Search This Blog

5.1.13

தமிழிசை எப்படி இருக்கவேண்டும்? - தந்தை பெரியார்


    தமிழிசைக்கு கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள். பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது.
    இசை விருந்தளிக்கும், செல்வவான்களும் நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை இந்த உணர்ச்சி வலுத்துக் கொண்டே போகும்.

    இனி என்ன செய்ய வேண்டும்?
    தமிழிசை நமது நல்வாழ்வுக்குப் பயன்படும்படி செய்ய வேண்டியது நமது கடமை. இன்று இதுவரை தமிழில்லாத வேறு மொழியில் இருந்த இசை (பாட்டுகள்) தமிழில் பாட வேண்டியதாக ஏற்பட்டதற்குக் காரணம் நமக்குத் தமிழினிடம் ஏற்பட்ட உணர்ச்சியேயாகும். இது ஒரு பெரிய மாறுதல்தான்.
    இசை, நடிப்பு ஆகியவை எதற்கு பயன்படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அவை மனதில் பதியவைப்பதற்கும் அவை வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனத்திற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன. அடுத்தபடியாக இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி இருந்து வருகின்றது. ஆகவே இசைக்கும், நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால் நுகர்வோரும் இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலை இல்லாமல் நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்திற்கும் அதை சாக்காக வைத்து நுகர்வதாலும், இசைத்து நடிப்போர்கள் பொருளுக்கும் வேறு சுயநலத்துக்கும் பயன்படுத்துவ தாலும் அதற்கு உண்டான பயன் ஏற்படாமல் போய் விடுகிறது.
    நம் நாடும் நாமும் எவ்வளவோ குறைபாடுகள் உடையவர்களாக இருக்கிறோம். அக்குறைபாடுகள் ஒழிக்கப்படுவதற்கு எவ்வளவோ முயற்சிகள் செய்கிறோம். இம்முயற்சியின் மூலம் எவ்வளவோ கஷ்ட நஷ்டங்கள் அனுபவித்து வருகிறோம். இவற்றை யாராலும் மறுக்க முடியாது. அப்படியிருக்க நம்முடைய கலைகள், நாம் அனுபவிக்கும் நுகரும் சாதனங்கள், இன்பத் தன்மைகள் ஆகியவை எப்படியிருக்க வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால கஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள் கூட நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத்தக்க தாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது அறிவுடைய மக்களின் தலையாய பண்பாகும். அவற்றில் நமக்குப் போதிய கவலை இல்லாத தாலேயே நம் நலத்துக்கு மாறான சேதிகளும் உணர்ச்சிகளும் கொண்ட காரியங்கள் வளர்ந்துவர ஏற்பட்டு விட்டதுடன் இவைகளையே பொருள் கொடுத்தும் காலத்தையும், ஊக்கத்தையும் செலவழித்தும் நுகர்ந்து அறிவும், மானமும் கேட்டு, முற்போக்கும் தடையுற்று கீழ்நிலைக்கு வர வேண்டியவர்களாவோம்.
    ***
    நண்பர்களே, சிந்தித்துப் பாருங்கள். நாட்டிலுள்ள நல்ல, உயர்தர இசைவாணர்களுக்குப் பொருள் தந்து வரவழைத்து ஒருகாலைத்தூக்கி ஆடிக் கொண்டிருக்கும் நடராஜ உருவத்தின் முன் தீபதூப நைவேத்தியத்துடன் உட்கார வைத்து, பல ஆயிரக்கணக்காக மக்களை வரவழைத்துப் பஜனை பாட்டுகள் பாடச் செய்வதும், அதன் மூலம் மக்களுக்கு பக்தி புகட்டுவதும் தானா? இது யார் செய்ய வேண்டிய காரியம்? எதற்கு ஆகச் செய்ய வேண்டிய காரியம்? இதனால் ஏற்படும் பலன் யாருக்கு நலனைத் தரும்? நிலை குலைந்து, இழிவடைந்து தரித்திரர்களாய், மடையர்களாய், கீழ் மக்களாய், மக்களுக்கு என்ன பலனைத் தரும்? அவர்கள் குறையைப் போக்கிக் கொள்ள ஏதாவது உணர்ச்சி ஏற்படுமா? அல்லது முயற்சியை நடக்குமா? மறுமுறையும் சிந்தித்துப் பாருங்கள். இதில் பொருளாதார ஞானம் இருக்கிறதா என்று பஜனைப் பாட்டுகள் தமிழில் இருந்தால் என்ன, தெலுங்கில் இருந்தால் என்ன, இந்தியில் இருந்தால் என்ன, அல்லது ஜப்பான், ஜெர்மனி, பாஷையில் இருந்தால்தான் என்ன? கடவுளுக்கு எந்தப் பாஷை தெரியாது?
    நாட்டினுடைய செல்வம், அறிவு, ஊக்கம், உணர்ச்சி இந்தப் பஜனைக்காகவா இப்படி செலவழிக்கப்பட வேண்டும்? இதைக் காணும் அயலான் எவனாவது இந்த நாட்டு மக்களுக்குத் தன்மான உணர்ச்சியோ, இழிவையும், கீழ்மை-யையும் கண்டு உடல் துடிக்கும் சொரணையோ இருக்கிறது என்று கருத முடியுமா? நாட்டு மக்களுக்கு இதில் பிரவேசித்து இந்தத் தன்மானத்துக்குக் கேடு செய்யும் தன்மைப்பற்றி சிந்திக்கவோ, விளக்கவோ, தடுக்கவோ, உரிமை இல்லையா என்று கேட்கிறேன்.
    தமிழிசைக் கிளர்ச்சிக்குச் செலவாகும் பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும் பார்த்தால் அதன் பயன் இந்த பஜனையில் முடிவதானால் மானமும் அறிவும் உள்ள எவனுக்குத்தான் வயிறு எறியாது என்று கேட்கிறேன்.
                     -------------------(பெரியார் அவர்கள் சிதம்பரம் அண்ணா-மலைப் பல்கலைக்கழகம், சேலம் சென்ட்ரல் தியேட்டர் அருகில் சென்னை நீதிக்கட்சி மாநாடு, திருச்சி பொதுக்கூட்டம் ஆகியவற்றில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. ஆற்றிய உரை) குடிஅரசு - சொற்பொழிவு - 26.2.1944
                                         ***********************************
    இசை (சங்கீத)க் கலைக்கு மொழி முக்கியமில்லை. குரல் இனிமை, ஒலி இனிமை, தாள இனிமை தான் முக்கியமானது. மொழி இனிமை முக்கியமல்ல என்று இருக்குமேயானால், நமக்கு இந்த இசைக் கலை வளர்ச்சி முயற்சியில் இன்று கலந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என்று சொல்லலாம். அப்படிக்கில்லாமல் மொழி இனிமையை முக்கியமாய் நாம் சொல்லும் போது அம்மொழிக்கு பொருள் வேண்டாமா? அப்பொருளுக்கு பலன் வேண்டாமா? அப்பலன் கிளர்ச்சியின் குறிக்கோளுக்கு ஏற்றதாக, நலந்தரத்தக்கதாக இருக்க வேண்டாமா? என்பதை யோசித்துப் பார்க்க வேண்டுமாய் வாசகர்களை வேண்டுகிறோம்.
    உதாரணமாக சென்னைத் தமிழ் இசை மாநாட்டில் இசைவாணர் தியாகராஜ பாகவதர் பாடினார். அவற்றுள் மாதிரிக்கு இரண்டு பாட்டுகளின் தன்மையைப் பாருங்கள்.
    ஒரு பாட்டு:
    (ராகம்: ஷண்முகப்பிரியா)
    பல்லவி
    பார்வதி நாயகனே பரமசிவா
    கருணாகர சம்போ
    அனுபல்லவி
    சர்வ பௌமனே சங்கரனே
    கைலாசவாசனேசந்திரசேகரா
    என்பதாகும்,
    மற்றொரு பாட்டு.
    (ராகம்: லதாங்கி)
    பல்லவி
    ஸ்ரீஜகதாம்பிகையே தீனதயாபரி சங்கரி
    அனுபல்லவி
    ஒ ஜனநி நீயே அபயம்
    சாணுன் உபய சரணம் என்பதாகும்.
    இப்படியே தான் அங்கு நடந்த 100க்கு 97 பாட்டுகளும் இருந்தன. இந்தப் பாட்டுகளை தெலுங்கிலோ, சமஸ்கிருதத்திலோ, இந்தியிலோ, அல்லது ஜப்பான், ஜெர்மனி மொழியிலோ பாடி, இருந்தால் என்ன குடிமுழுகிப் போய் இருக்கும்.
    இந்த மாதிரி பாட்டுகள் பாடச் செய்வதற்கு ஆகவா இருகோடீஸ்வரர்கள் கூடி, உலகத்தைத் திரட்டி பல பதினாயிரக்கணக்கான ரூபாய்கள், பல அறிஞர்களின் அருமையான நேரங்கள், ஊக்கங்கள், செலவழித்து என்றும் கண்டிராத ஓர் உயர்ந்த திருவிழா இராப்பத்து பகல் பத்து போல் நடத்துவது என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.
    இதுதான் தமிழிசைக் கிளர்ச்சி என்றால் இதற்கு (ஐகோர்ட் ஜட்ஜுகள் முதல்) இத்தனை பெரியவர்கள் விரோதம் தான் இப்பெரியார்களுக்கும் தமிழ் இசை கிளர்ச்சி இயக்கத்திற்கும் எதற்கு ஏற்பட வேண்டும் என்று யோசித்தால் இது ஒரு பைத்தியக்காரத்தனமான வேலை என்றே தோன்றும்.

    ***
    ஆரியப் புராணங்களில் அதேகம் முத்தமிழ் கலை இலக்கியம் ஆகியவைகளுக்குள் புகுந்து நமக்குச் செய்திருக்கும் கேட்டை ஒழிக்க.. மானத்தில் கவலையுள்ள நாம் எதை பலி கொடுத்தாவது இந்த நிலையை மாற்றியாக வேண்டும்; அடியோடு ஒழித்தும் ஆக வேண்டும்.
    ஏனெனில், இப்படிப்பட்ட முன்னேற்றமான காலத்திலும்கூட தமிழர்கள் மனிதத்தன்மை பெறாததற்கும், அதைப்பற்றி சரியான கவலை கொள்ளாததற்கும் இந்தப் புராண இதிகாச கதைகளின் உண்மை அறியாத மூடநம்பிக்கையே முதற் காரணம்.
    இந்த மூடநம்பிக்கைகளே தான் தமிழர்களாகிய நமக்கு மதமாகவும், பக்தியாகவும், கடவுளாகவும் இருப்பதோடு மாத்திரமல்லாமல், இவைகளே கலையாகவும், நாடகமாகவும், சங்கீதமாகவும், சினிமாவாகவும், இலக்கியங் களாகவும், மக்களை மேன்மையாகவும், கீழ்மையாகவும் கருதவும், வாழ்க்கை நடப்பதற்கு நீதியாகவும், உபமான உபமேயமாக எடுத்துச் சொல்லுவதற்கு ஆதாரமாகவும் இருக்கின்றன.
    அன்றியும் அறிவாளிகள், கவிகள், பண்டிதர்கள், மேதாவிகள், மகாத்மாக்கள், மகான்கள் என்பவர்-களுக்கும் அவர்களது வாழ்வுக்கும், மேன்மைக்கும், விளம்பரத்துக்கும் மூலப் பொருள் பொக்கிஷங்-களாய் இவைகளே இருக்கின்றன.
    ஆதலால் மொழி, சமுதாயம் ஆகிய துறை-களிலும், அறிவு, கலை, இலக்கியம், சமயம் முதலாகிய துறைகளிலும், நம் மக்களுக்கு இன்று இருந்துவரும் இழிவுகள் ஒழிந்து மேன்மைகள் ஏற்பட வேண்டும் என்று உண்மையாய் கருது-கிறவர்கள் இதுபோன்ற பெருத்ததொரு புரட்சிகரமான முயற்சிகள் செய்ய வேண்டும்.
    சமநிலை அடைய வேண்டுமானால்
    உண்மையாகச் சொல்லுகிறேன், வடமொழி சாஸ்திர புராண இதிகாசங்கள் (தமிழர்களாலேயே ஆனவைகளானாலும்) அவை எந்த ரூபத்தில் நுழைக்கப்பட்டு இருந்தாலும், அல்லது தானாகவே நுழைந்திருந்தாலும் அவை அடியோடு ஒழிக்கப்பட்டால் ஒழிய, தமிழன் மனித உரிமையோடும் மானத்தோடும் வாழ்ந்து சமநிலை அடைய முடியவே முடியாது என்பதை உணருங்கள்.
    ... மற்றும், அவைகள் வடமொழியில் இருப்பதைவிட தமிழில் இருப்பவைகளே நமக்கு மிகுதியும் கேடு செய்யக் கூடியவையாகும். அன்றியும் அவை வெறும் கதை, காவியம் புராணம் ஆகிய உருவில் இருப்பவைகளைவிட கலை உருவில் இருப்பதும்; இலக்கியம், நாடகம், சங்கீதம் ஆகியவற்றின் உருவில் இருப்பதும் மிக மிகக் கேடு செய்பவையாகும் என்பதே எனது அறிவுக்கு ஆராய்ச்சிக்கும் எட்டிய முடிந்த முடிவாகும்.
    ...... எப்படியாவது அந்தப் புராண, இதிகாச, தேவார, பிரபந்தம் ஆகியவை கூறும் இராமன், கிருஷ்ணன், சிவன், சுப்பிரமணியன், ஷண்முகன், காளி, கவுரி முதலிய கடவுள்களையும் அவர்களைப்பற்றிய கலை, இலக்கியம், நாடகம், சினிமா, சங்கீதம், பஜனைப் பாட்டுகள் முதலானவைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டியதே நமது முக்கியமும் முதன்மையும் ஆன கடமையாகும் என்று உறுதி கொள்ளுங்கள்.
    இந்தக் காரியங்களில் சமய, புராண, இதிகாச பண்டிதர்களையும் சமயாச்சாரிகளையும், கலை வாணர்களையும் துச்சமாகக் கருதுங்கள்.
    உங்கள் மனோவேகம் கொண்ட மட்டும் அவர்களை வெறுத்துத் தள்ளுங்கள்.
    இவர்களை, ஆரியர்களைவிட மோசமான உங்கள் விரோதிகளாகக் கருதுங்கள்.
                  -----------------------தந்தை பெரியார் "குடிஅரசு "- தலையங்கம் - 29.1.1944


    71 comments:

    தமிழ் ஓவியா said...


    ஆர்.எஸ்.எஸ். தலைவரின் அபத்தக் கூற்று எங்கும் இந்துமதப் பிரச்சாரம் தானா?

    - ஊசி மிளகாய்

    டில்லியில் ஒரு பேருந்துப் பயணத்தின் போது ஓர் இரவில் மருத்துவ மாணவி ஒருவர்மீது காட்டுமிராண்டித்தனமான வல்லுறவு, வன்புணர்ச்சி, கோரத் தாக்கு தலுக்கு ஆளாகி உயிர் விட்டதனால் வெடித்த எரிமலை - நீண்ட உறக்கத்தில் இருந்த சட்டத்தையும், அதனை நிர்வகிக்கும் ஆட்சியாளரையும் ஒரு உலுக்கு உலுக்கியதுடன், சிந்திக்கவும் செய்து விரைந்து செயலாற்றவும் வைத்துள்ளது!

    மகளிர் எழுச்சி என்ற வெள்ளி முளைக்கத் தொடங்கியுள்ளது. ஆணாதிக்க மனப் பான்மை இப்போது சற்று தணிந்து குனிந்து நிற்கிறது! எனினும் பழைய ஹிந்துத்துவ வாதிகளும், பெண்ணடிமை சுகத்தில் ஜீவிக் கும் மதவாத சக்திகளும், அயர்ந்துவிடாமல், பிரச்சினையைத் திசை திருப்பச் செய் கின்றனர்!

    பா.ஜ.க. என்ற பிரதான அரசியல் எதிர்க்கட்சியின் மூக்கணாங் கயிற்றைப் பிடித்து நடத்தும் வல்லமையாளர்களான ஆர்.எஸ்.எஸ். என்ற சங்பரிவாரத் தலைவர் மோகன்பகத் - என்பவர் ஒரு அரிய கண்டுபிடிப்பைக் (?) கண்டுள்ளார்!

    இந்தியாவில்தான் இப்படி பலாத்கார கற்பழிப்புகள் நடைபெறுகின்றனவாம்; பாரதத் தில் நடைபெறுவது இல்லையாம்!

    அதாவது பெரு நகரங்களில் அவரது கண்ணோட்டத்தில் இந்தியா என்பது நகரங்களாம்; பாரதம் என்பது கிராமங் களாம்! என்னே நேர்த்தியான இலக்கிய நயம் ஜொலிக்கும் வார்த்தை ஜாலம்!

    இந்தியாவிலேயே அரசியல் சட்டம் இயற்றும்போது, பாரதம் என்றே குறிப்பிட வைக்க இந்துத்துவவாதிகள் முயன்றனர் முடியவில்லை., வழமையான சமரசம் காரண மாக இந்திய அரசியல் முதல் சட்டப் பிரிவே

    ‘‘India - that is Bharat - shall be a union of states” என்றே துவங்கும்படி வார்த்தை களைப் போட ஒப்புக் கொள்ளப்பட்டது!

    அதன்படி நகரம் - இந்தியா, கிராமம் - பாரதம் என்று பிரிக்க முடியாது! என்றாலும் இந்து ராஷ்டிர திருமேனிகளுக்கு இதுபற்றிக் கவலை இல்லை.

    விஷயத்திற்கு வருவோம்; நகரங்களில் தான் பாலியல் வன்கொடுமை; கிராமங்களில் கிடையாதா? ஹரியானாவில், மற்ற பகுதி களில் எத்தனை எத்தனை சம்பவங்கள் - கிராமங்களில்.

    தமிழ்நாட்டில்கூட பல கிராமங்களில், டில்லி நிகழ்வுக்குப் பின்னர்!

    வடக்கே கிராமங்களில் கட்டப் பஞ் சாயத்து, காப் பஞ்சாயத்து (Khap Panchayat) என்ற ஒன்றை வைத்துள்ளனர். குற்றங்களே பதிவாகாமல் தடுத்து, போட்டி நாட்டாண்மை பஞ்சாயத்து நடத்தி முடித்து விடுவது; சினிமா பாணியில் அவனையே அவன் ஏற்கெனவே திருமணமான ஒழுங்கங் கெட்டவன், குடிகாரன் ஆனாலும் கற்பு - மதப் பழக்கத்தைக் காப்பாற்ற பெண்ணை ஆணின் தனிவுடைமையாக்கியே பதி விரதா தன்மையைக் காப்பாற்றிட அவனுக்கே கட்டி வைப்பார்கள்; தர்ம நியாயம் இப்படி முடிந்து விடுகின்றன!

    தமிழ் ஓவியா said...


    கரும்புக்கொல்லை, கோதுமை வயல்வெளிகள், முந்திரித் தோப்புகள், வன்புணர்ச்சிக்குப் பின் வன்முறையில் கொலைகள், ஏரி, குளங்கள், கிணறுகளில் பிணத்தைப் போடுதல் - அல்லது மலைப் பள்ளங்களில் தள்ளி விட்டு, தகவலே யாருக்கும் கிடைக்காமல் செய்து விடுவது போன்ற பல நிகழ்வுகள் அதிகமாக கிராமங் களில் தான் என்பது யாருக்குத்தான் தெரியாது! ஊருக்கு, உலகுக்குத் தெரிந்தது ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு - பாரத மாதா புதல்வருக்குத் தெரியவில்லை போலும்!

    பெண்கள் சம்பந்தப்பட்ட பல குற்றச் சாற்றுகள் பதிவாகாதிருக்கலாம்; அவர் களின், பெற்றோர் அதை மூடி மறைத்து குடும்பக் கவுரவத்தைக் காப்பாற்றுகிறார் களாம். இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தியா பாரதம் கண்ணோட் டம் அசல் கேலி கூத்தே தவிர, ஒரு போதும் உண்மையாகாது! (புள்ளி விவரம் தனியே காண்க)

    ####

    அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளியினர் அமெரிக்க குடி உரிமை யாளர்களில் சிலர் இம்முறை மாநில ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்களை நிறுத்தி வென்றுள்ளார்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள் என்றாலும்கூட அவர்கள் தங்கள் பூர்வ நாடான இந்தி யாவின் மதச் சார்பின்மை - செக்யூரி லசத்தை - ஜனநாயகத்தை வற்புறுத்திடும் வாய்ப்பைக் கை விட்டு விட்டு, ஹிந்துத்துவா உணர்வுடன் - தெரிந்தோ, தெரியாமலோ நடந்திருப்பது வேதனைக்குரியது; வெட்கப் பட வேண்டிய ஒன்றும் ஆகும்!

    துளிசி கப்பார்டு என்ற அம்மையார் ஹவாய்த் தீவு (இதுவும் ஒரு மாநிலம் அமெ ரிக்க அய்க்கிய நாட்டில்) பிரதிநிதியாகச் சென்றுள்ளார்!
    அவர் பகவத் கீதை நூலின்மீது பிரமாணம் எடுத்துள்ளாராம்!

    அந்த அம்மையார் எம்.பி.க்கு, பகவத் கீதையின் உள்ளே உள்ள சுலோகங்கள் ஏதும் தெரிந்திருக்காது. சும்மா அதுபற்றி பலரும் சிலாகித்துச் சொல்வதையே வைத்து - இப்படி ஒரு முடிவுக்கு அந்த அம்மையார் எம்.பி. வந்திருக்கக் கூடும்.

    1. கீதை ஒரு இந்துத்வா நூல்

    2. கீதை - பெண்களை மிகவும் இழிவு படுத்தி அவர்கள் பாவயோனிகள் என்று வர்ணிக்கும் மத நூல்.

