Search This Blog

22.8.14

திராவிடர் கழகமே ஜாதியை ஒழிக்கும் - பெரியார்

திராவிடர் கழகமே ஜாதியை ஒழிக்கும்

  தந்தை பெரியார்

எந்தப் பார்ப்பான் தொழிலாளியாக இருக்கிறான்? விவசாயம் செய்யும் பார்ப் பனன் உண்டா?  மில்லில் கூலி வேலை செய்யும் பார்ப்பனன் உண்டா? அத்தனை தொழிலாளர்களும் தமிழ் மக்கள்தானே?

எனவே, மற்றவர்கள் எக்கேடு கெட்டால் என்ன என்ற எண்ணத்தின் மீது அவர்களிடம் ஆத்திரமூட்டி, தூண்டிவிட்டு முதலாளியிடம் இவ்விதம் வம்புக்குப் போகும்படி செய்துவிட்டு வேடிக்கை பார்க் கிறார்களே பார்ப்பனர்களும்  அவர்களுக் குத் துணை புரியும் கம்யூனிஸ்டுகளும். இவர்கள் கம்யூனிஸ்டுகளாக இருப்பதனால், முதலில் ஜாதியை ஒழிக்கப்பாடுபட வேண் டும்.  ஜாதிப் பாகுபாடு நிலைநாட்டப்பட்டி ருப்பதால்தானே, உழைக்கும் தொழி லாளியும், உழைக்காமல் சுகமாக வாழும் பார்ப்பனரும் இருக்கின்றார்கள்.

ஜாதிப் பிரிவு இல்லையானால், தொழிலாளி-முதலாளி என்ற பிரிவும் மறைந்துபோகும். எனவே, ஜாதியின் பெயரால் இருக்கும் சின் னங்களையும், உயர்வு தாழ்வு பாராட்டுவ தற்கான எண்ணங்களையும் அழிக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.  ஒவ்வொரு கம்யூனிஸ்ட் தோழரும் முதலாவது தன் கையில் கத்தரிக் கோலை எடுத்துக் கொண்டு பார்ப்பாரத் தெருவில் புக வேண்டும்.  அங்குள்ள பார்ப்பனர்களின் ஒரு உச்சிக் குடுமியோ, பூணூலோ இல்லாமல் அடியோடு கத்தரித்து விட வேண்டும். முதலில் இதில் ஈடுபட்டால்தான் ஜாதியை ஒழிக்க முடியும்.

ஆனால், இந்த முயற்சியில் புகுந் தீர்களேயானால் முதன் முதலில் தங் களுக்குத் தலைவர்களாக உள்ள பார்ப் பனர்களின் பூணூலைக் கத்தரித்துவிட்டுத் தான் மற்ற பார்ப்பனர்களிடம் போக நேரிடும்.  ஆனால், இவற்றால் ஜாதி ஒழியும் என்று கூறுவதற்கில்லை.

இன்னமும் கூறவேண்டுமானால் திராவிடர் கழகத்தைத் தவிர மற்ற யாருடைய முயற்சியாலும் ஜாதி ஒழிவதற்கு வழியே கிடையாது.  இதுவரை கீழ்ஜாதி என்பவர்களுக்கும் ஏதாவது கொஞ்சம் மரியாதை இருந்திருக்குமானால், அவர் களுடைய முயற்சினால் தான் வந்திருக்கும்.  காந்தியார் கூட மேல் ஜாதிக்காரனுக்கு என்று தனியாக கோயிலும் குளமும் வேண்டும், கீழ் ஜாதிக்காரனுக்னென்று தனியாகக் கோவிலும் குளமும் வேண்டும் என்றார். நாங்கள் பிறகு கூப்பாடு போட்டு இரண்டு பேருக்கும் தனித்தனியே இருக் குமானால் அந்தக் கோவிலும் குளமும் பறையன் கோவில், பறையன் குளம் என்று பெயரிடப்பட்டு அவை உள்ளவரை அந்த ஜாதியும் மறைவதற்கு வழி இல்லை என்று சொன்னோம்.

அதன் பிறகுதான் ஒரே கோவிலில் எல்லோரும் சாமி கும்பிடலாம் என்று சொன்னார்கள். ஆனால், இன்னமும் பார்ப்பான் கோவிலில் அனுபவிக்கும் சுதந்திரம் சூத்திரனும் பறையனும் அனுப விக்கமுடியாது.  பார்ப்பான் மட்டும்தான் சாமிக்குப் பக்கத்தில் போகமுடியும். அந்த இடத்தில் நாம் போக முடியாது.

இப்படிக் கோவிலுக்குப் போக வேண் டிய அவசியம்தான் என்ன இருக்கிறது? இன்னமும் இந்த மூடங்கள் அவிழ்த்துக் கொடுக்கின்றன. பார்ப்பான் வாங்கி இடுப் பில் சொருகிக் கொண்டே இருக்கிறான். 1956 ஆம் ஆண்டிலும் இந்த அக்கிரமம் நடக்கலாமா? இதையல்லவா கம்யூ னிஸ்ட்கள் ஒழிக்க வேண்டும்? எந்த நாட்டில் கம்யூனிஸ்ட்களுக்குப் பாதிரி தலைவனாக இருக்கிறான்? கம்யூனிஸ்ட் என்றாலே பாதிரிக்கு வேலை இல்லை.

இந்தப் பாதிரியை விட மகாக் கொடு மையும், பித்தலாட்டமும் செய்யும் முதல்தரப் பார்ப்பனர்கள் கம்யூனிஸ்ட்க் குத் தலைவராக இருக்கின்றனர். ஏன்? நம்முடைய ஆளுக்கு யோக்கியதையும் திறமையும் இல்லையா?  பார்ப்பனர் கம்யூனிஸ்ட்களின் தலைவராக இருக்க என்ன யோக்கியதை உடையவர்கள்?  எப்படியாவது உண்மை கம்யூனிசம் நம் நாட்டில் பரவினால் பார்ப்பனர்களுக்குச் சீட்டுக் கொடுத்தனுப்பும் நிலையைக் கொண்டு வந்துவிடுவார்கள் என்பதற்காகப் போலி கம்யூனிசம் நாட்டில் பார்ப் பனர்களால் பரவச் செய்யப்படுகிறது.

உண்மைக் கம்யூனிசம் இந்த நாட்டில் பரவுமானால் இங்கே பார்ப்பனருக்கும், மதம் சாஸ்திரம் புராணங்களுக்கும், கடவுள் களுக்கும் வேலையே இருக்காது. எனவே, இந்த மதமும் ஜாதியும் ஒழிய வேண்டு மானால், எங்களைத் தவிர வேறு யாரும் கவலை கொள்பவர்கள் கிடையாது. நாங் கள்தான் முதன் முதலில் ஜாதி ஒழிய வேண்டும் என்றும் கூறியவர்கள்.

காந்தியார் கூட செத்துப் போவதற்குப் பத்து நாட்களுக்கு முன்பாகத்தான் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறினார். அதற்கு முன் ஜாதியைப் பற்றிய கவலை காந்திக்கு இருந்ததேயில்லை. ஜாதியைக் காப்பாற்றிய தால்தான் அவர் ``மகாத்மா என்று போற்றப் பட்டார். ஆனால் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன் வள்ளுவரும், புத்தரும் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள்.

இதைத்   தவிர இப்போது முதன் முதலில் எங்களைத் தவிர வேறு யாரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினதுமில்லை.  நாங்கள் சொன்ன பிறகு, டாக்டர் அம் பேத்கர், காந்தியின் தவறுகளை உணர்ந்த பின் தான் அவரும் ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறினார். அதற்கு முன் அவரும் காந்தியுடன் சேர்ந்து ஏமாற்றப்பட்டவர் தான். காந்தியார் ஜாதியைக் காப்பாற்றத் தான் முயற்சிக்கிறார் என்ற உண்மை தெரிந்த பின்னர் ஜாதி  ஒழியவேண்டும் என்று கூறினார்.

இப்போது தென்னாட்டில் நாங்களும், வடநாட்டில் டாக்டர் அம்பேத்கரும்தான் ஜாதியை ஒழிக்கப்பாடு படுகிறோம்.

முன்பு ஜாதி ஒழிப்புச் சங்கம் என்று ஒன்று இருந்தது. அதற்கு பிர்லா தலைவர். நேருவின் உறவினர்களில் ஒரு பெண் செக்ரெட்டரியாக இருந்தார். இப்படி இவர்கள் சேர்ந்து ஜாதி ஒழிப்புக்குத் திட்ட மிட்டால் உருப்படுமா? அந்த சங்கத்தின் மாநாட்டிற்கு டாக்டர் அம்பேத்கரைப் பேசுவதற்கு அழைத் தனர். இவரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

மாநாடு நடத்தும் தினம்  நெருங்குவதற்கு ஆரம் பித்தது.  அம்பேத்கரை, நீங்கள் எதைப் பற்றிப் பேசுவதாக இருக்கின்றீர்கள்? அதன் குறிப்பு முதலில் வேண்டும் என்று கேட் டார்கள். இவர் கொடுத்த குறிப்பில் மத சாஸ்திர புராணம் மற்றும் கடவுள்கள் இவற்றின் யோக்கியதையை வெளியிடுவ தாக எழுதி இருந்தார். உடனே அதை மாளவியா மற்றும் பெரிய ஆட்கள் எல்லாம் எதிர்த்தார்கள். நீ எதை வேண்டுமானாலும் பேசு. ஆனால் மதத்திலும், ஜாதியிலும் கடவுளின் மீதும் கையை வைக்காதே என்று கூறினர்.

ஆனால், அம்பேத்கர் ஓங்கி அடித்துக் கூறிவிட்டார். நான் மாநாட்டில் பேசுவதாக இருந்தால், இதைத் தவிர வேறு எதையும் பேச முடியாது.  என்னுடைய பேச்சு தேவைப்படுமானால், இதைத் தான் பேசுவேன். ஆனால் நீங்கள் இதை மறுத்து மாநாட்டின் இறுதியில் என்னுடைய பேச்சைச் சங்கம் ஏற்க மறுக்கிறது என்று வேண்டுமானாலும் தீர்மானித்துக் கொள் ளுங்கள்! அதற்கு ஆட்சேபணை இல்லை என்று கூறிவிட்டார். பிறகு அம்பேத்கர் தம் எண்ணப்படியே பேசினார்.

இவ்விதம் ஜாதியை ஒழிக்கும் வீரர்கள் மதத்திலும், சாஸ்திர புராணத்திலும், கடவுள்களிடமும் கைவைக்காமல் ஒழித்து விடலாம் என்று பார்க்கிறார்கள். இப்போது கூட அரசியல் தலைவர்கள் எல்லாம் ஜாதி ஒழியவேண்டும் என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள்.  ஆனால், ஜாதி ஒழிய எவை தேவையோ அந்தக் காரியங்களில் பிரவேசிப்பதில்லை. நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று அடிக்கடியும் கூறுகிறார். ஆனால், முதலில் அவருடைய உச்சிக் குடுமியையும் பூணூலையும் அப்படியே வைத்துக் கொண்டு ஜாதி ஒழியவேண்டும் என்று கூறுகிறார். ஆகக்கூடிய காரியமா?

சர்வ அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று உண்மையில் நினைப்பாராகில் அதற்கென்று சட்டமே இயற்றிவிடலாம். இனிமேல் யாரும் ஜாதிச் சின்னம் அணியக் கூடாது. பூணூலை அறுத்து எறிய வேண்டும். இல்லையேல் இந்தச் சட்டப்படி போலீசார் கத்தரித்து விடுவார்கள்.

கோவில்களில் பார்ப்பனர் மட்டு மல்லாது பறையன்,  சக்கிலியன் யாவரும் மணி அடிக்கலாம் என்று சட்டமியற்றி விட்டால் சீக்கிர மாகவே ஜாதியை ஒழிக்கலாம். அதன்றி வாயினால் சொன்னால் மட்டும் போதாது. ஆனால், நேரு அப்படிக் கூறுவ தற்கு அவருக்குப் பைத்தியம் பிடித்தால் ஒழியக் கூறமுடியாது. பச்சைப் பார்ப்பனராக இருந்து கொண்டு அப்படிக் கூறுவாரா? அவரு டைய ஆட்சியே பார்ப்பனர்களின் நன்மைக்கென்று இருக்கையில் பார்ப் பனர்கள் விஷயத்தில் கை வைக்க மாட்டார்.

இப்போது கூட நான் அரசாங்கத்திற்கு எதிரானவன் என்ற காரணம் என்ன? அரசாங்கம் பார்ப்பனருடையது.. பார்ப் பனரை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன்.  ஆகையால்தான் நான் அரசாங்கத்திற்கு எதிரானவன். நான் என் வேலையை விட்டு, இனிமேல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன். ஏதோ இதுவரை தெரியாமல் பார்ப்பனர்கள், சாஸ்திரம், கடவுள் இவை எல்லாம் ஒழிய வேண்டும் என்று கூறினேன். இப்போது பகவான் என்முன் தோன்றி இதுவெல்லாம் கூடாது என்று சொன்னார். ஆகவே, பார்ப்பனர்கள் பூலோகத் தேவர்கள் என்று காமராசருக்கு மட்டுமல்ல.

நேருவுக்கும் தந்தி கொடுத் தேனாகில், உடனே மறு தந்தியில், உனக்கு ஒரு மந்திரி மட்டும் போதுமா? அல்லது இரண்டு மந்திரி உத்தியோகம் வேண்டுமா? சென்னை அரசாங்கத்தில் வேண்டாம். மந்திய அரசாங்க மந்திரியாகவே அமர்ந்து விடலாம். எந்த இலாகாவுக்கு என்று கவலைப்பட வேண்டாம். இலாக்கா பொறுப்பு இல்லாத  இலாக்கா என்று ஒன்று அமைத்து அந்த இலாக்காவுக்கு மந்திரியாக இருக்கலாம் என்று  தெரிவிப்பாரே.

ஏனெனில், என்னைவிட இப்போதுள்ள மந்திரிகளில் ஒருவர் கூட காங்கிரசில் அதிகம் பாடுபட்டவர்கள் அல்லர். என்னைப் போன்று ஜெயிலுக்குப் போய் காங்கிரஸ் கொள்கைகளை நிலை நாட்டப் பாடுபட்டவர்கள் யாருமே இல்லை.  முதல் மந்திரி காமராசர் நான் காங்கிரசில் இருந்தபோது எனக்கு வாலன்டியராக இருந்தாராம்.  அவர் அப்போது இருந்த இடமே தெரியாது. விருதுநகர் மாநாடு ஒன்றுக்கு நான் தலைவராக இருந்தபோது எனக்கு வாலன்டியராக இவரை அமர்த் தினதாக அவர் கூறக் கேட்டிருக்கிறேன்.
அதற்கு நான் அவரிடம் சரியாக ஞாபகம் இல்லை என்றும் கூறியிருக்கிறேன்.  எனக்கு வாலன்டியராக இருந்தவர் சென்னை முதன் மந்திரியாக இருக்க, நான் இந்தியா வின் பிரதம மந்திரியாகக் கூட ஆக முடியும். ஆனால், இப்போது என் முயற்சி எல்லாம் இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பதுதான். ஜாதியின் கொடுமை அடி யோடு ஒழிய வேண்டும்.

நான் மற்றவர் களைப் போல் சும்மா பணக்காரன் ஒழிய வேண்டும் என்று கூறுகிறவன் அல்ல. ஆனால், இதுவும் என்னால் ஆக முடியாத காரியம் என்று அல்ல. கடவுளையே ஒழிக்க முற்படுபவனாகிய எனக்கு இந்தப் பணக் காரன்களை ஒழிப்பதா பெரிய காரியம்?

மேலும் இப்போது கூறுகிறேன்.  மந்திரி களைப் போல் ஜாதி ஒழிய வேண்டும் என்று வாயினால் சொல்லுகிறவன் இல்லை.  சட்டத்தின் மூலம் ஜாதி ஒழிய வேண்டும்  சட்டத்தில் உள்ள ஜாதிப்  பாகு பாடுகள் எல்லாம் ஒழிந்தால்தான் நான் கொஞ்சம் அயர்வேன்.

பார்ப்பனத்தி நமக்குப் பெண்டாட்டி மட்டுமல்ல, வைப்பாட்டி யாக இருந்தாலும் அவருக்குச் சொத்து கொடுக்க வேண்டும்.  ஆனால், பார்ப்பானுக்கு நம் ஜாதிப் பெண் பெண்டாட்டியாக இருந்தால் கூட கண வனிடம் சொத்து கேட்க உரிமை இல்லை. இப்படிப்பட்ட சட்டத்தை வைத்துக் கொண்டே ஜாதியை ஒழிக்க முடியுமா? முதலில் இந்தச் சட்டத்தைக் கொளுத்தி விட்டு பிறகு நேரு ஜாதி ஒழிய வேண்டும் என்று  சொன்னால், அதை ஒருவாறு உண்மை என்று நம்பலாம்.

காமராசராவது ஓரளவு தம்மால் இயன்ற அளவு ஜாதியினால் ஏற்பட்ட கொடுமை களையாவது உணர்ந்திருக் கிறார். வேறு யாருடைய ஆட்சியிலும் இல்லாத முறை யில் நல்லவர்களுக்கு உதவி செய்கிறார். தேவஸ்தான இலாகா மந்திரியாக பஞ்சம ஜாதி என்று இகழப்படுபவரை (பரமேஸ் வரன்) அமர்த்தினார். அர்ச்சகப் பார்ப்பனர் எல்லாம் இவரைக் கண்டால் கை கட்ட வேண்டும்.

இந்த அளவுக்காவது பார்ப்பனத் திமிரை ஓரளவு அவரால் அடக்க முடிந்தது. மேலும் அவர் காலியாகிற உத்யோகங் களை எல்லாம் தமிழர்களுக்கே கொடுத்து  வருகிறார்.  இதைவிட இன்னமும் அவர் எப்படி தமிழர்களுக்கு நன்மை செய்வார் என்று எதிர்பார்க்க முடியும்? மேலும் அவரும் வடநாட்டுப் பார்ப் பனத் தலைமை பீடத்திற்கு அடங்கி நடக்க வேண்டியவர்.
வடநாட்டினர் கிழித்த கோட்டைத் தாண்ட முடியாத நிலைமையில் ஆட்சியில் இருந்து கொண்டு நமக்கு இவ்வளவாவது நன்மை செய்கிறார் என்பதைக் கொண்டு நாம் சந்தோஷமடைய வேண்டும்.

அதைவிட அவருடைய ஆட்சிக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சிப்பது மிகவும் அறிவீனமாகும். அவரைப் பற்றி ஏதேதோ இல்லாதவைகளைச் சேர்த்துப் பேசி அவர் மேல் மக்களுக்கு வெறுப்பூட்ட நினைக்கிறார்கள். இதுவரை அவர் அந்த இடத்தில் இருக்கவில்லையானால், அந்த இடத்தில் நண்பர் ஆச்சாரியார் இருப்பார். அவர் அவருடைய தொழிலான ஜாதி வளர்ப்புத் தொழிலையே பார்த்துக் கொண்டிருப்பார். அவரும் இல்லையேல் பூணூல் இல்லாத பார்ப்பனர்களாகிய சுப்ரமணியமோ அல்லது பக்தவத்சலமோ அந்த இடத்தில் இருப்பார்கள்.

பூணூல் உள்ள பார்ப்பனரையாவது கொஞ்சம் நம்பலாம். இந்த பூணூல் இல்லாத பார்ப்பனர் களைக் கொஞ்சமும் நம்பக் கூடாது.  பார்ப் பானாவது பதவியின் பேரால் கொஞ்சம் கோழைத்தன்மை உடைய வர்கள்.  தன்னைப் பார்ப்பான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மானம் கெட்ட தமிழர்கள் எந்தக் கொடுமையும் துணிந்து செய்வர்.
உங்கள் குல வேலையை நீங்கள் பார்த்த பிறகல்லவா பிறருக்குப் புத்தி சொல்ல வேண்டும்? என்றேன். இதைக் கேட்டு அவர் ராமசாமிக்கு ஜாதித் துவேஷம் ரொம்பவும் முத்திப் போச்சுது என்றாராம்.

பிறகு இந்த ஆள் ஒழுங்குபடமாட்டார் என்று தெரிந்து அதற்காக கத்தியும், பெட்ரோலும் தயாரா இருக்கும்படி செய்திருந்தேன். அதன் பிறகுதான் ஒரு வழிக்குச் சரியாக வந்தது. அவரும் ஆட்சியை விட்டுப் போனார். மறுபடியும் காமராசர் வர முடிந்தது.

இவருக்குத் தொல்லை கொடுப்பவர்கள் இப்போது மலிந்து போய்விட்டார்கள். அவர்கள் எல்லாம் பீர்மேடு, தேவிகுளம் என்று தாண்டிக் குதிக்கிறார்கள். தேவிகுளம், பீர்மேடு வேண்டாம் என்ற ஆட்க ளெல்லாம்  இப்போது விளம்பரத் திற்காக மாற்றிக் கூறுகிறார்கள். தேவிகுளம், பீர்மேடு நம்முடையதாகவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட போது, இதே கம்யூ னிஸ்ட்கள் நடுநிலைமை வகித்தார்கள்.

சோஷலிஸ்ட்கள்தான் இதன் சம்பந்தமாக என்ன யோக்கியதை உடையவர்கள்?  பட்டம்தாணுவின் சர்க்கார் நடக்கும் சமயத்தில் தேவிகுளம், பீர்மேடு வேண்டுமென்று கேட்ட தமிழர்களைச் சுட்டுக் கொன்றதைப் பார்த்து இப்படித்தான் சுட்டுக் கொல்ல வேண்டும்.

தேவிகுளம் பீர்மேட்டைக் கேட்க தமிழர்கள் தகுதி யற்றவர்கள் என்றெல்லாம் இங்குள்ள சோஷலிஸ்டுகள் கூறினார்கள். அப்படிப் பட்ட கம்யூனிஸ்ட்டும், சோஷலிஸ்ட்டும் இன்றைக்குத் தேவிகுளம் பீர்மேடு வேண் டும் என்று கிளர்ச்சி செய்கிறார்களாம்.

--------------------------------------17.2.1956 இல் மாயூரம் மணல்மேட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு -"விடுதலை", 5-3-1956

100 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

வல்லப கணபதி

அம்பாள் - ஸ்வா மிக்குத்தான் திருக்கல்யா ணம் நடத்தும்போது திரு மாங்கல்யம், குங்குமம், மஞ்சள் என மங்கலப் பொருட்களைப் பிரசாத மாகக் கொடுப்பார்கள். ஆனால், மதுரை அருகே வாடிப்பட்டியில் உள்ள ஆண் கடவுளான வல்லப கணபதி கோயி லிலும் இவற்றைப் பிரசாத மாகக் கொடுக்கின்றனர். விநாயகருக்குப் பூஜை யின்போது இப்பொருட் களை வைத்தும் வழிபடு கிறார்கள். விநாயகர் அம்பிகையிடமிருந்து தோன்றியதால் இவரை சக்தி அம்சமாகக் கருதி இவ்வாறு செய்கின்றன ராம்.

இடையிலே வல்லப கணபதி என்ற ஒரு சமாச்சாரம் வருகிறதே அது என்னவாம்? சூரபத் மனுக்கும் -சுப்பிரமணிய னுக்கும் சண்டை நடந்த போது சகோதரன் சுப்பிர மணியனைக் காப்பாற்ற விநாயகன் முன்வந்தா னாம். சூரபத்மனுக்குப் படை வீரர்கள் வல்லபை என்ற அசுரப் பெண்ணின் உறுப்பிலிருந்து வந்து கொண்டே இருந்தார் களாம் - விநாயகன் என்ன செய்தான்? தன் தும்பிக்கையால் பெண் ணின் குறியின் பாதையை அடைத்தானாம்.

அதனால்தான் விநாய கனுக்கு வல்லப கணபதி என்று பெயராம். இந்த அசிங்கமான காட்சியை இன்றைக்கு சிலையாக மத்தூர் கோயிலில் பார்க் கலாம்! அட ஆபாசமே, உன் பெயர்தான் பக்தியா? இந்து மதமா?

Read more: http://viduthalai.in/page1/85702.html#ixzz3B5388ywQ

தமிழ் ஓவியா said...

பெரியார் பணி முடிப்பவர்களுக்கு ஓய்வு, சலிப்பு கிடையாது!


விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்று 52 ஆண்டுகள்

பெரியார் பணி முடிப்பவர்களுக்கு ஓய்வு, சலிப்பு கிடையாது!

மணமக்களே விடுதலை சந்தா அளித்தது ஒரு முன் மாதிரியே!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை



விடுதலை ஆசிரியராகப் பொறுப்பேற்று 52 ஆண்டுகள் ஓடியுள்ள நிலையிலும், பெரியாரின் பணி முடிக்கும் அவர்தம் பணியில் ஓய்வோ, சலிப்போ ஏற்பட்டதில்லை என்பதைப் பெருமிதத்துடன் கூறும் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் நெகிழ்ச்சியூட்டும் அறிக்கை:

பெரியார் நாடு என்று நம்மால் பெருமைப்பட அழைக்கப்படும் உரத்தநாட்டுப் பகுதியில் நேற்று முதல் நாள் (10.8.2014) அன்று காலை காவாரப்பட்டு என்ற சிறிய கிராமத்தில், நமது கழகப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான தோழர் இரா. குணசேகரன் தம்பி மகள் திருமண நிகழ்வில், விடுதலை ஆசிரியர் பொறுப்பேற்று 53ஆவது ஆண்டு தொடங்கும் நாள் என்பதை எனக்கு நினைவூட்டி மகிழ்ந்தனர்.

பெரியார் பணி முடிக்கும் பணியில் ஓய்வேது?

பெரியார் பணி முடிக்கும் இலக்கில் இது ஒரு சாதாரண நிகழ்வே தவிர - நம்மைப் பொறுத்த வரையில் - ஒரு பெரும் சாதனையல்ல! செல்ல வேண்டிய பயணங்கள் ஏராளம்!!

ஊதியத்திற்காகப் பணி செய்வோருக்கே ஓய்வு உண்டு. ஓய்வூதியம் உண்டு. ஓய்வு பெறும் கால அளவு உண்டு. மானம் பாராது, நன்றி நோக்காது பதவி, புகழ், பெருமை தேடாது, எதிர் நீச்சலிலேயே எப்போதும் உள்ளவர்களுக்கு - குடி செய்வார்க்கு பருவம் ஏது? கால நேரம் என்று காத்திருக்கும் குணம்தான் ஏது என்பது தானே பெரியார் தொண்டர்களின் இலக்கணம்! நமது அறிவு ஆசானின் பாடங்களைச் சரியாகக் கற்கும் எந்த மாணவருக்கும் மேற்சொன்னதுதான் பால பாடமாகும்.

அலுப்பு இல்லை - சலிப்பு இல்லை!

தன்னலம் அறியாத தன்மானப் பெரு வாழ்வு வாழ இந்தப் பாசறையில் இடம் கிடைத்து, அது பெரும் பேறு அல்லவா? இத்தனை ஆண்டு காலம் உழைத்தாலும், அலுப்போ, சலிப்போ, விரக்தியோ, வேதனையோ தோன்றவில்லை; மாறாக மாரத்தான் (Marathon) ஓட்டப் பந்தயத்தில் ஓடும் போட்டியாளனுக்கு இலக்குதானே முக்கியம்; எல்லோரையும் முந்தி ஓடி அதை அடைவதுதானே முக்கியம்! அதுபோன்றதே நமது இயக்கப் பணியும்.

ஓர் எடுத்துக்காட்டுத் திருமணம்

நமது தோழர்கள் - அன்பர்கள் - 53 ஆண்டு சந்தாக் களை விடுதலைக்குப் பரிசாக அளித்து ஊக்கப்படுத் தினார்களே, அதுதான் முக்கியம்!

மணமகனும் மணமகளும்கூட தனித்தனியே 14 விடுதலைச் சந்தாக்களை அளித்து நல்ல முன்மாதிரியாக - இனி வரும் நமது சுயமரியாதைத் திருமணங்களில் விடுதலை முதலிய நமது ஏடுகளுக்குச் சந்தா வழங்கு வதை ஒரு முக்கிய கடமை - நிகழ்வாகக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுவதுபோல் அமைந்தது அவர்களது பாராட்டத்தக்க நடவடிக்கை.

மாலைக்குப் பதில் சந்தா

1500 ரூபாய் செலவில் ரோசாப் பூக்கள் மாலை அணிவிக்க வந்தபோது, மிகுந்த வருத்தம் அடைந்தேன்; அதுபற்றிக் கூற எண்ணியிருந்தேன். எனது உரையில்; குறிப்பால் உணர்ந்த நம் தோழர்கள் அதனை மேடை யிலேயே ஏலம் விட்டு, திரு. நல். மெய்க்கப்பன் ரூ.2000/-க்கு ஏலம் எடுத்து அதனைக் கழக நிதியில் இணைத்து தப்பித்துக் கொண்டு மகிழச் செய்தனர்!.

சால்வைக்குப் பதில் சந்தா என்பதை அருள்கூர்ந்து அமுலாக்குங்கள்.

கட்டுப்பாடு காக்கும் அரிய பணி!

உரத்தநாட்டில் எல்லாத் தோழர்களும் ஓர் அணியாய் ஒன்றுபட்டுப் பணியாற்றுவதே எனக்கு மாலை சூட்டுவதைவிட பெரிதும் எம்மை மகிழ்விக்கும் கட்டுப்பாடு காக்கும் அரிய பணி என்று கூறிப் பாராட்டி மகிழ்கிறோம்.



கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்



சென்னை 12.8.2014

Read more: http://viduthalai.in/page1/85696.html#ixzz3B53QHmCd

தமிழ் ஓவியா said...


இந்தியா இந்து நாடா?


ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் தெரிவித் துள்ள கருத்து - நாட்டில் தேவையில்லாத பிரச்சி னைக்குக் கொடியேற்றி வைத்துள்ளது. இந்தியா இந்து நாடு என்று அவர் தெரிவித்துள்ள கருத்துக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நேற்று விடுதலையில் மிக முக்கியமான அறிக்கையினை காலங் கருதி வெளியிட்டுள்ளார்கள்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் தானே அறிவித்துள்ளார் என்று அலட்சியப்படுத்தி விடவும் முடியாது. ஆர்.எஸ்.எஸ். தான் பா.ஜ.க.வுக்குத் தாய் நிறுவனம்! இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ் ஆல் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டவர்தான் பிஜேபி வேட்பாளரான நரேந்திர மோடி என்பதைத் தெரிந்து கொண்டால் ஆர்.எஸ்.எஸ்-இன் தலைவர் தெரிவித்த கருத்தின் அபாயம் எத்தகையது என்பது எளிதிலேயே விளங்கி விடும்.

ஆர்.எஸ்.எஸ்-இல் தயாரிக்கப்பட்டவரே பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக வர முடியும் என்பது ஆர்.எஸ்.எஸ்-இன் விதிமுறையாகும். 16ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி பச்சையாக ஒப்புக் கொண்ட ஓர் உண்மை உண்டு.

ஆர்.எஸ்.எஸின் அறிவுரையைக் கேட்டுத்தான் தேர்தல் அறிக்கையைத் தயாரித்ததாகக் கூறிடவில் லையா? இதற்கு மேல் என்ன வேண்டும்? ஆர். எஸ்.எஸ்., என்ன சொல்லுகிறதோ, என்ன நினைக் கிறதோ, அதன்படி செயல்பட வேண்டிய கட்டாயம் மத்திய பிஜேபி அரசுக்கு இருக்கிறது.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் அதனை நிறைவேற்றுவதைத் தவிர பிஜேபி தலைமை யிலான அரசுக்கு வேறு வழியும் கிடையாது - கிடையவே கிடையாது!

பிஜேபியின் தேர்தல் அறிக்கையை எடுத்துக் கொண்டாலும் 370ஆவது சட்டப் பிரிவு திருத்தம், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கென்றுள்ள சிறப்பு உரிமைகளை நீக்குவது, பசு பாதுகாப்பு, கங்கையைச் சுத்தப்படுத்துவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்-இன் அஜண்டா கம்பீரமாக இடம் பெற்று இருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இதில் முக்கியமாகக் கருத்தூன்றத் தக்க விடயம் உண்டு. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச் சார்பின்மைக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதாக உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

இந்தச் சூழலில் இந்தியாவை இந்து நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறுவது பச்சையாக அரசமைப்புச் சட்டத்தை அத்துமீறுதல் ஆகாதா?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளிப் படையாக அறிவித்த பிறகும்கூட, பிரதமரோ அல்லது பிஜேபியின் தலைவரோ ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்தை அரசைக் கட்டுப்படுத்தாது; பிஜேபியைக் கட்டுப்படுத்தாது என்று சொல்லியிருக்க வேண்டும் அல்லவா? ஏன் சொல்லவில்லை? மவுனம் சம்மதத் துக்கு அடையாளம் என்கின்ற உலகியலை ஏற்றுக் கொண்டால் ஒரு மணித்துளி அளவுகூட ஆட்சியில் நீடிக்க முடியாது - கூடாது!

நாடாளுமன்றத்தில் மதச் சார்பற்ற கட்சிகள் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

மத்தியில் ஆட்சி அமைத்து 60 நாட்களுக்குள் ளாகவே மத்திய ஆட்சியின் மதச் சார்பற்ற தன்மையின் மீது அய்யத்துக்கு இடமின்றி சந்தேக நிழல்கள் படரத் தொடங்கி விட்டன.

குடியரசு தலைவர் அழைத்த இப்தார் விருந்தையே பிரதமர் மோடி புறக்கணித்தது சாதாரணமானதல்ல.

இஸ்ரேல் - பாலஸ்தீன போரின் மீதான கருத்தை வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கத் தயங்குவதும் இந்தப் பட்டியலில் வைக்கத் தகுந்ததே!

இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்திற்குப் பச்சை யான இந்துத்துவாவாதியைப் பொறுக்கி எடுத்து அறிவித்திருப்பதும் அந்த வகையில்தான்.

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட வேண்டும் என்று ஆணையிட்டு இருப் பதும், அதற்காக மக்கள் வரிப் பணத்தைக் கோடி கோடி யாகக் கொட்டுவதும், இந்துத்துவாவின் கூர்மையான நடவடிக்கையே!

சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்த இந்தியில்தான் மத்திய அரசு பணியாளர்கள் கடிதத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று இதற்கு முன் ஆணை பிறப்பித்ததும் இந்துத்துவாவின் செயல்பாடே!

இத்தகைய செயல்பாடுகள் மூலம் பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் 125 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் பிளவு மனப்பான்மையை உண்டாக்குவது - எத்தகைய விபரீதமானது!

வேற்றுமையில் ஒற்றுமை என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டதெல்லாம் பழங்கதைதானா? கட்சிகளை மறந்து இந்துத்துவாவாதிகளின் இத்தகைய மதவெறிப் போக்கை வன்மையாகக் கண்டிக்க முன்வர வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் வழக்கம் போலவே தக்கதோர் தருணத்தில் முன் குரல் கொடுத்து முழங்கியுள்ளார் - மதவாத சக்திகளை முறியடிக்க ஓரணியில் திரளுவோம்! திரளுவோம்!!

Read more: http://viduthalai.in/page1/85704.html#ixzz3B53tgcf4

தமிழ் ஓவியா said...


அஸ்திவாரம் கிடையாது

பார்ப்பனர்களால் போற்றி வளர்க்கப்படும் இந்து மதம் என்று சொல்லப்படுகிற மதத்துக்கு அஸ்திவாரம் கிடையாது. - (விடுதலை, 11.7.1954)

Read more: http://viduthalai.in/page1/85703.html#ixzz3B543vJcV

தமிழ் ஓவியா said...


ஏ! தாழ்ந்த தமிழகமே!

வணக்கம், தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி என்று யுனெஸ்கோ ஹிழிணிஷிசிளி நிறுவனத்தால் விருது வழங்கப்பட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த மண்ணில், தமிழர் தலைவர் முனைவர் மானமிகு கி.வீரமணியார் ஓயாது பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து வரும் தமிழ் மண்ணில் இன்னும் சில ஊர்களில் வெட்கக்கேடான செயல்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.

31.7.2014 தேதிய தொலைக்காட்சியில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகில் உள்ள பல்லேனஹள்ளி என்ற கிராமத்தில் முனியசாமிக்கு ஒரு கோயில். அந்தக் கோயிலுக்கு அருகில் ஒரு பெரிய அரச மரம் உள்ளது. அந்த அரசமரத்தில் நூற்றுக் கணக்கான வவ்வால்கள் தங்கி வருகின்றன. அந்த வவ்வால்கள் அந்த கிராம மக் களுக்குக் கடவுளாம்! அந்த வவ்வால்களின் கழிவுகளை அந்த கிராம மக்கள் பிர சாதமாக மதிக்கிறார்களாம்!

முனியசாமியை வேண்டிக் கொண்டு நேர்த்திக்கடன் செய்தால் நினைத்த செயல் கைகூடுகிறதாம். படிப்பில் மந்தமாக இருந்த சில பெண்கள் முனியசாமியை வேண்டிக் கொண்டதில் பட்ட வகுப்பில் தேர்ச்சி பெற்று பட்டதாரிகள் ஆகியிருக்கிறார்களாம்!

கோயிலில் உணவு அருந்திக் கொண்டிருக்கும் தாய்மார்களிடம் சில இளம் பெண்கள் குழந்தை வரம் வேண்டி மடிப் பிச்சை வாங்குகிறார்கள்! ஒரு கிராமத்தில் மழை வேண்டி இரு கழுதைகளுக்குத் திருமணம் செய்து வைக் கிறார்கள்! கழுதைக்கும் மழைக்கும் என்ன தொடர்பு என்று திருமணம் செய்து வைக்கும் அறிவிலிகள் சிந்திப்பதே இல்லை.

மற்றொரு கிராமத்தில் பெண்களுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று பேயை விரட்ட பெண்களைக் கோயில் பூசாரி சவுக்கால் அடிக்கிறான்! எந்த பார்ப்பனப் பெண்ணா வது பேய் பிடித்திருக்கிறது என்று தன்னை பூசாரி சவுக்கால் அடிக்க சம்மதிப்பாளா?
கரூர் அருகே மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோயிலில் பெண்கள் தலையில், நேர்த்திக் கடன் என்று சொல்லி பூசாரி தேங்காயை உடைக்கிறான். சில பெண்கள் தலையில் ஆழமான காயம் ஏற்பட்டு இரத்தம் வடிகிறது. அவர்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள்!

ஒரு கோயில் தேர்த்திருவிழாவில் தேரின் சக்கரம் பக்தரின் உடலில் ஏறி பக்தர் இறந்தே போகிறார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் பண்டித நேரு பின்வரும் வேண்டுகோளை விடுத் துள்ளார். இந்தியா தனது மத மவுடீகங் களைக் களைந்து விஞ்ஞானப் பாதையில் திரும்ப வேண்டும். தேவையற்ற, பொருளற்ற எண்ணங்களும், சமூகப் பழக்க வழக்கங் களும் - இந்தியத் தாய்க்குச் சிறைச் சாலையை எழுப்பி இருக்கின்றன. இந்த மடமையே இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.

திருவண்ணாமலை கார்த்திகைத் தீப விழாவிற்கும், திருச்செந்தூர் சூர சம்மாரத் திற்கும் பக்தர்கள் 15 இலட்சம், 20 லட்சம் என்று கூடுகிறார்கள்! இதனால் மக்களின் நேரம், நினைப்பு, உழைப்பு, பணம் ஆகி யவை செலவே தவிர தமிழகத்திற்கு எவ் வகை நன்மையும் கிடையாது. சேத்துப் பட்டை அடுத்த மேல்வில்லிவனம் பச்சை யம்மன் கோவிலில் தீமிதி விழாவில் தீ மிதிப் போரைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

என்பது வள்ளுவரின் பொன்மொழி, தந்தை பெரியார், மானமிகு கி.வீரமணியார் ஆகிய அறிஞர்களின் கருத்துக்களைக் கேட்டாலே சான்றோர் மூடநம்பிக்கைகளி லிருந்து திருந்திவிடுவார்கள். தமிழகத்தில் இலட்சக் கணக்கான இளைஞர்கள் திருந்தி இருக்கிறார்கள். ஆனால் கீழ்மக்கள் கரும்பு போல் பிழிந்தால் தான் திருந்துவார்கள். ஆகவே பகுத்தறிவுக் கொள்கையையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்க்க வேண்டும் என்ற இலட்சியத்தைக் கொண்ட இந்திய அரசியல் சட்டத்தை பின்பற்றும் தமிழ்நாடு அரசு சட்டத்தின் மூலம் பெண்களுக்கு பேய் விரட்டுதல், தலையில் தேங்காய் உடைத்தல், நெருப்பு மிதித்தல் போன்ற மூடப்பழக்கங்களைத் தடை செய்ய வேண்டும். தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் கொடியில் ஏந்தி இருக்கும் அண்ணா திமுக அரசு செய்ய வேண்டிய கடமை ஆகும் இது.

- இர.செங்கல்வராயன்
முன்னாள் துணைத் தலைவர், ப.க.,

Read more: http://viduthalai.in/page1/85706.html#ixzz3B54D9GoN

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்துத்துவா பேச்சுக்குக் கண்டனங்கள்


கட்டாக், ஆக. 12_ இந்தி யர்களின் கலாச்சார அடை யாளம் இந்துத்துவா என ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள் ளார். ஒடிசா மாநிலம், கட் டாக் நகரில் ஒடியா மொழி வாரப் பத்திரிகை ஒன்றின் பொன்விழா ஆண்டை யொட்டி நடந்த நிகழ்ச்சி யில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:

இங்கிலாந்தில் இருப்ப வர்கள் ஆங்கிலேயர்கள், ஜெர்மனியில் இருப்பவர் கள் ஜெர்மானியர்கள், அமெரிக்காவில் இருப் போர் அமெரிக்கர்கள். ஆனால், இந்துஸ்தானில் இருப்பவர்கள் மட்டும் இந்துக்கள் என அழைக்கப் படவில்லை. இந்தியர்க ளின் கலாச்சார அடையா ளம் இந்துத்துவா. தற்போது இந்தியாவில் இருப்பவர் கள் எல்லாம் இந்த உயர்ந்த பண்பாட்டிலிருந்து வந்த வர்கள்தான்.

இந்துத்துவா தான் வாழ்க்கை வழிமுறை. இந்துக்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக் கலாம், எந்த கடவுளையும் வணங்கலாம் அல்லது எந்த கடவுளையும் வழிபடா மல் இருக்கலாம். விவேகா னந்தர் எந்த கடவுளையும் வணங்கவில்லை. இதற்காக அவர் நாத்திகராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தன் மீது நம் பிக்கை இல்லாதவர்தான் நாத்திகர். பழங்காலத்தி லிருந்து பல வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியா ஒருங்கிணைந்து இருப்ப தற்கு அடிப்படையே இந் துத்துவாதான் என்பதை உலகம் உணர்ந்துள்ளது.

ஆனால், இதை இந் தியாவில் இருப்பவர்கள் உணராததுதான் கவலை அளிக்கிறது. இது தொடர் பாக எப்போது ஆலோ சனை நடந்ததாலும், இது பற்றி பேசுபவர் மதவாதி என தவறாக முத்திரை குத்தப்படுகிறது. எல்லா இடங்களில் இருள் சூழ்ந் துள்ள நிலையில் உலக நாடுகள் ஆறுதலுக்காக இந்தியாவை பார்க்கின் றன.

ஏனென்றால் இந்தியா சரியான பாதையில் முன் னேறிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தர்மம் நீடிக் கும் வரை, உலக நாடுகள் இந்தியாவை மதிக்கும். தர்மம் போய் விட்டால், பூமியில் எந்த சக்தியாலும் நாடு சிதைவதை தடுத்து நிறுத்த முடியாது என்றார்.

திக்விஜய் சிங் தாக்கு

உள்துறை அமைச்சகத் தின் செயல்பாடு குறித்து மாநிலங்களவையில் நேற்று பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், நாடு சந்திக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் தீவிர வாதம். இதை வளர்ப்பது மதவாத கொள்கை. தலிபான் கொள்கை பிரச்சினை உருவாக்குகிறது. அதே போல் சங் பரிவார் கொள் கையும் அமைதியை கெடுக் கிறது.

சங் அமைப்பு நாட் டில் பதிவு செய்யப்பட வில்லை. அதில் யாரும் உறுப்பினர் கிடையாது. புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் மூலம் மதவாத கொள்கை பரப் பப்படுகிறது. மைக்கேல் பார்க்கர் எழுதிய ஹார் வஸ்ட் ஆப் ஹேட், காந்த மால் இன் கிராஸ்பயர், பிரானன் எழுதிய ஒரிசா இன் கிராஸ்பயர் ஆகிய புத்தகங்களை இந்தியா பவுண்டேஷன் வெளியிட் டுள்ளது.

ஆனால் வெளி யீட்டாளர் பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் இந்த புத்தகங்களுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னுரை எழுதியிருக்கிறார். மதக் கலவரத்தை பரப்பும் இது போன்ற புத்தகங்களை தடை செய்து அரசு விசா ரணை நடத்த வேண்டும் என்றார்.

மக்களவை தேர்தலில் பா.ஜ அமோக வெற்றி பெற்றதற்கு மோடி, ராஜ் நாத், அமித்ஷா ஆகி யோரின் கூட்டணிதான் காரணம் என கடந்த சனிக் கிழமை நடந்த பா.ஜ தேசிய கவுன்சில் கூட்டத் தில் பாராட்டு தெரிவிக்கப் பட்டது.

இதற்கு மறுநாள் ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத், தேர்தல் வெற்றிக்கு எந்த ஒரு தனி மனிதரோ, தனிக் கட்சியோ, அமைப்போ காரணம் அல்ல. ஆட்சி மாற்றம் தேவை என மக்கள் விரும்பியதால், இந்த மாற்றம் ஏற்பட்டது என கூறினார்.

இந்த கருத் துக்கு பா.ஜ விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இப்படி ஒரு கருத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறியுள்ளது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இடையே நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

மோகன் பகவத் கூறிய தற்கு அரசியல் கட்சி தலை வர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மனீஷ் திவாரி:

அரசமைப்பு சட்டத்தை படிக்கும்படி மோகன் பகவத்துக்கு அறிவுறுத் தப்பட வேண்டும். அதில் இந்தியா பாரத் என்று தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்துஸ்தான் என எங்கும் குறிப்பிடப் படவில்லை என்றார்.

சீதாராம் யெச்சூரி:

அரசமைப்பு சட்டத்தை நம்புகிறாரா இல்லையா என்பதை பகவத் தெளிவு படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

சரத்யாதவ்:

சுதந்திரம் பெற்றதில் இருந்து அரசமைப்பு சட் டத்தின் மீது நம்பிக்கை வைத்துதான் இந்தியா செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. எதிர்காலத்திலும் இந்தியா இதே வழியைத் தான் பின்பற்றும் என்றார்.

மாயாவதி:

அரசமைப்பு சட்டம் பற்றி மோகன் பகவத்துக்கு சரியாக தெரியவில்லை. இந் தியாவில் உள்ள மக்கள் பல மதங்களை பின்பற்று கிறார்கள் என்பதை மன தில் வைத்துதான் அம்பேத் கர் அரசமைப்பு சட்டத்தை எழுதினார். அரசமைப்பு சட் டத்தை படித்தபின் மோகன் பகவத் தனது கருத்தை தெரி விக்க வேண்டும் என்றார்.

Read more: http://viduthalai.in/page1/85724.html#ixzz3B54paWaU

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரி-யார்?

ஜெகத்குரு என்று சங்கராச்சாரியாரைக் கூறுகிறார்களே! உண்மையில் சங் கராச்சாரியார் ஜெகத்துக்கே (உலகத்துக்கே) குருவா? முதலில் உள்ளூரில் இவரை அனைவரும் குருவாக ஏற் றுக் கொள்வார்களா? இந்து மதத்தில்தானாகட்டும் வை ணவர்கள் இவரைக் குரு வாக ஒப்புக்கொள்வார்களா?

உண்மை இவ்வாறு இருக்க, இவரை லோகக் குரு என்றும், ஜெகத்குரு என்றும் ஜெய பேரிகை கொட்டுவதில் மட்டும் குறைச்சலில்லை.

சங்கராச்சாரியார்களி லேயே மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யைத் தூக்கி வைத்துப் பேசுவார்கள்; புனிதர் என்று போற்றுவார்கள்.

உண்மை என்னவென் றால், துவேஷத்தில் தும் பிக்கை யானையைவிடப் பலம் வாய்ந்தவர்.

தீண்டாமைபற்றிப் பேச பாலக்காடு சென்று, காந்தி யார் அவரைச் சந்தித்தார் (16.10.1927). மகாத்மா என்று மக்கள் போற்றும் அந்தத் தலைவரை மாட்டுக் கொட் டகையில் உட்கார வைத் துத்தான் பேசினார் அந்த சங்கராச்சாரியார்.

பேசி என்ன பயன்?

ஹரிஜன ஆலயப் பிர வேச விஷயத்தில் சாஸ்திரங் களையும், பழைய வழக்கங் களையும் நம்பி இருப்பவர் கள் நம் நாட்டில் பெரும் பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் - இம்சைக்கு ஒப்பாகுமென்று தாம் முடி வுக்கு வரவேண்டியிருக்கின் றது என்று ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித் தார். (ஆதாரம்: தமிழ்நாட் டில் காந்தி, பக்கம் 575, 576).

தீண்டாமைக் கொடு மைக்கு ஆளாக்கப்பட்ட வர்களின் வலிகள் சங்கராச் சாரியார்களுக்கு முக்கிய மல்ல; மாறாக, அதற்குக் காரணமானவர்கள் மனம் நோவதுதான் சங்கராச்சாரி யார்களுக்கு முக்கியம்.

இருப்பதிலேயே மகாபுரு ஷர் என்று பார்ப்பனர்களால் போற்றப்படும் அவர் நிலையே இப்படி! அவர் குறித்து தந்தை பெரியார் தெரிவித்த கருத் தும், தகவலும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குரியவை!

12 வருடத்திற்கு ஒரு முறை ஈசன் தண்ணீர் விடு வதாகக் கூறியபடி, 12 வருடத் திற்கு ஒருமுறை (கும்ப கோணம்) மகாமகம் வரு கிறது. முன் மகாமகம் 1945 ஆம் ஆண்டில் வந்தது. அதற்குமுன் 1933 இல் வந்தது. அதன்படி 12 வருடத் துக்கு ஒருமுறை இருக்க, இப்போது 1957 ஆம் ஆண்டில் வரவேண்டும்.

ஆனால், 1956 ஆம் ஆண்டிலேயே வருகிறது. இதன் காரணம், சங்கராச் சாரிக்கு இப்போது உடல் நிலை சரியில்லையாம். அவர் அடுத்த வருடம்வரை உயி ருடன் இருப்பாரோ? இருக்க மாட்டாரோ? என்ற சந்தேகத் தின்மீது, அவர் இப்பொழுது இருக்கும்போதே கொண்டா டிவிடவேண்டும் என்பதற் காக அடுத்த வருடம் கொண் டாடவேண்டியதை, இந்த வருடம் முன்பாக ஒத்தி வைத்துக் கொண்டாடுகிறார் களாம்.

இதன்படி ஈசன் இப் போது சங்கராச்சாரியாருக்கு உடல்நிலை சரியில்லை என் பதற்காக, 11 வருடத்திலேயே தண்ணீர் விடுகிறார்கள் என்று ஆகிறது. இப்படிப் பார்ப்பான் மனது வைத்தால் ஈசனுடைய செய்கையையும் மாற்றிவிட முடியும். அப்படி யானால், கடவுளும், வெங் காயமும் எங்கே போனதோ தெரியவில்லை (திருவத்தி புரத்தில் தந்தை பெரியார் பேசியது, விடுதலை, 6.2.1956).

இதற்கு விளக்கமும் தேவையா? இந்து மதம், சங்கராச்சாரியார்களின் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்வீர்! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/85755.html#ixzz3B55RQ3AY

தமிழ் ஓவியா said...

அங்கன்வாடி பணியாளர்கள் பிரச்சினை: தமிழர் தலைவர் வேண்டுகோள்!


அங்கன்வாடி பணியாளர்கள் பிரச்சினை:

தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை முதலமைச்சர் செயல்படுத்த முன்வரவேண்டும்

தமிழர் தலைவர் வேண்டுகோள்!

பெரியார் பணி முடிப்பவர்களுக்கு ஓய்வு, சலிப்பு கிடையாது!

தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி - சத்துணவுப் பணியாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மக்களேயாவர்.

தி.மு.க. ஆட்சியின்போது பதவி உயர்வு உள்ளிட்ட உயர்வுகள் அளிக்கப்பட்டன. அதற்குப் பின் இந்தப் பணியாளர்கள் மேம் பாட்டுக்காக தமிழ்நாடு அரசு எதையும் செய்யவில்லை.

இவ்வளவுக்கும் 2011 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அ.இ.அ.தி.மு.க. முக்கிய வாக்குறுதியைக் கொடுத்திருந்தது.

சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் முன்னுரிமையோடு அணுகப் பட்டு, முடிவுகள் எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மூன்றாண்டுகள் ஓடியும், இந்த வாக்குறுதிகள் காப்பாற்றப் படவில்லை; இதில் வறட்டுக் கவுரவம் பார்க்காமல், பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய இப்பணியாளர்கள்மீது கருணை செலுத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

- கி.வீரமணி,
தலைவர், திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page1/85758.html#ixzz3B55aQRH7

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம் >>>

உடைமை எது?

1.8.2014 விடுதலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ் வியல் சிந்தனைகள் கட்டுரையான உண்மையான உடைமை (சொத்து) எது? மனிதர்கள் அனைவரும் மிகவும் சிந்தித்துத் சீர்தூக்கி பார்க்க வேண்டிய சிறப்புக் கட்டுரை.
மனிதர்களான நம்மில் பலரும் உடைமை என்றால் செல்வம் என்று பொருள் கொள்ளும்போது பணத்தைத் தான் செல்வம் என்று இரு பொருள் கொள்கின்றனரே தவிர அதைவிட விரிவான அழியாச் செல்வங்களான பல பண்புகள் என்பதை ஏனோ மறந்து விடுகின்றனர் என்று ஆசிரியர் அவர் கள் கட்டுரையில் அழகாகக் குறிப்பிடு கிறார்.

குறளில் 133 அதிகாரங்களில் உள்ள தலைப்பில் உள்ள 10 உடைமைகளை விவரித்துக் குறிப்பிடுகிறார்.

தொடர்ந்து எழுதுகிறபோது ஒரு இலட்சிய மனிதன் சிறந்த மனிதரின் பண்பு நலன்களில் இந்த பத்தும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவனை வெல்லுதல் - யார்க்கும் அரிதினும் அரி தாகும் என்று குறிப்பிடுகிறார். இன்றைய காலகட்டத்திலே மனிதர்களுக்குத் தேவையான அற்புதமான கட்டுரை.

அடக்கமின்மை, ஆடம்பரம், அதிகார போதை, தன்னை அசைக்க இனி எவராலும் முடியாது என்ற இறுமாப்பு முதலியவை அவர்களை விரைவில் குழியில் தள்ளிவிடும் என்ற நிலையை நாம் கண் எதிரிலேயே காண்கிறோமா இல்லையா? என்று கட்டுரையை நிறைவு செய்கிறார். இன்றைய கால கட்டத்திற்கு எவ்வளவு பொருத்தமாக உள்ளது- ஆசிரியர் அவர்களின் வாழ் வியல் சிந்தனைகள் அனைத்து மக் களின் நல வாழ்வுக்கும், வளவாழ்வுக் கும், சுயமரியாதை வாழ்வுக்கும், பகுத் தறிவுச் சூரியன். வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு! வெல்க வாழ்வியல் சிந்தனைகள்!

- தி.க.பாலு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல்)

Read more: http://viduthalai.in/page1/85780.html#ixzz3B55zmKFs

தமிழ் ஓவியா said...

கடவுள் சக்திமீது நம்பிக்கை இல்லை


முக்கிய கோவில்களில் எல்லாம் கண்காணிப்பு கேமராக்களாம்!

இந்து அறநிலையத்துறை அறிவிப்பு!

மதுரை, ஆக.14-_- இந்து சமய அறநிலையத் துறை கோயில்கள் அனைத் திலும் பாதுகாப்புக்காக கட்டாயம் கண்காணிப்புக் கேமரா பொருத்தப்பட வேண்டும் என, அறநிலை யத் துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயி லுக்கு தீவிரவாத அச்சுறுத் தல் தொடர்வதால், பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அதிகம் கூடும் திருக்கோயில்களின் பாது காப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய அவசியம் தற்போது எழுந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள மக்கள் அதிகம் கூடும் இந்து சமய அற நிலையத் துறைக்குச் சொந்தமான சுமார் நூற்றிற்கும் மேற்பட்ட கோயில்களில் பாதுகாப்பு காரணமாக, கண்காணிப் புக் கேமராக்கள் அமைக் கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், திரு மோகூர் காளமேகப் பெருமாள் கோயிலில் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் பக்தர்கள் அதிகம் கூடுவர். எனவே, அக்கோயிலில் தற்போது 16 இடங்களில் கண் காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின் றன. இதேபோன்று, கோயில் மய்யத்தில் இரும்புக் கோபுரம் அமைத்து, அதில் இடி தாங்கியும் பல லட்சம் ரூபாய் செலவில் அமைக் கப்பட்டு வருகிறது.

யா.ஒத்தக்கடை மலை அடிவாரத்தில் உள்ள யோக நரசிம்மர் கோயி லிலும் கண்காணிப்புக் கேமராவும், இடிதாங்கியும் அமைக்கப்பட உள்ளதாக, கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், திருவாதவூர் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில் களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளன. ஏற்கெனவே கண்காணிப்புக் கேம ராக்கள் உள்ள கோயில் களில் கூடுதலாக கேம ராக்களை பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித் தன.

கோயிலில் உள்ள கடவுள்கள் வெறும் சிலைகள்தான் அவை களுக்குச் சக்தியில்லை என்று இந்து அறநிலை யத்துறை கூறாமல் கூறு கிறது - அப்படித் தானே!

Read more: http://viduthalai.in/page1/85822.html#ixzz3B56ne2D6

தமிழ் ஓவியா said...


காஸாவில் இனப்படுகொலை!


ஒருபுறம் எகிப்தையும், இன்னொருபுறம் இசுரேலையும் எல்லைப் பகுதியாகக் கொண்ட காஸா, இனப்படுகொலைக்குப் பெரிய அளவில் ஆளாகிக் கொண்டு வருகிறது.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பிறகு, சொன்னதுபோல அய்.நா. தன் கடமையைச் செய்ய தவறி விட்டது என்று இந்த காஸா பிரச்சினையிலும், சொன்னால் ஆச்சரியப்படுவதற் கில்லை. உலக நாடுகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன என்பது வெட்கக்கேடாகும்!

இவ்வளவுக்கும் ஒரு சிறிய பிரச்சினையில் ஆரம்பித்த விவகாரம் பெரிய அளவில் ஆயிரக்கணக் கான மக்கள் ஈவு இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

சில வாரங்களுக்கு முன் காஸா பகுதியில் மூன்று இசுரேலிய மாணவர்கள் காணாமல் போனார்கள். அவர்களைத் தேடி உள்ளே நுழைந்த இசுரேல் படையினர் அந்த மூன்று மாணவர்களும் குண்டடி பட்டு இறந்து கிடந்ததைக் கண்டனர். அந்தப் படுகொலைக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் இஸ்ரேலிய வலதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டார். இதிலிருந்து துவங் கியது தான் இன்றைக்குப் பெரும் போராக உரு வெடுத்து விட்டது என்று கூறப்படுகிறது.

இது ஏதோ ஒரு காரணம் என்றாலும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு - பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி யூதர்களின் குடியிருப்புப் பகுதியாக ஆக்கப்பட்டது.

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய கதையாக, கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீன மக்களின் நிலங்களை ஆக்ரமிக்கத் தொடங்கி விட்டனர் என்பது தான் உண்மை.

இசுரேல் மாணவர்கள் கொல்லப்பட்டதற்கு யார் காரணம் என்று தெரியாமலேயே, தானே நீதிபதியாகி தாதாவாக மாறி விட்டது இஸ்ரேல். அதற்கு முட்டுக் கொடுக்கிறது அமெரிக்கா.

கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள் என்று எதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் சகட்டு மேனியாகத் தாக்குதலைத் தொடுத்து வருகிறது இஸ்ரேல். காஸா இனி அவ்வளவுதான் - அதன் கதை முடிந்தது என்று காட்டுத்தனமாகச் செயல்படுகிறது இசுரேல்.

இந்திய அரசு இதில் நடந்து கொள்ளும் போக்கு வெட்கப்படத்தக்கது. இலங்கையில் எப்படி சிங்கள வெறியர்களுக்கு இந்தியா கொடி பிடிக்கிறதோ அதே நிலைதான் இப்பொழுதும் இசுரேலுக்குக் குடை பிடித்துக் கொண்டு இருக்கிறது மறைமுகமாக.

மகாராட்டிர மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட - முன்னாள் இராணுவ அதிகாரி சிறீகாந்த் புரோகித் என்பவரின் மடிக் கணினியை ஆய்வு செய்தபோது, திடுக்கிடும் தகவல் அம்பலமானது. இசுரேலில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து ஒரு போட்டி இந்துத்துவா ஆட்சியை இந்தியாவில் நடத்துவது உட்பட வரைபடங்கள், அரசமைப்புச் சட்டம், கொடி முதலியவை வடிவமைக்கப்பட்டு இருந்தன என்பதை நினைவு கூர்ந்தால் இன்றைய பி.ஜே.பி. அரசு - இசுரேல் மேற்கொண்டுள்ள இனப்படுகொலைபற்றி மூச்சு விடாமல் இருப்பதற்கான அந்தரங்கம் புரியும்.

மாநிலங்களவையில் இதுபற்றிப் பேச இருந்த நிலையில் வெளியுறவுத் துறைஅமைச்சரின் எதிர்ப்பால் அதுபற்றி விவாதம் நடைபெறவில்லை என்பது முக்கியமானதாகும்.

எது எப்படி இருந்தாலும், வலுத்தவன், இளைத் தவனை வேட்டையாடுவது என்பது இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இங்கு நியாயத்திற்கோ, மனித உரிமைகளுக்கோ கிஞ்சிற்றும் இடம் இல்லா தொழிந்து விட்டது. அய்.நா. இருந்தும் பயனில்லை; அது வெறும் கொலு பொம்மை என்கிற அளவுக்குத்தான் சுருங்கிப் போய் விட்டது.

கடவுள் எனக்கு ஆணையிட்டார் என்று கூறி ஈராக் கில் புகுந்து துவம்சம் செய்ததே அமெரிக்கா! அந்த நாட்டின் அதிபர் சதாம் உசேனைத் தூக்கில் போட்டுக் கொன்றதே அமெரிக்கா - யார் என்ன செய்ய முடிந்தது?

மொத்தத்தில் அறிவியல் வளர்ந்த அளவுக்கு மனிதம் வளரவில்லை என்பதும், இயந்திரத் தன்மை யுடைய விலங்காக பெரும்பாலும் மனிதன் ஆகி விட்டான் என்பதும் மறுக்கப்படவே முடியாது!

Read more: http://viduthalai.in/page1/85831.html#ixzz3B57EuJZd

தமிழ் ஓவியா said...

பிரைமரி நிறங்கள் என்பவை என்னென்ன?

இந்த விஷயத்தில் நிறைய குழப்பங்கள் உள்ளன. உங்களுக்கு அந்தக் குழப்பம் ஏற் படாது. ஏனெனில் நீங்கள் ஒளி நிறங்களை பிரித்து தெரிந்துகொள்ளப்போகிறீர்கள். கணினி திரை, தொலைக்காட்சி திரை ஆகியவற்றிலிருந்து நாம் நேரடியாக ஒளியைப் பெறுகிறோம்.

புத்தகத்தில் பிரிண்ட் செய்யப்பட்டுள்ள கலர் படத்தைப் பார்க்கும்போது நாம் பிரதிபலிப்பு நிறங் களைப் பார்க்கிறோம். இந்த வித்தியாசம் மிகவும் முக்கியம்.

தொலைக்காட்சி திரையிலிருந்து வரும் நிறங்களில் பிரைமரி நிறங்கள் சிவப்பு, நீலம், பச்சை. சிவப்பு, நீலம், பச்சை நிற ஒளி களைக் கலந்தால் வெள்ளை ஒளி கிடைக்கும். இவை பிரைமரி நிறங்கள்.

இந்த நிறங்களை வேறு நிறங்களிலிருந்து பெற முடியாது. அதனால் இவை பிரைமரி நிறங்கள். மற்ற நிறங்களை இவற்றை பல அளவுகளில் கலப்பதன் மூலம் பெறமுடியும். அப்படி பெறப்பட்ட நிறங்கள் செகண்டரி நிறங்கள்.

Read more: http://viduthalai.in/page1/85857.html#ixzz3B58AjVCj

தமிழ் ஓவியா said...

ஒட்டகத்தால் எப்படி தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ முடிகிறது?


ஒட்டகம் பாலைவன மிருகமாதலால் அதற்கு வறட்சி யைத் தாங்கிக்கொள்ளும் தன்மை (அடாப்டேஷன்) கிடைத்திருக்கிறது. அதன் முதுகில் உள்ள திமிலில் தண்ணீர் சேமிக்கப் படுவதில்லை. வயிற்றிலும் சேமிக்கப்படுவதில்லை. இரத்தத்தில்தான் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. குறைவாக வியர்வை ஏற்படுவதால் தண்ணீர் வியர்வையாக விரையமாவதும் இல்லை.

ஒரு வேளைக்கு ஒட்டகம் 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். தண்ணீர் முழுவதும் இரத்தத்தில் சேர்ந்துவிடும். அப்படியானால் திமில் எதற்காக என்று கேட்கிறீர்கள்.

திமிலில் உள்ள பொருள் கொழுப்பு. கொழுப்பு செரிமானமாகும்போது நிறைய தண்ணீர் உற்பத்தியாகும். இந்த தண்ணீரை மெட்டபாலிக் தண்ணீர் என்பார்கள்.

ஒட்டகம் இரத்தத்தில் தண்ணீர் குறையும்போது மெட்டபாலிக் தண்ணீரை உற்பத்தி செய்துகொள்ளும். அப்போது திமிலின் அளவும் குறைந்துவிடும் கொழுப்பு கரைந்து திமில் தொளதொளவென்றாகிவிடும். எனவே தான் ஒட்டகத்தால் மாதக் கணக்கில் தண்ணீர் குடிக்காமல் உயிர் வாழ முடிகிறது.

Read more: http://viduthalai.in/page1/85858.html#ixzz3B58IB3zH

தமிழ் ஓவியா said...

உண்மையான தமிழன் யாரப்பா?

இந்த வார துக்ளக்கில் (13.8.2014) உண்மையான தமிழன் யார்? அதென்ன உண்மையான தமிழன்; பொய்யான தமிழன்; உண்மையும், பொய்யும் கலந்த தமிழன் என்றெல்லாம் வித்தியாசம் உண்டா என்ன? என்று பூணூலுக்கே உள்ள குயுக்தியுடனும், சேட்டையுடனும், கேவலப்படுத்தும் நோக்கத்துடனும் எழுதி இருக்கிறார் திருவாளர் சோ.

அவர் தமிழராக இல்லாததால் (வெளியில் அப்படி சொல்ல மாட்டார்கள்) இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு எழுதக் கூடிய வசதி இருக்கிறது.

தமிழ் பேசுவதால் தமிழன் ஆக மாட்டார் என்று கழகம் சொல்லுவது எவ்வளவுத் துல்லியமானது என்பது - இப்போதாவது நமது அப்பாவித் தமிழர்கள் புரிந்து கொண்டால் சரி.

இதுவே பார்ப்பனர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தால், சங்கரமடம் பிரச்சினையாக இருந்தால் இந்தக் கிண்டல், கேலி. நையாண்டி, விஷமம் இருக்குமா என்பதைத் துக்ளக்கைக் காசு கொடுத்து வாங்கும் நண்பர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

இப்பொழுது மட்டுமல்ல; தமிழ், தமிழர் என்று சொன்னாலே அக்ரகாரவாசிகளுக்கு அக்னிக் குண்டத்தில் விழுந்தது போலத்தான்.

கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் தமிழர் இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஏற்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே

சோ பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே! (துக்ளக் 19.8.2009). புரிகிறதா?

கேட்ட கேள்வி என்ன? சோவின் பதில் என்ன?

ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

நீண்ட காலமாக பெங்களூரில் திறக்கப்படாமல் இருந்த திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு எடியூரப்பா ஒத்துக் கொண்ட ஆத்திரம் இதில் பிரதிபலிக்கவில்லையா?
அவருடைய நோக்கம் திருவள்ளுவர் சிலையை அவமதிக்க வேண்டும் என்பதே - அதனை வேறொரு முறையில் எழுதுகிறார் தூண்டுகிறார் - அவ்வளவுதான்.

சென்னை மாநகரில் வணிக விளம்பரங்கள் தமிழில் எழுதினால்! இது என்ன மொழி நக்சலிசம் (துக்ளக் 15.9.2010) என்று எழுதிடவில்லையா?

அதே நேரத்தில் சமஸ்கிருதத்தைப்பற்றிச் சொல்லிப் பாருங்கள். கோயிலில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் இருக்கக் கூடாது என்று சொல்லிப் பாருங்கள் - அடேயப்பா பூணூல் துருத்திக் கொண்டு வந்து தண்டால் எடுக்கும். தமிழில் பாடினால் பொருள் இருக்கும். ஆனால், புனிதம் இருக்காது. மொழிக்கு முக்கியம் அல்ல - சமஸ்கிருத ஒலிக்குத் தான் முக்கியம் (துக்ளக் 18.11.1995). கடவுளுக்குக்கூட மொழி ஆசாபாசம் ஒலி ரசனைகள் உண்டாம்!

தமிழ் என்றால் அதற்கொரு விளக்கம் சமஸ்கிருதம் என்றால் சுற்றி வளைத்து அதற்கொரு வியாக்கியானம்!

உண்மையான தமிழன் யார்? பொய்யான தமிழன் யார்? என்று கேள்வி கேட்கிறாரே திருவாளர் சோ அதற்கான விடை இந்த இடத்தில் விளக்கமாகக் கிடைத்து விட்டதா இல்லையா?

இந்தப் பதிலில் இன்னொன்றையும் அதென்ன உண்மையான தமிழனின் கலாச்சாரம்?

அதுதான் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டோமே என்று கேள்வி எழுப்புகிறார்.

மேற்கத்திய கலாச்சாரத்தை சோ கூட்டம் கடைப் பிடித்தாலும் - ஆவணி அவிட்டத்தை அனுஷ்டிக்காமல் இருக்கிறதா? பூணூலைப் புதுப்பிக்காது இருக்கிறதா?

திருமதி சிவசங்கரிக்குப் பதில் சொன்னாரே - நினைவிருக்கிறதா? சோ கேட்ட இதே கேள்வியைத் தான் தமிழர் தலைவரிடமும் கேட்டார் சிவசங்கரி.

கேள்வி: தமிழர் பண்பாடு தமிழர் பண்பாடு என்று அடிக்கடி சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன?

தமிழர் தலைவர் பதில்: இதுஒரு நல்ல கேள்வி. தாயை மகனும், மகளைத் தகப்பனும் போடி, வாடி என்று சொல்ல மாட்டோம் - அதுதான் தமிழர் பண்பாடு (குமுதம் 22.121983) என்று சொன்னதுதான் திருவாளர் சோ ராமசாமிக்கும் பதிலடி!

கொலை வழக்கில் சிக்கி சிறைச்சாலை வரை சென்று வந்த ஒருவரை ஜெகத் குரு என்று சொல்லும் இனப்பற்று பார்ப்பனர்களே, உங்களுக்கு இருக்கும் பொழுது, தமிழர்களுக்குத் தமிழ்ப் பற்றோ தமிழன் என்ற இனப் பற்றோ இருக்கக் கூடாதா?

இன்னும் பேசுங்கள் - இப்படியே எழுதுங்கள், அப்பொழுதாவது தமிழனின் தடித்த தோலுக்குச் சுயமரியாதை உணர்வு வருகிறதா என்று பார்ப்போம்!

- மின்சாரம்

Read more: http://viduthalai.in/page1/85891.html#ixzz3B59CpAoh

தமிழ் ஓவியா said...


அடிமைப்படக்கூடாது...


உழைத்தவன் உழைப்பின் பயனை அடையவேண்டுமானால் - இப்படி யாகம், சாத்திரம், வேதம், மோட்சம், கர்மம், முன்ஜென்மம், கடவுள் செயல் என்கின்ற பித்தலாட்டங்களுக்கு அடிமைப்படக் கூடாது.

- விடுதலை, 26.2.1968

Read more: http://viduthalai.in/page1/85896.html#ixzz3B59Z1Xsb

தமிழ் ஓவியா said...


ஜாதிப் புழுக்கள்!


கல்வி என்பது தண்ணீர் அதைச் சமூகமென்னும் பெரு மரத்தின் வேரில் ஊற்றினால் நம் வேலை ஆகி விட்டது என்று நினைத்தேன். ஆனால், இந்த மரத்தின் வேரிலுள்ள ஜாதி வேற்றுமையும், கெட்ட எண்ணமும், பணத்துக்கு அடிமைத்தனமாகிய புழுக் களா அதை வளர விடப் போகின்றன? இந்த புழுக்கள் சாக வேண்டும்.

- காண்டேகர்

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3B5Aexenn

தமிழ் ஓவியா said...

சிந்தனைக்குத் தடை

பகுத்தறிவுக்கு எதிரிகள் நம்நாட்டில் தான் எப்பொழுதும் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பதில்லை. உலகெங்கும் மதத்தரகர்களின் தாக்குதல்களுக்கு பகுத்தறிவாளர்கள் இலக்காகிக் கொண்டே இருந்துவர நேர்ந்துள்ளது. சுயசிந்தனையாளர்கள் கிளர்ந்தெழாமல் மதப்பிடியில் சிக்கித் தவிக்க நேரிட்டது.

ஒரு சுய சிந்தனையாளன் என்பவன் யார் என்று பொருள் கூறுமிடத்து மதத்தை மறுப்பவன்; நாத்திக வாதி என்று அகராதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதத்தின் கோரப்பிடியில் உலகின் மிகப்பெரும் சுயசிந்தனையா ளர்கள் எல்லாம் சிக்கி உழன்று விடுபட பெரும் பாடுபட நேர்ந்தது.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் தந்தை சிறு குழந்தையான ரஸ்ஸல் மூட நம்பிக்கை இல்லாதவராக வளர இரண்டு சுயசிந்தனையாளர்கள் (பகுத்தறிவாளர்கள்) அவரை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார்.

அதற்காக இரண்டு சிந்தனையாளர் களையும் நியமித்தார். ஆனால், இவ்வாறு நியமித்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு கிறிஸ்து மத நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரை வளர்த்து வர வேண்டும் என்றும் ஆணையிட்டது.

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3B5AmCbyN

தமிழ் ஓவியா said...



ஜாதி ஆச்சாரங்களைக் கை யாளும் மக்கள் குற்ற வாளிகளல்ல; ஜாதி புனிதமானது என்ற உணர்ச் சியை உண்டு பண்ணிய மதமே உண்மையிலே குற்றவாளி. ஆத லால் ஜாதி ஆச்சாரங்களைக் கையாளும் மக்கள் உங்கள் எதிரிகளல்ல.

ஜாதி ஆச்சாரங் களைப் புனித மென்று வற் புறுத்தும் சாஸ்திரங்களே உங்கள் எதிரி. எனவே அந்த எதிரியைத் தான் நீங்கள் ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.

- டாக்டர் அம்பேத்கர்

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3B5Are7XM

தமிழ் ஓவியா said...


தந்தை பெரியார் அறிவுரை சீர்திருத்தக்காரர்கள் உயிர்துறக்க தயாராய் இருக்க வேண்டும்!

ஜாதி வித்தியாசமோ, உயர்வு தாழ்வோ கற்பிக்கின்ற பத்திரிகைகளைப் படிக்கக் கூடாது என்று சொல்லி விட வேண்டும். மீறிப் படிக்க ஆரம்பித்தால் அதைப் பறிமுதல் செய்து விடவேண்டும். உயர்வு - தாழ்வு வித்தியாசம் முதலி யவை கொண்ட மடாதிபதிகளையெல்லாம் சிறையில் அடைத்துவிட வேண்டும். பொது ஜனங்கள் கிளர்ச்சி செய்தால் மடாதிபதிகளைத் தீவாந்திரத்திற்கு அனுப்பிட வேண்டும்.

சுவாமிகளுக்குள்ள நகைகள், வாகனங்கள், பூமிகள் எல்லாவற்றையும் பறிமுதல் செய்து அவைகளை விற்றுப் படிப்பில்லாதவர்களுக்குப் படிப்பும், தொழில் இல்லாதவர்களுக்குத் தொழிலும் ஜீவன மும் ஏற்படுத்த உபயோகப் படுத்தி விட வேண்டும்.

இதுபோன்ற, காரியங்கள் செய்யத்தக்க உரம் கொண்ட வீர ஆட்சிக்கு நாட் டைக் கொண்டு வரவேண்டும். அப்பேர்ப்பட்ட வீரர்களின் ஆட்சிக்குட்பட்ட நாடுகள் தான் இன்று சுயமரியாதையையும் சீர்திருத்தமும் பொலிந்து விளங்குகின்றன.

அப்பேர்ப்பட்ட வீர ஆட்சிக்கு நாட்டைக் கொண்டு வரவேண்டுமானால் அநேக சீர்திருத் தக்காரர்கள் உயிர் துறக்கத் தயாராக இருந்து கொண்டு பாமர மக்களிடையில் உண்மையைப் பரப்ப முன்வர வேண்டும்

(இச்செய்தி 8.7.76 விடுதலை இதழிலிருந்து சென்சாரால் வெட்டப்பட்டதாகும்).

Read more: http://viduthalai.in/page1/85892.html#ixzz3B5B0RwY3

தமிழ் ஓவியா said...

மூவரும் முழுப் பொய்யர்களே!

ஆசிரியருக்கு கடிதம் 15.10.78 ஆனந்த விகடனில் இருவரும் ஒரே தொழில் என்ற தலைப்பில் (பக்கம் 93) ஓடத்தில் ஏற்றிச் சென்ற தற்கான, கூலியை ராமன் கொடுக்க குகன் வாங்க மறுத் தான் என்று வாரியார் கூறியதைக் கேட்க நகைப்புத்தான் ஏற்பட்டது. ஏனெனில் அயோத்தியை விட்டு அடவிக்குச் செல்லும்போது ராமன், லட்சுமணன், சீதை மூவரும் அணிந்திருந்த ஆடையாபரணங்களை அந்தணர்களுக்கு அளித்து விட்டு மர உரிதரித்து சென்றான் என்று கம்ப ராமாயணத்தில் எழுதி இருக்கின்றது.

கள்ளுக்கடை மயக்கத்தில் கவிதைகள் எழுதி கம்பனார் கானகத்தில் கனமான மூட்டையை அனுமான் கொடுக்க, அம்மூட்டையில் உள்ள ஆடையாபரணங்கள் ராவணன் எடுத்துச் சென்ற சீதையின் பொருளே என்று விளக்கியுள்ளன.

இதை படித்த தந்தை பெரியார், மர உரி தரித்து வந்த மூவர்களுக்கும் குறிப்பாக, சீதைக்கும், காட்டில் எப்படி ஆடையாபரணம் கிடைத்தது என்றும், அதிலும் சீதையைச் தேடச் சென்ற அனுமானிடம் கணையாழி கொடுத்தனுப்பியதும் - அதனைப் பெற்ற சீதையும் பதிலுக்கு தன்னுடைய கணையாழியை ராமனிடம் கொடுக்கும்படி அனுமானிடம் கொடுத்ததையும் பற்றி கேள்வி மேல் கேள்வி போட்டு கம்பனின் கயமையைப் பற்றி சொல்லியதை நாம் அறிவோம்.

அதுபோதாதென்று மேலும் கம்பனை பழிக்கவோ என்னவோ ஆனந்த விகடனைக் கொண்டு கம்பனை மேலும் பொய்யனாக்க வாரியார் ராமன் கூலி கொடுக்க, குகன் மறுத்தான் என்று சொல்லுவது கம்பனுடைய ஞாபக மறதியை மேலும் காற்றாடிபோல் பறக்கச் செய்கிறது. அயோத்தி விட்டு மூவரும் மர உரி மட்டும் மாட்டிக் கொண்டு வந்தவர்களுக்கு கூலி கொடுக்க என்ன இருந்தது? அப்படி இருந்தால் அயோத்தியில் இருந்து திருடி வந்தார்களா? ஏனெனில், எல்லாம் பரதன் சொத்து தானே.

அப்படி திருடி வந்தால் பஞ்சமா பாதகத்தில் ஒரு பாதகமல்லவா? ஆனதால் முன்னுக்குப் பின் முரணாக எழுதுவது முழுப் பொய்யல்லவா? ஆகவே கள்ளுண்டு கவிதைகள் எழுதிய கம்பனும் பொய்யன்! அக்கம்பனின் கவிதைகளை படித்து மோட்சம் போக எடுத்துச் சொல்லும் வாரியாரும் ஒரு பொய்யன்!! அதனை பிரமாதமாக வெளியிடும் ஆனந்த விகடனும் ஓர் பொய்யன்!!! ஆகவே மூவரும் மகா பொய்யர்கள் என்பது நன்கு தெரிகின்றதல்லவா?

ஆம்பூர் சீ.கோ.வெற்றியழகன், சென்னை

Read more: http://viduthalai.in/page1/85892.html#ixzz3B5BAPly5

தமிழ் ஓவியா said...


சுவாமிஜிக்கு ஏன் இந்த வேலை?


அண்மையில் பம்பாய் வந்த ஒரு ஹாலிவுட் நடிகை பூனாவில் உள்ள ஆச்சார்யா ரஜ்னீஷை சந்திக்கச் சென்றார். பகல் முழுவதும் அவருக்கு பக்திமிக்க பல்வேறு உபதேசங்கள் கொடுக்கப்பட்டது.

இரவு வந்ததும் ஒரு இருண்ட குகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவரது உடைகளை அவிழ்க் கும்படி கூறினார்கள். நிர்வாணமாக இருந்த ஒரு குறிப்பிட்ட நபருடன் படுத்துக் கொள்ளுபடி கட்டாயப் படுத்தினார்களாம்.

ஆனால் நடிகை மறுத்து விட்டார். உடனே அவர் உடைகள் வலுக்கட்டாயமாக கிழிக்கப்பட்டன. அடுத்தது நடப்பதற்குள் அவர் தப்பி ஓடிவந்து பம்பாய் காவல்துறை யினரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் இந்த ஆசிரமத்திற்கு நடிகர் வினோத்கன்னா தொடர்ந்து செல்வதாக கூறப்படுகிறது; எதற்காக?

முருகனின் கோவண பிரசாதம்!

காலஞ்சென்ற வெற்றிப்படத் தயாரிப்பாளர் ஒரு முருக பக்தர். அவர் முருகன் சிலையில் உள்ள கோவணத்தைக் கொண்டு வந்து பன்னீரில் நனைத்துக் குடிப்பாராம்.

அவரைப் போல் வெற்றிப்படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்து சில படத்தயாரிப்பாளர்கள் முருகன் கோவண பிரசாதத்திற்கு அலைகிறார்கள்.

சினிமா ஏரியா, அய்யப்பன் ஏரியா

திரைப்பட உலகில் நடிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சான்ஸ் கிடைக்காத நடிகர்கள் எல்லாரும் மாலை போட்டு அய்யப்பன் விரதம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

நடிகர்களுக்கு மட்டும் ஒரு விதி விலக்கு. அவர்கள் முகத்தை ஷேவ் செய்து கொள்ளலாம், பெண்களைத் தொடலாம்? சாமியே சரணம் அய்யப்பா!

(மூக்குத்தி வார இதழிலிருந்து தருபவர் தமி.

Read more: http://viduthalai.in/page1/85895.html#ixzz3B5BHawKJ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ரமண ரிஷி

கடவுள் பக்தன்மீது கருணை கொண்டு அவ னது முன்னேற்றத்திற்குத் தக்கபடி வெளிப்படு கிறார். பக்தன் கடவுளை மனிதனென்று நினைத்து எதிர்பார்த்து நிற்கிறான். ஆனால், கடவுள், பக்த னுக்குள் இருந்து அவன் தவறுகளை உணர்த்தி நல்வழியில் செல்ல உதவுகிறார். - ரமணரிஷி

கொலைகாரனுக்கு எப்படி உதவுகிறார்? பக்தர்கள் தந்த கொள்ளைப் பணத்தை தனது உறவின ருக்கு எழுதி வைத்த இந்த ரமண ரிஷியையும் இப்படித்தான் வழி நடத்தினாரோ!

Read more: http://viduthalai.in/page1/85948.html#ixzz3B5BtDFlI

தமிழ் ஓவியா said...

பக்திப் பிரச்சினையில் மட்டும் புத்தியைச் செலுத்த மறுப்பது ஏன்?


மனிதர்களுக்குப் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவதை அறிவோம். ஆனால் இந்த நாட்டில் கடவுளுக்குப் பிறந்த நாள் விழா கொண்டாடுவதை என்னென்பது!

கடவுள் தான் இந்த உலகத்தைப் படைத்தார் என்று சொல்லுகின்றனர் மதவாதிகள். அப்படிப்பட்ட கடவுளே பிறந்தார் என்றால் - அந்தப் பிறப்புக்கு யார் காரணம்? கடவுளைப் பெற்றெடுத்தவர்கள் யார் என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

இந்த மதக் கடவுள்களில் 60 ஆயிரம் மனைவிகளைக் கொண்டவன் ஒரு கடவுளாம்! தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் ஒரு நகராட்சி மக்கள் தொகை அளவுக்கு ஒரு கடவுளுக்குப் பெண்டாட்டிகள் என்றால் இப்படி சொல்லுவதற்கு, எழுதுவதற்குக் கூச்சப்பட வேண்டாமா? குறைந்த பட்சம் நாகரிகப் பண்பும், பகுத்தறிவுத் தரமும் இருக்க வேண்டாமா?

சிறுபிள்ளைகள் சிறுநீர் கழித்துக் கூட்டாஞ் சோறு ஆக்குவதைப் புரிந்து கொள்ள முடியும்; அதையே பெரியவர்கள் செய்தால் அவர்களைப் பற்றி சமூகம் என்ன நினைக்கும்?

அந்த நினைப்பும், சிந்தனையும் ஏன் கடவுள் நம்பிக்கைப் பிரச்சினையில் வரவில்லை? காரணம் பகுத்தறிவு இன்மையும் தன்னம்பிக்கையின்மையும் தான்.

இன்றைக்குக் கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடுகிறார்களே - இந்தக் கடவுள்கூட கவுதமப் புத்தரின் கருத்துப் பிரச்சாரத்தால் மக்கள் சமூகத்தில் விளைந்த மாற்றங்களை மடைமாற்றம் செய்ய உருவாக்கப்பட்ட ஆரிய சூழ்ச்சிதான் என்பது வரலாற்றாளரின் கணிப்பு.

சினிமா கவர்ச்சியைக் காட்டி மக்களை ரசிகர்களாக்கி, அதன் வழி அரசியலில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பது போல, புத்த மார்க்கத்தை அழித்து மக்கள் மத்தியில் காமரசப் போதைகளைக் கொடுத்து மக்கள் சிந்தனையைக் கீழ்த்தரத்துக்குக் கொண்டு சென்ற கற்பனைக் கதாபாத்திரம்தான் கிருஷ்ணன் என்ற கற்பனைப் பாத்திரம்!

குளத்தில் குளிக்கும் பெண்களின் உடைகளைத் தூக்கிச் சென்றான் என்பதும், மரத்தில் ஒளிந்திருந்து குளிக்கும் பெண்களை ரசித்தான், என்பதும் கேவலம் அல்லவா!

அப்படி செய்தவன் ஒரு கடவுள் என்றால், நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வேண்டுமே! அப்படி ஒரு கடவுள் ஒரு மதத்தில் இருந்தான் என்பதைக் கூடுமான வரை தட்டிக் கழிக்கப் பார்த்தால், பரவாயில்லை கொஞ்சம் புத்தி வந்திருக்கிறது, நாகரிகம் அரும்பியிருக்கிறது என்று மகிழ்ச்சி அடையலாம்.

அதற்கு மாறாக அந்த ஆபாசக் கடவுளைப் புகழ்வதும், அதற்காக அரசு விடுமுறை அளிப்பதும் ஆட்சித் தலைவர்களாக இருப்பவர்கள் அந்த நாளில் மக்களுக்கு வாழ்த்துச் சொல்லுவதும் ஆரோக்கிய மானதுதானா?

தமிழ்நாடு முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா வாழ்த்துச் சொல்லி இருப்பது சரியானதுதானா?

தமிழ் ஓவியா said...

மக்கள் மத்தியில் அறிவியல் மனப்பான்மையை ஊட்டுவது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று இந்திய அரசமைப்புச் சட்டம் உறுதிபடுத்துகிறபோது அது முதல் அமைச்சருக்குப் பொருந்தாதா?

அதுவும் அண்ணாவின் பெயரையும், திராவிட இயக்கப் பெயரையும் கட்சியில் பொறித்துக் கொண்டுள்ள முதல் அமைச்சர் - இவற்றிற்கு மாறாக நடந்து கொள்ளலாமா?

சின்ன வயதில் வெண்ணெயைத் திருடி, பெரிய வயதில் பெண்ணைத் திருடுபவனும் ஒரு கடவுளா? என்ற அறிஞர் அண்ணா கேட்ட கேள்விக்கு அண்ணா திமுக பொதுச் செயலாளரிடமிருந்து பதில் கிடைக்குமா?
உலகில் தீமைகள் ஒழிந்து, அறம் தழைத்தோங்கிட பகவான் மகா விஷ்ணு ஸ்ரீகிருஷ்ணனாக அவதரித்த திருநாளை ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியாகக் கொண்டாடி மகிழும் மக்கள் அனைவருக்கும் எனது இனிய கிருஷ்ணஜெயந்தி நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
உலகில் தீமைகள் ஒழிந்து அறம் தழைக்க அவதாரம் எடுத்துள்ளாராம் கிருஷ்ணன்.
கடந்த ஆண்டு இதே போல அறிக்கை கொடுத் துள்ளாரே முதல் அமைச்சர் ஜெயலலிதா - இந்த ஓராண்டுக்குள் எந்தெந்த தீமைகளை ஒழித்துக் கட்டியுள்ளார் என்று பட்டியல் கொடுக்க முடியுமா?

அதுவும் தமிழ் நாட்டுக்கு மட்டும் இல்லையாம். இந்தியாவுக்கு மட்டும் இல்லையாம்; உலகத்தில் உள்ள தீமைகளை எல்லாம் ஒழிக்க அவதரித்தவராம்.

இந்த ஓராண்டில் மட்டும் உலகம் பூராவும் எத்தனை எத்தனைக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன? ஈராக்கிலும் காசாவிலும் மக்கள் படுகொலைக்கு ஆளானார்களே - அதனைத் தடுத்து விட்டாரா இந்தக் கிருஷ்ண பகவான்?

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் தொடர் கதையாக நடந்து கொண்டுள்ளதே. காவல் துறையைக் கையில் வைத்துக் கொண்டுள்ள முதல் அமைச்சரால்தான் தடுக்க முடியவில்லை.

அவர் நம்பும், துதிக்கும் ஸ்ரீமான் கிருஷ்ண மூர்த்தி யாவது மானசீகத்தால் தடுத்திருக்கலாமே அல்லது அந்தக் கெட்ட புத்தியைக் கெடுத் திருக்கலாமே!

அரசியல் பிரச்சினைகள் என்றால் தமது கெட்டிக் காரத்தனத்தையெல்லாம் ஒன்று சேர்த்து அஷ்டாவ தானம் செய்யும் சிரோன்மணிகள் கடவுள், மதம், பக்தி என்றவுடன் மாத்திரம் குறைந்தபட்ச அறிவைக்கூட செலுத்தாதது ஏன்?

தந்தை பெரியார் எவ்வளவு தேவைப்படுகிறார் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

Read more: http://viduthalai.in/page1/85950.html#ixzz3B5CLnwif

தமிழ் ஓவியா said...

68 ஆம் ஆண்டு சுதந்திர நாள்: பலவிடங்களில் பலவிதம்!


68 ஆம் ஆண்டு சுதந்திர நாள்:
பலவிடங்களில் பலவிதம்!

நாமக்கல்லில் கருப்புக் கொடியேற்றிய கிராம மக்கள்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை அடுத்துள்ள பாதரை கிராமத்தில் உள்ள அண்ணா நகர், எம்ஜிஆர் நகர் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இவர்களில் பெரும்பான்மையோர் விசைத்தறி மற்றும் சாயப்பட்டறைகளில் வேலை செய்யும் கூலித் தொழிலாளர்கள் ஆவர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வசித்து வரும் இந்த பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள காலி நிலத்தை வழித்தடமாக பயன்படுத்தி வந்தனர். மேலும், போதிய கழிப்பறைகள் இல்லாத நிலையில் அந்த காலி யிடத்தை திறந்தவெளி கழிப்பிடமாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த இடத்தை ஒரு தனியார் ஆக்கிர மித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் தெரி விக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராத கிராம நிர்வாகத்தை கண்டித்து தங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சுதந்திர தினத்தில் வீடுகளில் கருப்புக் கொடிகளை ஏற்றி வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. வருவாய்துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடலூரில் கருப்பு கொடி ஏற்றம்

கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியைச் சேர்ந்த பார்த்திபன் (வயது 34) என்பவர், நேற்று காலை 9 மணி அளவில் தனது வீட்டில் கருப்பு கொடி ஏற்றியிருந்தார். அவர் கூறுகையில், கடந்த ஆக., 15 இல், அதிகாலை எனது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நபர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எனது மனைவி கழுத்தில் அணிந்திருந்த நான்கரை சவரன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத் தில் புகார் செய்தேன். அவர்களும் வழக்குப் பதிவு செய்தார்களே தவிர, ஓராண்டாகியும் குற்றவாளியை கைது செய்யவில்லை. இதைக் கண்டித்து, சம்பவம் நடந்த நாளான சுதந்திர தினத்தை கருப்பு நாளாக கடைப் பிடிக்கும் வகையில் கருப்புக் கொடி ஏற்றினேன் என்றார்.

தகவலறிந்த திருப்பாதிரிப்புலியூர் காவல்துறையினர் நண்பகல் 12 மணி அளவில் பார்த்திபன் ஏற்றியிருந்த கருப்பு கொடியை அகற்றினர்.



கரூரில் கருப்பு கொடியேற்றி போராட்டம்

கரூர் அருகே சுதந்திர தின நாளில், சுதந்திரமாக இருக்க முடியவில்லை எனக் கூறி, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் அருகே கிருஷ்ணராயபுரம் பகுதியில் ஊர் பிரச்சினை காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக சுமார் 10-க்கும் மேற்பட்ட குடும்பங்களை ஊர் மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் எந்தவொரு பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள முடியவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாட்டில் சுதந்திரமாக இருக்க முடிய வில்லை என கூறி, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை துறைமுகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக்கொடி சென்னை துறைமுகத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு சுதந்திர தினத்திற்கான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தின் தலைவர் அதுல்யா மிஸ்ரா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது தேசிய கொடி தலைகீழாகப் பறந்ததால், நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தேசியக் கொடி கீழே இறக்கப்பட்டு, மீண்டும் சரியாக ஏற்றப்பட்டது. செல்பேசியில் பேசியபடியே தேசியக்கொடி ஏற்றிய அதிமுக நகர்மன்றத் தலைவர்

நேற்று 68 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. நாடெங்கிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சென்னை அனகாபுத்தூரில் பம்மல் நகராட்சி அதிமுக நகர்மன்ற தலைவர் இளங்கோவன் செல்பேசியில் பேசியபடியே கொடியேற்றி அவமரியாதை செய்தார்.

Read more: http://viduthalai.in/page1/85983.html#ixzz3B5CzG4DZ

தமிழ் ஓவியா said...


தீண்டாமையும் பார்ப்பன உபாத்தியாயர்களும்


தீண்டாமையும் பார்ப்பன உபாத்தியாயர்களும்

விருத்தாஜலம் தாலுகா பெண்ணாடம் போர்டு எலிமெண்டரி பாட சாலையில் ஒரு பார்ப்பன தலைமை உபாத்தியாயர் இருப்பதாயும் அப்பள்ளிக் கூடத்தில் வாசிக்கும் ஆதிதிராவிட பிள்ளைகளை மேற்படியார் அதிகக் கொடுமையாகவும், கொஞ்சமும் இரக்கமின்றியும் நடத்துவதாகவும் பலர் நமக்குச் செய்திகளனுப்பி பத்திரிகையில் வெளியிடும்படி வேண்டினர். இவ்விஷயத்தை மேற்படி போர்டு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திப் பின்னர் தக்கது செய்யலாமென்ற முடிவின் பேரில் அவ்வாறே போர்டு அதிகாரிகளுக்கு நிலைமையை விளக்கி எழுதியிருந்தோம். அவர்களிட மிருந்து வந்த பதிலில் முன்னமே ஒரு தரம் அது சம்பந்தமாய் கவனித்திருப்பதாயும் மீண்டும் அதை விசாரித்து உண்மையறிந்து தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்வதாயும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி பாடசாலையில் உண்மையாய் நடப்பவை என்ன? ஆதி திராவிடப் பிள்ளைகள் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள், எவ்வளவு காலமாக இவ்விதம் நடை பெறுகிறது, அது சம்பந்தமாக மேலதிகாரிகள் எவ்விதம் கவனித்து என்ன பரிகாரம் செய்திருக்கிறார்கள் என்ற முழு விவரத்தையும் நமக்கு எழுதியனுப்பும்படி அவ்வூர் அன்பர்களைக் கேட்டுக் கொள்ளு கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 07.09.1930

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DB7t76

தமிழ் ஓவியா said...

கோவை முனிசிபல் நிர்வாகம்

கோயமுத்தூர் முனிசிபாலிட்டியின் 1929-30ஆம் வருஷத்திய நிர்வாக ரிப்போர்ட் வரப்பெற்று அதை முற்றிலும் படித்துப் பார்த்தோம். சென்ற வருஷத்தை விட இவ்வருஷம் கல்வி, பொருளாதாரம், பொதுஜன சுகாதாரம் முதலிய எல்லாத் துறைகளிலும் முற்போக்கடைந்திருக்கிறது. வரி வருமானம் ரூ 2,74,707-லிருந்து ரூ 2,96,171-க்கு உயர்ந்திருக்கிறது. பொது நிதி இருப்பிலிருந்து சிறுவாணி தண்ணீர் சப்ளை வேலைத்திட்டத்திற்காகக் கொடுக்கப்பட்ட ரூ 1,51,500ம் போக வருஷ முடிவில் ரூ 1.64 லட்சம் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இம்முனிசிபா லிட்டியைப் பற்றி சர்க்கார் எழுதிய குறிப்பில் வெகுவாகப் புகழ்ந்து கோவை முனிசிபாலிட்டி யின் நிர்வாகம் இம்மாகாணமற்றெல்லா முனிசிபல் நிர்வாகங்களை விட தலை சிறந்து விளங்குவதாய் குறிப்பிட்டு விட்டு அதன் தலைவர் திரு. இரத்தினசபாபதி முதலியாரவர்களையும் அவரது சகாக்களையும் பாராட்டி எழுதப்பட்டிருக்கிறது.

தக்க பலனளிக்கும் முறையில் பொது ஜனசேவை செய்து வரும் கோவை முனிசிபல் தலைவரவர்களையும் அவரது சகாக்களின் கூட்டுறவையும் நாம் மிகுதியும் பாராட்டுகிறோம்.

- குடிஅரசு - துணைத் தலையங்கம் - 07.09.1930

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DIiu3t

தமிழ் ஓவியா said...



மலாய் நாட்டு வக்கீல்களின் தேசியம்

மலாய் நாட்டில் மலாக்கர் என்கின்ற பட்டணத்தில் கள்ளிக்கோட்டை திருவாளர் கே.பி. கேசவமேனன் அவர்கள் சுமார் 3, 4 ஆண்டுகளாக பிரபல பாரிஸ்டராக இருந்து வருகின்றார்கள். அவர் இப்போது தன்னை கு.ஆ.ளு. பாரிலும் வக்கீலாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கோலாலம்பூர் சீப் ஜட்ஜிக்கு விண்ணப்பம் போட்டதில் அவரைச் சேர்த்துக் கொள்வதற்குக் கோலாலம்பூர் வக்கீல்கள் ஜட்ஜிக்கு ஆட்சேபணை சொன்னதாகவும் அவ்வாட்சேபணை என்ன வென்றால் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் ராஜத் துரோக விஷயமாய் சிறைசென்றவர் என்று சொன் னார்களாம். அதற்குப் பாரிஸ்டர் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் தான் வைக்கம் சத்தியாகிரகத் தில் ஈடுபட்டதால் சிறை செல்ல நேரிட்டதென்றும் மதராஸ் ஹைகோர்ட்டில் மிக்க செல்வாக்குப் பெற்ற பாரிடர் என்றும் எடுத்துக் காட்டி னாராம். இதற்காக கனம் ஜட்ஜ் அந்த விண்ணப்பத்தைப் பைசல் செய்ய 2 மாதம் வாய்தா தள்ளிப் போட்டிருப்பதாகத் தெரியவரு கின்றது. மலாய் நாட்டு வக்கீல்கள் இந்த விஷ யத்தில் இவ்வித ஆட்சே பனைக் கொண்டு வந்ததை நாம் பலமாகக் கண்டிக் கின்றோம். வக்கீல்கள் அரசியல் சம்பந்த மான கிளர்ச்சிகளில் ஈடுபடு வதும், தண்டனைகள் அடை வதும் அவர்களின் இப்போ தையத் தொழில் முறையில் முக்கிய அம்சமாகி விட்டது. இந்தியாவில் அனேக வக்கீல் கள் தண்டனை அடைந்து இப்பொழுது வக்கீல்களாகவே இருக்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க திரு. மு. ஞ. கேசவமேனன் அவர்கள் ராஜத் துவேஷ விஷயமாய்ச் சிறைச் சென்றவர் அல்லவென்று உறுதியாய்ச் சொல்லு வோம் சென்னை ஹைகோர்ட்டில் அவர் மிக்க பிரபல வக்கீலாக இருந்தவர். இந்தியாவில் பிரபலமாயிருந்த கனவான்கள் யாராவது தேசச் சேவையின் பலனாய் உண்மையான தியாகம் செய்தவர்கள் இருப்பார்களானால் அவர்களில் திரு. மு.ஞ.மு.மேனன் முதன்மையான வராவார். மலையாள தேச முழுமையும் மு.ஞ.மு. மேனன் என்றால் கண்களில் நீர் விடுவார்கள். அப்பேர்பட்ட உண்மையான தியாகியானவர். திருவாங்கூர் ராஜியத்தில் வைக்கம் என்னும் ஒரு பிரபல கோயில் உள்ள ஊரில் உள்ள பொதுத் தெருவில் ஈழவர்கள், நாடார்கள், முதலியவர்கள் கூட நடக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்ட தெருவில் அவர்களுக்குத் தெருப்பாத்தியம் வாங்கிக் கொடுக்கச் செய்யப்பட்ட முயற்சியில் திருவாங்கூர் அரசர் என்னும் சுதேச ராஜாவால் 6 மாதம் தண்டிக்கப்பட்டு ஜெயிலிலும் மிக்க மரியாதையாய் நடத்தப்பட்டவர். அத்தண்டனையின் போது நாமும் அவரும் திருவாங்கூர் ஜெயிலில் ஒன்றாகவே தண்டனை அனுப் பவித்தவர்களாவோம். கடைசி யாக காலாவதி தீருமுன் எங்களை விடுதலை செய்து விட்டதோடு திரு. கே. பி. கே. மேனனை எதற் காகத் தண்டித் தார்களோ அந்த காரியமான வைக்கம் ரோடுகளை எல்லோரும் நடக்கும் படியாக உத்தரவு கொடுத்து விட்டார்கள்.

ஆகவே திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் செய்த காரியம் குற்றமா? அல்லது திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைபடுத்தினது குற்றமா? என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

ஆகவே இப்படிப்பட்ட திரு. மேனன் அவர்களை மலாய் வக்கீல்கள் சிலர் ஆட்சேபித் திருப்பதிலிருந்து அவர்களது தேசியமும், சமுக சீர்திருத்தமும், அரசியல் முற்போக்கு முயற்சியும் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை ஒருவாறு உணரலாம். நம்மைப் பொறுத்தவரை இவ்வித ஆட்சேபணைகள் அறியாமையினாலோ அல்லது பொறாமையாலோ தான் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று கருதுகின்றோம். இது வக்கீல் தன்மையின் பிறவிக் குணமாம் போலும்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 03.08.1930

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DPnImS

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற தன்மையினால் ஒரு கூட்டம் அடைந்திருக்கும் அதிகப் பங்கையும் உரிமையையும் - போக போக்கியத்தையும் - கீழ்நிலையில் இருந்து கேடு அடையும் மக்கள் நிலைமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DWCYqc

தமிழ் ஓவியா said...

சாரதா சட்டம்

சாரதா சட்டம் பிறந்து அமலுக்கு வந்து 3 மாதம் ஆகி 4ஆவது மாதம் முடிவதற்குள்ளாகவே அதற்கு பாலாரிஷ்டம் வந்துவிட்டது. என்னவெனில் ராஜாங்க சபையில் சட்டத்தின் ஜீவ நாடியை அறுத்தெரியும் மாதிரியில் அதாவது பெண் களுக்கு 14 வயதிற்குள்ளும் ஆண்களுக்கு 18 வயதிற் குள்ளும் விவாகம் செய்ய மனசாட்சியோ குடும்ப நிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்குச் சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டு களுடையவும் பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காரரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக் கின்றார்கள்.

இந்தப் பிரேரேபணை சர்க்காரர் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது எண்ணமாய் இருந்திருக்க வேண்டும்.

சட்டத்திற்கு அனுகூலமாய் இருந்து திருத்த மசோதாவை தோற்கடிக்கச் செய்து விட்டால் இந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் வைதீகர்கள் (பார்ப்ப னர்கள்) சட்ட மறுப்புக் காரர்களுடன் சேர்ந்து விடுவார்கள் என்றும் அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் திருத்த மசோதாவை நிறைவேறும்படி செய்துவிட்டால் சீர்திருத்தக் காரர்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கருதியே தந்திரமாக நெருக்கடியைச் சமாளித்துக் கொள்ளவே இந்தத் தந்திரம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். நிற்க. மனசாட்சியை உத்தேசித்து நடக்க ஒவ்வொரு வருக்கும் இடம் கொடுக்கும் படி சட்டத்தைத் திருத்துவதனால் இந்தியன் பீனல்கோடும் சிறைச் சாலைகளும் அழித்து பொசுக்கவேண்டும் என்றுதான் சொல்லுவோம். திருடனுடைய மனச்சாட்சி திருடத்தான் சொல்லும். அயோக்கியனுடைய மனசாட்சி அயோக்கியத்தனம் செய்யத்தான் சொல்லும். மூடனுடைய மனசாட்சி முட்டாள்தனமான காரியத்தைத் தான்செய்யச் சொல்லும். ஆகவே இவர்களுடைய இஷ்டப்படி எல்லாம் நடக்க இடம் கொடுப்பதனால் சட்டமும் தண்டனையும் எதற்காக வேண்டும்? என்று கேட்கின்றோம். ஆகவே சர்க்கார் சாரதா சட்ட விஷயத்தில் ஏதாவது தளர்ச்சியைக் காட்டுவார்களானால் அது அவர்களது கேட்டிற்கே அறிகுறியாகும்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 20.07.1930

Read more: http://viduthalai.in/page1/85965.html#ixzz3B5DcRM9t

தமிழ் ஓவியா said...


பெரியாரை கொச்சைப்படுத்தலாமா?



சேலம் - பெரியார் பல்கலைக் கழகத்தில் நடைப்பாதை மற்றும் துணைவேந்தர் பஙகளா ரூ.25 லட்சம் செலவில் மாற்றி அமைக்கப்படு கிறதாம்.

எதற்காகத் தெரி யுமா? இப்பொழுதுள் ளவை வாஸ்துப்படி சரி யானதாக இல்லையாம். வாஸ்து சாத்திரப்படி மாற்றி அமைக்கிறார் களாம்.

கட்டடம் ஒன்றும் பழுதுபட்டு விடவில்லை. சிறப்பாகத்தான் இருக் கிறது; புதிய துணை வேந்தராக வந்துள்ள சுவாமிநாதன் என்பவர் சிறப்பாக உள்ள துணை வேந்தர் பங்களாவுக்குள் சென்று குடியேறாமல் விருந்தினர் மாளிகை யிலேயே தங்கி உள்ளாராம்.

கட்டடத்தை மாற்றி அமைக்கும் பணியைக் கூட பொதுப் பணித் துறையிடம் ஒப்படைக்கா மல் தனியார் வசம் ஒப் படைக்கப்பட்டுள்ளதாம்.

எப்படி இருக்கிறது? தந்தை பெரியார் பெய ரால் ஒளிரக் கூடிய ஒரு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் அவர் களின் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக - வாஸ்து பார்த்து, நல்ல கட்டடத்தை இடித்து விட்டுக் கட்டுகிறார்கள் என்றால் இந்தக் கொடு மைகளை என்னென்று சொல்லுவது!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி (51A(h)) மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், இங்கு துணைவேந்தராக இருக்கக் கூடியவரே வாஸ்து பார்க்கும் மூட நம்பிக்கைவாதியாக இருந் தால், எங்குப் போய் முட்டிக் கொள்வது?

வாஸ்து என்றால் என்ன என்று விளக்கு வாரா துணைவேந்தர்? வாஸ்து சாத்திரப்படி கழிப்பறை கட்டலாமா?

வாஸ்து சாத்திரத்தில் கழிப்பறைக்கு இடம் உண்டா? ஆந்திர மாநி லத்தின் முதல் அமைச் சராகவிருந்த என்.டி. ராமராவ் தலைமைச் செயலகத்தின் வாச லையே மாற்றி அமைத் தாரே - விளைவு என்ன?

விளக்கெண் ணெய்க்கும் கேடாய் முடிந்ததே தவிர, பிள்ளை பிழைத்த பாடில் லையே! அதுவும் அரசு பணத்தை மூடநம்பிக் கையின் வாயில் போடலாமா?

பெரியார் பல்கலைக் கழக சிண்டிகேட் என்ன செய்கிறது? ஒருவர்கூட பெரியார் சிந்தனை உள்ளவர் கிடையாதா? விஞ்ஞான நோக்குடை யோர் யாரும் இல் லையா? மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் எச்சரிக்கை!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/85997.html#ixzz3B5Dty2NM

தமிழ் ஓவியா said...

இதுதான் தமிழ்நாடு அரசின் சாதனைகளா?


சென்னை, ஆக.17_ 31 அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும், 17அரசு செவிலியர் கல்லூரிகளிலும் முறையே 31 மற்றும் 17 முதல்வர் பதவிகள் காலி யாக உள்ளன.

31 அரசுக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலி இதன் காரணமாக, கடந்த ஜூலை மாதம் நடத்த வேண்டிய பேராசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வும் கால தாமதமாகி வருகிறதாம்.

தமிழகத்தில் 81 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 40 கல்லூரிகள் கிரேடு-1 கல்லூரிகளாகும். மீதமுள்ள 41 கல்லூரிகளும் கிரேடு-2 கல்லூரிகள்.

இதில் கடந்த ஜூன் மாதம், 31 கிரேடு-2 கல்லூரிகளில் பணியாற்றி வந்த முதல்வர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் கிரேடு-1 கல்லூரி முதல்வர்களாகப் பணியமர்த்தப்பட்டனர்.

இதன் காரணமாக 31 கிரேடு-2 கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் காலியானது. இந்தப் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை.
இதுகுறித்து கல்லூரி பேராசிரி யர்கள் கூறியதாவது:

காலியாக உள்ள 31 கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்களை நிரப்ப, முத லில் பணி மூப்புப் பட்டியல் தயாரிக் கப்பட்டு, அதில் ஆட்சேபனைகள் வரவேற்கப்படவேண்டும். ஆனால், பணி மூப்புப் பட்டியல் தயாரிக்கப் படுவது தொடர்பாக இதுவரை எந்தத் தகவலும் பேராசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. இதனால், பதவி உயர்வுக்காக பல ஆண்டு களாகக் காத்திருக்கும் பேராசிரியர்கள் பாதிக்கப்படுவதோடு, முதல்வர் பணி யிடங்களை நிரப்ப மேலும் சில மாதங் கள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாமதம் காரணமாக, ஜூலை மாதம் நடத்தப்பட வேண்டிய பேராசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு காலதாமதமாகி வருகிறது. இதனால், பணி மாறுதலுக்காகக் காத்திருக்கும் பேராசிரியர்களும் பாதிக்கப்பட்டுள் ளனர் என்றனர்.

இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்கக உயர் அதிகாரியிடம் கேட்டபோது, முதல்வர் காலிப் பணியிடங்கள் விரை வில் நிரப்பப்படுவதோடு, பணிமாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படும் என்றார்.

செவிலியர் கல்லூரிகளிலும் காலி! தமிழகத்தில் 17 அரசு செவிலியர் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் கடந்த ஒன்றரை ஆண்டாக நிரப்பப்படாமல் உள்ளன. மேலும், பல செவிலியர் விடுதிகளில் விடுதிக் காப்பாளர்கள் இல்லாத நிலை உள்ளது.

தமிழ் ஓவியா said...

தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர் கல்லூரிகள் (டிப்ளமோ நர்சிங்) இயங்கி வருகின்றன. இவற்றில் 6 கல்லூரிகளில் மட்டுமே முதல் வர்கள் உள்ளனர். மீதம் உள்ள 17 கல்லூரிகளிலும் முதல்வர் பணியிடங் கள் காலியாகவே உள்ளன. மேலும், இந்தக் கல்லூரிகளில் 80-க்கும் மேற் பட்ட ஆசிரியர் பணியிடங்களும் காலி யாக உள்ளன.

இது குறித்து கல்லூரி ஆசிரியர்கள் சிலர் கூறியது: ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் பணிமூப்பு அடிப் படையில் முதல்வர்களாகப் பணியமர்த் தப்படுகின்றனர். அவர்கள் ஓய்வு பெற்ற தும் அந்த இடங்கள் நிரப்பப்படா மலேயே இழுத்தடிக்கப்படுகிறது. இதனால், ஒரு கல்லூரிக்குத் தேவை யான தீர்மானங்கள், முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது. பெரும்பாலான கல்லூரிகளில் நிர் வாகம் தொடர்பான பணிகளை ஆசிரி யர்களும், துணை முதல்வர்களுமே மேற்கொள்கின்றனர். நிர்வாகப் பணி களை கவனிப்பவர்களால் வகுப்புக்குச் செல்ல இயலாது. இதனால் மாணவர் களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.

20 ஆண்டுகளாக....

செவிலியர் பட் டயப் படிப்பு மாணவிகள், விடுதியில் தங்கித்தான் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்பது விதி. இதனால், அனைத்து மாணவிகளும் கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். ஆனால், மாணவிகளைக் கண்காணிப் பதற்கும், அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுப்பதற்கும் விடுதிக் காப்பாளர் இல்லாத நிலை உள்ளது.

மேலும், விடுதியில் துப்புரவுப் பணி யாளர் பணியிடங்களும் காலியாகவே உள்ளன. அரசு மருத்துவமனைகளுக் குச் பணிக்குச் செல்லும் துப்புரவுப் பணியாளர்களே விடுதிப் பணி களுக்கும் அனுப்பப்படுகின்றனர். அவர்களும் வரவில்லையென்றால் மாணவிகளே துப்புரவுப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. சில விடுதிகளில் மாணவிகள் தங்கள் கையிலிருந்து பணம் செலவழித்து, துப்புரவுப் பணியாளர்களை வரவழைக் கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

விடுதிகளில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்க சுகாதாரத் துறையிலிருந்து மருத்துவக் கல்வி இயக்குநரகத்துக்கு குறிப்பு அனுப்பப்பட்டுள்ளது. எனினும் அந்தப் பணிகள் இதுவரை நிறைவடையவில்லை என்று செவிலியர் கல்லூரி ஆசிரியர்கள் தெரிவித்தனர். இது குறித்து சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறிய தாவது: முதல்வர் பணியிடங்களை நிரப்புவதற்கான அனைத்துப் பணி களும் பூர்த்தியாகிவிட்டன. இருப் பினும், முதல்வர்கள் இல்லாத கல் லூரிகளில் பொறுப்பு முதல்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விடுதிகளைப் பொறுத்தவரை அங்குள்ள பிரச்னைகள் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதல்வர் பணியிடங்கள் மற்றும் விடுதிப் பணியிடங்கள் குறித்த அரசு ஆணைகள் மற்றும் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/page1/86003.html#ixzz3B5E4apqC

தமிழ் ஓவியா said...


இந்தியாவை உடைக்கத் திட்டமா?


இந்தியாவை உடைக்கத் திட்டமா?

இந்தியா இந்து நாடே! மீண்டும் கொக்கரிக்கிறார் ஆர்.எஸ்.எஸ். தலைவர்

மும்பை, ஆக.18_ இந்தியா ஒரு இந்து நாடு, இந்துத்துவா அதன் அடையாளம் என்று ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத் பேசியிருப் பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

மும்பையில் நேற்று நடைபெற்ற கிருஷ்ண ஜன்மாஸ்டமி நிகழ்ச்சி யில் ஆர்.எஸ்.எஸ். தலை வர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசிய தாவது:

இந்தியா ஒரு இந்து நாடு. இந்துத்துவா என் பது அதன் அடையாளம். இந்து மதம் மற்றவர் களையும் உள்ளடக்கிய ஒரு மதம்.
அடுத்த 5 ஆண்டு களில் நாட்டில் உள்ள அனைத்து இந்துக்களிட மும் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்காக நாம் உழைக்க வேண்டும்.

அனைத்து இந்துக் களும் ஒரே இடத்தில் குடிநீர் பருக வேண்டும். ஒரே இடத்தில் பிரார்த் தனை செய்ய வேண்டும். இது மட்டும் அல்லாமல் அவர்கள் இறந்த பிறகு உடல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு மோகன் பகவத் பேசியுள்ளார்.

இந்தியா, இந்துக்களின் நாடு' என்று மோகன் பகவத் கூறிஇருப்பது புதிய சர்ச்சையை ஏற் படுத்தி உள்ளது. ஏற்கெ னவே கடந்த வாரம் ஒடிஷா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியர்களின் கலாச்சார அடையாளமே இந்து மதம் தான். தற்போது வாழும் இந்துக்கள் அனைவரும் மிக பெரிய கலாச்சாரத்தின் சுவடுகள். ஆங்கிலேயர்களின் வழித் தோன்றல்கள் ஆங்கிலே யர்களாகவும், ஜெர்மனி யர்களின் சந்ததிகள் ஜெர்மனியர்களாகவும் இருக்கும்போது இந்துக் களின் வழித்தோன்றல்கள் ஏன் இந்துஸ்தானில் வாழ்ந்து வருவோர் இந்துக்களாக இருக்கக் கூடாது என்று கூறி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

விரைவில் ராமர் கோயில் கட்டப்படுமா!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் வாக் குறுதி விரைவில் பூர்த்தி செய்யப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலை வர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார். இதே போன்று தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு பேட்டி அளித்த பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்ய நாத், பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்ட ராமர் கோவில் கட்டும் பணி விரைவில் நடைபெறும் என தெரி வித்துள்ளார்.
தொகாடியா பேசுகிறார்

விஸ்வஹிந்து பரிஷத் உலகத்தலைவர் பிரவீன் தொகாடியா பேசும்போது, விஸ்வஹிந்து பரிஷத், இந்து சமாஜங்கள் அடுத்த 10லிருந்து 20 ஆண்டு களுக்குள் சரியான இடத்தைப் பெறக்கூடிய வகையில் வளர்ந்துவிடும். 50ஆண்டுகாலத்தில் ராமன்கோவில் இயக்கம் விஸ்வஹிந்து பரிஷத்தின் குறிப்பிடத்தக்க பணியாக இருந்துள்ளது. ராமன் கோவில் கட்டப்படும் வரையிலும் நம்மிடம் (ஹிந்துக்கள்) இந்த நாட் டில் சம்மான் (கவுரவம்) இருக்காது.

அடுத்த 25 ஆண்டு களில் அனைத்து கிராமங் களிலிருந்தும் மாநகர் மூலைமுடுக்குவரையிலும் விஸ்வஹிந்து பரிஷத் அடித்தளமாக இயங்கும் என்று தொகாடியா கூறி னார்.

(டில்லி _ விசுவஹிந்து பரிஷத் பொன் விழாவில் பேசியது)

Read more: http://viduthalai.in/page1/86075.html#ixzz3B5FG9FIa

தமிழ் ஓவியா said...

இந்துத்துவாவாதிகளிடமிருந்து பதில் உண்டா?


இந்துத்துவாவாதிகள், சங்பரிவார் அமைப்பினைச் சேர்ந்தவர்கள். பிஜேபியினர் தொலைக்காட்சி விவாத மேடைகளில் பங்கேற்க வரும்போது ஒரு சிக்கலான கேள்விக்கு ஆளாகி விடுவதுண்டு. அந்தச் சிக்கலான கேள்வி என்பது வேறு ஒன்றும் இல்லை.

இந்துக்களை ஒன்று சேரக் கூறுகிறீர்கள். அந்த இந்துக்களில் தாழ்த்தப்பட்டவர் உட்பட உரிய பயிற்சி பெற்று அர்ச்சகராக வர வேண்டும் என்கிற போது அதற்குத் தடையாக இருக்கிறீர்களே, நீதிமன்றம் சென்று தடை வாங்குகிறீர்களே என்கிற இடக்கு மடக்கான கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறுவதுண்டு; சில நேரங்களில் நாங்கள் அதனை ஏற்கவில்லை என்று தப்பிக்கப் பார்ப்பதும் உண்டு அது ஒரு சமாளிப்பே தவிர, உண்மையிலேயே அவர்கள் உள்ளம் என்பது வேறு மாதிரி யானதுதான்; இதோ துக்ளக்கில் அதைச் சார்ந்த கேள்வி.

ஜோஸ்வா ஐஸக்; நீங்கள் ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுதான் என்று சொல்கிறீர்கள். அதே சமயம் இங்கு கோவில் அர்ச்சகராகப் பயிற்சி முடித்தவர்களுக்கு வாய்ப்பு இல்லாத, அதை அனுமதிக்காத சூழ்நிலையும் இருக்கத் தானே செய்கிறது? அதிலும் ஜாதிப் பிரிவினை வந்து விடுகிறதே?

ராம.கோபாலன்: தமிழ்நாட்டில் அரசின் கணக்குப்படி 43 ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. அர்ச்சகராகப் பயிற்சி முடித்தவர்கள், பெரிய கோவில்களுக்குத்தான் போக வேண்டும் என்கிற அவசியம் இல்லையே! தமிழகத் தில் இருக்கிற எத்தனையோ சின்னக் கோவில்களுக்குப் போகலாமே! கருப்பசாமி, மாடசாமி கோவில்களுக்குப் போகலாமே! அங்கு பூசாரியாகப் போகக் கூடாதா? அங்கு போனால் மரியாதைக் குறைவா? என்னைப் பொறுத்த வரை, எல்லாக் கோயில்களிலும் பூஜை நடக்க வேண்டும். அர்ச்சனை செய்யப்பட வேண்டும்.

பல்லாயிரக்கணக் கான கோவில்கள் தமிழகத்தில் விளக்கேற்றக்கூட ஆள் இல்லாத நிலையில் இருக்கின்றன. அதில் எல்லோரும் போய் பூஜை பண்ணலாமே! யார் வேண்டாம் என்று சொல்கிறார்கள்? அவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்கட்டுமே. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர்தான் அர்ச்சகராக வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. எல்லா ஜாதி யினரும், எல்லாக் கோவில்களிலும் பூஜை பண்ணட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை.
(துக்ளக் 6.8.2014 பக்கம் 7)

- இவ்வாறு துக்ளக் இதழுக்கு இந்து முன்னணி மாநில அமைப்பாளர் திருவாளர் இராம.கோபாலன் சொல்லி யிருக்கிறார்.

கடைசிப் பத்தியில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம், அதை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்லக் கூடியவர் தொடக்கத்தில் என்ன சொல்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.

அர்ச்சகர் பயிற்சி பெற்றவர் பெரிய கோவில்களுக்குத் தான் போக வேண்டுமா? கருப்பசாமி, மாடசாமி கோவில்களுக்குப் போகலாமே! அங்கு பூசாரியாகப் போகக் கூடாதா? அங்கு போனால் மரியாதை குறைவா? என்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டு போவது ஏன்? அதே கேள்வியை பார்ப்பன அர்ச்சகர்களை நோக்கி ஏன் கேட்கவில்லை அவர்?

மாடசாமி, கருப்பசாமி கோவிலுக்கு அர்ச்சகர் பார்ப் பனர்களே ஏன் நீங்கள் போகக் கூடாதா? அங்கெல்லாம் போவது கவுரவக் குறைவா? என்று கேட்டதுண்டா?

கற்பகாம்பாள் கோயிலுக்கு கல்கி வகையறாக்கள்தான் அர்ச்சகராக வேண்டுமா? அர்ச்சகர் பயிற்சி பெற்ற காத்த வராயன் சென்று அர்ச்சனை செய்தால் கற்பகாம்பாளுக்கு வயிற்று வலி வந்து விடுமா?

சரி.. கடைசிக் கடைசியாக குறிப்பிட்ட ஜாதியார்தான் அர்ச்சகராக வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை என்று பதில் சொல்லுகிறாரே. அதிலாவது அறிவு நாணயமாக நடந்து கொண்டதுண்டா?

தமிழ் ஓவியா said...

இந்தப் பிரச்சினைக்காக இவர் அமைப்பாளராக இருக்கும் இந்து முன்னணி ஒரு சிறு துரும்பையாவது கிள்ளிப் போட்டிருக்குமா?

சரி.. அவர்கள்தான் அதற்காகக் குரல் கொடுக்க முன் வரவில்லை. அதற்காக திராவிடர் கழகம் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளதே - போராட்டம் நடத்தி வந்திருக் கிறதே நேரடியாக களத்துக்கு வந்து ஆதரவு தெரிவிக்கா விட்டாலும் பரவாயில்லை - ஆதரவு அறிக்கை கொடுத் திருக்கலாமே. அதனை எதிர்த்து வழக்குத் தொடுத்தவர் களைக் கண்டித்து இருக்கலாமே! எப்பொழுதாவது திருவாளர் ராம. கோபாலன் அவ்வாறு நடந்ததுண்டா? துண்டை முறுக்கிக் கழுத்தில் போட்டு கேள்வி கேட்கப்படும் நேரத்தில் மட்டும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள மட்டும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்பதில் எங்களுக்கு உடன்பாடுண்டு; நாங்கள் எதிர்க்கவில்லை என்று சொன்னால் யார் நம்புவார்கள்?

நடந்தது நடந்ததாக இருக்கட்டும் நாளையோ அதற்கு மறு நாளோ சங்கராச்சாரியாரை ஸ்ரீமுகம் (கடிதம்) எழுதச் சொல்லட்டுமே பார்ப்போம். வைகனாச ஆகமத்தைக் தூக்கிக் கொண்டு வருவார்களே தவிர - தாழ்த்தப்பட்ட வர்களை அர்ச்சகராக விருப்பம் காட்ட மாட்டார்கள்!

தீண்டாமையை ஒழிப்பதற்கே அவர்களின் மூத்த சங்கராச்சாரி (மறைந்த) சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லையே! அதனை காந்தியாரிடத் திலேயே முகத்துக்கு முகம் அடித்துச் சொல்லி விட்டாரே! அப்படி இருக்கும்போது திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறைக் குள்ளோ, காஞ்சி காமாட்சியம்மன் கர்ப்பக் கிரகத்துக்குள்ளோ பாரப்பனர் அல்லாதார் - உரிய பயிற்சிகளை முறைப்படி கற்றுத் தேர்ந்தாலும் சென்று அர்ச்சனை செய்ய அனுமதிப்பார்களா?

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதை ஏற்றுக் கொள்ளாத வரை, அது நடக்காதவரை, இந்துக்களே, ஒன்று சேருங்கள்! என்று இந்து முன்னணி வகையறாக்கள்அழைப்புக் கொடுத்தால்; அது கடைந் தெடுத்த நகைச்சுவையாகத்தான் கருதப்படும்.

இந்துக்கள் ஒன்று சேர வேண்டும் என்கிற அவர்களின் நோக்கமும் நிறைவேறாது; இது கல்லின்மேல் செதுக்கப் பட்ட எழுத்தாகும்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இந்து கோவில் அர்ச்சகர்களாக இருக்கும் பார்ப்பன அர்ச்சகர்களில் எத்தனைப் பேர்களுக்கு உண்மையான ஆகமங்கள் தெரியும்? அர்த்தம் புரிந்து உச்சரிக்கும் மந்திரங்கள் தெரியுமா?

சர்.சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் போடப்பட்ட ஆணையமே அதன் உண்மையை அவிழ்த்துக் கொட்டிய துண்டே!

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு ஏ.கே. ராஜன் அவர்களால் ஓர் அருமையான நூல் எழுதப் பட்டு வெளி வந்துள்ளது. நூலின் பெயர் கோவில்கள், ஆகமங்கள், மாற்றங்கள்.

இந்நூலில் 75ஆம் பக்கத்தில் ஒரு தகவல் உண்டு. சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அர்ச்சகர் களில் 4 அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஆகம விதிகள் தெரிந் துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 116 அர்ச்ச கர்கள் உள்ளனர். அதில் ஆகமம் பயின்றவர்கள் வெறும் 22 பேர்கள் மட்டுமே என்று ஆதாரத்துடன் எழுதி இருக் கிறரே - இதற்கு என்ன பதில் - இந்துத்துவாவாதிகளே?

Read more: http://viduthalai.in/page1/86057.html#ixzz3B5FTRdn8

தமிழ் ஓவியா said...



தனிச் சலுகை


ஏழைகள் வாழ்வு மலரவே சமதர்மம் விழைகிறோம். எல்லா வகுப்பினரும் சம வாய்ப்புப் பெறும் வரையில் திட்டமிட்டுப் பரம்பரையாய்த் தாழ்ந்துள்ள சமூகத் தினர்க்குத் தனிச் சலுகை தரப்பட வேண்டும். - (விடுதலை, 8.12.1967)

Read more: http://viduthalai.in/page1/86056.html#ixzz3B5FlE8ko

தமிழ் ஓவியா said...

எலும்பு தேய்மானத்தை தடுக்க எளிய வழிமுறைகள்

உடலின் ரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடல் இயக்கம் இன்றி இருக்கும்போது ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். இதுவே எலும்பு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் ஆகிறது. உடலின் வளர்ச்சிக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது.

எலும்புகளின் அடிக் கட்டமைப்பை புரதங்கள் வலுவாக்குகின்றன. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் இடையில் பரவி எலும்புக்கு வலு சேர்க்கின்றன. இந்த இயக்கமானது உடலில் எப்போதும் நடப்பதால் கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது.

இந்த சத்துக்கள் பால், பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளில் இருந்து கிடைக்கிறது. வயது, உழைக்கும் தன்மை இரண்டையும் கருத்தில் கொண்டு சரியான உணவு முறையை கடைபிடிப்பது எலும்பு தேய்மானத்தை தவிர்க்க உதவும். குழந்தைகளுக்கு வளர்ச்சியின் காரணமாக உடல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இது போன்ற வலிகள் தானாகவே சரியாகி விடும். அவர்களுக்கு கை, கால் ஆகியவற்றில் வலி ஏற்படும்போது வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுத்தால்போதும்.

வலிக்கும் பகுதிகளில் வீக்கம், தொடு வலி, நொண்டுதல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்போது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இதேபோல் குழந்தைகள் படிக்கும் வயதில் எவ்வித உடற்பயிற்சியும் இன்றி இருந்தால் அவர்களின் வளர்ச்சி பாதிக்கும். எனவே கால்சியம் உணவுகளை உட்கொள்வதுடன் குழந்தைப் பருவத்தில் இருந்தே உடற்பயிற்சியை வழக்கப்படுத்துவது அவசியம்.

பொதுவாக ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருக்கும் பட்சத்தில் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பரம்பரைக் காரணங்கள், கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல், வேறு நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்துகள், முன் கூட்டியே ஏற்படும் மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங் களால் எலும்பு தேய்மானம் உண்டாகிறது.

வயது 30அய்த் தொட்டவர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறி, பால், முட்டை மற்றும் கடல் உணவுகள், கொட்டை வகைகள் ஆகிய வற்றில் வைட்டமின்-டி அதிகம் உள்ளது. வாரத்தில் மூன்று முறை 15 நிமிடங்களாவது வெயிலில் இருக்கவேண்டும். எலும்புகள் உறுதியிழப்பைத் தடுக்க தினமும் 20 நிமிடம் நடைபயிற்சி செல்ல வேண்டியது கட்டாயம். உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஏரோபிக்ஸ் மற்றும் நீச்சல் உள்ளிட்ட பயிற்சிகள் நல்ல பலன் தரும். எலும்புகளை உறுதி செய்யும்.

எலும்பு தேய்மானம் உள்ளவர்கள் தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை பிசியோதெரபி மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டியது அவசியம்.

தமிழ் ஓவியா said...

புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை படிப்படியாக குறைத்துவிடுவது நல்லது. எலும்பு தேய்மானத்துக்கான அறிகுறி உள்ளவர்கள் எலும்பு தேய்மானத்தின் அளவை அதற்கான கருவிகள்மூலம் தெரிந்து கொள்ள முடியும். உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன்மூலம் மட்டுமே எலும்பு தேய்மானத்துக்கு தீர்வு காண முடியும் என்கிறார் பிசியோதெரபி மருத்துவர் செந்தில்குமார்.

எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்க உணவில் செலுத்த வேண்டிய கவனம் குறித்து விளக்குகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. உடல் உழைப்பைவிட அதிக உணவு எடுத்துக் கொள்ளுதல், எந்தவித உடற்பயிற்சியும் இன்றி இருத்தல் போன்ற காரணங்களால் எலும்பு தேய்மானம் ஏற்படுகிறது.

மேலும் கால்சியம் உள்ள உணவுகள், காய்கறி, பழங்கள் உண்ணாமல் தவிர்ப்பவர்களுக்கு சிறுவயதிலேயே எலும்பு வலுவிழக்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பாக்கெட் செய்யப்பட்ட துரித உணவுகள், குளிர்பானங்கள் குடிப்பதும் எலும்பு தேய்மானத்துக்குக் காரணமாகிறது.

எனவே சிறு வயதில் இருந்தே கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும். பால் மற்றும் பால் பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் இரண்டு டம்ளர் பால் அவசியம் குடிக்க வேண்டும். ஏதாவது ஒரு வகை முழு தானியத்தை தினமும் ஒருவேளை உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியம்.

ராகி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, முருங்கைக் காய் மற்றும் முருங்கைக்கீரை, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு, கீரை வகைகள் ஆகியவற்றில் கால்சியம் சத்து உள்ளது. இவை எலும்பு வலுவடைய உதவும்.

பெண்களின் மெனோ பாஸ் 40 வயதுகளில் வருவதால் அதன் பின்னர் கால்சியம் பற்றாக்குறைக்கு ஆளாகின்றனர். அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள சிக்கன், மட்டன், இறால், முட்டை, மீன் போன்ற உணவு வகைகளை சேர்க்க வேண்டும். மெனோ பாசுக்குப் பின்னர் சோயா பீன்ஸ் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிக கால்சியம் உடலுக்குக் கிடைக்கும்.

வெந்தயத்தை பொடி செய்து கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்

Read more: http://viduthalai.in/page1/86093.html#ixzz3B5GShmnH

தமிழ் ஓவியா said...

சிறுநீரக நோயை குணப்படுத்த மாதுளம் பழச்சாறு சாப்பிடுங்க


சிறுநீரக நோய்களைத் தீர்ப்பதற்கு மாதுளம் பழச்சாறு சிறந்தது என ஆய்வில் தெரியவருகிறது, இதற்காக டயாலிஸிஸ் செய்வதற்கு முன்பாக சில சிறுநீரக நோயாளிகளுக்கு மாதுளம் பழச்சாறு அல்லது புரதச்சத்து அதிகம் உள்ள பிளாஸ்போ பானம் கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. மாதுளம் பழச்சாறு சிறுநீரக பாதிப்பையும், பக்கவிளைவான இதய நோயையும், சாவு விகிதத்தையும் குறைப்பது தெரியவந்தது.

ஏனெனில், மாதுளம் பழச்சாறு அருந்தியவர்கள் உடலில் இருந்த தீங்கு விளைவிக்கும் பொருள்களை மாதுளம் பழச்சாறில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் செயல் இழக்கச் செய்ததால் அவர்கள் நோயின் பாதிப்பு மட்டுப்பட்டதாக உணர்ந்தனர். மாதுளம் பழம் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு, கொழுப்புச்சத்து குறையும், ஆண்மை பெருகும், வெயிலால் ஏற்படும் தோல் சம்பந்தமான நோய்கள் கட்டுக்குள் இருக்கும் என ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது. புராஸ்ட்ரேட் புற்று நோயை மாதுளம் பழம் குறைக்கும் என அமெரிக்காவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்விலிருந்து கண்டறியப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Read more: http://viduthalai.in/page1/86094.html#ixzz3B5Gd0ncc

தமிழ் ஓவியா said...

இனிப்புக்கு முதலிடம் கொடுங்க...

திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளில் கடைசியாக நாம் பாயாசம் என இனிப்பு வகை உணவுகளை சாப்பி டுகிறோம். ஆனால் இது தவறான முறையாகும். இனிப்பு வகைகளையே முதலில் எடுக்கவேண்டும். நாம் சாப்பிடும் முன்பு பசி காரணமாக வாயு அதிகரித்து காணப்படும்.

அப்போது நாம் இனிப்புகளை உண்பதால் அது வாயுவை தணித்து விடும். குறிப்பாக பழங்களைச் சாப்பிடும் முன்பே உண்பது நல்லது. நமது உடல் தேவையான உணவை செரித்த பின்னர் எஞ்சிய உணவுகள் வயிற்றில் தங்கியிருக்கும். அப்போது பழங்கள் தங்கியிருந்தால் அவை அழுகி வேதியியல் மாற்றம் காரணமாக இதர நோய்களை உருவாக்கும்.

தண்ணீர் குடிக்கும் முறை: சிலர் சாப்பிடும் முன்பு தண்ணீர் குடிப்பார்கள். சிலர் சாப்பிட்ட அரைமணி நேரம் கழித்து தண்ணீர் குடிப்பார்கள். ஆனால், ஆயுர்வேத கூற்றுப்படி சாப்பிடும்போது இடையிடையே அளவோடு தண்ணீர் அருந்தவேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/86094.html#ixzz3B5GsDEFP

தமிழ் ஓவியா said...

கண்ணில் தெரியும் புற்றுநோயின் அறிகுறி


புற்றுநோயை காட்டிக் கொடுப்பதில் கண்களுக்கு மிகப் பெரிய பங்குண்டு என்றால் நம்ப முடிகிறதா?

உடலின் எந்த பாகத்தில் புற்றுநோய் வந்தாலும், அதன் அறிகுறிகள் கண்களில் பிரதிபலிக்குமாம். ஆச்சரி யமான, அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் கண் சிகிச்சை நிபுணர் பிரவீண் கிருஷ்ணா. கண்களில் பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசிவது, விழித்திரை பிரச்சினை... வயசானவங்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும் பாலும் முதுமையின் அறிகுறிகள் என்று அலட்சியப்படுத் தறவர்கள்தான் அதிகம்.

வயதானால் பார்வை மங்குவதும், பூச்சி பறக்கிறதும் இயல்புதான்னு விட்டுவிடுவார்கள்.

ஆனால், அதெல்லாம் அவங்க உடம்பில் எங்கயோ புற்றுநோய் தாக்கியிருக்கிறதுக்கான அறிகுறியாக இருக்கலாம் என்று யாருக்கும் யோசிக்கத் தோன்றாது. நடுத்தர வயசுக்குப் பிறகு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் தாக்குகிற வாய்ப்புகள் அதிகம். திடீர்னு தென்படற கட்டி, எடை குறையறது, கழிவறைப் பழக் கங்கள் மாறிப் போறது, இருமல், ரத்தத்தோட வெளியேறும் சளி... இப்படி புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகளைத் தாண்டி, கண்களிலேயும், அதைக் கண்டுபிடிக்கலாம்.

மனித உடம்பில் அதிகப்படியான ஆக்சிஜன் ரெட்டினா என்று சொல்கிற விழித்திரைக்குத்தான் போகிறது. அந்த ஆக்சிஜன், விழித்திரைக்குப் பின்னாடி உள்ள கோரா யிடு-ங்கிற பகுதி மூலமாகத்தான் விழித்திரைக்குப் போகும். உடம்போட ரத்த ஓட்டம், உடல் முழுக்க ஒன்றோடு ஒன்று இணைந்து போகும். அதனால், ரத்தத்தில் உள்ள புற்று நோய் செல்கள், கோராயிடு மூலமாக, விழித்திரைக்கு போகும். விழித்திரையில் தண்ணீர் கசிஞ்சு, விழித்திரை முன்னாடி வரும். திடீர் பார்வைக் குறைபாடுதான் இதற்கான அறிகுறி.

சிலருக்கு ‘non hodgkin's lymphoma - என்று சொல்லக் கூடிய ரத்தப் புற்றுநோய் இருக்கும். கண்களில் பூச்சி பறக்கிறது, வெளிச்சம் அதிகமாகத் தெரிவதையும் முதுமையோட அறிகுறிகளாகவும், மறதி, நடக்கும்போது ஏற்படுகிற பிரச்சினைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்புப்படுத்திப் பார்த்து, வேறு வேறு சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணரால்தான் அதை சரியாகக் கண்டுபிடிக்க முடியும்.

பி ஸ்கேன் மூலமாக விழித்திரையைப் பரிசோதித்து, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கிருந்து வந்ததுங்கிறதையும் கண்டுபிடிப்பாங்க. பிறகு விழித் திரவத்தை எடுத்து சோதனைக்குட்படுத்தி, புற்றுநோய் இருக்கிறதா என்பதை உறுதி செய்து, அப்படி உறுதியானால், அதற்கான சிகிச்சைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் பிரவீண்.

Read more: http://viduthalai.in/page1/86092.html#ixzz3B5Gzixy6

தமிழ் ஓவியா said...

விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கல்வி உரிமைக்கான மாநாட்டை ஏன் தடுக்க வேண்டும்? - கி.வீரமணி


கொலை, கொள்ளைகள் அன்றாடம் நடைபெறுவதை தமிழக அரசு வேகமாகத் தடுக்கட்டும்

விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய கல்வி உரிமைக்கான மாநாட்டை ஏன் தடுக்க வேண்டும்?

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த வேண்டாம்!

சென்னை உயர்நீதிமன்றம் இருமுறை ரத்து செய்தது கவனத்தில் கொள்க!

தமிழ்நாடு அரசு போக்குபற்றி தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்க அறிக்கை

கி.வீரமணி

சேலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடத்தப்படவிருந்த கல்வி உரிமை மாநாட்டை நடத்த விடாமல் தமிழ்நாடு அரசு தொடக்கத்தில் அனுமதி மறுத்தும்; அதன்பின் 144 தடை போட்டும் கருத் துரிமையைத் தடுக்கும் தமிழ்நாடு அரசின் போக்கைக் கண்டித்தும், கருத்துரிமையைத் தடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக அரசின் நிர்வாகத் துறையில் 144 என்ற தடைச் சடடத்தை, தவறாகப் பயன்படுத்திடும் போக்கு அண்மைக் காலத்தில் மிக அதிகமாகியிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள பேச்சுரிமை, கருத்துரிமை, கூடி விவாதிக்கும் உரிமை இவைகளை அடியோடு பறிக்கும் சர்வாதிகாரச் சாயலைக் கொண்ட நடைமுறையாக பலவிடங்களில், பல நேரங் களில் காண முடிகிறது. வெள்ளைக்காரர்கள் தந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் (Cr.P.C) உள்ள இந்த 144 சட்ட விதி எதிர்க்கட்சிகளின் உரிமைகளைப் பறிக்கும் சாக்கில் பிரயோகப்படுத்தப்படுவது, ஜனநாயகத் தின் குரல் வளையை நெரிப்பதற்குச் சமமாகும்!


தமிழ் ஓவியா said...

144 - தவறான பிரயோகம்

எவருமே கண்டிராத விசித்திர வகையில் தமிழ்நாட்டுத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி 144 தடை உத்தரவை நடைமுறைப்படுத்தி, தேர்தலில் வாக்காளர் களுக்கு லஞ்சம் கொடுக்க வசதி செய்து கொடுக்கப்பட்டது என்று குற்றம் சாட்டாத தமிழக எதிர்க்கட்சிகளே இல்லை என்பது அதன் தவறான பிரயோகத்தைக் குறிக்க வில்லையா?

தர்மபுரி பகுதிகளில் மாதக் கணக்கில் ஏன் ஓராண்டு அளவில் - 144 தடைச் சட்டம் அமலாக்கப்பட்டதே!

சட்டம், ஒழுங்குக்கு ஆபத்து ஏற்பட்டு பொது அமைதி குலையும் என்று எண்ணும் அசாதாரண சூழ்நிலை உருவாகும் போது மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டி யதை இப்படி பேச்சுரிமை, கருத்துரிமை பறிப்புக்குப் பயன்படுத்துவது ஜனநாயகத்தில் எவ்வகையில் நியாயம்?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தங்களின் மாநாட்டை சேலத்தில் நேற்று (17.8.2014) நடத்தவி ருந்ததையொட்டி அனுமதி மறுத்து, சேலம் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவைப் போட்டுள்ளார். மாநாடு நடக்கக் கூடாது என்று அறிவித்த நிலைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு போட்டபோது, நீதி அரசர் திரு. இராமசுப்ரமணியம் அவர்கள் தடை உத்தரவை ரத்து செய்து சில நிபந்தனைகளுடன் மாநாடு நடத்த அனுமதி வழங்கினார். மாநாடு நடைபெறும் நாளில் (விடுமுறை என்ற போதிலும் அவசர வழக்காக எடுத்துக் கொண்டு) பகலில் நீதிபதி ஆணை பிறப்பித்தார்; உடனே அதை எதிர்த்து தமிழக அரசின் மாவட்ட ஆட்சியர் சார்பில் மேல் முறையீடு - இரண்டு நீதி அரசர்கள் திரு. ராஜேஸ்வரன், திரு. பி. தேவதாஸ் ஆகியோர் அமர்வுக்கு வகை செய்தது தமிழக அரசு!

இது எதைக் காட்டுகிறது?

மாநாடு மாலை நடக்கும் வரை வழக்கு நடைபெற்று விசாரித்து, மாநாட்டைத் தடை செய்த மாவட்ட ஆட்சியரின் ஆணை செல்லாது என்று மீண்டும் உறுதி செய்து உயர்நீதிமன்ற அமர்வு ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டதே! இதற்காக அரசும், இந்த அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டாமா?

அவசரக் கோலத்தில் அடக்குமுறை ஆயுதம்

எந்த அசம்பாவிதமும் இன்றி அம்மாநாடு எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் தலைமையில் வெற்றி கரமாக நடைபெற்று முடிவடைந்துள்ளதே. யாருக்கும் எதிராக தூண்டி விட இம்மாநாடு கூட்டப்படவில்லை; மாறாக, கட்டாயக் கல்வி, உயர் கல்வி மட்டம் வரை அனைவருக்கும் என்பதை வற்புறுத்தவே என்று தோழர் தொல். திருமாவளவன் உரையாற்றி உள்ளது குறிப்பிடத் தகுந்தது. இதில் என்ன தவறு இருக்கிறது? இப்படிப்பட்ட அடக்குமுறை ஆயுதங்களை அவசரக் கோலமாக ஏன் அள்ளித் தெளிக்க வேண்டும்?

குண்டர் சட்டத்தைத் திருத்தி தடுப்புக் காவல் பிரிவுகளை உள்ளடக்குவது, இதை ஒரு நவீன ரௌலட் சட்டம் ஆக்கும் முயற்சி அது ஜனநாயகத்திற்கு எதிரான மனித உரிமைப் பறிப்பும் ஆகும்; அதுபற்றியும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அரசு.

சட்டம், ஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டுமானால் நாள் தவறாமல் கூலிப்படைகளால் நடைபெறும் கொலைகளும், கொள்ளைகளும், மகளிரின் செயின் பறிப்பு நிகழ்வுகளும் தடுக்கப்பட முன்னுரிமைகாட்ட முயல வேண்டும். இனி மேலாவது இப்படிப்பட்ட வன்மங்களில் ஈடுபடாமல் ஆக்கப் பணிகளில் அரசும், ஆட்சியாளர்களும் ஈடுபட வேண்டும்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
18.8.2014

Read more: http://viduthalai.in/page1/86072.html#ixzz3B5HFalBc

தமிழ் ஓவியா said...


செக்யூலரிஸம் என்றால் என்ன?

செக்யூலர் செக்யூலரிஸம் என்ற சொற்கள். இந்தியா சுயாட்சி என்பது அடைந்தது முதல் அதிகமாக அடிபட்டு வருகின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் இவை இடம் பெற் றுள்ளன.

இந்த செக்யூலர் செக்யூலர் கவர்ன் மெண்ட் என்பதற்கு ஆளும் குழுவினர் கூறும்பொருள், சமய சந்தர்ப்பத்துக் கேற்றபடி மாறுபடுகிறது.

மதமற்ற அரசாங்கம் என்று அடி நாளிலும்; பின்னர் மதச்சார்பற்ற அரசாங்கம் என்றும் கருத்து விளக்கம் தெரிவிக்கப்பட்டது.

குழப்பம்

ஆனால், அண்மையிலோ ஆட்சி பீடாதிபதிகள் மத விழாக்களிலும், கும்ப மேளாக்களிலும் கலந்துகொண்டதனை பொது மக்கள் உலகம் குற்றம் கூறவே, செக்யூலர் என்றால் மதங்கள் மீது வெறுப்புக் கொண்டு ஒதுக்கித் தள்ளுவ தல்ல- _ எல்லா மதங்கள் பாலும் சமரச நோக்குடன் நடந்து கொள்வதேயாகும் என்று பச்சோந்தி விரிவுரை கூறப் பட்டது. இது செக்யூலரிஸம் என்பதை குழப்பமாக்கி விட்டதுடன் -_ அதன் நற்பயனில் சந்தேகம் கொள்ளவும் செய்து விட்டது.

செக்யூலரிஸம் என்றால் ஆங்கில அகராதியில் தரப்பட்டுள்ள பொருள் -_ இந்த உலகானது -_ மறுவுலக சம்பந்தமில்லாதது என்பது. இதனை ஆரிய வடமொழியில் லோகாயிதம் என்கின்றனர். தமிழ் அகராதியிலும் இதே சொல் தரப்பட்டுள்ளது. இது பொருத்தமல்ல. ஏனெனில் இந்த லோகாயிதத்தின் தொடர்ச்சியாக பர மார்த்திகம் என்பதையும் பிணைத்துள் ளனர். அதாவது லோகாயித் வாழ்க்கையை அடுத்து பரமார்த்திகத்தை அடைய வேண்டுமென்றும் கருத்து விளக்கம் செய்து, லோகாயிதம் என்ப தன் உண்மைக் கருத்தையும் நோக்கத் தையும் பாழாக்கி விட்டனர். இந்தச் சொல்லுடன் மத இயலையும் கடவுளி யலையும் பிணைத்து விட்டனர்.

உண்மை விளக்கம்

செக்யூலரிஸம் என்பதன் உண்மை விளக்கப் பொருள் என்ன? இதன் மொழித்துறை வரலாறு என்ன? என்று அறிவியல்வாதிகளும் பகுத்தறிவுவாதி களும் ஆராய்ந்து பார்க்க வேண்டியுள் ளது. பகுத்தறிவியல் என்பது அறிவைப் பயன்படுத்தி மெய்யை உணர்தல். இவ்விதம் பகுத்தறிவு கொண்டு அறிந்த மெய்மைகளை நடைமுறையில் நடத்திக் காட்டுவதே செக்யூலரிஸம் ஆகும்.

இந்த செக்யூலரிஸம் என்ற ஆங்கிலச் சொல்லை முதன் முதல் கையாண்டவர் பகுத்தறிவு மேதை ராபர்ட் இங்கர்சால் அவர்களின் அறிவியல் தோழர்களில் ஒருவரான ஜார்ஜ் ஜாகப்ஹோலியோக் என்பவர். இவரும் குழந்தை வயதில் மதத் துறையில் வளர்க்கப்பட்டவர். அறிவு விரிவடைந்ததும் இந்த மதப் புரட்டு களையும் மதமடமைக் கொள்கைகளை யும் எதிர்த்துப் புரட்சிக் கொடி தூக்கி னார். நாத்திகர் என்ற குற்றத்துக்காக 1841_42ஆம் ஆண்டு வாக்கில் இங்கி லாந்தில் சிறை வாசமும் செய்தவர்.

நடைமுறையில் பரப்பியவர்

தோழர் ஜார்ஜ்ஜாகப் ஹோலி யோக்தான் முதன் முதல் தமக்கும் தம் கோட்பாட்டினருக்கும் செக்யூலரிஸம் என்ற தனி இடு குறிப்பெயர் இட்டுக் கொண்டார். இந்தப் பகுத்தறிவு நடைமுறை இயல் கழகங்களும் லண் டனில் பல இடங்களில் தோற்றுவித்து நடத்தினார். பகுத்தறிவு இயல் பத் திரிகைகள் பலநடத்தினார். பகுத்தறிவு பத்திரிகையாளர் கழகமும் ஏற்படுத் தினார். இதற்கு முதல் தலைவரும் இவரே.

பிரிட்டிஷ் செக்யூலர் யூனியன் என்ற பேரவைத் தலைவராகவும் இவர் பல்லாண்டுகளிருந்து பணியாற்றி, கோட்பாட்டையும், கழகத்தையும் பரப்பி, வலுப்படுத்தினார்.

இந்த செக்யூலரிஸம் என்ற சொல்லுக்கு இவர்தந்த விளக்கப் பொருள் இந்த உலக வாழ்க்கை சம் பந்தமான கடமை வழிக் கோட்பாடு அமைப்பு என்பதாகும்.

இங்கர்சால் விளக்கம்

மேதை இங்கர்சால் இந்தச் சொல்லுக்குத் தந்துள்ள விளக்கப் பொருள் இந்த உலக விஷயங்களில் மனிதப் பண்பாட்டுடன் மனித அனு தாபத்துடன் நடந்து கொள்ளும் நெறி; அறியும் உணர்ச்சி கொண்டவர்களின் நலனுக்கான ஒவ்வொரு விஷயத்திலும் நடப்பிலும் கருத்துச் செலுத்துவது; அனுபவ உலக ஆய்வு அறிவு என்பதற்கு மறுபெயரும் இதுவாகும். அதாவது அவரவர்கள் புரிந்து கொண்ட முறையிலும் விருப்ப வாய்ப்புகளுக்கு ஏற்ற வகையிலும் வாழ்க்கைத் துறையை செப்பனிட்டு அமைத்துக் கொள்ளச் செய்வது இது. இங்கு இந்த உலகில் அவரவர்களுக்கான நல் வீட்டை அமைத்துக் கொள்வதில் நம்பிக்கை கொள்ளச் செய்வது இந்த செக்யூ லரிஸம்

ஒவ்வொருவர் தனி முயற்சி ஊக்கம், அறிவு, ஆற்றல், ஆராய்ச்சி அனுபவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ளச் செய்வது.

நாமறியாததும் அமானுஷியமானது மான ஏதோ ஒன்றில் (கடவுள்) நம் பிக்கை கொள்வதைத் தவிர்ப்பது இது. இந்த வாழ்க்கையில், இந்த உலகில் மகிழ்ச்சியுடன் நல்வாழ்வு அனைவரும் வாழ வேண்டுமென்பதே இதன் குறிக்கோள் என்பதாகும். இந்த பகுத்தறிவியக்க செக்யூலரிச மேதைகளின் விளக்கத்திலிருந்து இந்த செக்யூலர் -_ செக்யூலரிஸம் என்பன மத இயல், கடவுளியல் மறுப்புக் கோட்பாடு _- மதம் கடவுள் என்பதனை ஒழித்துக் கட்டுவது என்பது தெளிவுபடுகிறது.

Read more: http://viduthalai.in/page-1/85563.html#ixzz3BDqKQuz7

தமிழ் ஓவியா said...


கழுதையும் மதமும்!



மதம் மனிதனைத் தேவனாக, தெய் வமாக ஆக்குகிறதென்று பவுராணிகர் களும் பாதிரிகளும் முல்லாக்களும் ஓயாமல் கூறி வரலாம்.

மதம் என்பது மனிதனை முட்டா ளாக்குகின்றது. முட்டாள் என்பதை விட மனிதனை மிருகமாக்குகின்றது என்று பகுத்தறிவாளர்கள் கூறுவது வழக்கம் இந்தக் கூற்றே உண்மை என்பதை விளக்க நல்ல சான்று ஒன்று உள்ளது. இயேசு கிறிஸ்துவுக்கும் கழுதைக்கும் நிரம்ப தொடர்பு உண்டு.

இயேசு எகிப்துக்குப் போனது கழுதைமீது ஏறி. இதேபோல இயேசு எருசலேமுக்குத் திரும்பியதும் கழுதைமீது ஏறித்தான். இவ்வாறு இயேசுவின் தொடர்பு பெற்ற கழுதையைச் சும்மா விட்டு வைக்க மனம் வருமா பூசாரிகளுக்கு! அதற்கொரு திருவிழா உருவாக்கித் தாங்கள் தேட்டைப் போட்டுக் கொண்டார்கள்.

இந்தத் திருவிழா ஆரம்பமானது ஃபிரான்ஸ் நாட்டில். பின்னர் இந்தத் திருவிழா பக்தர்கள் மத்தியில் பிரபலம் பெற்று விட்டதால் எல்லை கடந்து ஜெர்மன் நாட்டுக்கும், கடல் கடந்து இங்கிலாந்து நாட்டுக்கும்கூட பரவி விட்டது.

கழுதைகளின் விருந்துநாள் என்றால் (Feast Of the Asses) விழுந்து விழுந்து விளக்கம் எழுதி மதச் சாயத்தை மேலும் பூசி மகிழ்ச்சி கொண் டாடினார்கள் மத வரலற்றாசிரியர்கள்.

ஆனால், இவர்களது நூல்களில் பக்கம் பக்கமாக வர்ணனைகள் அடங்கியிருந்தாலும்கூட உண்மையான நிகழ்ச்சிகள் -_ திருவிழாவின் சாரமான விஷயங்கள் இங்கே இருட்டடிக்கப் பட்டு விட்டன. கழுதைகளின் திரு விழா, எவ்வாறு கொண்டாடப்பட்டது?
நல்ல இளங்கழுதை ஒன்றைப் பிடித்து வந்து குளிப்பாட்டி அலங் கரிப்பது, அதன்மீது இளங்கன்னி ஒருத்தியை அமர வைப்பது, கழுதைக்கு முன்னும்பின்னும் அணி வகுப்புப் பாதிரியார்களும் பக்தர்களும் பிரமுகர் களும் தொடர்ந்துவர நகரத் தெருக் களில் இந்த ஊர்வலம் நடைபெறும்.

ஊர்வலம் மாதாகோயிலில் முடி வடையும். கழுதையைக் கோவிலின் உள்ளேயே அழைத்துக் கொண்டு போய் தேவாலயத்தின் பீடத்தின் அருகே பாதிரிகள் பிடித்து வைத்திருப்பார்கள்.

அன்று பிரார்த்தனை, ஜெபம் எல்லாம் கிடையாது. பாதிரியார்கள் கழுதைபோல கத்துவார்கள்; இதுதான் ஜெபம்!
ஊர்வலத்தின் போதும், ஜெபத்தின் முன்னும் பின்னும் கூட பரமண்டலங் களில் இருக்கிற பிதாவின் நாமத்தைப் பரிசுத்தப்படுத்தும் பாடல்கள் பாடப் படும்.

பாட்டு மட்டுமிருந்தால் திருவிழா வின் உச்ச கட்டம் எட்டிப் பிடிக்கப் பட்டதாகுமா? ஆட்டமும் உண்டு. கழுதையின் பெயரால் காம நடனங்கள் ஏராளம்- _ ஏராளம்!

நடனத்தின் உச்சகட்டமாக நாட கங்களும் நடத்தப் பெறும். தேவாலயத் தின் கதவருகே அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு மேடையில்தான். இந்த நாட கங்கள் நடத்தப்படும்.

கழுதையின் பெயரால் அன்று காமனுக்கு விழா! இதுகூடப் பெரி தில்லை; மனிதனைக் கழுதைப்போல கத்தவைத்த பெருமையும் அல்லவா மதத்துக்கு வந்து விடுகிறது!

Read more: http://viduthalai.in/page-1/86041.html#ixzz3BDs2vGtC

தமிழ் ஓவியா said...

அமர்நாத் குகையில் அற்புத பனிலிங்கமா?

இமயமலையில் உள்ள அமர்நாத் குகையில் ஒவ்வொரு ஆண்டும் குறிப் பிட்ட சில மாதங்களில் அற்புத சிவலிங்கம் ஒன்று தோன்றி காட்சியளிக்கிறது என்றும், பின் அது தானே மறைந்து விடுகிறது என்றும், பக்தர்கள் போற்றிப் புகழ்ந்து வருகிறார்கள். ஆண்டுதோறும் இந்த அற்புத சிவலிங்கத்தைக் கண்டு வணங்கி வழிபாடு நடத்துவதற்காக பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் அந்த இடத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்கிறார்கள். சிவனும் - பார்வதியும் வாழ்ந்த குகை அதுவென்றும், அந்தக் காலத்தில் பார்வதிதேவி வழிபாடு செய்து வந்த சிவலிங்கமே அதுவென்றும் கதைகள் புனைந்து பரப்பி வருகின்றார்கள். காஷ்மீரில் உள்ள வழிபாட்டு மய்யமான அமர்நாத்திற்கு பகல்ஹாமில் இருந்து கந்தன்வாடி வழியாக 38 கிலோமீட்டர் செல்ல வேண்டும். 12,729 அடி உயரத்தில் இந்த குகையில் இருந்து, புகழ்பெற்ற கோல்ஹாய் பனிச்சிகரம் அதிக தொலைவில் இல்லை. அமர்நாத்தில் உள்ள அந்தக் குகையில் குளிர்காலத்தின் தொடக்கத்தில் தோன்றுகின்ற ஒரு பனிக்கட்டியின் வடிவத்தைத்தான் சிவலிங்கமாகக் கருதி வழிபடுகிறார்கள். குகையின் மேல்புறத்தில் உள்ள ஒரு இடுக்கு வழியாக கசிந்து வருகின்ற தண்ணீர் துளித்துளிகளாக கீழே விழுகின்றன. பனிக் காலத்தின் கடும் குளிரில் தண்ணீர்ப் பனிக்கட்டியைத்தான் சிவலிங்கமாகக் கருதி வழிபட்டு வருகிறார்கள். நானும் ஒருமுறை பயணம் செய்து அந்தக் குகைக்குச் சென்றேன். அதைப் பார்வையிட்டேன். அப்போது அந்தப் பனிக்கட்டி லிங்கத்தை நிழற்படமும் எடுத்து வந்தேன். அந்த ஆண்டில் அப்போது நிலவிய குளிரின் தன்மைக்கேற்ப அமைந்த பனிக்கட்டியின் வடிவமே ஒளிப்படத்தில் பதிவானது.

குகைக்கு மேலேயிருந்து விழுகின்ற தண்ணீரின் அளவும், அன்றைய சூழ்நிலையில் உள்ள குளிரின் தன்மைக்கு ஏற்பவும் சிவலிங்கத்தின் வடிவம் சிறியதாகவோ, பெரியதாகவோ தோற்றம் அளிக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் சுற்றுப்புறச் சூழ்நிலை சூடாக - வெப்பமாக மாறும்போது பனிலிங்கம் உருகி இல்லாமலேயே போய்விடுகிறது. டிசம்பர், சனவரி மாதங்களில் அந்தப் பகுதி முழுவதும் பனியால் மூடப்பட்டு கிடக்கிறது. அமர்நாத் குகையில் உள்ள சிவலிங்கத்தின் அருகே ஒரு மின் வெப்பக் கருவியை (ஹீட்டர்) வைத்துப் பார்க்கட்டுமே. அப்போது தெரியும், அது கரைந்து தண்ணீராக மாறிப் போவதை. இப்படிப்பட்ட சிவலிங்கங்களை நாம் குளிர்சாதனப் பெட்டியில் (ஃபிரிஜ்)கூட உருவாக்கலாம்.

- ஜோசப் இடமருகு

குறிப்பு: 2014ஆம் ஆண்டில் அமர்நாத் சென்ற பக்தர்கள் 26 பேர் பலி!

Read more: http://viduthalai.in/page-1/86043.html#ixzz3BDsET3ht

தமிழ் ஓவியா said...



இரட்டையர்கள்

தமிழ் இலக்கியத்தின் இரட்டைக் கவிஞர்கள்,மகாகவி பாரதியார் - பரலி சு. நெல்லையப்பர். றீ உலகப் புகழ்பெற்ற ஆற்காடு இரட்டையர், டாக்டர் இராமசாமி முதலியார் - இலட்சுமணசாமி முதலியார். றீ கிலாபத் இயக்கத்தைத் தொடங்கிய இரட்டையர், முகமது அலி - மௌலானா சவுக்கத் அலி. றீ அக்பரது அவையை அலங்கரித்த இரட்டையர் அபுல்பாசல் - அபுல் பெய்சி. றீ ரோமானிய அரசை நிறுவிய இரட்டையர், ரோமுலஸ் - ரிமஸ். றீ உலகில் இரட்டைக் காப்பியங்கள், இலியத் - ஓடிசி. றீ உலகின் முதல் கிரிக்கெட் இரட்டையர், மார்க் வாக் - ஸ்டீவ் வாக். றீ சந்திரனில் 14 நாள் பகல், 14 நாள் இரவாக இருக்கும். றீ உலகின் இரட்டை இனப்பறவைகள், கேரி பஸ்டர்ட் - கிரேட் பஸ்டர்ட்.

இரட்டைச் சொற்கள்

டம் டம் (மே வங்கம்) - ஒரு சர்வதேச விமான நிலையம். றீ டம் டம் (மே.வங்கம்) - ஒரு மக்களவை தொகுதி. றீ ஜீன் ஜீன் (ராஜஸ்தான்) - ஒரு மக்களவை தொகுதி. றீ சிங் சிங் (அமெரிக்கா) - நியூயார்க் நகரில் உள்ள ஒரு சிறைச்சாலை. றீ தரன் தரன் (பஞ்சாப்) ஒரு மக்களவைத் தொகுதி. றீ சிங் சிங் - சீனத் தலைவர் மாசேதுங்கின் மனைவி. றீ டிடி காகா பெரு - பொலிவியா எல்லையில் உள்ள ஒரு முக்கிய ஏரி (83000 ச.கி.மீ).

Read more: http://viduthalai.in/page8/86413.html#ixzz3BDu7UR00

தமிழ் ஓவியா said...

ஆஸ்திரேலியா சென்றுள்ள குருப்பெயர்ச்சி?


நேசனல் ஜியோகிராபிக் என்ற அறிவியல் பத்திரி கையின் புகைப்படக்கலைஞர் அமித் காம்ளே என்ற இந் தியர் எடுத்த படம். இந்த படத்தில் பால்வெளி மண் டலம் தெளிவாகத்தெரிகிறது. நமது புவியின் தென் அட் சரேகைக்கு கீழே இருப்பதால் ஆஸ்திரேலியாப் பகுதி வான வெளியில் அழகிய பால் வெளிமண்டலத்தின் குறுக்கு வெட்டுத்தோற்றம் தான் தெரியும். நிலநடுக்கோட்டிற்கு அரு கில் உள்ள இந்திய வான வெளிபோல் விண்மீன் மண்டலங்கள் தெரியாது. ஆஸ்திரேலியா பழங்குடி யினர் இங்குள்ள வான மண்டல கற்பனை விலங்கு களை (இராசி) படைக்க வில்லை, அவர்கள் வித்தியாச மாக பால்வெளிமண்டல வெளிச்சத்தில் உள்ள எல் லைப்பகுதிகளை ஒன்றி ணைத்து கங்காரு. பிளாடிபஸ் ஈமு போன்ற உருவங்களை கற்பனையில் கண்டனர்.

ஆனால் மெத்தப்படித்து ஆஸ்திரேலியா சென்று பல்வேறு பெரிய பதவிகளில் இருக்கும் படிப்பாளிகளோ ஆஸ்திரேலியா சென்று அங்கேயும் குருப்பெயர்ச்சி விழா கொண்டாடுகிறார்கள். நமது ஊர் வானில் சில விண்மீன் குடும்பத்தில் இருந்து வேறு ஒரு குடும் பத்திற்குச் செல்லும் போது அது குருப்பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி என்று கதைவிட்டு அதில் கூடபணம் பார்ப் பார்கள், ஒரு விண்மீன் குழு மத்தில் உள்ள விண்மீன்கள் ஒவ்வோன்றிற்கும் உள்ள தொலைவு ஆயிரக்கணக்கான ஒளியாண்டுகள் ஆகும் படத்தில் கண்ட இப்படி பல ஆயிரம் ஒளியாண்டுகள் தூரம் உள்ள விண்மீன்கள் நாம் காணும் போது அருக ருகே தெரியும் சில வடிவங் களாக நாமே கற்பனை செய்துகொள்கிறோம், இதில் கோள்களுக்கும் இந்த விண்மீன் குழுமங்களுக்கும் முற்றிலும் தொடர்பில்லை. இது பற்றி படித்திருந்தும், வானில் விண்மீன் குழுமமே தெரியாத ஒரு நாட்டிற்கு சென்று அங்கேயும் போய் நான் குருப்பெயர்ச்சி பூசை செய்வேன், சனிப்பெயர்ச்சி பூசை செய்வேன் என்று சொன்னால் அவர்கள் படிப் பிற்கு மரியாதை தருகிறார் களா? அல்லது அவர்களின் படிப்புத்திறமையை மாத்திரம் கொண்டு அவர்களை பணிக்கு அழைத்த ஆஸ்திரேலிய நிறு வனங்களை கேலி செய் கிறார்களா? முழுமையான் சிந்தனை செலுத்தி படித்தவர்கள் இல் லாத மூடநம்பிக்கையை தூக்கிக் கொண்டு சுமக்கமாட்டார்கள்.

Read more: http://viduthalai.in/page3/86398.html#ixzz3BDupsuYh

தமிழ் ஓவியா said...


நூல் - சிகை - யறுத்தல் - நன்றே!


குடுமி வைத்துப் பூணூல் மாட்டிக் கொண்டதனால் மட்டும் ஒருவன் பிரா மணனாகான்.
நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ? நூலது வேதாந்தம்:

நுண்சிகை ஞானமாம்

குடுமி, மயிர்; பூணூல், பருத்தி மயிரும் பருத்தியுமே இறையறிவிற்கு இலக்கண மாகுமா? ஆகா ஒழுக்கமில்லா வேடம் போலித்தனமாகும். வாழும் வேதாந்தத்தால் அவாவறுத்தலே பூணூலாகும். கடவுள றிவே சிகையாகும். நெஞ்சில் மடமையிருள் குடி கொண்டு சிகை வைத்துப் பூணூலும் போட்டு நான் பிராமணன் என்று பொய்வேடம் பூணுவோரால் நாடு கெடும், புவிவளம் குறையும். பெரு வாழ்வும், அரசும் பெருமையிழக்கும். ஆதலால் அந்த ஆடம்பரப் போலிகளின் பூணூலை யும், சிகையையும் அரசன் அறுத்தெறிதல் நன்றாகும்; ஞான நூல் பூண்டு அந்தண் ஞானிகள் எனவும் நடித்து உலகை ஏமாற்றுவர். அரசன் மெய்ஞ்ஞானிகளைக் கொண்டு அவர்களைச் சோதித்து; ஞான முண்டாக்கி நல்வழிப்படுத்த வேண்டும். அதுவே நாட்டிற்கு நலமாகும். (பக்கம் 100)

ஞான மிலாதார் சடை சிகை நூல் நண்ணி
ஞானிகள் போல நடிக்கின்றவர் தம்மை

ஞானிகளாலே நரபதி சோதித்து ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டிற்கே

நூல்: திருமந்திர விளக்கம் (முதற்பாகம்) கழக வெளியீடு

Read more: http://viduthalai.in/page3/86399.html#ixzz3BDuxrLNH

தமிழ் ஓவியா said...

மதத்தின் வேர்கள்

மதச் சடங்குகள் உலகெங்கும் ஊதாரித்தனத்துடன் செய்யப்படுகின்றன; அவற்றால் காலமும், பொருளும் விரயமாகின்றன; அவை வலியையும், வறுமையையும் உண்டாக்குகின்றன. (இவற்றைக் காணும்) ஒரு பரிணாம வளர்ச்சி உளவியலாளருக்கு, மதம் (சூழலுக்குத் தக்க தன்னைச்) சரிப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கலாம் என, மண்ட்ரில் குரங்கின் அடிப்பகுதியைப் போன்று தெளிவாகத் தெரிகிறது.

- மரேக்கோன்
(ரிச்சர்டு டாகின்ஸ் எழுதியுள்ள கடவுள் ஒரு பொய் - நம்பிக்கை என்ற நூலிலிருந்து)

Read more: http://viduthalai.in/page4/86401.html#ixzz3BDvSEWDD

தமிழ் ஓவியா said...


உனக்கு மற்றவர்கள்


உனக்கு மற்றவர்கள் எதைச் செய் யக்கூடாதென்று எதிர்பார்க் கிறாயோ, அதை நீ மற்றவர் களுக்குச் செய்யாதே! - டால்ஸ்டாய்

நேர்மை என்பது, செய்யும் செயலைப் பொறுத்தது. உண்மை யைப் பேசி உண்மையாக நடப்பது மட்டுமே நேர்மை ஆகாது! -சாக்ரடீஸ்

பொறுமையாக இருப்பது அவ்வளவு எளிதல்ல; ஆனால் அதன் விளைவோ பெரிது; இனிமையும் நன்மையும் பயக்கும். - ரூஸோ

உண்மை எதுவெனக் கண்டுபிடிப் பதைவிடச் சிறந்தது உலகில் வேறொன்றும் இல்லை. உண்மை தான் நிலைத்து நிற்கும். - இங்கர்சால்

உழைப்பே மூலதனம்; உழைப்பின்றி மூலதனம் இயங்க முடியாது! -கார்ல் மார்க்ஸ்


Read more: http://viduthalai.in/page5/86404.html#ixzz3BDw5IxUe

தமிழ் ஓவியா said...

எழுத்தாளர் பாலகுமாரனுக்கு ஒரு திறந்த மடல்


திரு. பாலகுமாரன்,
எழுத்தாளர்
18/4 வாரன் ரோடு,
மைலாப்பூர், சென்னை -_ 600 004
அய்யா,

வணக்கம், கடல் கடந்து வெற்றிக் கொடி நாட்டிய ராஜேந்திர சோழனின் புகழைப் பரப்ப, தாங்கள் எடுத்து வந்துள்ள முயற்சிகள், இன்றைய தமிழ் ஆர்வலர்கள் எழுச்சி பெரும் வகையில் உள்ளன. அத்துடன் 24.07.2014 நாளிட்ட மாலைமுரசு இதழில் (சேலம் பதிப்பு) தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கை, வரலாற்றை திரும்பிப் பார்த்து, பெருமைப்பட வைக்கின்றது என்பதுடன், பலரின் சிந்தனையையும் பல கோணங்களில் எழுப்பியுள்ளது. குறிப்பாக பரம்பரை பரம்பரையாக பூணூல் அணிந்தும், திருமணங்களில் புரோகிதம் செய்தும் கோவில்களில் பூசை செய்தும் வாழும் அய்ந்தொழில் செய்யும் கம்மாளர்களை பெரிதும் பாதித்துள்ளது.

2) ஆயிரத்தெட்டு அந்தணர்களுக்கு நல்ல விளைநிலங்களைப் பிரித்து கொடுத்து, வேதபாடசாலை நடத் துங்கள். சிறப்பாக கோவில் பூஜை நடத்துங்கள், மக்கள் நன்றாக வாழ வழிகாட்டுங்கள். சோழ தேசத்தின் வளம் பொருட்டு, மந்திர ஜெபங்களை செய்து, எங்களை ஒருமைப்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டு, தானம் வழங்குகிறார் என்று சதுர்வேதி மங்கலங்கள், தேவதானங்கள் ஏற்பட்ட வரலாற்றின் பின்னணியை விளக்கி உள்ளீர்கள்! உண்மையில் ஒருமைப் பாட்டை ஏற்படுத்தினார்களா? என்ற வினாவிற்கு விடையளிக்கும் வகையில், கம்மாளர்களுக்கு பல்வேறு உரிமை களை வழங்கியதைக் குறிப்பிடும் போது, அதுவரை அவர்கள் எந்த மதிப்பும் இல்லாமல் வாழ்ந்தார்கள். எனக்கு உதவி செய்கின்ற நீ, உயர்குடி பிறப்பு, அந்தணர்களுக்கு இணை என்றும், அவர்கள் பூணூல் அணிந்து கொள்ள உரிமை கொடுத்தான் என்றும் சொல்லி, ஆனால், தயவு செய்து பூணூல் அணிந்து கொள்ளும் சடங்குகளை அவர்கள் செய்ய வேண்டாம் என்று அந்தணர்கள் கேட்டுக் கொள்ள, அவ்விதமே வாக்களித்தார் என்றும் தாங்கள் எழுதியுள்ளீர்கள்.

3) மொத்தத்தில், கம்மாளர்கள் உயர் குடிப் பிறப்பு என்றும் அந்தணர்களுக்கு இணை என்றும் அறிவித்த ராஜேந்திர சோழன், அந்தணர்களின் கோரிக்கையை ஏற்று கம்மாளர்கள் பூணூல் அணிந்து கொள்ளும் சடங்குகளைச் செய்து கொள்வதைத் தடை செய்துள்ளான் என்பதே வெளிப்படுகின்றது. அத்துடன், அதுவரை எந்த மதிப்பும் இல்லாமல் வாழ்ந்தனர் என்ற தங்களின் குறிப்புரை, இன்று கம்மாளர்கள் பலரிடையே பதற்றத்தை எழுப்பியுள்ளது. தங்களின் கருத்துரைகளை, தாங்கள் சொல்லிக் கேட்டுள்ளதாகக் குறிப்பிட்டு 30.07.2014 நாளிட்ட ஆனந்தவிகடன் இதழில், தமிழ்மகன் எழுதியுள்ள கட்டுரையில், அந்தணர்கள் கோரிக்கை பற்றிக் குறிப்பிடாமல் கம்மாளர்கள் பூணூல் அணிந்து கொள்ளவும் உரிமை கொடுத்திருக்கின்றான் என்று குறிப்பிட்டுள்ளார்!

4) எங்களுக்குக் கிடைத்துள்ள வர லாற்றுக் குறிப்புகளின் அடிப்படையில்
மண்டல் குழு அறிக்கைபற்றி உச்ச நீதிமன்றம் 1992இல் வழங்கிய தீர்ப்பு
மனுதர்ம சாஸ்திரம் பற்றிய குறிப் புகள்
விஸ்வகர்மா பிரணவ மந்திரத்தை உச்சரித்த பின்னர் பிரபஞ்சம் பிறந்தது என சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்கள் கருத்து.

தமிழ் ஓவியா said...

கம்மாளர்களே ஜகத்குரு என்ற வின்ஸ்லோ (1852) அகராதி.
மிகவும் கட்டுப்பாடான சமுதாயம் என்ற எட்கர் தர்ஸ்டனின் குறிப்பு

பூணூல் அணிவதையும் புரோகிதங் களையும் அவர்களே செய்து கொள்கின் றனர் என்று 1807இல் எழுதியுள்ள ஆபி டியுபேயின் வரலாற்றுக் குறிப்புகள்

திருமணங்களில் புரோகிதம் செய்து கொள்ள கம்மாளர்களுக்கு பாரம்பரிய உரிமை உள்ளது என சித்தூர் மார்க சகாய ஆச்சாரி 1818ல் பெற்ற தீர்ப்பு.

சிவன் கோயிலில் கருவறைக்குள் சென்று பூசை செய்து கொள்ளும் பாரம் பரிய உரிமையை நிலை நாட்டி, 1894இல் பெறப்பட்ட மசூலிப்பட்டணத் தீர்ப்பு.

இதற்கிடையில் 1846ல் நம்பூர் கிருஷ்ணமாச்சாரி குழப்பம் ஏற்படுத்திய தீர்ப்பு. அத்தனைச் சான்றுகளையும் தொகுத்து, தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், 2012ல் வெளியிட்டுள்ள ஆங்கிலப் புத்தகம் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன் பழைய நாட்களில் விஸ்வகர்ம மடாதி பதி, ரிக்வேதம், யஜுர்வேதம், ஸ்கந்த புராணம், பிர்ம்மாண்ட புராணம் ஆகியவை விஸ்வகர்மா பற்றி சொல்லி யுள்ளவைகளை தொகுத்துள்ள வெளியீடு, 4.8.2002 நாளிட்ட வாரந்திர ராணி பத்திரிகை வெளியிட்ட செய் திக்கு, நாங்கள் அளித்துள்ள விவரமான பதில் ஆகியவற்றை இத்துடன் இணைத்துள்ளேன்.

5) இத்தனை கெடுபிடிகளையும் சமாளித்து, கம்மாளர்கள் ராஜேந்திர சோழனின் காலத்திற்கு முன்பிருந்து இன்று வரை, தங்களின் தனித் தன் மையைப் பேணி வருவதுடன், புரோ கிதம் செய்வது, பூணூல் அணிந்து கொள்வது, கோவில்களில் பூசை செய்வது ஆகிய சடங்குகளை, வேத சாஸ்திரங்களின் அடிப்படையில் செய்து வருகின்றனர் என்பதையும், ஆன்மீக ஆர்வலர்கள் விஸ்வகர்ம புரோகிதர்களின் மாநாட்டைக் கூட்டவும் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அன்புடன்
- ந. சேதுராமசாமி

குறிப்பு: இந்தக் கடிதத்தில் கண் டுள்ளவை தோழர் ந. சேதுராமசாமி அவர்களின் கருத்தே!

Read more: http://viduthalai.in/page7/86407.html#ixzz3BDwfxR8V

தமிழ் ஓவியா said...


ஆராய்ச்சி விளக்கம்! (ஈ.வெ.ரா.)


ஏழை என்பவன் யார்? : தனது சரீரத்தால் வேலை செய்து அதன் கூலியினால் மாத்திரமே ஜீவனம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திலுள்ளவன். இக்கூட்டத்தார் களுக்குத்தான் பார்ப்பன மதப்படி சூத்திரர்கள் என்கின்ற பெயர்.

முதலாளிகள் என்பவர்கள் யார்? : சரீரத்தினால் வேலை செய்யும் ஆள்களை வைத்து வேலைகளை வாங்கி, வேலை செய்தவர்களுக்கு ஒரு அளவுக்குள்பட்ட ஜீவனத்துக்கு மாத்திரம் போதுமான கூலி கொடுத்துவிட்டு அவ்வேலையின் மற்ற எல்லாப் பயன்களையும் எல்லையின்றி அனுபவிப்பவர்கள்.

குடியானவர்கள் என்பவர்கள் யார்? : பூமியைத் தானே உழுது தானே பயிர் செய்து தன் குடும்பம் முழுவதும் அதில் ஈடுபட்டு அதன் பயனை அனுபவிப்பவர்கள்.

மிராசுதாரர்கள் என்பவர்கள் யார்? : தாங்களே நேரில் விவசாயத் தொழிலில் ஈடுபடாமல் ஆள்களை வைத்து பயிர் செய்கிறவர்களும், மற்றவர்களுக்கு குத்தகைக்கோ, வாரத்துக்கோ விட்டு லாபத்தை மாத்திரம் அடைபவர்களான (பூமியை உடைய)வர்கள்.

- குடிஅரசு - கட்டுரை - 10.01.1948

Read more: http://viduthalai.in/page7/86409.html#ixzz3BDwtutD1

தமிழ் ஓவியா said...


இந்திய அரசில் இராமன் கட்டளை!

இராவணனை எதிர்த்து வெற்றி அடையாதவன் இராமன்.

சுக்ரீவன் அனுமன், வீடணன் என்னும் மூவரின் துணையைக் கொண்டே இராமன் இராவணனைத் தோற்கடித்தான்.

தான் வெற்றி அடைவதற்குத் துணை செய்த வீடணனிற்கு இராமன் முடிசூட்டி இலங்கை ஆட்சியினைத் தந்தான்.

இராமன் வீடணனிற்கு முடிசூட்டிய கையோடு நான்கு கட்டளைகளை இட்டான்.
கட்டளை 01: தமிழ்நாட்டில் தமிழ் இனத்திற்கு உள்ளதுபோல எல்லா உரிமையும் எங்களுக்குத் (ஆரியப் பார்ப்பனர்) தர வேண்டும்.
கட்டளை 02: தமிழர்கள் எங்களை எதிர்க்காமல் தடுக்க வேண்டும்.
கட்டளை 03: தமிழ்நாட்டில் எங்கள் தாய்மொழியான சமற்கிருதத்தை எங்கள் இனத்தவர் பேசவும், பயிலவும் உரிமை தர வேண்டும்.

கட்டளை 04:

தமிழ்நாட்டுக் குறுநில மன்னர்கள் எங்கள் மேல் படை எடுக்காதிருப்பதற்குத் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

எங்களை எதிர்த்து ஒழிக்க நினைப்பவரை (இராவணன்) எதிர்த்து ஒழிக்கவே தமிழ்நாட்டிற்கு வந்தேன்.

இராமனின் இந்த வாய்மொழிக் கட்டளையை இராமன் காவியத்தில் இடம் பெற்றிருக்கும் ஒப்பந்தப் படலத்தில் உள்ள 15 முதல் 19 வரையிலான பாட்டுக்களின் வாயிலாய்ப் புலவர் குழந்தை அவர்கள் நமக்குப் பதிவு செய்து அளித்திருக்கிறார்.

தொடர்ந்து, தொடர்ந்து வரும் சமற்கிருத ஏற்பாடு: வட ஆரிய இராமனின் திட்டம் அல்லவா?
றீ ஈரோட்டுப் பெரியார் வழியில் புலவர் குழந்தை இராமாயணத்தை எதிர்த்துப் பாடிய இராவண காவியம் தரும் தொலைநோக்கு ஆழம்தான் என்னே!
புலவர் குறளன்பன், கோவை

Read more: http://viduthalai.in/page6/86406.html#ixzz3BDxEDCtQ

தமிழ் ஓவியா said...

இதே தியாகராயர் நகரில்தான்!

சென்னை மாநகரம் அதிலும் தியாகராய நகர் என்றபோது மூன்று மறக்க முடியாத நிகழ்வுகள்.

1) தந்தை பெரியார் இறுதியாக உரையாற்றியது தியாகராயர் நகரில்தான்.

2) அறிஞர் அண்ணா இறுதியாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது தியாகராயர் நகரில்தான் (வாணிமகால் அருகில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை திறப்பு).

3) புரட்சிக் கவிஞர் கடைசியாக இருந்து முடிவு எய்தி யதும் இதே தியாகராயர் நகரில்தான் (ராமன் தெரு).

Read more: http://viduthalai.in/e-paper/86368.html#ixzz3BDxV7Tcn

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மலர் வேண்டாம் மனம் போதும்!

சிவபெருமானுக்கு பூஜை செய்ய புன்னை, வெள்ளெருக்கு, செண் பகம், நந்தியாவட்டை, நீலோத்பவம், பாதிரி, அரளி, செந்தாமரை ஆகிய எட்டு வகையான மலர்களைப் பயன்படுத் தலாம். இம்மலர்கள் அஷ்ட புஷ்பங்கள் எனப்படு கின்றன. இவற்றில் சில இப்போது கிடைப்ப தில்லை. இம்மலர்களை படைத்து மட்டும்தான் சிவனை வழிபட வேண்டு மென்பதில்லை. நமசி வாய என அவர் திருநாமத்தை உச்சரித்து, மனம் என்னும் பூவால் வழி பட்டாலே போதும். மலர்களால் அர்ச்சித்து வணங்கிய பலன் கிடைத்து விடுமாம்!

இதைப் போல கோயி லுக்குச் செல்லாமல் வீணா கப் பணத்தை எதையும் செலவு செய்யாமல், உள்ளமே கோயில் என்று கருதி வீட்டில் இருந்த படியே மனதளவில் சிவனை வழிபட்டால் போதும் என்ற முடிவுக்கு வர வேண்டியதுதானே - கோயில்களையும் இழுத்து மூடிவிடலாம் அல்லவா!

Read more: http://viduthalai.in/e-paper/86360.html#ixzz3BDxdVC1r

தமிழ் ஓவியா said...


கோவாவில் சிறீராம் சேனைக்கு தடை


பனாஜி, ஆக. 23_ கோவா மாநிலத்தில் சர்ச்சைக்குரிய இந்து அமைப்பான சிறீ ராம் சேனைக்கு தடை விதிக்கும் அரசின் முடிவினை கோவா மாநில கத்தோலிக்க சிறுபான்மை முன்னணி வரவேற்றுள்ளது. இதுபற்றி அந்த அமைப்பின் கன்வீனர் பெர்னாபே செபிகோ கூறியதாவது:- அமைதியான கோவா மாநிலத்தில் சிறீ ராம் சேனையின் தலைவர் பிரமோத் முத்தாலிக் தனது இயக்கத்தை ஆரம்பித்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடையும் என்று காவல்துறையும் குறிப்பிட்டுள்ளது. இந்துக்களின் காவலன் என்று தன்னை பிரபலப்படுத்துவதற்காக கோவாவில் அவர் சர்ச்சையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் முத்தாலிக் தனது அமைப்பை தொடங்குவதற்கு மதங்களைக் கடந்து அனைத்து மக்களும் எதிர்க்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். சிறீராம் சேனா பற்றி காவல்துறை எதிர்மறையான அறிக்கை அளித்ததால் அதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக முதல்வர் மனோகர் பாரிக்கர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/e-paper/86365.html#ixzz3BE0hWd2V

தமிழ் ஓவியா said...

தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் மட்டும் ஒற்றுமையா?

மத்தியில் பிஜேபி ஆட்சி வந்தவுடன் பார்த்தீர்களா? இலங்கை தீவில் சிறை வைக்கப்பட்டிருந்த அத்தனைத் தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதானே காரணம் என்று மார் தட்டுகின்றனர்.

விவாதத்துக்காகவே ஒத்துக் கொள்வோம். இனி தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்யாது என்று உத்தரவாதம் கொடுக்க முடியுமா? என்பது முக்கிய கேள்வியாகும்.

தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப் பட்டு விட்டனர் என்று செய்தி வெளி வரும் நாளன்றே ... ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை எக்காரணம் கொண்டும் திருப்பிக் கொடுக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர் அழுத்தந் திருத்தமாகக் கூறியிருப்பதும் இப்பொழுதுதான்.

இதில் இன்னும் குறிப்பிடத்தக்க மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் ஜெகதாப்பட்டின மீனவர்கள் கச்சத் தீவுப் பகுதிக்குச் சென்று மீன் பிடிக்கவில்லை. இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது!

தமிழக மீனவர்கள் தங்கள் எல்லைகளைத் தாண்டி மீன்பிடிக்கிறார்கள் - அதனால்தான் இலங்கைக்கடற்படை கைது செய்கிறது என்று கிளிப் பிள்ளைப் பாடம் படிக்கிறார்களே - ஜெகதாப்பட்டினத் தமிழக மீனவர்கள் இந்திய எல்லைக்குள்ளேயே தாக்கப்பட்டுள் ளனரே, தாக்கப்பட்டவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாரே - இதற்கு என்ன சமாதானத்தைச் சொல்லுகிறது இந்திய அரசு?

இதுபோன்ற நேரங்களில் அமைதி காப்பதுதான் இந்திய அரசின் அரசத் தந்திரமாக இருந்து வந்திருக் கிறது.

இப்படி இந்திய அரசு நடந்து கொள்ளுமேயானால் இந்திய அரசின்மீது தமிழக மீனவர்களுக்கு எப்படி நம்பகத் தன்மை ஏற்படும்?

இந்திய எல்லைக்குள் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டனர் என்று சொல்லும்பொழுது இன்னொரு உண்மையும் அதில் பதுங்கி இருக்கிறது. இலங்கைக் கடற்படையோ அல்லது இலங்கை சிங்கள மீனவர்களோ இலங்கையின் எல்லை தாண்டி இந்திய எல்லைக்குள் வந்துதானே தாக்குதலைத் தொடுத் திருக்க முடியும்? அப்படி இந்திய எல்லைக்குள் வந்த சிங்களவர்களை இந்தியக் கடற்படை ஏன் கைது செய்யவில்லை என்பது நியாயமான கேள்வியா இல்லையா?

உலகம் முழுவதும் கடலில் மீன்பிடிக்கிறார்களே அங்கெல்லாம் இந்த எல்லைப் பிரச்சினையோ, மீனவர்களைத் தாக்கும் நிலையோ, சிறைபிடிக்கும் வழமையோ இல்லாதிருக்கும்போது, இந்தியத் தரப்பினில் மட்டும் மாறான நிலை தவறான அணுகு முறை இருப்பது சரியா? இதற்கு ஏதாவது காரணம் இருந்தால் அதனையாவது வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டியதுதானே!

ஒன்று மட்டும் புரிகிறது, இதற்கு முன் ஆட்சியதி காரத்தில் இருந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் சரி, தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் சரி ஈழத் தமிழர்கள் பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராகவே நடந்து கொள்வது ஏன்? இதில் என்ன அப்படியொரு ஒற்றுமை? மற்ற மற்ற பிரச்சினைகளில் எல்லாம் ஒருவரைப் பார்த்து இன்னொருவர் முண்டா தட்டும் நிலையில் ஈழத் தமிழர்கள் - தமிழக மீனவர்கள் பிரச்சினைகளில் மட்டும் நாங்கள் புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க! என்று ஆடுவது ஏன்?

இப்படியொரு சூழலில் பிரதமர் நரேந்திர மோடியும் பிஜேபியின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷாவும் தனித்தனியாக தமிழ்நாட்டில் கட்சியை வளர்க்க பிரச்சாரத்திற்கு வருகிறார்களாமே, வரட்டும் - நன்றாகவே வரட்டும் அப்பொழுதாவது தமிழ்நாட்டு மக்களின் இன உணர்வையும், மதவாத எதிர்ப்புணர் வையும் எளிதாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிட்டும்!

தமிழ்நாட்டில் உள்ள சில ஏடுகள் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்! என்ற தன்மைக்கு ஏற்ப நடந்து கொள்வதை வைத்து தமிழ் மண்ணைத் தப்புக் கணக்குப் போட வேண்டாம்!

Read more: http://viduthalai.in/page-2/86353.html#ixzz3BE0sg0WK

தமிழ் ஓவியா said...

நீலாவதி - ராமசுப்ரமணியம் திருமண அழைப்பு

அய்யா:- குடிஅரசு, திராவிடன், குமரன் பத்திரிகைகளுக்கு வியாசம் எழுதிவரும் மதிநிறைச் செல்வி திருச்சி

நீலாவதிக்கும்

மதிநிறைச் செல்வன் கொத்தமங்கலம்

ராம சுப்ரமணியத்திற்கும்

பிரமோ தூத வருஷம் புரட்டாசி மாதம் 19 ஆம் (5. 10. 30) தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு திருச்சியில், தென்னூர் ரோட் 4 நெம்பர் இல்லத்தில் திருமணம் நடத்த ஏற்பாடாகி இருக்கிறபடியால், அதுபோது தாங்கள் தயவுசெய்து தங்கள் வாழ்க்கைத் துணையுடன் எழுந்தருளி சாட்சியளிக்க விழைகின்றோம்.

ஈரோடு ஈ. வெ. ராமசாமி
01. 10. 1930 ஈ. வெ. ரா. நாகம்மாள்
குடிஅரசு, 05.10.1930

Read more: http://viduthalai.in/page-7/86385.html#ixzz3BE1xrqEg

தமிழ் ஓவியா said...

மந்திரிகள்

அக்டோபர் மாதம் 23 தேதி வரை இப்போதைய மந்திரிகளே ஆட்சி நடத்துவார்கள். பிறகு டாக்டர் சுப்பராயன் அவர்களே மந்திரிசபை அமைத்தாலும் அமைக்கக்கூடும். அல்லது ஜஸ்டிஸ் கட்சியார் என்பவர்கள் சார்பாக என்று திரு. பி.முனுசாமி நாயுடு அவர்கள் அமைத்தாலும் அமைக்கக் கூடும்.

யார் யார் தலையில் பிரம்மா நீ மந்திரியாய் இரு என்று எழுதியிருக்கிறாரோ என்பது இப்போது தெரியவில்லை. ஆனால் நியமனம் ஆனவுடன் தெரிந்துவிடும், அதோடு நியமனமான பிறகு மத்தியில் ஒரு சமயம் அது போய் விடுவதாயிருந்தாலும் அதுவும் பிரம்மா எழுதின சங்கதி உத்தியோகம் போன பிறகுதான் தெரியும்.

எனவே பிரம்மா இந்த விஷயங்களை இவ்வளவு இரகசியமாய் யாரும் அறிய முடியாமல் எழுதி வைத்திருப்பதிலிருந்து, இரகசியத்தைக் காப்பாற்றுவதில் பிரம்மாவானவர் நமது கவர்னர் பிரபுவை விட கெட்டிக்காரர் என்றுதான் சொல்ல வேண்டும்!

இது ஒரு புறமிருக்க, நியமனமாகும் மந்திரிகளும் எதிர்பார்க்கும் நபர்களும் கூட தாங்கள் நியமனமான பிறகுதான் தங்களுக்கு இல்லை என்று முடிந்த பிறகும்தான் கவர்னரையும் பிரம்மாவையும் போற்றவோ, தூற்றவோ போகிறார்கள்.

இந்த மாதிரி மந்திரிகள் நியமனமாவது ஏமாற்றமடைவதும், வெறும் மந்திரி உத்தியோகத்திற்கு வருகிறவர் களுடையவும், ஏமாற்றமடைகிறவர்களுடையவும் தலை யெழுத்துக்களை மாத்திரம் பொறுத்ததாய் இல்லாமல் இவர்கள் வரவேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களுடையவும் வரக்கூடாது என்று எதிர்பார்ப்பவர்களுடையவும், இவர்களால் பிழைக்கலாம், இவர்களால் கெட்டுப் போகக்கூடும் என்று கருதிக் கொண்டிருப்பவர்களுடை யவும் தலையெழுத்துக்களையும் பொறுத் திருப்பதால் இந்த தலையெழுத்துக்கள் எப்போதும் பலருக்கு மிக்க குழப்பத்தையே தந்து கொண்டே வருகின்றன.

- குடிஅரசு - துணைத்தலையங்கம், 05.10.1930

Read more: http://viduthalai.in/page-7/86384.html#ixzz3BE2WQxaB

தமிழ் ஓவியா said...


வைசிராய் பிரபுக்கு வேண்டுகோள்


லாகூரிலுள்ள ஜட்பட் ரோரக் மண்டலமென்னும் சங்க மானது இந்து சமூகத்தில் காணப்படும் ஜாதி வித்தியாச மென்னும் உயர்வு, தாழ்வை ஒழிக்க மிகவும் பாடுபட்டு வருகின்றது. அடுத்த சென்சஸின் போது (ஜனத் தொகைக் கணக்கு கொடுக்கும் போது) இந்துக்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகாதென்பது அதன் கொள்கை.

ஆகவே அச்சங்க நிர்வாகிகள், இந்திய சென்சஸ் கமிஷனரைக் கண்டு தங்கள் தங்கள் ஜாதியைக் குறிப்பிட விரும்பாதவர்களை ஜாதியைக் கூறும்படி வற்புறுத்தலாகா தெனக் கேட்டுக் கொண்டதற்கு அவர் வைசிராயிடம் அறிவித்துக்கொள்ளும்படி சொன்னதால் மேற்படி சங்கத்தார் வைசிராய்க்குச் செய்து கொண்ட விண்ணப்பத்தின் சாராம்சமாவது:- பற்பல மாகாணங்களிலுமுள்ள இந்து சமூகத்தினரில் பலர் இந்து மதத்துக்கு ஜாதி வித்தியாசம் அவசியமில்லை யென்றும் அத்தகைய வித்தியாசத்தால் தான் உயர்வு தாழ்வு ஏற்பட்டு இந்து சமயத்தினர் முன்னேற்றமடைய முடியாமல் போய்விட்ட தென்றும் உணர்ந்திருக்கின்றனர்.

இத்தகைய ஜாதி வித்தியாசம் பண்டைக் காலத்தில் அவசியமாயிருந்த போதிலும் இன்றுள்ள நிலைமையில் அம்முறை தீமையே தரத்தக்கதாக இருக்கின்றது. அரசியல், சமூக விஷயங்களில் இப்போது தோன்றி யிருக்கும் புத்துணர்ச்சியால், பழைய காலத்தில் தோற்று விக்கப்பட்ட சில ஆதாரங்கள் இப்போது அவசியமில்லை யென்றும், அவற்றால் தற்காலம் கஷ்டங்களே ஏற்படுகின்றன வென்றும் பலர் நம்புகின்றனர்.

ஆதலின் அடுத்த சென்சசில் தங்கள் ஜாதியைக் குறிப்பிடலாகாதென்பது பலருடைய ஆவல். ஆதலின் தாங்கள் அப்படிப்பட்டவர்களை ஜாதியைக் கூறும்படி வற்புறுத்தலாகாதென அவ்விலாகா அதிகாரிகளுக்கு உத்திரவிடும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். இத்தகைய அனுமதி முன்னரே சீக்கியர்களுக்கும், பாஞ்சாலத்திலுள்ள ஆதி இந்துக்களுக்கும் அளித்திருப்பதால் மற்ற இந்துக்களுக்கும் இந்த அனுமதி குற்றமாகாது.

ஜாதி என்று கேட்டிருக்கும் இடத்தில் ஒன்றுமில்லை என்று குறிப்பிட்டு விடுவதும் தவறாகாது. ஆதலின் தாங்கள் சென்சஸ் எடுக்கும் அதிகாரிகள், அல்லது குமாஸ்தாக்கள் ஜாதியைக் கூறும்படி கட்டாயப் படுத்தலாகாதென்றும், ஜனங்கள் சொல்லாமலிருக்கும் போது அவர்களாகத் தங்களுக்குத் தோன்றியதைப் பதிவு செய்யாமலிருக்க வேண்டுமென்றும் கட்டளை பிறப்பித்து இந்து சமுகத்தின் முன்னேற்றத்துக்கு அடிகோலுவீர் களென்று எதிர் பார்க்கிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 28.09.1930

Read more: http://viduthalai.in/page-7/86373.html#ixzz3BE2cSkEy

தமிழ் ஓவியா said...

சீனாவில் மதக் குழுவினர் ஆயிரம்பேர் கைது


பீஜிங், ஆக.23- சீனாவில் தடைசெய்யப்பட்ட மதக் குழுவைச் சார்ந்தவர்கள் சுமார் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
ஷான்டாங் மாகாணத்தில் கடந்த மே மாதத்தில் மெக்டொனால்ட் அருகே குவானெங்ஷென் பிரிவினரின் கோயிலுக்குள்ளேயே பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்துள்ளனர். சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்தக் குற்றச்செயலில் 500 பேருக்கு தொடர்புள்ளதாக சந்தேகித் துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலைக் கானக் காரணங்கள் வெளியிடப்படவில்லை.

முதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள்மீது சந்தேகத்தை வெளிப்படுத்தும்போது, அவர்களில் உயர்ந்த நிலையில் இருக்கும் அமைப்பாளர்கள், முதுகெலும்பாக உள்ள உறுப்பினர்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதப்பிரிவு முதலில் மத்திய ஹெனான் மாகாணப் பகுதியிலிருந்து தோன்றி உள்ளது. அவர்கள் நம்பிக்கை யின்படி இயேசு புத்துயிர் பெற்று யாங் ஜியாங்பின் என்பவர் வடிவில் உள்ளதாகவும், அவரே இந்த புதிய மதத்தின் நிறுவனரின் மனைவி என்றும், சாவோ வெய் ஷான், சிங்குவா கூறுகிறார்.

சாவோ என்று கூறப்படுப வரான சு வென்ஷான் 2000ஆம் ஆண்டில் அமெரிக் காவுக்கு சென்றுவிட்டார். அந்த வழிபாட்டிடத்திலிருந்த 5 உறுப்பினர்கள் முன்ன தாக கைது செய்யப்பட்டனர். திட்டமிட்டு கொலை செய் யும் எண்ணத்துடன் இருந்துள்ளதாக அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெக்டொனால்ட் அருகில் பெண்ணை அடித்தே கொன்றுள்ளனர். காரணம் என்னவென்றால், அவர் கைப்பேசி எண்ணைக் கொடுக்க மறுத்துள்ளார் என்பது தான் காரணம். கைப்பேசி எண்ணைப் பெற்று அதன் மூலம் புதிய உறுப்பினர்களை அந்த மதத்தில் இணைப் பதற்காக அதன் தலைவர்கள் அதை ஒரு இயக்கமாகவே தொடர்ந்து செயல்படுத்தி வந்துள்ளனராம்.

Read more: http://viduthalai.in/page-8/86346.html#ixzz3BE3L7jzB

தமிழ் ஓவியா said...


சங்கராச்சாரி-யார்?

ஜெகத்குரு என்று சங்கராச்சாரியாரைக் கூறுகிறார்களே! உண்மையில் சங் கராச்சாரியார் ஜெகத்துக்கே (உலகத்துக்கே) குருவா? முதலில் உள்ளூரில் இவரை அனைவரும் குருவாக ஏற் றுக் கொள்வார்களா? இந்து மதத்தில்தானாகட்டும் வை ணவர்கள் இவரைக் குரு வாக ஒப்புக்கொள்வார்களா?

உண்மை இவ்வாறு இருக்க, இவரை லோகக் குரு என்றும், ஜெகத்குரு என்றும் ஜெய பேரிகை கொட்டுவதில் மட்டும் குறைச்சலில்லை.

சங்கராச்சாரியார்களி லேயே மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யைத் தூக்கி வைத்துப் பேசுவார்கள்; புனிதர் என்று போற்றுவார்கள்.

உண்மை என்னவென் றால், துவேஷத்தில் தும் பிக்கை யானையைவிடப் பலம் வாய்ந்தவர்.

தீண்டாமைபற்றிப் பேச பாலக்காடு சென்று, காந்தி யார் அவரைச் சந்தித்தார் (16.10.1927). மகாத்மா என்று மக்கள் போற்றும் அந்தத் தலைவரை மாட்டுக் கொட் டகையில் உட்கார வைத் துத்தான் பேசினார் அந்த சங்கராச்சாரியார்.

பேசி என்ன பயன்?

ஹரிஜன ஆலயப் பிர வேச விஷயத்தில் சாஸ்திரங் களையும், பழைய வழக்கங் களையும் நம்பி இருப்பவர் கள் நம் நாட்டில் பெரும் பாலோர் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் மனம் நோகும்படிச் செய்யும் எந்த மாறுதலும் - இம்சைக்கு ஒப்பாகுமென்று தாம் முடி வுக்கு வரவேண்டியிருக்கின் றது என்று ஸ்வாமிகள் (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி) காந்தியடிகளிடம் தெரிவித் தார். (ஆதாரம்: தமிழ்நாட் டில் காந்தி, பக்கம் 575, 576).

தீண்டாமைக் கொடு மைக்கு ஆளாக்கப்பட்ட வர்களின் வலிகள் சங்கராச் சாரியார்களுக்கு முக்கிய மல்ல; மாறாக, அதற்குக் காரணமானவர்கள் மனம் நோவதுதான் சங்கராச்சாரி யார்களுக்கு முக்கியம்.

இருப்பதிலேயே மகாபுரு ஷர் என்று பார்ப்பனர்களால் போற்றப்படும் அவர் நிலையே இப்படி! அவர் குறித்து தந்தை பெரியார் தெரிவித்த கருத் தும், தகவலும் மிகப்பெரிய அதிர்ச்சிக்குரியவை!

12 வருடத்திற்கு ஒரு முறை ஈசன் தண்ணீர் விடு வதாகக் கூறியபடி, 12 வருடத் திற்கு ஒருமுறை (கும்ப கோணம்) மகாமகம் வரு கிறது. முன் மகாமகம் 1945 ஆம் ஆண்டில் வந்தது. அதற்குமுன் 1933 இல் வந்தது. அதன்படி 12 வருடத் துக்கு ஒருமுறை இருக்க, இப்போது 1957 ஆம் ஆண்டில் வரவேண்டும்.

ஆனால், 1956 ஆம் ஆண்டிலேயே வருகிறது. இதன் காரணம், சங்கராச் சாரிக்கு இப்போது உடல் நிலை சரியில்லையாம். அவர் அடுத்த வருடம்வரை உயி ருடன் இருப்பாரோ? இருக்க மாட்டாரோ? என்ற சந்தேகத் தின்மீது, அவர் இப்பொழுது இருக்கும்போதே கொண்டா டிவிடவேண்டும் என்பதற் காக அடுத்த வருடம் கொண் டாடவேண்டியதை, இந்த வருடம் முன்பாக ஒத்தி வைத்துக் கொண்டாடுகிறார் களாம்.

இதன்படி ஈசன் இப் போது சங்கராச்சாரியாருக்கு உடல்நிலை சரியில்லை என் பதற்காக, 11 வருடத்திலேயே தண்ணீர் விடுகிறார்கள் என்று ஆகிறது. இப்படிப் பார்ப்பான் மனது வைத்தால் ஈசனுடைய செய்கையையும் மாற்றிவிட முடியும். அப்படி யானால், கடவுளும், வெங் காயமும் எங்கே போனதோ தெரியவில்லை (திருவத்தி புரத்தில் தந்தை பெரியார் பேசியது, விடுதலை, 6.2.1956).

இதற்கு விளக்கமும் தேவையா? இந்து மதம், சங்கராச்சாரியார்களின் உண்மைத் தன்மைகளை அறிந்து கொள்வீர்! - மயிலாடன்

Read more: http://viduthalai.in/page1/85755.html#ixzz3BE3gkiYI

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கிருஷ்ண ஜெயந்தி

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடவிருக்கும் பக்தர்களுக்குப் புராணம் கூறும் ஒரு செய்தி.
கிருஷ்ணன் பிறப்பு என்னவென்றால், தேவர்கள் எல்லாம் போய், உலகில் அதர்மம் அதிகமாகி விட்டது; இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை; அதைப் போக்க வலிமையுள்ள ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம்.

உடனே விஷ்ணு என்ன செய் தான் தெரியுமா?

தன் மார்பிலிருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தானாம். அந்த இரண்டு மயிரில் ஒன்று கறுப்பு நிறமாம்; மற்றது வெண்மை நிறமாம்.

கறுப்பு மயிர் கிருஷ்ண னாகவும், வெள்ளை மயிர் அவன் அண்ண னாகவும் ஆயின என்றும் அபிதான கோசத்தில் உள்ளது.

நாங்கள் சொல்லுவ தல்ல - அபிதான கோசம் - புராணம் கூறுகிறது.

இந்தக் கிருஷ்ணனுக்குத்தான் ஜெயந்தியா?

சிந்திப்பீர்!

Read more: http://viduthalai.in/page1/85879.html#ixzz3BE4sX3iJ

தமிழ் ஓவியா said...

உண்மையான தமிழன் யாரப்பா?

இந்த வார துக்ளக்கில் (13.8.2014) உண்மையான தமிழன் யார்? அதென்ன உண்மையான தமிழன்; பொய்யான தமிழன்; உண்மையும், பொய்யும் கலந்த தமிழன் என்றெல்லாம் வித்தியாசம் உண்டா என்ன? என்று பூணூலுக்கே உள்ள குயுக்தியுடனும், சேட்டையுடனும், கேவலப்படுத்தும் நோக்கத்துடனும் எழுதி இருக்கிறார் திருவாளர் சோ.

அவர் தமிழராக இல்லாததால் (வெளியில் அப்படி சொல்ல மாட்டார்கள்) இப்படியெல்லாம் இஷ்டத்துக்கு எழுதக் கூடிய வசதி இருக்கிறது.

தமிழ் பேசுவதால் தமிழன் ஆக மாட்டார் என்று கழகம் சொல்லுவது எவ்வளவுத் துல்லியமானது என்பது - இப்போதாவது நமது அப்பாவித் தமிழர்கள் புரிந்து கொண்டால் சரி.

இதுவே பார்ப்பனர் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருந்தால், சங்கரமடம் பிரச்சினையாக இருந்தால் இந்தக் கிண்டல், கேலி. நையாண்டி, விஷமம் இருக்குமா என்பதைத் துக்ளக்கைக் காசு கொடுத்து வாங்கும் நண்பர்கள்தான் சிந்திக்க வேண்டும்.

இப்பொழுது மட்டுமல்ல; தமிழ், தமிழர் என்று சொன்னாலே அக்ரகாரவாசிகளுக்கு அக்னிக் குண்டத்தில் விழுந்தது போலத்தான்.

கேள்வி: பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் தமிழர் இடையே நல்லுறவு நல்லிணக்கம் ஏற்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளாரே

சோ பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே! (துக்ளக் 19.8.2009). புரிகிறதா?

கேட்ட கேள்வி என்ன? சோவின் பதில் என்ன?

ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?

நீண்ட காலமாக பெங்களூரில் திறக்கப்படாமல் இருந்த திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு எடியூரப்பா ஒத்துக் கொண்ட ஆத்திரம் இதில் பிரதிபலிக்கவில்லையா?
அவருடைய நோக்கம் திருவள்ளுவர் சிலையை அவமதிக்க வேண்டும் என்பதே - அதனை வேறொரு முறையில் எழுதுகிறார் தூண்டுகிறார் - அவ்வளவுதான்.

சென்னை மாநகரில் வணிக விளம்பரங்கள் தமிழில் எழுதினால்! இது என்ன மொழி நக்சலிசம் (துக்ளக் 15.9.2010) என்று எழுதிடவில்லையா?

அதே நேரத்தில் சமஸ்கிருதத்தைப்பற்றிச் சொல்லிப் பாருங்கள். கோயிலில் வழிபாட்டு மொழியாக சமஸ்கிருதம் இருக்கக் கூடாது என்று சொல்லிப் பாருங்கள் - அடேயப்பா பூணூல் துருத்திக் கொண்டு வந்து தண்டால் எடுக்கும். தமிழில் பாடினால் பொருள் இருக்கும். ஆனால், புனிதம் இருக்காது. மொழிக்கு முக்கியம் அல்ல - சமஸ்கிருத ஒலிக்குத் தான் முக்கியம் (துக்ளக் 18.11.1995). கடவுளுக்குக்கூட மொழி ஆசாபாசம் ஒலி ரசனைகள் உண்டாம்!

தமிழ் என்றால் அதற்கொரு விளக்கம் சமஸ்கிருதம் என்றால் சுற்றி வளைத்து அதற்கொரு வியாக்கியானம்!

உண்மையான தமிழன் யார்? பொய்யான தமிழன் யார்? என்று கேள்வி கேட்கிறாரே திருவாளர் சோ அதற்கான விடை இந்த இடத்தில் விளக்கமாகக் கிடைத்து விட்டதா இல்லையா?

இந்தப் பதிலில் இன்னொன்றையும் அதென்ன உண்மையான தமிழனின் கலாச்சாரம்?

அதுதான் மேற்கத்திய கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டோமே என்று கேள்வி எழுப்புகிறார்.

மேற்கத்திய கலாச்சாரத்தை சோ கூட்டம் கடைப் பிடித்தாலும் - ஆவணி அவிட்டத்தை அனுஷ்டிக்காமல் இருக்கிறதா? பூணூலைப் புதுப்பிக்காது இருக்கிறதா?

திருமதி சிவசங்கரிக்குப் பதில் சொன்னாரே - நினைவிருக்கிறதா? சோ கேட்ட இதே கேள்வியைத் தான் தமிழர் தலைவரிடமும் கேட்டார் சிவசங்கரி.

கேள்வி: தமிழர் பண்பாடு தமிழர் பண்பாடு என்று அடிக்கடி சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன?

தமிழர் தலைவர் பதில்: இதுஒரு நல்ல கேள்வி. தாயை மகனும், மகளைத் தகப்பனும் போடி, வாடி என்று சொல்ல மாட்டோம் - அதுதான் தமிழர் பண்பாடு (குமுதம் 22.121983) என்று சொன்னதுதான் திருவாளர் சோ ராமசாமிக்கும் பதிலடி!

கொலை வழக்கில் சிக்கி சிறைச்சாலை வரை சென்று வந்த ஒருவரை ஜெகத் குரு என்று சொல்லும் இனப்பற்று பார்ப்பனர்களே, உங்களுக்கு இருக்கும் பொழுது, தமிழர்களுக்குத் தமிழ்ப் பற்றோ தமிழன் என்ற இனப் பற்றோ இருக்கக் கூடாதா?

இன்னும் பேசுங்கள் - இப்படியே எழுதுங்கள், அப்பொழுதாவது தமிழனின் தடித்த தோலுக்குச் சுயமரியாதை உணர்வு வருகிறதா என்று பார்ப்போம்!

- மின்சாரம்

Read more: http://viduthalai.in/page1/85891.html#ixzz3BE52FKMr

தமிழ் ஓவியா said...


ஜாதிப் புழுக்கள்!

கல்வி என்பது தண்ணீர் அதைச் சமூகமென்னும் பெரு மரத்தின் வேரில் ஊற்றினால் நம் வேலை ஆகி விட்டது என்று நினைத்தேன். ஆனால், இந்த மரத்தின் வேரிலுள்ள ஜாதி வேற்றுமையும், கெட்ட எண்ணமும், பணத்துக்கு அடிமைத்தனமாகிய புழுக் களா அதை வளர விடப் போகின்றன? இந்த புழுக்கள் சாக வேண்டும்.

- காண்டேகர்

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3BE60ZbQy

தமிழ் ஓவியா said...

சிந்தனைக்குத் தடை

பகுத்தறிவுக்கு எதிரிகள் நம்நாட்டில் தான் எப்பொழுதும் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பதில்லை. உலகெங்கும் மதத்தரகர்களின் தாக்குதல்களுக்கு பகுத்தறிவாளர்கள் இலக்காகிக் கொண்டே இருந்துவர நேர்ந்துள்ளது. சுயசிந்தனையாளர்கள் கிளர்ந்தெழாமல் மதப்பிடியில் சிக்கித் தவிக்க நேரிட்டது.

ஒரு சுய சிந்தனையாளன் என்பவன் யார் என்று பொருள் கூறுமிடத்து மதத்தை மறுப்பவன்; நாத்திக வாதி என்று அகராதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதத்தின் கோரப்பிடியில் உலகின் மிகப்பெரும் சுயசிந்தனையா ளர்கள் எல்லாம் சிக்கி உழன்று விடுபட பெரும் பாடுபட நேர்ந்தது.

பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் தந்தை சிறு குழந்தையான ரஸ்ஸல் மூட நம்பிக்கை இல்லாதவராக வளர இரண்டு சுயசிந்தனையாளர்கள் (பகுத்தறிவாளர்கள்) அவரை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்று உயில் எழுதி வைத்து விட்டு மறைந்தார்.

அதற்காக இரண்டு சிந்தனையாளர் களையும் நியமித்தார். ஆனால், இவ்வாறு நியமித்தது செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தோடு கிறிஸ்து மத நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவரை வளர்த்து வர வேண்டும் என்றும் ஆணையிட்டது.

Read more: http://viduthalai.in/page1/85890.html#ixzz3BE66wZ2x

தமிழ் ஓவியா said...

மூவரும் முழுப் பொய்யர்களே!

ஆசிரியருக்கு கடிதம் 15.10.78 ஆனந்த விகடனில் இருவரும் ஒரே தொழில் என்ற தலைப்பில் (பக்கம் 93) ஓடத்தில் ஏற்றிச் சென்ற தற்கான, கூலியை ராமன் கொடுக்க குகன் வாங்க மறுத் தான் என்று வாரியார் கூறியதைக் கேட்க நகைப்புத்தான் ஏற்பட்டது. ஏனெனில் அயோத்தியை விட்டு அடவிக்குச் செல்லும்போது ராமன், லட்சுமணன், சீதை மூவரும் அணிந்திருந்த ஆடையாபரணங்களை அந்தணர்களுக்கு அளித்து விட்டு மர உரிதரித்து சென்றான் என்று கம்ப ராமாயணத்தில் எழுதி இருக்கின்றது.

கள்ளுக்கடை மயக்கத்தில் கவிதைகள் எழுதி கம்பனார் கானகத்தில் கனமான மூட்டையை அனுமான் கொடுக்க, அம்மூட்டையில் உள்ள ஆடையாபரணங்கள் ராவணன் எடுத்துச் சென்ற சீதையின் பொருளே என்று விளக்கியுள்ளன.

இதை படித்த தந்தை பெரியார், மர உரி தரித்து வந்த மூவர்களுக்கும் குறிப்பாக, சீதைக்கும், காட்டில் எப்படி ஆடையாபரணம் கிடைத்தது என்றும், அதிலும் சீதையைச் தேடச் சென்ற அனுமானிடம் கணையாழி கொடுத்தனுப்பியதும் - அதனைப் பெற்ற சீதையும் பதிலுக்கு தன்னுடைய கணையாழியை ராமனிடம் கொடுக்கும்படி அனுமானிடம் கொடுத்ததையும் பற்றி கேள்வி மேல் கேள்வி போட்டு கம்பனின் கயமையைப் பற்றி சொல்லியதை நாம் அறிவோம்.

அதுபோதாதென்று மேலும் கம்பனை பழிக்கவோ என்னவோ ஆனந்த விகடனைக் கொண்டு கம்பனை மேலும் பொய்யனாக்க வாரியார் ராமன் கூலி கொடுக்க, குகன் மறுத்தான் என்று சொல்லுவது கம்பனுடைய ஞாபக மறதியை மேலும் காற்றாடிபோல் பறக்கச் செய்கிறது. அயோத்தி விட்டு மூவரும் மர உரி மட்டும் மாட்டிக் கொண்டு வந்தவர்களுக்கு கூலி கொடுக்க என்ன இருந்தது? அப்படி இருந்தால் அயோத்தியில் இருந்து திருடி வந்தார்களா? ஏனெனில், எல்லாம் பரதன் சொத்து தானே.

அப்படி திருடி வந்தால் பஞ்சமா பாதகத்தில் ஒரு பாதகமல்லவா? ஆனதால் முன்னுக்குப் பின் முரணாக எழுதுவது முழுப் பொய்யல்லவா? ஆகவே கள்ளுண்டு கவிதைகள் எழுதிய கம்பனும் பொய்யன்! அக்கம்பனின் கவிதைகளை படித்து மோட்சம் போக எடுத்துச் சொல்லும் வாரியாரும் ஒரு பொய்யன்!! அதனை பிரமாதமாக வெளியிடும் ஆனந்த விகடனும் ஓர் பொய்யன்!!! ஆகவே மூவரும் மகா பொய்யர்கள் என்பது நன்கு தெரிகின்றதல்லவா?

ஆம்பூர் சீ.கோ.வெற்றியழகன், சென்னை.

Read more: http://viduthalai.in/page1/85892.html#ixzz3BE6KEXt1

தமிழ் ஓவியா said...


சுவாமிஜிக்கு ஏன் இந்த வேலை?

அண்மையில் பம்பாய் வந்த ஒரு ஹாலிவுட் நடிகை பூனாவில் உள்ள ஆச்சார்யா ரஜ்னீஷை சந்திக்கச் சென்றார். பகல் முழுவதும் அவருக்கு பக்திமிக்க பல்வேறு உபதேசங்கள் கொடுக்கப்பட்டது.

இரவு வந்ததும் ஒரு இருண்ட குகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவரது உடைகளை அவிழ்க் கும்படி கூறினார்கள். நிர்வாணமாக இருந்த ஒரு குறிப்பிட்ட நபருடன் படுத்துக் கொள்ளுபடி கட்டாயப் படுத்தினார்களாம்.

ஆனால் நடிகை மறுத்து விட்டார். உடனே அவர் உடைகள் வலுக்கட்டாயமாக கிழிக்கப்பட்டன. அடுத்தது நடப்பதற்குள் அவர் தப்பி ஓடிவந்து பம்பாய் காவல்துறை யினரிடம் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால் இந்த ஆசிரமத்திற்கு நடிகர் வினோத்கன்னா தொடர்ந்து செல்வதாக கூறப்படுகிறது; எதற்காக?

முருகனின் கோவண பிரசாதம்!

காலஞ்சென்ற வெற்றிப்படத் தயாரிப்பாளர் ஒரு முருக பக்தர். அவர் முருகன் சிலையில் உள்ள கோவணத்தைக் கொண்டு வந்து பன்னீரில் நனைத்துக் குடிப்பாராம்.

அவரைப் போல் வெற்றிப்படம் தயாரிக்க வேண்டும் என்று நினைத்து சில படத்தயாரிப்பாளர்கள் முருகன் கோவண பிரசாதத்திற்கு அலைகிறார்கள்.

சினிமா ஏரியா, அய்யப்பன் ஏரியா

திரைப்பட உலகில் நடிகர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், சான்ஸ் கிடைக்காத நடிகர்கள் எல்லாரும் மாலை போட்டு அய்யப்பன் விரதம் பிடிக்க ஆரம்பித்துள்ளார்கள்.

நடிகர்களுக்கு மட்டும் ஒரு விதி விலக்கு. அவர்கள் முகத்தை ஷேவ் செய்து கொள்ளலாம், பெண்களைத் தொடலாம்? சாமியே சரணம் அய்யப்பா!

(மூக்குத்தி வார இதழிலிருந்து தருபவர் தமி

Read more: http://viduthalai.in/page1/85895.html#ixzz3BE6UiKc0

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ரமண ரிஷி

கடவுள் பக்தன்மீது கருணை கொண்டு அவ னது முன்னேற்றத்திற்குத் தக்கபடி வெளிப்படு கிறார். பக்தன் கடவுளை மனிதனென்று நினைத்து எதிர்பார்த்து நிற்கிறான். ஆனால், கடவுள், பக்த னுக்குள் இருந்து அவன் தவறுகளை உணர்த்தி நல்வழியில் செல்ல உதவுகிறார். - ரமணரிஷி

கொலைகாரனுக்கு எப்படி உதவுகிறார்? பக்தர்கள் தந்த கொள்ளைப் பணத்தை தனது உறவின ருக்கு எழுதி வைத்த இந்த ரமண ரிஷியையும் இப்படித்தான் வழி நடத்தினாரோ!

Read more: http://viduthalai.in/page1/85948.html#ixzz3BE6gZOO6

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

சுவாமி மலை

ஒவ்வொரு மனிதனுக் கும் கோபம் வருவதற்கு ஏதாவது ஒரு பிரச்சினை குடும்பத்தில் இருக்கிறது. அந்தப் பிரச்சினைகள் தீர கீழ்க்கண்ட கோவில் வழி பாடுகளை மேற்கொள் வது நல்லது.

நந்தனாருக்கு நந்தி விலகிய இடம் திருப்புன் கூர். இது வைத்தீஸ்வரன் கோவில் அருகில் உள்ளது.

பிரம்மா, விஷ்ணு, சிவன் மூம்மூர்த்திகளும் ஒன்றாக காட்சிதரும் தலம் சுசீந்திரம்.

சூரபத்மனை வென்ற பிறகு சுப்பிரமணியர் சினம் தணிந்து வள்ளியை மணம் புரிந்து அமர்ந்த இடம் திருத்தணி, சினம் கொண் டவர்கள் குணம் மாறவும், சிநேகம் கொள் ளவும் செல்ல வேண்டிய இடம் திருத்தணியாகும்.

தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படை வீடு சுவாமி மலை. தந்தை மகன் பிரச்சினைக்கு தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய தலம் இது.

சுவாமிமலை முருக னுக்கு இப்படி ஒரு விளம் பரம் தேவைப்படுகிறது; ஊருக்கு ஊர் கோயில் கள்தான் மண்டிக் கிடக் கின்றனவே போனியாக வேண்டுமானால் விளம்பர யுக்திகளைக் கையாள வேண்டாமா? கோயில் தல புராணங் கள் என்பவை இந்த வகையைச் சேர்ந்ததே.

ஒரு கேள்வி: கடவு ளுக்குக் கோபம் வர லாமா? கடவுள் சண்டை போட லாமா? இவை இருந்தால் இந்தக் கடவுள் கள் எப்படி மனிதர்களை விட உயர்ந் தவை.
மனிதன் தன் ஆசாபா சத்திற்கு ஏற்ப, அவனால் கற்பிக்கபபட்டவைதான் இந்தக் கடவுள்கள் என்பது இப்பொழுதாவது புரிகிறதா?

Read more: http://viduthalai.in/page1/86127.html#ixzz3BE8LaTvT

தமிழ் ஓவியா said...

முருகன் என்ன செய்கிறானாம்?

பழனியில் மழை இல் லாததால் தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. பழனி முருகனுக்கு மொட்டை போடும் பக்தர்கள் நீராட வேண்டும் என்பது அய்தீகமாம். தொட்டிகளில் கொண்டு வந்து ஊற்றப்படும் நீரில் காக்கைக் குளியல் போடு கின்றனராம். பக்தர்களின் தண்ணீர்ப் பஞ்சத்தைக்கூட போக்க முடியாத மொட்டை யாண்டி முருகனா பக்தர் களின் குறையைப் போக்கப் போகிறான்?

Read more: http://viduthalai.in/page1/86132.html#ixzz3BE8Smely

தமிழ் ஓவியா said...


காந்தீய பல்டி வீரர் பற்றி...!

- ஊசி மிளகாய்

மணியனின் பல்டி-யும் ஒரு நாடகமே...

தமிழருவி மணியன் அவர்களின் நேர் காணலை அண்மையில் பார்த்தேன்... ரொம்ப பரிதாபகரமாக இருந்தது; எப்படி இருந்த அவர், இன்றைக்கு இப்படி தரமிழந்து நிற்கிறாரே... என்றுதான் மனத்தில் தோன்றியது.ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைப்பதில், காங்கிரசை பிஜேபி விஞ்சிவிட்டது; அவர்களின் வஞ்சகத்தை உணர்ந்து கொள் வதற்கு 60 நாள் ஆட்சி போதும்; இனிமேல் அவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கோ அல்லது ஈழத் தமிழர்களுக்கோ நன்மை செய்வார்கள் என்ற நம்பிக்கை தனக்குத் துளியும் இல்லை என்று அந்த நேர்காணலில் அடுக்கித் தள்ளிவிட்டார். இப்போதுதான் பிஜேபியின் சுயரூபத்தை அறிந்து கொண் டேன் என்பதுபோல ஒப்பாரி வைத்தார். உண்மையில், தமிழருவியின் இந்த வாக்கு மூலம் ரொம்ப சாமர்த்தியமானது.

விமர்சனங்களிலிருந்து தப்பித்துக் கொள் ளும் தந்திரம் கொண்டது. குஜராத்தில், இஸ்லாமியர்கள் நரவேட்டை ஆடப்பட்ட தற்குக் காரணமான மோடி- அதற்காக குறைந்தபட்சம் மன்னிப்பைக் கூட கேட்காத மோடி, தமிழர்களைக் கொன்றழித்த ராஜ பக்சேவைக் கண்டிப்பதற்கு என்ன தார்மிக உரிமை இருக்கிறது? என்று தேர்தல் நேரத்தில் கேட்கப்பட்டது. அவர் தட்டிக் கேட்பார் என்று நம்புவது எவ்வளவு முட்டாள்தனமானது என்று விவாதங்கள் அனல் பறந்தன. பிஜேபி ஆளும் ம.பி. மாநிலத்தில் ராஜபக்சேவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதும்; அதை எதிர்த்து வைகோ ராஞ்சிக்குச் சென்று சாலையை மறித்ததும் அப்போதுதான் நடந்தி ருந்தன. ஆனால், இவை எதுவுமே தெரியாத அப்பாவி போல, தமிழருவி தற்போது கதை விடுகிறார். 45 ஆண்டுகால அரசியல் அனு பவம் கொண்டஅவருக்கா, எதுவும் தெரியாது? சொல்லப் போனால் தெரிந்தேதான் பிஜேபிக் கும், மோடிக்கும் அவர் வக்காலத்து வாங்கினார். தனது சுய அரசியல் லாபத்திற்காக, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றினார். ஆனால், தற்போது திடீர் ஞானம் வந்தவர்போல பேசுகிறார். நிஜமாகவே, வருந்தி திருந்தி விட்டாரோ என்று பார்த்தால், 2016 தமிழக சட்டமன்றத் தேர்த லுக்கும் பாஜக தலைமையிலான கூட்டணி தொடர வேண்டும் என்றும், ஆனால், கூட்ட ணியில் உள்ள கட்சிகள் அதற்கான வேலை களைத் துவக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக தமிழருவி ரொம்பவே சலிப்பு காட்டுகிறார். தனது அடுத்த அசைன் மெண்ட் டுக்கும் துண்டை விரித்து இடம் பிடிக்கிறார். தமிழருவியின் நாடகத்தை, இனியுமா தமிழக மக்கள் நம்பப் போகிறார்கள்?

- கூ.போர்விஜயன், கடலூர்

தீக்கதிர் நாளேட்டில் வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட இக்கடிதம் இன்று (19.8.2014) வெளி வந்துள்ளது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க., கூட்டணி அமைய அரசியல் புரோக்கர் சு.சாமி அய்யரைவிட, சோ சாமி அய்யரைவிட, மிக அதிவேகமான ஈடுபாட்டில் இறங்கி, மோடி வந்தால் ஏதோ ஈழப் பிரச்சினை முதல் இங்குள்ள காவிரிப் பிரச்சினை வரை எல்லாம் நொடிப் பொழுதில் முடிந்து விடும் என்று ஆரூடம் கணித்த நவீன காந்தியான தமிழருவியார் பாவம் இப்படியா ஆக வேண்டும்?

தொலைக்காட்சி ஊடகத்தவர் குறுக்குக் கேள்வி போட்டு கேட்டால், நம்பினேன் அதற்காக நான் என்ன (தற்கொலையா) தூக்கு மாட்டிக் கொண்டா சாக முடியும்? என்று பதில் அளிக்கிறார்! அருவியார் அவர்களே நீங்கள் வாழ வேண்டும்; சாக வேண்டும் என்று எவரும் விரும்ப மாட்டார்கள். திருந்தி வாழுங்கள் அதுபோதும்! சரியான எடை போடக் கற்றுக் கொண்டு பிறகு அரசியல் நடத்துங்கள்.

Read more: http://viduthalai.in/page1/86131.html#ixzz3BE8b8Ogv

தமிழ் ஓவியா said...




21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா?
நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!

மாற்றுப் பணி கொடுத்து அத்தொழிலாளர்களை முன்னேற்ற வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

கி.வீரமணி

21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவினை மனிதனே சுமக்கும் அவலம் ஒழிக்கப்பட வேண்டும்; நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி மலம் அகற்றப்பட வேண்டும் அத்தொழிலாளர்களை அத்தொழிலி லிருந்து விடுவித்து, மாற்றுப் பணிகள் தந்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

இந்த 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய அவலங்களில் ஒன்று மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமந்து செல்லும் மிகக் கேவலமாகும். இது அநாகரிகத்தின் உச்சம்! இது -மனிதர்களை மிருகங்களைவிடக் கேடான நிலையில் நடத்துவது அல்லவா?

இயந்திரமயமாகி தொழில் நுட்பம் உச்சத்தில் - ஓங்கி வளர்ந்து வரும் யுகத்திலா இப்படி நடப்பது?

துப்புரவுத் தொழிலாளர்களையெல்லாம் மாற்றுத் தொழிலாளர்களாக்கிட போதிய பயிற்சி தந்து, அவர்களது பொருளாதார வசதி குறையாமல், வாழ்வாதாரத்திற்கும் போதிய உத்தரவாதத்தினை அளிப்பது அவசர அவசிய மாகும்!

68 ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகும் இந்நிலையா?

68 ஆண்டு சுதந்தரத்திற்குப் பிறகும் மனிதக் கழிவுகளை மனிதர்களே சுமப்பது - இதற்கென ஒரு தனி ஜாதி - கீழ்ஜாதி வேறு எந்த சுதந்திர நாட்டிலாவது - உலகில் உண்டா? இதைவிட பெருத்த தேசீய அவமானம் வேறு உண்டா?

இதனை இந்திய நாட்டின் எந்த மூலை முடுக்கிலும் இல்லாது ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் திட்டம் தீட்ட வேண்டும்.

தொழில் நுணுக்க முறைகளைப் பயன்படுத்தி - இந்தக் கழிவுகளிலிருந்து பயனுறு பயன் (Recycling Process) முறையில் கோப்பர்காஸ் பல நிறுவனங்கள் செய்கின் றனவே! ஙிவீஷீ நிணீ முறைகளையெல்லாம் செய்யலாமே!

அந்தப் பணிகளில் ஈடுபடும் துப்புரவுத் தொழிலாளர் களைக்கூட, அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்ற நிலை இருந்தால்கூட, பயிற்றுவித்து, பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட வேண்டும்.

இன்று வெளிவந்த ஒரு தகவல்!

இன்று வெளிவந்துள்ள ஒரு செய்தியில் சென்னை மாநகராட்சியில் கடந்த 15ஆம் தேதி முதல் மனிதக் கழிவு களை அகற்றும் பணியாளர்கள் குறித்த கணக்கெடுப்பு துவங்கி, நேற்று வரை நடந்துள்ளது.

அதில் 200 வார்டுகளிலும் சேர்த்து மொத்தம் 100 பேர் மட்டுமே அந்தப் பணி செய்வோராகக் கண்டறியப் பட்டுள்ளனராம்.

ஆனால் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக் கெடுப்பின் அடிப்படையில் சென்னையில் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்கள் 1,500 பேர்கள் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது வெளியாகி உள்ளதே!

மாற்றுப் பணிகள் தருக!

அந்த 1500 பேர்களில் தற்போது 100 பேர் என்று முரணான தகவல்; இதைச் செம்மைப்படுத்தி அவர்கள் அப்பணியை மனிதக் கழிவினை சுமக்கும் பணிக்கு பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தி, அவர்களை மாற்றுப் பணியாளர்களாக்கிட மாநகராட்சியும் தமிழக அரசும் முன்வர வேண்டும்.

திராவிடர் கழகம் ஒத்துழைக்கும்

இதனை ஒழிக்க நமது இயக்கம் தேவைப்பட்டால் அறப் போராட்டத்திலும், விழிப்புணர்வுப் பிரச்சாரத்திலும் ஈடுபடும் என்பதை அறிவித்துக் கொள்ளுகிறோம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
19.8.2014

Read more: http://viduthalai.in/page1/86128.html#ixzz3BE8j9Kvv

தமிழ் ஓவியா said...


என் கவுன்ட்டர்கள்!

போலி என்கவுன்ட்டர் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி ஹெக்டே குழு அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில், போலி என்கவுன்ட்டர் விஷயத்தில் மத்திய அரசு துளியும் சகிப்புத்தன்மை காட்டாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் நடந்த தொடர் என்கவுன்ட்டர்கள் போலியாக நடத்தப்பட்டவை என்று கூறி, தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப் பட்டிருந்தது.

கடந்த 30 ஆண்டுகளில் போலி என்கவுன்ட்டர் மூலம் 1,528 பேர் கொல்லப்பட்டதாகவும் இதற்கு காரணமான மத்திய ஆயுதப்படை யினர் மற்றும் காவல்துறையினரை தண்டிக்க முடியாமல் சிறப்புச் சட்டம் அவர்களைப் பாதுகாக்கிறது என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நீதிபதி ஹெக்டே குழு நியமிக்கப்பட்டது. இக்குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதன் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் மத்திய அரசு கூறியிருப்பதாவது: போலி என்கவுன்ட்டர் மூலம் அப்பாவி மக்கள் கொல்லப் படுவதில் மத்திய அரசு துளியும் சகிப்புத் தன்மை காட்டாது என்று மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்துள்ளது.

போலி என்கவுன்ட்டர் என்ற பேச்சு வரும் பொழுது இன்றைய பிரதமர் நரேந்திர மோடியையும், பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவர் அமித்ஷா வையும் தவிர்த்து விட்டுச் சிந்திக்க முடியாது.

காரணம் குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து நடை பெற்ற என் கவுன்டர்களில் இவர்கள் இருவருக்கும் அதிக சம்பந்தம் உண்டு என்பதால்தான் இவ்வாறு குறிப்பிட நேர்கிறது.

குஜராத் மாநிலத்தில் சில ஆண்டுகளுக்கு முன் காவல்துறை என்கவுன்டரில் சொராபுதீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்டார். இது போலி என்கவுன்ட்டர் என்பது வெளிச்சத்திற்கு வந்தது. வேறு சில போலி என்கவுன்ட்டர் களும் நடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து சி.பி.அய். விசாரணை நடத்தியது. குஜராத்தில் நடந்த போலி என்கவுன்ட்டர்கள் தொடர்பான வழக்குகளில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 6 அய்.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 32 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

அத்தகையவர்களுள் ஒருவர் குஜராத் மாநில காவல்துறை டி.அய்.ஜி.யான வன்சாரா அய்.பி.எஸ்.; சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் தொடர்பாக 2007 ஏப்ரல் 24ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சபர்மதி சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த ஆறு ஆண்டுகளில் மேலும் சில போலி என்கவுன்ட்டர் வழக்குகளிலும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப் பட்டார். இவர் யார் என்றால் குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்.

அத்தகைய ஒருவர் சிறையில் இருந்தபடியே தம் பதவி விலகல் கடிதத்தை குஜராத் மாநிலக் கூடுதல் செயலாளருக்கு அனுப்பினார். அந்தப் பத்துப் பக்க அறிக்கை குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிஉள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மீதான கடும் குற்றப் பத்திரிக்கையாக இருக்கிறது.

இந்த இருவரும் கொடுத்த அறிவிப்பின் காரணமாகவும், குஜராத் மாநில அரசின் கொள்கைக் காரணமாகவும் மேற் கொள்ளப்பட்டது தான் போலி என்கவுன்ட்டர்; இவர்கள் இருவரும் தந்த ஊக்கம்தான் அந்த செயலை எங்களால் செய்ய முடிந்தது.

முதல் அமைச்சர் நரேந்திரமோடியை நாங்கள் கடவுள் போல் கருதினோம்; அவர்மீது மிகுந்த மரியாதை வைத்திருந்ததால்தான் இவ்வளவு நாள் அமைதி காத்து வந்தேன். முதல் அமைச்சர் நரேந்திர மோடியைத் தவறாக வழி நடத்தியவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான்.

போலி என்கவுன்ட்டர்களுக்காகக் காவல் துறையினரை சிறையில் அடைக்க முடியும் என்றால், அந்த என்கவுன்ட்டர்களுக்குக் காரணமான அரசாங் கத்தில் இருப்பவர்கள் மும்பையில் உள்ள தலோஜா சிறையிலோ அல்லது ஆமதாபாத்தில் உள்ள சபர்பதி மத்திய சிறையிலோ தான் இருக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரி வன்சாரா தமது கடிதத்தில் விரிவாக எழுதினார்.

இதில் மிகவும் வருந்த வேண்டியது என்னவென்றால் ஒரு பொறுப்பான அதிகாரி எழுதிய கடிதத்தின்மீது எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை என்பது தான்.

நம் நாட்டு ஜனநாயகத்தின் யோக்கியதை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு அடையாளம் இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்ட அந்த இருவரும் முறையே பிரதமராகவும், ஆளும் பிஜேபியின் அகில இந்தியத் தலைவராகவும் ஆகியுள்ளனர் என்பதுதான். அமித்ஷா மீதான போலி என்கவுன்ட்டர் வழக்கு மும்பையில் நடந்து கொண்டு இருக்கிறது. குஜராத் மாநிலத்துக்குள் அந்த வழக்கு நடந்தால் நேர்மையான முறையில் அமையாது என்ற எண்ணத்தில்தான் மும்பையில் நடந்து கொண்டு இருக்கிறது.

ஆனால், நீதிமன்றத்தில் ஒருமுறைகூட அமித்ஷா ஆஜராகவில்லை. நீதிபதி மிகவும் கடுமையாக எச்சரித் துள்ளார். எப்படிப்பட்டவர்கள் எல்லாம் நம் நாட்டில் தலைவர்களாக ஆகி இருக்கிறார்கள் என்பதற்கு இவை போதாதா?

Read more: http://viduthalai.in/page1/86117.html#ixzz3BE8xb1h0

தமிழ் ஓவியா said...


இன்று (ஆக.19) உலக புகைப்பட நாள்


திராவிட இனத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்த தந்தை பெரியாரை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர், ஓவியர் மா.குருசாமி கூறிய கருத்து:

தந்தை பெரியாரை எந்த நோக்கில் (Angle) இருந்து புகைப்படம் எடுத்தாலும் மிகச்சிறப்பாக இருக்கும் போட்டோ ஜினிக் உருவம் தந்தை பெரியார். எத்தனை முறை புகைப்படம் எடுத்தாலும் நமக்கு உற்சாகம் ஏற்படும். இன்று உலகப் புகைப்பட நாள்.



1839 ஆக., 19இல் உலகில் முதன் முதலாக புகைப் படம் அங்கீகரிக்கப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு புகைப்படத்துக்கு 175ஆவது ஆண்டு. புகைப்படம் என்பது ஒரு "படம்' அல்ல. அது ஒரு "கலை'. புகைப்படத்துக்கு பெரிய வலிமை உள்ளது. உலகளவில் புகைப்படம், பல வரலாற்று மாற்றங்களை ஏற்படுத்தி யுள்ளது. புகைப்படம் நாம் வாழ்க்கையோடு ஒன்றி ணைந்தது. அனைத்து இடங்களிலும் புகைப்படத்தின் பயன் உள்ளது. வரலாற்று நிகழ்வுகள், சமூக பிரச்சினைகள், சுப, துக்க நிகழ்ச்சிகள், மாநாடு, பொதுக் கூட்டம் என வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் நம் கண் முன் கொண்டு வருவது புகைப்படம். ஒரு சந்ததியினரின் வாழ்க்கை முறையை, வரும் தலை முறையினர் அறிந்து கொள்ள உதவுவதும் புகைப்படம் தான். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் லூகிஸ் டாகுரே என்பவர் "டாகுரியோடைப்' எனப்படும் புகைப் படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்தார். 1839ஆம் ஆண்டு ஜன., 9ஆம் தேதி பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19இல் பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல் பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு' என உலகம் முழுவதும் அறிவித்தது. இதை எடுத்துரைக்கும் வகையில், ஆக., 19 உலக புகைப்பட நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

Read more: http://viduthalai.in/page1/86134.html#ixzz3BE9f5lZ6

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

உலகில் ஒருவன்தான் ஆண் பிள்ளை. சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து பிறந்த முருகனே அந்த ஆண் பிள்ளை. உலகத்தில் பிறக்கும் மற்ற அத்தனைப் பேரும் தாயின் கருவில் வளர்ந்து பிறப்பதால், நாம் அனைவரும் பெண் பிள்ளைகளே!

- கிருபானந்தவாரியார்

(வெளியீடு: அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.)

ஒரு சந்தேகம், அந்த சிவபெருமான் ஆணா - பெண்ணா?

Read more: http://viduthalai.in/page1/86176.html#ixzz3BEAEjxZE

தமிழ் ஓவியா said...

சிறப்பான தீர்மானங்கள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சேலத்தில் கடந்த 17 ஆம் தேதி மாநில கல்வி உரிமை மாநாட்டினைச் சிறப்பாக நடத்தியதற்காகப் பாராட்டுகிறோம்!

இந்தத் தேவையான - சிறந்த நோக்கம் கொண்ட மாநாட் டினை நடத்துவதற்கு அ.இ.அ.தி.மு.க. அரசு தேவையில்லாத வகையில் தடை செய்து, மக்கள் மத்தியில் தேவையில்லாத அவப்பெயரை தேவைக்கு அதிகமாகவே வாங்கிக்கட்டிக் கொண்டுவிட்டது.

அ.இ.அ.தி.மு.க.வின் இந்தப் போக்கினை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கண்டித்து அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டார்கள் (18.8.2014).

தடைகள் பலவற்றையும் கடந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டைத் திட்டமிட்டபடி நடத்தியது பாராட்டுக் குரியதே!

மாநாட்டில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கல்வி யாவருக்கும் பிறப்புரிமை - அந்தக் கல்வியே மானுடத்தின் பெருவலிமை என்கிற முழக்கத்திற்கேற்ப ஒரு நாடு தம் மக்களின் அடிப்படை பிறப்புரிமையான கல்வியை அனை வருக்கும் இலவசமாகக் கொடுக்கவேண்டும். அதனால்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் 45 ஆம் பிரிவில் 14 வயது வரை அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை அரசு வழங்கவேண்டுமென வலியுறுத்தி யுள்ளார். ஆனால், அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டு களுக்குமேலாகியும் அச்சட்டத்தின்படி அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வியை, மய்ய, மாநில அரசுகள் வழங்கவில்லை. வளர்ந்த நாடுகள் பலவற்றில் அந்நாட்டு மக்களுக்கு கல்வியை இலவசமாக அவ்வரசுகள் வழங்கி வருகின்றன. எனவே, நம் நாட்டில் 2009 ஆம் ஆண்டு நடை முறைக்குக் கொண்டுவரப்பட்ட கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அனைவருக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை மய்ய, மாநில அரசுகள் இலவசமாக வழங்கவேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

இது ஒரு நியாயமான தேவையான, ஒரு மக்கள் நல அரசு செய்து தீரவேண்டிய அடிப்படையான செயல்பாடும், கடமையும் ஆகும்.

68 ஆவது சுதந்திரத் தினத்தைப் பல்வேறு கலை நிகழ்ச்சி களுடன் கொண்டாடியாகி விட்டது; ஆண்டுதோறும் சடங்காச் சாரமாகவும் இது நடைபெற்றுதான் வருகிறது.

ஆனால், கல்வியை அடிப்படை உரிமையாக்கும் கடமை மட்டும் நிறைவேற்றப்படாத நிலையில் ஆறு வயது முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. (கல்வி உரிமைச் சட்டம் 2009 எண் 32/2009 நாள் 25.8.2009).

அச்சட்டத்தின்மூலம் பள்ளிக்குப் போகாமல் இருந்த ஒரு கோடி குழந்தைகள் கல்விக் கூடங்களுக்குச் செல்வார்கள்.

அச்சட்டத்தைச் செயல்படுத்த மத்திய - மாநில அரசுகள் 55:45 என்ற வகையில் செலவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். செயல் படுத்தவேண்டிய பொறுப்பு மாநில அரசு களைச் சார்ந்ததாகும். 6 வயது முதல் 14 வயதுவரையிலான அனைத்துக் குழந்தைகளும் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை என்பது 86 ஆவது சட்டத் திருத்தத் தின்மூலம் (2002 இல்) உறுதி செய்யப்பட்டது.

இந்தியாவைப் பொறுத்தவரை மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் (ஜி.டி.பி.) ஆறு சதவிகிதம்கூட கல்விக்கு ஒதுக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

கல்விக் கூடங்கள் ஒரு பக்கத்தில் பரவி வந்தாலும், கல்விக் கூடங்களின் தகுதிகள் என்று பார்க்கும்பொழுது மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.

அரசு நடத்தும் கல்விக் கூடங்கள், தனியார் நடத்தும் கல்வி நிறுவனங்களைவிடத் தரம் குறைவு என்ற கருத்து நிலவுகிறது. போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாமையால் தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளிகள் மூடப்படுகின்றன என்பது எத்தகைய அவலம்!

தனியார்ப் பள்ளிகளை விஞ்சக்கூடிய அளவுக்கு அனைத்து வசதிகளும் அரசுப் பள்ளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 50 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட மக்களே!

தமிழ் ஓவியா said...

பிளஸ் டூ தேர்வில் 70 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப் பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இதில் 20 சதவிகிதத் தினர்தான் உயர்கல்விக்குச் செல்லுகின்றனர் என்பதுதான் யதார்த்தம்!

விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் ஆரம்பப் பள்ளிமுதல் ஆராய்ச்சிப் பட்டங்கள் வரை இலவசமாக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அடிப் படையை மட்டும் அரசு செய்து கொடுத்துவிடுமானால், குறிப்பிட்ட கால எல்லைக்குள் நாட்டின் வளர்ச்சியும், மலர்ச்சியும் மிகப்பெரி யதாக - புலிப் பாய்ச்சலாக இருக்கும் என்பதில் அய்யமே யில்லை.

தமிழ்நாட்டில் முதலமைச்சராக திரு.எம்.பக்தவத்சலம் அவர்கள் இருந்தபோது ஒரு கருத்தைச் சொன்னார். எஸ்.எஸ்.எல்.சி. தேறியவர்கள் எல்லோருக்கும் கல்லூரிகளில் உயர்தரப் படிப்பு வசதி கொடுக்கவேண்டுமென்பது முடியாத காரியம். அது எந்த நாட்டிலும் முடியாத காரியம் என்று சொன்னார்.

முதல்வரின் இந்தக் கருத்துக் குறித்து தந்தை பெரியார் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார்கள்.

இந்தக் காட்டுமிராண்டி நாடு தவிர வேறு எந்த நாட்டிலும் மேல் ஜாதி (பார்ப்பன ஜாதி) கீழ் ஜாதி (அடிமை ஜாதி) என்கிற வகுப்பு (ஜாதி) - இல்லையென்பதையும் மந்திரியார் உணர்ந்திருந் தால், ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தால் எல்லோருக்கும் கொடுக்க இயலாது; எந்த நாட்டிலும் இயலாது என்ற சொற்களை உச்சரித்திருக்கவே மாட்டார் என்று (விடுதலை 2.8.1965) தந்தை பெரியார் அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.

இந்த நேரத்தில் குறிப்பிடவேண்டிய ஒன்றுள்ளது - கல்வி வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள், அடிப்படையாக இருந்தவர்கள் என்று ஒரு பட்டியல், விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டுத் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் தந்தை பெரியாரும், கல்வி வள்ளல் காமராசர் பெயரும் எப்படி விடுபட்டுப் போயிற்று என்று தெரியவில்லை.

ராஜாஜி அவர்கள் இருமுறை முதலமைச்சராக இருந்தவர். அந்த இருமுறைகளிலும் கிராமப் பள்ளிகளைத்தான் இழுத்து மூடினார். உச்சக்கட்டமாக 1952 இல் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபோது, அதனை எதிர்த்து முறியடித்தவர் தந்தை பெரியார் அல்லவா! அந்தக் குலக்கல்வித் திட்டம் தொடர்ந் திருந்தால், நம் மக்கள் இந்த அளவு வளர்ச்சி பெற்று இருப்பார்களா? என்பது முக்கிய கேள்வி.

கல்வியிலும் இட ஒதுக்கீடு என்கிற வகையில் அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் (15(4)) கொண்டுவரப்படுவதற்குத் தந்தை பெரியார் மூலகர்த்தா அல்லவா!

இந்த உண்மைகளை உரிமையுடன் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்.

தமிழ் ஓவியா said...

மத்திய மோடி அரசு நீதித்துறையில் தலையிடும் மற்றொரு மறைமுக முயற்சியா?



சங்கராச்சாரியார்மீது கொலை வழக்கு புதுவை அரசினர் அப்பீல் முடிவைக் கைவிட ஏற்பாடா?

மொத்தம் 117 சாட்சிகளில் 77 பிறழ்சாட்சியங்களை வைத்து, காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கினை புதுவை அரசின் மேல் முறையீடு செய்யும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு, சு.சாமிகள் குடிஅரசுத் தலைவருக்கு மனு கொடுத்துள்ளதைக் கண்டித்து ஏராளமானவர்கள், நீதித்துறையின் சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும், உண்மையான கொலைக் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்து விடக் கூடாது என்று பல்லாயிரக்கணக்கில் குடியரசுத் தலைவருக்கு மின் அஞ்சல்கள் சென்ற பிறகும்கூட, இன்று (21.8.2014) வந்துள்ள ஒரு ஆங்கிலச் செய்தித்தாளில் புதுவை மாநில ஆளுநர் ஆணை - அனுமதிபற்றி - அட்டர்னி ஜெனரலின் கருத்துக் கேட்க அம்முடிவு அனுப்பப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

இது உண்மையானால், அம்முடிவினை - மேல் முறையீடு செய்வதைக் கைவிட வைக்க (அதாவது சங்கராச்சாரியார்களைக் காப்பாற்ற) இப்படி ஒரு குறுக்கு வழி - தந்திர முயற்சிகளை மோடி அரசோ அல்லது மத்திய அரசின் வேறு அங்கமோ செய்வதாகத் தான் உலகத்தினர் புரிந்து கொள்ளக் கூடும்!

இந்த அவப் பெயர் தேவையா? இது அப்பட்டமான, நீதித்துறையில் தலையிடும் கொடூரமான முயற்சியாகும் என்பது நீதித்துறை - சட்டத்துறை வல்லுநர்கள் கருத்தாகும். இம்முயற்சி மூலம் கொலைக் குற்றத்தில்கூட, உண்மைக் குற்றவாளிகள் தப்பித்து விடலாம் என்ற நிலை ஏற்படலாமா?

நீதிக்குத் தலைவணங்க வேண்டாமா? நீதித்துறையின் சுதந்திரத்தில் நிர்வாகத் துறை குறுக்கிடலாமா?

மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை மறவாதீர்! மறவாதீர்!!

குறிப்பு: இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு வெளி வந்துள்ளது (விடுதலை 8.8.2014). தோழர்களே குடியரசுத் தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டீர்களா? குடியரசு தலைவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய வாசகம் இதோ:

குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புக

கழகத் தோழர்களும் நீதியின்மீது கவலையுள்ள பெரு மக்களும் கீழ்க்கண்ட முகவரிக்கு மின் அஞ்சல் மூலம் கீழ்க்கண்ட வாசகத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.



The President of India
Rashtrapati Bhawan
New Delhi
Honourable Sir,

The decision by Puducherry Government to go in for appeal against the acquittal of 24 persons including Kanchi Jeyendra Saraswathi and Vijayendra Saraswathi, two Sankaracharyas, in the Sankararaman murder case should be allowed to proceed without any delay. Any effort to stall the appeal process would give wrong impression in the minds of people of Tamilnadu and Puducherry that Chief Executive of this country viz. President is intervening in the judicial process.

The family of the slain Sankararaman through this appeal, are eagerly expecting justice as also the people of Tamilnadu. The murder was committed in the Varadarajasamy Temple premise.
We once again request your goodself to kindly resist any effort by vested interests in stopping this appeal process.

Email address: secy.president@rb.nic.in and usgrievance@rb.nic.in

Read more: http://viduthalai.in/page1/86249.html#ixzz3BEBUwjjM

தமிழ் ஓவியா said...

இந்து முன்னணியின் பொய்ச் செய்திக்கு மறுப்பு


நாகர்கோயிலில் நடக்கும் புத்தகக் கண்காட்சியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் நூல்கள் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பொது மக்கள் ஏராளம் இயக்க நூல்களை வாங்குகின்றனர். இதனைப் பொறுக்காத அவ்வூர் இந்து முன்னணியினர் மாவட்ட ஆட்சியருக்குப் புகார் கொடுத்துள்ளனர்.

இந்து மத விரோத நூல்கள் விற்பனைக்கு தடை செய்ய வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளனர் - வட்டாட்சியர் புத்தகக் கண்காட்சிக்கு வந்து சில இயக்க நூல்களைப் பெற்றுச் சென்றுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் அனைத்துப் புத்தகக் கண்காட்சியிலும் கழக அரங்குகள் சிறப்பாக இடம் பெற்று வருகின்றன. நாகர்கோயிலில் மட்டும் ஏன் இந்த நிலைப்பாடு?

இதில் இன்னொரு விஷமத்தனம்: குறிப்பிட்ட நூல்களை விற்க மாட்டோம் என்று விற்பனைப் பகுதியில் உள்ளவர் சொன்னார் என்று இந்து முன்னணிப் பிரமுகர், சொன்னதாக தினகரன் செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மை தானா என்று உறுதிப்படுத்தாமல் தினகரன் இந்த வேலையில் ஈடுபட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

- தினகரன் மறுப்புச் செய்தியை வெளியிட வேண்டும்.

Read more: http://viduthalai.in/page1/86245.html#ixzz3BEBhckCZ

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

கோயில் குளத்தில்

கோயில் குளத்தில் துவைப்பது, பாத்திரம் கழுவுவது போன்றவற் றைச் செய்வது சரியா?
ஏ. மூர்த்தி, திருவள்ளூர்

வேறு நீரில் குளித்துச் சுத்தமான பிறகே கோயில் குளத்தில் நீராட வேண்டும் என்பது நியதி. அதன் புனிதத் தன்மை யைப் பாதுகாப்பதற்காக இப்படி சொல்லி இருக் கும் போது துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது போன்ற செயல்களைச் செய்வது சரியானது அல்ல.
(தினகரன் ஆன்மீக மலர்)

மகாமகத்தன்று லட்சக் கணக்கில் கும்பகோணத் தில் குளிக்கிறார்களே - அதனால் அந்தக் குளம் புனிதம் அடைகிறதா? அசுத்தம் அடைகிறதா?

Read more: http://viduthalai.in/page1/86242.html#ixzz3BEBqVZAR

தமிழ் ஓவியா said...


சபாஷ், சரியான நடவடிக்கை!


சென்னை அரும்பாக்கம் செல்வ விநாயகம் கோயில் தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த செயராமன் என்பவர் கோயில் ஒன்றைக் கட்டினார். அந்தக் கோயிலை அவர் ஒன்றும் தன் சொந்த நிலத்தில் கட்டவில்லை; மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில்தான் கட்டினார். அந்தப் பகுதியில் வசிக்கும் தியாகராசன் என்பவர் இதுபற்றி அறநிலையத் துறைக்கும், மாநகராட்சிக்கும் புகார் கொடுத்தார் - ஆனால் நியாயம் கிடைக்கவில்லை என்றவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தொடர்ந்தார்.

அய்ந்தாண்டுகள் வழக்கு நடந்தது. கோயிலை இடித்து நிலத்தை மாநகராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

அதன்படி கோயிலை இடிக்க மாநகராட்சி ஊழியர்கள் சென்றபோது, பொது மக்களைக் கிளப்பி விட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் மாநகராட்சி ஊழியர்கள் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.

கோயிலைக் கட்டிய செயராமன் என்பவர் உச்சநீதிமன்றம் சென்றார் - மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடிசெய்து விட்டது.

நேற்று காலை காவல்துறையின் உதவியுடன் மாநகராட்சி பணியாளர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் கோயிலை இடித்துத் தரை மட்டமாக்கினர். நேற்றும் தடுத்துப் பார்த்தனர். ஒரு பெண் மாடியில் ஏறிக் கொண்டு கீழே குதித்துத் தற்கொலை செய்து கொள்வதாகவும் மிரட்டினார்; எல்லாவற்றையும் சமாளித்துக் கோயிலை இடித்து முடித்தனர்.

இது ஒன்று மட்டுமல்ல தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான கோயில்களை அனுமதியின்றி, அரசுக்குச் சொந்தமான இடங்களில் மிகப் பெரிய அளவில் எழுப்பியுள்ளனர்.

சென்னையை எடுத்துக் கொண்டாலும் எண்ணிறந் தவை; சைதாப்பேட்டை, மாடல் பள்ளி எதிரில் ஒரு கோயில் (அர்ச்சகருக்கான குடில் உட்பட) திருவான்மி யூரில் மருந்தீசுவரர் கோயில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் என்று அப்பட்டமான முறையில் பொது இடங்களில் ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

இப்படிப் பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள கோயில்கள் தமிழ்நாட்டில் 77,450. பொது இடங்களில் கோயில்கள் கட்டப்படுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, எம்.கே. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு தெளிவாகத் தீர்ப்பினை வழங்கி இருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பொது இடங்களில் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருக்கும் வழிபாட்டுத் தலங்களை அகற்றாமலோ, வேறு இடங்களில் மாற்றாமலோ இருக்கும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நேரில் வந்து பதில் கூற வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணை பிறப்பித்தனர் (14.9.2010).

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் மட்டும்தான் இப்படிப்பட்ட கோயில்கள் அதிகம். தமிழ்நாட்டில் 77450, ராஜஸ்தானில் 58233, குஜராத்தில் 15,000 - கோயில்கள் அனுமதியின்றிக் கட்டப்பட்டவை.

அருணாசலப் பிரதேசத்தில் மட்டுமே ஒரு இடத்தில் கூடப் பொது இடத்தில் கோயில் கட்டப்படவில்லை என்பதை அறிந்து நீதிபதிகள் நாகரிகமான மாநிலம்! என்று பாராட்டவும் செய்தனர்.

அனுமதி பெறாத கோயில்கள், மசூதிகள், சர்ச்சுகள், குருத்து வாரங்கள் மற்றும் பிற வழிபாட்டு இடங்களை பொது இடங்களிலிருந்தும் பாதைகளில் இருந்தும், அகற்றுமாறும் அவை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கின்றன என்றும், நெரிசலை உண்டாக்குகின்றன என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டிப்பாகத் தெரிவித்தனர்.

நான்கு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நடை பாதைக் கோயில்கள் பொது இடங்களில் கட்டப்பட்ட கோயில்கள் அகற்றப் படவில்லை என்பது -அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்புதான்.

உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பின்மீது தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? தமிழக அரசின் தலைமைச் செயலாளர் உச்சநீதிமன்றம் சென்று விளக்கம் அளித்தாரா என்பதைத் தமிழ்நாடு அரசு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இதில் ஆத்திகம் நாத்திகம் என்ற பிரச்சினைக்கு இடம் இல்லை; அரசாங்கத்துக்குச் சொந்தமான சொத்தை யார் கைப்பற்றினாலும், எந்த நோக்கத்துக் காகக் கைப்பற்றினாலும் குற்றம் குற்றமே! பொது ஒழுக்கச் சிதைவும் ஆகும்!

சென்னை அரும்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை மற்ற மற்ற மாநகராட்சிகளும், நகராட்சிகள் ஊராட்சிகளும் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

நெடுஞ்சாலைக்குச் சொந்தமான இடங்களில் சாலைகளின் இரு மருங்கிலும் மிக அதிக உயரத்தில் அனுமான் சிலைகள் திடீர் திடீரென்று தோற்றுவிக்கப் பட்டு வருகின்றன.

இவற்றை நெடுஞ்சாலைத் துறை கண்டும் காணாமல் இருப்பது எந்த வகையில் சரி? எந்த வகையில் நியாயம்? சட்டத்திற்குமுன் அனைவரும், அனைத்தும் சமம் என்ற கோட்பாடு என்னாயிற்று?

அரசு செயல்படுமா? எங்கே பார்ப்போம்!

Read more: http://viduthalai.in/page1/86234.html#ixzz3BEC2tDJj

தமிழ் ஓவியா said...

வரலாற்றில் வித்தியாசமான இயற்கைப் பேரழிவு ஏற்பட்ட நாள் (21.8.1986)


சுனாமி, புயல், எரிமலை, மற்றும் நிலநடுக்கம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் பற்றிக்கேள்விப்பட்டு இருக்கிறோம்.

ஆனால், வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்ஸிசன் உறிஞ்சப்பட்டு உயிரினங்கள் மரணித்து விடுகிறது என்பது பலர் அறியாத செய்தியாகும். காமரூன் நாட்டில் உள்ள நியோஸ் என்ற ஏரியில் 1986_ஆம் ஆண்டு இதே நாளில் இது போன்ற ஒரு பேரழிவு நிகழ்ந்தது. இதன் காரணமாக வன விலங்குகள், கால்நடைகள் ஆயிரக் கணக்கில் இறந்தன. சுமார் 8000-ஆம் பேர் மூச்சுத்தினறி உயிரிழந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடுமையான சுவாசக்கோளாற்றிற்கு ஆளாகினர். எப்படி நடந்தது?. ஆழமான ஏரிகளில் அடிப்பகுதியில் உள்ள பிளவின் வழியாக கார்பன் டை ஆக் ஸைடு மெல்ல மெல்ல வெளியேறிக் கொண்டு இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு அடர்த்தி அதிகம் கொண்ட வாயுவாக இருப்பதால் இந்த வாயு ஏரியின் ஆழத்திலேயே தங்கிவிடுகிறது. இவை பல ஆயிரம் ஆண்டுகளாக ஏரியின் அடிப்பகுதி யில் இருக்கும்.

நில நடுக்கம் மற்றும் எரிமலைவெடிப்பு போன்ற நேரங்களில் கூட நீர் நிலைகளின் ஆழத்தில் தங்கி இருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வெளிப்படாது. ஆனால் 1986-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் நாள் காமரூன் நாட்டின் பெரிய நகரங்களுள் ஒன்றான மீமோன் என்ற நகரத்தில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலை வில் உள்ள நியாஸ் ஏரியின் கரையில் பகல் 3 மணி அளவில் ஏரியின் கரையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் ஏற்பட்ட அதிர் வலைகள் ஏரியின் அடிப்பகுதிவரை சென்றதால் ஆழத்தில் தேங்கி இருந்த கரியமில வாயு திடீரென ஏரியை விட்டு வெளியேறி வளமண்டலத்தில் கலந்தது. இதன் காரணமாக சுமார் 3000 ஆயிரம் சதுர மைல் தொலைவில் உள்ள வளிமண்டலப்பகுதி அனைத் திலும் ஆக்ஸிஜன் உறிஞ்சப்பட்டு கார்பன் டை ஆக்ஸைடு அந்த இடத்தை நிரப்பத் துவங்கியது. இதன் காரணமாக அருகில் உள்ள சிறு நகரம் மற்றும் 20 கிராமங்களில் வசித்த மக்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்காததால் மூச்சுத்தினறல் ஏற்பட்டது. மனித குல வரலாற்றில் இது போன்ற பேரழிவு முதல் முதலாக நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்று நெடுக வளிமண்டலத் தில் ஆக்ஸிஜன் இன்மையால் ஏற் பட்ட விபத்து குறித்த பதிவு எங்கும் இல்லை. இந்த பேரழிவிற்கு பிறகு கடலில் உள்ள மிகப்பெரிய கரியமில வாயு தேக்கம் மிக்க பகுதிகளை மிகவும் கவனமாக புவியியல் ஆய் வாளர்கள் கண்காணித்து வருகின் றனர். பசிபிக் பெருங்கடலில் ஆழத்தில் இரண்டு இடங்களில் மிகப்பெரிய கரியமில வாயுத்தேக்கம் காணப்படுகிறது. காமரூன் நியாஸ் ஏரியில் ஏற்பட்டது போன்ற விபத்து இங்கு நடந்தால் அதில் வெளிவரும் கார்பன் டை ஆக்ஸைடின் காரண மாக பூமியின் 60 விழுக்காடு உயிரினம் அழிந்துவிடும் ஆபத்து உள்ளது.

Read more: http://viduthalai.in/page1/86235.html#ixzz3BECBuCtM

தமிழ் ஓவியா said...


மதவாதங்களுக்கு மரண அடி!


மதவாதங்களுக்கு மரண அடி!
பாலினத்தை நிர்ணயிக்கும் புதிய மரபணு கண்டுபிடிப்பு

குழந்தை உருவாகும் போது அக் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை எக்ஸ், ஒய் என்கிற குரோமோ சோம்கள் மட்டுமே நிர்ணயிப்பதில்லை. துணை மரபியல் கூறாக உள்ள மிகச் சிறிய மரபணுக்களே முக்கி யப் பங்கை வகிக்கின்றன.

அமெரிக்காவில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் (சிஷீறீபீ ஷிஜீக்ஷீவீஸீரீ பிணீக்ஷீதீஷீக்ஷீ லிணீதீஷீக்ஷீணீஷீக்ஷீஹ்-சிஷிபிலி) அறிவியலாளர்கள் சிறிய மரபணுக்களின் துணைக் குழுக்கள் ஆர்.என்.ஏ மூலக்கூறுகளின் குறியீடுகளாக உள்ளதைக் கண்டறிந்தார்கள். அவற்றை மைக்ரோ ஆர்.என்.ஏ.க்கள் (னீவீஸிழிகி) என்று அழைக்கின்றனர். அதன் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்தபோது, அவை ஆண், பெண் திசுக்களை வேறுபடுத்துவதில் முக்கியப்பங்கினை ஆற்றுவதையும் கண்டு வியந் தார்கள்.

மைக்ரோ ஆர்.என்.ஏக்கள் சிறிய தொகுதிகளாக ஆர்.என்.ஏ.வில் உள்ளன. அவை செயலாற்றும்போது, மரபணுக்களில் ஒன்று அல்லது பல புரோட்டீன் குறியீடுகளை உருவாக்குகின்றன. அவற்றின்மூலம் எந்த ஒரு மரபணுவையும் குறிப்பிட்டு செயலிழக்கச் செய்ய முடியும். பல கூறுகளுடன் கூட்டு மரபணுக் களை திட்டமிட்டவகையில் வளர்ச்சியடையவும் செய்ய முடியும்.

Read more: http://viduthalai.in/page1/86294.html#ixzz3BECw8GEA

தமிழ் ஓவியா said...


கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!


ஞானபூமியாம் இந்த நாடு! புண்ணிய பூமியாம் இந்த நாடு!

பாரத நாடு பழம்பெரும் நாடு - இப்படிப் பாடுவதில் ஒன்றும் குறைச்சல் இல்லை!

நாள்தோறும் வரும் செய்திகளோ, உலக மகா அவமானத்தின் உச்சத்தில் நம் நாட்டைக் கொண்டு செல்லும் அவலச் சுவைகள்!

இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு செய்தி - மூடநம்பிக்கை இந்த நாட்டினை எப்படியெல்லாம் உருக்குலையச் செய்துள்ளது என்பதற்குக் கலங்கரை வெளிச்சம் போல், வெளிச்சம் போட்டு உலகத்திற்குக் காட்டும் செய்தியாகும்!

தெலங்கானா பகுதியில் உள்ள வாரங்கல் பகுதியில் நேற்று ஒரு செய்தி... ஒரு பசு மனித உருவ கன்றுக் குட்டியைப் போட்டதாம்! அது பேச ஆரம்பித்ததாம், (தெலுங்கில் தான் பேசியதோ! அல்லது ஹிந்தி உருது மொழியில் பேசியதோ விசாரிக்க வேண்டும் இனிமேல்தான்) பூகம்பம் வந்து அப்பகுதியே அழியப் போகிறது என்று அந்தப் பசு மாடு மனிதக் குட்டி கூறியதாம்! அதனால் அப்பகுதி மக்கள் பூராவும் வீட்டுக்குள் இருக்காமல், தூங்காமல் இரவெல்லாம் கண் விழித்துக் காத்துக் கிடந்தார்களாம்!
எங்கும் வதந்திகள்! வதந்திகள்!!

அதை நம்பி, செவ்வாய் இரவு முழுவதும் சாவுக்குப் பயந்து, அதே போல புதன் இரவும் இரு நாட்களில் இப்படி விழித்தே வெளியில் பீதியில் குந்தியிருந்தார்களாம் எவ்வளவு பெரிய அறிவுக் கொழுந்துகள் பார்த்தீர்களா? இந்த லட்சணத்தில் கைத் தொலைபேசிகளும் இத்திருப்பணிக்கு - வதந்திக்கு உதவினவாம்! எவ்வளவு வெட்கக்கேடு!
மொபைல்ஃபோன் கண்டுபிடித்தவன் இதைக் கேட்டால் தூக்கு மாட்டிக் கொள்ள மாட்டானா?

கரிம்நகர், வாரங்கல், நாலகொண்டா, மேடாக் பகுதிகளில் குழந்தைகளையும் தூங்கவிடவில்லையாம் பெற்றோர்கள்! என்ன மடமை!!

கோமாதா, குலமாதா என்ன பாடுபடுத்துகிறது பார்த்தீர்களா?

எங்கள் நாட்டுக்கெந்த நாடு ஈடு?

பைத்தியக்காரத்தனத்தைப் பாங்குடன் பரப்புவதில் எந்த நாடு ஈடு?

- ஊசி மிளகாய்

Read more: http://viduthalai.in/page1/86301.html#ixzz3BED2s9IL

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ராகு காலம்

ராகு காலத்தில் வீட்டில் இருந்து கிளம்ப நேரிட்டால் என்ன பரிகாரம் செய்யலாம்?
- ராம. முத்துக்குமரன், கடலூர்

துர்க்கையம்மனுக்கு விளக்கேற்றி சிவப்பு புஷ்பம் சாத்தி வழிபட்டு மனத் தெளிவுடன் கிளம்புங்கள். உங்களுக்கு வெற்றிதான்.
ஓர் ஆன்மிக இதழ்

சரி, ராகு காலத்தில் விமானமோ ரயிலோ புறப்பட்டால் என்ன செய்ய வேண்டுமாம்?

Read more: http://viduthalai.in/page1/86300.html#ixzz3BEDKzGOV

தமிழ் ஓவியா said...

375ஆம் ஆண்டில் சென்னை நகரம்!


சென்னை நகருக்கு இன்று வயது 375; வெள்ளைக் காரர்களால் உருவாக்கப்பட்ட நகரம் இது. சென்னைக் கடற்கரையை ஒட்டியிருந்த சிறுசிறு கிராமங்கள் சென்னைப் பட்டணம் என்று அழைக்கப்பட்டது. 1639இல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியின் முகவர்களாக இருந்த பிரான்சிஸ்டே, ஆண்ட் ரு மேசன் ஆகியோர் ஆங்கிலேயர்களின் குடியிருப்புக்காக இந்தப் பகுதிகளை விலைக்கு வாங்கினர். இது நடந்தது - இந்த ஆகஸ்டு 22 அன்றுதான் (1688 ஆம் ஆண்டு முதல்) சென்னை முதல் நகர சபையாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னரால் அறிவிக்கப்பட்டது.

சென்னை மாநகருக்கு எத்தனை எத்தனையோ சிறப்புகள் உண்டு என்றாலும் - திராவிடர் இயக்கத்தோடு - நீதிக்கட்சியோடு - அது கொண்டுள்ள தொப்புள் கொடி உறவு என்பது மகத்தானது.

வணக்கத்துக்குரிய முதல் மேயர் என்ற பெருமையாளர் நீதிக் கட்சியின் தோற்றுநர்கள் மூவர்களுள் ஒருவரான வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர் ஆவார். 1882 இல் சென்னை மாநகராட்சி உறுப்பினராக கால் பதித்த தியாகராயர் 1925ஆம் ஆண்டு வரை 43 ஆண்டுகள் சென்னை மாநகராட்சிக்கு மிகப் பெரியளவு தொண் டாற்றினார். இவர் காலத்தில் தான் முதன் முதலாக மதிய உணவு என்ற சிறப்பான திட்டத்துக்கு அடிகோலிடப் பட்டது.

சென்னை சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சி வெற்றி பெற்ற நிலையிலும் அதன் தலைவரான தியாகராயர் தலைமையேற்க ஆளுநர் அழைப்புக் கொடுத்த போதிலும், பெருந்தன்மையாக கடலூர் சுப்பராயலு ரெட்டிக்கு விட்டுக் கொடுத்து அரசியல் உலகில் விடிவெள்ளியாக ஒளி வீசினார். அவர் பெயரால் அமைந்ததுதான் தியாகராயர் நகர். அதனை டி.நகராகச் சுருக்கி நீதிக் கட்சித் தந்தையின் பெயரை இருட்டடிப்புச் செய்தது இயல்பாக நடந்ததல்ல - திட்டமிட்ட சதியே! இன்றைக்குக்கூட தொடர் வண்டி நிலையத்திற்குப் பெயர் மாம்பலம்தான்; தியாகராயர் நகருக்குச்செல்ல இங்கே இறங்கவும் என்ற அறிவிப்புப் பலகையைப் பார்க்கும் அவல நிலை!

தியாகராயர் நகரும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நீதிக்கட்சித் தலைவர்களின் பெயர்களை காணலாம். டாக்டர் நடேசன் பூங்கா அங்கே; சென்னைத் திராவிடர் சங்கத்தைப் பிரசவித்த தாய் இவர்தான்! இதுதான் பிற்காலத்தில் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாகப் பரிணாமம் பெற்றது; இவரும் சென்னை மாநகராட்சியின் உறுப்பினராகப் பல்லாண்டு காலம் இருந்து சென்னை மக்கள் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார்.

தியாகராயர் நகரில் டி.எம். நாயர் சாலையும் உண்டு திராவிடர் இயக்கத்தை உருவாக்கிய மும்மூர்த்திகளுள் ஒருவர் இவர் பிரபலமான காது, மூக்கு, தொண்டை (ணிழிஜி ஞிஷீநீஷீக்ஷீ) நிபுணர்.

ஆற்றல் வாய்ந்த பேச்சாளர்- எழுத்தாளர் - இவரது பங்களிப்பும் சென்னை மாநகராட்சிக்கு உண்டு. இங்கி லாந்துவரை இரு முறை சென்று வகுப்புவாரி உரிமைக் காகக் குரல் கொடுத்தவர் - நாடாளுமன்றத்தில் சாட்சியம் அளித்தவர் - லண்டனிலேயே உயிரையும் விட்டவர்.

பார்ப்பான் கெஞ்சினால் மிஞ்சுவான், மிஞ்சினால் கெஞ்சுவான் என்ற புகழ் பெற்ற வாக்கிய அனுபவ மொழியை வழங்கிய வள்ளலும் இவரே! இலண்டனில் இவர் மறைந்தார் என்று சேதி கேட்டு திருவல்லிக்கேணி கோயிலில் தேங்காய் உடைத்துக் கொண்டாடினர், பார்ப்பனர்கள் என்றால் பார்த்துக் கொள்ளலாமே!

பனகல் பூங்காவும் தியாகராயர் நகரில் உண்டு. நீதிக்கட்சி ஆட்சியின் பிரதம அமைச்சராக இருந்து, வரலாற்றில் மங்கா ஒளி விளக்குச் சாதனைச் சரித்திரத்தைச் சமைத்த சான்றோர். பனகல் அரசர் என்ற ராமராய நிங்கர்

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பனச் சூழ்ச்சியை, தடையைத் தகர்த்தெறிந்த தளகர்த்தர் இவரே! இந்து அறநிலையப் பாதுகாப்புச் சட்டமும் இவர் கை வண்ணமே! தந்தை பெரியார் அவர்களின் பேரன்புக்கும் பெரு மதிப்புக்கும் உரியவர்; பார்ப்பனர்கள் இவரை மகாமகா சாணக்கியர் என்று கூறுவார்கள் என்றால் தெரிந்து கொள்ளலாமே!

தியாகராயர் நகரில் உள்ள பாண்டி பஜார் என்பது சுயமரியாதை இயக்கத்தின் தலைவராக இருந்த ஊ.பு.அ. சவுந்தரபாண்டியர் பெயர் தான் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

இவர் இராமநாதபுரம் மாவட்ட கழகத் தலைவராக (District Board President) இருந்தபோதுதான் பேருந்து களில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கவில்லையென் றால் சம்பந்தப்பட்ட பேருந்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உத்தரவிட்ட உதாரண மாமனிதர்.

உஸ்மான் சாலை என்று இருக்கிறதே - அவரும்தான் யார்? நீதிக்கட்சி ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந் தவர். சென்னை மாநிலத்தில் தற்காலிகக் கவர்னராகவும் இருந்த பெருமைக்குரியவர். சென்னை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் பரிணமித்தவர்.

ஓ.தணிகாசலம் சாலை என்று இருக்கிறதே - அவர் யார்? நீதிக்கட்சியின் பிரமுகர் - வழக்குரைஞராகவும் குற்றவியல் தலைமை நீதிபதியாகவும் விளங்கிய நந்தா விளக்கு! இவரும் சென்னை மாநகராட்சியின் உறுப் பினராக இருந்தவர்தான்.

சென்னை சட்ட மேலவையில் திருவாளர் சத்திய மூர்த்தி அய்யருக்குச் சிம்ம சொர்ப்பனமாக நின்றவர்.

தமிழ் ஓவியா said...

1921இல் அவரால் முன்மொழியப்பட்டு டாக்டர் சி. நடேசனாரால் வழிமொழியப்பட்ட இரு தீர்மானங்கள் என்றென்றைக்கும் அவர்களைப் பேச வைத்துக் கொண்டே இருக்கும். கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், இதர நலிவடைந்த பிரிவினர்கள் உள்ளடங்கிய பார்ப்பனரல்லாத சமுதாயங் களைச் சேர்ந்தவர்களே இனிமேல் சென்னை அரசாங்கத் தில் எல்லாத் துறைகளிலும், எல்லாப் பணியிடங்களுக்கும் அவர்கள் அந்தப் பணிகளுக்கு என்று விதிக்கப்பட்ட குறைந்தபட்ச தகுதியே பெற்றிருந்தாலும் தேர்ந்தெடுக் கப்பட வேண்டும் (பார்ப்பனர்கள் அதிக தகுதி வாய்ந்தவர் களாக இருந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுக்கக் கூடாது).

மற்றொரு தீர்மானம் இதோ: மேலே கூறப்பட்டவை களை உள்ளடக்கி அரசாங்கம் ஒரு நிலை ஆணை பிறப்பிக்க வேண்டும். அந்தநிலை ஆணை மாதம் ரூ.100-க்குக் குறைந்த சம்பளம் பெறும் பணிகளில் 75 சதவீதமும், மாதம் ரூ.100-க்கு மேல் சம்பளம் பெறும் பணிகளில் 66 சதவீதமும் பார்ப்பனர் அல்லாதாரால் நிரப்பப்படும் வரை செயல்படுத்தப்பட வேண்டும் குறைந்தபட்சம் இந்த நிலை ஏழு ஆண்டுகள் வரை செயல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவ்விரு தீர்மானங்களும்.

சென்னையில் உள்ள தியாகராயர் நகருக்குள்ள இன்னொரு தனிச் சிறப்பு - அந்நகரில்தான் திராவிட இனத் தின் விடிவெள்ளி பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்அவர்கள் மரண சாசனமாக முழங்கிய இறுதி முழக்கத்தை முடித்தார். சென்னை மாநகரின் வளர்ச்சியில் நீதிக்கட்சி தலைவர்களின் அணி வகுப்பு எந்த அளவுக்கு இருந்தது என்பதை சென்னை மாநகராட்சியின் 375 ஆம் ஆண்டு விழாவில் நினைவு கூர்வோம். அத்தலைவர் களின் கோட்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல உறுதி கூறுவோம்!

Read more: http://viduthalai.in/page1/86306.html#ixzz3BEDWqKKt

தமிழ் ஓவியா said...


கைவல்யம் நாள் (22.8.1877)


இன்று சாமி கைவல்யம் பிறந்த நாள் (1877. யார் இந்த கைவல்யம்? 1877இல் கேரளத்தைச் சேர்ந்த கள்ளிக்கோட்டையில் பிறந்தவர் இயற்பெயர் பொன்னுசாமி. இவர்களின் முன்னோர்கள் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒரு முறை இவர் கரூருக்கு வந்தார். அங்குள்ள மவுனசாமி மடத்துக்குச் சென்றார். அங்கு சில சாமியார்கள் உண்டு. வேதாந்த விசாரணைகள் நடைபெற்றன. கைவல்யம் என்ற வேதாந்த விசாரணை நூல் பற்றிப் பேசப்பட்டது. கைவல்யம் தொடுத்த வினாக்கள், விசாரணைகள் பலரையும் அதிரச் செய்தன. இதன் காரணமாக அவர் கைவல்யம் என்றே அழைக்கப்படுபவர் ஆனார்.

அவரது தர்க்க ஞானம் முதலில் பார்ப்பன மதக் கொள்கை எதிர்ப்பிலிருந்து கிளர்ந்து எழுந்ததாகும். நாடு பூராவும் சுற்றித் திரிவார். வேதாந்த விசாரணைகளில் ஈடுபடுவார். பார்ப்பனீயத்தை நிலை குலையச் செய்யும் கூர்மையான அம்புகள் அவை!

தந்தை பெரியார் அவர்களின் நண்பர் ஆனது இயல்புதானே! தொடக்கத்தில் தர்க்கத்தில் ஆரம்பித்துப் பின்னர் இணை பிரியாக் கொள்கைக் கயிற்றால் இணைந்து நண்பர்கள் ஆனார்கள்.

குடிஅரசில் கைவல்யம் எழுதி வந்த கட்டுரைகள் ஆணித்தரமானவை. எழுத்து நடையோ புத்தம் புதிய பாணி! இசைபாடும் அருவி நீரோட்டம் போன்றது.

அடுக்கடுக்கான ஆதாரக் கருவூலங்கள் வந்து விழுந்து கொண்டே இருக்கும். பராசரஸ்மிருதியும், மனுதர்மமும் அவருக்கு அத்துப்படி!

கைவல்யம் வருகிறார் என்றால், சாமி யார்கள் ஆட்டம் கண்டு போய் விடுவார் களாம். எதிரிகள் வயிற்றைக் கலக்குமாம். கழிந்து விடுவார்களாம்; வாய் வறண்டு போகுமாம்; தொண்டை வற்றிப் போகுமாம்! அப்படியொரு அசைக்க முடியாத ஆற் றலுக்குச் சொந்தக்காரர்.

ஒருமுறை தந்தை பெரியாரும், சாமி கைவல்யமும் ஏனாளம்பள்ளி ஜமீன்தாரின் திருமணத்திற்குச் சென்றி ருந்தனர். விருந்தில் பக்கம் பக்கமாக அமர்ந்திருந்தனர். பந்தி பரிமாறிய பார்ப்பானிடம் தண்ணீர் கேட்டார் கைவல்யம். அவர் இலைக்கு முன்னிருந்த டம்ளரை சர்வர் பார்ப்பான் எடுத்தான். உடனே பக்கத்தில் இருந்த சமையல்காரப் பார்ப்பான். என்னடா மடையா? சூத்திரன் குடித்த டம்ளரைத் தொட்டு எடுத்து விட்டாயே? என்றா னாம். அவ்வளவுதான்! வந்ததே கோபம் கைவல் யத்துக்கு, அந்தப் பார்ப்பான் கன்னத்தில் எச்சில் கையாலேயே ஒரு ப்ளார்! யாரடா சூத்திரன்? ன்ற தன்மானக் கேள்வி. சிறு கலகமாகி அதன்பின் அடங்கியத. சூத்திரன் என்றால், ஆத்திரம் கொண்டு அடி! என்பது இதுதான்.

Read more: http://viduthalai.in/page1/86312.html#ixzz3BEDxxin8

தமிழ் ஓவியா said...


புத்தர் அறிவுரைகள்


இரக்கத்தோடும் உபகார சிந்தையோடும் இருப்பது மகிழ்ச்சியோடு இருப்பதாகும்.

------------------------

உலகத்தில் உள்ளும் புறமும் அறிவற்ற வஸ்து எதுவும் கிடையாது. உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண் டேயிருக்கின்றன. தோன்றியது அழியும்.

------------------------

கோவணாண்டி கோலமோ ஜடை முடியோ, அழுக்கேறிய உடம்போ, பட்டினி கிடத்தலோ, மண்மீது புரளுவதோ, மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தலோ, ஆசை வெல்லாத ஒருவனை பரிசுத்தவானாக்கி விடாது.

------------------------

முட்டாள்களுடன் கூடி வாழ்வதை விட தனியாக வாழ்வதே மேல்.

------------------------

பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும் திட்டுகிறார்கள். அதிகம் பேசுபவனையும் திட்டு கிறார்கள். திட்டப்படாத மனிதனே உலகத்தில் இல்லை. எப்பொழுதுமே திட்டப்படுபவனாக அல்லது எப்பொழுதுமே போற்றப்படுபவனாக ஒரு மனிதன் இருந்ததும் இல்லை; இருக்கவும் இல்லை; இருக்கப் போவதும் இல்லை.

Read more: http://viduthalai.in/page1/86308.html#ixzz3BEFJpIiy

தமிழ் ஓவியா said...

ஆள் இல்லை!

...... முன்பு புராண இதிகாசங்களைத் தேடிக் கண்டு பிடித்தார்கள். பின்பு படித்தவர்கள் கூறினால் விளங்கிக் கொள்வார்கள்.

.... போகிற போக்கைப் பார்த்தால் வீடு தேடிப் போய் சொன்னாலும் கேட்க ஆள் அகப்படாது எனத் தோன்றுகிறது.

- கிருபானந்தவாரியார்
(10.6.1979 ஆனந்த விகடன், பக்கம் 55)

Read more: http://viduthalai.in/page1/86308.html#ixzz3BEFRp6BP

தமிழ் ஓவியா said...


மருத்துவம் வென்றது

எனது நண்பர் குப்புசாமி என்பவர் ஒருநாள் காலைக் கடன் முடித்து, பக்கத்திலுள்ள சிற்றோடைக்குச் சென்று கால் கழுவ அமர்ந்திருக்கிறார். அப்போது அவரது மர்ம ஸ்தானத்தின் பக்கவாட்டில் ஏதோ சுருக்கென வலி எடுத்ததாம்.

அதைப் பொறுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். ஆனால், சிறிது நேரத்தில் அவரது மர்ம ஸ்தானம் பெரிதாக வீங்க ஆரம்பித்து விட்டது. அதோடு காய்ச்சலும் அடித் திருக்கிறது. இதனை அறிந்த பெற்றோர், மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர். ஆனால், பயனில்லை.

அதன் பிறகு, எனது நண்பரின் உறவினர் ஒருவர் மீது சாமி வந்து, நீ வரும்போது முனீஸ்வரன் எதிர்ப்பட்டு விட்டது. அதனால்தான் இந்தத் தொல்லை. ஆகவே, பால் அபிஷேகமும், கோழியும், துணிமணியும் முனீஸ்வர வனுக்குக் கொடுத்தால் உனது நோய் நீங்கும் என்று கூறிற்றாம். பெற்றோர்களும் இதற்குச் சம்மதித்தனராம்.

இந்நிலையில் குப்புசாமி என்னை அழைத்து வரும்படி தனது மனைவியிடம் சொல்லிய னுப்பியிருந்தார். நானும் சென்று நண்பரைச் பார்த்து விவரம் கேட்டேன். நடந்ததை யெல்லாம் அவர் கூறினார். நான் அவரிடம், ஏனப்பா, இதெல்லாம் பொய் யென்று உனக்கு தெரியாதா? இனியுமா மந்திரத்தையும், மாயத் தையும் நம்பிக் கொண்டிருக் கிறாய்! உடனே மருத்துவ மனைக்கு போய் உடம்பைக் கவனி என்று அறிவுரை கூறினேன்.

அவரும், தனது பெற்றோர்கள் வேலை இதெல்லாம் என்று கூறி, மருத்துமவனைக்குச் செல்வதாக உறுதி கூறினார். அதன் பிறகு அவர் எழுதச் சொன்ன கடிதத்தை எழுதிக் கொடுத்து விட்டு வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து நண்பரை காணச் சென்றேன். அவர் உடல் நலம் தேறி நன்றாக இருந்தார்.

அவரிடம், இனியும் இப்படி நடக்காதே! மூடக் கருத்துக் களை விட்டொழி! தந்தை பெரியாரின் அறிவுரைகளை நீயும் உன் குடும்பத்தாரும் கடைப்பிடித்தால் இது போன்ற செயல்களைத் தடுக்கலாம் என்று கூறினேன். அவரும் புன்னகையோடு ஏற்றுக் கொண்டார்.

பெ. இராதாகிருஷ்ணன் (தி.க.), சென்னை -7

Read more: http://viduthalai.in/page1/86309.html#ixzz3BEFa4GNy

தமிழ் ஓவியா said...


விடை என்ன?


தமிழ்நாட்டுக் கல்விக் கடவுள் சரசுவதி என்றால், ஆங்கில நாட்டுக் கல்விக் கடவுள் யார்?

ஆத்திகக் கம்பனுக்கும், காளிதாசனுக்கும் நாவிலே அருள் பாலித்தது சரசுவதி என்றால், அகில உலகப் புகழ் பெற்ற நாத்திகத் தந்தை பெரியாருக்கும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும், அறிஞர் அண்ணாவுக்கும், நாவிலே அருள்பாலித்தது யார்?

சரசுவதி பூசை கொண்டாடாத மேலை நாடுகளில் - கடவுளையே குப்பை குழிக்கு தள்ளிய ரஷ்யாவில் நூற்றுக்கு நூறு பேரும் படித்திருக்க காரணம் என்ன? சரசுவதியை வணங்கியே கல்வி, அறிவு பெறலாம் என்றால் பள்ளிகளும், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும், ஆசிரியர்களும் தேவை இல்லை அல்லவா?

பெற்ற தந்தை பிரம்மனாலேயே பெண்டாளப்பட்ட சரசுவதியா நமக்குக் கல்விக் கடவுள்? அவள்தான் கடவுள் என்றால், அந்தக் கல்வி ஒழுக்கத்தைப் போதிக்குமா?

பெற்ற தந்தை பிரம்மனாலே பெண்டாளப்பட்ட சரசுவதி கல்விக் கடவுளா? அல்லது கலவிக் கடவுளா? சகலகலாவல்லி சரசுவதி என்றால், அவள் ரஷிய, சீன, கல்விக் கலையையும், கல்வி முறைகளை அறிந்தவளா?

நவராத்திரி! தமிழர் விழா என்பதற்கு ஆதாரமான இலக்கிச் சான்று உண்டா? தமிழர் மறை என்று பெருமையாக சொல்லப்படுகின்றன திருக்குறளிலாவது நவராத்திரிக்கு ஆதாரமுன்டா?

இந்துமதப் பண்டிகை நவராத்திரி என்றால், அது ஏன் வைணவ ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட வில்லை?

ஆயுத பூஜை கொண்டாடும் இந்து மதப் சைவ பக்த தமிழா! நீ இன்றுவரை கண்டுபிடித்து உலகிற்கும் அறிமுகப்படுத்திய ஆயுதம்தான் என்ன?

அணுக்குண்டையும், அய்ட்ரஜன் குண்டையும், ஆகாய விமானத்தையும் கண்டுபிடித்தவன் கொண்டாடாத ஆயுத பூஜை - அரசமரத்தையும், ஆலமரத்தையும் சுற்றுப வனுக்கு ஒரு கேடா? ஆயுதங்களைக் கண்டுபிடிப்பது மேல் நாட்டான்; பூசை மட்டும் நடத்துவது நாமா?

வி.எம்.கே.லிங்கன், குடந்தை
(15.8.1979-உண்மை)

Read more: http://viduthalai.in/page1/86311.html#ixzz3BEFs0oI7

தமிழ் ஓவியா said...

அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா...


ஆப்.கி.பார் டிராமா சர்க்கார்

அண்ணன் மோடியின் அடுத்த ஜீ பூம்பா...


ஒலகத் தலவரா அவதாரம் எடுக்கற அடுத்த முயற்சியில நம்ம அண்ணன் நேபாளம் போனது எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்... அங்க கோவிலுக்குப் போனாரு, ரோட்ல நடந்தாரு, அல்லாரையும் பாத்தாரு. இதெல்லாம் தாண்டி இன்னொரு சூப்பர் வேல செஞ்சாரு. அது என்னா? செண்டிமெண்டா அடிச்சாரு.

எம்.ஜி.ஆர் நடிச்ச நாளை நமதே படத்த ரீரிலிஸ் பண்ணாரு. பல வருசம் முன்னாடி ஜீத்பகதூர்னு ஒரு பையன் அப்பா, அம்மாவ பிரிஞ்சி இந்தியா வந்துட்டான்.

அவன அண்ணன் குஜராத்ல கண்டெடுத்து வளத்தாரு. அவனும் வளந்தான், அண்ணனும் வளந்தாரு. அவன் பெரிய பையன் ஆனான், அண்ணன் பிரைம் மினிஸ்டர் ஆனாரு.

அவன அவங்க குடும்பத்தோட சேத்து வைக்கனும்னே நேபாள் டூர் போட சொன்னாரு. நேபாளுக்கு ஜீத்பகதூரையும் கையோட கூப்பிட்டுக்கிட்டுப் போனாரு. பிரியா படத்து ரஜினி மாதிரி ரோடு ரோடா பாடிக்கிட்டே போனாரு. அவங்க குடும்பத்தக் கண்டு பிடிச்சாரு.

அவங்ககூட சேத்து வச்சி, கண்கலங்குனாரு. நாளை நமதே இந்த நாளும் நமதே பாட்டு ஓடுச்சு. கூடி நின்ன இந்தியப் பத்திரிக்க கண்ணெல்லாம் ஆறா ஓடுச்சு. ஆனா ஜீத்பகதூரு கலங்கவேயில்ல... ஏன்? அங்கதான் ஒரு டிவிஸ்ட். ஜீத்து, மோடி அண்ணனுக்கே தெரியாம திருட்டு லாரில போயி அவங்க குடுமபத்த 2012 ஆகஸ்ட் 23_லயே பாத்துட்டான். இத அவன் தன் மூஞ்சிபுத்தகத்ல (Facebookல) படமா போட்டுட்டான். இது அண்ணனுக்குத் தெரியாமலே இருந்துடுச்சி.

அதுக்கு முன்னாடி 2012 ஜூன் 17ஆம் தேதி ஜீத் போட்ட ஸ்டேடஸ்:

Hey Fri Gm
Bye bye India.

2012 ஜூன் 19ஆம் தேதி போட்ட ஸ்டேடஸ்:

Hey Fri Today is I m v happy
Bcos I m my home (Nepal)

இதுவும் வளமான குஜராத் கதயான்னு யாரும் கேக்கக் கூடாது. அது அல்லாம் அண்ணன் தூங்கும் போது நடந்தது. ஆனாலும் அண்ணன் கடம ஒணர்ச்சியோட ஜீத்பகதூர அவங்க குடும்பத்தோட சேத்து வச்சிட்டு ட்வீட்டும் போட்டுட்டாரு.

அப்ப நம்ம வேல... ம், பாடுங்க...

# நாளை நமதே, இந்த நாளும் நமத

- எஸ்.எஸ்.சிவசங்கர்

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?


இராசாராம் மோகன்ராய் வேதங்களின் கருத்துகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தபோது, தங்களைத் தவிர வேறுயாரும் அதைப் படிக்கக் கூடாது என்று காரணம் காட்டி, பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

தமிழ் ஓவியா said...

கல்கியின் பூணூல் வித்தை


என்னடா.. இது! கல்கிக்கு வந்த தமிழ்ப் பற்று! சமஸ்கிருத வாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டாராம் ஜெயலலிதா. அந்தத் தியாகத்தை, போர்க்குணத்தைப் படம் போட்டுப் பெருமைப்படுகிறது கல்கி (3.8.2014). உங்க சோலையில இந்த மயிலையும் கொஞ்சம் ஆடவிடுங்க என்று மென்மையாக சமஸ்கிருத வாரத்தை நுழைத்து, வான்கோழியாகிய இந்தியைத் திணிக்கிறாராம்.

அதனால் தமிழ்ப்பூங்காவில் மோடி நுழைக்க வந்த இந்தியையும், சமஸ்கிருதத்தையும் அம்மையார் தடுக்கிறார்.

அதெல்லாஞ் சரி! அனை வருக்கும் தெரியும் என்பதால் ஆதரிக்க முடியாது என்ற நிலையில், இந்தியைத் திணிப்பு என்றும் வான்கோழி என்றும் பொதுவாக எதிர்ப்பது போல் காட்டிவிட்டு, அதனினும் விஷமான சமஸ்கிருதத்தை மயில் என்று சாங்கோபாங்கமாக உயர்த்திக் காட்டுகிற வித்தை அட..அட... இதுதாங் காணும் பூணூல் வித்தை!

- அன்பன்

தமிழ் ஓவியா said...

கடவுள் இருந்தால்....!


கடவுள் நம்பிக்கையாளர்கள் பலரும் நம்பும் கடவுளின் முக்குணங்கள், முத்தன்மைகள் - மனித சக்திக்கு மேற்பட்டதாக கூறப்படுவன.

(1) சர்வ சக்தி - எல்லாம் வல்லவன்.

(2) சர்வ வியாபி - எங்கும் நிறைந்த பரம்பொருள்.

(3) சர்வ தயாபரன் - கருணையே வடிவானவன்.

உள்ளபடியே அப்படிப்பட்ட தன்மைகள் அக்கடவுளர் - கடவுளச்சிகளுக்கு உள்ளனவா என்று எந்த பக்தராவது புத்திகொண்டு சிந்திக்கின்றனரா? ஆராய்கின்றனரா? இல்லையா?

வெறும் நம்பிக்கை அதுவும் குருட்டு நம்பிக்கைதானே.

அதனால்தான் பக்தி வந்தால் புத்தி போகும், புத்தி வந்தால் பக்தி போகும் என்றார் அனுபவரீதியான வகையில் அறிவு ஆசான் தந்தை பெரியார்!

அன்றாடம் அத்துணை மதநம்பிக்கையாளரும் கடவுளை வணங்கி, பிராத்தனை என்ற கையூட்டும் - லஞ்சமும் தரத் தவறுவதே இல்லை.

அப்படி இருந்தும் அன்றாட நிகழ்வுகள் பெரும்பாலான மக்களுக்குத் துன்பமும், இழப்பும், தொல்லையும் ஆகத்தானே உள்ளதே தவிர, மகிழத்தக்கதாக உள்ளதா?

கடவுளை நம்பாத, நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் மட்டும்தான் தொல்லைகளை, துன்பத்தை அனுபவிக்கின்றார்களா? இல்லையே. நம்பிக்கையாளர்களில் பெரும்பாலோர் இப்படி துன்பத் தீயில் வெந்து கருகுகின்றனரே.

உத்தரகாண்டில் யாத்திரைக்குப் போனவர்கள் அளவுக்கு அதிகமான மழை, வெள்ளம் மூலம் அடித்துச் செல்லப்பட்டவர்கள்,

மராத்திய மாநிலம் புனேயில் மலின் என்ற ஊரில் பழங்குடிமக்கள் வீடுகளோடு, நிலச்சரிகளில் புதையுண்டு பிணக்குவியல்களைத் தோண்டி எடுக்கும் அவலம் கண்றாவிக் காட்சி அல்லவா?

பீகாரில் நதி வெள்ளப் பெருக்கெடுத்ததோடு, பல்லாயிரவர் வீடிழந்து, வாழ்விழந்து நிற்கின்றனர்!

இஸ்ரேலில் - பாலஸ்தீனப் பச்சிளங் குழந்தைகள்மீதும் ஈவிரக்கமில்லா இஸ்ரேலின் குண்டுமழை,

சீனாவில் 3.8.2014இல் 6.8 ரிக்டர் அளவுக்கு கடும் பூகம்பம் - பல நூற்றுக்கணக்கில் மக்கள் பலி,

கோவில் தரிசனம் மற்றும் பல மத விழாக்களுக்குச் சென்று, நேர்த்திக்கடன், காணிக்கை தந்துவிட்டுத் திரும்புவோர் சாலை விபத்துகளில் குடும்பம் குடும்பமாகப் பலியாகும் கொடுமை!

பச்சிளம் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி பிணமாகும், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத சோகச் செய்திகள் நாள்தோறும் வருகின்றனவே.

கடவுள் சர்வசக்தி படைத்தவராக இருப்பின் தடுத்திருக்க வேண்டாமா?

கடவுள் சர்வ வியாபி - எங்கும் நிறைந்தவர் _ இப்படி நடப்பதை வேடிக்கை பார்த்து வாய்மூடியாக இருப்பாரா?

எல்லாவற்றையும்விட மேலாக கருணையே வடிவானவராக இருந்தால், தனது பிள்ளைகள், தன்னால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் இப்படிக் கொத்துக் கொத்தாக கொள்ளைச்சாவு சாவுவதைக் கண்டு வாளா இருப்பாரா?

எண்ணிப் பாருங்கள்!

நாத்திகம் நன்னெறி என்பது அப்போது புரியும்.

கி.வீரமணி,
ஆசிரியர்.