Search This Blog

11.1.08

பெரியார் பார்வையில் உடை

ஆன்களும் பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும்.ஜிப்பா போட வேண்டும்.உடைகளில் ஆண்--பெண் வித்தியாசம் இருக்கக் கூடாது.ஒரே மாதிரி உடை என்று சொல்லுகிறபோது அனாவசியமான ஆடம்பரத்தை ஒழிக்க வேண்டும்.ஆண்களைப்போலவே தாங்களும் ஆகவேண்டுமே என்றில்லாமல் வீண் அலங்காரம் செய்து கொண்டு திரிவது பெண் சமுதாயத்தின் கீழ்ப் போக்குக்குத்தான் பயன்படும்.

நம்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை,நகை,துணி, அலங்கார வேசங்கள்தான் என்பதை 'அவர்கள்' உணரவேண்டும்.

பெண்கள் எல்லாம் ஆறடி ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்ளுவது அநாகரிகமும்--தேவையற்ற தொல்லையுமாகும்.ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக்கொள்ள வேண்டும்

-------------நூல்: "பெரியார் ஒரு வாழ்க்கை நெறி"

0 comments: