Search This Blog

26.8.13

பக்தி, கடவுள் நம்பிக்கை பார்ப்பனர்களுடையவும், அயோக்கியர்களுடையவும் வஜ்ராயுதங்கள்

இராஜாஜியும், சங்கராச்சாரியாரும் மக்களிடையே பக்திப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். எப்போதையும்விட இப்போது அதிகமாகச் செய்து வருகிறார்கள். பேச்சு, பேசும்போதும் ``மக்களுக்கு இப்போது வரவர கடவுள் பக்தி குறைந்து வருகிறது என்று பேசி வருகிறார்கள். அதன் கருத்து என்ன என்று சிந்திப்போமானால், மக்களிடம் வரவர காலப் போக்கில் மூட நம்பிக்கைகள் குறைந்து விலகி வருகிறது என்பதுதான் பொருளாகும்.

ஏன் என்றால் அந்தச் சொல்லை உண்டாக்கினவர்களே மக்களிடம் ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை ஏற்படவேண்டும் என்கின்ற கருத்தில்தான் உண்டாக்கினார்கள் என்று சொல்ல வேண்டும். ஏன் இப்படிச் சொல்லுகிறேன் என்றால் அந்தச் சொல், அதாவது பக்தி என்கிற சொல் ஓர் அர்த்தமற்ற பொருளற்ற சொல்லேயாகும்.

விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் முதலாவது பக்தி என்ற சொல் தமிழ்ச்சொல் அல்ல; வடமொழிச் சொல் ஆகும். அதற்குச் சரியான ஒரு தமிழ்ச் சொல்லே இல்லை. பக்தி என்னும் சொல்லுக்கு தமிழில்- அகராதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொற்கள் அன்பு - வழிபாடு - நம்பிக்கை என்ற சொற்கள்தாம்.

சாதாரணமாக ஒரு மனிதன் ``பக்திமானாய் இருக்கிறான், ``அவன் தெய்வநம்பிக்கை உடையவன் என்றால் அதற்கு அடையாளம் என்ன?

1. பட்டை நாமம்
2. விபூதிப்பட்டை
3. கழுத்தில் கொட்டை
4. வாயில் ராமா -ராமா, சிவா - சிவா என்பது.
5. எதற்கெடுத்தாலும் ஆண்டவன் செயல், பகவான் செயல் என்பது.
6. கோவில்களுக்குப் போவது
7. அங்கு போய் கண்ணை மூடிக்கொண்டு கையைக் கூப்பி நிற்பது.
8. அப்போது வாயால் எதையாவது முணுமுணுப்பது.
9. நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து கும்பிடுவது.
10. மனதில் எதையாவது விரும்புவது.
11. கோவில் பார்ப்பான் எதையாவது கொடுத்தால் அதை வாங்கித் தலையில் கொட்டுவதும், வாயில் கொஞ்சம் போட்டுக் கொண்டு மீதியை உடலில் கொஞ்சம் தடவிக்கொள்வது.
12. பிறகு சாமி அறையைச் சுற்றுவது.
13. தேவாரம், பிரபந்தம், இராமாயணம், பாரதம் முதலிய நூல்களைச் சத்தமாய்ப் படிப்பது.
14. வீட்டில் பூசை அறை வைத்து பூசை செய்வது.
15. உற்சவங்களுக்குப் போவது.
16. ஸ்தல யாத்திரை செய்வது.
17. இவை முதலியவை மாத்திரமல்லாமல் பார்ப்பனர்களை சாமி என்று கூறி கண்டவுடன் கும்பிடுவது, அவனுக்குக் கண்டபடி அள்ளிக் கொடுப்பதுவரை செய்யும் காரியங்கள்தான் இன்று பக்தியாய் இருக்கின்றதே ஒழிய மற்றபடி மனிதனின் நல்ல எண்ணம், நாணயம், ஒழுக்கம், நேர்மை, இரக்கம், ஈவு முதலிய நல்லவற்றைக் கொண்டிருப்பதோ, மோசடி, துரோகம், பித்தலாட்டம், திருட்டு, புரட்டு, பொய், ஏமாற்றுதல் முதலிய தீர குணங்கள் இல்லாமல் இருப்பதோ ஒருநாளும் ஒருவரிடமும் பக்தியாய், தெய்வ நம்பிக்கையாய் இருப்பவர்களிடம் காண முடிவதில்லை.

எனது 87 ஆண்டு வாழ்வில் மனிதர் என்பவர் எவரிடமும் காண முடியவே இல்லை. அது மாத்திரமல்லாமல், அவை இருக்கவேண்டும் என்கிற கட்டாயமும் அவர்களுக்கு இல்லை. இவற்றுக்கும், பக்திக்கும் சம்பந்தமும் இல்லை என்றுதான் முடிவு செய்யவேண்டும்.

இப்படிப்பட்ட பக்தி மனிதனுக்கு எதற்காக வேண்டும் என்றால், மனிதனை மடையனாக்கவும், அயோக்கியர்கள் எளிதில் அவனைச் சுரண்டவும் பயன்படுவதால் ``மனிதனுக்குப் பக்தி அவசியமானது என்று பிரச்சாரம் செய்யவேண்டி ஏற்பட்டுவிட்டது. ஒரு யோக்கியன் பக்தி செய்யவில்லையானால், கடவுளை நம்பவில்லையானால் அவனுக்குத்தான் என்ன கேடு வரும்? மற்றவர்களுக்குத்தான் என்ன கேடு சம்பவிக்கும்? பொதுவாக மக்களுக்குப் பக்தி இல்லாவிட்டால் பார்ப்பானுக்கும், அயோக்கியர்களுக்கும் பிழைப்பு, வாழ்க்கை நடவாது.

பொதுவாக நாட்டில் பக்தி கொண்ட முட்டாள்களால்தான் இவ்விரு கூட்டம் வாழ்வதுடன், எல்லாவித கெட்ட குணங்களும் மக்களைப் பீடிக்க வசதி ஏற்படுகிறது. இதனால்தான் சங்கராச்சாரி, ராஜகோபாலாச்சாரி, கதாகாலட்சேப ஆச்சாரிகள் முதல் எந்தப் பார்ப்பனரும் எந்த சமயநூல் புராணங்களும் ``பக்தியினால் அல்லாமல் வேறு எந்தக் காரணத்தாலும் மனிதன் மோட்சமடைய முடியாது என்று தினமும் பேச்சுக்குப் பேச்சு மற்ற மக்களுக்கு உபதேசம் செய்து வருகிறார்கள்.

மற்றும் பக்தியினால் பாவம் தீரும் என்கின்ற சொல்லே மிக அயோக்கியத்தனமும், பித்தலாட்டமும் பெரும் கேடும் நிறைந்த சொல்லாகும். மற்றும் பக்தியும் வழிபாடும் பூசையும் வணக்கமும் பிரார்த்தனையும் ``மனிதன் செய்த எப்படிப்பட்ட பாவத்தையும் தீர்க்குமே என்று கூறப்படுகிறதே ஒழிய, இவை பாவம் செய்யாமலிருக்கச் செய்யும் சக்தி, தன்மை அற்றதாகவே இருந்து வருகின்றன. நாட்டில் ``மக்களுக்குக் கடவுள் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்ற கருத்தைச் சொல்லிக் கொண்டு செய்த எந்தக் காரியத்தாலும், எந்தக் கோவிலினாலும், எந்தக் குளம் தீர்த்தங்களாலும் மனிதனை ``பாவ காரியங்கள் செய்யாமல் தடுக்கவே முடியவில்லையே!
ஆகையால் பக்தி, கடவுள் நம்பிக்கை என்பவை எல்லாம் பார்ப்பனர்களுடையவும், அயோக்கியர்களுடையவும் வஜ்ராயுதங்களேயாகும்.

--------------------------------தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் -(விடுதலை, 29.12.1965).

34 comments:

தமிழ் ஓவியா said...


துவேஷம்!


மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் 17.8.2013 அன்று நீடா மங்கலத்தையடுத்த வைய களத்தூரில் திராவிடர் தள பதி சர் ஏ.டி. பன்னீர் செல்வம் பார் அட்-லா அவர்களின் சிலையைத் திறந்து வைத்தார்.

இந்தியாவில் சமூகப் புரட்சியாளர்களில் தந்தை பெரியார் முதன்மையான இடத்தை வகிக்கக் கூடியவர் என்று பேசினார். (அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றார்!)

இந்தச் செய்தியை வெளியிட்ட தினமலரும் தினமணியும் தந்தை பெரியார்பற்றி சொன்னதை மட்டும் வேண்டுமென்றே இருட்டடித்து விட்டு, மீதி செய்திகளை வெளியிட் டன. இந்து ஏடோ அறவே செய்தியை வெளியிட வில்லை.

பார்ப்பனர்களின் மனப்பான்மை - பார்ப்பன ஊடகங்களின் போக்கு எந்த நிலையில் உள்ளன என்பதை இதன் மூலம் தெளிவாகவே தெரிந்து கொள்ளலாம்.

இது ஒன்றும் புதிதல்ல - இதுகுறித்து விடுதலை யில் 60 ஆண்டுகளுக்கு முன் (16.10.1953) ஒரு தலையங்கம் வெளி வந்தது.

அந்தத் தலையங்கத் தின் தலைப்பு இது என்ன துவேஷம்? என்பதாகும்.

பனகல் அரசர், மறை மலையடிகள், ஆர்.கே. சண் முகம், திரு.வி.க. ஆகிய திராவிடத் தலைவர்கள் மறைந்ததற்கு தலையங்கம் எழுதாத ஹிந்து சத்ய மூர்த்தி அய்யர், சீனுவாச சாஸ்திரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய தலை வர்களுக்கு மட்டும் தலை யங்கம் எழுதக் காரணம் என்ன?

திராவிடத் துவேஷமே!

திராவிடா! சிந்தித்துப் பார் என்று இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் விடுதலை தலையங்கம் தீட்டியது. இன்றைக்கும் அதே நிலைதான். பார்ப் பனர்களின் மனப்போக்கில் மாற்றம் என்பது கிடையவே கிடையாது.

தந்தை பெரியார் மறை வுக்குத் தலையங்கம் எழு தாத ஏடும், இதே இந்து ஏடு தான்.

1981இல் தமிழ்நாட்டில் ஊடகத் துறையில் மிகப் பெரிய சாதனை படைத்த வரான தினத்தந்தி நிறு வனர் சி.பா. ஆதித்தனார் மறைந்தபோது - அதனை உள்பக்கம் ஏதோ கட மைக்கு வெளியிட்டு விட்டு, அன்றைய தினமே மிரு தங்க வித்துவான் பாலக் காட்டு மணி அய்யர்பற்றி முதல் பக்கத்தில் சாங்கோ பாங்கமாக வெளியிட்டதே!

இன்னொரு அதிர்ச்சித் தகவல் என்ன தெரியுமா? புரட்சிக் கவிஞர் பாரதி தாசன், அன்னை மணியம் மையார் மறைவு செய்தி யைக்கூட மரணச் செய்தி குறிப்பு வெளியிடப்படும் பகுதியில் (டீவைரயசல) வெளி யிட்டுத் தன் அற்ப சந்தோ ஷத்தைக் காட்டிக் கொண்டதுண்டு.

தமிழா இனவுணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு! என்று தமிழர் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கொடுத்த முழக் கத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்வீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

ஆசிரியர்கள் கேள்வி கேட்பதைவிட மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்!

அப்பொழுதுதான் ஆராய்ச்சி அறிவு, அறிவியல் சிந்தனை வளரும்

வல்லம் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழக விழாவில் வேந்தர் கி.வீரமணி கருத்துரை


வல்லம், ஆக. 25- மாணவர்கள் அதிகப்படியான கேள்விகள் கேட்கும் போதுதான் அவர்கள் ஆராய்ச்சி அறிவும் அறிவியல் சிந்தனையும் பெரு கும் என்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். இந்திய அரசு நிறுவனமான தேசிய அறிவியல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பக் கழகம் புதுடில்லி, மயிலை திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் சென்னை மற்றும் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகம் தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்திய 13 ஆவது மண்டல அறிவியல் எழுத் தாக்கம் இதழாக்கம் என்ற தலைப் பிலான பயிற்சிப் பட்டறை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் 20.8.2013 முதல் 24.8.2013 வரை நடை பெற்றது. பட்டறையின் நிறைவு விழா பல்கலைக்கழக வள்ளுவர் அரங்கில் 24.8.2013 அன்று காலை 11 மணி யளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்தும், அதைத் தொடர்ந்து திருவள்ளுவர் மயிலை தமிழ்ச்சங்க செயலாளரும் முன்னாள் சென்னை அகில இந்திய வானொலி இயக்குநரு மான கலைமாமணி முனைவர் சேயோன் அவர்களின் திருவள்ளுவர் வாழ்த்து மற்றும் திருவள்ளுவர் மந் திரம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு மற்றும் தொடர்பியல் துறை உதவி பேராசிரி யரும் பயிற்சி பட்டறையின் ஒருங்கி ணைப்பாளருமான பேரா.ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பின்னர் பயிலரங்கின் சிறப்பு மற்றும் பங்கேற்பாளர்களின் மதிப் பீட்டை முனைவர் சேயோன் வழங் கினார். பயிலரங்கில் பயிற்சி பெற்றவர் களுள் தங்களின் பயிலரங்கத்தின் சிறப்பியல்புகளைக் கூறினார். பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பேரா.எம்.தவமணி தலைமை உரை வழங்கினார். அவர் தம் உரை யில் விடுதலை நாளேட்டில் பகுத் தறிவு கருத்துகளோடு அறிவியல் கருத்துக்களும் இடம் பெற்றிருப் பதைக் கோடிட்டுக் காட்டினர். பயிர் பதன தொழில்நுட்பக்கழக இயக்குநர் முனைவர் அழகு சுந்தரம் பயிலரங்கம் பற்றி சிறப்புரை வழங் கினார். அவர் தம் உரையில் தனது ஆராய்ச்சி படிப்பின்போது இதழாக் கம் செய்ய எவ்வாறு பாடுபட்டார் என விளக்கினார்.

முனைவர் மனோஜ் பட்டாரியா

அடுத்ததாக தேசிய அறிவியல், தொழில்நுட்ப கழகம் புதுடில்லி இயக்குநரும் அறிவியலாளருமான முனைவர் மனோஜ் பட்டாரியா அவர்கள் அறிவியல் சார்ந்த கருத் துகளை எடுத்துரைத்து பயிலரங்க நிறைவுரையை வழங்கினார். அவர் தம் உரையில் அறிவியல் தொழில் நுட்பம் குறித்து அனைத்து மாணவர் களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான் இதுபோன்ற பயிலரங்கத்தை நடத்தி வருகின்றோம். மேலும் அறிவி யல் எழுத்தாக்கம் இதழாக்கம் மூலம் தான் அறிவியல் சிந்தனைகளை வளர்க்க முடியும். மாணவர்களாகிய நீங்கள் சிறிய கதைகளாக வடிவ மைத்து மற்றும் சிறிய கண்காட்சி மூலமாக அறிவியல் நமக்கு எப்படி எல்லாம் பயன்படு கிறது என்று செயலாக்கம் முறையில் எடுத்துக் கூறலாம். இவைகளின் மூலம்தான் நல்ல அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க முடியும் என்றார். இப்பயிலரங்க பட்டறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பல்கலைகழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பரிசளித்தார்கள். முதலாவதாக அறிவுமலர் என்ற பட்டத்தினை எஸ்.மதுபாலா, பாரத் அறிவியல் கல்லூரி, மூன்றவதாக அறிவுத் தளிர் என்ற பட்டத்தினை இ.மாதேஸ்வரன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், நான்காவ தாக அறிவு துளிர் என்ற பட்டத்தினை எஸ்.தரணி பதி, எம்ஜிஆர் அறிவியல் கலைக்கல்லூரி, அய்ந் தாவதாக அறிவு புதிர் என்ற பட்டத்தினை டி.சவு மியா பாரதி, பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியோர் பெற்றனர்.

தமிழ் ஓவியா said...

டாக்டர் வீரமணி

அடுத்ததாக பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக் டர் கி.வீரமணி அவர்கள் அறிவியல் விஞ்ஞானம் வளர்ச்சிகள் பற்றியும் அடிப்படை கடமைகள், அறி வியல் மனப்பான்மை, பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் பயிலரங்கின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார். மாணவர்கள் அதிகப்படியான கேள்விகள் கேட்கும் போதுதான் அவர்கள் ஆராய்ச்சி அறிவும் அறிவியல் சிந்தனையும் பெருகும் என்று கூறினார். அதுதான் சிறந்த கல்வி முறை என்றும் கூறினார். மனிதன் இறந்தவுடன் அவனின் உடலை உடற் கொடையாக மருத்துவ மாணவர்களின் ஆராய்ச் சிக்குக் கொடுக்க முன் வரவேண்டும். இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல ஆராய்ச்சி களை மேற்கொள்ள முடியும். இன்றைய சூழலில் இறந்த மனிதன் உடல் கிடைப்பது அரிதாக உள்ளது. ஆகையால் நாம் முன் வரவேண்டும் என்றார். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வேந்தர் அவர்கள் சிறப்பு செய்தார்கள். எம்டிஎஸ் அறிவியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாம்பசிவம் நன்றியுரை வழங்கினர். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நல்.இராமச்சந்திரன், எம்டிஎஸ் புரவலர் எஸ்.அய்யாசாமி, பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் மு.அய்யாவு ஆராய்ச்சி முதன்மையர் முனைவர் டி.குமார், பல்கலைக்கழக பேராசிரியர் கள், மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


புளுகடா புளுகு! போக்கிலியே!!


முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?

தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே?

இடையிற் பிறப்பார் உண்டோ எருமையே!

காலில் பிறப்பதுமுண்டோ கழுதையே?

நான் முகன் என்பான் உளனோ நாயே?

புளுகடா புகன்றவை யெலாம்போக்கிலியே!

என்றார் புரட்சிக் கவிஞர்.

அவர் கூறிய இந்தக் கடைசி வரி தான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது. விஜயபாரதம் என்ற ஆர்.எஸ்.எஸ். இதழ் (23.8.2013 பக்கம் 9) ஒரு தகவலை (?) வெளியிட்டுள்ளது.

மிலேச்சர்கள் நம் நாட்டின்மீது படையெடுத்த காலங்களில் அவர்களிடமிருந்து தங்கள் மானத்தைக் காத்துக் கொள்ள, ஹிந்துப் பெண்கள் ஆடவர்கள் கைகளில் இந்த ராக்கியைக் கட்டி தங்கள் கற்பைக் காப்பாற்றித் தர உத்தரவாதம் பெறும் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வந்தது.

அலெக்ஸாண்டர் நமது நாட்டின்மீது படையெடுத்து வந்தபோது ஜீலம் நதிக்கரையில் நமது மன்னன் புருஷோத்தமன் எதிர்த்துப் போரிட்டான். புருஷோத்த மனின் பேராற்றலைக் கேள்விப்பட்ட அலெக்சாண்டரின் மனைவி, தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டி ஹிந்து மரபுப்படி புருஷோத்தமனுக்கு ராக்கி அனுப்பி வைத்தாள்.

போர்க்களத்தில், அலெக்சாஸ்டரைக் கொல்ல, உருவிய வாளை உயரத் தூக்கியபோது, புருஷோத்தமன் தனது கையில் இருந்த ராக்கியைப் பார்த்து, அலெக் ஸாண்டரைக் கொல்லாமல் விட்டு விடுகிறான். என்று வரலாற்றில் ஒரு உதாரணம் உள்ளது.

என்பதுதான் விஜயபாரததத்தில் வெளி வந்துள்ள தாகும்.

இப்படி கூறுவதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஆதாரத்தைத்தான் எடுத்துக்காட்டியுள்ளனரா? ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் பொறுத்தவரை எதையும் தன் போக்கில் மானாங்காணியாகப் பேசுவது, எழுதுவது என்பது அவர்களின் ஏமாற்றும் தந்திரப் போக்கு!

சரி - விஜயபாரதம் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம்.

கஜனி முகம்மது இந்தியாவுக்குள் புகுந்து, சோமநாதபுரத்தைச் சூறையாடியபோது - கோயில் நகைகளைக் கொள்ளையடித்தபோது, பதினோராயிரம் பேர்களைச் சிறை பிடித்துக் கொண்டு போனபோது (சுவாமி சிவானந்த சரஸ்வதியின் ஞானசூரியன்). இந்தராக்கி வித்தையைக் கையாண்டு இருக்கலாமே!

சோமநாதபுரத்துக் கடவுளின் சக்திதான் என்னா யிற்று? என்பதைப்பற்றிச் சிந்தித்தால் விஜய பாரதத்தின் பொய்ச் சரக்கின் மூல வேர் அறுபட்டு விழுந்து விடும். முகமூடியும் கிழிந்து தொங்கும்

தமிழ் ஓவியா said...



இது என்ன திராவிடர் கழக மாநாடா!


மதுரை மகேந்திரன் படத்திறப்பில் நீதியரசர் பி.தேவதாஸ் ஆச்சரியம்!
சிறந்த மானுடர் மகேந்திரன் என்று புகழாரம்

மதுரை, ஆக. 25- சிறந்த மானுடராக வாழ்ந்து மறைந்தவர் மதுரை வழக்குரைஞர் கி.மகேந்திரன் என்று உயர்நீதிமன்ற நீதிமான்களும், மூத்த வழக்கு ரைஞர்களும் புகழாரம் சூட்டினர் திராவிடர் கழகத்தின் மாநில சட்டத்துறைத் தலைவராக இருந்து மறைந்த வழகுரைஞர் மானமிகு கி.மகேந்திரன் அவர்களின் படத்திறப்பு , 22.08.2013 வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மதுரை வழக்குரைஞர் சங்கக் கட்டடத்தில் நடைபெறறது. படத்திறப்பு நிகழ்வுக்கு மதுரை வழக்குரைஞர் சங்கத் தலைவர் பி. தர்மராஜ் தலைமையேற்றார். மதுரை வழக்குரைஞர் சங்கச்செயலாளர் ஏ.கே.இராமசாமி, வழக்குரைஞர் கி.மகேந்திரன் அவர்களுடன் தான் பகிர்ந்து கொண்ட மேடைகள், போராட்டங்கள், அவருடைய அணுகுமுறை போன்றவற்றைக்கூறி நினைவுரை வழங்கி நிகழ்வை ஒருங்கிணைத்தார். வழக்குரைஞர் நா.கணேசன் அவர்கள் அனை வரையும் வரவேற்று, திராவிடர் கழகத்தைச்சார்ந்த தன்னைப்போன்றவர்களையும், கொள்கை சாராத இளம் வழக்குரைஞர்களையும் பாகுபாடு இன்றி ஒன்றாக சீனியர் கி.மகேந்திரன் அணுகிய முறையினை எடுத்துரைத்தார். என்றைக்கும் ஜூனியர் பசித்து இருப்பதைப் பொறுத்தவர் அல்ல,எங்கு அனுப்பினா லும் மறக்காமல் சாப்பிடப் பணம் கொடுத்தும், அந்த ஊரில் சாப்பிடக்கூடிய நல்ல உணவு விடுதியையும் சொல்லி அனுப்புவார் என்பதையும் குறிப்பிட்டார்.

மூத்த வழக்குரைஞர்கள்

தொடர்ந்து மூத்த வழக்கறிஞர்கள் வேலுச்சாமி, பி.என். பாண்டித்துரை (எக்ஸ் பார் கவுன்சில் உறுப் பினர்) ,கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ , டி.கே. கோபாலன், நெடுஞ்செழியன், சுல்த்தான் அலாவுதீன், சின்னராஜ் ஆகிய மூத்த வழக்குரைஞர்கள் கி.மகேந் திரன் அவர்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண் டனர். தொடர்ந்து உரையாற்றிய கவுரி மகேந்திரன் அவர்கள், கணவர் மறைந்ததை தாங்க முடியவில்லை, அந்த உணர்விலிருந்து மாறுவதற்காக நிறைய நூல் களைப் படிக்கின்றேன். எனக்கு கிடைத்த மிகப்பெரிய கிப்ட் எனது கணவர். எனக்கு திருமணம் ஆன புதிதில் , என்னைப் பார்க்க வந்த ஆசிரியை ஒருவர் நீ கொடுத்து வைத்தவள், இப்படிப்பட்ட கணவர் கிடைப்பதற்கு என்றார். அது உண்மைதான், நான் அவரோடு வாழ்ந்த இந்த 22 ஆண்டுகளில் ஒரு நாள் கூட என்னைக் கடினமான வார்த்தைகளால் திட்டியதில்லை, அடித்த தில்லை, எப்பொழுதும் கனிவான பார்வையும், புன்ன கையும்தான் எனது கணவர் என்று மிக உருக்கமாக குறிப்பிட்டார். தொடர்ந்து கி,மகேந்திரன் அவர்களின் மாமனார் பாலகிருஷ்ணன் உரையாற்றினார்.

மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி பி.கோகுல்தாஸ் அவர்கள் கருத்துரை வழங்கினார். தமதுரையில் 'எனக்கு வழக்குரைஞர் மகேந்திரன் அவர்களோடு பழக வாய்ப்பில்லை. ஆனால் அவரைப்பற்றி இங்கு பேசிய ஒவ்வொருவரும் குறிப்பிட்டதைப் பார்க்கும்போது மகேந்திரன் சிறந்த முழு மனிதராக தோற்றமளிக்கிறார் என்று உணர்ந்தேன், சிறந்த எழுத்தாளராக, பேச்சாள ராக, திராவிட இயக்க கொள்கையிலும், பிறரது நலனுக்காக உழைப்பதிலும் தனது வாழ்வைச்செம் மையாக்கியவர் என்று தெரிகிறது .இவரது படத்திறப்பு இம்மன்றத்தில் முத்தாய்ப்பான நிகழ்ச்சியாகும் "எனக்குறிப்பிட்டார்.

தமிழ் ஓவியா said...


தொடர்ந்து கி.மகேந்திரன் அவர்களின் படத்தினை திறந்து வைத்த மாண்புமிகு உயர் நீதிமன்ற நீதிமான் பி.தேவதாஸ் அவர்கள் சிறப்புரை நல்கினார். " எங்களை விட வயதானவர்கள், அறிவார்ந்தவர்கள் எல்லாம் எங்கள் முன் அமர்ந்திருக்கின்றீர்கள், நாங்கள் வகிக்கும் பதவியின் காரணமாக எங்களை இங்கு அமரவைத் திருக்கின்றீர்கள். இங்கு வழக்குரைஞர் மன்றமா? தமிழ் மன்றமா என்று வியக்கக்கூடிய வகையில் அனைத்தும் தமிழ் மொழிப்பேச்சாக அமைந்துள்ளது, மகிழ்ச்சி.
மறைந்த வழக்குரைஞர் கி.மகேந்திரன் , மிட்டா மிராசுதாரர் இல்லை, ஆயிரம் ஏக்கருக்கு சொந்தக்காரர் இல்லை, ஆனால் இத்தனை மனிதர்கள் அவரை உள மாரப் பாராட்டும் வண்ணம் வாழ்ந்து மறைந்திருக் கின்றார். புகழைச் சம்பாதித்திருக்கின்றார். இந்த நிகழ்வினைப் பார்க்கும்போது , குட்டி திராவிடர் கழக மாநாடா அல்லது கி.மகேந்திரன் படத்திறப்புதானா என்று எண்ணும் அளவிற்கு இருப்பதாக வியந்தார். 2-10-1953இல் மேலூரில் பிறந்து , சாதாரணப் பள்ளிக்கூடத்தில் படித்து, மேலூர் கல்லூரியில் படித்து, சட்டம் பயின்று முன் வந்திருக்கின்றார், சட்டக்கல்லூரியில் கூட இயக்கத்தலைவர் அவர்களின் முயற்சியால் ரிட் மனு தாக்கல் செய்து . மிகப்பெரிய போராட்டம் நடத்தித்தான் சட்டம் படித்திருக்கின்றார். நான் தமிழ் வழியில் படித்தவன்தான். கல்லூரிக்குச் சென்ற பின்புதான் ஆங்கில வழியில் படித்தேன். ஆனால் ஆங்கில இலக்கியத்தில் பல்கலைக் கழகத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று, தங்கப் பதக்கம் பெற்றேன். மொழி என்பது ஒரு வண்டிதான். தமிழ்தான், தாய்மொழிதான் அடிப்படை.. ஆங்கிலம் என்பது வயிற்றுப்பிழைப்புக்காகத்தான். ஜப்பான் நாட்டில் ஜப்பான் மொழியில் வழக்கு நடக்கின்றது. சீன நாட்டில் சீன மொழியான மாண்டேரி மொழியில் நடக்கின்றது. பிரெஞ்சு நாட்டில் பிரெஞ்சில் நடக்கின்றது. ஆனால் தமிழ் நாட்டில் இயலவில்லை என ஆதங்கப்பட்டார். தமிழில் நீங்கள் வாதாடலாம், நானும் கேட்டுக்கொள் ளலாம், ஆனால் தீர்ப்பு ஆங்கிலத்தில் எழுதினால்தான் செல்லும் என்றார். ம்கேந்திரன் அவர்கள் தமிழின் பால், திராவிடர் இயக்கத்தின்பால் மிகுந்த ஈடுபாடு கொண்டவராக, பகுத்தறிவுவாதியாக வாழ்ந்து மறைந் திருக்கின்றார்.

நடந்து முடிந்த சில வழக்குகளைப் பற்றிய செய்திகளை உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள் பகிர்ந்து கொண்டார் இலவச பேருந்து அட்டை எல்லா மாணவர்களுக்கும் வழங்கப்படுகின்றது, ஆனால் சட் டக்கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று ஒரு வழக்கு வந்தது. அனைத்து மாணவர் களுக்கும் கொடுக்கும்போது சட்டக்கல்லூரியில் படிப்பவர்கள் பலர் கிராமத்திலிருந்து வருகின்றார்கள். சாதாரண வீட்டுப்பிள்ளைகள் வருகின்றார்கள். அவர்களுக்கும் கொடுக்கவேண்டும் என உத்தர விட்டோம். அந்தத் திட்டத்தை சட்டக்கல்லூரி மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழ் ஓவியா said...

வழக்குரைஞர்களுக்கு அறிவுரை! குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைகளில் விலங்கு போடப்படுகிறது, போடக்கூடாது என ஒரு வழக்கு வந்தது. அண்ணா அவர்கள் 'சட்டம் ஒரு இருட்டறை, வழக்குரைஞர்களின் வாதம் ஒரு விளக்கு; என்றார்கள். எப்படிப்பட்ட் குற்றவாளி என்றாலும் அவர்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைப்பதற்கு வழக்குரைஞர்கள் வேண்டும். வழக்கின் தீர்ப்பைச் சொல்ல நாங்கள் இருக்கின்றோம். நீங்கள் கைகளில் தீர்ப்பை எடுத்துக் கொள்ளக்கூடாது. வழக்குரைஞர்கள் சக்தி பலமானது. வாதங்களில் பிறர் மனதைப் புண்படுத்தாமல் தனது தரப்பு வாதங்களை எடுத்து வைக்க வேண்டும். வழக்குரைஞர்கள் நியாயமான கோரிக்கைகளுக் காகப் போராடலாம். ஆனால் எதற்கெடுத்தாலும் போராடினால், நமது கட்சிக்காரர்கள் பாதிக்கப் படுவார்கள். அதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மகேந்திரன் அவர்களின் படத்தினை திறந்து வைக்க வாய்ப்பு அளித்ததற்கு எனது நன்றிகள் " எனச்சொல்லி அழகு தமிழில், தெளிந்த நடையில் ஆங்கிலச்சொற்களே கலக்காமல் உரையாற்றினார்.

முடிவில் வழக்கறிஞரும், கி.மகேந்திரன் அவர்களின் உற்ற நண்பருமாகிய பி.கே.ராஜேந்திரன் நன்றி கூறினார். அவர் தமதுரையில் மகேந்திரன் அவர்களின் பேச்சுத் திறன், எழுத்துத் திறன் போன்றவற்றைச் சொல்லி, தலைவர் தந்தை பெரியார் மேடையில் அமர்ந்திருக் கும்போது மகேந்திரன் மேலூரில் பேசினார். சிலர் அய்யா பேச இருக்கிறார், சீக்கிரம் பேச்சை முடியுங்கள் என மகேந்திரன் சட்டையை லேசாக இழுத்தபொழுது, தம்பி, அவரைப் பேச விடுங்கள் என அய்யா பெரியார் சொல்லி மகேந்திரனின் பேச்சை அய்யா அவர்கள் நெகிழ்ந்து கைதட்டி ரசித்தார்கள். அதனைப் போல டாக்டர் கலைஞர் மேடைக்கு வந்தபொழுது, தொடர்ந்து பேச கலைஞரே அனுமதிக்க, மகேந்திரன் தொடர்ந்து பேசினார். டாக்டர் கலைஞர் அவர்கள் தமதுரையில், மகேந்திரன் அவர்களின் பெயரைக் குறிப்பிட்டு, பேசிய கருததுக்களைக்கோடிட்டு உரையாற்றினார். இவையெல்லாம் தனது வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்கள் என மகேந்திரன் சொல்லுவார். அரசர் என்ற வார்த்தை மன்னர் அமைப்போடு தொடர்புடை யது. 1969இல் மன்னர் பரம்பரை எல்லாம் ஒழிக்கப்பட்டு விட்டது. எனவே நீதியரசர் என்பதற்கு பதிலாக நீதிமான் என்று அழைக்கலாம் எனக்குறிப்பிட்டு, வந்திருந்த நீதிமான்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். மகேந்திரன் அலுவலக இளம் வழக்குரைஞர்கள் அனைவரும் வழக்குரைஞர் ந.கணேசன் தலைமையில், மகேந்திரனோடு இணைந்து வழக்குரைஞர் தொழில் புரிந்த பி.கே.ராஜேந்திரன் அவர்களோடு இணைந்து மூத்த வழக்குரைஞர்களும் சிறப்பான . ஏற்பாட்டை செய்திருந்தனர். நிகழ்வில் கி.மகேந்திரன் அவர்களின் மகன் ம.கவுசிகன், அவரது உறவினர்கள், திராவிடர் கழக மதுரை மண்டலத் தலைவர் வே.செல்வம், செயலாளர் மீ.அழகர்சாமி, மாநிலப் பகுத்தறிவாளர் கழகத்தலை வர் முனைவர் வா. நேரு, மதுரை மாவட்ட தி.க. செயலாளர் க.அழகர், புறநகர் மாவட்டச் செயலாளர் அ.வேல்முருகன், தலைவர் மா.பவுன்ராசா, போட்டோ ராதா, புதூர் பாக்கியம், மாவட்ட அமைப்பாளர் ந.முருகேசன், துணைத்தலைவர் நாகராசன், வழக்குரை ஞர் கருப்பசாமி, ஈ.வெ.ரா. தியாகராசன், க.பிச்சைப் பாண்டிஉள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், பெருந் திரளான வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ் ஓவியா said...


கண்ட பலன்?


ஆகஸ்ட் 24 - சனி ஏழு மலையப்பன் மைசூர் மண் டபம் எழுந்தருளல். குச் சனூர் சனி பகவான் ஆரா தனை. மகா சங்கடஹர சதுர்த்தி.

ஆகஸ்ட் 25 - ஞாயிறு சிறீரங்கம் நம் பெருமாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் அனுமனுக் குத் திருமஞ்சன சேவை. தேவக்கோட்டை ரங்கநாதர் புறப்பாடு.

ஆகஸ்ட் 26 - திங்கள் திருச்செந்தூர் முருகப்பெரு மான் உற்சவம் ஆரம்பம். சங்கரன் கோவில் கோமதி யம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக் குத் திருமஞ்சன சேவை.

ஆகஸ்ட் 27 - செவ் வாய் திருச்செந்தூர் முரு கப்பெருமான் சிங்கக்கேடய சப்பரத்திலும், இரவு பல் லக்கிலும் பவனி. பெரு வயல் முருகப்பெருமான் புறப்பாடு. திருப்பரங்குன் றம் ஆண்டவர் புறப்பாடு. கார்த்திகை விரதம்.

ஆகஸ்ட் 28 - புதன் திருச்செந்தூர் முருகப் பெருமான் காலை பூங் கோவில் சப்பரத்திலும், இரவு முத்துக்கிடா வாக னத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத் திலும் பவனி சிறீகிருஷ்ண ஜெயந்தி.

ஆகஸ்ட் 29 - வியாழன் மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம். திருச்செந்தூர் முருகப் பெருமான் தங்க முத்துக் கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத் திலும் அம்பாள் வெள்ளி சப்பரத்திலும் திருவீதி யுலா. ஸ்ரீபஞ்சராத்திர ஜெயந்தி.

ஆகஸ்ட் 30 - வெள்ளி மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி உறியடி உற்சவம். திருச்செந்தூர் முருகப் பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ் சனசேவை.

....இத்தியாதி ....இத்தி யாதி கோவில் வைபவங்கள் வெகு ஜோராக நடக்கத் தான் செய்கின்றன. இது ஒரு வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல். ஆண்டு முழுவதும் இவை போன் றவை எத்தனை எத்த னையோ!

இவையெல்லாம் நடந்து என்ன பயன்? வறுமைக் கோட்டைத் தாண்டி மக்கள் வளர்ந்து விட்டார்களா? மருத்துவமனைகளை இழுத்து மூடும் நிலை ஏற் பட்டுவிட்டது - கடவுளின் கடாட்சத்தால் என்ற நிலை உண்டா?

நூற்றுக்கு நூறு மக்கள் கல்வி கற்றுத் கடைத்தேறி விட்டார்களா? காஷ்மீர் பகு தியில் அந்நியப் படைகள் ஊடுருவல் தடுத்து நிறுத் தப்பட்டதா?

வன்முறைகள் ஓடி ஒளிந்துவிட்டனவா? உண வுப் பஞ்சம் நீங்கியதா? குடிநீர்ப் பஞ்சம் பறந்துவிட் டதா? சாலையோர மக் களுக்குக் குறைந்தபட்சம் குடிசை வீடுகள் கிடைக் கின்றனவா?

மக்கள் உழைப்பும், பண மும், முயற்சியும் பாழான தைத் தவிர - முட்டாள் தனம் முண்டா தட்டி எழுந் ததைத் தவிர நாடு கண்ட பலன் என்னவாம்?

புரோகிதச் சுரண்டல் தொழில் ஓகோ என்று நடந்ததை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பெரியார் விட்டுச் சென்ற அசையும், அசையா சொத்துகள் எவை?


கழகத் தலைவர் விளக்கம்

...நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் மறைவுக்குப் பின் நமது மக்களில் பலரும் - ஏன் நம் இன எதிரி களும்கூட - ஒரு கேள்வியைக் கேட் காமல் இருப்பதில்லை.

பெரியார் எவ்வளவு சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார் என்பதே அந்தக் கேள்வி.

இன்னும் சில அரசியல்வாதி களும், ஆன்மிகப் போர்வையாளர்களும்கூட இதை அறிய வருமான வரித் துறைக்கேகூட படையெடுத்து ஊடுருவிப் பார்த்தார்கள்.

அவர்களுக்கு நாங்கள் அன்றும் சொன்னோம்; இன்றும் சொல்லுகிறோம்.

ஆம்! ஏராளமான சொத்துக்களைப் பெரியார் விட்டுச் சென்றுள்ளார்கள்.

அவைகளில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என்று இரண்டு வகைச் சொத்துக்களும்கூட - ஏராளம் சேர்த்துவிட்டு அதை எங்களிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள்!

அசையும் சொத்துக்கள் (Movable Properties) என்பவை இதோ இந்த மணவிழாவை காதல் மணமாக, ஜாதி மறுப்புத் திருமணமாக, தாலி இல்லாது வெறும் மாலைகளை மட்டுமே மாற்றிக் கொண்டு தனது சொந்தக் காலில் நிற்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டுள்ள எங்கள் திராவிட மாணவர்; கழகப் பொறுப்பாளரான இளைஞர் தமிழ்ச்செல் வனைப் போன்றுள்ள எண்ணற்ற இலட்சிய இளைஞர்கள் - சர்வ பரித் தியாகம் செய்யத் தயாராக இயக்கத்திடம் தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ளனரே, இவர்கள்தான் பெரியார் விட்டுச் சென்றுள்ள அசையும் சொத்துக்களாகும்; அதுபோலவே, எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாத இலட்சியங்களைக் கொண்டுள்ள இயக்கமும், அதன் லட்சியங்களும்தான் அசையாத நிரந்தரச் சொத்துக்கள் ஆகும் (பலத்த கைத்தட்டல்).

- (நெய்வேலியில் 23.8.2013 அன்று நடைபெற்ற தன.தமிழ்ச்செல்வன் - குண.கோமதி ஆகியோரின் வாழ்விணையேற்பு விழாவைத் தலைமை தாங்கி நடத்தி வைத்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உரையிலிருந்து)

தமிழ் ஓவியா said...


தேவை துப்பாக்கி!


தற்காப்பு ஆயுதங்கள் - தேவைப்பட்டால் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் அனுமதி பெண் களுக்குக் கிடைக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் (விடுதலை, 24.12.2012).

இது ஏதோ தீவிரமாகப் பேசவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட ஒன்றல்ல; பெண்களை ஆண்கள் போகப் பொம்மைகளாகக் கருதும் கேவல மான சிந்தனைக்கு முடிவு கட்ட கண்டிப்பாக இந்த வாய்ப்புப் பெண்களுக்கு அளிக்கப்பட்டே தீர வேண்டும்.

அவ்வப்பொழுது பெண்கள் பாதிக்கப்படும் பொழுது - பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கப் படும்பொழுது வீர முழக்கங்கள், ஆவேசக் குரல்கள் கிளம்பும்; சில நாள்களுக்குப் பிறகு அதுபற்றிய சிந்தனையோ, பேச்சோ இருக்காது; மீண்டும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பொழுது மீண்டும் அதே ஆவேசக் குரல்கள் - ஆர்ப்பாட்டங்கள்!

போதும், போதும் - இனிமேலும் அறிவுரைகள் தேவையில்லை - உருப்படியான செயல்பாடுகள்தான் தேவையே தவிர, வெற்றுச் சொற்கள் தேவையில்லை.

மும்பையில் பத்திரிகைத் துறையில் நிழற்படக் கலைஞரான பெண் ஒருவர் வெறிபிடித்த அய்ந்து பேர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப் பட்டார் என்ற செய்தி இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுக்குமே மாபெரும் தலைக்குனிவே! தமிழ் நாட்டிலும் பாலியல் தொல்லைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஆனாலும், ஊடகங்கள் அத்தகுச் செய்தியைக் கழுத்தை நெரித்துக் கொன்று விடுகின்றன.

உலகில் பெண்கள் வாழப் பாதுகாப்பில்லாத ஆபத்தான நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படு கிறது.

சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஓடிவிட்டன; பிரதமராகவும், முதலமைச்சராகவும் இந்நாட்டில் பெண்கள் வந்துவிட்டனர் - என்ன பயன்?

பெண் கல்வி கூட வளர்ந்தேதான் இருக்கிறது என்பதும் உண்மைதான்; வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் குறிப்பிட்ட அளவுக்கு முன்னேறி இருக் கிறார்கள்.

பெண்களுக்குச் சொத்துரிமையும் கிடைத்து விட்டது. விவாகரத்து உள்பட பல சட்டங்களும் பெண்களுக்குச் சாதகமாக வந்துவிட்டன என்பதெல்லாம் வளர்ச்சியின் அத்தாட்சிகள்தான் - அதில் சந்தேகம் இல்லை.

இவ்வளவு இருந்தும் பெண்கள் மத்தியில் இன்னும் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது!

சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்னும் சமூக மனப்பான்மை இருந்து வருகிறது. இந்த உளவியல் நோய் முதலில் ஒழிக்கப்படவேண்டும்.

உடை உடுத்துவதிலிருந்து ஆண் - பெண் வேறுபாடு இருக்கவே கூடாது. சிறு வயதிலேயே ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் சகஜமாகப் பழகும் வகையில் மக்கள் மனோபாவம் மாறியாகவேண்டும்.

பாடல்கள், நடனம், அலங்காரப் பொருள்களைத் தயாரித்தல்கள் என்பது மட்டுமே பெண்களுக்கு உரியது என்ற நிலை தூக்கி எறியப்படவேண்டும்.

சிறுவயதிலேயே பெண்களுக்கு, ஆண்களுக் குரிய உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, கராத்தே பயிற்சி, துப்பாக்கிச் சுடும் பயிற்சி என்று அனைத்தும் கற்பிக்கப்படவேண்டும்.
குறிப்பிட்ட வகுப்புக்குமேல் பாலியல் தொடர்பான கல்வியியல் புகட்டப்படவேண்டும். மறைத்து மறைத்துப் பேசி பாலியலில் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தும் யதார்த்த நிலை போக்கப்படவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக குறிப்பிட்ட காலத்திற் காவது பெண்களுக்குத் தற்காப்புக் கண்ணோட் டத்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக் கப்படவேண்டும்.

வக்கிரப் புத்தியோடு பெண்களைச் சீரழிக்கும் ஆண்கள் நான்கு இடத்தில் பெண்களால் சுடப்பட்டார்கள் என்ற செய்தி வந்தால் போதும், தங்கள் வாலைச் சுருட்டிக் கொள்வார்கள் ஆண்கள்.

இதற்கு வழக்கம்போல இந்த ஆண் ஆதிக்க சமுதாயம் எதிர்த்துக் குரலைக் கொடுக்கத்தான் செய்யும்.

அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், பரீட்சார்த்த மாகவாவது கொஞ்ச நாளைக்குக் கொடுத்துப் பார்க்கவேண்டும் என்பதுதான் நமது அழுத்தமான வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...


சபாஷ், மகாராஷ்டிர அரசு பில்லி சூனியம், பேய் ஓட்டினால் ஏழு ஆண்டுகள் சிறை! மகாராஷ்டிராவில் அவசர சட்டம்



மும்பை, ஆக. 26-மகாராஷ்டிராவில் பில்லி சூன்யம் வைப்பது, பேய் ஓட்டுவது போன்ற மூட பழக்க வழக்கங்களில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை மாநில ஆளுநர் சங்கரநாராயணன் பிரகடனம் செய்துள்ளார்.

இந்த சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடை முறைக்கு வந்துள்ளது. இதன்படி பில்லி சூன்யம், செய்வினை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அப்பாவி மக்களின் மூடப்பழக்க வழக்கங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது, மந்திரம், தந்திரம் மூலம் நோய்களை குணமாக்குவதாக கூறி மோசடி செய்வது, பேய் ஓட்டுவது, மிருகங்களை பலியிடுவது போன்றவற் றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றங் களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண் டனை வழங்குவதற்கு அவசர சட்டம் வகை செய் கிறது. இது தொடர்பான மசோதா நாக்பூரில் நடை பெறவுள்ள சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்படவுள்ளன.

மூடபழக்க வழக்கங்களை ஒழிக்க பாடுபட்டவர் டாக்டர் நரேந்திர தபோல்கர். இது தொடர்பாக சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத் தியவர். இது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே வரைவு மசோதா ஒன்றை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்துத்துவ அமைப்பினர் முட்டுக் கட்டை போட்டதால் இந்த மசோதாவை இது வரையில் நிறைவேற்ற முடியவில்லை.

