Search This Blog

1.8.14

பாடத் திட்டங்களில் இந்துத்துவா நஞ்சா?

 
பி.ஜே.பி. சார்பில் ஆட்சி நடைபெறும் மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநிலங்களானாலும் சரி  - அவை தங்களின் இந்துத்துவா திட்டங்களைத் திணிப்பதில் தான் தீவிரமாக இருந்து வருகின்றன.


குறிப்பாகக் கல்வித் திட்டத்தில் அவை ஆவேசம் காட்டி வருகின்றன. முன்பு உத்தரப்பிரதேசத்தில் பி.ஜே.பி. ஆட்சி நடைபெற்றபோது பாடத் திட்டங்கள் முழுமையாக இந்துத்துவாக் கொள்கைகளால் குளிப்பாட்டப்பட்டிருந்தன. 


ஏழாம் வகுப்புப் பாடத்தில் முலாயம் சிங் யாதவ் இக்கால  இராவணன் என்று ஏன் அழைக்கப்படுகிறார்? பாபர் மசூதியை இடிக்கும் முயற்சி நடந்தபோது, முலாயம்சிங் யாதவைச் சேர்ந்த ஆட்களின் துப்பாக்கிக் குண்டுகளால் எத்தனை இந்துக்கள் கொல்லப்பட்டனர்? (அவுட்லுக் 10.5.1999) என்ற கேள்விகள் கேட்கப்பட்டன.


கணக்குப் பாடத் திட்டம் எப்படித் தெரியுமா? 10 கரசேவகர்கள் சேர்ந்து பாபர் மசூதியை இடித்தால் 15 நாட்கள் ஆகும். 20 கரசேவகர்கள் இடித்தால் எத்தனை நாட்களாகும் என்பதுதான் கணிதக் கேள்வி. இயேசுநாதர் இமயமலைக்கு வந்து இந்து சாமியார்களிடம் உபதேசம் பெற்றுதான் பைபிள் எழுதினார். மெக்காவில் பச்சைத் துணி போட்டு மூடப்பட்டு இருப்பது சிவலிங்கம்தான் என்று பாடப் புத்தகத்தில் இடம் பெறச் செய்யப்பட்டது.


இதுபற்றி ஃபிரண்ட் லைன் இதழில் கட்டுரை தீட்டிய எழுத்தாளர்களாக பார்வதிமேனன், டி.கே. ராஜலட்சுமி ஆகியோர் இந்திய வரலாறு தலை முறைகளை அழிக்கும் குண்டுகளைத் தயாரிக்கும் ஆலைகளாக (Bomb Factories) மாற்றப்பட்டு விட்டன என்று குறிப்பிட்டுள்ளனர்.


உலகிலேயே ஆரியர்கள்தான் உயர்ந்தவர்கள் என்பது ஹிட்லரின் - அசைக்க முடியாத எண்ணம். பள்ளிப் பாடங்களில் கணிதப் பாடத்தில் யூதர் பெற்ற இலாபம் என்பதற்குப் பதிலாக யூதர் அடித்த கொள்ளை என்ன? என்று தான் இருக்கும்.


அடால்ப் ஃஹிட்லரை பின்பற்றும் பேர் வழிகளான இந்த இந்துத்துவாவாதிகள் அவர் வழியைக் கண்களை மூடிக் கொண்டு பின்பற்றுவதாகத் தெரிகிறது. பாஸிஸ்டுகள், நாஜிஸ்டுகள் பின்பற்றும் அதே வழிமுறையைத்தான் இந்த இந்துத்துவப் பாசிஸ்டுகளும் பின்பற்றுகின்றனர்.


இந்த வரலாற்றுத் தகவல்கள் ஒரு பக்கம் சார்ந்த பொய்கள், மாச்சர்யங்கள் காலத்தால் உண்மைக்குப் புறம்பானவை என எடுத்து வீசப்பட்டவை; கோட் பாடுகள், கற்பனைகள் இவையெல்லாம் அப்படியே விட்டு வைக்கப்படவில்லை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் அவை அவ்வப்போது அதிகப் பொய் களைக் கொண்டு வலுவூட்டப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது (ஃபரண்ட் லைன் ஏடு 20.11.1998).


பாடத் திட்டங்களை ஆய்வு செய்யும் தேசியக் கல்வி மற்றும் பயிற்சி ஆய்வு நிறுவனம்  (National Council For educational Training and Research) என்ன கூறியது தெரியுமா?


பா.ஜ.க. நடத்தும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்  இத்தகைய கருத்துக்களைக் கொண்ட நூல்கள் பயிற்றுவிக்கப்படுமேயானால், நம் நாட்டின் எதிர்காலம் சீர்குலைந்து விடும்; நாடு பேரழிவைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளதே!


இப்பொழுது குஜராத்திலிருந்து வந்துள்ள தகவல் அதிர்ச்சியூட்டக் கூடியதாகும்.


ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தினாநாத் பத்ராவின் ஏழு நூல்கள் குஜராத்தில் தொடக்கப் பள்ளிகளில் பாட நூல்களாக வைக்கப்படுகின்றன என்பதுதான் அந்த  அதிர்ச்சியூட்டும் தகவலாகும். 35 ஆயிரம் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனவாம்.


இவர் எப்படிப்பட்டவர் என்பது ஏற்கெனவே தெரிந்த தகவலாகும். 


ஆரியர்களைப் பெருமையாகப் பேசக் கூடியவர்; மேற்கத்திய கருத்தியல்களுக்கு எதிரானவர்; நாள்தோறும் ஆர்.எஸ்.எஸ். ஷாகாவுக்கு அனுப்பினால் அவன் வாழ்வில் நல்லதோர் திருப் பத்தை அடைவான் என்று எழுதியவர் இவர். நிகழ்கால கல்வி முறையை எதிர்க்கக்கூடிய இவர், குடி மக்களை உருவாக்குவதில் மதத்தின் பங்கு இருந்தாக வேண்டும் என்பது இவரின் நிலைப்பாடு. பொதுவுடைமைச் சிந்தனைகளைப் பழி தூற்றக் கூடிய ஒருவரின் நூல்களை பாட நூல்களாக வைத்தால் அந்தப் பிள்ளைகள் எப்படி வார்த்து எடுக்கப் படுவார்கள் என்பதற்குப் பெரும் ஆய்வுகள் தேவைப் படாது.
ஏற்கெனவே மத்தியப் பிரதேச பி.ஜே.பி. முதல் அமைச்சர் அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸில் இருக்கலாம் என்று சொல்லவில்லையா?


ராம ராஜ்ஜியத்தை உண்டாக்குவோம். இந்து ராஷ்டிரா என்றும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பிடித்தவுடன் அந்த வேலைகளில் வேக வேகமாக செயல்படுகிறார்கள் என்பது மட்டும் உண்மை.
பி.ஜே.பி.க்கு வாக்களித்தவர்கள் அதன் வேதனையை  அனுபவிக்கப் போகிறார்களா? அல்லது அதன் செயல்பாடுகளை எதிர்த்து நின்று அவற்றைப் பின் வாங்கச் செய்யப் போகிறார்களா என்பதுதான் மக்கள் முன் உள்ள பிரச்சினை; மக்கள் மன்றம் விழிப்புக் கொள்ளட்டும்!


இல்லாவிட்டால் கடும் விலை கொடுக்கத்தான் நேரிடும்  - எச்சரிக்கை!

                      --------------------------------”விடுதலை” தலையங்கம் 31-07-2014


28 comments:

தமிழ் ஓவியா said...


மோடி ஒரு சர்வாதிகாரி! மராட்டிய முதல்வர் சாடுகிறார்


மும்பை, ஜூலை 31_ முக்கிய விவகாரங்களில் பதில் அளிக்காமல் பிரதமர் நரேந்திர மோடி அமைதி காக்கிறார் என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் குற்றம் சாட்டியுள்ளார். மோடி சர்வாதிகாரி யாக நடந்துகொள்கிறார். ஆரோக்கியமான ஜனநாய கத்துக்கு இது நல்லதல்ல என்றும் அவர் கூறினார். மும்பையில் அவர் கூறிய தாவது:

மோடி அரசால் மக்கள் ஏமாற்றம் அடைந் துள்ளனர். குஜராத் மாநி லத்தில் மோடி சர்வாதி கார ஆட்சியே நடத்தி வந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மத்தியில் சர் வாதிகார ஆட்சிதான் அமையும் என்று நாங்கள் அச்சப்பட்டோம். அது நடந்துவிட்டது.

மத்திய அமைச்சர்கள் நடத்தப்படும் விதம் சரியில்லை. அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்படவில்லை. முக்கிய விவகாரங்களில் பிரதமர் தனது நிலையை தெளிவுபடுத்துவதில்லை. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தத் தவறி வருகிறார்.

தேர்தல் பிரச்சாரத் தின்போதே பல விவகா ரங்களில் மோடி தனது நிலையை தெரிவிக்க வில்லை. வெளியுறவுக் கொள்கை, பொருளா தாரம், சமூகப் பிரச் சினைகள் பற்றியோ ஆர். எஸ்.எஸ். முன்வைக்கும் பொது சிவில் சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு தகுதி அளிக்கும் 370ஆ-வது பிரிவு நீக்கம், ராமர் கோயில் பற்றியோ மோடி எதுவும் பேசவில்லை.

மோடி அரசு என்ற கனவை மட்டுமே அவர் விற்பனை செய்தார். பல பிரச்சினைகளில் அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது மக்களுக்கு கோபம் இருந்தது. இதை மோடி தனக்கு சாதக மாகப் பயன்படுத்திக் கொண்டார். சந்தையில் பொருள் விற்பனை செய் வது போல் தன்னை சிறப் பாக சந்தைப்படுத்தியும் பெருமளவு விளம்பரங்கள் செய்தும் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்களுக்கு மரியா தையும், பொறுப்புணர்வும் இருந்தது. அது தற்போது இல்லை. இதை மக்கள் ஒப்பிட்டுப்பார்க்கின்றனர். புதிய அரசிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மக்கள் பெற் றதோ மிகவும் குறைவு. இவ்வாறு பிருத்விராஜ் சவாண் கூறினார்.

Read more: http://viduthalai.in/e-paper/85012.html#ixzz396Jqp7It

தமிழ் ஓவியா said...


விவேகானந்தர் பார்வையில் சமஸ்கிருதம்


சுவாமி விவேகானந்தர், மதச் சண்டைகளும், சாதி வேற்றுமைக் கலகங்களும் பல்குதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் - இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும் என்றும், சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போகுமானால், இப் போராட்டங்களும் தொலைந்து போகுமென்று வருந்திக் கூறினார்.

(- மறைமலை அடிகள், தமிழர் மதம் நூலில் - பக்கம் 24)

இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பிய விவேகானந்தரே சமஸ்கிருதம் பற்றி இவ் வாறு கூறியுள்ளார்! ஆகஸ்டு முதல் தேதி ஆர்ப் பாட்டம் ஆவேசமாய் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

Read more: http://viduthalai.in/e-paper/85011.html#ixzz396JypgpJ

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

பிரசவம்

இன்று ஆடிப்பூரம் விழாவாம் - அம்பாளுக்கு வளைகாப்பாம்!

ஒரு கேள்வி: வளைகாப்பு நடந்தால் பிரசவம் (டெலிவரி எப்பொழுது என்ற கேள்வி எழாதா?)

Read more: http://viduthalai.in/e-paper/85016.html#ixzz396K7wdXG

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்


நம்நாட்டில் பார்ப்பானுக்கு வேலை கொடுப்பது ஆட்டுப் பட்டிக்கு நரியைக் காவலுக்கு வைப்பதுபோல் தான் ஆகும். குற்றப் பரம்பரையை எப்படி நடத்துகிறோமோ அப்படி நடத்தப் படவே வேண்டியவர் களாவார்கள் இந்தப் பார்ப்பனர்கள்.
(விடுதலை, 12.11.1960)

Read more: http://viduthalai.in/page-2/85017.html#ixzz396KJzJwU

தமிழ் ஓவியா said...


80 வயது கடந்த ஓய்வூதியர்களும் - தமிழ்நாடு அரசின் பாரபட்சமும்


ஆசிரியருக்குக் கடிதம் >>>

80 வயது கடந்த ஓய்வூதியர்களும் - தமிழ்நாடு அரசின் பாரபட்சமும்

தமிழக அரசுப்பணியிலிருந்து 1.6.1988 முதல் 31.12.1995 வரை உள்ள ஏழு ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு பாரபட்சமாக ஓய்வூதியம் கணக்கீடு செய்து வழங்கப்பட்டது.

இந்த முரண்பாட்டைக் களைந்து இந்த ஏழாண்டுக்கு முன்னும், பின்னும் ஓய்வு பெற்றவர்கட்கு வழங்கியதைப்போல ஓய்வூதியம் கணக்கீடு செய்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மேல் முறையீட்டில் உச்சநீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதியச் சங்கங்கள் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டு பல ஆண்டுகள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் 17.1.2013-இல் ஓய்வூதியர்களின் கோரிக்கை, நியாயத்தின் பால் பட்டதென்றும், தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அரசமைப்புச் சட்டம் 14 மற்றும் 16ஆவது பிரிவுக்கு விரோதமான தென்றும், ஓய்வூதியர்களுக்குள் பாகுபாடு காட்டக்கூடாதென்றும் தெளிவாக தீர்ப்பு வழங்கிவிட்டது.

தீர்ப்பு கிடைத்து எட்டு மாதங்கள் கழிந்த நிலையில் 23.8.2013இல் அரசு ஆணை 363அய் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அரசாணை நாள் 23.8.2013-இல் ஓய்வூதியர் களில் உயிருடன் இருப்பவர்கட்கு மட்டுமே இந்த அரசாணை பயன்தரும் என குறிக்கப் பட்டதால், ஓய்வூதியர் குடும்பத்தார்க்கு ஓர் பேரிடியாக உணரப்பட்டது. ஏனெனில் ஓய்வூதியர் இறக்கும் நிலையில் அவருக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன் அவர் குடும்பத்தார்க்கு சேரும் என்பதே பொது விதி.

இது ஒரு புறம் இருக்க ஓய்வுபெற்று 20, 25 ஆண்டுகள் கழிந்த நிலையில் எஞ்சியுள்ள ஓய்வூதியர்கள் அவர்கள் ஓய்வு பெற்ற அலுவலகங்களுக்கு படையெடுத்து தமது பணிப்பேரேடுகளைத்தேடிப்பிடித்து புதிய ஓய்வூதிய பிரேரணைகளை தயாரிக்கச் செய்து மாநில கணக்காயருக்கு மேற்படி அலுவலகம் மூலம் அனுப்பினர். இதிலும் ஒரு துயரச் செய்தி உண்டு. இந்த ஏழாண்டுகள் என்பது அய்ந்தாவது ஊதியக்குழு நடை முறையில் இருந்த காலமாகும். ஆனால் புதிய பிரேரணை தயாரிக்கப்பட்டதோ 31.5.1988 வரை அமலில் இருந்த நான்காவது ஊதியக்குழுவின் பரிந்துரையில் இருந்த குறைந்த சம்பள விகிதத்தில்!

மாநில கணக்காயர் அலுவலகத்தில் பெறப்பட்ட புதிய ஓய்வூதிய பிரேர ணைகள் பரிசீலிக்கப்பட்டு 31.12.1995 இல் ஓய்வூதியர்க்கான புதிய ஓய்வூதியம் எவ்வளவு என்பதை நிர்ணயம் செய்து, அந்த உத்தரவு சம்பந்தப்பட்ட கருவூலங் களுக்கு மாநில கணக்காயரால் அனுப்பப் பட்டு வருகின்றன. அதன் நகலும் ஓய்வூ தியர்களால் பெறப்படுகிறது. ஓய்வு பெறும்போது பெறப்பட்ட ஓய்வூதியத்தை விட புதிய ஓய்வூதியம் 31.12.1995 இல் சற்று கூடுதலாகவே உள்ளது. இதனால் ஓய்வூ தியம் பெறும் தேதியிலிருந்து 31.12.1995 வரை குறைந்த அளவிலேனும் ஓய்வூதிய நிலுவை பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது.

31.12.1995 இல் 5ஆவது ஊதியக்குழு பரிந்துரை முடிவுக்கு வந்து 1.1.1996 முதல் 6ஆவது ஊதியக்குழு பரிந்துரை, சம்பள விகிதம் உயர்த்தப்பட்ட நிலையில் நடைமுறைக்கு வந்தது. அரசாணை எண் 174/21/4/1998 வெளியிடப்பட்டு அதில் 1.1.1996இல் எந்த அடிப்படையில் ஓய்வூதியங்கள் நிர்ண யிக்கப்பட வேண்டும் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப் படையில் 31.12.1995இல் ரூ. 1750 வரை அடிப்படை ஓய்வூதியம் உள்ள ஓய்வூ தியர்கள் 1.1.1996 இல் உள்ள 148 சதவீத அக விலைப்படியை அடிப்படை ஓய்வூதியத் தோடு சேர்த்தும் ரூ.1751-க்கு மேல் அடிப்படை ஓய்வூதியம் பெறுகிறவர்கள் 111 சதவீத அகவிலைப்படியையும் சேர்த் தும் ஓய்வூதியம் பெற வேண்டும். ஆனால் இந்த அரசாணை புறக்கணிக்கப்பட்டு, புதிதாக ஓர் அரசு கடிதம் எண் 61495/4.2.2014 இல் வெளியிடப்பட்டு அகவிலைப் படி இணைப்பதில் குளறுபடி செய்து 1.1.1996 இல் ஏற்கெனவே பெறப்பட்ட ஓய்வூதியத்தைக் காட்டிலும் குறைவாக பெறும்படி செய்துள்ளார்கள். உச்சநீதிமன் றத்தின் தீர்ப்பினை செயலிழக்கச் செய்யும் நிலையில்தான் அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

மக்களாட்சியில் மனிதநேயம் பேணப் பட வேண்டும்! தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு இது கொண்டு செல்லப்பட் டிருக்குமா என்ற கருத்து எல்லா ஓய்வூ தியச் சங்க பொறுப்பாளர்கள் முதலமைச் சர் அவர்களை நேரில் சந்தித்துப்பேசி நல்ல முடிவை பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை திடமாக இருக்கிறது.

- எம்.கே.கிருஷ்ணமூர்த்தி (கூட்டுறவு சார் பதிவாளர் ஓய்வு) மயிலாடுதுறை

Read more: http://viduthalai.in/page-2/85021.html#ixzz396KSOrNj

தமிழ் ஓவியா said...





செய்குதம்பிப் பாவலர்
தோற்றம்: 31.7.1874- மறைவு: 13.2.1950

மதங்களைக் கடந்தது தமிழ் என நிரூபித்துக் காட்டும் வகையில் வாழ்க் கையை தமிழ்த்தொண்டு சிறக்க வாழ்ந்தவர். பாவலர் என அன்புடன் அனைவ ராலும் அழைக்கப் பெற்றவர் செய்குதம்பிப் பாவலர்.

அக்காலத்து திருவி தாங்கூர் சமஸ்தானமாக வும் இன்றைய நாகர் கோவில் மாவட்டமாகவும் விளங்கக்கூடிய தமிழ கத்தின் தென்கோடிப் பகுதியான கோட்டாறு எனும் ஊரில் இசுலாமிய சமூகத்தில் பிறந்தவர். தந்தை பக்கீர் மீரான் சாகிபு. தாயார் ஆமினா. சிறுவயதில் அரபு மொழி கற்க பள்ளிக்கு அனுப் பப்பட்ட செய்கு தம்பி அங்கிருந்த ஆசிரியர் களைத் தன் இணையற்ற அறிவாற்றலால் வியக்க வைத்தார். திருக்குரானை அவர் கற்ற வேகத்தைக் கண்டு தேர்வில்லாமலேயே அவரை இரண்டாம் வகுப்புக்கு மாற்றினர்.

அதே ஆண்டில் மூன்றாவது வகுப்புக்கும் பின் நான்காம் வகுப்புக்கும் மாற்றப்பட்டார். பின் தமிழின் பால் ஆர்வம் கொண்டு அவ்வூரில் வாழ்ந்த சங்கர நாராயண அண்ணாவி என்பவரிடம் நன்னூல், இலக்கண விளக்கம், வீரசோழியம், தொல் காப்பியம் போன்ற இலக்கண நூல்களைக் கற்றார். தமிழில் தன்னிகரற்ற புலமை பெற்ற பாவலர் சென்னைக்கு வந்தார். கம்பராமாயணம் சீறாப் புராணம் பற்றி அவர் ஆற்றிய சொற் பொழிவுகள் கேட்போர் நெஞ்சில் நெருப்பைப் பற்றவைத்தன.

இச்சமயத்தில்தான் அவர்காலத்தில் வாழ்ந்த அன்பின் திருவுருமான இராமலிங்க அடிகளாரின் பால் ஈர்ப்பு கொண்டு இசுலாமியராக இருந்தும் சைவ நெறி பயின்றார். வரலாற்றுச் சிறப்புமிக்க அருட்பா மருட்பா வழக்கில் வள்ளலாருக்கு ஆதர வாக நீதிமன்றத்தில் தீர்ப்புக் கூறப்பட்ட பின்னும் அறிஞர்கள் சபையில் அந்த வாதம் தொடர்ந்து கொண்டிருந்தது. வள்ளலார் மற்றும் நாவலர் இறந்த பின்பும் இந்த மோதல் தமிழ் அறிஞர்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டிருந்தது.

திரு.வி.க. மற்றும் கதிரைவேற்பிள்ளை ஆகியோர் ஒரு பொது அரங்கில் அருட்பாவைக் கடுமையாக எதிர்த்து அதில் இலக்கணப் பிழைகள் இருப்பதாகக்கூறி அதனை நிராகரிக்க முற்பட்டப் போது பாவலர் மேடையில் ஏறி தன் நுண்ணிய இலக்கணப் பார்வையைக் கொண்டு ஆய்ந்து அகழ்ந்து வள்ளலார் எழுதியது அருட்பாதான் என விளக்கிக்கூறிய போது அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

அதன் பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்து வள்ளலாரை அனைவரும் ஏற்கத் துவங்கினர். இவர் எழுதிய நூல்களில் சம்சுத்தாசின் கோவை, நபிகள் நாயக மான்மிய மஞ்சரி, கல்லத்து நாயகம். இன்னிசைப் பாமாலை, திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி, திருநாகூர் திரிபந்தாதி, நீதிவெண்பா போன்றவை குறிப்பிடத்தக்கவை.

நினைத்த மாத்திரத்தில் தேர்ந்த கவிபுனையும் ஆற்றல் மிக்கவர். சதாவதானம் எனும் அரிய கலையை அவர் பலமேடைகளில் நிகழ்த்திய காரணத்தால் சதாவதானி செய்குதம்பிப் பாவலர் என்றே அழைக்கப்பட்டார்.

Read more: http://viduthalai.in/page-3/85027.html#ixzz396KxwwE6

தமிழ் ஓவியா said...


ஆகஸ்டு


ஆகஸ்டு என்றால் இந்திய நாடு சுதந்திர நாளை பற்றிய பேசுவார் கள். திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரையில் ஆகஸ்டு என்றால் போராட் டக் களங்கள் காணும் திங்கள் ஆகும்.

1938 ஆகஸ்டு முதல் தேதி (இந்நாள்) தமிழ் நாட்டின் வரலாற்றில் மொழி மானம் இனமானம் கூர் தீட்டப்பட்ட நாள்!

திரு. ராஜகோபாலாச் சாரியார் சென்னை மாநிலப் பிரதமராக (Premier) இருந்த நிலையில் சென்னை மாநிலப் பள்ளி களில் இந்தியைக் கொண்டு வரப் போகிறேன் என்று முதலில் அறிவித்ததும்கூட இந்த ஆகஸ்டில்தான் (இராமகிருஷ்ண மடத்தில் 10.8.1937).

6,7,8 ஆம் வகுப்பு களில் இந்தியைக் கொண்டு வந்தார் பிரதமர் ராஜாஜி; 1938 - 1939 நிதி நிலை அறிக்கையில் வெளிப் படுத்தப்பட்ட ஒரு தகவல்: இந்துஸ்தானி கற்பிக்க 125 நடுப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்ட தகவல் வெளியானது (இதன்படி வெளியான அரசு ஆணை நாள் 21.4.1938) இந்தி ஆசிரியர்களுக்காக ரூ.20 ஆயிரமும் ஒதுக்கீடு செய் யப்பட்டதாக அந்த அறிக்கை கூறியது: தொடக் கக் கட்டத்திலேயே நீதிக் கட்சி உறுப்பினரான ராஜா சர். எம்.ஏ. முத்தையா (செட்டியார்) எதிர்த்தார்.

அதற்குப் பதில் அளித்த ராஜாஜி இந்தியை எதிர்ப்பவர்கள் இரு வகை யினர் (1) ஆரிய எதிர்ப்பின் விளைவாக ஒரு சார்பாக இருந்து எதிர்ப்பவர்கள் 2) காங்கிரஸ் மீதுள்ள வெறுப் பால் எதிர்ப்பவர்கள் என்று குறிப்பிட்டார்.

ராஜாஜியின் இந்த முடிவை எதிர்த்துத்தான் தமிழ் மண் போர்க்கோலம் கொண்டது. பல வடிவங் களில் போராட்டங்கள் கிளர்ந்து எழுந்தன. அதில் ஒன்றுதான் ஆகஸ்டு முதல் தேதி (1938) தமிழர் பெரும் படை திருச்சி -உறையூரிலிருந்து புறப் பட்டதாகும். (100 பேர்கள்)
படைத் தலைவர் அய். குமாரசாமி பிள்ளை. தளபதி - அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி, பெருஞ் சோற்றுத் தலைவி- மூவ லூர் இராமாமிர்தம் அம் மையார்; கடந்து வந்த ஊர்கள் 234. கடந்து வந்த தொலைவு 577 மைல்கள். சென்னைக்குப் படை வந்து சேர்ந்த நாள் 11.9.1938.

படையை வரவேற்று சென்னை திருவல்லிக்கேணி கடற்கரைக் கூட்டத்தில் தமிழ்நாடு தமிழர்க்கே! என்ற முழக் கத்தை முதன் முதலாகத் தந்தைபெரியார் கொடுத் தார்.

கட்டாய இந்தியை எதிர்த்து பட்டினிப் போராட்டம் மேற்கொண்ட ஸ்டாலின் செகதீசன் படுத்த படுக்கையாக இருந்த நிலை யில் மேடைக்குக் கொண்டு வந்து வைக்கப்பட்டார்.

இதே ஆகஸ்டு 1952, 1953, 1954 ஆண்டுகளில் தான் இரயில்வே நிலை யங்களில் இந்தி எழுத் துக்களை அழிக்கும் போராட்டத்தைத் தந்தை பெரியார் அறிவித்து நடத் திக் காட்டினார்.

அந்த ஆகஸ்டுப் பட்டியலில் இன்று (1.8.2014) சமஸ்கிருத வாரத்தை எதிர்த்து தமிழர் தலைவர் மானகிகு கி. வீரமணி அவர்கள் அறி வித்த இந்தப் போராட் டத்தையும் இணைத்துக் கொள்க!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/85062.html#ixzz39CAIBBMu

தமிழ் ஓவியா said...

சமூகநீதியின் சாதனை!

சென்னை, ஆக.1- கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான பொதுப் பிரிவு கலந் தாய்வில் முதல் மாணவராகத் தேர்வு செய்யப் பட்டிருப்பவர் லாரி ஓட்டுநர் மகனாவார்; வி. சரண்குமார் நாமக்கல்லைச் சேர்ந்தவர்; இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த கமலக் கண்ணன்; இவர் விவசாயத் தொழிலாளியின் மகன்; 3ஆம் இடத்தைத் தட்டிச் சென்றவர் மனோஜ்பிரபு நாமக்கல்லைச் சேர்ந்த இவரின் தந்தையார் விசைத்தறித் தொழிலாளி. இதுதான் திராவிட இயக்கத்தின் சமூகநீதிச் சாதனை.

Read more: http://viduthalai.in/e-paper/85064.html#ixzz39CAaT1ic

தமிழ் ஓவியா said...

இது என்ன குழப்பம்?

மரபணு மாற்றப்பட்ட பயிர்களைப் பயிரிட்டு சோதனையிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டதாக ஆர்.எஸ்.எஸ். கூறியது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை செய்தியாளர் கள் கேட்டபோது, இது தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்று பதிலளித்துள்ளார்; யார் சொல்வது சரி?

Read more: http://viduthalai.in/e-paper/85064.html#ixzz39CAiKVqs

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?


ஆண்டாள்

ஆண்டாளின் பக்திக் குப் பெருமையளித்த சிறீரங்கம் ரங்கநாதர் அவளை தன்னுடன் ஏற் றுக் கொண்டார். அதை உணர்த்தும் விதமாக சிறிவில்லிப்புத்தூரில் நடக்கும் ஆடித் திரு விழாவின் 7ஆம் நாளில் ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் ரெங்க மன்னார் காட்சி தருவாராம். இந்த அரிய காட்சியைத் தரிசிக்கும் தம்பதியர் இடையே மேலும் ஒற்றுமை பலப் படுமாம்.

ஆண்டாள் என்ற பக்தை கடவுளை கணவ னாகக் கைப்பற்றிடப் பாடிய விரக தாபப் பாடல் கள் ஆபாசமானவை! கடவுளைத் தந்தையாகத் தொழும் நிலை போய் புருஷனாக்கிப் புணரும் ஆசை கொண்ட பாடல்கள் சகிக்க முடியாதவை. இது தான் பக்தி வழிகாட்டும் ஆன்மிகமா? வெட்கக் கேடு!

Read more: http://viduthalai.in/e-paper/85070.html#ixzz39CAyXH00

தமிழ் ஓவியா said...


மதரீதியாக கடவுளர் சிலைகளை சாலைகளில் அமைக்க எந்த விதி அனுமதிக்கிறது? உயர்நீதிமன்றம் கடுமையான கேள்வி


மதரீதியாக கடவுளர் சிலைகளை சாலைகளில் அமைக்க எந்த விதி அனுமதிக்கிறது?

உயர்நீதிமன்றம் கடுமையான கேள்வி

சென்னை, ஆக.1- சாலைகளில் மத விழாக் கள் என்று கடவுளர் சிலைகள், மற்ற கட்டுமா னங்களை அமைப்பதற்கு அனுமதிப்பது எவ்வாறு என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.

கடந்த வாரத்தில் சென்னை உயர்நீதிமன்றத் தின் தலைமை நீதிபதி (பொறுப்பு) சத்தீஷ் கே. அக்னிஹோத்ரி மற்றும் எம்.எம்.சுரேஷ் ஆகி யோரைக் கொண்ட முதல் அமர்வில் பொதுநல வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாட்டில் சாலைகளை ஆக்கிரமிப் பதனால் எண்ணிலடங் காத வகையில் பொது மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து தமிழக அரசு விளக்கமளிப்பதற்கு இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கி உத்தர விடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி அன்று இதுகுறித்த வழக்கு விசாரணைக்கு வைக்கப் பட்டுள்ளது.

பொதுநல வழக்கு மனுதாரர் கூறும்போது, தமிழ்நாடு முழுவதும் 77 ஆயிரம் சாலையோரக் கோயில்கள் உள்ளன. வண்டிகள் செல்வதற்கும், பாதசாரிகள் நடப்பதற்கும் பெரும் இடையூறாக அவை உள்ளன. ஏராள மான சாலைகள், தெருக் கள் மதரீதியான செயல் களின் பேரால் ஆக்கிர மிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த மதமும் விதிவிலக் கின்றி அஞ்சத்தக்க வகை யில் செயல்படுகின்றன.

அண்மையில் சென்னைக் காவல்துறையின்சார்பில் சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அதில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி பெயரால் விநாய கர் சிலைகள் அமைக்கப் படும் இடங்கள் குறித்த விதிமுறைகளை காவல் துறை வகுத்துள்ளது. இது அரசிலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. ஏனென்றால், காவல்துறை சாலைகளுக்கும், நடை பாதைகளுக்கும் உரிமை யாளர்கள் அல்ல. அலுவல கரீதியில் அனுமதியின்றி சிலைகளை சாலைகள் மற்றும் தெருக்களில் நிறுவ அனுமதிப்பது என்பது ஆட்சியாளர்கள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீறுவதாகும். காவல்துறையினரின் கண் மூடித்தனமான செயல் களால், அபாயங்கள் விளைகின்றன. கோவில் களை நிறுவுவது அல்லது அனுமதிப்பது என்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவ தாக அமைகின்றன. மற்ற வர்களும் பக்தி உள்ளவர் களாக இருப்பினும், அதே நம்பிக்கையில் இருப்ப தில்லை என்று மனுதாரர் கூறி உள்ளார்.

மனுதாரரின் வேண்டு கோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இதுநாள் வரையிலும் இதை முறைப் படுத்துவதற்கு சட்டம் இல்லை. ஆகவே, அரசு பதில்மனுவை தாக்கல் செய்வதற்கு, 5_-9_-2013 தேதி யில் தாக்கீது அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் இல்லை. இறுதி வாய்ப்பாக இரண்டு வாரங்கள் அளிக்கப்படுகின்றன. இவ்வழக்கில் உள்ள வாய்ப்புகள் அல்லது விதிமுறைகள் மற்றும் ஆட்சியாளர்களின் இவ்வழக்கின்மீதான செயல்பாடுகள் குறித்து பதில் அளிக்க இரண்டு வாரங்கள் இறுதிக் கெடு வாக அளிக்கப்படுகின்றன.

Read more: http://viduthalai.in/e-paper/85063.html#ixzz39CBG5K3R

தமிழ் ஓவியா said...


இவர்கள் யார்? யார்? மக்களவை உறுப்பினர்களின் தொழில்கள் என்ன?



டில்லி, ஆக.1- 16ஆவது மக்களவையில் உள்ள 539 உறுப்பினர்கள் தங்களின் தொழிலாகக் குறிப்பிட் டுள்ள பட்டியல் நாடாளு மன்ற இணையதளத்தில் பதிவாகி உள்ளது. அந்த பட்டியல் ஊடகங்களில் வெளியானதால் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராகுல்காந்தி ஒரு திட்ட ஆலோசகர் என்று கூறும் அதேநேரத்தில் மோடி சமூகப் பணியாளர் என்று கூறிக்கொள்கிறார்.

மேற்கு வங்கத்தின் காங்கிரசுக் கட்சியின் தலைவராக உள்ள பஹரம்பூர் பகுதியைச் சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி சமுதாய சீர்திருத்த வாதி என்று கூறிக் கொண்டுள்ளார். இவர்மீது ஏராளமான குற்ற வழக் குகள் உள்ளனவாம். ராகுல் காந்தியின் திட்டங்கள் கடந்த தேர்தலில் எடு படாமல் போனது. அவ ருடைய உறுதிமொழி ஆவ ணத்தில் அவர் தன்னை திட்ட ஆலோசகர் என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்ற இணையதளத்தில் மக்களவை உறுப்பினர்கள் அரசியலைக் கடந்து, தங்களின் தொழிலாக அறிவித்துள்ளதை விவசா யம் முதல் கட்டுமானத் தொழில் வரை, மருத் துவப்பணி முதல் கல்விப் பணிவரை, ஆசிரியர்பணி முதல் விளையாட்டு வீரர் கள் வரை, கலைஞர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை மற்றும் மத நிறு வனங்கள் முதல் சமுதாய சீர்திருத்தம்வரையிலும் 33 தொழில்களைக் கொண் டுள்ள பட்டியலை வெளி யிட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி பெயர் பத்திரிகையாளர் என்று உள்ளது. இணையத்தில் பிளாக்கில் ஆர்வமுடன் எழுதுபவராக (blogger) உள்ளவர், ஆர்.எஸ்.எஸ். ஏடான ஆர்கனைசர் இதழில் அவர் பத்திரிகை யாளர் பணி தொடங்கி யது. மக்களவையில் உள்ள மற்ற நான்கு பத்திரிகை யாளர்களில் பிஜூ ஜனதா தளத்தின் பர்த்ருஹரி மஹ்தாப் மற்றும் தத் தாகதா சத்பதி ஆகியோர் உள்ளனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவ ராஜ், பேரவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் ஆகிய இருவரும் வழக்குரைஞர் களாக உள்ளதாகத் தெரி வித்துள்ளனர்.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தன்னை ஓர் ஆசிரியர் என்று கூறி உள்ளார். அதேநேரத்தில் முரளிமனோகர் ஜோஷி பேராசிரியர் என்று பதிவு செய்துகொண்டுள்ளார். முசாபர் நகர் கலவர வழக்கில் தொடர்புள்ளவ ரான சஞ்சய் பாலியான் அவரும் தன்னைப் பேரா சிரியர் என்று கூறி உள்ளார்.

காங்கிரசு கட்சித் தலைவரான சோனியா காந்தி அவரைப்பற்றிக் குறிப்பிடுகையில் அரசியல் மற்றும் சமூகப்பணியாளர் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அமைச்சரான மேனகா காந்தி தன்னை ஒரு எழுத்தாளர் என்று சில நூல்களை வெளி யிட்டதன்மூலம் கூறியுள் ளார். இந்திய கிரிக்கெட் வீரர் கீர்தி ஆசாத் தன்னை விளையாட்டு வீரர் என்று குறிப்பிட்டுள் ளார். ஒன்பது கலைஞர் கள், ஏழு திரைத் துறைக் கலைஞர்கள் உள்ளனர். முதன்முறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளவ ரான பூனம் மகாஜன் தன்னை வணிகத்தில் ஈடுபட்டுள்ளவராக குறிப் பிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரசு சவ்காதா ராய் தன்னை ஒரு கல்வியாள ராகக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக யோகி ஆதித்ய நாத் தன்னை மத நிறு வனத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு உள் ளார். சசிதரூர் தன்னை ஒரு இராஜதந்திரியாகக் குறிப்பிட்டுள்ளார்.

Read more: http://viduthalai.in/e-paper/85069.html#ixzz39CBevJBi

தமிழ் ஓவியா said...


மனிதத் தன்மை


மனிதன் நம்பிக்கை வழி நடப்பதை விட்டுவிட்டு அறிவின் வழிச் சென்று எதையும் சிந்திக்க வேண்டும். எதுவும் அறிவிற்கு நிற்கின்றதா என்று உரசிப் பார்க்கவேண்டும். அப்போதுதான் மனிதன் காட்டுமிராண்டி நிலையில் இருந்து மனிதத் தன்மை அடைய முடியும்.

- (விடுதலை, 13.8.1961)

Read more: http://viduthalai.in/page-2/85072.html#ixzz39CBwPfwe

தமிழ் ஓவியா said...


கோரத் தீக்குத் தண்டனை!


பத்து ஆண்டுகளுக்கு முன் கும்பகோணத்தில் நடந்த ஒரு தீ விபத்தில் 94 குழந்தை மொட்டுகள் குரூரமாகக் கொல்லப்பட்டன என்பது இன்னும் நூற்றாண்டு கண்டாலும் மனிதத்தின் குருதியை உறையச் செய்யக் கூடியதுதான்.

இதுபோன்ற கொடுமைகளுக்குத் தண்டனை கூட - தீர்ப்புகூட 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் கிடைக்கிறது என்பது ஆரோக்கியமானதல்ல - இந்தியாவின் நிர்வாக முறையும், நீதிமுறையும் எப்படி பிறழ்ந்து போயுள்ளன என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய எடுத்துக்காட்டே!

பள்ளியின் உரிமையாளர், தாளாளர், தலைமை ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர், சமையற்காரர் என்று தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பள்ளி என்றால் இப்படியெல்லாம் கட்டுமானம் இருக்கவேண்டும்; எத்தனை எத்தனை வசதிகள் இடம் பெற்றிருக்க வேண்டும்; விபத்துக் காலங்களில் உயிர் பிழைக்க முன்னேற்பாட்டு வசதிகள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கான சட்ட திட்டங்கள், விதி முறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

இவை எல்லாம் ஏட்டுச் சுரைக்காயே என்பது - இத்தகு விபத்துகள் விளக்கமளிக்கின்றன.
சத்துணவு சமைக்கும் மய்யம் கீற்றுக் கொட்டகையில் இருப்பதை அனுமதித்தது யார் என்பதுதான் முக்கியமே தவிர, சத்துணவுக் கூடத்தில் பணியாற்றும் ஏழைத் தாய்மார் தலையில் அது விடியலாமா என்பது முக்கிய கேள்வியாகும்.

பள்ளிக்கு அனுமதி அளித்தது - பள்ளியின் வரைபடம், பள்ளியின் கட்டுமானம் - இவை சரியாக இருக்கின்றதா என்பதை ஆய்ந்து சான்று அளிக்கும் அதிகாரிகள், பணம் ஒன்றே குறி என்று கருதி கல்வியையும் காசாக்கும் காரியத்தில் ஈடுபடும் கனவான்கள் இவர்கள்தான் உண்மையிலேயே குற்றவாளிகளின் பட்டியலில் வரவேண்டியவர்கள்.

இதில் இன்னொரு முக்கிய தகவலை காதும் காதும் வைத்தாற்போல கை கழுவப் பார்க்கிறார்களே - அது ஏன்?

அந்தக் கோர விபத்து நடந்த நாள் இந்து மதக் கண்ணோட்டத்தில் மிகவும் புனிதமான நாளாம் - ஆம் ஆடி வெள்ளியாம்! (அத்தகு நாளில்தான் இந்த அநியாயம் அரங்கேறியுள்ளது).

ஆடி வெள்ளியென்றால் கோவிலுக்குப் போக வேண்டுமே - கும்பிடுத் தண்டம் போட வேண்டுமே - அதுவும் ஆசிரியைகள் என்றால் கேட்கவா வேண்டும்?

பக்கத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு வந்துவிடலாம் என்று திட்டமிட்டு, அதே நேரத்தில் பிள்ளைகள் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற பாதுகாப்பு தொலைநோக்கோடு வெளிக் கதவைப் பூட்டி விட்டுச் சென்றனர்.

ஆசிரியை வகுப்பறையைப் பூட்டி விட்டு கோவிலுக்குச் சென்ற அந்த நேரத்தில்தான் தீ விபத்து நடந்திருக்கிறது; பிள்ளைகளும் உள்ளேயே மாட்டிக் கொண்டு கோர மரணத்தைத் தழுவியுள்ளனர்.

இந்தச் செய்தியைப் பெரும்பாலான ஏடுகள் மறைத்தது ஏன்? ஏதோ தப்பித் தவறி தி இந்து (தமிழ்) ஏடு 9ஆம் பக்கத்தில் 16.7.2014 அன்று வெளி யிட்டுள்ளது.

பாழும் பக்தி பச்சிளம் பாலகர்களைப் பலி கொடுக்கச் செய்துவிட்டது என்று எடுத்துக்காட்ட, அதன் வழி விழிப்புணர்வை ஏற்படுத்த விடுதலை யை விட்டால் வேறு நாதியில்லை என்பதுதான் உண்மை.

இதற்குப் பிறகாவது எண்ணிப் பார்க்க வேண் டாமா? அதுவும் ஆடி வெள்ளி, கோவில் - கும்பிடு - இந்தச் சூழலில் இந்த விபத்து!

கடவுள் கருணை உள்ளவர் என்று சொன்னாலும் சரி, சர்வ சக்தி வாய்ந்தவர் என்று வருணித்தாலும் சரி, எங்கும் நிறைந்தவர் என்று உரத்தக் குரலில் பாடித் தொலைத்தாலும் சரி இவையெல்லாம் சுத்தப் பொய், கடைந்தெடுத்த கற்பனை என்பதை இப்படிப்பட்ட காரியம் நடந்ததற்குப் பிறகாவது சிந்திக்க வேண்டாமா?

இதனைச் சுட்டிக்காட்டி மக்களைத் தெளிய வைக்கும் ஒரு அறப் பணிக்கு ஊடகங்கள் முன்வர வேண்டாமா?

என்ன தண்டனையைக் கொடுத்தாலும் மாண்ட மழலைகள் மீளப் போவதில்லை என்றாலும், அரசுக் கென்று ஒரு பொறுப்புணர்ச்சி, கடமை உணர்ச்சி இருக்கிறதே - அதுதான் இழப்பீடு என்னும் கருணை யுள்ளம்; கூடுதல் கருணைத் தொகை கொடுக்க வேண் டும் என்பதில்தமிழ்நாடு அரசு எதற்காக எதிர்நிலை எடுத்து உச்சநீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டும்?

அதுவும் கல்லும் கரையும் இந்தப் பிரச்சினையிலா ஓர் அரசு இப்படி ஒரு நிலையை எடுப்பது? மறுபரி சீலனை செய்க!

Read more: http://viduthalai.in/page-2/85073.html#ixzz39CC52fTZ

தமிழ் ஓவியா said...


இந்நாள்


ஆகஸ்டு 1ஆம் தேதி 1956

இராமன் படத்தை கொளுத்த ஆணையிட்ட நாள்

இராமன் கடவுள் அல்ல, இராமாயணக் கதையின் பாத்திரமான இராமன் ஒழுக்கமுள்ள ஒரு யோக்கியனல்ல எனக்கருதுபவர்கள் யாரும் நாட்டு நன்மையை சமுதாய சுயமரியாதையைக் கருதுபவர்கள் யாரும் இராமன் படத்தை கொளுத்தலாம். இந்த உரிமையை மக்களுக்கு உணர்த்துவ தற்காகத்தான் ஆகஸ்டு 1ஆம் தேதி இராமன் படம் கொளுத்தும் கிளர்ச்சி நாளாகக் கொண் டாட தமிழ்நாட்டு மக்கள் கேட்டுக் கொள் ளப்பட்டார்கள்.

அரசாங்கமும் நல்ல வாய்ப்பாக மக்கள் உரிமையில் பிரவேசிக்காமல் இராமன் படம் கொளுத்துவதன் மூலம் குழப்பம், கலவரம், பலாத்காரம் ஏற்படக்கூடாது என்று கருதி பொதுக்கூட்டத்தில் கொளுத்தக்கூடாது என்று கருதி, பொதுக்கூட்டத்திற்கும் அது சம்பந்தமான ஊர்வலத்திற்கும் தடை விதித்தது. என்றாலும் உரிமையுள்ள காரியம் நடைபெற்றால் கலவரம் உண்டாகும் என்று கருதினால், அதற்கு அரசாங்கம் பாதுக்காப்பு செய்ய வேண்டுமே ஒழிய காரியத்தைத் தடை செய்ய அல்ல என்பது என் கருத்து தெரிவித்து ஆணையிட்டு வெற்றி பெற்ற நாள்! இந்த நாள்!!

Read more: http://viduthalai.in/page-3/85079.html#ixzz39CE17oE5

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இனத்தின் மானத்தைக் காக்க எவ்வகைத் துன்பத்தையும் பொறுத்துக் கொண்டு தொண்டாற்றத் தக்க குடிமகன் இல்லாத இனம் வேர்ப் பற்றில்லாத மரம்போல் - கோடாலிக் கொண்டு வெட்ட வேண்டிய அவசியம் இல்லாத மரம்போல் - தானாகவே விழுந்துவிடும்.

Read more: http://viduthalai.in/page-7/85065.html#ixzz39CFdeHHc

தமிழ் ஓவியா said...


ஆரியர் - திராவிடர்


சதா காலமும், பார்ப்பனர்களை, நாம் தூஷிப்பதில்லை -அவசிய முமில்லை. ஒருமுறையைக் கண்டிக் கிறோமே தவிர, தனிப்பட்ட நபர் களையல்ல, மார்வாடிக் கடை என்று கூறும்போது எப்படி அதிக வட்டி வாங்கும் அனை வரையும் அந்தச் சொல் குறிக்கிறதோ அதுபோல, பார்ப்பனீயம் என்று கண்டிக்கும் போது பார்ப்பனர் மட்டுமல்ல, வர்ணாசிரம தர்மத்தை ஆதரிக்கும் பார்ப்ப னரல்லாதாரும் அந்தப் பட்டத்துக்கு உரியவர்கள் ஆகிறார் கள். எனவே பார்ப்பனர்களைத் தூஷிக்கிறோம் என்று எண்ணுவது தவறு.

********************

பார்ப்பனரை ஏன் கண்டிக்கிறோம்?

இனங்கள் பலப்பல காலமாக ஓரிடத்தில் வாழ்வதால் கலப்பு ஏற்படுவது இயல்பு என்ற பொது உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால், எவ்வளவு காலமாக ஒன்றாக வாழ்ந்தும், கலந்தும்கூட, ஒரு கூட்டத்தினர் இன்னமும் தங்கள் மொழி, நடை, உடை, பாவனை ஆகியவைகளை, மற்றவர் களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியும், உயர்வு என்று கூறியும் வருவதைக் காண்கிறோம்.

இந்தப் போக்கைக் கொண்டுதான். ஆரியர் - திராவிடர் என்று கூறுகிறோம்.

- அண்ணா 23.11.47 திராவிட நாடு கேள்வி பதில் பகுதி

Read more: http://viduthalai.in/page-7/85067.html#ixzz39CFnPudE

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன் மொழிகள்

மனிதனுக்கு மானமும் பகுத்தறிவும் இருக்கிறது. அது கண்மூடித்தனமான மிருகத் தன்மைக்கு ஏற்பட்டதல்ல. பகுத்தறிவை மனிதன் தப்பாகப் பயன் படுத்தியே அதிகமான தொல்லைக்குட்பட்டான்.

*********************

கழுதைக்கும் எருமைக்கும் 1000 ஆண்டுகளுக்கு முன்பு என்ன புத்தி இருந்ததோ அதே புத்திதான் இன்றும் உள்ளது. மனிதனோ, பகுத்தறிவைப் பயன்படுத்திச் சிந்தனை மூலம் வளர வேண்டியவன். அப்படி வளர்ச்சி அடையாமல் மிருகங்களைப் போல் பகுத்தறிவற்றவனாக இருக்கக் காரணம் என்ன? அவனது அறிவு வளர்ச்சியினைத் தடைப்படுத்திச் சாஸ்திரங்களையும், கடவுளையும், மதத்தையும், முன்னோர்கள் நடப்பையும் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள்.

*********************

நமக்கு அறிவில்லை என்று எவரும் சொல்லிவிட முடியாது. தீட்சண்ய புத்தியும், கூர்மையான அறிவுமுடையவர்கள் என்பது நம் பழங்கலைகளையும் அவற்றின் திறனையுங் கண்டாலே தெரியும்.

ஆனால், நம் மக்களின் அறிவு மேலும் மேலும் பண்பட்டு வளர முடியாமல், கடவுள், மதம், சாஸ்திரம் என்பவைகளின் பேரால் அடக்கப்பட்டு விட்டது; சிந்திக்கும் உரிமையே அற்ற சிறிய மனிதர்களாக நம்மைச் செய்து விட்டது.

இந்தப்படியான சிந்திக்கும் தன்மையற்ற மக்களை மாற்றி அவர்களைச் சிந்திக்கத் தூண்டிச் சிந்தனைப் பாதையில் அழைத்துச் செல்வதுதான் திராவிடர் கழகம்.

Read more: http://viduthalai.in/page-7/85067.html#ixzz39CFyc6ei

தமிழ் ஓவியா said...

முதல் அமைச்சர்மீதான அவதூறுக்குத் தமிழர் தலைவர் கண்டனம்


இன்றைக்கு ஆர்ப்பாட்டத்திற்குப் புறப்பட்டு வருகின்ற நேரத்தில் ஒரு செய்தி கிடைத்திருக்கிறது; என்னவென்று சொன்னால், அங்கே இலங்கை அரசு எந்த அளவுக்கு அதீதமாக நடந்து கொள்கிறது. சுப்பிரமணி சாமிகளும், சேசாத்திரி அய்யங்கார்களும் அங்கே சென்று அவர்கள் ஏதோ இந்திய அரசாங்கத்தின் சார்பாக அனுப்பப்படுகிறோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு பச்சையாக - தமிழினத்தின் எதிரியாக அவர்கள் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு அடையாளம், அங்கிருக்கிற பாதுகாப் புத்துறையில் இணையத்திலே கட்டுரை ஒன்றைப் போட்டிருக்கிறார்கள்.

அது என்னுடைய கையிலே இருக்கிறது. அதிலே ஒருவர் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சரை எவ்வளவு கொச்சைப்படுத்தி, எவ்வளவு கேவலப்படுத்தி, தரமற்ற வார்த்தைகளிலே ஆபாசமான, அவதூறான வார்த்தையிலே அவர்கள் வருணித்திருக்கிறார்.

எனவே நீங்கள் அடிக்கடி மீனவர்களுக்காக போராடுகிறீர்கள், மீனவர்களுக்காக நீங்கள் ஆதரவு காட்டுகிறீர்கள். மீனவர்களிடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையெல்லாம் திரும்பக் கொடுக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் பிரதமர் மோடி எங்கள் பக்கம் இருப்பாரே தவிர, உங்களை ஒரு போதும் மதிக்க மாட்டார். உங்களை ஒரு போதும் சீண்ட மாட்டார். நீங்கள் மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட கடிதங்கள் - அந்த கடிதங்களுக்கு முன்னாலே சொல்லப்பட்டிருக்கின்ற வார்த்தை நான் இங்கே உச்சரிக்க விரும்பவில்லை. அவ்வளவு அருவருப்பான, ஆபாசமான, கேவலமான, சர்வதேச ரீதியிலே ஒரு அரசாங்கத்தினுடைய - இலங்கை அரசாங்கத்தினுடைய இணையதளத்திலே இடம் பெறக்கூடாது. அவ்வளவு அசிங்கமான ஒரு சொல். இப்படிப்பட்ட காரியம் நடந்து கொண்டிருக்கிறது. யாருடைய தைரியத்திலே இது நடந்து கொண்டிருக்கிறது?

தமிழ்நாட்டு முதலமைச்சரைப் பற்றி எங்களுக்கு பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். அதுவேறு செய்தி, அந்த உரிமையை நாங்கள் மாற்றிக்கொள்வோம் என்று பொருளல்ல. ஆனால் அதே நேரத்திலே, ஒன்றை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

தமிழ் நாட்டினுடைய முதலமைச்சரை விமரிசனம் செய்வதற்குக்கூட, அவர்களுக்கு உரிமை இருக்கிறதா என்பது கேள்விக்குரிய ஒன்று. அப்படியே செய்தாலும் கூட, நாகரிகமான முறையிலே அது நடைபெற வேண்டும். ஆனால் அசிங்கமான ஒரு மஞ்சள் ஏட்டிலே எப்படி எழுதுவார்களோ அதுபோல எழுதக்கூடிய அளவுக்கு எழுதியிருக்கிறார்கள். அதே நேரத்திலே மோடி அவர்களுக்கு நீங்கள் எத்தனைக் கடிதங்கள் எழுதினாலும் எங்கள் பக்கம் தான் இருப்பாரே தவிர, உங்களைப்பற்றி சீண்ட மாட்டார் என்றெல்லாம் அங்கேயிருக்கிற இலங்கை அரசினுடைய பாதுகாப்புத்துறை இணையத் திலே என் கையில் இருக்கிற இந்தக்கடிதம் சொல்லுகிறது. உலகம் முழுவதும் இணையத்தின் பயன்பாட்டில் இருக்கக் கூடியவர்கள், பார்க்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இவ்வளவு கேவலமாக நடந்து கொள் கிறார்கள் என்றால் ஏதோ அரசு மாற்றப்பட்டால் எல்லாமே மாறிவிடும் என்று நினைத்தார்களோ, அதைவிட ஏமாற்றம் வேறு இருக்கிறதா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

- (சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர்- 1-8-2014)

Read more: http://viduthalai.in/e-paper/85101.html#ixzz39I4avGNV

தமிழ் ஓவியா said...

இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்ற
விசாரணையைத் தடுப்பது - ஏன்?

தமிழர் தலைவர் தொடுக்கும் வினா இன்னொரு முக்கியமான பிரச்சினை; அருகில் இருக்கக்கூடிய இலங்கையிலே, ஈழத் தமிழர்கள் வாழ் வுரிமை இழந்து படாத பாடுபட்டு, முள் வேலிக்குள்ளே அவர்களெல்லாம் இராணுவத்தால் எப்படியெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டு 90,000க்கும் மேற்பட்ட தமிழச்சிகள் விதவையாக இருக்கிறார்கள்என்ற கொடுமை களெல்லாம் சொல்லப்பட்ட நேரத்திலே, அய்.நா. சபை யினுடைய மனித உரிமை ஆணையத்தாலே நியமிக்கப் பட்டவர்கள் சென்று பார்த்து, அங்கே அவர்கள் போர்க் குற்றவாளிகள்தான் என்று முடிவு செய்யக்கூடிய அளவுக்கு அதைப்பற்றிய விசாரணை செய்வதற்கு வந்திருக்கக் கூடிய நிலையிலே, அதற்கு யார் யாரெல்லாம் தகவல் தெரிந்த வர்களோ, அவர்களிடத்திலே செய்தியை பரிமாறிக் கொள்ள வேண்டும். சாட்சியங்களை சரியாக பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இங்கே இருக்கக் கூடிய அகதிகள் குடியேறியவர்கள், இவர்களிடத்திலெல்லாம் விசாரணை செய்வதற்கு மூவர் குழுவுக்கு இந்திய அரசு விசா மறுத் திருப்பதை விட வெட்கப்படக்கூடிய விசயம் வேறு கிடை யவே கிடையாது. இங்கே இருப்பது இலங்கை அரசினு டைய மறுபதிப்பா?

இலங்கை போர்க்குற்றவாளிகள் - அதுமட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகள் அதற்கான தீர்மானம் கொண்டு வந்து, பெரும்பாலான நாடுகள் ஆதரித்து அளித்த தீர்மானம் அய்.நா.வில் நிறைவேற்றி, அதற்குப் பிறகுதான் அந்தப்பணி தொடங்கியது. எனவே உலகம் முழுவதும் இருக்கக்கூடிய தமிழர்கள் மட்டுமல்ல, மனித உரிமை ஆர்வலர்கள் அத்தனை பேரும் இந்தக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லக்கூடிய நிலையில், அவர்களுக்காக பரிந்து பேசுவதைப்போல, முழுக்க முழுக்க அதை விசாரணையே செய்யக்கூடாது என்பது ஏதோ போர்க்குற்றமே நடக்கவில்லை என்பதைப்போல, ராஜபக்சே அரசுக்கு என்ன நிலைப்பாடோ, அதையே இங்கே இருக்கிற நரேந்திரமோடி தலைமையில் இருக்கக்கூடிய அரசு எடுக்கிறதென்றால், இதைவிட வேதனை, இதைவிட கண்டனத்திற்குரிய ஒன்று; இதைவிட வெட்கப்படக்கூடிய, அவமானகரமான - தேசிய அவமானம் வேறு இருக்க முடியாது. ஆகவே அதைக்கண்டித்து, அவர்களுக்கு விசா வழங்குங்கள் என்றுதான் இந்த ஆர்ப்பாட்டத்தின் இன்னொரு மிக முக்கியமான நோக்கம். அதுபோலவே மத்திய அரசு வெளியுறவுக் கொள்கை யிலே சென்ற காங்கிரஸ் அரசே பலமுறை பரவாயில்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த 60 நாட்களிலே நடந்து கொள்கிறபோக்கு கூடாது மாறியாக வேண்டும். அது மாற்றப்படவில்லையானால், அதற்குக் கடும் விலையை மத்திய அரசு கொடுக்க வேண்டியிருக்கும். சர்வதேச ரீதியாக தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்ல. அகில உலகத்திலே இருக்கக்கூடிய தமிழர்கள் - புலம் பெயர்ந்த தமிழர்களாக இருந்தாலும் சரி, வெளிநாட்டிலே வாழுகிற தமிழர்களாக இருந்தாலும் சரி, அதோடு மனித உரிமை ஆர்வலர்களாக இருந்தாலும் சரி எல்லோரும் சேர்ந்த குரல் அது. அவர்களுடைய பிரதிபலிப்பு என்று தெளிவாக எடுத்துக்காட்டி, அதற்காகத்தான் முதல் கட்டமாக இந்தப் போராட்டம். இரண்டு முனைகளிலே நடந்து கொண்டிரு க்கிறது. ஒரு பக்கத்திலே சமஸ்கிருத வாரம் என்ற பெயராலே தமிழினத்தினுடைய தொன்மை பாதிப்பு; இன்னொரு பக்கத்திலே ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமை யிலே நடைபெற்ற அக்கிரமத்தை உலகம் தெரிந்து கொள் ளக்கூடாது என்பதற்காக திரையிட்டு மறைக்கக்கூடிய அளவிற்கு விசா வழங்க மறுக்கின்ற முயற்சி. இன்னொரு பக்கத்திலே இங்குள்ள மீனவர்களுக்கு இழைக்கக்கூடிய அநியாயங்கள், அவர்களுடைய வாழ்வாதாரத்தை பறிக்கக்கூடிய கொடுமை இருக்கிறது என்றால் அதை தட்டிக் கேட்கக்கூடாது. நாங்கள் எங்கள் இஷ்டத்திற்கு தான் செய்வோம். என்றால் முழுக்க முழுக்க மோடி அரசினுடைய ஆதரவு இருக்கிறது என்பதை இலங்கை அரசு வெளிப்படையாக சொல்லக்கூடிய கொடுமை. இவற்றுக்கெல்லாம் பரிகாரம் தேட வேண்டும், என்பதற்கா கத்தான் இங்கே திரண்டிருக்கிறோம் தோழர்களே!

ஆகவே இந்தப் போராட்டம் என்பது இன்றைக்கு ஒரு துவக்கம்தான் என்பதை மீண்டும் சொல்லி, மேலும் தேவைப்பட்டால் இந்தப் போராட்டம் பல வடிவங்களில் வெடிக்கும் என்பதை எடுத்து சொல்லுகிறோம்.

- (சென்னை ஆர்ப்பாட்டத்தில் - 1-8-2014)

Read more: http://viduthalai.in/e-paper/85101.html#ixzz39I4nkx00

தமிழ் ஓவியா said...


இன்றைய ஆன்மிகம்?

நம்பிக்கை

நான் ஒருவன் மட்டும் தான் நரகம் அனுபவிக்கப் போகிறேன். ஆனால் பல்லாயிரக்கணக்கான வர் ஸ்ரீமந் நாராயண அஷ்டாக்ஷ்ர மகாமந் திரத்தாலே மோட்ச நிலை எய்துவார்களே! -என்கிறார் இராமானுஜர்.

ஆதிசங்கரரைக் கேட்டால் இதற்கு நேர் மாறாக சிவபெருமானை ஏற்றிக் கூறுவார். அது சரி - இவர் ஏன் நரகம் போக வேண்டும்? ஒருக்கால் இவர் நாராயண அஷ் டாக்ஷ்ர மகாமந்திரத்தை உச்சரிக்கவில்லையா? அல்லது அதில் நம்பிக்கை தான் இல்லையோ!

Read more: http://viduthalai.in/e-paper/85105.html#ixzz39I5BFB00

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு


பகுத்தறிவில்லாத எந்தச் சீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவ தில்லை, தன் இனத்தின் உழைப் பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின்மீது சவாரி செய்வதில்லை. (குடிஅரசு, 26.5.1935)

Read more: http://viduthalai.in/page-2/85106.html#ixzz39I5pATDx

தமிழ் ஓவியா said...


இரு வகையான பார்ப்பனீயத் தாக்கங்கள்

திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் (சென்னை, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோவை, சேலம், தஞ்சாவூர், புதுச்சேரி) இரு முக்கியப் பிரச் சினைகளை மய்யப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

முதல் பிரச்சினை மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி ஆகஸ்டு 7 முதல் 13 வரை சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது பற்றியதாகும். இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் எட்டாவது அட்டவணையில் 22 மாநில மொழிகள் இடம் பெற்றுள்ளன இவற்றுள் ஒரு மொழி சமஸ்கிருதம் அவ்வளவுதான்; இந்த மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட எந்த மாநிலமும் இந்தியாவில் கிடையாது. இந்தியா முழுமையும் இம்மொழியைப் பேசுபவர்கள் 16412 பேர் மட்டுமே. சதவீதக் கணக்கில் கூற முடியாத அளவுக்குக் குறைந்த எண்ணிக்கை இது.

இது ஆரியப் பார்ப்பனர்களின் தாய்மொழி; இதனை அவர்களைத் தவிர, மற்றவர்கள் - சூத்திரர்கள் (பஞ்சமர்கள் உட்பட) படிக்கக் கூடாது என்பது சாத்திரத் தடையாகும். இப்படிப் பெரும்பான்மையான மக்கள் பேசக் கூடாது என்று ஆக்கப்பட்ட ஒரு மொழி செத்துப் போகாமல் வேறு என்ன செய்யும்? அதனால் தான் செத்த மொழி (ஞிமீணீபீ லிணீஸீரீணீரீமீ) என்ற பெயரை ஈட்டிக் கொண்டு விட்டது.

இந்த மொழியில் உள்ளவை எல்லாம் வேதங்கள், உபநிஷதங்கள், இதிகாசங்கள், புராணங்கள், ஸ்மிருதிகள் ஆகும். இவற்றில் கூறப்பட்டிருப்பவை எல்லாம் பிறப்பிலேயே உயர்வு - தாழ்வு கற்பிக்கும் - பேதங்களை உருவாக்கும் விஷயங்கள்தாம். வருண தர்மம் என்பதை நீக்கி விட்டால் சமஸ்கிருதம் வெறும் சுழியில்(Zero) ) தான் முடியும்.

அதனால்தான் இந்து மதத்தை அமெரிக்கா வரை கொண்டு சென்ற விவேகானந்தர்கூட மதக் கலவரங்களும் ஜாதி வேற்றுமைகளும் பல்குவதற்கு ஒரு பெருங் கருவியாய் இருந்ததும் இருப்பதும் சமஸ்கிருத மொழியேயாகும். சமஸ்கிருத மொழி நூல்கள் தொலைந்து போனால் இப்போராட்டங்களும் தொலைந்து போகும் என்று கூறினார். இந்தச் சமஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான் இந்தி மொழியும். இந்தக் காரணத்தால்தான் பார்ப்பனர்கள் எப்பொழுதுமே இவற்றை மக்கள் மத்தியில் புகுத்துவதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகின்றனர்; இதனை சரியாக அடையாளங் கண்டு ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் தந்திரமும், சூழ்ச்சியும் இதனுள் பதுங்கி இருக்கிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது - தந்தை பெரியாரும் அவர்கள் கண்ட திராவிடர் இயக்கமும்தான்.

மத்திய அரசு என்றால் அனைத்து மாநிலங்களுக்கும் மக்களுக்கும் பொதுவாக இருக்க வேண்டுமே தவிர, குறிப்பிட்ட சமஸ்கிருத மொழியின்மீது தனிக் கவனம் செலுத்தி, மக்கள் பணத்தை அதற்காக வாரி இறைக்கக் கூடாது.

தமிழ் ஓவியா said...


மத்தியில் உள்ள பிஜேபி ஆட்சி இந்துத்துவா கொள்கை யுடையது என்பதால் அதன் மொழியான சமஸ்கிருதத் துக்குக் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது என்பதுதான் மறுக்கப்படவே முடியாத உண்மையாகும்.

இந்த அடிப்படையில்தான் சமஸ்கிருதத்தை எதிர்த்துத் திராவிடர் கழகம் நேற்று ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தின் இரண்டாவது நோக்கம் - ஈழத் தமிழர் பிரச்சினையை மய்யமாகக் கொண்டதாகும்.

அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மூவர் குழு ஒன்று நியமிக் கப்பட்டு, இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றத்தை விசாரிக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டது.

அந்தக் குழு இலங்கையில் மட்டுமல்லாது, இந்தியா போன்ற நாடுகளிலும் விசாரணை நடத்தும் அதிகாரம் கொண்டதாகும். ஆனால் இந்திய அரசு அந்தக் குழு இந்தியாவிற்கு வர விசா வழங்க மறுத்துள்ளது என்பது மிகவும் கொடுமையானது. பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஏதிலிகள் அடைக்கலம் பெற்றிருப்பது இந்தியாவில் தானே!

அய்.நா.வில் அங்கம் வகிக்கக்கூடிய இந்தியா, அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தின் முடிவை நிராகரிக்கிறது என்றால் இதன் பொருள் என்ன?

இன்னொன்று - இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களா கிய தமிழர்கள், இந்தியாவில் வாழக் கூடிய தமிழர்களின் தொப்புள் கொடி உறவினர்கள்; இதில் இந்தியாவுக்குக் கூடுதல் கடமையும், பொறுப்புணர்ச்சியும் உண்டு.

கடந்த காங்கிரஸ் ஆட்சிதான் ஈழத் தமிழர்க்கு விரோதமாக நடந்து கொண்டது என்றால், இன்றைய பிஜேபி ஆட்சியும், கடந்த ஆட்சியைவிட மூர்க்கத்தனமாக இதில் நடந்து கொள்கிறது.

காரணம் என்ன? இரு ஆட்சிகளிலுமே - இந்தப் பிரச்சினையை கையாளக் கூடியவர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களே!

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் சோ ராமசாமியாக இருந்தாலும் சரி, குருமூர்த்தியாக இருந்தாலும் சரி இந்து ராமாக இருந்தாலும் சரி, சுப்பிரமணிய சாமியாக இருந்தாலும் சரி சுஷ்மா சுவராஜாக இருந்தாலும் சரி, தமிழின வெறுப்பு என்ற நஞ்சை நெஞ்சில் கொண்ட பார்ப்பனர்களே! தமிழினம் என்று சொன்னாலே ஒரு இனம் தெரியாத கடும் வெறுப்பு!

இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள்கூட, நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசுகையில் கருத்துத் தெரிவித்தார். பொதுவுடைமைவாதிகள் எந்த ஒரு பிரச்சினையிலும் வர்க்க நிலை உண்டு என்று சொல்லுவது போல, இந்து ஆதிக்கம் உள்ள பார்ப்பனீய சமூக அமைப்பில், எதிலும் ஒரு வருண நிலை உண்டு - நுட்பமாகக் கணித்தால் இதன் பொருள் விளங்கும்.

திராவிடர் கழகம் நேற்று நடத்திய இரு பிரச்சினை களுக்கும் காரணம் என்பது பார்ப்பனீயமே!

மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப் போம் - அதற்கேற்ப நம் செயல்பாடுகளும் எதிர் காலத்தில் இருக்கும்; கழகத் தலைவர் இதனையும் நேற்று அறிவித் துள்ளார் என்பதை தோழர்கள் நினைவில் கொள்ளட்டும்!

Read more: http://viduthalai.in/page-2/85107.html#ixzz39I5x6tef

தமிழ் ஓவியா said...


இந்நாள் : தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர்


இந்நாள்

தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர்

(தோற்றம்: 02.08.1859 - _ மறைவு: 31.08.1930)

இசை என்றாலே அது தெலுங்குக் கீர்த்தனைகள் மற்றும் வடமொழிக்கு மட்டுமே உரித்தானது எனும் அறியாமை நோய் தமிழர்கள் மத்தியில் விரவிக் கிடந்த காலத்தில் அதனை பொய்யென உணர்த்தும் வகையில் தமிழ் இசையின் பாரம்பரியத்தையும் அதன் மேன்மை மற்றும் தகுதியை உலகறியச் செய்தவர்.

தஞ்சை ஆப்ரகாம் பண்டிதர்

பெயரில்தான் தஞ்சை ஒட்டிக்கொண்டதே ஒழிய பண்டிதர் பிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி அருகில் உள்ள சாம்பவர் வடகரை. தந்தை முத்துசாமி நாடார், தாய் அன்னம்மாள் இளம் வயதிலேயே சடையாண்டிப் பத்தரிடம் இசை கற்றார். தாமே பாடல்கள் இயற்றி இசை யோடு பாடும் ஆற்றல் பெற்றார். தன் பள்ளிக் கல்வியைப் பன்றிக்குளம், சுரண்டை ஆகிய சிறிய ஊர்களில் துவக்கிய ஆப்ரகாம். பிற்பாடு திண்டுக் கல்லில் இருந்த நார்மல் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பயின்று ஆசிரியராக உருவாக்கம் பெற்றார். இக்காலத்தில் சுருளி மலையிலிருந்த கருணானந்த யோகியிடம் சித்த மருத்துவம் பயின்றார். சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த அறிவு மிக்கவராக இருந்த காரணத்தால் இவரை மக்கள் பண்டுவர் என்றும் அழைத்தனர். அந்தப் பண்டுவரே பிற்பாடு மெல்ல மருவி பண்டிதராக மாற இவரது வாழ்வும் அப்பெயருக்கு சாலப் பொருந்தியது. சித்த மருத்துவத்தில் இவர் கண்டுபிடித்த மருந்து வெளிநாடுகளிலம் புகழைப் பெற சட்டெனத் தன் ஆசிரியப் பணியை உதறித்தள்ளி முழுமூச்சுடன் அப்பணியில் இறங்கினார்.

தஞ்சாவூரில் கிட்டத்தட்ட 100 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் மூலிகை களைப் பயிரிட்டு வளர்க்கத் துவங்கினார். தஞ்சை மண் இவருக்கு மீண்டும் இசையின் மீதுதான் நாட்டத்தை உண்டாக்கியது. இசையென்றாலே அனைவரும் மும்மூர்த்திகளின் தெலுங்கு கீர்த்தனைகளையே திரும்பத் திரும்பத் பாடுவதை எண்ணி வேதனை கொண்டவர். தமிழில் இசைக்கும் பலவித பாடல்களைப் புனையத் துவங்கினார். சொல், சுரம், தாளம் என எப்பிழைவும் இல்லாமல் இவர் உண்டாக்கிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 96.

இதன் அடுத்தக்கட்ட முயற்சியாக முழுக்க முழுக்கத் தமிழிசை குறித்து கருணாமிர்த சாகரம் எனும் 1200 பக்க நூலை எழுதத் துவங்கினார். மொத்தம் 712 புலவர்களைப் பற்றிய குறிப்புகள் இப்புத்தகத்தில் காணப்படுகின்றன. தமிழிசை வரலாற்றில் அளப்பரிய சாதனையாகக் கருதப்படும் இப்புத்தகம் மொத்தம் இரண்டு பாகங்களாக எழுதப்பட்டு ஒவ்வொன்றும் நான்கு பாகங்களாக பகுக்கப்பட்டிருந்தது. பண்டிதர் 1912இல் எழுதத் துவங்கிய இப்புத்தகத்தை மொத்தம் பதினைந்து ஆண்டுகளாக இரவு பகலாகக் கடும் உழைப்பை அர்ப்பணித்து 1917இல் முடித்தார். இதற்காகவே தமிழ் நாட்டில் மின் விசையால் இயங்கும் முதல் அச்சகத்தை தஞ்சாவூரில் நிர்மாணித்தார். 1912இல் சங்கீத மகாஜன வித்யாசங்கம் எனும் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தஞ்சையில், தன் சொந்த செலவில் மொத்தம் ஏழு இசை மாநாடுகள் இவைதான். இந்த இசைப்பணியில், தான் மட்டும் கரையாமல் தன் வாரிசு களையும் முழுவதுமாக இறக்கி தனக்குப் பிறகும் அச்சேவையைத் தொடரச் செய்தார். இவரது சேவையைப் பாராட்டி அப்போதைய பிரிட்டிஷ் அரசு இவருக்கு ராவ் சாகிப் பட்டம் வழங்கி கவுரவித்தது. தமிழக அரசு தஞ்சையில் ஒருவீதிக்கு தஞ்சை ஆப்ரஹாம் பண்டிதர் தெரு எனும் பெயர் சூட்டியுள்ளது.

Read more: http://viduthalai.in/page-3/85118.html#ixzz39I6sM24I

தமிழ் ஓவியா said...

கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!.

1. வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!
2. வாழ்க வாழ்க வாழ்கவே!
அன்னை மணியம்மையார் வாழ்கவே!
3. வெல்க வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!
4. ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம்
திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்!
5. கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
சமஸ்கிருத ஆதிக்கத்தை
சமஸ்கிருத ஆதிக்கத்தை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!
6. செத்துப் போன செத்துப் போன
சமஸ்கிருதத்துக்கு, சமஸ்கிருதத்துக்கு
சிங்காரமா? சிங்காரமா?
கொண்டாட்டமா? கொண்டாட்டமா?
7. சமஸ்கிருதம் என்று சொல்லி
சமஸ்கிருதம் என்று சொல்லி
திணிக்காதே! திணிக்காதே!
பார்ப்பனீயக் கலாச்சாரத்தை
பார்ப்பனீயக் கலாச்சாரத்தை
திணிக்காதே! திணிக்காதே!
8. மனித உரிமை ஆணையம்
மனித உரிமை ஆணையம்
நியமனம் செய்த நியமனம் செய்த
விசாரணைக் குழுவினை
விசாரணைக் குழுவினை
தடுக்காதே! தடுக்காதே!
9. மத்திய அரசே, மத்திய அரசே!
துணை போகாதே, துணை போகாதே!
கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு
கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு
துணை போகாதே, துணை போகாதே!
10. பணி முடிப்போம், பணி முடிப்போம்
தமிழர் தலைவர் தலைமையிலே
தமிழர் தலைவர் தலைமையிலே
தந்தை பெரியார், தந்தை பெரியார்
பணி முடிப்போம், பணி முடிப்போம்!
11. வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!
வெல்க வெல்க வெல்கவே
திராவிடர் கழகம் வெல்கவே!
- திராவிடர் கழகம்

Read more: http://viduthalai.in/page-4/85114.html#ixzz39I7QlyRl

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழிகள்

உன் தெய்வ மொழி நீ வணங்கும் உன் கடவுளுக்கே பிடிக்கவில்லையே? அப்புறம் என்ன தெய்வ மொழி வெங்காய மொழி. என்னென்னமோ சிறப்புச் சொல்கிறாய். இருந்தும் நமக்கு மானம் வரும்படியான, அறிவு வரும்படியான ஒரு நூல் தமிழில் இல்லையே.

பார்ப்பானுக்கும், பணக்காரனுக்கும் இருந்து வந்த மரியாதை குறைந்ததே ஒழிய இன்னும் ஆதிக்கம் ஒழியவில்லையே! சமதர்மம் என்றால் பார்ப்பான் ஒழிப்பும், பணக்காரன் ஒழிப்பும் தானே? பார்ப்பான் ஆதிக்கம் ஒழியாதவரை உண்மையான சமதர்மம் காணமுடியாது.

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற ஜீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும். இது தான் எனது ஆசை

Read more: http://viduthalai.in/page-7/85143.html#ixzz39I7uPl3J

தமிழ் ஓவியா said...


ராஜி


திருவாளர்கள் ஜயகர் அவர்களும், சாப்ரூ அவர் களும் திரு. காந்திக்கும், கவர்ன்மெண்டுக்கும் ராஜி ஏற்படுவதற்காக முயற்சி செய்கிறார்கள்.

இம்முயற்சியின் முடிவு எப்படி இருந்தாலும், தேசிய பத்திரிகைக் காரர்களும், பொது ஜனங்களும் வெகு மகிழ்ச்சியுடன் இம்முயற்சியைப் போற்றி ஏதாவது ஒரு வழியில் ராஜி ஏற்பட்டால் போதுமென்று ஆசைப் படுகின்றார்கள்.

இதிலிருந்து சட்டமறுப்பும், சத்தியாக்கிரகமும் மக்களுக்குச் சலிப்பு தோன்றிவிட்டது என்பது வெளிப்படை. திரு. காந்தி எவ்வளவு விட்டுக் கொடுத்தாகிலும் ராஜி செய்து கொள்ள வேண்டு மென்பதே தேசிய பத்திரிகைகளின் கவலையாகி விட்டது. சத்தியாக்கிரகத்திற்கு இன்னும் சில நாள்களுக்குள்ளாக பலமான எதிர்ப்புகள் கிளம்பிவிடும் என்பதை தேசியவாதிகள் உணரத் தலைப்பட்டு விட்டார்கள். அனேக வியாபாரிகள் கெட்டுப்போய் விட்டார்கள்.

கஷ்டத்தில் சிக்கி விழித்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் இனியும் நாலு இரண்டு வருஷங்கள் தாட்டலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வியாபாரிகளும் சட்ட மறுப்பின் மீது பழிபோட்டு சீக்கிரத்தில் தீபாவளி ஆக இதை ஒரு சாக்காகக் கொண்டு விட்டார்கள். இதனால் பல மக்களுக்குச் சத்தியாக்கிரகத்தின் மீது ஆத்திரம் உண்டாக இடம் ஏற்பட்டு விட்டது.

நிற்க, திருவாளர்கள் ஜயகரும், சாப்ரூவும் ராஜி முயற்சிக்கு வைசிராய்க்கு எழுதிய கடிதத்தில் தங்களுக்குத் திரு காந்தியின் நடவடிக்கையில் அனுதாபம் இல்லை என்று வெளிப் படையாகச் சொல்லி விட்டார்கள்.

திரு. வைசிராய் பதில் கடிதத்திலும் இந்தியர்களால் நிர்வகிக்க முடியாத காரியத்தை இந்தியர்கள் வசம் ஒப்படைக்க முடியாது என்பதாகச் சொல்லி, இந்தியர்கள் பூரண சுயாட்சிக்கு அருகர் அல்ல வென்றும், அவர்களது யோக்கியதைக்கு மேல் கொடுக்க முடியாதென்றும் பட்டவர்த்தனமாகச் சொல்லி விட்டார்.

இந்த நிலையில் திரு. காந்தி ராஜிப்பேச்சுக்கு இடம் கொடுப்பது எவ்வளவு தன் மதிப்பு உள்ளது? என்பதை நாம் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

தவிரவும் இந்தியர்களால் நிர்வகிக்க முடியாத காரியங்கள் எவை என்பதைப் பற்றிக் கூட இப்பொழுது கூற முடியாதென்றும், அது லண்டன் மகாநாட்டில்தான் முடிவு செய்யப்படும் என்றும் வைசிராய் பிரபு சொல்லியிருப்பதிலிருந்து வெகு காலமாகவே சொல்லிக் கொண்டு வருவதைத் தவிர லார்ட் இர்வின் கடுகளவாவது இரங்கி வந்தாரா? என்பது அறிவாளிகள் யோசிக்கத்தக்கதாகும்.

எனவே இந்த யோக்கியதை உள்ள ராஜியில் மக்களும், தலைவர்களும் பத்திரிகைக்காரர்களும் காட்டும் உற்சாகத்திலிருந்து சத்யாக்கிரகத்தின் குற்றத்தையும், வெற்றியற்ற தன்மையையும் இப்பொழுதாவது உணர்ந்து விட்டார்கள் என்றே தெரிய வருகிறது. முன்னைய ஒத்துழை யாமையை யாருடைய வேண்டுகோளும் விருப்பமும் இல்லாமலே திடீரென்று நிறுத்தினார். இப்போது ஏதாவது ஒரு சாக்கைக் கொண்டு நிறுத்த வேண்டியதா யிருக்கின்றது. எல்லாம் கடவுள் செயல்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 27.07.1930

Read more: http://viduthalai.in/page-7/85146.html#ixzz39I8SvdFz