Search This Blog

17.8.13

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள்!


பழங்குடியினர் பட்டியலில் நரிக் குறவர்களைச் சேர்க்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் மத்திய  பழங்குடியினர் மற்றும் பஞ்சாயத்து ராஜ் நலத்துறை அமைச்சர் வி. கிஷோர் சந்திரதியே அவர்களுக்குக் கீழ்க் கண்டவாறு கடிதம் ஒன்றை எழுதினார் (11.8.2013).

அதில் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதாவது: 

தமிழகத்தில் நரிக்குறவர் என்ற ஓர் இனம் நாடோடிகளாக வாழ்ந்து வருகின்றனர். அனைத்து இனத்தவர்களிடம் இருந்து சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும், நரிக்குறவர்கள் பின் தங்கியுள்ளனர். எனவே நரிக் குறவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கலைஞர் அவர்கள் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு மத்திய அமைச்சர் கீழ்க்கண்டவாறு பதில் எழுதினார் (13.8.2013)  

அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருந்ததாவது:

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்களைச் சேர்ப்பது தொடர்பாக என்னுடைய அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. இந்த விவகாரத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து விட்டால், தமிழகத்தில் உள்ள நரிக் குறவர்களைப் பழங்குடி யினர் பட்டியலில் சேர்ப்பதற்கான சட்டத் திருத் தத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்து வோம்! என்று மத்திய அமைச்சர் வி. கிஷோர் சந்திரதியே அவர்கள், தி.மு.க. தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சமூகநீதி சார்ந்த இயக்கத்திலிருந்து பிறந்து வளர்ந்து வந்ததாலும், சமூகநீதியில் யாருக்கும் சளைக்காத சான்றாண்மை கொண்டவராக இருந்து வருவதாலும், இது சூத்திரர்களின் அரசுதான்! என்று இது வரை எந்த முதல் அமைச்சரும் துணிந்து சொல்லாத அளவுக்குப் பிரகடனப்படுத்தியவராக இருப்பதாலும் மானமிகு கலைஞர் அவர்களின் சிந்தனையில் நரிக்குறவர் பிரச்சினை என்னும் சமூக நீதிச் சிந்தனை மலர்ந்துள்ளது.

ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் சமூக நீதியைச் சவக்குழியில் புதைத்து விட்ட ஓர் ஆட்சி இப்பொழுது நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் பெரும்பாலான கட்சிகள் இது யாருக்கோ வந்த விருந்தெனப் பாரா முகம் காட்டி வருவது துக்கத்துக்குரியதாகும்.

திராவிடர் கழகம் இதற்காகப் போராட்டக் களமே கண்டுள்ளது - தொடர்ந்து இந்தத் திசையில் தம் அழுத்தத்தைக் கொடுத்து வருகிறார், தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள். தமிழ்த் தேசியவாதிகள் இது போன்ற சமூக நீதிப் பிரச்சினைகளில் கண்களைச் செலுத்தாதவர்கள் என்பதும் நிரூபணமாகி விட்டது.

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கருத்தை தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் வலியுறுத்தி வரும் இந்தக் கால கட்டத்தில் தமிழ்நாட்டிலும் அதனை யொட்டிய ஒரு பிரச்சினை நிலவி வருவதை இந்தச் சந்தர்ப்பத்தில் இணைத்துச் சிந்திக்க வைப்பது பொருத்தமானதாகும்.

கிருட்டினகிரி மாவட்டத்தில் குடுகுடுப்பைக் காரர்கள் (பூம் பூம் மாட்டுக்காரர்கள்) இப்பொழுது அவர்கள் வைக்கப்பட்டு இருக்கும் தாழ்த்தப் பட்டோர்  (SC) பட்டியலில் இருந்து பழங்குடியினர் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

அதே போல அம்மாவட்டத்தில் பண்ணியாண்டி என்ற ஒரு பிரிவினர் உள்ளனர். அவர்களின் குலத் தொழிலாகப்  பன்றி மேய்த்தல் இருந்து வருகிறது. இன்று பெரும்பாலும் அவர்கள் நகர சுத்தித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்களையும் பழங்குடியினர் பிரிவுக்குக் கொண்டு வர வேண் டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். இதில் உள்ள நியாயத்தையும், யதார்த்தத்தையும் உணர்ந்து விடுதலை ஏடு தொடர்ந்து வலி யுறுத்திக் கொண்டு வருகிறது. ஆனால் மாநில அரசு, தன் பார்வையை அந்தப் பக்கம் திருப்பிட வில்லை.

ஜோகி என்று அவர்களை முத்திரை குத்து கிறது அப்பகுதியில் உள்ள அதிகார வர்க்கம். ஜோகி என்ற ஒரு பிரிவினரே அந்தப் பகுதியில் இல்லாதிருக்கும் போது, அப்படி ஒரு முத்திரை குத்த வேண்டிய அவசியம் என்ன? என்பது புரியவில்லை.

நரிக்குறவர் தொடர்பான கலைஞர் அவர்கள் கருத்தினை ஏற்று மத்திய அரசு ஆதரவான கண்ணோட்டத்தில் கருத்துச் செலுத்தும் இந்தச் சந்தர்ப்பத்தில், கிருட்டினகிரி மாவட்டத்தில் நிலவி வரும் இந்தப் பிரச்சினையின்மீதும் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தித் தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
                               ----------------------------"விடுதலை” தலையங்கம் 17-8-2013

38 comments:

தமிழ் ஓவியா said...

தேவதான மசோதா

தந்தை பெரியார்

பார்ப்பனரின் சூழ்ச்சி, மித்திரனின் அகம்பாவம்

சென்ற புதன் வியாழக்கிழமைகளில் தேவஸ்தான மசோதாவைப் பற்றி பார்ப்பன மித்திரனாகிய சுதேசமித் திரன் பத்திரி கையில் அக்கிரமத்திற்கும் அள வில்லையா? என்கிற தலைப்பின் கீழ் சில விஷமத்தனமான வார்த்தை களை எழுதியிருக்கிறது. அது எதைப் பற்றி என்றால் வரப்போகிற சென்னை சட்டசபைக் கூட்டத்தில் தேவதான சட்டத்தில் உள்ள சில சட்ட சம்பந்தமான சிறு தவறுதல்களைத் திருத்துவதற்காக ஒரு மசோதா சர்க்காரால் கொண்டு வரப்படப் போகிறது. ஏனெனில் அச்சிறு சட்ட சம்பந்தமான தவறுதல்களை ஆதா ரமாக வைத்தே தேவஸ்தான மசோதாவை அடியோடு ஒழிப்பதாகச் சொல்லி நமது பார்ப்பனர்கள் மகந்துகளையும், மடாதி பதிகளையும் ஏமாற்றி அவர்களிட மிருந்து லட்சக்கணக்கான பொருளைக் கவர்ந்து விவகாரங்களை உண்டாக்கி நியாயதலங்களில் தற்காலத் தடை உத்திரவும் பெற்று இன்னும் பல மடாதி பதிகளை ஏமாற்றிப் பொருள் பறிக்கப் பிரயத்தனப்பட்டு வருகிறார்கள். இப் பொழுது சர்க்காரால் கொண்டு வரப் படப்போகும் மசோதா நிறைவேறி விடுமானால் இம்மாதிரி நமது பார்ப் பனர்கள் மடாதிபதிகளையும் மகந்து களையும் ஏமாற்றிப் பொருள் பறிக்கவும் தற் காலத் தடை உத்தரவுகள் பெற்று, தர்மச் சொத்துகளை கொள்ளையடிக் கவும். முடியாமல் போய்விடு மாகையால் இது பற்றியே சுதேமித்திரன் இம் மசோதாவைப் பற்றி அதிகப் பிரசங்கித் தனமாகவும் அக்கிரமத்திற்கும் அள வில்லையா, என்று தலையங்கமிட்டு என்னென்னமோ பிதற்றுகிறான்.

1. 1923-ஆம் வருஷத்தில் இம் மசோதா சட்டசபை அங்கத்தினர்களில் இந் துக்கள் பலரால் எதிர்க்கப்பட்டும் இந்துக்களல்லாதாரின் உதவியைக் கொண்டு நிறைவேற்றப்பட்டது என்று எழுதுகிறான். இம்மசோதா சட்டசபையில் நிறை வேறும்போது எதிர்த்த இந்துக்களை விட எதிர்க்காத இந்துக்கள் அதிகமாயிருந்து நிறைவேற்றியிருக்கிறார்கள். மித்திரன் அகராதியில் இந்துக்களென்று சொன்னால் பார்ப்பனர்களும் பார்ப் பனர்கள் தாளத்திற்கு ஆடும் பார்ப்பனரல்லாதாரையும் தான் குறிக் கும் போலிருக்கிறது. பார்ப்பனர் களுடைய அயோக்கியத் தனத்தை யாராவது வெளியிலெடுத்துச் சொன் னாலாவது அவர்களுக்கு விரோதமாய் யாராவது நடந்து கொண்டாலாவது அவர்கள் இந்துக்கள் அல்லபோலும்.
2. அல்லாமலும் ஆதி மசோதா கோர்ட்டில் விவகாரத்திலிருக்கும் போது புது மசோதா வெளியிட அவசியமில்லை என சுதேசமித்திரன் கூறுகின்றான். மசோதாவில் சட்ட சம்பந்தமான சில குற்றமிருந்ததன் பலனாய் கோர்ட்டில் மசோதாவைத் தள்ளி வைக்க விவகாரம் தொடுத்திருந்தாக வைத்துக் கொண் டாலும் இந்த சமயத்தில் மசோதாவின் குற்றத்தை நீக்குவதில் மித்திரனுக்கு நஷ்டமென்ன? மசோதாவின் குற்றம் நீங்கி கோர்ட்டிலுள்ள வழக்குகள் மேல் நடவடிக்கைகள் நடத்த வேண்டிய அவசியமில்லாமல் நின்று விட்டுப்போக வேண்டிய அவசியம் ஏற்படுமேயானால் தங்கள் ஜாதியாருக்கு பீஸ் கிடைக்காமல் போய்விடுமே என் கிற பேராசைக் கெட்ட எண்ண மும் வரப்போகும் தேர்தல்களில் பிரசாரம் செய்வ தற்காக மடாதி பதிகளிடம் தேவ தான மசோ தாவை ஒழிக்க சட்டசபைக்கு ஆட்களை சேர்க் கிறோம், ஆட் களை சேர்க்கி றோம் என்று ஏமாற்றிப் பொருள்பறிக்க முடியாமல் போய் விடுமே என்கிற சின்னப் புத்தி தானா அல்லவா?

தமிழ் ஓவியா said...

3. தவிரவும் பொது ஜன அபிப் பிராயம் தெளிவாக வெளிப்படப்போகும் சமயமான சட்டசபைத் தேர்தலுக்கு முன் இம்மசோதாவை சட்டமாக்க முயலுவ தால் பொதுஜன அபிப்பிராயத்தை மந்திரிகள் லட்சியம் செய்யவில்லை என்றும் இந்த மந்திரிகளை ஒழித்தால் தான் ஜனங்களுடைய அபிப் பிராயத்திற்கு மதிப்பு ஏற்படும் என்றும் கூறுகிறான். இது மகா அக்கிரமமான வாசகமென்றே நாம் சொல்லுவோம். இப்பொழுது சட்டசபையிலுள்ள கன வான்களின் அபிப்பிராயம் பொதுஜன அபிப்பிராயம் அல்லவென்று மித்திரன் எப்படிச் சொல்லக் கூடும்? பொது ஜனங்களென்றால் யார்? மித்தி ரனுடைய இவ்வார்த்தையானது பொது ஜனங்களையே அவமானப்படுத்தத் தக்கதாயிருக்கிறது. பார்ப்பனர் தவிர பார்ப்பனர் பெரும் பான்மையாயிருக்கிற சபைகள் தவிர மற்ற சபை பொதுஜன சபை அல்லவென்றும் பொதுஜன அபிப்பிராயமல்ல என்றும் மித்திரன் கருதுவானேயானால் இப்பார்ப்பனர் களும் மித்திரனும் பொதுஜனங்கள் அல்லவென்று நாம் நிரூபித்தாலொழிய நமது நாடு முன்னுக்கு வராதென்று தான் நாம் சொல்லுவோம். இப்பார்ப்பனர்கள் தாங்கள் எந்த முறையில் சட்டசபையில் போயிருந்து கொண்டு பொது ஜனப் பிரதிநிதி என்று சொல்லிக் கொள் ளுகிறார்களோ, அதே முறையில் சட்ட சபைக்குச் சென்ற பார்ப்பனரல்லாதாரும் தாங்களும் பொது ஜனங்களின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்வதற்கு உரிமை பெற்றவர்கள் என்ற அறிவு மித்திர னுக்கு ஏன் இல்லாமல் போய் விட்டது? இம்மாதிரி ஒரு சமூகத்தையும் சமூகப் பிரதிநிதிகளையும் கேவலமாகவும் அவமானமாகவும் மனம் புண்படும் படியாகவும் எழுதக்கூடிய ஆணவத்தை என்றைக்கு நாம் அழிக்கிறோமோ அன்றுதான் நாட்டிற்கே சேமமுண்டா கும். அதில்லாமல் இவைகளை இப்படியே அதிகப்பிரசங்கித்தனமாக நடக்க விட்டுக் கொண்டிருக்கும் வரையில், கோயில் சொத்தைத் தின்னுகிறவர் களும், மகந்து மடாதிபதிகளுக்கும், தாசி வேசிகளுக்கும் இடையில் தூது நடக்கிறவர்களும் வழக்குகள் பெயரால் தர்மச் சொத்தை கொள்ளையடிக் கிறவர்களும் பாமர ஜனங்களை ஏமாற்றி வயிறு வளர்க்கிறவர்களும், தேசத் திற்கோ மதத்திற்கோ கொஞ்சமும் பொறுப்பற்ற சுயநலப் பிணங்களுந்தான் நமது நாட்டுப் பொது ஜனங்களாகக் கருதப்படுவார்களென்றே நாம் பயப் படுகிறோம்.

அடுத்தாற்போல் சட்டசபையில் தேவதான மசோதா வரும் போது சட்ட சபையை விட்டு வெளியில் வந்துவிட் டோமென்று சொன்ன பார்ப்பன சுயராஜ்யக் கட்சி வீரர்கள் மீண்டும் சட்டசபைக்கு வருவார்களா வரமாட் டார்களா என்பதும் தேவதான மசோதா விஷயம் சுயராஜ்யக் கட்சிக்கு சம்பந்தப் பட்டதா, தனித்தனி நபர் சம்பந்தப்பட்டதா என்பதும், தனித்தனி நபர் சம்பந்தபட்ட தானால் கட்சித் தலைவரின் உத்திர வில்லாமலே சட்டசபைக்குப் போகலாமா என்பதும் அறிய வெகுஜனங்கள் இச்சமயம் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 08.08.1926

தமிழ் ஓவியா said...


மத விஷயத்தில் சர்க்காரைப் பிரவேசிக்கச் செய்யாத பார்ப்பனர்கள் தேவார பாராயணத்திற்கு தடை உத்தரவு (இஞ்சங்ஷன்)


நமது பார்ப்பனர்கள் தென்காசி கோவிலில் சுவாமியுடனும், தேவாரத்துடனும் ஒத்துழையாமையும் பகிஷ்காரமும் செய்ய நேர்ந்தது போலவே சங்கரன் கோவிலிலும் செய்ய நேரிட்டுவிட்டால், தங்கள் வரும்படிக்கு ஆபத்து வந்துவிடுமே எனப் பயந்து சங்கரன்கோவில் டிஸ்டிரிக்ட் முனிசீப்பு கோர்ட்டில் வியாஜ்ஜியம் தொடுத்து தங்களுக்கு பிரசாதம் கொடுக்காததற்கு முந்தி தேவாரம் படிக்கக்கூடாது என்று (இஞ்சங்ஷன்) தடை உத்தரவு வாங்கி விட்டார்களாம்.

கோவில் அதிகாரிகள் அதை அப்பீல் செய்ய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்களாம். இந்துமத சம்பந்தமான விஷயத்தில் சர்க்காரார் மூலமாய் நமது இந்துக்கள் பணங்காசுக்கு வரவு செலவு கேட்பதுகூட இந்து மதத்தில் சர்க்காரை பிரவேசிக்க விட்டு விட்டார்கள் என்று மாய்மாலக் கண்ணீர் விடும் நமது பார்ப்பனர்கள் தேவார பாராயணம் செய்வதை நிறுத்த சர்க்காரிடம் போயி ருப்பதும், இந்துக்கள் அல்லாதவர்கள்கூட ஒரு சமயம் இதற்கு தீர்ப்பு எழுதும்படியாகச் செய்வதும், இந்து மதத்தில் சர்க்காரை நுழைய விட்டதல்ல போலும்! ஏன்? பார்ப்பனர் கோர்ட்டுக்கு போனால் மதபக்தி; பார்ப் பனரல்லாதார் கணக்கு கேட்டால் மதத் துரோகம் போலும்!

- குடிஅரசு - செய்திக்குறிப்பு - 05.12.1926

தமிழ் ஓவியா said...

சர்.சி.பி. அய்யரின் விஜயம்

சென்னையில் சுயராஜ்யக் கட்சியின் பேரால் நடைபெற்று வந்த காலித்தனங்களும் போலீசாரின் அலட்சியமும், சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் இந்தியாவை விட்டு கப்பலேறியவுடன் அடங்கிக் கிடந்தது. இப்போது அவர் ஜெனிவாவிலிருந்து இந்தியாவுக்கு வர கப்பலில் காலடி வைத்த உடன் பழையபடி ஆரம்பமாய் விட்டது. காலிகள் கூட்டங்களில் கல்லெறியவும், மோட்டார் டயர்களைக் கிழிக்கவும், பல வந்தமாய்த் தாக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.

அவர் சென்னைக்கு வந்து சேர்ந்ததும் காலித்தனங்களும், போலீசைப் பற்றி பயமற்ற தன்மையும் கடைத் தெருவிலும் மூர் மார்க்கெட்டிலும் விற்க ஆரம்பமாய் விட்டது. இது எங்குபோய் நிற்குமோ தெரிய வில்லை. முள் வாழையின் மேல் பட்டாலும் வாழைக்குத்தான் கேடு, வாழை முள்ளில் மேல் பட்டாலும் வாழைக்குத்தான் கேடு என்பது போல் காலித்தனம் நடந்தாலும் பார்ப்பனரல்லாதாருக்குத்தான் உபத்திரவம். அதை அடக்கப் பிரயத்தனப்பட்டாலும் பார்ப்பனரல்லாதாருக்குத்தான் உபத்திரவம் என்கிற நிலையில் நமது பார்ப்பனர்கள் நம்மை வைத்துக் கொண்டு தங்கள் சூழ்ச்சி ரதத்தை ஓட்டுகிறார்கள்.

- குடிஅரசு - சிறுகுறிப்பு, 24.10.1926

தமிழ் ஓவியா said...

சென்னைத் தொழிலாளர்களும் தேர்தல் கூட்டங்களும்

ஸ்ரீமான் எஸ். சீனிவாசய்யங்கார் அவர்கள் தொழிலாளர்களுக்கு நமது ஸ்ரீமான் முதலியார் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகு சென்னையில் ஜஸ்டிஸ் கட்சியார்களால் ஏற்படுத்தப் படும் கூட்டங்களில் ஆலைத் தொழிலாளர்கள் கலகம் செய்வதாக `திராவிடனில் காணப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதோ இல்லையோ, ஆனாலும் நாம் நமது தொழிலாளர், பார்ப்பனரல்லாதார் ஆகிய சகோதரர்களை ஒன்று கேட்கிறோம்.

அதாவது, நவம்பர் மாதம் 8ஆம் தேதி(சட்டசபைத் தேர்தல் தீர்ந்ததற்குப்) பிறகு இந்தப் பார்ப்பனர்கள் நமது தொழிலாள சகோதரர்களையாவது மற்றும் இப்போது அவர்கள் நியமித்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார்களையாவது திரும்பிப் பார்ப்பார்களா, கவனிப் பார்களா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

- குடிஅரசு - செய்திக்குறிப்பு, 03.10.1926

தமிழ் ஓவியா said...


மதுரையில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு


நாளது டிசம்பர் 25,26-ஆம் தேதி சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுரை மாநகரில் பார்ப்பனரல்லாத மக்களின் மகாநாடு கூட்டப் போகும் விபரம் சென்ற வார இதழிலேயே தெரிவித்திருக்கிறோம். இம்மகாநாடு பார்ப்பன ரல்லாதார்களுக்கு மிகவும் முக்கிய மகாநா டாகும். பெரும்பாலும் நமது மக்களின் பிற்கால நிலைமை இதன் மூலமாகவே இச்சமயம் நிர்ண யமாக வேண்டியிருக்கிறது.

பார்ப்பனரல்லாதாரிடம் கவலை உள்ள வர்கள் என்றும் பார்ப்பனரல்லாதாருக்கு உழைப் பவர்கள் என்றும் பறையடித்துக் கொள்ளு பவர்கள் அவசியம் தவறாமல் இம்மகாநாட்டிற்கு வந்து கலந்து தங்களது அபிப்பிராயத்தையும் சொல்லி ஒப்பச் செய்து மேலால் நடந்து கொள்ள வேண்டிய விபரத்திற்கு ஒரு திட்டம் ஏற்பாடு செய்ய உதவி புரிய வேண்டும்.

மகா நாடு எவ்வித அபிப்பிராய பேதமுள்ள பார்ப்பன ரல்லாதாருக்கும் பொதுவானதென்றே சொல்லுவோம். பொறாமையாலோ துவேஷ புத்தியினாலோ மகாநாட்டிற்கு வராமலிருந்து விட்டு பின்னால் அது தப்பு இது தப்பு; இது யாரோ சிலர் கூடிக் கொண்டு நடத்திய மகா நாடு; ஆதலால் என்னைக் கட்டுப் படுத்தாது; இதில் சேராதவர்கள் அனேகர்கள் இருக் கிறார்கள் என்று நோணா வட்டம் பேசுவதில் ஒரு பயனும் இராததோடு இவ்வித செய்கை சமுகத் துரோகம் சமயோசித வயிற்றுப் பிழைப்பேயாகும்.

தவிர மகாநாட்டின் தீர்மானம் என்ன வானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கி றோம். ஆதலால் நாம் போக வேண்டிய அவசி யமில்லை என்பதாக சோம் பேறி வேதாந்தம் பேசாமல் வேறு விதமான தவிர்க்க முடியாத சந்தர்ப்பம் ஏற்பட்டாலன்றி மற்றபடி கூடிய வரையில் எல்லா முக்கிய கனவான்களுமே ஆஜராக வேண்டுமென்றே வேண்டுகிறோம். நமது மக்கள் தங்கள் வாழ்நாள்களில் எவ் வளவோ பணமும் எவ்வளவோ காலமும் வீணாய் விரையம் செய்து வருகிறார்கள் என் பதை யாரும் மறுக்க முடியாது.

தமிழ் ஓவியா said...

அப்படியிருக்க இவ்வுத்தம மானதும் சுயமதிப்புள்ள ஒவ்வொரு மனிதனின் கடமையானதுமான இந்த முக்கிய மான கூட்டத்திற்குப் போவதை ஒரு செல வாகவோ காலப் போக்காகவோ கருதக் கூடாது என்றும் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆனால் சிலர் அதாவது பார்ப்பனர் புன் சிரிப்புக்கு ஆசைப்பட்டவர்களுக்கும் பார்ப்ப னரின் மனக்கோணலுக்கு பயப்பட்டவர்களும் தனக்கென ஒரு கொள்கையில்லாமல் வலுத்த கையோடு சேர்ந்துக் கொண்டு ஞானோபதேசம் செய்து தங்களது மனிதத் தன்மையை காப்பாற்றிப் பிழைப்பவர்களும் சுலபத்தில் வர தைரியம் கொள்ளமாட்டார்கள் என்பதையும் நாம் நன்றாய் உணர்வோம்.

அப்பேர்ப்பட்டவர் களைப் பற்றி நாம் குற்றம் கூறாமல் உண்மை யிலேயே பரிதாபப்படுகிறோமானாலும் அவர் களால் நேரிடும் கெடுதியை இனிச் சகிக்க முடியாதென்பதையும் வணக்கத்துடன் தெரி வித்துக் கொள்ளுகிறோம். நிற்க, இம்மகாநாடு பார்ப்பனர்களின் கான்பரன்ஸ் மகாநாடுகளைப் போல் 12 ஜில்லா விலுள்ள இரண்டரை கோடி மக்களுக்கும் பிரதிநிதித்துவம் பொருந்திய அரசியல் சபை என்ற வேஷம் போட்டுக் கொண்டு தங்கள் சொற்படி ஆடும் சோணகிரிகளான 100 அல்லது 150 பெயர்களை தமிழ்நாட்டுப் பிரதி நிதிகள் என்று வைத்துக் கொண்டு தங்கள் அபிப்பிராயத்துக்கு மாறு பட்டவர்கள் உள்ளே வரமுடியாதபடி தந்திரங்கள் செய்து மீறி யாராவது வந்து விட்டால் அவர்களை அடித்து துரத்தி தங்கள் இஷ்டம் போல் தங்களுக்கு அனுகூலமானப்படி தீர் மானங்களை நிறை வேற்றிக் கொள்ளும் பார்ப்பன சூழ்ச்சி மகா நாடுகள் போல் அல்லாமல், ஆயிரக்கணக்கான உண்மை சுதந்திரப் பிரதிநிதிகள் வந்து கூட வேண்டுமென்ப தாகவும் வேண்டிக் கொள் ளுகிறோம்.

ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், மிராஸ்தார்கள், குடியானவர்கள், தொழி லாளர்கள், கூலிக் காரர்கள், வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள், பெண் மக்கள் ஆகிய எல்லா வகையாரும் தவறாமல் விஜயம் செய்து மகாநாட்டின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும். ஒவ்வொரு ஜில்லா தாலுகா கிராமங் களிலுமுள்ள பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி யுள்ள ஒவ்வொரு குலாபிமானிகளும் தங்க ளால் கூடுமானவரை பிரதிநிதிகளைச் சேர்த்து அழைத்துக் கொண்டு வரவேண்டுமென்றும் தெரியப் படுத்திக் கொள்ளுகிறோம்.

வெறும் உத்தியோகமும், பட்டமும், முனிசிபல், தாலுகா, ஜில்லா போர்டு மெம்பர் பதவியும் பெறும் வரை தன்னை பார்ப்பனரல் லாதார் உணர்ச்சிக்காரர் என்று சொல்லிக் கொண்டும் தங்கள் காரியம் ஆனவுடனோ அல்லது இனி இவர்களால் நமக்கு ஆக வேண்டியதொன்றுமில்லை, இனிமேல் இம்மாதிரி காரியங்களுக்கு பார்ப்பனர்களின் தயவுதான் வேண்டும் என்பதாக நினைத்து வரவில்லை என்று அன்னியர் மனசில் நினைக்கவோ அல்லது வெளியில் சொல்லவோ இடம் வைக்காமல் இந்நிலையில் உள்ள கனவான்களும் அவசியம் விஜயம் செய்ய வேண்டுமாய் வேண்டுகிறோம்.

இவ்வளவும் தூரம் நாம் ஏன் எழுதுகிறோ மென்றால் கோடிக்கணக்கான நமது சமுகத் தின் பேரால் உள்ள ஸ்தாபனமும் மகா நாடும் நமது எதிரிகளாலும் அவர்களது கூலிகளாலும் குற்றம் சொல்லுவதற்கிடமில்லா மலும் இவ் வளவு நாள் இருந்தது போல் பொது மக்கள் பாராமுகமாய் அதனிடம் பக்தி செலுத்தத் தக்க தன்மையுடையதாகவும் தக்க பயனளிக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டு மென்கிற ஒரே ஆசையேயல்லாமல் வேறல்ல, தென்னாட் டிலுள்ள சுயமரியாதைச் சங்கத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களும் பிரமுகர்களும் அவசியம் தக்க பிரதிநிதிகளோடு வரவேண்டு மென்றும் பிரத்தியேகமாய் வேண்டுகிறோம்.

- குடிஅரசு - தலையங்கம் - 19.12.1926

தமிழ் ஓவியா said...

ஏழுமலையானும் செல்போனும்!

திருப்பதி ஏழுமலையான் தரிச னத்துக்குச் செல்போனுடன் செல்லு வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏன், ஏழுமலையானுக்கு அத னால் என்ன இடர்ப்பாடோ! எந்தச் சத்தம் கேட்டால்தான் என்ன - அதுதான் சிலையாயிற்றே! அதற்கு என்ன இடர்ப்பாடு ஏற்படப் போகிறது?

பக்கத்தில் இருந்து மந்திரம் ஓதும் அர்ச்சகர் பார்ப்பான் சொல்லு வதையும் அது கேட்கப் போகிறதா என்ன?

அடேயப்பா ஒரு பொம்மையை வைத்துக் கொண்டு எவ்வளவு பம்மாத்து வேலை!

தமிழ் ஓவியா said...

கைது ஏனோ?

தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலை வாழ்ப் பிரிவைச் சேர்ந்த மாணவர் களுக்கு உயர் கல்வியில் சலுகைகள் வழங்கக் கோரி தலைமைச் செய லகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர்.

மாணவர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி பிரச்சினைகளை அறிந்து, தேவையான முயற்சி களைச் செய்வதுதான் ஒரு நல் லாட்சியின் கடமையே தவிர வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைப் பூச்சாண்டியை காட்டிக் கைது செய்வது சரியல்லவே - அதுவும் சமூக நீதிப் பிரச்சினையில்!

தமிழ் ஓவியா said...

பள்ளி வாசல் மீது தாக்குதல்

இலங்கையில் பள்ளி வாசல்மீது பவுத்தர்கள் தாக்குதல் நடத்தி யிருப்பதைக் கண்டித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தமிழ்நாடு முஸ்லிம் முன் னேற்றக் கழகத்தினர் நேற்று (16.8.2013) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இலங்கை அரசாக இருந்தாலும் சரி, சிங்களவர்களாக இருக்கும் பவுத்தர்களானாலும் சரி, தமிழர்கள் என்றால் - அவர்கள் எந்த மதத்தை அல்லது பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களைத் தாக்கிட அவர்களின் நிறுவனங்களை அடித்து நொறுக்கிட கைத்தடிகள், ஆயுதங்கள் சிங்களவர்கள் கைகளுக்கு எப்படியோ வந்துவிடும்.

சிங்களவன் ஒவ்வொருவனும் இனவெறியனாகவே இருக்கிறான். போதும் போதாதற்குச் சிங்கள இன வெறியன் ராஜபக்சே அங்கே சர்வாதிகாரி.

இதைப்பற்றி எல்லாம் இங்குள்ள சோ ராமசாமிகள், குருமூர்த்திகள் மற்றும் பார்ப்பன ஊடகங்களுக்குக் கவலையில்லை; ஈழத் தமிழர்கள் பிரச்சினையென்றால் இவர்களின் கண்கள் இருண்டுப் போய் விடும்!

தமிழ் ஓவியா said...

தங்கமே தங்கம்

நாள்தோறும் ஓர் அறிவிப்பு வெளிவந்து கொண்டே இருக்கிறது. அது தங்கத்தின் விலை நிர்ணயம் ஒவ்வொரு நாளும் - அதிரடி மாற்றத்திற்கு அது ஆளாகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.840 உயர்வு என்கிறது இன்றைய செய்தி.

என்றாலும் நகைக் கடைகளில் கூட்டத்திற்குக் குறைச்சல் இல்லை. அடுத்து வரும் அட்சய திருதியை என்ற நாளில் தங்கத்தின் விலையை உச்சத்தில் ஏற்றினாலும் ஏற்று வார்கள்.

ஏனெனில் கடன் வாங்கியாவது அந்த நாளில் தங்கம் வாங்கினால் திடீர் குபேரர்கள் ஆகி விடுவார் களே - அப்படி ஒரு மூடநம்பிக் கையைப் பிரச்சாரம் செய்து வைத்துள்ளார்களே

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி வீழ்ச்சி என்று வாள் வாள் என்று கத்து கிறார்களே - ஒரே ஒரு சட்டம் போடட்டும்! தங்க நகைகளுக்குத் தடை, கோயிலில் உள்ள நகைகள் அரசுடைமை ஆக்கப்படும், தங்கம் என்பது அரசின் கஜானாவில் மட்டும் என்று ஒரே ஒரு அவசர சட்டத்தைப் போட்டுச் செயல்படுத் தட்டும். உலகிலேயே இந்தியா பொருளாதார நிலையிருப்பில் முதல் பரிசைத் தட்டிக் செல்லாதா?

கையில் வெண்ணெய் இருக் கிறது - என்றாலும் நெய்க்கு அலைந்து கொண்டு இருக் கிறார்களே - அய்யோ பாவம்!

தமிழ் ஓவியா said...

மோடிக்கு மொத்துகள்

குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி பிஜேபியின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று சொன்னாலும் சொன்னார்கள் - நாட்டில் கடும் எதிர்ப்புச் சுனாமி சுழன்று அடிக்க ஆரம்பித்துவிட்டது.

நுணலும் (தவளை) தன் வாயால் கெடும் என்பார்களே - அது நூற்றுக்கு நூறு சதவீதம் இந்த மோ(ச)டிக்கே முற்றும் பொருந்தும்.

சிறுபான்மையினரை நாய்க்கு ஒப்பிட்டுச் சொன்னாலும் சொன் னார்; நாலாப் பக்கங்களிலிருந்தும் மொத்தோ மொத்துகள்.

நான் இந்து நேஷனலிஸ்ட் என்று சொல்லப் போய், கணிசமாக வாங்கிக் கட்டிக் கொண்டார் - அமர்த்தியா சென் போன்ற அரசி யலுக்கு அப்பாற்பட்ட பொருளாதார அறிஞர்கள்கூட கடுமையான விமர் சனங்களை மோடி மீது ஏவினார்கள். சுதந்திர தின உரையில் நாகரி கமற்ற வகையில் பிரதமரைப் பார்த்து ஒண்டிக்குஒண்டி சந்திக்கலாமா என்று சவால் விடுத்தார்.

பிஜேபியின் முக்கிய தலைவரான எல்.கே. அத்வானியே இது அநாக ரிகம் என்று முகத்தில் அறைந்தது போல் கருத்துக் கூறினார்.

மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா கூறிய சுவையான விமர்சனம் - மோடி என்றால் தேசிய தர்ம சங்கடம்! என்றாரே பார்க்கலாம்.

குஜராத்தில் வளர்ச்சியோ வளர்ச்சி! என்று பல வண்ணத்தில் விளம்பரப் பலுன்களைப் பறக்க விட்டு, மக்களை மயக்கத்தில் ஆழ்த்தும் கோயபெல்சுப் பிரச்சாரம் செய்யப்படுகிறது அல்லவா! அது பற்றியும் மத்திய அமைச்சர் ஆனந்த சர்மா கூறியுள்ளார்.

மற்ற மாநிலங்களைவிட அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் இடையில் பள்ளிப் படிப்பைப் பாதி யிலேயே (Dropouts) நிறுத்துவது குஜராத்தில்தான் என்று சவுக்கடி கொடுத்துள்ளார்.

ஒரு அரசின் சாதனைகளில் கம்பீரமாக நிற்க வேண்டியது கல்வியே!

அதிலேயே கோட்டை விட்டவர் - ஓட்டைப் போட்டவர் எப்படி நல்லாட் சியை நடத்துவதாகக் கருத முடியும்?

இந்துத்துவாவாதி அல்லவா? கல்வியைப் பார்ப்பனர் அன்றி மற்ற வர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்கிற மனு தர்மப் புத்தியோடு செயல்படுகிறார் போலும்!

தமிழ் ஓவியா said...


மோடியின் அதிகப்பிரசங்கித்தனம் திக்விஜய்சிங் தாக்கு


புதுடில்லி, ஆக. 17: அதிகப் படியான ஆவலால் நரேந்திர மோடி எல்லா எல்லைகளையும் மீறுகிறார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க் கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் ஆற்றிய சுதந்திர தின உரையில் பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக விமர்சித்தார் பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நிலையை எடுக்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பிரதமர் தவறி விட்டதாக குற்றம் சாட்டினார். அதோடு, நிர்வாக சீர்கேடு பற்றி பொது விவாதம் நடத்த தயாரா? என்றும் சவால் விடுத்தார். சுதந்திர தினத்தில் மோடி இவ்வாறு பேசியதை பாஜ மூத்த தலைவர் அத்வானி மறைமுகமாக கண்டித்தார்.

இந்நிலையில், மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர்களும், அமைச்சர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் அளித்த பேட்டியில், பிரதமரை தாக்கி பேசிய விதத்தில் இருந்து, வரையறுக் கப்பட்ட எல்லா விதிமுறைகளையும், பாரம்பரியத்தையும் மோடி தகர்த்து விட்டார். அதிகப்படியான ஆவலால் எல்லா எல்லைகளையும் அவர் மீறுகிறார் என்றார்.

மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், செங்கோட்டையில் இருந்து பிரதமர் பேசும்போது, 120 கோடி மக்களின் நம்பிக்கை, குறிக் கோளின் பிரதிநிதியாக அவர் விளங் குகிறார். யாராவது அவருடைய பேச்சை தனது பேச்சுடன் ஒப்பிடும் படி கூறினால், அது அவருடைய விரக்தி தவிர வேறொன்றையும் பிரதிபலிக்கப் போவதில்லை என்றார்.

தமிழ் ஓவியா said...


இடஒதுக்கீடு முறையை பின்பற்றாத ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தாக்கீது


சென்னை, ஆக.17- இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத் துவது குறித்து வெளி யிட்டுள்ள அறிவிக் கையை ரத்து செய்யக் கோரிய வழக்கிற்கு 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும் படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய, மாநில தாழ்த் தப்பட்ட மற்றும் பழங் குடியின ஊழியர்கள் கூட்டமைப்பின் நிறு வனர் எஸ்.கருப்பையா. இவர், சென்னை உயர் நீதிமன்றம் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்ப தாவது:-

கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009-இன் படி, தொடக்க மற் றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பதவிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவது கட்டாயம் என்று தேசிய கல்வி கவுன்சில் புதிய விதி முறை களை வகுத்துள்ளது.

இதற்கான அறிவிக் கையை 23-8-2010 அன்று தேசிய கல்வி கவுன்சில் வெளியிட்டது. அதில், ஆசிரியர் தகுதித் தேர் வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம்பெறவேண்டும் என்பது அவசியமானது. அதேநேரம் அந்தந்த மாநில அரசுகள் ஏற்கெ னவே வழங்கும் இட ஒதுக்கீடு அடிப்படை யில் மிகவும் பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ருக்கு சலுகை மதிப் பெண்களை வழங்க லாம் என்று கூறியுள் ளது.இதனடிப்படையில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரின் தேர்ச்சி மதிப்பெண்ணை ஆந்திர மாநில அரசு 40 சதவீதம் என்றும், ஒரிசா, மணிப் பூர் மாநில அரசுகள் 50 சதவீதம் என்றும், உத்தர பிரதேச மாநில அரசு 55 சதவீதம் என்றும் நிர்ண யம் செய்துள்ளது.

ஆனால், சமூகநீதிக்கு முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகத்தில் மட்டும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின ருக்கு இந்த சலுகை மதிப்பெண்கள் வழங்கப் படவில்லை. இந்த நிலையில், 2013-ஆம் ஆண்டுக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு நடத் துவது குறித்து 22-5-2013 அன்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட் டது. இந்த அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பே, அதாவது 16-4-2013 அன்று தாழ்த்தப் பட்ட மற்றும் பழங் குடியினருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்க வேண் டும் என்று கோரிக்கை மனு கொடுத்தேன்.

இதுவரை எந்த நட வடிக்கைகளையும் அரசு எடுக்கவில்லை. எனவே ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவது குறித்து 22-5-2013 அன்று வெளியிடப்பட்ட அறிக் கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட் டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர் வால், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யும் படி, தமிழக கல்வித் துறை, முதன்மை செய லாளர், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலாளர் ஆகியோ ருக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனர்.

தமிழ் ஓவியா said...

ஆறறிவில் ஓரறிவு அவுட்டு!

- சிவகாசி மணியம்

இதழ்களில் வரும் சில செய்திகள் எடுத்த எடுப்பில் சிரிக்க வைத்தாலும் அடுத்த கணம் அதிர வைக்கிறது. பகுத்தறிவுப் பகலவன் உதித்த மண்ணில் இன்னுமா இந்த இழிநிலை என்ற வேதனையும் விஞ்சுகிறது. இப்போதும் இப்படி என்றால் நூறு இருநூறு ஆண்டுகளுக்கும் அதற்கு முன்பும் நாடு எப்படி இருந்திருக்கும்? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. செய்வினை என்ற சொல் நல்ல தமிழ்ச் சொல். அதற்கு இங்கு சொல்லப்படும் அர்த்தமே வேறு. மாய மந்திரங்களால் வேண்டாதவரை வீழ்த்தும் மர்ம ஆயுதம் என நம்பி ஏமாறுகிறார்கள் மடமை விரும்பிகள்!

அம்மனுக்கு சூன்யம் வைத்தது யார்? எனும் தலைப்பில் (22.7.2013) ஜூனியர் விகடனில் ஓர் செய்தி! மதுரை மாவட்டம் கிரெனைட் புகழ் கீழ வளவு கிராம மக்கள் கொந்தளிக்கிறார்களாம். அப்படி என்னதான் நடந்தது? அங் குள்ள வீரகாளியம்மன் கோயிலுக்கு முன்பும் பின்பும் மந்திரிக்கப்பட்ட பொருள்களை சில மர்ம நபர்கள் புதைத்து விட்டுச் சென்றதால் தான் பதற்றம்! ஊராட்சித் தலைவர் தர்ம லிங்கம் சொல்வதைக் கேட்போம்.

இது கிரெனைட் புள்ளிகளின் வேலை தான். அம்மனைக் களங்கப் படுத்தி துஷ்ட ஆவிகளை ஏவி, அம் மனின் சக்தியை குலைக்கப் பார்க்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் ஊர் மக்களும் குற்றம் சாட்ட, மேலிடத்திலிருந்து ஆதரவு வர காவல் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

திருநெல்வேலிக்கே அல்வாவா? சிவகாசிக்கே பட்டாசா? என்று கேலியாய்க் கேட்பதுபோல் சாமிக்கே செய்வினையா? என்று கேட்டால் எங்க ஊர் வீரமாகாளி மிகவும் சக்தி வாய்ந் தவர். ஏழை எளிய மக்கள், தங்களால் எதிர்க்க முடியாதவர்கள் பற்றி அம்மனிடம் வேண்டிக்கொண்டால் உடனே நியாயம் வழங்குவாள். தப்பு செய்தவர்களைத் தண்டிப்பாள். சில வருடங்களுக்கு முன்பு பக்கத்து குவாரியில் ஜே.சி.பி. இயந்திரத்தால் தோண்டும் போது இந்தச்சிலை இயந்திரத்தில் சிக்கி சிலையின் கை சேதப்பட, பயந்து போனவர்கள் ஊர்க்காரர்களிடம் சொல்லாமல் கோயில் அருகிலேயே புதைத்து விட்டார்கள்.

தமிழ் ஓவியா said...

நாங்கள் கடந்த ஆண்டு கோயிலைச் சுத்தம் செய்தபோது அம்மன் எங்களுக்கு கிடைத்தாள். அதற்கான பூஜைகள் செய்து அம்மனை கோயில் காம்பவுண்டுக்குள் வைத்தோம். அம்மன் மண்ணுக்குள் இருந்து வெளியே வந்த பின்பு தான் இந்த வட்டாரத்தையே தோண்டி நாச மாக்கியவர்கள் சிறை செல்ல ஆரம்பித்தார்கள். இன்று வரை பழைய செல்வாக்கோடும், அதிகாரத்தோடும் அவர்களால் வலம் வர முடியவில்லை.

இந்தப்பகுதி ஆளும் கட்சிக்காரர் களை கைக்குள் போட்டுக்கொண் டாலும் முதல்வரிடம் அவர்கள் பாச்சா பலிக்கவில்லை. இதற்கு முழுக்காரணம் உக்கிரமான வீரகாளியம்மன்தான். முன்பு போல் செயல்பட வேண்டுமென் றால் அம்மனின் உக்கிரத்தை குறைக்க வேண்டுமென்று மந்திரவாதிகளிடம் செய்வினை செய்து தகடு, குங்குமம், மஞ்சள் நூல் சுற்றப்பட்ட தேங்காய் ஆகியவற்றை கடந்த 10-ஆம் தேதி புதைத்திருக்கிறார்கள். நடுச்சாமத்தில் கோயில் அருகே சத்தம் கேட்க பக்கத்திலிருந்தவர்கள் தகவல் சொன் னார்கள்.

நாங்கள் வருவதற்குள் டாடா சுமோவிலும், மோட்டார் பைக்கிலும் தப்பி ஓடிவிட்டார்கள். காவல்துறைக்கு தகவல் கொடுத்தோம். சிலருக்கு அங்கேயே சாமி வந்து புதைத்து கிடந்த மாந்திரீகத் தகட்டை எடுத்துப் போட் டார்கள். காவல்துறையிடம் காட்டி விட்டு எரித்துவிட்டோம். சாமி தோசம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக பரிகாரம் செய்தோம். இன்னார்தான் இந்தக் காரியத்தைச் செய்திருப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் கிரெனைட் வர்த்தகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் செய்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார் ஊராட்சித் தலைவர்.

ஊர்க்காரர்கள் சிலர் பி.ஆர்.பி.க்கு அதிக வருமானம் கொடுத்தது கீழவளவு குவாரிகள் தான். வீரகாளியம்மன் பின்புறமுள்ள இடங்களில் அவருக்கு குவாரிகள் உண்டு. கண்மாயின் சில பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டன. எங்கள் பகுதியை மொட்டை ஆக்கி விட்டனர். கிரானைட் எடுத்துவிட்டு மண்ணைப் போட்டு மூடியது போல் பூமிக்குள் இருந்த அம்மன் சிலையை சேதப் படுத்தி மறுபடியும் பூமிக்குள் புதைத்து வைத்த பாவத்துக்குத்தான் இப்போது அனுபவிக்கிறார்கள். அம்மனின் உக்கிரத்தைக் குறைப்பதற்காக இது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள் என்றனர்.

பகுத்தறிவாளன் என்பவன் இதனை மறுக்க கடமைப்பட்டிருக்கிறான் என்பது எழுதப்படாத விதி. கீழவளவு எனும் பெயருக்கேற்ப தாழ்வான மூடப்பழக்க வழக்கங்களில் சிக்கி சீரழியத்தான் வேண்டுமா? உயர் எண்ணங்கள் பூத்துக்குலுங்க வேண் டாமா? பூமிக்குள் புதைந்து, சிதைந்து போன சிலைக்குப்பெயர் வீர(!) மாகாளியம்மனா? உக்கிரமான அம்மனை வெறும் தகரம், குங்குமம், மஞ்சள் நூல், தேங்காய் இவற்றால் செய்வினை செய்து செயல் இழக்கச் செய்ய முடியுமா?

அம்மனைவிட வலிமை உள்ள பொருள்களா இவை துஷ்ட ஆவிகளையே துரத்தி அடிக்க முடியாத அம்மன், இயற்கை வளங்களை வெட்டி எடுத்து சுரண்டி கோடிகளைக் குவிக்கும்போது வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருந்திருப்பாள்? மண்ணில் புதைந்து கிடந்தவளை சேதப்படுத்தினாலும் வெளியில் எடுத்து விடுதலை தந்தது யார்? தன்னைக் காப்பாற்றிக்கொள்ளவே சக்தியற்றவள் ஊரை எப்படிக் காப்பாற்றுவாள்? தப்பு செய்தவர்களை எங்ஙனம் தண்டிப் பாள்?

இப்பெருங்கொள்ளையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மாவட்ட ஆட்சியர் சகாயமும், அதற்குப்பின் வந்த அன்கல் மிஸ்ராவும் தூக்கியடிக்கப்பட்டார்களே ஏன்? அவர்களும் தப்பு செய்தவர்களா? மூன்றாவதாக வந்திருக்கும் சுப்பிரமணி யத்தையாவது அம்மன் விட்டு வைக்குமா? அம்மன் இருக்கும்போது காவல்துறை ஏன்? வழக்கு நடக்கிறதே அம்மனுக்கு சம்மன் அனுப்பினால் வருவாளா சாட்சி சொல்ல? கேள்விகள் இருக்கின்றன நூறு! ஏதேனும் பதில் இருந்தால் கூறு! பட்டுக்கோட்டையார் பாடலின் பல்லவி ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆறறிவில் ஓரறிவு அவுட்டு., இருக்கும் அய்ந்தறிவும் நிலைக்குமுன்னா அதுவும் கூட டவுட்டு!!

தமிழ் ஓவியா said...


சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது


சிறையிலோ அல்லது காவல் துறைக் காவலிலோ இருந்தால் அந்த நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பான ஒரு வழக்கில் பாட்னா உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தலைமை தேர்தல் ஆணையம் மற்றும் சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு (4 மற்றும் 5) ஆகியவற்றை மேற் கோள் காட்டி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக் மற்றும் எஸ்.ஜே. முகோபாத்யாய அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 62(5) பிரிவில், ஒரு நபர் சிறையில் இருந்தாலோ அல்லது வழக்கு தொடர்பாக காவல்துறைக் காவலில் இருந்தாலோ நாடாளுமன்றம் அல்லது சட்டப் பேரவைக்கு போட்டி யிடுவதற்கு தகுதி இல்லாதவர் என்றும், வாக்காளர்களால் தேர்வு செய்யமுடியாதவர் என்றும் பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானதே என்று தெரிவித்தனர்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் (பிரிவு 4 மற்றும் 5) நாடாளுமன்றத்துக்கும், சட்டப் பேரவைக்கும் போட்டியிடும் நபர், தேர்வு செய்யப்படுவதற்கு தகுதி படைத்தவராக இருப்பது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள் 62(5) பிரிவின்படி சிறையில் இருக்கும் நபர் அல்லது காவல் துறைக் காவலில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்தனர்.

கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்யலாம் என்று இதே நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பொது நலன் வழக்கு ஒன்றில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக சிறையில் அல்லது காவல்துறைக் காவலில் இருக்கும் நபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதுபற்றி சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்த தீர்ப்பின் மூலம் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்கள் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களா என்பதை ஆய்வு செய்வார்கள் என்றும், அத்தகைய வர்களை இனி தேர்தலில் போட்டியிட நிறுத்தவும் மாட்டார்கள் என்றனர்.

தமிழ் ஓவியா said...


அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை தனியார் கோயிலில்களில் இனிக்கிறது, அறநிலையத்துறை கோயில்களில் கசக்கிறதா?


அரசுக் கோயில்களில் பூஜைகள் செய்வதற்கு பயிற்சி பெற்ற அர்ச்சகர் களுக்குத் தடைகள் இருக்கலாம். ஆனால் பல தனியார் கோயில்களில் அவர்களுக்கான கதவுகள் திறந்தே வைக்கப்பட்டுள்ளன.

அரசால் அர்ச்சகர் பயிற்சி கொடுக்கப்பட்ட 200 பேரில் கிட்டத் தட்ட 150 பேர் தனியார் கோயில்களில், தமிழ்நாடு முழுவதிலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதில் சிலர் ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடு களிலுள்ள, கோயில்களுக்கு குடமுழுக்கு மற்றும் யாகங்கள் செய்வதற்கும் அழைக்கப்படுகின்றனர்,

சில அர்ச்சகர்கள் கோயில்களில் முழுநேரப் பணியாளர்களாகச் செய லாற்றுகின்றனர். சிலர் பகுதி நேர அர்ச்சகர்களாகப் பணியாற்றுகின்றனர்.

மற்றப்பகுதிநேரங்களில் மெக்கானிக், கணினி மய்யம் நடத்துவோராகத் தங்கள் பகுதிகளில் பணிபுரிகிறார்கள். சிலர் மேற்படிப்பிற்காக கல்லூரிகளில் சேர்ந்தும் படிக்கிறார்கள்.

2006-இல் மதுரையைச் சேர்ந்த ஆதி சைவ சிவாச்சாரியார் நல கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக் கின் காரணமாக, அரசு கோயில்களில் இந்த பயிற்சி பெற்ற அர்ச்சகர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டது. அவர்கள் பணி செய்வதற்கு நீதி மன்றம் தடை ஆணை பிறப்பித்தது.

பல தனியார் கோயில்களில், பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பயிற்சி பெற்ற அர்ச்சகர்கள் நல்ல உணர்வு களுடன் பூஜைகள் செய்து வருவதால், அவர்கள் விரும்பப்படுகின்றனர்.

சண்முகம் என்ற பயிற்சிப்பெற்ற அர்ச்சகருக்கு 29 வயதுதான் ஆகிறது. துறையூரில் உள்ள 50 ஆண்டு பழைமை வாய்ந்த முருகன் கோயிலில் அவர் கடந்த நான்கு ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். இந்த அர்ச்சகர் தொழில் எனக்கு நிறைவைத்தருகிறது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, நான் தமிழிலோ, வடமொழியிலோ அர்ச்சனை செய்து வருகிறேன். அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்று அவர் சொன்னார்.

ஒரு மாதத்திற்கு முன்பு சென் னையைச் சேர்ந்த இணையர், துறை யூரைத் தங்கள் சொந்த இடமாகக் கொண்டவர்கள். அவர்கள் சண் முகத்தைச் சென்னைக்கு வரவழைத்து, தங்கள் குழந்தைக்குப் பெயரிடும் நிகழ்ச்சியும் மற்றும் பல சடங்கு களையும் செய்து கொண்டனர்.

தமிழ்நாடு பயிற்சி பெற்ற அர்ச்சகர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.ரங்கநாதன், தாங்கள் யாரையும் விட எந்த விதத்திலும் தாழ்ந்தவர்கள் இல்லையென்றும், தாங்கள் பூஜைகளை நல்ல மனதுடன் செய்து வருவதாகவும், குறிப்பாக ஆகம விதிமுறைகளைப் பின் பற்றி வருவதாகவும் கூறினார். மேலும் தாங்கள் பாரம்பரிய முறைப்படி ஆடைகள் அணிந்து வருவதாகவும், சிலர் குடுமி வைத்து இருப்பதாகவும் கூறினார்.

அவரது வகுப்புத் தோழர் தியாக ராஜன் ஆஸ்திரேலியாவில் உள்ள கோயில்களில் கடந்த இரண்டு மாதங்களில் குடமுழுக்கு மற்றும் பல சடங்குகளைச் செய்து வருகிறார். கரு வறைக்குள் ஜாதி என்ற சொல்லுக்கே இடம் இல்லை. ஆன்மீக மனம் கொண்ட அனைவரும் பூஜை செய்ய லாம் என்று சொல்லுகிறார்.

(ஆதாரம்: டெக்கான் கிரானிக்கல் 29.7.2013)

தமிழ் ஓவியா said...


உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழில் வாதாட மீண்டும் அனுமதி!


உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் தமிழில் வாதாட மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசு, சட்டப் பூர்வமாக இதற்கு அனுமதி அளிக்காவிட்டால், போராட்டம் நடத்தப் போவதாக வழக்குரை ஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும், அலு வல் மொழியாகவும் தமிழ் மொழியைக் கொண்டு வரக் கோரி, முந்தைய தி.மு.க. ஆட்சி யின்போது, முதலமைச்சராக இருந்த தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சட்டமன்றத்தில் தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், வழக்குரைஞர்கள் தமிழில் வாதாட அனுமதி அளித்திருந்தார்.

இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குரைஞர் ஒருவர் தமிழில் வாதாட முயன்ற போது, நீதிபதி மணிக்குமார் அதற்கு அனுமதி மறுத்தார்.

இதையடுத்து, தி.மு.க. தலைவர் கலைஞர் மற்றும் வழக்குரைஞர் சங் கத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்திலும், அதன் மதுரைக் கிளையிலும் தமிழில் வாதாட அனுமதிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தினர். மேலும், மதுரை மாவட்ட வழக்குரைஞர் சங்கத் தினர், நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நீதிபதி மணிக்குமார் முன் ஆஜரான வழக்குரைஞர்கள், தமிழில் வாதாட அனுமதி மறுப்பது, ஏற்கெனவே தலைமை நீதிபதி அளித்த அனுமதியை மீறுவதாக உள்ளதால், இதுபற்றி மேல்முறையீடு செய்ய இருப்ப தாகத் தெரிவித் தனர். அதன்பின், அனுமதி மறுத்த தமது உத்தரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக வும், இனி தமிழில் வாதாட அனுமதி அளிப் பதாகவும் நீதிபதி மணிக்குமார் தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


திருவானைக்கா கோயிலின் மகத்துவம்

டைம்ஸ் ஆப் இந்தியா எனும் ஆங்கில நாளேடு, செய்திப் பஞ்சத்தால் தவிப்பதால் திருவானைக்கா பாரம் பரியமிக்க கோவிலில் பிச்சைக்காரர்கள் தொல்லை எனும் தலைப்பில் ஒரு பிச்சைக்காரப் பெண் அங்கு வரு வோரிடம் பிச்சை கேட்பது போன்ற படத்துடன் சிவக்குமார் எனும் செய்தி யாளர் வாயிலாக செய்தி வழங்கியுள்ளது. ஆம் 18.7.2013-ஆம் நாள் இதழின் 2-ஆம் பக்கம் தரப்பட்டுள்ள செய்தியே தான்!

1000 ஆண்டுகளுக்கு முன் குலோத் துங்க சோழனால் கட்டப்பட்ட கோவிலாம்! பஞ்சபூதங்களில் ஒன்றான நீரின் வடிவில் சிவன் உள்ளாராம். தமி ழகத்தின் அதிக நிலப்பரப்பில் அமைந் துள்ள 5 கோயில்களான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், திருவண்ணாமலை அருணாசலேசுவரர், சிதம்பரம் நடராசர், திருவரங்கம் ரங்கநாதர் ஆகியவற்றுடன் இதுவும் ஒன்றாம். ஆனால் குலோத் துங்கனோ மற்ற சோழ மன்னர்களோ நம்மக்களுக்கு ஒரே ஒரு பள்ளிக்கூடம் கூட கட்டித்தரவில்லையே என கேட்டு விடாதீர்கள்!

கோவில் வளாகத்துக்குள் புகுந்தால் எங்கு நோக்கினும் வீணான உணவுப் பொருள்களும், குப்பைகளும் கிடக்கின் றனவாம். தாங்கள் வழிபடும் கோவில் களை குப்பைக் கூடங்களாக ஆக்கி விடுகிறோமே என்று பக்தர்கள் மனதில் துளியும் எண்ணம் உதிக்காதாம்! அங்குள்ள கடவுள் வரக்கூடியவர்களது மனதில் உழவாரப்பணி எனும் பெயரி லாவது, தனது இருப்பிடத்தை தூய்மைப் படுத்தும் எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடாதா! கடவுள் மனது வைத்தால் குப்பைகளை நொடியில் மறையச் செய்து விடலாமே! சர்வசக்தி வாய்ந்தவரான சாமிக்கு இது கூடவா முடியாது? அட, அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர்களாவது ஆண்டவனிடம் குப்பையை ஒழிக்கு மாறு விண்ணப்பிக்க மாட்டார்களா? தனக்கு தட்சணை மட்டும் தான் வேண்டும் என்று கோருவார்களோ!

ஒரு பக்தரின் வருத்தம் என்ன தெரியுமா? கோவில் வாசலில் துவங்கி, துரத்தித்துரத்தி பிச்சை கேட்கிறார் களாம்! கோவில் காவலாளிக்கு தட் சணை கொடுத்துவிட்டு உள்ளே திரியும் இவர்கள், கோவிலின் ஒரு மூலையில் இயற்கை உபாதைகளை கழித்து விடுகிறார்களாம்! போகட்டும் அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர் ஏறத்தாழ 40 ஏக்கர் பரப்புள்ள கோவிலின் மய்யத்திலுள்ள கருவறையிலிருந்து கொண்டு, தனக்கு அவசரம் எனில் எங்கு செல்கிறார் என் பதை பக்தர் அறிவாரா? அவரும் கரு வறையை மறைவாக பயன்படுத்தத்தானே நேரிடும்! கருவறைக்குள் உள்ள கரப்பான் பூச்சி, பல்லி, கொசு எல்லாமே அங்கு தானே மலம் கழிக்கின்றன!

மதுரையில் மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள யானை, ஒட்டகம் போன்றவை வளாகத் துக்குள்ளேயே தான் சாணி போட்டு, மூத்திரம் விடுகின்றன! கடவுளுக்கு மனி தனைப்போல உணவு படைக்கின் றோமே! அதை உண்டவரான கடவுள் எங்கு மலஜலம் கழிக்கிறார்? மறைய வன் நாவில் கலை மகள் உறைவது நிஜமானால் மலஜலம் கழிப்பது எங்கே எங்கே என்று கலைவாணர் பாடிக்காட்டியதை நமது சிவக்குமார் அறியார் போலும்! இனியாகிலும் பெரிய கோவில்களுக்குள் கழிப் பிடங்கள் தேவை என்பதை வெளிப் படுத்தும் புத்திசாலித் தனம் யாராவது பக்தருக்கு, செய்தியாளருக்கு வரட்டும் என்று எதிர்பார்ப்போம்.

தனது கோவிலைக்கூட நன்றாக வைத்துக் கொள்ளத் தெரியாத சாமிகளின் கோவில் பாராமரிப்புக்கு மதுரை, திருவரங்கம், சென்னை கபாலீசுவரர் கோவில்களில் போன்று, தொழிலதிபர்களை தக்காராக நியமித்தால் அவர்கள் (இறைவனிடம் வேண்டினால் பலன் ஏதுமில்லை என்று நன்கு அறிந்தவர்களாதலால்) அரசினர் கேட்டுப் பணம் பெற்று, உடைந்து சிதலமானவற்றைச் சரி செய்வார்களாம். அதாவது பார்ப்பனர் சொற்படி இயங்கிய அறிவிலி குலோத் துங்க சோழன் போன்று இன்றைய அரசினரும் செயல்பட வேண்டுமென்று ஒரு கிழம் ஆதங்கப்படுகிறதாம்.

பக்தர்கள் வெயிலில் வாடாமல் வரிசையில் நின்று கோவிலுக்குள் செல்ல திருவரங்கம் போன்று கூடாரம் அமைக்க வேண்டுமாம். தமிழகமெங்கும் நியாய விலை கடைகளில் வெயிலில், வரிசையாக கால் கடுக்கக்காத்துக் கிடக் கிறார்களே நம் பெண் மக்கள் லட்சக் கணக்கான பேர். இவர்களைப்பற்றி யெல்லாம் கவலைப்படாதவர்கள் தான் சுகவாசிகளான பக்தர் குழாம்!

இதெல்லாம் கிடக்கட்டும். அங்கு பிச்சை எடுத்துத் திரியும் ஏழைகளை யாவது சாமி காப்பாற்ற முடியாதா? அவர்களது பிழைப்புக்காவது வழிகாட் டக்கூடாதா? இதையெல்லாம் எழுதிய என்னிடமாவது, இந்த மடையனுக்கு புத்தி புகட்ட வேண்டுமென நல் லெண்ணத்துடன் பேச விரும்பினால் எனது கைபேசி எண் ரணைத் தர ஆயத்தமாக உள்ளேன். ஓ! சர்வசக்தி வாய்ந்த உங்களுக்கு தான் எனது தொலைபேசி முகவரி தெரியுமே!

அ.காசிவிசுவநாதன், மதுரை

தமிழ் ஓவியா said...


காலை உணவை தவிர்த்தால்...

காலை உணவை தவிர்த்தல், இரவில் மிகவும் தாமதமாக உணவை உட்கொள்ளுதல் ஆகியவை இதயக் கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்பை உருவாக்குவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஊட்டச்சத்து துறை நிபுணர் எரிக் ரிம் இது குறித்து கூறியதாவது: உணவுக் கட்டுப்பாடு இன்மை, புகைப் பழக்கம், உடற்பயிற்சி இல்லாமை, மதுப் பழக்கம் போன்றவற்றால் மட்டும் இதயக் கோளாறுகள் ஏற்படாது. காலை நேர உணவைத் தவிர்ப்பதாலும் அதனால், நம் உடலில் ஏற்படும் பாதிப்புகளாலும், இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இது தொடர்பாக 16 ஆண்டுகளாக 27ஆயிரம் ஆண்களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப்பட்டது. இதில், 1500 பேருக்கு முதன் முறையாக இதயக் கோளாறு ஏற்பட்டதையும் காண முடிந்தது. இரவு நேரத்தில், மிகவும் தாமதமாக உணவு சாப்பிடுபவர்களுக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுவதற்கு, அதிக வாய்ப்புகள் உள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் இவர்களுக்கு 55 சதவீதம் இதயக் கோளாறுகள் வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். அதே நேரத்தில், இவர்கள், காலை நேர உணவை எடுத்துக் கொண்டு இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடும் பழக்கம் உள்ள வர்களாக இருந்தாலும், நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியாது.

காலை உணவை தவிர்த்தாலோ அல்லது இரவில் நீண்ட நேரத்திற்குப் பின் சாப்பிட்டாலோ அது, நம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வருவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. காலை உணவை தவிர்ப்பதால் உடல் பருமன் உயர் ரத்த அழுத்தம் அதிக கொழுப்பு சேர்தல் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை வரு வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதன் அடுத்த கட்டமாக இதயக் கோளாறு ஏற்படும்.

தீக்கதிர் வண்ணக்கதிர்
04.08.2013

தமிழ் ஓவியா said...


எண் கணிதம் என்னும் அடையாள அழிப்பு


நாம் நாளேடுகளை எடுத்த உடன் அன்றாடம் பார்க்கும் ஓர் அவலம் ஆன்மீகம், ஜோதிடம் ஆகியன. அறிவி யல் அறிவு தொடர்பான செய்திகள் நம்ம தமிழ் நாளேடுகளில் வருவதில்லை, ஆங்கிலப் பத்திரிக்கைகளில் வரும் ஏதாவது ஒரு அறிவியல் செய்தியை அப்படியே எவ்வித தனித்த மொழி நடையுமின்றி, எளிமையில்லாமல், படிப்பவர்களுக்கு கொஞ்சமும் புரியாதவகையில் பதிப்பார்கள்,

ஆனால் ஜோதிடம் மற்றும் ஆன் மீகம் தொடர்பானவைகளை விரிவாக எளிய நடையில் எழுதுவார்கள், இதுவும் ஒரு கலாச்சார அழிப்பு முறைதான், ஜோதிடத்தின் மூலம் மிகவும் நுணுக்கமாக இன அடையாள அழிப்பை விடுதலை அடைந்தபிறகு பிறகு மேற்கொண்டு வருகின்றனர்.. இதற்கு பெருவரியான வெகுசனப் பத் திரிகைகள் அதற்கு துணை போயின. அதன் தாக்கம் தற்போது மிகவும் அபாயகரமான பரிணமித்துள்ளது. அண்மையில் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள இருபாலர் கல்விபயிலும் ஒரு பள்ளியின் வருகைப் பதிவேட்டை பார்க்க நேர்ந்தது.

மொத்தம் 63 பெயர்களில் இரண்டு இஸ்லாமியப் பெயர்கள் 13 கிறிஸ்துவப் பெயர்கள். தவிர, மற்றவை எல்லாம் இப்படி இருந்தன.

மோக்ஷா, க்ரியா, ப்ரத்திக், சைலேஷ், ஹித்தேஷ், கிஷன், ச்சரண், தஹனுஷ், அபய், ப்ரபுல்

பெண்பால் பெயர்கள்: அம்ரிதா, ஷஹானா, சுகிதா, ஆஸ்தா, மேக்னா ஊர்மி, ப்ரபா, க்ருத்திகா, அவதன்யா

இதில் யாரும் ஹிந்திக்காரர்களின் குழந்தைகள் இல்லை. எல்லாம் நம் தமிழ் குடும்பக் குழந்தைகள் தான், ஆறுதலாக எட்டு பெயர்களில் தமிழ் வாடை அடிப்பது தெரிகிறது. அவை தனித் தமிழ்ப் பெயர்கள் அல்லவென் றாலும், தமிழ் என்று கருதியேனும் வைக்கப்பட்டவையாக இருக்கக் கூடியவை.

குமார், ராசு, செல்வன், சரசுவதி, கலையரசி, அற்புதம், புனிதா மாரிச் செல்வி.

இது குறித்து அப்பள்ளியின் தமிழா சிரியையிடம் கேட்ட போது அவர் கூறியது குழந்தைகள் பிறப்பதற்கு முன்பாகவே தற்போது எண் கணித சோதிடர்களின் ஆலோசனைகளைக் கேட்க ஆரம்பித்து விடுகின்றனர். பிறரைப்பார்த்து பெயர் வைப்பதும் ஒரு கெட்டபழக்கமாகவே போய்விட்டது, முக்கியமாக எண்கணிதம் முறையில் பெயர் வைப்பது நாகரீகமாக கருதுகின்றனர், அதை பெருமையுடனும் கூறிக்கொள்கின்றனர் என்றார். இன்று எண்கணிதம் என்ற பார்ப்பனிய மூடத் தன சிந்தனையுடன் இந்த தமிழல்லாத பெயர்களை தங்கள் குழந்தைக்கு சூட்டத் துவங்குகின்றனர்.

சிறிதளவும் இனமானம் இல்லாமல் தங்கள் குழந் தைகளை தங்களின் அடையாளமில் லாமல் கூட வளர்க்கத்தயங்குவதில்லை, எண் கணிதம் ஆங்கில எழுத்துக் களைக்கொண்டு உருவானவை, இதற்கும் தமிழுக்கும் தொடர்பில்லை, அவரவருக்குக் கூட்டினால், தாங்கள் விரும்பும் கூட்டு எண் வந்தால் போட்டுக் கொள்ள வேண்டியது அவ்வளவே! ஆனால் இந்த முறை தமிழ் ஒலிப்பு முறைக்குப் பொருந்துமா? தமிழ் உச்சரிப்பிற்கு இயைந்துச் செல்ல முடியாத ஆங்கில எண்கணிதத்தால் தமிழனுக்கு என்ன ஆற்றல் வந்து விடப் போகிறது? ஆங்கிலப் பெயரிலேயே இந்த எண் கணித ஜோதிடத்தின் சரித் தன்மையை நிரூபிக்க முடியுமா இவர்களால்? நாளும் கோளும் நலிந் தோர்க்கில்லை, அதுபோல்

ஞானியர்க்கும் இல்லை ஒரு இன அடையாளத்தில் முதல் படி அவர் பெயரிலேயே அமைந்து விடுகிறது. (எ.கா) சீக்கியர்கள், மற்றும் வட இந்தியர்களை பெயரை வைத்தே தெரிந்து கொள்ளாம், ஆனால் இன்று தமிழ் நாட்டின் தலைநகரில் 70 விழுக் காடு குழந்தைகள் தமிழ்க் குழந்தைகள் தானா என்று அய்யம் தோன்றுகிறது.

காரணம் எண்கணித ஜோதிடம் என்ற ஏமாற்று வித்தையில் மூழ்கி தமிழன் தன்னையறியாமல் தனது அடை யாளத்தை துறந்து நிற்கிறான், 1950-களில் ஆப்ரிக்கா மற்றும் ஃபிஜி தீவு களில் வாழ்ந்த இரண்டாம் தலை முறைத்தமிழன் இன்று தன்னை தமி ழன் என்று அடையாளம் காணமுடி யாத அளவிற்கு அங்கு குடியேறிய வட இந்தியர்களின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கும் சூட்டி இன்று தமிழர்களாக இருந்தும் அவர்கள் மொழியடையாளம் இல்லாமல் போய்விட்டார்கள்.

இந்த நிலை இன்னும் தமிழக நகரங்களில் மெல்ல மெல்ல வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் ஓரிரு நூற்றாண்டுகளில் தமிழ்பெயர்கள் இல்லாத நிலை போய் நமது மண்ணிலேயே நமது இன அடையாளத்தை இழந்து வாழும் சூழல் வந்துவிடும் போலிருக்கிறது.

- சரவணா இராசேந்திரன்

தமிழ் ஓவியா said...


நீங்கள் தொடர்ந்து தொலைக்காட்சி பார்ப்பவர்களா?

ஆஸ்திரேலியாவில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. டி.வி. பார்ப்பவர்களுக்கு வாழ்வில் உடல் ரீதியாக என்ன விளைவுகள் உண்டா கின்றன என்பதைப் பற்றிய ஆராய்ச் சியே அது. தேசிய புள்ளி விவர துறைமற்றும் ஆஸ்திரேலியா நீரிழவு, உடல் பருமன், வாழ்வு முறை ஆராய்ச் சியில் பெறப்பட்ட புள்ளி விவரங்களை வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது. டி.வி. பார்க்கும் பழக்கம் உள்ள சாதாரண ஆஸ்திரேலியர்களின் வாழ்நாள் காலத்தின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. முடிவு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

பொதுவாக, தினமும் சில மணி நேரம் டி.வி. பார்க்கும் பழக்கமுள்ள ஒருவரின் வாழ்நாள் 4.8 வருடங்கள் குறைவதாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள், டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 22 நிமிடம் வாழ் நாளை இழப்பதாக கணக்கிட்டுள்ளனர். சராசரியாக தினசரி 6 மணி நேரம் டி.வி. பார்ப்பவர்களையும், டி.வி.யே பார்க்காதவர்களையும் ஒப்பிட்டு இந்த முடிவுக்கு வந்தார்கள். உடல் உழைப்பின்றி சும்மா இருப்பது, உடல் பருமனாக இருத்தல், புகைப்பிடித்தல் போன்று தொடர்ந்து டி.வி. பார்ப்பதும் பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமையும் என்பதும் தெரிய வந்துள்ளது.

வாழ்வு முறையில் நம்முடைய பல பழக்கங்களே நமக்கு பிரச்சினைகள் தோன்ற காரணமாக அமைவதால், நமது அன்றாட நடைமுறைகளை எச்சரிக்கையோடு அமைத்துக் கொள் வதே நல்லது. பின் விளைவுகளையும், கஷ்டங்களையும், நஷ்டங்களையும் தவிர்க்கலாம். கொஞ்சம் மன உறுதியிருந்தால் இதுசாத்தியமே.

தமிழ் ஓவியா said...


ஜாதிப் பேரணிகளுக்குத் தடை:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜாதி அடிப்படையிலான பேரணிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த உத்தரவு மாநிலம் முழுவதற்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ள நீதிமன்றம், இது தொடர்பாக மாநில அரசு தேர்தல் ஆணையம் மற்றும் பிரதான கட்சிகளுக்கு அறிவிக்கை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மோதிலால் யாதவ் என்ற வழக்குரைஞர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் உமாநாத் சிங், மகேந்திரதயாள் ஆகியோரடங்கிய அமர்வு இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.

சமீப காலமாக மாநிலத்தில் ஜாதி வாரியான பேரணி, கூட்டங்கள் அதிகம் நடைபெறுகின்றன. அரசியல் கட்சிகள் ஜாதி வாரியாக பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என தனித்தனியாக ஜாதி ரீதியில் பேரணி, கூட்டங்களை நடத்துகின்றனர். இது போன்ற கூட்டம், பேரணிகள் மாநிலத்தில் சமூக ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் என்றும் இது அரசியல் சாசன நடைமுறைக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மாநில அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் புல்புல் கோடியால் ஆஜரானார். இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தேர்தல் ஆணையம் காங்கிரஸ், பா.ஜ.க., சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டிருந்தன.

சமீபத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 40 மாவட்டங்களில் பிராமணர்கள் சம்மேளனம் பேரணி நடத்தியது. இதில் ஒன்றில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பங்கேற்றார். இதே போல சமீபத்தில் முஸ்லிம் சம்மேளனம் ஆளும் சமாஜ்வாதி கட்சி ஆதரவோடு பெரும்பாலான மாவட்டங்களில் பேரணியை நடத்தியது.

இந்த இரண்டு சம்பவங்களைத் தொடர்ந்து தொடரப்பட்ட பொது நல வழக்கில் இத்தகைய தீர்ப்பை நீதி பதிகள் அளித்துள்ளனர். காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

தமிழ் ஓவியா said...


அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து உழைப்பேன் தொல்.திருமாவளவன் அறிவிப்பு


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனின் எடைக்கு எடை நாணயம் மற்றும் பொற்காசுகள் வழங்கப்பட்டது (சென்னை, 16.8.2013).

சென்னை, ஆக.17- ஏழை-எளிய மக்களுக் காக, சமூக நல்லிணக்கத் திற்காக, தமிழக மாநில உரிமைகளுக்காக புரட் சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் வழி யில் தொடர்ந்து உழைப் பேன் என்று தொல். திருமாவளவன் எம்.பி. அறிவித்தார்.

விடுதலை சிறுத்தை கள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் பொன்விழா சென்னை யில் நேற்று (16.8.2013) நடைபெற்றது. சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடை பெற்ற விழாவில் விடு தலை களத்தில் வெடித்த கிழக்கு எனும் தலைப் பில் பாவலர் தணிகைச் செல்வன் தலைமையில் கவியரங்கம் நடைபெற் றது. இதில் கவிஞர்கள் யுகபாரதி, அண்ணா மலை, தமிழமுதன், இளையகம்பன், நந்த லாலா, கிருதியா ஆகி யோர் கலந்துகொண்டு பேசினார்கள். ஜெயா குழுவினரின் நாட்டிய அரங்கமும், ஸ்டீபன் ராயல் குழுவினரின் இசையரங்கமும் நடை பெற்றது. தொல்.திரு மாவளவனுக்கு எடைக்கு எடை நாணயம் மற்றும் பொற்காசுகளும் வழங் கப்பட்டன.

விழாவில் மறைந்த திரைப்பட பாடலாசிரி யர் கவிஞர் வாலி உரு வப் படம் திறக்கப்பட் டது. உருவப் படத்தினை திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் தொல். திரு மாவளவனின் பொன் விழா மலரும் வெளி யிடப்பட்டது.

நிகழ்ச்சியின்போது, தொல்.திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களி டம் கூறியதாவது:-

கடந்த ஆண்டு ஆகஸ்டு 2012 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு வரை பொன்விழாவாக கொண்டாடப்பட்டு, பொற்காசுகள் திரட்டப் பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்பதற்காக இந்த பொன்விழாவை பயன் படுத்தி, இதுவரை 22 கிலோ தங்கம் திரட் டப்பட்டு இருக்கிறது. பொன்விழாவின் நிறைவு விழாவாக வருகிற 31 ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டை காம ராஜர் அரங்கில் தி.மு.க. தலைவர் கலைஞர், திராவிடர் கழக தலை வர் கி.வீரமணி, கவிகோ அப்துல் ரகுமான் ஆகி யோர் தலைமையில் வாழ்த்தரங்கம் நடக் கிறது.

நாளை (இன்று) என்னுடைய 51 ஆவது பிறந்தநாள். ஏழை-எளிய மக்களுக்காக, சமூக நல்லிணக்கத்திற்காக, தமிழக மாநில உரிமை களுக்காக புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் வழியில் தொடர்ந்து உழைப் பேன் என்ற உறுதியை பிறந்தநாள் செய்தியாக தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய அரசு கொண்டு வருகிற உணவு பாதுகாப்பு சட்ட மசோ தாவை விடுதலை சிறுத் தைகள் கட்சி ஆதரிக் கிறது. ஆனால் அந்த சட் டத்தில் உள்ள தானிய கையிருப்பு இல்லாத நிலையில், சப்டியூட் டாக பணம் வரும் முறையை மாற்றி அமைக்க வேண்டும். ஒரு நபருக்கு 5 கிலோ வில் இருந்து 10 கிலோ வாக உயர்த்தி வழங்க வேண்டும். எந்த நிலை யிலும் தானியமாகவே வழங்க வேண்டும்.

இவ்வாறு தொல். திருமாவளவன் கூறி னார்.

தமிழ் ஓவியா said...


431 பெண்கள்


சென்னைப் பல் கலைக் கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. முதல் அமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா கலந்து கொண்டு பட்டமளிப்புரை நிகழ்த்தியுள்ளார். இதில் குறிப்பிடத்தக்கது என்ன? முனைவர் பட்டம் (ஞா.ன) பெற்றவர்கள் மொத்தம் 980 என்பதில் பெண்கள் மட்டும் 431 எனும் தேனினும் இனிக் கும் சுவைக்கும் தகவ லாகும்.

ஒரு கணம் நினைப் போம்! அடுப்பூதும் பெண் களுக்குப் படிப்பு எதற்கு என்றனர். (இன்று ஊது கிற அடுப்பே கிடையாது - அது வேறு!)
பெண்களும், வைஸ் யர்களும் சூத்திரர்களும் பாவ யோனியில் பிறந்த வர்கள் என்கிறது கீதை. (அத்தியாயம் 9 - சுலோ கம் 3)

பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுவது பாதகமா காது என்கிறது மனு தர்மம்.
(அத்தியாயம் 11 -சுலோகம் 65)

பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்தபின் பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல் ஸ்திரிகள், தன் சுவாதீன மாக ஒரு போதும் இருக் கக் கூடாது என்று கூறு வதும் மனுதர்மம் தான். (அத்தியாயம் 5 சுலோகம் 148).
பொதுவாக இந்து சமூகத் தத்துவப்படி எல்லா ஜாதி பெண்களும் பஞ்சமர்களுக்குக் கீழ்ப் பட்டவர்கள்தான்.
இத்தகு ஒரு சமூக அமைப்பில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் ஒரே பாய்ச்சலாக டாக்டரேட்! பட்டம் பெறுகிறார்கள் என்றால் இதன் விளைச் சலை ஒரு கணம் எண் ணிப் பார்ப்போம்.

மனுதர்மத்தைக் கொளுத்திய தந்தை பெரியாரை நன்றியுடன் நினைவு கூர்வோம். பெண்ணுரிமை பற்றி 1925-களில் பேசிய தன்மான இயக்கத்தை நினைவுத்துப் பார்ப்போம்!

கல்விக் கண்களைத் திறந்தவர் என்று தந்தை பெரியார் அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட பச்சைத் தமிழரை நெஞ்சில் நிறுத்துவோம்.
சமூக நீதிக்கான விதை விதைத்து வளர்த்த திராவிட இயக்கத்தை நீதிக்கட்சியை நினைத்து நெக்குறுவோம்!
வாழ்க பெரியார்!
குறிப்பு: உலகில் பெண்களுக்கான முதல் பொறியியல் கல்லூரி யான பெரியார் மணி யம்மை மகளிர் பொறி யியல் கல்லூரி தஞ்சை வல்லத்தில் 1988இல் துவக்கப்பட்டது. - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பகத் சிங் சர்ச்சை தேவையற்றது பிரதமர் கருத்து


புதுடில்லி, ஆக. 18- இந்திய சுதந்திரப் போராட்ட சரித்திரத் தில் பகத்சிங்கின் பங்க ளிப்பை நீக்கிவிட முடி யாது என்றும் அவரது தியாகி அந்தஸ்து பற்றிய சர்ச்சை தேவையற்றது என்றும் பிரதமர் மன் மோகன் சிங் கூறியி ருக்கிறார்.

புதுடில்லியில் இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக் கையில் தெரிவித்திருப் பதாவது: தேசத்தின் நலனுக்காக பகத் சிங் செய்த மகத்தான தியா கத்தை யாரும் மறுக்க முடியாது.

இது தொடர்பாக ஆவணங்கள் இருக் கிறதா இல்லையா என்ற கேள்விக்கு இடமில்லை. அவரது தியாகம் ஆவ ணங்களைச் சார்ந்த விஷயமல்ல.
இந்திய சுதந்திரப் போராட்ட சரித்திரத்தை பற்றிப் பேசும்போது பகத்சிங்கின் பங்க ளிப்பை நீக்கிவிட முடி யாது. பெருமை மிகுந்த நமது தேசிய பாரம்பரி யத்தின் ஒரு பகுதியாக அவர் இருக்கிறார்.

இந்தியாவின் சிறந்த எதிர்காலத்தையொட்டி, பகத்சிங்கும் மற்ற சுதந் திரப் போராட்ட வீரர் களும் செய்த உயிர் தியா கத்துக்காக நம் நாடு என் றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

இது தொடர்பாக சர்ச்சை எழுவது அர்த்த மற்றது. அது நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் பட்ட துன்பத் தையும், செய்த தியாகத் தையும், புண்படுத்துவ தாக அமைந்துவிடும். இது போன்ற சர்ச்சை யைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் தமது அறிக்கையில் குறிப்பிட் டிருக்கிறார்.
முன்னதாக பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தியாகிகளாக அறிவிக்கப்பட்டார்களா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், இது தொடர்பாக எந்த ஆவ ணமும் இல்லை என்று பதில் அளித்தது. இத னைத் தொடர்ந்து பிர தமர் அறிக்கை அளித் திருக்கிறார்.

தமிழ் ஓவியா said...


இலங்கை - காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால்... தமிழர் இல்லங்களில், வணிக நிலையங்களில் கறுப்புக் கொடி! மாபெரும் இரயில் நிறுத்தப் போராட்டம்!



- டெசோ தலைவர் கலைஞர் போர்ப் பிரகடனம்!

சென்னை, ஆக.18- தமிழர்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை மத்திய அரசு மதித்திட வேண்டும் அதை அலட்சியப்படுத்தக்கூடாது எனவும் இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தமிழர்கள் இல்லங்கள் தோறும், வணிக நிலையங்கள்தோறும் கறுப்புக் கொடி ஏற்றப்படும் என்றும், ரயில் மறியல் நடைபெறும் என்றும் மத்திய அரசுக்கு டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

இலங்கை விடுதலை அடைவதற்கு முன்பும், விடுதலை அடைந்த பின் னரும்; பண்டித நேரு, அன்னை இந்திரா அம்மையார், இளந்தலைவர் ராஜீவ் ஆகியோர் காலத்திலும்; ஈழத் தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட எந்த ஒப்பந்தத்தையும் நிறைவேற் றாமல் அவற்றை மீறி, சர்வதேசக் கண் ணோட்டத்தில் நம்பகத் தன்மையை முழுவதுமாய் இழந்து நிற்கிறது இலங்கை. இந்தியாவுக்கும், தமிழர் களுக்கும், தமிழக மீனவர் களுக்கும் எதிராகவே இலங்கை தொடர்ந்து நடவடிக்கையை மேற் கொண்டு வருகிறது.

13ஆவது சட்டத் திருத்தம்

ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தின் படி உருவான இலங்கை அரசமைப்பின் 13ஆவது சட்டத் திருத்தத்தை நீர்த்துப் போகச் செய் வதற்கான அனைத்து வகை முயற்சி களையும் சிங்களப் பேரினவாத அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இன்றைக்கு வந்துள்ள செய்தியில் கூட, கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டியதாக இலங்கைக் கடற்படை யினரால் கைது செய்யப்பட்ட 49 மீனவர்களில் 8 பேர் மட்டுமே விடு தலை செய்யப் பட்டிருக்கிறார்கள். எஞ்சிய 41 பேருக்கு ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை சிறைக்காவலை நீட்டித்து மன்னார் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக மீனவர்களைக் கைது செய் வதும், அவர்களை இலங்கைக்குக் கொண்டு சென்று நீதி மன்றத்தில் நிறுத்துவதும், அண்மைக் காலமாக தொடர்ந்து இலங்கைக் கடற்படை யினர் கடைப்பிடித்து வரும் நடை முறையாகும். தமிழக மீனவர்களின் கதி பற்றி நமது வேண்டுகோளின்படி இந்திய அரசு இலங்கைக்குப் பல முறை கடிதங்களை எழுதியும், தூது வரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியும் அதைப் பற்றி இலங்கை அரசு இம்மியளவுகூட காதில் போட்டுக் கொள்வதாகத் தெரிய வில்லை. இந்தச் சூழ்நிலையிலேதான் தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும், ஏன் அனைத்துத் தமிழ் மக்களும், உலகத் தமிழர்களும் ஒருமனதாக இந்திய அரசு நவம்பர் திங்களில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நேரில் அழைப்பு விடுப்பதற்காக 18-8-2013 அன்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ், டெல்லிக்கு வருவதாக செய்தி வந்துள்ளது. இந்திய அரசு புறக்கணித்தால்... இந்த நேரத்தில் இந்தியப் பிரதமர்; தமிழர்களின் கோரிக்கையை அலட் சியப்படுத்தாமல்; மனதிலே கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்று திட்டவட்ட மாகவும், வெளிப்படையாகவும் தெரிவிக்க வேண்டுமென்று வலியுறுத் திக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளையும் இந்திய அரசு புறக் கணிக்குமானால், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள் கின்ற நிகழ்வைக் கண்டித்து, தமிழ் மக்களின் உணர்வையும், கண்டனத் தையும் வெளிப்படுத்த; அந்நாளில் தமிழர் இல்லங்கள்தோறும், வணிக நிலையங்கள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றுதல், ரயில் நிறுத்தப் போராட்டம் போன்றவைகளில் ஈடு பட நேரிடும் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்



பு(யு)த்தி!

செய்தி: பிஜேபி வெற்றி பெற சிறுபான் மையினரின் ஆதரவும் தேவை!
-நரேந்திரமோடி

சிந்தனை: அடடே! எப்படிப்பட்ட ஞானோ தயம்! இது தேர்தல் கால பு(யு)த்தி என்று யாருக் குத் தான் தெரியாது!

தமிழ் ஓவியா said...


பட்டுப் புடவையை இரவல் கொடுத்து பாயைத் தூக்கிக் கொண்டு அலைந்த கதை கச்சத்தீவை ஒப்படைக்க முடியாதாம்! இலங்கை அமைச்சர் பெரீஸ் திமிர்


புதுடில்லி, ஆக.19- கச்சத்தீவை இந்தியா விடம் திரும்ப ஒப்ப டைக்கும் பேச்சுகே இடமில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரீஸ்தெரிவித்தார்.
இலங்கைத் தலை நகர் கொழும்பில் காமன் வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் வரும் நவம்பர் மாதம் 15 முதல் 17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

காமன்வெல்த் நாடு கள் கூட்டத்தில் பங் கேற்க வருமாறு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சார்பில், பிரதமர் மன்மோகன் சிங்கை அழைப்பதற் காக பெரீஸ் ஞாயிற்றுக் கிழமை டில்லி வந்தார். அவர் மன்மோகன் சிங்கை திங்கள்கிழமை காலையிலும் வெளி யுறவு அமைச்சர் சல் மான் குர்ஷிதை பிற்பக லிலும் சந்தித்துப் பேச வுள்ளார்.

இது தொடர்பாக டில்லியில் செய்தியாளர் களிடம் பெரீஸ் ஞாயிற் றுக்கிழமை கூறியது:

"காமன்வெல்த் நாடு கள் அமைப்பில் அங் கம் வகிக்கும் ஆசியா வின் மிகப் பெரிய நாடு இந்தியா. அதன் பிரத மர் என்ற முறையில் கொழும்பில் நடை பெறும் கூட்டத்தில் மன்மோகன் சிங் பங் கேற்பதை முக்கியமான தாகக் கருதுகிறோம்.

கச்சத்தீவு விவகா ரம்: கச்சத்தீவு ஒப் பந்தம் தொடர்பாக தமிழகக் கட்சிகள் பிரச்சினை எழுப்புவது சரியல்ல. அது முடிந்து போன விவகாரம்.

கச்சத்தீவை இலங்கை வசம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் முறைப் படி அப்போதைய இந் தியப் பிரதமர் இந்திரா காந்தி தான் கையெழுத் திட்டுள்ளார். அதன்படி, சர்வதேச எல்லைக்குள் பட்ட கச்சத் தீவு இலங் கையின் கட்டுப்பாட் டில் உள்ளது.

மேலும், ஒப்பந்தத் தில் இலங்கை மீனவர் களுக்கும், இலங்கைக் கும் கச்சத் தீவில் உள்ள உரிமைகள் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்த விஷ யத்தில் இந் திய அரசின் நிலை தெளி வாக உள்ளது. எனவே, கச்சத்தீவை இந்தியா விடம் திரும்ப ஒப் படைக்கும் பேச்சுக்கே இடமில்லை.

மீனவர்கள் விவ காரம்: இலங்கை கடல் பகுதிக்கு வெகு அருகே, கரையில் இருந்து 700 மீட்டர் தொலைவு அள வுக்குத் தமிழக மீனவர் கள் வந்து மீன்பிடிக்கின் றனர். ஏற்கெனவே, இலங்கையில் உள்நாட் டுப் போரின் போது கடற்புலிகளால் (விடு தலைப்புலிகள் அமைப்பின் கடல் பிரிவு) இலங்கைத் தமி ழக மீனவர்கள் பாதிக் கப்பட்டனர். போருக் குப் பின்பு அவர்கள் சார்ந்துள்ள கடல் பகு திக்குத் தமிழக மீன வர்கள் வருவதால், தங் களின் மீன்பிடி வாழ்வா தாரம் பாதிக்கப்படுவ தாக எங்கள் நாட்டு மீன வர்கள் கருதுகின்றனர்.

மனிதாபிமானம் தொடர்புடைய இரு நாட்டு மீனவர்கள் விஷ யத்தில் இரு தரப்பும் தங்களுக்குள்ளாகவே பரஸ்பரம் பேச்சு நடத்தி தீர்வு காண முயல வேண் டும் என்றார் பெரீஸ்.

தமிழ் ஓவியா said...


காரணம்



வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கிவிட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...


சபாஷ் நிதி அமைச்சர் ப. சிதம்பரம்!

இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கக் கூடிய ப. சிதம்பரம், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் - தமிழர்! அந்த வகையில் நமக்குப் பெருமை உண்டு.
நீடாமங்கலத்தையடுத்த வையகளத்தூர் எனும் ஊரில், நீதிக்கட்சித் தலைவராக விளங்கி அரும் பெரும் சாதனைகளைக் குவித்த - பார்ப்பனர் அல்லாதார் சமூகத்திற்குப் பல நன்மைகளைச் செய்த பெருமகன் சர். ஏ.டி. பன்னீர்செல்வம் அவர் களின் சிலையைத் திறந்து வைத்து, உரையாற்றி யுள்ளார், இந்தியாவின் நிதி அமைச்சர் (17.8.2013).

அந்நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் ஆற்றிய உரையில் சில முக்கியமான கருத்துகளும், அறி விப்புகளும் சமூகநீதிச் சிந்தனையாளர்கள் மத்தி யில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடியவையாகும்.

முதலாவதாக உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் சில வாரங்களுக்குமுன் அளித்த தீர்ப்பைப் பற்றியதாகும்.

அந்தத் தீர்ப்பு இந்தியா முழுமையும் உள்ள சமூக நீதியாளர்கள் மத்தியிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு அலைகளைத் தோற்றுவித்தது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் டில்லியில் போராட்டம் நடத் துவோம் என்று அறிவித்தார். நாடாளுமன்றத் திலும் உறுப்பினர்கள் கொந்தளித்து எழுந்தனர் - நாடாளுமன்றமே முடங்கி விட்டது. அதனைத் தொடர்ந்து, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் அவையில் முக்கிய அறிவிப்பினை உறுதியைக் கொடுத்தார். உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்படும்; அதிலும் நியாயம் கிடைக்காவிடின் இந்திய அரசமைப்புச் சாசனத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஏ.டி. பன்னீர்செல்வம் அவர்களின் சிலை திறப்பு விழாவில், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களும் அதற்கு உறுதியளித்து, உரை யாற்றியது வரவேற்கத்தக்கது.

தன் பொது வாழ்வை சமூகநீதிக்காக ஒப்படைத்த தலைவர் ஏ.டி. பன்னீர்செல்வம் பார்-அட்-லா அவர்களின் சிலை திறப்பு விழாவில் அதுவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு விழாவில் உரையாற் றுகையில் அந்த நிகழ்ச்சியில் அறிவித்தது மிக மிகப் பொருத்தமே!

இரண்டாவதாக இடஒதுக்கீடு கூடாது என்பவர்கள் யார் என்பதை நம்மைப் போல் வெளிப்படையாகக் கூறாவிட்டாலும், கேட்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அடையாளம் காட்டிப் பேசினார். பல யுக்திகளைக் கையாளக் கூடியவர்களாகவும், நீதிமன்றத்திற்கும் சென்று காரியங்களைச் சாதிக்கக் கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கிறார்கள். நிருவாகத்தில் முக்கிய பொறுப்புகளில் அவர்கள் இருந்து கொண்டு அந்த வேலையைச் செய்கிறார்கள் என்பதை அவருக்கே உரித்தான முறையில் நயமாகச் சுட்டிக் காட்டி யுள்ளார்.

தமிழ்நாட்டு மக்கள் இதனைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களே; அந்த அளவுக்குத் தந்தை பெரியாரால், திராவிடர் இயக்கத்தால், நம் மக்கள் பக்குவப்படுத்தப்பட்டவர்கள் தானே!

காரைக்குடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் (16.3.2013) ஏடுகள் எல்லாம் அவாள் ஆதிக்கத்தில் இருப்பதைச் சுட்டிக்காட்டி நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பேசியிருந் ததையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

பொதுவாக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலே, டில்லியிலே ஒரு கணிப்பு உண்டு. அவர்கள் பெரியாரின் தாக்கத்தைப் பெற்றவர்கள் - பார்ப்பனர் அல்லாதார் எனும் உணர்வை ஏதோ ஒரு வகையில் உள் வாங்கிக் கொண்டவர் களாகவே இருப்பார்கள் என்ற கணக்கு - மதிப்பீடு உண்டு.

நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் உரையில் அந்த உணர்வு மேலிட்டது - வரவேற்கத் தக்கது. உண்மை நிலையைத்தான் அவருக்கே உரிய தனித்தன்மையில் பேசி இருக்கிறார். அதற் காக அவரைப் பாராட்ட கடமைப்பட்டுள்ளோம்; மிக முக்கியமான பொறுப்பில் இருப்போர்க்கு இத்தகு உணர்வு இருந்தால் கோடானு கோடி மக்களின் மத்தியிலே நல்ல நம்பிக்கை ஏற்படும் அல்லவா!

தமிழ் ஓவியா said...


பைலட்டாக விரும்பிய எனது கனவு நிறைவேறவில்லை : அப்துல்கலாம்


புதுடில்லி, ஆக.19- இந்திய விமானப் படை பைலட்டாக விரும் பியதாகவும், ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் முன் னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.

"கனவுகளை நனவாக்குவதற்கான எனது பயணம்' என்ற அவரது புதிய புத்தகத்தில் இந்தத் தகவலை தெரி வித்துள்ளார். புத்தகத்தில் அவர் இது தொடர்பாக தெரிவித்திருப்பதாவது:

இந்திய விமானப்படையில் பைலட்டாக வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. எனக்கு டேராடூனில் உள்ள இந்திய விமா னப்படை அலுவலகத்திலிருந்தும், டில்லியில் உள்ள பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் டில்லி யில் தொழில்நுட்ப மேம் பாடு மற்றும் உற்பத்தி இயக்குநரகம் (டிடிடிபி) ஆகியவற்றிலிருந்து நேர் முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பு வந்தது.

இதில், டிடிடிபி நடத் திய தேர்வில் எளிதாக வெற்றி பெற்றேன். ஆனால், இந்திய விமானப் படை நடத்திய தேர்வில் பங்கேற்ற 25 பேரில் நான் 9-ஆவது இடத்தைப் பிடித்தேன்.

மொத்தம் 8 இடங்களே இருந்த தால், விமானப்படை பைலட்டாக வேண்டும் என்ற எனது கனவு தோல் வியடைந்தது' என குறிப் பிட்டுள்ளார் கலாம்.
147 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகத்தில், தன் மீது ஆழமான அன்பு வைத்திருந்தவர்களைப் பற்றி கலாம் எழுதியுள் ளார். தன் தந்தை ஒரு படகை உருவாக்கியதைப் பார்த்த அனுபவம், தனது 8 வயதில் நாளிதழ்கள் விற்பனையில் ஈடுபட்ட அனுபவம் உள்ளிட்ட பல விஷயங் களை இந்நூலில் குறிப் பிட்டிருக் கிறார் கலாம்

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவு சமுதாயம் மலர...


மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்

நூலகத்தில் படித்துக் கொண்டி ருந்த போது, நண்பர், ஒரு பார்ப்பன இதழைத்தந்து என்னய்யா இது... பெரிய மோசடியா இருக்கு. இதைப் படித்துப் பாருங்கள் என கோபம் கொப்பளிக்கக் கூறினார்.

பார்த்தேன், படித்தேன் அதில் திராவிட மாயை - ஒரு பார்வை - 73 அபத்தமான கொள்கை என்ற தலைப் பில் ஒரு கட்டுரை. தென்னாட்டில் சாதி வேற்றுமையே இல்லாமல் இருந்ததென்றும், வட நாட்டு ஆரியர் களாகிய பிராமணர்கள் அதைக் கொண்டு வந்து புகுத்தி விட்டார்கள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

இதைப் போன்ற அபத்தமான கொள்கை வேறு எதுவும் இருக்க முடியாது என ஒரு பச்சைப் புளுகை கல்கி எழுதியதாக மேற்கோள் காட்டி எழுதப்பட்டி ருந்தது!
அதை என்னிடமிருந்து வாங்கிப் படித்த இன்னொரு தோழர், அது உண்மை தானே சார்! எனக்கேட்க.. நான் உடனே அவரிடம் கூறினேன். இது ஒரு பார்ப்பனர் ஏடுதானே? இது ஒரு பொது நூலகம் தானே? மக்கள் வரிப்பணத்தில், இயங்குவது தானே? அப்படியானால், இந்த நூலகத்திற்கு ஏன், பகுத்தறிவு இதழ்களான விடுதலை வருவதில்லை? உண்மை வருவதில்லை? முரசொலி வருவதில்லை? தினமணி, தினமலர் விகடன், கல்வி மற்றும் பக்தியின் பெயரால் பகுத்தறிவைப் பாழ்படுத்தும் யாருமே பிரித்துக்கூட பார்க்காமல் மூலையில் கிடக்கிற ஏராளமான மாத, வார, நாளிதழ்கள் மட்டும் மேசையில் கிடக்கிறதே... இதற்கு என்ன பொருள்? அவைகள் திராவிடர் நலன்காக்கும் ஏடுகள்! இவைகள் பார்ப்பனர்களை கொழுக்க வைக்கும் ஏடுகள். இது தானே பொருள்? நன்றாக சிந்தித்துப் பாருங்கள்! என்றேன்.

அதோடு மட்டுமல்ல, மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றனார் எழுதிய பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி! என்ற என்னிடமிருந்த நூலை அவரிடம் தந்து இதையும் படியுங்கள் உங்கள் சந்தே கத்தைத் தீர்க்கும் பதில்கள் இதில் ஆதா ரங்களோடு விளக்கப்பட்டிருக்கின்றன என வேறொரு நண்பருக்கு எடுத்துச் சென்ற புத்தகத்தை அவரிடம் தந்தேன்! நூலகத்தில் (அது கிராம நூலகமாக இருந்ததால் எல்லோருமே எனக்கு அறிமுகமானவர்களாக இருந்ததால் தான் நூலகரும் எனக்கு நண்பர் என்பதாலே தான் இப்படி மனம் திறந்து பேச முடிந்தது) இது கிடைக்குமா அய்யா? என ஒருவர் கேட்க திராவிடர் ஆண் டால் இது கிடைக்கும்! என்றேன். அனை வரும் சிரித்தனர்! அந்தச் சிரிப்பிலே... சிந்தனையும் கலந்திருந்தது!

ஆம்! கொள்கைப் பரப்புரையே... நமது தலையாய தொண்டறமாக இருந்தால் விரைவிலே தமிழினம் மீண்டும் விழித் தெழும்! மறுநாள் மாலை அந்த புத்தகத் தோடு வந்த நண்பர், அய்யா இது போன்ற நூல் வேறு ஏதாவது இருந்தால் தாருங் கள் எனக்கேட்க என்னிடமிருந்த அய்யா, ஆசிரியர், அண்ணா, கலைஞர் ஆகி யோர் நூல்களைக்காட்டி ஒவ்வொன் றாகப் படியுங்கள் என்று சொன்னேன். ஒரு நூலே ஒருவரது உள்ளத்தை மாற்றும் திறன் படைத்தது என்றால் ஏனைய நூல்கள்?
போகின்ற கூட்டங்களிளெல்லாம், அய்யா புத்தகங்களை மலிவு விலையில் விற்பனை செய்து வந்ததும், இப்பொ ழுது தாங்களும் அதனை பின்பற்றி வருவதும் எதற்கென்பது இது போல், அனுபவப்பட்டவர்கள் நன்கு உணர் வார்கள்! படித்து தெளிவும் பெறு வார்கள்.

எழுத்தும், பேச்சும், ஏடுகளும் தான் திராவிடர் இயக்கங்களின் ஆணிவேர் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்வார்களேயானால் பார்ப் பனீயம் வெகு விரைவில் இந்நாட்டை விட்டு ஒழியும்! பகுத்தறிவு சமுதாயம் மலரும் என்பதில் சிறிதும் அய்ய மில்லை!

- நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


ஆடி மூடநம்பிக்கை ஆயுளை முடித்ததே!


ஆம்பூர், ஆக. 19- ஆம்பூர் அருகே கார்மீது லாரி மோதியதில், காரில் பயணம் செய்த ஒரே குடும் பத்தை சேர்ந்த மூவர் இறந்தனர்.
சென்னை, ராஜகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 55). இவரது மனைவி சாந்தி (வயது 45). இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகள் பிரியங்கா (வயது 19) சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இவர் களது மகன் கார்த்திக் (வயது 25) என்பவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

பெங்களூருவைச் சேர்ந்த கீதா (வயது 23) என்பவரை கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். ஆடி மாதம் வந்ததை அடுத்து கார்த்திக் குடும்பத்தினர் கீதாவை தாய் வீட் டிற்கு அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆடி மாதம் முடிந்த தால், கீதாவை தாய் வீட்டிலிருந்து கூட்டி வர நேற்று கார் ஒன்றில் ஜெயச்சந்திரன், சாந்தி, பிரியங்கா, மற்றும் கார்த்திக் ஆகிய நால்வரும் பெங்களூவுருக்கு பயணித்தனர். காரை கார்த்திக் ஒட்டி சென்றார்.

பிறகு பெங்களூருவிலிருந்து கீதாவை அழைத்துக் கொண்டு மீண்டும் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணி அளவில் கார் ஆம்பூரை கடந்து வாணியம்பாடியை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று கார் கட்டுப் பாட்டிழந்து சாலையை பிரித்திருக் கும் சிறிய தடுப்புச் சுவர்மீது ஏறியது. அப்போது எதிரே சென்னையி லிருந்து பெங்களூர் சென்று கொண் டிருந்த கண்டெய்னர் லாரிமீது மோதியது. இதில் கார் அப்பளம் போன்று நொறுங்கியது. மேலும் காரில் பயணித்த சாந்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தகவல் அறிந்த ஆம்பூர் காவல் துறையினர் விரைந்து வந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட் டனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பிரியங்கா மற்றும் கீதா ஆகியோர் மரணம் அடைந்தனர். ஜெயச்சந்திரனும், கார்த்திக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆம்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தமிழ் ஓவியா said...


மூழ்குவதும் சாவதும் தொடர் கதையா?



சுற்றுப் பயணம் செய்வோர், நீர் நிலை களில் மூழ்குவதும், சாவதும் தொடர் கதையாக உள்ளனவே.

கும்பகோணம் அருகே, குணசீலம் கோயிலுக்கு வந்த மூன்று இளைஞர் கள் காவிரியில் குளிக்கச் சென்று, சுழலில் சிக்கி, மரணம் அடைந்தனர். பழவேற்காடு ஏரியில் சாவு; சென்னை கோவளம் கடலில் குளிக்கச் சென்றோர் சாவு; என்று தொடர்கின்றனவே - இதன்மீது அரசு கவனம் செலுத்து கிறதா? தடுப்பு நடவடிக்கையை மேற் கொள்கிறதா? என்று தெரியவில்லை. மனித உயிர்கள் அதுவும் பொறியியல் படிக்கும் இளைஞர்கள் மரணம் என்பது எத்தகைய கொடுமை!

தமிழ் ஓவியா said...


சிறுமியைச் சீரழித்த சாமியார்


சென்னை, ஆக.19-மெரினாவில் 6 பேரால் பாலியல் வன்முறை செய் யப்பட்ட சிறுமி பர பரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார். சிறு மியை பாலியல் தொழி லுக்கு தள்ளிய சித்தர் கைது செய்யப்பட்டுள் ளர். சிபிசிஅய்டி காவல் துறையினரிடம், சிறுமி கொடுத்த வாக்குமூலம்:

என் பெயர் சுதா (14). (பெயர் மாற்றப்பட் டுள்ளது) தந்தை இறந்து விட்டார். என் அம்மா திருமலர் என்னை வளர்த் தார். கடந்த ஆண்டு 7 ஆம் வகுப்பு படித்தேன். படிப்பு சரியாக வர வில்லை என்று கூறி வயா சர்பாடி பி.வி. காலனி 24 ஆவது தெருவில் ஜோதிட நிலையம் மற்றும் ஆசி ரமம் அமைத்து குறி சொல்லும் அறவழி சித்தர் (48) என்பவரிடம் என் அம்மா அழைத்து சென்றார்.

அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒருநாள் நடு இரவு பூஜை செய் வதாகக் கூறி, தனி அறை யில் என் ஆடைகளை கழற்றி உடலில் விபூ தியை தடவி, தீர்த்தம் கொடுத்தார். நான் மயங்கி விழுந்ததும், என்னை அவர் பாலியல் வன்முறை செய்து விட் டார்.

அப்போது, என் அம்மா வீட்டுக்கு வெளி யில் காத்திருந்தார். நடந்த சம்பவத்தை அம்மாவிடம் கூறினேன். அதற்கு அவர், சித்தர் எது செய்தாலும், நமக்கு நன்மைதான் செய்வார் என்று கூறினார். இதன் பின்னர், அடிக்கடி என்னை சித்தரிடம் என் அம்மா அழைத்து செல்வார்.

அவரும் என்னை அடித்து மிரட்டி பல முறை பாலியல் வன் முறை செய்தார். பின்னர், சென்ட்ரல் ரயில் நிலை யம் அருகே கடிகார கடை வைத்து இருக்கும் குமார் என்பவரிடம் ஒப்படைத்தார். அவரும் என்னை அடித்து பல முறை பாலியல் வன் முறை செய்தார். பின்னர், அவர் என்னை செல்வம் என்பவரிடம் ஒப்ப டைத்தார்.

செல்வம் குடிபோதை யில் என்னுடன் பல முறை தவறாக நடந்து கொண்டார். பின்னர் செல்வம், அவரது மனைவி ஜெயா, அவரது தோழி லதா ஆகியோர் என்னை வைத்து பாலி யல் தொழிலில் ஈடுபடுத் தினர்.

இந்த நிலையில், கடந்த மாதம் செல்வத் தின் வீட்டில் இருந்த போது, அதிகாலையில் எழுந்து, அவர் சட்டைப் பையில் இருந்து ரூ.300 அய் எடுத்துக்கொண்டு, ரயில் மூலம் திருப்பதி சென்றேன்.

கையில் வைத்திருந்த பணத்தில் மாங்காய் வாங்கி, கோயில் வளாகத்தில் வியாபாரம் செய்தேன். நாள் ஒன் றுக்கு ரூ.200வரை சம் பாதித்தேன். ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, இர வில் சாமி தரிசனம் செய் யும் வரிசையில் சென்று தூங்கிவிடுவேன்.

தினமும் சாமி தரி சனத்துக்கு இரவில் வரி சையில் நிற்பதை பார்த்த அங்குள்ளவர்கள், சந் தேகப்பட்டு என்னை காவல்துறையில் பிடித் துக் கொடுத்து விட்ட னர். அவர்கள் மூலம் சைல்டு ஹெல்ப் லைன் நிர்வாகிகளிடம் ஒப்ப டைக்கப்பட்டு, சென் னைக்கு அழைத்து வரப் பட்டேன். என்னை அம் மாவிடம் ஒப்படைக்கா தீர்கள். அவர் என்னை மீண்டும் பாலியல் கும்ப லிடம் விட்டு விடுவார். என்னை காப்பாற்றுங் கள். இவ்வாறு சிறுமி சுதா கூறி, கதறி அழுத தாக காவல்துறையினர் கூறினர்.

இதையடுத்து, சிபிசி அய்டி விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அறவழி சித்தரையும் கைது செய்து தீவிர விசா ரணை நடத்தினார்கள்.

பின்னர் அவரை சைதாப்பேட்டை 4வது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் (பொறுப்பு) நீதிபதி ஆர்.சங்கர் முன்பு காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். இதை யடுத்து அறவழி சித்தர் 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக் கப்பட்டார்.

தமிழ் ஓவியா said...


சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்


சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் உணவு கட்டுபாட்டை மேற்கொள்வது அவசியம். எந்த உணவுகளை சாப்பிடவேண்டும் என்பதை தெரிந்து கொண்டு சாப்பிட்டால் சிறுநீரக கல் பிரச்சினையை சரிசெய்து விடலாம். எந்தெந்த உணவுகளை சாப் பிடலாம் என்பதை பார்க்கலாம்

காரட், பாகற்காய், இளநீர்: இதில் பொட்டாசியம், மெக்னீஷியமும் அதிகம் உள்ளன. இவை சிறுசீரகக் கற்களின் முன்னோடிகளான படிகங்களைக் கரைத்து படிய விடாமல் தடுக்கும் சக்தியுடையது. கேரட், பாகற்காய்களில் பொதுவாக சிறுநீரகக் கற்களின் படிகங்களை தடுக்கும் பலவித தாது உப்புக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம், எலுமிச்சை: இவற்றில் விட்டமின் சத்தும், சிட்ரேட் சத்தும் அதிகம் உள்ளன. இவை சிறு நீரகக் கற்களின் ஒரு முக்கிய அங்கமான ஆக்சலேட் என்ற இரசாயனத்துடன் சேர்த்து அதைச் சிதைத்து படிய விடாமல் தடுத்து சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க வல்லவை.

அன்னாச்சி பழம்: இதில் சிறுநீரக கற்களின் கருவாக இருக்கும் ஃபைப்ரின் எனப்படும் சத்தை சிதைக்கும் நொதிகள் உள்ளன. இது சிறுநீரக கற்களை கரைக் கும் தன்மை கொண்டுள் ளது.

கொள்ளு, பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ்: கொள்ளில் உள்ள சில நீர்ப் பொருட்கள் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் திறன் கொண்டவை. நார்ச்சத்து உள்ள உணவுகள். பாதாம் பருப்பு, பார்லி ஓட்ஸ் போன்ற வற்றில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் பலவித சத்துகள் உள்ளன. பொதுவாக சில காய்கறிகள், பழங்களைத் தவிர தினமும் உணவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், முழு தானியங்களை அதிகமாக சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்கள் வருவதையும் தடுக்கும்.

உப்பு: உணவில் உப்பையும் பெருமளவு குறைத்துக் கொள்வது சிறுநீரில் கால்சியம் சத்து வெளியாவதை தடுத்து சிறுநீரகக் கற்கள் வரும் வாய்ப்பை குறைப்பதாக இப்போது கண்டறியப்பட்டுள்ளது.