Search This Blog

17.1.08

பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து என்பது பொதுமக்கள் இடையில் அண்மையில் செல்வாக்குப் பெற்றுவி ட்டது.

இதற்குக் காரணம் பொங்கல்விழா தமிழர்கள் விழாவாகக் கருதப்பட்டு வருவதேயாகும்.உண்மையில் இன்று தமிழர்களுக்கு தமிழர் விழா என்று சொல்லத்தக்க வண்ணமாக பொங்கல் விழாவைத்தவிர வேறு விழா எதுவுமே இல்லை என்றே சொல்லலாம்.ஆகவே தமிழர்கள் இந்த உண்மைக் காரணத்தினாலே பொங்கல் நாளை பொங்கல் விழாவாகக் கொண்டாடுவதோடு அதைத் தனிப் பெரும் தமிழ் நாளாகவும் கொண்டாட வேண்டியவர்கள் ஆனார்கள். இப்படிப்பட்ட இந்தக் கொண்டாட்ட விழா நாளில், தமிழ்மக்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் வாழ்த்தைப் பெற, அனுப்ப ஆசைப்படுவது தமிழர் இயல்பேயாகும்.அந்த முறையில் நான் ஒவ்வொரு தமிழருக்கும் பொங்கல் வாழ்த்தாக நல்வாழ்த்து"திராவிடநாடு" மூலம் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

என்ன வாழ்த்து என்றால் தமிழர்கள் யாவரும் ஒன்றுபட்டு, தமிழருக்கு இன்றுள்ள இழிவும் குறைபாடுகளும் நீங்கி, மனிதப் பண்பு பெற்று, மானமுள்ள மக்களாக வாழ வேண்டும் என்பதான வாழ்த்துதல்தான்.

------------ ஈ.வெ.ராமசாமி --14-1-1949

குறிப்பு: அண்ணா நடத்திய "திராவிடநாடு" பொங்கல் மலருக்குத் தந்தைபெரியார் கைப்பட எழுதிய பொங்கல் வாழ்த்து இது.

0 comments: