்லை

29-2-08 "விடுதலை" இதழில் மயிலாடன் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: