Search This Blog

2.8.14

லஞ்சம் பற்றி பெரியார்



நமது நாட்டிடை இது காலை அரசாங்க ஊழியர்களுக்குள்ளும் பொது மக்களுக்குள்ளும் லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் மிகவும் எளிய வழக்கமாகப் போய்விட்டது. மக்களிடை இவ்வித வழக் கங்களை இழிவாய்க் கருதும் மனப்பான் மையும் மாறி விட்டது. அரசாங்க ஊழியர்கள் என்போர் ஓர் ஊரினின்றும் மற்றொரு ஊரிற்கு மாற்றப்பட்டு வந்தால் முதன் முதலாகஅந்த ஊரில் லஞ்சம் வாங்கிக் கொடுக்கும் தரகர்களைத் தேடுவதுதான் அநேகமாய் அவர்களது வேலையாய் இருக்கின்றது.

பொது மக்களும், அரசாங்க நீதிமன்றங்களிலோ நிர்வாக மன்றங்களிலோ தங்களுக்கு ஏதேனும் அலுவல்கள் ஏற்பட்டால் லஞ்சம் வாங்கிக் கொடுக்கத் தரகர்களைத் தான் முதலில் நாடுகிறார்கள். இவ்விரு கூட்டத்தாரிடையினும் லஞ்சம் வாங்கவும் கொடுக்கவும் தற்காலம் பெரும்பாலும் வக்கீல் கூட்டங்களிலிருந்தே தரகர்கள் தெரிந்தெடுக்கப்படுகின்றனர்.

இதனால் நியாயமன்றங்களில் விவகா ரங்களைத் தாக்கல் செய்ய வேண்டிய கட்சிக்காரர்கள் நியாயாதிபதிகளுக்குத் தரகர்களாய் இருக்கும் வக்கீல்கள் யாரோ, அவர்களிடமே அதிகம் செல்லுகின்றனர் சில வக்கீல்களும் தங்களுக்கு இவ்வளவு நியாயாதிபதிக்கு இவ்வளவு என்று பேசியே தொகை வாங்குகின்றனர்.

சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குகின்றனர். சில அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதில்லை என்று சொல்லிக்கொண்டு சிற்சில வக்கீல்களிடம் சிநேகமாகவும் தாட்சண்ய மாகவும் பாரபட்சமாகவும் நடந்து கொண்டு அதன் மூலமாக வக்கீல்களுக்கு வரும்படி செய்து வைத்து அவர் களிடம் பணமாக அல்லாமல் வேறு வழிகளில் தாங்கள் லாபம் அடைகின் றனர்.

இதை வழக்கத்தில் லஞ்சம் என்று சொல்லாவிடி னும், இது போன்ற செயல்கள் உண்மை யான லஞ்சத்தின் பலனையே உண்டாக்கு கின்றது. தாட்சண்யம் காட்டப்படும் வக்கீல்கள் இதன் பலனாய் லஞ்சம் என்கிற பெயரால் இல்லாவிடினும்,வேறு வழியில் கட்சிக்காரர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுகின்றனர். இதனால் அநேகமாய் இவ்வழக்கமுள்ள வக்கீல் களிடம் தான் கட்சிக்காரர்கள் செல்லு கின்றனரே அன்றி, கெட்டிக்காரர்களாக வும் யோக்கியமாகவுமுள்ள வக்கீல்களி டம் செல்லுவதில்லை.

அரசாங்க ஊழியர் என்று சொல்லும் அதிகாரிகளும் லஞ்சம் வாங்குவதில் பலவித தத்துவங் களை உபயோகிக்கின்றனர். சிலர் இரண்டு கட்சிக்காரரிடம் வியாபாரம் பேசுவது போல் பேசி, அதிக தொகை கொடுத்த வனுக்கு அனுகூலமாகவே தங்கள் தீர்ப்பைக் கொடுக்கின்றனர். சில சமயங் களில் இரண்டு பேரிடமும் வாங்கிக் கொண்டு இருவரையும் திருப்தி செய்யும் படி ராஜி செய்து அந்த ராஜிக்கு ஏற்ற விதமாய் தங்கள் தீர்ப்பை அளித்து விடு கின்றனர்.

சில தருணங்களில் ஒரு கட்சிக்கார ருக்குத் தெரியாமல் மற்றொரு கட்சிக்கார ரிடம் இவ்வளவிற்குக் குறைவில்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும், இன்னொரு கட்சியாரிடம் இவ்வளவுக்கதிகமல்லாத தொகைக்கோ, தண்டனைக்கோ தீர்ப்புச் செய்கிறேன் என்றும் இருவரிடமும் வாங்கிக் கொள்ளுவதும், சில தருணங் களில் பெரிய தண்டனை செய்ய வேண்டி யதையோ, பெரிய தொகைக்குத் தீர்ப்புச் செய்ய வேண்டியதையோ குறைந்த அளவிற்குச் செய்வதாய்ச் சொல்லி வாங்குவதும், இன்னும் சில சந்தர்ப்பங் களில் தங்களிடமுள்ள விவகாரங்களில் நியாயம் இன்னாருக்குத்தான் என்று தெரிந்து அந்தக் கட்சியாரிடம் வாங்கிக் கொள்ளுவதும் இப்படி இன்னும் அநேக விதமாய் வாங்கப்படுகின்றன.

இப்படி வாங்கப்படும் லஞ்சங்கள் பெரும்பான்மை யாய் முழுவதும் தாங்களே அடைவ தில்லை. மேல் அதிகாரிகளுக்கும் பங்கு கொடுக்க நேரிட்டு விடுகின்றது. அந்தப் பங்கு என்பது தொகையாகவோ, சப் ளைகள் மூலமாகவோ, சாமான்களாகவோ, வேறுவிதமாய் அவரைத் திருப்தி செய் வதன் மூலமாகவோ பங்கு செலுத்தி யாகிவிடுகின்றது.

அப்படிச் செலுத்தி மேலதிகாரிகளுக்கு நல்லவனாய் நடந்து கொண்ட இவ்வதிகாரிகள் வெகு தைரியமாய் தங்களுடைய தீர்ப்புகளைக் கடைவைத்து வியாபாரம் செய்வது போல் விற்று வருகின்றனர். பொது ஜனங்களும் கடைகளில் கத்தரிக்காய், வாழைக்காய் விலைபேசி வாங்குவதுபோல தீர்ப்பை விலைக்கு வாங்குகின்றனர்.

இவை பெரும்பாலும் வெளிப்படையான ரகசியங் களாய் விளங்குகின்றன. வியாஜ்யங்களும், விவகாரங்களும் அதிகமாகிக் கொண்டு வருவதற்கு நமது நாட்டு வக்கீல்கள் முக்கியக் காரண மென்று சொல்லுவது ஒரு பக்கமிருந்த போதிலும், இந்த லஞ்சம் வாங்கலும் கொடுக்கலும் அதற்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்லவென்றே சொல்லலாம்.

மேல் அதிகாரிகள் என்று சொல்லப்படு வோர் லஞ்சம் வாங்கும் கீழ் அதிகாரி களிடம் பங்கு வாங்காவிட்டாலும் குருட்டுத்தனமான அபிமானத்தாலோ, வேறு சிபாரிசின் காரணங்களாலோ, தங்கள் இஷ்டம் போல் நடக்கிறார்கள் என்பதினாலோ, அல்லது நாம் தாம் வாங்குவது போலவே அவரும் வாங்கி விட்டுப் போகட்டும் என்று கருணை காட்டுவதினாலோ, தம்முடைய  மேல் அதிகாரிக்கு வேண்டியவராகவும் இருக் கிறார்கள் என்ற காரணத்தினாலோ, அன்றியும் ராஜீய விஷயங்களில் சர்க்காருக்கு அனுகூலமாய் அவரது மனசாட்சிக்கு விரோதமாய் அநேகம் பேரைத் தண்டனை செய்துள்ளார் என்றோ, வெள்ளையருக்கும் இந்தியருக் கும் நடந்த விவகாரங்களில் வெள்ளைக் காரருக்கு அனுகூலமாகத் தீர்ப்புச் செய்துள்ளார் என்றோ இத்தியாதி காரணங்களால், எவ்வளவு வெளிப் படையாயும், எவ்வளவு மக்கள் வருந்தும் படியாயும், லஞ்சம் வாங்கினாலும் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர்.

லஞ்சம் என்று சொல்லுவது சாதாரணமாய் போலீஸ், ரிவனியூ, இஞ்சினியர், வைத்தியம், பார்ட், சால்ட் முதலிய இந்த இலாகாக் களுக்குப் பிறவிக்குணமாய் இருந்து அரசாங்கத் தாலும் பொதுமக்களாலும் சகஜந்தான் எனக்கருதி கவனிக்காமலே அனுமதிக்கப்பட்டு வந்திருந்த போதிலும், ஜனங்களின் வாழ்வு -  தாழ்விற்குப் பெரிதும் காரணமாயிருக்கிற சிவில், கிரி மினல் இலாகாக்களில் கூட தலைவிரித் தாடி வருகின்றன.

இவர்களில் சிலர் பணமும், நோட்டும் வாங்கினால்தான் லஞ்சமென்றும், வேறுவித காரியங்கள் என்ன செய்தாலும் லஞ்சம் இல்லை என்கிற எண்ணத்துடனேயே தங்கள் காரியங்களைச் செய்கின்றனர். சாதாரணமாய் உத்தியோகஸ்தரில் லஞ்சம் வாங்காதவரை மற்ற அதிகாரிகள் முட்டாள் என்றே கருதுகின்றனர்.

அநேக மாய் அவர்களுக்கு மேல் உத்தியோகமும் கிடைப்பதில்லை. தாங்கள் லஞ்சம் வாங்குவதில்லை என்கிற அகம்பாவத் தால் மேல் அதிகாரிகளை இவர்களும் இலட்சியம் செய்யாதிருந்துவிடுவது. அதனால் மேல் அதிகாரிகள் இவர்களைக் கெடுத்து விடுகின்றனர். இவை இப்படி யிருக்க, அதிகாரிகளிலேயே சிலரும், படித்தவர்களில் சிலரும் தாங்கள் ஒரு குற்றமும் செய்யாமல் உத்தியோகமும் மேல் உத்தியோகமும் சம்பாதிப்பதற்கா கவே ஆயிரம் பதினாயிரக்கணக்காக வும் கொடுக்க வேண்டி ஏற்பட்டுப் போய் விடு கின்றது.

சில உத்தியோகஸ்தர்கள் வாங்க இஷ்டப்படாதவர்களாயிருந் தாலும் மேல் உத்தியோகஸ்தர்களுக்குக் கொடுக்கவும், செலவு செய்வதற்கும் என்றே லஞ்சம் வாங்க வேண்டியவர்களாய் விடுகிறார் கள். சில இலாகாக்களில் லஞ்சம் மாமூ லாகவே கருதப்பட்டு வருகின்றது. சில அதிகாரிகள் தாம் வாங்காதிருந்தால் போதும் என்று, மற்றவர்கள் வாங்குவது நன்றாகத் தெரிந்திருந்த போதிலும் கவனியாமலே இருந்து விடுகிறார்கள்.

இவ் விதமாக அதிகாரிகளின் யோக்கியதை கவனிக்கத் தகுந்த அளவிற்குப் பெருகி வருகிறது. எவ்வளவு ரூபாய் சம்பளம் கொடுத்தால் லஞ்சம் வாங்க மாட்டார்கள் என்று சொல்லுவதற்கு ஒரு தொகையே இல்லாமல் போய் விட்டது.

சில்லரை உத்தியோகஸ்தர்கள் வாங்கும் லஞ்சம் அவ்வளவு கெடுதியை உண்டாக் காவிட்டாலும், அதன் விவரங்களைப் பற்றிப் பின்னர் எழுதுவோம். கவுரவ உத்தியோகஸ்தர்களும் லஞ்சம் வாங்கு வது சகஜமாகி விட்டதல்லாமல், அரசாங் கமும் அனுமதித்து விடும் போலிருக்கிறது. லஞ்சம் விஷயமாய் ஒரு பெரிய அதிகாரிக்கும், ஒரு பெரிய மனிதருக்கும் நடந்த சம்பாஷணையை மாத்திரம் எழுதிவிட்டு இதை முடிக்கிறோம்.

---------------- தந்தை பெரியார்-- "குடிஅரசு", கட்டுரை, உரையாடல் 26.07.1925

18 comments:

தமிழ் ஓவியா said...

முதல் அமைச்சர்மீதான அவதூறுக்குத் தமிழர் தலைவர் கண்டனம்


இன்றைக்கு ஆர்ப்பாட்டத்திற்குப் புறப்பட்டு வருகின்ற நேரத்தில் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது; என்னவென்று சொன்னால், அங்கே இலங்கை அரசு எந்த அளவுக்கு அதீதமாக நடந்து கொள்கிறது. சுப்பிரமணி சாமிகளும், சேசாத்திரி அய்யங்கார்களும் அங்கே சென்று அவர்கள் ஏதோ இந்திய அரசாங்கத்தின் சார்பாக அனுப்பப்படுகிறோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பச்சையாக - தமிழினத்தின் எதிரியாக அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு அடையாளம், அங்கிருக்கிற பாதுகாப் புத்துறையில் இணையத்திலே கட்டுரை ஒன்றைப் போட்டிருக்கிறார்கள்.

அது என்னுடைய கையிலே இருக்கிறது. அதிலே ஒருவர் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சரை எவ்வளவு கொச்சைப்படுத்தி, எவ்வளவு கேவலப்படுத்தி, தரமற்ற வார்த்தைகளிலே ஆபாசமான, அவதூறான வார்த்தையிலே அவர்கள் வருணித்திருக்கிறார்.

எனவே நீங்கள் அடிக்கடி மீனவர்களுக்காக போராடுகிறீர்கள், மீனவர்களுக்காக நீங்கள் ஆதரவு காட்டுகிறீர்கள். மீனவர்களிடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையெல்லாம் திரும்பக் கொடுக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் பிரதமர் மோடி எங்கள் பக்கம் இருப்பாரே தவிர, உங்களை ஒரு போதும் மதிக்க மாட்டார். உங்களை ஒரு போதும் சீண்ட மாட்டார். நீங்கள் மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட கடிதங்கள் - அந்த கடிதங்களுக்கு முன்னாலே சொல்லப்பட்டிருக்கின்ற வார்த்தை நான் இங்கே உச்சரிக்க விரும்பவில்லை. அவ்வளவு அருவருப்பான, ஆபாசமான, கேவலமான, சர்வதேச ரீதியிலே ஒரு அரசாங்கத்தினுடைய - இலங்கை அரசாங்கத்தினுடைய இணையதளத்திலே இடம் பெறக்கூடாது. அவ்வளவு அசிங்கமான ஒரு சொல். இப்படிப்பட்ட காரியம் நடந்து கொண்டிருக்கிறது. யாருடைய தைரியத்திலே இது நடந்து கொண்டிருக்கிறது?

தமிழ்நாட்டு முதலமைச்சரைப் பற்றி எங்களுக்கு பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதுவேறு செய்தி, அந்த உரிமையை நாங்கள் மாற்றிக்கொள்வோம் என்று பொருளல்ல. ஆனால் அதே நேரத்திலே, ஒன்றை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரை விமரிசனம் செய்வதற்குக்கூட, அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்பது கேள்விக்குரிய ஒன்று. அப்படியே செய்தாலும் கூட, நாகரிகமான முறையிலே அது நடைபெற வேண்டும். ஆனால் அசிங்கமான ஒரு மஞ்சள் ஏட்டிலே எப்படி எழுதுவார்களோ அதுபோல எழுதக்கூடிய அளவுக்கு எழுதியிருக்கிறார்கள். அதே நேரத்திலே மோடி அவர்களுக்கு நீங்கள் எத்தனைக் கடிதங்கள் எழுதினாலும் எங்கள் பக்கம் தான் இருப்பாரே தவிர, உங்களைப்பற்றி சீண்ட மாட்டார் என்றெல்லாம் அங்கேயிருக்கிற இலங்கை அரசினுடைய பாதுகாப்புத்துறை இணையத் திலே என் கையில் இருக்கிற இந்தக்கடிதம் சொல்லுகிறது. உலகம் முழுவதும் இணையத்தின் பயன்பாட்டில் இருக்கக் கூடியவர்கள், பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு கேவலமாக நடந்து கொள் கிறார்கள் என்றால் ஏதோ அரசு மாற்றப்பட்டால் எல்லாமே மாறிவிடும் என்று நினைத்தார்களோ, அதைவிட ஏமாற்றம் வேறு இருக்கிறதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

- (சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர்- 1-8-2014)

Read more: http://viduthalai.in/e-paper/85101.html#ixzz39I4avGNV

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்ற
விசாரணையைத் தடுப்பது - ஏன்?

தமிழர் தலைவர் தொடுக்கும் வினா இன்னொரு முக்கியமான பிரச்சினை; அருகில் இருக்கக்கூடிய இலங்கையிலே, ஈழத் தமிழர்கள் வாழ் வுரிமை இழந்து படாத பாடுபட்டு, முள் வேலிக்குள்ளே அவர்களெல்லாம் இராணுவத்தால் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு 90,000க்கும் மேற்பட்ட தமிழச்சிகள் விதவையாக இருக்கிறார்கள்என்ற கொடுமை களெல்லாம் சொல்லப்பட்ட நேரத்திலே, அய்.நா. சபை யினுடைய மனித உரிமை ஆணையத்தாலே நியமிக்கப் பட்டவர்கள் சென்று பார்த்து, அங்கே அவர்கள் போர்க் குற்றவாளிகள்தான் என்று முடிவு செய்யக்கூடிய அளவுக்கு அதைப்பற்றிய விசாரணை செய்வதற்கு வந்திருக்கக் கூடிய நிலையிலே, அதற்கு யார் யாரெல்லாம் தகவல் தெரிந்த வர்களோ, அவர்களிடத்திலே செய்தியை பரிமாறிக் கொள்ள வேண்டும். சாட்சியங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இங்கே இருக்கக் கூடிய அகதிகள் குடியேறியவர்கள், இவர்களிடத்திலெல்லாம் விசாரணை செய்வதற்கு மூவர் குழுவுக்கு இந்திய அரசு விசா மறுத் திருப்பதை விட வெட்கப்படக்கூடிய விசயம் வேறு கிடை யவே கிடையாது. இங்கே இருப்பது இலங்கை அரசினு டைய மறுபதிப்பா?

இலங்கை போர்க்குற்றவாளிகள் - அதுமட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகள் அதற்கான தீர்மானம் கொண்டு வந்து, பெரும்பாலான நாடுகள் ஆதரித்து அளித்த தீர்மானம் அய்.நா.வில் நிறைவேற்றி, அதற்குப் பிறகுதான் அந்தப்பணி தொடங்கியது. எனவே உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் மட்டுமல்ல, மனித உரிமை ஆர்வலர்கள் அத்தனை பேரும் இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லக்கூடிய நிலையில், அவர்களுக்காக பரிந்து பேசுவதைப்போல, முழுக்க முழுக்க அதை விசாரணையே செய்யக்கூடாது என்பது ஏதோ போர்க்குற்றமே நடக்கவில்லை என்பதைப்போல, ராஜபக்சே அரசுக்கு என்ன நிலைப்பாடோ, அதையே இங்கே இருக்கிற நரேந்திரமோடி தலைமையில் இருக்கக்கூடிய அரசு எடுக்கிறதென்றால், இதைவிட வேதனை, இதைவிட கண்டனத்திற்குரிய ஒன்று; இதைவிட வெட்கப்படக்கூடிய, அவமானகரமான - தேசிய அவமானம் வேறு இருக்க முடியாது. ஆகவே அதைக்கண்டித்து, அவர்களுக்கு விசா வழங்குங்கள் என்றுதான் இந்த ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு மிக முக்கியமான நோக்கம். அதுபோலவே மத்திய அரசு வெளியுறவுக் கொள்கை யிலே சென்ற காங்கிரஸ் அரசே பலமுறை பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த 60 நாட்களிலே நடந்து கொள்கிறபோக்கு கூடாது மாறியாக வேண்டும். அது மாற்றப்படவில்லையானால், அதற்குக் கடும் விலையை மத்திய அரசு கொடுக்க வேண்டியிருக்கும். சர்வதேச ரீதியாக தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல. அகில உலகத்திலே இருக்கக்கூடிய தமிழர்கள் - புலம் பெயர்ந்த தமிழர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டிலே வாழுகிற தமிழர்களாக இருந்தாலும் சரி, அதோடு மனித உரிமை ஆர்வலர்களாக இருந்தாலும் சரி எல்லோரும் சேர்ந்த குரல் அது. அவர்களுடைய பிரதிபலிப்பு என்று தெளிவாக எடுத்துக்காட்டி, அதற்காகத்தான் முதல் கட்டமாக இந்தப் போராட்டம். இரண்டு முனைகளிலே நடந்து கொண்டிரு க்கிறது. ஒரு பக்கத்திலே சமஸ்கிருத வாரம் என்ற பெயராலே தமிழினத்தினுடைய தொன்மை பாதிப்பு; இன்னொரு பக்கத்திலே ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை யிலே நடைபெற்ற அக்கிரமத்தை உலகம் தெரிந்து கொள் ளக்கூடாது என்பதற்காக திரையிட்டு மறைக்கக்கூடிய அளவிற்கு விசா வழங்க மறுக்கின்ற முயற்சி. இன்னொரு பக்கத்திலே இங்குள்ள மீனவர்களுக்கு இழைக்கக்கூடிய அநியாயங்கள், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பறிக்கக்கூடிய கொடுமை இருக்கிறது என்றால் அதை தட்டிக் கேட்கக்கூடாது. நாங்கள் எங்கள் இஷ்டத்திற்கு தான் செய்வோம். என்றால் முழுக்க முழுக்க மோடி அரசினுடைய ஆதரவு இருக்கிறது என்பதை இலங்கை அரசு வெளிப்படையாக சொல்லக்கூடிய கொடுமை. இவற்றுக்கெல்லாம் பரிகாரம் தேட வேண்டும், என்பதற்கா கத்தான் இங்கே திரண்டிருக்கிறோம் தோழர்களே!

ஆகவே இந்தப் போராட்டம் என்பது இன்றைக்கு ஒரு துவக்கம்தான் என்பதை மீண்டும் சொல்லி, மேலும் தேவைப்பட்டால் இந்தப் போராட்டம் பல வடிவங்களில் வெடிக்கும் என்பதை எடுத்து சொல்லுகிறோம்.

- (சென்னை ஆர்ப்பாட்டத்தில் - 1-8-2014)

Read more: http://viduthalai.in/e-paper/85101.html#ixzz39I4nkx00

தமிழ் ஓவியா said...

தாய்ப்பால் கொடுப்பீர்!

குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுத்தால் மார்பகப் புற்று நோய் வருவதற்கு வாய்ப்புக் குறைவு என்று குழந்தைகள் மருத்துவர் ராகுல் யாதவ் கூறுகிறார்.

Read more: http://viduthalai.in/e-paper/85102.html#ixzz39I5Lj7Sn

தமிழ் ஓவியா said...


தேவை புத்தி கொள்முதல்!



இப்பொழுதெல்லாம் கோயில்களுக்கு நடை பாதையாகச் செல்லும் ஒரு போக்குத் தலைதூக்கி நிற்கி றது. சாரை சாரையாக இரவெல்லாம் குடும்பம் குடும்பமாக நடந்து செல் வதைப் பார்க்க முடிகிறது. பழனி, சமயபுரம், மேல் மரு வத்தூர் என்று கதை நீள்கிறது.

தங்கள் கோயில்கள்மீது மக்களுக்கு மகத்துவம் ஏற்பட கோயில் நிர்வாகி களே விளம்பரங்கள் செய்து இதனை ஊக்குவிக்கின் றனர். சாலை விபத்துக்களில் இந்த பக்தர்கள் மரணம் அடையும் செய்தி ஏடுகளில் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும் புத்தி கொள் முதல் பெறவில்லை இன்று வந்துள்ள செய்தி சமயபுரத் துக்குச் சென்ற இரு பக்தர் கள் லாரி மோதி மரணமாம்.

Read more: http://viduthalai.in/e-paper/85103.html#ixzz39I5afIbk

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவ தில்லை, தன் இனத்தின் உழைப் பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை. (குடிஅரசு, 26.5.1935)

Read more: http://viduthalai.in/page-2/85106.html#ixzz39I5pATDx

தமிழ் ஓவியா said...

இரு வகையான பார்ப்பனீயத் தாக்கங்கள்

திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் (சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோவை, சேலம், தஞ்சாவூர், புதுச்சேரி) இரு முக்கியப் பிரச் சினைகளை மய்யப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முதல் பிரச்சினை மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி ஆகஸ்டு 7 முதல் 13 வரை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பற்றியதாகும். இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் 22 மாநில மொழிகள் இடம் பெற்றுள்ளன இவற்றுள் ஒரு மொழி சமஸ்கிருதம் அவ்வளவுதான்; இந்த மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட எந்த மாநிலமும் இந்தியாவில் கிடையாது. இந்தியா முழுமையும் இம்மொழியைப் பேசுபவர்கள் 16412 பேர் மட்டுமே. சதவீதக் கணக்கில் கூற முடியாத அளவுக்குக் குறைந்த எண்ணிக்கை இது.

இது ஆரியப் பார்ப்பனர்களின் தாய்மொழி; இதனை அவர்களைத் தவிர, மற்றவர்கள் - சூத்திரர்கள் (பஞ்சமர்கள் உட்பட) படிக்கக் கூடாது என்பது சாத்திரத் தடையாகும். இப்படிப் பெரும்பான்மையான மக்கள் பேசக் கூடாது என்று ஆக்கப்பட்ட ஒரு மொழி செத்துப் போகாமல் வேறு என்ன செய்யும்? அதனால் தான் செத்த மொழி (ஞிமீணீபீ லிணீஸீரீணீரீமீ) என்ற பெயரை ஈட்டிக் கொண்டு விட்டது.

இந்த மொழியில் உள்ளவை எல்லாம் வேதங்கள், உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள் ஆகும். இவற்றில் கூறப்பட்டிருப்பவை எல்லாம் பிறப்பிலேயே உயர்வு - தாழ்வு கற்பிக்கும் - பேதங்களை உருவாக்கும் விஷயங்கள்தாம். வருண தர்மம் என்பதை நீக்கி விட்டால் சமஸ்கிருதம் வெறும் சுழியில்(Zero) ) தான் முடியும்.

அதனால்தான் இந்து மதத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்ற விவேகானந்தர்கூட மதக் கலவரங்களும் ஜாதி வேற்றுமைகளும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்று கூறினார். இந்தச் சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் இந்தி மொழியும். இந்தக் காரணத்தால்தான் பார்ப்பனர்கள் எப்பொழுதுமே இவற்றை மக்கள் மத்தியில் புகுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர்; இதனை சரியாக அடையாளங் கண்டு ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் தந்திரமும், சூழ்ச்சியும் இதனுள் பதுங்கி இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது - தந்தை பெரியாரும் அவர்கள் கண்ட திராவிடர் இயக்கமும்தான்.

மத்திய அரசு என்றால் அனைத்து மாநிலங்களுக்கும் மக்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட சமஸ்கிருத மொழியின்மீது தனிக் கவனம் செலுத்தி, மக்கள் பணத்தை அதற்காக வாரி இறைக்கக் கூடாது.

மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இந்துத்துவா கொள்கை யுடையது என்பதால் அதன் மொழியான சமஸ்கிருதத் துக்குக் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது என்பதுதான் மறுக்கப்படவே முடியாத உண்மையாகும்.

இந்த அடிப்படையில்தான் சமஸ்கிருதத்தை எதிர்த்துத் திராவிடர் கழகம் நேற்று ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தின் இரண்டாவது நோக்கம் - ஈழத் தமிழர் பிரச்சினையை மய்யமாகக் கொண்டதாகும்.

தமிழ் ஓவியா said...


அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மூவர் குழு ஒன்று நியமிக் கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றத்தை விசாரிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது.

அந்தக் குழு இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியா போன்ற நாடுகளிலும் விசாரணை நடத்தும் அதிகாரம் கொண்டதாகும். ஆனால் இந்திய அரசு அந்தக் குழு இந்தியாவிற்கு வர விசா வழங்க மறுத்துள்ளது என்பது மிகவும் கொடுமையானது. பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஏதிலிகள் அடைக்கலம் பெற்றிருப்பது இந்தியாவில் தானே!

அய்.நா.வில் அங்கம் வகிக்கக்கூடிய இந்தியா, அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் முடிவை நிராகரிக்கிறது என்றால் இதன் பொருள் என்ன?

இன்னொன்று - இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களா கிய தமிழர்கள், இந்தியாவில் வாழக் கூடிய தமிழர்களின் தொப்புள் கொடி உறவினர்கள்; இதில் இந்தியாவுக்குக் கூடுதல் கடமையும், பொறுப்புணர்ச்சியும் உண்டு.

கடந்த காங்கிரஸ் ஆட்சிதான் ஈழத் தமிழர்க்கு விரோதமாக நடந்து கொண்டது என்றால், இன்றைய பிஜேபி ஆட்சியும், கடந்த ஆட்சியைவிட மூர்க்கத்தனமாக இதில் நடந்து கொள்கிறது.

காரணம் என்ன? இரு ஆட்சிகளிலுமே - இந்தப் பிரச்சினையை கையாளக் கூடியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே!

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் சோ ராமசாமியாக இருந்தாலும் சரி, குருமூர்த்தியாக இருந்தாலும் சரி இந்து ராமாக இருந்தாலும் சரி, சுப்பிரமணிய சாமியாக இருந்தாலும் சரி சுஷ்மா சுவராஜாக இருந்தாலும் சரி, தமிழின வெறுப்பு என்ற நஞ்சை நெஞ்சில் கொண்ட பார்ப்பனர்களே! தமிழினம் என்று சொன்னாலே ஒரு இனம் தெரியாத கடும் வெறுப்பு!

இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்கூட, நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசுகையில் கருத்துத் தெரிவித்தார். பொதுவுடைமைவாதிகள் எந்த ஒரு பிரச்சினையிலும் வர்க்க நிலை உண்டு என்று சொல்லுவது போல, இந்து ஆதிக்கம் உள்ள பார்ப்பனீய சமூக அமைப்பில், எதிலும் ஒரு வருண நிலை உண்டு - நுட்பமாகக் கணித்தால் இதன் பொருள் விளங்கும்.

திராவிடர் கழகம் நேற்று நடத்திய இரு பிரச்சினை களுக்கும் காரணம் என்பது பார்ப்பனீயமே!

மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப் போம் - அதற்கேற்ப நம் செயல்பாடுகளும் எதிர் காலத்தில் இருக்கும்; கழகத் தலைவர் இதனையும் நேற்று அறிவித் துள்ளார் என்பதை தோழர்கள் நினைவில் கொள்ளட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/85107.html#ixzz39I5x6tef

தமிழ் ஓவியா said...


பிரான்சு நாட்டு பல்கலைக்கழக நூலகத்தில் தந்தை பெரியாரின் புத்தகங்கள்!


பிரான்சு நாட்டின் தலைநகர் பாரி சில் வசிக்கும் தமிழரான ந.கைலாசம் அவர்கள் 21.6.2014 அன்று 15 புத்தகங்களை கைலாசம் அறக் கட்டளை சார்பாக, யூனிவர்சிடேர் தே லாங்கு ஏ சிவிலைசேஷன் - நூலகத்திற்கு நன்கொடையாக அனுப்பியதாகவும், அனுப்பிய புத்த கங்களை பெற்றுக்கொண்ட நூலகத் தின் தமிழ்த்துறை பொறுப்பாளர் சுந்தரி கோபாலகிருஷ்ணன் இவை எங்கள் நூலகத்திற்கு வரும் வாசகர் களுக்கு மிகவும் உபயோகமாகவும் இருக்கும். இதற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறோம் என்று 8.7.2014 அன்று பதில் கடிதம் அனுப்பி உள்ளதாகவும், அந்த கடித நகல்களுடன் இணைத்து கடந்த 15.7.2014 அன்று விடுதலை ஆசிரிய ருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

நூலகத்தின் தமிழ்த்துறைப் பொறுப்பாளர் சுந்தரி கோபால கிருஷ்ணன், ந.கைலாசம் அவர்களுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் கைலாசம் அனுப்பி வைத்த புத்தகங் களுக்கான பட்டியலை இணைத் திருக்கிறார். அதில் தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய ‘Why I don’t believe in God, collected works of Periyar E.V.R.’, ‘Periyar 1000 Q & A’, ‘Bhagavad Gita myth & Mirage’ - - என்ற ஆங்கில நூல்கள் நான்கும், காந்தியார் கொலை, காமராஜர் கொலை முயற்சி சரித்திரம் என்ற தமிழ் நூல்கள் இரண்டும் ‘Untochability: History of Vaikam Agitation’ புரட்டு இமால யப்புரட்டு ‘Lemonde de demain’- என்று தந்தை பெரியாரால் எழுதப்பட்ட புத்தகங்களும் முறையே ஆங்கிலம், தமிழ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டதும், கே.பி.பாலசுப்பிரமணியம் எழுதிய ‘Periyar E.V.Ramasamy’ - - என்ற பெயரில் வெளியான ஆங்கிலப் பதிப்பும், அறிஞர் அண்ணாவின் புத்தரின் புன்னகை தமிழ்ப் பதிப்பிலும், பொதுவுடமைத் தோழர் டி.ஞானய்யா அவர்கள் எழுதிய இந்துத்துவா பாசிசம் மற்றும் தகுதி - திறமை மோசடி என்ற தலைப்பில் தொகுக் கப்பட்ட கல்வி வள்ளல் காமராசரின் எழுச்சி உரைகள், பேராசிரியர் மஞ்சை வசந்தன் எழுதிய அர்த்தமற்ற இந்துமதம் - முதல் இரண்டு பகுதிகள் என்று 14 புத்தகங்களின் பட்டியலை கொடுத்திருக்கிறார்.

அத்தோடு நடேசன் கைலாசம் அவர்கள் மேற்கண்ட நூலகத்திற்கு அனுப்பி வைத்த மணி ஆர்ட்ர்க்கான சந்தா ரசீதையும் சேர்த்து (MR subs, period from July’ 2014 to June’ 2015 (Airmail)
அனுப்பி வைத்திருக்கிறார். ஆக மொத்தம் மேற்கண்ட 15 புத்தகங்கள் பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிசில் உள்ள யூனிவர்சிடேர் தே லாங்கு ஏ சிவிலைசேஷன் - நூலகத் திற்கு புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின் றன என்பதை நமது கவனத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.

பெரியாரியலை உலகெங்கும் பரப்பும் பணியில் நடேசன் கைலாசம் செய்துள்ள இந்தப் பணியும் அவர் பாராட்டத்தக்கவர், மிகமுக்கியமான அங்கம் வகிக்கும் என்பதில் அய்ய மில்லை.

Read more: http://viduthalai.in/page-2/85108.html#ixzz39I6Ujk1U

தமிழ் ஓவியா said...


மோடி அரசுக்கு இலங்கை அரசின் நற்சான்று பத்திரம்



கொழும்பு ஆக.2 இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொள்வது எங்களுக்கு மகிழ்ச் சியளிக்கிறது, இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவிற்கு நீண்டகாலமாக இருந்து வந்த சிறிய பிணக்குகளும் களையப்படும் என்று இலங்கை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரும், அதிபருக்கான அரசியல் ஆலோசகருமான தினேஷ் குணவர்த்தனா கூறினார்.

சமீபத்தில் இலங்கைக்கு சென்ற இந்தியக்குழுவி னரின் அணுகுமுறைப் பற்றி பத்திரிகைக்கு பேட்டியளித்த ரமேஷ் குணவர்த் தன மோடி குறித்து கூறியதாவது இந்தியப்பிரதமரின் புதிய அணுகு முறையானது இலங்கை மற்றும் இந்தி யாவிற்கு நலன் மிக்க தாகவே அமையும் என்றும், சுப்பிரமணியசாமி தலை மையினாலான குழு இலங்கை வந்து மோடியின் அயலுறவுக்கொள்கை குறித்து எங்களிடம் பகிர்ந்து கொண் டனர். இலங்கை மற்றும் இந்தியா விற்கான வர்த்தக நலனுக்கான மோடி நல்ல பல திட்டங்களை விரைவில் அறிவிப்பார் என்றும் உறுதியளித்தனர் என்றார். இந்தியாவின் இந்த மாற்றம் எங்களுக்கு மிக வும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறிய அவர் அய்க்கிய நாடுகள் குறித்த விசாரணை பற்றி கூறும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அல்லது வடக்கில் வாழும் பொது மக்களோ ஐக்கிய நாடு களின் விசா ரணைக் குழுவுக்கு சாட்சியமளித்தால், அது குறித்து நாங்கள் ஆச்சரியமடைய மாட்டோம். காரணம் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மற்றும் வடக்கில் வாழும் பலரும் எப்போதும் இலங் கைக்ககாகவும் இலங்கையின் வளர்ச்சிக் காகவும் மக்களுக்கு எதி ராகவும் தான் செயல்பட்டு வந்ததனர்.

அவர்களின் செயல்பாடுகள் சுயநலத்திற்காகவும், அயல்நாட்டில் வாழும் சில இனவாதக் குழுக்களின் ஆதரவாளர்களுக்கு ஆதரவாகவும் தான் இருக்கும் என்றார். மத்தியில் ஏற்படும் மாற்றம் காரணமாக தமிழக அரசியல் கட்சிகளும் இலங்கைக்கு இணக்கமான நடவடிக்கையில் இறங்கு வார்கள் என்று இலங்கை அரசு நம்பு கிறது என அவர் கூறினார்.

Read more: http://viduthalai.in/page-2/85109.html#ixzz39I6dTIYu

தமிழ் ஓவியா said...


இந்நாள் : தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர்


இந்நாள்

தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர்

(தோற்றம்: 02.08.1859 - _ மறைவு: 31.08.1930)

இசை என்றாலே அது தெலுங்குக் கீர்த்தனைகள் மற்றும் வடமொழிக்கு மட்டுமே உரித்தானது எனும் அறியாமை நோய் தமிழர்கள் மத்தியில் விரவிக் கிடந்த காலத்தில் அதனை பொய்யென உணர்த்தும் வகையில் தமிழ் இசையின் பாரம்பரியத்தையும் அதன் மேன்மை மற்றும் தகுதியை உலகறியச் செய்தவர்.

தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர்

பெயரில்தான் தஞ்சை ஒட்டிக்கொண்டதே ஒழிய பண்டிதர் பிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி அருகில் உள்ள சாம்பவர் வடகரை. தந்தை முத்துசாமி நாடார், தாய் அன்னம்மாள் இளம் வயதிலேயே சடையாண்டிப் பத்தரிடம் இசை கற்றார். தாமே பாடல்கள் இயற்றி இசை யோடு பாடும் ஆற்றல் பெற்றார். தன் பள்ளிக் கல்வியைப் பன்றிக்குளம், சுரண்டை ஆகிய சிறிய ஊர்களில் துவக்கிய ஆப்ரகாம். பிற்பாடு திண்டுக் கல்லில் இருந்த நார்மல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்று ஆசிரியராக உருவாக்கம் பெற்றார். இக்காலத்தில் சுருளி மலையிலிருந்த கருணானந்த யோகியிடம் சித்த மருத்துவம் பயின்றார். சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த அறிவு மிக்கவராக இருந்த காரணத்தால் இவரை மக்கள் பண்டுவர் என்றும் அழைத்தனர். அந்தப் பண்டுவரே பிற்பாடு மெல்ல மருவி பண்டிதராக மாற இவரது வாழ்வும் அப்பெயருக்கு சாலப் பொருந்தியது. சித்த மருத்துவத்தில் இவர் கண்டுபிடித்த மருந்து வெளிநாடுகளிலம் புகழைப் பெற சட்டெனத் தன் ஆசிரியப் பணியை உதறித்தள்ளி முழுமூச்சுடன் அப்பணியில் இறங்கினார்.

தஞ்சாவூரில் கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் மூலிகை களைப் பயிரிட்டு வளர்க்கத் துவங்கினார். தஞ்சை மண் இவருக்கு மீண்டும் இசையின் மீதுதான் நாட்டத்தை உண்டாக்கியது. இசையென்றாலே அனைவரும் மும்மூர்த்திகளின் தெலுங்கு கீர்த்தனைகளையே திரும்பத் திரும்பத் பாடுவதை எண்ணி வேதனை கொண்டவர். தமிழில் இசைக்கும் பலவித பாடல்களைப் புனையத் துவங்கினார். சொல், சுரம், தாளம் என எப்பிழைவும் இல்லாமல் இவர் உண்டாக்கிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 96.

இதன் அடுத்தக்கட்ட முயற்சியாக முழுக்க முழுக்கத் தமிழிசை குறித்து கருணாமிர்த சாகரம் எனும் 1200 பக்க நூலை எழுதத் துவங்கினார். மொத்தம் 712 புலவர்களைப் பற்றிய குறிப்புகள் இப்புத்தகத்தில் காணப்படுகின்றன. தமிழிசை வரலாற்றில் அளப்பரிய சாதனையாகக் கருதப்படும் இப்புத்தகம் மொத்தம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டு ஒவ்வொன்றும் நான்கு பாகங்களாக பகுக்கப்பட்டிருந்தது. பண்டிதர் 1912இல் எழுதத் துவங்கிய இப்புத்தகத்தை மொத்தம் பதினைந்து ஆண்டுகளாக இரவு பகலாகக் கடும் உழைப்பை அர்ப்பணித்து 1917இல் முடித்தார். இதற்காகவே தமிழ் நாட்டில் மின் விசையால் இயங்கும் முதல் அச்சகத்தை தஞ்சாவூரில் நிர்மாணித்தார். 1912இல் சங்கீத மகாஜன வித்யாசங்கம் எனும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தஞ்சையில், தன் சொந்த செலவில் மொத்தம் ஏழு இசை மாநாடுகள் இவைதான். இந்த இசைப்பணியில், தான் மட்டும் கரையாமல் தன் வாரிசு களையும் முழுவதுமாக இறக்கி தனக்குப் பிறகும் அச்சேவையைத் தொடரச் செய்தார். இவரது சேவையைப் பாராட்டி அப்போதைய பிரிட்டிஷ் அரசு இவருக்கு ராவ் சாகிப் பட்டம் வழங்கி கவுரவித்தது. தமிழக அரசு தஞ்சையில் ஒருவீதிக்கு தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் தெரு எனும் பெயர் சூட்டியுள்ளது.

Read more: http://viduthalai.in/page-3/85118.html#ixzz39I6sM24I

தமிழ் ஓவியா said...

கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!.

1. வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!
2. வாழ்க வாழ்க வாழ்கவே!
அன்னை மணியம்மையார் வாழ்கவே!
3. வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!
4. ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!
5. கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
சமஸ்கிருத ஆதிக்கத்தை
சமஸ்கிருத ஆதிக்கத்தை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!
6. செத்துப் போன செத்துப் போன
சமஸ்கிருதத்துக்கு, சமஸ்கிருதத்துக்கு
சிங்காரமா? சிங்காரமா?
கொண்டாட்டமா? கொண்டாட்டமா?
7. சமஸ்கிருதம் என்று சொல்லி
சமஸ்கிருதம் என்று சொல்லி
திணிக்காதே! திணிக்காதே!
பார்ப்பனீயக் கலாச்சாரத்தை
பார்ப்பனீயக் கலாச்சாரத்தை
திணிக்காதே! திணிக்காதே!
8. மனித உரிமை ஆணையம்
மனித உரிமை ஆணையம்
நியமனம் செய்த நியமனம் செய்த
விசாரணைக் குழுவினை
விசாரணைக் குழுவினை
தடுக்காதே! தடுக்காதே!
9. மத்திய அரசே, மத்திய அரசே!
துணை போகாதே, துணை போகாதே!
கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு
கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு
துணை போகாதே, துணை போகாதே!
10. பணி முடிப்போம், பணி முடிப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
தமிழர் தலைவர் தலைமையிலே
தந்தை பெரியார், தந்தை பெரியார்
பணி முடிப்போம், பணி முடிப்போம்!
11. வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!
- திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-4/85114.html#ixzz39I7QlyRl

தமிழ் ஓவியா said...


கதர்


கதர் பிரச்சாரத்தின் பலனால் வேஷக்காரர்கள் டெம் பரரியாய் கதர் கட்ட ஆரம்பித்து எப்போதும் வழக்கமாய் கதர் கட்டி வந்தவர்களுக்கும் கதர் கிடைக்க வழி இல்லாமல் போய் வேறு துணி கட்ட நிர்பந்தப்படுத்தி விட்டது.

இது ஒரு புறமிருக்க கதர் வியாபாரிகள் இந்த சமயத்தில் அடிக்கின்ற கொள்ளைக்கு அளவில்லை. துணியோ சாணித்துணிக்கும் உதவாது.

விலையோ டக்காமசிலினுக்கு மேல் விற்கப்படுகின்றது. பஞ்சு விலை கண்டி1.க்கு 320 ரூபாயிலிருக்கும் போதும் நூற்புக் கூலியும் நெசவுக் கூலியும் அரிசி ரூ. 1க்கு இரண்டரை பட்டணம் படி விற்றுக் கொண்டும் இருந்த போது போட்ட விகிதப்படியே இப்போதும் விற்கின்றார்கள்.

இப்போது பஞ்சு பாரம் 150 முதல் 160ரூக்குள் மிக்க சவதமாக இருக்கின்றது. அரிசி ரூ. 4 பட்டணம் படிக்கு மேலாகவே விற்கின்றது.

520 ராத்தல் கொண்ட பாரம் பஞ்சு 160 ரூ. விலையானால் பவுன் ஒன்றுக்கு 8 அணாவே பஞ்சு விலை அடங்கும்.

10 கிராம் உள்ள 50 இஞ்சு பீசு 3 ராத்தல் அல்லது மூன்றேகால் ராத்தல் இடை இருக்கும். இந்த மூன்றேகால் ராத்தலுக்குக் கிரயம் ரூ 1 - 10 - 0 நூற்பு கூலி ரூ 1. நெசவு கூலி 1 - 14 ஆக 10 கஜத்திற்கு ரூ 4 - 8 - 0 ஆகும்.

சிலவும் லாபமும் 5 அணா சேர்த்தால் 4 - 14 - 0 க்கு விற்கவேண்டியது நியாயமாகும். இப்போது 10 கஜம் 6 ரூபாயிக்கு மேலாகவே விற்கப்படுகின்றது. ஈரோட்டில் 6-8-0க்கும் கூட கிடைப்பதில்லை.

ஆகவே தேசிய கிளர்ச்சியின் பயனாய் பல வியாபாரிகள் இன்சால் வென்டாகவும் பல வியாபாரிகள் கொள்ளையடிக்கவும்தான் வழியேற்படுவதைத் தவிர மற்றபடி உண்மையான பலன் ஒன்றையும் ஏழைகள் அனுபவித்ததாகத் தெரியவில்லை,

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page-7/85143.html#ixzz39I7mjxXt

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

உன் தெய்வ மொழி நீ வணங்கும் உன் கடவுளுக்கே பிடிக்கவில்லையே? அப்புறம் என்ன தெய்வ மொழி வெங்காய மொழி. என்னென்னமோ சிறப்புச் சொல்கிறாய். இருந்தும் நமக்கு மானம் வரும்படியான, அறிவு வரும்படியான ஒரு நூல் தமிழில் இல்லையே.

பார்ப்பானுக்கும், பணக்காரனுக்கும் இருந்து வந்த மரியாதை குறைந்ததே ஒழிய இன்னும் ஆதிக்கம் ஒழியவில்லையே! சமதர்மம் என்றால் பார்ப்பான் ஒழிப்பும், பணக்காரன் ஒழிப்பும் தானே? பார்ப்பான் ஆதிக்கம் ஒழியாதவரை உண்மையான சமதர்மம் காணமுடியாது.

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற ஜீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை

Read more: http://viduthalai.in/page-7/85143.html#ixzz39I7uPl3J

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

ஜாதி ஒழிப்பது என்பது இன்று சட்டத்தின் மூலம் முடியாது என்று ஆகிவிட்டது. கிளர்ச்சி மூலம்தான் முடியும். வெள்ளைக்காரனிடமிருந்து பார்ப்பான் கைக்கு அதிகாரம் வந்ததும் முதலில் அரசியல் சட்டத்தில் மூலாதார உரிமையாக மதத்தையும் ஜாதியையும் காப்பாற்றுவது என்று போட்டுவிட்டான்.

Read more: http://viduthalai.in/page-7/85145.html#ixzz39I8D62gz

தமிழ் ஓவியா said...


சிறீவில்லிபுத்தூரில் ஜாதிக் கொடுமை



சிறீவில்லிபுத்தூரில் 2.7.1931-ஆம் தேதி காலையில் நாடார் கிளப்பிலிருந்து நாடார் சகோதரர் ஒருவர் நாடக சாலைத் தெருவிலுள்ள முனிசிபல் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கும் போது அத்தெருவிலுள்ள பார்ப்பனர் ஒன்று சேர்ந்து மேற்படி நாடார் சகோதரரைக் கம்பினால் மண்டையில் அடித்து இரத்தம் உடம்பெல்லாம் ஓட கீழே தள்ளி பலம் கொண்ட மட்டும் அடித்தார்கள். இது விவரம் தெரிந்து மற்றும் 2 நாடார்கள் அவ்விடம் போக அவர்களையும் மண்டையில் அடித்து இரத்தம் பீறிட அடித்து விட்டார்கள். அத்துடன் தண்ணீர் எடுத்த குடத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்கள். முனிசிபல் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுத்ததற்காக இவ்விதம் கொடுமை நடந்தால் இதை யாரிடம் சொல்வது? இச்செய்தியால் இவ்வூர் நாடார்களுக்கு மனக் கொதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மேல் என்ன நடக்குமென்று தெரியவில்லை என்று ஒரு நிருபர் எழுதுகிறார். குடிஅரசு 12.7.1931

Read more: http://viduthalai.in/page4/85136.html#ixzz39I98bkc7

தமிழ் ஓவியா said...

முசுலீம் விரோத போக்குகளில் மோடியின் மவுனம்?

அண்மையில் நடைபெற்றுள்ள முசுலீம்விரோத சம்பவங்கள் இந்து தேசியவாதிகளின் அச்சுறுத்தும் செயல்களால், பல மதநம்பிக்கை உள்ள நாட்டில் அவர்களுடைய தொண்டர்கள் நிலைகுலைந்துபோய் உள்ளனர். அந்த சம்பவங்கள்குறித்து மோடியின் மவுனம் விமரிசனத்துக்குள்ளாகி உள்ளது.

மோடியின் பாஜக அதன் தேர்தல் பிரச்சாரத்தின்போதும், மே மாதத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றபோதும் முக்கிய மாக பொருளாதார வளர்ச்சிக்கான உறுதிமொழியை வழங்கியது. ஆனாலும், பெரும்பான்மை இந்துத்துவ அடை யாளத்தை உருவாக்குவதற்கான குறிப்புகளை வழங்கி வந்துள்ளது.

ஒரு வாரமாக நடைபெற்றுள்ள சம்பவங்களில் இந்துத்துவ கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்றத்தின் உறுப்பினர் உணவுக்கூடத்தைச் சேர்ந்த ஒருவர் முசுலீமின் வாயில் உணவைத் திணிக்க முயன்றார். அதேபோல, தேசத்தின் விளையாட்டுச்சின்னமாக இருக்கும் இந்திய முசுலீம் டென்னிஸ் நட்சத் திரத்தை பாஜக தலைவர் தேசிய அடை யாளம் குறித்து கேள்வியை எழுப்பினார். அதேபோல, அவருடைய கூட்டணியைச் சேர்ந்த ஒருவர் இந்தியா, மோடியின் கீழ் இந்து தேசம் உருவாகும் என்றார்.

விமர்சகர்கள் பலரும், பாஜகவின் தொங்கு சதைகளாக உள்ள அமைப்புகள் மற்றும் அதன் தொடர்புள்ள அமைப்பு கள் மோசமான முறையில் நடந்து வரு வது குறித்து மோடி பேசாமல் அமைதி யாக இருப்பதன்மூலம் அச்செயல்களை ஊக்கப்படுத்தி வருவதாக விமரிசனம் செய்து வருகிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா தன்னுடைய தலையங்கத்தில் அரசின் நோக்கம் தவறாக உள்ளதாக சிறுபான்மையருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அது போன்ற கருத்துக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க பிரதமர் முன்வரவேண்டும். ஆனால், அவருடைய அமைதியான போக்கு இதுபோன்ற செயல்களை ஊக்கப்படுத்துவதாகவே இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. பெரும்பான்மை இந்துக்களுக்கும், முசுலீம்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைகள் வரலாற்றில் இருண்ட பகுதியாக உள்ளன. 150 மில்லியன் முசுலீம்களைக்கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளதை யார்தான் கணக்கில் கொள்வது?

கடந்த வாரத்தில் புதன்கிழமை அன்று (22.-7.2014) பாஜக கூட்டணிக் கட்சியும், இந்துத்துவ அரசியல் அமைப் பாக உள்ள சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரம்சான் மாதத்தில் நோன்பு இருக்கும் ஒரு முசுலீம் பணியாளரின் வாயில் பலவந்த மாக சப்பாத்தியைத் திணிக்க முயன் றுள்ளார். சிவசேனைக்கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர் ராஜன் விச்சாரே உயர்நிலைப்பள்ளியில் இடையில் நின்றவர். ஏற்கெனவே 13 குற்ற வழக் குகளில் தொடர்புள்ளவர். தரமற்ற உணவு என்பதால் முசுலீம் என்று அறி யாமல் செய்துவிட்டதாக பிற்பாடு கூறுகிறார்.

அந்த சம்பவம் நாடாளுமன்றத்தில் அமளியை ஏற்படுத்தியது. ஒரு நாடா ளுமன்ற உறுப்பினர் கூறும்போது, எதிர்க்கட்சியினரை பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டும் என்று பேசியுள்ளார். பின்னர் அவருடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். கடந்த வாரம் வியாழக்கிழமை (23-.7.-2014) அன்று புதிய மாநிலமான தெலங் கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சாவை நியமித்தமைக்கு பாஜகவைச் சேர்ந்த லக்ஷ்மண் கண்டனம் தெரி விக்கும்போது, மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டு வீரரைத் திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தான் மருமகள் என்று அவருடைய தேசம் குறித்த சர்ச்சையை ஏற்படுத்தினார்.

மிர்சா தொலைக்காட்சிப் பேட்டியில் தேசிய அளவிலான செய்தித் தொலைக் காட்சியில் எப்போதும் தான் ஒரு இந்தியர்தான் என்று பதிலடி கொடுத் தார். சானியா மிர்சா டிவிட்டரில் கூறும் போது, நான் ஒரு இந்தியர்தான். உயிருள்ளவரையிலும் தான் ஒரு இந்தியராக இருப்பதை யாரால் தடுக்க முடியும்? என்று பதிவிட்டுள்ளார். லக்ஷ்மண் கூறியதிலிருந்து தன்னை பாஜக வேறுபடுத்திக்கொண்டது. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறும்போது,சானியா மிர்சா இந்தியாவின் பெருமையின் சின்னம் என்று கூறியுள்ளார். அதேநேரத்தில் மோடியின் மவுனத்தை செய்தித் தாள் களின் தலையங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

தமிழ் ஓவியா said...

ஃபர்ஸ்ட் போஸ்ட் தலையங்கத்தில் கூறும்போது, இவை எல்லாம் எங்கள் பிரச்சினைகள் இல்லை என்றுகூட அவர் கூறலாம். இதுபோன்றவை சாதாரண மானவையே, தவறான புரிதல்களால் ஊடகங்கள் மிகைப்படுத்தி வெளியிடுகின் றன என்றுகூட அவர் கூறலாம். ஆனால், இதுபோன்ற எதையுமே எடுத்துக் கொள் ளாமல் முற்றிலுமாக எதுவுமே கூறாமல் இருப்பதையே தேர்வு செய்து கொண் டுள்ளார். அமைதியாக இருப்பதால், அசவுகரியமானவகையில் உரக்க ஒலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.

1980களின் இறுதியில் பாஜக திடீர் என முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதன்மூலம் 1992ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேசத்தில் அயோத்தியாவில் இந்துக்களின் கடவுள் அரசன் என்று ராமன் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட தாகக் கூறி 16ஆம் நூற்றாண்டின் மசூ தியை இடித்துத் தரை மட்டமாக்கியது. பிரச்சினைக்குரிய மசூதியை இந்து கும்பல் இடித்ததால் இந்தியா முழுவதும் ஏற்பட்ட கலவரங்களில் இரண்டாயிரத் துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட் டனர். குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் இந்துக் கும்பல் முசுலீம்களைப் பழி வாங்கும்விதமாக வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்ட விவகாரம் மோடிமீதான நீண்டகால குற்றச்சாட்டாகப் பார்க்கப் படுவதாக உள்ளது. அவர் முதல்வராக இருந்தபோது, ரயிலில் இந்து யாத்திரிகர் கள் தொல்லைகளுக்கு உள்ளானார்கள். அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு களை மோடி மறுத்தார். உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டு அவர் குற்றமற்றவர் என்று கூறியது.

அதேபோன்றே வியாழக்கிழமை (23.-7.-2014) அன்று பாஜக கூட்டணியைச் சேர்ந்த கோவாவின் அமைச்சர் ஒருவர் கூறும்போது, மோடியின் ஆட்சியில் இந்தியா ஒரு இந்து நாடாக மாறிவிடும் என்று கூறினார்.அதுகுறித்து காங்கிரசுக் கட்சி கடும் விமர்சனத்தை செய்தது.

நாட்டை வகுப்புவாத மயமாக்குவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ள வேண்டும். நாட்டை ஆள்பவர்களுக்கு இது எங் களின் வேண்டுகோள் என்று காங்கிரசு தொடர்பாளர் பி.சி.சாக்கோ கேட்டுக் கொண்டுள்ளார்.

-ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்
-ஃபர்ஸ்ட் போஸ்ட்.காம்

Read more: http://viduthalai.in/page5/85141.html#ixzz39IAkeztO

தமிழ் ஓவியா said...


என்.வி.என் (1912-1975)


என்.வி.என். என்று திராவிடர் இயக்கத்தாரால் அன்போடு விளிக்கப்படும் மானமிகு என்.வி. நட ராசன் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1975).

அச்சுக்கோப்பாளராகத் தன் வாழ்வைத் தொடங் கிய இவர் தொடக்கத்தில் காங்கிரஸ்காரர்தான். 1937இல் தமிழ் மண்ணைத் தட்டி எழுப்பிய தந்தை பெரியார் தலைமை தாங் கிய அந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் மொழி மான - இனமான - தன்மானப் போர் பல திக்குகளிலும் சிதறிக்கிடந்த தமிழர்களை ஓரினம் என்னும் கோட் பாட்டுக்குடையின் கீழ் கொண்டு வந்து நிறுத் தியது; அதில் அணி வகுத்து வந்த மெலிந்த உருவச் சிப்பாய்தான் என்.வி.என். என்னும் போராளி! திராவிடன் இதழையும் பிற்காலத்தில் நடத்தியவர்.

என்.வி.என். அவர் களைப் பற்றி அறிஞர் அண்ணாவின் படப் பிடிப்பு மிகவும் பொருத்த மானது.

திராவிடர் கழகத்தில் இருந்தபோது அதன் வளர்ச்சிக்காகத் தன்னல மற்று தம்மையே ஒப் படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என். தந்தை பெரியார் அவர்கள் அவர்மீது பேரன்பு பொழிந்த தோடு நிற்கவில்லை.

எந்த அளவுக்கு என்றால் தாம் எங்கே சென்றாலும் காரிலோ, வண்டியிலோ என்.வி.என்.னைத் தம் முடன் அழைத்துச் செல்லு ம் அளவுக்கு! கொள் என்றால் வாயைத் திறப்பதும் கடி வாளம் என்றால் வாயை மூடிக் கொள்வதும் குதிரை களுக்கு மட்டுமே சொந்த மான இயல்பு இல்லை.

சில சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளிடமும் அந்தத் தவறான தடம் புரளும் போக்கு உண்டு; ஆனால் என்.வி.என். அத்தகைய கோழை அல்லர். கொள்கைக் குன்று என்று அண்ணா அவர்கள் அகமகிழ வியந்துள்ளார் (சென்னை சூளையில் அண்ணா ஆற்றிய உரை 6.6.1963).

அண்ணா சொன்னது வெறும் சொற்கள் அல்ல; இந்தி எதிர்ப்புப் போராட் டத்தில், தாம் மட்டும் அல்ல; தம் வாழ்விணையர் புவனேசுவரி அம்மை யாரை சிறைக்கோட்டம் ஏகச் செய்தவர் (கைக் குழந்தையுடன் - அவர் தான் பிற்காலத்தில் மத்திய அமைச்சராக இருந்து விபத் தில் மரணம் அடைந்த என்.வி.என். சோமு).

எல்லாவற்றையும்விட ஒரு சிறப்புண்டு அவருக்கு இவர் என் செயலாளர் மட்டுமல்ல - உண்மை யான தொண்டாற்றிய (Sincere) சீடர் என்றாரே அதைவிட வேறு என்ன பாராட்டு வேண்டும்?

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/85191.html#ixzz39NkMsmFO