நடந்து முடிந்த சட்ட மன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போதும் இந்த மசோ தாவை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. அப்போது இந்துத்துவ கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித் ததால் இந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில்தான் டாக்டர் நரேந்திர தபோல்கர் புனேயில் தனது வீட்டின் அருகில் நடைப் பயிற்சியில் ஈடு பட்டு கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான அவரது பிரச்சாரத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்களே அவரை சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த அவசர சட்டத்தை மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்துள்ளது.

இதன் இடையே அவசர சட் டத்தை காலதாமதமாக கொண்டு வந்ததற்கு தபோல்கரின் குடும்பத் தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சட்டத்தை முன்பே கொண்டு வந்திருந்தால் தபோல்கர் கொலை செய்யப்பட்டிருக்கமாட்டார் என்று சொல்ல இயலாது. ஆனால் முன்பே கொண்டு வந்திருந்தால் மூடப்பழக்க வழக்கத்துக்கு எதிராக அரசு செயல்படும் என்ற செய்தி உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தபோல்கரின் மகள் முக்தா தபோல் கர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

நெருக்கடி

கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இரு தொகுதிகளுக்கான மக்களவை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரசிடம் தோல்வி அடைந்த நிலையில், அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அக்கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட தொகுதிகள் அவை.

இந்தத் தோல்வி, கட்சியின் மாநிலத் தலைவரான குமாரசாமியை கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து பதவி விலகச் செய்திருக்கிறது. வயதான காலத்தில் குமாரசாமியின் தந்தையாரான தேவேகவுடாவிற்கும் ஏன்தான் இந்தத் தொல்லையோ! (எதற்கும் நாமக்கல் ஜோதிடரிடம் ஆலோசனை கேட்பது நல்லது!).

கேரளமா - கொக்கா?

கேரள மாநிலத்தில் அரசுப் பணியில் சேர மலையாளம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. வேற்று மொழிக்காரர்கள் அதனை எதிர்க்கின்றனர். எனவே, ஏற்கெனவே இருந்துவரும் ஆணையை மறுபரிசீலனை செய்ய லாமா என்று அரசு ஆலோசித்து வருவதாக கேரள மாநில முதல மைச்சர் உம்மன்சாண்டி கூறியுள்ளார்.

தொடக்கத்திலேயே இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

கேரளம் என்ன தமிழ்நாடா? கண்டிப்பாக அங்கு மொழிமீது கை வைக்க முடியாது - மலையாளிகள் தமிழர்கள்போல இளிச்சவாயர்கள் அல்லவே!

தமிழ் ஓவியா said...

சாத்தியமில்லை

ஒரு பாட்டில் தண்ணீரின் விலை ரூ.10.

அப்படியிருக்கும்போது மதிய உணவு ஒன்றுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள ரூ.3.11 முதல் 4.65 என்ற தொகை எப்படிப் பொருந்தும்? நடைமுறைக்குச் சாத்தியமானது தானா? என்ற வினாவை எழுப்பி யுள்ளது நாடாளுமன்றக் குழு.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்களே, அது இது தானோ!

வழக்குரைஞர்களுக்கும் தகுதித் தேர்வு

சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்று வழக்குரைஞர் தொழில் நடத்துபவர் கள் தகுதித் தேர்வு எழுதவேண் டுமாம். தகுதி என்ற ஒன்றை உருவாக்குவதில் உள்நோக்கம் உண்டு. தகுதியில்லாதவர்கள் எல் லாம் படித்துவிட்டு டாக்டராக, பொறி யாளராக, வழக்குரைஞர்களாக வந்துவிட்டனர் என்பது பார்ப்பனர் களின் திண்ணைப் பிரச்சாரம் - ஊடகப் பிரச்சாரம்.

தேர்வு எழுதி பட்டம் பெற்ற பிறகும், அவர்களைத் தேர்வு எழுத வைத்து கழித்துக் கட்டவேண்டும் என்பது தான் இதற்குள்ளிருக்கும் சூழ்ச்சியும் - பார்ப்பனத்தனமும் ஆகும்.

கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர் பார்ப்பனர்களுக்கு மந் திரங்கள் சரிவரத் தெரியுமா என்று தேர்வு வைக்கலாமா? பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

தமிழ் ஓவியா said...


சிறப்பு


விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவை யில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடை யோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு.

- (விடுதலை, 12.3.1965)

தமிழ் ஓவியா said...


வரலாற்று நினைவுச் சின்னங்கள்: பாதுகாப்பு தேவை


ஆசிரியருக்குக் கடிதம்

வரலாற்று நினைவுச் சின்னங்கள்: பாதுகாப்பு தேவை


விழுப்புரம் மாவட்டம் பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது. காலம்சென்ற தமி ழறிஞர் கொடுமுடி ச.சண்முகன் அவர்கள், இம்மாவட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறி யாளராகப் பணியாற்றியபோது, வரலாற்றுத் தடயங்களை ஆவணப் படுத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டினார். விழுப்புரம் வட்டம், அரசலா புரத்தில் இருந்த கோழி நடுகல் மற்றும் திருக்கோவிலூர் வட்டம், ஆயந்தூர், ஆமூர், சென்னகுணம், கொளத்தூர் ஏரிகளில் இருந்த பழை மையான கல்வெட்டுகளை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் விழுப்புரம் கொண்டு வந்தார். இவற்றைக் கொண்டு, விழுப்புரம் பொதுப் பணித்துறை அலுவலக வளாகத்தில், விழுப்புரம் கோட்டம் 1051எஸ்/இவஅ2/கோ 255 நாள்:21.5.92- ஆணையின்படி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. தென்னார்க்காடு மாவட்ட கண்காணிப்புப் பொறி யாளர் கோ.பச்சைமுத்து அவர்களால் இவ்வருங்காட்சியகம் 29.7.1992-இல் திறந்து வைக்கப்பட்டது.

இந்நினைவுச் சின்னங்களில் குறிப்பிடத்தக்கது, விழுப்புரம் வட்டம் அரசலாபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கோழி நடுகல் லாகும். இதன் காலம் கி.பி.3-ஆம் நூற்றாண்டு. வரலாற்று ஆய்வாளர் களால் இந்நடுகல் முக்கிய ஆவண மாகக் கருதப்படுகிறது.

விழுப்புரத்தில் அரசு சார்பில் அருங்காட்சியகம் இல்லாத சூழலில், விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட் டிருந்த இந்நினைவுச் சின்னங்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு விழுப்புரம் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தின் வடக்குப் பகுதியில், அதாவது மேற்கண்ட அருங்காட்சி யகம் இருந்த இடத்தில், வாகனம் நிறுத்துமிடம் கட்டப்பட்டது. இத னைத் தொடர்ந்து அதன் அருகி லேயே மய்யப்பகுதியில் சிறிய கோயில் ஒன்றும் தற்போது கட்டப்பட்டு வருகிறது. அரசு அலுவலக வளாகத் தில் கோயில் கட்டுவதற்கு அரசு விதிகள் எப்படி இடம் கொடுக்கின் றன எனத்தெரியவில்லை?

வாகனம் நிறுத்துமிடம் மற்றும் திடீர் கோயில் ஆகியவற்றின் காரண மாக, அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்த நடுகல் மற்றும் கல் வெட்டுகள் அப்பகுதியில் கடைக் கோடிக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இப்போது அந்த இடம் குப்பைக் கூளங்கள் கொட்டுவதற்குப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வருங்காட்சியகத்தை அமைத்த விழுப்புரம் செயற்பொறி யாளர்கள் வே.கோவிந்தராசன், கொடுமுடி ச.சண்முகன் ஆகியோர், இதனைப் பாதுகாப்பவர்கள் அடி எங்கள் முடி மேலன (அவர்கள் பாதம் எங்கள் தலையில்) எனத் தெரிவித் துள்ளதை இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

தமிழர்களின் ஆயிரம் ஆண்டுக ளுக்கு முற்பட்ட வரலாற்று நினைவுச் சின்னங்களை, துறையின் ஆணையின் படி அமைக்கப்பட்ட அருங்காட்சிய கம் அதே அலுவலகத்தில் இப்படி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டி ருப்பது வேதனைக்குரியதாகும். எனவே இதுகுறித்துத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய பொதுப் பணித் துறை அதிகாரிகளால் 20 ஆண்டுகளுக் கும் மேலாக பாது காக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்த நினைவுச் சின்னங்களை அழியாமல் பாதுகாத் திட நடவடிக்கை எடுத்திட வேண்டு கிறேன்.

- கோ. செங்குட்டுவன்
(ஒருங்கிணைப்பாளர், விழுப்புரம் மாவட்ட வரலாற்றுப் பேரவை)

தமிழ் ஓவியா said...

""கோகுல அஷ்டமி "" கொண்டாடுவோர் சிந்தனைக்கு !!

பாஞ்சாலிக்கு அவ்வளவு துணியை ஏதோ ஒரு பெரும்

ஆலையில் இருந்து துணி நெய்து தருவது போல தம் கருணையாலும் ,மிக பெரிய சக்தியாலும் ""அற்புதம் "" செய்ததாக கூறப்டுகிற கண்ணன் தான் -பிறர் முன் பெண்களின் துகில் -சேலை -உரியப் படகூடாது என்ற மிகப் பெரிய "' நாகரிக "'மனித நேய தத்துவவாதியாக காட்டபடுகிற கண்ணன்தான் -குளத்தில் குளித்துகொண்டிருந்த 'கோபியர்களின் " புடவைகளை கரையிலிரிருந்து அபகரித்தான் .கோபியர்கள் வெட்கத்தால் உடலை நீரில் புதைத்துக்கொண்டு தலையைமட்டும் வெளியே வைத்து கெஞ்சி சேலை தானம் கேட்க்க ,அவர்களிடம் தண்ணீருக்கு மேலே வாருங்கள் ,வந்தால் தான் சேலையை தருவேன் என்று கூறினான் .அந்த காரியத்தை கவுரவர்கள் செய்தால் மான பங்கம் அதையே கிருஷ்ணன் செய்தால் குறும்பு என்றும் ""லீலை ""என்றும் வர்ணித்து மகிழ்ந்து .அதனையே படமாக்கி பூஜை அறைகளில் வைத்து வணங்குவதா ? இது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் அவர்கள் எழுதிவைத்த கதைகளில் இருந்தே நிருவபடுவதால் ""கிருஷ்ணன் ஒரு கபட வேடதாரி "" என்பது நிரூபணமாகிறது..( தமிழர் தலைவர் கி .வீரமணியின்"" கீதையின் மறுபக்கம் "" நூலிலிருந்து )

தமிழ் ஓவியா said...


நரியைப் பரியாக்கிய லீலை!


அரசியல் பிரச்சினை என்றால் அடேயப்பா - வானத்தை வில்லாக வளைத்து, எழுதும் வக்கணையைப் பாருங்கள். அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தும் திறமையைப் பாருங்கள்.

அதேநேரத்தில், ஆன்மீகச் சமாச் சாரம் என்றால், ஆமைபோல அய்ந் தவித்து, அடங்கி விடும் மர்மம் ஏன்?

தன் காலை முதலை கவ்விய போது, ஆதிமூலமே என்று யானை அலறி அழைத்தபோது, மகாவிஷ்ணு தன் கருட வாகனத்தில் விரைந்தோடி வந்து சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜராஜனாகிய யானைக்கு விடுதலை அளித்தான் என்று புராணம் சொன்னால், அந்த இடத்தில் மட்டும் அவாளின் அறிவு வேலை செய்யாது.

அதனை அண்டப் புளுகு என்று அலச மாட்டார்கள். மாறாக .........என்பது அய்தீகம்.... என்பது நம்பிக்கை என்று நைசாக நழுவிவிடுவார்கள்.

தன் சீடனான பட்டரைக் காப் பாற்றுவதற்காக திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மை தன் காதில் இருந்த குண்டலத்தைக் கழற்றி எறிந்தவுடன், அப்படியே அமாவாசை பவுர்ணமியாக பரிணமித்துவிட்டது என்று அபிராமி அந்தாதி சொன் னால், அந்த இடத்தில் அறிவு ஆராய்ச்சிக்கு இடம் தரமாட்டார்கள். மாறாக, ........என்பது அய்தீகம் ..........என்பது நம்பிக்கை என்று நழுவி விடுவார்கள்.

மதுரை இருக்கிறதே, அங்கு நடப்பது மீனாட்சி தர்பார் என்பார்கள். ஆண்டு ஒன்றுக்கு 365 நாள்களில் 294 நாள்கள் அந்தக் கோவிலில் ஏதாவது திருவிழா என்று, கூத்தடிப் பார்கள். அப்பொழுதுதானே அவாள் வயிற்றில் அறுத்துக் கட்ட முடியும்.

ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலில் நரியைப் பரியாக்கிய லீலை என்று ஒரு நாள் கூத்து அங்கே - முழு பக்கம் ஒதுக்கி எழுதுகிறார்கள்!

அது என்ன நரியைப் பரியாக்கிய கதை?

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன். மாணிக்க வாசகன் அங்கே அமைச்சர்; படைக்காகக் குதிரைகள் வாங்க பொருளைக் கொடுத்து மந்திரியாகிய மாணிக்க வாசகரை அனுப்பி வைத்தார் மன்னர்.

குதிரை வாங்கச் சென்ற அமைச் சர் குதிரைகளுடன் திரும்பி வருவார் என்று மன்னர் எதிர்பார்த்தார். நாட் கள் ஓடின; ஓடிக்கொண்டே இருந் தன. குதிரைகளையும் காணோம் - மந்திரி மாணிக்கவாசகனையும் காணோம்.

அப்பொழுதுதான் தெரிந்தது. மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொருளைக் கொண்டு திருப்பெருந் துறைக் கோவிலுக்குத் திருப்பணி செய்துவிட்டான் அமைச்சர் மாணிக்க வாசகன்.

பாண்டிய மன்னனின் மகாகோபத் துக்கு ஆளானான் மாணிக்கவாச கன். என்ன செய்வதென்று அறியா மல், கைப்பிசைந்து நின்றான்; கடவு ளிடம் கசிந்துருகிப் பாடினான்.
என்ன ஆச்சரியம் - சினிமாவில் விட்டலாச்சாரியாவின் மாய தந்திரக் கதைபோல, சிவகணங்களைக் குதி ரைப் பாகர்களாகவும், நரிகளைப் பரிகளாகவும் (குதிரைகளாகவும்) ஆக்கி மதுரைக்கு அனுப்பி வைத் தான் சிவபெருமான்.

மன்னனும் மகிழ்ந்தான்; ஆனால், அன்று இரவு என்ன நடந்தது? மறு படியும் அந்தப் பரிகள் எல்லாம் நரிகளாகி ஓடிவிட்டன.

இம்முறை கட்டுக்கடங்கா கோபம் பாண்டியனுக்கு - மாணிக்கவாச கனை சுடு மணலில் கட்டிப் போட்டா னாம். ஆனால், இறைவன் திருவரு ளால் வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதாம். சுடுமணல் என்ன செய்யும்?

இதனைக் கண்டு அரசன் ஆண் டவன் அருள்பெற்றவன் தம் அமைச்சர் என்ற பெருமைப்பட்டு அவனை விடு வித்ததாக தலபுராணம் கூறுகிறது.

நரியைப் பரியாக்க முடியுமா? எந்தப் பத்திரிகைக்காரர் எழுது கிறார்? கடவுள் சக்தியால் முடியும் என்றால், அந்த நரிகளை நிரந்தரமாக ஏன் பரிகளாக்கவில்லை? என்ற கேள்வி எழுமே!

அதைக்கூட விட்டுத் தள்ளுங்கள்!

ஒரு அமைச்சராக இருக்கக் கூடியவன் அவன் எவ்வளவுதான் சிவபக்தி உடையவனாக இருந்தாலும், மன்னவன் கட்டளையை மறந்து, மன்னன் கொடுத்த பொருளைக் கொண்டு கோவில் திருப்பணி செய்தது முறையானதுதானா?

அமைச்சர் செய்தது மோசடியல் லவா? தண்டிக்கப்பட வேண்டியவ னல்லவா? அந்தக் குற்றவாளிக்குக் கடவுள் துணை போனது நேர்மை யானதுதானா?

இப்படியெல்லாம் சோ ராம சாமியை எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம் - கல்கி ராஜேந்திரனைக் கேள்வி கேட்கச் சொல்லுங்கள் பார்ப்போம் - ஆனந்தவிகடன் அறிவு வினாவை இந்த வகையில் தொடுக் குமா?

பக்தி என்ற போர்வையில் ஒழுக் கக்கேட்டை வளர்க்கலாமா? கடமை பிறழலாமா?

ஆம், ஒழுக்கக்கேடாக நடக்கலாம்; கடமை தவறலாம் என்கின்றனரே - இவர்களை என்ன சொல்ல - இவர் கள் நம்பும் ஆன்மிகத்தின் யோக்கி யதைதான் என்ன?

சிந்திப்பீர்!

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்



அவர்கள் பாணியில்

செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோவி லுக்கு ரூ.25 கோடி செலவில் தங்கத் தேர்.

சிந்தனை: தினமலர் துக்ளக் பாணியில் சொல்ல வேண்டுமானால் இனிமேல் வீட்டுக்கு வீடு பிரியாணிப் பொட் டலம் வரும் பாருங்கள். காவிரியாற்றில் நீர் கரை புரண்டு ஓடி வரும் பார்க்கப் போகிறீர்கள்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் - விமர்சனங்களும்


உயருகிறது

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக நிதிச் சுமையைச் சரிக் கட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு மாதா மாதம் ரூ.10 ஏற்றுவதுபற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறதாம்.

(உலகிலேயே தேர்தல், மக்கள் வாக்குபற்றிக் கவலைப்படாது கடமையாற்றும் மிகப் பெரிய கட்சி காங்கிரஸ்தான்; அப்படித்தானே?)

மனித உரிமை

மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை வருவதற்கு -அங்குள்ள புத்த துறவிகள் போராட்டம். (பிறகு என்ன? மனித உரிமை என்றால் சிங் களவர்களுக்குப் பிடிக்குமா என்ன?)

நீட்டிப்பு

இந்திய நாடாளுமன்றம் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு.

(வேறு வழி என்ன? நாடாளுமன்றத்தை நடக்க விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும்போது வேறு வழிதான் என்ன? நீட்டித்துதான் ஆக வேண்டும். அப்பொழுதாவது அவையை நடத்த விடுவார்களா? என்பதும் நியாயமான கேள்வியே!)

அத்துமீறல்

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல்! ஒவ்வொரு நாளும் இதுபோன்ற செய்தி வெளிவந்து கொண்டு தானிருக்கிறது.

(சிறு துளி பெரு வெள்ளமாகி இந்தியா - பாகிஸ்தான் சண்டை என்று செய்தி வராமல் இருந்தால் சரி!)

மனிதநேயம்

வேலூரில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் நுரையீரல் - 90 நிமிடத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு 2 பேர்களுக்குப் பொருத்தப்பட்டது.

(மனிநேயம் என்று இதற்குத்தான் பெயர். மண்ணுக்குள் புதைக்கப்படுவதைவிட, தீக்கு இரையாக்கப்படுவதைவிட செத்தும் உயிர் வாழக் கூடிய, இந்த மாந்தநேயம் பாராட்டப்பட வேண் டியது. பின்பற்றப்பட வேண்டியது ஆகும். திராவிடர் கழகம் உடற்கொடை இயக்கத்தையே நடத்துகிறதே!)

பட்டாசு

விருதுநகர் அருகே, முதலிப்பட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால், 4 பெண் தொழிலாளிகள் படுகாயம்.

(இதுபோன்ற சேதிகள் அவ்வப்பொழுது வருவதும், அந்த நேரத்தில் மட்டும் அரசு அதி காரிகள் சூடாக செயல்படுவதும், வாடிக்கையா கவே போய்விட்டது. ஏதாவது உருப்படியாக தொலைநோக்கோடு செய்யுங்கள் அய்யா! மக்களுக்குத் தேவையில்லாத, காசு பணத்தைக் கரியாக்கும், இதுபோன்ற தொழில்களுக்கு மாற் றாக, மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகளைத் தொடங்குவது பற்றி, அரசுகள் சிந்திக்கக் கூடாதா? சிங்கப்பூரில் பட்டாசு வெடிக்கக் கூடாது தெரியுமா?)

எந்தப் பொந்தில்?

முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு.

(எந்தப் பொந்தில் எந்தப் பாம்போ! பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது. எதற்கும் சட்டத்திற்கு உட்பட்ட பாதுகாப் புக் கருவியை வைத்துக் கொள்வது நல்லது).

தமிழ் ஓவியா said...


முயற்சிக்க வேண்டும்

தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும். - (விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


சிறுபான்மையினர் ஏமாளிகள் அல்லர்


டில்லியில் பிஜேபியின் தேசிய பிரச்சாரக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிஜேபியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் பேசிய குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி, ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் சிறு பான்மையினரின் ஆதரவு தேவை என்று கூறியுள்ளார்.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்கள் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் கண்டிப்பாக பிஜேபி என்ற இந்துத்துவா கட்சிக்கு எதிர்ப்பாகத்தான் தேர்தலில் நடந்து கொள்வார்கள் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதுதான்.

பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள், அது ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் சிறுபான்மையி னருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை களை சிறுபான்மையினர் எளிதில் மறந்திட முடியாது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள், ஒடிசா மாநிலத் தில் கிறித்தவர்களுக்கு எதிராக பிஜேபியினரும், சங்பரிவார்க் கும்பலும் நடத்திய வன்முறை வெறியாட்டங்களும் சிறுபான்மையினரை உறுதியான ஒரு முடிவுக்கு வரச் செய்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தங்களின் வாழ்வாதாரத்துக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, தங்களின் வாக்குகள் சிதறப் படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் தங்கள் மதத்தை இந்து மயமாக்கிக் கொள்ள வேண்டும்; சிறுபான்மையினர் தங்கள் கடவுள்களை மறந்துவிட்டு கிருஷ்ணனை யும், இராமனையும் வணங்க வேண்டும் என்று கூறு கிறவர்கள், எப்படி சிறுபான்மையினரின் வாக்கு களை எதிர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

அதுவும் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் என்று கூறும் நரேந்திர மோடியின் சிந்தனையும், செயல்பாடுகளும், ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்தி அவர் மேற்கொண்ட நரவேட்டையும், எளிதில் மறக்கப்படக் கூடியவையும் அல்ல. சிறுபான்மை மக்கள் மத்தியில் மட்டுமல்ல - உலகளாவிய அளவில் பெரும் அதிர்வுகளை அது ஏற்படுத்தி விட்டது.

குஜராத் கலவரத்தின் போது, அது பொடா சட்டத்தின் கீழ் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முசுலிம்கள், ஒருவர் சீக்கியர் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மோடி ஆட்சியில் என்கிறபோது அவர் நோக்கு - போக்கு எத்தகையது என்பதற்கு எந்தவித ஆராய்ச்சியும் தேவைப்படாது.

குஜராத் கலவரத்தின்போது அகதிகள் முகாம் களில் சரணடைந்த முசுலிம்களை எவ்வளவுக் கேவலமாகக் கொச்சைப்படுத்தினார் முதல் அமைச்சர் மோடி!

முசுலிம்கள், முகாம்களை தங்கள் இனப் பெருக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று பேசிடவில்லையா?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப்பற்றி அவர்களுக்குப் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் மோடியின் கருத்து வெளிப்படுத்துகிறது.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலுக்குமுன் புதுடில்லியில் பிஜேபி சார்பில் பெண்கள் மாநாடு ஒன்று கூட்டப்பட்டதை (13.7.2008) நினைவில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களில் எத்தனை சதவீதம் பேர் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடு வோம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம் என்று எல்.கே. அத்வானி பேசினார்.

அப்பொழுது தேர்தலுக்கு முன்பு மேற்கொண்ட அதே உத்தியைத்தான் இந்தத் தேர்தலுக்கு முன்பும் பயன்படுத்திட எத்தனித்துள்ளனர்.

சிறுபான்மையினர் ஒன்றும் ஏமாளிகள் அல்லர். வரும் தேர்தலில் அவர்கள் பிளவுபடாமல் வாக்கு களைச் சிதறடித்துக் கொள்ளாமல் ஒன்றுபட்டு எழுந்து பிஜேபியையும் அதன் கூட்டாளிகளையும் வீழ்த்துவார்கள் என்பதில் அய்யமில்லை.

தமிழ் ஓவியா said...


தமிழ்ச்செல்வன், கோமதி ஆகியோரின் ஜாதிமறுப்பு - காதல் திருமணம்


தமிழர் தலைவர் நடத்தி வைத்துப் பாராட்டு

நெய்வேலி, ஆக. 27- தன.தமிழ்ச்செல்வன், குண.கோமதி போன்றோர் கழகத்தின் அசையும் சொத்துகள். அசையா சொத்து என்பது மானத் தையும், அறிவையும் சொல்லிக்கொடுத்த இலட்சிய சொத்து எனத் தமிழர் தலைவர் உரையாற்றினார். நெய்வேலியில் (ஆக. 23-ஆம் தேதி) நடைபெற்ற விருத்தாசலம் கழக மாவட்ட மாணவரணித் தலைவர் தன.தமிழ்ச்செல்வன் வாழ்க்கை இணை யேற்பு விழாவில் தமிழர் தலைவர் பேசியதாவது: மணமக்கள் தன.தமிழ்ச்செல்வன், குண.கோமதி ஆகியோர் இயக்கத்தின் வெற்றிகளை சுட்டி காட்டுகிற கொள்கை மலர்கள். அவர்கள் பூத்து, காய்த்துக் கனிவார்கள். அறிவாசன் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நேரத்திலே அய்யா அவர்கள் விட்டுச்சென்ற சொத்து என்ன என்று கேட்டார்கள். அய்யா அவர்கள் விட்டுச் சென்ற சொத்து அசையும் சொத்து, அசையா சொத்து என்று தெரிவித்தேன். அதிலே, தமிழ்ச்செல்வன் போன்ற எண்ணற்ற இளைஞர்கள் கொள்கையிலே உறுதியாக இருந்து, அந்த கொள்கையை வாழ்க்கை முறையாகவும், பிறருக்கும் எடுத்துச் செல்பவர் களாகவும் உள்ளனர். இதுபோன்ற ஒப்பற்ற இளைஞர்கள் பெரியாரின் அசையும் சொத்துகள். அசையா சொத்து என்பது மானத்தையும், அறிவையும் சொல்லிக்கொடுத்த லட்சிய சொத்து. இதை யாராலும் பறிக்க முடியாது. தமிழ்ச்செல்வன் திருமணத்தை பொறுத்த வரையிலே இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம். அதிலும், காதல் திருமணம் எனும் போது நாம் பெருமைப்படுகிறோம். சிக்கல் இல்லாமல், பெற்றோர் மற்றும் உறவினர் உள்ளிட்டோரின் ஒத்துழைப்போடு இந்தத் திருமணம் மகிழ்ச்சியுடன் நடைபெறுகிறது. காதல் திருமணங்களிலே சிக்கல் இல்லை. சிலர் சிக்கல் இருப்பதாகப் பேசி, அதை தங்கள் வளர்ச்சிக்காக ஏணிப்படிகாளக பயன் படுத்துகின்றனர். இந்த திருமணத்துக்கு வருகின்ற வழியிலே தாமதம் ஏற்பட்டது. அதுவும் கூட ஒரு வகையிலே கொள்கை பிரச்சாரம் தான். மனிதன் என்பதற்கு அடையாளமே சிரிப்புதான். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். ஆனால், இங்கே என்ன நிலை பொம்பள சிரித்தால் போச்சு, பொகையில விரிச்சா போச்சு என எழுதி வைத்தார்கள். மிருகங்களுக்குதான் சிரிக்கத் தெரியாது. ஆனால், பெண்கள் சிரிக்கக் கூடாது என மிருகங்களைவிட கேவலமாகப் பெண்களை நடத்தினார்கள். தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் தான் பெண்களை மனிதர்களாக்கியது. இன்று பெண்கள் வழக்குரைஞர்களாக, நீதிபதி களாக, மருத்துவர்களாக மாறியிருக்கிறார்கள். அந்த வகையில் மணமகள் கோமதி, தமிழ்ச்செல்வன் படித்திருக்கிறார்கள். ஆண், பெண் சமவாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். தமிழ்ச்செல்வன் நூறுக்கு, நூறுக்குமேல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். காரணம் ஜாதி மறுப்புத் திருமணம், காதல் திருமணம். மேடையிலே கருப்பு சட்டையோடு அமர்ந்திருக்கிறார். இதற்காக அவர்களது பெற்றோர்களை பாராட்டுகிறோம். தமிழ்ச்செல்வன் மணவிழா எல்லா வகையிலும் சிறப்பான விழா. இது மட்டுமல்ல, இந்தத் திருமணத்திலே தாலி இல்லை. திருமண அவசரத்திலே தாலிகட்ட மறந்தது போல என எழுதிவைத்தார்கள். ஆனால், எங்கள் தோ ழர்கள் தாலி கட்டுவதில்லை. தமிழர் திருமணத்திலே தாலி இல்லை. தாலி என்பது ஜாதியைப் பாதுகாக்க இடையிலே பார்ப்பனர்களால் புகுத்தப்பட்டது. இத்தகைய நிலையிலே தாலி இல்லாமல் திருமணம் நடந்தது பாரட்டத்தக்கது. இல்லறம் சிறக்க தொண் டறம் மிக முக்கியமானது. யார்யாரெல்லாம் நமக்கு உதவி செய்தார்களோ அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். பெற்றோர்களை மதிக்க வேண்டும். அவர் களிடத்திலே அன்பு, பாசம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். அதுவே நமது தலையாயக்கடமை. மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, புரிந்துணர்வுடன் வாழ வேண்டும். மூடநம்பிக்கை யற்ற வாழ்வு வாழ வேண்டும். சிக்கனமாக, எளிமை யாக, சிறப்பாக வாழ வேண்டும் எனப் பேசினார்.

தமிழ் ஓவியா said...


வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடும் கருணைத் திட்டம்!


உணவுப் பாதுகாப்புச் சட்டம்:

வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடும் கருணைத் திட்டம்!

தமிழர் தலைவர் வரவேற்பு

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி என்ற காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து, இரண்டாவது முறை யும் முழுமையாக அய்ந்தாண்டுகளைப் பூர்த்தி செய்யப் போகிறது. மத்தியில் அமைந்துள்ள ஆட்சியின் மகுடத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு ஒளி முத்தாகத்தான் இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற ஒரு சட்டம் - ஏழை, எளியவர்களின் பசி தீர்க்கும் மனிதநேயச் சட்டமாக மக்களவையில் திருத்தங்கள் பலவற்றை எதிர்க்கட்சிகள் தந்த நிலையில், அவைகளில் முக்கியமானவைகளையும், அவசியமானவைகளையும் ஏற்று நிறைவேற்றியுள்ளனர்!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தியும், அவரது பொறுப்பாளர்களும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

கருணைச் சட்டம்!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடு கள் எல்லாமே நமக்குத் திருப்தி அளிக்கக் கூடியவை களோ, மன நிறைவைத் தருபவைகளாகவோ இல்லை என்ற போதிலும், விருப்பு - வெறுப்புகளை ஒதுக்கிவிட்டுப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தில் இச்சட்டம் மிகவும் பாராட்டி வரவேற்கவேண்டிய வாழும் மனிதர்க்கெல் லாம்வயிற்றுக்குச் சோறிடும்!

கருணைச் சட்டம்!

66 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பின்பும் வறுமை, ஏழ்மை போகவில்லை என்பதை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டு, அதற்குப் பரிகாரமாக முடிந்த அளவுக்கு, 82 கோடி மக்கள் பயனடையும் திட்டம் இது!

அந்த ஏழை, எளியவர்களுக்கு கிலோ அரிசி மூன்று ரூபாய்க்கும், கோதுமை கிலோ ஒன்று இரண்டு ரூபாய்க்கும், தானியம் ஒரு ரூபாய்க்கும் இனி கிடைக்கும் வாய்ப்புகள் இச்சட்டம் மூலம், இந்தியா முழுவதும்; இதனை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களை அனுபவ ரீதியாகப் பார்த்து மேலும் சில திருத்தங்களைச் செய்வது இன்றியமையாததே!

மாநில உரிமைகள் பறிபோய்விடக் கூடாது!

தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் ஏற்கெனவே இலவச அரிசி வழங்கும் (PDS) பொது விநியோகத் திட்டத்தினைச் செயல்படுத்திவரும் நிலையில், அது பாதிக்கப்படாத பாதுகாப்பு இருப்பதும் அவசியமாகும்.

மாநில உரிமைகள் பறிபோகாமல் இதனைச் செயல் படுத்துதல் முக்கியமாகும்!

தி.மு.க. பொறுப்பான - ஆக்கபூர்வமான எதிர்க் கட்சியாக உள்ளது என்பதை உரிய திருத்தங்களைத் தந்ததன்மூலம் நிரூபித்துள்ளது. அவைகளில் பல ஏற்கப்பட்டு சட்டமாகி வரும் நிலையில், அதனை வரவேற்பதுதான் சரியான அணுகுமுறை; தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் இதனை மிகவும் பாராட்டி, மக்கள் பசி போக்கும் மாபெரும் திட்டம் என்று வரவேற்றுள்ளார்கள்.

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் - அவர்கள் கூறிய அத்தனைக் கருத்துக்களும் அப்படியே ஏற்கப்படாவிட் டாலும்கூட, இதன் மனிதாபிமானக் குறிக்கோளை எண்ணி வரவேற்று ஆதரித்துள்ளனர்!

தேர்தல் கண்ணோட்டமா?

இது தேர்தல் கண்ணோட்டத்தில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்று சில அரசியல் கட்சிகளும், இந்த அரசின் செயல்பாடுகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதையே தமது புனித தார்மீகக் கடமையாகக் கொண்ட ஊடகங்களும் கூறுகின்றன; எழுதுகின்றன!

ஆளும் கட்சி - ஆட்சி 5 ஆண்டுகாலத்திற்குள், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தவறல்லவே!

அதுமட்டுமா? எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் - வாக்கு வங்கிக்கண்ணோட்டத்தைப் புறந்தள்ளி, தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின் றனவா? இல்லையே!

எனவே, இதில் ஓட்டுக் கண் ணோட்டம் இருந்தாலும், தவறு இல்லை; நாட்டு மக்கள் கண்ணோட்டம் இருக்கிறதே! மறுக்க முடியுமா?

அடிப்படைத் தேவை பூர்த்தி - சிறையில்தானா?

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் - இம்மூன்றும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவை; இந்த சுதந்திர நாட்டில் இன்றும்கூட, வெளியில் இருக்கும் குடிமக்களுக்கு இவைகளுக்கு உத்தரவாதம் உண்டா? இல்லையே!

சிறைக்குப் போனால்தான் அங்கே இம்மூன்றுக்கும் உத்தரவாதம் உண்டு!

இதுதான் யதார்த்தமான நிலை. இதில் முக்கியமாக பசிக்குத்தான் முன்னுரிமை தரப்படல் வேண்டும்; பசி போக்கிடும் திட்டம் இது.

காலந்தாழ்ந்தாலும்...

பல்லாயிரக்கணக்கில் கோடி ரூபாய்கள் இதற்குச் செலவழிக்கப்பட்டாலும்கூட, காலந்தாழ்ந்தாவது (Better late than never) எத்தகைய மனச் சங்கடங்கள் - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை - தமிழக மீனவர்களை இலங்கை கொடுமைப்படுத்தும் நிலை - பெண்களுக் கெதிரான பாலியல் வன்முறை இருட்டுக்கிடையில் இது ஒரு ஆறுதல் வெளிச்சம்.

எனவே, வரவேற்கிறோம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
28.8.2013

தமிழ் ஓவியா said...


நவநீதம்பிள்ளைக்கு எதிர்ப்பு ஏன்?


அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் இயக்குநர் அதிகாரபூர்வமாக, இலங்கைத் தீவு சென்று ஒரு வார கால சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரது வருகையையும், சுற்றுப்பயணத்தையும் ஒழுங்குபடுத்தவேண்டிய பொறுப்பு - கடமை - பாது காப்பு - இலங்கை அரசுக்குக் கண்டிப்பாக இருக்கிறது.

ஆனால், இப்பொழுது அங்கு என்ன நடந்து கொண் டுள்ளது? புத்த பிக்குகள், அவரின் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டுள் ளனர்.

கொழும்புவில் உள்ள அய்.நா. அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். நவநீதம் பிள்ளையின் சுற்றுப் பயணம், இலங்கை நலனுக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்து. இது ஏதோ அங்குள்ள புத்த பிக்குகளின் நிலைப்பாடு என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டுவிடக்கூடாது. இலங்கை அரசின் - இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கருத்தும் அதுதான் என்பதை முதலில் புரிந்துகொண்டால் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் பதுங்கியுள்ள விஷமம் எத்தகையது என்பது எளிதில் விளங்கிவிடுமே!

அய்.நா. பிரதிநிதிகளையே இலங்கைக்குள் செல்லத் தடை செய்தவர்கள்தானே அவர்கள். பன்னாட்டுப் பத்திரி கையாளர்களை செய்தி சேகரிக்கச் செய்யவிடாமல் தடுத்தவர்களும் அவர்கள்தானே? உள்நாட்டிலும் எத்தனை எத்தனைப் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்?

அதைவிடக் கொடுமை என்னவென்றால், ஜெனீவா வில் 2012 மார்ச் மாதத்தில் நடைபெற்ற அய்.நா. கூட்டத் தில் பங்கேற்க வந்த மக்கள் உரிமைக் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிஃபேன் தெரிவித்தது என்ன?

இலங்கை விவகாரத்தைப் பேசுவதற்காக ஒரு தனி அமர்வு இருந்தது. இலங்கையிலிருந்து வந்த மனித உரிமையாளர்கள் சுனிலா, நிமல்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார்கள்; அமர்வுக்கு நேரில் வர முடியாத சரவணமுத்து என்பவர் ஸ்கைப்மூலம் பேசினார். அதே சமயம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி அய்ரோப் பாவைச் சேர்ந்த தமிழ்ச் சமுதாயத்தினர் சுமார் 500 பேர் மாநாட்டு அரங்குக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசும் அங்கே தனியே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக இலங்கையிலிருந்து 126 பேர்களை அவர்களே அழைத்து வந்தார்கள். அவர் களைத் தவிர, அடியாட்களையும் அனுப்பி வைத்திருந்தது இலங்கை அரசு. அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தமிழ் ஆர்வலர்கள், அந்த அடியாட்களால் அடித்து விரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்தன. இலங்கைக்கான ஜெனீவா தூதர் தலையிட்ட பிறகே தாக்குதல் நிறுத்தப் பட்டது. அமர்வு தொடங்கியதுமே அய்.நா.வுக்கான மனித உரிமைக் கவுன்சிலின் தலைவர் நவநீதம் பிள்ளை நேற்று நடந்த சம்பவங்கள் அய்.நா. மன்றத்தையே அவமதிக்கக் கூடியது. அதற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று சொல்லவில்லையா?

அந்த நவநீதம்பிள்ளை இப்பொழுது இலங்கை சென்று நேரடியாகப் பிரச்சினைகளை, இலங்கைத் தீவின் பிரத்தியட்ச நிலைமைகளைக் கண்டாய்ந்து நடக்க இருக்கும் மனித உரிமைக் கூட்டத்தில் அறிக்கை அளிக்கக் கடமைப்பட்டுள்ளார். அவரை வரக்கூடாது என்பதோ, அவர் பணிகளைத் தடுப்பதோ எந்த வகையில் சரி?

இதற்காகவே கூட இலங்கை அரசு க(த)ண்டிக்கப் படவேண்டாமா?

2013 பிப்ரவரி 11 ஆம் தேதி மனித உரிமை மன்றக் கூட்டத்தில் மனித உரிமைக் குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை அளித்த அறிக்கை மிகவும் முக்கியமானது.

இலங்கையில் போர் நடந்த நேரத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களை மீட்கும் பணியை இலங்கை அரசு அறவே செய்யவில்லை. போர் முடிந்த பிறகும் ஆள் கடத்தல் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. தமிழர்கள் வாழும் பகுதிகளில் இன்னும் இராணுவக் கட்டுப்பாடுதான் இருந்து வரு கிறது. இராணுவம் ஏன் வெளியேற்றப்படவில்லை? இராணுவத்தால் தமிழ்ப் பெண்கள் பாலியல் துன்பத் துக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை அரசே நியமித்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளில் ஒரு சில மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்றெல்லாம் மனித

உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அறிக்கையில் காணப்பட்டன.
அடுத்து ஜெனீவாவில் நடக்க இருக்கும் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கை சென்று நேரிடையாக ஆய்வு செய்யும் நவநீதம்பிள்ளை, உண்மை நிலைகளை விரிவாக எடுத்துச் சொல்லி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக புத்த பிக்குகளை இலங்கை அரசே தூண்டி விடுகிறது என்பதுதான் உண்மையான நிலை.

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீக்வான்யூ சொன்னதுபோல, ராஜபக்சே திருத்தப்படவே முடியாத ஜென்மம்.

நடக்க இருக்கும் ஜெனீவா கூட்டத்தில் வழவழா கொழகொழா முடிவுகளை எடுக்காமல், இலங்கை அதிபரை கூண்டிலேற்றும் வைபவத்திற்குக் கால்கோள் விழா நடத்துவது அவசியமாகும்.

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்



ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.
(விடுதலை, 24.9.1950)

தமிழ் ஓவியா said...


வேண்டாம் இரட்டை வேடம்


ஆசிரியருக்குக் கடிதம்

வேண்டாம் இரட்டை வேடம்

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்!

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியும், பெரியார் இறந்த டிசம்பர் மாதத்தில் அல்லோலப்படும் அய்யப்பா பக்தியும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல, எங்கு திரும்பினும் ஆரவாரம், பஜனை சத்தம், பக்திப் பரவசம் என்று மக்களைத் திசை திருப்பும் திருவிழாக்கள் இவை.

அதுபோல் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்ற பெரும் பகுத்தறிவாளர் களின் பெயர்களை ஊர்களுக்கும், நகர் களுக்கும் வைத்துக்கொண்டு, பகுத்தறி வுக்கு ஒவ்வாத செயல்பாடுகளை ஆண்டு தோறும் நிலைப்படுத்தி வருகிறார்கள். ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது, தீ மிதிப்பது, அலகு குத்தி தேர் இழுத்தல், கோழி, ஆடு வெட்டுதல், பொங்கல் வைப்பது, மொட்டை அடித்தல் போன்ற மூடப் பழக்க வழக்கத்திற்கு ஆளாகி பகுத்தறிவுக்கு முர ணாக இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பின் பற்றுகிறார்கள் என்றால் என்னவென்று சொல்வது?

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத் கரும் வரலாறு பேசும் சிறப்புப் புரட்சியாளர் கள். மதப் பண்டிகைகளைக் கொண்டாடும் நோக்கமே, ஜாதியை நினைவுப்படுத்தத்தான் என்றும். சுதந்திர நாட்டில் ஜாதிகள் இருக்க லாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? என்று தந்தை பெரியார் கேட்டாரே!

நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன் ஆனால் சாகும்போது இந்துவாக சாக மாட் டேன் என்று சபதம் எடுத்து பவுத்தம் தழுவி வரலாற்றில் தமது எதிர்ப்பைப் பதிவு செய் தாரே, புரட்சியாளர் அம்பேத்கர், இதை யெல்லாம் உணர்ந்து மக்கள் செயல்பட்டால் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் செய்யும் நன்றி ஆகும். அதை விட்டு மாறாக மதப் பண்டிகைகளையும், மதம் சார்ந்த ஜாதி களையும் கடைப்பிடித்தால் அவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமே தவிர, வேறென்ன?

அம்பேத்கருக்கும், பெரியாருக்கும், அண் ணாவுக்கும், கலைஞருக்கும் பிறந்த நாள், அந்தந்த இயக்கத்தின்பால் கொண்டாடப் படும் விழாவை எண்ணிப்பாருங்கள். மதப் பண்டிகைகளை கொண்டாடுபவர்களும், ஜாதியை நிலைப்படுத்துகிறவர்களும்தான் மேற்சொன்ன தலைவர்களுக்கு விழா எடுக்கிறார்கள், சிந்தித்துப்பாருங்கள் எதற்கு இந்த இரட்டை வேடம்?

தந்தை பெரியாரால் வாழ்கிறோம், புரட்சியாளர், அம்பேத்கரால் வாழ்கிறோம். அவர்கள் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் சென்று அவர்களுக்கு நாடெங்கும் சிலை கள் வைத்து நகர்களுக்கு பெயர் வைத்து பெருமை பேசுவோம்! புகழ்பாடுவோம்! அதை விட்டு, போட்டி போட்டுக்கொண்டு செய்யும் மதப்பண்டிகைகளால் கண்ட பலன் என்ன? எண்ணிப்பாருங்கள். உங்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் விழாவை சிறப் பாகச் செய்யுங்கள் உன்னை இழிவுப்படுத் தியும், கேவலமாகவும், மனித குலத்தில் வைத்திருக்கும் கடவுளுக்கு விழா எடுத்ததில் உனக்கு பெருமை சேரும் என்றால், தயவு செய்து தலைவர்களின் பெயர்களை எடுத்து விட்டு உங்கள் விருப்பமான தெய்வங்களின் பெயர்களை வைத்துக் கொண்டு கொண் டாடுங்கள் என் போன்ற பகுத்தறிவாளர் களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை தோழர்களே!

உணருங்கள்! செயல்படுங்கள்!!

குறிப்பு:

1) தலையில் தேங்காய் உடைப்பது.
2) குழந்தையை தோளில் உட்கார வைத்து தீ மிதித்தல்
3) மண்ணைத் தோண்டி உயிரோடு புதைப்பது
4) சாட்டையால் அடிப்பது
5) குழந்தைகளை நரபலி கொடுப்பது

போன்ற உயிருக்கு ஆபத்தான முட்டாள் தனமான செயல்களை செய்வதால் இது வரை உங்களுக்கு என்ன பயன் கிடைத்தது என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

இப்படியெல்லாம் செய்யச் சொல்லி தூண்டி விடுபவனை, செய்யச் சொல்லுங் களேன் பார்க்கலாம்?

உங்களுக்கு பகுத்தறிவு இருக்கிறது அதைச் சரியாக உபயோகித்து இது போன்ற முட்டாள்தனத்தையும், மூட நம்பிக்கையையும் கைவிடுங்கள் தோழர்களே!

நன்றி!

நாத்திகர்களைவிட மதவாதிகளின் அறிவு குறைவானதே!

ராச் செஸ்டர் பல்கலைக்கழகம் - ஆய்வு - முடிவு
(தலைப்பு செய்தி - விடுதலை, 14.8.2013)

- ச.இரணியன்
(பகுத்தறிவாளர் கழகம், திருமுல்லைவாயில்)

தமிழ் ஓவியா said...


கே.கம்மாப்பட்டி ஒரு எச்சரிக்கை


இராசபாளையம் அருகே, கே.கம்மாப்பட்டி கிராமத்தில் 200 குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊரில், அரசு தொடக்கப்பள்ளி ஒன்றுள்ளது. 50 மாணவர்களும் 25 மாணவிகளும் படிக்கின்றனர். மதிய உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ளது. சமைக்கும் பெண் மரகதவள்ளி என்பவர் தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெரும் பாலும் வேறு ஜாதியைச் சேர்ந்த மாணவ - மாணவிகள் மதிய உணவைச் சாப்பிட மறுக் கிறார்கள் என்ற செய்தி வெளி வந்துள்ளது.

இது குறித்துத் தகவல் அறிந்த மேல் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று, ஊர் பெரியவர் களைச் சந்தித்துச் சமாதானம் சொல்லியுள்ளனர். கட்டுப்படாத நிலையில், சத்துணவுத் திட்ட இணை இயக்குநர் வசந்தி என்பவரே, நேரடியாக அந்தக் கிராமத்திற்குச் சென்றுள்ளார். ஒரு வழியாகக் கிராமத்துப் பெரியவர்களை இசைய வைத்துள்ளார். அப்படியும்கூட மாணவர்கள் மட்டும்தான் மதிய உணவைச் சாப்பிடுகிறார்களாம். மாணவிகள் சாப்பிட மறுக்கிறார்களாம்.

2013ஆம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் இப்படி ஒரு கொடுமையா என்ற கேள்விதான் எழுகிறது. வேதனையாகவும் உள்ளது.

உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு கற்பிக்கும் கொடுமை இந்தப் பாழாய்ப் போன இந்து மதத்தில் தான் இருக்கிறது; ஜாதிகளுக்குள் தாழ்த்தப்பட்ட வர்கள் என்றால் அவர்கள் தீண்டத்தகாதவர்களாம்.

தீட்டு என்றால் என்ன? அதன் தன்மை என்ன? தொட்டால் என்னதான் ஆகும் என்று எவரேனும் - சிந்தித்ததுண்டா?

ஜாதிக்கே அடையாளம் இல்லாதபோது தீட்டுக்கு என்ன அடையாளம் இருக்க முடியும்? தாழ்த்தப்பட்ட பெண் சமைத்தால் மிளகாய் உரைக்காதா? சர்க்கரை இனிக்காதா? பாகற்காய் கசக்காதா?

உணவு விடுதிகளில் சாப்பிடச் செல்லுபவர்கள் சமைப்பவர்கள் எந்த ஜாதி என்று தெரிந்து கொண்டா சாப்பிடுகிறார்கள்?

தொடக்கப் பள்ளியில் பயிலும் சிறுவர் சிறுமிகளிடம் இப்படிப்பட்ட வேற்றுமை நச்சு விதை திணிக்கப்பட்டால், எதிர்காலம் எந்த நிலையில் இருக்கும்?

பிள்ளைகளுக்கு என்ன தெரியும்? பெற்றோர்கள், பெரியோர்கள் செய்யும் தவறுகளுக்குச் சிறுவர் களைக் குற்றம் சொல்லிப் பயன் இல்லை.

இன்னும் சில கிராமங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் தேநீர்க் கடைகளில் இரட்டைக் கிளாஸ் முறை இருக்கிறது. தீண்டாமை ஒழிப்புக்கு என்ற தனிக்காவல் பிரிவு இருந்தும் என்ன பயன்?

தீண்டாமை எந்த வடிவத்தில் கடைப்பிடித்தாலும் அது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவு.

இது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகத் தானிருக்கிறது. இந்தச் சட்டத்திற்கு நகமும், பல்லும் இருக்குமானால், தீண்டாமைப் பாம்பு படம் எடுத்து ஆடுமா? அதற்கான தைரியம்தான் ஏற்படுமா?

இந்தத் தீண்டாமை எங்காவது நிலவுமானால், அந்தப் பகுதியில் இந்தத் துறையில் பணியாற்றும் காவல் துறையினர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் தங்களின் கடமையைச் செய்வார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் சத்துணவு சமையல் செய்த பெண் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத் துக்காக வேறு ஊருக்கு மாற்றப்பட்ட பொழுது, அதனைக் கண்டித்து எழுதியது விடுதலை - தீர்மானம் போட்டது திராவிடர் கழகம். அதன் காரணமாக, அந்த வெளியூர் மாற்ற ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டது.

இராசபாளையம் அருகே இந்த ஒரு பள்ளியில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமை என்பது, ஏதோ ஒரே ஒரு இடத்தில் அத்திப் பூத்தது போல நடைபெற்ற சம்பவம் என்று அலட்சியப்படுத்தாமல், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் உள்ள நிலையை நேரில் கண்டறிந்து தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் சக்திகள்மீது சட்டப்படியான தண்டனையை அளிக்க வேண்டும்.

சத்துணவு சமையற்காரர்களாக, அதிக அளவு தாழ்த்தப்பட்டவர்களை நியமிப்பது என்பதை, ஒரு கொள்கை முடிவாக அரசு எடுத்தால்கூட நல்லது தான்.

தீண்டாமை நடமாடினால், அந்தப் பகுதிக்கே ஒட்டு மொத்தமாக பொது அபராதம் விதிக்க வேண்டும். தண்ட வரி விதிக்க வேண்டும்! இது போன்ற பிரச்சினையில் மயிலே மயிலே என்றால் இறகு போட மாட்டார்கள்; சட்டம் தன் கடமையைக் கூர்மையாகச் செலுத்த வேண்டும். இரண்டு ஊர்களில் இவ்வாறு நடந்தால் போதும்; மற்ற மற்ற பகுதிகளில் உள்ள வர்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு விடுவார்களே!

தந்தை பெரியார் பிறந்த மண் இந்த வகையிலே வழிகாட்டட்டுமே!

தமிழ் ஓவியா said...


தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கலைஞரின் கடும் முயற்சியால் தமிழ் செம்மொழியான நிலையில், அதனைச் சீர்குலைப்பதா?


செம்மொழி செயல் குழுவுக்கு அய்.அய்.டி. அதிகாரியைப் பதிவாளராக நியமிப்பது சரியானதுதானா?

தமிழ் உணர்வாளர்களே என்ன செய்யப் போகிறீர்கள்?
தமிழ்நாட்டு எம்.பி.களே தடுத்து நிறுத்த முன் வாரீர்!

தமிழர் தலைவரின் காலங்கருதி விடுக்கப்படும் அறிக்கை

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

அரும்பாடுபட்டு தி.மு.க. ஆட்சியில் கிடைக்கப் பெறச் செய்த செம்மொழி என்னும் தமிழுக்கான உயர் தகுதியைச் சீர்குலைக்கும் வகையில் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி நடந்து கொண்டு வருவதையும், செம்மொழி செயல் குழுவுக்கு அய்.அய்.டி. அதிகாரியைப் பதிவாளராக நியமித்ததைச் சுட்டிக் காட்டியும் தமிழுணர்வுக்கு எதிராக செயல்படும் போக்குகளைத் தடுத்து நிறுத்த அனைவரும் பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

தமிழுக்குச் செம்மொழித் தகுதி பெற கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அன்றைய முதல்வர் கலைஞர் அவர்கள் பெரு முயற்சி எடுத்தார்கள்; அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகித்த வாய்ப்பையும், முழுமையாகப் பயன்படுத்தி இடையறாத அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுத்து வந்ததன் விளைவே, பல்லாயிரம் ஆண்டுகளில் தமிழ் மொழி பெறாத ஏற்றத்தை செம்மொழித் தகுதி பெற்றதன் மூலம் அடைந்தது! தமிழர்களைத் தலை நிமிரச் செய்த ஒரு வரலாற்றுச் சாதனை அது!

தமிழ்மொழியால், செத்த மொழி சமஸ்கிருதத்துக்குக் கிடைத்த தகுதி!

தமிழுக்கு செம்மொழித் தகுதி வந்ததன் விளைவாகவே, நெல்லுக் கிறைத்த நீர், புல்லுக்கும் கிடைத் தது போன்று சமஸ்கிருதம் (இம் மொழி தமிழ்மொழி போல் பேச்சு மொழி அல்ல என்ற போதிலும்) அதிகார பூர்வமாக, செம்மொழித் தகுதியைப் பெற்றது.

தமிழ்நாட்டில் ஆட்சி மாறிய வுடன், செம்மொழியான தமிழின் பெயரால் இயங்கிய புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பெயரில் அமைந்த - கோட்டையில் இயங்கிய அருமையான செம்மொழி நூலகம் காணாமற் போயிற்று! தனியார் வசமிருந்த அரசு நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தி - அன்று - செம்மொழிப் பூங்காவை மிக அருமையாக ஏற்படுத்தியதற்கும் கூட பல வகை சோதனைகள்!

கர்நாடகத்தில் இருந்த அதன் தலைமையகம் தமிழ்நாட்டிற்கு வந்த பெருமையைக் குலைக்கும் வண்ணம் தொடர் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுள்ளன!

செம்மொழிச் செயல் குழுவுக்கு அய்.அய்.டி. அதிகாரி பதிவாளரா?

அந்த செயல் குழு இயங் கவே இல்லை; தலையே இல்லாத நிலை ஒருபுறம்!

இன்னொரு கொடுமை - வெந்த புண்ணில் வேலைச் செருகுவது போன்று, இதற் குத் தலைமை அதிகாரி யாக, தமிழுக்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு சென்னை அய்.அய்.டி. அதிகாரியையா பதிவாளராக, பொறுப்பாளராகப் போடுவது?

அந்தோ கொடுமை! கொடுமை!! இதை நமது தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக தி.மு.க.வினரும், தோழமையினரும் தடுத்து நிறுத்தி தமிழ் ஆய்ந்தவர்தான் பொறுப்பாளராக வர ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும்.

இது அவசர அவசியம்! தி.மு.க.வின்மீது உள்ள கோபத்தை, கலைஞர் மீதுள்ள ஆத்தி ரத்தை, மத்திய மாநில அரசுகள் அதன் பார்ப்பன ஆதிக்கத்தை செம்மொழி மீது காட்டலாமா?

தமிழுணர்வாளர்களே உங்கள் கடமை என்ன?

ஏற்கெனவே மத்திய அரசு, செம்மொழி (Classical Language) என்பதற்காக பழைமை அளவு கோலான காலக் கணக்கை மாற்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளையும், செம்மொழிப் பட்டியலில் கொண்டு வந்து, செம்மொழி தகுதியை மிகவும் கேலிக் கூத்தாக்கி விட்டனரே!

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் பார்ப்பன ஏடுகள் எப்படியெல்லாம் கேலி செய்து எழுதின! இதனால் வீட்டுக்கு வீடு பிரியாணி வருமா? கிடந்தது கிடக்கட்டும் கிழவனைத் தூக்கி மணையில்வை என்றெல்லாம் எழுதியதை மறக்க முடியுமா?

தமிழ்ப் புலவர்களே, தமிழன் என்று சந்து முனையில் சிந்துபாடி நிந்தாஸ்துதியில் ஈடுபடும் அரசியல்வாதிகளே உங்கள் கடமை என்ன? மவுனம்தானா? தமிழா தமிழனாக இரு!

தமிழா தன்மானத்தோடு உரிமைக்குப் போராடு!!

சிந்தியுங்கள் - செயல்படுங்கள்.

சென்னை
29.8.2013

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


சட்டம் - ஒழுங்கு?


விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் ரமேஷ், அவருக் குச் சொந்தமான இரு சக்கரவண்டியில் (மோட் டர் பைக்) சேகுவாரா படத்தினை (ஸ்டிக்கர்) ஒட்டியுள்ளார். கடந்த 4 ஆண்டு காலமாகவே அந் தப் படம் அவர் வாகனத் தில் இடம் பெற்றிருந்தது.

திடீரென்று அக்கா வல் நிலைய ஆய்வாளர் அந்தப் படத்தினை அகற் றுமாறு ஆணை பிறப்பித் தார். காரணம் கேட்டார், உகந்த முறையில் பதில் இல்லை. ஆய்வாளர் கடு மையாகப் பேசவே வேலையை விட்டு விலகு வது என்று முடிவு செய்து சீருடையை ஒப்படைக்க விழுப்புரம் மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பா ளர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். நண்பர் கள் அந்த முடிவைக் கை விடக் கோரவே, சீரு டையை அளிக்காமல் திரும்பி விட்டார்.

திருநாவலூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரச் சினையைக் கைவிடுவ தாக இல்லை. ரமேஷை பற்றிப் புகார் செய்து கண்காணிப்பாளருக்கு எழுதினார். அதன் விளைவு - திருநாவலூர் காவல் நிலையத்திலிருந்து ஆயுதப் படைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு விட்டார்.

இது என்ன கொடுமை! இரு சக்கர வாகனங் களில் கடவுள் படங்களை ஒட்டி வைத்திருக்கின்ற னர். இதே ரமேஷ் சேகு வாரா படத்துக்குப் பதி லாக ஒரு விநாயகர் படத்தை ஒட்டியிருந்தால் அதனை எடுக்கச் சொல்லி ஆணை பிறப்பித்திருப் பாரா?

ஒரு போராளியின் படத்தை ஒட்டக் கூடாது - ஒரு கற்பனை - களி மண் கடவுள் படத்தை ஒட்டலாம் என்ற வகை யில் ஏதாவது அரசு ஆணையிருக்கிறதா? ஆய்வாளர்தான் புகார் செய்து கடிதம் எழு தினார் என்றால் மாவட் டக் காவல்துறை கண் காணிப்பாளர் அது குறித்து தம் சிந்தனை யைச் செலுத்தி இருக்க வேண்டாமா?

காவல் நிலையத்திற் குள்ளேயே சட்ட விரோத மாக கோயில்களைக் கட் டலாம்; இந்திய அரச மைப்புச் சட்டத்தில் கூறப் பட்டுள்ள மதச் சார்பின் மைக்கு விரோதமாக காவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாட லாம் அதெல்லாம் குற்றம் இல்லை; தமக்குப் பிடித்த ஒரு போராளியின் படத்தை தம் சொந்த வாகனத்தில் ஒட்டுவது தான் குற்றமா?

சட்டம் ஒழுங்கு என் பது ஒரு வழிப்பாதையா?

- மயிலாடன்

குறிப்பு: திரு ரமேஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப் பிடத்தக்கது.

தமிழ் ஓவியா said...

பெண்ணின் தந்தை கதறல்: என் மகளை அசராம்பாபு கெடுத்து விட்டாரே!

ஷாஜகான்பூர், ஆக. 29-உத்தர பிரதேசத்தில் 15 வயது சிறுமியை 72 வயது சாமியாரான அசராம் பாபு பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி பெண்ணின் தந்தை கூறியதாவது:

என் மகளுக்கு உடல்நிலை சரியில் லாமல் இருந்ததால் சாமியார் அசராம் பாபுவின் ஆசிரமத் துக்கு அழைத்து சென்றோம். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அவரை நாங்கள் தெய்வமாக வணங்கி வந்தோம். என் மகளை பிடித் துள்ள தீய சக்தியை விரட்ட பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி, ஜோத்பூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்முறை செய்து விட்டார். அப்போது அவர், சத்தம் போட்டால், உன்னையும் வெளியே இருக்கும் உன் பெற்றோரை எனது பாதுகாவலர்கள் சுட்டுக் கொன்று விடுவார்கள் என்று மகளை மிரட்டியுள்ளார்.

அவர் மீது புகார் கொடுத்து 2 வாரங்களாகி விட்டது. இதுவரை காவல்துறையினர் அவரை கைது செய்யவில்லை. விசாரணைக்கு வரும்படி இப்போதுதான் காவல் துறையினர் அவருக்கு சம்மன் கொடுத்துள்ளனர். அசராம் பாபுவின் ஆசிரமத்தில் இருந்து எங்களுக்கு மிரட்டல் வருகிறது. நாங்கள் எதற்கும் பயப்பட மாட்டோம். அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள்.

நாங்கள் பொய் சொல்ல வில்லை. எந்த பெற்றோராவது தனது மகளின் மானத்தை காற்றில் பறக்கவிட்டு, இதுபோன்ற குற்றச் சாட்டை கூறுவார்களா? உண் மையை கண்டறிய சிபிஅய் விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

பெண்ணுக்கு பாலியல் தொல்லை பாதிரியார்மீது புகார்

தாம்பரம், ஆக. 29- பெண் ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிரியார் மீது பரபரப்பு புகார் கொடுக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து பாதிரியாரி டம் காவல்துறையினர் விசாரிக் கின்றனர்.

தாம்பரம் அடுத்த சந்தோஷ புரத்தைச் சேர்ந்தவர் ஜானி. இவரது மனைவி மரியாள் (39) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). சந்தோஷபுரத்தில் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயம் உள்ளது. இங்கு விசேஷ காலங் களில் உணவு வழங்கப்படும். இதற்கு உதவியாக மரியாள் இருந்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி ஆலயத்தில் இருந்த சமையல் பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்துள்ளார் மரியாள். அருகில் வந்த பாதிரியார் அமலதாஸ், ஆபாசமாக பேசி மரியாளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப் படுகிறது. இதை அவர் கண்டு கொள்ளவில்லை.

இதையடுத்து வேலை முடிந்து செல்லும் போது, அவரது கைகளை பிடித்து இழுத்து தவறாக நடக்க முயன் றுள்ளார். இதனால் பயந்துபோன அவர், பாதிரியாரை கீழே தள்ளி விட்டு தப்பினார். பின்னர் நடந்தவற்றை கணவரிடம் கூறியுள்ளார். உடனே அவர் அக்கம்பக்கத்தினருடன் சென்று பாதிரியாரை கண்டித்துள் ளார்.

இதைத் தொடர்ந்து அதே மாதம் 20ஆம் தேதி நடந்த வழி பாட்டில் எந்த காரணமும் இல் லாமல் ஜானியையும், மரியாளை யும் பாதிரியார் ஒதுக்கி வைத்தார். இது குறித்து செங்கல்பட்டு பிஷப் பிடம் அவர்கள் புகார் செய்தனர். அதற்கு அவர், நிர்வாகிகளிடம் புகார் செய்யுங்கள் என கூறி அனுப்பினார். நிர்வாகிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து மரியாளுக்கு பாதிரியாரிடம் இருந்து மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி ஆலயத்துக்கு சென்ற மரியாளை, எனது ஆசைக்கு இணங்கு. இல்லாவிட்டால் நீ தவ றானவள் என செய்தி பரப்பி, உன்னையும் உன் குடும்பத் தினரையும் ஊரை விட்டு துரத்தி விடுவேன் என பாதிரியார் அமல தாஸ் மிரட்டி யுள்ளார். அப் போதும் அவரிடம் இருந்து மரியாள் தப்பியுள்ளார்.

இது குறித்து கடந்த 13ஆம் தேதி காவல் ஆணையர் ஜார்ஜி டம் புகார் செய்யப்பட்டது. அதில் பணம், அரசியல் செல் வாக்கு உடைய பாதிரியார் என்னை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்துகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மரியாள் கூறியிருந்தார். அதுகுறித்து விசாரிக்க சேலையூர் காவல்துறையினருக்கு ஆணையர் உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து நேற்று முன்தினம் பாதிரி யாரிடம் விசாரித்தனர்.

தமிழ் ஓவியா said...


பெரியார் ஆயிரம் வினா - விடை போட்டியா? பிரளயமா?


பெரியார் ஆயிரம் வினா விடைப் போட்டி நடத்துவது தொடர்பாக கடந்த 14.07.2013 அன்று மதுரையில் கலந்துரையாடல் கூட்டத்தை பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கூட்டியிருந்தார்கள்.

காரைக்குடி கழக மாவட்டத்தின் சார்பில் அய்ந்து பேர் கலந்து கொண்டு விவரம் கேட்டறிந்தோம். இது எப்படி சாத்தியமாகுமா? என்று எங்களுக்குள்ளே ஒரு கேள்வி எழுந்தது. குறிப்பாக நூறு மாணவர்களுக்கு மேல் பங்கேற்றாலே பெரிது என எண்ணினோம். அறிவிப்பும் வந்தது.

அதை 120-க்கும் மேற்ப்பட்ட பள்ளிகளுக்கு நேரிலும், அஞ்சல் மூலமும் அனுப்பினோம். தலைமை கழகத்திலிருந்து எத்தனை புத்தகம் வேண்டும் என கேட்டபோது 150 போதும் என்று கூறினோம். அவர்களும் அனுப்பிவைத்தனர். புத்தகங்களை நேரில் சென்று கொடுக்க ஆரம்பித்ததுதான் தாமதம். பிறகு ஒவ்வொரு பள்ளியாக கேட்க ஆரம்பித்தனர். வந்த 150 புத்தகங்களும் தீர்ந்து விடவே மீண்டும் நேற்று 300 புத்தகங்கள் தேவைப்பட அதையும் அனுப்பி வைத்தனர்.

இன்று மீண்டும் பள்ளிகளில் இருந்து அலை அலையாக தொலைபேசி அழைப்புகள் கழகத் தலைவர் ச.அரங்கசாமி அவர்களுக்கும், எனக்கும் வந்து கொண்டே இருக்க புத்தகங்களின் எண்ணிக்கையை காலை 11 மணிக்கு 200 என்று சொல்லி, நண்பகல் 12 மணிக்கு 300 என்று சொல்லி, மதியம் 2 மணிக்கு 400 என்று சொல்லி, மாலை 4 மணிக்கு 500 புத்தகம் கண்டிப்பாக தேவை என்று தலைமை கழகத்தில் சொல்லியுள்ளோம்.

எங்களுக்கு சற்று மலைப்பாகத் தான் இருக்கிறது. இருந்தாலும் இது எவ்வளவு பெரிய பணி! இளம் சிறார்களிடம் அறிவுலகப் பேராசான் அய்யா பெரியார் அவர்களை கொண்டு சேர்க்கும் பணியல்லவா? என நாங்கள் எண்ணிக் கொண்டு, களத்தில் இறங்கியிருக்கிறோம்.இதற்கிடையில் காரைக்குடி ஒரு மய்யம் மட்டும் போதும் என்று இருந்த நிலை மாறி,தேவகோட்டையிலும் ஒரு மய்யத்தில் நடத்துவது என்று மாற்றி ஏற்ப்பாடுகள் செய்து வருகிறோம். போகிற நிலைமையை பார்க்கும் போது மூன்றாவதாக ஒரு மய்யத்தை உருவாக்கும் நிலை வரும் என எதிர்பார்க்கிறோம்.

எங்களையும் அறியாத ஓர் உற்சாகம் எங்களுக்கு கிடைத்திருக்கின்றது.இப்படி ஒரு நிகழ்ச்சியை கழக வரலாற்றில் உருவாக்கி கொடுத்த கழக பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.புத்தகங்களை கொண்டு சென்று பள்ளிகளில் தரும்போது அங்கே நாங்கள் காணும் மரியாதை அளவிட முடியாதது.

ஆம்! அந்த மரியாதை எல்லாம் நம்மை மனிதனாக்கி மானமும் அறிவும் பெற வேண்டும் என வாழ்நாளெல்லாம் உழைத்த தத்துவத் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கும், அவர் தம் தன்னலமல்லாத கொள்கைகளுக்கும் கிடைக்கும் மரியாதை அல்லவா! இந்த அனைத்து சிறப்புகளுக்கும் முழு முதற் காரணம் தமிழர் தலைவர் அவர்களின் ஓய்வில்லா உழைப்புதான் என்பதிலே இரு வேறு கருத்துக்கு இடமிருக்காது.போற்ற வேண்டியவர்கள் தூற்றிக் கொண்டிருக்க, தூற்ற வேண்டியவர்கள் போற்றுகிறார்கள் நம் தலைவர் அவர்களை.

ஆம்! அய்யா பெரியார் அகிலம் முழுமைக்கும் பயணிக்க காரணம் வணக்கத் திற்குரிய தமிழர் தலைவர் அவர்களின் மானம் பாரா, நன்றி பாரா தொண்டுகள்தான். அது என்றென்றும் வளர்ந்து வீறு கொண்டெழ நாமும் சேர்ந்து உழைப்போம்.

இழிவை ஒழிக்கும் போரினிலே என்றும் அய்யா வழி நடப்போம்!

அழிவை அணைக்க நேர்ந்தாலும், அய்யா கொள்கை மலர வைப்போம்!! அதற்கு தமிழர் தலைவரின் தலைமையில் சூளுரைப்போம்.

- தி. என்னாரெசு பிராட்லா மாவட்ட கழக செயலாளர், காரைக்குடி

தமிழ் ஓவியா said...


அழிக்காமல்...


ஜாதியையும், அதற்கு ஆதாரமான மதத் தன்மையையும் அழிக்காமல், வேறு எந்த வழி யிலாவது முதலாளி - தொழிலாளித் தன்மையை மாற்றவோ அல்லது அதன் அடிப்படையை அணுகவோ நம்மால் முடியுமா?

(குடிஅரசு, 12.5.1935

தமிழ் ஓவியா said...


உரத்த சிந்தனை


இன்று தேசிய விளையாட்டு தினமாம்!

இந்தியா விளையாட்டுத்துறையில் இன்றுவரை எந்த ஒரு முன்னேற்றமும் எடுக்காததற்கு காரணம் என்ன?, இதற்காக நாம் வேதகாலம் காலூன்ற தோன்றிய காலத்திலிருந்து வந்த மாற்றத்தை கவனிக்கவேண்டும். இது நீண்டகால பரம்பரை நோய் என்று கூறினால் கூட மிகையாகாது.

எல்லாதுறைகளிலும் அனைத்திலும் மனிதர்களின் உழைப்பு 6-ஆம் நூற்றாண்டு வரை நிறைந்து இருந்தது, ஆனால் வேதகாலம் தோன்ற ஆரம்பித்த பிறகு சமூகத்தில் பிரிவினை ஏற்பட்டது, உழைப்பவர் ஒருபுறம் அவர்களின் உழைப்பைச் சுரண்டி தின்பவர்கள் ஒருபுறம்; இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வேறுபாடாய் மாறத்துவங்கியது, இதன் விளைவு உழைக்கும் மக்கள் அடிமைகளாய அவர்களுக்கு இட்ட பணிகளை இரவு பகல் என்று பார்க்காமல் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள இடமின்றி பல நூற்றாண்டுகளாக கழித்தனர்.

அதே நேரத்தில் உழைப்பைச்சுரண்டி வாழும் வர்க்கமோ சோம்பேறிகளாய் கொழுத்து ஓய்வுநேரத்தில் சுகபோகமாய் வாழ்வதையே முறையாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தனர். இவர்கள் பொது வாழ்க்கையில் கலக்காமல் தங்களை தனிப்பட்டவர்களாக கருதிக்கொண்டு இருந்ததால் வெளிவுலகம் தெரியாமல் உண்பதும் உறங்குவதுமாக கழித்துக்கொண்டு இருக்க விளையாட்டு மற்றும் அதுகுறித்த அறிவு முற்றிலும் தேங்கிப்போனது. முகலாயர்களின் ஆட்சிக் காலத்தில் போர் முறையி னாலான விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் அவை முகலாய அரச வம்சத்தினருக்கும், படைத் தளபதி அமைச்சர்கள் போன்ற மேம்பட்ட சமூகத்தோடு நின்று விட்டது. ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றிய போது இங்கு பாரம்பரிய நடனங்கள் என்றும் சம்பிரதாயங்கள், சடங்குகள் என்ற பெயரில் மூடநம்பிக்கை பழக்க வழக்கங்கள் தான் விளையாட்டுகளாக நடத்தப்பட்டன. அதுவும் இறுதியில் இரத்தக்களறியாக முடிவுற்றது. வலியவர்கள் தோற்றாலும், வென்றாலும் கொலையில் தான் முடியும். ஆகையால் பொதுமக்கள் பலர் இது போன்ற சடங்கு விளையாட்டுகளில் கலந்து கொள்ளமாட்டார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டைக் கைப்பற்றி தங்களது ஆட்சியை நிலைப்படுத்திய பிறகு பள்ளிக்கூடங்களில் விளையாட்டைப் புகுத்தினர். ஆனால் பாரம்பரிய குணத் தால் கல்விகற்று தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை வளப்படுத்துவதிலேயே பார்ப்பன மற்றும் முதலாளி வர்க்கம் அதிகம் அக்கறை காட்டியது, ஆரம்ப காலங்களில் ஆங்கிலேயர்களின் பள்ளிக்கூடங்களில் விளையாட்டுப்போட்டிகளில் அதிகம் பங்கேற்று வெற்றி பெறுபவர்கள் பெரும்பாலும் வசதியற்ற சூழலில் இருந்து வரும் மாணவ - மாணவிகளே.

இந்தியாவில் 18-ஆம் நூற்றாண்டின் துவக்கம் கல்வியுகம் என்று கூறலாம் ஆனால் இங்கு அதிகம் தனிப்பட்ட முறையில் வாழ்க்கையை அமைக்க கல்வியைக் கற்க ஆரம்பித்தனர். அதனால் தான் சர் சிவி இராமன், கணித மேதை இராமானுஜம் மற்றும் சுப்ரமணியம் சந்திரசேகர் ஜிடி நாயுடு போன்ற திறன்மிகுந்த அறிவியல் மேதைகள் தோன்றினார்கள், ஆனால் இந்திய வரலாற்றில் விளையாட்டுத்துறையில் முத்திரைபதித்தவர்கள் இதுவரை தோன்றவில்லை என்பது வேதனைக்குரியது. இந்தியாவும் விளையாட்டுத்துறையில் பிற நாடுகளைப்போல் சிறந்து விளங்கவேண்டும் என்ற ஒரு நிர்பந்தத்தின் காரணமாக விளையாட்டு அமைச்சரவை உருவாக்கப்பட்டது, இருப்பினும் அதன் சிறந்த பணிகள் என்று இன்றுவரை எதுவுமே இல்லாதது வேதனைக்குரிய செய்தியாகும். இதற்குப் பெரிய உதாரணமாக கூற வேண்டுமென்றால் தேசிய விளையாட்டுதினத்தை எப்போது உருவாக்கினார்கள் என்று விளையாட்டுத்துறை அமைச்சகத்திற்கே தெரியாமல் இருக்கிறது, 2002இல் இருந்து தியான்சந்த் பெயரில் விருதுவழங்கப்பட்டு வருகிறது என்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரிவிக்கிறது. ஆனால் முடிவு செய்யப்பட்ட ஆண்டு தெரியவில்லை.

ஒரு தேசிய விளையாட்டு தினத்தையே இப்படி கேலிக்கூத்தாக மாற்ற முக்கிய காரணம் கிரிக்கெட். கிரிக்கெட்டில் பணம் பார்த்த பிறகு பல அரசியல் வாதிகளும், பணமுதலாளிகளும் மற்ற விளையாட்டுத் துறைகளில் மக்களின் கவனம் சென்றுவிடாமல் இருக்க கிரிக்கேட்டை மாத்திரமே மக்களிடையே ஒரு விளை யாட்டுப்போல் மாயப்பிம்பத்தை காட்டி வருகின்றனர். சமீபத்தில் வில்வித்தையில் தங்கம் வென்று வந்த வீரங்கனைகளை மரியாதையுடன் வரவேற்க அரசு தரப்பில் டில்லி விமான நிலையத்திற்கு ஒருவர் கூட செல்லாதது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

உண்மையில் இந்திய தேசிய விளையாட்டுத்தினம் என்பது ஒரு தினசரி சடங்கு போல் கடமைக்காக நடத்தப்படும் நாளே அன்றி உண்மையில் இந்தியாவில் விளையாட்டிற்கு மரியாதைத் தரப்படும் ஒரு நாளே அல்ல என்று கூறலாம்