Search This Blog

25.1.08

பெரியார்தான் முன்னோடி

தமிழகத்தில் முதன் முதலில் கர்ப்பத்தடைப் பிரச்சாரம் செய்தவர்,அரசாங்கத்தை அப்படிச் செய்யச்சொன்னவர் பெரியாராகத்தான் இருப்பார் போலும். 1928 லேயே இது பற்றி எழுதினார்.அப்போது அது "அநேகருக்கு திடுக்கிடும்படியான செய்தியாய் இருந்தது;ஆனால் இப்போது சிறிதுகாலமாய் அது எங்கும் பிரஸ்தாபிக்கப்படும் ஒரு சாதாரண சேதியாய் விட்டது"என்று பெரியார் 1930 இல் எழுதினார்.இது மதவிரோதம் என்றும்,கடவுளின் சித்தத்திற்கு எதிரானது என்றும் அன்று கடுமையாக எதிர்க்கப்பட்டது.பெரியாரோ இது பெண்விடுதலைக்கு ஒரு முன் தேவை என்றார். மக்கள் தொகைப் பெருக்க கண்ணோட்டத்திலிருந்து அல்ல பெண்ணிய நோக்கிலிருந்து கர்ப்ப ஆட்சி பற்றி பேசினார்.

----------நூல்:"பெரியாரின் பெண்ணியம்" பக்கம் 57

----நன்றி:jaathiolippu.blogspot.com

0 comments: