Search This Blog

25.8.13

ஜாதியின் பெயரால் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில் நிலை என்ன?

படித்தவர் ஏட்டைக் கெடுத்தார்...


சாதியற்ற சமுதாயம் சாத்தியமே என்ற ஒரு கட்டுரையைத் தீட்டி யுள்ளார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன்.

கட்டுரையின் தலைப்பைப் பார்த்த மாத்திரத்தில் களித்தோம். உள்ளுக்குள் சென்றால் -_- இவர் எப்படி அறவாணன் அய்யங்கார் ஆனார் என்று எண்ணித் திகைத்தோம்.

இடஒதுக்கீடு என்பது பிரிட்டிஷார் கொண்டு வந்தது என்றும், மக்களைப் பிரிக்க முடியாதவாறு அந்தந்த சாதிக்குள்ளேயே நிரந்தரமாக நிலைப் படுத்த பிரிட்டிஷார் இந்த ஆணையை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர். முன்பிருந்த சாதிப் பிரிவினையை இது மேலும் வலுப்படுத்தியது.
###
கல்வி நிறுவன நுழைவு, அரசு நியமனங்கள் இன்ன பிற எந்த இடத்திலும் சாதிப் பிரிவிற்கு இடமே இருக்கக் கூடாது. இம்முறை தொடருமானால் நாம் பரம்பரை பரம்பரையாக சாதிகளைக் காக்கவே கவனம் செலுத்திடுவோம்! என்று எழுதித் தள்ளி விட்டார்.

ஆரியர் --_ திராவிடர் என்பது வெள்ளைக்காரன் சூழ்ச்சி என்று பார்ப் பனர்கள் சொல்லுவதில்லையா -_ அதே பாணியில் நமது பேராசிரியரும் பேனாவை  ஓட்டியுள்ளார்.

முதலில் ஜாதியை தமிழில் சாதி யாக்கியதே அடிப்படை குற்றமாகும். இதன் மூலம் ஜாதியைத் தமிழர்க்குரிய மூலமாக மாற்றிக் காட்டப் பார்க்கிறார் நமது பேராசிரியர்.

ஜாதியின் காரணமாக கல்வி மறுக் கப்பட்ட மக்களுக்கு - _ அந்த ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப் படுவதற்கான உளவியல், அறிவியல் கார ணத்தை அவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.. இன்னும் சொல்லப் போனால் அம்மை நோயைப் போக்க அம்மைக் கிருமிகளிலிருந்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்கு ஒக்கும். சூத்திரனுக்கு எதைக் கொடுத் தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கி வைக்கப்பட்ட வருண சமூக அமைப்பில், அந்த சூத்தி ரனுக்குக் கல்வியைக் கொடுக்க அந்தச் சூத்திரத் தன்மையைப் பயன்படுத்தாமல் வேறு எதைப் பயன்படுத்துவது? மருந்தில்கூட விஷம் உண்டே! அதை ஏன் பருகுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

இரண்டு முறை ஆச்சாரியார் (ராஜாஜி) முதல் அமைச்சராக சென்னை மாநிலத்திற்கு வந்தாரே -_  அந்த இரண்டு முறையும் அவர் செய்தது எதனை? ஏற்கெனவே இருந்த பள்ளிகளை மூடியதுதான் அவர் செய்த உயர்ந்த பட்ச சாதனை.

ஜாதியின் பெயரால் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில், குறிப்பாக 1914இல் நம் நாட்டின் நிலை என்ன?

சென்னை சட்டமன்ற மேலவைக் கூட்டத்தில் காலஞ்சென்ற குன்சிராமன் நாயர் கேட்ட கேள்விக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650 பேர்களில் பார்ப்பனர்கள் 452, பார்ப் பனர் அல்லாத இந்துக்கள் 12 பேர்; பிற இனத்தவர் 74 பேர் என்று கூறப் பட்டதே _ அந்த நிலை இப்பொழுது மாறியுள்ளதற்குக் காரணம் இட ஒதுக்கீடுதானே?

சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இப்பொழுது படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாண வர்கள் 1,45,450 - _ சதவீத கணக்கில் 89 ஆகும்.

(சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற நீதிக் கட்சி 95ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் திருவாசகம் அளித்த புள்ளி விவரம் இது. 20-_11-_2010).

மருத்துவக் கல்லூரியில் சேர்வ தற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண் டும் என்ற நிபந்தனை இருந்ததைப் பேராசிரியர் அறவாணன் அறியாதவரா? பனகல் அரசர் பிரதமராக இருந்த போதுதானே அது தூக்கி எறியப் பட்டது. அந்தத் தடை மட்டும் இருந் திருந்தால் தமிழர்களில் மருத்து வர்களைக் கண்டிருக்க முடியுமா?

2013_2014 மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை பற்றிய புள்ளி விவரம் என்ன தெரியுமா?

மொத்தம் 2172 இடங்கள் இதில் திறந்த போட்டிக்குரிய இடங்கள் 673.
இந்தத் திறந்த போட்டியில் உயர் ஜாதிக்காரர்கள் 50, பிற்படுத்தப்பட்டோர் 442, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 140, பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) 18, தாழ்த்தப்பட்டவர் 21, தாழ்த்தப்பட்டவர் (அருந்ததியர்) 1, மலைவாழ் மக்கள் -1
இடஒதுக்கீடு அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள்: பிற்படுத்தப்பட் டோர் 576, மிகவும் பிற்படுத்தப்பட் டோர் 434, பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) 76, தாழ்த்தப்பட்டோர் 328 தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 63, மலைவாழ் மக்கள் 22.

இந்த மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன? இடஒதுக்கீட்டின் அடிப் படையில் தானே! இந்த வளர்ச்சி எல்லாம் கூடாது என்பதுதான் அறவாணரின் ஆசையா?
நம்முடைய அரசர்கள் காலத்தில் எல்லாம்கூட கல்வி பார்ப்பனர் களுக்குத் தானே! - அந்த வரலாற்றை யெல்லாமா நினைவூட்ட வேண்டும்?

11ஆம் நூற்றாண்டில் சோழ அரசர் கள் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரத்தில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர். அங்கே 140 மாணவர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர்கட்கும், மாணவர்கட்கும் தினந்தோறும் நெல் அளந்து தரப் பட்டது. 45 வேலி நிலம் அக் கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது என்ன தெரியுமா? வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும் மீமாம்சம் வேதாந்த தத்துவங்களே! (ஆர். சத்தியநாதய்யர் -_ இந்திய வரலாறு)
இந்த வேதங்களும் மீமாம்சத் தத்துவங்களும் யாருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன? படித்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே தான் என் பதை முனைவர் பட்டம் பெற்ற பேரா சிரியர் அறவாணன் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமா?

ஜாதியை ஒழிக்கக் கல்வி தேவை யில்லை என்பது அவரது வாதமா? ஜாதி அடிப்படையில் கல்வி மறுக்கப் பட்டதால் தான் அந்த ஜாதி அடிப் படையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது _ இதற்குப் பெயர்தான் சமூகநீதி என்பது!
கல்வி கற்றவர்களிடத்தில் தான் பெரும்பாலும் ஜாதி மறுப்பையும், ஜாதி மறுப்புத் திருமணத்தையும் எதிர் பார்க்கவும் முடியும்; - அது நடந்து கொண்டும் தானிருக்கிறது.

ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதால்தான் ஏதோ ஜாதி உயிரோடு இருப்பது போலவும், இந்த இடஒதுக்கீடு இல்லாத காலத்தில் ஜாதியே இல்லாதது போலவும் எழுதுவது மெத்த படித்த பேராசிரியருக்கு அழகல்ல.

தந்தை பெரியாரும், நீதிக்கட்சித் தலைவர்களும் ஒரு நூற்றாண்டு பாடுபட்டு, சட்டரீதியாக இடஒதுக் கீட்டை நிலை நிறுத்துவதற்குப் பாடு பட்ட தன்மையைப் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டோ, அல்லது அவர்களுக்குக் கைத்தடியாக இருந்து கொண்டோ கல்லெறிவது ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்!

ஜாதி அடிப்படையில் இடஒதுக் கீடுக்காகப் பாடுபடும் கழகம்தான் ஜாதி ஒழிப்புக்காகவும் பாடுபடுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்; ஒரு சிறு துரும்பைக் கூட ஜாதி ஒழிப்புக்காகக் கிள்ளிப் போடாமல் சமூகப் பொறுப்பு ஏதுமில்லாமல் பேனா பிடிப்பதுதான் சமுதாயத்துக்குச் செய்யும் தொண்டா?
பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று முன்பொரு முறை எழுதி இப்படித் தான் சிக்கிக் கொண்டார்.

படித்த தமிழர்கள் அருள்கூர்ந்து தந்தை பெரியார் அவர்களை மேலும் படிக்க வேண்டும் _ ஆழமாக படிக்க வேண்டும் _ என்பதுதான் நமது கனிவான வேண்டுகோள்.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் -_ என்று கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கு தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் - உடல் நிலையில் இளைத்துப் போய் வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து, மற்ற குழந்தைகளோடு சரி சமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக் குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன்.  இந்த அளவு தான் நான் பார்ப்பனரிடமும் மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்
                      ------------------------- தந்தை பெரியார், விடுதலை 1.1.1962

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாகுமகராஜ், மகாத்மா பாபுலே போன்ற சமூகச் சிந்தனை யாளர்கள் எல்லாம் ஏன் ஜாதி அடிப் படையில் இடஒதுக்கீடு கேட்டார்கள்? அவர்களைவிட இந்தச் சமுதாயத் தைப்பற்றி மிக ஆழமாகச் சிந்தித்து முடிவுக்கு வந்து விட்டதாக வெறும் பட்டப் படிப்பு மேதைகள் நினைக் கிறார்களா? என்று தெரியவில்லை.

ஜாதி ஒழியும் வரை
கடைசியாக நான் கூறுவது நமக்கு அழிவையும், கீழ்த் தன்மையையும், வசதியின்மை யையும் கொடுக்கிற இந்த ஜாதிகள் ஒழிந்து, மக்களுக்குச் சமமான தன்மை வரும் வரை இப்போதைய பிற்பட்ட வகுப்பினருக்கு அறிவு வளர்ந்து, நாகரிகம் அடைந்து அரசியலில் கலந்து கொள் வதற்காகக் கல்வி, உத்தியோகம் முதலியவைகளில் அவரவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாச்சாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்
(விடுதலை 9.4.1950)

அமெரிக்கர் அறிஞரின் பார்வையில்...
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தேசிய சங்கம் (National  Association for Equal Opportunities) என்ற அமைப்பின் தலைவர் சார்லஸ் லியான்ஸ்  (Charles Lyons) என்பவர் 1.2.1981 அன்று சென்னையிலே செய்தியாளர்கட்குப் பேட்டி அளித்தார். இவ்வமைப்பைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். நசுக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் மேல் நிலைக் கல்வி எப்படி அளிக்கப்படுகிறது என்பதை ஆராய அக்குழு இந்தியா வந்துள்ளது.
எங்கள் நாட்டில் நீக்ரோக்கள் பிரச்சினையும், உங்கள் நாட்டுத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரச்சினையும் ஒன்றாகவே உள்ளது. இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் இடஒதுக்கீடு முறை மிகவும் பாராட்டப்பட வேண்டிய சரியான முறையாகும். நிற அடிப்படையிலே வேறுபாடு காட்டக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டம் இருந்தாலும், வாய்ப்புகள் வழங்கப்படுவதில் மிகப் பெரிய இடைவெளி இருந்து வருகிறது.            _ இந்து 2.2.1981 
--------------------------------------------------------------------------------------------------------------------------
அமர்த்தியா சென் பார்வையில்....

அமெரிக்காவில் ஒவ்வொரு நிறுவனத்திலும் கறுப்பர்களுக்கு வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு 11 பேர்களுக்கும் ஒரு கறுப்பர் என்ற விகிதாசாரம் பின்பற்றப்படுகிறது.
இன்னுமொரு கூடுதல் தகவல்: தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டில் கூட கறுப்பர்களுக்கென்று இடஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எந்த காரணத்தினாலோ ஒடுக்கப்பட்ட மக்கள், ஒரு கட்டத்தில் விழிப்புணர்வு பெற்று மேலே ஏறுவதற்கு இது போன்ற வாய்ப்புகள் அவசியம் என்பதை சமூக நீதியில் அக்கறை கொண்டவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். நோபல் அறிஞர் அமர்த்தியா சென் இதுபற்றிக் கூறியிருப்பதை எடுத்துக்காட்டுவது பொருத்தமாகும்.
“Even the issue of merit getting diluted through reservation had to be looked at carefully. While it was very possible that a person benefiting out of reservation might not perform as well as a person selected purely for merit, one had to look beyond just the “bend in the river” to see the “Shape of the river” and see the larger benefit to society over a longer period of time.
While the “neeti” argument would only provide a simplistic answer to this
problem, the “nyaya” argument would look at the problem from a long - term
perspective”
இடஒதுக்கீடு அளித்தால் தகுதி குறைந்துவிடும் என்ற கருத்தை எச்சரிக்கையோடு பார்க்க வேண்டும். தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரையும், இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவரையும் ஒருக்கால் ஒப்பிட்டுப் பார்த்தால், அதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஒரு நதியின் வளைவை மட்டும் பார்க்கக் கூடாது. நதியின் ஒட்டு மொத்த போக்கினைக் காண வேண்டும். அதுபோல்தான் நீண்டகால கண்ணோட்டத்தில் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் சமூகத்திற்குக் கிடைக்கும் பயன்களை நோக்க வேண்டும்.
நீதி என்ற அடிப்படையில் இதற்கு மிக எளிமையான பதிலை எட்டிவிட முடியாது. நியாயத்தின் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் இதைப் பார்க்க வேண்டும்.
(பொருளாதார சிந்தனைக்காக நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் - சென்னை அய்.அய்.டி.யில் 22.12.2009
--------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------- மின்சாரம் அவர்கள் 24-8-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

64 comments:

தமிழ் ஓவியா said...

டி.ஆர்.ஏ. தம்பு செட்டி பற்றிய ஒரு தகவல் பெட்டி - மு.வி.சோமசுந்தரம்

தமிழகத்து பாமரர் யாவருக்கும் அறிமுகமான இடம் சென்னை நகரத்து பாரிமுனை. இந்த அழகுத் தமிழ்ச் சொல்லை பழக்கத்தில் கொண்டு வந்த தமிழறிஞர் மு.வ.வை நினைத்து பாராட்ட வேண்டும். இந்த பாரி முனைப் பகுதியில் பரபரப்பாகவும் சுறு சுறுப்பாகவும் காணப்படும் பகுதியாக வும், அடிக்கடி உச்சரிக்கக்கூடிய தெருவாக விளங்குவது தம்பு செட்டி தெரு என்றால் அது மிகையாகாது. வணிகப் பெருமக்களும், வழக்கறிஞர் பெருமக்களும் மிகுதியாக செயல் படக்கூடிய தெருக்களுள் தம்பு செட்டி தெரு ஒன்று.

தெருவின் வரலாறு

தம்பு செட்டி என்பவர் யார்? அவர் பெயரில் பழமை வாய்ந்த தெருப்பெயர் சென்னையில் முக்கியப் பகுதியில் இருக்கும் அளவுக்கு அவர் பெற்றிருந்த சிறப்புகள் என்ன? இவற்றை அறிந்து கொள்ள ஆவல் எழுவது இயல்பு தானே! அதுபற்றி கூறுவோம்.

பிறப்பும் இளமையும்

டி.ஆர்.ஏ.தம்பு செட்டி ஏப்ரல் 1837-ஆம் ஆண்டு பிறந்தார். தேசையராயலு செட்டிகாரு என்பது அவரின் தந்தை யாரின் பெயர். அவர் சார்ந்த ஜாதி - சமூகத்தின் மதிக்கத் தக்கத் தலைவ ராகவும், சென்னை இந்திய கிறித்துவ மக்களிடையே மதிப்பைப் பெற்றவ ராகவும் அவர் இருந்தார். தாயாரின் பெயர் கேத்தரி உமா (கேத்தரின்), கேத்தரின் அம்மையார் இறையுணர்வும், ஒழுக்க நெறியும் சிறக்கப் பெற்றவர். தம்பு செட்டியின் பெற்றோர்கள் கிறித்துவ கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.

தம்பு செட்டி, தனது 12-ஆவது அகவையில் பெற்றோர்களை இழந்தார். ஆனால், அவரின் தாயார் ஏற்படுத்திய உயில் (WILL) ஏற்பாட் டின் படி அய்ந்து செய லாண்மைக்குழு உறுப் பினர்கள் தம்பு செட்டி யாரை நல்ல முறையில் பாதுகாத்து வளர்த்தனர். துவக்கப்பள்ளி கல்வியை முடித்து, ஃபிரி சர்ச் மிஷின் பள்ளியில் (Free Church Mission School) சேர்ந்தார். அந்த பள்ளி யின் நிறுவனர்களான ரெவ் (Rev.) ஜான் ஆண் டர்சன், ஜான்சன், ஜெ. பிரெய்ட்உட் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருந்த, பி.இராஜகோபால், ஏ.வெங்கட் டரமையா, எத்திராஜிலு ஆகி யோரது செயல்பாடுகள், தம்பு செட்டியை ஈர்த்தது. (இந்த Free Church Mission School) தான் பிற்காலத்தில் மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியாக வளர்ச்சி அடைந்துள்ளது)

தமிழ் ஓவியா said...

கல்வித்திறம்

அவர் கல்வி கற்ற காலத்தில் குருட்டு பாடம் (Cramming) என்பதில்லாமல், சிந்தனைக்கும், மூளை வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் இருந்தது. வானவிவாத பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த வகை யில் தம்பு செட்டி கூர்மை மதியினராக முடிந்தது. கணிதத்தில் தவறாது வகுப்பில் முதல் மாணவனாக இருந்தார். தேர்ந்தெடுத்த புதினங்களைப் படித்தார். கவிதையில் ஆர்வம் கொண்டார். ஆங்கில சொற்களின் லத்தீன், கிரேக்க வேர் சொற்களைக் கற்றார். இலக்கணம் தருக்க இயல், நிலவியல், வானியல், வரலாறு, தத்துவம் ஆகியவற்றைத் திறம்பட கற்று, 1854-ஆம் ஆண்டில் தனது எட்டு ஆண்டு கல்வியை முடித்தார். தனது இறுதி வகுப்புத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்று அன் றைய மெட்ராஸ் ஆளு னர் லார்ட் ஹாரிஸி டமிருந்து முதல் பரிசை பெற்றார்.

பணியில் சேர்தல்

தம்பு செட்டி, ஒரு எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். அடுத்து சட்டமன்றத் துறையில் பணியாற்றினார். அப்பொ ழுது அட்வகேட் ஜெனரலாக இருந்த ஜெ.டி.மாயின் பாரிஸ்ட்டர் அட்லா வின் ஆலோசனையின் பேரில், தம்பு செட்டி, சென்னை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வி பயில சேர்ந்தார். சட்டக்கல்வி இறுதித் தேர்வில் முதல் பரிசை பெற்றார்.

நீதித்துறையில் பணி

1879-ஆம் ஆண்டில், நந்தி துர்கா மாவட்டப்பிரிவில், முக்கியத்துவம் பெற்ற மாவட்ட செஷன்ஸ் நீதிபதி பதவியை ஏற்றார். ஆங்கிலேயர் அல்லாதவரில் அந்த பதவியைப் பெற்ற முதல் மனிதர் டி.ஆர்.ஏ. தம்பு செட்டி, தென்னிந்தியாவில், குற்றவாளிகளுக்கு (Criminal) மரண தண்டனை அளிக்கும் உரிமையைப் பெற்ற முதல் இந்தியர் இவரே.

1881-இல் மைசூர் மன்றம் அமைக்கப் பட்டபோது, மைசூர் மன்னருக்கு மூத்த ஆலோசகராக அமர்த்தப்பட்டார். 1884-இல் மைசூர் நீதிமன்றம் அமைந்தபோது நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளில் ஒருவராகப் பணியாற்றி, முதன்மை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று 1891 முதல் 1895 வரை பணியாற்றினார். அந்த வகையில் தம்பு செட்டியே இந்தியாவின் உயர்நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி. மைசூர் மன்னர் சாமராஜேந்திர உடையார் திடீரென இறந்தவுடன், அரசியாருக்கு ஆட்சித்துணைக்குழு 1895-இல் நியமிக்கப்பட்டபோது அதன் மூத்த உறுப்பினராக தம்பு செட்டி செயல்பட் டார். மைசூர் மாநிலத்தின் திவானாக வும் இருந்து 1901-இல் ஓய்வு பெற்றார். அந்த ஆண்டில் நடைபெற்ற மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியின் ஆண்டு விழாவில் தலைமை ஏற்று, பழைய மாணவன் என்ற முறையில் கல்லூரி யின் மேன்மை பற்றியும் அறிவு, கல்வித் தொண்டு பற்றியும் கூறி புகழாரம் சூட்டினார்.

விருதுகள்

தம்பு செட்டியின் நீண்ட புகழ்மிக்க பணிக்காக அவர் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றார். 1892-இல் போப் லியோ அளித்த பாராட்டு பதக் கத்தைப் பெற்றார். தர்ம பிரிவினர் விருதை 1893-இல் மைசூர் மன்னர் வழங்கினார். 1895-இல் இங்கிலாந்து அரசியின் The Companion of Indian Empireவிருதைப் பெற்றார். 1907-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இவருக்கு ஏற்புடைய வகையில் ஜூன் 6, 2008-இல் கர்நாடக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி தம்பு செட்டி உருவப்படத்தை நீதிமன்ற காட்சியகத் தில் திறந்து வைத்தார். (பிரான்ஸ் நாட்டில் பொறியாளராக உள்ள தம்பு செட்டியின் பேரன் திரு மார்க்கி ராஜரத்தினத்தின் செய்தியையும், 1909-இல் தம்பு செட்டி வாழ்க்கை வர லாற்று நூலையும் தழுவி (கிறித்துவ கல்லூரி 2011_-12 மலரில்) வந்த கட்டுரை. நன்றி.

தமிழ் ஓவியா said...


மேதாவிகளின் கேள்வியும் அய்யாமுத்துவின் பதிலும்


பார்ப்பனனைக் குறை சொல்வானேன்? கொடைக்கானல் பார்ப்பனன் பஞ்சு மெத்தை போட்டு, காலாள், கையாள்களோடு மோட்டார் வாகனத்தில் குடும்ப சகிதமாய் சுகபோக மனுபவிப்பதைக் கண்டு பொறாமை கொள்வதும்,

வக்கீல் பார்ப்பனன் இல்லாததும் பொல்லாததும் சொல்லிக் கொள்ளையடிப்பதைக் கண்டு துவேஷப்படுவதும்,

சிம்லாப் பார்ப்பனன் துரை போல சட்டை மாட்டி, மேஜை மீது உட்கார்ந்து விஸ்கி, பிராந்தி, ஒயினோடு சாப்பிடுவதையும் கண்டு ஆத்திரப்படுவதும் கூடாது.

பார்ப்பனரல்லாத நீங்களும் அவர்களைப் போல் படித்து முன்னுக்கு வாருங்கள்.

பார்ப்பனனை நிந்திக்கும் நேரத்தையும், திறத்தையும் நீங்கள் முன்னேற்றமடைவதில் செலவிடுங்கள் என்று யாரேனுமொரு மேதாவி கூறலாம்.

கடவுள், மதம், வேதம், சாஸ்திரம், ஜாதி ஆகிய சகலமும் பார்ப்பனர்களாலே, பார்ப்பனர்களுக்காக சிருஷ்டிக்கப்பட்டன.

இதில் பார்ப்பனர்கள் முன்னேறுவதற்கு சகல உரிமைகளுமுண்டு.

ஆனால் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றமடைவதற்கு இப்பார்ப்பனக் கடவுள்களும், மதமும், சாஸ்திரங்களும், ஜாதிகளும் இடம் கொடுக்காமல் பல நூற்றாண்டுகளாக மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றன.

(தகவல் நூல்: பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி)

க. பழநிசாமி, தெ. புதுப்பட்டி, திண்டுக்கல்

தமிழ் ஓவியா said...


திருக்குறள் தொடர்பான செய்திகள் 41

1. திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் தை முதல் நாள்.

2. திருவள்ளுவர் ஆண்டை அறி வித்தவர் மறைமலை அடிகள்

3. திருவள்ளுவர் ஆண்டுக்கு அரசக் கட்டளை வழங்கியவர் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்.

4. திருக்குறளுக்கு முதலில் உரை வரைந்தவர் மணக்குடவர்.

5. திருக்குறளுக்குப் பத்தாவதாக உரை எழுதியவர் பரிமேலழகர்.

6. திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்கள் நாற்பத்து நான்கு.

7. திருக்குறளுக்கு உரை எழுதிய பெருமக்கள் இருநூற்று ஆறு.

8. திருக்குறளுக்கு வந்துள்ள மொழிபெயர்ப்புகள் நூற்று ஆறு.

9. திருக்குறளை இலத்தீனில் வழங்கியவர் வீரமாமுனிவர்.

10. திருக்குறளை ஆங்கிலத்தில் அருளியவர் போப்பையர்.

11. திருக்குறளுக்காக முதலில் மாநாடு நடத்தியவர் தந்தை பெரியார்.

12. குமரியிலிருந்து தில்லி வரை செல்லும் தொடர்வண்டியின் பெயர் திருக்குறள் விரைவான்.

13. குமரிக்கடலில் நிற்கும் திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி.

14. நெல்லையில் அமைந்துள்ளது திருவள்ளுவர் ஈரடுக்கு மேம் பாலம்.

15. சென்னை நுங்கம்பாக்கத்தில் நிறுவப்பட்டது வள்ளுவர் கோட்டம்.

16. திருக்குறள் சோவியத்து நாட்டில் கிரெம்ளின் மாளிகையின் நிலவறையில் உள்ளது.

17. திருக்குறள் இலண்டனில் விவிலியத் திருநூலுக்கு இணை யாக வைக்கப்பட்டுள்ளது.

18. திருக்குறளை அண்ணல் காந்திக்கு அறிமுகம் செய்தவர் சோவியத்து எழுத்தாளர் தால் சுதாய்.

19. திருக்குறளுக்குத் தங்கக்காசு வெளியிட்டவர் எல்லீசர்.

20. திருக்குறள் உரை வேற்றுமை வழங்கியவர் பேராசிரியர் இரா. சாரங்கபாணி.

21. நரிக்குறவர் பேசும் வக்கிரபோலி மொழியில் திருக்குறளைத் தந்தவர் கிட்டு

சிரோன்மணி.

22. திருக்குறளின் பெருமையினை உலக அறிஞர் ஆல்பர்ட்டு சுவைட்சர் போற்றிப் புகழ்ந்துள் ளார்.

23. வெண்பா யாப்பில் என்றும் பயன் தரும் செய்தியை வழங்குவதால், திருக்குறள் வெள்ளிப்பையில் இட்ட தங்கக் கனி என்பர்.

24. திருக்குறளை 1812ஆம் ஆண்டு முதலில் அச்சிட்டு வழங்கியவர் ஞானப்பிரகாசன்.

25. வள்ளுவன் தன்னை உலகி னுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டியவர் பாரதியார்.

26. வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்று பாராட்டியவர் பாரதி தாசன்.

27. திருக்குறளின் முதற்பெயர் முப்பால்.

28. திருக்குறளில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்கள் உள்ளன.

29. திருவள்ளுவர் நட்பு பற்றி 171 பாக்கள் உள்ளன.

30. திருக்குறளில் கல்வி பற்றி 51 பாடல்கள் உள்ளன.

31. திருக்குறளில் இடம் பெறாத உயிரெழுத்து ஔ

32. திருக்குறளில் இல்லாத எண் ஒன்பது.

33. திருவள்ளுவர் கடவுளை இறைவன் என்கிறார்.

34. திருக்குறளுக்கு உரிய சிறப்புப் பெயர் உலகப் பொதுமறை

35. திருக்குறளில் உயிரினும் மேலான தாகப் போற்றப்படுவது ஒழுக்கம்.

36. காலமும் இடமும் கருதிச் செய லாற்றினால் உலகை வெல்லலாம்.

37. திருக்குறளை அனைத்துச் சமயங் களும் ஏற்றுப் போற்றுகின்றன.

38. திருக்குறள் தமிழ்த்தாயின் உயிர்நிலை என்பார் கவிமணி.

39. திருவள்ளுவமாலை திருக்குற ளுக்கு எழுந்த புகழ்மாலை

40. திருக்குறள் பொய்யில் புலவன் பொருளுரை எனப் போற்றப் படுகிறது.

41. திருக்குறளை முதலில் பயிற்றுவித் தவர் வள்ளலார் இராமலிங்கம்.

- ஆய்வுக்களஞ்சியம் 2013 ஆகஸ்ட்

தமிழ் ஓவியா said...

சுட்டுக் கொல்லப்பட்டார் சுயசிந்தனையாளர்


மூடநம்பிக்கைகளுக்கும், பில்லி சூன்யங்களுக்கும் எதிராக மராட்டிய மாநிலச் சட்டசபையில் நரேந்திர தபோல்கர் கொணர இருந்த சட்ட முன் வரைவு கனவாகவே முடிந்தது.

அவர் சாமியார்கள், கோயில் அறக்கட்டளைகள், ஏன், மாநில அரசைக்கூட சவாலுக்கு இழுத்தார். அவர் எதிரியாகக் கருதப்பட்டார். அவரது நிகழ்ச்சிகளில் இடையூறுகள் ஏற்பட்டன. அவர் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார். இவ்வளவு எல்லாம் நடந்தும்கூட, நரேந்திர தபோல்கர் (65) கோபமடைவதில்லை; அவரது நகைச்சுவை உணர்ச்சியையும் கைவிடுவது இல்லை. எந்தச் சந்தர்ப் பத்திலும் பதில் கொடுக்குமுகமாக அவர் ஒரு ஒற்றை வார்த்தையைத் தயாராக வைத்திருப்பார். என்னால், எப்படி எப்பொழுதும் அமைதியாக இருக்க முடிகிறது என்று மக்கள் என்னைக் கேட்கிறார்கள். நான், பன்னாட்டு அளவில் கபாடி விளை யாட்டு வீரராக இருந்திருக்கிறேன். ஆகவே விழுந்து எழுந்திருப்பது எனக்குப் பெரிதல்ல என்று ஒரு பேட்டியில், தெரிவித்துள்ளார்.

ஆனால், செவ்வாய்க்கிழமை அன்று தபோல்கர், திரும்ப எழுந்து நிற்க முடியாத அளவில், கீழே விழுந்து விட் டார். ஆம், அவர் சுட்டுக் கொல்லப் பட்டார். பூனே நகரத்தில் காலை நடை பயணப் பயிற்சியின்போது, துப்பாக்கி ஏந்திய இரண்டு மனிதர்களால் அவர் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

மிக அமைதியான செயல்வீரரான தபோல்கர் எப்பொழுதும் ஓர் எளிய கதர்ச்சட்டை அணிந்து இருப்பார். மராட்டியத்தில் மிகவும் முக்கியமாகச் சிறந்து விளங்கும் பகுத்தறிவுவாதி. அவர் சமாதானப்படுத்த விரும்புபவர் களிடம் தன் வழிக்குக் கொண்டு வரும் வகையில் பேசிக் கொண்டிருப்பார். அதே நேரத்தில், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவரது முயற்சிகளில் கிஞ்சிற்றும் விட்டுக் கொடுக்க மாட்டார். சாமியார்களையும், குழப்ப வாதிகளையும் கொண்டாடுகின்ற இந்த நாட்டில், ஒரு வலுவான இயக்கத்தை கிராமங்களிலும், பள்ளிக் கூட்டங் களிலும் மராட்டியத்தின் கல்லூரி களிலும் அமைத்து தபோல்கர் வெற்றி பெற்றார்.

சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு சோஷலிஸ்ட் குடும்பத்தில் பிறந்தவர் தபோல்கர் மருத்துவம் பயின்றவர். பொது வாழ்விற்கு வருமுன், பத் தாண்டுகள் மருத்துவச் சேவை புரிந்துள்ளார். ஆரம்ப காலத்தில், அவர் சமூக நீதிக்கான இயக்கங்களில், பாபா ஆதவ் கூட்டங்களில் கலந்து கொண் டார். 1983இல் தனி இயக்கம் கண்டார். 1989இல் அவர் மராட்டிய மற்றும் ஹஸ்ரத்தா நிர்மூலன் சமிதி என்ற அமைப்பைக் கண்டார். அவரது இலக்கு எப்போதும் சுரண்டுகின்ற சாமியார்கள், மந்திர சிகிச்சைகள் மற்றும் பிற்போக் கான மதப் பழக்க வழக்கங்களே.

அவர் எப்பொழுதும், தான் கடவு ளுக்கோ, மதத்துக்கோ எதிரி இல்லை என்றும், நம்பிக்கையின் பேரில் சுரண் டப்படுவதை எதிர்ப்பதாகவும் கூறுவார் என்று இந்திய தொழிற்சங்க மய்யத்தைச் சேர்ந்த அபயங்கர் என்பவர் சொல்லி யுள்ளார். அவர், தபோல்கரின் பழைய நண்பரும் கூட. தபோல்கரின் குறிகள் எல்லாம் சக்தியும் ஆள்பலமும் உள்ள அமைப்புகளாயிருந்தாலும்கூட, அவர் அவற்றிற்கு அஞ்சுவதில்லை. அவர் முதல் முறை நடத்திய போராட்டங்களில் ஒன்று, குருட்டுத்தனத்திற்கு ஒரு மந்திர மருந்து இருப்பதாகச் சொன்ன சாமியாருடன்தான்.

அவர், அந்த சாமியாரை ஒரு கிராமத்தில், ஒரு திறந்த வெளியில் வாதிடுவதற்கு அழைத்தார். அந்த சாமியார் ஏராளமான தனது பக்த கோடிகளுடன் வந்தார். ஆனால் அவை தபோல்கரை அச்சப்பட வைக்கவில்லை என்று இயக்கத்தின் பத்திரிகையின் கூட்டாசிரியர் ராஜீவ் தேஷ்பாண்டே கூறியுள்ளார். அவரது தாக்கும் இடங்கள் பெரிதாகவும் சக்தி படைத்ததாகவும் வளரும்போது, அவரது உறுதியான தீர்மானம் பயன் அளித்துள்ளது.

தமிழ் ஓவியா said...

நிர்மலாதேவி, நரேந்திர மகராஜ் ஆகியவர்களுக்கு எதிரான போராட் டங்கள் அவரது ஆதரவாளர்களுடன் மோதலை ஏற்படுத்தியது. 2000 ஆண்டு அளவில் அவரது மிகப் பெரிய போராட்டமாக, அகமத் நகரில், உள்ள ஷனி சிங்னாபூர் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதான். அது வலதுசாரி அரசியல் குழுக்களின் ஏராளமான மக்களின் கோபத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது; நீதிமன்றத்தில் முடிந்தது.

உண்மையில் தபோல்கர் வழக்கமாக பத்திரிகையாளர் கூட்டத்தை நடத்து வார். அது வலதுசாரி குழுக்களினால் இடையூறு விளைவிக்கப்பட்டதாக தபோல்கரின் ஆதரவாளர்கள் கூறினர். ஆனால், தபோல்கர் தனது முன்னைய ஆபத்துக்களைப்பற்றி நன்கு அறிந் திருந்தார். இந்த சமயத்தில் எண் ணத்தை எடுத்துச் சொல்வதுகூட ஒரு போராட்டமாக இருக்கிறது என்று அவர் சொல்லியுள்ளார். மராட்டிய சட்டசபையில் ஒரு சட்ட முன் வரைவைத் தாக்கல் செய்வதன் மூலம் மூடநம்பிக்கைகளையும், பில்லி சூனியங்களையும் சட்டத்தின் மூலம் மாற்றி அமைத்திட முடியும் என்று அவர் கனவு கண்டார். ஆனால் அரசியல் எதிர்ப்புக் காரணங்களால் அவை நிறைவேற்றப்படவில்லை.
முரண்பாடு அல்ல

இருந்தும் தபோல்கரின் கொலை ஒரு முரண்பாடு அல்ல. இந்திய பகுத் தறிவுவாதிகள் ஆபத்தான பாதைகளில் தான் நடந்து வந்திருக்கிறார்கள். இருந்தும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி குடி மக்கள் அறிவியல் பூர்வமான உணர்வையும் மனிதாபி மானத்தையும் ஆய்ந்து பார்ப்பதற்கான மற்றும் சீர்திருத்தங்களுக்கான உணர்வும் பெற உரிமையுடையவர்கள் 2011இல் கேரள யுக்திவாடி சங்கத்தின் தலைவர் யூ. கலாநாதன் திருவனந்த புரத்தில் உள்ள பத்மனாப சுவாமி கோயிலின் செல்வங்களைப் பயன்படுத் துவது பற்றி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பங்கெடுத்துக் கொண்டு இருக்கும் போது தாக்கப்பட்டார். சில ஆண்டுகளுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பிருந் தாகாரத் பாபா ராம் தேவிடம் மோத, பாரதிய ஜனதா கட்சி ராம்தேவிற்கு ஆதரவாக களத்தில் குதித்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால், பல வழக்குகளில் அரசாங்கம் எதிரியின் எதிரியாக ஆக்கப்பட்டு விடுகிறது. சிறந்த பகுத்தறிவுச் சிந்தனைவாதியான சனல் எடமருகு 2012-இல், மும்பையி லுள்ள வேளாங்கண்ணி தேவாலயத் தில் நடந்த தெய்வச் செயலை மறுத்த போது அவர் ஏசுவின் சிலையிலிருந்த கண்களிலிருந்து கண்ணீர் சிந்துவதைக் கண்டார். அது, ஒரு அடைபட்ட சாக்கடையிலிருந்து வந்திருக்கலாம் என்று சொன்னார். விளைவு? வகுப்புவேற்றுமையைத் தூண்டி விடுவதாக அவர் மீது காவல்துறை வழக்கு தொடர்ந்தது.

அதிக அளவில் சாமியார்களும் தாந்திரிகர்களும் மிகைப்படுத்தப்படு கிறார்கள்; பொது மக்களால் மட்டும் அல்ல; ஊடகங்களாலும், அரசியல் வாதிகளாலும் கூடத்தான். பகுத்தறி வாளர்கள் அவை அனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது. சந்திரா சாமியிலிருந்து திதேந்திர பிரம்மச்சாரி வரை சாமியார்களும் அவர்களது வணக்க முறைகளும், அரசியல் செல்வாக்கை நகர்த்துகின்றன. பொது மக்களின் ஆய்வுக்கு அவை எப்போதாவது தான் ஆட்படுத்தப் படுகின்றன.

தபோல்கர் கிடைத்தற்கரிய தனி மனிதர். அவர், சாமியார்கள், வணக்க முறைகள், அதிசய அல்லது தெய்வீகச் செயல்களை ஆக்குவோர் மற்றும் நம்பிக்கைகளை ஆழ்ந்த கட்டுப்பா டான ஆய்வுக்கு ஆட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர்.

தமிழ் ஓவியா said...


பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை : உச்சநீதிமன்றம் தீர்ப்பு



ஆந்திராவைச் சேர்ந்தவர் கந்தூரி கோடிஸ்வரம்மா இவர் தனது குடும்ப சொத்தில் சம உரிமை ஆண் வாரிசுகளுக்கு இணையாக பங்கு கேட்டு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் லோதா, ஜெகதீஸ் சிங்கேகர் ஆகியோர் தீர்ப்பில் 2005ஆம் ஆண்டில் இந்து வாரிசு சட்டத் திருத்தத்தின் 6ஆவது பிரிவின்படி குடும்ப சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது. இந்தப் புதிய சட்டம் பெண் வாரிசுதாரர்களுக்கு உண்மையான நிரந்தரமான உரிமையைப் பெற்றுத் தந்துள்ளது. ஆனால் 2004ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதிக்கு முன் சொத்துக்கள் பிரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருந்தால் சொத்தில் பெண்கள் சம உரிமை கேட்க முடியாது எனக் கூறினர்.

25.3.1989 அன்று திமுக ஆட்சியில் கலைஞர் கருணாநிதி அவர்கள் சென்னையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் கொண்டு வந்தார். இது தமிழ்நாட்டில் பெண்களுக்கு இந்தியாவிலேயே முதல் உரிமையாகும்.
அ. இனியன் பத்மநாதன், ஈரோடு

தமிழ் ஓவியா said...


புற்று நோயைத் தடுக்கும் எளிய உணவுகள்


வெங்காயம்: வெங்காயத்தில் அல்லிசின் என்ற புற்றை எதிர்க் கும் வேதிப் பொருள் உள்ளது. சமைத்தபின் சாப்பிடுவதைவிட பச்சையாக உண்பது சிறந்தது.
மாதுளம் பழம்: மாதுளம் பழத்தில் எலாஜிக் ஆசிட் என்ற மூலப் பொருள் உள்ளது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சி வேகத்தை குறைக்கும்.

தக்காளி: தக்காளியில் உள்ள லைக்கோபின் என்ற நிறமிப் பொருள் மிகச் சக்தி வாய்ந்த ஆண்டி - ஆக்சிடண்ட். இது பல் வேறு வகையான புற்றுநோய்களை தடுக்கும் தன்மை வாய்ந்தது. குறிப் பாக ஆண்களுக்கு வரும் பரோஸ் டேட் புற்றினைத் தடுக்கும்.
முட்டைக்கோஸ் காலிஃ பிளவர்: இவற்றில் உள்ள ஃபைட்டோ ந்யூட்ரியண்ட்ஸ் என்ற வேதிப் பொருள் புற்று செல்களின் வளர்ச்சி வேகத்தைக் குறைக்கும் தன்மையுடையது.

தேநீர்: தேநீரில் உள்ள கேட் டச்சின் என்ற பொருள் நுரை யீரல் மார்புப்ரோஸ்டேட் மற்றும் குடல் புற்றினைத் தடுக்கவல்லது. முக்கியமான க்ரீன் டீ எனப்படும் பச்சை தேநீரில் இந்த பலன்கள் அதிகம்.

மஞ்சள்: குர்க்குமின் என்ற புற்றை எதிர்க்கும் பொருள் மஞ்சளில் உள்ளது. தமிழர்கள் சங்க காலத்தில் இருந்தே இதை உபயோகிக்கின்றனர்.

ஆளிவிதை: இதில் உள்ள ஒமேகா (அமோகா அல்ல) கொழுப்பு எண்ணெய்கள் புற்று செல்களுக்கு எதிராக போராடும் தன்மை வாய்ந்தவை.

சால்மன் மீன்: இதில் உள்ள ஒமேகா கொழுப்பு எண்ணெய்கள் புற்று செல்களுக்கு எதிராக போராடும் தன்மை வாய்ந்தவை.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: நமக்கு நன்மை செய்யும் ஒரே கிழங்கு இது. இதில் நிறை பீட்டா க்ரோட்டின் என்ற நிறமி உள் ளது. இது நுரையீரல் மார்பு, இரைப்பை மற்றும் குடல் புற்று நோயைத் தடுக்க வல்லது.

திராட்சை, ஆரஞ்சு, ப்ரக் கோலி: மேலே கூறிய மூன்று பொருட்களிலும் வைட்டமின் நிறைய உள்ளது. இவைகல் புற்றை உருவாக்கும் நைட்ரஜன் மூலக் கூறுகளைத் தடுப்பதின் மூலம் நன்மை செய்கின்றன.

வேர்க்கடலை: இதில் உள்ள வைட்டமின் கல்லீரல், பெருங் குடல் மற்றும் நுரையீரல் புற்றைத் தடுக்கவல்லது.

ஆதாரம்: தி டைம்ஸ் ஆஃப் இண்டியா வலைதளம்

தமிழ் ஓவியா said...


ஏழை இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர் பெறும் சலுகைகள்!


இந்தியா ஒரு ஏழை நாடு என்றுதான் உலகம் அழைக்கின்றது. அந்த ஏழை நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன தெரியுமா?

நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒருவருக்கு மாத ஊதியம் ரூ.50 ஆயிரம். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடக்கும் ஒவ்வொரு முறையும் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்க்கு நாளொன்றுக்கு ரூ.2000 படி வழங்கப்படும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டுக்கு 34 முறை இலவசமாக வானூர்தியில் பயணம் செய்து கொள்ளலாம். அந்தப் பயணத்தின்போது மனைவியையோ, கணவரையோ, அல்லது உறவினர் ஒருவரையோ உடன் அழைத்துச் செல்லலாம். தமது தொகுதியை விட்டு டெல்லியில் தங்கியிருக்கும்போது அவரைச் சந்திப்பதற்காக அவருடைய மனைவி அல்லது உறுப்பினர் பெண்ணாக இருந்தால் அவருடைய கணவர் ஆண்டுக்கு 8 முறை இலவசமாக வானூர்திப் பயணம் மேற்கொள்ளலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர் தமது அடையாள அட்டையைக் காண்பித்து எந்த நேரத்திலும் எந்தத் தொடர் வண்டியிலும் ஏசி முதல் வகுப்பு அல்லது எக்சிக்யூட்டிவ் வகுப்பில் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

இந்தியாவுக்கு வெளியே செல்லும்போது ஓர் உறுப்பினர்க்கு முதல் வகுப்புத் தொடர்வண்டி வானூர்திப் பயணச்சீட்டு இலவசமாக வழங்கப்படும்.
வாடகைக் கட்டணம் மற்றும் பொருத்துதல் கட்டணம் இல்லாமல் தொலைப்பேசி இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், கட்டணம் எதுவும் இல்லாமல் அரசு வீடு ஒன்று டில்லியில் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த வீட்டில் ஆண்டுக்கு 50 ஆயிரம் யுனிட் மின்சாரம் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள் ளலாம்.

நடுவணரசின் மக்கள் நல்வாழ்வுத் திட்டத்தின்கீழ் மாதத்திற்கு ரூ.500 செலுத்தித் தமக்கும் தம் குடும்பத் திற்கும் இலவசமாக மருத்துவச் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

தமது அலுவலகச் செலவுக்காக மாதந்தோறும் ரூ.45,000 வழங்கப்படும். இதில் ரூ.15,000 எழுது பொருள் செலவுகளுக்காகவும் மீதித் தொகை மற்றச் செலவுகளுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஒருவர் ஒருமுறை நாடாளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் அவருக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.20 ஆயிரம் அவரே 5 ஆண்டுக்கு மேல் உறுப்பினராக இருந்தால் கூடுதலாக ரூ.1500 ஓய்வூதியம் வழங்கப்படும்.
நன்றி: மீண்டும் கவிக்கொண்டல் (ஆகஸ்ட் 2013)

தமிழ் ஓவியா said...


இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரப் பிரிவினை

இரண்டாம் உலகப் போர் (1939-_ 1945) நேச நாடுகளிடம் ஜப்பான் சரண் அடைந்ததுடன் 1945 ஆகஸ்ட்டில் முடிவுக்கு வந்தது. போர் முடிந்ததும் இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு 1945 ஆகஸ்ட்டில் கிளை மண்ட் ஆட்லி தலைமையில் தொழிற் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.

1947 சூலை 18-ஆம் நாள் இந்திய நாட்டிற்கு விடுதலை வழங்கும் இந்திய விடுதலைச் சட்டத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிறைவேற்றியது. இச் சட்டத்தின்படி இந்திய துணைக் கண்டம் இந்தியா என்றும், பாகிஸ்தான் என்றும் இரு நாடுகளாகப் பிரிக்கப் பட்டன.

நாட்டுப் பிரிவினைக்கு முன்னால் இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு 1946 சூன் மாதம் பொதுத் தேர்தல் நடை பெற்றது. அகில இந்திய காங்கிரஸ் இயக்கம் 292 தொகுதிகளிலும், பாகிஸ் தான் முஸ்லீம் லீக் 74 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

1946 ஆகஸ்ட் மாதம் அரசப் பிரதி நிதி வேவல் இந்தியாவிற்கான இடைக் கால அரசை அமைக்கும்படி பண்டித நேருவைக் கேட்டுக்கொண்டார். இடைக்கால அரசில் சேரும்படி பண்டித நேரு ஜின்னாவைக் கேட்டுக் கொண்டார். ஜின்னா நேருவின் அழைப்பை நிராகரித்தார்.
1946 செப்டம்பர் 2-ஆம் நாள் இடைக்கால அரசு பண்டித நேருவின் தலைமையில் பதவி ஏற்றது. அரசியல் நிர்ணய சபை 1946 டிசம்பர் 9-ஆம் நாள் கூடியது. இராசேந்திர பிரசாத் அரசியல் நிர்ணய சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முஸ்லீம் லீக்கின் 74 உறுப்பினர்களும் சபை கூட்டங் களில் கலந்து கொள்ளவில்லை! இதை சிறிதும் பொருட்படுத்தாத அரசியல் நிர்ணய சபை தன் பணியில் ஈடுபட்டது.

தற்போது நேருவும், படேலும் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்துவிட் டனர். இந்து - முஸ்லீம் இரத்தக் களரியை நிறுத்த பாகிஸ்தான் பிரி வினையே தீர்வு என்று தீர்மானித்தனர், 1947 ஆகஸ்ட் 14-ஆம் நாள் பாகிஸ் தான் பிரிந்து தனிநாடாக ஆனது. 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக ஆனது.

இந்திய அரசியல் சட்ட வரைவுக் குழு அண்ணல் அம்பேத்கர் தலைமை யில் அமைக்கப்பட்டது. வரைவுக் குழுவின் பரிந்துரைகள் அரசியல் நிர்ணய சபையால் விவாதிக்கப்பட்டு 1949 நவம்பர் 26-ஆம் நாள் அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் 1950 ஜனவரி 26-ஆம் நாள் அமலுக்கு வந்தது.
நடுவண் அரசு, மாநில அரசுகள் அதிகாரப் பகிர்வு:

இந்திய அரசியல் சட்டம் இந்தி யாவைப் பல்வேறு மாநில அரசுகள் அடங்கிய ஒரு கூட்டாட்சியாக (திமீபீமீக்ஷீணீறீ) ஆக்கி உள்ளது. தெற்கே தமிழ் நாட்டிலிருந்து வடக்கே காஷ்மீர் வரை பல மாநில அரசுகள் மற்றும் புதுச்சேரி போன்ற யூனியன் பிரதேசங்கள் அடங்கிய ஒரு கூட்டாட்சி அரசாக இந்தியா விளங்குகிறது.

அரசியல் கூட்டத்தில் ஆட்சி அதிகாரங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள நடுவண் அரசு 97 துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு, இராணுவம், வெளிநாடுகள் உறவு, வெளிநாட்டு வாணிபம், இரயில்வே, தபால், நாணயம். அச்சிடல், வணிக வங்கிகள் முதலிய 97 துறைகளில் நடுவண் அரசு மட்டுமே சட்டம் இயற்ற முடியும்.

மாநில அரசுகள் 66 தலைப்புகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் படைத் துள்ளன. சட்டம் ஒழுங்கு, நீதி நிருவாகம், காவல்துறை, நிலத்தீர்வை, வணிக வரி, கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, ஊராட்சி மற்றும் நகராட்சி நிருவாகம், சிறைச்சாலைகள் போன்ற 66 துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில அரசுகளின் ஆட்சியின் கீழ் வருகின்றன.

நடுவண் அரசும் மாநில அரசுகளும் இணைந்து சட்டம் இயற்றும் துறைகள் 47 உள்ளன. சிவில், மற்றும் கிரிமினல் சட்டம், செய்தி இதழ்கள், தொழிற் சாலைகள், கல்வி, தொழிற்சங்கங்கள், பொருளாதாரத் திட்டங்கள் போன்ற துறைகளில் இரு அரசுகளும் சட்டம் இயற்றலாம். ஆனால் நடுவண் அரசு பொதுவான துறைகளில் சட்டம் இயற்றிய பிறகு மாநில அரசு அத்துறையில் சட்டம் இயற்ற முடியாது.

இம்மூன்று தலைப்புகளில் இடம் பெறாத துறைகளில் சட்டம் இயற்றும் அதிகாரம் நடுவண் அரசுக்கே உரியது.

இந்திய அரசியல் சட்டம் நிறை வேற்றப்பட்ட 1949-இல் இந்தியாவின் மக்கள் தொகை 45 கோடியாக இருந்தது. தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடியாக உள்ளது. இந்தியாவில் வாழும் ஒவ்வொரு குடிமகனின் உரிமையும், கடமையும் இந்திய அரசியல் சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அரசியல் சட் டத்தின் முக்கிய அம்சங்களை ஒவ் வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் நமது உரிமைகளை நிலைநாட்டி கடமைகளையும் ஆற்ற வேண்டும். இந்திய மக்களாட்சி வலிவுடனும், பொலிவுடனும் விளங்க ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையை ஆற்ற வேண்டும்.

- _ இர.செங்கல்வராயன்
(முன்னாள் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், செய்யாறு)

தமிழ் ஓவியா said...


வால்டேர்


கல்வியைப் போல் விடுதலையளிப்பது தன்னுரிமை வேறொன்றுமில்லை என்றார் வால்டேர்.

பிரான்சு மக்களுக்குக் கல்வி புகட்டுவதற்காக இருபத்தொன்பது தொகுதிகள் கொண்ட நூல்களை எழுதினார் வால்டேர். ஒரு மேதை என்பவன், தன் வாழ்க்கைப் பணித் திட்டத்தை நிறைவேற்ற அளவற்ற அறிவுத் திறனால் தன்னை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.

மதகுருமார் கூட்டம், மூடநம்பிக்கை ஆகிய இரு பெருங்கொடிய பகைவரை எதிர்த்துப் போரிடுவதற்காக வால்டேர் விடா முயற்சியுடன் தன்னை வலிமைப்படுத்திக் கொண்டார். வால்டேரின் புத்தகங்கள் பரந்த அளவில் படிக்கப்பட்டன.

அவர் விரிவுரை செய்ய விரும்பும் எப்பொருள் பற்றியும் கருத்துக் கூறுவதற்கு அதிகாரம் பெற்ற மூல முதன்மைச் சான்றாதாரங்களை அவர் அணியமாக வைத்திருந்தார். வால்டேரின் எல்லையற்ற பெரு வேட்கையும், நினைவாற்றலும் ஒன்றிணைந்து வரலாற்றில் விரும்பிப் படிக்கப்படும் சிறந்த இலக்கியத்தை உருவாக்க அவருக்குத் துணை செய்தன. அவருடைய தொண்ணூற்றொன்பது தொகுதிகளிலும் சோர்வு தருகின்ற ஒரு பக்கத்தைக் கூடக் காண இயலாது என்று கூறுவர். வில்டூரான்ட், வால்டேரின் எழுத்துக்களைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

சில எழுத்தாளர்கள் விரிவாக எழுதி ஒரு பக்கத்திலேயே நம்மைக் களைப்படையச் செய்து விடுவார்கள்.

(உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் நூலில் 82ஆம் பக்கத்தில் இருப்பது)

தமிழ் ஓவியா said...


வி(அ)ஞ்ஞானிகள்


நம் நாட்டுப் படிப்பு வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு லைசென்ஸ் என்றார் தந்தை பெரியார். அதற்கு ஆதாரத்தைத் தேடிக் கொண்டு அலையத் தேவையில்லை.
இஸ்ரோ நிறுவனம் விண்ணியல் துறை தொடர் பான விஞ்ஞானிகளின் அமைப்பு. அதன் இயக்கு நராக இருப்பவர் இராதா கிருஷ்ணன் - இஸ்ரோ இயக்குநர் பொறுப்பை ஏற்றவுடனேயே குருவாயூர் அப்பனுக்கு எடைக்கு எடை சர்க்கரையைத் துலா பாரமாக வழங்கினார். சிறீஹரிகோட்டாவில் ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் ஆகஸ்டு 19ஆம் தேதி மாலை 4.50 மணிக்கு ஏவப்படும் என்று அறிவிக் கப்பட்டது.

விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியால் மேற்கொள் ளப்பட்ட திட்டம் இது. இயக் குநர் இராதாகிருஷ்ணன் என்ன செய்தார்?

அதற்கு முதல் நாள் (ஆகஸ்டு 18) காலை, தம் மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோயி லுக்குச் சென்றார், சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு சாமி கும்பிட்டார்.

அதோடு நிறுத்தி விட்டால் ஆறுதல் ஏற்பட முடியுமா? காளஹஸ்தி சிவன் கோயிலுக்கும், தன் பாரியாளுடன் சென்று விழுந்து விழுந்து கும்பிட்டார். நம் கையிலா இருக் கிறது? எல்லாம் அவன் செயல்! என்று ஏதோ பாமரன் சொன்னால் புரிந்து கொள்ளலாம், ஒரு விஞ்ஞானி, இப்படி நடந்து கொள்கிறாரே - தந்தை பெரியார் மொழியில் சொல்ல வேண்டுமானால் படித்த பாமரன் என்ற அடைமொழியைத் தாராள மாகக் கொடுக்கலாம்.

சரி, ஒரு கடவுள் அல்ல - இரு கடவுளையும் (சைவ, வைணவக் கடவுள்களை யும்) குடும்பத்துடன் சென்று கும்பிட்டாரே காரியம் கை கூடியதா?

1200 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட ஏவுகணை, திட்டமிட்டபடி செயல்படாமல் போயிற்றே!

இதற்குப் பிறகாவது கடவுளுக்கும், கண்டுபிடிப்பு களுக்கும் எந்தவித சம்பந் தமும் கிடையாது என்பதை உணர்வார்களா? ஒப்புக் கொள்வார்களா?

இதற்கு முன்பும்கூட இதே மாதிரிதான் 2006 ஜூலை 10இல் ஜி.எஸ். எல்.வி. ஏவுகணை மூலம் இன்சாட்-4 சி செயற் கைக்கோள் ஏவப்பட்டது. விண்ணில் பறந்த ஒரே நிமிடத்தில் வெடித்துச் சிதறியது.

11 ஆயிரம் விஞ்ஞானி கள் ரூ.256 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி, விழலுக்கு இறைத்த நீர் கதையாகி விட்டது நல்ல நாள் நேரம் பார்த்துதான் செய்தனர்.
விஞ்ஞான மனப் பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். (51a(H)
இங்கே விஞ்ஞானி களுக்கே விஞ்ஞான மனப் பான்மை இல்லையே - என்ன செய்ய!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


மூடநம்பிக்கைகளை எதிர்த்துத் திராவிடர் கழகம் திட்டமிட்டுத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடும்!


மராத்திய மாநில அரசைப் பின்பற்றி மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டத்தை மத்திய அரசும், மாநில அரசும் இயற்ற வேண்டும்

மூடநம்பிக்கைகளை எதிர்த்துத் திராவிடர் கழகம் திட்டமிட்டுத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடும்!

தமிழர் தலைவரின் முக்கிய அறிக்கை

நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைப் பயணம் அவர் கொடுக்கும் அறிக்கை உலக மக்களின் கண்களைத் திறப்பதாக அமையட்டும்!

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் மும்பையில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில், மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுவதைப் போல தமிழ்நாட்டிலும் இயற்ற வேண்டும்; மத்திய அரசும், சட்டம் இயற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: மராத்திய மாவீரரான நரேந்திர தபோல்கர் அவர்களது உயிர்த் தியாகத்தின் மூலம் அவர் வரலாற்றில் என்றென்றும் வாழுபவராகவே மாறி விட்டார்!
உயிருடன் உள்ள பல சுயநல, கொள்கையற்ற அல்லது கொள்கைகளை விற்றுப் பிழைக்கும் பல கோணல் வழிப் பேர்கள் உயிருடன் இருந்தாலும் அவர்கள் செத்த வர்களே; நடைப் பிணங்களே!

இவரது வாழ்க்கை - அரிய பொன்னொளி - புத் தொளி பாய்ச்சிய - பாய்ச்சிடும் - எடுத்துக்காட்டான வாழ்க்கை!

மராத்திய மாநில அரசு, 13 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்த - தபோல்கர் விரும்பிய மூடநம்பிக்கை ஒழிப்புப் பற்றிய சட்டம் - இப்போதுதான் அவசரச் சட்டமாக மாறி, பிறகு, சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும் சட்டமாகி விடுவது உறுதி என்ற நிலையை இந்த உயிர்த் தியாகம் - உயர் தியாகமாகிமாறி - கடும் விலை இச்சட்டத்திற்கு அவரால் கொடுக்கப்பட்டுள்ளது என்கிற போதிலும் - ஓர் அமைதிப் புரட்சி நடைபெறத் துவங்கி விட்டது - ஜோதிபா ஃபூலோவின் மராத்திய மண்டலத்தில்!

பாராட்டுக்குரியவர் மராத்திய மாநில முதல் அமைச்சர்

இதற்காக மராத்திய மாநில முதல் அமைச்சர் பிருத்தி விராஜ் சவான் அவர்களையும் அவரது அமைச்சரவை சகாக்களையும் பெரிதும் பாராட்டி மகிழ்கிறோம்.
இந்த மாதிரிச் சட்டங்களை பெரியார் - அண்ணா பகுத்தறிவின் முன்னோடி மாநில மண்ணாகிய தமிழ்நாட்டில் நிறைவேற்றிட முன்வர வேண்டும்.
உடனடியாக சட்டம் தேவை!

ஜோசியம் கூறும் சாமியார்கள், ஆசிரமங்கள், குறி சொல்லும் சாக்கில் பெண்களைத் தகாத வழியில் விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல், போதை மருந்துகளை பரப்பி இளைஞர்கள் - பெண்களின் வாழ்க்கையை நாசப் படுத்துதல் போன்றவற்றைத் தடை செய்து, சந்தேகத் தோடு நடமாடும் பாலியல் வன்கழுகுகளை, வட்டமிடும் பகற் கொள்ளைக்காரர்களைத் தண்டிக்கும் வகையிலும் பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடுதல் முதலிய கொடுமைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவும் அத்தகைய தண்டனைக்குரிய சட்டங்கள் உடனடியாகத் தேவை!

தமிழ்நாடு அரசும் - மத்திய அரசும் சட்டம் இயற்ற வேண்டும்!

மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்களை நாம், பகுத்தறிவாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். அவரது தனிப்பட்ட நம்பிக்கை எப்படியோ இருக்கலாம்; மாநில ஆட்சியைப் பொறுத்தவரை மக்கள் நலம் சார்ந்த விஷயம் என்பதால், நாம் இதனை வற்புறுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

மாநில அரசுகள் மட்டுமல்ல மத்திய அரசே இப்படி ஒரு அறிவுப் புரட்சிக்கு வித்திடும் - சமூக விரோதச் செயல்களைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது அவசியம் - அவசரமாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளைக் காப்பாற்றி, பரப்ப வேண்டியது மத்திய அரசின் தலையாய கடமை அல்லவா?

அரசியல் சட்ட 51A(h) பிரிவில் உள்ளபடி, அறிவியல் மனப்பாங்குடன் கேள்வி கேட்டு ஆராயும் பழக்கம், சீர்திருத்தம், மனிதநேயம் - இவைகளை ஒவ்வொரு குடிமகனும், குடிமக்களும் பரப்பிட இத்தகைய சட்டங் களைக் கொண்டு வந்து நிறைவேற்றி செயலாக்குவது மிகமிக இன்றியமையாதது அல்லவா!
தீவிரப் பிரச்சாரத்தில் திராவிடர் கழகம் ஈடுபடும்!

இதற்கென ஒரு தீவிரப் பிரச்சாரத் திட்டத்தினை திராவிடர் கழகம் விரைவில் அறிவிக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

உண்மைக் குற்றவாளிகளை மராத்திய அரசு உடனே கண்டுபிடித்தாக வேண்டும்.

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
//

தமிழ் ஓவியா said...


ஏழுமலையானைக் கேலி செய்யும் அர்ச்சகர்கள்!

திருப்பதி கோயில் அர்ச்சகர்களுக் குக் கராத்தே, குங்பூ, மல்யுத்த பயிற் சிகள் அளிக்கப்பட உள்ளதாம்.

இதற்குக் காரணம் என்னவாம்? கடந்த செவ்வாய்க்கிழமை வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த முருகன் என்பவர் ராமன் மேடையில் ஏறி தரிசனம் செய்தார் - திடீரென்று தடுப்பு வேலியை தாண்டி ஏழுமலை யான் கருவறைக்குள் நுழைய முயன்றார்.

அதிர்ச்சி அடைந்தனர் அர்ச்ச கர்கள்; பாதுகாப்புப் படையினர் ஓடி வந்து அவரைத் தடுத்தனராம்... கடைசியில் அந்த முருகன் மன நிலை சரியில்லாதவர் என்று தெரிந்ததாம்.

இதனைத் தொடர்ந்து தீவிரவாதி கள் இதுபோல் கோயில் கருவறைக் குள் நுழைந்தால் என்னாவது என்ற அச்சம் உலுக்குகிறதாம்.
அதன் காரணமாக கராத்தே மற்றும் ஆயுதப் பயிற்சிகளையும் ஸ்ரீமான் ஏழுமலையான் கோயில் அர்ச்சகர்களுக்கு அளிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாம்.
ஏழுமலையானை நம்பி எந்தவிதப் பிரயோசனமும் கிடையாது என்று தேவஸ்தானமும், அர்ச்சகர்களும் ஒரு முடிவுக்கு வந்து விட்டார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

ஏற்கெனவே உண்டியலுக்குப் பக்கத்தில் ஹமு47 துப்பாக்கியுடன் காவல்துறையினர் 24 மணி நேரமும் காவல் காத்துக் கொண்டு இருக்கின் றனர். அதைப் பார்த்துப் பக்தர்களே உள்ளுக்குள் நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டு போகிறார்கள்.

போதும் போதாதற்கு அர்ச்சகர் களுக்கே ஆயுதப் பயிற்சி அளிக்கின் றனர் என்றால் நாத்திகர்களைவிட ஆத்திகர்களே கடவுளைக் கேலி செய் கின்றனர் என்பது விளங்கவில்லையா?

கடவுளை மற - மனிதனை நினை என்று தந்தை பெரியார் சொன்னது - நூற்றுக்கு நூறு சரி என்பதும் அய்யந் திரிபறத் தெரிந்து விடவில்லையா?

தீராத வினை எல்லாம் தீர்த்து வைக்கும் கோவிந்தனின் இலட்சணம் இதுதான்!

கடவுளுக்குத் தேவை சினிமா விளம்பரம்!

விண்வெளியில் செயற்கைக் கோளை ஏவுவதற்குமுன் திருப்பதிக் குச் சென்றதோடு மட்டுமல்லாமல் காளஹஸ்தி சிவன் கோயிலுக்கும் சென்று கும்பிடு தண்டம் போட்டுள் ளார் இஸ்ரோ தலைவர் ராதா கிருஷ்ணன்; ஆனாலும் பிள்ளை பிழைத்தபாடில்லை; இப்பொழுது ஒரு தகவல், அந்தக் கோயிலின் கலசம் கீழே விழுந்து விட்டதாம்; மூன்று ஆண்டுகளுக்குமுன் (26.5.2010) அந்தக் கோயிலின் ராஜகோபுரம் தலைகுப்புற விழுந்தது. இரண் டாண்டுகளுக்குமுன் கோபுரத்திலி ருந்து யாழி சிற்பம் கீழே விழுந்து நொறுங்கியது.

இப்படி தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியாத காளஹஸ்தி சிவனி டம் தான் இஸ்ரோ தலைவர் சரண டைகிறார்.

இந்தக் கோயில் இடிந்து நொறுங் கிப் போய் கேட்பாரற்றுக் கிடந்த நிலையில் அந்தக் கோயிலுக்கு மவுசு வந்த கதை - சினிமா கதைதான்.

ஜெகன் மோகினி என்ற சினி மாவை விட்டலாச்சாரியா என்பவர் எடுத்தார். அவர் கூறுவதைப் படி யுங்கள். அந்தப் படத்தில் ஆடு, பாம்பு இரண்டுக்கும் காளஹஸ்தியில் உள்ள சிவன் கோயில் புனித நதியில் குளித் ததால் சாப விமோசனம் ஏற்படும். நீங்கள் பழைய உருவை அடைவீர்கள் என்று பரிகாரம் சொல்வதாக எழுதி யிருந்தேன். சென்னையிலிருந்து, திருப்பதி செல்லும் வழியில் காள ஹஸ்தி இருக்கிறது. அது ஒரு புண்ணிய ஸ்தலம். நதிக்கரையில் பழைமை மிகுந்த சிவன் கோயில் இருக்கிறது. ஆனால் பக்தர்கள் வருகையின்றி கோயில் பாழடைந்த நிலையில் இருக்கிறது. ஜெகன் மோகினி படம் வெளிவந்தபின் ஆந்திரா முழுவதிலிருந்தும் பக்தர்கள் டூரிஸ்ட் பஸ்ஸில் வரத் துவங்கி னார்கள். இன்றைக்கு அதற்கு நட்சத்திர மதிப்பு வந்து விட்டது. சமீபத்தில் அங்கு ஒரு படப்பிடிப்புக் காகச் சென்றபோது, அங்குள்ள புரோகிதர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு நன்றி தெரிவித்து. இந்த விவரங்களையெல்லாம் சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. (ஆனந்தவிகடன் 14.12.1986).

சினிமா இயக்குநர் விட்டலாச் சாரியார் இவ்வாறு கூறியுள்ளார். (அவரே உடல் நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்று இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொண் டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் காளஹஸ்தி வந்து சிவனை வழிபட்டு புண்ணிய நதியில் குளித்து நலம் பெறவில்லை என்பது வேறு செய்தி).

பாழடைந்து கேட்பாரற்றுப் போன காளஹஸ்தி கோயில் புது வாழ்வு பெறுவதற்குக்கூட சினிமாவின் தயவு தான் வேண்டியிருந்தது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

இஸ்ரோ - அறிவியல்கூட விஞ் ஞானிகளே மதி மயங்குகிறார்கள் என்றால் மற்றவரைப் பற்றிக் குறை கூற முடியுமா?

தமிழ் ஓவியா said...


மகாராட்டிரத்தில் மட்டுமல்ல...


புனே பகுத்தறிவாளர் டாக்டர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர் எந்தக் கொள்கைகளை முன்னிறுத்திப் பாடுபட்டாரோ, அந்தக் கொள்கைகளுக்கு மதிப்புக் கூட்டும் வகையில் மூடநம்பிக்கை ஒழிப்புக்கான அவசரச் சட்டம் ஒன்றை அம்மாநில அரசு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மகாராட்டிர மாநிலத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுமையும் அனைத்து மாநில அரசுகளும்கூட இத்தகைய சட்டம் ஒன்றைக் கொண்டு வரலாம். இன்னும் சொல்லப் போனால் மத்திய அரசே கூட இந்த வகையில் இந்தியா முழுமைக்கும் பொதுவானதோர் சட் டத்தைக் கொண்டு வரலாமே!

இந்திய அரசமைப்புச் சட்டம் 51ஹ() பிரிவு என்ன கூறுகிறது? விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும்; சீர்திருத்த மனப்பான்மையை ஏற்படுத்த வேண்டும் - அது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் அடிப்படைக் கடமை என்று வலியுறுத்திக் கூறி யுள்ளதே!

அதன் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தைக் கொண்டு வருவது சரியானதாக இருக்கும்.

சாமியார்கள் என்ற முகமூடியில் சமுதாயக் கேடர்கள் நாட்டில் செழித்து விட்டார்கள் - அவர்கள் செய்யும் மோசடிகள்பற்றி நாளும் வண்டி வண்டியாகச் செய்திகள் குவிந்து கொண்டே இருக்கின்றன.

பிள்ளை வரம் கொடுக்கிறேன் என்று சொல்லிப் பெண்களைச் சீரழிக்கிறார்கள், ஆங்காங்கே நரபலிச் செய்திகள்கூட வந்து கொண்டிருக்கின்றன. பெண்களின் நகைகளைப் பூஜையில் வைக்கிறேன் என்று சொல்லி நகைகளைப் பறித்து கம்பியை நீட்டுகிறார்கள். ஆசிரமம் என்று சொல்லி விபச்சாரம் நடத்தும் பேர்வழிகள் பெருகி வருகிறார்கள்.

பீர் சாமியார், சுருட்டு சாமியார், கெட்ட வார்த்தை பேசும் சாமியார், எச்சில் துப்பும் சாமியார் என்று வண்ண வண்ணமாக சாமியார்கள் திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இந்தக் குற்றவாளிகளைத் தண்டிப் பது எப்படி? மட்டுப்படுத்துவது எப்படி? என்பதுபற்றி ஒரு மக்கள் நல அரசு சிந்திக்க வேண்டாமா? அப்பாவி மக்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள் - என்கிறபோது இவர்களை எப்படி அனுமதிப்பது?

சந்திராசாமியார், விநாயகர் பால் குடித்தார் என்று புரளியைக் கிளப்பிவிடவில்லையா? அதனால் இந்தியா முழுமையும் முட்டாள்தனமாக பரபரப்பை உண்டாக்கி விட்டார்களே! வதந்திகளைப் பரப்பி மக்களை முட்டாளாக்குவது குற்றப் பிரிவுச் சட்டத்தின்கீழ் வராதா?

2012 டிசம்பர் 21 ஆம் தேதியோடு உலகம் அழியப் போகிறது என்று புரளியைக் கிளப்பியதால் மூட நம்பிக்கையில் ஆழ்ந்து கிடந்த மக்கள் மத்தியில் பீதியையும், அமைதியற்ற தன்மையையும், மன உளைச்சலையும் உண்டாக்கியது மன்னிக்கத்தக்கது தானா?

பில்லி, சூன்யம் என்று சொல்லி மக்களை அச்சுறுத்தும் ஆசாமிகளும் உண்டு. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களை செயல்பாடுகளின் அடிப்படையில் தண்டிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

மக்கள் மத்தியில் இந்த மூடநம்பிக்கையை எதிர்த்து விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தப்பட வேண்டாமா?

இந்திய அரசமைப்புச் சட்டம் அதனைத்தானே வலியுறுத்துகிறது! தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் மானமிகு கலைஞர் அவர்கள் சமூக சீர்திருத்தக் குழு ஒன்றை உருவாக்கினார். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் அந்தத் துறைக்கு மூடு விழா நடத்தப்பட்டு விட்டதே!

நமது ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிகள் அடிக்கும் கொட்டம் சாதாரணமானதல்ல. காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சிகளில் இந்தச் சாமி யார்கள் முகத்தில் தானே விழிக்க வேண்டியுள்ளது.

24 மணி நேரமும் மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் திணிக்கும் கீழ்த்தரமான வேலையில்தானே தொலைக்காட்சிகள் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டுள்ளன.

அச்சு ஊடகங்களை எடுத்துக் கொண்டால் ஆன்மிகச் சிறப்பிதழ்கள் என்று போட்டு அடி மட்டமான அறிவுக்குச் சற்றும் பொருத்தமற்ற மூட நம்பிக்கை குப்பைகளைக் கொட்டி அவற்றை விற்றுக் காசாக்குகிறார்களே! இது மாபெரும் மோசடி யல்லவா!

இதற்கெல்லாம் முடிவு கட்ட அதிகார பூர்வமாக மூடநம்பிக்கை ஒழிப்புத் துறையை ஏற்படுத்திட மத்திய அரசு முன் வர வேண்டும் என்று வலியுறுத் துகிறோம்.

தமிழ் ஓவியா said...


பக்குவப்படுத்த வேண்டும்



மக்கள் இயற்கையிலேயே மூட நம்பிக்கை, காட்டுமிராண்டித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்களை ஓரளவுக்காவது மாற்றிப் பகுத்தறிவு, சமதர்மம் இவைகளுக்குப் பக்குவப்படுத்தவேண்டும்.
(விடுதலை, 16.1.1973)

தமிழ் ஓவியா said...


நவநீதம்பிள்ளையின் பயணமும் சிவில் சமூகத்தின் எதிர்வினையும்



- டாக்டர் பாக்கியசோதி சரவணமுத்து

(25.08.2013 ஞாயிறு அன்று அய்.நா மனித உரிமைக் கமிஷன் ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு 31 ஆம் தேதி வரை இருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்கிறார். அவரது வருகையையொட்டி 21.08.2013 அன்று, சுதந்திரத் துக்கான அரங்கம்' என்ற அமைப்பின் சார்பில் கொழும்பு நகரில் நடத்தப்பட்ட பத்திரிகை யாளர் சந்திப்பில் டாக்டர் பாக் கியசோதி சரவணமுத்து ஆற்றிய உரை. காணொளியிலிருந்து கேட்டு எழுதியவர்: ரவிக்குமார்)

அய்.நா மனித உரிமைக் கமிஷன் ஆணையர் இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வதன் பின்னணியில் பல விடயங்கள் உள்ளன. அய்.நா செய லாளரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, எல்எல்ஆர்சி-யின் அறிக்கை, அய்.நா மனித உரிமைக் கவுன்சிலில் மார்ச் 2012 மற்றும் மார்ச் 2013 இல் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்கள் ஆகியவற்றின் பின் னணியில்தான் அவர் வருகிறார். மார்ச் 2013 தீர்மானத்தின்படி 2014 மார்ச் கூட்டத்தின்போது விரிவான அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டு அதன்மீது விவாதங்களும் நடை பெறவுள்ளன.

அய்.நா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானங்களும் சர்வதேச சமூகத்தின் வேண்டுகோளும் இலங்கையில் எல்எல்ஆர்சி பரிந்துரைகளை நிறை வேற்றவேண்டுமென இலங்கை அரசைக் கேட்டுக்கொண்டிருந்தன. இலங்கையில் நல்லிணக்கத்துக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தன. அவை எந்த அளவுக்கு செயல் படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிந்து அடுத்த மாதம் நடைபெறவுள்ள அய்.நா மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் நவநீதம்பிள்ளை அவர்கள் வாய்மொழி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். எனினும் அவரது இலங் கைப் பயணம் அந்தக் குறிப்பிட்ட நோக்கத்துக்கானது மட்டும் அல்ல. அதற்கான காரணங்களில் முக்கிய மானது அய்.நா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகு இந்த நாட்டில் பல விடயங்கள் நடந்துள்ளன. நல்லிணக்கத்துக்கு எதி ராகவும் அந்தத் தீர்மானங்களின் சாராம் சங்களுக்கு மாறாகவும் பல எதிர்மறை யான நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன. கேள்வி இதுதான்: நமது நாட்டின் மனித உரிமை நிலவரம் மேம்பட்டிருக்கிறதா அல்லது சீரழிந்திருக் கிறதா? நிலைமை மோசமடைந்திருக் கிறது என்பதே சிவில் சமூகத்தின் கருத்து. கடந்த இரண்டு ஆண்டுகளில் இங்கே சட்டவிரோதக் கொலைகள் அதிகரித்துள்ளன; தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன; நாட்டின் தலைமை நீதிபதி முறைகேடான விதத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்டிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு குடிமகன் தனது ஜனநாயக உரிமையை செயல்படுத்துவதற்கு எதிராகத்தான் அரசின் நடவடிக்கைகள் இருந்து வந்துள் ளன. ராணுவம், ஆயுதங்களோடு எவரை வேண்டுமானாலும் சுடலாம், கொலை செய்யலாம் என்ற உத்தரவோடு எல்லா இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

பிற மதத்தினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம், வன்முறை எப்படிக் கட்ட விழ்த்து விடப்பட்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.எப்படி கலாச்சார இணக்கநிலை நஞ்சூட்டப்பட்டது, இனங்களுக்கிடையிலான உறவுகள் இன அடிப்படையிலான முப்பதாண்டுகால யுத்தத்தின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கு எப்படி இப்போதும் முயன்றுவருகின்றன என்பதை நாம் அறிவோம். இந்த நிலைமையை அரசின் திட்டமிட்ட ராணுவமயமாக்கல் மேலும் மோசமாக்கிவருகிறது. தனியாருக்குச் சொந்தமான 6300 ஏக்கருக்கும் அதிக மான நிலம் ராணுவத்தால் பறிக்கப்பட் டுள்ளது.வடக்கு கிழக்கு மாகாணங்களில் கல்வி, பொருளாதாரம் மற்றும் சிவில் நிர்வாகம் யாவும் ராணுவத்தின் கட்டுப் பாட்டில் உள்ளன. இங்குள்ள மனித உரிமை நிலவரம் குறித்த ஒட்டு மொத்த மான புரிதலைப் பெறவேண்டுமெனில் இங்கே வரவிருக்கும் அய்.நா மனித உரிமைக் கவுன்சிலின் ஆணையர் இந்த விஷயங்களையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். அவர் அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திப்ப தோடல்லாமல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மனித உரிமை அமைப் புகளின் பிரதிநிதிகள், சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரையும் சந்திக்க வேண்டும்.

நான், ஊடகத்தினரை வேண்டிக் கேட்டுக்கொள்வதெல்லாம் இப்படியான பத்திரிகையாளர் சந்திப்புகளுக்குச் செல்லும் போது நீங்கள் என்ன செய் கிறீர்கள்? என்ன செய்யவேண்டும் என்பதை உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.இந்த நாட்டின் மனித உரிமைச் சூழலை மேம்படுத்த என்ன செய்கிறீர்கள்? நீங்கள் கலாச்சார இணக்கப்பாட்டுக்காகவும், பொறுப் பேற்றல் குறித்தும் சரியான கேள்வி களைக் கேட்கிறீர்களா? இந்த நாட்டில் நியமிக்கப்பட்ட ஆணையங்கள் குறித்தும் அவற்றின் அறிக்கைகள் குறித்தும் அவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடவேண்டியதன் அவசியம் குறித் தும் நீங்கள் உரிய கேள்விகளைக் கேட் கிறீர்களா? அண்மையில் ஒரு ஆணை யம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளில் காணாமல் போனோர் குறித்து அது விசாரிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஏற்கெனவே அதற்காக நியமிக்கப்பட்ட ஆணையங்கள் அவற்றின் அறிக்கைகள் என்ன ஆயின ? ஏன் இப்போது இன் னொரு கமிஷன் என நீங்கள் கேட்டிருக் கிறீர்களா? இவையெல்லாம் உண்மையி லிருந்து நம்மை திசைதிருப்புவதற்காகவும் அய்.நா மனித உரிமை கமிஷன் ஆணை யரை ஏமாற்றுவதற்காகவும் செய்யப் படுகின்றன. வடக்கு மாகாணத்தில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் சொல்கிறது.ஆனால் அரசாங்கத்தின் பொய்யை அங்கிருக் கும் சிவில் சமூக அமைப்புகள் ஏற்க வில்லை. எல்.எல்.ஆர்.சி-யின் 53 பரிந் துரைகள் இப்போது நேஷனல் ஆக் ஷன் பிளானில் சேர்க்கப்படப் போவ தாக சொல்லப்படுகிறது. அந்த செயல்திட்டம் எப்போது ஆரம்பிக்கும்? அதற்கான பேச்சுவார்த்தை எப்போது துவங்கும்? என நீங்கள் கேட்க வேண்டும். இது உங்களின் பொறுப்பு உங்களின் கடமை. ஊழல், கொலை, பாலியல் வன்முறைகள் என அனைத்து விதமான குற்றங்களிலும் ஈடுபடுகிற அரசியல் வாதிகளைக் கொண்ட நாடு இது. ஏன் இவை யெல்லாம் நடக் கின்றன? என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும். அய்.நா மனித உரிமை ஆணையரது பயணம் ஆகஸ்டு 31 ஆம் தேதி முடிகிறது. இது அவரது முக்கிய மான பயணம். இதன் அடிப்படையில்தான் செப் டம்பரில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் அவரது அறிக்கை அமையப்போகிறது. இதன் அடிப்படையில்தான் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவிருக்கும் கூட்டத்தின் விவாதங்கள் அமையப் போகின்றன. எனவே இங்கிருக்கும் மனித உரிமை நிலவரம் குறித்த சரியான சித்திரத்தை அய்.நா மனித உரிமைக் கமிஷன் ஆணையருக்கு வழங்கவேண்டியது நம் எல்லோரதும் கடமை. உண்மைகளின் அடிப்படை யிலன்றி வேறெந்த விதத்திலும் இந்த நாட்டில் மனித உரிமைகளை நாம் நிலைநாட்டமுடியாது. நன்றி ! (டாக்டர் பாக்கியசோதி சரவண முத்து புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வலர். மாற்றுக் கொள்கைகளுக் கான மய்யம் - - Centre for Policy Alternatives -CPA)
என்ற அமைப்பின் நிர்வாக இயக்குநர். இந்த கூட்டத்தில் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த டாக்டர் நிர்மல்கா ஃபெர்னாண்டோ, வழக்குரைஞர் சுதர்சனா குணவர்த் தனா, பிரிட்டோ ஃபெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.)

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் பணிக்குத் தகுதித் தேர்வு தேவையா?

ஆசிரியருக்குக் கடிதம்

ஆசிரியர் பணிக்குத் தகுதித் தேர்வு தேவையா?


தகுதித்தேர்வு என்பது வட இந்தியாவில் போதுமான கல்வித் தகுதி இல்லாதவர்கள் கூட ஆசிரி யர்கள் பற்றாக்குறையால் கல்வியை போதிக்கும் நிலை உள்ளது. காரணம் அப்பகுதி கல்வியில் பின் தங்கி யுள்ளதே 12-ஆம், 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்க போதுமான பட்டதாரி ஆசிரியர்கள் இல்லாததால் வெறும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவரோ அல்லது பி.எட்., தகுதி இல்லாப் பட்டதாரிகளோ கற்பிக்க பயன் படுத்தியிருக்கலாம். நம் மாநிலத்தில் அனைத்து ஆசிரியர்களும் போது மான கல்வித் தகுதி பெற்றவர்களே. அப்படி இருக்க தகுதித் தேர்வே தேவையில்லை என்பது எங்கள் கருத்து.

அடுத்து பல லட்சக்கணக்கான ஆசிரியர்கள் வேலை இல்லாமல் இருக்கும்போது கல்வியறிவு பெற்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களைத் தெரிவு செய்ய இத்தகுதித் தேர்வு தேவை என்ற ஒரு கருத்தும் ஒரு சிலரிடம் உள்ளது. அவ்வாறு பல லட்சம் ஆசிரியர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு புற்றீசல் போல பல தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அரசு அனுமதியும் கொடுத்துவிட்டு அதில் வாரம் முழுவதும் பள்ளிக்கு, கல்லூரிக்கு வராமல் வாரத்தில் சனி, ஞாயிறு மட்டும் வந்தாலே போதும் அதற்கு பணம் ரூ. 50,000 அதிகமாகக் கட்ட வேண்டும் என்று கூறி பணம் பறிக்கும் நிறுவனங்களையும் அனு மதிப்பதுவும் இந்த அரசு தானே. ஆக இந்த அரசு அத்தகைய நிறுவனங் களை அடிக்கடி ஆய்வு (Surprise Visit) செய்யலாமே. அவ்வாறு செய்தால் பல போலி கல்வி நிறுவனங்கள் அடி பட்டுப்போகும், தகுதி வாய்ந்த ஆசிரி யர்கள் கிடைப்பார்கள் அல்லவா?

மேலும் தந்தை பெரியார் அவர் கள் எவ்வளவோ போராடி நமக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்திருக் கிறார். தகுதித்தேர்விலும் கூட மத்திய அரசின் கல்விக் கொள்கையிலும் கூட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்டவர்களுக்கு மாநில அரசு விரும்பினால் தகுதித் தேர்வில் தெரிவு செய்யப்பட மதிப்பெண்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்று உள்ளது. இந்தியாவிற்கே இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு வழி காட்டியாக இருந்த நம் மாநிலம் இதில் அனைவரும் 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என்பது சமூக நீதிக்கு எதிரானது.

பிற்படுத்தப்பட்டோர் கூட்ட மைப்பு தங்கள் தலைமையில் செயல் பட்டுவருவதை நாங்கள் அறிவோம். அந்தக் கூட்டமைப்பு சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து 1) தகுதித் தேர்வு தேவையில்லை என்றும் 2) அவ்வாறு கண்டிப்பாக தகுதித் தேர்வு தேவை தான் என்றால் அதில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத் தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் போன்றவர்களுக்கு மதிப்பெண்கள் கண்டிப்பாக குறைக்கப்பட வேண் டும் என்றும் வாதாடி வெற்றி பெற்றுத் தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து ஜாதியின ருக்கும் இது பயனளிக்கும் என்ற நம்பிக்கையுடன்

- ஆர் பண்ணாரி
(சிங்கம் பேட்டை, ஈரோடு)

தமிழ் ஓவியா said...


கீழே விழுந்தும் மீசையில் மண்ணொட்டவில்லையாம்


நமது பார்ப்பனர்கள் எவ்வளவோ பாடுபட்டும் இந்துமத பரிபாலன மசோதாவானது சட்டசபையில் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக நிறைவேறி, இரண்டு கவர்னர் பிரபுக்கள், இரண்டு வைசிராய் பிரபுக்கள் ஆகியவர்கள் சம்மதமும், அரசர் பெருமான் சம்மதமும் பெற்றுச் சட்டமாகி விட்டது. இனி மகந்துக்கள் மடாதிபதிகள் பணம் நமது பார்ப்பனர்களுக்கும் அவர்களது தேர்தலுக்கும் கிடைப்பது முடியாத காரியம். இதற்காக நமது பார்ப்பனர்கள் ஒரு தோது கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

அதாவது கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் மறுபடியும் இதைப்பற்றித் திருத்தவோ, புகுத்தவோ செய்யலாம் என்பதாக மந்திரியைக் கொண்டு ஒரு வார்த்தை வாங்கி விட்டார்களாம். இது இன்னமும் ஏமாற்றி மடாதிபதிகளிடம் பணம் வாங்கவே அல்லாமல் வேறல்ல.

நமது ஊரில் ஒரு பார்ப்பனக் கிழ வக்கீலிருந்தார். அவர் மேஜிஸ்ட்ரேட் வீட்டிற்குப் போய்த்தனியாய்த் தன்னைப் பற்றிக் கொஞ்சம் கவனித்துக் கொள்ளும்படிக் கெஞ்சுவார். மேஜிஸ்ட்ரேட் என்னய்யா செய்யச் சொல்லுகிறீர் என்று கேட்டால், எஜமானர் செய்கிறபடி செய்துகொள்ளுங்கள். ஆனால் என் கட்சிக்காரனிடம் தாங்கள் தீர்ப்பு சொல்லுகிறபோது இந்த கேசு இன்னமும் அதிகமாக தண்டிக்கவேண்டும்.

உங்கள் வக்கீலுக்காக இவ்வளவோடு விட்டேன் என்று சொல்லிவிடுங்கள்; அதுவே போதும்; நான் பிழைத்துக்கொள்ளுவேன் என்று சொல்லுவார். அதுபோல் மந்திரி இடம் போய்க் கெஞ்சி இப்பார்ப் பனர்கள் பிழைக்க வழி தேடிக்கொண்டார்கள். மற்றபடி சட்டத்திற்கு ஒன்றும் ஆபத்து இல்லை. ஆனால் உண்மையான மத பரிபாலனத்திற்கு இந்தச் சட்டம் போதாது என்பதும், இன்னமும் பலமான சட்டம் செய்யவேண்டும் என்பதும் நமது கோரிக்கை.

இந்த மந்திரி சபை கலைந்தோ அல்லது இந்தசட்டசபை கலைக்கப் பட்டோ மறுபடி கூடும் சபைகளில் அதுவும் கண்டிப்பாய் நடைபெறுமென்றே நினைக்கிறோம்.

- குடிஅரசு - கட்டுரை - 30.01.1927

தமிழ் ஓவியா said...

பார்ப்பனரல்லாதார் பிரச்சாரமும் மகாநாடுகளும், சங்கங்களும்

இம்மாதம் 15ஆம் தேதி வாக்கில் கோயமுத்தூரி லாவது, மதுரையிலாவது பார்ப்பனரல்லாதார் பிரசாரத்திற்காக வேலைக்கமிட்டி ஒன்று கூட்டிப் பிரசாரம் ஆரம்பிக்கவேண்டுமென்று எழுதியிருந்தோம். சில கனவான்கள் அதை ஒப்புக்கொண்டு தங்களாலான உதவி செய்வதாகத் தெரிவித்தும் இருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீமான் பி.டி.இராஜன் அவர்கள் சென்னை யிலேயே இந்திய நல உரிமைச் சங்கத்தின் நிருவாகிகள் கூட்டம் ஒன்று ஏற்படுத்துவதாகவும், அதற்குப் பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் என்பதாகத் தெரிவித் திருப்பதாலும், குறிப்பிட்ட கூட்டம் கூட்டுவது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

தவிரவும் பல இடங்களி லிருந்து ஜில்லா, தாலுகா கான்பரன்சுகள் கூடப்போவ தாகப் பல இடங்களில் பார்ப்பனரல்லாதாரர் சங்கமும், பார்ப்பனரல்லாதார் வாலிப சங்கமும், சுயமரியாதைச் சங்கமும் ஸ்தாபிக்கப் போவதாகவும் தெரிவிக்கப் பட்ட கடிதங்கள் மிகுதியும் வந்து கொண்டு இருப்பது பற்றி நமக்கு மிகவும் சந்தோஷமே. ஆனால் ஒவ்வொன்றுக்கும் அக்கிராசனம் வகிக்கவும், துவக்க விழா நடத்தவும் நாயக்கரே வரவேண்டுமென்று எதிர்பார்ப்பது மிகவும் கஷ்டமான காரியம் என்பதைத் தெரிவித்துக்கொள்ளா மலிருக்க முடியவில்லை.

சங்க ஸ்தாபனங்களுக்கு அந்தந்த ஜில்லாவில் உள்ளவர்களில் முக்கியமானவர்களைக் கொண்டே செய்து கொள்வது நலம் என்றும், அனுகூலம் என்றும் தெரிவித்துக்கொள்கிறேம். மகாநாடுகளுக்குத் தலைமை வகிக்கவும் நாம், முன் எழுதியபடி, அரசியலில் எவ்விதக் கொள்கை உடையவர்களாயிருந்தாலும் நிர்மாணத் திட்டத்தையும், சிறப்பாகச் சுயமரியாதைத் திட்டத்தையும் ஒப்புக் கொள்ளுகிற பார்ப்பனரல்லாத கனவான்கள் யாரையும் அக்கிராசனம் வகிக்கக் கேட்டுக்கொள்ளலாம் என்று மறுபடியும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நாயக்கருக்குச் சாவகாசம் கிடைத்தாலும், மகாநாட்டுக்கு விசிட்டர் முறையில் அவசியம் வரக் காத்திருக்கிறார் என்பதையும் தெரியப் படுத்திக் கொள்ளுகிறோம். அதோடு பார்ப்பனரல்லாத தலைவர்களான கனவான்களும் எந்த மகாநாட்டுக் காவது அழைக்கப்பட்டால் அரசியல் காரணத்தைப் பிரமாதப்படுத்திக்கொண்டு வரமறுக்காமல், சவுகரியப்பட்டவர்கள் அவசியம் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு விஜயம் செய்ய வேண்டுமாயும் கேட்டுக்கொள்ளுகிறோம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம் - 16.01.1927

தமிழ் ஓவியா said...


ஜென்மக்குணம் போகுமா?


சுயராஜ்யக்கட்சி பார்ப்பனக்கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உழைக்கச் சம்மதப்படும் சில பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் கூலி கொடுத்தோ, ஆசைவார்த்தை காட்டியோ அதில் சேர்த்துக் கொள்ளப்படுகிறதென்றும் பல தடவைகளில் சொல்லியும், எழுதியும் வந்திருக்கிறோம்.

அது போலவே இப்போது சட்டசபை தேர்தல்கள் முடிந்ததும் தங்கள் காரியம் சாதித்துக் கொள்ளக்கூடிய மாதிரியில் தங்களுக்குப் பக்க பலம் இருக்கிறது என்ப தாகக் கருதி இப்போது சட்டசபைக்குப் பல தீர்மானங்கள் கொண்டு வருகிறார்கள். அதாவது முதலாவதாக, தேவஸ்தான சட்டத்தை ஒழிப்பதற்கே கொண்டு வரப்பட்டிருக்கிறது. தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக்கட்சி விஷயமல்ல.

இது தனித்தனி நபர்களுக்குச் சம்பந்தப்பட்டது என்று சொல்லித் தேர்தலில் பாமர ஜனங்களை ஏமாற்றி ஓட்டுப்பெற்று விட்டு, இப்போது தேவஸ்தான விஷயம் சுயராஜ்யக் கட்சி விஷயமானதோடு காங்கிரஸ் விஷயமாகச் செய்து விட்டார்கள்.

இத்தீர்மானம் கொண்டுவந்தது கோவை பிரதிநிதி ஸ்ரீமான் சி.வி. வெங்கிட்ட ரமண அய்யங்காரே ஆவார். கோவை ஜில்லாவில் ஸ்ரீமான் டி.ஏ.இராமலிங்கஞ் செட்டியார் அவர்களுக்கு விரோதமாய் ஓடி ஓடி ஓட்டு வாங்கிக்கொடுத்திருக்கிற சிகாமணிகள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.

ஸ்ரீமான் அய்யங்காரை இது யோக்கியமா? என்று இவர்கள் கேட்பார்களானால் அவர் உடனே சரியான பதில் சொல்லாதிருப்பார் என்றே நினைக்கிறேன். அதாவது, என் பணத்தினால் ஓட்டுச் சம்பாதித்தேனே ஒழிய யாருடைய தயவினாலும் எந்த வாக்குத்தத்தத் தினாலும் ஓட்டுப் பெறவில்லை; என்னிடம் பணம் வாங்காமல் எனக்கு யார் வேலைசெய்தார்கள்? ஓட்டுச் செய்தார்கள்? என்று கேட்பார்களாதலால் அய்யங் காருக்கு வேலை செய்தவர்கள் தலையைத் தொங்கப் போட்டுக் கொள்ளவேண்டியதுதான். மற்றொரு தீர்மானம் மற்றொரு பார்ப்பனரால் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

அதாவது, பார்ப்பனரல்லாத கட்சி மந்திரி காலத்தில் அரசாங்கக் கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்த்துக் கொள்வதற்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டிருந்ததை இப்போது எடுத்துவிட வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இந்தக் கமிட்டி இருப்பதால் நாலு, இரண்டு பார்ப்பன ரல்லாதார் பிள்ளைகளைக் காலேஜில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாலோ, இரண்டோ பிள்ளைகள் படிப்பதுகூட நமது பார்ப்பனர்களாகிய சுயராஜ்யக் கட்சியாருக்குக் கண்ணில் குத்துகிறபடியால், அடியோடு காலேஜுகளைப் பார்ப்பனச் சத்திரங்களாக்க ஆரம்பித்து விட்டார்கள். இதெல்லாம் பார்ப்பன ருடைய தப்பிதம் அல்ல, பின்னையாருடையதென்றால் - அவர்கள் பின் திரிந்த, திரியும், திரியப்போகும் பார்ப்பனரல்லாத வயிற்றுச் சோற்றுத் தேச பக்தர்களின் தப்பிதமேயாகும் என்பதே நமது அபிப்பிராயம். இன்னமும் என்ன என்ன நடக் குமோ பார்ப்போம்.

- குடிஅரசு - துணைத்தலையங்கம், 23-01-1927

தமிழ் ஓவியா said...

யாருக்கு புத்தி வந்தது?

சில பார்ப்பனப் பத்திரிகைகளும் அவற்றைக் குருவாகக்கொண்ட சில பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் பார்ப்பனரல்லாத கட்சிக்கும் இப்பொழுதுதான் புத்தி வந்து கதரைத் தங்கள் திட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று எழுதுகின்றதுகள், இதுகளுக்கு உண்மையில் புத்தி இருந்தால் சுயராஜ்யக் கட்சி காங்கிரசுக்கு இப்பொழுதுதான் கொஞ்சம் புத்தி வந்தது என்று சொல்லியிருக்க வேண்டும்.

ஏனெனில், கதரைக் கட்டாயமாக உடுத்தவேண்டும் என்று முன்னெல்லாம் மகாத்மா கதறின காலத்தில் முடியாது, பாமர ஜனங்களை ஏமாற்றுவதற்காக மாத்திரம் ஓட்டு கேட்கும்போது கட்டிக்கொள்வோம் என்று சொன்ன யோக்கியர்கள், மதுரை மகாநாட்டில் கதரைப் பார்ப்பனரல்லாதார் கட்சியார் ஏற்றுக்கொண்டதும் இனி பார்ப்பனரல்லாதார் எல்லோரும் கதர் கட்டிவிடுவார்களே என்கிற பயம் தோன்றி நாமும் அதன் பெருமை அடையலாம் என்கிற ஆத்திரத்தின் பேரில் இவ்விடத்திலிருந்து சில பார்ப்பனர்களின் தந்திகள் அஸ்ஸாம் காங்கிரசுக்குப் போனதும் உடனே காங்கிரசிலும், கதர் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வேஷம் போட நமது பார்ப்பனர்கள் ஒரு தீர்மானம் செய்து விட்டார்கள்.

இதிலிருந்து யாருக்குப் புதிதாய் தந்திரபுத்தி வந்தது. காங்கிரஸ் பார்ப்பனருக்கா? பார்ப்பனரல்லாதாருக்கா? என்பதை நடு நிலைமையிலிருந்து யோசித்துப் பார்க்கவும்.

- குடிஅரசு, கட்டுரை - 16.01.1927

தமிழ் ஓவியா said...



பெரியார்-1000 போட்டி


தென்காசியில் பெரியார் 1000 வினா-விடை போட்டி விளம்பரம்.

தந்தை பெரியார் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, பெரியார் மணியம்மைப் பல்கலைக் கழகமும், பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்தும் சிறப்பானதோர் போட்டிதான் பெரியார்-1000.

தமிழ்நாடெங்கும் நமது தோழர்கள் இப்பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்ட வாரியாக வரும் தகவல்கள் உற்சாகத்தை அளிக்கின்றன.

தந்தை பெரியார் கொள்கைகள், இளைஞர்கள்; மாணவர்கள் மத்தியில் போய்ச் சேரவேண்டியது காலத்தின் கட்டாயம்.

பெரியார் சிந்தனைதான் இளம் பிராயத்தைச் சுத்திகரிக்கக் கூடியது - நேர்வழியைத் துலங்கச் செய்வது - தன்னம்பிக்கை விதையை ஊன்றச் செய்வது!

இடையில் சில நாட்களே உள்ளன. இதற்கு மேலும் புத்தகங்கள் தேவை என்று எழுதினாலும், கேட்டாலும் வழங்க முடியாத நிலைதான்!

எனவே, இதுவரை உறுதி செய்யப்பட்ட அளவில் அந்தப் போட்டியைச் சிறப்பாக நடத்துக!

பரிசுத் திட்டத்தைப்பற்றியும் தெரிவிக்கவும்.

இது ஏதோ தந்தை பெரியாருக்கோ, அவரின் புகழுக்காகவோ மேற்கொள்ளப்படும் பணியல்ல! சமூக மாற்றத்திற்கான புரட்சிகரப் பணி - தொண்டறப் பணி!

இந்தப் பணியைச் செய்யாதவர்கள் அல்லது எந்த காரணத்தினாலோ சுணக்கத்திற்கு ஆளானவர்கள் பின்னாளில் வருந்துவார்கள்.

முக்கியமான தருணத்தில், முக்கியமான கடமையைச் செய்யத் தவறிவிட்டோமே என்று எண்ணக்கூடிய நிலை ஏற்படலாம்.

இந்த நிலையில், இப்பணியைச் செய்யத் திட்டமிட்டுள்ளோர் இடையில் மிகக் குறுகிய நாட்களே இருப்பதை எண்ணிப் பந்தயக் குதிரைகளாகிப் பாய்ந்து பணிகளை மேற்கொள்வீர்!

இந்தப் பணியின் அருமையைப் பார்த்துப் பிறர் பாராட்டவேண்டும் என்கிற அளவுக்குப் பணிகள் நடைபெறட்டும்! நடைபெறட்டும்!!

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...

IIT - யில் CBI


சென்னை அய்.அய்.டி. என்பது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை (H.R.D.) என்ற கல்வித் துறையின்கீழ் இயங்கும் ஒரு மத்திய கல்வி நிறுவனம்; இதற்கென ஆளுமைக்குழுவும், ஆளுநரும் உண்டு என்றாலும், இதன் இயக்குநர்களாக தொடர்ந்து உயர்ஜாதி (பார்ப்பனரே) வந்ததோடு அல்லாமல், இந்திய அரசியல் சட்டத்தின் 16ஆவது விதியின்படி பின்பற்றப்பட வேண்டிய இடஒதுக்கீட்டை அறவே புறக்கணித்து, , I.I.T. என்றால், “Iyer Iyengar Tennancy” என்று பார்ப்பவர் எவருக்கும் எளிதில் தெரியும் வண்ணமே அது நடந்து கொண்டு வந்துள்ளது! வருகிறது!!

தகுதி, திறமை என்ற அளவுகோல்படிப் பார்த்தாலும் முன்னேறிய ஜாதியினருக்குச் சளைக்காத ஆற்றல் உள்ள பார்ப்பனரல்லாதவர்கள், S.C., S.T., OBC., MBC போன்ற வகுப்பினர் எவர் உள்ளே நுழைந்தாலும்கூட, அவர்களை ஆதிக்க அதிகார வர்க்கம் தடுத்து, அடக்கி அல்லது சதா குற்றம் கண்டு, நிம்மதியற்ற நிலைக்கே தள்ளி, அவர்களாகவே பணியை விட்டுவிட்டு ஓடும்படியாகச் செய்வது _- தலைமையை அபகரித்துள்ள பார்ப்பன எஜமானர்களின் புனிதக் கடமையாகவே _- தர்மமாகவே _- இருந்து வந்துள்ளது!

இதை எதிர்த்து நாமும் ஒத்த கருத்துள்ள பல்வேறு அமைப்புகளும் அறப் போராட்டங்களை நடத்தியுள்ளோம். பல அறிக்கைகளையும் வெளியிட்டு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.

ஏனோ மத்திய அரசின் காதுகளில் இவை இன்னும் விழுந்ததாகவே தெரியவில்லை; அதன் பார்வை இந்தக் கொடுமைகள் _- அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளையே _- பின்பற்றாத _- இந்தக் கொடுமைகள் பக்கம் திரும்புவதேயில்லை!

எத்தனையோ தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் புழுக்களைப் போல ஆதிக்கக் கொடுங்கரங்களால் அழுத்தி மிதிக்கப்பட்டே வைக்கப்பட்ட வரலாறு பழைய வரலாறே ஆகும்! இது கொடுமையிலும் கொடுமை.

இதனால் வெகு காலமாக பாதிக்கப்பட்ட -_ வர்ணிக்க முடியாத அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகிய பேராசிரியை டாக்டர் வசந்தா அவர்கள் கணித மேதை _- அவரது பாடநூல்கள் பலவும் அவரது ஆற்றலைப் பறைசாற்றுபவை -_ சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு போட்டு நியாயம் கேட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மாண்பமை ஜஸ்டீஸ் திரு எஸ். நாகமுத்து அவர்கள், ஒரு நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்!

1995 முதல் 26.9.2000 வரை சென்னை அய்.அய்.டி.யில் நடைபெற்ற பணி நியமனங்கள் தொடர்பான உண்மைகளை அறிய சி.பி.அய். புலன் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

மேலும் மனுதாரர் டாக்டர் வசந்தா கடந்த 27.7.1995 முதல் இணைப் பேராசிரியராகவும் 18.12.1996 முதல் பேராசிரியராகவும், அய்.அய்.டி.யில் பணியாற்றி வருவதாகக் கருதப்பட வேண்டும்.
அந்த அடிப்படையில் எதிர் காலத்துக்கான அவரது ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி அவர்கள் தமது தீர்ப்பில் கூறியுள்ளார்கள்!

இது சமூக நீதிக்குக் கிடைத்த நியாயமான வெற்றி! இதுகூட தாமதத்துடன் கிடைத்தது என்றாலும் -_ மறுக்கப்படாமல் கிடைத்ததே என்ற மகிழ்ச்சி! இந்த மனிதவளத்துறை கல்வியகங்களில் நசுக்கப்பட்டு வந்த பல ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்டோர் சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுவர்!

நீதியரசர் வழங்கிய நியாயத்திற்கான தீர்ப்பினைப் பாராட்டுகிறோம்.

அய்.அய்.டி.யில் _ -அரசியல் சட்டம் விதித்துள்ள உரிமைகள் அனைத்தும் (அவை சலுகைகளோ, பிச்சைகளோ அல்ல) ஒடுக்கப்பட்டோருக்குக் கிட்டும் வண்ணம் சி.பி.அய்.யின் விசாரணை அறிக்கை அமைவது அவசியம்! அய்.அய்.டி. தொடர்பான பல்வேறு குறைகள் கண்டு அறியப்பட்டு களையப்படல் வேண்டும்; அதனைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு சென்னை உயர் நீதிமன்றத்திற்குரிய கடமையாகும்.

இதற்கு முன்பு பொறுப்பிலிருந்த பலரும் தப்பிவிடக் கூடாது! கூடவே கூடாது!

இது ஒரு கட்டம்தான். மேலும் சமூகநீதி பெறுவதற்கு பல கட்டங்கள் அங்கே தேவைப்படும். இந்த வழக்கில் சொல்லப்பட்ட தகவல்கள், ஒரு பனிப்பாறையின் முனைதான் (Tip of the iceberg) மட்டுமே!

எனவே சமூகநீதிப் போராட்டத்திற்குக் கிடைத்துள்ள வெற்றியின் வெள்ளி முளைத்துள்ளது இப்போது!

தொடர்ந்து நாமும் விழிப்போடு இருப்போம் _ -விழிப்புணர்வை உருவாக்கி அறவழியில் போராடுவோம்!

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

அமர்த்தியா சென்


சமூகவியல் கொள்கைகளைப் பொறுத்தவரை இந்தியாவில் என்ன சாத்தியம் என்பதற்கான சரியான உதாரணங்களாக கேரளா, தமிழ்நாடு மற்றும் இமாச்சல பிரதேசம் விளங்குகின்றன. இந்தியாவின் மற்ற மாநிலங்கள் பார்த்துக் கற்றுக்கொள்ளும் அளவுக்கு அவை பலவற்றைச் செய்துள்ளன. இந்தியாவில் வடக்கின் செயல்பாட்டைவிட தெற்கின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது.

எனது அனுதாபங்கள் இடதுசாரிகளின் பக்கம்தான். ஆனால் இடதுசாரிகள் சரியாகச் செயல்பட்டுள்ளனரா? இல்லை என்றே நினைக்கிறேன். இந்தியாவின் அணுக் கொள்கை பற்றித்தான் அவர்கள் அதிகம் கவலைப்பட்டனர். நானும் அணு மின்சாரம் பற்றிக் கவலை கொள்கிறேன். ஜப்பானில் ஃபுகுஷிமாவில் ஏற்பட்டது போன்ற விபத்து மற்றும் மும்பைத் தாக்குதல் போன்ற சதிகளும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இடதுசாரிகள் எழுத்தறிவின்மை மற்றும் பசிப் பிரச்சினைகளுக்காகப் போராட முன்வரவில்லை. இத்தகைய இடதுசாரி செயல்பாட்டை நான் ஆதரிக்கவில்லை.

இப்போதே இலவசங் களின் கலாச்சாரம் அதிகம் இருப்பதாகவே நினைக்கிறேன். ஆனால் அரசு அதிகப் பள்ளிகளை நடத்துவது இலவசக் கலாச்சாரத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. கல்வி மற்றும் சுகாதாரத்தில்தான் இத்தகைய இலவசம் தேவை, மின்சாரத்திலும், உரங்களிலும், சமையல் வாயுவிலும் கூடாது.

இந்திய மக்களை அணுகும்போது, அவர்கள் மதம் மற்றும் இனத்தைக் கருத்தில் கொள்ளாத, மதச்சார்பற்ற, நியாயமான பார்வை தேவை. அதோடு கல்வி மற்றும் சுகாதாரத்தில் இந்தியாவுக்கு உள்ள குறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழ் ஓவியா said...

இந்து ராஜ்ஜியம் வந்தால்...? - வரலாறு விடுக்கும் எச்சரிக்கை


பிரச்சாரப் பலத்தினாலேயே பார்ப்பனீயம் நிலை கொண்டுள்ளது. இமயமலையை இட்லிக்குள் மறைக்கும் பொய்யர்கள் பார்ப்பனர்கள். கல்லைக் காட்டிக் கடவுள் என்பார்கள்; புராணங்களைப் புளுகி புனிதம் என்பார்கள். அழுக்கடைந்த ஆசாமியை ஜகத்குரு என்பார்கள். இப்படித்தான் இப்போது மோடியை முன்னிறுத்தி இதோ மோட்சத்தின் வழிகாட்டி என்கிறார்கள். மிக சொற்ப வாக்கு சதவீதத்தில் குஜராத்தில் 3ஆவது முறையாக வென்ற மோடி இந்தியாவை அப்படியே தூக்கி நிறுத்திவிடுவார் என்று புளுகுகிறார்கள். மனித வள மேம்பாட்டிலும், ஏழை மக்களுக்கான நலத்திட்டங்களிலும் எள்ளளவும் முன்னேற்றம் அடையாத குஜராத்தை முன்மாதிரி மாநிலம் என்கின்றன இந்துத்துவம் ஊடுருவிய ஊடகங்கள்.



இந்த முறையும் தோற்றால் இந்துத்துவ பா.ஜ.க.வுக்கு சங்குதான் என்பதை ஆர்.எஸ்.எஸ். அறிந்தே வைத்துள்ளது. அதனால்தான் இந்தியாவின் ஹிட்லர் மோடியைப் பிரதமராக்கத் துடிக்கிறது. இந்துத்துவாவின் முன்னாள் முகமூடி வாஜ்பாயே வருத்தப்பட்ட மனிதப் படுகொலை மோடியின் குஜராத்தில் நிகழ்ந்தது; உச்ச நீதிமன்றமே கண்டித்தது. இத்தகைய சுத்த சுயம் பிரகாசம்தான் இந்தியாவை ஆளவேண்டுமாம். இந்துத்துவாக்கள் நடத்தும் இந்து ராஜ்ஜியம் எப்படி இருக்கும்? வரலாற்றை மறந்துவிட்டவர்களுக்கு எடுத்துக் காட்டியுள்ளார் உண்மை ஆசிரியரும், தி.க. தலைவருமான கி.வீரமணி. கடந்த ஜூலை 25 அன்று சென்னை பெரியார் திடலில் இந்து ராஜ்ஜியங்களின் கொடுங்கோன்மையைத் தோலுரித்தார்.

ஹிந்துத்வா எப்படி வந்தது? 1924ஆம் ஆண்டுக்குப் பிறகு அதனை அறிமுகப்படுத்திய ஆசாமி யார் என்பதை ஆதாரத்தோடு தெரியப்படுத்தினார் ஆசிரியர்.

வெளிநாட்டில் சென்று படித்து வந்த வி.டி. சாவர்க்கர்தான் இதன் தந்தை.

Hindus are a nation bound by
a common culture,
a common history,
a common language,
a common country
and a common religion
- அதாவது,
பொதுக் கலாச்சாரம்
பொது வரலாறு
பொது மொழி
பொது நாடு

பொது மதம் - இவை அய்ந்தும் சேர்ந்ததுதான் இந்துத்துவா என்கிறார் சாவர்க்கார்.

இந்த அய்ந்து பொது அம்சங்களும் இந்தியாவில் எங்கு இருக்கின்றன? ஹிந்து என்பதில்கூட எத்தனை எத்தனைப் பிரிவுகள் _ - பிளவுகள் _ பிணக்குகள்! எத்தனை எத்தனை முரண்பட்ட அம்சங்கள்! என்பதை எடுத்துக் காட்டினார்.

ஹிந்துத்துவாவில் கூறியபடி ஒரே நாடு என்றால் மாநிலங்களே கூடாது. - ஒரே நாடாகத் தானிருக்கும். - சமஸ்கிருதம்தான் ஒரே மொழி. - பார்ப்பனக் கலாச்சாரம் ஒன்று மட்டும்தான் அங்கீகரிக்கப்படும் என்றார்.

இன்றைய எதார்த்த நிலை என்ன? மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு 50 ஆண்டுகளைக் கடந்த நிலையில் இப்போது ஒரே மொழி என்றாலும் பெரிய மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கியுள்ளது. ஆனால், இந்துத்துவா சொல்கிறது மாநிலங்கள் கூடாது என்று.

ஹிந்துத்துவாவை அரங்கேற்றிய வி.டி.சாவர்க்கர் சதர்வர்ணாய வியவஸ்தாபன்
யாஸ்மின்தேஷ் ஹிக நாவித்யத்தே;

தாம் மிலேச்சதேஷ்ம் ஜன்யதார் ஆரிய வர்த்தாஷ் பரே

The land where the system of Four Varnas does not exit should be known as the Mellach country Aryavart lies away from it’’

எந்த நாட்டில் நால் வருணம் இல்லையோ, அந்த நாடு மிலேச்சர்களின் நாடு என்று பொருள். ஆரிய வர்த்தம் என்பது அதற்கு மாறுபட்டது என்று கூறுகிறார்.

20 ஆம் நூற்றாண்டில் இந்து ராஜ்ஜியம் நடந்த நேபாளத்தின் நிலையை ஆசிரியர் கி.வீரமணி படம்பிடித்துக் காட்டினார். மகா தவிரா சங்கராசிஸ்த்ரா (Maha sthavira sangharakshita) என்ற புத்த பிக்கு விசுவ ஹிந்து பரிஷத்தினர் ஏற்பாடு செய்த டில்லிக் கூட்டத்தில் (23.2.1982) பேசிய பேச்சின் ஆதாரத்தை வெளியிட்டார்.

அந்தப் புத்தப் பிக்கு பேசியது இதுதான்:

``1949 மற்றும் 1952-களில் நான் நேபாளம் சென்றதுண்டு. ஜாதி முறை எப்படியெல்லாம் அங்கே கடைபிடிக்கப்படுகிறது என்பதை நேரில் கண்டேன். ஜாதி முறையைப் பின்பற்றவில்லையென்றால், அவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் _- அபராதமும் விதிக்கப்படுவார்கள்.

நான் நேபாளத்தில் ஒரு புத்த மடத்தில் தங்கி இருந்தேன். நடு ராத்திரியில் ஒருவர் கதவைத் தட்டினார்; இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் வெளியில் நின்று கொண்டிருந்தார். நான் இந்த இரவு இங்கே தங்கலாமா? அனுமதிப்பீர்களா? என்று கேட்டார்.

ஏன்? என்ன அவசியம்? என்று கேட்டேன். அதற்கு அந்த இந்து மதக்காரர் என்ன சொன்னார் தெரியுமா? நான் என் ஜாதியை இழந்துவிட்டேன்; ஜாதிக்கு விரோதமாக நடந்துகொண்டு விட்டேன். அதனால் நான் என் வீட்டுக்குச் செல்ல முடியாது; என் மனைவியும், என் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டாள்; அப்படி அவள் அனுமதித்தாலும் அவளும் ஜாதியை இழந்துவிடுவாள்!


தமிழ் ஓவியா said...

ஏன் அப்படி என்று நான் கேட்டேன். அதற்கு அந்த இந்து ஆசாமி சொன்ன பதில்: வியாபார நிமித்தமாக நான் வெளியூருக்குச் சென்றிருந்த இடத்தில் நான் உடல்நலம் பாதிக்கப்பட்டேன். ஒரு சத்திரத்தில் தங்கினேன். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த ஒருவர் எனக்கு உதவினார். எனக்கு வேறு யாரும் உதவ முன்வரவில்லை; அந்தத் தாழ்ந்த ஜாதிக்காரன் தந்ததையுடன் சாப்பிட்டேன்; அதனால் என் ஜாதி என்னைவிட்டுப் போய்விட்டது. எனவே, என்னைத் தயவு செய்து இந்த இரவு தங்கிட அனுமதியுங்கள் என்றான்.

நாளை நானே நேரில் போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்று நடந்ததைச் சொல்லி அபராதம் கட்டி, இழந்த என் ஜாதியை மீண்டும் பெறுவேன். என் மனைவியும் அப்பொழுது என்னை ஏற்றுக்கொள்வாள். (ஆதாரம்: Religion and secularism - a lecture given to vishva Hindu Parishad)”

கடந்த நூற்றாண்டில் 70 ஆண்டுகளுக்கு மேலாக தந்தை பெரியார் உழைத்ததின் பலனாக தமிழினம் தன்னை உணர்ந்துள்ளது. பெரும்பான்மையான மக்கள் வெளிப்படையாக தம்முடைய ஜாதி எண்ணங்களைக் காட்டிக்கொள்ளத் தயங்கும் நிலை தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால், இன்னும் மனதிற்குள் ஜாதி உணர்வு இருப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த இழிநிலையை ஒழித்து ஜாதி மறுப்புத் திருமணங்களால் தமிழர்களாய் இணைக்கும் பணியை நாம் செய்துவரும் காலத்தில்தான் இந்துத்துவா ஆட்சியைக் கொண்டு வர ஆரியம் துடிக்கிறது. நேபாளம் அப்படி என்றால், மகாராஷ்ட்ராவின் நிலை என்ன?

மாவீரன் என்று வர்ணிக்கப்படும் சிவாஜி போர்கள் பல கண்டு புது சாம்ராஜ்ஜி யத்தை உருவாக்கி னான். அந்த மாவீரன் சிவாஜி இந்து மதத்தின் வருண தர்மத்தின்படி சூத்திரன்; எனவே, அவன் முடிசூட்டிக் கொள்ள முடியாது _- சத்திரியன்தான் அரசாள முடியும் என்றது இந்துத்துவா.

முடிசூட என்ன வழி என்று சிவாஜி கேட்டபோது, சில பிராயச்சித்தங்களை நடத்தி சத்திரியனாக்கி முடிசூட்டும் தகுதியைப் பெறலாம் என்றனர். யாகங்கள் செய்யவேண்டும் என்றது ஆரியம்.

கங்கைக்கரைப் பகுதியிலிருந்து 11 ஆயிரம் பார்ப்பனர்கள் அழைத்து வரப்பட்டனர். கங்க பட்டர் என்ற பார்ப்பனர் காசியிலிருந்து வந்தார். அவர்தான் தலைமைப் புரோகிதர்.

1674 மே 28 ஆம் தேதியன்று கங்கப்பட்டன் என்ற அந்தப் புரோகிதன், சிவாஜியின் காதில் காயத்ரி மந்திரங்களை ஓதி, சூத்திரன் சிவாஜியை சத்திரியனாக மாற்றினானாம்.

சிவாஜியின் 300 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டபோது, டாக்டர் ஏ.இராமசாமி முதலியார் நீதிக்கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ஜஸ்டிஸ் ஏட்டில் மூன்று அற்புதத் தலையங்கங்களை அற்புதமான ஆங்கிலத்தில் எழுதினார்.
18 மாதங்கள் யாகங்கள் நடத்தப்பட்டன. விளைவு, சிவாஜியின் கஜானா காலியனதுதான் மிச்சம்!

மிக அழகாக டாக்டர் இராமசாமி முதலியார் எழுதினார். சுரண்டிக் கொழுத்த பார்ப்பனர்களுக்கு _ ஏகபோக ஆதிக்கக்காரர்களுக்கு - அவர் இட்ட பெயர் மோனோ பொலிஸ்ட்ஸ் (Mono polists) They got the lost pie out of his treasury.

சிவாஜியின் கஜானாவிலிருந்து கடைசிப் பைசாவைக்கூட பார்ப்பனர்கள் சுரண்டிக் கொண்டு விட்டனர் என்று எழுதினாரே!

அறிஞர் அண்ணா சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் எனும் நாடகத்தில் இந்த வரலாற்றினை எடுத்துக் காட்டியுள்ளார். அதில் சிவாஜி எப்படியெல்லாம் பார்ப்பனர்களால் ஆட்டி வைக்கப்பட்டான். அவன் செல்வம் எப்படியெல்லாம் சுரண்டப்பட்டது என்பதை விளக்கினார். சிவாஜியின் இறுதிக்காலம் மிகவும் பரிதாபகரமானது. சிவாஜிக்குப் பிறகு ராஜ்ஜியம் பேஷ்வாக்கள் எனும் பார்ப்பனர்களின் கைக்குப் போனது.

அடுத்து தெற்கே கேரள மாநிலத்தை எடுத்துக் கொள்ளலாம்.

Missionaries and a Hindu State Travancore 1858 - 1936 எனும் தலைப்பில் ஜப்பானிய நாட்டின் பல்கலைக்கழகப் பேராசிரியர் கோஜி கவாஷிமா (Kogi Kawashima) என்பவர் எழுதியுள்ளார்.

அந்த நூலைப்பற்றி பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன் அவர்கள் 2013 ஜூன் திங்கள் உங்கள் நூலகம் எனும் அருமையான இதழில் சிறப்பான கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

திருவாங்கூர் அரசை ஓர் இந்து அரசு என வரையறுத்துவிட்டு, சமய வேறுபாடுகளுக்கிடையில் கல்வி மருத்துவ வளர்ச்சியில் திருவிதாங்கூர் அரசும் மிஷனரிகளும் செயல்பட்டமுறை குறித்தும், திருவிதாங்கூர் பகுதியின் அடித்தள மக்கள் பிரிவினர் மீதான அரசு மற்றும் மிஷனரிகளின் அணுகுமுறை குறித்தும் இந்நூல் ஆராய்கிறது.

அந்தக் கட்டுரையின் ஒரு பகுதி இதோ:

மன்னர்களால் ஆளப்பட்ட திருவிதாங்கூர்ப் பகுதியில் வேணாட்டு மரபு என்ற பெயரிலான ஆட்சி மரபைத் தோற்றுவித்தவர் மார்த்தாண்ட வர்மா (1729_-1758). மனுதர்மம் அனுமதிக்காது என்பதால், தனக்கு எதிராகச் செயல்பட்ட பிராமணர்களைக் கொலை செய்யாது, பிராமண ஜாதிக்குப் புறம்பாக்கி அவர்களது நெற்றியில் நாய்ச் சின்னத்தைப் பொறித்தார்.

1750ஆம் ஆண்டில் அவர் செய்த ஒரு செயல் திருவிதாங்கூர் வரலாற்றில் மிக முக்கியமான செயலாக அமைந்தது. அரசர் தன் குடும்பத்தினரும் அமைச்சர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் புடைசூழ திருவனந்தபுரத்திலுள்ள பத்மனாபசாமி கோவிலுக்குள் சென்று, தன்னை பத்மனாபசாமியின் அடிமையாக அவர் அறிவித்துக் கொண்டார். அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற சொல்லை அக்கடவுளின் பெயருடன் இணைத்து பத்மனாபதாசன் என்ற பெயரைத் தம் இயற்பெயருடன் இணைத்துக் கொண்டார்.

பத்மனாபசாமியிடம் நில மானியம் பெற்ற குடிஆளாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டார். பத்மனாபசாமியே உண்மையான ஆட்சியதிகாரம் பெற்றவர் என்று வெளிப்படுத்தியதன் வாயிலாக அவரது ஆட்சி தெய்வீகமயமாக்கப்பட்டது.

பத்மனாபசாமியின் தாசன் என்பதை மக்களுக்கு நினைவூட்டிக் கொள்ளும் வகையில் புதிதாகப் பதவியேற்கும் மன்னர் படியேத்தம் என்ற சடங்கு ஒன்றை நிகழ்த்துவார். இச்சடங்கின்படி கோவிலின் முன்புள்ள பீடத்தில் தன் வாளை அவர் வைத்துவிடுவார். கோவிலில் பூசை செய்யும் போத்தி வாளை எடுத்துச் சென்று கருவறைக்குள் இறைவனின் முன்வைத்து பூசை நடத்திவிட்டு அதை எடுத்து வந்து மன்னரிடம் தருவார். இச்சடங்கு மன்னன் என்பவன் தெய்வத்தின் பிரதிநிதி என்பதை மக்களுக்கு நினைவூட்டி வந்தது. திருவிதாங்கூரின் திவானாக இருந்த சர்.சி.பி.ராமசாமி அய்யர், பத்மனாபசாமியே உண்மையில் ஆட்சி புரிபவர் என்றும், ஆட்சியை நிர்வகிக்கும் வைசிராய்தான் திருவாங்கூர் மன்னர் என்றும் நவீன அரசியல் மொழியில் குறிப்பிட்டார். மன்னரை விமர்சிப்பது சுவாமித் துரோகம் என்றானது.

தமிழ் ஓவியா said...

இந்து சமயம் சார்ந்தவர் என்ற முறையில், இரண்யகர்ப்பதானம், துலாபுருஷதானம் என்ற இரு தானங்கள் திருவிதாங்கூர் மன்னர்களால் வழங்கப்பட்டன. இவற்றுள் இரண்யகர்ப்பதானம் பின்வருமாறு நிகழும்.

பெரிய வடிவிலான தாமரை மலர் ஒன்று தங்கத்தால் செய்யப்படும். இதனுள் பஞ்சகவ்வியம் (பசுவின் பால், தயிர், வெண்ணெய், சிறுநீர், சாணம் ஆகியனவற்றின் கலவை) ஊற்றப்படும். மலர் வடிவிலான இப்பாத்திரத்தில் மன்னர் நுழைவார். அதன்பின் இம்மலர் மூடப்படும். பஞ்ச கவ்வியத்துள் அய்ந்து முறை மூழ்கி மன்னர் வெளிவருவார். இதன் பின்னரே அவருக்கு முடி சூட்டப்படும். இதன்பின் தங்கத் தாமரையைத் துண்டு துண்டாக வெட்டியெடுத்து மன்னரின் அந்தரங்க ஊழியர்களுக்கும், பிராமணர்களுக்கும் கொடையாக வழங்குவர்.

துலாபுருஷதானம் என்பது மன்னரின் எடைக்கு இணையான தங்கத்தை பிராமணர்களுக்குக் கொடையாக வழங்குவதாகும்.

முறஅய்ப்பம் என்பது அரசின் மற்றொரு முக்கியச் சடங்காகும். தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள பத்மனாபசாமி கோவிலில் மன்னராட்சியால் நடத்தப்படும் இச்சடங்கின் நோக்கம், போரின்போது மேற்கொள்ளப்பட்ட செயல்களினால் ஏற்படும் பாவங்களைப் போக்கிக் கொள்வதும், நாடு செழிக்கவேண்டும் என்பதும்தான். இச்சடங்கில் நம்பூதிரிப் பிராமணர்களும் போத்தி என்றழைக்கப்படும் பிராமணர்களும் மட்டுமே கலந்துகொள்ள அழைக்கப்படுவர்.

இச்சடங்கின்போது தலைமைப் புரோகிதர் வீற்றிருக்கும் பல்லக்கை, சிறிது தூரம் மன்னர் சுமப்பார். பின் அவரது காலில் விழுந்து வணங்கி அவரைத் தங்க சிம்மாசனத்தில் அமரச் செய்து, அவரது பாதங்களைக் கழுவுவார். இச்சடங்கில் கலந்துகொள்ளும் பிராமணர்களுக்கான தங்குமிடம், உணவு, தட்சிணை ஆகியவற்றுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும். 1875_-76இல் 1,82,009 ரூபாய் இச்சடங்கிற்குச் செலவானது.

இது அந்த ஆண்டு கல்விக்காகச் செலவிடப்பட்ட தொகையைவிட அதிகமாகும். 1911ஆம் ஆண்டில் அய்ந்து லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

இது அரசின் அந்த ஆண்டுச் செலவில் நாலு விழுக்காடாகும். இவை தவிர வருடத்திற்கு இருமுறை நிகழும் ஆராட்டுத் திருவிழாவின்போது கடலில் நீராட, ஊர்வலமாக பத்மனாபசுவாமியின் உலோகப் படிமம் எடுத்துச் செல்லப்படும். இந்த ஊர்வலத்தை உருவிய வாளுடன் தலைமையேற்று நடத்திச் செல்பவர் திருவிதாங்கூர் மன்னர்தான். மன்னருடன் அரசு உயர் அதிகாரிகளும் செல்வர்.

இவையெல்லாம் திருவிதாங்கூர் மன்னராட்சியானது ஓர் இந்து ஆட்சியாக விளங்கியதன் அடையாளங்களாகும்.

(நூல்: திருவிதாங்கூர் இந்து ராஜ்ஜியமும் மிஷனரிகளும்)

***

இந்திய வரலாறு பேசும் இந்துத்துவ ஆட்சிகளின் அவலங்களில் இவை ஒரு சில மட்டுமே. தமிழகத்திலேகூட தஞ்சையை ஆண்ட சோழன் இராஜராஜன் ஆரிய அடிமைதானே! அருண்மொழித் தேவன் என்கிற அழகிய தமிழ்ப் பெயரை விடுத்து பார்ப்பனர்கள் கொடுத்த வடமொழிப் பட்டப் பெயரான இராஜராஜனைச் சுமந்தவனல்லவா. மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் ஊர் ஊருக்குக் கோவில்களைக் கட்டி அவற்றிற்கு ஆயிரக்கணக்கான வேலி நிலங்களை எழுதிவைத்து, பார்ப்பனர்களை வாழவைத்தான். மன்னர்களை வீழ்த்துவதும், ஆட்சி அதிகாரத்தில் பின்புலமாக இருந்து தம்முடைய ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் ஆரிய மரபான இந்துத்துவத்தின் வழிமுறைகள். அந்த வரலாற்றை மீண்டும் உருவாக்கத்தான் இப்போது ஆரியனல்லாத ஆனால், ஆரிய அடிமையான மோடியைக் காட்டுகிறது இந்துத்துவா. சமத்துவத்தை நோக்கி உலகம் நடைபோடும் நவீன யுகத்தில் மீண்டும் கற்காலத்தைப் படைக்க இந்துத்துவம் வேஷம் கட்டி ஆடுகிறது மோடியின் உருவில்.

ஆயிரம் ஆண்டு அடிமைத்தளையை நொறுக்கி, தன்மானத்துடன் எழுந்து, மறுக்கப்பட்ட கல்வியைப் பெற்று தலை நிமிர்ந்துள்ள தமிழினமும், ஒடுக்கப்பட்டோர் என்பதை தாமதமாக உணர்ந்தாலும் சமூக மேம்பாட்டை நோக்கி நடைபோடும் இந்திய ஒடுக்கப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் மீண்டும் இந்துத்துவ மலக்குழியில் வீழலாமா என்பதே நாகரிக சமூகத்தின் கேள்வி.

- அன்பன்

தமிழ் ஓவியா said...

ஈழத்தில் பெரியார் அம்பேதகர் இல்லையே...!


கேள்வி: இந்த இக்கட்டான சூழலில், ஈழத்தில் ஜாதிப் பிரச்சினைகள் முட்டி முளைப்பதாகக் கிளம்பும் தகவல்கள் உண்மையா?

பதில்: உண்மைதான். வருத்தமாக இருக்கிறது. ஜாதி, மதம், இனம், மொழி என எதன் பேரிலும் மனிதனை மனிதன் அடக்குதலை என்னால் ஏற்க முடியாது. பிரபாகரன், ஜாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும், பெண் விடுதலைக்காகவும் போராடினார். 1960_களில், தமிழகத்தில் தந்தை பெரியார் என்கிற தீர்க்கதரிசி தோன்றி இன சுத்திகரிப்பு செய்தார். அவர் கடவுள் மறுப்பு பேசினாலும், நான் அவரைப் பெரிதும் மதிக்கிறேன். இந்தியாவில் அம்பேத்கர் போன்ற புரட்சியாளர்களும் ஜாதிக்கு எதிராக தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இலங்கையில் அப்படியான தலைவர்கள் தோன்றவில்லை. இன்றைய நிலையில், ஈழத் தமிழர்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம்மிடையே இருக்கும் சின்னச் சின்னப் பிளவுகள்கூட ஈழத்தைச் சின்னாபின்னமாக்கிவிடும் என்பதை எந்த நொடியும் மறந்துவிடாதீர்கள்!

- இமானுவேல், கிறித்துவப் பாதிரியார்.

(புலிப் பாதிரியார் என்று சிங்கள அரசால் அழைக்கப்பட்டவர். ஈழத்தில் பணியாற்றியவர். ஈழத்தமிழர் இன ஒழிப்புக்கு எதிராக உலக அரங்கில் நீதிகேட்டுப் போராடுபவர்.)

நன்றி: ஆனந்தவிகடன், 7.8.2013

தமிழ் ஓவியா said...

திருப்பதிக்கே லட்டு


திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில், வெளிநாடுகளில் நடத்தப்படும் சீனிவாச திருக்கல்யாணங்களில் முறைகேடுகள் நடந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரச் சாமியான திருப்பதி ஏழுமலையானுக்கே லட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இச்செய்தியிலிருந்து தெரிய வருகிறது. தன் பெயரில் நடக்கும் மோசடிகளைக்கூடத் தடுக்க வக்கில்லாத இந்தச் சாமியைத்தான், க்யூ கட்டி நின்று தரிசிக்கிறார்கள் பக்த சிரோன்மணிகள். உள்ளூரிலேயே ஒரு சீனிவாசப் பெருமாள் கோவில் இருந்தாலும், அது திருப்பதி கோவிலுக்கு இணையில்லை என்பதே ஏழுமலையான் ரசிகர்களின் ஏகோபித்த கருத்து. ஆனால், இப்போது நிலை என்ன தெரியுமா? திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகமே சென்னை போன்ற பெரு நகரங்களிலும், வெளிநாடுகளிலும் டம்மி கோவில் ஒன்றை செட் போட்டு அமைத்து வசூலில் இறங்கிவிட்டது. அதில்தான் ஊழல்கள் நடப்பதாகத் தெரிய வந்துள்ளதாம். கன்னியாகுமரியில் ஒரு பிராஞ்ச் கோவிலை அமைக்கவும் அண்மையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம் அடிக்கல் நாட்டியுள்ளது. இனி ஊர் ஊருக்கு திருப்பதி லட்டு கிடைக்கலாம். அப்படியே ஏழுமலையானுக்கும் அவனது கோவில் நிர்வாகிகள் லட்டு கொடுப்பார்கள். கோவிந்தா... கோவிந்தா...

தமிழ் ஓவியா said...

பொறுப்பான தீர்ப்பு


திருநெல்வேலி எல்.அய்.சி. காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய செல்வராஜ் என்பவர் மனைவி குமாரியுடன் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி தியாகராய நகர் சிவந்திப்பட்டி சாலையில் சென்றபோது, உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து விழுந்ததில் செல்வராஜ் தூக்கி எறியப்பட்டார். ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மின்சார அதிகாரிகளின் கவனக்குறைவினால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மின்வாரியம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் குமாரி.

இந்த வழக்கில் பதில் அளித்த மின்சார வாரிய செயற்பொறியாளர், புயல் காற்று வீசியதால் அந்தப் பகுதியில் வயர் அறுந்துவிட்டது. அதனை அதிகாரிகள் சரி செய்து கொண்டிருந்தபோது செல்வராஜ் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரைத் தடுத்தும் கேட்காமல் சென்றதால் விபத்து ஏற்பட்டது. அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. செல்வராஜ் இறக்க நேரிட்டது கடவுளின் செயல் என்று கூறினார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கே.கே.சசீதரன் அவர்கள்,

உயர் அழுத்த மின்தடக் கம்பிகளைப் பராமரித்து, துயரச் சம்பவங்கள் நேரிடாதபடி பார்த்துக் கொள்வது வாரியத்தின் கடமை. அதைச் செய்யாமல் கடவுள் மீது பழிபோட்டு விட்டு தப்பிச் செல்ல முடியாது. மின்சாதனங்களைச் சரிவரப் பராமரிக்காததுதான் செல்வராஜின் சாவுக்குக் காரணம்.

எனவே, அவரது குடும்பத்துக்கு ரூ.44.56 லட்சத்தை நஷ்ட ஈடாகவும், ரூ.14 ஆயிரத்தை வழக்குச் செலவாகவும் மின்சார வாரியம் வழங்க வேண்டும் என்று தீர்ப்புக் கூறியுள்ளார்.

மக்களுக்கு நன்மை செய்வதற்கே அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் உள்ளனர். தவறுகளை மனிதன் செய்துவிட்டு அதிலிருந்து தப்புவதற்கு விதியையும், கடவுளையும் காரணம் காட்டுகின்றான். இந்த மனநிலை உடையவர்களுக்கு மேற்கூறிய வழக்கில் கூறப்பட்ட பொறுப்பான தீர்ப்பு ஒரு பாடமாக அமையும்.

தமிழ் ஓவியா said...

மீண்டும் தேவதாசி முறையா?


முன்பு தேவதாசி முறையினால் பரதநாட்டியம் வளர்ந்து வந்தது. அரசியல் காரணங்களுக்காக தேவதாசி முறையை ஒழித்துவிட்டார்கள் என்று கவலைப்பட்டிருக்கிறார் ஒருவர். பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான சொர்ணமால்யா தான் சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியின் நாட்டியத் துறை சார்பாக நடத்தப்பட்ட பரத நாட்டியம் தொடர்பான கருத்தரங்கத்தில் இப்படிப் பேசியிருக்கிறார்.

இந்நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே எதிர்ப்பும் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கத்து. கூட்டத்தில் அவர் பேசிய கருத்துகள் குறித்து கண்டனங்களும் விவாதங்களும் இணையதளங்களில் தொடர்ந்து எழுந்தன. இது குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தனது முகநூல் பதிவில் பல தகவல்களைத் தந்துள்ளார். அதன் முக்கியப் பகுதிகள்:- தேவதாசி முறை குறித்து நாம் சிலவற்றை நுணுக்கமாகப் புரிந்து கொள்வது அவசியம்:



1.பரத்தமை, பொதுமகளிர், வரைவின் மகளிர், பிற்காலத்திய தேவதாசியர் ஆகியோருக்கிடையே உள்ள நுணுக்கமான வேறுபாடுகள் முக்கியம். சோழர் காலத்தில் கோவில்கள் என்கிற நிறுவனம் அரசதிகாரத்தின் பிரிக்க இயலாத ஓரங்கமாக மாறியபோது தேவதாசிமுறை கோவில் நிர்வாகத்தின் பகுதியாக நிறுவன மயப்படுத்தப்பட்டது. தளிச்சேரிப் பெண்டுகள் முதலான பெயர்களில் தேவதாசியர் அழைக்கப்பட்டனர். ராஜராஜ சோழன் தஞ்சையில் கட்டிய பெருவுடையார் கோவிலுக்கென நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஓலை அனுப்பிக் கட்டாயமாக 400 பெண்களைக் கொணர்ந்து அவர்களைத் தேவதாசியராக்கிய வரலாற்றை நாம் அறிவோம்.

2.இவர்கள் பல்வேறு ஜாதிகளிலிருந்து வந்த போதும் பின்னாளில் இவர்களே ஒரு ஜாதியாயினர். தமிழக ஜாதிகள் பலவும் காலப்போக்கில் இப்படியெல்லாம் உருவானவைதானே. பிற மொழிக் கலப்பு உட்பட எல்லா ஜாதிகளிலும் ஏற்பட்ட மாற்றங்கள் இதிலும் நிகழ்ந்தன. சின்னமேளம், பெரியமேளம் முதலான பிரிவுகளும் உருவாயின. முதலியார், பிள்ளை முதலான பட்டப் பெயர்களையும் இவர்களும் பயன்படுத்திக் கொண்டனர். பின்னாளில் இவர்கள் அனைவரும் நவீன அரசுப் பதிவுகளில் இசை வேளாளராகக் குறிக்கப்பட்டனர்.

3.மத்திய காலத்தில் ஏற்பட்ட வேலைப் பிரிவினைகளின் ஊடாக சிலப்பதிகாரக் காலம் தொடங்கி வளர்ந்து வந்த தமிழின் வளமான இசை மற்றும் நாட்டியப் பாரம்பரியத்திற்கு உரியவர்களாக இவர்கள் ஆயினர். காலங்காலமாக இவற்றைக் கையளித்துக் காப்பாற்றிய பெருமை இவர்களுக்குண்டு. தஞ்சை நால்வர், பாலசரஸ்வதி தேவி, வீணை தனம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமி எனப் பலரையும் சொல்லலாம் என்று குறிப்பிட்டுள்ள பேராசிரியர் அ.மார்க்ஸ், தமிழர்களின் கலை எப்படி பார்ப்பன மயமாக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக் கூறியுள்ளார்.

சென்ற நூற்றாண்டில் நம் தமிழ் இசையும், தேவதாசியரால் காப்பாற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டிய மரபும் (சதிர்) இங்கே கர்நாடக சங்கீதமாகவும், பரத நாட்டியமாகவும் உருமாற்றப்பட்டது. இதில் பார்ப்பனர்களின் கைவரிசையை விளக்க வேண்டியதில்லை. பத்மா சுப்பிரமணியம் போன்றோர் இதில் பெரும் பங்கு வகித்தனர். தேவதாசி மரபில் வந்த கலை என்கிற உண்மை இவர்களுக்கு இழுக்காக இருக்கும் என்பதால், தேவதாசியரின் பங்கு இவர்களால் மூடி மறைக்கப்பட்டது. சதிர் பரதமாகியது.

எனவே, இந்தக் கலையின் தமிழ் வேர்களை யும், இதைக் காப்பாற்றி வந்ததில் தேவதாசியரின் மரபையும் நாம் அழுத்திச் சொல்ல வேண்டி யுள்ளது என்று குறிப்பிடும் அ.மார்க்ஸ், கல்வித் தளத்தில் தேவதாசி முறை குறித்த பல்வேறு ஆய்வுகளும், நூல்களும் வந்திருப்பதையும் எடுத்துக்காட்டி, ஆய்வு செய்யக்கூடாது என்று யாரையும் நாம் தடுக்கக் கூடாது. கல்வி நிறுவனங்களில் கல்விச் சுதந்திரம் (ணீநீணீபீமீனீவீநீ யீக்ஷீமீமீபீஷீனீ) என்பது முக்கியம். அதே நேரத்தில் தேவதாசிமுறையை உன்னதப்படுத்தியும், அதை ஒழித்துக் கட்டிய திராவிட இயக்கத்தின் பங்கைக் கொச்சைப்படுத்திப் பேசும் யாரையும் நாம் கண்டிக்கத் தவறவும் கூடாது என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் ஓவியா said...

நக்கீரன் இணையதளத்தில் சொர்ணமால் யாவின் கருத்தையொட்டி இதழாளர் கோவி.லெனின் எழுதியுள்ள கட்டுரையில், தேவதாசியாக ஒரு பெண் நியமிக்கப்படுகிறார் என்றால் அந்தப் பெண்ணின் பாட்டியும் தேவதாசியாக இருந்திருப்பார். அதன்பின் அவரது அம்மாவும் தேவதாசிதான். அந்தப் பெண்ணுக்கு ஒரு மகள் பிறந்தாலும் அதே நிலைதான். கடவுளின் பெயராலும் ஆன்மீகத்தின் பெயராலும் பரம்பரை பரம்பரையாக பாலின இழிவையும் பாலியல் கொடுமையையும் அவர்கள் அனுபவித்து வந்தார்கள். சமுதாயத்திலும் தாசிகள் என அவர்களுக்கு இழிவான பெயரே இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம், டாக்டர் முத்துலெட்சுமி (ரெட்டி) உள்ளிட்டவர்கள் இந்த தேவதாசி முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். பல தலைவர்களின் ஆதரவைப் பெற்றனர். குறிப்பாக, பெரியாரின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. சென்னை மாகாணத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டமன்றத்தின் துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் முத்துலெட்சுமி, தேவதாசி முறையை சட்டப்பூர்வமாக ஒழிப்பதற்கான மசோதாவை 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் நாள் சென்னை மாகாண சட்டமன்றத்தில் கொண்டு வந்தார். இந்த மசோதாவைப் பற்றியும் அதனை நிறைவேற்றுவது பற்றியும் பெரியார் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் ஏற்கனவே ஆலோசனை நடத்தியிருந்தார். எனினும், தேவதாசி முறையை ஒழிப்பதற்கு சட்டமன்றத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. மசோதாவை எதிர்த்துப்பேசிய காங்கிரஸ் தலைவரான சத்தியமூர்த்தி, தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது. சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோவில் பணிகளுக்கென்றே படைக்கப்பட்டவர்கள் என்றார்.

தமிழ் ஓவியா said...

கோவிலின் பெயரால், பாலியல் கொடுமையை சமூக வழக்கமாக்கி வைத்திருந்த ஆதிக்க சக்திகளிடமிருந்து பெண்களை மீட்டது தேவதாசி ஒழிப்பு மசோதா. தேவதாசி முறையை ஒழித்தால் பரதநாட்டியம் ஒழிந்துவிடும் என அன்று சத்தியமூர்த்தி பேசினார். அதே கருத்தைத்தான் இன்று கவலையோடு பேசியிருக்கிறார் சொர்ணமால்யா. சென்னை மாகாணத்தில் அப்போதே தேவதாசி முறை சட்டப்பூர்வமாக ஒழிக்கப்பட்டாலும் இந்தியாவின் பிற பகுதிகளில் அது தொடர்ந்தது. சில சமூகங்களில் வெவ்வேறு பெயர்களில் அது கடைப்பிடிக்கப்பட்டது. இந்த வழக்கத்தை முற்றிலும் ஒழித்து, அந்தப் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியை அரசும் அரசு சாரா நிறுவனங்களும் பல மாநிலங்களில் மேற்கொண்டு வருகின்றன. மும்பை அதற்கோர் உதாரணம்.

ஸ்வேதா கட்டிக்கு இப்போது 18 வயதுதான். மும்பையின் பிரபல சிவப்பு விளக்குப் பகுதியான காமத்திபுராவில் ஒரு தேவதாசிப் பெண்ணின் மகளாகப் பிறந்தவர். மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் தேவதாசியாக்கப்பட்டு, தன் அம்மா படும் பாலியல் கொடுமையைக் கண்டு ஸ்வேதா பயந்தார். அவரது தாய் வந்தனாவும் தனக்கு நேரும் கொடுமைகள் தன் மகளுக்கு நேர்ந்துவிடக்கூடாது என நினைத்தார்.

அருகிலுள்ள ஒரு நகராட்சிப் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஸ்வேதா, சின்ன வயதிலிருந்தே நன்றாகப் படித்துவந்தார். பின்னர் அப்னே ஆப் க்ரண்ட்டி ஆகிய அமைப்புகளின் உதவியுடன் அமெரிக்காவுக்குச் சென்று படிக்கும் வாய்ப்பைத் தற்போது பெற்றிருக்கிறார் ஸ்வேதா. உலகம் முழுவதுமிருந்தும் 200க்கும் அதிகமானவர்கள் ஸ்வேதாவின் கல்விக்காக நிதியுதவி அளித்துள்ளனர். அதன் மூலமாக அமெரிக்காவில் உளவியல் துறையில் படிக்கப் போகிறார் ஸ்வேதா. அவருக்கு சக மாணவிகளின் வாழ்த்துகள் குவிந்தபடி இருக்கின்றன.

ஸ்வேதாவின் அம்மா வந்தனா, அவள் அங்கே என்ன படிக்கப்போகிறாள் என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவளை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். அவள் என்கூட இருக்கப்போவதில்லை என்பது புரிகிறது. ஆனாலும் அவளது நிலை கண்டு நான் மனரீதியாக பலமடைந்துள்ளேன் என்று சொல்லியிருக்கிறார். தன்னுடன் தனது குடும்பத்தைப் பீடித்திருந்த இந்த தேவதாசி கொடுமை முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும், தன் மகள் இந்தப் பாழுங்கிணற்றில் விழவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவதுபோல இருந்திருக்கிறது வந்தனாவின் குரல்.

அன்று மூவலூர் ராமாமிர்தமும், டாக்டர் முத்துலெட்சுமியும் இழிவுபடுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து வந்தவர்கள். அந்த இழிவை எதிர்த்துப் போராடினார்கள். வென்றார்கள். ஆனால் சத்தியமூர்த்தி போன்றவர்கள், தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால் பரதநாட்டியம் ஒழிந்துவிடும் என்றார்கள். இன்று வந்தனாவும் அவர் மகள் ஸ்வேதாவும் தேவதாசி குலத்திலிருந்து மீள்வதற்குப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆனால் சொர்ணமால்யா போன்றவர்கள், தேவதாசி முறை ஒழிக்கப்பட்டதால் பரதநாட்டியம் வளரவில்லை எனக் கவலைப்படுகிறார்கள். தேவதாசிகள் என்ற முறை எதற்குப் பயன்பட்டது, பயன்படுகிறது என்பதற்கு ரத்தமும் சதையுமாக சாட்சிகளாக இருக்கிறார்கள் வந்தனா போன்றவர்கள்.

சத்தியமூர்த்தியைப் பார்த்து டாக்டர் முத்துலெட்சுமி, கடவுளுக்கும் கலைக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றால் அந்தத் தொண்டினை உங்கள் சமூகம் உள்பட மற்ற குலத்துப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது? என்று சட்டமன்றத்தில் சத்தமாகக் கேட்டார். சொர்ணமால்யாக்களைப் பார்த்து வந்தனாவும் ஸ்வேதாவும் கேட்காமல் கேட்கிறார்கள்.

தமிழ் ஓவியா said...

வளரும் நாடுகளில் வளரும் நாத்திகம்!

நான் ஆராய்ந்த 137 நாடுகளில், நன்கு வளர்ச்சி பெற்ற, பொது மக்களின் தரம் உயர்ந்த நாடுகளின் (அதிக வரி விதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் நாடுகள்) வருமானத்தை அதிக அளவில் சமத்துவமாகப் பரவலாக்கி உள்ள நாடுகள் அதிக நாத்திகர்களைக் கொண்டுள்ளன. செல்வம் வளரும்போது, மத உணர்ச்சி குறைந்து விடுகிறது. மனிதர்களின் தேவைகளுக்கு உரியவற்றை உலகம் அளிக்கும்போது, இயற்கைக்கு மீறிய நம்பிக்கைகள் குறைந்துவிடும். 2041இல் உலகின் பெரும்பான்மையினர் மதம் முற்றிலுமாக தேவையற்ற ஒன்றாகக் கருதுவார்கள். இப்படிச் சொல்லியிருப்பவர் பிரபல நூலாசிரியரும் புகழ்பெற்ற உடலியல், உளவியல் வல்லுநருமான நைஜெல் பார்பர். அண்மையில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி வளர்ந்த நாடுகளில் நாத்திகம், அதிகமாக நிலைபெற்று இருப்பதாகவும், 2041 அளவில் மதங்கள் முற்றிலுமாக மறைந்து விடும் என்று கருதுவதாகவும் கூறியுள்ளார். ஏன் நாத்திகம் மதத்தின் இடத்தை நிரப்பும் (Why Atheism will Replace Religion?”) என்ற இவரது நூல் இது குறித்த ஆய்வுகளை அலசி உள்ளது. இவரது ஆய்வு முடிவுகள் உலகத்தில் உள்ள நாடுகளின் எண்ணப் போக்குகளை மய்யப்படுத்தி, நாத்திகர்கள் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளில் அதிகமாகக் குழுமி இருப்பதான உண்மையை உணர்த்துகிறது.



சமீபத்திய மற்ற ஆய்வுகளின்படியும், நாத்தி கத்திற்கு ஒரு வளர்ச்சி ஏற்பட்டிருப்பதும், தற்பொழுதுள்ள அமெரிக்கர்களில் 20 விழுக்காடு கடவுள் பற்றிய எண்ணங்கள் இல்லாதவர்களாகவும் அல்லது நாத்திகராகவோ, மதத்துடன் தொடர்பு இல்லாதவராகவோ உள்ளனர். அமெரிக்காவில் நாத்திகம் அல்லது, எதனோடும் தொடர்பில்லாத மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. உலக அளவிலும்கூட இந்த எண்ணிக்கை பீறிட்டு வருகிறது. 2010-இல் பிரிட்டனின் டெய்லி மெயில் என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில், மதத்துடன் தொடர்பில்லாத மக்கள் மூன்றாவது பெரிய இடத்தில் உள்ளனர். முதல் இரண்டு இடம் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் அடுத்து நாத்திகர்களே அதிகம்! ஆய்வின்படி இந்துக்கள், புத்த மதத்தினர், யூதர்கள் ஆகிய மதக் குழுக்களைவிட எதிலும் சேராத மத நம்பிக்கையற்றவர்கள் எண்ணிக்கை அதிகம்! என்றும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

தமிழ் ஓவியா said...

சோ’த்தபய ராம’பக்‌ஷே


துக்ளக்கின் துதிபாடும் பயணம்

தமிழின அடையாளத்தை அழிக்கும் சிங்கள மயமாக்குதல்

- மகா.தமிழ்ப் பிரபாகரன்

தமிழகத்தில் இலங்கை ராணுவத்தைத் தமிழர்கள் தூற்றிக் கொண்டிருக்கும் வேளையில், அதே ராணுவத்தில் புதிய தமிழ்ப் பெண்களா? அதிலும் அவர்களில் சிலர் முன்னாள் பெண் புலிகளா?



இப்படி இனவெறி இலங்கை ராணுவத்தைப் போற்றி தமிழர்களைத் தூற்ற அதிர்ச்சி மற்றும் ஆச்சரியத்துடன் கிளிநொச்சி பெண்கள் ராணுவ முகாமுக்கு விரைகிறது சோத்தபய ராமபக்க்ஷே குழு.

இந்திரா காந்தியை வீழ்த்தியவனைச் சார்ந்த சமூகம், நாட்டில் பிரிவினை கோரியவர்களைச் சார்ந்த சமூகம் என்று ஒரு சிலருக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்காமல், பெருந்தன்மையுடன் ஒரு சீக்கியரைப் பிரதமராக்கியுள்ளது இந்தியா. காந்தி பிறந்த இந்தியா காட்டும் பெருந்தன்மையைத்தான், நாங்கள் இலங்கை அரசிடமும் எதிர்பார்க்கிறோம். புலிகள் போகட்டும், இங்கிருக்கும் தமிழர்களுக்குச் சம உரிமை கொடுக்கட்டும் என்ற ஆனந்த சங்கரியை இந்திரா காந்தியைக் கொன்றவர் சீக்கிய இனத்தவர் என்று தெரிந்தும் பெருந்தன்மையோடு சீக்கியரையே பிரதமராக்கிய இதே இந்திய காங்கிரஸ்தான், ராஜீவ் காந்தியைப் புலிகள் கொன்றார்கள் என்ற சுப்ரமணிய சுவாமி கூற்றைப் பரப்பும் விதமாய் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்தி அதிகாரம் கிடைக்கப் பெற்றதும் தமிழர்களைக் கொன்று குவிக்கும் திட்டத்தை வகுத்தது. இதை இலங்கை ரத்த நிலத்தில் அரசியலில் இருந்து தெரிந்து கொள்ளாத ஆனந்த சங்கரி, இனவேறுபாட்டால் உரிமை கேட்டதால் படுகொலை செய்யப்பட்டவர்கள்மீது நின்று அரசியல் செய்வதால்தான் பண்பற்ற கொலைகாரர்களிடமே உரிமைப் பிச்சை கேட்கிறார்.

இந்த வஞ்சக அரசியல் நகைப்பாளரைக் கண்டுவிட்ட பிறகு, சோத்தபய குழு கிளிநொச்சியில் உள்ள உணவு விடுதியில் உணவருந்திய பொழுது இலங்கை ராணுவத்தில் தற்போது இந்தப் பகுதி தமிழ்ப் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். 102 தமிழ் இளம்பெண்கள் அப்படி ராணுவத்தில் இணைந்துள்ளனர். விசேஷம் என்னவென்றால், அதில் ஒரு சிலர் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள். கிளிநொச்சி பெண்கள் பிரிவு ராணுவ முகாமுக்குப் போனால், அவர்களில் பலரைச் சந்திக்கலாம் என்றாராம் ஒருவர்.


தமிழ் ஓவியா said...

உடனே சோத்தபய குழுவும் ராணுவ முகாம் போனதாம். பார்க்கணும்னு அனுமதி கேட்டு முயற்சித்ததும், மேஜர் பந்துலா அனுமதி கொடுத்தாராம். அவர் சொன்னாராம், நாங்கள் கிளிநொச்சியைக் கைப்பற்றியபோது, இங்கு பறவைகள் தவிர வேறு உயிரினங்கள் கிடையாது. வெறிச்சோடிக் கிடந்தது. புலிகள், இப்பகுதி மக்களைத் தங்களுக்கு அரணாகத் தங்களுடனே அழைத்துச் சென்றுவிட்டனர். ஆனாலும், இங்கிருக்கும் வீடுகளையோ, ஹிந்துக் கோவில்களையோ ராணுவம் துளியளவும் சேதப்படுத்தவில்லை.

இறுதிப் போர் முடிந்த இந்த நான்கு வருடங்களில்,1 லட்சத்து 35 ஆயிரத்து 605 தமிழர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரசாங்கம் 1.75 மில்லியன் பணத்தை கிளிநொச்சி மறுவாழ்வுக்கென ஒதுக்கிச் செலவு செய்து வருகிறது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன என்று. மேலும் கடைசியாக அவர் ஒன்று சொன்னாராம், ராணுவத்தின் வேலை பயங்கரவாதத்தை அழிப்பது மட்டும்தானே தவிர, தமிழர்களை அழிப்பது இல்லை. போர் எப்போதோ முடிந்துவிட்டது. இப்போது ராணுவத்தின் லட்சியம், இங்கு அய்ந்து செயற்பாடுகளை ஏற்படுத்துவதுதான். ஸிமீலீணீதீவீறீவீணீவீஷீஸீ, ஸிமீவீஸீமீரீக்ஷீணீவீஷீஸீ, ஸிமீநீஷீஸீக்ஷீநீவீஷீஸீ, ஸிமீமீறீமீனீமீஸீ, ஸிமீநீஷீஸீநீவீறீவீணீவீஷீஸீ (மறுவாழ்வு, மறு இணைப்பு, மறு நிர்மாணம், மறுகுடியேற்றம், மறு சமாதானம்) ஆகிய அய்ந்தும்தான் இப்போதைய எங்கள் லட்சியம். அதை நிறைவேற்றுவோம். எல்லாவற்றையும் தீர்க்கதரிசனத்தோடு பார்க்கும் சோத்தபய குழுவிடம் எல்லாவற்றுக்கும் சரியாகக் கணக்குச் சொல்லும் ராணுவ அதிகாரி, இந்த மறுவாழ்வு, மறு இணைப்பு, மறு நிர்மாணம், மறு குடியேற்றம், மறு சமாதானம் ஆகியவைக்காக எத்தனை லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள், - எத்தனை பில்லியன் டாலர்களுக்கும் யூரோகளுக்கும் ரூபாய்களுக்கும் யென்களுக்கும் எத்தனை விதமான ஆயுதங்களும் ரசாயனக் குண்டுகளும் எறிகணைகளும் வாங்கப்பட்டன என்ற கணக்கைப் பற்றிய பேச்சைப் பேசவில்லையோ?

2006_-2009 வரையிலான இலங்கை உள்நாட்டுப் போரில் ஆயுதங்களுக்காக 605 பில்லியன் ரூபாய்(இலங்கை மதிப்பீடு) செலவு செய்யப்பட்டுள்ளது என்கிறார் இலங்கை சென்ட்ரல் வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால்.

போர் முடிந்து ராணுவத்தால் அமைதி மீட்கப்பட்ட இலங்கையில் ஆயுதங்களுக்காக 1487 மில்லியன் ரூபாய் செலவிடப்படுகிறது என்ற அதிர்ச்சிக் கணக்கை, அண்மையில் ஆசிய மனித உரிமைக் கழகம் குறிப்பிட்டது. அதன்படியும் போரில் செலவிடப்பட்ட தொகையின் அளவுப்படியும் பார்ப்போமேயானால் 0.05 சதவீதம் கூட தமிழ் மக்களின் வாழ்வாதார மீள் கட்டமைப்புக்காக இலங்கை அரசு செலவு செய்யவில்லை. இப்படி, பொய்யான மறுவாழ்வையும் மறு சீரமைப்பையும்தான் இலங்கை அரசு தமிழ் மக்களுக்குச் செய்து வருகிறது.

தமிழ் ஓவியா said...

துக்ளக்கிடம் பேசிய ராணுவ அதிகாரி ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு குடியிருக்கிறார்கள், சிங்களக் குடியேற்றம் நடக்கவில்லை என்கிறார். அய்ந்து லட்சத்துக்கும் அதிகமான ஆட்பலத்தைக் கொண்டுள்ள இலங்கை ராணுவத்தில் 0.1 சதிவீதம்கூட தமிழர்கள் யாரும் இல்லை என்ற கணக்குத் தெரியாததால்தான் சிங்களக் குடியேற்றம் நடக்கவில்லை என்று சொன்னதை அப்படியே குறிப்பிட்டுள்ளது துக்ளக். இந்த ராணுவ அதிகாரி குறிப்பிடுவது போல் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் ராணுவம் மட்டுமில்லை, ராணுவத்தின் குடும்பங்களும் இருக்கிறது. அவர் வாதத்தின்படியே வருவோம், இதற்குப் பெயர் சிங்களக் குடியேற்றம் இல்லையா? ராணுவத்தில் இருப்பது எல்லாம் சிங்களவர், வட கிழக்கில் ராணுவம் மட்டும்தான் இருக்கிறது என்றும் சொல்கிறார். அப்படியெனில் இதைச் சிங்களக் குடியேற்றம் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது ராணுவ மயமாக்கல் என்று எடுத்துக் கொள்ளலாமா? இது சிங்களக் குடியேற்றம், ராணுவ மயமாக்கல் மட்டுமல்ல. மறு சமாதான ரீதியிலான இன அழிப்பு. இந்த மறுசமாதான ரீதியிலான இன அழிப்பு நீட்சிகளின் ஆதாரங்களையும், இலங்கையின் வடகிழக்கில் நடந்து கொண்டிருக்கும் அத்துமீறல், செயல்பாடுகளின் விவரங்களையும், புலித்தடம் தேடி... என்ற எனது 25 நாள்கள் இலங்கைப் பயணத் தொடரிலிருந்து குறிப்பிடுகிறேன்.

சிங்கள ஆண்; தமிழ்ப் பெண் திருமணங்கள். இதுவே, மிச்சம் மீதி ஈழத்தமிழ் சமூகத்தின் அடையாளங்களை அழிப்பதற்கான புதிய ஆயுதம் என்பதை எனது பயணத்தில் அறிய முடிந்தது.

கிழக்கு திமோர் பழங்குடிகளை அழிக்க நினைத்த இந்தோனேசிய ராணுவம், கருத்தடை ஊசிகளைத் திருமணம் ஆகாத பழங்குடி இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் போட்டது. அந்த வகையான சிந்தனைதான் இதுவும். தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவத்தில் சேர்ப்பதும், ராணுவத்தினர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்வதும் ஆகிய இரண்டு வழிகளின் மூலமாக இதனை நிகழ்த்திக்காட்ட நினைக்கிறார்கள் என்று பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் கூறினார். இதை இன நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் நடத்துகிறது ராணுவம். (துக்ளக்கிடம் கூறிய ராணுவ அதிகாரியின் வாதப்படி, இதைத் தமிழ்ப் பெண்களுக்கான மறுவாழ்வு என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.)

தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவத்தின் இச்சைக்கு இரையாக்கி, அதன் மூலம் அவர்களைத் திருமணம் செய்யும் ஏற்பாடு. அதுவும், முன்னாள் பெண் போராளிகளின் நிலைமை இதனிலும் மோசம். அவர்கள் எங்குச் சென்றாலும் ராணுவம் தொடர்கிறது. அவர்களது வீட்டுக்கு இரவில் செல்கிறது. காதலிக்கும்படிக் கட்டாயப்படுத்துகின்றனர்! இதற்கு சிங்கள அரசின் அறிவிப்பே ஆதாரமாக உள்ளது. (துக்ளக்கின் கருத்துப்படி ராணுவம் பின் தொடர்வது அப்பெண்களின் பாதுக்காப்புக்காககூட இருக்கலாம். பிணங்களைக் கற்பழிப்பவர்கள் எல்லாம் பயங்கரவாத ஒழிப்பாளர்கள்தானே சோவுக்கு).

தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் என்கிறது அரசாங்கத்தின் அறிவிப்பு. அதாவது, 30 ஆயிரம் சம்பளம் உள்ள ராணுவ ஆள், தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்தால் 60 ஆயிரம் கிடைக்கும். இந்தச் சம்பள உயர்வு இனக்கலப்பின் விதைக்காக! போர்க்காலத்தில் ராணுவத்தில் போர் நிதி என்று வழங்கப்பட்டது. அது இப்போது நிறுத்தப்பட்டுவிட்டதால், இப்படியாவது சம்பள உயர்வைப் பெறலாம் என ராணுவ இளைஞர்கள், தமிழ்ப் பெண்களுக்கு அலைகின்றனர். இந்தச் செயல்திட்டப்படியே தமிழ்ப் பெண்கள் ராணுவத்தில் இணைக்கப்படுகின்றனர்.

சோத்தபய குழு குறிப்பிடுவதாவது: இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ள 102 தமிழ்ப் பெண்களில், சுமார் 40 பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது. ராணுவ அதிகாரிகள் யாரும் அருகில் இல்லாமல் அந்தத் தமிழ்ப் பெண்களுடன் சுதந்திரமாக நாங்கள் உரையாடினோம். எல்லோரும் சுமார் 21 முதல் 25 வயது வரையிலான இளம்பெண்கள். ராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் வயதே, சிங்கள ஆண்; தமிழ்ப் பெண் திருமணம் என்ற ராணுவச் செயல்திட்டத்துக்கான சிறந்த ஆதாரம்.

கொலைகளும் கற்பழிப்புகளும் புரிந்த ராணுவம் இன்று அமைதியையும் அரவணைப்பையும் போதிக்கிறது. வெறிப் பிடித்து ரத்தம் குடித்த இனவாதம் இன்று சர்வ சாந்தமாக இருக்கிறது - ஆறே நாட்களில் இலங்கையை ஆய்வு செய்த சோத்தபய குழுவின் சத்திய வாக்கு.

- உண்மைகள் கசக்கும்...

தமிழ் ஓவியா said...

துக்ளக்கிடம் பேசிய ராணுவ அதிகாரி ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்தான் இங்கு குடியிருக்கிறார்கள், சிங்களக் குடியேற்றம் நடக்கவில்லை என்கிறார். அய்ந்து லட்சத்துக்கும் அதிகமான ஆட்பலத்தைக் கொண்டுள்ள இலங்கை ராணுவத்தில் 0.1 சதிவீதம்கூட தமிழர்கள் யாரும் இல்லை என்ற கணக்குத் தெரியாததால்தான் சிங்களக் குடியேற்றம் நடக்கவில்லை என்று சொன்னதை அப்படியே குறிப்பிட்டுள்ளது துக்ளக். இந்த ராணுவ அதிகாரி குறிப்பிடுவது போல் தமிழ் மக்கள் வாழும் பகுதியில் ராணுவம் மட்டுமில்லை, ராணுவத்தின் குடும்பங்களும் இருக்கிறது. அவர் வாதத்தின்படியே வருவோம், இதற்குப் பெயர் சிங்களக் குடியேற்றம் இல்லையா? ராணுவத்தில் இருப்பது எல்லாம் சிங்களவர், வட கிழக்கில் ராணுவம் மட்டும்தான் இருக்கிறது என்றும் சொல்கிறார். அப்படியெனில் இதைச் சிங்களக் குடியேற்றம் என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது ராணுவ மயமாக்கல் என்று எடுத்துக் கொள்ளலாமா? இது சிங்களக் குடியேற்றம், ராணுவ மயமாக்கல் மட்டுமல்ல. மறு சமாதான ரீதியிலான இன அழிப்பு. இந்த மறுசமாதான ரீதியிலான இன அழிப்பு நீட்சிகளின் ஆதாரங்களையும், இலங்கையின் வடகிழக்கில் நடந்து கொண்டிருக்கும் அத்துமீறல், செயல்பாடுகளின் விவரங்களையும், புலித்தடம் தேடி... என்ற எனது 25 நாள்கள் இலங்கைப் பயணத் தொடரிலிருந்து குறிப்பிடுகிறேன்.

சிங்கள ஆண்; தமிழ்ப் பெண் திருமணங்கள். இதுவே, மிச்சம் மீதி ஈழத்தமிழ் சமூகத்தின் அடையாளங்களை அழிப்பதற்கான புதிய ஆயுதம் என்பதை எனது பயணத்தில் அறிய முடிந்தது.

கிழக்கு திமோர் பழங்குடிகளை அழிக்க நினைத்த இந்தோனேசிய ராணுவம், கருத்தடை ஊசிகளைத் திருமணம் ஆகாத பழங்குடி இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் போட்டது. அந்த வகையான சிந்தனைதான் இதுவும். தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவத்தில் சேர்ப்பதும், ராணுவத்தினர் தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்வதும் ஆகிய இரண்டு வழிகளின் மூலமாக இதனை நிகழ்த்திக்காட்ட நினைக்கிறார்கள் என்று பத்திரிகையாளர் நண்பர் ஒருவர் கூறினார். இதை இன நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் நடத்துகிறது ராணுவம். (துக்ளக்கிடம் கூறிய ராணுவ அதிகாரியின் வாதப்படி, இதைத் தமிழ்ப் பெண்களுக்கான மறுவாழ்வு என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.)

தமிழ்ப் பெண்களை சிங்கள ராணுவத்தின் இச்சைக்கு இரையாக்கி, அதன் மூலம் அவர்களைத் திருமணம் செய்யும் ஏற்பாடு. அதுவும், முன்னாள் பெண் போராளிகளின் நிலைமை இதனிலும் மோசம். அவர்கள் எங்குச் சென்றாலும் ராணுவம் தொடர்கிறது. அவர்களது வீட்டுக்கு இரவில் செல்கிறது. காதலிக்கும்படிக் கட்டாயப்படுத்துகின்றனர்! இதற்கு சிங்கள அரசின் அறிவிப்பே ஆதாரமாக உள்ளது. (துக்ளக்கின் கருத்துப்படி ராணுவம் பின் தொடர்வது அப்பெண்களின் பாதுக்காப்புக்காககூட இருக்கலாம். பிணங்களைக் கற்பழிப்பவர்கள் எல்லாம் பயங்கரவாத ஒழிப்பாளர்கள்தானே சோவுக்கு).

தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் என்கிறது அரசாங்கத்தின் அறிவிப்பு. அதாவது, 30 ஆயிரம் சம்பளம் உள்ள ராணுவ ஆள், தமிழ்ப் பெண்ணைத் திருமணம் செய்தால் 60 ஆயிரம் கிடைக்கும். இந்தச் சம்பள உயர்வு இனக்கலப்பின் விதைக்காக! போர்க்காலத்தில் ராணுவத்தில் போர் நிதி என்று வழங்கப்பட்டது. அது இப்போது நிறுத்தப்பட்டுவிட்டதால், இப்படியாவது சம்பள உயர்வைப் பெறலாம் என ராணுவ இளைஞர்கள், தமிழ்ப் பெண்களுக்கு அலைகின்றனர். இந்தச் செயல்திட்டப்படியே தமிழ்ப் பெண்கள் ராணுவத்தில் இணைக்கப்படுகின்றனர்.

சோத்தபய குழு குறிப்பிடுவதாவது: இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ள 102 தமிழ்ப் பெண்களில், சுமார் 40 பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டது. ராணுவ அதிகாரிகள் யாரும் அருகில் இல்லாமல் அந்தத் தமிழ்ப் பெண்களுடன் சுதந்திரமாக நாங்கள் உரையாடினோம். எல்லோரும் சுமார் 21 முதல் 25 வயது வரையிலான இளம்பெண்கள். ராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ்ப் பெண்களின் வயதே, சிங்கள ஆண்; தமிழ்ப் பெண் திருமணம் என்ற ராணுவச் செயல்திட்டத்துக்கான சிறந்த ஆதாரம்.

கொலைகளும் கற்பழிப்புகளும் புரிந்த ராணுவம் இன்று அமைதியையும் அரவணைப்பையும் போதிக்கிறது. வெறிப் பிடித்து ரத்தம் குடித்த இனவாதம் இன்று சர்வ சாந்தமாக இருக்கிறது - ஆறே நாட்களில் இலங்கையை ஆய்வு செய்த சோத்தபய குழுவின் சத்திய வாக்கு.

- உண்மைகள் கசக்கும்...

தமிழ் ஓவியா said...


துவேஷம்!


மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் 17.8.2013 அன்று நீடா மங்கலத்தையடுத்த வைய களத்தூரில் திராவிடர் தள பதி சர் ஏ.டி. பன்னீர் செல்வம் பார் அட்-லா அவர்களின் சிலையைத் திறந்து வைத்தார்.

இந்தியாவில் சமூகப் புரட்சியாளர்களில் தந்தை பெரியார் முதன்மையான இடத்தை வகிக்கக் கூடியவர் என்று பேசினார். (அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் பங்கேற்றார்!)

இந்தச் செய்தியை வெளியிட்ட தினமலரும் தினமணியும் தந்தை பெரியார்பற்றி சொன்னதை மட்டும் வேண்டுமென்றே இருட்டடித்து விட்டு, மீதி செய்திகளை வெளியிட் டன. இந்து ஏடோ அறவே செய்தியை வெளியிட வில்லை.

பார்ப்பனர்களின் மனப்பான்மை - பார்ப்பன ஊடகங்களின் போக்கு எந்த நிலையில் உள்ளன என்பதை இதன் மூலம் தெளிவாகவே தெரிந்து கொள்ளலாம்.

இது ஒன்றும் புதிதல்ல - இதுகுறித்து விடுதலை யில் 60 ஆண்டுகளுக்கு முன் (16.10.1953) ஒரு தலையங்கம் வெளி வந்தது.

அந்தத் தலையங்கத் தின் தலைப்பு இது என்ன துவேஷம்? என்பதாகும்.

பனகல் அரசர், மறை மலையடிகள், ஆர்.கே. சண் முகம், திரு.வி.க. ஆகிய திராவிடத் தலைவர்கள் மறைந்ததற்கு தலையங்கம் எழுதாத ஹிந்து சத்ய மூர்த்தி அய்யர், சீனுவாச சாஸ்திரி, கோபால்சாமி அய்யங்கார் ஆகிய தலை வர்களுக்கு மட்டும் தலை யங்கம் எழுதக் காரணம் என்ன?

திராவிடத் துவேஷமே!

திராவிடா! சிந்தித்துப் பார் என்று இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் விடுதலை தலையங்கம் தீட்டியது. இன்றைக்கும் அதே நிலைதான். பார்ப் பனர்களின் மனப்போக்கில் மாற்றம் என்பது கிடையவே கிடையாது.

தந்தை பெரியார் மறை வுக்குத் தலையங்கம் எழு தாத ஏடும், இதே இந்து ஏடு தான்.

1981இல் தமிழ்நாட்டில் ஊடகத் துறையில் மிகப் பெரிய சாதனை படைத்த வரான தினத்தந்தி நிறு வனர் சி.பா. ஆதித்தனார் மறைந்தபோது - அதனை உள்பக்கம் ஏதோ கட மைக்கு வெளியிட்டு விட்டு, அன்றைய தினமே மிரு தங்க வித்துவான் பாலக் காட்டு மணி அய்யர்பற்றி முதல் பக்கத்தில் சாங்கோ பாங்கமாக வெளியிட்டதே!

இன்னொரு அதிர்ச்சித் தகவல் என்ன தெரியுமா? புரட்சிக் கவிஞர் பாரதி தாசன், அன்னை மணியம் மையார் மறைவு செய்தி யைக்கூட மரணச் செய்தி குறிப்பு வெளியிடப்படும் பகுதியில் (டீவைரயசல) வெளி யிட்டுத் தன் அற்ப சந்தோ ஷத்தைக் காட்டிக் கொண்டதுண்டு.

தமிழா இனவுணர்வு கொள்! தமிழா தமிழனாக இரு! என்று தமிழர் தலை வர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கொடுத்த முழக் கத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்வீர்!

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...

ஆசிரியர்கள் கேள்வி கேட்பதைவிட மாணவர்கள் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்!

அப்பொழுதுதான் ஆராய்ச்சி அறிவு, அறிவியல் சிந்தனை வளரும்

வல்லம் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழக விழாவில் வேந்தர் கி.வீரமணி கருத்துரை


வல்லம், ஆக. 25- மாணவர்கள் அதிகப்படியான கேள்விகள் கேட்கும் போதுதான் அவர்கள் ஆராய்ச்சி அறிவும் அறிவியல் சிந்தனையும் பெரு கும் என்று பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். இந்திய அரசு நிறுவனமான தேசிய அறிவியல் மற்றும் தொடர்பியல் தொழில்நுட்பக் கழகம் புதுடில்லி, மயிலை திருவள்ளுவர் தமிழ்ச்சங்கம் சென்னை மற்றும் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகம் தஞ்சாவூர் ஆகியவை இணைந்து நடத்திய 13 ஆவது மண்டல அறிவியல் எழுத் தாக்கம் இதழாக்கம் என்ற தலைப் பிலான பயிற்சிப் பட்டறை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் 20.8.2013 முதல் 24.8.2013 வரை நடை பெற்றது. பட்டறையின் நிறைவு விழா பல்கலைக்கழக வள்ளுவர் அரங்கில் 24.8.2013 அன்று காலை 11 மணி யளவில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் தாய் வாழ்த்தும், அதைத் தொடர்ந்து திருவள்ளுவர் மயிலை தமிழ்ச்சங்க செயலாளரும் முன்னாள் சென்னை அகில இந்திய வானொலி இயக்குநரு மான கலைமாமணி முனைவர் சேயோன் அவர்களின் திருவள்ளுவர் வாழ்த்து மற்றும் திருவள்ளுவர் மந் திரம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு மற்றும் தொடர்பியல் துறை உதவி பேராசிரி யரும் பயிற்சி பட்டறையின் ஒருங்கி ணைப்பாளருமான பேரா.ஜெயந்தி வரவேற்புரை ஆற்றினார். பின்னர் பயிலரங்கின் சிறப்பு மற்றும் பங்கேற்பாளர்களின் மதிப் பீட்டை முனைவர் சேயோன் வழங் கினார். பயிலரங்கில் பயிற்சி பெற்றவர் களுள் தங்களின் பயிலரங்கத்தின் சிறப்பியல்புகளைக் கூறினார். பல்கலைக்கழக இணை துணை வேந்தர் பேரா.எம்.தவமணி தலைமை உரை வழங்கினார். அவர் தம் உரை யில் விடுதலை நாளேட்டில் பகுத் தறிவு கருத்துகளோடு அறிவியல் கருத்துக்களும் இடம் பெற்றிருப் பதைக் கோடிட்டுக் காட்டினர். பயிர் பதன தொழில்நுட்பக்கழக இயக்குநர் முனைவர் அழகு சுந்தரம் பயிலரங்கம் பற்றி சிறப்புரை வழங் கினார். அவர் தம் உரையில் தனது ஆராய்ச்சி படிப்பின்போது இதழாக் கம் செய்ய எவ்வாறு பாடுபட்டார் என விளக்கினார்.

முனைவர் மனோஜ் பட்டாரியா

அடுத்ததாக தேசிய அறிவியல், தொழில்நுட்ப கழகம் புதுடில்லி இயக்குநரும் அறிவியலாளருமான முனைவர் மனோஜ் பட்டாரியா அவர்கள் அறிவியல் சார்ந்த கருத் துகளை எடுத்துரைத்து பயிலரங்க நிறைவுரையை வழங்கினார். அவர் தம் உரையில் அறிவியல் தொழில் நுட்பம் குறித்து அனைத்து மாணவர் களுக்கும், பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத் தான் இதுபோன்ற பயிலரங்கத்தை நடத்தி வருகின்றோம். மேலும் அறிவி யல் எழுத்தாக்கம் இதழாக்கம் மூலம் தான் அறிவியல் சிந்தனைகளை வளர்க்க முடியும். மாணவர்களாகிய நீங்கள் சிறிய கதைகளாக வடிவ மைத்து மற்றும் சிறிய கண்காட்சி மூலமாக அறிவியல் நமக்கு எப்படி எல்லாம் பயன்படு கிறது என்று செயலாக்கம் முறையில் எடுத்துக் கூறலாம். இவைகளின் மூலம்தான் நல்ல அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்க முடியும் என்றார். இப்பயிலரங்க பட்டறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பல்கலைகழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பரிசளித்தார்கள். முதலாவதாக அறிவுமலர் என்ற பட்டத்தினை எஸ்.மதுபாலா, பாரத் அறிவியல் கல்லூரி, மூன்றவதாக அறிவுத் தளிர் என்ற பட்டத்தினை இ.மாதேஸ்வரன், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், நான்காவ தாக அறிவு துளிர் என்ற பட்டத்தினை எஸ்.தரணி பதி, எம்ஜிஆர் அறிவியல் கலைக்கல்லூரி, அய்ந் தாவதாக அறிவு புதிர் என்ற பட்டத்தினை டி.சவு மியா பாரதி, பெரியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியோர் பெற்றனர்.

தமிழ் ஓவியா said...

டாக்டர் வீரமணி

அடுத்ததாக பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக் டர் கி.வீரமணி அவர்கள் அறிவியல் விஞ்ஞானம் வளர்ச்சிகள் பற்றியும் அடிப்படை கடமைகள், அறி வியல் மனப்பான்மை, பகுத்தறிவுச் சிந்தனை மற்றும் பயிலரங்கின் சிறப்புகள் பற்றி உரையாற்றினார். மாணவர்கள் அதிகப்படியான கேள்விகள் கேட்கும் போதுதான் அவர்கள் ஆராய்ச்சி அறிவும் அறிவியல் சிந்தனையும் பெருகும் என்று கூறினார். அதுதான் சிறந்த கல்வி முறை என்றும் கூறினார். மனிதன் இறந்தவுடன் அவனின் உடலை உடற் கொடையாக மருத்துவ மாணவர்களின் ஆராய்ச் சிக்குக் கொடுக்க முன் வரவேண்டும். இதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பல ஆராய்ச்சி களை மேற்கொள்ள முடியும். இன்றைய சூழலில் இறந்த மனிதன் உடல் கிடைப்பது அரிதாக உள்ளது. ஆகையால் நாம் முன் வரவேண்டும் என்றார். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வேந்தர் அவர்கள் சிறப்பு செய்தார்கள். எம்டிஎஸ் அறிவியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாம்பசிவம் நன்றியுரை வழங்கினர். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் நல்.இராமச்சந்திரன், எம்டிஎஸ் புரவலர் எஸ்.அய்யாசாமி, பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் மு.அய்யாவு ஆராய்ச்சி முதன்மையர் முனைவர் டி.குமார், பல்கலைக்கழக பேராசிரியர் கள், மாணவ - மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


புளுகடா புளுகு! போக்கிலியே!!


முகத்தில் பிறப்பதும் உண்டோ முட்டாளே?

தோளிற் பிறப்பார் உண்டோ தொழும்பனே?

இடையிற் பிறப்பார் உண்டோ எருமையே!

காலில் பிறப்பதுமுண்டோ கழுதையே?

நான் முகன் என்பான் உளனோ நாயே?

புளுகடா புகன்றவை யெலாம்போக்கிலியே!

என்றார் புரட்சிக் கவிஞர்.

அவர் கூறிய இந்தக் கடைசி வரி தான் இப்பொழுது நினைவிற்கு வருகிறது. விஜயபாரதம் என்ற ஆர்.எஸ்.எஸ். இதழ் (23.8.2013 பக்கம் 9) ஒரு தகவலை (?) வெளியிட்டுள்ளது.

மிலேச்சர்கள் நம் நாட்டின்மீது படையெடுத்த காலங்களில் அவர்களிடமிருந்து தங்கள் மானத்தைக் காத்துக் கொள்ள, ஹிந்துப் பெண்கள் ஆடவர்கள் கைகளில் இந்த ராக்கியைக் கட்டி தங்கள் கற்பைக் காப்பாற்றித் தர உத்தரவாதம் பெறும் திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வந்தது.

அலெக்ஸாண்டர் நமது நாட்டின்மீது படையெடுத்து வந்தபோது ஜீலம் நதிக்கரையில் நமது மன்னன் புருஷோத்தமன் எதிர்த்துப் போரிட்டான். புருஷோத்த மனின் பேராற்றலைக் கேள்விப்பட்ட அலெக்சாண்டரின் மனைவி, தன் கணவனுக்கு உயிர்ப்பிச்சை வேண்டி ஹிந்து மரபுப்படி புருஷோத்தமனுக்கு ராக்கி அனுப்பி வைத்தாள்.

போர்க்களத்தில், அலெக்சாஸ்டரைக் கொல்ல, உருவிய வாளை உயரத் தூக்கியபோது, புருஷோத்தமன் தனது கையில் இருந்த ராக்கியைப் பார்த்து, அலெக் ஸாண்டரைக் கொல்லாமல் விட்டு விடுகிறான். என்று வரலாற்றில் ஒரு உதாரணம் உள்ளது.

என்பதுதான் விஜயபாரததத்தில் வெளி வந்துள்ள தாகும்.

இப்படி கூறுவதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஆதாரத்தைத்தான் எடுத்துக்காட்டியுள்ளனரா? ஆர்.எஸ்.எஸ்.காரர்களைப் பொறுத்தவரை எதையும் தன் போக்கில் மானாங்காணியாகப் பேசுவது, எழுதுவது என்பது அவர்களின் ஏமாற்றும் தந்திரப் போக்கு!

சரி - விஜயபாரதம் சொல்லுவதை விவாதத்துக்காக ஏற்றுக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம்.

கஜனி முகம்மது இந்தியாவுக்குள் புகுந்து, சோமநாதபுரத்தைச் சூறையாடியபோது - கோயில் நகைகளைக் கொள்ளையடித்தபோது, பதினோராயிரம் பேர்களைச் சிறை பிடித்துக் கொண்டு போனபோது (சுவாமி சிவானந்த சரஸ்வதியின் ஞானசூரியன்). இந்தராக்கி வித்தையைக் கையாண்டு இருக்கலாமே!

சோமநாதபுரத்துக் கடவுளின் சக்திதான் என்னா யிற்று? என்பதைப்பற்றிச் சிந்தித்தால் விஜய பாரதத்தின் பொய்ச் சரக்கின் மூல வேர் அறுபட்டு விழுந்து விடும். முகமூடியும் கிழிந்து தொங்கும்

தமிழ் ஓவியா said...


கண்ட பலன்?


ஆகஸ்ட் 24 - சனி ஏழு மலையப்பன் மைசூர் மண் டபம் எழுந்தருளல். குச் சனூர் சனி பகவான் ஆரா தனை. மகா சங்கடஹர சதுர்த்தி.

ஆகஸ்ட் 25 - ஞாயிறு சிறீரங்கம் நம் பெருமாள் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் அனுமனுக் குத் திருமஞ்சன சேவை. தேவக்கோட்டை ரங்கநாதர் புறப்பாடு.

ஆகஸ்ட் 26 - திங்கள் திருச்செந்தூர் முருகப்பெரு மான் உற்சவம் ஆரம்பம். சங்கரன் கோவில் கோமதி யம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக் குத் திருமஞ்சன சேவை.

ஆகஸ்ட் 27 - செவ் வாய் திருச்செந்தூர் முரு கப்பெருமான் சிங்கக்கேடய சப்பரத்திலும், இரவு பல் லக்கிலும் பவனி. பெரு வயல் முருகப்பெருமான் புறப்பாடு. திருப்பரங்குன் றம் ஆண்டவர் புறப்பாடு. கார்த்திகை விரதம்.

ஆகஸ்ட் 28 - புதன் திருச்செந்தூர் முருகப் பெருமான் காலை பூங் கோவில் சப்பரத்திலும், இரவு முத்துக்கிடா வாக னத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத் திலும் பவனி சிறீகிருஷ்ண ஜெயந்தி.

ஆகஸ்ட் 29 - வியாழன் மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி உற்சவம் ஆரம்பம். திருச்செந்தூர் முருகப் பெருமான் தங்க முத்துக் கிடா வாகனத்திலும், இரவு வெள்ளி யானை வாகனத் திலும் அம்பாள் வெள்ளி சப்பரத்திலும் திருவீதி யுலா. ஸ்ரீபஞ்சராத்திர ஜெயந்தி.

ஆகஸ்ட் 30 - வெள்ளி மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி உறியடி உற்சவம். திருச்செந்தூர் முருகப் பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் பவனி. கீழ்த் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ் சனசேவை.

....இத்தியாதி ....இத்தி யாதி கோவில் வைபவங்கள் வெகு ஜோராக நடக்கத் தான் செய்கின்றன. இது ஒரு வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல். ஆண்டு முழுவதும் இவை போன் றவை எத்தனை எத்த னையோ!

இவையெல்லாம் நடந்து என்ன பயன்? வறுமைக் கோட்டைத் தாண்டி மக்கள் வளர்ந்து விட்டார்களா? மருத்துவமனைகளை இழுத்து மூடும் நிலை ஏற் பட்டுவிட்டது - கடவுளின் கடாட்சத்தால் என்ற நிலை உண்டா?

நூற்றுக்கு நூறு மக்கள் கல்வி கற்றுத் கடைத்தேறி விட்டார்களா? காஷ்மீர் பகு தியில் அந்நியப் படைகள் ஊடுருவல் தடுத்து நிறுத் தப்பட்டதா?

வன்முறைகள் ஓடி ஒளிந்துவிட்டனவா? உண வுப் பஞ்சம் நீங்கியதா? குடிநீர்ப் பஞ்சம் பறந்துவிட் டதா? சாலையோர மக் களுக்குக் குறைந்தபட்சம் குடிசை வீடுகள் கிடைக் கின்றனவா?

மக்கள் உழைப்பும், பண மும், முயற்சியும் பாழான தைத் தவிர - முட்டாள் தனம் முண்டா தட்டி எழுந் ததைத் தவிர நாடு கண்ட பலன் என்னவாம்?

புரோகிதச் சுரண்டல் தொழில் ஓகோ என்று நடந்ததை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.

- மயிலாடன்

தமிழ் ஓவியா said...


பெரியார் விட்டுச் சென்ற அசையும், அசையா சொத்துகள் எவை?


கழகத் தலைவர் விளக்கம்

...நம் அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் மறைவுக்குப் பின் நமது மக்களில் பலரும் - ஏன் நம் இன எதிரி களும்கூட - ஒரு கேள்வியைக் கேட் காமல் இருப்பதில்லை.

பெரியார் எவ்வளவு சொத்துக்களை விட்டுச் சென்றுள்ளார் என்பதே அந்தக் கேள்வி.

இன்னும் சில அரசியல்வாதி களும், ஆன்மிகப் போர்வையாளர்களும்கூட இதை அறிய வருமான வரித் துறைக்கேகூட படையெடுத்து ஊடுருவிப் பார்த்தார்கள்.

அவர்களுக்கு நாங்கள் அன்றும் சொன்னோம்; இன்றும் சொல்லுகிறோம்.

ஆம்! ஏராளமான சொத்துக்களைப் பெரியார் விட்டுச் சென்றுள்ளார்கள்.

அவைகளில் அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என்று இரண்டு வகைச் சொத்துக்களும்கூட - ஏராளம் சேர்த்துவிட்டு அதை எங்களிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறார்கள்!

அசையும் சொத்துக்கள் (Movable Properties) என்பவை இதோ இந்த மணவிழாவை காதல் மணமாக, ஜாதி மறுப்புத் திருமணமாக, தாலி இல்லாது வெறும் மாலைகளை மட்டுமே மாற்றிக் கொண்டு தனது சொந்தக் காலில் நிற்கும் ஆற்றலை வளர்த்துக் கொண்டுள்ள எங்கள் திராவிட மாணவர்; கழகப் பொறுப்பாளரான இளைஞர் தமிழ்ச்செல் வனைப் போன்றுள்ள எண்ணற்ற இலட்சிய இளைஞர்கள் - சர்வ பரித் தியாகம் செய்யத் தயாராக இயக்கத்திடம் தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ளனரே, இவர்கள்தான் பெரியார் விட்டுச் சென்றுள்ள அசையும் சொத்துக்களாகும்; அதுபோலவே, எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாத இலட்சியங்களைக் கொண்டுள்ள இயக்கமும், அதன் லட்சியங்களும்தான் அசையாத நிரந்தரச் சொத்துக்கள் ஆகும் (பலத்த கைத்தட்டல்).

- (நெய்வேலியில் 23.8.2013 அன்று நடைபெற்ற தன.தமிழ்ச்செல்வன் - குண.கோமதி ஆகியோரின் வாழ்விணையேற்பு விழாவைத் தலைமை தாங்கி நடத்தி வைத்த கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் உரையிலிருந்து)

தமிழ் ஓவியா said...


தேவை துப்பாக்கி!


தற்காப்பு ஆயுதங்கள் - தேவைப்பட்டால் துப்பாக்கி வைத்துக் கொள்ளும் அனுமதி பெண் களுக்குக் கிடைக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார் (விடுதலை, 24.12.2012).

இது ஏதோ தீவிரமாகப் பேசவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட ஒன்றல்ல; பெண்களை ஆண்கள் போகப் பொம்மைகளாகக் கருதும் கேவல மான சிந்தனைக்கு முடிவு கட்ட கண்டிப்பாக இந்த வாய்ப்புப் பெண்களுக்கு அளிக்கப்பட்டே தீர வேண்டும்.

அவ்வப்பொழுது பெண்கள் பாதிக்கப்படும் பொழுது - பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கப் படும்பொழுது வீர முழக்கங்கள், ஆவேசக் குரல்கள் கிளம்பும்; சில நாள்களுக்குப் பிறகு அதுபற்றிய சிந்தனையோ, பேச்சோ இருக்காது; மீண்டும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் பொழுது மீண்டும் அதே ஆவேசக் குரல்கள் - ஆர்ப்பாட்டங்கள்!

போதும், போதும் - இனிமேலும் அறிவுரைகள் தேவையில்லை - உருப்படியான செயல்பாடுகள்தான் தேவையே தவிர, வெற்றுச் சொற்கள் தேவையில்லை.

மும்பையில் பத்திரிகைத் துறையில் நிழற்படக் கலைஞரான பெண் ஒருவர் வெறிபிடித்த அய்ந்து பேர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்தப் பட்டார் என்ற செய்தி இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களுக்குமே மாபெரும் தலைக்குனிவே! தமிழ் நாட்டிலும் பாலியல் தொல்லைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. ஆனாலும், ஊடகங்கள் அத்தகுச் செய்தியைக் கழுத்தை நெரித்துக் கொன்று விடுகின்றன.

உலகில் பெண்கள் வாழப் பாதுகாப்பில்லாத ஆபத்தான நாடுகளின் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாகச் சொல்லப்படு கிறது.

சுதந்திரம் அடைந்து 66 ஆண்டுகள் ஓடிவிட்டன; பிரதமராகவும், முதலமைச்சராகவும் இந்நாட்டில் பெண்கள் வந்துவிட்டனர் - என்ன பயன்?

பெண் கல்வி கூட வளர்ந்தேதான் இருக்கிறது என்பதும் உண்மைதான்; வேலை வாய்ப்புகளிலும் பெண்கள் குறிப்பிட்ட அளவுக்கு முன்னேறி இருக் கிறார்கள்.

பெண்களுக்குச் சொத்துரிமையும் கிடைத்து விட்டது. விவாகரத்து உள்பட பல சட்டங்களும் பெண்களுக்குச் சாதகமாக வந்துவிட்டன என்பதெல்லாம் வளர்ச்சியின் அத்தாட்சிகள்தான் - அதில் சந்தேகம் இல்லை.

இவ்வளவு இருந்தும் பெண்கள் மத்தியில் இன்னும் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது!

சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை என்னும் சமூக மனப்பான்மை இருந்து வருகிறது. இந்த உளவியல் நோய் முதலில் ஒழிக்கப்படவேண்டும்.

உடை உடுத்துவதிலிருந்து ஆண் - பெண் வேறுபாடு இருக்கவே கூடாது. சிறு வயதிலேயே ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் சகஜமாகப் பழகும் வகையில் மக்கள் மனோபாவம் மாறியாகவேண்டும்.

பாடல்கள், நடனம், அலங்காரப் பொருள்களைத் தயாரித்தல்கள் என்பது மட்டுமே பெண்களுக்கு உரியது என்ற நிலை தூக்கி எறியப்படவேண்டும்.

சிறுவயதிலேயே பெண்களுக்கு, ஆண்களுக் குரிய உடற்பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி, கராத்தே பயிற்சி, துப்பாக்கிச் சுடும் பயிற்சி என்று அனைத்தும் கற்பிக்கப்படவேண்டும்.
குறிப்பிட்ட வகுப்புக்குமேல் பாலியல் தொடர்பான கல்வியியல் புகட்டப்படவேண்டும். மறைத்து மறைத்துப் பேசி பாலியலில் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தும் யதார்த்த நிலை போக்கப்படவேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக குறிப்பிட்ட காலத்திற் காவது பெண்களுக்குத் தற்காப்புக் கண்ணோட் டத்தில் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதிக் கப்படவேண்டும்.

வக்கிரப் புத்தியோடு பெண்களைச் சீரழிக்கும் ஆண்கள் நான்கு இடத்தில் பெண்களால் சுடப்பட்டார்கள் என்ற செய்தி வந்தால் போதும், தங்கள் வாலைச் சுருட்டிக் கொள்வார்கள் ஆண்கள்.

இதற்கு வழக்கம்போல இந்த ஆண் ஆதிக்க சமுதாயம் எதிர்த்துக் குரலைக் கொடுக்கத்தான் செய்யும்.

அதைச் சற்றும் பொருட்படுத்தாமல், பரீட்சார்த்த மாகவாவது கொஞ்ச நாளைக்குக் கொடுத்துப் பார்க்கவேண்டும் என்பதுதான் நமது அழுத்தமான வேண்டுகோள்!

தமிழ் ஓவியா said...


சபாஷ், மகாராஷ்டிர அரசு பில்லி சூனியம், பேய் ஓட்டினால் ஏழு ஆண்டுகள் சிறை! மகாராஷ்டிராவில் அவசர சட்டம்



மும்பை, ஆக. 26-மகாராஷ்டிராவில் பில்லி சூன்யம் வைப்பது, பேய் ஓட்டுவது போன்ற மூட பழக்க வழக்கங்களில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை மாநில ஆளுநர் சங்கரநாராயணன் பிரகடனம் செய்துள்ளார்.

இந்த சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடை முறைக்கு வந்துள்ளது. இதன்படி பில்லி சூன்யம், செய்வினை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. அப்பாவி மக்களின் மூடப்பழக்க வழக்கங்களை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது, மந்திரம், தந்திரம் மூலம் நோய்களை குணமாக்குவதாக கூறி மோசடி செய்வது, பேய் ஓட்டுவது, மிருகங்களை பலியிடுவது போன்றவற் றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றங் களில் ஈடுபடுபவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண் டனை வழங்குவதற்கு அவசர சட்டம் வகை செய் கிறது. இது தொடர்பான மசோதா நாக்பூரில் நடை பெறவுள்ள சட்டசபையின் குளிர்கால கூட்டத் தொடரின் போது தாக்கல் செய்யப்படவுள்ளன.

மூடபழக்க வழக்கங்களை ஒழிக்க பாடுபட்டவர் டாக்டர் நரேந்திர தபோல்கர். இது தொடர்பாக சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத் தியவர். இது தொடர்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பே வரைவு மசோதா ஒன்றை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தார். இந்த மசோதாவை நிறைவேற்ற பல முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்துத்துவ அமைப்பினர் முட்டுக் கட்டை போட்டதால் இந்த மசோதாவை இது வரையில் நிறைவேற்ற முடியவில்லை.

நடந்து முடிந்த சட்ட மன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் போதும் இந்த மசோ தாவை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டன. அப்போது இந்துத்துவ கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித் ததால் இந்த முயற்சியும் வெற்றிபெறவில்லை.

இந்த நிலையில்தான் டாக்டர் நரேந்திர தபோல்கர் புனேயில் தனது வீட்டின் அருகில் நடைப் பயிற்சியில் ஈடு பட்டு கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மூடப்பழக்க வழக்கங்களுக்கு எதிரான அவரது பிரச்சாரத்தை தாங்கிக்கொள்ள முடியாதவர்களே அவரை சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அவர் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த அவசர சட்டத்தை மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்துள்ளது.

இதன் இடையே அவசர சட் டத்தை காலதாமதமாக கொண்டு வந்ததற்கு தபோல்கரின் குடும்பத் தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சட்டத்தை முன்பே கொண்டு வந்திருந்தால் தபோல்கர் கொலை செய்யப்பட்டிருக்கமாட்டார் என்று சொல்ல இயலாது. ஆனால் முன்பே கொண்டு வந்திருந்தால் மூடப்பழக்க வழக்கத்துக்கு எதிராக அரசு செயல்படும் என்ற செய்தி உறுதியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் என்று தபோல்கரின் மகள் முக்தா தபோல் கர் கூறினார்.

தமிழ் ஓவியா said...

நெருக்கடி

கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இரு தொகுதிகளுக்கான மக்களவை இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரசிடம் தோல்வி அடைந்த நிலையில், அக்கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அக்கட்சியின் கோட்டை என்று கருதப்பட்ட தொகுதிகள் அவை.

இந்தத் தோல்வி, கட்சியின் மாநிலத் தலைவரான குமாரசாமியை கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து பதவி விலகச் செய்திருக்கிறது. வயதான காலத்தில் குமாரசாமியின் தந்தையாரான தேவேகவுடாவிற்கும் ஏன்தான் இந்தத் தொல்லையோ! (எதற்கும் நாமக்கல் ஜோதிடரிடம் ஆலோசனை கேட்பது நல்லது!).

கேரளமா - கொக்கா?

கேரள மாநிலத்தில் அரசுப் பணியில் சேர மலையாளம் கட்டாயம் தெரிந்திருக்கவேண்டும் என்ற விதி உள்ளது. வேற்று மொழிக்காரர்கள் அதனை எதிர்க்கின்றனர். எனவே, ஏற்கெனவே இருந்துவரும் ஆணையை மறுபரிசீலனை செய்ய லாமா என்று அரசு ஆலோசித்து வருவதாக கேரள மாநில முதல மைச்சர் உம்மன்சாண்டி கூறியுள்ளார்.

தொடக்கத்திலேயே இதற்குக் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

கேரளம் என்ன தமிழ்நாடா? கண்டிப்பாக அங்கு மொழிமீது கை வைக்க முடியாது - மலையாளிகள் தமிழர்கள்போல இளிச்சவாயர்கள் அல்லவே!

தமிழ் ஓவியா said...

சாத்தியமில்லை

ஒரு பாட்டில் தண்ணீரின் விலை ரூ.10.

அப்படியிருக்கும்போது மதிய உணவு ஒன்றுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள ரூ.3.11 முதல் 4.65 என்ற தொகை எப்படிப் பொருந்தும்? நடைமுறைக்குச் சாத்தியமானது தானா? என்ற வினாவை எழுப்பி யுள்ளது நாடாளுமன்றக் குழு.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்களே, அது இது தானோ!

வழக்குரைஞர்களுக்கும் தகுதித் தேர்வு

சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்று வழக்குரைஞர் தொழில் நடத்துபவர் கள் தகுதித் தேர்வு எழுதவேண் டுமாம். தகுதி என்ற ஒன்றை உருவாக்குவதில் உள்நோக்கம் உண்டு. தகுதியில்லாதவர்கள் எல் லாம் படித்துவிட்டு டாக்டராக, பொறி யாளராக, வழக்குரைஞர்களாக வந்துவிட்டனர் என்பது பார்ப்பனர் களின் திண்ணைப் பிரச்சாரம் - ஊடகப் பிரச்சாரம்.

தேர்வு எழுதி பட்டம் பெற்ற பிறகும், அவர்களைத் தேர்வு எழுத வைத்து கழித்துக் கட்டவேண்டும் என்பது தான் இதற்குள்ளிருக்கும் சூழ்ச்சியும் - பார்ப்பனத்தனமும் ஆகும்.

கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர் பார்ப்பனர்களுக்கு மந் திரங்கள் சரிவரத் தெரியுமா என்று தேர்வு வைக்கலாமா? பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

தமிழ் ஓவியா said...


சிறப்பு


விஞ்ஞானம், அறிவு, தன்மான உணர்ச்சி இவை யில்லாவிடின், பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பயனில்லை. அறிவுடை யோர்க்கே சென்றவிடமெல்லாம் சிறப்பு.

- (விடுதலை, 12.3.1965)

தமிழ் ஓவியா said...


வரலாற்று நினைவுச் சின்னங்கள்: பாதுகாப்பு தேவை


ஆசிரியருக்குக் கடிதம்

வரலாற்று நினைவுச் சின்னங்கள்: பாதுகாப்பு தேவை


விழுப்புரம் மாவட்டம் பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது. காலம்சென்ற தமி ழறிஞர் கொடுமுடி ச.சண்முகன் அவர்கள், இம்மாவட்டத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறி யாளராகப் பணியாற்றியபோது, வரலாற்றுத் தடயங்களை ஆவணப் படுத்துவதில் பெரிதும் ஆர்வம் காட்டினார். விழுப்புரம் வட்டம், அரசலா புரத்தில் இருந்த கோழி நடுகல் மற்றும் திருக்கோவிலூர் வட்டம், ஆயந்தூர், ஆமூர், சென்னகுணம், கொளத்தூர் ஏரிகளில் இருந்த பழை மையான கல்வெட்டுகளை பல்வேறு சிரமங்களுக்கு இடையில் விழுப்புரம் கொண்டு வந்தார். இவற்றைக் கொண்டு, விழுப்புரம் பொதுப் பணித்துறை அலுவலக வளாகத்தில், விழுப்புரம் கோட்டம் 1051எஸ்/இவஅ2/கோ 255 நாள்:21.5.92- ஆணையின்படி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. தென்னார்க்காடு மாவட்ட கண்காணிப்புப் பொறி யாளர் கோ.பச்சைமுத்து அவர்களால் இவ்வருங்காட்சியகம் 29.7.1992-இல் திறந்து வைக்கப்பட்டது.

இந்நினைவுச் சின்னங்களில் குறிப்பிடத்தக்கது, விழுப்புரம் வட்டம் அரசலாபுரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கோழி நடுகல் லாகும். இதன் காலம் கி.பி.3-ஆம் நூற்றாண்டு. வரலாற்று ஆய்வாளர் களால் இந்நடுகல் முக்கிய ஆவண மாகக் கருதப்படுகிறது.

விழுப்புரத்தில் அரசு சார்பில் அருங்காட்சியகம் இல்லாத சூழலில், விழுப்புரம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் வைக்கப்பட் டிருந்த இந்நினைவுச் சின்னங்கள், வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வந்தன.

இந்நிலையில் கடந்த சில மாதங் களுக்கு முன்பு விழுப்புரம் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தின் வடக்குப் பகுதியில், அதாவது மேற்கண்ட அருங்காட்சி யகம் இருந்த இடத்தில், வாகனம் நிறுத்துமிடம் கட்டப்பட்டது. இத னைத் தொடர்ந்து அதன் அருகி லேயே மய்யப்பகுதியில் சிறிய கோயில் ஒன்றும் தற்போது கட்டப்பட்டு வருகிறது. அரசு அலுவலக வளாகத் தில் கோயில் கட்டுவதற்கு அரசு விதிகள் எப்படி இடம் கொடுக்கின் றன எனத்தெரியவில்லை?

வாகனம் நிறுத்துமிடம் மற்றும் திடீர் கோயில் ஆகியவற்றின் காரண மாக, அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்த நடுகல் மற்றும் கல் வெட்டுகள் அப்பகுதியில் கடைக் கோடிக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இப்போது அந்த இடம் குப்பைக் கூளங்கள் கொட்டுவதற்குப் பயன் படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வருங்காட்சியகத்தை அமைத்த விழுப்புரம் செயற்பொறி யாளர்கள் வே.கோவிந்தராசன், கொடுமுடி ச.சண்முகன் ஆகியோர், இதனைப் பாதுகாப்பவர்கள் அடி எங்கள் முடி மேலன (அவர்கள் பாதம் எங்கள் தலையில்) எனத் தெரிவித் துள்ளதை இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

தமிழர்களின் ஆயிரம் ஆண்டுக ளுக்கு முற்பட்ட வரலாற்று நினைவுச் சின்னங்களை, துறையின் ஆணையின் படி அமைக்கப்பட்ட அருங்காட்சிய கம் அதே அலுவலகத்தில் இப்படி மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டி ருப்பது வேதனைக்குரியதாகும். எனவே இதுகுறித்துத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முந்தைய பொதுப் பணித் துறை அதிகாரிகளால் 20 ஆண்டுகளுக் கும் மேலாக பாது காக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டும் வந்த நினைவுச் சின்னங்களை அழியாமல் பாதுகாத் திட நடவடிக்கை எடுத்திட வேண்டு கிறேன்.

- கோ. செங்குட்டுவன்
(ஒருங்கிணைப்பாளர், விழுப்புரம் மாவட்ட வரலாற்றுப் பேரவை)

தமிழ் ஓவியா said...

""கோகுல அஷ்டமி "" கொண்டாடுவோர் சிந்தனைக்கு !!

பாஞ்சாலிக்கு அவ்வளவு துணியை ஏதோ ஒரு பெரும்

ஆலையில் இருந்து துணி நெய்து தருவது போல தம் கருணையாலும் ,மிக பெரிய சக்தியாலும் ""அற்புதம் "" செய்ததாக கூறப்டுகிற கண்ணன் தான் -பிறர் முன் பெண்களின் துகில் -சேலை -உரியப் படகூடாது என்ற மிகப் பெரிய "' நாகரிக "'மனித நேய தத்துவவாதியாக காட்டபடுகிற கண்ணன்தான் -குளத்தில் குளித்துகொண்டிருந்த 'கோபியர்களின் " புடவைகளை கரையிலிரிருந்து அபகரித்தான் .கோபியர்கள் வெட்கத்தால் உடலை நீரில் புதைத்துக்கொண்டு தலையைமட்டும் வெளியே வைத்து கெஞ்சி சேலை தானம் கேட்க்க ,அவர்களிடம் தண்ணீருக்கு மேலே வாருங்கள் ,வந்தால் தான் சேலையை தருவேன் என்று கூறினான் .அந்த காரியத்தை கவுரவர்கள் செய்தால் மான பங்கம் அதையே கிருஷ்ணன் செய்தால் குறும்பு என்றும் ""லீலை ""என்றும் வர்ணித்து மகிழ்ந்து .அதனையே படமாக்கி பூஜை அறைகளில் வைத்து வணங்குவதா ? இது போன்ற எண்ணற்ற நடவடிக்கைகள் அவர்கள் எழுதிவைத்த கதைகளில் இருந்தே நிருவபடுவதால் ""கிருஷ்ணன் ஒரு கபட வேடதாரி "" என்பது நிரூபணமாகிறது..( தமிழர் தலைவர் கி .வீரமணியின்"" கீதையின் மறுபக்கம் "" நூலிலிருந்து )

தமிழ் ஓவியா said...


நரியைப் பரியாக்கிய லீலை!


அரசியல் பிரச்சினை என்றால் அடேயப்பா - வானத்தை வில்லாக வளைத்து, எழுதும் வக்கணையைப் பாருங்கள். அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்தும் திறமையைப் பாருங்கள்.

அதேநேரத்தில், ஆன்மீகச் சமாச் சாரம் என்றால், ஆமைபோல அய்ந் தவித்து, அடங்கி விடும் மர்மம் ஏன்?

தன் காலை முதலை கவ்விய போது, ஆதிமூலமே என்று யானை அலறி அழைத்தபோது, மகாவிஷ்ணு தன் கருட வாகனத்தில் விரைந்தோடி வந்து சக்ராயுதத்தால் முதலையை அழித்து கஜராஜனாகிய யானைக்கு விடுதலை அளித்தான் என்று புராணம் சொன்னால், அந்த இடத்தில் மட்டும் அவாளின் அறிவு வேலை செய்யாது.

அதனை அண்டப் புளுகு என்று அலச மாட்டார்கள். மாறாக .........என்பது அய்தீகம்.... என்பது நம்பிக்கை என்று நைசாக நழுவிவிடுவார்கள்.

தன் சீடனான பட்டரைக் காப் பாற்றுவதற்காக திருக்கடையூரில் உள்ள அபிராமி அம்மை தன் காதில் இருந்த குண்டலத்தைக் கழற்றி எறிந்தவுடன், அப்படியே அமாவாசை பவுர்ணமியாக பரிணமித்துவிட்டது என்று அபிராமி அந்தாதி சொன் னால், அந்த இடத்தில் அறிவு ஆராய்ச்சிக்கு இடம் தரமாட்டார்கள். மாறாக, ........என்பது அய்தீகம் ..........என்பது நம்பிக்கை என்று நழுவி விடுவார்கள்.

மதுரை இருக்கிறதே, அங்கு நடப்பது மீனாட்சி தர்பார் என்பார்கள். ஆண்டு ஒன்றுக்கு 365 நாள்களில் 294 நாள்கள் அந்தக் கோவிலில் ஏதாவது திருவிழா என்று, கூத்தடிப் பார்கள். அப்பொழுதுதானே அவாள் வயிற்றில் அறுத்துக் கட்ட முடியும்.

ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலில் நரியைப் பரியாக்கிய லீலை என்று ஒரு நாள் கூத்து அங்கே - முழு பக்கம் ஒதுக்கி எழுதுகிறார்கள்!

அது என்ன நரியைப் பரியாக்கிய கதை?

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியன். மாணிக்க வாசகன் அங்கே அமைச்சர்; படைக்காகக் குதிரைகள் வாங்க பொருளைக் கொடுத்து மந்திரியாகிய மாணிக்க வாசகரை அனுப்பி வைத்தார் மன்னர்.

குதிரை வாங்கச் சென்ற அமைச் சர் குதிரைகளுடன் திரும்பி வருவார் என்று மன்னர் எதிர்பார்த்தார். நாட் கள் ஓடின; ஓடிக்கொண்டே இருந் தன. குதிரைகளையும் காணோம் - மந்திரி மாணிக்கவாசகனையும் காணோம்.

அப்பொழுதுதான் தெரிந்தது. மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பொருளைக் கொண்டு திருப்பெருந் துறைக் கோவிலுக்குத் திருப்பணி செய்துவிட்டான் அமைச்சர் மாணிக்க வாசகன்.

பாண்டிய மன்னனின் மகாகோபத் துக்கு ஆளானான் மாணிக்கவாச கன். என்ன செய்வதென்று அறியா மல், கைப்பிசைந்து நின்றான்; கடவு ளிடம் கசிந்துருகிப் பாடினான்.
என்ன ஆச்சரியம் - சினிமாவில் விட்டலாச்சாரியாவின் மாய தந்திரக் கதைபோல, சிவகணங்களைக் குதி ரைப் பாகர்களாகவும், நரிகளைப் பரிகளாகவும் (குதிரைகளாகவும்) ஆக்கி மதுரைக்கு அனுப்பி வைத் தான் சிவபெருமான்.

மன்னனும் மகிழ்ந்தான்; ஆனால், அன்று இரவு என்ன நடந்தது? மறு படியும் அந்தப் பரிகள் எல்லாம் நரிகளாகி ஓடிவிட்டன.

இம்முறை கட்டுக்கடங்கா கோபம் பாண்டியனுக்கு - மாணிக்கவாச கனை சுடு மணலில் கட்டிப் போட்டா னாம். ஆனால், இறைவன் திருவரு ளால் வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதாம். சுடுமணல் என்ன செய்யும்?

இதனைக் கண்டு அரசன் ஆண் டவன் அருள்பெற்றவன் தம் அமைச்சர் என்ற பெருமைப்பட்டு அவனை விடு வித்ததாக தலபுராணம் கூறுகிறது.

நரியைப் பரியாக்க முடியுமா? எந்தப் பத்திரிகைக்காரர் எழுது கிறார்? கடவுள் சக்தியால் முடியும் என்றால், அந்த நரிகளை நிரந்தரமாக ஏன் பரிகளாக்கவில்லை? என்ற கேள்வி எழுமே!

அதைக்கூட விட்டுத் தள்ளுங்கள்!

ஒரு அமைச்சராக இருக்கக் கூடியவன் அவன் எவ்வளவுதான் சிவபக்தி உடையவனாக இருந்தாலும், மன்னவன் கட்டளையை மறந்து, மன்னன் கொடுத்த பொருளைக் கொண்டு கோவில் திருப்பணி செய்தது முறையானதுதானா?

அமைச்சர் செய்தது மோசடியல் லவா? தண்டிக்கப்பட வேண்டியவ னல்லவா? அந்தக் குற்றவாளிக்குக் கடவுள் துணை போனது நேர்மை யானதுதானா?

இப்படியெல்லாம் சோ ராம சாமியை எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம் - கல்கி ராஜேந்திரனைக் கேள்வி கேட்கச் சொல்லுங்கள் பார்ப்போம் - ஆனந்தவிகடன் அறிவு வினாவை இந்த வகையில் தொடுக் குமா?

பக்தி என்ற போர்வையில் ஒழுக் கக்கேட்டை வளர்க்கலாமா? கடமை பிறழலாமா?

ஆம், ஒழுக்கக்கேடாக நடக்கலாம்; கடமை தவறலாம் என்கின்றனரே - இவர்களை என்ன சொல்ல - இவர் கள் நம்பும் ஆன்மிகத்தின் யோக்கி யதைதான் என்ன?

சிந்திப்பீர்!

தமிழ் ஓவியா said...


செய்தியும் சிந்தனையும்



அவர்கள் பாணியில்

செய்தி: திருப்பதி ஏழுமலையான் கோவி லுக்கு ரூ.25 கோடி செலவில் தங்கத் தேர்.

சிந்தனை: தினமலர் துக்ளக் பாணியில் சொல்ல வேண்டுமானால் இனிமேல் வீட்டுக்கு வீடு பிரியாணிப் பொட் டலம் வரும் பாருங்கள். காவிரியாற்றில் நீர் கரை புரண்டு ஓடி வரும் பார்க்கப் போகிறீர்கள்.

தமிழ் ஓவியா said...


செய்தியும் - விமர்சனங்களும்


உயருகிறது

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காரணமாக நிதிச் சுமையைச் சரிக் கட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு மாதா மாதம் ரூ.10 ஏற்றுவதுபற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறதாம்.

(உலகிலேயே தேர்தல், மக்கள் வாக்குபற்றிக் கவலைப்படாது கடமையாற்றும் மிகப் பெரிய கட்சி காங்கிரஸ்தான்; அப்படித்தானே?)

மனித உரிமை

மனித உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை இலங்கை வருவதற்கு -அங்குள்ள புத்த துறவிகள் போராட்டம். (பிறகு என்ன? மனித உரிமை என்றால் சிங் களவர்களுக்குப் பிடிக்குமா என்ன?)

நீட்டிப்பு

இந்திய நாடாளுமன்றம் செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிப்பு.

(வேறு வழி என்ன? நாடாளுமன்றத்தை நடக்க விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கும்போது வேறு வழிதான் என்ன? நீட்டித்துதான் ஆக வேண்டும். அப்பொழுதாவது அவையை நடத்த விடுவார்களா? என்பதும் நியாயமான கேள்வியே!)

அத்துமீறல்

காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல்! ஒவ்வொரு நாளும் இதுபோன்ற செய்தி வெளிவந்து கொண்டு தானிருக்கிறது.

(சிறு துளி பெரு வெள்ளமாகி இந்தியா - பாகிஸ்தான் சண்டை என்று செய்தி வராமல் இருந்தால் சரி!)

மனிதநேயம்

வேலூரில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம் நுரையீரல் - 90 நிமிடத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு 2 பேர்களுக்குப் பொருத்தப்பட்டது.

(மனிநேயம் என்று இதற்குத்தான் பெயர். மண்ணுக்குள் புதைக்கப்படுவதைவிட, தீக்கு இரையாக்கப்படுவதைவிட செத்தும் உயிர் வாழக் கூடிய, இந்த மாந்தநேயம் பாராட்டப்பட வேண் டியது. பின்பற்றப்பட வேண்டியது ஆகும். திராவிடர் கழகம் உடற்கொடை இயக்கத்தையே நடத்துகிறதே!)

பட்டாசு

விருதுநகர் அருகே, முதலிப்பட்டியில் ஏற்பட்ட தீ விபத்தால், 4 பெண் தொழிலாளிகள் படுகாயம்.

(இதுபோன்ற சேதிகள் அவ்வப்பொழுது வருவதும், அந்த நேரத்தில் மட்டும் அரசு அதி காரிகள் சூடாக செயல்படுவதும், வாடிக்கையா கவே போய்விட்டது. ஏதாவது உருப்படியாக தொலைநோக்கோடு செய்யுங்கள் அய்யா! மக்களுக்குத் தேவையில்லாத, காசு பணத்தைக் கரியாக்கும், இதுபோன்ற தொழில்களுக்கு மாற் றாக, மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகளைத் தொடங்குவது பற்றி, அரசுகள் சிந்திக்கக் கூடாதா? சிங்கப்பூரில் பட்டாசு வெடிக்கக் கூடாது தெரியுமா?)

எந்தப் பொந்தில்?

முகவரி கேட்பது போல் நடித்து பெண்ணிடம் சங்கிலிப் பறிப்பு.

(எந்தப் பொந்தில் எந்தப் பாம்போ! பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய கால கட்டம் இது. எதற்கும் சட்டத்திற்கு உட்பட்ட பாதுகாப் புக் கருவியை வைத்துக் கொள்வது நல்லது).

தமிழ் ஓவியா said...


முயற்சிக்க வேண்டும்

தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையா வண்ணம் நடந்துகொள்ளவேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்கவேண்டும். - (விடுதலை, 20.3.1950)

தமிழ் ஓவியா said...


சிறுபான்மையினர் ஏமாளிகள் அல்லர்


டில்லியில் பிஜேபியின் தேசிய பிரச்சாரக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிஜேபியின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் பேசிய குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி, ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் சிறு பான்மையினரின் ஆதரவு தேவை என்று கூறியுள்ளார்.

இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை சிறுபான்மை மக்கள் 20 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள் கண்டிப்பாக பிஜேபி என்ற இந்துத்துவா கட்சிக்கு எதிர்ப்பாகத்தான் தேர்தலில் நடந்து கொள்வார்கள் என்பது புரிந்து கொள்ளப்படக் கூடியதுதான்.

பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகள், அது ஆட்சியிலிருக்கும் மாநிலங்களில் சிறுபான்மையி னருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை களை சிறுபான்மையினர் எளிதில் மறந்திட முடியாது.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள், ஒடிசா மாநிலத் தில் கிறித்தவர்களுக்கு எதிராக பிஜேபியினரும், சங்பரிவார்க் கும்பலும் நடத்திய வன்முறை வெறியாட்டங்களும் சிறுபான்மையினரை உறுதியான ஒரு முடிவுக்கு வரச் செய்திருப்பதில் ஆச்சரியம் இல்லை. பிஜேபி ஆட்சிக்கு வந்தால் தங்களின் வாழ்வாதாரத்துக்கு ஆபத்து என்பதை உணர்ந்து, தங்களின் வாக்குகள் சிதறப் படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டிய அவசியம் அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் தங்கள் மதத்தை இந்து மயமாக்கிக் கொள்ள வேண்டும்; சிறுபான்மையினர் தங்கள் கடவுள்களை மறந்துவிட்டு கிருஷ்ணனை யும், இராமனையும் வணங்க வேண்டும் என்று கூறு கிறவர்கள், எப்படி சிறுபான்மையினரின் வாக்கு களை எதிர் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை.

அதுவும் பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளர் என்று கூறும் நரேந்திர மோடியின் சிந்தனையும், செயல்பாடுகளும், ஆட்சி அதிகாரத்தைப் பயன் படுத்தி அவர் மேற்கொண்ட நரவேட்டையும், எளிதில் மறக்கப்படக் கூடியவையும் அல்ல. சிறுபான்மை மக்கள் மத்தியில் மட்டுமல்ல - உலகளாவிய அளவில் பெரும் அதிர்வுகளை அது ஏற்படுத்தி விட்டது.

குஜராத் கலவரத்தின் போது, அது பொடா சட்டத்தின் கீழ் 287 பேர் கைது செய்யப்பட்டனர் என்றால் அதில் 286 பேர் முசுலிம்கள், ஒருவர் சீக்கியர் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் மோடி ஆட்சியில் என்கிறபோது அவர் நோக்கு - போக்கு எத்தகையது என்பதற்கு எந்தவித ஆராய்ச்சியும் தேவைப்படாது.

குஜராத் கலவரத்தின்போது அகதிகள் முகாம் களில் சரணடைந்த முசுலிம்களை எவ்வளவுக் கேவலமாகக் கொச்சைப்படுத்தினார் முதல் அமைச்சர் மோடி!

முசுலிம்கள், முகாம்களை தங்கள் இனப் பெருக்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று பேசிடவில்லையா?

தேர்தல் நெருங்கும் நேரத்தில் சிறுபான்மையினர் வாக்குகளைப்பற்றி அவர்களுக்குப் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது என்பதைத்தான் மோடியின் கருத்து வெளிப்படுத்துகிறது.

கடந்த 2009 மக்களவைத் தேர்தலுக்குமுன் புதுடில்லியில் பிஜேபி சார்பில் பெண்கள் மாநாடு ஒன்று கூட்டப்பட்டதை (13.7.2008) நினைவில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம்களில் எத்தனை சதவீதம் பேர் எங்களுக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடு வோம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்போம் என்று எல்.கே. அத்வானி பேசினார்.

அப்பொழுது தேர்தலுக்கு முன்பு மேற்கொண்ட அதே உத்தியைத்தான் இந்தத் தேர்தலுக்கு முன்பும் பயன்படுத்திட எத்தனித்துள்ளனர்.

சிறுபான்மையினர் ஒன்றும் ஏமாளிகள் அல்லர். வரும் தேர்தலில் அவர்கள் பிளவுபடாமல் வாக்கு களைச் சிதறடித்துக் கொள்ளாமல் ஒன்றுபட்டு எழுந்து பிஜேபியையும் அதன் கூட்டாளிகளையும் வீழ்த்துவார்கள் என்பதில் அய்யமில்லை.

தமிழ் ஓவியா said...


தமிழ்ச்செல்வன், கோமதி ஆகியோரின் ஜாதிமறுப்பு - காதல் திருமணம்


தமிழர் தலைவர் நடத்தி வைத்துப் பாராட்டு

நெய்வேலி, ஆக. 27- தன.தமிழ்ச்செல்வன், குண.கோமதி போன்றோர் கழகத்தின் அசையும் சொத்துகள். அசையா சொத்து என்பது மானத் தையும், அறிவையும் சொல்லிக்கொடுத்த இலட்சிய சொத்து எனத் தமிழர் தலைவர் உரையாற்றினார். நெய்வேலியில் (ஆக. 23-ஆம் தேதி) நடைபெற்ற விருத்தாசலம் கழக மாவட்ட மாணவரணித் தலைவர் தன.தமிழ்ச்செல்வன் வாழ்க்கை இணை யேற்பு விழாவில் தமிழர் தலைவர் பேசியதாவது: மணமக்கள் தன.தமிழ்ச்செல்வன், குண.கோமதி ஆகியோர் இயக்கத்தின் வெற்றிகளை சுட்டி காட்டுகிற கொள்கை மலர்கள். அவர்கள் பூத்து, காய்த்துக் கனிவார்கள். அறிவாசன் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் மறைந்த நேரத்திலே அய்யா அவர்கள் விட்டுச்சென்ற சொத்து என்ன என்று கேட்டார்கள். அய்யா அவர்கள் விட்டுச் சென்ற சொத்து அசையும் சொத்து, அசையா சொத்து என்று தெரிவித்தேன். அதிலே, தமிழ்ச்செல்வன் போன்ற எண்ணற்ற இளைஞர்கள் கொள்கையிலே உறுதியாக இருந்து, அந்த கொள்கையை வாழ்க்கை முறையாகவும், பிறருக்கும் எடுத்துச் செல்பவர் களாகவும் உள்ளனர். இதுபோன்ற ஒப்பற்ற இளைஞர்கள் பெரியாரின் அசையும் சொத்துகள். அசையா சொத்து என்பது மானத்தையும், அறிவையும் சொல்லிக்கொடுத்த லட்சிய சொத்து. இதை யாராலும் பறிக்க முடியாது. தமிழ்ச்செல்வன் திருமணத்தை பொறுத்த வரையிலே இது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம். அதிலும், காதல் திருமணம் எனும் போது நாம் பெருமைப்படுகிறோம். சிக்கல் இல்லாமல், பெற்றோர் மற்றும் உறவினர் உள்ளிட்டோரின் ஒத்துழைப்போடு இந்தத் திருமணம் மகிழ்ச்சியுடன் நடைபெறுகிறது. காதல் திருமணங்களிலே சிக்கல் இல்லை. சிலர் சிக்கல் இருப்பதாகப் பேசி, அதை தங்கள் வளர்ச்சிக்காக ஏணிப்படிகாளக பயன் படுத்துகின்றனர். இந்த திருமணத்துக்கு வருகின்ற வழியிலே தாமதம் ஏற்பட்டது. அதுவும் கூட ஒரு வகையிலே கொள்கை பிரச்சாரம் தான். மனிதன் என்பதற்கு அடையாளமே சிரிப்புதான். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். ஆனால், இங்கே என்ன நிலை பொம்பள சிரித்தால் போச்சு, பொகையில விரிச்சா போச்சு என எழுதி வைத்தார்கள். மிருகங்களுக்குதான் சிரிக்கத் தெரியாது. ஆனால், பெண்கள் சிரிக்கக் கூடாது என மிருகங்களைவிட கேவலமாகப் பெண்களை நடத்தினார்கள். தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் தான் பெண்களை மனிதர்களாக்கியது. இன்று பெண்கள் வழக்குரைஞர்களாக, நீதிபதி களாக, மருத்துவர்களாக மாறியிருக்கிறார்கள். அந்த வகையில் மணமகள் கோமதி, தமிழ்ச்செல்வன் படித்திருக்கிறார்கள். ஆண், பெண் சமவாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். தமிழ்ச்செல்வன் நூறுக்கு, நூறுக்குமேல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். காரணம் ஜாதி மறுப்புத் திருமணம், காதல் திருமணம். மேடையிலே கருப்பு சட்டையோடு அமர்ந்திருக்கிறார். இதற்காக அவர்களது பெற்றோர்களை பாராட்டுகிறோம். தமிழ்ச்செல்வன் மணவிழா எல்லா வகையிலும் சிறப்பான விழா. இது மட்டுமல்ல, இந்தத் திருமணத்திலே தாலி இல்லை. திருமண அவசரத்திலே தாலிகட்ட மறந்தது போல என எழுதிவைத்தார்கள். ஆனால், எங்கள் தோ ழர்கள் தாலி கட்டுவதில்லை. தமிழர் திருமணத்திலே தாலி இல்லை. தாலி என்பது ஜாதியைப் பாதுகாக்க இடையிலே பார்ப்பனர்களால் புகுத்தப்பட்டது. இத்தகைய நிலையிலே தாலி இல்லாமல் திருமணம் நடந்தது பாரட்டத்தக்கது. இல்லறம் சிறக்க தொண் டறம் மிக முக்கியமானது. யார்யாரெல்லாம் நமக்கு உதவி செய்தார்களோ அவர்களுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும். பெற்றோர்களை மதிக்க வேண்டும். அவர் களிடத்திலே அன்பு, பாசம் ஆகியவற்றை செலுத்த வேண்டும். அதுவே நமது தலையாயக்கடமை. மணமக்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, புரிந்துணர்வுடன் வாழ வேண்டும். மூடநம்பிக்கை யற்ற வாழ்வு வாழ வேண்டும். சிக்கனமாக, எளிமை யாக, சிறப்பாக வாழ வேண்டும் எனப் பேசினார்.

தமிழ் ஓவியா said...


வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடும் கருணைத் திட்டம்!


உணவுப் பாதுகாப்புச் சட்டம்:

வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடும் கருணைத் திட்டம்!

தமிழர் தலைவர் வரவேற்பு

பெண்களைப் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்கின்ற கிருஷ்ணனுக்கு ஜெயந்தி கொண்டாடலாமா?

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்து நிறைவேற்றிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி என்ற காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்து, இரண்டாவது முறை யும் முழுமையாக அய்ந்தாண்டுகளைப் பூர்த்தி செய்யப் போகிறது. மத்தியில் அமைந்துள்ள ஆட்சியின் மகுடத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஒரு ஒளி முத்தாகத்தான் இந்த உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற ஒரு சட்டம் - ஏழை, எளியவர்களின் பசி தீர்க்கும் மனிதநேயச் சட்டமாக மக்களவையில் திருத்தங்கள் பலவற்றை எதிர்க்கட்சிகள் தந்த நிலையில், அவைகளில் முக்கியமானவைகளையும், அவசியமானவைகளையும் ஏற்று நிறைவேற்றியுள்ளனர்!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் திருமதி சோனியா காந்தியும், அவரது பொறுப்பாளர்களும் பாராட்டுதலுக்குரியவர்கள்.

கருணைச் சட்டம்!

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் செயல்பாடு கள் எல்லாமே நமக்குத் திருப்தி அளிக்கக் கூடியவை களோ, மன நிறைவைத் தருபவைகளாகவோ இல்லை என்ற போதிலும், விருப்பு - வெறுப்புகளை ஒதுக்கிவிட்டுப் பார்க்கும் நமது கண்ணோட்டத்தில் இச்சட்டம் மிகவும் பாராட்டி வரவேற்கவேண்டிய வாழும் மனிதர்க்கெல் லாம்வயிற்றுக்குச் சோறிடும்!

கருணைச் சட்டம்!

66 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பின்பும் வறுமை, ஏழ்மை போகவில்லை என்பதை அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டு, அதற்குப் பரிகாரமாக முடிந்த அளவுக்கு, 82 கோடி மக்கள் பயனடையும் திட்டம் இது!

அந்த ஏழை, எளியவர்களுக்கு கிலோ அரிசி மூன்று ரூபாய்க்கும், கோதுமை கிலோ ஒன்று இரண்டு ரூபாய்க்கும், தானியம் ஒரு ரூபாய்க்கும் இனி கிடைக்கும் வாய்ப்புகள் இச்சட்டம் மூலம், இந்தியா முழுவதும்; இதனை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் சிக்கல்களை அனுபவ ரீதியாகப் பார்த்து மேலும் சில திருத்தங்களைச் செய்வது இன்றியமையாததே!

மாநில உரிமைகள் பறிபோய்விடக் கூடாது!

தமிழ்நாடு போன்ற பல மாநிலங்கள் ஏற்கெனவே இலவச அரிசி வழங்கும் (PDS) பொது விநியோகத் திட்டத்தினைச் செயல்படுத்திவரும் நிலையில், அது பாதிக்கப்படாத பாதுகாப்பு இருப்பதும் அவசியமாகும்.

மாநில உரிமைகள் பறிபோகாமல் இதனைச் செயல் படுத்துதல் முக்கியமாகும்!

தி.மு.க. பொறுப்பான - ஆக்கபூர்வமான எதிர்க் கட்சியாக உள்ளது என்பதை உரிய திருத்தங்களைத் தந்ததன்மூலம் நிரூபித்துள்ளது. அவைகளில் பல ஏற்கப்பட்டு சட்டமாகி வரும் நிலையில், அதனை வரவேற்பதுதான் சரியான அணுகுமுறை; தி.மு.க. தலைவர் மானமிகு கலைஞர் அவர்கள் இதனை மிகவும் பாராட்டி, மக்கள் பசி போக்கும் மாபெரும் திட்டம் என்று வரவேற்றுள்ளார்கள்.

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் - அவர்கள் கூறிய அத்தனைக் கருத்துக்களும் அப்படியே ஏற்கப்படாவிட் டாலும்கூட, இதன் மனிதாபிமானக் குறிக்கோளை எண்ணி வரவேற்று ஆதரித்துள்ளனர்!

தேர்தல் கண்ணோட்டமா?

இது தேர்தல் கண்ணோட்டத்தில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்று சில அரசியல் கட்சிகளும், இந்த அரசின் செயல்பாடுகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதையே தமது புனித தார்மீகக் கடமையாகக் கொண்ட ஊடகங்களும் கூறுகின்றன; எழுதுகின்றன!

ஆளும் கட்சி - ஆட்சி 5 ஆண்டுகாலத்திற்குள், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தவறல்லவே!

அதுமட்டுமா? எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் - வாக்கு வங்கிக்கண்ணோட்டத்தைப் புறந்தள்ளி, தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கின் றனவா? இல்லையே!

எனவே, இதில் ஓட்டுக் கண் ணோட்டம் இருந்தாலும், தவறு இல்லை; நாட்டு மக்கள் கண்ணோட்டம் இருக்கிறதே! மறுக்க முடியுமா?

அடிப்படைத் தேவை பூர்த்தி - சிறையில்தானா?

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் - இம்மூன்றும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவை; இந்த சுதந்திர நாட்டில் இன்றும்கூட, வெளியில் இருக்கும் குடிமக்களுக்கு இவைகளுக்கு உத்தரவாதம் உண்டா? இல்லையே!

சிறைக்குப் போனால்தான் அங்கே இம்மூன்றுக்கும் உத்தரவாதம் உண்டு!

இதுதான் யதார்த்தமான நிலை. இதில் முக்கியமாக பசிக்குத்தான் முன்னுரிமை தரப்படல் வேண்டும்; பசி போக்கிடும் திட்டம் இது.

காலந்தாழ்ந்தாலும்...

பல்லாயிரக்கணக்கில் கோடி ரூபாய்கள் இதற்குச் செலவழிக்கப்பட்டாலும்கூட, காலந்தாழ்ந்தாவது (Better late than never) எத்தகைய மனச் சங்கடங்கள் - ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினை - தமிழக மீனவர்களை இலங்கை கொடுமைப்படுத்தும் நிலை - பெண்களுக் கெதிரான பாலியல் வன்முறை இருட்டுக்கிடையில் இது ஒரு ஆறுதல் வெளிச்சம்.

எனவே, வரவேற்கிறோம்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
28.8.2013

தமிழ் ஓவியா said...


நவநீதம்பிள்ளைக்கு எதிர்ப்பு ஏன்?


அய்.நா. மனித உரிமை ஆணையத்தின் இயக்குநர் அதிகாரபூர்வமாக, இலங்கைத் தீவு சென்று ஒரு வார கால சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவரது வருகையையும், சுற்றுப்பயணத்தையும் ஒழுங்குபடுத்தவேண்டிய பொறுப்பு - கடமை - பாது காப்பு - இலங்கை அரசுக்குக் கண்டிப்பாக இருக்கிறது.

ஆனால், இப்பொழுது அங்கு என்ன நடந்து கொண் டுள்ளது? புத்த பிக்குகள், அவரின் வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்திக் கொண்டுள் ளனர்.

கொழும்புவில் உள்ள அய்.நா. அலுவலகத்துக்குள் அத்துமீறி உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர். நவநீதம் பிள்ளையின் சுற்றுப் பயணம், இலங்கை நலனுக்கு எதிரானது என்பது அவர்களின் கருத்து. இது ஏதோ அங்குள்ள புத்த பிக்குகளின் நிலைப்பாடு என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டுவிடக்கூடாது. இலங்கை அரசின் - இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கருத்தும் அதுதான் என்பதை முதலில் புரிந்துகொண்டால் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் பதுங்கியுள்ள விஷமம் எத்தகையது என்பது எளிதில் விளங்கிவிடுமே!

அய்.நா. பிரதிநிதிகளையே இலங்கைக்குள் செல்லத் தடை செய்தவர்கள்தானே அவர்கள். பன்னாட்டுப் பத்திரி கையாளர்களை செய்தி சேகரிக்கச் செய்யவிடாமல் தடுத்தவர்களும் அவர்கள்தானே? உள்நாட்டிலும் எத்தனை எத்தனைப் பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்?

அதைவிடக் கொடுமை என்னவென்றால், ஜெனீவா வில் 2012 மார்ச் மாதத்தில் நடைபெற்ற அய்.நா. கூட்டத் தில் பங்கேற்க வந்த மக்கள் உரிமைக் கண்காணிப்பக இயக்குநர் ஹென்றி டிஃபேன் தெரிவித்தது என்ன?

இலங்கை விவகாரத்தைப் பேசுவதற்காக ஒரு தனி அமர்வு இருந்தது. இலங்கையிலிருந்து வந்த மனித உரிமையாளர்கள் சுனிலா, நிமல்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் இலங்கையில் இறுதிக்கட்டப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசினார்கள்; அமர்வுக்கு நேரில் வர முடியாத சரவணமுத்து என்பவர் ஸ்கைப்மூலம் பேசினார். அதே சமயம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக் கோரி அய்ரோப் பாவைச் சேர்ந்த தமிழ்ச் சமுதாயத்தினர் சுமார் 500 பேர் மாநாட்டு அரங்குக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசும் அங்கே தனியே ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்தது. இதற்காக இலங்கையிலிருந்து 126 பேர்களை அவர்களே அழைத்து வந்தார்கள். அவர் களைத் தவிர, அடியாட்களையும் அனுப்பி வைத்திருந்தது இலங்கை அரசு. அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தமிழ் ஆர்வலர்கள், அந்த அடியாட்களால் அடித்து விரட்டப்பட்ட சம்பவங்களும் நடந்தன. இலங்கைக்கான ஜெனீவா தூதர் தலையிட்ட பிறகே தாக்குதல் நிறுத்தப் பட்டது. அமர்வு தொடங்கியதுமே அய்.நா.வுக்கான மனித உரிமைக் கவுன்சிலின் தலைவர் நவநீதம் பிள்ளை நேற்று நடந்த சம்பவங்கள் அய்.நா. மன்றத்தையே அவமதிக்கக் கூடியது. அதற்காக உங்களிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று சொல்லவில்லையா?

அந்த நவநீதம்பிள்ளை இப்பொழுது இலங்கை சென்று நேரடியாகப் பிரச்சினைகளை, இலங்கைத் தீவின் பிரத்தியட்ச நிலைமைகளைக் கண்டாய்ந்து நடக்க இருக்கும் மனித உரிமைக் கூட்டத்தில் அறிக்கை அளிக்கக் கடமைப்பட்டுள்ளார். அவரை வரக்கூடாது என்பதோ, அவர் பணிகளைத் தடுப்பதோ எந்த வகையில் சரி?

இதற்காகவே கூட இலங்கை அரசு க(த)ண்டிக்கப் படவேண்டாமா?

2013 பிப்ரவரி 11 ஆம் தேதி மனித உரிமை மன்றக் கூட்டத்தில் மனித உரிமைக் குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை அளித்த அறிக்கை மிகவும் முக்கியமானது.

இலங்கையில் போர் நடந்த நேரத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் காணாமல் போய் உள்ளனர். அவர்களை மீட்கும் பணியை இலங்கை அரசு அறவே செய்யவில்லை. போர் முடிந்த பிறகும் ஆள் கடத்தல் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. தமிழர்கள் வாழும் பகுதிகளில் இன்னும் இராணுவக் கட்டுப்பாடுதான் இருந்து வரு கிறது. இராணுவம் ஏன் வெளியேற்றப்படவில்லை? இராணுவத்தால் தமிழ்ப் பெண்கள் பாலியல் துன்பத் துக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை அரசே நியமித்துக் கொண்ட எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளில் ஒரு சில மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்றெல்லாம் மனித

உரிமை ஆணையர் நவநீதம்பிள்ளை அறிக்கையில் காணப்பட்டன.
அடுத்து ஜெனீவாவில் நடக்க இருக்கும் மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கை சென்று நேரிடையாக ஆய்வு செய்யும் நவநீதம்பிள்ளை, உண்மை நிலைகளை விரிவாக எடுத்துச் சொல்லி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக புத்த பிக்குகளை இலங்கை அரசே தூண்டி விடுகிறது என்பதுதான் உண்மையான நிலை.

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீக்வான்யூ சொன்னதுபோல, ராஜபக்சே திருத்தப்படவே முடியாத ஜென்மம்.

நடக்க இருக்கும் ஜெனீவா கூட்டத்தில் வழவழா கொழகொழா முடிவுகளை எடுக்காமல், இலங்கை அதிபரை கூண்டிலேற்றும் வைபவத்திற்குக் கால்கோள் விழா நடத்துவது அவசியமாகும்.

தமிழ் ஓவியா said...


மூட மக்கள்



ஒவ்வொருவனும் தன்னை அன்னியன், கீழ்ச் சாதி என்று கூப்பிடுவதைச் சகித்துக் கொண்டுதான் மற்றவனைக் கீழ்ச்சாதி என்று கூப்பிடுவதில் திருப்தியும், பெருமையும் அடைகிறான். அதுதான் மூட மக்கள் என்பதற்கு அடையாளம்.
(விடுதலை, 24.9.1950)

தமிழ் ஓவியா said...


வேண்டாம் இரட்டை வேடம்


ஆசிரியருக்குக் கடிதம்

வேண்டாம் இரட்டை வேடம்

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்!

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் மாதத்தில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியும், பெரியார் இறந்த டிசம்பர் மாதத்தில் அல்லோலப்படும் அய்யப்பா பக்தியும் தற்செயல் நிகழ்வுகள் அல்ல, எங்கு திரும்பினும் ஆரவாரம், பஜனை சத்தம், பக்திப் பரவசம் என்று மக்களைத் திசை திருப்பும் திருவிழாக்கள் இவை.

அதுபோல் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்ற பெரும் பகுத்தறிவாளர் களின் பெயர்களை ஊர்களுக்கும், நகர் களுக்கும் வைத்துக்கொண்டு, பகுத்தறி வுக்கு ஒவ்வாத செயல்பாடுகளை ஆண்டு தோறும் நிலைப்படுத்தி வருகிறார்கள். ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது, தீ மிதிப்பது, அலகு குத்தி தேர் இழுத்தல், கோழி, ஆடு வெட்டுதல், பொங்கல் வைப்பது, மொட்டை அடித்தல் போன்ற மூடப் பழக்க வழக்கத்திற்கு ஆளாகி பகுத்தறிவுக்கு முர ணாக இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் பின் பற்றுகிறார்கள் என்றால் என்னவென்று சொல்வது?

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத் கரும் வரலாறு பேசும் சிறப்புப் புரட்சியாளர் கள். மதப் பண்டிகைகளைக் கொண்டாடும் நோக்கமே, ஜாதியை நினைவுப்படுத்தத்தான் என்றும். சுதந்திர நாட்டில் ஜாதிகள் இருக்க லாமா? அப்படி இருக்கும் நாடு சுதந்திர நாடா? என்று தந்தை பெரியார் கேட்டாரே!

நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன் ஆனால் சாகும்போது இந்துவாக சாக மாட் டேன் என்று சபதம் எடுத்து பவுத்தம் தழுவி வரலாற்றில் தமது எதிர்ப்பைப் பதிவு செய் தாரே, புரட்சியாளர் அம்பேத்கர், இதை யெல்லாம் உணர்ந்து மக்கள் செயல்பட்டால் பெரியாருக்கும், அம்பேத்கருக்கும் செய்யும் நன்றி ஆகும். அதை விட்டு மாறாக மதப் பண்டிகைகளையும், மதம் சார்ந்த ஜாதி களையும் கடைப்பிடித்தால் அவர்களுக்கு நீங்கள் செய்யும் துரோகமே தவிர, வேறென்ன?

அம்பேத்கருக்கும், பெரியாருக்கும், அண் ணாவுக்கும், கலைஞருக்கும் பிறந்த நாள், அந்தந்த இயக்கத்தின்பால் கொண்டாடப் படும் விழாவை எண்ணிப்பாருங்கள். மதப் பண்டிகைகளை கொண்டாடுபவர்களும், ஜாதியை நிலைப்படுத்துகிறவர்களும்தான் மேற்சொன்ன தலைவர்களுக்கு விழா எடுக்கிறார்கள், சிந்தித்துப்பாருங்கள் எதற்கு இந்த இரட்டை வேடம்?

தந்தை பெரியாரால் வாழ்கிறோம், புரட்சியாளர், அம்பேத்கரால் வாழ்கிறோம். அவர்கள் காட்டிய பகுத்தறிவுப் பாதையில் சென்று அவர்களுக்கு நாடெங்கும் சிலை கள் வைத்து நகர்களுக்கு பெயர் வைத்து பெருமை பேசுவோம்! புகழ்பாடுவோம்! அதை விட்டு, போட்டி போட்டுக்கொண்டு செய்யும் மதப்பண்டிகைகளால் கண்ட பலன் என்ன? எண்ணிப்பாருங்கள். உங்களுக்காகப் பாடுபட்ட தலைவர்களின் விழாவை சிறப் பாகச் செய்யுங்கள் உன்னை இழிவுப்படுத் தியும், கேவலமாகவும், மனித குலத்தில் வைத்திருக்கும் கடவுளுக்கு விழா எடுத்ததில் உனக்கு பெருமை சேரும் என்றால், தயவு செய்து தலைவர்களின் பெயர்களை எடுத்து விட்டு உங்கள் விருப்பமான தெய்வங்களின் பெயர்களை வைத்துக் கொண்டு கொண் டாடுங்கள் என் போன்ற பகுத்தறிவாளர் களுக்கு எந்த வித ஆட்சேபனையும் இல்லை தோழர்களே!

உணருங்கள்! செயல்படுங்கள்!!

குறிப்பு:

1) தலையில் தேங்காய் உடைப்பது.
2) குழந்தையை தோளில் உட்கார வைத்து தீ மிதித்தல்
3) மண்ணைத் தோண்டி உயிரோடு புதைப்பது
4) சாட்டையால் அடிப்பது
5) குழந்தைகளை நரபலி கொடுப்பது

போன்ற உயிருக்கு ஆபத்தான முட்டாள் தனமான செயல்களை செய்வதால் இது வரை உங்களுக்கு என்ன பயன் கிடைத்தது என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா?

இப்படியெல்லாம் செய்யச் சொல்லி தூண்டி விடுபவனை, செய்யச் சொல்லுங் களேன் பார்க்கலாம்?

உங்களுக்கு பகுத்தறிவு இருக்கிறது அதைச் சரியாக உபயோகித்து இது போன்ற முட்டாள்தனத்தையும், மூட நம்பிக்கையையும் கைவிடுங்கள் தோழர்களே!

நன்றி!

நாத்திகர்களைவிட மதவாதிகளின் அறிவு குறைவானதே!

ராச் செஸ்டர் பல்கலைக்கழகம் - ஆய்வு - முடிவு
(தலைப்பு செய்தி - விடுதலை, 14.8.2013)

- ச.இரணியன்
(பகுத்தறிவாளர் கழகம், திருமுல்லைவாயில்)