Search This Blog

6.8.14

கடவுள் அனாதியா? - பெரியார்

கடவுள் அனாதியா?



வினா:- அவர்கள் ஏன் கடவுளை நம்பவில்லை?


விடை:- பொது ஜனங்கள் சந்தர்ப்பப் படியுள்ள கடவுள் நமது அறிவுக்கு அதீதமானதென்று அவர்கள் கூறுகிறார்கள்.


வினா:- கடவுள் உண்மையை நிரூபித்துக் காட்ட முடியாதா?


விடை:- சிலர் முடியும் என்கிறார்கள். சிலர் முடியாது என்கிறார்கள்.


வினா:- கடவுளுண்மைக்குக் கூறப்படும் ஆதாரங்கள் எவை?


விடை:- முதல் ஆதாரம் காரண, காரிய வாதம்.


வினா:- அதை விளக்கிக்கூறு.


விடை:- எதற்கும் ஒரு காரணம் இருக்கவேண்டும். எனவே, பிரபஞ்சத் துக்கும் ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்தக் கர்த்தாவே கடவுள்.


வினா: இது ஒரு பலமான வாதமல்லவா?


விடை: பலமான வாதந்தான். ஆனால், முடிவானதல்ல.


வினா:- ஏன்?


விடை:- யாவற்றிற்கும் ஒரு காரண மிருக்க வேண்டுமானால், கடவுளுக்கும் ஒரு காரணமிருக்க வேண்டுமே.


வினா:- கடவுள் அனாதியாக இருக்கக் கூடாதா?


விடை:- காரணமில்லாமலே கடவு ளுக்கு இயங்க முடியுமானால் காரண மில்லாமல் காரியமில்லை என்ற வாதமே அடியற்று வீழ்ந்து விடுகிறது.


வினா:- அப்புறம்?


விடை:- காரணமின்றி அனாதி கால மாக கடவுள் இயங்க முடியுமானால், பிரபஞ்சமும் எக்காரணமுமின்றி அனாதிகாலமாக இயங்க முடியும்.


வினா:- கடவுளுக்கும் ஒரு காரணமுண்டு என சம்மதித்தால் என்ன நஷ்டம் வந்து விடப்போகிறது?


விடை:- அப்படியானால் அந்தக் காரணத்துக்கு மூலகாரணமென்ன வென்று ஆராய வேண்டியதாக ஏற்படும். அவ்வாறு ஆராயத் தொடங்கினால் முடிவே ஏற்படாது.

வினா:- வேறு வாதமென்ன?


விடை: பூர்ணத்துவ வாதம்.


வினா:-  அது என்ன? விளக்கிக் கூறு?


விடை:  அதாவது நாம் அபூரண ராக இருந்தாலும், (குறைபாடுடையவர் களாக இருந்தாலும்) பூரணமான ஒரு பொருள் உண்டென்ற உணர்ச்சி நமக்கு இருந்து கொண்டு இருக்கிறது. அந்த உணர்ச்சி அந்தப் பூரணப் பொருளின் சாயல் என்று நம்பப்படுகிறது.


வினா:- அதனால் நாம் ஊகிக்க வேண்டியதென்ன?


விடை:- அந்த உணர்ச்சி நமது உள்ளத்துள் இருந்து கொண்டு இருப்ப தினால் அதற்கு ஆதாரமாக ஒன்று இருக்க வேண்டுமென்றும், அதுவே கடவுள் என்றும் ஊகிக்க இடமிருக்கிறது.


வினா:- மேலும் கொஞ்சம் விளக்குக!


விடை:- ஒரு பூரண வஸ்துவின் பிரதிபிம்பம் நமது உள்ளத்துத் தோன்ற வேண்டுமானால் அது உள்பொருளாக இருக்க வேண்டும் அது உள்பொருளாக இல்லையானால் பூரணமாக இருக்க முடியாது.


வினா:- அப்படியானால் முடிவு என்ன?


விடை:- கடவுளைப்பற்றிய உணர்ச்சி நமக்கு இருப்பதினால் கடவுள் ஒன்று இருக்க வேண்டும். அப்படி ஒன்று இல் லையானால் நமக்கு அந்த உணர்ச்சி ஏற்பட்டிருக்கவே செய்யாது என்பது தான் முடிவு.


வினா: இந்த வாதம் சரியானது தானா?


விடை:- முதல்வாதத்தைப் போல இது அவ்வளவு உறுதியானதல்ல.


வினா:- ஏன்?


விடை:- பூரணத்துவம் ஒரு குணம். உண்மை ஒரு நிலைமை அவை இரண்டும் சம்பந்தமற்றவை. ஒரு பெரிய பட்டணம் கடலில் ஆழ்ந்து கிடப்ப தாகவோ, மேக மண்டலத்தில் மிதந்து கொண்டிருப்பதாகவோ நமது உள்ளத்துள் ஒரு உணர்ச்சி ஏற்படலாம். ஆனால் அப்பேர்ப்பட்ட ஒரு பட்ட ணம் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை.  அது போல ஒரு பூரண வஸ் துவைப்பற்றிய உணர்ச்சி நமக்கு இருப் பதனால் ஒரு பூரண வஸ்து இருக்க வேண்டுமென்ற கட்டாயமுமில்லை.


வினா:- வேறொரு உதாரணத்தினால் விளக்கிக் காட்டு.


விடை:- பூமி பரந்திருப்பதாக வெகுகாலம் மக்கள் நம்பி வந்தார்கள். அந்த உணர்ச்சி உலகத்தின் பிரதி பிம்பமாக இருக்க முடியாது. ஏனெனில் பரப்பான பூமி இல்லவே இல்லை.


வினா:- அப்படியானால் பூரண வஸ்துக்களும் அபூரண வஸ்துக்களும் நமது மனோ கற்பிதம் தானா?


விடை: ஆம்


வினா:- அடுத்தவாதம் என்ன?


விடை: அடுத்தது உருவக வாதம்.


வினா: அதை விளக்கு


விடை:- வினாடி, நிமிஷம், மணி காட் டும் முறையில் ஒரு கடிகாரம் உருப் படுத்தப்பட்டிருப்பதினால் அது ஒரு நோக்கத்துடன் உண்டு பண்ணப் பட்டிருக்கிறதென்றும், அதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டுமென்றும் நாம் அறிகிறோம். அதுபோல உலகம் ஒரு நோக்கத்தோடு சிருஷ்டிக்கப்பட்டிருப்ப தினால் அதற்கு ஒரு கர்த்தா இருக்க வேண்டும். அந்த கர்த்தாவே கடவுள்.


வினா:- இந்த வாதம் எப்பேர்ப்பட் டது?


விடை:- கடிகாரத்தை உலகத்துக்கு உவமையாகக்கூற முடியாது. கடிகாரம் எதற்காக உண்டு பண்ணப்பட்ட தென்று கூறிவிடலாம். ஆனால் உலகம் எதற்காக உண்டு பண்ணப்பட்ட தென்று கூறுவது அவ்வளவு சுலபமான காரியமல்ல.


வினா:- பிரபஞ்ச அமைப்பு கடிகார அமைப்புப்போல அவ்வளவு தெளிவான தல்லவா?


விடை: தெளிவாக இருந்தால் இரகசியங்களுக்கு இடமே இல்லை.


வினா:- கடிகாரத்தைப் பற்றி நாம் பூரணமாக அறிந்திருப்பது போல பிரபஞ்சத்தைப்பற்றி நாம் பூரணமாக அறியவில்லையென்று நீ கூறுகிறாயா?


விடை:- ஆம், கடிகாரத்தின் அமைப்பை நமக்குத் தெளிவாக விளக்கிக் கூறமுடியும். பிரபஞ்ச அமைப்பைத் தெளிவாக விளக்கிக் கூற முடியாது.
வினா:- இந்த வாதத்தைப் பற்றி வேறு ஏதாவது சொல்ல வேண்டிய துண்டா?
விடை: கடிகாரத்தைப் பார்த்தவுடன் அதை உண்டு பண்ணியவன் ஒருவன் இருக்க வேண்டுமென்று அறியலாமே யன்றி கடிகார உற்பத்திக்குக் காரணமான பொருள்களை உண்டு பண்ணினவன் ஒருவன் இருக்க வேண்டுமென்றும் சொல்ல முடியாது.

வினா : வேறு என்ன?


விடை : உலகத்தை உண்டு பண்ணி யவன் ஒருவன் உண்டென்று ஒப்புக் கொண்டாலும் உலகத்தை சிருஷ்டித் தவன் ஒருவன் இருப்பதாக நமக்கு ருசுப்படுத்த முடியாது.


வினா : இம்மாதிரியான சங்கடங்கள் பல இருப்பதினால் பிரஸ்தாப விஷயத் தில் நாம் கைகொள்ள வேண்டிய நிலை என்ன?


விடை : நாம் அந்தரங்கச் சுத்தி யோடு ஆராய வேண்டும். பிடிவாதமாக எதையும் நம்பக்கூடாது. திறந்த மனத்தோடு உண்மையை அறிய முயலவேண்டும்!


வினா : கடவுள் என்ற பெயரை நாம் எந்தப் பொருளில் வழங்கவேண்டும்?


விடை : ஜீவகோடிகளின் உயர்ந்த லட்சியத்தைக் குறிக்கும் பொருளாகவே நாம் வழங்க வேண்டும்.


வினா : அப்படியானால் சிலரின் தெய்வங்கள் உத்தமமானவை என்றும் சிலரின் தெய்வங்கள் மோசமானவை என்றும் ஏற்படாதா?


விடை : ஆம்; நிச்சயமாக ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் அவனவன் லட்சியத்துக்கும் கடவுளுக்கும் அளவுகோலாக இருக்கிறான்.


வினா : மேலும் கொஞ்சம் விளக்கு.

விடை : நமது கண் பார்வை எட் டும் அளவுக்கு நமக்குப் பார்க்க முடியும் அதுபோல நம் மனோசக்திக்கு இயன்ற அளவிலே நமக்குச் சிந்திக்கவும் விரும்பவும் முடியும்.


வினா: அப்படியானால் கடவுளைச் சிருஷ்டித்தது யார்?


விடை : ஒவ்வொருவனும் தன் கட வுளைச் சிருஷ்டித்துக் கொண்டான்.

-------------------  தந்தை பெரியார்-----"குடிஅரசு" -கட்டுரை (உரையாடல்) 03.05.1936

33 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஸ்பெஷலிஸ்டா?

எனக்குத் திருமண மாகி 34 வருடங்கள் ஆகின்றன. எனது கணவர் பிற பெண்களுடன் தகாத உறவு வைத்துள்ளார். இவர் குடும்பத்திலுள்ள அனை வருமே இப்படி இருந் திருக்கிறார்கள். இது முற்றுப் பெற என்ன செய்ய வேண்டும்? - ஒரு வாசகி

இவர்கள் அனைவரின் ஜாதகத்திலும் சந்திரன் சுக்கிரனுடனோ மாந்தி யுடனோ அல்லது சனியு டனோ சேர்ந்திருந்தாலும், ஏழுக்குடையவர் நீசம், 9ஆம் அதிபதி நீசம், 2, 8ல் பாபிகள் என்று பல துர் விஷயங்கள் தென்படு கின்றன. மிகப் பெரிய அளவில் நவசண்டீ மஹா ஹோமத்தை தேவி உபாச கரைக் கொண்டு நடத்த வேண்டும். இந்த ஹோ மத்தை திருவொற்றியூர் வடிவடை அம்மன் தெற் குப் பிரகாரத்தில் அமைந்த ஸ்ரீ சங்கரமடத்தில் நடத் தலாம். நவாக்ஷரீ மந்திர தாயத்தை எல்லோரும் கட்டிக் கொள்ள வேண்டும். மறக்காமல் குலதெய்வ வழி பாட்டை தொடர்ந்து மூன்று மாதங்கள் நடத்துங்கள்.

ஆன்மீக இதழ் ஒன்றில் இப்படியொரு கேள்வி பதில்:

அவர் ஏற்கெனவே பக்தர்தான். நம்பிக்கை உள்ளவர்தான். அப்படிப் பட்டவர்க்கு இந்தக் கொடுமை, மன உளைச் சல் ஏற்படாமல் அவர் பக்தி செலுத்தும் எந்தக் கட வுளும் தடுக்கவில்லையே ஏன்? இந்த யோக்கியதை யில் இன்னொரு கோயிலைக் கை காட்டுவது ஏன்? திருவொற்றியூர் கடவுள் இதில் என்ன ஸ்பெ ஷலிஸ்டா?

Read more: http://viduthalai.in/e-paper/85372.html#ixzz39iNFpSeJ

தமிழ் ஓவியா said...


மோடியின் செயல்களைக்கண்டு சிரிக்கிறார் கோவிந்தாச்சார்யா!


டில்லி, ஆக.7_- பாஜகவின் முன்னாள் தலைவரான கே.என். கோவிந்தாச்சார்யா தற் போதைய மோடியின் ஆட்சியின் செயல்பாடு களைக்கண்டு சிரிக்கிறார். இவர் மோடியை விமர் சனம் செய்து வருபவரா வார். மோடியின் நேபா ளப் பயணத்தை மட்டும் பாராட்டும் கோவிந்தாச் சார்யா மோடியின் பிற செயல்களைக்கண்டு சிரிக்கிறார்.

உலக வர்த்தக நிறுவ னம் குறித்த நிலைப்பாடு களில் உணவுப் பாதுகாப்பை வலியுறுத்துவது, நேரடி அன்னிய முதலீடு, காப்பீடு மற்றும் பாதுகாப்புத் துறை உட்பட அனைத்திலும் அமைதிகாத்து சர்ச்சைக் குரிய குழந்தையாக கட்சி யிலும், அரசியல் அவ தாரத்திலும் மோடி உள் ளதாக கோவிந்தாச்சார்யா குறிப்பிடுகிறார்.

கோவிந்தாச்சார்யா பாஜகவின் ஆட்சியில் நடைபெறக்கூடிய செயல் பாடுகள், புறக்கணிக்கும் செயல்கள் குறித்து கருத்தை வெளியிடுபவராக இருந்து வந்துள்ளார். அவர் தலை மையில் உள்ள ராஷ்டிரிய ஸ்வபிமான் மஞ்ச் அமைப்பு வாயிலாக வெளி யிட்டுள்ளார். மோடி அரசு குறித்த அளவீட்டுக் கருவி யாக(RADAR) தற்போது அவர் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். சங் அமைப்பின் விசுவாசத்துக் குரிய அமைப்பாக. மிகப் பெரிய திட்டமான சுதே சியைக் கொண்டிருந்தா லும், சுதந்திரமாக தன் னுடைய விமர்சனங்களை செய்யக்கூடியவராக கோவிந் தாச்சார்யா உள்ளார்.

அவர் கூறும் போது, முந்தைய ஆட்சியின் நிலைகளைக் குறிப்பிட்டு வந்துள்ளேன். தற்போதைய ஆட்சியில் சரியானவற் றையும் அதேநேரத்தில் தவறாக உள்ளவற்றையும் சுட்டிக்காட்டும் உரிமை எனக்கு உள்ளது என்று கூறுகிறார்.

டிவிட்டரைப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது

பிரதமர் அலுவலகத் தின் அரசு அலுவலகப் பணிகளுக்கு டிவிட்டர் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதை, சட்ட விரோதமானது என்று கூறி டில்லி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர், காப்பீட்டில் அன்னிய முதலீட்டை 49 விழுக்காட்டுக்கு உயர்த்தி உள்ளது உட்பட நேரடி அன்னிய முதலீட்டை (FDI-Foreign Direct Investment) அவர் கடுமையாக எதிர்ப்ப தாகவும் கூறுகிறார்.

மேலும் அவர், நேரடி அன்னிய முதலீடுகுறித்து எல்லோருமே பேசுகிறார் கள். நம்நாட்டிலிருந்து முதலீடுகளைக் கொண்டு போவதில் (FDO-Foreign
Direct Outflow) என்ன நடக் கிறது? நம் நாட்டிற்குள் வரும் நேரடி அன்னிய முதலீடு ஒன்றரை இலட் சம் கோடி ரூபாயாகவும், இந்தியாவிலிருந்து அயல் நாடுகளுக்கு வெளியேறக் கூடிய முதலீடுகள் எட்டு இலட்சம் கோடிகளாகவும் உள்ளன என்று கூறுகிறார்.

முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி பாஜக ஆட்சிக்காலத்திலும் இந்தக்கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் போது அவர் எதிர்த் துள்ளார். அவர் கூறும் போது, நம் நாட்டில் தொடக்கத்தில் 26 விழுக் காட்டளவில் நேரடி அன் னிய முதலீடு இருந்தபோது, முதலீட்டுக்கான தளம் நன்றாகவே உருவாகுவ தாக இருந்தது. அதிலே கூட, முதலீட்டாளர்கள் இலாபத்துக்காக மட்டுமே வருகிறார்கள். இப்போது 49 விழுக்காட்டளவில் அன்னிய முதலீடு என்று வரும்போது பெரிதாக அவர்களைக் கவரப் போவதில்லை என்றார்.

பாதுகாப்பு உற்பத்தியில் நேரடி அன்னிய முதலீடு என்பது அவசரமாக முடிவு செய்யப்பட்டதாக உள்ளது. அத்தியாவசியமானவை மற்றும் அத்தியாவசியம் அற்றவை என்பதற் கிடையே தொழில்நுட்பங் கள் மற்றும் கருவிகளில் வேறுபாடுகள் இருக்க வேண்டும்.

தேசத்தின் பாதுகாப்பு, தேசத்தின் இறையாண்மை அற்பமாகக் கருதப்படக் கூடாது என்று கூறுகிறார். இப்படியான வேதனையில் உலக வர்த்தக நிறுவனத் துடனான அரசின் நிலைப்பாடு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக் குமா? அவர் கூறும்போது, இன்னமும் நாம் இதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியவர் களாக இருக்கிறோம். ஆனாலும், அரசு உறுதி யான நிலைப்பாடு கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.

கடந்த வாரத்தில் இந்தியா உணவுக்கான மானியத்துக்கான தீர்வுக்காக உணவு வணிக ஒப்பந்தத்தைத் தடுத்துள் ளது.

விமர்சனம் செய்யக்கூடாதா?

அரசை விமர்சனம் செய்பவர் என்கிற குற்றச் சாட்டை கோவிந்தாச் சார்யா மறுக்கிறார். எதிர்க்கட்சியாக இருந்த போதும் இதே கொள்கை யளவில்தான் இருந்துள் ளார். அவர் கூறும்போது, அரசை நான் ஆதரிக்கும் போது எவருமே கவனத் தில் கொள்ளாமல் இருப் பது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை. மோடியின் நேபாளப் பயணம் நேர் மையானதாகவே கருது கிறேன். இரு நாடுகளுக் கிடையே உள்ள உறவு களில் அரசியல் பொரு ளாதார சாத்தியக் கூறுகள் குறித்த நல்ல குறிப்புகள் தென்படுகின்றன. குறிப்பாக இந்த ஒன்றில், நான் எப்படி அரசை எதிர்ப்ப வனாக இருக்க முடியும்? என்று கேட்டு சிரிக்கிறார் கோவிந்தாச்சார்யா.

Read more: http://viduthalai.in/e-paper/85373.html#ixzz39iNXn6CZ

தமிழ் ஓவியா said...


மோடி சொன்னது....மோடி சொல்ல முடியாதது


மோடி சொன்னது....

ஹிரோஷிமா அணு குண்டு வீச்சில் பலியா னோரை நினைவு கூரும் அதே நேரத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாத வகையில், உலக அமைதிக்காக பாடுபட உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
- பிரதமர் மோடி

மோடி சொல்ல முடியாதது

குஜராத்தில் இரண்டாயி ரத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பலி யானது எனது ஆட்சி யில்தானே!

Read more: http://viduthalai.in/e-paper/85379.html#ixzz39iNhFrBZ

தமிழ் ஓவியா said...


உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 - 7



குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. திரவ தங்கம் என்று அழைக்கப்படும் தாய்ப்பாலின் மகத்துவத்தை உணர்த்த யுனிசெப் மற்றும் உலக சுகாதார அமைப்பின் மூலமாக முன்னெடுத்துச் செல்லப்படுவது தாய்ப் பால் வார விழா. முதன்முதலில் 1992ஆம் ஆண்டு கடைபிடிக்கப்பட்ட தாய்ப்பால் வாரம் தற்போது 170 நாடுகளில் பிரபலமடைந்துள்ளது.

உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமான குழந்தைகளை உருவாக்குவதே உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடுவதன் நோக்கம்.குழந்தை பிறந்த முதல் இரண்டு தினங்களில் சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

குழந்தைகளுக்கு தாய்ப்பால்தான் தரவேண்டும் என்று, குழந்தை பெற்ற பெண்களுக்கு அவர்களது தாய்மார்கள் எடுத்துசொல்வதுண்டு. தாய்ப்பாலில் அப்படி என்னதான் சத்துக்கள் உள்ளன. தாய்ப்பாலில் மட்டும்தான் பச்சிளம் குழந்தைக்குத் தேவையான கால்சியமும், பாஸ்பரசும் 2 : 1 என்கிற விகிதத்தில் உள்ளது. இதுதான் குழந்தைக்கு சரியான அளவுகோல். பசும்பாலில் பாஸ்பரஸ் அதிகமாக இருக்கும். ஆனால், அது கால்சியத்துடன் இணைந்து சால்டாக மாறிவிடும். எனவே பசும்பாலில் உள்ள கால்சியம் பச்சிளம் குழந்தைகளுக்குப் பயன்படாத கால்சியமாகவே இருக்கிறது.

அது போலத்தான் பசும்பாலில் உள்ள புரத மூலக்கூறுகள் இரட்டை தன்மை கொண்டவை இதை ஆங்கிலத்தில் டை புரோட்டின் அல்லது சியாசின்வே (ceasinwhey) எனக்கூறுவர் ஆனால் பச்சிளம் குழந்தைக்குத் தேவையானதோ ஒற்றை மூலக்கூறு கொண்ட whey
புரதம் தான். இந்த whey புரதம் தாய்ப்பாலில் மட்டும்தான் உள்ளது. பசும்பாலில் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் எதுவும் சரிவிகிதத்தில் இல்லாததனால் பச்சிளம் குழந்தையின் குடலில் அலர்ஜி உண்டாகும். இந்த அலர்ஜி குழந்தைகளின் மலக்குடலை புண்ணாக்கும் வாய்ப்புள்ளது. தாய்ப்பாலால் குழந்தைக்கு மேற் சொன்ன பிரச்சனைகள் எதுவும் வராது. தாய்ப்பாலில் உள்ள நுண்சத்துக்கள் குழந்தைக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புக்கள் மிகமிக குறைவு. பசும்பால் குடிக்கும் குழந்தை களுக்கு வயிற்றுவலி வருவதற்கான வாய்ப்புகள் மிகமிக அதிகம்.

தாய்ப்பாலில் இல்லாத சத்து!

ஆம். ஒரு குறை உண்டு. தாய்ப்பாலில் வைட்டமின் D இல்லை என்பது இரண்டு ஆண்டிற்கு முன் நிரூபிக்கப் பட்ட ஆராய்ச்சி உண்மை. எனவே குழந்தை பிறந்த உடனே வெறும் வைட்டமின் D சொட்டு மருந்தும் தரவேண்டும். குழந்தை பெற்ற பெண்களும் இதை கேட்டு வாங்க வேண்டும். நமது நாட்டு தட்பவெப்ப நிலையில் தான் வெயில் அதிகமாயிற்றே. நமக்கு இயற்கையாகவே வைட்டமின் D கிடைக்குமே. என நீங்கள் நினைத்தால் அது தவறு. நமது கருந்தோல் அவ்வளவு விரைவில் வைட்டமின் D யை உள் வாங்கும் தன்மை வாய்ந்ததாக இல்லை என்பதுதான் உண்மை.

ஒரு தாய்க்கு வைட்டமின் D பற்றாக் குறையாக இருந்தால், குழந்தைக்கும் வைட்டமின் D பற்றாக்குறையாகத்தான் இருக்கும். எனவே குழந்தை பிறந்த உடனே வைட்டமின் Dசொட்டுமருந்தும் கொடுத்துப் பழக்கவேண்டும். முக்கியமாக தாய்ப்பால் மறக்கும் பருவத்தில் குழந்தைகளுக்கு எண்ணெய் மற்றும் காரம் தவிர்த்த எளிதில் செரி மானம் ஆகும் உணவு வகைகளை தரும்போது குழந்தைகளின் செரிமான சக்தி பெருகி அது எதிர்காலத்தில் எந்தவித உணவு வகையையும் எளிதில் செரிமானம் செய்யும் வகையில் உணவு மண்டலத்தை வலுவாக்கி விடுகிறது.

Read more: http://viduthalai.in/page-2/85383.html#ixzz39iO0iwP1

தமிழ் ஓவியா said...


இந்திய குடிமைப் பணி தேர்வு: சிக்கலுக்குத் தீர்வு என்ன?

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப் பணி தேர்வு (அய்.ஏ.எஸ். உள் ளிட்டவை) இப்பொழுது பெரும் பிரச்சினைக்கு ஆளாகியிருக்கிறது.

இதற்குக் காரணம் இந்தியா முழுமையிலிருந்தும் தேர்வு எழுதக் கூடிய இரு பால் மாணவர்களுக்கும் பொதுவானதாக இல்லை என்பதுதான்.

மூன்று நிலைகளில் இதன் தேர்வு முறை இருந்து வருகிறது. ஆரம்பத் தேர்வு, இரண்டாம் நிலைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என்பவைதான் அந்த மூன்று நிலைகளும்.

இதில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் தான் தேர்வு எழுத முடியும் என்ற நிலை; இதுவே அடிப்படையில் தவறாகும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்குத் தேர்வு எழுதுவது எளிதாக இருக்கிறது. ஆனால் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டிராத வர்கள் ஆங்கிலத்தில் எழுத வேண்டியுள்ளது. ஆங்கிலம் இந்த மக்களுக்குத் தாய்மொழி இல்லை.

குடிமைப் பயிற்சித் தேர்வில் இந்தி பேசும் பகுதியில் அதிகமாகத் தேர்வு செய்யப்படுவதற்கு இதுதான் முக்கிய காரணமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளிலும் அந்தத் தேர்வு எழுத வேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வருகிறது. இது ஒரு நியாயமான கோரிக்கை என்பது மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் பொழுதேகூட உணர முடியும்.

இப்பொழுது தமிழில் தேர்வு எழுதவில்லையா என்று கேட்கலாம்; உண்மைதான் அதில் உள்ள நிபந்தனை என்ன தெரியுமா?

குறைந்தபட்சம் அந்த மொழி பிரிவில் 25 பேர் தேர்வு எழுத வேண்டுமாம். இது என்ன முறை? அறிவியல் வளர்ந்த இந்தக் கால கட்டத்தில் இத்தகைய நிபந்தனைகள் தேவைதானா?

தமிழில் தேர்வு எழுத விரும்பும் ஒருவர் 25 பேர்களைச் சேர்க்க அலைந்து திரிய வேண்டுமா?

இதிலும் உள்ள இடர்ப்பாடு என்ன தெரியுமா? இந்தி, ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த மொழியில் தேர்வு எழுதினாலும் கேள்வித்தாள் மட்டும் ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டும்தான் இருக்குமாம்.

சுற்றிச் சுற்றி வந்தாலும் இந்தியைத் தாய்மொழி யாகக் கொண்டவர்களுக்குக் கூடுதல் வசதியும், வாய்ப்பும், சலுகையும் உள்ள வகையில்தான் இந்தத் தேர்வு முறை இருந்து வருகிறது.

இப்பொழுது வடமாநில மாணவர்கள் புதியதோர் கோரிக்கையை முன் வைத்துப் போராடுகிறார்கள்; இது நாடாளுமன்றம் வரை எதிரொலிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளுமே நடத்தப்பட முடியாத அளவுக்கு முடக்கப்பட்டு விட்டன.

தேர்வில் 400 மதிப்பெண்களில் 22 மதிப்பெண் களுக்குரிய வினாக்கள் ஆங்கில மொழியைச் சார்ந்ததாக இருக்கிறது. இது எங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்பதுதான் இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசு இந்தக் கோரிக்கையை ஏற்று, குடிமைப் பணியில் ஆங்கிலத்திற்கென்று ஒதுக்கப்பட்ட பகுதியின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படாது என்று அறிவித்துள்ளது.

இன்னொரு பிரச்சினையும் இதன் உள்ளீட்டில் உண்டு மாற்றப்பட்டுள்ள தேர்வு முறை என்பது நகரப்புறங்களைச் சார்ந்த மாணவர்களுக்குத்தான் சாதகமாக உள்ளது. கிராமப்புறங்களைச் சேர்ந்தவர் களுக்கும், முதல் தலை முறையாகத் தேர்வு எழுதக் கூடியவர்களுக்கு கடினமாகவே உள்ளது.

எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும், அதில் சமூக நீதிப் பார்வை என்பது மிகவும் முக்கியமானது. அத் தகைய கண்ணோட்டம் இல்லையென்றால் சமூகத்தில் சம நிலை என்பது சாய்ந்த தராசாகத்தான் இருக்க முடியும்.

வடமாநிலங்களில் கல்லூரிகளிலேயே மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வைச் சந்திக்கும் வகையில் பாடத் திட்டங்களை வைத்துள்ளனர். இந்தி பேசும் பகுதிகளைச் சேர்ந்த வர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறுவதற்கு இது ஒரு முக்கிய காரணமாகும். இது பற்றி தமிழ்நாடு அரசும், கல்வித் துறையும் ஏன் சிந்திக்கக் கூடாது?

மத்திய அரசு நடத்தும் பணியாளர் தேர்வு ஆணையம் (Staff Selection Commission) நடத்தும் தேர்வு மூலம் அதிக எண்ணிக்கையில் பணியாளர் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதில் மெட்ரிக் அளவில்தான் அவரவர் தாய் மொழியில் தேர்வு எழுத முடியும். பட்டதாரி அளவில் அந்த நிலை இல்லை என்பது பாரபட்சமானதாகும்.

அதுபற்றியும் மத்திய அரசு புதிய முடிவை அறிவிக்க வேண்டும். இந்தத் தேர்விலும் தென்னக மாநிலங்களைச் சேர்ந்தவர்களை விட இந்தி பேசும் வடமாநிலத்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருகின்றனர்.

காரணம் மொழிப் பிரச்சினையே; அனைத்திந்திய தேர்வுகள் அனைத்தையும் இந்தியாவில் அங்கீகரிக்கப் பட்டுள்ள 22 மொழிகளிலுமே எழுதலாம் என்று பொதுவான சட்டம் பிறப்பிக்கப்பட்டால் ஆங்காங்கே அவ்வப் பொழுது இதுகுறித்த சர்ச்சைகளும், போராட் டங்களும் வெடிக்காதே!

நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திசையில் குரலை உயர்த்த வேண்டும்; தமிழ்நாடு தந்தை பெரியாரின் சமூகநீதி மண்ணாயிற்றே - எடுத்துக் காட்டாகச் செயல்பட வேண்டாமா?

Read more: http://viduthalai.in/page-2/85382.html#ixzz39iPBbfHd

தமிழ் ஓவியா said...


நேர்த்திக் கடன் என்ற பெயரில் தலையில் தேங்காய் உடைப்பதா? கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!

கி.வீரமணி

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டு மகாதானபுரத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில் ஒவ் வொரு ஆண்டும் கோவில் திருவிழா என்ற பெயரில் இரு பால் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் கொடுமை நடந்து கொண்டு வருகிறது.

நூற்றுக்கணக்கானவர்களின் தலைகளில் அக்கோவில் பூசாரி தேங்காய் உடைக்கிறார்.

குழந்தைகள், முதியவர்கள் என்று பாராமல் தேங்காய் உடைக்கப்படுகிறது. இவ்வாண்டும் இது நடைபெற்றுள்ளது.

நூற்றுக்கணக்கான பக்தர்களின் மண்டைகள் பிளந்து ரத்தம் பீறிட்டுக் கிளம்பியுள்ளது. பலருக்கு மண்டையில் தையல் போடும் அளவுக்கு விபரீதமாகியிருக்கிறது.

நரம்பியல் மருத்துவர்கள் இதுபோல் மண்டையில் தேங்காய் உடைப்பது ஆபத்தானது; மூளையைப் பாதிக்கக் கூடியது என்று கூறியுள்ளனர். பக்தி என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமா? இந்தக் கொடுமையை அரசும், காவல்துறையும் கண்டும் காணாமல் இருக்கலாமா?

மதுரையையடுத்த பேரையூரில் குழிமாற்றுத் திருவிழா என்று சொல்லி குழந்தைகளைக் குழியில் போட்டு மூடும் காட்டுவிலங்காண்டித்தனத்தை எதிர்த்துத் திராவிடர் கழகம் குரல் கொடுத்தது; விடுதலையும் கண்டித்து எழுதியது.

அதன் காரணமாக அந்த நிகழ்ச்சி தடை செய்யப்பட்டு விட்டது. அதுபோலவே, கரூரில் நடக்கும் மண்டையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியை அரசு தடை செய்ய வேண்டும்.

மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை, சீர் திருத்த உணர்வைத் தூண்ட வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் (51-ஏ(எச்)) கூறுகிறது. குடிமகனுக்கே அடிப்படை உரிமை என்கிறபோது, அரசுக்குக் கூடுதல் பொறுப்புண்டு என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாண்டு நடந்து முடிந்துவிட்டது என்றாலும், வருங்காலத்தில் விஞ்ஞானத்துக்குப் புறம்பான இத்தகு விபரீதமான ஆபத்தான நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.

அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் வரும் 13.8.2014 புதன் அன்று காலை 11 மணிக்கு கிருஷ்ணராயபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மானமிகு மு.க.இராசசேகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்!

திருச்சி, கரூர், லால்குடி மாவட்டக் கழகத் தோழர்கள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை
6.8.2014

Read more: http://viduthalai.in/page1/85337.html#ixzz39iQ3HP5M

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

விஷ்ணுவின் பிள்ளை களான பிரம்மாவுக்கும், மன்மதனுக்கும் வழிபாடு கிடையாது. இவர்கள் லட்சுமியின் சம்பந்தம் இல்லாமல் பிறந்தவர்கள். விஷ்ணுவின் நாபித் தாமரையில் பிறந்ததால், கமலஜர் என்று பிரம்மா வுக்குப் பெயர். அவர், மன்மதனை மனதால் உண்டாக்கியதால், அவ னுக்கு மனசிஜன் என்று பெயர். இந்த இருவரும் இல்லாவிட்டால், உயிர் கள் மண்ணில் பிறக்க முடியாது. மன்மதனே, மலர்க்கணை தொடுத்து, ஒரு ஜீவனின் உற்பத்திக் குக் காரணமாகிறான். அந்த உயிர் புகுவதற் கான உடலைக் கொடுப்ப வர் பிரம்மா. இப்படி, உயிர்களை, பிறவிப் பிணி யில் சிக்கித் தத்தளிக்கச் செய்வதால், இவர்களுக்கு வழிபாடு இல்லாமல் போய்விட்டது என்று கூறுகிறார், காஞ்சிப் பெரியவர்.

படைப்புக் கடவு ளுக்கே - இந்தக் கதியா? எங்காவது பெண் சம்பந் தம் இல்லாமல் கொப் பூழ்கொடியில் பிறக்க முடியுமா? உயிர்களைப் படைத்தவன் பிறவிப் பிணியில் சிக்க வைக்கத் தானா? அப்படியானால், பெரியவாள் சங்கராச் சாரியாரின் பிறப்பும் அதைச் சார்ந்ததுதானா?

உளறல்களுக்கெல்லாம் ஓர் அளவேயில்லையா?

Read more: http://viduthalai.in/page1/85334.html#ixzz39iQBft5l

தமிழ் ஓவியா said...

வரலாற்றில் திரிபுவாதம்!


திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் சென்னைப் பெரியார் திடலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டம் (5.8.2014) சிறப்பு வாய்ந்ததாகும். வரலாற்று நோக்கும் அதன் திரிபும் எனும் தலைப்பில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் அது.

கூட்டத்தில் கூறப்பட்ட அத்தனைக் கருத்துகளும், தகவல்களும் கருத்து என்னும் கண்களில் ஒத்திக் கொள்ளத்தகுந்த ஒளிமுத்துக்கள்.

இந்தியாவின் வரலாறு என்பது வேத நாகரிகம் என்பதைச் சாதிக்கப் பார்க்கும் போக்கு இருந்தது; உண்மை வரலாறு என்பது காவிரிக் கரையில் தொடங்கப்படவேண்டும் என்ற குரல் அண்மைக் காலமாகத்தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய மேனாள் டில்லிப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் டி.கே.வெங்கட சுப்பிரமணியன் தெரிவித்த கருத்து முக்கியமானது.

வேதகால பிராமண நாகரிகம் இந்து நாகரிகமாக மாற்றப்பட்டது எப்படி என்பது சிந்தனைக்கு விருந்தளிக்கக் கூடியதாகும். வேத காலத்தில் மாட்டுக் கறியை ஆரியர்கள் உண்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு; இன்றோ பசுப் பாதுகாப்புப்பற்றிப் பேசுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். புத்த மார்க்கத் திற்குப் பிறகுதான் ஆரியர்கள் தங்கள் உணவில் மாற்றம் செய்துகொண்டனர் என்று திராவிடர் கழகத் தலைவர் ஓர் வரலாற்று உண்மையை எடுத்துரைத்தார்.

வரலாறு என்பது உண்மையின் அடிப்படையிலா னது. புராணம் என்பது அத்தகையதல்ல - கற்பனை மயமானது. இரண்டையும் குழப்புவது ஆபத்தானதாகும்.

ஆனாலும், இந்திய வரலாறு என்பதற்கு கற்பனை வண்ணம் தீட்டி ஆரிய வரலாறாக மாற்றிட பல காலமாக முயன்று வருகின்றனர்.

சிந்துச் சமவெளி நாகரிகம் - திராவிடர் நாகரிகம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். கடந்த பி.ஜே.பி. ஆட்சிக் காலத்தில் கணினிமூலம் திராவிடர்களுக்குரிய எருதினை ஆரியர்களுக்குரிய குதிரையாக மாற்றிக் காட்டவில்லையா?
தொல்பொருள் துறை ஏற்காத சரஸ்வதி நதி என்பது உண்மையானது என்று சாதிக்க முற்படவில்லையா?

இப்பொழுது மத்தியில் உள்ள பி.ஜே.பி. அரசு வரலாற்று ஆய்வுக் கழகத்திற்கு யாரை நியமித்துள் ளது? எல்லப்ப பிரகத சுதர்ஷன் ராவ் என்பவர்; இவர் யார் என்றால் ஆர்.எஸ்.எஸ்-இன் துணை அமைப் பான அகில் பாரதீய இதிஹாஸ் யோஜனாவின் (இந்திய வரலாற்றுப் பாதுகாப்பு) ஆந்திர மாநிலத் தலைவர் ஆவார்.

தமிழ் ஓவியா said...


தொழிலாளி அன்று - பங்காளியே!



தொழிலாளி, முதலாளி தன்மை முறை இருக்கவே கூடாது. தொழிலாளர் சங்கம் என்கின்ற பெயரும் இருக்கக்கூடாது. ஒரு தொழிற்சாலைக்கு அங்கு வேலை செய்பவர்கள் பங்காளிகள் அல்லாமல், கூலிக்காரர்களாக இருப்பது என்பது முட்டாள்தனம், மானமற்றதனம் ஆகும்.
_ (குடிஅரசு, 6.7.1946)

Read more: http://viduthalai.in/page1/85339.html#ixzz39iQhzuye

தமிழ் ஓவியா said...


கல்வியில் மதவெறி பிரகாஷ் காரத் எச்சரிக்கை

கொல்கத்தா, ஆக. 6_- நாடு முழுவதும் மதவெறி வன்முறை அபாயம் நிறைந்த அரசியல் சூழலை உருவாக்குவதில் ஆர்எஸ் எஸ் அமைப்பின் ஆலோ சனையோடு நரேந்திர மோடி அரசு தீவிரமாக இறங்கியுள்ளது என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் குற்றம் சாட்டினார்.கல்வித்துறையிலும் சங்பரிவாரம் வெகுவேகமாக ஊடுருவி வருகிறது என் றும் அவர் சாடினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மேற்குவங்க மாநிலக் குழு கூட்டம் கொல்கத் தாவில் முசாபர் அகமது பவனில் வெள்ளியன்று துவங்கியது. இக்கூட்டத்தில் பங் கேற்று உரை நிகழ்த்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், ஆர்எஸ் எஸ் அமைப்பின் அறிவுரை யோடு மோடி அரசு மேற் கொண்டுள்ள மதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக தத்துவார்த்தப் போராட்டத்தை தீவிரப் படுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்று கட்சியின் அணிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

ஒருபுறம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத வெறி பதற்றத்தை உருவாக் குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது; மறுபுறம் ஆர்எஸ்எஸ்சின் அறிவுரைப்படி கல்வித் துறையை மதவெறிமயமாக் கும் நடவடிக்கையும் துவங் கியுள்ளது. இன்றைக்கு இந்திய வரலாற்றியல் ஆய்வு நிறுவனத்தின் மிக உயர்ந்த தலைமைப் பொறுப்பில் அமர்ந்துள்ள ஒரு நபர், எந்தவிதமான வரலாற்று ஆய்வுப் பின் புலமும் இல்லாதவராக இருக்கிறார்; அதுமட் டுமல்ல அவர் இந்தியாவின் கேடுகெட்ட சாதிய கட்ட மைப்பை தீவிரமாக ஆதரித்தும் பேசுகிறார் என பிரகாஷ் காரத் சாடினார்.

மதவெறி சித்தாந்தத் திற்கு எதிரான தத்து வார்த்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இதர இடதுசாரி சக்திகளும் முன்னணிப் பங்கு வகிக்க வேண்டும் எனக்குறிப்பிட்ட அவர், இத்தகைய போராட்டத்தில் பல்வேறு இடதுசாரி கட்சிகளையும், இடதுசாரி தத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஏராளமான தனிநபர்களையும் ஒருங் கிணைக்கும் வேலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் எனக்குறிப் பிட்ட பிரகாஷ் காரத், ஒட்டுமொத்த இடதுசாரி சக்திகளின் ஓர் உறுதியான ஒற்றுமையே இன்றைய உடனடித் தேவை என்றும் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்துறையில் மோடி அரசு எந்தப் பாதையில் செல்கிறது என்பது தெள்ளத்தெளி வாக வெளிச்சத்திற்கு வந்து விட்டது எனத்தெரிவித்த பிரகாஷ் காரத், இன் சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டின் வரம் பை அதிகப்படுத்துவதன் மூலமாக அத்துறையை நாசமாக்குவதில் தீவிரமான முனைப்போடு இறங்கி யுள்ள மோடி அரசு, ஏற்கெனவே ரயில்வே, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை சீரழிக்கவும் முடிவு செய்துவிட்டது ; ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க் கவும் துவங்கிவிட்டார்கள்; பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளை வெறும் 51 சதவீதம் என்ற அளவிற்கு குறைத்து கிட்டத்தட்ட சரிபாதி அளவிற்கு தனியார்மய மாக்க முயற்சி மேற்கொண் டிருக்கிறார்கள்; நாட்டின் அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் திருத்தவும் சீர்குலைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என மோடி அரசின் தேச விரோத நடவடிக்கைகளை பிரகாஷ் காரத் பட்டிய லிட்டார்.

இத்தகைய நடவடிக்கை களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும், அதை எதிர்த்து பெரும் போ ராட்டங்களை நடத்தவும் வர்க்க, வெகுஜன அமைப்பு கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என அழைப்பு விடுத்த பிரகாஷ் காரத், சமூகத்தின் பல்வேறு பிரிவு களைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளையும் அவர்களி டையே எழும் கோரிக்கை களையும் மய்யப்படுத்தி போராட்டங்களுக்கு திட்ட மிடவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத் தார்.இரண்டு நாட்கள் நடைபெற்ற, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழு கூட்டத்தில் மாநிலச் செய லாளர் பிமன்பாசு உள் ளிட்ட தலைவர்கள் பங் கேற்றனர். ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்க நாளாக கடைப் பிடிப்பது என்றும், அன் றைய தினம் மேற்குவங்கம் முழுவதும் அனைத்து நகரங்கள் மற்றும் கிரா மங்களிலும் பத்து நிமிடம் மனிதச்சங்கிலி இயக்கத்தை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேற்குவங்கத்தில் மத்திய அரசின் மதவெறி மற்றும் நாசகர பொருளாதார நட வடிக்கைகளை எதிர்த்தும், மாநிலத்தில் ஆளும் மம்தா அரசின் ஜனநாயக விரோத ஆட்சியை எதிர்த்தும் இயக் கங்களையும் பிரச்சாரத் தையும் தீவிரப்படுத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது.

Read more: http://viduthalai.in/page1/85317.html#ixzz39iRFPhFy

தமிழ் ஓவியா said...

பின்லாந்தில் பெரியார் பன்னாட்டு மய்யம்

ஏற்கெனவே ஒரு திருமணம், மணமகள் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர்; மணமகன் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். சிதம்பரத்தில் நடைபெற்ற திருமணத்திற்கு, நான் செல்ல முடியாத காரணத்தினால், நம்முடைய அறிவுக்கரசு அவர்களை அனுப்பினேன். அவர்கள் அந்த மணவிழா வினை நடத்தி வைத்தார். அந்த மணமக்களும் பின்லாந்தில் பணியாற்றுபவர்கள்தான். இன்னும் ஏராளமான நண்பர்கள் பின்லாந்தில் இருக்கிறார்கள். மணமகன் இங்கே பேசிக் கொண்டிருக்கும்பொழுது சொன்னார், நாங்கள் பின்லாந் திற்குச் சென்றதும், பெரியார் பன்னாட்டமைப்பை உருவாக் குவோம்; அதுதான் மிக முக்கியம் என்று சொன்னார்.

பெரியார் தத்துவம் என்பது, நமக்கு மட்டுமல்ல; இந்த ஊருக்கு மட்டுமல்ல; இந்த சமுதாயத்திற்கு மட்டுமல்ல; எங்கெல்லாம் சமூக அநீதி இருக்கிறதே, எங்கெங்கெல்லாம் மூட நம்பிக்கைகள் இருக்கிறதோ, எங்கெங்கெல்லாம் வாய்ப்பற்ற மக்கள் இருக்கிறார்களோ, அங்கெல்லாம் பூக்கும், வளரும் என்பதற்கு அடையாளமாகும்.

Read more: http://viduthalai.in/page1/85313.html#ixzz39iT2CabI

தமிழ் ஓவியா said...

திருமணத் தடை

சென்னை தாம்பரம் - காஞ்சிபுரம் சாலையில் உள்ள முடிச்சூர் பிரம்ம வித்யாம்பிகை ஆலயத்தில் கொடுக்கப்படும் கொம்பு மஞ்சளை அம்பிகையின் சன்னிதியில் கட்டி பிரார்த் தனை செய்தால் திருமணத் தடை விலகும்.

திருமண தடை உள்ள வர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் உள்ள நாழிக் கிணற்றில் நீராடி, பின்னர் கடலில் குளித்து செந்தூரானை வணங்க வேண்டும். தொடர்ந்து அங்குள்ள வள்ளி குகையை தரிசித்தால் திருமணத் தடை நீங்கும்.

மதுரை - சோழவந்தான் சாலையில் பதினாறு கரவன துர்க்கை ஆலயம் உள்ளது. இந்த அம்மனுக்கு பூமாலை அணிவித்து, அதை பிர சாதமாகப் பெற்று அணிந்து, வீட்டில் வைத்து பூஜித்து வந்தால் விரைவில் திரு மண பாக்கியம் கிட்டும்.

கடவுள் என்ன திரு மணப் புரோக்கரா? திரு மணத் தடை என்று சொல் லப்படுகிறதே - அந்தத் தடையைப் போட்டவர் யாராம்?

Read more: http://viduthalai.in/page1/85272.html#ixzz39iUS7l7O

தமிழ் ஓவியா said...


தீராது


பார்ப்பனீயமும், மத ஆதிக்கமும் ஒழிந்தாலொழிய இந்தியாவில் யோக்கிய மான ஆட்சியை ஒருக்காலும் நாம் எதிர் பார்க்க முடியாது. பார்ப்பனீய மதத்தாலும், ஆதிக்கத்தாலும் நமது நாட்டுக்கு ஏற்பட்ட கெடுதிகளை எவ்வளவு காலத்திற்கு எடுத்துச் சொன்னாலும் தீராது என்றுதான் சொல்லவேண்டும்.

- (குடிஅரசு, 17.8.1930)

Read more: http://viduthalai.in/page1/85264.html#ixzz39iUdICmu

தமிழ் ஓவியா said...


பாதுகாப்பு வளையத்துக்குள் மதுரை மீனாட்சி


மதுரை, ஆக.8_ மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு ஏற்கெனவே தீவிரவாதிகளின் அச்சுறுத் தல் இருந்து வருகிறது. இதற்காக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப் பட்டு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வரும் பெண் பக்தர் களை பெண் காவல் துறையினரும், ஆண் பக் தர்களை ஆண் காவல் துறையினரும் சோதனை செய்து உள்ளே அனுப்பு கின்றனர். மேலும் கேமரா, பைனாகுலர் மற்றும் செல் பேசி போன்ற பொருட் களை உள்ளே கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்திற்கு நேற்றுமுன்தினம் வெளி நாட்டில் இருந்து இ-மெயில் மூலம் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், மீனாட்சி அம்மன் கோயிலில் வெடி குண்டு வெடிக்கும் என மிரட்டல் வாசகம் இருந்தது.

இந்தத் தகவல் உட னடியாக மதுரை காவல் துறையினருக்கு தெரிவிக் கப்பட்டது. இதையடுத்து, மதுரை காவல்துறையினர் கடுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் மீனாட்சி அம்மன் கோயில் கொண்டு வரப்பட்டது. தெற்கு, வடக்கு உள்ளிட்ட ஒவ்வொரு கோபுர வாசல் கள் மற்றும் அதனை சுற்றியுள்ள வெளி வீதி களில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத் தினர்.வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெளிவீதிகளில் அமைந் துள்ள கடைகள் முன்பாக பைக்குகள், சைக்கிள்கள் நிறுத்த தடை விதிக்கப்பட் டுள்ளது. உள்ளே நுழையும் பாதைகளில் ஒரு எஸ்.அய் மற்றும் 2 காவல் துறை யினர் வீதம் 24 மணிநேர மும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/85454.html#ixzz39r3WzTMc

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்! குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு

சங்கராச்சாரிகள் மீதான கொலை வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாதாம்!

குடியரசு தலைவரிடம் சுப்பிரமணியசாமி மனு

கழகத் தோழர்களே, பொது மக்களே குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புவீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை சங்கரராமன் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் மீதான வழக்கில் மேல் முறையீடு செய்யக் கூடாது என்று சுப்பிரமணியசாமி குடியரசு தலைவரிடம் மனு கொடுத்துள்ளது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்ட காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் இருவர் உள்ளிட்டவர்கள் புதுவை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய புதுவை மாநில அரசு முடிவு செய்ய ஆளுநரின் அனுமதியும் பெற்றாகி விட்டது. சட்ட நடவடிக்கைகள் துவங்கி விட்டன.

யார் இந்த சுப்பிரமணியசாமி?

இந்தச் சூழ்நிலையில் சுப்பிரமணிய சாமி என்பவர் அதிகப் பிரசங்கித்தனமாக குடியரசு தலைவரிடம் மனு ஒன்றினைக் கொடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு புதுவை ஆளுநர் அளித்த அனுமதியைத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிஜேபியின் நிலைப்பாடு என்ன?

பிஜேபியைச் சேர்ந்தவராக இருக்கும் நிலையில், இந்தக் கருத்து பி.ஜே.பி.யின் கருத்தா? அல்லது பிஜேபி தலைமையிலான அரசின் கருத்தா? என்ற சந்தேகம் பொது மக்களுக்கு ஏற்படுகிறது. இதுகுறித்து பிஜேபி கட்சி தலைமையும், பிஜேபி ஆட்சித் தலைமையும்தான் தெரிவிக்க வேண்டும்.

ஒரு மாநில ஆட்சி முடிவெடுத்து, ஆளுநரும் அனுமதியளித்த நிலையில், குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்று ஒருவர் சொல்லுவது, அரசமைப்புச் சட்டத்தில் மதிப்புறு நிலையில் வைக்கப்பட்டுள்ள குடியரசுத் தலைவரையே தேவையில்லாத சிக்கலில் மாட்ட வைக்கும் முயற்சி என்று கருதிடவும் இடம் இருக்கிறது.

ஏற்கெனவே சில சாமியார்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே!

ஏற்கெனவே பிரேமானந்தா சாமியார் என்பவர் செய்த குற்றங்களுக்காக இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது நித்யானந்த சாமியும் செய்த குற்றங்களுக்காக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதும் செய்யப்பட்டார்.

தமிழர்கள் வேறு வகையில் சிந்திக்க மாட்டார்களா?

இப்படிப்பட்ட ஒரு சூழலில் காஞ்சி சங்கராச்சாரியார் மீது கொலை குற்றம் உள்ளிட்ட வழக்கில் மட்டும் வேறு விதமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அதற்குக் குடியரசு தலைவரின் அதிகாரச் செல்வாக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று கோருவதும் தமிழ்நாட்டு மக்களிடத்தில் வேறுவிதமான எண்ணத்தை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.

அதிலும் குறிப்பாக சங்கரராமன் கொலை வழக்கில் மொத்தம் 177 சாட்சிகளில் 77 பேர் பிறழ்சாட்சி என்பது இதற்கு முன் எங்கும் கேள்விப்பட்டிராத ஒன்றே!

கொலை செய்யப்பட்ட சங்கரராமன் குடும்பத்தினரும் இந்த வழக்கில் மேல் முறையீடு தேவை என்பதை வலி யுறுத்தியுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில் குடியரசு தலைவர் இதில் விலகியிருப்பது அவசியம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்?

குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புக

கழகத் தோழர்களும் நீதியின்மீது கவலையுள்ள பெரு மக்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட வாசகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

The President of India
Rashtrapati Bhawan
New Delhi

Honourable Sir,

The decision by Puducherry Government to go in for appeal against the acquittal of 24 persons including Kanchi Jeyendra Saraswathi and Vijayendra Saraswathi, two Sankaracharyas, in the Sankararaman murder case should be allowed to proceed without any delay. Any effort to stall the appeal process would give wrong impression in the minds of people of Tamilnadu and Puducherry that Chief Executive of this country viz. President is intervening in the judicial process.
The family of the slain Sankararaman through this appeal, are eagerly expecting justice as also the people of Tamilnadu. The murder was committed in the Varadarajasamy Temple premise.
We once again request your goodself to kindly resist any effort by vested interests in stopping this appeal process.

Email address: secy.president@rb.nic.in and usgrievance@rb.nic.in

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 8.8.2014

Read more: http://viduthalai.in/e-paper/85456.html#ixzz39r5uTz5C

தமிழ் ஓவியா said...


தமிழ்நாட்டில் 1,442 பெண்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது அதிர்ச்சித் தகவல்


தமிழ்நாட்டில் 1,442 பெண்கள் அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்பது அதிர்ச்சித் தகவல்

தமிழ்நாடு அரசு முக்கிய கவனம் செலுத்த வேண்டும்

மத்திய அரசும் போதிய நிதி வசதி செய்து உதவிட வேண்டும் தமிழர் தலைவர் அறிக்கை

தமிழ்நாட்டில் அரசுப் பெண்கள் பள்ளிகளில்கூட போதுமான எண்ணிக்கையில் கழிப்பறை வசதியில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ள தகவலைச் சுட்டிக்காட்டி உடனடியாக தமிழ்நாடு அரசு இதில் கவனம் செலுத்தி கழிப்பறை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும், கல்வியைப் பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றுள்ள மத்திய அரசு இதற்கு நிதி உதவி செய்திட வேண்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் 15 சதவிகித - அரசுப் பள்ளிகளில் அதாவது 5,720 அரசுப் பள்ளிகளில் - கழிப்பறை வசதிகள் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (மத்திய கல்வி அமைச்சகம்) வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது!

இதில் - அதாவது 5,720இல் 1442 பள்ளிகள் - பெண்களுக் கான பள்ளிகள் என்பது அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உரியதாக இருக்கிறது!

தமிழ்நாட்டில் மொத்தம் 37,002 அரசு பள்ளிகள் உள்ளன.

பெண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியில்லையா?

இதில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும் 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை என்ற அவலம் உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

2013-2014-இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத் தகவல்கள் இவை!

தனியார் நடத்தும் பள்ளிகளிலும்கூட போதிய கழிப்பறை வசதிகள் இருக்கின்றனவா என்பது பற்றிய ஆய்வு செய்து - தமிழக அரசு அதனையும் கண்காணிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.

அரசுப் பள்ளிகளில் 90 விழுக்காடு நிதி சம்பளம் கொடுப்பதற்கே செலவிடப்படுகிறது என்று சொல்லப்பட் டாலும் அதுதக்க சமாதானமாக (இக்குறைபாடுகளை நீக்கிட) ஆகாது. உடனடியாக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

கல்வியைப் பொதுப் பட்டியலில் வைத்து அதிகாரம் செய்ய முன் வந்துள்ள மத்திய அரசு, இதற்கெனவே மாநிலங்களுக்குத் தனி நிதி உதவி (மான்யமாக) தந்திட உடனே முன்வர வேண்டும்.

கடந்த ஜூலை 30ஆம் தேதி, தமிழக சட்டமன்றத்தில் - விதி 110ன் கீழ் ஓர் அறிக்கை வெளியிட்டார் முதல்வர் அவர்கள். அதில், அனைத்துப் பள்ளிகளிலும் 100 சதவிகிதம் கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் இருக்க வேண்டு மென்று கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதில் 2047 பள்ளிகளில், கழிப்பறை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டும் முரண்பட்ட தகவல்களாக அமைவது - ஏனோ?

எப்படி இருந்தபோதிலும் உடனடியாக கழிப்பறைகள் அமைக்கப்படுவதோடு, ஒவ்வொரு பள்ளிக்கும் முழு நேர துப்புரவுப் பணியாளர் ஒருவரும் நீர் வசதியும் ஏற்படுத்தித் தரும் பொறுப்பைக் கண்காணித்து, பள்ளி சுகாதாரப் பிரிவு ஒன்றையேகூட ஏற்படுத்தினால் பிள்ளைகளின் நலவாழ்வு பாதுகாக்கப்பட வசதிகள் ஏற்பட்டு, இந்தியா விற்கு தமிழ்நாடு இதிலும் வழிகாட்டி மாநிலமாக அமையக் கூடும் அல்லவா?

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 8.8.2014

Read more: http://viduthalai.in/e-paper/85459.html#ixzz39r6BX1fd

தமிழ் ஓவியா said...


இப்படியும்கூட சட்டமா?


இப்படியும்கூட சட்டமா?

சவூதி அரேபியாவில் உள்ள ஆண்கள் பாகிஸ் தான், வங்கதேசம், சாட் மற்றும் மியான்மா ஆகிய நான்கு நாடுகளிலிருந்து பெண்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று சவுதி அரசு தடை விதித் துள்ளது. (இவ்வளவுக்கும் இவர்கள் எல்லாம் ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே!)

உதிர்ந்த முத்து!

குற்றங்களைக் கட்டுப் படுத்த முடியுமே தவிர முற்றிலும் ஒழிக்க முடியாது; எது போல என்றால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, முற்றிலும் ஒழிக்க முடியாது - அது போல.
- சட்டப் பேரவையில் முதல் அமைச்சர் 5.8.2014

பெண்களால் உயரும் ஜிடிபி

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்கள் அதிக அளவில் பங்கேற் றால் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) உயரும் என்கிறார் அய்.சி.அய்.சி.அய் வங்கி தலைமைச் செயல் அதிகாரி சாந்தா கொச்சன்.

இது ஏழை நாடு?

மகாராட்டிரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ்பாரஜ் என்பவர் தனது 45ஆம் ஆண்டு பிறந்த நாளுக்காக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தினா லான சட்டையை வாங்கி யுள்ளார். 8ஆம் வகுப்பு வரை படித்த அவர் இன் றைக்குப் பெரிய தொழி லதிபராம்.

Read more: http://viduthalai.in/e-paper/85460.html#ixzz39r7MQpE1

தமிழ் ஓவியா said...


அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கோரிக்கை


ஆசிரியருக்குக் கடிதம் >>>

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் கோரிக்கை

எங்கள் சங்கத்தின் 206 மாணவர்கள் 2007-2008 ஆண்டுகளில் தமிழக அரசின் சார்பில் துவக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் சேர்ந்து படித்து அர்ச்சகர் பணிக்கான தகுதி பெற்றோம். ஆனால், உடனடியாக எங்களுக்கு வேலை கிடைக்க வில்லை. காரணம் மதுரை சிவாச்சாரி யார்கள் நேரடியாக உச்சநீதிமன்றத்தில் அனைத்து ஜாதி அர்ச்சகர் ஆக தடை பெற்று விட்டனர்.

உச்சநீதிமன்றத்தில் மேற்சொன்ன வழக்கு 13.12.2012 அன்று இறுதி விசார ணைக்காக வந்தபோது தமிழக அரசின் வழக்குரைஞர் இப்பிரச்சினையை சுமுக மாகப் பேசித் தீர்ப்பதாகக் கூறி கால அவ காசம் கோரினார். அதன்பிறகு 30.01.2013 அன்று வழக்கு இறுதி விசாரணைக்கு வந்து விட்டது. மதுரை சிவாச்சாரியர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பராசரன் அவர்கள் தனது வாதங்களை முன்வைக்க தொடங் கினார். தமிழக அரசு சார்பில் பி.பி. ராவ் எனும் மூத்த வழக்குரைஞர் ஆஜரானார். ஆனால், வழக்கு அதற்கு பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு 08.07.2014 அன்று பட்டிலிடப்பட்டாலும், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

அர்ச்சகர் பணிக்கான சரியான தகுதி பெற்றிருந்தும் நாங்கள் கடந்த 8 ஆண்டு களாக பணி வாய்ப்பு இன்றி தவிக்கின்றோம். எங்கள் அனைவருக்கும் வயது உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆகையால் குடும்பம் நடத்த எந்த வழியும் இன்றி தவித்து வரு கிறோம். அது மட்டுமல்ல; இந்த படிப்பு படித்ததால் வேறு எந்த வேலைக்கும் எங்களால் செல்ல இயலவில்லை.

எனவே, எங்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை இடைக் காலமாக எங்களுக்கு நிவாரண ஊதியமாக ஒவ் வொருக்கும் தலா ரூ.5000 வழங்கி ஆணை யிட வேண்டும்படியும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

- வா. அரங்கநாதன், மாநிலத் தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்

Read more: http://viduthalai.in/page-2/85451.html#ixzz39r7i6zyS

தமிழ் ஓவியா said...


சங்கரராமன் கொலை வழக்கு: தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை நிறுத்த சு.சாமி குடியரசுத் தலைவரிடம் மனுவாம்


சென்னை, ஆக.8- காஞ்சிபுரம் சங்கரராமன் கொலைவழக்கில் புதுவை நீதிமன்றத்தில் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காஞ்சி மடத்தின் இரு சங்கராச்சாரிகள் உட்பட 24 பேரை யும் விடுதலை செய்திருந்தது. சங்கரராமன் கொலைவழக்கில் வெளியான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு புதுவை ஆளுநர் வீரேந்திர கட்டாரியா அனுமதி அளித்தார்.

அவர் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண் டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி யிடம் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிர மணியசாமி கோரி உள்ளார்.

குடியரசுத்தலைவரி டம் சுப்பிரமணியசாமி அளித்த மனுவில், புதுவை யூனியன் பிரதேசத்தின் ஆளுநர் கட்டாரியா, அவருடைய அலுவலகம் அவசரகதி யில் கொஞ்சம்கூட மூளையை செலுத்தாமல் இருப்பது தெரிகிறது.

ஜூலையில் அதை முன் னாள் துணைநிலை ஆளுநர் செய்தியாளர் களிடம் வெளியிட்ட கருத்தில் தெரிவித்துள் ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி செஷன்ஸ் நீதிமன்றம் சங்கரராமன் கொலை வழக்கில் 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அனைவரையும் விடுதலை செய்தது. சட்டத்தின்கீழ், தீர்ப்பு நாளிலிருந்து 90 நாட்களில் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய லாம் என்று உள்ளது.

திரு. கட்டாரியா தீர்ப்புக்கு எதிராக அவரு டைய ஒப்புதலுடன் சென்னை உயர்நீதிமன் றத்தில் மேல்முறையீட்டை செய்ததுகுறித்து ஜூலை முதல் வாரத்தில் ஊடகங்களிடம் தெரி விக்கும்போது ஒருவாரத்திற்குள்ளாக அவர் எடுத்த முடிவு அவர் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகி முடிவெடுத்ததாக(புதுச்சேரி ரங்கசாமி அரசு கூறியதால்) வழக்கு குறித்த விவரம் ஏதும் தெரியாமலே ஆணையில் கையெழுத்திட்ட தாக பதவியைவிட்டு வெளியேறும்போது குறிப் பிட்டதாக சுப்பிரமணியசாமி சுட்டிக்காட்டு கிறார்.

இது வெளிப்படையாகவே துணைநிலை ஆளுநர் தன் மூளையைச் செலுத்தாமலே செயல்பட்டுள்ளதானது சட்டத்தின்படி, மேல் முறையீடு செய்வதற்கு அளித்த ஒப்புதல் செல் லாதது என்று சுப்பிரமணியசாமி வாதிடுகிறார்.

ஆகவே, குடியரசுத்தலைவர் இவ்விவகாரத் தில் தலையிட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 239(2)இன்படி முன்னாள் துணைநிலை ஆளுநர் அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி கூறினார்.

கட்டாரியா பதவியிலிருந்து 10.7.2014 தேதி அன்று திரும்பப் பெறப்பட்டார்.

இவ்விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக விரைவாக குடியரசுத் தலைவரை அவசரம் கருதி தீர்வு காணக்கூடிய முடிவை எடுக்க வேண்டும் என்று சுப்பிர மணியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

குடியரசுத்தலைவரிடம் அளித்த மனுவில் இந்த விவாகாரத்தில் நீங்கள் பிரதமருக்கு அறிவுறுத்தி, அமைச்சரவைக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும் என்று அவசரப்படுத்தி உள்ளார்.

Read more: http://viduthalai.in/page-5/85467.html#ixzz39r93TGx1

தமிழ் ஓவியா said...


அய்யோ இந்து மதமே!


இஸ்லாம், கிறிஸ்தவம் போல இந்து மதக் கோட்பாடுகள் ஒரு புத்தகத்தில் குறிக்கப்படவில்லை. அதற்கு சரித்திர ரீதியில் ஒரு அமைப் பாளரும் கிடையாது.

ஒன்றல்ல - பல கடவுள்களைக் கொண்டது. இந்துவாகி இருப்பதற்கு கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இந்து மதம் என்று சொல்லப்படும் இதில் முரண்பாடுகள் செழித்து மலிந்து கிடக்கின்றன.

எல்லா இந்துக்களுக்கும் பொதுவான நம்பிக்கைகளோ அமைப்புகளோ ஒன்றும் கிடையாது.

இந்து மதத்திற்கு அடிப்படையான ஒவ்வொரு நம்பிக்கையும் - ஏதாவது ஒரு இந்து கூட்டத்தினரால் மறுத்து ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

- இன்டர்நேஷனல் என் சைக்கிளோபீடியா ஆஃப் சோசியல் சயின்ஸ்,பக்கம் 358, தொகுதி 6

Read more: http://viduthalai.in/page-7/85458.html#ixzz39r9HWOgC

தமிழ் ஓவியா said...

எல்லா முயற்சிகளும் தோல்வி!

இந்துமதம் என்பது ஒரு சமூக நாகரிகமாகவும், பல் வேறு மதங்களின் இணைப்பாகவும் இருக்கின்றது. அதற்கு ஒரு ஆரம்பமோ, ஆசிரியரோ, ஒரு மத்திய அதிகாரமோ, அமைப்போ, நிறுவனமோ கிடையாது.

இந்து மதம் என்றால் என்ன என்று வரையறுக்க மேற் கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளும், ஒரு வழியில் திருப்தி அற்றுத்தான் முடிந்திருக்கின்றன.

இந்துக்கள் உள்பட, மிகச்சிறந்த இந்திய அறிஞர்கள் - இந்து மதம் என்ற இதன் ஒரு பகுதியை அல்லது மற்றதை வலியுறுத்தி பல்வேறு காலங்களில் சொல்லியிருப்பதால் - இந்த வரையறை வேலை மேலும் திருப்தியற்றதா யிருக்கின்றது.

- என்சைக்கிளோ பீடியா பிரிட்டானிகா, 1974, தொகுதி 8, பக்கம் 88

Read more: http://viduthalai.in/page-7/85458.html#ixzz39r9QHDLU

தமிழ் ஓவியா said...

கயிலாயத்தில் ஒரு உரையாடல்!

பார்வதி: நாதா! நாடெங்கும் மூளைக் காய்ச்சலாமே! நாம் நம் பக்தர்களைப் பாதுகாக்கப் புறப்படலாமா?

பரமசிவன்: அடியே! அறிவிலி! பக்தர்களுக்கு எப்படியடி மூளைக் காய்ச் சல் வரும்! மூளை இருப்ப வர்களுக்கல்லவா அது வரும்!

Read more: http://viduthalai.in/page-7/85458.html#ixzz39r9WfAMv

தமிழ் ஓவியா said...


இவர்களும் மூடர்கள்தானே!


வீரமாமுனிவர் எழுதிய பரமார்த்த குரு கதையில் ஒரு கதை வருகிறது. ஒரு குரு, அவருக்குத் துணையாக அய்ந்து சீடர்கள், ஒருநாள் குருவின் ஆடை கிழிந்து விட்டது.

குரு அந்த அய்ந்து சீடரையும் ஊசி ஒன்றினை வாங்கி வருமாறு அனுப்பினார். அய்ந்து சீடர்களும் ஊசி வாங்கச் சென்றனர். ஒரு கடையில் ஊசி ஒன்றினை வாங்கினர். ஆனால், எதிர்பார்த்தப்படி அவ்வளவு பெரிதாக இல்லை.

இவ்வளவு சிறிய பொருளை வாங்கவா அய்வரையும் அனுப்பினார் என்று அவர்களுக்குள் அய்யம். அதனால் ஒரு பனைமரம் ஒன்றினை வாங்கி அதன்மீது அந்த ஊசியை செருகி அய்வரும் தூக்கி வந்தனர்.

இக்கதை நம் ஊரில் நடக்கும் சம்பவம் ஒன்றினை நினைவூட்டுகிறது. நம் ஊரில் சாமி புறப்பாடு செய்வார்கள். அரை அடி அல்லது ஒரு அடி இருக்கும் அந்தச் சிலை. அந்த சிலையை ஒரு சிறுவன் கையில் பிடித்துக் கொண்டு ஊரைச் சுற்றி வரலாம். ஆனால் நடப்பது என்ன?

பல மரங்களை பாடைபோல் கட்டி அச்சிலையை அதன்மேல் வைத்து பத்து இருபது பேர் தூக்கிச் செல்வர். இதைப் பார்க்கும் போது பரமார்த்த குரு கதை சீடர்கள் ஊசி வாங்க வந்த கதை தான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்த மூடர்களுக்கும் இந்த மூடர்களுக்கும், என்ன வேறுபாடு?

தகவல்: கோ.இராமச்சந்திரன், அருந்தவபுரம்

Read more: http://viduthalai.in/page-7/85464.html#ixzz39rA3yqFb

தமிழ் ஓவியா said...

அறிஞர்களின் அறிவுரைகள்

மனித சமுதாயம் தவிர மற்றபடி மிருகம், பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளில் வேறு எந்தப் பெண் ஜீவனாவது, ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம் என்ற கருத் துடன் - நடையுடன் இருக்கிறதா என்று பாருங்கள். இது என்ன நியாயம்?

- தந்தை பெரியார்

இந்து மதத்தில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை; ஏனெனில் அயோக்கியத்தனம் என்பது எனக் குப் பிடிக்கவே பிடிக்காது!

- டாக்டர் அம்பேத்கர்

பைபிள் ஒரு பெண்ணால் எழுதப்படவில்லையே! ஆதலால்தான் அதில் பெண்கள் அவமானம் அடைய வேண்டிய விஷயங்கள் நிரம்பிக் கிடக்கின்றன!

- இங்கர்சால்

மதம் என்பது பிறருக்கு உழைத்து வறுமைப்பட்ட மக்களை தலை எடுக்கவிடாமல் அழுத்தி வைக்க ஏற்பட்ட சாதனங்களில் முக்கியமான ஒன்றாகும்.

- லெனின்

உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் நாத்திகவாதி யாகப் பிறக்கிறது. பிறருடைய போதனையினாலும் தயாரிப்பினாலுமே தெய்வ நம்பிக்கை ஏற்படுகிறது.
- சார்லஸ் பிராட்லா

ஒரு புழுவைக் கூட படைக்கச் சக்தியற்ற மனிதன் கணக்கில்லா கடவுளரைப் படைத்துக் கொண்டே இருக்கிறான்.
- மான்டெயின்

Read more: http://viduthalai.in/page-7/85464.html#ixzz39rABiYlr

தமிழ் ஓவியா said...

இந்தியா - இந்த நிலையில்


எச்.அய்.வி. பதிப்பு

இந்தியாவில் 21 லட்சம் பேருக்கு, அதாவது பத்துப் பேர்களில் 4 பேர்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு இருப்பதாக அய்.நா.வின் எச்.அய்.வி. மற்றும் எய்ட்ஸ் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. உலக அளவில் எச்.அய்.வி. பாதிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் 35 கோடிப் பேர்கள் எச்.அய்.வி. நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும், இவர்களில் 19 கோடிப் பேர்கள் தங்களுக்கு எச்.அய்.வி. பாதிப்பு உள்ளது என்று தெரியாமல் இருக்கின்றனர்.

2013ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான எச்.அய்.வி. கிருமி தொற்று உள்ளவர்களில் சப் சஹாரா ஆப்ரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு 48 லட்சம் பேர்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 21 லட்சம் பேர்கள் எச்.அய்.வி. பாதிப்புடன் உள்ளனர். இங்கு ஏற்படும் மரணங்களில் 51 விழுக்காடு எய்ட்ஸ் நோயுடன் தொடர்புடையனவாக இருக்கின்றன. ஆனால் 36 விழுக்காட்டினர் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளனர். மேலும், பாலியல் தொழிலாளர்கள் மூலமாக நோய் பரவுவது 10.3 விழுக்காட்டிலிருந்து 2.7 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அசாம், பீகார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் அதிகரித்துள்ளது. எச்.அய்.வி. பாதிப்பை ஒழிக்கும் திட்டம் 2030ஆம் ஆண்டுக்குள் முடிவுக்கு வரும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

தமிழ் ஓவியா said...

வாய்ப் புற்றுநோய்



புகைப் பிடித்தல் மற்றும் புகையிலைப் பொருள்களை மெல்லும் பழக்கம் உடையவர்களைப் புற்றுநோய் தாக்கும் அபாயம் உள்ளது என்று எச்சரித்தாலும் யாரும் அதனைக் கண்டுகொள்வதில்லை.

புகையிலை தொடர்பான பழக்கங்களுக்கு அடிமையாகி நம் நாட்டில் 6 மணி நேரத்திற்கு ஓர் உயிர் பலியாவதாக அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகியுள்ளது. கிராமங்களில் இருப்பவர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பவர்கள் தங்களுக்கு வாய்ப் புற்றுநோய் வந்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளாமலே இறந்துவிடுகின்றனர். அவர்களையும் சேர்த்தால் வாய்ப் புற்றுநேய் தாக்கி மரணமடைபவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

புற்று நோய் பாதிப்பினால் உயிரிழக்கும் நோயாளிகளில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்கள் வாய்ப் புற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாய்ப்புற்று நோய் பாதிக்கப்பட்டவர்களில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் முதலிடத்திலும் மேற்கு வங்காளம், குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்தோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

புகையிலை விவசாயம், பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்களில் வாழ்க்கைக்குத் தேவைப்படும் மாற்று ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்துவிட்டு, புகையிலை பயிரிடுவதை முழுவதும் தடை செய்தால் மட்டுமே இந்த இறப்பு விகிதத்தை ஒழிக்க முடியும் என புற்றுநோய் ஆராய்ச்சித் துறை நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் கூறியுள்ளனர்.

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


1938-இல் முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் பிறப்பித்த இந்தித் திணிப்பு உத்திரவை எதிர்த்து - தந்தை பெரியார் தலைமையில் போராட்டம் வெடித்தது; பட்டுக்கோட்டை அழகிரியைத் தளபதியாகக் கொண்டு திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வழிநடைப் பிரச்சாரப் படை 42 நாள்கள் நடந்தே வந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

இந்தியா - இந்த நிலையில்

ஏழை நாடு

உலக நாடுகளில் உள்ள கடைக்கோடி ஏழைகளில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் வசிப்பதாகவும், உலக அளவில் மரணமடையும் அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் இந்தியக் குழந்தைகளே அதிகம் என்றும் அய்.நா. மில்லினியம் மேம்பாட்டு லட்சியங்கள் என்ற அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 60 விழுக்காடு இந்தியர்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாகவும், பேறுகால இறப்புகளில் 17 விழுக்காடு இந்தியாவில்தான் நிகழ்வதாகவும் கூறியுள்ளது, மேலும், தெற்காசிய நாடுகளில் மிகப்பெரியதும் அதிக மக்கள்தொகை கொண்டதுமான நாடு இந்தியா என்றாலும், பிற நாடுகளை ஒப்பிடும்போது பலவகைகளில் பின்தங்கி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் வந்துவிடுகிறது சுதந்திர தினம்!



வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெரு நிகழ்வுகள் மட்டும்தான் கலையாகும் என்றில்லை. அன்றாடத்தின் அனுகணம்கூட கலைதான் என்று கவிஞர் உதயகுமார் இந்த நூலுக்கான தனது, வாழ்த்துரையில் குறிப்பிட்டிருந்தார். அது உண்மைதான் என்பதை, பால்ய வீதி நெடுகிலும் காண முடிகிறது.

பள்ளிப் பருவத்தின் நிகழ்வுகளை,
தபால்பெட்டி டவுசரோடு
பால்ய வீதிகளில் அலைந்திருக்கிறேன்
கேட்பார் யாருமின்றி!
இன்று சிமெண்ட் மூடிக் கிடக்கிறது...
எதிர்காலத்தில், தொல்பொருள்துறை
தோண்டிப் பார்த்தால், படிமங்களாய்
கிடைக்கக்கூடும் அத்துணை குதூகலங்களும்

- என்று கவிதையாக்கித் தரும்போது, நமக்குள் பெருமூச்சு எழுவதைத் தடுக்க முடியவில்லை, ரேடியோ பெட்டி _ என்ற கவிதையில், கால மாற்றத்தை வெகு நயத்தோடு வடித்துக் காட்டுகிறார்.

குழந்தைகளைப்பற்றி எழுதும்போது, குழந்தையாகவே மாறி அவர்களின் அருகமர்ந்து பார்த்ததுபோல எழுதியிருக்கிறார். ஓரிடத்தில்,

வானவில் வரையக் கற்றுக் கொடுத்தேன் குழந்தைக்கு!

வானவில் பார்த்து குதூகலிக்க கற்றுக் கொடுத்தது குழந்தை! _ என்ற கவிதையைப் படிக்கும்போது, அட! என்று புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது போன்ற உணர்வு வருகிறது.

குழந்தையாக இருந்தவர் சட்டென்று சுதந்திர தினத்தை எள்ளல் தொனியோடு ஒரு தெறிப்பில் சுட்டிக் காட்டிவிடுகிறார். பாருங்கள் இந்தக் கவிதையை.

வயல்வெளிகள் வறண்டாலும் திறந்துவிடப்படாத காவிரித் தண்ணீரைப் போல் அல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் குறித்த நாளில் வந்துவிடுகிறது சுதந்திர தினம்!

நம் சிந்தையில் ஏதேதோ எண்ணங்களைத் தூண்டுகிறது. அறிவியல் மனப்பான்மையோடு வாழவேண்டும் என்பதை,

இருக்கையைக் கைப்பற்றும் அறிவிக்கப்படாத போரில், கண்டுகொள்ள யாருமில்லை; இருக்கையின்றித் தவிக்கும் பூமியை!

_ என்று எழுதி, பூமி மிதந்து கொண்டிருப்பதை உணராமல் வாழும் நம் நிலையைக் கேலிக்குள்ளாக்குகிறார். அதோடு, இருக்கைக்காக நடக்கும் போர் _ என்றும், அதுவும் அறிவிக்கப்படாத போர் என்றும் நயத்துக்கும் குறைவு வந்துவிடாமல் எழுதியிருப்பதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
சட்டென்று கவிஞர்,

முப்பத்து முக்கோடி தேவர்களில் ஒருவர்கூட வருவதில்லை; விவாகரத்துப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க!

_ என்று எழுதி, மூடநம்பிக்கைகளின் முதுகில் சாட்டையால் சுளிர் சுளீர் என்று விளாசுகிறார். உண்மை படும் பாட்டை பொய் என்ற கவிதையில்

செம்பு கலந்த பொன்னைப் போல, அத்தனை அழகாய் இருப்பதில்லை பொய் கலவாத உண்மை

- என்று உவமை அழகோடு சொல்லி, நம்மையும் அந்த ஆழமான உண்மையை (நடைமுறையை) எண்ணி வெட்கப்பட வைக்கிறார்.

மொத்தத்தில் கவிஞர் வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின் பால்ய வீதி எனும் கவிதைத் தொகுப்பு, படித்து ருசித்து மற்றவர்க்கும் படைக்க வேண்டிய படையல்.

தனது மூன்றாவது கவிதைத் தொகுப்பின் மூலம் நம்மையும் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார் பால்ய வீதிக்குள். -

- உடுமலை

தமிழ் ஓவியா said...

கருணைக் கொலை வரவேற்கத்தக்கதே!



கடும் துன்பத்திலிருந்து விடுதலை பெற வைப்பது - மனிதநேயமே!


கருணைக் கொலை பற்றி மத்திய மாநில அரசுகள், பொதுமக்கள் கருத்துகளை அறிவது முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதற்கேற்ப இதுபற்றிய விவாதங்கள் தொலைக்காட்சிகளிலும் ஜனநாயகத்தின் 4ஆவது தூண் என்று அழைக்கப்படும் ஊடக உலகத்திலும் விவாதங்கள் நடைபெறத் தொடங்கியுள்ளன.
பலருக்குத் தாங்க முடியாத, இனி முழு நலம் பெறமுடியாத அளவுக்கு, நோய் முற்றி, தாங்கொணாத வலி, வேதனை, துன்பத்தைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பதால், அதிலிருந்து விடுபட்டு, நிம்மதியான சாவைப் பெற்று, ஆறுதலோடு உலகிலிருந்து விடைபெற வேண்டும் என்று பல நோயாளிகள் கருதுகின்றனர்; விரும்புகின்றனர்.

மற்றொரு வகை உண்டு. திடீர்க் கோர விபத்துகள் மூலமாகவோ, அல்லது வேறு எப்படியோ, மூளைச் சாவு (Brain Death) ஏற்பட்ட காரணத்தால், இனி அவரது வாழ்வு திரும்பவே வாய்ப்பில்லை; அந்த நிலையில் தங்கள் பிள்ளைகளோ, உறவுகளோ வாழ முடியாத நிலைதான் யதார்த்தம் என்று ஆகிவிட்டபோது, அவர்களை வைத்துக் கொண்டு கண்ணீருடன் கூடிய வாழ்க்கையை நீட்டிக் கொண்டே போவதில் அர்த்தமில்லை. எனவே சட்டம் அனுமதித்தால் கருணைக் கொலையே செய்துவிடலாம்; அவர்தம் மற்ற உடல் உறுப்புகள் பிறருக்குப் பயன்பட்டு, அவர்களாவது நல்வாழ்வு, புதுவாழ்வு பெறுகிறார்கள் என்றால் அதைவிட மாந்தநேயம், வளர்ந்த செயல் வேறு எதுவும் இல்லை என்று கருதி, மகிழ்ச்சியோடு இத்தொண்டறம் தொடர்வது மிக நல்ல திருப்பணி அல்லவா?

மருத்துவமனைகளில் ஒவ்வொரு அறுவை சிகிச்சையின்போதும், உயிர் பறிக்கப்படுவதற்கு டாக்டர் பொறுப்பல்ல என்பதற்கு நோயாளியும், அவருடைய உற்ற உறவினரும் இசைவுக் கையொப்பம் இடுகின்ற முறை உள்ளதே!

பல ஆண்டுகளுக்குமுன்பு அமெரிக்காவில் கார் உற்பத்திக்குப் புகழ் பெற்ற நகரமான டெட்டிராய்ட் (Detroit) நகரில் வாழ்ந்த ஒரு டாக்டர் இந்தக் கருணைக் கொலையைச் செய்து, கொள்கை அளவில் பிரபலமாக்கிட தானே தண்டனையையும்கூட ஏற்கும் நிலை அடைந்தார்.

இந்தக் கருணைக் கொலைக்கு எதிராக வாதம் செய்வோர்; ஆண்டவன் கொடுத்த உயிரை மனிதன் எடுப்பதா? என்ற பழைய நம்பிக்கையை முன்வைத்தே கூறுகின்றனர்.

அப்படியானால், தற்கொலை செய்து கொள்ளுகின்றனரே பலர், அதைத் தடுக்க முடிகிறதா? திடீர் விபத்துகளில் மனித உயிர்கள் பலியாகின்றனவே, அதைத் தடுக்க முடிகின்றதா? ணிஸீநீஷீஸீமீக்ஷீகள் என்ற திடீர் தாக்குதல்களைத் தடுக்க முடிந்ததா?

ஆகவே அந்த வாதங்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, கருணை அடிப்படையில் (Compassionate Killing) என்பதை எவ்வளவு விரைவில் சட்டமாக்க முடியுமோ அவ்வளவு விரைவில் தாராளமாகச் செய்ய முன்வர வேண்டும்.

நம்மைப் போன்ற ஆத்மா மறுப்பாளர்களை விட்டுவிட்டு, ஆத்மா நம்பிக்கையாளர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்க நாம் விரும்புகிறோம்.

உடம்புதான் அழியும், ஆத்மா என்றும் அழிவதில்லை என்று கூறுகிறார்களே, அந்த வாதத்தை நீங்கள் உள்ளபடியே நம்பினால், கருணைக் கொலையை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்? உங்கள் நம்பிக்கை, வாதப்படி ஆத்மாதான் அழிவதில்லையே; கருணைக் கொலையில் உடல்தானே அழிகிறது; பின் ஏன் கருணைக் கொலையை (மத நம்பிக்கை காரணமாக) ஏற்க மறுக்க வேண்டும் என்பதே பகுத்தறிவுவாதிகளின் கேள்வியாகும்.

மனிதநேயம் (Humanism) நமது இந்திய அரசமைப்புச் சட்டம் 51A பிரிவு (h) வற்புறுத்தும் அடிப்படைக் கடமையின் முக்கிய அம்சம் அல்லவா? கடும் துன்பத்திலிருந்து உடல் அளவிலும் மன அளவிலும் விடுதலை கிடைப்பதுகூட மனிதநேயம்தானே!

பின் ஏன் தயக்கம்? பின் ஏன் மயக்கம்? உடனே சட்டம் இயற்ற முன்வாருங்கள்!

கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...




நாத்திக அறிவியலாளர்

சர் ரோஜர் பென்ரோஸ்

- நீட்சே

ஆங்கிலேயரான சர் ரோஜர் பென்ரோஸ் ஒரு கணித இயல்பியலாளரும், கணித இயலாளரும், அறிவியல் தத்துவ இயலாளரும் ஆவார். ஆகக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கணித நிறுவனத்தில் கணித எமிரடஸ் ரவுஸ் பால் பேராசிரியராகவும், வாட்ஹாம் கல்லூரியின் எமிரிடஸ் ஃபெலோவாகவும் இருந்தவர் இவர்.

கணித இயற்பியலில் ஆற்றிய அரும் பணிக்காக நன்கு அறியப்பட்டவரான பென்ரோஸ் விண்வெளியியல் மற்றும் பொதுவான தொடர்புத் தத்துவத்திற்கு அளித்த பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். பிரபஞ்சத்தைப் பற்றி நாம் அறிந்திருப்பது என்ன என்பதை ஆய்ந்து அறிந்து வெளிப்படுத்தியமைக்காக 1988 ஆம் ஆண்டு இயற்பியலுக்காக ஸ்டீஃபன் ஹாகிங் அவர்களுடன் பகிர்ந்து கொண்ட வுல்ஃப் பரிசைப் போன்று எண்ணற்ற பரிசுகளும் விருதுகளும் இவர் பெற்றுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் எஸ்ஸக்ஸ் பகுதியில் கோல்செஸ்டர் என்ற ஊரில் 1931 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதியன்று, லையனல் பென்ரோஸ் _ மார்கரட் லீத்ஸ் என்னும் இணையருக்கு ரோஜர் பென்ரோஸ் பிறந்தார். லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி பள்ளியிலும், பின்னர் அதே கல்லூரியிலும் கல்வி பயின்ற ரோஜர் பென்ரோஸ் கணிதப் பாடத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். மாணவராக இருந்தபோதே இவர் ஈ.எச். மூர்ஸ் அவர்களால் பொதுவாக விளக்கப்பட்ட மேட்ரிக் இன்வெர்ஸ் என்ற கணிதக் கோட்பாட்டை விளக்கமாக வெளியிட்டு அறிமுகப்படுத்தினார். ஆர்னி ஜெர்ஹேமர் என்பவரால் 1951 இல் மேலும் விளக்கம் அளிக்கப்பட்ட இக்கோட்பாடு பின்னாட்களில் மூர்-ரோஜர் இன்வெர்ஸ் கோட்பாடு என்றே குறிப்பிடப்பட்டு வருகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜான் கல்லூரியில், அல்ஜீப்ரா ஜியோமெட்ரியில் டென்சார் நடைமுறைகள் என்ற ஆய்வுக் கட்டுரையை, அல்ஜீப்ரா மற்றும் ஜியோமெட்ரி பேராசிரியர் ஜான் ஏ. டாட் அவர்களின் வழிகாட்டுதலில் எழுதி தனது ஆய்வு முனைவர் பட்டத்தை 1958இல் பென்ரோஸ் பெற்றார். விண்வெளியில் உள்ள கரும்புள்ளிகள் போன்ற தனித்துவம் பெற்றவை இறந்து கொண்டிருக்கும் மாபெரும் நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசை அழிவிலிருந்து தோற்றம் பெற இயலும் என்பதை இவர் மெய்ப்பித்துக் காட்டினார். பென்ரோஸின் இந்த ஆய்வுப் பணி பென்ரோஸ்-ஹாகின்ஸ் தனித்தன்மைக் கோட்பாடுகளை மெய்ப்பிக்க பெரிதும் பயன்படுத்தப்பட்டது. பொதுத் தொடர்புக் கோட்பாடு பற்றி மிக ஆழ்ந்து ஆராய்ந்து இவர் செய்த பணி கரும்புள்ளிகளைப் பற்றி நாம் நன்றாக அறிந்து கொள்வதற்கு ஒரு முக்கியமான காரணியாக விளங்கியது. கணித இயற்பியலில் தொன்மையான கணிதச் சமன்பாடுகள் பற்றிய அழகு நிறைந்த, ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் கூடிய வழியில் ட்விஸ்டர் கோட்பாட்டை இவர் மேம்படுத்தினார்.

இயற்பியல் விதிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் வழிகாட்டும் நோக்கத்துடன் உண்மை நிலைக்கான பாதை: பிரபஞ்ச விதிகளுக்கான ஒரு முழுமையான வழிகாட்டி என்ற 1099 பக்க நூலை பென்ரோஸ் எழுதி 2004 இல் வெளியிட்டார். மிகைச் சிற்றளவு இயந்திரவியல் பற்றி இவர் ஒரு புதுமையான விளக்கத்தை அளித்துள்ளார். பெனிசில்வேனியா மாநில பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் மதிப்பு மிகுந்த இயற்பியல் மற்றும் கணிதவியல் பேராசிரியராக விளங்கிய இவர் வானியல் மறுஆய்வு பத்திரிகை ஆசிரியர் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

1959 இல் ஜோன் இசபெல் வெட்ஜ் என்ற அமெரிக்கப் பெண்மணியை மணந்ததன் மூலம் இவருக்கு மூன்று மகன்களும், அடுத்து அபிங்டன் பள்ளி கணிதத் துறைத் தலைவராக இருந்த வானசா தாமஸ் என்பவரை மணந்து கொண்டதன் மூலம் ஒரு மகனும் இவருக்கு உள்ளனர். எந்த மதத்திலும் நம்பிக்கை அற்றிருந்த பென்ரோஸ் தன்னை ஒரு நாத்திகவாதி என்றே கூறிக்கொண்டார். காலத்தைப் பற்றிய சுருக்கமான ஒரு வரலாறு என்ற படத்தில், இந்தப் பிரபஞ்சம் உருவானதற்கு ஒரு நோக்கம் இருக்கவேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஏதோ தற்செயலாக இந்தப் பிரபஞ்சம் உருவாகி நிலைத்திருக்கிறது என்று கூறமுடியாது. இந்தப் பிரபஞ்சம் தற்செயலாகத் தோன்றி நிலைத்திருப்பதாகவே சிலர் கருதுகின்றனர். ஆனால் அவ்வாறு கூறுவது பிரபஞ்சத்தைக் காணும் ஒரு பயன்நிறைந்த அல்லது உதவிநிறைந்த வழியாக இருக்க முடியாது என்றே நான் கருதுகிறேன் என்று பென்ரோஸ் கூறியிருக்கிறார். இங்கிலாந்து மனித நேய சங்கத்தின் மதிப்பு மிகுந்த ஆதரவாளராக பென்ரோஸ் இருக்கிறார்.

- தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

தமிழ் ஓவியா said...

நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்டம்

சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மிகப் பெரிய புரட்சி இது என்று தினத்தந்தி 8.7.2014 இதழில் திரு.வி.கே.ஸ்தாணுநாதன் அவர்கள் மதுரை வைத்தியநாத அய்யரைப் புகழ்ந்து தாழ்த்தப்பட்டவர்களை முதன்முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்றார், என்று பதிவு செய்துள்ளார்.

அதற்குத் தக்க பதிலடியாக, ...உண்மை வரலாறு என்ன? என்று சுயமரியாதை இயக்கத்தின் கோவில் நுழைவுப் போராட்டங்களையும் அதை மழுங்கடிக்க ராஜாஜி _ வைத்தியநாதய்யர் கூட்டணி நடத்திய கபட நாடகத்தையும் எடுத்துக்காட்டி 12.7.2014 விடுதலை ஞாயிறு மலரில் மானமிகு கி.தளபதிராஜ் அவர்கள் கருத்துகளைத் தொகுத்துள்ளார்.

இச்செய்திகளை வெளியிடும் தினத்தந்தி போன்ற ஏடுகளுக்கு சுமார் 140 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற வரலாற்றை ஞாபகப்படுத்த வேண்டியது அவசியம்.

நாடார்களின் ஆலய நுழைவுப் போராட்ட நிகழ்ச்சிகள் வைத்தியநாத அய்யருக்குத் துணைபோகும் தமிழர்களைத் தோலுரித்துக் காட்டுவதாக அமையும்.

திருச்செந்தூர் கோவிலில் நாடார்கள் உள்ளே நுழைய முடியாது. வெளியில் இருந்துதான் தேங்காய் உடைத்து சாமி கும்பிட வேண்டும். 1872இல் இதை மீறி ஏழு நாடார்கள் உள்ளே நுழைந்தனர். கோவில் நிர்வாகம் இவர்கள் மீது வழக்குத் தொடுத்தது. டோபி, பார்பர் போன்ற இதர கீழ்ஜாதியினர் கொடிமரம் வரை செல்ல அனுமதியிருக்கும்போது நாடார்கள் உள்ளே நுழைந்ததால் கோவில் புனிதம் கெட்டுவிடாது எனக்கூறி விடுதலை செய்தது. இதனால் நாடார்கள் கொடிமரம் வரை செல்ல முடிந்தது.

1874இல் மூக்க நாடார் மதுரை--- கோவிலுக்குள் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அடையாளம் கண்டுகொண்ட கோவில் பணியாளர்கள் அவரைக் கொன்றுவிட்டனர். நாடார்கள் பணியாட்கள் மீது வழக்குத் தொடுத்தனர். கோவிலுக்குள் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை என நீதிபதி தீர்ப்பளித்து விட்டார்.

1876_78இல் சிறீவில்லிபுத்தூர் தாலுகா திருத்தங்கலில் கோவில் உள்ளே நுழைய நாடார்கள் போராட்டம் நடந்தது. மாவட்ட நீதிபதி தடை உத்தரவு பிறப்பித்து கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஊர்வலம் செல்ல அனுமதி அளித்தார்.

1885இல் கமுதி கோவிலுக்குள் நுழைய அனுமதி கேட்டனர். கோவில் நிர்வாகம் காணிக்கையை உயர்ஜாதியினர் மூலம் கொடுத்துவிடச் சொன்னது. நாடார்கள் மறுத்துவிட்டனர். கோவில் நிர்வாகம் அனைத்து ஜாதியினரையும் நாடார்களைப் பகிஷ்கரிக்க வைத்தது.

1890இல் திருச்சுழி கோவிலுக்குள்ளும், மதுரை கோவிலுக்குள்ளும் நாடார்கள் செல்ல முயன்றபோது அபராதம் விதிக்கப்பட்டது.

1897இல் இருளப்ப நாடார் தலைமையில் அய்ந்தாறு நாடார்கள் காவடி எடுத்துக்கொண்டு இரவில் கோவிலுக்குள் நுழைந்தனர். பூசாரி பூசை செய்ய மறுத்தார். அவர்களே தேங்காய் உடைத்து வழிபாடு நடத்தினர். கோவில் நிர்வாகம் வழக்குத் தொடுத்தது. கோவிலில் நுழைய நாடார்களுக்கு உரிமையில்லை. கோவிலைச் சுத்தம் செய்ய ரூ.500/_ நாடார்கள் தரவேண்டும் என கீழ்க்கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும், இங்கிலாந்து பிரிவி கவுன்சிலும் இதையே உறுதி செய்தது.

1895இல் சிவகாசி கோவில் தர்மகர்த்தா தன் பதவியை ராஜினாமா செய்தார். அந்தப் பதவியை நாடார்கள் கேட்டனர். சிருங்கேரி சங்கராச்சாரியின் ஆணைப்படி மறுக்கப்பட்டது.

1896இல் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். கோவில் கதவுகள் மூடப்பட்டன. பூட்டை உடைத்து உள்ளே போய் தரிசனம் செய்தனர். மோதல்கள் நடந்தன. 1899இல் கலவரம் வெடித்தது. பல உயிர்கள், சொத்துகள் நாசமாயின.
இப்படிப் பல்வேறு சூழல்களால் 1910இல் நாடார் மகாஜன சங்கம் உருவாக்கப்பட்டது.

இப்படி நாடார் என்று ஆலய நுழைவு மறுக்கப்பட்ட காரணம், சனாதன கொள்கைப் படி பிராமணர்களில் பட்டர்கள் கர்ப்பக் கிரகத்துக்குள் போகலாம், இதர பிராமணர்கள் அர்த்த மண்டபம் வரை போகலாம். சூத்திரர்கள் மகா மண்டபம் வரையிலும், தீண்டத்தகாதாரும், நாடார்களும் வெளியில் நின்று கோபுரத்தை மட்டுமே ரசிக்க வேண்டும் என்ற இந்துமதத்தின் அடிப்படையே

தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் இந்து மதத்தையும், சனாதனக் கொள்கையையும் அழிக்க வேண்டும் என்று போராடியதன் நியாயத்தை உணருவார்களா?

- சிவ.பாலசுப்ரமணியன்,
கண்ணந்தங்குடி மேலையூர்.-

தமிழ் ஓவியா said...

மத்திய அரசின் தேர்வாணைய வினாத்தாளில் பெண்களை அவமதிக்கும் வினாக்கள்


பின்வரும் நடிகையரில் யார் அதிக உயரமானவர்?

(அ) ஹூமா குரேஷி, (ஆ) கத்ரினா கைஃப், (இ) தீபிகா படுகோனே (ஈ) ப்ரீதி ஜிந்தா

இந்தக் கேள்வி ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்டு எஸ்.எம்.எஸ்.சில் பதில் சொல்லப்படும் போட்டிக் கேள்வி அல்ல.

புது தில்லியில் உள்ள மத்திய தேர்வாணையம் நடத்திய மத்திய பணியாளர் தேர்வுக்கான வினாத்தாளில் இடம் பெற்றுள்ள வினாக்களுள் ஒன்று தான் மேலேயுள்ளது.

அது மட்டுமல்ல, பெண்களை பாலியல் ரீதியாக இழிவுபடுத்துவதுபோல், தரக்குறைவாக பெண்கள் அனைவரும் பூனைகள், பூனைகள் அனைத்தும் எலிகள் என்கிற தலைப்பில் வினாவும் இடம் பெற்றது.

பெண்களை இழிவுபடுத்தும்விதமாக பாலியல் வேறுபாடுகளுடன் வினாக்களைக் கேட்பதா என்று தேர்வாணையத்திடம் விளக்கம் கேட்டு கேரள மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதற்கு மத்திய தேர்வாணையத்தின் தலைவராக உள்ள ஏ.பட்டாச்சார்யா மன்னிப்புக் கேட்டுள்ளார். இது முறையில்லாதது, சகித்துக் கொள்ள முடியாதது, தரக்குறைவானது என்று கூறியதுடன் இந்தத் தகவலால் மிகவும் நிலைகுலைந்துபோய் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மகளிர் ஆணையத்தின் வேண்டுகோளுக்கிணங்க தேர்வாணையம் அந்த இரு வினாக்களையும் நீக்கிவிடுவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வு எழுதுவோர் இன்ச் டேப்புடன் அலைய வேண்டுமோ என்னவோ? அப்புறம் இடுப்பளவு பற்றி கேள்வி கேட்டுவிட்டால் என்ன செய்வது?