Search This Blog

31.8.14

இதுதான் வால்மீகி இராமாயணம் - 24


இதுதான் வால்மீகி இராமாயணம்

(இதிகாசங்கள் என்றும் புராணங்கள் என்றும்  மக்களிடையே உலவ விடுகிறார்கள். இவற்றிற்குத் தெய்வீக முத்திரைகள் குத்துகின்றனர் இவற்றைப் படித்தால், இவற்றின்படி ஒழுகினால் நல்லது நடக்கும் - நற்கதி கிடைக்கும் என்றெல்லாம் இன்றுவரை கூடப் பிரச்சாரம் செய்கிறார்கள். உண்மையில் அவை என்ன? இவற்றின் தன்மை என்ன? ஒழுக்கத்திற்கு இடம் இருக்கிறதா? பகுத்தறிவுக்கு வழி இருக்கிறது? ஒன்றும் இல்லை. வால்மீகி இராமாயணம் பற்றி சைவப் பெரும் புலவரான பண்டித இ.மு.சுப்பிரமணிய பிள்ளை  (சந்திரகேகரப் பாவலர்) குடிஅரசில் எழுதிய பகுதிகள் (நூலாகவும் வெளிவந்துள்ளன). இங்கே வாரம் இருமுறை வெளியிடப்படுகிறது. படியுங்கள் - பகுத்தறிந்து பாருங்கள் - தெளிவு பிறக்கும்.)
அயோத்தியா காண்டம்

ஏழாம் அத்தியாயம்

ராமனை உடனே அழைத்து வரும்படி தசரதனாலே ஏவப்பெற்ற சுமந்திரன் பல தெருக்களையும் கடந்து இராமனுடைய அரண்மனையையடைந்து, காவலுள்ள பல கட்டுகளையும் கடந்து உட்கட்டிற் புகுந்தான். அங்கேயும் பல இளமையான வீரர்கள் காவல் புரிந்தனர். அங்கே தொண்ணூற்றைந்து வயதுக்கு மேற்பட்ட கிழவர் சிலரும் கையிற் பிரம்பேந்தி நின்றனர். இராமன் தன் தந்தையின் அரண்மனையில் உண்டி முடித்துக்கொண்டு திரும்பி வந்தவுடன், அவனை அக்கிழவர்கள் தமது மடியில் வைத்துக் கொண்டு உச்சி நுகர்ந்து மார்புறத் தழுவிப் போகச் சொல்லுவார்கள். அதனால் இராமனுடைய உடலிலிருந்த குங்குமப் பூக்களாலும், கஸ்தூரி முதலிய நறுமணங்களாலும் அவர்களுடைய உடல்கள் பூசப்பட்டிருந்தன.


சுமந்திரன் விடைபெற்று உட்சென்று இராமனைக் கண்டு, வந்த செய்தியைக் கூறினான். இராமனுடைய உடலில் குங்குமம் கலந்து பன்றியினுடைய இரத்தம் போலச் சிவந்த சந்தனம் பூசப்பட்டிருந்தது. இராமன் சீதையைப் பார்த்து, என் சிறிய தாய் எனக்கு முடிசூட்டை அவசரப்படுத்தியிருப்பர். அதனால் நான் போய் வருகிறேன் என்று கூறி அவளுடைய பாதங்களைக் தொட்டு அவளைச் சமாதானப்படுத்திச் சென்றான். சீதையும் சிறிதுதூரம் பின்சென்று வாழ்த்தினள். இலக்குவன் இராமனுக்குக் காவல் செய்து சென்றான்.


கைகேயியின் அரண்மனையையடைந்த இராமன் உள்ளே சென்று தசரதன் வாடிய முகத்துடன் படுத்திருப்பதையும், கைகேயி பக்கத்தில் நிற்பதையும் கண்டு இருவரையும் தனித்தனியே வணங்கினான். தசரதன் ஒருமுறை இராமா! என்று கூப்பிட்டான். பின் கவலையால் நீர் பெருகிய கண்களுடன் பேசமுடியாம லிருந்தான். அத்துயரத்துக்குத் தான் காரணமாயிருக்கலாமோ என்று இராமன் சந்தேகித்தான். அக்கவலை தன்னாலே நேர்ந்திருக்கலாமென்றே எண்ணி இராமன் கைகேயியை நோக்கி, அம்மா! நான் ஏதேனும் குற்றம் செய்தேனோ? அவருக்கு நோயோ? தாங்கள் ஏதாவது கடுமையாகப் பேசி வருத்த முண்டாக்கினீரோ! உண்மையைக் கூறும் என்று கேட்டான். கைகேயி இராமா, அவர் உன்னிடத்தில் ஏதோ சொல்ல விரும்புகிறார். ஒருவேளை நீ கேட்க மாட்டாயோ என்ற அச்சத்தால் கலங்குகிறார். இவர் எனக்கு வாக்குறுதி செய்யத் தயங்குகிறார். அது நன்மையோ தீமையோ அப்படியே நடக்கிறனென்று நீ வாக்குறுதி செய்தாலுன்னிடம் அவருக்குப் பதிலாக நானே சொல்லுகிறேன் என்றாள். இராமன் தன்மேல் அவ்வாறு அய்யமுற்றதற்காக வருந்தி எதைச் சொன்னாலும் கேட்பதாக வாக்குறுதி செய்தான். உடனே கைகேயி நான் கேட்ட இரண்டு வரங்களால் பரதன் நாடாளவும், நீ பதினான்காண்டு காடாளவும் உன் தந்தை வாக்குறுதி செய்திருக்கிறார். நீயும் இப்போது செய்த வாக்குறுதிப்படி உடனே காட்டுக்குப்போ. இதை உன் தந்தை உன்னிடம் சொல்ல மாட்டாமல் தயங்குகிறார் என்று கூறினாள். தசரதன் தன் கண் முன்னாலேயே இக்கொடிய சொல்லைக் கேட்டுத் தவித்தான்.


அது கேட்ட இராமன், அம்மா! அப்படியே ஆகட்டும். ஆனால், ஒன்று மட்டும் என் மனத்தைப் புண்படுத்துகிறது. பரதனுக்கு முடிசூட்ட வேண்டியதைப் பற்றி அவர் ஏன் என்னிடம் சொல்லவில்லை? எனக்கு வருத்தமுண்டாகு மென்று சொல்லவில்லையென்றால், பரதன் என் தம்பியல்லனா? சீதையை நான் மணம் செய்யும்போது அவளைத் தனக்கு வேண்டுமென்று அவன் கேட்டாலும் உடனே கொடுப்பேன். இவ்வரசாட்சி எனக்கு ஒரு பொருட்டா? பரதன் நாடாளட்டும், நான் காடேகுகிறேன் என்று புகன்றான். கைகேயி அவனை உடனே காடேக  அவசரப்படுத்தி, உன் தந்தை வெட்கத்தால் உன்னோடு பேசவில்லை என்றாள். அதைக்கேட்ட தசரதன், என்ன அநியாயம் என்று கூறி மூர்ச்சித்து விழுந்தான். இராமன் ஓடி அவனையெடுத்தான். இராமன், அம்மா! குடிகளை என் வசப்படுத்தி அரசாள முயல எனக்கு எண்ணமில்லை. அவ்வாறு தாங்கள் வருந்தவேண்டாம். நான் தாமதித்திருந்தால், ஒரு வேளை பரதன் எனக்கரசைக் கொடுத்துவிடுவானோ என்று அஞ்சுகிறீரோ? நீங்களே என்னிடம் கட்டளையிட்டால் உடனே போகேனோ? இந்த அற்பமான காரியத்தைத் தாம் அரசரிடம் கேட்கவும் வேண்டுமோ? இதோ என் தாயிடமும் சீதையிடமும் விடைபெற்றுப் போகிறேன். அதுவரை தாமதியும் என்று கூறி அவளையும் தசரதனையும் வணங்கிச் சென்றான். தசரதன் வாய்விட்லறினான். இராமன் துக்கத்தை வெளிக்காட்டினால் தன் நண்பர் வருந்துவராதலால், அடக்கிக்கொண்டு வெளியே வந்தான். அப்போது அங்கிருந்த பெண்கள் யாவரும், இந்த இராமனைக் காட்டிற்கனுப்பி மிகுந்த துக்கத்தை உலகுக்கு உண்டாக்கப் போகிறார் அரசர் என்று வாய்விட்டுக் கதறித் தசரதனை நிந்தித்தார்கள். இக் கூக்குரல் தசரதனுடைய காதில் விழ, அவன் வெட்கமும் துக்கமும் கொண்டு மூர்ச்சித்தான். அக்கூக்குரலைக் கேட்ட இராமன் பெருமூச்சு விட்டுக்கொண்டு போய் இலக்குவன் பின் தொடர்ந்துவரக் கோசலையின் அரண்மனையையடைந்தான். இவ்வரலாற்றை ஆய்வோம்.
சுமந்திரனுடைய இழி குணத்தையும், செயலையும் பெண்வழிப்பட்ட தசரதன் கண்டித்தமையை முன் கட்டுரையிற் கண்டோம். தசரதன் இராமனை அந்தரங் கமாக அழைத்து அவனுக்கு மிகவும் வேண்டியவர். இரவு முழுவதும் சாக்கிரதையாகக் காவல் புரியச் சொல்லியதையும் அதன்படி சகோதர வஞ்சகனாகிய இராமனும் தனக்குற்ற நண்பர்களையழைத்துப் பேசியிருந்ததையும் முன் கட்டுரையில் கண்டோம். அதன்படியே அவன் மிகவும் வேண்டியவர்களாலே காவல் புரியப்பெற்றிருந்ததைச் சுமந்திரன் காண்கிறான். காவல் வீரரோடும் சில கிழவர்களும் இருந்தார்களாம். அவர்கள் இராமனை மார்போடணைத்து மடிமேல் வைப்பார்களாம். இராமன் பால்குடி மறவாத பிள்ளையல்லவா! அவனை அவ்வாறுதான் செய்தல் வேண்டும். என்னே அநியாயம்! சீதையை மணஞ்செய்து முடி சூட்டுக்குத் தயாராக இருந்ததோடு, பல தாரங்களோடு கூடி மகிழ்ந்திருந்த முழு ஆண்மகனான இராமனைக் கிழவர்கள் மார்போடணைப்பதாம்! மடிமீதிருத்துவதாம்! என்னே வித்தை! அதனால் இராமன மேலிருந்த வாசனைப் பூச்சுகளெல்லாம் அக்கிழவர்கள் மேல் ஒட்டுவதாம்! அவன் ஒவ்வொரு நாளும், அவனுடைய தந்தையாகிய தசரதனிடம்போய் உண்டி முடித்து வாசனை பூசித்திரும்பும்போதெல்லாம் இக்கிழவர்கள் இச்செயல் புரிவார்களாம்! 

இவ்விழி செயலுக்கு இராமனும் உட்பட்டிருந்தானாம்! அநியாயம்! அநியாயம்!! இவ்விதமான இழி செயல்புரிந்தே தசரதனும் இராம னிடம் மயங்கி, அவனை எப்போதும் தன் பக்கத்திலேயே வைத்துப்பார்க்க வேண்டுமென்கிறானென்று நாம் முன் கட்டுரையில் விவரித்த உண்மைகளை மேலே குறித்துள்ள உண்மைகள் நன்கு வலியுறுத்தப் போதிய சான்றுகளாகின்றன.
இராமனுடைய மார்பிலே பூசப்பெற்றிருந்த செஞ்சந்தனத்துக்கு உவமையாகப் பன்றியின் இரத் தத்தை வால்மீகி கூறுகிறார். இவ்வால்மீகியின் இழிந்த மனப்பான்மைதா னென்னே! சிவந்த நிறத்திற்கு உவமை கூறப்பன்றி யிரத்தந்தான் சிறந்த உவமையாகும் போலும்!


தன்னை விட்டுப்பிரிய மனமில்லாதவளாகிய சீதையை அவளுடைய கால்களைத் தொட்டு இராமன் சமாதானம் செய்தானாம். என்னே விந்தை! கணவர் மனைவியிடம் விடை பெறும்போது, ஆரியர்களுடைய முறை இதுதான் போலும்! இவ்விதமான ஒழுக்கங்களைத் தற்கால உலகம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம், அவசியம். இதனால் தசரதன் கைகேயியைப் பலமுறை பணிவுடன் அவள் காலத் தொட்டு வேண்டுவதாகக் கூறியதும், ஒரு முறை அவள் காலில் வீழ்ந்ததும் வியப்பிற்கிடமானது அன்று. ஏனெனில், இவ்வாறு மனைவியின் காலைச் சாதாரணமாக விடைபெறும்போதே தொட்டு வேண்டி விடை பெறுவது அவ்வாரிய வகுப்பினரில் இயற்கையாக இருக்கிறது. என்னே இவர்தம் நாகரிகம்!
சகோதரனாகிய பரதனை வஞ்சித்து நாடாள எண்ணிப் புத்திரத்துரோகியாகிய தசரதனோடு கூடி முயன்ற தீயவனாகிய இராமன், கைகேயி வீட்டில் தசரதன் வாடிய முகத்தோடிருந்ததைக் கண்டவுடனே திகிலடைந்தான். தசரதனுக்கு அவ்வருத்தம் தன்னையொட்டியே ஏற்பட்டிருக்க வேண்டுமென எண்ணுகிறாள். அதாவது தன் முடிசூட்டைக் கைகேயி கலைத்திருக்க வேண்டும். அதனாலேயே தசரதன் வருத்தமுற்றுளா னெனத் தீர்மானித்து உண்மையை அறிய ஆவலோடும் கைகேயியிடம் தந்திரமாக நான் ஏதாவது தவறுதல் செய்தேனோ, அரசர்க்கு நோயோ, நீ அவர் மனம் வருந்தக்கூடிய பேச்சைப் பேசினாயோ என்று கேட்கிறான். இராமனைப் போலும் தந்திரசாலிகளைக் காண்பதரிது. சரித்திரங்களிலும் இவனைப் போன்றார் ஒரு சிலரே காணப்படுகின்றனர். முதலில் குற்றத்தைத் தன்மீதேற்றிக் கடைசியில் கைகேயி ஏதாவது கேடு செய்ததுண்டா எனத் தன் குறிக்கோளைக் கூறுகிறான். இராமன் தன்மீது  கைகேயி அய்யமுற்றதற்காக வருந்துவது போலும பாசாங்கு செய்கிறான். அவனுடைய மனம் அவனுடைய முடிசூட்டுக்குக் கேடு வந்ததை எண்ணியெண்ணி வருந்தியது. ஆனால் அவன் மிகவும் தந்திரசாலியாதலின், தன் வருத்தத்தை ஒரு சிறிதும் வெளிக்காட்டாது மறைக்கிறான்.


கைகேயி அன்றே பரதன் முடிசூடவேண்டுமென்று கூறினாளாதலின் எப்படியும் பரதன் அன்று வந்துவிடுவான், அவன் அன்று வந்துசேர அவள் முன் னேற்பாடு செய்திருக்க வேண்டும். அதனால் அவன் வரும்வரை ஏதாவது சாக்குக் காட்டிக் காடேகாமல் தாமதித்துவிட்டால் அவன் மிகவும் கண்ணோட்டமுள்ள வனும் சூதுவாது தெரியாதவனுமாதலின், எப்படியாவது தனக்கு நாட்டினைக் கொடுத்துவிடுவான் எனத் தந்திரமாக எண்ணிய இராமன், பரதனுடைய முடிசூட்டைப் பற்றித் தசரதன் என்னிடம் ஏன் கூறவில்லை என்று கேள்வி கேட்கிறான். ஆனால் தந்திரசாலியாதலின் தான் காடேகுவதில் தடையில்லை யென்றும் கூறிக்கொள்ளுகிறான்.

                         -------------------------"”விடுதலை” 29-08-2014

36 comments:

தமிழ் ஓவியா said...

நெஞ்சம் மறக்கவில்லை

மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எழுத்தராகப் பணி புரிந்து கொண்டு பகுத்தறிவாளர் கழக செயலாளராகவும் பணி செய்து வந்தேன். மன்னை நாராயணசாமி அவர்களின் வீடு ஒன்றில் வாடகைக்குக் குடி இருந்தேன். எனது வீட்டின் அரு கில் அன்னை நாகம்மையார் மன்றம் இருந்தது. அங்கு கழகக் கூட்டங்கள், வாழ்க்கை ஒப்பந்த விழாக்கள் நடந்து வந்தன.

உள்ளிக்கோட்டை பக்கிரிசாமி, எடமேலையூர் இராசன், நகரத் தலைவர் அழகிரிசாமி, காளவாய்க்கரை கோவிந்தராசு, நீடாமங்கலம் ஆறுமுகம், சுப்பிரமணியன் போன்ற கழகத் தலைவர்கள் வீட்டிற்கு வருவார்கள். மன்னை நாராயணசாமி, அவர்களை சந்தித்து பேசிவிட்டு செல்வார்கள். அரசு அதிகாரிகளும் என் மூலம் மன்னை அவர்களை சந்தித்து வரு வார்கள். நானும் அவர்களை மன்னை யிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைப்பேன். கும்பகோணம் சோழன் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராகப் பணி செய்த பாசுக்கரன் என்பவர் கழகத் தலைவர்களுடன் எனது வீட்டிற்கு வந்தார்.

எனது மூத்த மகள் திலகவதி பள்ளி இறுதி வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி) முடித்து விட்டு வீட்டில் இருந்தது. அதைக் கவனித்த ஓட்டுநர், குடந்தை போக் குவரத்துக் கழக மேலாண்மை இயக் குநராக ஞான.அய்யாசாமி பணி செய்கிறார்கள். தந்தை பெரியார் அவர்களிடம் நெருங்கிப் பழகியவர். அவர்களிடம் கூறினால் கட் டாயம் வேலை போட்டுத் தருவார்கள் என்றும், கூடவே தானும் வருவதாக வும் தெரிவித்தார்கள்.

அவர்களை தாங்கள் பார்க்க வரும்போது அன் றைய விடுதலை நாளிதழை அவர்கள் பார்க்கும்படி கையில் எடுத்து வரவும் என்று தெரிவித்தார். அதன்படி அவரை அழைத்துக் கொண்டு கும்பகோணம் தலைமை அலுவலகம் சென்றேன். நான் மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி செய்வதையும், பகுத்தறிவாளர் கழக செயலாளராகச் செயல்படுகிறேன் என்றும் கூறினார். கையில் வைத்திருந்த அன்றைய விடுதலை நாளிதழை அவர்கள் மேசை மீது வைத்தேன். அதைப்படித்து விட்டு அதன் பிறகுதான் விசாரித்தார்கள்.

எனது மகள் திலகவதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றுள்ளது. அதனால் ஏதாவது வேலை போட்டுத் தாருங்கள் என்றேன். கூட வந்த ஓட்டு நரும் நான் மன்னை நாராயணசாமி அவர்கள் வீட்டில்தான் குடியிருக்கிறார் என்று கூறினார்கள்.

போக்குவரத்து கழகத்தில் பெண் களை வேலைக்கு சேர்ப்பதில்லையே என்றார்கள். உடன் அருகில் தட்டச்சு செய்து கொண்டிருந்த எனது பெண்ணுடன் படித்த பெண்னைப் பார்த்தேன். அதை கவனித்த அவர்கள் தட்டச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். எழுத்தர் பணிகளுக்கு பெண்களை சேர்ப்ப தில்லை என்றார்கள். எனக்கு பையன்கள் இல்லை அவசியம் செய்ய வேண்டு மெனக்கூறி விண்ணப்பத்தைக் கொடுத்தேன்.

வாங்கிக் கொண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதா என்று கேட்டார்கள். செய்துள்ளது என்று கூறினேன். உடன் தட்டச்சரிடம் தஞ்சாவூர் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு கடிதம் எழுதி பட்டியல் கேட்கும்படி கூறினார். எனது மகள் பெயரைச் சேர்த்து பட்டியல் வாங்கி வந்தேன். எனது மகள் வேலை சம்பந்தமாக மன்னை அவர்களிடம் நடந்த விவரங்களைக் கூறி கட்டாயம் வேலை வாங்கித் தரும்படிக் கூறினேன்.

சரியெனக்கூறி இயக்குநரிடம் சொன்னார்கள். அவர் களும் தொலைபேசியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வந்த பட்டி யலில் உள்ள அனைவருக்கும் நேர்முகத் தேர்விற்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதில் மன்னை அவர்களின் நேர்முக உதவியாளர் கடகம் இராமநாதன், உறவினர் பையனுக்கும் நேர்முக தேர் விற்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

அந்தப் பையனுக்கும் மன்னை அவர்களிடம் சொல்லி சிபாரிசு செய்யப்பட்டது. எனது மகளுக்கும் அந்தப் பையனுக்கும் சிபாரிசு செய்த தால் உடனே இயக்குநர் அவர்கள் மன்னை அவர்களிடம் கேட்டபோது முதலில் பரிந்துரை செய்ததை நினைவில்லாமல் சொல்லிவிட்டேன். முதலில் சொன்ன திலகவதிக்கே நியமன ஆணை வழங்கும்படிக் கூறினார்கள்.

ஆகவே மன்னார்குடி போக்குவரத்து கழக பணி மனையில் ரூ.600 (ஆறு நூறு ரூபாய் மட்டும்) தினக்கூலியாக நியமனம் செய்தார்கள். தனது வேலையை திறமையாகச் செய்ததால் ஓராண்டுக்குப் பிறகு கும்பகோணம் தலைமை அலுவலகத்திற்கு எழுத்தராகப் பணி நியமனம் செய்தார்கள். அங்கு பணி மூப்பு அடிப்படையில் பிரிவு கண் காணிப்பாளராக பணி செய்து அண் மையில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளது.

சென்னை பெரியார் திடலுக்கு வரும் போதெல்லாம் ஞான.அய்யாசாமி அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து வருவேன். அவர்கள் இயற்கையெய் தியதை விடுதலை மூலம் அறிந்து பெரிதும் வருந்தினேன்.

- ச.மு.செகதீசன் (மாவட்ட தி.க. (மயிலாடுதுறை)

Read more: http://viduthalai.in/page2/86875.html#ixzz3C1XdiQCp

தமிழ் ஓவியா said...

மூடநம்பிக்கைச் சகதிகள்!


(அன்றாட வாழ்வில் மனிதன் எப்படி எப்படி எல்லாம் மூடநம் பிக்கை மிருகமாக நடமாடுகிறான் என்பதை கோவை அய்யாமுத்து சுவைபடக் கூறுகிறார்)

ஒரு காகம் வீட்டின்முன் உட் கார்ந்து கரைந்தவுடனே, வீட்டுக்கு உற்றார் உறவினர் வரப் போகிறார்கள் எனத் தீர்மானிக்கிறார்கள். காகத்துக்கு இத்தகைய சக்தியிருக்கக் கூடுமோ?

ஒருவருக்கு விக்கல் எடுத்த வுடனே, பிறர் தம்மை நினைப்பதாகக் கூறுகிறார்கள். ஒருவருக்குப் பொறை போனவுடனே, பிறர் தம்மைக் காய் வதாக வைவதாக) எண்ணுகிறார்கள்.

கையிலிருந்து ஒரு காசு தவறிக் கீழே விழுந்தவுடனே லாபம் வரப் போவதாகக் கூறுகிறார்கள்.

ஒரு காரியம் செய்ய எண்ணும் போதோ அல்லது ஒரு காரியத்தைத் துவக்கும் போதோ யாராவது தும்மி னால் சகுனம் கெட்டதாகக் கூறுகிறார்கள்.

ஒருவன் புறப்படும்போது பூனை குறுக்கே ஓடினாலும் வீட்டின் விட்டம் தலையில் தட்டினாலும் வாசல் கல் காலில் பட்டாலும் காரியத் தடங்கல் ஏற்பட்டு விட்டதாக எண்ணுகிறார்கள்.

மற்றும் நாவிதன், விறகுச் சுமை, ஒற்றைப் பார்ப்பான், எண்ணெய்க்குடம் எல்லாம் சகுனத் தடைகளாகவே விளங்குகின்றன.

ஒரு ஊருக்குப் பிரயாணம் செய்யும்போது காகம் இடமிருந்து வலம் போனாலும், வலதுபுறமிருந்து இடதுபுறமாகப் பறந்தாலும் அதற்கு நன்மை,. தீமையெனப் பொருள் கூறுகிறார்கள்.

போதாக்குறைக்குப் பொல்லாத நேரங்களும், ராகு, குளிகை காலங்களும் பார்ப்பன பஞ்சாங்கத்தில் பொதிந்து கிடக்கின்றன.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதாம், செவ்வாய் தோஷமாம்! வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரத்தில் பிறரிடமிருந்து பொருள் பெறலாம். ஆனால் கொடுத்தல் கூடாது. ஏனெனில் லட்சுமி போய் விடுவாளாம்.

ஒருவன் வாழ்க்கையில் இன்ப மடைவதற்கும், துன்பமடைவதற்கும் அவன் வளர்க்கும் மாடு, எருது, குதிரையாகியவைகளின் சுழிகளே காரணமாம். ஹ்ஹ்ஹா! எவ்வளவு விந்தை! மிருகங்களின் சுழிகள் மனிதனின் வாழ்க்கையை நிச்சயிக்கச் சக்தி வாய்ந்திருக்கின்றன!

பச்சைக்கல் மோதிரத்தின் மர்மம் பலவாறாகக் கூறப்படுகின்றது.

கருப்புப்பட்டுக் கயிற்றால் ஏழு முடிபோட்டு, அதைக் காசிக் கயிறென்று கரத்தில் கட்டிக் கொண்டால் சலக பிணிகளும் போய் விடுமாம்!

வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லும் மாமிசப் பதார்த்தத் தில் ஒரு துண்டு அடுப்புக்கரியைப் போட்டுச் சென்றால் பேய் அணுகாதாம்! பருவமடைந்த கன்னி வீட்டினின்றும் வெளியே செல்லும் போது ஒரு மயிர் கோதியைக் கையில் எடுத்துச் சென்றால் பேய்கள் மிரண்டோடுமாம்!

இவையும், இன்னும் இவை போன்ற பலவும் அறியாமை என்ற நிலத்தில் விதைக்கப்பட்ட வித்துக்களா கும். தன் அறிவினால் ஆராய்ந்து பார்ப்பவனுக்கு இவைகளெல்லாம், கடுகளவு உண்மையும் உடையவையல்ல. என்பது நன்கு புலனாகும். நமது வாழ்க்கையின் போக்கை பறவைகள் பறப்பதும், கத்துவதும் நிச்சயப்படுத்த முடியாதென்று புத்தியுள்ளவனுக்குத் தெரியாமல் போகாது.

நமது வாழ்க்கையின் போக்கை மிருகங்களின் மேலிருக்கும் ரோமச் சுழிகளாலும் வண்ணான், நாவிதன், பார்ப்பான் போன்ற தொழிலாளிகள் சுபாவமாக நடமாடுதலாலும், கற்களாலும், கயிற்றாலும், இரும்பாலும் கல்லாலும், விட்டத்தாலும், மரச்சட் டத்தாலும் நிச்சயப்படுத்த முடியா தென்பதை அறிவினால் ஆராய்ந்து பார்ப்பவன் தெரிந்து கொள்வான்.

வியாழனைப் போன்றே பிரதி வெள்ளியும், வெற்றியைப் போன்றே சனியாகிய ஏழு நாட்களும் இருக் கின்றனவேயன்றி, ஒரு நாள் லட்சுமிக்கு ஏற்றதென்றும், பிறநாள் லட்சுமியை விரட்டுமென்றும் புத்தியுள்ளவன் ஒப்புக் கொள்ளமுடியாது.

(24.5.1931 குடிஅரசு)

Read more: http://viduthalai.in/page2/86874.html#ixzz3C1XmOTa4

தமிழ் ஓவியா said...

சத்தியமூர்த்திபற்றி ராமசாமி முதலியார்!


அரசியலாகட்டும், அலுவலகமா கட்டும் மகா உழைப்பாளிகள் போலவும், உண்மைத் தொண்டர்கள் போலவும் பாவலா செய்வது பார்ப் பனர்களுக்கு கை வந்த கலை!

பார்ப்பன அரசியல் மேதை சத்தியமூர்த்தி 1934 வாக்கில் காங்கிரஸ் சார்பில் மத்திய சட்டசபை தேர்தலுக்கு நின்றார். தேர்தல் கூட்டங்களில் என்ன பேசினார்கள் தெரியுமா? காங்கிரஸ் நாட்டுக்கு தியாகம் செய்த கட்சி. நாங் கள் எல்லாம் ஜெயிலுக்கு போனவர்கள், எனவே எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றார். இங்கேதான் வேடிக்கை.

சத்தியமூர்த்தி ஜெயிலுக்கு போக நேர்ந்ததையும் -_ அங்கு அவர்பட்ட கஷ்டத்தையும் ஏ. ராமசாமி முதலியார் அம்பலமாக்குவதைக் கவனியுங்கள்.

ஒரு சமயம் தோழர் சத்தியமூர்த்தி கோவிந்தப்ப நாயக்கன் தெருவில்ஒரு கடையில் நாற்காலி போட்டு உட் கார்ந்து கொண்டு சட்ட பகிஷ்கார துண்டு பிரசுரங்களை ஜனங்களுக்கு விநியோகித்துக் கொண்டிருந்தார்.

அப்போது அவரை போலீசார் கைது செய்து மாஜிஸ்டிரேட்டின் முன் நிறுத்தினார்கள். மாஜிஸ்டிரேட் சத்தியமூர்த்தியை பார்த்து அய்யா சத்தியமூர்த்தியே -_ இவ்வளவு மலிவான விலையில் நான் உன்னை பெரிய வீரனாக்க விரும்பவில்லை என்று சொல்லி எச்சரித்து விடுதலை செய்து விட்டார். சத்தியமூர்த்தி சிறைக்கு போகாததைப்பற்றி மக்கள் கேவலமாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். அவர் சிறைக்கு போனால்தான் மரியாதை என்ற நிலைமை ஏற்பட்டது.

கணக்கற்ற இளைஞர்கள் தடியடிபட்டு ஜெயிலுக்கு போய்க் கொண்டிருந்தனர். உயிர் போனாலும் சத்தியமூர்த்தி அப்படி தடியடி படமாட்டார். எனவே ஒரு மோட்டார் தேடிபிடித்து அதில் உட்கார்ந்துகொண்டு மறுபடியும் நோட்டீஸ் விநியோகம் செய்தார். இது பெரிய குற்றமாகாது என்றும், கைது ஆனாலும் பெரிய தண்டனை கிடைக் காது என்றும் முழு நம்பிக்கையோடு சத்திய மூர்த்தி மோட்டார் சட்ட மறுப்பில் இறங்கினார்.

ஆனால் பாவம். பதினெட்டு மாதம் தீட்டினார்கள். சிறை தண்டனை உத்தரவான அதே இடத்தில் ஏ வகுப்பு போடும்படி மன் றாடி வேண்ட, மாஜிஸ்டிரேட்டும் மனம் இரங்கி அவ்விதமாக அனுமதித் தார். வேலூர் ஜெயிலுக்கு அனுப்பி னார்கள். உடம்பு சரியில்லை என்று ஜெனரல் ஆஸ்பத்திரியில் நான்கு மாதம் இருந்தார். ஆஸ்பத்திரியில் எல்லா சுதந்திரங்களும் உண்டு.

ஜெயிலில் இருந்தபோதும் -_ அங்குவரும் (சத்திய மூர்த்திக்கு எதிர்க்கட்சி) பிரமுகர்களை வேண்டி எவ்வளவோ வசதிகளை ஜெயிலில் பெற்றுக் கொண்டார். மேலும் நீதிக்கட்சிக்காரர்களின் உதவி யுடன் குறித்த காலத்திற்கு முன்பே விடுதலை ஆனார். அப்படி உதவியவர் களில் நானும் ஒருவன். சத்தியமூர்த்திக்கு எள் மூக்கத்தனையாவது பெருந்தன்மை இல்லை என்பது நிச்சயம். வடிகட்டிய நன்றி கெட்டதனமே அந்த மகானுபா வரின் இயற்கைச் சுவாபம் என்று தெரிகிறது.

பார்ப்பனர்களால் _- மகாமேதை யாகவும், தியாகியாகவும் இன்று சொல்லப்படும் சத்தியமூர்த்தியின் யோக்கியதையே இப்படி என்றால்.. அந்தோ! வெட்கம் என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும் விசித்திர இனமே!

பகுத்தறிவு 21.10.1937

Read more: http://viduthalai.in/page8/86825.html#ixzz3C1ZC3jZp

தமிழ் ஓவியா said...

அன்றும் - இன்றும்!


காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் பட்டப் பகலில் அக்கோ யில் மேலாளர் சங்கரரா மன் கொலை செய்யப்பட் டார். அந்த சங்கரராமன். காஞ்சிபுரம் சங்கராச்சாரி யார் ஜெயேந்திர சரஸ்வதி மீது குற்றஞ்சாட்டி எழுதிய கடிதங்கள் பிரசித்திப் பெற் றவை. அந்தச் சூழலில் காஞ்சி ஜெயேந்திரரால் ஏவப்பட்டவர்கள் இந்தப் படுகொலையைச் செய்த னர் என்று ஏடுகளில் ஏராளமான செய்திகள் வெளி வந்ததுண்டு

இந்த வழக்குத் தமிழ் நாட்டில் விசாரிக்கப்பட் டால் தமக்கு நியாயம் கிடைக்காது என்று கூறி சங்கராச்சாரியார் தரப்பில் உச்சநீதிமன்றம் சென்ற போது, உச்சநீதிமன்ற நீதி பதி திரு. பாலசுப்பிரமணி யம் என்பவர் நான் சங்க ராச்சாரியார் சீடன்; எனவே இந்த வழக்கினை நான் விசாரிக்க மாட்டேன்! என்று சொன்னது எத் தனைப் பேருக்கு நினை வில் இருக்கும் என்று தெரிய வில்லை.

உச்சநீதிமன்ற ஆணைப்படி இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. மொத்தம் 189 சாட்சியங்களில் 83 பேர் பிறழ் சாட்சியாகி விட்டார் கள். எந்த ஒரு வழக்கிலும் இத்தனைப் பேர் பிறழ் சாட்சியங்களாக மாறிய வரலாறு இல்லை; இப்படி பிறழ் சாட்சி சொன்னவர் கள்மீது கூட நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் உண்டு. இந்த வழக்கில் அதுபற்றிக் கவலைப்பட்ட தாகத் தெரியவில்லை.

சங்கராச்சாரியார் இரு வரும் மற்றவர்களும் ஒட்டு மொத்தமாக விடுதலை செய்யப்பட்டார்கள்; அதன் மீது மேல் முறையீடு செய்ய புதுச்சேரி அரசு - ஆளுநர் அனுமதி வழங் கிய நிலையில், சுப்பிர மணியசாமி என்ற பச்சை பார்ப்பனர் ஒருவர் குடி யரசு தலைவருக்கு மனு கொடுக்கிறார். இந்த வழக் கின்மீது மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அதில் கூறியுள்ளார்.

அதனைக் கண்டித்து தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். சு. சாமி யின் புகாரை ஏற்கக் கூடாது என்று குடியரசு தலைவருக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு அந்த அறிக் கையில் வேண்டுகோள் விட்டிருந்தார். (8.8.2014)

இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கை மேல் முறையீடு செய்யலாமா கூடாதா என்று அட்டர்னி ஜெனரலின் கருத்துக் கேட் கப்பட்டது. ஒரு மாவட்ட அளவில் நடைபெற்ற ஒரு வழக்குக்காக அட்டர்னி ஜெனரலிடம் கருத்துக் கேட்கும் போதே அதன்மீதான அய் யப்பாட்டை திரா விடர் கழகத் தலைவர் எழுப்பினார். (21.8.2014) அது உண்மை என்பதை நிரூபிக் கும் வகையில் அட்டர்னி ஜெனரல் மேல் முறையீடு தேவையில்லை என்று கூறி விட்டார்.

இந்த நேரத்தில் குடிஅரசு ஏட்டில் (20.2.1927) வெளி வந்த ஒன்றை எடுத்துக் காட்டுவது பொருத்தமான தாகும். பார்ப்பானை சுவாமி என்ற காலமும் போச்சே! லோக குரு என்ற காலமும் போச்சே! காலில் விழும் காலமும் பேச்சே! காலைக் கழுவி தண்ணீரைக்குடித்து மோட்சத்திற்குப் போகும் காலமும் போச்சே! நம் எல்லோரையும் வைப் பாட்டி மக்கள் சூத்திரர் கள் என்னும் காலமும் போச்சே!

காங்கிரஸ் தலைவர்: துரைகளே! இது வகுப்புத் துவேஷம் அல் லவா!

துரை: பொறும் பொறும் சட்ட மெம்பரை யும் அட்வொகேட் ஜென ரலையும் அபிப்ராயம் கேட் போம்; அவசரப் படாதே யும் (குடிஅரசு - 20.2.1927).

இதற்கு விளக்கம் தேவையில்லை அன்றும் அட்வொகேட் ஜெனர லைக் கேட்டார்கள்; இன்று அட்டர்னி ஜெனரலைக் கேட்கிறார்கள் - புரிகிறதா!

- மயிலாடன் 30-8-2014

Read more: http://viduthalai.in/page1/86799.html#ixzz3C1aDuUkJ

தமிழ் ஓவியா said...

உள்ளதைச் சொன்னால் எரிச்சலா?

மும்பை, ஆக.30_ விநாயகரை பற்றி, சமூக வலைதளத்தில் கிண்டலடித்தும், அவதூறாகவும் கருத்து தெரிவித்த, பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. 'சத்யா, ரங்கீலா, சர்க்கார் ராஜ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். விநாயகர் சதுர்த் தியான நேற்று, சமூக வலைதளமான, 'டுவிட்டர்'ல், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். விநாயகரை கிண்டலடித்தும், கேலி செய்தும், அவ மதிக்கும் வகையிலும், பல கருத்துகளை தெரி வித்திருந்தார்.

'விநாயகருக்கு, அவரின் தலையையே, அவரால் காப்பாற்ற முடியவில்லை. பக்தர்களை எப்படி காப்பாற்றுவார். மற்ற கடவுள்களை விட, விநாயகர் அதிகம் சாப்பிடுவார் போலிருக்கிறது. அதனால் தான், குண்டாக இருக்கிறார். விநாயகரை வழிபட்டு, பலன் அடைந்த பக்தர்களின் பட்டியலை வெளியிட முடியுமா?' என்பது போன்ற பல சர்ச் சைக்குரிய விஷயங்களை அவர் தெரிவித்திருந்தார்.

விநாயகர் சதுர்த்தி அன்று, ராம்கோபால் வர்மா இவ்வாறு தெரிவித்துள்ளது, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ''என் கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,'' என்றார்.

Read more: http://viduthalai.in/page1/86804.html#ixzz3C1aSchzc

தமிழ் ஓவியா said...

உள்ளதைச் சொன்னால் எரிச்சலா?

மும்பை, ஆக.30_ விநாயகரை பற்றி, சமூக வலைதளத்தில் கிண்டலடித்தும், அவதூறாகவும் கருத்து தெரிவித்த, பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. 'சத்யா, ரங்கீலா, சர்க்கார் ராஜ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். விநாயகர் சதுர்த் தியான நேற்று, சமூக வலைதளமான, 'டுவிட்டர்'ல், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். விநாயகரை கிண்டலடித்தும், கேலி செய்தும், அவ மதிக்கும் வகையிலும், பல கருத்துகளை தெரி வித்திருந்தார்.

'விநாயகருக்கு, அவரின் தலையையே, அவரால் காப்பாற்ற முடியவில்லை. பக்தர்களை எப்படி காப்பாற்றுவார். மற்ற கடவுள்களை விட, விநாயகர் அதிகம் சாப்பிடுவார் போலிருக்கிறது. அதனால் தான், குண்டாக இருக்கிறார். விநாயகரை வழிபட்டு, பலன் அடைந்த பக்தர்களின் பட்டியலை வெளியிட முடியுமா?' என்பது போன்ற பல சர்ச் சைக்குரிய விஷயங்களை அவர் தெரிவித்திருந்தார்.

விநாயகர் சதுர்த்தி அன்று, ராம்கோபால் வர்மா இவ்வாறு தெரிவித்துள்ளது, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ''என் கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன்,'' என்றார்.

Read more: http://viduthalai.in/page1/86804.html#ixzz3C1aSchzc

தமிழ் ஓவியா said...

காய்கறி உண(ர்)வுப் பிரச்சினை!

மத்திய ஆட்சி இந்துத்துவா ஆட்சியாகவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டு வருகிறது.

பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் கலந்து கொள்ளும் விருந்தில் இறைச்சி உணவுக்குத் தடையாம். அயல் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங் களுக்குக்கூட இந்த ஆணை பொருந்துமாம்.

பிரதமர் அலுவலகம் சார்பில் அனைத்து அமைச்சர் கள், உயர் அலுவலகங்கள், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரக அலுவலகங்களுக்கு இந்தியப் பிரதமர் அலுவலகத்திலிருந்து இந்த வகையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது சரியானது தானா? சட்ட ரீதியிலோ, தார்மீக ரீதியிலோகூட இது ஏற்றுக் கொள்ளத்தக்கது தானா என்பதைப் புத்தியைச் செலுத்தி சிந்திக்க வேண்டும்.

பிரதமராக இருக்கக் கூடிய ஒருவர் சைவ உணவை சாப்பிடுபவராக இருக்கலாம்; பிரதமர் அப்படி இருக்கிறார் என்பதற்காக மற்றவர்களும் அவ்வாறுதான் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்த, ஆணை பிறப்பிக்க, நிர்ப்பந்திக்க யாருக்கும் உரிமை கிடையாது. இந்த அடிப்படை மனித உரிமையைக் கூடத் மதிக்கத் தயாராக இல்லாதவர்தான் இந்தியாவின் பிரதமர் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆணை இந்தியாவின் உயர் மட்டப் பதவியை அலங்கரிக்கும் குடியரசுத் தலைவர் அலுவலகத்தைக் கட்டுப்படுத்தப் போவதில்லை. வங்காளத்தில் உள்ளவர்கள் விரும்பிச் சாப்பிடுவது மீன்தான் என்பது பிரதமருக்கும் பிரதமரின் அலுவலகத்தில் உள்ளவர்களுக்கும் இது தெரிந்தது தானே!

இதில் இன்னொரு கேள்வியும் தொக்கி நிற்கிறது. பிரதமர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது (இந்த நூறு நாட்களில் அது தானே தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது) வெளிநாட்டு அரசு அளிக்கும் விருந்திலும் இந்தக் கட்டுப்பாட்டை இந்தியப் பிரதமர் அலுவலகம் விதிக்கப் போகிறதா என்பது ஒரு கசப்பான கேள்வியாக இருக்கலாம்.

பசுவதைத் தடை சட்டம்பற்றி இன்னொரு வகையில் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். பிஜேபி ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோ பாதுகாப்புப் பற்றி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளார்கள்; அனேகமாக மத்திய அரசே பசு வதைத் தடுப்புச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டைக் கண்டு உலக நாடுகள் கைதட்டிச் சிரிக்காதா?

ஒரே ஒருவர் சைவ உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் அனைவரும் அத்தகைய உணவையே சாப்பிட வேண்டும் என்று வற்புறுத்துவது ஜனநாயகமா? இந்தியா இதற்கு மாறான திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறதா? என்ற நியாயமான கேள்வி சிந்தனைத் திறன் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏற்படாமல் போகாது!

வி.வி. கிரி அவர்கள் குடியரசு தலைவராக இருந்தபோது சிங்கப்பூர் சென்றிருந்தார். அப்பொழுது தனக்குச் சமையல் செய்பவர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்த தமிழ்நாட்டி லிருந்து பார்ப்பன சமையற்காரர்கள் அனுப்பி வைக்கப்பட்டதையும் இந்த இடத்தில் நினைவு கூர்வது பொருத்தம்.

சைவ உணவு தேவை என்றால், சிங்கப்பூரிலேயே அதனை சமைத்துக் கொடுக்க தேர்ந்த சமையற்காரர்கள் இல்லாமலா போய் விட்டார்கள்? அப்பொழுது இது ஒரு பிரச்சினையாகப் பேசப்பட்டதுண்டு - விமர்சிக்கப் பட்டதுண்டு.

நீண்ட காலத்திற்குப் பிறகு ஆட்சியில் உயர்மட்டப் பதவியில் உள்ளவர்களின் உணவுப் பிரச்சினை, அரசின் அதிகார பூர்வ அறிக்கையாக இப்பொழுது வெளி வந்துள்ளது.

இது அடுத்தவர்களின் உரிமையில் மூக்கை நுழைக்கும் மோசமான நடவடிக்கையாகும். இந்தப் போக்குத் தொடருமேயானால், தனி மனிதனின் தனிப்பட்ட உணர்வுகளில் பழக்க வழக்கங்களில் மோடி அரசு தலையிடக்கூடும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

தொடக்கத்திலேயே இது கண்டிக்கப்பட வேண்டும் எதிர்க்கப்பட வேண்டும் - விவாதங்கள் எழுப்பப்பட வேண்டும். ஊடகங்களும் ஒதுங்கிக் கொள்ளாமல் பெரும்பான்மையான மக்களின் உண(ர்)வுப் பிரச்சினையைத் தனி மனிதரின் ஆசாபாசத்தின் முடிவுக்கு விட்டுவிட முடியுமா? வெளிப்படையான விவாதங்கள் வெளிச்சத்திற்கு வரட்டும் - அதனை வரவேற்கிறோம்.

Read more: http://viduthalai.in/page1/86790.html#ixzz3C1atUqRG

தமிழ் ஓவியா said...

இரண்டு வழக்குகள் விடுதலை


ஈரோடு ஆலயப் பிரவேச வழக்கில் 3 பேர் தண்டனை அடைந்து அவ்வழக்குகள் ஹைக்கோர்ட் அப்பீலில் இருந்தது. நேயர்களுக்கு ஞாபகமிருக்கும். அதுபோலவே சுசீந்திரம் தெருப் பிரவேச வழக்கிலும் 12 பேர்கள் தண்டனை அடைந்து அவ்வழக்கும் திருவாங்கூர் ஹைகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டிருந்ததும் நேயர் களுக்கு ஞாபகமிருக்கும்.

இவ்வாரம் மேற்படி இரண்டு வழக்குகளும் அப்பீலில் விசாரிக்கப்பட்டு தண்டனைகள் முழுவதும் தள்ளப்பட்டு வழக்குகள் விடுதலையாகிவிட்டன.

முதல் வழக்கு. அதாவது ஈரோடு கோவில் பிரவேச வழக்கு போலீசாருடைய அக்கிரமத்தினாலேயே கொண்டு வரப்பட்டதாகும். அவர்களுக்குச் சலுகை காட்டினது ஜில்லா பெரிய அதிகாரியாகும். இவ்வழக்கை அதிகாரிகள் நியாயம் தெரியாமலோ, சட்டம் தெரியாமலோ நடத்தி னார்கள் என்பதாக யாரும் சொல்ல முடியாது. அவர்கள் வேண்டுமென்றே சிலரைத் திருப்தி செய்யத்தான் இப்படிச் செய்தார்கள் என்றே நாம் சொல்லவேண்டியிருக்கிறது.

இரண்டாவது வழக்காகிய சுசீந்திரம் வழக்கும் அக்கிரம மாகவே நடத்தப்பட்டது என்பதில் யாருக்கும் சந்தேகமிருக்காது. அதன் ஜட்ஜ்மெண்ட் கீழே குறிப் பிட்டிருக்கிறோம். திருவாங்கூர் போலீசு கமிஷனர் திரு. பிட் துரை இருந்திருந்தால் இன்றைய தினம் திருவாங்கூரில் ஒரு ரோடுகூட ஒரு நபருக்கும் உரிமை இல்லாததாக இருக்காது. கோவில் பிரவேசம் கூட அனுமதிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் அங்குள்ள பார்ப்பன ஆதிக்கமானது இவ்வளவு தொல்லையைக் கொடுத்துவிட்டது. இம்மாதிரி சந்தர்ப் பங்களில் ஒவ்வொரு வழக்கு முடிவும் அய்கோர்ட்டுக்குச் சென்றே நியாயம் பெறவேண்டுமானால் சாதாரண ஜனங்களுக்குச் சாத்தியப்படக்கூடியதாகுமா என்பதை யோசித்தால் இம்மாதிரி விஷயங்களுக்கு வெளிப் படையாயும் தெளிவாயும் ஒரு சட்டம் ஏற்பட்டுவிட வேண்டியது அவசியமாகும்.

பொதுவாகவே இந்துக்கள் என்பவர்களுக்குள் ஜாதி வித்தி யாசமும், உயர்வு தாழ்வும் ஒழிவதற்குப் பார்ப்ப னர்கள் எப்படி சம்மதிக்க மாட்டார்களோ அது போலவே மகமதியர்கள், வெள்ளைக் காரர்கள், கிறித்தவர்கள் ஆகி யவர்கள் சம்மதிக்க மாட்டார்கள்.

ஆதலால் இந்துக்கள் ஜாதி வித்தியாசம் உயர்வு தாழ்வு ஆகியவைகளை ஒழிக்கப் பாடுபடுகின்றவர்கள் மேல் கண்டவர்களின் விரோதத் தையும், அவர்களால் செய்யப் படும் தொல்லைகளையும் சமாளிக்க தயாராயிருந்து கொண்டுதான் பிரவேசிக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். நிற்க, இவ்விஷயங் களில் இனி மேல் நடக்க வேண்டிய விஷயங்களைப்பற்றி யோசித்து பின்னால் வெளியிடுவோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம், 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86769.html#ixzz3C1bnmBFs

தமிழ் ஓவியா said...

அரசியல் வியாபாரம்


டா க்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப் போவதாகத் தெரிகின்றது. அதாவது,

1. சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டத்துக்குக் குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப்படுவதாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது.

2. பலாத்காரமற்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது.

3. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது. என்பவையாகும். ஆகவே, இம்மூன்று தீர்மானங்களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம்.

இதற்காக ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக்காடவோ தேவையில்லையென்றும் சொல் லுவோம். ஏனெனில் இந்த மாதிரி காரியங்களின் நடவடிக் கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் தேசியப் பத்திரிகைகள் என்பவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு நிபந்தனையில்லாத அடிமைகளாய்ப் போய்விட்டபடியாலும் சென்ற தேர்தலின் போது தேசியக் கட்சியை விட ஜஸ்டிஸ் கட்சி மோசமானது என்று கருதி அதைக் காப்பாற்ற வேண் டிய பொறுப்பு ஏற்பட்டது போல் இப்போது ஜஸ்டிஸ் கட்சியை விட தேசியக்கட்சி மோசமானது என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப் புடை யவைகளாகி விட்டபடியாலும் அவைகள் கருவாடு திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல் வெளியில் சொல்லாமல் வாயை மூடிக் கொள்ளும்.

ஆகையால், ஜஸ்டிஸ் கட்சியார் இவ்விஷயத்தில் யாருக்கும் பயப்படாமல் தங்கள் கொள்கையைத் தைரியமாய் வலியுறுத்தலாம் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86770.html#ixzz3C1bwCOSJ

தமிழ் ஓவியா said...

ஜாதி மதப் பெயர் கொடுக்காதீர்கள்: முக்கியமான வேண்டுகோள்

இவ்வருஷக் கோடியில் சர்க்காரால் ஜனங்களுடைய எண்ணிக்கையை எடுக்கும் சென்சஸ் வேலை நடைபெறும். அதில் கணக்கெடுப்பவர்கள் உங் களிடம் வந்து விசாரிக்கையில் நீங்கள் ஜாதி மதத்தைப் பற்றி கேட்கப்படுவீர்கள்.

அப்போது முறையே இந்தியன் என்றும் பகுத்தறிவுக்காரன் என்றும் மாத்திரம் தான் சொல்ல வேண்டுமே ஒழிய எவ்வித மதத்தின் பேராவது ஜாதியின் பேராவது சொல்லக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஏனெனில் ஜாதி வித்தியாசத்தை ஒழிக்க இந்தியாவில் எல்லாப் பிரமுகர்களும் ஒரே முகமாய் நின்று மும்முரமாய் வேலை செய்யும் போது நாம் மறுபடியும் அதைச் சொல்லிக் கொண்டிருப்பது மூடத்தனமும் கவலையும் சுயமரியாதையும் அற்ற தன்மையுமாகும்.

அதுபோலவே இந்தியர்களில் யாராவது தன்னை இந்து என்று மதத்தின் பெயரைச் சொல்லுவதும் சுத்த முட்டாள் தனமாகும். இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை யென்றும் அப்படியிருப்பதாகச் சொல்லும் மதத்தின் தத்துவமும் மக்கள் பிறவியில் உயர்வு தாழ்வு கற்பிப்பதும் 20 கோடி இந்துக்கள் என்பவர்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் பார்ப்பனருக்கு அடிமைகள்,

அவர்களது தாசிமக்கள் என்கின்ற மானமற்ற தன்மை கொண்ட பொருளே இருப்பதால் சுயமரியாதையுள்ள எவரும் தங்களை இந்துக்கள் என்று சொல்லக்கூடாது. தவிரவும் இந்து என்னும் பதத்திற்குத் திருடன், அயோக்கியன், மோசக்காரன் என்று அர்த்தம் என்பதையுமுணருங்கள் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

- குடிஅரசு - வேண்டுகோள் - 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86769.html#ixzz3C1c7VNXC

தமிழ் ஓவியா said...

அரசியல் வியாபாரம்


டா க்டர் பி. சுப்பராயன் அவர்கள் அடுத்துக் கூடும் சட்டசபைக் கூட்டத்திற்கு மூன்று தீர்மானங்கள் அனுப்பப் போவதாகத் தெரிகின்றது. அதாவது,

1. சில பாதுகாப்புகளுடன் குடியேற்ற நாட்டத்துக்குக் குறைந்த எந்தத் திட்டமும் திருப்தியளிக்காது என்று இச்சபை அபிப்பிராயப்படுவதாக இந்த கவர்ன்மெண்ட் பிரிட்டிஷ் கவர்மெண்டாருக்குத் தெரிவிக்க வேண்டுமென இச்சபை சிபார்சு செய்கிறது.

2. பலாத்காரமற்ற குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்ய வேண்டுமென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குச் சிபார்சு செய்யும்படி இச்சபை சிபார்சு செய்கிறது.

3. அரசியல் கைதிகள் நடத்தப்படும் விதத்தைப் பற்றி விசாரணை செய்ய ஒரு கமிட்டி நியமிக்க வேண்டுமென்று இச்சபை கேட்டுக் கொள்ளுகிறது. என்பவையாகும். ஆகவே, இம்மூன்று தீர்மானங்களையும் நம்மைப் பொறுத்தவரை நாம் இவைகளை அரசியல் வியாபாரத் தீர்மானங்களென்றே சொல்லுவோம்.

இதற்காக ஜஸ்டிஸ் கட்சியார்கள் பயந்து கொள்ளவோ திக்கு முக்காடவோ தேவையில்லையென்றும் சொல் லுவோம். ஏனெனில் இந்த மாதிரி காரியங்களின் நடவடிக் கைகளை ஆதாரமாய் வைத்துக் கொண்டு கூப்பாடு போடும் தேசியப் பத்திரிகைகள் என்பவைகள் எல்லாம் ஜஸ்டிஸ் கட்சிக்கு நிபந்தனையில்லாத அடிமைகளாய்ப் போய்விட்டபடியாலும் சென்ற தேர்தலின் போது தேசியக் கட்சியை விட ஜஸ்டிஸ் கட்சி மோசமானது என்று கருதி அதைக் காப்பாற்ற வேண் டிய பொறுப்பு ஏற்பட்டது போல் இப்போது ஜஸ்டிஸ் கட்சியை விட தேசியக்கட்சி மோசமானது என்று கருதி ஜஸ்டிஸ் கட்சியைக் காப்பாற்றித் தீரவேண்டிய பொறுப் புடை யவைகளாகி விட்டபடியாலும் அவைகள் கருவாடு திருட்டுக் கொடுத்த பார்ப்பனத்தி போல் வெளியில் சொல்லாமல் வாயை மூடிக் கொள்ளும்.

ஆகையால், ஜஸ்டிஸ் கட்சியார் இவ்விஷயத்தில் யாருக்கும் பயப்படாமல் தங்கள் கொள்கையைத் தைரியமாய் வலியுறுத்தலாம் என்பதாகத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 09.11.1930

Read more: http://viduthalai.in/page1/86770.html#ixzz3C1cEsRh0

தமிழ் ஓவியா said...

செய்தியும் சிந்தனையும்


செய்தியும் சிந்தனையும்

ஸ்வீட் கடை

செய்தி: ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட் கடைகளில் சிறப்பு இனிப்பு கார வகைகள் தனி டப்பாக்களில் விற்பனை - 2600 விநாயகர் கண்காட்சி யும் உண்டு.
சிந்தனை: வியாபாரத்திற்கும் வியாபாரம்! பார்ப்பனீய பக்திப் பிரச்சாரமும் இன் னொரு புறம்; சும்மா ஆடுமா அவாள் குடுமி?

வருண ஜெபம்

செய்தி: மழை வேண்டி திருக்கழுக்குன்றம் வேத புரீஸ்வர் கோயிலில் யாகம் நடைபெற்றது. சிந்தனை: இதுபோன்ற சேதிகள் ஏடுகளில் வருகின் றன; ஆனால், மழை பொழிய வில்லை என்பது மட்டும் மக்கள் அறிந்த உண்மை!

Read more: http://viduthalai.in/page1/86716.html#ixzz3C1cbcjo5

தமிழ் ஓவியா said...

புதிய பாரத் மாதா - ஹிந்து மாதாதான்! ஜே! ஜே!!

- ஊசி மிளகாய்

இந்த வார கல்கி ஏட்டில் (7.9.2014) ஒரு கேள்வி - பதில் வெளிவந்துள்ளதை அப்படியே தருகிறோம்.

கேள்வி: ஜாதி, மத உணர்வுகளை 10 ஆண்டுகள் நிறுத்தி வையுங்கள் என்கிறாரே மோடி?

(கல்கியின்) பதில்: பிரதமர் பதவியேற்றபின் முதல் முறையாக ஒரு அபத்த வேண்டுகோளை விடுத்துள்ளார் மோடி. பத்து ஆண்டுகள் என்ன கணக்கு? அதன் பிறகு மறுபடி இந்த தீய உணர்வுகள் தலையெடுத்தால் பாதகமில்லையா? என்ன? சரியான திட்டங்களை வகுத்து மனப்பூர்வமாக செயல்படுத்தினால் பத்து ஆண்டுகளில் ஜாதி, மத உணர்வுகளை அடியோடு ஒழித்துக் கட்ட முடியும்.

ஆனால், அதற்குக்கூட சங்பரிவார் அமைப்பு களின் ஒத்துழைப்பு மோடிக்குக் கிடைக்காது.

- கல்கியின் தராசு கூறும் இக்கருத்துக்களை உண்மையான - யதார்த்தமான - நிலவரத்தின் பிரதிபலிப்பாகும். சங்பரிவாரங்கள் என்றாவது ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறிட முன் வருமா? அதன் தத்துவ கர்த்தரான கோல்வாக்கரின் ஞான கங்கை நூலில் அவர் வர்ண தர்மத்தை (ஜாதியை) நியாயப்படுத்தியுள்ளதோடு அதனை சிலாகித்துப் பாதுகாக்க அல்லவா வற்புறுத் துகிறார்?

இங்குள்ள ஆர்.எஸ்.எஸ். காரரான கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளை ஸ்ரீமான் குருமூர்த்தி அய்யர் வாள் சில நாள்களுக்கு முன் ஜாதி, பொருளாதாரத்திற்கு மிகவும் உதவுவதாகக் கூறி, ஜாதிப் பாதுகாப்பை மேம்படுத்தி உபந்நியாசம் செய்தாரே மறந்து விட்டதா?

அதை மிகப் பெரிய அளவில் தினமணி ஏட்டில் போட்டு விளம்பரப் படுத்தினரே - குருமூர்த்தி அய்யர்வாளின் ஆர்.எஸ்.எஸ். கூட்டு சகாவான ஸ்ரீமான் விளம்பரப்புகழ் வைத்தியநாத அய்யர்வாள் - அது எதைக் காட்டுகிறது?

மோடி ஜாதியை ஒழிக்க, மதத்தை அடக்க முன் வருவாரா? வரத்தான் முடியுமா? அவரது மூக்கணாங்கயிறு ஆர்.எஸ்.எஸ். கையில் அல்லவா உள்ளது?

பிரதமர் மோடி உண்மையில் விரும்பினால் அரசியல் சட்டத்தில் உள்ள 17ஆவது விதியில் மாற்ற வேண்டியது ஒரே ஒரு வார்த்தையைத்தான்! (ஒரு அரசியல் சட்டத் திருத்தம் ஏகமனதாக நிறைவேற போதிய பெரும்பான்மை உள்ளதே!) தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்ற 17ஆவது விதியில் திண்டாமைக்கு பதில் ஜாதி என்ற சொல்லை மாற்றிப் போட்டாலே, பெரிய சமூகப் புரட்சி சரித்திரத்தை மோடியால் படைத்து விட முடியுமே! 18 இடங்களில் இந்திய அரசியல் சட்டத்தில் ‘Caste (ஜாதி) இடம் பெற்றுள்ளதே!

அது மட்டுமா? இந்தியாவின் அத்தனைக் குடி மக்களும் ஹிந்துக்கள் தானாம்! அதுதான் இந்தியாவின் அடையாளமாம்!

தேசிய அடையாளம் என்று மோடி அரசின் சிறுபான்மையினர் நலன் காக்கும் திருமதி நஜ்மா அப்துல்லா திருவாய் மலர்ந்தருளி, ஆர்.எஸ்.எஸ். தலைவரின் குரலுக்கு ஹெர் மாஸ்டர்ஸ் வாய்ஸ் ஆக ஆகி உள்ளார் நியூஸ்X என்ற ஆங்கில TV சேனல் இன்று காலை இதனை தொடர்ந்து விளம்பரப்படுத்திக் கொண்டே இருந்தது!

நாடு எங்கே போகிறது பார்த்தீர்களா? நமது அரசியல் சட்டத்தின் அடிப்படையை இம்மாதிரி கடப்பாறைகளால் பெயர்க்கும் முயற்சி துவங்கி, ஜாம் ஜாம் என்று நடைபெறுகிறது!

அகண்ட பாரதம் அட்லஸ் வந்து விட்டது.

புதிய பாரத மாதாக்கீ! ஜே! ஜே!!

இந்தியா ஒழிந்து ஹிந்துயா வந்தது போலும்!

Read more: http://viduthalai.in/page1/86725.html#ixzz3C1cjREQh

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

மாணிக்கக்கல்

மாணிக்கக் கல் அணிந் தால் அரசு வேலை கிட் டும் என்கிறது தினமணி சோதிடம்.

மாணிக்கக் கல் வாங்கும் அளவுக்குப் பசையிருந்தால் அவன் ஏன் அரசு வேலையைத் தேடப் போகிறான்?

Read more: http://viduthalai.in/page1/86729.html#ixzz3C1csROSV

தமிழ் ஓவியா said...

பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரால்....

தமிழ்நாட்டில் விநாயக ஊர்வலம் என்பது மகாராட்டிர மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப் பட்டது. தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டையாம். ஒரு சிலைக்கு கிட்டதட்ட செய்யப்படும் செலவு ரூ.10 ஆயிரத்திற்குமேல்; 60 ஆயிரம் சிலைகள் என்றால் ரூ. 60 கோடி செலவாகும். சில இடங்களில் நாள் கணக்கில் வைத்துப் பூஜை செய்கிறார்கள். அப்படி வைக்கப்படும் சிலைக்கும் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்குப் பணம் பரிமாறப்படுகிறது.

பச்சையாகச் சொன்னால் பச்சை வியாபாரமாகவே இருக்கிறது; பிள்ளையாரின் கதையைச் சொல்ல ஆரம்பித்தால் வயிற்றைப் புரட்டிக் கொண்டுதான் வரும் - அத்தகைய கும்பிச் சகதி.

திருஞானசம்பந்தன் எழுதி வைத்துள்ள பாடல் ஒன்று வலிவலம் சிவன் கோயிலில் (நாகை மாவட்டம்) பொறிக்கப்பட்டுள்ளது.

பிடியதன் உருவுமைகொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலம் உறையிறையே
இமயமலையின் அடிவாரத்தில் ஆண் யானையும் பெண் யானையும் புணர்வதைக் கண்ட அம்மையும் அப்பனும் (சிவனும் - பார்வதியும்) காம வெறி கொண்டு இவர்களும் ஆண் - பெண் யானைகளாக உருக் கொண்டு புணர்ந்ததால் யானைத் தலை கொண்ட பிள்ளையாரைப் பெற்றெடுத்தார்களாம்.

மக்களைப் பக்திப் போதையில் ஆழ அழுத்தி விட்டதால் இந்த ஆபாசங்கள் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல என்ற நிலை ஏற்பட்டு விட்டது.

இந்து மதத்தில் இந்த பிள்ளையார் இருக்கிறாரே - சரியான கோமாளிப் பாத்திரப் பிறப்பு!

பக்தர்கள் இந்தப் பிள்ளையாரை எந்தப் பெயரிட்டும் அழைக்கலாம்; கார்கில் பிள்ளையார் கிரிக்கெட் பிள்ளையார், கடன் தீர்த்த விநாயகர் - என்று எந்த அளவுக்கும் கிறுக்கலாம் யாரும் ஏன் எதற்கு என்று கேட்க மாட்டார்கள்.

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்ற சொலவடையையும் நினைவில் கொள்க!

சிவன் கோயில்களிலும், தேர்களிலும் ஒரு பெண்ணின் பெண் உறுப்பினுள் துதிக்கையை நுழைத்துக் கொண்டு இருப்பது போல உருவங்களை வடிக்கிறார்கள் என்றால் இந்த வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவது?

தமிழ் செம்மொழி ஆனால் ஏழை விவசாயி வீட்டுக் கட்டுத்தறி தடை இல்லாமல் ஓடுமா? வீட்டுக்கு வீடு மட்டன் பிரியாணி கிடைக்குமா? என்று எழுதும் பார்ப்பனர்களை நோக்கி நாம் கேட்க வேண்டாமா? இந்தப் பிள்ளையார் ஊர்வலம் நடத்தினால், மழை கொட்டோ கொட்டென்று கொட்டுமா? முப்போகம் சாகுபடி நடக்குமா? மின்பற்றாக்குறை மின்னல் போல பறந்து ஓடிடுமா?

பள்ளிகளில்கூட கழிப்பறை இல்லாமல் தமிழ்நாட்டு இருபால் மாணவர்கள் அவமானப்படும் இந்த நாட்டில் அழுக்குருண்டை பிள்ளையாருக்கு ஒரு சதுர்த்தியா? அதற்காக ஊர்வலமா? அதற்காக அரசு விடுமுறையா? அதற்காக பல கோடி ரூபாய் செலவழிப்பா? என்ற நியாயமான கேள்விக்கு நாணயமான பதில் உண்டா என்று சவால் விட்டுக் கேட்கிறோம்.

விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் ஆங்காங்கே கலவரங்கள்; சிறுபான்மையினர் வழிபாட்டு இடங்கள் மீது கல்லெறிதல், கலாட்டா செய்தல் இன்னோரன்ன நாகரிகமற்ற அழி செயல்கள்!

சமுதாய அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ ஊர்வலம் நடத்தினால் ஆயிரத்தெட்டு கேள்விகளை எழுப்பி அனுமதி மறுக்கும் அரசாங்கம், காவல்துறை ஒவ்வொரு முறையும் பிள்ளையார் ஊர்வலத்தில் வன்முறைகள் வெடிக்கின்றனவே - அதற்கு மட்டும் அனுமதியளிப்பு - ஏன்?

மதக் காரணம் என்றால் அது என்ன நெய்யில் பொரித்ததா?

பல ஊர்களில் பிள்ளையார் ஊர்வலத்தின் போது இந்து முன்னணிகளின் துண்டறிக்கைகள் விநியோகம் - அவற்றில் சிறுபான்மை மக்கள் மீது அவதூறு மாரி!

போதும் போதாதற்கு இப்பொழுது மத்தியில் ஒரு இந்து மதவாத ஆட்சியே அமைந்து விட்டது - கேட்கவா வேண்டும்?

தந்தை பெரியார் பிறந்து பகுத்தறிவுப் போதனை செய்தார். அதனால் புத்தி தெளிவு பெற்று கல்வி, உரிமை, வேலை வாய்ப்புகள் பெற்று முன்னேற்றத் திசையில் பயணித்து வருகிறோம்.

அவற்றை நேரில் வீழ்த்த முடியாத வேதியக் கூட்டம், பக்தி என்னும் போதை மாத்திரைகளை இத்தகைய மத ஊர்வலங்கள் மூலம் இலவசமாக விநியோகித்து வருகிறது; ஏமாந்து விடாதீர்கள்! ஏமாந்தால் மீண்டும் ஒரு குலத்துக்கொரு நீதி என்னும் - மனுதர்மப் பார்ப்பன ஆதி பத்தியத்தின் காலடியில் தான் மிதிபட நேரிடும்!

ஏமாறாதீர்கள்! ஏமாறாதீர்கள்!! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

Read more: http://viduthalai.in/page1/86699.html#ixzz3C1dFtaRZ

தமிழ் ஓவியா said...

ராஜ்நாத்சிங் மகன் பிரச்சினை என்ன?


புதுடில்லி ஆக.29_ கடந்த வாரம் மத்தியில் உள்ள முக்கியமான அமைச்சர் ஒருவரின் மகன் ஒரு தொழில் அதிபரிடம் இருந்து பெரும் தொகையாக லஞ்சம் வாங்கினாராம், இது எப்படியோ மோடியின் பார் வைக்குச் சென்றது. உடனே மோடி அவரை அழைத்து வாங்கியப் பணத்தை திருப்பிக்கொடுக்கச் சொன்னாராம்.

இந்த செய்தி டில்லியில் அனைத்து அமைச்சரவை சகாக்களிடம் பரபர பானது இந்த நிலையில் ராஜ்நாத் சிங் அமித்ஷா, மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவரை திடீரென சந்தித்த சம்பவம் இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கிவிட்டது..

இந்த நிலையில் நவ்பாரத் டைம்ஸ் என்ற இந்திப்பத்திரிகை பரபரப்பான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ராஜ்நாத் சிங்கின் மகன்பற்றி டில்லியில் உள்ள முக்கிய பெண் அமைச்சர் ஒருவர் பொய்யான தகவலை மோடியிடமும், ஆர்.எஸ்.எஸ் தலைவரிடமும் தொடர்ந்து புகார் அளித்து வருவதாகவும், தன்னுடைய வளர்ச்சியில் பொறுக்காத அந்த பெண் அமைச்சர் மீது மிகவும் கோபத் தில் உள்ளதாகவும் அந்தப்பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தியை உண்மையாக்கும் விதமாக கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை அமித் ஷா, மற்றும் மோகன் பகவத்தைச் சந்தித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அமித்ஷா மற்றும் மோகன் பகவத் தரப்பில் எந்த ஒரு பதிலும் வரவில்லை. ஆனால் ஆர்.எஸ்.எஸ் செய்தித்தொடர்பாளர் ராஜ்நாத் சிங் மோகன்பகவத்தை சந்தித் தார் என்றும் இது எப்போதும் உள்ள பொதுவான சந்திப்பு இந்தச் சந்திப் பிற்கும் தேர்தல் தோல்வி மற்றும் அவ ரது சொந்தப் பிரச்சனைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார். பிரதமரின் அலுவலத்தில் இருந்து வந்த உறுதியான தகவலின் படி சில நாட்களுக்கு முன்பு மத்தியில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவரின் மகன் மோடியைச் சந்திக்க வந்ததாகவும், மோடி அவரிடம் மிகவும் கடினமாக நடந்துகொண்டார் என்றும், இந்த விவகாரம் இத்தோடு முடித்துக் கொள்ள வேண்டும் மேலும் இது போன்ற செயலில் இறங்கினால் கடு மையான நடவடிக்கை எடுக்கவெண்டி இருக்கும் என்று கூறியதாகவும், கூறப்பட்டது.

இது தொடர்பாக பாஜக தலைமை அலுவலகம் தரப்பில் கூறியதாவது: ராஜ்நாத் சிங்கின் மகன் விவகாரம் தொடர்பாக எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அது பொய்யானது என்றால் நேரடியாக அந்த அமைச் சரைப் பற்றி பிரதமரிடமும் பாஜக தலைவரிடமும் புகார் அளிக்கலாமே அதைவிடுத்து கட்சி பிரமுகர்களிடம் விவாதித்துக்கொண்டு இருப்பது இந்தப் பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிவிடும் என பாஜக கட்சி கூறியுள்ளது.

மத்தியில் அமைச்சரவை அமைக் கப்படும் போதே முக்கியப் பதவி களுக்கு கடும்போட்டி ஏற்பட்டது, முக்கியமாக ராஜ்நாத் சிங்கின் உள்துறை அமைச்சர பதவியைக் கைப்பற்ற 4 பெரிய பாஜக தலை வர்கள் முயன்றனர்.

ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ் தலைமையை அணுகி உள்துறை அமைச்சர் பதவியைக் கைப்பற்றிக்கொண்டார்.

கடந்த இரண்டு மாதங்களாக மத மோதல்கள், மற்றும் அஸ்ஸாமில் நடந்த கலவர எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் என பல்வேறு சிக்கல் களைச் சந்தித்துக்கொண்டு இருந்த ராஜ்நாத் சிங்கை தற்போது மகன் விவ காரம் மூலமாக சிக்கவைத்து விட்டார்கள், இருப்பினும் இன்னும் சில மாதங்களில் ஜார்கண்ட், மஹராஷ்டிரா, ஜம்முகாஷ்மீர் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடைபெற விருப்பதால் தேவையில் லாமல் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரும் போது அது தேர்தலில் பிரச்சினையை கிளப்பும் எனவே தேர்தல் முடிந்த பிறகு ராஜ்நாத் சிங் கின் பதவி பறிபோகும் என்று தெரி கிறது.

Read more: http://viduthalai.in/page1/86704.html#ixzz3C1dOLXma

தமிழ் ஓவியா said...

தீண்டாமைக் கொடுமை மடமை


இந்தியத் துணைக்கண்டத்தில் தீண்டாமை என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத் தைக் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

ஒரு சமயம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு வக்கீலிடம் நன் கொடை வசூலிப்பதற்காய்ச் சென் றிருந்தார். அப்போது அந்த வழக் கறிஞர் என்னிடம் நன்கொடைக்கு வந்திருக்கிறீர்களே, என்னை தொட்டால் தீட்டு என்கிறார்கள் ஆனால் என் பணத்திற்கு மட்டும் அந்தத் தீட்டு இல்லையா? என்று கேட்டார்.

எல்லாவற்றையும் கடந்தவன் நான். நான் தீண்டா மையை அனுஷ்டிப்பவன் அல்ல என்றாராம் சுபாஸ் சந்திரபோஸ்.

அப்படியானால், ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுங்கள்; சாப்பிட்ட மறுநாள் நன்கொடை தருகிறேன் என்றார் அந்த வழக்கறிஞர்.

உடனே சுபாஸ் சந்திரபோஸ், சரி நாளைக்கே நாலைந்து உயர்ந்த ஜாதிக்காரர்களுடன் வந்து உங்கள் வீட்டில் சாப்பிடுகிறேன். நீங்களும் உங்கள் ஜாதிக்காரர்கள் சிலரை எங்க ளுடன் சேர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் கலந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு நன்கொடை தாருங்கள் என்றார். சரி என்றார் வக்கீல்.

அவர்கள் வந்த போது வழக்கறிஞர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார். ஏன்? என்று கேட்டார் போஸ். என்னால், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றார். என்ன, காரணம்? என்று கேட்ட போது, நீங்கள் உயர்ந்த சாதிக்காரர்களை என் வீட்டில் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்து வீட்டீர்கள்;

ஆனால், என் ஜாதியை சேர்ந்தவர்கள் யாரும் அய்யோ உயர்ந்த ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிடுவதா? என்ன பாபம் செய்ததாலோ இப்படிப்பட்ட பிறப்பெடுத்திருக்கிறோம் - அவர்களோடு சேர்ந்து சாப்பிடும் பாவத்தையும் செய்தால், இன்னும் எத்தனை பிறப்புக்கு இடர்ப்பட வேண்டுமோ! என்றாராம்.

இந்த அளவுக்கு இந்த நாட்டிலே தீண்டாமை வேர் விட்டிருந்தது.

இந்த அடிமை நிலைமை யைத்தான் அடியோடு தகர்த் தெறியப் பாடுபட்டார் தந்தை பெரியார்.

ஆதாரம்: கடலூர் மாநாட்டில் விடுதலை விரும்பி பேச்சு, முரசொலி (19.7.1981

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1doqt00

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியார் பொன்மொழி

இன்றைய சுதந்திரம் வட நாட்டா னுக்கும் அவன் மொழிக்கும் தென்னாட்டவர் அடிமையாய் வாழ வேண்டுமென்றே ஆக்கப்பட்டுவிட்டது. வெள்ளையரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தைவிட வடவரிடமிருந்து சுதந்திரம் பெறுவதே மிகமிக முக்கியமானது.

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1dxe1jD

தமிழ் ஓவியா said...

இராவணனுக்குப் பிறந்த பிள்ளை

இலங்கையினின்று சீதையை இராமன் மீட்டு வரும்போதே அவள் கர்ப்பிணி!

இது ஊருக்குத் தெரிந்து விட்டது. ஆதலால், இலக்குமணனை விடு, அவளைக் காட்டிற்குக் கொண்டுபோ என்றான். இலக்கு மணன் ஒரு கொழுத்த தவசியிடம் விட்டு மீண்டான். குசன் பிறந்தான். அதன்பிறகு சீதை ஒரு பையனைப் பெற்றிருந்தாள். அவன் பெயர் இலவன்.

இராமனால் விடப்பட்ட குதிரை இலவ னால் பிடித்துக் கட்டப்பட்டது. அதனால் குதிரையுடன் வந்தவர்கள் இலவனை உதைத்து தேர்க்காலில் சுட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். பிறகு குசன் கேள்விப்பட்டுத் தம்பியை ஓடி மீட்கிறான். கட்டியவர்களைக் கொல்லு கின்றான். இராமன் வருகின்றான். அவனையும் கொன்று விடு கிறான்.

இலவன் தோற்றதேன்? இலவன் தவசிக்கு பிறந்தபிள்ளை குசன் ஏன் வென்றான்? அவன் இராவணனுக்குப் பிறந்தவன் தந்தையை கொன்ற இராமனைப் பழிக்குப் பழி கொடடா என்று தீர்த்தான் வேலையை!

-புரட்சிக் கவிஞர்

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1e3x5Cn

தமிழ் ஓவியா said...

தலை எழுத்து

பிரம்மனால் பெண்ணுக்கும், ஆணுக்கும் தலை எழுத்து தனித்தனியே எழுதப்படு மாயின், மருத்துவத்தால் பெண்ணாக மாறும் ஆணுக்கும் ஆணாக மாறும் பெண்ணுக்கும் எவ்வாறு பொருந்தும்?

- சாமி. சேகரன், புதுவை

Read more: http://viduthalai.in/page1/86718.html#ixzz3C1eAsjRQ

தமிழ் ஓவியா said...

நிர்வாணப் பெண்கள்!

ஒரிசா மாநிலம் தன்சாரண்யா என்ற காட்டுப் பகுதியில் மலைவாழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு ஆண்கள் உடை உடுத்திக் கொள்கிறார்கள். பெண்கள் மட்டும் நிர்வாணமாகத் திரிகிறார்கள். அதற்குக் காரணம் கீழ்க்கண்ட மூடநம்பிக்கையாகும்.

ராமனுடன் சீதை இந்த காட்டில்தான் தங்கினாளாம். தனது ஆடைகளைக் கரையில் களைந்து வைத்து விட்டு ஒரு அருவியில் சீதை குளிக்கச் சென்றாளாம். அந்த உடைகளை அக்காட்டில் இருந்த பெண்கள் எடுத்துக் கொண்டு போய் விட்டார்களாம். குளித்து விட்டுக் கரையேறிய சீதை உடைகளின்றி நிர்வாணமாக நின்றாளாம். உடனே அந்தப் பெண்களுக்கு சாபமிட்டாளாம்.

என்னுடைய உடைகளைத் தூக்கிக் கொண்டு போய் வீட்டீர்கள் இனிமேல் இந்தப் பகுதியில் எந்தப் பெண்ணாவது உடை அணிந்தால் அவன் கணவன் இறந்து போய் விடுவான் என்று சாபமிட்டாளாம். அதிலிருந்து அந்தப் பகுதியில் எந்தப் பெண்ணும் உடை அணியாமல் நிர்வாணமாய் திரிகிறார்களாம். இப்பொழுது அதிகாரிகள் மிகவும் சிரமப்பட்டு இடுப்பில் சிறுதுணியைச் சுற்றிக் கொள்ளச் செய்துள்ளனர்.

மூடநம்பிக்கையின் கேவலத்திற்கு இதைவிட வேறு என்ன எடுத்துக்காட்டு வேண்டும்?

Read more: http://viduthalai.in/page1/86717.html#ixzz3C1eI4iHI

தமிழ் ஓவியா said...

மதம் என்றாலே எனக்கு ஒருவித வெறுப்பு; அடிக்கடி மதத்தைக் கண்டித்திருக் கிறேன். அதை உருத்தெரி யாமல் ஒழித்துக்கட்ட வேண் டுமென்று ஆசைப்பட்டிருக் கிறேன். மதம் என்றால் குருட்டு நம்பிக்கை, பிற் போக்குத்தனம், பிடிவாத மான வெறித்தனம், மூடப்பழக்கம், சுரண்டல், சுயநலத்தைப் பாதுகாத்தல் என்பதுதான் என் முடிவு.

- ஜவகர்லால் நேரு, (சுயசரிதை, பக்கம் 374

Read more: http://viduthalai.in/page1/86717.html#ixzz3C1ePOdfU

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

செம்புக் கம்பி

தேக்கி வைக்கப்பட் டுள்ள மின்சாரத்தைச் செலுத்துவதற்கு செம்புக் கம்பியை இன்றைய விஞ் ஞானம் கண்டுபிடித்துள் ளது. ஆனால், அக்காலத் திலேயே ஆண்டவன் அருள் ஒளியை செம்பி னால் கடத்த முடியும் என உணர்ந்து, இறைவன் உருவங்களை செம்பி னால் சிலை வடித்தார்கள்.
- கிருபானந்தவாரியார் தாய் வார இதழ் 28.8.1983)

அப்படியானால் கல்லால் செதுக்கப்பட்ட கடவுள் சிலைகள், அய்ம் பொன்னால் செய்யப் பட்ட கடவுள் சிலைகள் அருள் ஒளியைக் கடத் தாது என்று அர்த்தமா? செப்புக் கம்பியால் மின் கடத்தப்படுகிறது என் பதை நிரூபிக்க முடியும் (கையை வைத்தால தெரி யும் சங்கதி) செம்பினால் செய்யப்பட்ட கடவுள் சிலை அருள் ஒளியை கடத்துகிறதுஎன்பதற்கு என்ன நிரூபணம்?

Read more: http://viduthalai.in/page1/86658.html#ixzz3C1ejkrMF

தமிழ் ஓவியா said...

திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை:

திருமணமாகுமுன் மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை:

நீதியரசர் என். கிருபாகரன் கருத்து வரவேற்கத்தக்கதே!

இதனை ஒரு இயக்கமாகவே நடத்துவோம் - வாரீர்!


21ஆம் நூற்றாண்டிலும் மனிதக் கழிவுகளை மனிதனே சுமப்பதா? நவீன தொழில் நுட்ப முறைகளைக் கையாள வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்வியல் அறிக்கை திருமணத்திற்குமுன் மணமக்கள் மருத்துவ சோதனை செய்து கொள்வது தான் சரியானது - அறிவியல் பூர்வமானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதிபதி என். கிருபாகரன் அவர்கள் அளித்த தீர்ப்பை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜஸ்டீஸ் திரு. என். கிருபாகரன் அவர்கள் வாழ்க்கை சம்பந்தமான வழக் கொன்றில் மிக அருமையான தீர்ப்பு ஒன்றினை சமூக நலம் சார்ந்த கண்ணோட்டத்தில் விஞ்ஞான பார்வையோடு வழங்கியுள்ளார்கள்.

ஜோதிடப் பொருத்தமல்ல - மருத்துவ ரீதியான பொருத்தம் தேவை!

திருமணங்களை ஏற்பாடு செய்யும் முன்பு நம் நாட்டுச் சமூக அமைப்பில் உள்ள பெரும்பாலான நடைமுறை என்ன?

ஜாதி, மதம், அதற்குப் பாதுகாப்பான ஜோசியம் பார்த்தல் - இவைகளைப்பற்றி தான் கவலைப்பட்டு அதிக முக்கியத்துவம் கொடுத்து, (ஏராளமான வரதட்சணை என்று கொடும் சமூக நோய்க்கும் சத்தமில்லாமல் ஆளாகி) திருமணங்களை நடத்திக் கொள்ளுகின்றனர்.

மணமக்களுக்கு மற்ற பொருத்தங்களைப் பார்ப்பதற்குப் பதிலாக, அறிவியல் அடிப்படையில் ஆதாரபூர்வமானதாக இவை இல்லாத நிலையில் - அறிவியல், உடலியல் - மருத்துவ ரீதியாக அவ்விருவருக்கும் மருத்துவப் பரிசோதனை சான்றுகளைப் பார்த்து ஒருவருக்கொருவர் உடல் ரீதியாகப் பொருத்தமானவர்களா என்று அறிந்து, திருமணங்களை ஏற்பாடு செய்தால், பின்னாள் அத்திருமணங்கள் - அந்தக் காரணங்களுக்காகத் தோல்வி அடையும் நிலை - வழக்கு மன்றங்களுக்குச் செல்லும் அவசியம் ஒரு போதும் ஏற்படாது. தேவையற்ற மன உளைச்சல்கள் - தானாகவே தீரும்.

ஜோதிடம் பார்ப்பது, மற்ற பொருத்தங்களை சடங்கு சம்பிரதாயங்கள் வழியில் பார்ப்பது அறிவியல் - பகுத் தறிவுக் கண்ணோட்டத்தில் சரியானது - உண்மையானது அல்ல.

சட்டத் திருத்தம்கூட கொண்டு வரலாமே பல திருமணங்களில் முதல் இரவிலேயே பல அதிர்ச்சி மணமகளுக்கோ, மணமகனுக்கோ தாக்கும் நிலை ஏற்பட்டு, அவர்கள் துன்பக் கேணியில் தள்ளப்படுகிறார்கள்.

ஏற்பாடு செய்த இருசாராரின் பெற்றோர்களுக்கோ அவர்களைவிட பன்மடங்கு வலியும், வேதனையும்! யாரையோ தேள் கொட்டியது போன்ற நிலையும்தான் ஏற்படுகிறது.

மதுரை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் தந்த நல்லதோர் தீர்ப்பு!

மத்திய, மாநில அரசுகள் திருமணச் சட்டங்களில் இம்முயற்சியை ஒரு முன் நிபந்தனையாக்கிடும் வகையில் சட்ட திருத்தத்தைக் கொணர மதுரை உயர்நீதிமன்றத்தில் (அது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு பகுதிதான்) வழங்கப்பட்ட இத்தீர்ப்பு ஒரு முன்னோட்டமாக அமைய வேண்டும்.

மருத்துவர்கள் தவறான சான்றிதழ் தந்தால் கடும் தண்டனை என்றும்கூட அச்சட்டத்தின் ஒரு பிரிவை முக்கியமாக இணைக்கலாம். அதன்மூலம் எப்போதாவது நிகழக் கூடிய தவறும்கூட நிகழ வாய்ப்பின்றித் தடுக்கலாம்!

இந்தக் கருத்தை வலியுறுத்தி- அதாவது மண ஏற்பாடுகளுக்குமுன் மணமக்களாக விரும்புவோர் சரியான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு சான்று களோடும், மற்ற ஏற்பாடுகள் துவங்கி நடந்தால், பாதி திருமணங்கள் தோல்வி அடையாது. நீதிமன்றங்களுக்கு வழக்குக்குச் செல்ல முடியாது.

நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கருத்துதான்

உடல் நோய்களை மறைத்து, எப்படியாவது திருமணம் நடந்து விட்டால்போதும் என்ற தவறான முயற்சிகள்தான் இப்படி இரு சாராருக்கும்; பிறகு தீராத வேதனையையும், மாறாத துயரத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன என்பதை பல சுயமரியாதைத் திருமண மேடைகளிலும், பெண்கள் விடுதலை மாநாட்டிலும் சொற்பொழிவு ஆற்றும் போதும் நாம் இடைவிடாமல் வலியுறுத்தி வந்துள்ளோம் - வருகிறோம்.

அது மட்டுமல்ல சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின்மூலம் ஏற்பாடாகும் மணமக்கள் இருவருக்கும் இரத்தச் சோதனை, HIV சோதனை போன்றவைகளை நடத்திய பிறகே மணம் ஏற்பாடுகள் துவங்கி நடைபெறுவது வழக்கத்தில் உள்ளது.

சமூக ஆர்வலர்களும் முன்வரட்டும்!

இப்படி ஒரு சட்டத் திருத்தம் வந்து திருமண முறையில் நம் நாட்டில் மாறுதல் வந்தால் அதனால் அதிகம் பயன் பெறுவது முதலாவது மகளிரே ஆவர்; அடுத்து பெற் றோர்கள்ஆவார்கள்; அவர்களின் நிம்மதி குலைக்கப் படாது, முதுமையில் வாழும் வசதியும் உத்தரவாதமும் அதனால் ஏற்படும்.

சமூகநல ஆர்வலர்களும், சமூக சீர்திருத்த அமைப்பு களும் இதற்காக ஒரு தனி இயக்கமே நடத்திட உடனடியாக முன் வருதல் அவசியம் - அவசரமுங்கூட.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
28.8.2014

Read more: http://viduthalai.in/page1/86653.html#ixzz3C1eszjp8

தமிழ் ஓவியா said...

சர்வ சக்தி(?)


மேற்கு வங்காளம் கொத்தல் பூரிலிருந்து கடந்த 24ஆம் தேதி நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 60 பேர்கள் குடும் பத்துடன் தமிழ்நாட்டுக் குச் சுற்றுலா புறப்பட்டு வந்தனர். சமையல் செய்து சாப்பிடுவதற்கு 6 சமையல் எரிவாயு உருளைகளையும் (சிலிண்டர்களையும்) பேருந்தில் ஏற்றியிருந் தனர். 30.8.2014 இரவு 10 மணியளவில் கன்னியா குமரி சென்று கொண்டி ருக்கும்போது திருபுல் லாணி தாதனேந்தல் பேருந்து நிறுத்தம் அரு கில் பேருந்து வந்தபோது, பேருந்தின் பின்புறத்தில் திடீரென தீபிடித்தது.

ஓட்டுநர் அவசர அவசரமாக பேருந்தை சாலை ஓரத்தில் சாமர்த் தியமாக நிறுத்தினார். பேருந்துக்குள்ளிருந்த சமையல் வாயு உருளை யும் வெடித்தது. பயணி கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறி னர். ஆனால் வயது மூப் படைந்த 5 பேர் விரை வாக வெளியேற முடி யாத நிலையில் கருகிப் போனார்கள் என்பது பெரி தும் வருந்தத்தக்கதாகும்.

இவ்வளவுக்கும் இந்தப் பயணிகள் தமிழ கம் வந்தது கோயில் தலங்களைச் சுற்றிப் பார்த்து சாமி தரிசனம் செய்யத்தான்! திருப்பதி ஏழுமலையான் கோயி லில் தரிசனத்தைத் தொடங் கிய இவர்கள் வழியில் காஞ்சீபுரம், திருக்கழுக் குன்றம், சிறீரங்கம், இராமேசுவரம் உட்பட பல கோயில்களுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர்.

கன்னியாகுமரி சென்று அங்குள்ள அம் மனை வழிபடச் சென்ற வர்களுக்குத்தான் இந்தப் பரிதாப நிலை ஏற்பட் டுள்ளது.

கோயிலுக்குச் சாமி கும்பிட சென்றவர்கள், கோயில் திரு விழாக் களுக்குச் செல்லக் கூடிய வர்கள். இதுபோன்ற விபத்துக்களில் சிக்கி பரிதாபகரமாக மரணம் அடைவது அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றுகூட விநாயகர் பொம்மையை நீரில் கரைக்கச் சென்ற ஓமலூர் கல்லூரி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணம்! பொள்ளாச்சி அருகே சிலைகளைக் கரைக்க காரில் சென்ற இந்து முன்னணியினர் மூவர் விபத்தில் மரணம் என்ற செய்திகள் வெளி வந்துள்ளன. இவ்வளவுக்குப் பிற கும் கோயில் கோயிலாக மக்கள் போவதும், சாமி தரிசனம் செய்வதும், நேர்த் திக் கடன் கழிப்பதும் சரியானதுதானா? என் பதைச் சிந்திக்க வேண் டாமா?

கடவுள் என்ற ஒருவர் இருந்தால், அவருக்குச் சக்தி இருக்கிறது என்பது உண்மையென்றால் கரு ணையே வடிவமானவன் என்று எழுதி வைத்திருப் பதில் கடுகளவு யதார்த் தம் இருக்குமேயானால், நாட்டு மக்களைக் காப் பாற்றுவது ஒருபுறம் இருக் கட்டும்; குறைந்தபட்சம் தன்னை நாடி வந்த பக்தர்களையாவது காப் பாற்ற வேண்டாமா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்று பெரியார் சொன்னது கேலிக்கல்ல வாழ்க்கையின் யதார்த் தம் என்பதை மக்கள் உணரட்டும்!

- மயிலாடன்

Read more: http://viduthalai.in/e-paper/86915.html#ixzz3C7YE3p00

தமிழ் ஓவியா said...

பொள்ளாச்சி, செப்.1- பொள்ளாச்சி அருகே விநாயகர் சிலைகளை கரைக்க சென்ற போது எதிரே வந்த பேருந்து மீது மோதி, கார் கட்டுப் பாட்டை இழந்து மரத் தில் மோதியது. இந்த விபத்தில் இந்து முன் னணியை சேர்ந்த 3 பேர் உடல் நசுங்கி பலியானார் கள். 3 பேர் படுகாய மடைந்தனர்.

இந்த பரிதாப சம்பவம் குறித்து காவல்துறை தரப் பில் கூறப்படுவதாவது:-

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதி களில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 36 விநாயகர் சிலைகளை அம்பராம்பாளையம் ஆழியாற்றில் கரைக்க நேற்று ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

ஊர்வலத்தில் சென்ற வர்களுக்கு சாப்பாடு வாங்கி கொண்டு இந்து முன்னணியை சேர்ந்த நாகராஜன் (வயது 32), குகன் (21), கார்த்தீஸ்வரன் (30), சபரி (30), பிரகாஷ் (29), விக்னேஷ்குமார் (24), சுரேஷ்குமார் (27) ஆகி யோர் ஒரு காரில் எஸ் .மேட்டுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம் பாளையத்திற்கு சென் றனர். காரை கார்த்தீஸ் வரன் ஓட்டினார்.

மாலை சுமார் 5.30 மணிக்கு கார் மீன்கரை ரோடு நஞ்சேகவுண்டன் புதூர் பிரிவு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்ற வாகனத்தை கார் முந்த முயன்ற போது எதிரே கோவிந்தா புரத்தில் இருந்து பொள் ளாச்சி நோக்கி வந்த தனியார் பேருந்து மீது மோதியது.

இதில் நிலை தடு மாறிய கார், பேருந்துமீது மோதிய வேகத்தில் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி சுக்குநூறாக நொறுங்கி உருக்குலைந்து போனது. மேலும் பேருந்தின் முன் புற கண்ணாடி உடைந்த துடன், முன்பகுதி சேதம் அடைந்தது.

காரில் இருந்தவர்கள் படுகாயங்களுடன் உயி ருக்கு போராடிக் கொண் டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பொள் ளாச்சி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வா ளர்கள் தங்கவேல், கோபி மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காவல் துறையினர் பொது மக்கள் உதவியுடன் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

இதில் சம்பவ இடத்திலேயே நாகராஜன் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். குகன், விக்னேஷ்குமார், பிரகாஷ் ஆகியோரை அந்த பகுதி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும், சபரி, கார்த்தீஸ்வரனை கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பலன் அளிக்காமல் குகன், கார்த்தீஸ்வரன் ஆகி யோர் பரிதாபமாக இறந் தனர்.

சபரி ஆபத்தான நிலை யில் கோவை அரசு மருத் துவமனைக்கும், விக் னேஷ்குமார், பிரகாஷ் ஆகியோர் அம்பராம் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் காரில் வந்த சுரேஷ்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இதுகுறித்து காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Read more: http://viduthalai.in/e-paper/86916.html#ixzz3C7YNRduS

தமிழ் ஓவியா said...

விநாயகர் சிலையை கரைத்த போது கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் சாவு!

விநாயகர் சிலையை கரைத்தபோது கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரி தாபமாக உயிரிழந்தனர்.

சேலம் கிச்சிப்பாளை யம் கருவாட்டுப்பாலம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களது மகன் விக்னேஷ்வரன் (வயது 17). இவர் சேலம் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணபிர சாத் (18). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி யில் 3ஆ-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் விநாய கர் சதுர்த்தியையொட்டி அந்த பகுதியில் வெண் ணிலா உள்பட பலர் ஒரு விநாயகர் சிலையை பூஜைக்கு வைத்திருந்தனர். இந்த சிலையை நேற்று கரைக்க திட்டமிட்டனர். அதன்படி, நேற்று காலை விநாயகர் சிலையை ஒரு சரக்கு ஆட்டோவில் ஏற்றினர். பின்னர் அந்த ஆட்டோவில் வெண் ணிலா, அவரது மகன் விக்னேஷ்வரன், கிருஷ்ண பிரசாத் உள்பட 15 பேர் ஏறி புறப்பட்டார்கள்.

நண்பகல் 1 மணியள வில் அவர்கள் கங்காதரன் குட்டையை அடைந்தனர். அங்கு ஆட்டோவில் இருந்து விநாயகர் சிலையை கீழே இறங்கி வைத்து பூஜைகள் செய்து வழிபட்டனர். பின்னர் விக்னேஷ்வரன், கிருஷ்ண பிரசாத் உள்பட 7 இளை ஞர்கள் சிலையை தூக்கிக் கொண்டு குட்டையில் தேங்கி நின்ற தண்ணீருக் குள் இறங்கினார்கள்.

அப்போது கரையில் நின்ற பெண்கள், ஆழ மான பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கூறி னர். ஆனால், அதையும் மீறி இளைஞர்கள் 7 பேரும் ஆழமான பகு திக்கு சென்று விநாயகர் சிலையை தண்ணீரில் கரைத்தனர். அப்போது விக்னேஷ்வரன், கிருஷ்ண பிரசாத் உள்பட 5 இளை ஞர்கள் சேற்றில் சிக்கிக் கொண்டனர். சிறிது நேரத் தில் 3 பேர் சேற்றில் இருந்து மீண்டு தண்ணீரில் தத்தளித்தபடி கரைக்கு வந்து சேர்ந்தார்கள்.

ஆனால், விக்னேஷ்வர னும், கிருஷ்ணபிரசாத்தும் தண்ணீருக்குள் இருந்த சேற்றில் சிக்கி உயிருக்கு போராடினார்கள். இத னால் கரையில் நின்ற பெண்கள், காப்பாற்றுங் கள்; காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அருகில் நின்று கொண்டிருந்தவர் களும், உடன் வந்த இளை ஞர்களும் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதனால் சேற்றில் சிக்கிய 2 பேரும் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல்துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஓமலூர் தீயணைப்பு குழுவினரும் அங்கு வந்தார்கள்.

அவர்கள் குட்டையில் இறங்கி உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு கிருஷ்ணபிரசாத்தின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு விக்னேஷ்வரனின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சேலம் ஜாகீர் அம்மா பாளையம் பகுதியை சேர்ந்தவர் அண்ணா மலை (வயது 48), கட்டட தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலையை கரைப்பதற்காக மேட்டூர் காவிரி ஆற்றுக்கு வந்தார். அங்கு புதுப்பாலம் அருகே உள்ள காவிரி ஆற்றில் இறங்கி சிலையை கரைக்க முயன்றபோது, ஆழமான பகுதிக்கு சென்ற அண்ணாமலை தண்ணீரில் மூழ்கி உயிரி ழந்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/86916.html#ixzz3C7YUi2Sx

தமிழ் ஓவியா said...

தீபாராதனை தட்டை தட்டி விட்டதால் விநாயகர் ஊர்வலத்தில் மோதல்!

திருவள்ளூர் அருகே விநாயகர் ஊர்வலத்தில், தீபாராதனை தட்டை தட்டி விட்டதால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவள்ளூரை அடுத்த ராமாபுரம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாபு. இவரு டைய மனைவி கிருஷ்ண வேணி(வயது 62). நேற்று முன்தினம் இரவு, அங் குள்ள விநாயகர் கோவி லில் இருந்து சாமி ஊர் வலம் வீட்டுக்கு அருகில் வந்தது. கிருஷ்ணவேணி, விநாயகருக்கு தீபாரா தனை காட்டுவதற்காக தட்டுடன் வந்தார்.

அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா, பழனிவாசன் ஆகியோர் தவறுதலாக தீபாராதனை தட்டை தட்டி விட்டதாக கூறப்படுகிறது. அதற்கு கிருஷ்ணவேணி, எதற்காக இப்படி செய்தீர்கள்? என்று தட்டிக்கேட்டார்.

இதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட் டது. இதனால் ஆத்திர மடைந்த ஜீவா, பழனி வாசன் மற்றும் அவர் களுடன் இருந்த ஜெய சீனிவாசன், பூவரசன் ஆகிய 4 பேரும் சேர்ந்து கிருஷ்ணவேணியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தாக்கியதாகவும் கூறப் படுகிறது. அப்போது தடுக்க வந்த கிருஷ்ண வேணியின் மகன்களான பிரசாந்த்(24), கார்த்திக்(22) ஆகியோரும் தாக்கப்பட் டதாக தெரிகிறது.

பதிலுக்கு பிரசாந்த் தரப்பினரும் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படு கிறது. இருதரப்புக்கும் நடந்த மோதலில் கிருஷ் ணவேணி, அவருடைய மகன்கள் பிரசாந்த், கார்த் திக் மற்றும் பழனிவாசன், ஜெயசீனிவாசன், பூவரசன் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர். அனைவரும் திருவள்ளூர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர் பாக இரு தரப்பினரும் திருவள்ளூர் வட்ட காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் செய்தனர். புகார்களை பெற்றுக்கொண்ட காவ லர்கள் இரு தரப்பையும் சேர்ந்த ஜீவா, பழனி வாசன், ஜெயசீனிவாசன், பூவரசன் மற்றும் பிர சாந்த், கார்த்திக் ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

Read more: http://viduthalai.in/e-paper/86916.html#ixzz3C7YbCLLX

தமிழ் ஓவியா said...

மயிலாப்பூரில் கேட்கும் குரல்


சென்னையில் இந்திய தேசிய பெண்கள் சம்மேளனத் தின் 60ஆம் ஆண்டு விழா கடந்த சனியன்று நடைபெற் றுள்ளது. அதில் உயர்நீதிமன்ற நீதிபதி பிரபாஸ்ரீதேவன், சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா, பெண்கள் கூட்டமைப்பின் தலைவர் கே. சாந்தகுமாரி, பேராசிரியர் காதம்பரி போன்றோர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை மட்டுமே பெண்களுக்கு எதிரான கொடுமையல்ல. கல்வி, சுகாதாரம், சொந்த நிலம் வழங்கப்படாததும் பெண்கள்மீதான வன்முறைதான் என்று கூறப்பட்டு இருப்பது சிறந்த கருத்துக்களே!

பாலியல் வன்முறை என்று கூறும்பொழுது அண்மைக் காலங்களில் இதன் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பெண் குழந்தைகள்கூட இதில் தப்ப வில்லை என்பது - நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழு கிறோம் என்று சொல்லுவதற்கும் வெட்கப்படத்தான் வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்த நோய் வெகு வேகமாகப் பற்றிக் கொண்டு திரிகிறது. டில்லியில் மருத்துவக் கல்லூரி மாண விக்கு ஏற்பட்ட கொடுமையை எதிர்த்து தலை நகரமே மக்கள் தலைகளாகக் காணப்பட்டது. பெரும் யுத்தமே நடந்தது; அதன் விளைவாக ஆட்சி மாற்றமேகூட நிகழ்ந்ததுண்டு.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் இந்தத் திசையில் ஒரு செய்தியாக வந்து கொண்டு தானி ருக்கிறது! ஆனால் இந்தியாவின் தலைநகரம் கொதித் தெழுந்ததுபோல தமிழ்நாட்டில் ஏன் நிகழவில்லை? இதில் அரசியலும் இருக்கிறது. ஊருக்கே உபதேசம் செய்யப் பிறப்பெடுத்ததாக மார் தட்டும் தமிழ்நாட்டு ஊடகங்களும் இதற்குத் துணை போயுள்ளன என்பதும் வருத்தத் திற்குரியதே.

இன்னும் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குரிய இழப்பீடுகள் பற்றியது. 357-ஏ குற்ற நடைமுறைச் சட்டம் 1973 இதுபற்றிப் பேசுகிறது. உயிரிழப்பு ரூ.3 லட்சம், பாலியல் வன்முறை ரூ.3 லட்சம், மன உளைச்சல் ரூ.ஒரு லட்சம் வழங்கப்பட வேண்டும்.

கடந்த ஈராண்டுகளில் இதுபற்றிய நிலை என்ன? 212 வழக்குகளில் 73 குழந்தைகள் மருத்துவ உதவிக்காகவும் 65 பேர் மனநல மருத்துவ உதவிக்காகவும், 38 பேர் பாதுகாப்பு இல்லங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். 2013-2014 கால கட்டத்தில் வெறும் ஏழு பேர்களுக்கு மட்டுமே இழப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடுமைக்கு இழப்பீடு பரிகாரமா என்று கேட்கக் கூடும்.

பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாலேயே அவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டுமா? அந்தக் கொடுமைக்கு ஆளானவர்களா அதற்குக் காரணம்! காரணமானவர்கள் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து நுழைந்து தப்பித்துக் கொள்கின்றனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்வுதான் பரிதாபமானது! இந்த நிலையில் அவர்களுக்கு இழப்பீடும், பராமரிப்புச் சேவைகளும் கண்டிப்பாக தேவைப்படுகின்றன.

இது போன்ற வழக்குகளில் காவல்துறைக்கு ஒரு காலக் கெடு விதித்துக் குற்றவாளிகளைக் கூண்டில் நிறுத்த வேண்டும். பத்து பதினைந்து ஆண்டுகள் என்றால் இது அந்தப் பாலியல் கொடுமையைவிட மோசமானது.

பெண்களுக்குக் கல்வி வேலை வாய்ப்பு அவசியம் தேவை. அதே நேரத்தில் கல்விச் சாலைகளிலும், பணியாற் றும் இடங்களிலும்கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையே! இதற்கொரு முடிவு கட்டப்பட வேண்டாமா? கொஞ்ச நாட்களுக்குப் பெண்கள் கைகளில் துப்பாக் கியைத் தான் கொடுத்துப் பார்க்கலாமே - என்ன ஆகி விடப் போகிறது என்பதை அனுபவத்தில்தான் அறிய முடியும்.

தமிழ் ஓவியா said...

பெண்களைப் பலகீனமானவர்கள் என்று கருதும் ஆண்களின் சிந்தனையில் ஒரு அச்சத்தை ஏற்படுத்த வேண்டியது. காலத்தின் கட்டாய மட்டுமல்ல; உளவியல் ரீதியான நோய்த் தடுப்பு என்றுகூட இதனைக் கருதலாம்.

ஆண்களுக்கு நிகராக பெண்களுக்குச் சொத்துரிமை என்று சட்டம் வந்தாகி விட்டது; இது எந்த அளவுக்குச் செப்பமாக, நீதியாக, நேர்மையாக, நாணயமாக செயல்பாட்டில் இருக்கிறது என்பது கண்டறியப்பட வேண்டும். இதில் ஓட்டைகள் ஏதேனும் இருக்குமானால் அதனையும் அடைத்தாக வேண்டும்.

சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய நீதிபதி - நீதித்துறையில் பெண்களுக்கு உரிய இடங்கள் கிடைக்கப் பெறவில்லை. பெண் நீதிபதியாக இருக்கும் பட்சத்தில்தான் வாழ்வியல் அனுபவங்களின் அடிப் படையில் பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தீர்ப்பு வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

இதுபோன்ற அடிப்படை உரிமைகளைப் பெண்கள் பெற வேண்டும் என்றால் சட்டம் செய்யும் இடங்களில் (சட்டமன்றம் - நாடாளுமன்றங்களில்) பெண்களுக்கு 33 சதவீதம் தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படாமல் தடைகளுக்குள் சிக்கிக் கிடக்கிறதே அதுநடைமுறைக்கு வர வேண்டாமா? இது வரக் கூடாது என்பதில் மட்டும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஓரணியாகத் திரண்டு கூடிக் குலவுவதை என்னென்று சொல்லுவது?

பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? அதுபோலவே ஆண்களால் பெண்களுக்கு விடுதலை ஒரு போதும் கிடைக்காது என்று சொன்ன பெண்ணியல்வாதி தந்தை பெரியார் அவர்களின் கருத்துதான் சமுதாயத்தின் முன் பேரொளியாய் எழுந்து நிற்கிறது.

மக்கள் விழிப்புணர்வு இதில் மகத்தானது; தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியக் கருத்துகள் ஆரம்பக் கல்வி நிறுவனங்களிலிருந்து கற்பிக்கப்பட வேண்டும் பெண்ணடிமைத்தனம் என்பது மதத்தின் வாயிலாக - பக்தியின் வாயிலாக குருதியில் ஊறச் செய்யப்பட்டுள்ளது. அந்த வேரை எடுத்தெறியாமல், வெறும் ஒத்தடங்கள் கொடுப்பது நகைச்சுவைக்கான நல்ல தீனியாகும்.


உடல் ரீதியாக பெண்கள் பலகீனமானவர்கள் என்றால் அந்தப் பலகீனத்தைப் போக்குவதற்கான பயிற்சிகள் பள்ளிகளில் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

தந்தை பெரியார் அவர்கள் சொல்லுவதுபோல பெண்கள் சிங்காரம், அணிமணிகளில் ஆழ்ந்து கிடக்கும் உணர்வு என்னும் சிறையிலிருந்து விடுதலையாக வேண் டும். அப்படியொரு நிலைப்பாடு பெண்கள் மத்தியில் வெகுண்டெழுந்தால், சிந்தனைகள் உரிமைகளின் பக்கமும், ஆண்கள் ஆதிக்கத்தின் பக்கமும், கம்பீரமாக எழும் அல்லவா! மயிலாப்பூரில் பேசிய பெண்ணுரிமையாளர்கள் இந்தத் திசையில் சிந்தித்தார்களா பேசினார்களா? என்று தெரியவில்லை! அவர்கள் பேசாவிட்டாலும் பெரியார் இயக்கம் பேசும் - பெரும் புரட்சியையும் நடத்திக் காட்டும்! வாழ்க பெரியார்!

Read more: http://viduthalai.in/page-2/86921.html#ixzz3C7YnT6b3

தமிழ் ஓவியா said...

தேனினும் இனிய விடுதலை

22.8.2014 நாளிட்ட விடுதலை நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் அனைத்தும் அருமை. அவை பாதுகாக்கப்பட வேண் டிய பாதுகாப்புப் பெட்டகமாகவும், கருத் துக் கருவூலமாகவும் திகழ்கின்றன. குறிப்பாக

1) ஜாதி - தீண்டாமை ஒழிய அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமையினை நிறைவேற்றித் தருமாறு முதல்வர் ஜெயலலிதா அவர்களை வலி யுறுத்தி தமிழர் தலைவர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை மற்றும் கோமாதா ஆந்திராவில் படுத்தியபாடு!

2) நம்ம தியாகராயர் நகர்! - கோவி. லெனின் அவர்கள் எழுதிய கட்டுரை.

3) 375-ஆம் ஆண்டில் சென்னை நகரம்! - தலையங்கம், கைவல்யம் நாள் (22.8.1877).

4) சிப்பாய்க் கலகம் சுதந்திரப் போராட்டம் அல்ல - மதப்போராட்டமே என்று சொன்னவர் தந்தை பெரியார்! என் கின்ற அரிய என் போன்ற இளைஞர் களுக்கும் - மாணவர்களுக்கும் புதிய தகவலை திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய சிறப்புக் கூட்டத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாரி வழங்கிய பல வரலாற்றுத் தகவல்கள்.

5) மாணவர்களுக்கான பெரியார் 1000 வினா - விடைப் போட்டி நடைமுறைகள்!

6) பகுத்தறிவுக் களஞ்சியம் பகுதியில்; புத்தர் அறிவுரைகள், தந்தை பெரியார் பொன்மொழி மற்றும் தாய்மார்களுக்கு தந்தை பெரியார் அறிவுரை, மருத்துவம் வென்றது, விடை என்ன? என்ற தலைப்பில் ஆத்திகவாதிகளுக்கு அடுக்கடுக்கான அர்த்தமுள்ள கேள்விகள் ஆகியவை மக்களை சிந்திக்கத் தூண்டுகின்றன.

7) மேலும், சென்னையின் 375 ஆம் ஆண்டில் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் வரலாற்றுக் கொண்டாட்டம் - நடைப்பயணம்! நடைப்பயணம் மேற் கொண்ட கழக முன்னோடிகள் - தோழர்கள் ஆகியோர் தியாகராயர் நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள தந்தை பெரியார் சிலை முன்பும், தியாகராயர் நகர் டாக்டர் நடேசன் பூங்காவிலும் எடுத்துக்கொண்ட வண்ணப் புகைப்படங்கள் கண்களைக் கவர்ந்தன.

8) இறுதியாக, நாளைய தலைமுறைக் கான நாற்றங்கால் - பெரியார் 1000! போன்ற எண்ணற்ற பயனுள்ள செய்திகள் இளைஞர் களுக்கும், மாணவர்களுக்கும் விருந்தாக வும் அரு மருந்தாகவும் அமைந்தது.

இவ்வாறு தேனினும் இனிய செய்தி களைத் தாங்கி பல வண்ணங்களுடனும், பகுத்தறிவு எண்ணங்களுடனும் நாள் தோறும் வெளிவருகின்ற உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலை நாளேட் டினை இளைஞர்களும் - மாணவர்களும் ஆவலுடன் படித்துப் பாராட்டி மகிழ் கின்றனர், போற்றிப் புகழ்கின்றனர்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

- சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை-45

Read more: http://viduthalai.in/page-2/86924.html#ixzz3C7ZRhKpG

தமிழ் ஓவியா said...

பற்களில் கறை போக்க...

என்னதான் டூத் பிரஷ் உபயோகித்து ஒருமுறைக்கு இரண்டு முறை பல் தேய்த்தாலும் நமது பற்களில் கறை கொஞ்சம் கொஞ்சமாக படிந்து விடுகிறது.

பல் மருத்துவக்கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு முதலில் சொல்லித் தருவதே, அவர்களின் பற்களை சுத்தம் செய்து கொண்டு வரச் சொல்வது தான். நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது. பொட்டாசியம் பர்மாங்கனேட் என்ற வேதிப்பொருள் (Pottasium Permanganate) (KMNO4)பெரும்பாலான மருந்துக் கடைகளில் பாக்கெட்டுகளில் கிடைக்கும்.

இதனை வாங்கி வெது வெதுப்பான நீரில் மிகச்சிறிய அளவில் (small pinch) போட்டு (தண்ணீரில் போட்டவுடன் ஊதா நிறமாக மாறும்) அந்த தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளிக்க வேண்டும். (துவர்ப்புத் தன்மை கொண்டது) அதிகமாக இந்த வேதிப்பொருளை நீரில் போடக்கூடாது. கரு ஊதா நிறமாக மாறும். துவர்ப்புத் தன்மை அதிகரித்து விடும்.

கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும். பற்கள் பளிச்சென்று ஆகிவிடும்.

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற சில வழிமுறைகள்

பல் வலியிலிருந்து நிவாரணம் பெற கோவைப்பழம் சாப்பிடலாம்.

மகிழம் இலையை கஷாயம் செய்து வாய்க் கொப்பளித்து வந்தால், பல் நோய் எதுவும் அண்டாது.

மாவிலையைப் பொடி செய்து பற்களைத் துலக்கி வந்தால், பற்கள் உறுதி பெறும்.

ஒரு துண்டு சுக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டால், பல்வலி நீங்கும்.

நந்தியாவட்டை வேரை மென்று துப்பினால், பல்வலி குணமாகும்.

Read more: http://viduthalai.in/page-7/86882.html#ixzz3C7a9FYir

தமிழ் ஓவியா said...

நோய்களை விரட்டியடிக்கும் செவ்வாழைப்பழம்

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ் டரீகா மற்றும் கியூபா என கூறப்படுகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவீதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு ஆகாரத்துக்கு பிறகு தொடர்ந்து 40 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.

பல்வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொறி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற தோல் வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும் செவ்வாழை பழத்தைத் தொடர்ந்து 7 நாள்கள் சாப்பிட்டு வர சரும நோய் குணமாகும். நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும்.

எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட வர்கள் தினசரி இரவு செவ்வாழைப்பழம் சாப்பிடவேண்டும். தொடர்ந்து 48 நாள்கள் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெறும். ஆண்மை தன்மை சீரடையும்.

Read more: http://viduthalai.in/page-7/86883.html#ixzz3C7aRZKmR

தமிழ் ஓவியா said...

ரத்த அணுக்களை பெருக்கும் முருங்கைக் கீரை


உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. தோலை உரிக்காமல் வேக வைக்கும்போது வைட்டமின் பி, சி மற்றும் தோலில் காணப்படும் தாதுக்கள் பாதுகாக்கப்படுகின்றன.

பாசிப் பயறுதான் மற்ற பயறுகளைவிட எளிதில் செரிமானமடைவதுடன் உடலால் விரைவில் ஏற்றுக் கொள் ளப்படுகிறது. காரணம், இது சிறிய அளவில் இருப்பதால் எளிதில் வெந்துவிடுகிறது. பாசிப் பயறை அதிகமாகச் சாப்பிடுவதால் குடல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்கள் வாயுக்களை உற்பத்தி செய்து கழிவை ஏற்படுத்துகின்றன.

தினசரி கொய்யாப் பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகமாகும். ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வெங்காயம், கேரட் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

பார்லி நீரை தினமும் அருந்திவந்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

துளசி இலையைக் கசக்கி முகத்தில் தேய்த்துக் கொண்டு இரவில் படுத்து, காலையில் எழுந்து முகம் கழுவினால் முகம் அழகு பெறும்.

முதல் நாள் இரவில் உலர்ந்த திராட்சைப் பழங்களைத் தண்ணீரில் ஊறவைத்து, மறு நாள் காலையில் வெறும் வயிற்றில் பழங்களைச் சாப்பிட்டு தண்ணீரையும் குடித்தல் உடல் நன்கு சக்தி பெறும்.

வாரத்தில் இரண்டு நாட்களாவது முருங்கைக் கீரையை சாப்பிட்டு வர ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தியாகும்.

சுரைக்காயை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து தொப்பைக் கரையும்.

வால் மிளகு பசியைத் தூண்டிவிடும். செரிமான சக்தியை உண்டாக்கும். கபத்தையும் வாயுவையும் போக்கும்.

Read more: http://viduthalai.in/page-7/86886.html#ixzz3C7aYJFFV

தமிழ் ஓவியா said...

விநாயகர் ஊர்வலம்: ஊரெல்லாம் ரகளை!



செய்யாறில்...

செய்யாறு, செப்.1-_செய்யாறில் விநாயகர் சிலை ஊர்வலம் காந்தி சாலை வழியாக செல்ல அனுமதி மறுத்ததால் 2 மணிநேரம் போராட்டம் நடந்தது.

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு செய் யாறு நகர இந்து முன்னணி சார்பில் டவுன் பகுதி யில் 11 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட் டிருந்தன. இந்த சிலைகளை கோனேரிராயன் குளத்தில் கரைப்பதற்காக நேற்று திருவோத்தூர் சிறீவேதபுரீஸ் வரர் கோவிலின் முன்பிருந்து ஊர்வலம் தொடங்கியது.

ஊர்வலம் மார்க்கெட், மண்டித் தெரு வழியாக செல்ல காவல்துறையினர் அறிவுறுத்தி காந்தி சாலை யில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் காந்தி சாலை வழியாகத்தான் ஊர்வலம் செல்வோம் என பாதுகாப்புப் பணியிலிருந்த மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் சி.ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடு பட்டனர்.

தொடர்ந்து காந்தி சாலை வழியாக செல்ல காவல் துறையினர் அனுமதி மறுத்ததால் இந்து முன்னணி இளைஞர்கள் சாலையில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி போராட்டம் நீடித்ததால் பதற்றம் ஏற்பட்டது. காந்தி சாலையில் கடைகள் அடைக்கப்பட்டன. காவல் துறையின் சமா தானத்தை ஏற்க மறுத்ததால் காவல்துறையினர் காந்தி சாலை வழியாக ஊர்வலம் செல்ல அனுமதித்தனர்.

விநாயகர் சிலைகள் அனைத்தும் கோனேரிராயன் குளத்தில் கரைக்கப்பட்டன.

Read more: http://viduthalai.in/page-8/86888.html#ixzz3C7aqQ7GQ

தமிழ் ஓவியா said...

விநாயகர் சதுர்த்தி-மு.க.ஸ்டாலின் வாழ்த்தா? தி.மு.க. தலைமை நிலையம் மறுப்பு!


சென்னை, செப்.1- தி.மு.க. தலைமைக் கழகம் நேற்று (31.8.2014) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் பிரத்யேக இணையதளத்தில், விநாயகர் சதுர்த்தி நாளன்று வாழ்த்துக்களை தெரிவித்ததாக வந்துள்ளது.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் இணைய தளத்தைப் பராமரிக்கின்ற சில தோழர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக, எல்லாரும் தெரிவித்திருப்பதைப் போல தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக வெளியிட்டுள்ளனர். இது தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னனுமதியின்றி நடைபெற்ற செயலாகும்.

இந்த வாழ்த்துச் செய்தி அவரது விருப்பப்படியானது இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



குறிப்பு: தி.மு. கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்படி கொள்கை தெரியாதவர்களை அம்மாதிரி பொறுப்பில் அமர்த்துவதைத் தவிர்க்கவேண்டும். -ஆசிரியர்

Read more: http://viduthalai.in/page-8/86893.html#ixzz3C7b0mpQj