    3. கீதை - ஜாதி- வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் மனிதகுல பிரிவினை நூல் Discriminatary Preaching Hatecult Book

    4. கீதை ஒரு வன்முறை - கொலை வெறி தூண்டும் நூல் - தேசப் பிதா என்று கூறப்படும் காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சே தனது வாக்குமூலத்தில் கீதையைப் படித்தே அந்த முடிவு எடுத்ததாக எழுத்து மூலம் கூறி - பதிவாகியுள்ள கொலைவெறி தூண்டக் கூடிய நூல்; இதுபுரியாமல் அங்கேயும் இப்படி சொல்லலாமா?

    இந்தியா இந்துமத நாடல்ல; பன் மதங்கள், பல மொழிகள்; பல கலாச்சாரங் கள், பல வாழ்க்கை முறைகள் - மதம் சாராத பகுத்தறிவு மனிதநேயர்கள், சுதந்திரச் சிந்தனையாளர்களைக் கொண்ட ஒரு நாடு என்பது உலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட வேண்டியது இந்திய வம்சாவளி (NRI) மக்கள் கடமையே தவிர, ஆரிய, சனாதன பார்ப்பன மதத்தின் தூதுவர்களாக, அவை களைப் பரப்பிடும் முகவர்களாக, மாறிவிடக் கூடாது!

    தமிழ் ஓவியா said...


    கல்வி நிறுவனங்கள் காலை 7.30 மணிக்குத் தொடங்குவது வரவேற்கத்தக்கதே!


    போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம்

    வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

    தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

    போக்குவரத்து நெரிசல் குறைந்து பத்திரமாகப் பயணம் செய்யலாம் வெளிநாடுகளில், வடமாநிலங்களிலும் இம்முறை பின்பற்றப்படுகிறதே!

    கல்வி நிறுவனங்கள் தொடங்கப்படும் நேரத்தை காலை 7.30 மணிக்கு மாற்றி அமைத்தால் போக்குவரத்து நெரிசல் குறையும் பத்திரமாகவும் மாணவர்கள் பயணம் செய்யலாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை:

    பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவர்களது கல்வி நிலையங்களுக்குச் செல்வதற்கு அவசர அவசரமாக பேருந்துகளில் பயணம் செய்யும்போது, படிக்கட்டுகளில் தொற்றிக் கொண்டு செல்வதும், அதன் காரணமாக உயிரிழப்புகளும், விபத்துக்களும் ஏற்படுவதும், அலுவலகங்களுக்குச் செல்வோரும் அதே நேரத்தில் பேருந்துகளில் பயணிப்பதாலும், இது மேலும் நெரிசலுக்கும், போக்குவரத்துக்கு மேலும் நெருக்கடிக்கு ஆளாவதுமாக உள்ளதே இன்றைய நடைமுறைக் காட்சிகள் ஆகும்!

    தமிழ் ஓவியா said...

    இதுபற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் வந்துள்ளன. தடுக்கக்கோரி தமிழக அரசு பதில் அளிக்க நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர்; பதில் கூறும் வகையில் தமிழக அரசின் கல்வித் துறையினர், பள்ளி, கல்லூரி கள் துவங்கும் நேரத்தை மாற்றி அமைக்க ஏற்பாடு செய்வதாகத் தெரிவித்துள்ளனர்.
    கல்வி நிறுவனங்களின் நேரமாற்றம் வரவேற்கத்தக்கதே!

    அதன்படி பள்ளிகள் காலை 7.30 மணிக்கும், கல்லூரிகள் 8 மணிக்குத் தொடங்கவும் ஆணையிட அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

    இது உடனடியாகச் செயல்படுத்தப்பட வேண்டிய அவசர அவசியத் திட்டமாகும். இதை வரவேற்கிறோம்; கூட்ட நெரிசல் குறைந்து மாணவர்கள் பத்திரமாகப் பயணம் செய்யும் வாய்ப்பு ஏற்படுமே!

    இதே ஆட்சி (அ.தி.மு.க.) முன்பிருந்தபோது, இப்படி ஒரு முறை இருந்ததை நாடாளுமன்ற தேர்தல்கள் முடிவுக்களுக்குப் பின் ஏனோ, மாற்றி அமைத்தனர்! அப்போதே நாம் தேவையற்ற மாற்றம்; பழையபடி அதிகாலையில் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும் என்று எழுதினோம்.

    பெரியார் கல்வி நிறுவனங்களில்....

    பெரியார் கல்வி நிறுவனங்கள் மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை பல நடைபெறுகின்றன. அவை காலை 7.30 மணிக்கே (திருச்சி, தஞ்சை மற்றும் இதர ஊர்களில்) துவங்கியே நடைபெற்று வந்தன - வருகின்றன; சுமார் 30 ஆண்டுகளாக மதியம் 2 மணி 3 மணி அளவிலேயே முடிந்து, கல்லூரிகளில் வேறு கூடுதல் படிப்பு படிக்கவும் அதன் மூலம் மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.

    மேலும் அதிகாலை வேளைகளில் மாணவர்களின் ஈர்ப்புத் திறன் மிகவும் பசுமையாக (Fresh) இருந்து வெயில் ஏற ஏற வரைகோடு (Graph) கீழ் நோக்கிய போவது யதார்த்தனமான உண்மையே!

    இதில் வசதிக் குறைவு அதிகம் ஏதும் இல்லை. பழக்கம் - கால நிர்வாகம் (Time Management) செய்து பழக்கமற்ற சிலருக்கு சங்கடம் போல், பழகும் வரைக்கும் தெரியும். பிறகு சரியாகப் போகும்.

    வட இந்தியாவிலும், வெளி நாடுகளிலும்

    வெளிநாடுகளிலும் சரி, வட நாட்டிலும் சரி, கடுங்குளிர் இருந்தும்கூட - பிள்ளைகள் 7 மணிக்கெல்லாம் அவர்கள் பள்ளிப் பேருந்து களில் ஏறிச் சென்று கல்வி கற்க முயலுவது கண்கூடு. நம் நாடு பெரிதும் வெப்ப நாடு. இதில் விடியற்காலை - வைகறைத்துயில் எழுந்து, கடமை முடிப்பதே அருமையான முன்னேற்றத் திற்கு வழி வகுக்கும் சிறப்பான முறையாகும்.

    மின்வெட்டுப் பிரச்சினை

    இதுபோலவே கடும் மின்வெட்டு அமலாகி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில், தலைநகர் சென்னையில் 2 மணி நேரம், மற்ற வெளியூர்களில் அதிலும் தொழில் நகரங்களான கோவை, திருப்பூர் போன்ற பல நகரங்களிலும் பல மணி நேரம் மின்வெட்டு; பம்ப்செட் விவசாயிகளுக்கும் பாதிப்பு என்ற நிலையும் மாற்றப்பட்டு, சமச்சீர் அல்லது அவர்களின் தேவையையொட்டி சற்று மாற்றியமைத்து சீரான மின்விநியோகம் - தட்டுப்பாட்டைச் சமாளிக்க செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்!

    விவசாயமும், தொழிலும், மாணவர்கள் கல்வியும்தான் முக்கியம். எனவே அதிலும் ஒரு புதிய பார்வை, புதிய அணுகுமுறையை அரசு கையாள முன்வர வேண்டும்.


    கி.வீரமணி
    தலைவர்,
    திராவிடர் கழகம்



    சென்னை
    5.1.2013

    தமிழ் ஓவியா said...


    செவ்வாய் கிரகத்துக்கு அக்டோபரில் விண்கலம்



    கொல்கத்தா, ஜன.5- இந்தியா இந்த ஆண்டு அக்டோபரில் செவ் வாய் கிரகத்துக்கு விண்கலம் மூலம் செயற்கைக்கோளை அனுப்பி, தகவல் சேகரிக்க உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது உரை யாற்று கையில் செவ்வாய் கிரகத் துக்கு விண்கலம் அனுப் பப்படும் என்று தெரிவித்திருந்தார். அதற் கான பணிகள் இப்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. செவ்வாயில் மேற்கொள்ளப்பட உள்ள ஐந்து சோதனைகளுக்கான சாதனங்களை மத்திய அரசு, இஸ்ரோவிடம் வரும் மார்ச் மாதம் வழங்க உள்ளது. ""செவ்வாயில் மேற்கொள்ள வேண்டிய பரிசோ தனைக்கான சாதனங்கள் எங் களுக்கு மார்ச் மாதத்துக்குள் கிடைக்கும். அவற்றை செயற்கைக் கோளில் பொருத்தும் பணியை ஏப் ரலில் தொடங்குவோம்'' என்றார்

    தமிழ் ஓவியா said...


    இருந்து வரும்



    பார்ப்பனச் சாதி என்பதாக ஒரு வகுப்பு நாட்டில் இருக்கும் வரை சட்டம், ஒழுங்கு, அமைதி, பலாத்காரமற்ற தன்மை முதலியவை இருப்பது என்பது முடியாத காரியமாய்த்தான் இருந்து வரும். (விடுதலை, 29.5.1973)

    தமிழ் ஓவியா said...


    பிஜேபிக்குத் தகுதியில்லை!

    பாலியல் வன்கொடுமை என்பது அன்றாடம் பேசப்படும் முன்னணிச் செய்தியாகி விட்டது. இப்பொழுது சிலர் பெண்களுக்கு அறிவுரை, அறவுரைகள் சொல்லத் தலைப்பட்டுள்ளனர்.

    தொலைக்காட்சி ஊடகத்தில் விவாதங்கள் அரங்கேறுகின்றன; பெண்கள் குட்டைப் பாவாடை அணியக் கூடாது, பெண்ணின் அரைகுறை உடைதான் பாலியல் வன்கொடுமைக்குக் காரணம் என்றெல்லாம் வக்கணை நொட்டாரம் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

    மத்தியப் பிரதேசத்தில் பிஜேபியை சேர்ந்த தொழில் துறை அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா ஒருபடி மேலே சென்று இதோபதேசம் செய்திருக் கிறார்.

    எதற்கும் ஓர் எல்லை உண்டு. யாராக இருந்தாலும் எல்லையைத் தாண்டினால் துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். லட்சுமண ரேகையை சீதாதேவி தாண்டினார். அதனால்தான் இராவணன் அவரைக் கவர்ந்து சென்றான். அவருக்குத் துன்பம் ஏற்பட்டது. அவர் நெடுங்காலம் வருந்த நேரிட்டது. எனவே பெண்கள் எல்லை தாண்டக் கூடாது என்று நீட்டி முழங்கி இருக்கிறார்.

    எல்லோரும் பெண்களுக்குத்தான் அறிவுரையை இலவசமாகக் கூறுகிறார்களே தவிர ஆண்கள் உடைகள் பற்றியோ, பார்வையைப் பற்றியோ வாய் திறப்பதில்லை.
    ஆயிரம் இருந்தாலும் ஆண் பிள்ளை அல்லவா என்கிற ஆணவம்தான் இதற்குக் காரணம்.

    அதிலும் பிஜேபியினர் இந்தப் பாலியல் வன்முறைபற்றிப் பேசிட சற்றும் தகுதியற்றவர்களே!

    1998 செப்டம்பர் 25இல் மத்தியப் பிரதேசம் ஜாபுலா கிராமத்தில் என்ன நடந்தது? கிறித்தவர்கள் நடத்தும் மருத்துவமனையில் நள்ளிரவில் புகுந்து நான்கு கன்னியாஸ்திரிகளை சங்பரிவார்க் கும்பல் துடிக்கத் துடிக்க தங்கள் காமவெறிக்கு இரையாக்கவில்லையா?

    பிஜேபியைச் சேர்ந்த மக்களவை முன்னாள் உறுப்பினர் பைகுந்தலால் சர்மா (எம்.பி. சர்மா) என்ன கூறினார் தெரியுமா?

    தேச விரோத சக்திகளுக்கு எதிரான தேசப் பற்று மிக்க இந்து இளைஞர்களில் கோபம்! என்று கயமைத்தனமாக கேவலமான வார்த்தைகளை உதிர்க்கவில்லையா?

    ஆர்.எஸ்.எஸில் பெண் சந்நியாசி என்று சொல்லப்படும் தீப்பொறிப் பேச்சாளர் சாத்விரிதம்பரா வழக்கமாகவே பேசுவது என்ன தெரியுமா?

    இந்து ஆண்களே! முஸ்லிம் பெண்களைக் கர்ப்பவதியாக்குங்கள். அவர்கள் வயிற்றில் இந்துக் கரு ஜெனிக்கட்டும்! என்று பேசி வருகிறாரே!

    அதைவிடக் கேவலம் என்ன தெரியுமா? சூரத் நகரில் முசுலிம் பெண்கள் மானப்பங்கப்படுத்தப்பட்ட, வன்புணர்ச்சி செய்யப்பட்ட காட்சிகளை வீடியோ எடுத்து பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். கூட்டங்களில் போட்டுக் காட்டவில்லையா?

    அதன் பொருள் என்ன? நாடெங்கும் இது நடக்கட்டும் என்ற தூண்டுதல்தானே!

    மேற்கு வங்க முதல் அமைச்சராக இருந்த ஜோதிபாசு மிகவும் சரியாக இந்தச் சங்பரிவார்க் கும்பலை பற்றி மிகச் செறிவாக, துல்லியமாகச் சொன்ன வார்த்தை Uncivilised Brute Force என்றாரே (அநாகரிகமான காட்டுவிலங்காண்டிக் கூட்டம் என்றாரே!)

    கருநாடக மாநில சட்டமன்றத்தில் என்ன நடந்தது? சட்டமன்றத்தில் அமர்ந்து கொண்டு பி.ஜே.பி., அமைச்சர்களாக இருக்கக் கூடியவர்கள் கைப்பேசி மூலம் ஆபாசக் காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கவில்லையா?

    இந்துத்துவாவாதிகள் மனப்பான்மை அப்படித் தானிருக்கும், இந்து மத சமாச்சாரமே முழுக்க முழுக்க இது போன்றவைதானே? கற்பழிக்காத கடவுள் உண்டா?

    முதலில் நாட்டில் ஒழுக்கம் வளர வேண்டுமானால் இந்த இந்து மதத்தை எதிர்த்துக் கடுமையான பிரச்சாரம் மக்கள் மத்தியிலே வெடித்து எழ வேண்டும். கோயில்களில் எல்லாம், தேர்களில் எல்லாம் காம வெறியாட்ட காட்சிகள் தானே? மறுக்க முடியுமா? அச்சிலைகள் அகற்றப்பட வேண்டாமா?

    சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பிஜேபி பெண் தலைவர்கள் இந்து மத ஆபாசத்தை எதிர்த்து போர்க் கொடி தூக்க வேண்டும். செய்வார்களா? எங்கே பார்ப்போம்!

    தமிழ் ஓவியா said...


    சமையல் எரிவாயுவை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

    சமையல் எரிவாயுவை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
    அய்.ஓ.சி. நிறுவனம் விளக்கம்

    சென்னை, ஜன. 5- சமையல் எரிவாயு சிலிண்டரை எப்படி உபயோகிப்பது என்பது பற்றி ஒவ்வொரு குடும்பத்தினரும் அறிந்திருக்க வேண்டும். விலை மதிப்பற்ற மனித உயிர் இழப்பை தவிர்க்க பாது காப்பான முறையில் சமையல் அறையை பெண்கள் கையாள வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு பாதுகாப்பு குறித்து விழிப் புணர்வை ஏற்படுத்தினாலும் அவற்றை நாம் அலட்சியமாக கருதி பின்பற்றுவது இல்லை. அதனால்தான் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன என்று இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    சமையல் எரிவாயுவை பாதுகாப்பாக பயன் படுத்த அதிகாரிகள் தரும் விளக்கம் வருமாறு:-

    சமையல் எரிவாயு அடுப்பை பயன்படுத்துபவர் கள் நம்பிக்கையான நிறுவனங்களின் பி.அய்.எஸ். சான்று பெற்ற சாதனங்களை எப்போதும் பயன் படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வமான சமையல் எரிவாயு ஏஜென்சிகளிடம் இருந்தே பி.அய்.எஸ். சான்று பெற்ற எரிவாயு ரெகுலேட்டர் மற்றும் பாதுகாப்பு டியூப்களை வாங்க வேண்டும். சமையல் எரிவாயுவை பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால் சிலிண்டர் வினியோகிப் பவரிடம் செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

    காற்றோட்டமான பகுதியில், தரையில் இருந்து நின்ற நிலையிலேயே எப்போதும் சிலிண்டரை வைத்திருக்க வேண்டும். சிலிண்டர் மட்டத்தில் இருந்து உயரமான - சமமான இடத்திலேயே சமையல் எரிவாயு அடுப்பை வைக்கவும் தனிப் பெட்டியிலோ அல்லது தரை மட்டத்தில் இருந்து பள்ளமான குழியிலோ சிலிண்டரை வைக்கக் கூடாது.

    வெப்பமான பிற சாதனங்களில் இருந்து சிலிண்டரை தள்ளியே வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது வேறு வித அடுப்பு களை ஒரு போதும் வைத்திருக்கக்கூடாது. ரப்பர் டியூப், சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் இருப் பதை உறுதி செய்ய வேண்டும். சிலிண்டரில் கசிவு இருப்பதை சோப்பு நீர் கொண்டே பரிசோதி யுங்கள். எரியும் தீக்குச்சி மூலம் பரிசோதிக்கக் கூடாது.

    நைலான் கயிற்றுடன் கூடிய பாதுகாப்பு மூடி எப்போதும் சிலிண்டரிலேயே பிணைக்கப்பட்டு இருக்க வேண்டும். எரிவாயு கசிவு தென்பட்டால் பாதுகாப்பு மூடியால் வால்வை மூட வேண்டும். அடுப்பில் பாத்திரங்களை வைத்து விட்டு நீண்ட நேரம் கவனிக்காமல் விட்டு விடாதீர்க்ள. சமையல் பொருள்கள் கொதித்து வெளியேறி தீயை அணைத்து விடும். இது எரிவாயு கசிவுக்கு வழி வகுக்கும்.

    பிரிட்ஜ் போன்ற மின் சாதனங்களை சமையல் அறைக்குள் வைத்திருக்கக் கூடாது. அதனால் ஏற்படும் மின் அழுத்த ஏற்றத்தாழ்வு, எரிவாயு கசிவு இருக்கும் பட்சத்தில் விபத்தை உண்டாக்கக் கூடும். படுக்கைக்குச் செல்லும் முன் சிலிண்டர் ரெகுலேட்டர் நாப்பை மூடிவிட்டு அடுத்ததாக அடுப்பின் நாப்களையும் மூட வேண்டும். பயன்பாடு இல்லாத நேரத்தில் சிலிண்டரின் நாப் எப்போதும் மூடிய நிலையிலேயே இருக்க வேண்டும்.

    காலியான சிலிண்டர்களை பாதுகாப்பு மூடி யால் மூடி, காற்றோட்டமான குளுமையான இடத் திலேயே வைத்திருக்க வேண்டும். எரிவாயு டியூப்பை எதனாலும் மூடாமல் வெளியே தெரியும்படி வைக்க வேண்டும். டியூப்பை விரிசல் இருக்கிறதா என்பதை அடிக்கடி பரிசோதித்திடுங்கள். 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும்.

    நீங்கள் சுயமாக ரிப்பேர் செய்வது பாதுகாப் பற்றது. வினியோகஸ்தர்களின் மெக்கானிக்குகளை பயன்படுத்துங்கள். எரிவாயு கசிவு ஏற்பட்டால் பதற்றம் அடையாமல் ரெகுலெட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின் சுவிட்சுகள், மின் சாதனங்களை இயக்கக்கூடாது வெளிப்புறம் இருக்கும் பிரதான மின் இணைப்பில் இருந்து மட்டுமே மின் விநி யோகத்தை துண்டிக்க வேண்டும். காற்றோட்டத் துக்காக கதவுகள், ஜன்னல்களை திறந்து வைக்கவும் எரியும் நெருப்பு, எண்ணெய் விளக்குகள், மெழுகு வத்தி போன்றவற்றை அணைத்திட வேண்டும். சிலிண்டரை பாதுகாப்பு மூடியால் மூடிவிடுங்கள். உதவிக்கு உங்களின் வினியோகஸ்தர் அல்லது அவ சர சேவை மய்யத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

    காற்றை விட எரிவாயு கனமானதாக இருப்பதால் கசிவு ஏற்படும் நேரத்தில் அது தரைமட்டத்தை நோக்கி பாயும். எரிவாயு கசிவு ஏற்பட்டிருப்பது கவனத்துக்கு வந்தால் அவற்றை வெளியேற்ற அத்தனை காற்றோட்ட வசதிகளையும் செய்யவும். கசிவு ஏற்பட்டால் இந்தியன் ஆயில் நிறுவன வாடிக்கையாளர் சேவை மய்யத்திற்கு (அலுவலக நேரத்தில்) 044-24339236, 24339246 என்ற தொலைப் பேசியில் புகார் தெரிவிக்கலாம்.

    அலுவலக நேரத் திற்கு பின்னர் 9941990909, 9941955111, 9941930303 ஆகிய செல்போன்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். புகார் தெரிவித்த ஒரு மணி நேரத்திற்குள் அய்.ஓ.சி. மெக்கானிக்குகள் அங்கு வரு வார்கள் என்று எண்ணெய் நிறுவனம் தெரிவித் துள்ளது.

    தமிழ் ஓவியா said...


    சுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன ?

    1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது.

    2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும்.

    3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும்.

    4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும்.

    5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும்.

    6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும்.

    குடிஅரசு - செய்தி விளக்கம் - 06.12.1947

    தமிழ் ஓவியா said...


    உண்மையா?


    தில்லை நகர அகில இந்தியக் கதர்க்கடை வியாபாரி தோழர் பாலகிருஷ்ணப் பிள்ளை என்பவரிடம், சமையல் வேலை செய்து வந்த துரைசாமி என்பவரைப் போலிஸ் 64ஆம் சட்டத்தின் கீழ் சார்ஜ் செய்து மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கேஸ் நடந்தது உண்மையா?

    மேற்படி துரைசாமிக்குச் சாதகமாகச் சிதம்பரம் காங்கிரஸ் கமிட்டித் தலைவரும். கதர்க்கடை கோவிந்தசாமி என்பவரும் டிபன்ஸ் சாட்சியும் சொல்லியது உண்மையா?
    இந்தத் துரைசாமி ஏற்கனவே இரண்டு தடவை குற்றவாளியாகி ஜெயிலுக்குப் போய் வந்தவர் என்பது உண்மையா?

    தென்னார்க்காடு ஜில்லா காங்கிரஸ் கமிட்டி செக்ரட்டரி சிவபுரி தோழர் கிருஷ்ணசாமி படையாட்சி என்பவரும், இன்னும் சில காங்கிரஸ் தோழர்களும் சேர்ந்து போலிஸ்காரரையும் மாஜிஸ்திரேட்டையும் வற்புறுத்தி எப்படியும் விடுதலை செய்து விட வேண்டுமென்றும், செய்யாவிட்டால் மேலாவிலிருந்து வரும் தொந்தரவுகளுக்கு ஆளாக வேண்டுமென்றும் பயமுறுத்தி அவரை விடுதலை பெறச் செய்தது உண்மையா?

    அதே 64ஆம் சட்டத்தில் சார்ஜ் செய்யப்பட்ட கிருஷ்ணசாமி என்பவருக்கு மட்டும் (திராவிடர் கழகத் தோழர்) 6-வாரம் தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது உண்மையா?

    பிராமணனுக்கு ஒரு தண்டனை சூத்திரனுக்கு ஒரு தண்டனை என்று முன்னால் இருந்த மனுதர்மமே, இப்பொழுது காங்கிரசாருக்கு ஒரு தண்டனை. காங்கிரஸ் அல்லாதவர்களுக்கு ஒரு தண்டனையாக மாறியிருக்கிறதெனவும், மனு ஆட்சி ஏட்டில் இருப்பது காங்கிரஸ் ஆட்சி நாட்டில் நடப்பது எனவும் மக்கள் பேசிக் கொள்வது உண்மையா?

    குடிஅரசு - செய்தி விளக்கம் - 27.12.1947

    தமிழ் ஓவியா said...


    விடுதலைக்கு அருகதை


    ஆத்மார்த்தம், விதி, அல்லது கடவுள் செயல் என்று சொல்லப்படும் இம்மூன்றையும் அழிக்க தைரியமும், சக்தியும் உடையவர்களே மனிதனுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க அருகராவார்கள்.

    ராஜவாழ்த்தும், கடவுள் வாழ்த்தும் மனிதனின் அடிமைத்தனத் திற்கு அஸ்திவாரக்கல் நடுவதாகும்.

    - ஈ.வெ.ரா.

    தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் என்று சமாதானம் சொல்லுகின்றவர்கள் தங்கள் தப்பிதத்தின் காரணத்தை உணராதவர்கள், அல்லது தவறுதல்களை உணர்ந்து அதிலிருந்து

    தப்பித்துக்கொள்ள முயற்சிக்கின்றவர்கள் ஆவார்கள்.
    -

    ஈ.வெ.ரா.
    குடிஅரசு - துணுக்கு - 06.12.1947

    தமிழ் ஓவியா said...


    வெள்ளையனே! வெளியேறாதே!


    லார்டு மவுண்ட் பேட் டனின் கவர்னர் ஜெனரல் பதவியை 1948 மார்ச்சு 31ஆம் தேதியிலிருந்து அந்த வருஷக் கடைசி வரை யிலாவது அல்லது இந்தி யாவின் புதிய அரசியல் திட்டத்தின் கீழ் முதல் ஜனாதிபதி தேர்தல் நடக்கும் காலமாகிய 1949 வசந்த காலம் வரையிலாவது நீடிக்குமாறு பிரிட்டிஷ் சர்க்காரை இந்திய சர்க்கார் (காங்கிரஸ்) கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

    இதற்குப் பெயர் வெள்ளையனே! வெளியேறு என்பதா? வெள்ளைப் பிரபுவே! வெளியேறாதீர்கள் என்பதா?

    குடிஅரசு - செய்திக்குறிப்பு - 20.12.1947

    தமிழ் ஓவியா said...


    சட்டசபை சாப்பிட்டது!


    சென்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் 10ஆம் நாள் வரை சென்னை அசெம்பிளி அங்கத்தினர்களுக்குப் பிரயாணப்படி முதலிய அலவன்ஸ்களில் சர்க்காருக்கு ரூ.1,36,648 செலவாகி இருக்கிறது. கவுன்சில் அங்கத்தினர் களுக்கு ரூ. 24,198 செலவாகியிருக்கிறது. ஆக ரூ.1,60,846 8 1/2 மாதங் களுக்குச் செலவு. அங்கத்தினர்களின் சம்பளமும், மந்திரிகளின் சம்பளமும், மந்திரிமார்களின் பிரயாணப்படி அலவன்ஸ்களும் தனி.

    ஆனால் இதற்கு முன்பு ஒதுக்கப்பட்டிருந்த தொகையோ 1 1/2 லட்சம். இப்போதே ஒரு லட்சத்து, அறுபத்தோராயிரம் ஆகிவிட்டதாம். இன்னும் 3 1/2 மாதச் செலவுகள் வேறு பாக்கியிருக்கிறதாம்.

    குடிஅரசு - செய்தி - 27.12.1947

    தமிழ் ஓவியா said...


    பெண்களைக் கட்டிப்பிடித்த சாமியார் எங்கே? இரவோடு இரவாகக் கம்பி நீட்டினார்

    மெகபூப் நகர், ஜன.5- தமிழ்நாட்டில் சாமியார் கள் மீது சர்ச்சைகள் எழுவது வாடிக்கையாகி வந்த நிலையில் தற் போது ஆந்திராவில் சாமியார் ஒருவர் மீது பாலியல் புகார் எழுந் துள்ளது.

    தன்னிடம் வரும் பெண்களை கட்டி பிடித் தும், இறுக்கி அணைத் தும் சில்மிஷம்' செய்த தாகவும் அந்த சாமியார் மீது கூறப்படும் புகார் களை விசாரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

    பிம்மரிஷி சுபாஷ் பத்திரி என்ற சாமியார் மெகபூப் நகர் மாவட் டம் படுதால் கிராமத் தில் மகேஸ்வரா மகா பிரமிடு என்ற பெயரில் தியான மண்டபம் ஒன்றை நடத்தி வருகி றாராம். 136 ஏக்கர் பரப் பளவில் உள்ள இந்த ஆசிரமத்தின் மய்யப் பகுதியில் பிரமிடு போல் பிரமாண்ட கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 40 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் தியானம் செய்யலாமாம். கடந்த சில நாள் களுக்கு முன்பு இங்கு பெரிய அளவில் தியா னம் பயிற்சி நடந்ததாம். இந்தியா மட்டும் அல் லாமல் பல்வேறு நாடு களைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    ஒரு லட்சம் பேர் தியானமாம்!

    தினம் ஒரு லட்சம் பேர் இந்த தியான பயிற் சியில் கலந்து கொண்ட னர். இந்த பயிற்சி முகா மில் தமிழக அரசு அதி காரிகள் மற்றும் நடிகர் நடிகைகளும் பங்கேற் றார்களாம். அன்றைய தினம் இதில் கலந்து கொண்ட பெண்களை சாமியார் சுபாஷ் பத்ரி கட்டிப்பிடித்து ஆசி வழங்கினாராம். அத் துடன் அங்கு பல பெண் களிடம் அவர் சில் மிஷமும்' செய்தார். சில பெண்களை பின் பக்க மும் தட்டினாராம். இதனை ரகசியமாக படம் பிடித்த ஒருவர், தெலுங்கு, தொலைக் காட்சி அலைவரிசையி டம் அந்தக் காட்சிகளை கொடுத்து ஒளி பரப்ப செய்து விட்டார். அந்த காட்சிகள் தெலுங்கு அலைவரிசைகள் பல வற்றிலும் நேற்று முன் தினம் ஒளிபரப்பானதாம். இதனால் ஆந்திரா வில் பெரும் கொந் தளிப்பு ஏற்பட்டுவிட் டது.

    பெண்கள் ஆவேசம்!

    ஆவேசமடைந்த பெண்கள் அமைப்பினர் ஆசிரமம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இத னைத் தொடர்ந்து சாமி யாரை சந்தித்து விளக் கம் கேட்டு அதை ஒளி பரப்புவதற்காக இரண்டு தனியார் தொலைக் காட்சி செய்தியாளர்கள் ஆசிரமத்துக்கு சென்ற னர். அவர்களை ஆசிரம ஊழியர்கள் அடித்து விரட்டினார்கள். செய்தி யாளர்கள் வந்த வேனை யும் நொறுக்கினார்கள்.

    கம்பி நீட்டினார் பேர்வழி!

    இதுகுறித்து தொலைக் காட்சி நிறுவனத்தினர் காவல்துறையில் புகார் செய்தனர். தங்களை தாக் கியதாக ஆசிரம சுபாஷ் பத்ரி சுவாமி, நிர்வாகி விஜய பாஸ்கர ரெட்டி உள்பட 6 பேர் மீது புகார் செய்துள்ளனர். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இந்த விவ காரம் வெளிவந்ததை யடுத்து சுபாஷ் பத்ரி தப்பி ஓடிவிட்டார். அவர் பெங்களூர் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், தியான மாநாட்டில் பங்கேற்ற நடிகர் நடிகைகளும், அரசியல்வாதிகள், அதி காரிகளும் கலக்கம் அடைந்துள்ளனராம்.

    தமிழ் ஓவியா said...

    பக்தி மார்க்கெட்(டு)!

    வியாபாரிகள் கொள்ளை அடிக் கின்றனர் என்று வீராவேசமாகப் பேசுவதுண்டு. விலைவாசிகள் விண்ணை முட்டுகின்றனவே என்று வியர்க்க வியர்க்க ஆர்ப்பாட்டம் நடைபெறுவதும் உண்டு.

    ஆனால் பரலோகம் அனுப் புவதாகச் சொல்லப்படும் பக்தி _ கர்மவினை யிலிருந்து காப்பாற்றுவதாக நம்பப்படும் கடவுள் பக்தி என்பது மிகப் பெரிய வியாபாரமாக, முதலில்லா சந்தையாக கொடி கட்டிப் பறக்கிறதே - அதைப்பற்றி ஏன் எவரும் பேசுவதில்லை?

    முதல் இல்லையா -_ மக்களின் முட் டாள்தனம் தானே மூலதனம் என்று பகுத்தறிவுவாதிகள் சொல்லுவதை வேண்டுமானால் ஒப்புக் கொள்ளலாம்.

    கோயில் கட்ட பணம் தேவை யில்லையா - அதுவும் ஒரு வகையில் முதல் தானே - முதலீடு தானே என்று முந்திரிக்கொட்டை போல எதிர்க் கேள்வி போடலாம்.

    அந்த முதலீடு _ மூலதனம்கூட எந்தப் பார்ப்பான் வீட்டிலிருந்து வந்தது? நமது அரசர்கள் அண்டை நாட்டோடு போர் தொடுத்து ஆயிரக்கணக்கான வீரர்களைப் பலி கொடுத்து, கொள்ளை யடித்து வந்த பொருளையும், பொன் னையும் கொட்டி கோயில்களை உருவாக்கினர்.

    தமிழ் ஓவியா said...

    இப்பொழுதோ கோயில் கட்டுவதற்கென்று மக்களிடம் சென்றால் கொட்டிக் கொடுக்கிறார்கள். போதும் போதாதற்கு அரசும் அள்ளிக் கொடுக்கிறது என்றாலும் அதுவும் மக்கள் பணம்தான். ஆனால் இவ்வளவும் செய்தபிறகு கும்பாபிஷேகத்தன்று குரங்கு போல் கோபுரத்தின் உச்சியில் குந்திக் கொண்டு மழைக் காலத்துத் தவளை போல புரியாத மொழியில் ஏதோ உளறியபின், - அந்தக் கோயிலின் அதிபதியாக ஆகிறவன் பார்ப்பான் தானே? கோயில் கட்ட ஒரு செங்கல்லை எடுத்துக் கொடுத்திருப் பானா? ஒரு சட்டி மண்ணைத் தூக்கிக் கொடுத்திருக்குமா அந்தக் கூட்டம்?

    நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலை யத்துறை ஒன்றை உருவாக்கி அரசின் கட்டுப் பாட்டுக்குக் கீழ் கொண்டு வந்தபிறகு புரோகிதச் சுரண்டல் ஓரளவுக்குக் கட்டுப்பட்டது. அது ஒரு பக்கம்; கோயில் என்பது முழுக்க முழுக்க பச்சை வியாபாரத் தலமாகி விட்டதை மறுக்க முடியுமா?

    நாம் சொன்னால் முகம் சுளிக்கலாம். சூனாமானாக் காரர்கள் குதர்க்கமாகத் தான் கேள்வி கேட்பார்கள் என்று சொல்லலாம்.

    ஆனால் சங்கராச்சாரியார் சொன் னால் முகத்தை எங்கே கொண்டு போய் ஒளிய வைப்பார்களாம்?

    மக்களிடையே கஷ்டங்கள் அதிகரித்து வருவதால் கடவுள்மீது அதிகப் பக்தி கொண்டு வருவதற் கான அறிகுறிகள் காணப்படு கின்றன. கோயில்களுக்குப் போவதையும், மதச் சடங்குகளில் கலந்து கொள்வதையும் ஒரு ஃபேஷனாக (Fashion) கருது கின்றனர். பக்தர்கள் பெரும்பாலோ ரிடம் வர்த்தக மனப்பான்மை காணப் படுகிறது.

    _ இப்படி சொன்னவர் யார்? கறுப்புச் சட்டைக்காரர்களா? கடவுள் மறுப்பாளர்களா? அல்ல.. அல்ல.. சாட்சாத் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிதான். 1976 மே மாதத்தில் காஞ்சீபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் தான் இப்படி திருவாய் மலர்ந்தருளினார்.

    சொன்ன ஊரோ காஞ்சீபுரம், சொல்லப்பட்ட இடமோ அகில இந்திய இந்து மாநாடு என்பதை மறக்க வேண் டாம். இதற்கு ஆதாரம் தேட அய்யா யிரம் கல்தொலைவு பயணம் செய்ய வேண்டாம்.

    ஆங்கிலப் புத்தாண்டு நாளான சனவரி முதல் தேதியன்று ஏடுகளில் வெளிவந்த ஒரு செய்தி செவுளில் அறைந்ததுபோல காணப்படுகிறது.

    சென்னையில் திருப்பதி திருமலை மாதிரி கோவில்: பக்தர்கள் புத்தாண்டு தரிசனம்

    சென்னையில் திருப்பதி திருமலா மாதிரி கோவில் அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை சிந்தாதிரிப் பேட்டை உலகப்பன் தெரு ஜெயின் கோவில் அருகில் திருப்பதி திருமலா என்ற பெயரில் சீனிவாசப் பெருமாள் மற்றும் அலமேலு அம்மாள் சன்னதிகள் மாதிரி பிரமாண்டமாக அமைக்கப் பட்டுள்ளன.

    புத்தாண்டையொட்டி பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. சாமி சன்னதிகள் மற்றும் மாதிரி அமைப்புகள் திருப்பதி கோவிலில் உள்ளதுபோல் தத்ரூபமாக அமைக் கப்பட்டு இருந்தது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலரும், தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச் செயலாளருமான என்.கண்ணையா, தலைவர் சி.ஏ.ராஜா ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே திரண்டு வந்து புத்தாண்டு தரி சனம் செய்த வண்ணம் உள்ளனர். பக் தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கண்ணன் பட்டாச்சாரியார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.

    சென்னை திருப்பதி தேவஸ்தான தகவல் மைய தலைவர் கே. அனந்தகுமார் ரெட்டி, பி.கிருஷ்ணா ரெட்டி, எஸ்.காசி லிங்கம், ராகவேந்தர், சாய்ராம், பக்தர்கள் சாரி டபுள் டிரஸ்ட் தலைவர் எல்.ராஜேந் திரன், செயலாளர் ஸ்ரீகாந்த், பொருளாளர் பி.கே.நாராயணபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ராகவேந்தர், சாய்ராம் பக்தர்கள் சாரிடபுள் டிரஸ்ட் தலைவர் சேப்பாக்கம் எல்.ராஜேந்திரன் செய்து இருந்தார்.
    (மாலை மலர் பக்கம் 2 1.1.2013)

    இதுபற்றி நாம் கருத்துச் சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். 21ஆம் நூற்றாண்டில் பார்ப்பனீயத்தைக் காப்பாற்றுவதற்காகவே மொட்டை அடித்துக் கொண்டு இருக்கிற ஆசாமி திருவாளர் சோ இராமசாமி என்ன சொல்லி இருக்கிறார்?
    கேள்வி: சென்னைத் தீவுத் திடலில் திருப்பதி ஏழுமலையான் சீனிவாச திருக் கல்யாண உற்சவம் நடைபெற்றது பற்றியும், அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு பெற்றது பற்றியும் தங்கள் கருத்து?

    பதில்: இவ்வளவு கட்டணம் செலுத் தினால், வெங்கடேஸ்வரப் பெருமாளை உங்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து, ஒரு நாள் தங்க வைக்கிறோம் என்று ஒரு புதிய திட்டம் வராதது ஒன்றுதான் குறை.
    (துக்ளக் 23.4.2008 பக்கம் 17)

    கட்டணம் செலுத்தினால் திருப்பதி வெங்கடேஸ்வரப் பெருமாள் பக்தர்கள் வீட்டுக்கே வருவாராம். ஆக இதற்குள் இருப்பது பக்தியல்ல - கடவுள் சக்தியும் அல்ல - மாறாக பணம் தான் என்பது அம்மணமாக அம்பலப்பட்டு விட வில்லையா? சோ ராமசாமியே சாட்சியாக விட்ட பிறகு இந்தக் காட்சியெல்லாம் எம்மாத்திரம்!

    தமிழ் ஓவியா said...

    கோயில் ஓரிடத்தில் உருவாகி இருந்தால் அடேயப்பா அந்த ஊருக்கும், கோயிலுக்கும் எவ்வளவு தலப் புராண மகிமைகளை எழுதிக் குவிப்பார்கள்!
    அந்தத் தலப் புராணத்தையும் புத்தக மாக்கிக் காசாக்குவார்கள். பிரணவத்திற்கு ஈசன் பொருள் சொன்னபோது, அதில் மனத்தைச் செலுத்தாமல் தன்னருகில் ஆடும் மயிலின் அழகில் மனதைப் பறி கொடுத்தாள் உமையாகிய பார்வதி... இதனால் கோபமுற்ற சிவன் பார்வதியை மயிலாக மாற சாபமிட்டார். உமை மயிலாக மாறி ஈசனை பூஜித்ததால் இத்தலம் மயிலாப்பூர் என்றானது என்றெல்லாம் ஒவ்வொரு கோயிலுக்கும் தலப் புராணங்கள் உண்டு. திருப்பதிக்கும் உண்டு.

    அப்படி இருக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலை சென்னையில் ஒரு கிளைக் கோயிலாகக் கொண்டு வருவது _ சரவணா பவன் என்னும் உணவு வியாபாரக் கடை ஊருக்குஊர் உண்டாக்குவது போன்றதுதானே! அப்படி என்றால் தலபுராண அற்புதங்கள் எல்லாம் கப்சாதானே!

    இதன் மூலம் பக்தர்களாகிய பொது மக்களின் பணத்தைச் சுரண்டும் ஒரு தந்திரம் _ வழிமுறை என்பதல்லாமல் வேறு என்ன?
    திருப்பதி திருமலையான் கோயிலில் உண்டியல் வைத்து வசூல் செய்வதற்குக் கூட சாஸ்திர, புராண ரீதியாகக் காரணங் களையும் கற்பித்து வைத்துள்ளனர்.

    பக்தியில் புத்தியைப் பறி கொடுக்கும் பக்தர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திக்கும் சக்தியைப் பறி கொடுக்கின்றனர். வெங் கடாசலபதி திருமணம் செய்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கினாராம். அதற்கான வட்டியை ஆண்டுதோறும் கட்டுவதற்காகத் தான் பக்தர்களிடம் உண்டியல் நிதி போடச் சொல்லிக் கேட் கிறார்; ஆண்டாண்டுக் கட்டியும் கடன் தீராததால் வட்டியோடு கட்டிக் கொண்டே இருக்கிறாராம்.

    எப்படி இருக்கிறது? பக்தியின் பெயரால் மக்கள் பணத்தைச் சுரண்டுவதற் காகக் கடவுளையே கடனாளியாக்கி இருக்கிறார்கள். அப்படி தலப்புராணம் எழுதும்பொழுது எல்லா சக்தியும் வாய்ந்தவர் கடவுள் என்று சொல்லி வந்ததைக் கூட ஓரந் தள்ளிவிட்டு, தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந்தன் என்பதைக்கூட காலில் போட்டு மிதித்து விட்டு, கையேந்தும் கடன்காரனாக்கி விட்டனரே! அவனைக் கடன் வாங்கும் பிச்சைக்காரனாக்கி விட்டார்களே!
    கடவுள் அவர்களுக்கு சுரண்டும் ஒரு கருவிதானே _- கடவுளாவது கத்தரிக் காயாவது!

    கடவுள் ஒரு வியாபாரப் பொருளான பிறகு - பக்தி வியாபாரிகள் பங்கு போட் டுக் கொள்ள மாட்டார்களா? கொள்ளை யடிக்க மாட்டார்களா? கடவுள்தான் ஒரு திடப் பொருளான ஜடமாயிற்றே _ தட்டிக் கேட்கவா போகிறது?

    திருப்பதி ஏழுமலையான் உண்டியல் பணத்தை எண்ணும்போது காமிராவை ஏன் பொருத்துகிறார்கள்?

    சபரிமலை உண்டியல் எண்ணியதில் முறைகேடு தணிக்கைத் துறை பகீர் அறிக்கை என்று வெளியிட்டது விடு தலை ஏடு அல்லவே? தினமலர்தானே! (20.2.2012 பக்கம் 13)

    Corruption is a way of life in tirupathi tirumala devastaanams என்று தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (28.3.2012) செய்தி வெளியிடவில்லையா?

    திருமலை நாயக்க மன்னன் திருப் பதி கோயிலுக்குக் கொடுத்த நகைகள் எங்கே என்ற கேள்வி எழவில்லையா? உயர்நீதிமன்றம் கெடு நிர்ணயித்து நகைக் கணக்குகளைப் பார்க்க வேண் டும் என்று ஆணை பிறப்பிக்க வில்லையா?

    திருப்பதி கோயிலில் மிகப் பெரும் ஊழல் -_ டிக்கெட் விற்பனையில் கோடிக்கணக்கில் மோசடி என்று செய்தி வெளியிட்டதும் சாட்சாத் தினமலர் தானே (3.10.2010 பக்கம் 9)

    தமிழ் ஓவியா said...

    வியாபாரம் என்றால் அதில் கள்ள மார்க்கெட்டும் இருக்கும்தானே? அந்தப் பட்டியலில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

    எழுத ஆரம்பித்தால் ஏடு கொள் ளாது. நாமதாரி கடவுளான ஏழுமலை யானுக்கே நாமம் போடுவதை என்ன வென்று சொல்ல!

    விழித்துக் கொண்டிருக்கும்போதே விளையாடும் குணம்படைத்த புரோகிதக் கூட்டம் குத்துக்கல்லாக உட்கார்ந்திருக் கும் கடவுள் என்று கற்பிக்கப்பட்ட ஜடத்துக்கா அஞ்சப் போகிறார்கள்?

    ஆடிச் சலுகை என்று துணிக் கடைகளில் தள்ளுபடி விலையில் விற்பனை செய்வதுண்டு. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீகைலாச நாதர் கோயிலில் ஆடிக் கிருத்திகைக்கு நெய் விளக்குப் பூஜைக்குக் கட்டண சலுகையாம்!

    வழக்கமான கட்டணம் 5 ரூபாய்க்குப் பதிலாக 3 ரூபாய் செலுத்தினால் போது மாம். இதுதவிர மாதந் தவறாமல் பக்தர் களுக்குப் பரிசுகள் வேறு உண்டாம். இந்த ஆண்டு தை முதல் அடுத்த ஆண்டு வரை பரிசுகள் தொடருமாம் (ஆதாரம்: தினத்தந்தி 13.8.1989 பக்கம் 10). பக்தி என்பது பச்சை வியாபாரம் என்பதற்கு இன்னும் பட்டியல் தேவையோ!

    ஒன்று வாங்கினால் இன்னொன்று போனஸ் என்னும் ஏலக்கடையாகி விட் டதே கோயில்!

    அப்படிதான் பக்தியை வளர்க் கிறார்களே _ அதில் ஒழுக்கமாவது தேறுகிறதா?

    கருஞ்சட்டை சொன்னால் கடு கடுக்கும் முகங்கள் கிருபானந்தவாரியார் சொன்னால் கிளுகிளுக்க மாட்டார்களா? கொஞ்சம் காது கொடுக்க மாட்டார்களா?

    தமிழ் ஓவியா said...

    கேள்வி: நம் நாட்டில் இறையுணர்வு குறைந்து வருகிறதோ....!

    பதில்: என் அனுபவத்துல சொல் றேன்... பக்தி அதிகமாகிக்க்கிட்டிருக்கு.. கோயிலுக்குப்போறவங்க எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு! பழனியில் எம்பெருமான் முருகன் கோயில் உண்டியலில் முன்னாடியெல் லாம் அஞ்சு லட்சம், ஆறு லட்சம் ரூபா தான் வந்துச்சு! இப்பவோ காணிக்கைத் தொகை ரெண்டு, மூன்று கோடியைத் தாண்டிடுது. பக்தி அதிகமாயிருக்கு.. ஆனால் ஒழுக்கம்தான் குறைஞ்சு போயிடுச்சு...!

    கேள்வி: இறைவனிடத்தில் மக்களுக் குப் பக்தி அதிகமாக இருக்கிறதென்றால் ஒழுக்கமும் இருக்கிறதென்று கொள்ள லாமே?

    தமிழ் ஓவியா said...

    பதில்: ஊ ஹூம்... அப்படியில்லை.. பக்திக்கும், ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே யில்லை.
    - கிருபானந்தவாரியார்
    (ஆனந்தவிகடன் 22.12.1991)

    பக்தி ஒரு வியாபாரம், -பக்தியினால் ஒழுக்கம் வளர்வதில்லை என்று திரா விடர் கழகத்தினர் சொன்னால் எங்கள் மனம் புண்படுகிறது என்று ஒப்பாரி வைக்கும் மாய்மாலப் பேர்வழிகள் இவற்றிற்கு என்ன பதில் சொல்வார்கள்?

    பக்தர்களுக்கும் ஆறாவது அறிவு _- பகுத்தறிவு இருக்கத்தான் செய்கிறது. பயன்படுத்துங்கள் _ இல்லாவிட்டால் அது துருப்பிடித்துவிடும் _ ஏமாளிகள் ஏய்த்துப் பிழைப்பார்கள் -_ எச்சரிக்கை!

    - மின்சாரம்



    கல்கி கூறுகிறது
    கடவுளை வியாபாரியாக்காதே!

    கோயிலுக்குச் சென்று கடவுளிடம், எனக்கு அதைக் கொடு இதைக் கொடு! என்று கேட்பது சரியா தவறா? - வி. மனோகரி, குமாரபாளையம்

    அப்படிக் கேட்பதன் மூலமாக நீங்கள் கடவுளை ஒரு வியாபாரியாக்கிக் கேவலப்படுத்துவதாக நான் நினைக்கிறேன். எனக்கு இந்த வேலையை முடித்துக் கொடு... நான் உனக்கு பாலாபிஷேகம் செய்கிறேன். வேல் சாத்துகிறேன். ஒரு மண்டலம் பூஜை செய்கிறேன் என்றெல்லாம் பேரம் பேசுவது இறைவழிபாடு அல்ல. கடவுளிடம் நாம் எதையும் கேட்க வேண்டியது இல்லை. நமக்கு எதைத் தர வேண்டும். எதைத் தர கூடாது என்பதெல்லாம் அவனுக்குத் தெரியும். எந்த ஒரு கோரிக்கையும் இல்லாமல் கோயிலுக்குப் போக வேண்டும். அப்படிக் கோரிக்கை எதுவும் இல்லாவிட்டால் நாம் கோயில்களையே மறந்து விடுவோம்.

    ஒரு பிரச்சினை தீர்ந்தால் இன்னொரு பிரச்சினை என்று மனித வாழ்வில் எட்டிப் பார்ப்பதால்தான் இன்றைக்குக் கோயில்களில் கூட்டம் கூடுகிறது. பிரதோஷம் என்றால் பத்து வருடங்களுக்கு முன்பு கோயில் குருக்களுக்கு மட்டுமே தெரியும். இன்றைக்கு பிரதோஷம் எல்லாக் கோயில்களிலும் பிரபலம். பக்தி என்பது நமது உள்ளத்தைச் சுத்தப்படுத்தும் ஒரு கருவி. அந்தக் கருவியை உபயோகித்து இறைவனிடம் பேரம் பேசி நமது பேராசைகளை பிரார்த்தனை என்ற பெயரில் நிறைவேற்றிக் கொள்ள நினைப்பது, நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் ஓர் அவமானம். எல்லாம் நீயே! என்று சரணடைந்து பாருங்கள். மனசுக்குள் நிம்மதி பச்சைப் பசேலென்று துளிர்விடும்.

    (எழுத்தாளர் ராஜேஷ்குமார் கல்கி 6.11.2011)

    குறிப்பு: கல்கியின் மற்ற கருத்துக்கள் புறந்தள்ளத்தக்கவை என்றாலும் பக்தியைப் பயன்படுத்தி கடவுள் வியாபாரி ஆக்கப்படுகிறார் என்பதைக் கல்கியே ஒப்புக் கொண்டு விட்டதா இல்லையா?







    பக்தி வியாபாரம்

    புத்தாண்டு தினத்தையொட்டி, திருப்பதி யில் 75 ஆயிரம் பேர், தரிசனம் செய் தனர். அதிகாலை, 4:00 மணி முதல் காலை, 7:00 மணி வரை, 1,000 ரூபாய், வி.ஐ.பி., டிக்கெட் பெற்ற பக்தர்கள், தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    ரெண்டும் நல்ல வியாபாரம்...இது ரெண்டில் இருந்தும் மக்களை மீட்டெடுப்பது ரொம்பவும் கடினமான பணி..ஏனென்றால் இரண்டும் போதை... முன்னதை விட பின்னதில் பெண்கள் பங்கு அதிகம்.
    - பரணீதரன் கலியபெருமாள்

    பழநி கோயிலில் டிச.31 மற்றும் ஜன.,1ல் தரிசனம், அபிஷேக, அர்ச்சனை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் 85 லட்ச ரூபாய் வசூலாகியுள்ளது.

    சிந்தனை: முருகன் நல்ல வசூல் மன்னனாகத் தான் இருக்காரு...ஒரு கருங்கல்லை வைத்துக் கொண்டு இரண்டு நாளில் 85 லட்ச ரூபாய் ஈட்டமுடியும் என்பது நமது நாட்டை தவிர வேறு எங்கு காணமுடியும்? அவ்வளவு முட் டாள்கள் நிறைந்த ஊர்.. இதனை பெருமையை வேற செய்தி வெளியிட்டு கொள்(ல்)வது எவ்வளவு கேவலம்!

    - பரணீதரன் கலியபெருமாள்

    இப்பொழுது சொல்லுங்கள் பக்தி வியாபாரம் இல்லையா?

    தமிழ் ஓவியா said...


    இஸ்லாமில் நாத்திகர்கள்


    இஸ்லாம் மதத்தில் நாத்தி கவாதிகள் உண்டா? என்று கேட்டால் இருக்காது என்பது தான் பதிலாக இருக்கும். ஆனால் நாத்திகவாதம் அங் கேயும் தலையெடுத்திருக்கிறது என்பது தான் லேட்டஸ்ட் தகவல். அதுவும் எங்கே? பாகிஸ்தானில்!

    மிகக் குறைந்த எண்ணிக் கையிலான பாகிஸ்தான் இஸ்லாமிய இளைஞர்கள் கடவுள் மறுப்புக் கொள் கையைத் தொடங்கியிருக் கிறார்கள். நாங்கள் இஸ்லா மைத் துறந்து நாத்திகர்களா வோம் என்று அறிவித்திருக் கிறார்கள். எண்ணிக்கையில் இவர்கள் குறைவாக இருந் தாலும் இஸ்லாமியத் தீவிர வாதிகளின் கட்டளைகளும் கட்டுப்பாடுகளும் அவர்களின் சிந்தனை மாற்றத்திற்குக் கார ணம் என்று கருதப்படுகிறது.

    ஹஸ்ரத் நாகுதா என்ற முன்னாள் பாகிஸ்தான் முஸ் லிம் இதைத் தொடங்கியிருக் கிறார். ஏன் நாத்திகராக ஆனீர்கள்? என்ற கேள்விக்கு ஹஸ்ரத்தின் பதில்:

    நான் சவுதியில் இருந்தேன். இரண்டு முறை ஹஜ் பயணம் மேற்கொண்டவன் நான். நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுகை நடத்தியவன் நான். எனக்கு பதினெட்டு வயதான போது நான் முஸ்லிமாக இருப்பதற்குக் காரணம் என் பெற்றோர் முஸ்லிம்களாக இருந்ததன்றி வேறு காரணம் இல்லை என்பதை உணர்ந்தேன்.

    ஹஸ்ரத் லாகூரைச் சேர்ந்த கம்ப்யூட்டர் புரோகிராமர்.

    கடவுள் இருக்கிறார் என் பதை நான் உணர எந்தவித மான சான்றுகளும் கிடைக்க வில்லை. சான்று கிடைக்காத ஒன்றை நம்ப என் மனம் இடம் தரவில்லை என்கிறார் இன் னொருவர்.

    இந்த வாதங்கள் வேகமாகப் பரவி இஸ்லாமிய சமுதாயத்தில் ஊடுருவி விடுமோ என்ற அச்சம் கடுங் கோட்பாளர்களிடையே தொடங்கியிருக்கிறது. புதிய சிந்தனையாளர்கள் மொத்தம் நூறு பேர்தான் என்றாலும் அச்சம் அச்சம்தானே!

    தகவல்: கு. பஞ்சாட்சரம்
    மாவட்ட செயலாளர், திருவண்ணாமலை

    தமிழ் ஓவியா said...


    பெரியார் சிந்தனைப் பாதையில் இரு திரைப்பட இயக்குநர்கள்


    - மு.வி. சோமசுந்தரம்

    அறிவுலக ஆசான் ஏவிவிட்ட பகுத்தறிவுப் புயலில் சிக்கித் தட்டுத் தடுமாறி நிலை குலைந்து நங்கூரம் இல்லா நாவாய் போன்று உள்ள ஒரு சொல் கடவுள் தரை தட்டிய இந்த கப்பலில் பயணித்த மாலுமிகள், பிழைக்க வழிதேடிய முயற்சியில், சிலர் முகவரி இழந்தனர். சிலர் பிணமாக கரையில் கிடந்தனர். சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இவர்கள் ஆன்மீகவாதிகள்.

    தரை தட்டிய கப்பலை, காட்சிப் பொருளாகப் பார்ப்பவர் சிலர். தட்டிப் பார்த்தும், குத்திப் பார்த்தும், தடவி பார்த்தும் துள்ளி விளை யாடுபவர் சிலர். அப்படிப்பட்ட வர்களுள் இருவரைப் பற்றி கூறு வோம்.

    ஜிம்சஞ்சை ஒரு எழுத்தாளர் அவர் கடவுளுக்கு ஒரு கடிதம் என்ற கதையை எழுதினார். அந்தக் கதையை மய்யப்படுத்தி ஒரு குறும்படம் எடுக்கும் முயற்சியில் ஜிம்சஞ்சை முனைந்தார்.

    ஜிம் சிம்லாவுக்குச் சென்று வருவது வழக்கம். அங்கு பல திபெத்திய மக்களைப் பார்க்கும் நிலைமை இருந் தது. பலர், உள்ளூர் மக் களுக்கும், சுற்றலா பயணி களுக்கும் தேவையான பொருள்களை விற்கும் கடைகளை நடத்தி வந்த னர். அவர்களிடம் வியக்கத் தக்க தனித்தன்மை இருப் பதைக் கண்டார். அவர் களுடைய நட்பைப் பெற முயற்சித் தார். திபெத்தியர் கூச்சத் தன்மை யுடன் பழகினர். அவர்கள் கடை களில் பொருள்கள் வாங்குவதின் மூலம், அவர்களுடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

    சிறிது காலத்திற்குப் பிறகு குடகுப் பகுதியில் பயணம் செய்தபோது, சில திபெத்தியர்களை அவர் சந்திக்க முடிந்தது. அவர்களுடன் பேசி அவர் களைப் பற்றிய அறிவும், முயற்சியும் பயனளிக்கவில்லை. பலருடன் பேசி பழகும் தன்மை இல்லாதவர்கள் திபெத்தியர்கள் என்பதை ஜிம் உணர்ந்து கொண்டார். அதுவே அவரை திபெத்தியர் களைப் பற்றி மேலும் அறியவும், ஆய்வு செய்யவும் ஆர்வத்தைத் தூண்டியது.

    திபெத்தியர்கள், கர்ம வினை, மறு பிறப்பு, ஞானம் பெறுதல், கடவுள் தன்மை வழிபாட்டு முறை ஆகியவற் றில் கொண்டிருந்த நம்பிக்கை பற்றி அறிந் தார். அந்த அடிப் படைகளை கடவு ளுக்கு ஒரு கடிதம் என்ற கதையை எழுதி னார். இந்த கதை யையே, தன்னுடைய இயக்கத்தில் ஒருகுறும்படம் தயாரித் தார்.

    மைசூரிலிருந்து 85 கி.மீ. தூரத்தில் உள்ள பைவக்குப்பே என்ற இடத்திலுள்ள திபெத்தியர் குடியிருப்பு கோயில், 17 நிமிடங்கள் பார்க்கத்தக்க குறும்படத்தை டோல்மா (Dolma) என்ற பெயரில் எடுத்தார். இதில் நடித்தவர்கள், பேசி யவர்கள் அனைவரும் திபெத்தி யர்கள்.

    தமிழ் ஓவியா said...

    குறும்படத்தின் கதையின் சுருக்கம். டோல்மா, பள்ளியில் படிக்கும் 12 வயது இருக்கும் சிறிய பெண். கடவுளுக்கு அனுப்ப ஒரு கடிதத்தை டோல்மா எழுதினாள். அதை அனுப்ப கடவுளின் முகவரி அவளுக்குத் தெரியவில்லை. தன் தாயிடம் முகவரியைக் கேட்டாள். வீட்டு வேலையில் மூழ்கியிருந்த தாய் முதலில் படிப்பில் கவனம் செலுத்து என்று கூறி விட்டாள். அடுத்து தன் தாத்தாவிடம் சென்று கடவுளின் முகவரியைக் கேட்டாள் அவர்: நீ கடவுளுக்கு கடிதம் அனுப்புவதற்கு முன், ஒழுக்கமுள்ள நல்ல பெண் ணாக இருக்கக் கற்றுக் கொள் என்று புத்திமதி கூறினார். இப்படி அலைந்ததில், பள்ளிக்குச் செல்ல வேண்டிய பேருந்தைத் தவறவிட்டு விட்டாள் மிகவும் ஏமாற்ற மடைந்தாள்.

    அவள் அந்த கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு, கடிதத்தை என்ன செய்வதென்று நினைத்துக் கொண்டு அன்றைய நாளைக் கழித்தாள் மறுநாள், டோல்மா, ஒரு பாதிரி யாரை, ஒரு கிறித்துவ பிரச்சாரகரை, ஒரு சன்யாசியை சந்திக்கிறாள். அவர்கள் அனைவருமே, கடவுளின் முகவரியைத் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்தனர். அவள் கண்ணீர் விட்டு அழுகிறாள். அந்த கடிதத்தை அவள் கடவுளுக்கு அனுப்பினாளா? என்பதைப் பற்றி கூறுவதாகக் கதை செல்கிறது.

    திபெத்திய மொழியில் தயாரிக் கப்பட்ட இந்த திரைப்படம், சென்னையில் உள்ள திபெத்திய மக் களிடையே திரையிடப்பட்டது. (நன்றி: தி இந்து 24.11.2012)

    குறிப்பு: பாவம் குழந்தை டோல் மா, நாகம்மை இல்லக் குழந்தையைக் கேட்டிருந்தால், இல்லாத கடவுளின் முகவரியைத் தேடி அலையாதே என்று ஆறுதல் கூறி கண்ணீரைத் துடைத்து விட்டிருக்கும்.

    பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் ஒரு எழு ஞாயிறாக இருந்து, தன்னுடைய அறிவு ஒளி வீச்சால், பகுத்தறிவுப் பசுமை விளைச்சலை ஊக்குவித்தார். விளைந்த கருத்து நெல் மணியைக் கொள் முதல் செய்து உலகச் சந்தை யில், நல்ல மணிப் பெயர் என்று பாராட்டு கூற, வழங்கி வருபவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர்கள்.

    பகுத்தறிவு நெல்மணியை நாட் டின் சந்தையில் பெற்று பயன் பெற் றவர்கள் அதன் சுவையை, சிறப்பை உணரத் தொடங்கியுள்ளனர். அதனை எடுத்து உரைக்கவும் தயங்குவதில்லை. அந்த வகையில் பகுத்தறிவு இழையோடும், தன் அனுபவத்தைக் கூறுவதுடன் சிந் தனை வினாக்களையும் எழுப்பு கிறார் திரு. விக்ரம்பட்.

    திரு. விக்ரம்பட் திரைப்பட இயக்குநர், திரைப்படத் தயாரிப் பாளர், திரைப்பட உரையாடல் எழுத்தாளர். அவருடைய அனுபவ மும் உணர்வும், எழுத்து வடிவில் Times of India Time Life, 25.11.2012 இதழில் வெளி வந்துள்ளது நன்றி.

    தமிழ் ஓவியா said...

    திரு. விக்ரம்பட் வழங்கும் செய்தி யாவது: ஒரு சமயம், விக்ரம்பட் தயாரித்த திரைப்படங்கள் வெற்றி பெறவில்லை. அவருடைய தாயார், ஒரு ஜோசியரை அழைத்து, என்னு டைய படங்களின் தோல்விக்குப் பரிகாரம் காண விழைந்தார். ஜோசியத்தில்திறமையானவர். அவரின் சங்கடத்திற்கான சரியான பரிகாரம் கூறக் கூடியவர்கள் என்ற எண்ணத்தில் அழைக்கப்பட்டார். அவரின் மூலம் விக்ரம் பட்டின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று தாயார் கூறினார். ஏக்க மன நிலையில், தவறான வழிமுறைகளுக்கு வழிவிடும் நிலை ஏற்படுகிறது.

    ஜோசியர் வந்தார். படக்குசனி திசை இருப்பதே. அவரின் ஏமாற்றத் திற்குக் காரணம் என்பதைக் கண்டு பிடித்து கூறினார். அவரின் இன்னல், ஏமாற்றம் நீங்க பரிகாரமும் கூறி னார். அவர் ஒவ்வொரு சனிக்கிழமை யும் கோயிலுக்குச் செல்ல வேண்டும். எண்ணெயும் கருப்பு உழுந்துமான, காணிக்கை செலுத்தி வர வேண்டும் என்று கூறினார். வாழ்க்கையின் ஏமாற்றத்திலிருந்து விடுபட எளிமையான மருந்து குறிப்பாகக் காணப்பட்டதால், அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.

    சனிக்கிழமை கோயிலுக்குச் சென் றார். பயபக்தியுடன் காணிக்கையை செலுத்தினார். இரு கைகளையும் நீட்டி கடவுள் சிலையைத் தொட்டு கடவுளின் முழுமையான ஆசையைப் பெற கைகளை நீட்டினார். அந்த வேளையில் பூசாரி ஆத்திரமடைந்து, அவர் கைகளைத் தள்ளிவிட்டார்.

    இனி திரு. விக்ரம்பட், தொடர்ந்து நடந்ததை அவர் கூறுவதைக் கூறுவோம்.

    என்ன அவமானம்? என்ன இழிச் செயல் என்று கருதினேன். அப் படியே கூறினேன். கடவுள் சிலையை நான் தொடுவதை கூறினேன். கடவுள் சிலையை நான் தொடுவதை அனுமதிக்க முடியாது என்று பூசாரி கூறினார். நான் எதிர்ப்புத் தெரி வித்தேன். உனக்கு மட்டும் எப்படி அனுமதி உள்ளது என்று கேட்டேன் எனக்கு அனுமதி உண்டு என்பது தான் பதில் யார் அனுமதித்தது? என் கேள்வி. எங்கள் இருவருக்குமிடை யான உரையாடல் அத்துடன் முடிந் தாலும், என் நெஞ்சம் கொதித்தது.

    இந்த நிகழ்வைப்பற்றி சிறிது நேரம் எண்ணிப் பார்த்தேன். இதில் ஒரு நேரிடையான கொள்கை வகுத்திருப்பதைக் கண்டேன். எந்த ஒரு கடவுளும் ஒருவருடைய கட் டுப்பாடிலிருந்தால் அது உன்னுடைய கடவுள் இல்லை. நான் முன்பு கூறியதுபோல், என் எரிச்சலும், கொந்தளிப்பும் எந்த கடவுள் மீதோ, கோயிலின் மீதோ அல்ல. கடவுளை ஒருவர் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதைத்தான் எதிர்க்கிறேன். சுயநலவாதிகள் சிலர் கடவுளைத் தங்களின் வியாபாரப் பொருளாக ஆக்கிக் கொண்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.

    வியாபாரம் என்பதுதான் என்ன? எளிமையான விளக்கம் என்ன வென்றால், முதலில் ஆழமாக திட்டமிட்டு மதிக்கத்தக்க, விலை மதிக்க முடியாத ஒரு கருத்தையோ அல்லது பொருளையோ உருவாக்க வேண்டும். அதனை அடைவதற்கான ஏக்கத்தை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும். அடுத்த கட்டத்தில், நீ நேரிடையாக ஈடுபட வேண்டும். மக்கள் ஏங்கி நிற்கும் பொருளுக்கு நீ முகவராக மாற வேண்டும். தேவையை அதிகப்படுத்தி அதை நீ வழங்கியவராக செயல்படு.

    தமிழ் ஓவியா said...

    குறிப்பிட்டுச் சொல்ல வேண்டு மானால் கடவுள் மிகவும் ஒரு தேவைப்படும் பொருளாக மாற்றப் பட்டுள்ளது. எனவே அதற்குத் தனி கற்பனை யுக்தி தேவையில்லை. எனவே கடவுளை விற்பனை செய்யும் முகவர் உரிமையைப் பெறுவது எப்படி? சிரமம் இல்லை. நீ கோயிலை கட்டு. அதனை உன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்.

    தென்னிந்தியாவில் ஒரு கோயில் உள்ளது. யாத்ரிகர்களின் பணம் கொடுக்கும் சக்திக்கு ஏற்ப பல வகையான அனுமதி சீட்டை அந்த கோயில் வழங்கி வருகிறது. நல்ல பணம் படைத்தவர்கள் வரிசையில் நின்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. கடவுளை விரை வாக சந்தித்தும் வரலாம். வசதியற்ற மனிதர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் துன்பத்தை ஏற்கத்தான் வேண்டும். என்னைப் போல் அல்லாமல் நீ மெகிய வி.வி.அய்.பி. (மிக மிகப் பெரிய மனிதர்) யாக இருந்தால் மூலஸ்தானத்துக்குள் செல்லலாம். அதிர்ஷ்டம் இருந்தால் சிலையைத் தொடவும் செய்யலாம்.

    தமிழ் ஓவியா said...

    இவற்றையெல்லாம் நாம் பார்க்கிறோம் எப்படி நடக்கிறது என்றும் தெரிகிறது. இருந்தும் பொறுத்துக் கொண்டு உள்ளோம் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை விதித் துள்ள கடவுள் உன்னுடைய கட வுள் அல்ல. துன்பப்பட்டு கடவு ளிடம் செல்லவேண்டாம் ஏனென் றால் அது தவறான ஏமாற்றிக் கொள்ளும் வழிமுறையாகும்.

    ஒன்றை வித்யாசமான கற்பனை செய்து பார்ப்போம். மகன் ஒருவன் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வரு கிறான். வந்தவுடன் தன் தாயைத் தழுவி அன்பைப் பொழிய விரும்புகிறான் சிறுவன் ஆனால் அந்த வீட்டு காவலாளி, இதுசரியான நேரமில்லை என்று சிறுவனைத் தடுக்கிறான். அவன் அனுமதி அளித்தால்தான் சிறுவன் தாயைத் தழுவலாம். இது ஒரு எண் ணிக்கையாடத் தக்கது என்றால், நீ விரும்பக்கூடிய கடவுளுக்கும் உனக்கும் இடையே ஒருவன் தடை யாக இருப்பது இதைப் போன்று, ஏன் இதைவிட அதிகமாகவே கேலிக்குரிய ஒன்றாகும். நீ கடவுளை எப்பொழுது பார்க்க போகிறாய், எப்படி பார்க்கப் போகிறாய் என்பதை வேறு ஒருவர் எப்படி சொல்ல முடியும்? அப்படி ஏதும் நடப்பதாக இருந்தால் நீ உன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

    சிலர் நமக்கு கடவுள் மேல் உள்ள உரிமையைவிட அவர்களுக்கு உரிமை அதிகம் உள்ளது என்று கூறுபவருடைய பிடியிலிருந்து கடவுளைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்கு உள்ளது கடவுள் தான் வசிக்க குறிப்பிட்ட எந்த இடத்தை யும் தேர்ந்தெடுக்கவில்லை. கடவுள் எந்த பூசை, புனஸ்காரத்தையும் நம்புவதில்லை. அவை என்ன என்ப தும் நமக்கு விளங்குவதில்லை. கடவுள், பூசாரி எந்த மொழியில் பேசுகிறாரோ, அந்த மொழியில்தான் பேசுவார் என்பது சரி அல்ல. கடவுள் நிச்சயமாக மதியம் ஒய் வெடுப்பதில்லை.

    குறிப்பு: நயமாக, மென்மையாக, பழத்தில் ஊசி ஏற்றுவது போல் தந்தை பெரியார் எடுத்து வைத்த கருத்துக்களைக் கூறியுள்ள விக்ரம் பட்டுக்கு, தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா கருத்துக்களை எடுத்துக் கூறும் இயக்குநர்களின் துணிவும் தெளிவும் தேவைப்படுகிறது. இன்னும் பிற்போக்கு எண்ணத்தில் உள்ள ஒரு சில தமிழ்நாட்டு இயக்குநர்கள் பட்டின் அளவுக்காவது வரலாமே!

    தமிழ் ஓவியா said...


    சாதியை ஒழிக்க யாரை வீழ்த்துவது?


    சாதி என்பது இந்துக்கள் ஒருவரோடொருவர் கலந்துவிடாமல் தடுக்கிற ஒரு செங்கல் சுவரோ. முள் வேலியோ அல்ல. அப்படி சாதி வெறும் சுவராகவோ, வேலியாகவோ இருந்தால் அதைத் தகர்த்துவிடலாம். சாதி என்பது ஒரு கண்ணோட்டம் - ஒரு மனநிலை.

    எனவே, சாதியைத் தகர்ப்பது என்றால், வெறும் பவுதீகத் தடையைத் தகர்ப்பது என்பது அல்ல. மாறாக ஒரு சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். சாதியைக் கடைப்பிடிப்பதில் மக்களின் தவறு எதுவுமில்லை.

    சாதி என்ற கண்ணோட்டத்தை இந்துக்களின் மனதில் ஆழமாகப் பதிய வைத்து இருக்கிற இந்து மதம் மதத்தின் மீதே தவறிருப்பதாக நான் கருதுகிறேன். என்னுடைய இந்தக் கருத்து சரியான தென்றால், நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி - சாதியைக் கடைப்பிடிக்கும் மக்கள் அல்ல; சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்கு கற்றுத் தந்திருக்கிற சாஸ்திரங்களே உங்கள் பயங்கர எதிரி.

    தமிழ் ஓவியா said...


    தந்தை பெரியார் நினைவு நாள் சிந்தனை


    இல்லாத கடவுளைத் தேடாதே
    இருக்கும் அறிவை இழக்காதே
    பொல்லாத பார்ப்பானை நம்பாதே
    பொருளை இழந்து அலையாதே
    தமிழா! நீ இந்து அல்ல
    இந்து என்றால் சூத்திரன் ஆகிறாய்
    சூத்திரன் என்றால் தேவடியாள் மகன்
    என்று பொருள்

    ஆதாரம்: இராமாயணம், பாரதம், பகவத் கீதை, மனுநீதி நூல் அ. வையாபுரி, தலைவர் திராவிடர் கழகம் கந்திலி ஒன்றியம் (வேலூர் மாவட்டம்)

    தமிழ் ஓவியா said...


    இறந்தவரின் விருப்பத்தை நிறைவேற்றுவது யார் கடமை?


    ஒருவர் இறக்கும் போது தன்னு டையது எனச் சொல்லகூடிய அனைத்தையும் விட்டுச் செல்கிறார். ஏன்? இதுநாள் வரை பேணிக் காத் திட்ட உடலையே புறக்கணிக்கிறார்.

    சிலர் தங்கள் சொத்தை எப்படி எல்லாம் பிரிக்க வேண்டுமென்று விவ ரமாக உயில் எழுதி வைக்கின்றார்கள்.

    மருத்துவ ஆராய்ச்சிக்கு உதவும் பொருட்டு சிலர் தங்கள் உடல் உறுப்புகளையும், இன்னும் சிலர் தங்கள் முழு உடலையும் மருத்துவக் கல்லூரிக்கு வழங்க வேண்டுமென்று எழுதி வைத்துவிட்டு உயிர் துறக்கின்றார்கள்.

    மருத்துவ அறிவியல் நாளுக்கு நாள் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கின்றது. இறந்தவர் தானமாக வழங்கிய விழியை விழி இழந்தோர்க்கும் பொருத்துவது என்பது அன்றாட நிகழ்வாகி விட்டது.

    இறந்தவரின் உடலில் இருந்து பெறப்பட்ட இதய வால்வுகள், கல்லீரல், கணையம் சிறுநீரகங்கள், உயிர் வாழும் தேவையானவர் களுக்குப் பொருத்தப் படுகின்றன. இப்பொழுது நாம் ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும். இறந்தவரின் உறவினர்கள், அவரின் உடல் உறுப்புக் கொடை ஆசையை நிறைவேற்றிட எந்த வகையில் எல்லாம் உதவுகின்றார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    அண்மையில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்றினை குறிப்பிட விரும்புகின் றோம். சாகித்ய அகாதமியின் மேனாள் தலைவர் சுனில் கங்கோபாத்யாய் அவர்கள் காலமானார். அவர் உயிர் வாழும் பொழுது தன்னுடைய உடல் மருத்துவக் கல்லூரிக்கு, மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிக்கு வழங்கிட வேண்டுமென்று தம்முடைய உள்ளக் கிடக்கையை மடல் ஒன்றில் எழுதி வைத்துவிட்டு மறைந்தார். இவ்வளவுப் புகழ் வாய்ந்த மாமனிதரின் நெருங்கிய உறவினர்கள் என்ன செய்தனர் தெரியுமா? அவரின் விருப்பத்துக்கு மாறாக உடலை எரியூட்ட தீர்மானித்தார்கள்.

    இது குடும்பத்து தனிப்பட்ட ஆசையாக இருக்கலாம். குடும்பப் பிரச்சினையில் மற்றவர்கள் தலை யிடக்கூடாது என்பது உண்மைதான். ஆனால் இறந்தவரின் ஆசை என் னாவது! இறந்தவர்களுக்கு உதவப் போவது யார்? இதற்கான சட்ட திட்டங்கள் அரசால் வகுக்கப்படுமா? தொண்டு நிறுவனங்கள் இப்பிரச்சி னையை கையில் எடுத்து பொது மக் களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத் துமா? பொறுத்திருந்து பார்க்க வேண் டும் இதைப் பகுத்தறிவாளர்கள் சிந்திக்க வேண்டும்.

    தமிழ் ஓவியா said...


    ராமன் பாலத்தை என்ன செய்யலாம்?


    கேள்வி: சேது சமுத்திரத் திட்டத்தை தமிழக முதலமைச்சரே தேவையில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்திருப்பதற்கு என்ன காரணம்?

    பதில்: கடலுக்குள் உள்ள இராமர் பாலம் இடியும் என்றும், சுற்றுச் சூழலுக்கு கேடு என்றும் கூறப்படுகிறது. உண்மையில் இராமர் பாலம் இருந்தால், அதை அப்படியே பெயர்த்தெடுத்து தரையில் மறு நிர்மாணம் செய்துவிடலாம். எகிப்தில், அஸ்வான் அணை கட்டும்போது பத்தாயிரமாண்டு பழமையான பிரமிட்டை அப்படித்தான் மறுநிர்மாணம் செய்தார்கள். இன்று அஸ்வான் அணை. பிரமிடு இரண்டுமே இருக்கின்றன. ஒரு பாலம் கட்டுவதுகூட அங்கு அதற்கு முன்பிருந்த சுற்றுச்சூழலுக்கு கேடு தான். அதற்காக எதையும் கட்டாமலிருக்க முடியுமா?

    சேதுக்கால்வாய் திட்டம் என்பது. சூயஸ் கால்வாய் எகிப்தை செழிக்க உதவியது போல் தமிழ்நாடு செழிக்க உதவுவதாகும்.

    நன்றி: இலட்டு

    தமிழ் ஓவியா said...


    பெண் ஏன் அடிமை ஆனாள்?


    எனது மகள் போன்ற
    என் நண்பனின் மகளே!
    பெண்ணியம் பேசும்
    பெண்களைப் பிடிக்காது
    எனக்கு என்றாய் !
    பெண்களுக்கு எதற்கு
    உரிமை என்றாய் !
    இருக்கும் உரிமைகளும்
    சலுகைகளும் போதும் போதும் என்றாய்
    அலுப்பாய் வெகு சலிப்பாய் பழம்பெருமை பேசுகிறாய்
    பெண்களை மதித்த நாடு
    என்கிறாய் !
    வரலாறு படித்த உனக்கு
    உண்மை வரலாறு
    அறிவதற்கு வாய்ப்பில்லை !

    ஏழு ,எட்டு வயதில்
    திருமணம் முடிந்து
    கணவன் இறந்து
    விதவையென வீட்டுக்குள் வெள்ளைச்சேலைக்குள்
    புதைந்து புதைந்து
    அழுத போன நூற்றாண்டு பெண்கள் அறிமுகமில்லை உனக்கு !

    வீட்டில் விசேசம் !
    மூளியே உள்ளே அடங்கு எனப் பெற்றோர்களாலேயே
    வீட்டுக்குள் முடக்கப்பட்ட
    சிறுமிகளை அறியாத பெண் நீ !

    கண்வன் இறந்தான் !
    நான் என்ன செய்வேன்!
    என்னை வாழ விடுங்கள் என்று கெஞ்சிய பெண்கள்
    உடன் கட்டை எனும் பெயரில்
    உயிரோடு கணவன் பிணத்தோடு
    எரிக்கப்பட்ட வரலாறு அறியாத பெண் நீ !

    பெரியவளாவதற்கு முன்னே
    திருமணம் முடித்தல் வேண்டும்
    இல்லையெனில் பெண்ணின்
    தீட்டை அப்பன் குடிக்க வேண்டும் எனச்
    சாத்திரம் எழுதிவைத்த
    புண்ணிய தேசம் இது !
    புரியாது என் நண்பனின் மகளே ! இப்போது புரியாது உனக்கு ! முதுகலைப் பட்டம் பெற்றவள் நீ!
    கல்லூரிக்கு உள்ளே போக
    முத்துலெட்சுமி ரெட்டிகள் பட்ட பாடெல்லாம் கதையாகக் கூட தெரியாது உனக்கு!
    படித்தெல்லாம் கடவுள்
    கொடுத்த வரம் என நினைக்கிறாய் !
    கடவுளின் பெயரால் கல்லூரி பள்ளிகளில் உள்ளே நுழைய விட மறுக்கும்
    இந்த நாள் தலிபான்களையும்
    அந்த நாள் மனுக்களையும் அறியாமல் பிதற்றுகிறாய் ! அடங்கு ! அடங்கு !
    அப்பனுக்கு, புருசனுக்கு
    முடிவில் பிள்ளைக்கு
    அடங்கு அடங்கு எனச்
    சொல்லும் மதங்களின்
    குரலை மதித்து பேசுகிறாய் !
    பச்சைப் பிள்ளை நீ !
    கிளிப்பிள்ளை போல
    சொல்லிக்கொடுத்ததை
    ஒப்பிக்கிறாய் என்னிடம் !

    மதத் தீவிரவாதிகளாம்
    தலிபான்களும்
    ஆர் எஸ் எஸ்-களும்
    ஒரே குரலில்தான்
    கூறுகிறார்கள்
    தங்களுக்குள்
    வேறுபாடுகள் இருந்தாலும்

    குழந்தை பெறவும்
    குடும்பத்தைக் காக்கவும்
    மட்டுமே பெண்களென
    ஒரே குரலில் கூறுகிறார்கள்
    படிக்க வேண்டாம் பெண்கள்
    படுக்கையறைக்கும்
    சமையலறைக்கும் மட்டுமே
    படைக்கப்பட்டவள் பெண்
    என்கிறார்கள்
    மதங்கள் உன்
    குரல்வளை நெரிக்கும்
    கொடுங்கரங்கள் !
    பெண்களுக்கு எதிராய்
    ஆண்கள் நடத்திய
    அநீதிகள்தான் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாறு !

    இன்னும் இரு பத்தாண்டுகள்
    கழித்து பேசுகிறேன் உன்னிடம் !
    கணவனிடம் சமூகத்திடம்
    பெண் என்பதால் மட்டுமே
    கல்லடிகளும் சொல்லடிகளும்
    பெறும் பெண்களை நீ
    அறிந்திருக்கக்கூடும் அந்த வேளை !

    சடங்குகள் என்னும்
    சங்கிலித்தொடர்
    பெண்கள் வாழ்வைக் கொல்லும்
    நஞ்சுத்தொடர் எனும்
    புரிதல் இருக்கக்கூடும் அன்று உனக்கு !

    இரவல் கருத்துக்களால்
    பேசும் இந்த நாள் போல் அல்லாது
    அனுபவக்கருத்துக்களால்
    பேசும் அந்த நாளில்

    பெண் ஏன் அடிமை ஆனாள் ?
    அடிமை விலங்கை உடைத்தெறிய
    பெண்கள் செய்ய மறந்தது என்ன ?
    என்பதனைப் பாடமாய்க்கூட
    நடத்தக்கூடும் அந்த நாளில்
    நீ எனக்கு !

    - முனைவர் வா.நேரு

    தமிழ் ஓவியா said...


    இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?


    1942இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்த திருவாங்கூர் மகாராணி சமஸ்கிருத வளர்ச்சிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை தந்த போது - தந்தை பெரியார் அதை எதிர்த்து போராடி _ அந்தப் பணத்தை மாணவர் விடுதி வளர்ச்சிக்குச் செலவிட ஏற்பாடு செய்தார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

    ####

    நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக் கல்லூரிப் பட்டப் படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிய வேண்டும் என்று இருந்த நிலைபற்றி உங்களுக்குத் தெரியுமா?

    ####

    1938இல் ஆச்சாரியார் கட்டாயமாக இந்தியைப் புகுத்தியதோடு _ இந்தியோடு _ சமஸ்கிருதத்தையும் சேர்த்துப் புகுத்த வேண்டும் என்று ஆனந்த விகடன் பார்ப்பன ஏடு தலையங்கம் தீட்டியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

    ####

    15.10.1927இல் பாலக்கோட்டில் காந்தியார் காஞ்சி சீனியர் சங்கராச்சாரியை சந்திக்கச் சென்றபோது தாழ்த்தப்பட்டோர் கோயில் பிரவேசம் சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று சமஸ்கிருதத்திலேயே காந்தியிடம் அவர் சொன்னார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

    ####

    பார்ப்பனப் பெருச்சாளிகளிடமிருந்து கோயில் சொத்துக்களைக் காப்பாற்ற 1920இல் பனகல் அரசர் இந்துஅறநிலையத்துறை மசோதாவைக் கொண்டு வந்தபோது சத்தியமூர்த்தி அய்யர் சட்டசபையிலே காட்டுக் கூச்சல் போட்டு எதிர்த்து இந்துக் கோயில்கள் தங்கள் சமூகத்துக்காக உரியது என்று சமஸ்கிருதத்திலேயே பேசினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

    ####

    1927இல் திருச்சி தேசிய கல்லூரிக்கு வருகை தந்த காந்தியாருக்குப் பார்ப்பனர்கள் சமஸ்கிருதத்திலே வரவேற்பு தந்தார்கள் என்பதும் அதைக் காந்தியார் எதிர்த்தார் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

    தமிழ் ஓவியா said...

    உங்களுக்குத் தெரியுமா?


    1935 ஆம் ஆண்டில் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரஹாரத்துக்கு மலம் எடுக்க தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக்கூடாது-அதற்குப் பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்யவேண்டும் என்று பார்ப்பனர்கள் வலியுறுத்தினார்கள்.

    இதன்மூலம் மலம் எடுக்கக்கூட அக்கிரஹாரத்திற்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்ககூடாது என்கிற அளவிற்கு தீண்டாமையைக் கடைப்பிடித்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    இதில் புதைந்திருக்கும் இன்னொரு உண்மை என்ன? தாழ்த்தப்பட்டவர்களையும்,சூத்திரர்களையும் பார்ப்பனர் ஒரே கீழ் நிலையிலேயே வைத்திருந்தனர் என்பதுதானே?

    தமிழ் ஓவியா said...

    உலகம் அழிந்ததா? உடான்ஸ் உடைந்ததா?


    உலகம் அழியாது என்பதை விளக்கும் விழிப்புணர்வுத் துண்டறிக்கைகள் அளித்து விளக்கவுரையாற்றி மூடநம்பிக்கையை முறியடிக்கப்பட்டதற்காக இனிப்புகளையும் தி.க.தலைவர் கி.வீரமணி வழங்கினார் (சென்னைக் கடற்கரை-22.12.2012)

    சரியாக ஓராண்டுக்கு முந்தைய உண்மை இதழின் அட்டைக்கட்டுரை- (ஜனவரி 1-_15, 2012) `உலகம் அழியப்போகிறதா? என்ற தலைப்பில் அமைந்திருந்தது. கடந்த (2012) டிசம்பர் 21 அன்று உலகம் அழியப்போகிறது என்ற பொய்யை அம்பலமாக்கி கி.அழகரசன் எழுதியிருந்தார். பகுத்தறிவுத் தர்க்க ரீதியாகவும், அறிவியல், வானவியல் விளக்கங்களுடனும் உலகம் அழியாது; அச்சம் வேண்டாம் என்ற விழிப்புணர்வு ஊட்டப்பட்டிருந்தது.

    ஆனால், ஊடகங்களும் பத்திரிகைகளும் உலகம் அழியப்போகிறது என்றே பீதியைக் கிளப்பின. 2009 ஆம் ஆண்டில் வெளியாகி உலகின் பல மொழிகளிலும் வெளியான 2012 என்ற இங்கிலீஷ் திரைப்படம் ஏற்படுத்திய பீதியும் சேர்ந்துகொண்டது. அந்தப் படத்தைப் பார்த்தவர்கள் தமது கனவுகளில் உலகம் அழிவது இப்படித்தான் இருக்குமோ என்று அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த பீதி கிளப்பும் வேலை ஆதி நாட்களிலேயே தொடங்கியதாகும்.மதங்கள் தங்கள் வியாபாரத்திற்காகவும், கடவுள் கற்பனையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும் அந்நாளிலிருந்தே இப்படிப் புளுகுவது வாடிக்கைதான். அறிவியல் வளராத அந்தக் காலத்தில்கூட மெல்ல மெல்லத்தான் இப்படிப்பட்ட வதந்திகள் பரவின. இப்போதோ ஒரு நொடியிலேயே உலகம் முழுதும் வதந்தியைப் பரப்பும் வேலையை ஊடகங்கள் செய்கின்றன. இந்த வதந்தியும் 2012 முழுதும் பரப்பட்டது.

    நாம் நினைவுபடுத்திப் பார்த்தால் நம் வாழ்நாளில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி ஒரு வதந்தி பரப்பட்டதை அறியமுடியும். இதில் வேடிக்கை என்னவென்றால்,ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணம் சொல்லப்பட்டதுதான். இந்தமுறை நாசாவே சொல்லிவிட்டது என்று ஊதிவிட்டார்கள். மாயன் நாட்காட்டி டிசம்பர் 21, 2012 ல் முடிகிறது என்று சொல்லத்-தொடங்கியவர்கள் பின்னர், பைபிளிலும் உலகம் அழியும் என்றும், கணவன் மனைவியரில் ஒருவர் மட்டும் பிரிக்கப்படுவர் என்றும் சொல்லப்பட்டிருப்பதாக கிறித்துவ மத நம்பிக்கையாளர்கள் பேசத்தொடங்கி-விட்டனர். போதாக்குறைக்கு சில பார்ப்பனர்களும் இதுவரை உள்ள நினைவுகள் எல்லாம் மறந்து-போகும். அந்த நாளுக்கு அடுத்து புதிதாகத்தான் எல்லாவற்றையும் தொடங்கவேண்டும் என்றெல்லா-கூட சொன்னார்கள். எட்டு (அஷ்ட) கிரகங்கள் ஒன்று சேரப் போகின்றன; அதனால் உலகம் அழியப் போகிறது என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே புரளியை கிளப்பி விட்டனர் சிலர்; ஒன்றும் ஆகவில்லை. 1990 களின் தொடக்கத்தில் 2000 ஆம் ஆண்டு பிறந்தால் உலகம் அழிந்துவிடும் என்றார்கள்.அதன் பின் 12 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனால்,புதிது புதிதாக உலகம் அழியும் என்ற பொய் மட்டும் உருவாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

    அச்சமும் அறியாமையும் பெற்ற குழந்தையே கடவுள் மூடநம்பிக்கை. அந்த மூடநம்பிக்கை வாழும் வரைதான் மதங்களும்,கடவுளும் மக்கள் மனங்களில் வாழ முடியும். இந்த உண்மையை அறிந்த மதவாதிகள் சொல்லும் பொய்களே இப்படிப்பட்ட வதந்திகள். இவற்றிற்குத் துணைசெய்யும் அமைப்புகளாக வணிக நோக்கம் மட்டுமே கொண்ட செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.

    அறிவியல் உலகம் இந்த அச்சத்தைப் போக்கின. ``இதற்கு எந்தவித ஆதாரமுமில்லை; அறிவியல், வானவியலுக்கு முற்றிலும் மாறான கற்பனை, கட்டுக்கதை, புரட்டு என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த விஞ்ஞானி (NASA) - மூத்த ஆய்வாளர் - டாரன்யோமென்ஸ் (Darren Yeomans) கூறினார். கார்ல்சேகன் (Carlsegan)என்ற பிரபல வானவியல் நிபுணர், அசாதாரண நிகழ்வுகளை நம்ப வேண்டுமானால் அதற்கு அசாதாரண சாட்சியங்கள் அவசியம் தேவை என்றார்.

    தமிழ் ஓவியா said...


    `நிபுரு என்ற ஒரு பெரிய பொருள் (Object) ஒன்று வந்து மோதி அழிக்கும் என்றும் கதை கட்டியுள்ளனர்; இதற்கு எவ்வித சாட்சியங்களோ, ஆதாரங்களோ கிடையாது. டெலஸ்கோப்பிஸ் ஆதரவு சான்றுகளோ இப்படி சூரிய குடும்பத்தில் புவி ஈர்ப்பின் மூலம் ஏதும் இல்லை என்று கூறுகின்றன. ஒவ்வொரு டிசம்பர் மாதத்திலும், பூமியும் சூரியனும் மில்கிவே என்ற பின் பாதை அருகில் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழமையான நிகழ்வே. அது எந்த ஒரு விளைவையோ, வினையையோ ஏற்படுத்துவதில்லை. இதுபோன்ற புரளிகளுக்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ``தற்போதைக்கு உலகம் அழிய எதுவிதமான சாத்தியமும் இல்லை.அது மட்டுமின்றி விண்கல் ஒன்று உலகை தாக்கப்போவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுவரையில் அவ்வாறான விண்கல் எதுவும் சூரிய மண்டலத்துக்குள் வரவில்லை என்பது உறுதி. இதேபோல துருவ மாற்றம் ஏற்படப்போகின்றது இதன்போது 3 நாள் தொடர்ந்து உலகம் இருளாகவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்-களிலும் எதுவித உண்மையும் இல்லை என நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் கூறியுள்ளார்.

    2012 டிசம்பர் மாதம் தொடங்கியவுடனேயே பத்திரிகைகள் அட்டைப்படக் கட்டுரைகள் எழுதின. தொலைக்காட்சிகள் டிசம்பர் 15 லிருந்து விவாதங்கள் நிகழ்த்தின.அவற்றில் வானவியல், அறிவியல் நிபுணர்களும், பகுத்தறிவாளர்களும் பங்கேற்று மக்களின் அச்சம் போக்கினார்கள். கூடவே காமெடிக்காக சில ஜோதிடர்களும் பேசினார்கள். நம்முடைய ஜோதிடர்கள் காலத்தின் போக்கை அறிந்தவர்கள் அல்லவா? தமிழகத்தைப் பொருத்தவரை இந்த வதந்தியை மக்கள் பெருமளவு புறந்தள்ளியதை அறிந்து உலகம் அழியாது என்று ஒத்தூதினார்கள். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்கள் உலகம் அழியும் என்பதை நம்பவில்லை என்று கூறியது நல்ல அறிகுறியாகும்.

    உலகின் பல நாடுகளிலும் இந்த மூடநம்பிக்கை ஆட்கொண்டது. மெக்சிகோ நாட்டினர் பலர் மாயன்கள் வாழ்ந்த பிரமிட் போன்ற கோவில்களில் புகுந்துகொண்டால் உலகின் அழிவிலிருந்து தப்பிவிடலாம் என்று நம்பி அந்தப் பகுதிக்குப் போனார்களாம். சீனாவில் சிலர் கடலுக்குள் சென்று விட்டால் தப்பிவிடலாம் என்று நம்பி படகுகளையும், சிறு கப்பல்களையும் எடுத்துக் கொண்டு கடலுக்குள் சென்று-விட்டார்களாம். சீனாவில் இன்னும் சிலரோ மலை உச்சி மீது சென்று உலகம் அழிவதற்குள் தற்கொலை செய்துகொள்ளக் கிளம்பி-யிருக்கிறார்கள். அவர்களை அந்நாட்டுக் காவல்துறை மீட்டுள்ளது.கடலும்,மலையும் பூமிப்பந்தின் மீதுதான் இருக்கின்றன.பூமி அழிந்தால் அவையும் அழியும் என்ற அடிப்படை உண்மையைக் கூட அறியாதவர்களாக அவர்கள் இருந்திருக்-கிறார்கள். இதற்கு என்ன காரணம்.இவர்கள் இன்னும் தமது பகுத்தறிவை பயன்படுத்தாமல் இருப்பதுதானே?

    படிப்பறிவு கிடைத்துவிட்டது; ஆனால், பகுத்தறிவு? படிப்பு வேறு; அறிவு வேறு என்று பெரியார் சொன்னது சரிதானே!

    இன்னும் எவ்வளவுதான் அறிவியல் வளர்ந்தாலும் அது மக்களை மேலும் மேலும் ஏமாற்றவே பயன்படுகிறது என்பது கொடுமை-யல்லவா. கடந்த ஓராண்டாக பத்திரிகைகள் எழுதிய எழுத்துகள் என்ன ஆயின?ஊடகங்கள் ஒலித்த ஓலக்குரல் எங்கே போயின? மக்களை அச்சம் கொள்ளச் செய்யும் இதுபோன்ற ஒரு செய்தியை ஆராயாமலும்,அதன் அறிவியல் உண்மைகளை எடுத்துக் காட்டாமலும் அப்படியே வெளியிடுவது நியாயமா? ஊடகங்கள் தம்முடைய பொறுப்பை உணர்ந்து எந்த ஒரு அறிவியல் ஆதாரமற்ற இது போன்ற செய்தியையும் வெளியிடுவதைத் தவிர்க்கவேண்டாமா?

    பள்ளிக்கல்வியில் ஆரம்பக் கல்வியில் இருந்தே அறிவியல் பாடத்துடன் பகுத்தறிவையும் போதிக்கும் கல்விமுறை வரவேண்டும்.இல்லையேல் இன்னும் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் உலகம் அழியும் என்ற பொய் வேறு ஒரு வடிவில் உலாவரும்.

    - அன்பன்

    தமிழ் ஓவியா said...

    நீதி



    மருத்துவ மனைகளையும் கல்வி நிலையங் களையும் பார்த்துப் பயந்த மக்கள், இன்றைக்கு நீதிமன்றங்களையும் பார்த்துப் பயப்படுகிறார்கள். சின்ன வழக்கு தொடுப்பதில் தொடங்கி, வக்கீல் கட்டணம், தீர்ப்புக்கான காலம் என நினைத்தாலே மலைக்க வைக்கின்றன நீதிமன்ற நடவடிக்-கைகள். அதுவும் உச்ச நீதிமன்றம் நாட்டின் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கிறது. இந்த நிலையை முற்றிலும் மாற்ற வேண்டும்!

    - முன்னாள் நீதிபதி, வீ.ஆர்.கிருஷ்ண(ய்யர்)

    இந்தியன்

    தமிழ் ஓவியா said...

    இந்தியன்



    ஓர் அந்நியன் -_ அதுவும் சுற்றுலாப் பயணிபோல வந்து செல்பவன் _ ஒரு நாட்டின் அரசியல், சமூக நிலையை அத்தனை எளிதாக மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால், ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிகிறது. ஏற்றத்தாழ்வு, எல்லா இடங்களிலும் இருக்கிறது என்றாலும், இந்தியாவில் உச்சத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. அது என்னை அறைகிறது.

    - ஆங் லீ.ஹாலிவுட், திரைப்பட இயக்குநர்

    தமிழ் ஓவியா said...

    பெரியார்



    சமூக நீதிக்கான போராட்டத்தில் பெரியார் வகித்த பங்கு மகத்தானது. எத்தனை விமரிசனங்களும், நிராகரிப்புகளும் வந்தாலும் அதை மறைக்க முடியாது. வரலாறு பெரியாரை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தன்னுடனேயே இணைத்துச் செல்லும். அவர் ஒரு காலகட்டம். அவரின் பங்களிப்பு, கருத்தியல் தளத்திலானது. அரசியல் ரீதியாக நாம் வென்றெடுக்கிற பல உரிமைகள் கருத்தியல் தளத்தில் மாற்றம் ஏற்படும்போது மட்டுமே முழுமை பெறுகின்றன என்ற நுட்பத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு இருந்த துணிச்சலும், அறிவு நேர்மையும் எவருக்குமில்லை.

    பெரியாரை விமர்சிக்க வேண்டாம் என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அந்த விமரிசனத்தையும் பகுத்தறிவு அடிப்படையில் வைத்தால் சரியாக இருக்கும். தமிழ்தேசியத் தலித்திய அரங்குகளில் பெரியார் மீது வைக்கப்படும் விமரிசனங்கள் உணர்ச்சி வயப்படுவதன் வெளிப்பாடாகவே பெரும்பாலும் இருக்கின்றன. ஒன்று மட்டும் நிச்சயம். பெரியாரை நிராகரித்தால் தலித்திய, தமிழ் தேசிய கருத்தியல் செயற்பாட்டில் அடிப்படைவாதம் வளரும். மேலும், அது இந்துத்துவாவின் வளர்ச்சிக்கும் கைகொடுக்கும். ஓர் உதாரணம் சொல்கிறேன். அண்மையில் கிருஷ்ணகிரி அருகே ஒரு பள்ளி வளாகத்தில் நிறுவப்பட இருந்த பெரியாரின் சிலை தடுக்கப்பட்டு, அங்கே ஹெட்கேவரின் சிலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்-பட்டன. தீவிர இந்து சார்பாளரான அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவரின் இந்த முயற்சி நீதிமன்ற தலையீட்டுக்குப் பிறகே நிறுத்தப்பட்டது.

    - அழகியபெரியவன், இலக்கியவாதி

    தமிழ் ஓவியா said...


    கடவுளா? குப்பையா?



    சாலையோரங்களில் குப்பை கொட்டுவதும், கழிப்பிடமாகப் பயன்படுத்துவது நம்ம ஊருக்குப் புதிதல்ல. இந்தத் தொல்லையைக் களைய நம்மாட்கள் ஒரு உத்தியை வைத்திருக்கிறார்கள். அந்த இடத்தின் சுவரில் உடனே சர்வ மதக் கடவுள் படங்களை வரைந்துவிடுவார்கள். அதனால் அந்த இடம் குப்பை மற்றும் கழிவுகளில் இருந்து தப்பிவிடும் என்பதற்காக அப்படிச் செய்து வருகிறார்கள். ஆனால், பல இடங்களில் அதையும் தாண்டி கழிக்கவோ, குப்பை கொட்டவோ அருகில் வேறு இடங்கள் இல்லாத சூழலில் அந்தக் கடவுளர்களின் முன்பே கழித்துவிடுவது உண்டு. என்ன செய்வது? இயற்கைக்கு முன்னால் செயற்கைகளால் நிற்கமுடியாதே! அப்படி ஒரு இடந்தான் இந்தப் படம். கடவுளின் முன்னால் குப்பை கொட்டப்படுகிறது எனக்கவலைப் பட்டுள்ளார் அப்படத்தை எடுத்துள்ள செய்தியாளர். குப்பை கொட்டுவதற்கு ஒவ்வொரு தெருவிலும் குப்பைத்தொட்டிகளை வைத்து அதனை முறைப்படி, நேரம் தவறாமல் அகற்றினால் எல்லா இடங்களிலும் குப்பை கொட்டுவார்களா? மாநகராட்சிக்கு, கவுன்சிலர்களுக்கு புத்தி சொல்லாமல் மக்களைக் கடிந்து கொள்வது சரியா?

    தெருவுக்குத் தெரு கோவில்களைக் கட்டுவதில் ஆர்வம் காட்டும் பொது நல வாதிகள்(?) ஒவ்வொரு தெருவிலும் கழிப்பிடம் கட்ட முனைவதில்லையே ஏன்? இதனைச் சுட்டிக்காட்ட பத்திரிகைகளும், ஊடகங்களும் முன்வருவதில்லையே ஏன்?.

    தமிழ் ஓவியா said...

    கண்மூடி அடியார்


    அய்ந்தறிவு விலங்குகளுக்குண்டு. மேலே
    ஆறாவ தாம்அறிவு மனிதர்க் குண்டு.
    சிந்திப்ப தைஒத்தி வைத்து விட்டுச்
    சிகைவளர்க்க மாத்திரமா சிரம்நமக்கு?

    முந்திப்போய் எத்தனையோ கண்டார், மேற்கே
    மூளைகொண்டு வெற்றிகண்டார். இங்கே நாமோ
    மந்திரத்தில் மாவிழுமென் றெண்ணி வானை
    வாய்பிளந்து பார்த்துக்கொண் டிருக்கி றோமே!

    படையெடுக்கும் பொய்மைகளை உள்ளே விட்டுப்
    பகவானை நிழலுக்குள் வைப்ப தற்குக்
    குடையெடுத்துப் போவதென்ன தெளிவா? உச்சிக்
    கோபுரங்கள் நிழல்தருமா எளியார் வாழ?
    வடைமாலை சாத்துவதால் உடையற் றோரை
    வாடைவந்து கடிக்காமல் தடுத்தல் ஆமோ?
    படுக்கையறை கல்லுக்கு எதற்கு? ஆயும்
    பகுத்தறியா வெண்கலத்து மணிமு ழக்கு?

    தீச்சட்டி ஏந்துவதும் சுற்றுப் பாறை
    தேய்ந்துவிட உருளுவதும், கல்முன் நின்று
    கூச்சலிட்டு வேண்டுவதும், வேம்புக் கொத்தால்
    கூச்சத்தைக் காப்பதுவும், உடலில் ஊசி
    பாய்ச்சுவதும், ஓடுகவிழ் மண்டை மீது
    பால்தேங்காய் உடைப்பதுவும் அறிவுதானா?
    சூழ்ச்சிகளால் சுருண்டோரே கண்விழிப்பீர்.
    தோள்உயர்த்தி உலகத்தைச் சுற்றிப் பார்ப்பீர்.

    பத்தியமாய்ச் சாப்பிடும்நீர் அங்கே சென்று
    பக்தியுடன் மண்சோறு தின்ன லாமா?
    சொத்தைகளே - ஆயிரமாய்ப் பால்கு டங்கள்
    சுமந்துசென்று கல்மீது ஊற்ற லாமா?
    சத்துணவு கிடைக்காமல் குன்றிப் போகும்
    சாமான்யர் குழந்தைகளைப் பார்த்துள் ளீரா?
    நித்திரையில் வாழ்வோரே - பழமும் பாலும்
    நிதம்எவர்க்குத் தேவைஎனச் சிந்தித் தீரா?

    - நீலமணி

    தமிழ் ஓவியா said...



    நூல்: அப்பனின் கைகளால் அடிப்பவன்
    ஆசிரியர்: அதியன்
    வெளியீடு: நறுமுகை,
    29/35, தேசூர்பாட்டை,
    செஞ்சி - 604 202
    கைபேசி: 94861 50013
    பக்கம்: 80, ரூ. 60

    நூலிலிருந்து...

    சாராயம்
    கருவாடு
    சுருட்டு
    ஆடு
    மாடு
    பன்னி
    கோழியென பலியிட்டு
    இன்று
    என்னைப் போலவே
    நீயும் வணங்குகிறாய்
    என் பாட்டன்களான
    மதுரை வீரன்
    இருச்சி
    காத்தவராயன்
    நந்தன் என
    அன்று
    உன் பாட்டனுக்கெதிராய்
    அடங்க மறுத்து
    அத்து மீறியதால்
    பழி வாங்கப்பட்டவர்கள்
    இன்று
    சாமிகளானார்கள்

    இன்று
    கழுத்தறுந்தும்
    மலம் தின்னும்
    உன்னோடு
    சண்டையிடும்
    நாங்கள் யார் தெரியுமா?

    உன்
    பிள்ளைகளின் சாமிகள்.

    ***
    சேரிக்கு வெளியே
    கோணல்
    கோணலாய்
    சேரிக்குள் வரமறுத்த
    கிராமத்துச் சாலைகள்.

    ***
    வான் வழி
    தரை வழி
    நீர் வழி
    சண்டையிடும் உலகில்
    வழியில்லாமல் தவிக்கிறோம்
    சுடுகாட்டிற்கு.

    ***
    பெயரையும்
    ஊரையும்
    சொன்ன பிறகும்
    நீ
    துரைசாமி கவுண்டர்க்கு
    என்ன வேண்டும்
    வேலு முதலியார்க்கு
    பக்கத்து வீடா
    தேரடிக்கு எதிர்த் தெருவா
    அல்லிக் குளத்திற்கு மேல் தெருவாயெனக்
    கேட்ட
    அனைத்துக் கேள்விகளுக்கும்
    இல்லையென்றதும்
    முகத்தைச் சுருக்கி
    நீ அப்போ... என நீளும்
    அவன் ஆய்விற்கு
    முற்றுப் புள்ளியாய்
    பறச்சேரி யென்றேன்.

    ***
    முன்பு போல்
    அடிக்கடி வரமுடியாமல் போன
    பக்கத்து வீட்டுக்காரர்களைப்
    பற்றி அறிய
    காரணங்கள்
    பல இருந்தும்
    முதற் காரணம்
    இப்படித்தான் தோன்றுகிறது
    தெரிந்து இருக்குமோ
    என் ஜாதி.

    ***

    வீட்டை
    அலங்கரித்தலென்பது
    மறைத்ததை
    இருப்பதோடு சேர்த்தல்
    உனக்கு

    இருப்பதை
    மறைப்பது
    எனக்கு.

    ***

    தமிழ் ஓவியா said...

    தமிழ்த் தேசியமும் தர்மபுரிகளும்


    காதல் தீ ஜாதியை எரிக்கும்; மோதல் தீ வீதியை எரிக்கும் என்பது தருமபுரி தந்துள்ள பாடம்.

    காதலில் மோதலுக்கு வேலையில்லை; சாதலுக்கும் வேலையில்லை. ஆனால், இரண்டும் நடக்கிறது என்றால், அறியாமை, அறிவின்மை, ஆத்திரம், கோத்திரம், சாத்திரம், ஜாதிக்கட்டு. இப்படிப்பட்ட காரணிகள்தான் காரணம்.

    இவையெல்லாம் ஆரியப் பண்பாட்டு படையெடுப்பால், கலப்பால், திணிப்பால், ஆதிக்கத்தால் வந்த விளைவுகள். ஆனால், இவற்றை முற்றாக மறைத்துவிட்டு, ஆரிய பார்ப்பனரும் தமிழர்களே என்று ஆரியத்தை அணைத்துக்-கொள்ளும் தமிழ்த்தேசியவாதிகளைப் பார்த்து நாம் கேட்க விரும்பும் கேள்விகள் இவைதான்:

    1. ஜாதிப் பிரிவுகளைக் காத்துக்கொண்டே, ஏற்றுக்கொண்டே தமிழ்த் தேசியம் அமைக்க முடியுமா?

    2. தமிழர் மரபுப்படியான வாழ்வமைப்பதே தமிழ்த்தேசியத்தின் இலக்கு என்றால், தமிழர் மரபில் ஜாதியில்லையே! ஜாதிப் பிளவு இல்லையே!

    3. தமிழ்த்தேசியத்திற்கு ஜாதி எதிரானது அல்லவா?

    4. தமிழ்த்தேசியவாதிகள் ஜாதித் தீ பற்றியெரியும் நேரத்தில் வேடிக்கை பார்த்து நிற்பது ஏன்? சம்மதமா? சண்டித்தனமா? இயலாமையா? எது காரணம்?

    5. தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டே ஜாதியை வளர்ப்பவர்களுக்கு எதிராக, தமிழ்த்தேசிய-வாதிகளின் செயல் திட்டங்கள் என்ன?

    மேற்கண்ட கேள்விகளுக்கு விடையளிப்-பதோடு, தமிழ்த்தேசியம் வேண்டும் என்பதற்கு வெறும் தமிழ் உணர்வை மட்டும் ஊட்டிவிட்டால் போதுமா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.

    தமிழ்த்தேசியம் என்பதே தமிழர்களுக்கு தனி நாடு, தனி வாழ்வியல் (மரபு சார்ந்தது), தனி பண்பாடு, கலாச்சாரம், ஆதிக்கமற்ற விடுதலை, உரிமை, சமத்துவம், தற்சார்பு, ஒற்றுமை, உறுதி.

    இத்தனைக் கூறுகளும் மக்களிடம் வளர்க்கப்பட வேண்டும். இவற்றிற்கு எதிரி யார்? நாம் யார்? என்ற விழிப்பு வேண்டும். நம்மிடம் உள்ள ஜாதிகள், ஆரிய பார்ப்பனர்களால் நம் மீது திணிக்கப்பட்டவை என்பது ஆழ்மனதில் பதிய வேண்டும்; பதிக்கப்பட வேண்டும்.

    மூடநம்பிக்கைகள் களையப்பட வேண்டும். பகுத்தறிவு சிந்தனைகள் வளர்க்கப்பட வேண்டும். சமத்துவ உணர்வு ஊட்டப்பட வேண்டும். கல்வி, உயர்கல்வி, அடித்தட்டு மக்களுக்கும் உறுதி செய்யப்பட வேண்டும். கல்லாமை இல்லாமை நிலை வரவேண்டும்.

    வேலை, கூலி என்ற நெருக்குதலால் கல்வி நிறுத்தப்படக் கூடாது. இடைநூற்றல் இல்லா நிலை முழுமையாக உறுதி செய்யப்படவேண்டும். காரணங்கள் கண்டறியப்பட்டு களையப்பட வேண்டும்; தீர்வுகள் காணப்படவேண்டும்.

    தமிழ் ஓவியா said...

    ஜாதியொழிப்பு: தீண்டாமை ஒழிப்பு வேறு, ஜாதியொழிப்பு வேறு என்பதை உணரச் செய்யவேண்டும். காதல் திருமணம் வேறு, ஜாதி மறுப்பு மணம் வேறு. காதல் திருமணத்தில் ஜாதி மறுப்பு மணங்களும் அடங்கும் என்பது உண்மை. மாறாக, காதல் திருமணங்கள் எல்லாம் ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஆகாது. சொந்த ஜாதியில்கூட காதல் திருமணங்கள் நடக்கும். ஆனால் அதில் ஜாதி ஒழியாது.

    எனவே, காதல் திருமணங்கள் ஆதரிக்கப்படவேண்டும்; ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெருமளவில் ஊக்குவிக்கப்பட வேண்டும். கட்டாயப்படுத்தியல்ல; கனிந்து கசிந்து காதல் பெருக்கில் தன்னுந்தலாய் வருமளவிற்கு விழிப்பு ஊட்டப்படவேண்டும்; பரப்புரைகள் பரவலாய் நடத்தப்படவேண்டும்.

    அதற்கு முதல்படியாக தமிழ்த்தேசியம் பேசுவோர் திருமணங்கள் எல்லாம் ஜாதி மறுப்பு மணங்களாக நடைபெற வேண்டும்; நடத்தப்பெற வேண்டும்.

    வயது வந்த ஆணும் பெண்ணும் விரும்பியவரை மணக்கத் தடைவந்தால், அதைத் தமிழ்த் தேசிய அமைப்புகள் முன்னின்று தடுக்க வேண்டும். அதற்கான தொண்டர்படை வேண்டும்.

    ஏமாற்றியோ, வன்முறையாலோ எந்தவொரு ஆணையும், பெண்ணையும் திருமணம் செய்துகொள்ள கட்டாயப்-படுத்துவது குற்றம். அவர்களே விரும்பி மணம் புரிந்து-கொள்ள முன்வந்தால், அதைத் தடுப்பதும் குற்றம் என்பதை எல்லோருக்கும் புரியும்படி செய்ய வேண்டும்.

    தருமபுரியில் எரிந்து சாம்பலானது குடிசைகள் மட்டுமல்ல; தமிழ்த் தேசியமும்தான் என்பதைத் தமிழ்த்தேசியம் பேசுவோரில் உள்ளச் சான்றும், தெள்ளிய சிந்தனையும் உடையோர் அறிவர்.

    எனவே, தமிழ்த்தேசியத்தின் முதல்படி ஜாதியொழிப்பு! அடித்தளமும் அதுவே! ஜாதியொழிப்பு முயற்சியில்லா தமிழ்த்தேசிய முழக்கம் வெற்று ஆரவாரம்.

    எந்த அணியில், எந்த அமைப்பில் இருந்தாலும் தமிழன் என்பவன் ஜாதியை ஏற்கக் கூடாது. ஜாதியை ஏற்பவன் உண்மையான தமிழனாகான்! காரணம் தமிழர்க்கு ஜாதியில்லை.

    தமிழரிடையே என்றைக்கு ஜாதியை நுழைத்தார்களோ அன்றைக்கே தமிழன் இல்லாமல் போய், ஜாதிக்காரனாகி-விட்டான். இன்றைக்கு செட்டியார் உண்டு, வன்னியர் உண்டு, பறையர் உண்டு, கவுண்டர் உண்டு, உடையார் உண்டு, பிள்ளை உண்டு, கோனார் உண்டு, முதலியார் உண்டு, தமிழர் எவர்?

    இப்போது புரிகிறதா ஜாதி வந்தால் தமிழர் இல்லை. தமிழர் என்றால் ஜாதியில்லை.

    எனவே, மீண்டும் தமிழனாக வேண்டும் என்றால், ஜாதியை ஒழித்தால் மட்டுமே சாத்தியம். தமிழர் ஒற்றமைக்கு, தமிழர் உணர்விற்கு ஜாதியே முதல் தடை. அதை ஒழித்தால்தான் தமிழ்த்தேசியத்திற்கு விடை. தமிழ்த்-தேசியவாதிகளே தர்மபுரிகளில் முகாமிடுங்கள்! இல்லையேல் உங்கள் உண்மை முகம் வெளிப்படும்!

    - .மஞ்சை.வசந்தன்

    தமிழ் ஓவியா said...

    நெசந்தானுங்க...


    9.30க்கு மேல் போகாதே . . .

    பாலியல் வன்முறையை நியாப்படுத்தும் மனநிலை

    அந்தக் காலத்து வில்லுப்பாட்டுகள்ல-யெல்லாம் காந்தி என்ன சொன்னாரு? அண்ணல் காந்தி என்ன சொன்னார்? மகாத்மா காந்தி என்ன சொன்னார் _அப்படின்னு ஒருத்தர் கேட்டுக்கிட்டே இருப்பாராம். கடைசியா காந்தி என்ன சொன்னாருன்னு அவரு சொல்லி முடிக்கிறப்போ மேடை பிரிக்கிற ஆளு மட்டும் தான் இருக்குமாம். அப்புறமா வந்த பட்டிமன்றங்கள்லயும் அடிக்கடி ஒரு வசனம் சொல்வாங்க... கையில் குச்சியும், கதராடை போர்த்திய உடலுமாக, கால்நடையாகவே இந்த தேசத்தை அளந்த அகிம்சாமூர்த்தி .... .... .... .... .... காந்தி மகான் அப்படின்னு மூச்சுவிடாம வாயளந்துட்டு அதுக்கப்புறமா, என்ன சொன்னார் தெரியுமா? எப்படின்னு ஒரு வழியா ஒரே ஒரு கருத்தைச் சொல்வாங்க...

    அது என்னன்னா? கழுத்து நிறைய நகைகளை அணிந்து ஒரு பெண் நள்ளிரவு 12 மணிக்கு தன்னந்தனியாக பயமின்றி என்றைக்கு நடந்து செல்கிறாரோ அன்றுதான் நமது நாட்டுக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்.

    ***

    டில்லியில ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட மாணவர்கள் போராட்டம் - தடியடி - கண்ணீர்ப்புகை வீச்சு - அப்படியிப்படின்னு அல்லோல கல்லோலப்படுது! பாலியல் வன்முறைக்கு எதிரா கொதிச்செழுந்து போராடுறாங்க பலர்! ஒவ்வொரு நொடியிலயும் சொன்ன செய்தியையே பத்து தடவை திரும்பத் திரும்பச் சொல்லி மூச்சடைக்குது ஊடகங்கள்! நாடெங்கும் கற்பழிப்புக்கெதிரா குரல் கிளம்பியிருக்கு! என்ன நடந்தது? டிசம்பர் 16-ஆம் தேதி இரவுல டெல்லி முனிர்கா பகுதியில ஓடும் பேருந்தில் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு, கொடூரமாகத் தாக்கப்பட்டார்னு ஒரு செய்தி மறுநாள் வெளிவந்தது. எதிர்ப்புக் குரல்கள் கேட்க ஆரம்பிசசது. யார் குற்றவாளிகள்னு அடுத்தடுத்து கண்டுபிடிச்சு தூக்கி உள்ள போட ஆரம்பிச்சுட்டாங்க போலீஸ். உலகம் அழியப்போகுதுன்னு பேசிக்கிட்டிருந்த ஊடகங்கள் அடுத்த பிரச்சினையாக இதை எடுக்க ஆரம்பிச்சாங்க... இந்தியா முழுமைக்கும் இந்தப் பிரச்சினை பேசப்பட்டது. கோபம் போராட்டமாவும் வெளிப்பட ஆரம்பிச்சது. மக்கள் பாலியல் வன்முறைக்கு தங்களுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க ஆரம்பிச்சாங்க... இப்பவாவது இந்த உணர்வு வந்திருக்கேன்னு நமக்கும் ரொம்ப சரின்னு தான் படுது! அவ்வளவு கொடூரமா நடந்திருக்கு - அந்த வன்முறை! ஆனா இதில சில கேள்விகள் வராம இல்ல! பாலியல் வன்முறை செஞ்சவனுங்கள தூக்கில தொங்க விடணும்னு கொதிச்சுட்டாங்க பல பேர்.... ஆமாமா... தூக்கில போட்டே ஆகணும்னு ரொம்பப் பேரு கையெழுத்து வாங்க ஆரம்பிச்சிட்டாங்க...! இது தான் சாக்குன்னு அரசு இயந்திரமும் தூக்கு தண்டனைக்கு ஆதரவான பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டிருக்கு! தூக்குத் தண்டனையால பாலியல் வன்முறையைத் தடுக்க முடியுமா-ன்னு யோசிக்கிறது ஒரு பக்கம்! தூக்குத் தண்டனையாலயோ, மரண தண்டனைகளாலோ பாலியல் கொடுமைகளைத் தடுக்க முடியுமா? நம்ம கண்ணுக்கு முன்னாடி, போன வருசம் கோயமுத்தூர்ல பள்ளிக் குழந்தைகளைப் பாலியல் கொடுமைக்குள்ளாக்குன ரெண்டு பேர, தப்பிக்கப் பார்த்தாங்கன்னு சொல்லி போலீஸ் என்கவுண்ட்டர்ல சுட்டது. அது தான் அவனுங்களுக்கு சரியான தண்டனைன்னு நாமளும் கைதட்டி, செத்தானுங்க... இன்னும் நல்லா கொன்னுருக்கனும்னு சொல்லிட்டு சமாதானமாயிட்டோம்.. இது மாதிரி பல இடங்கள்ல சுட்டிருக்காங்க... தண்டனை கடுமையா கொடுத்திருக்காங்க...


    தமிழ் ஓவியா said...

    ஆனாலும், அதுக்கப்புறமும் நடக்குதே... என்ன காரணம்? பாலியல் வன்முறை செய்தால் மரண தண்டனைன்னு முடிவெடுத்தா எந்த வீட்டுலயாவது கணவன் இருக்க முடியுமா? வீடுகளில் நடக்கும் பாலியல் வன்முறையை, பொண்டாட்டிக்கிட்ட செய்யுற பாலியல் வன்முறையையெல்லாம் கணக்குல எடுக்கணுமா? வேண்டாமா? இந்தக் குற்றவுணர்வு தான் மாட்டிக்கிட்டவனுங்க மேல தூக்குத் தண்டனையைத் தள்ளிவிடுதுன்னு சொல்றாங்களே - அதுல உண்மை இருக்கா? இல்லையா?

    டெல்லியில நடந்த பாலியல் வன்முறைக்கு எவ்வளவு கொதிச்செழுற இந்தியர்கள், இந்தியா முழுக்க தினசரி நடக்குற நூற்றுக்கணக்கான பாலியல் வன்முறைக்கு எதிரா ஏன் கொதிக்கல? ராணுவம், காவல்துறை போன்றவங்களால நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிரா ஏன் பொங்கல? சரி, இதெல்லாம் பழைய செய்தி! இப்போ தான் புத்தி வந்திருக்குன்னு வச்சுக்குவோம். அதுக்குப்பிறகு, தூத்துக்குடிக்கு பக்கத்தில ஒரு பிஞ்சுக்குழந்தை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்யப்பட்டிருக்கே? இதுக்கு ஏன் நாடு முழுக்க பிரச்சினை வரல? குறைஞ்சபட்சம் பிரச்சினையை சேர்த்துக்கக் கூட இல்லையே? ஆனா, இதையெல்லாம் தாண்டி ஒரு முக்கியமான கேள்வி இருக்கு!

    தமிழ் ஓவியா said...

    கைது செய்யப்பட்ட ஆட்கள்ல அந்த பஸ் ஓட்டுநரும் ஒரு ஆளு! அவன் சொன்னான், அந்த நைட்டுல... ஒரு பையனோட... என்ன சுத்த வேண்டிக் கிடக்கு? அதுக்கு பாடம் கற்பிக்கத் தான் கற்பழிச்சோம்! ஊரே, நாடே கொதிக்கிற மாதிரியான பிரச்சினையில குற்றவாளிகள்ல ஒருத்தன், இப்படியொரு கருத்து சொல்றான்னா என்ன அர்த்தம்? என்ன தைரியம்? என்ன காரணம் - இப்படிச் சொல்ல? அப்படியெல்லாம் யாரும் யோசிக்கல... சொன்னவன் மேல தான் இன்னும் பல பேருக்குக் கோபம் வந்திச்சு! ஆனால், அதில யோசிக்க வேண்டிய விசயம் என்னன்னா, அதை அவன் மட்டுமா சொன்னான்? இவ்வளவு தைரியமா சொல்றான்னா, தனக்கு இதனால ஆதரவும், அனுதாபமும் கிடைக்கும்னு அவன் நம்புறான்னு தானே அர்த்தம். இல்லைன்னு சொல்ல முடியுமா?

    இதில யார் யாருக்குப் பங்கிருக்கு? பெண்கள் ஒழுங்கா டிரஸ் போட்டுக்கிட்டு போகலைன்னா, பசங்க அப்படித்தான் இருப்பான்னு சொன்னவங்-களுக்கு இதில பங்கிருக்கா இல்லையா?

    பசங்களை ஒழுங்கா வளர்க்காம, அவனுக்கு உரிய பக்குவத்தைக் கொடுக்காம, பொண்ணுங்களை மட்டும் அடங்கியிருங்கன்னு பழக்கினவங்களுக்கு இதில பொறுப்பு இல்லையா? ஆபாச உடையணிஞ்சதால தான் பசங்களுக்கு வேற மாதிரி தோணுதுன்னு சப்பைக் கட்டு கட்டுனவனுக்கு இதில பங்கு இல்லையா?

    அசாம் மாநிலத்தில போன ஜூலை மாசம் இதே மாதிரி ஒரு பிரச்சினை வந்து, மதுக்கடைக்கு வந்தார்னு ஒரு பெண்ணை கூட்டம் கூட்டமா வந்து பாலியல் சீண்டலுக்குள்ளாக்கினப்போ, மத்தியப் பிரதேச பி.ஜெ.பி அமைச்சர் ஒருத்தர் அந்தப் பொண்ணு ஒழுங்கா இருந்தா, ஏன் இது நடக்குதுங்கிற மாதிரி கேட்டாரே, அவர் மேல குற்றம் இல்லையா?

    ஆட்டோ-ல சீறும் பாம்பை நம்பு; சிரிக்கும் பெண்ணை நம்பாதேன்னு எழுதுனதை விட்டதுனால தானே, இன்னிக்கு ஒரு ஆட்டோவில ஆபாச ஆடைகளே பாலியல் வன்முறைக்கு முதல் படின்னு எழுத வச்சிருக்கு! இப்படியெல்லாம் பேசுற ஆள் இருக்கிறதால தான, பாலியல் வன்முறைக்கு ஆதரவு தேடுற அளவுக்கு தைரியம் வருது! இது எவனோ, யாரோ, ஒரு முட்டாள் -முரட்டு, ஆணதிக்க வெறி புடிச்ச அயோக்கியன்.... .... .... அப்படி எழுதியிருக்கான். அவனை விடு.. பொறுப்பான ஆளுங்களால அப்படி யோசிக்க முடியுமான்னு நினைச்சு நாம ஒதுங்கிட முடியாது!

    இதையெல்லாம் தாண்டி இன்னிக்கு, சில பேரு தைரியமா பேசறாங்களே! அந்தப் பொண்ணை யாரு 9:30க்கு மேல வெளியில திரியச் சொன்னா? அதுவும் பாய் பிரண்டோட...? அப்படி இருந்தா இப்படித் தான் நடக்கும்னு சொல்றாங்களே! யாரு அந்தக் கொழுப்பெடுத்த ஆளு? மனுசத் தன்மையில்லாத ஆளு? எவன், அவன் ஆளைக் காட்டு-_னு நீங்க கோபப்படுறது எனக்குத் தெரியுது! ஏதோ ரோட்டில போறவன் சொல்லலைங்க! ஏட்டுல எழுதுறவரு... சொல்றாரே! அதுவும் தேசிய உணர்வோட சொல்றாரே! யாரு தெரியுங்களா? தினமணி வைத்தியநாதய்யரு! என்ன சொல்றாரு தெரியுமா?

    தமிழ் ஓவியா said...


    ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை. ஆனால், இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை? ... ... ... உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்து-கொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்? என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்து-கொள்வதில்லை. ... ... ... சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா. (தினமணி 20.12.2012)

    அந்தக் கடைசி வரியை இன்னொரு முறை படிச்சுப் பாருங்க.... என்ன சொல்ல வர்றாரு தெரியுதா?

    அந்தப் பொண்ணு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு வேற யாரும் காரணமில்லை... அந்தப் பொண்ணே தான் காரணம்னு சொல்றாரு வைத்தியநாதய்யரு! அங்க மட்டுமில்லை... எங்க பாலியல் வன்முறை நடந்தாலும் அதுக்கு அதுக்கு அந்த பொண்ணுங்க தான் காரணமா? அதுக்கு எவ்ளோ அயோக்கியத் தனமா புறநானூற்றுப் பாட்டுல இருந்து வரியை எடுத்துப் போடுறாரு? அசாம்ல நடந்ததுக்கும், டெல்லியில நடந்ததுக்கும் அந்தந்தப் பொண்ணுங்க தான் காரணம்னா தூத்துக்குடியில நடந்ததுக்கும் அந்த 13 வயசு சின்னப் பொண்ணு தான் காரணமா?

    உரிய பாதுகாப்பு தராத அரசையும், பாலியல் கல்வியைக் கத்துக் கொடுக்கக்-கூடாதுன்னு கத்துற மதவாதிகளையும், மனநிலை சரியில்லாத பாலியல் பொறுக்கிகளா ஆண்களை வளர்த்துக்கிட்டிருக்கிற சமூகத்-தையும் கண்டிக்காமல், நீ லேட்டா போனதால தான் உன்ன ரேப் பண்ணியிருக்கான்.. நான் அங்க இருந்தா நானும் அப்படித் தான் பண்ணியிருப்பேன்னு சொல்ற மாதிரி எழுதுறதுக்குப் பேரு ஒரு தலையங்கம்.. அதுக்கு ஒரு ஆசிரியரு...? அடச்சீ...

    ஜாதி, ஆணாதிக்கத் திமிர், மதவெறி, அடக்குமுறைன்னு பல காரணங்களால ஒவ்வொரு நாளும் நடக்கிற பாலியல் வன்கொடுமைகள் பெருகிக்கிடக்குற இந்த நாட்டுல காந்தி என்னமோ சொன்னாருன்னு சொல்றாங்களே! அதைக் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா... இன்னும் 9:30 மணி சுதந்திரத்துக்கு இந்த நாடு தகுதியில்லையே! பகல்-ல போன பொண்ணைத் தூக்கி வன்கொடுமை செஞ்சிருக்கிற இந்த நாடு என்னைக்கு 12 மணி சுதந்திரத்தை அடையுறது? எல்லாருக்கும் தேவை - பாலியல் கல்வி! பெண்களுக்கு அவசியம் தேவை தற்காப்புங்கிற ஆயுதம்! அதை செய்யலைன்னா... பட்டப் பகல் 12 மணிக்கு, பல பேரு முன்னிலையிலயே பாலியல் வன்முறை நடக்கும். அப்பவும், பெண்கள் மேல குற்றம் சொல்ற இதே பூணூல் எழுதும். அதைத் தடுக்க முடியாது!

    - பவானந்தி

    தமிழ் ஓவியா said...

    போதனை யாருக்கு


    `உணவை வீணடிப்பது பாவம் என்று மதங்கள் போதிக்கிறது அவ்வாறு நிகழச் செய்யும் அனைத்தையும் தவிருங்கள்-இது அண்மையில் மத்திய நுகர்வோர் நலத்துறை வெளியிட்ட விளம்பரத்தின் வாசகம். ஒரு மதச்சார்பற்ற நாட்டின் துறை இப்படி மதங்களை முன்னிறுத்தி விளம்பரம் கொடுக்கலாமா?

    இந்து மதக் கோவில்களில் கல்லால் ஆன கடவுள் சிலைகளின் மீது கொட்டி வீணாக்கப்படும் பால், இளநீர், பழங்கள், நெய், எண்ணெய், தயிர், மஞ்சள், நவதானியங்கள் போன்றவை உணவுப் பொருட்கள் இல்லையா? கடவுளுக்காக சாலைகளில் உடைக்கப்படும் தேங்காய்; திருஷ்டி கழிக்க உடைக்கப்படும் பூசணிக்காய், எரிக்கப்படும் மிளகாய், உப்பு ஆகியவையெல்லாம் என்ன?
    மதங்களின் பெயரால் இந்தியாவில் உணவை வீணடித்து உற்பத்தி நாசம் செய்யும் நாடு உலகில் வேறெதுவும் உண்டா? மக்களுக்கு சிக்கனத்தைப் பற்றிப் போதிக்கும் அரசின் உணவுத்துறை முதலில் இந்து மத நிறுனங்களுக்கும், இந்து மதாபிமானிகளுக்கும் உணவை வீணடிக்காதீர்கள் எனப் போதிக்கட்டும்.

    தமிழ் ஓவியா said...

    மார்கழியில் ஆண்டால் மார்க்கச்சை


    உலகப் பணக்காரர்களைத் தரம் பிரித்துப் பட்டியலிடும் பணியைச் செய்துவரும் ஃபோர்ப்ஸ் ஏடு வெளியிடும் செய்திகளை வெளியிட்டு மகிழும் இந்திய ஏடுகள் வசதியாக ஒன்றை மறந்துவிடுகின்றன. மறைத்து விடுகின்றன. மிகப்பெரிய பணக்காரன் திருப்பதியில் இருக்கிறான் என்பதைத் தெரிவிக்கவில்லை. அதனால் ஃபோர்ப்ஸ் ஏடு அதை வெளியிடுவதில்லை. முதலாளிகளைக் கடுமையாகப் பேசுவதற்காகவே பிறந்தவர்கள் அல்லது பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று பேசும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இதைப் பற்றிப் பேச மாட்டார்கள். காரணம் அந்தப் பணக்காரன், கடவுள் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறான். இவர்களுக்கு அதனிடம் அச்சம். கல் முதலாளிபற்றி வாய் திறக்க மாட்டார்கள். அது கிடக்கட்டும்.

    திருப்பதியில் இருக்கும் உலக மகா பணக்காரன் பாலாஜி வெங்கடாசலபதி _ முதல் ஏதும் போடாமலே கோடிக்-கணக்கான கோடிகள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். பணத்தைச் செலவு செய்ய வழி தெரியாமல் கல்லையெல்லாம் தங்கத்தால் மூடிக்கொண்டிருக்கிறான். மதில் சுவரையெல்லாம் தங்கத்தால் கட்டிக்கொண்டு இருக்கிறான்.

    குவைத் மன்னர்களும் சவூதி மன்னர்களும் தங்கள் அரண்மனைகளில் தங்கக் குளியலறை, தங்கத் தண்ணீர்க்குழாய், தங்கத்தட்டுகள், தங்க நாற்காலி என்று வைத்திருப்பவர்கள் என்று கண்டனம் செய்பவர்கள் திருப்பதியானைப் பற்றிப் பேசுவதில்லை. பிரான்சு நாட்டின் லூயி மன்னர்களின் ஆடம்பரம்பற்றி எழுதுபவர்கள், வர்சேல் அரண்மனையின் ஆடம்பரங்கள்பற்றி எழுது-பவர்கள்கூட தங்கக்கட்டில்பற்றி எழுதுவார்களே தவிர, ஏழுமலையானைப்பற்றி எழுதுவதில்லை.

    காரணம் இந்த உலக மகா பண முதலாளி கடவுளாக்கப்பட்டிருக்கிறான்.

    இருந்தாலும் இவன் கடன்காரனாம். தன் கல்யாணத்திற்காகக் கடன் வாங்கினானாம். (அப்படி ஒரு கல்யாணம் இவனுக்குத் தேவையா?) கடனுக்கான வட்டியைத் தருவதற்காகத்தான் இவனுக்குக் கோடிக்கணக்கான கோடி ரூபாயைக் கொட்டிக் குவிக்கிறார்களாம்! உலக மகாபணக்காரனுக்கே கடன் கொடுத்த பணக்காரன் குபேரனாம்! இந்த கந்துவட்டிக்காரன் பிரபஞ்ச மகா பணக்காரன் என்று ஏன் ஃபோர்ப்ஸ் எழுதுவதில்லை? இவர்கள் ஏன் எழுதக் செய்வதில்லை? விசாரிக்க வேண்டும். சரி, ஏழுமலையான் விவகாரத்திற்கு வருவோம்.

    இவ்வளவுப் பணம் இருந்தும் இவனை எழுப்ப ஓர் அலாரம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவே கிடையாது. இவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பக் குரல் கொடுப்பதற்கு என்றே சம்பளம் கொடுத்து ஆள்களை வைத்து இருப்பதால் அவர்கள் இந்தத் தூங்குமூஞ்சியைப் பாட்டுப்பாடி எழுப்புகிறார்கள். இந்தப் பாட்டைத்தான் சுப்ரபாதம் என்று வடமொழியில் கூறுகிறார்கள். இசைத்தட்டு, இசைநாடா என்று வந்திருக்கும் இதனை எல்லாக் கோயில்களிலும் மார்கழி மாதத்தில் ஒலிக்கச் செய்கிறார்கள்.

    நமக்கும் தூக்கம் கெட்டுவிடும். மார்கழி மாதக் குளிரில் கதகதப்புக்குத் துணிப்போர்வை, உயிர்ப்போர்வையுடன் தூங்கிக் கொண்டிருக்கும்-போது இக்கூச்சல் எரிச்சலைக் கிளப்பும்.

    இந்த எரிச்சல் இனிமேல் ஏழுமலையானுக்கு ஏற்படாதாம். சுப்ரபாதம் இந்த மார்கழி மாதத்தில் ஏழுமலைக்கோயிலில் பாடப்பட மாட்டாதாம். பதிலுக்குத் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுமாம். நப்பின்னைக் கொங்கைமேல் கைவைத்துக் கிடந்தவனைத் தமிழில் பாடி எழுப்பப் போகிறார்களாம். தமிழ்த் தேசியங்களுக்குப் பக்திப் பிரவாகத்தோடு, பாஷைப் பிரவாகமும் பொங்கி ஓடும்! பாஷை, பிரவாகம் இரண்டுமே வடசொல், தமிழ்ச்சொல் அல்ல! நமக்குத் தெரியும். தமிழுக்கு அடுத்துத் தேசம், தேசியம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்காக எழுதவேண்டி நேரிட்டது.

    நம் தமிழர்கள் க்ஷமிக்க வேணும்!

    நப்பின்னையின் கொங்கைகளைப்பற்றி மட்டுமே ஆண்டாள் எனும் பெண் பாடியிருப்பதாக யாரும் கருதிக் கொள்ளாதீர்கள். நம் இலக்கியவாதிகள் மாபெரும் சபைகளிலே சிலாகித்துப் பேசும் பக்தி இலக்கியம் பலவற்றையும் பாடுகிறது. நாயகன் _ நாயகி பாவம் என்றெல்லாம் இவர்கள் வர்ணிக்கும் ஆண்டாளின் விரகதாபம் (காம வெளி என்று தமிழில் கூறலாம்) எந்த எல்லையைத் தொட்டது என்பதை ஆண்டாளின் கவிதை மூலமே பார்க்கலாமா?

    தமிழ் ஓவியா said...

    அவரைப் பிராயம் தொடங்கி
    ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
    துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
    தொழுதேன்...

    என்கிறாள். பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள். தமிழில், ஆண்டாள் அந்த உறுப்பைக் குறிப்பிட்டு விட்டாலும் நான் எழுத வெட்கப்பட்டு மார்பகம் எனக் குறித்துள்ளேன். இடக்கரடக்கலுக்குப் பிற-மொழிகள் வசதியாக வாய்த்திருக்கின்றன.

    ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்

    என்று அந்த உறுப்புகள் வளர்ந்த கதையைக் கூறுகிறாள்.

    முலைகள் எனத் தம் கவிதைத் தொகுப்புக்குப் பெயர் வைத்த கவிஞரைத் தம் பாண்பாட்டுப் பாதுகாப்பு எழுதுகோல்களால் குத்திச் சீண்டிய மாரல் போலீஸ்காரர்கள் (ஒழுக்கக் காவலர்கள்) இதற்கு ஏன் மூச்சு விடுவதில்லை? ஓ! இது கடவுளின் பேரால் நடக்கிறதா?

    சாயுடைவயிறும் என் தடமுலையும்
    திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
    தரணியில் தலை புகழ் தரக்கற்றியே
    என்ன வகை ஆசை பாருங்கள், திருமணம் ஆகாத பெண்ணுக்கு! மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்! ஏன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்?
    முத்தன்ன மெம்முறுவல் செய்யும் வாயும்
    முலையும் அழகழிந்தேன் நான்
    இவன் தடவிக் கொடுக்காததால், அந்த உறுப்புகளின் அழகே அழிந்து விட்டனவாம்! அழகைப் பெறத் தடவிக் கொடுக்க வேண்டியது தேவைதானே!

    பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
    புணர்வதோர் ஆசையினால்
    கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
    ஆவியை ஆகுலம் செய்யும்...
    என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
    பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ

    ரங்கமன்னாரோடு உடல் உறவு கொள்ள வேண்டுமாம்! அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று பெண் (ஆண்டாள்) கேட்கிறாள்! இது பக்தியா? ஆபாச ஆசைகளின் வெளிப்பாடு அல்லவா?

    கொங்கைமேல் குங்குமத்தின் குழம்
    பழியப் புகுந்து ஒரு நாள்
    தங்குமேல் என் ஆவி தங்குமென்று உரையீரே
    மார்பகத்தில் பூசப்பட்டிருக்கும் குங்குமம் குழைய, அழியத் தொட்டு அழுத்தினால் ஒழிய என் ஆவி உடலில் தங்காது என்பதை அரியிடம் கூறுங்களேன் என்ற வேண்டுகோளைப் பக்தர்களிடம் விடுக்கிறாள்!

    தமிழ் ஓவியா said...

    குற்றமற்ற முலை தன்னைக் குமரன்
    கோலப் பனைத் தோளோடு
    அற்ற குற்றம் அவைதீர
    அணைய அமுக்கிக் கட்டீரே
    என்ற விபரீதமான வேண்டுகோளை வைக்கிறாளே! இவளுடைய மார்பகத்தோடு அவனுடைய தோள்கள் எப்போதும் சேர்ந்திருக்கும் வகையில் சேர்த்துக் கட்டுங்களேன் என்று கேட்கிறாளே! வெட்கங்கெட்டு இப்படிப் பேசுகிற பெண்ணை யாராவது கேட்டிருக்கிறீர்களா? இந்நாட்டின் பக்தி வேகம், மோகமாகி மாறி இப்படியெல்லாம் புலம்பச் சொல்கிறதே!

    அதனால்தான் பெரியார், பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம் என்றார்.

    ஆண்டாளின் வேண்டுகோளை ஆண்டவன் நிறைவேற்றவில்லை. பக்தர்களும் கூட்டி வைக்கவில்லை கோவிந்தனோடு! என்ன செய்வாள் அவள்?

    உள்ளே உருகினை வேனை
    உளவோ, இவளோ என்னாத
    கொள்ளைக் கொள்ளிக் குறும்பனைக்
    கோவர்த்தனனைக் கண்டாக்கால்
    கொள்ளும்பயன் ஒன்றில்லாத
    கொங்கை தன்னைக் கிழங்கோடும்
    அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்
    எறிந்தென் அழலைத் தீர்வேனே

    எனப் பாடிவிட்டாள்! இவ்வளவு ஆசை வைத்திருக்கும் என்னை இருக்கிறாளா, போய்விட்டாளா எனக்கூடப் பார்க்காத இந்த கோவர்த்தனனை (அவன் கண்ணில் கொள்ளி வைக்க...)ப் பார்த்தேன் என்றால்.... எதற்கும் பிரயோசனப்படாத இந்த மார்பகங்களை வேரோடு (மரவள்ளிச் செடியின் வேரைக்கிழங்கு என்று சொல்கிறோம்) பிடுங்கி அவன் மேலே விட்டெறிந்து, என் எரிச்சலைத் தீர்த்துக் கொள்வேன் என்றே கூறிவிட்டாள். பாவம், காமம் என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!

    அதிவீரராமனின் கொக்கோகப் பாடல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு பாடியிருப்பாளோ? வாத்ஸ்யாயனின் காமசூத்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்டாள் காலத்திலேயே வந்துவிட்டதோ? இவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாகப் பாடிய ஆண்டாளைத்தான் ரங்கமன்னார் கல்யாணம் பண்ணிக் கொண்டாராம்! (திருவில்லிப்புத்தூரில் கடவுளின் பெயர் ரங்கமன்னார்) என்ன பாடுபட்டாரோ? என்ன பாடுபடுத்தினாரோ?

    கர்ப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
    திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
    மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
    விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே

    தமிழ் ஓவியா said...

    எனக் கேட்டவள் ஆண்டாள்! மாதவனின் வாய் நாறுமா? கர்ப்பூரம் போல் மணக்குமா? எனக்குச் சொல் என்று சங்கைக் கேட்கிறாள்! இந்தச் சங்கு (பாஞ்சசன்யம்) கிருஷ்ணன் தன் வாயில் வைத்து ஊதும் சங்கு. ஆகவே அதற்கு அவன் வாயின் நாற்றம் தெரியும் அல்லவா? பல்லாயிரம் பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கடவுள் வாயில் வைத்துக் கொள்கிறாராம் சங்கை! ஆகவே இந்தச் சங்கை கெட்ட (வெட்கங்கெட்ட) கேள்வியாம்! விரிவுரை வேறு தருகிறாள் ஆண்டாள்!

    பெண்ணின் வருத்தம் அறியாத
    பெருமான் அறையின் பீதக
    வண்ண ஆடைகொண்டு எந்தன்
    வாட்டம் தணிய வீசீரே!
    ஆராஅமுது அணையான்தன்
    அமுதவாயில் ஊறிய
    நீர்தான் கொணர்ந்து புலராமே
    பருக்கி இளைப்பைத் தீரீரே!
    நெடுமால் ஊதி வருகிற
    குழலின் தொளைவாய் நீர்கொண்டு
    குளிர முகத்துத் தடவீரே!
    அவன் மார்பு அணிந்த வனமாலை
    மார்பிற் கொணர்ந்து புரட்டீரே
    அவன்
    அடிபட்டான் பொடிதான் கொணர்ந்து பூசீர்காள்!
    என்றெல்லாம் பாடுகிறாள் ஆண்டாள்!

    கண்ணன் இடுப்புத் துணியால் வீசிறுங்கள். அவன் வாய் எச்சிலை எனக்குக் குடிக்கக் கொடுத்து என் தாகம் தணியுங்கள். அவன் புல்லாங்குழலிலிருந்து வழியும் எச்சிலால் என் முகத்தைத் துடையுங்கள். (சிவப்பழகு கிரீமா அது?) அவன் மார்பில் போட்டிருந்த மாலையை என் மார்பில் போட்டுப் புரட்டி எடுங்கள். அவன் காலடி மண்ணால் என் உடல் மீது பூசுங்கள். (லக்மே பவுடரோ?)

    மனிதர்களின் உளவியல்பற்றி ஆய்ந்து சிக்மண்ட் ஃபிராய்டு எழுதிய நூல், உலகின் போக்கை மாற்றிய முப்பெரும் நூல்களில் ஒன்று என்பார்கள் அறிஞர்கள். அந்த நூலில் அவர் விளக்கிய உளவியல் ஆசைகள், கோளாறுகள் பலவகை. தம் மனதின் ஆசைகளை ஆண்களும் பெண்களும் வெளிப்படுத்தும் செயல்வகைகளை விவரித்-திருப்பார். அவையெல்லாம் ஆண்டாளின் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அதிகமாக ஆண்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள்தான் வெளிவரும். பெண்கள் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படுத்துவதைச் சமூகம் அனுமதிக்கவில்லை. அத்தகைய மரபு மீறிய செயலை ஆண்டாள் எழுத்து வடிவிலேயே செய்திருக்கிறாள். பக்தியின் பெயரால் அது சகித்துக் கொள்ளப்படுகிறது. அனுமதிக்கப்-படுகிறது.

    தமிழ் ஓவியா said...

    இந்த காமக் கவிதைகளைக் கோதைத் தமிழ் என்கிறார்கள். பகவத் கீதை என்கிறார்கள். காமக்கொடூரன் கண்ணன் பாடியது பகவத் கீதையாம். காமவெறியள் பாடியது பகவதி கீதையாம். ஏகாதசியன்று இவளுக்கு 108 புடவைகள் போர்த்துகிறார்கள். அவள் பாடிய முலைகள் உள்பட முழுவதும் மூடப்படுமோ?

    ஆனாலும் இவளை வெம்பல் எனப் பாடியுள்ளார் மணவாள மாமுனி. பாடலைப் படியுங்கள்.

    அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
    தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் _ பிஞ்சாய்ப்
    பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நானும்
    வழுத்தாய் மனமே மகிழ்ந்து.

    பிஞ்சிலே பழுத்தது வெம்பல். அதனை யாரும் தின்பதில்லை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் திருப்பாவை, நாச்சியார் வாய்மொழி என்று தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்.

    இம்மாதிரியான தமிழ்ப் பாடல்களைப் பாடிச் சங்கீதத்தை வளர்க்க வேண்டும் என்று அண்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தினமணி நாளேட்டின் ஆசிரியர் பைத்தியநாதன்கூட பேசியிருக்கிறார். தமிழில் இவர் வைத்தியநாதன். வடமொழியில் (வ எழுத்து இல்லாததால்) பைத்தியநாதன். (இந்தச் சொல்லுக்கும் அவரது செயல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று நம்புங்கள்)

    புரிந்த மொழியில் இந்த வகைக் கடவுள் பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, புரியாத மொழியில் கடவுளைப் பற்றிப் பாடலாம் என்பதாக, வருத்தப்பட்டுப் பெரியார் கூறினார். தமிழ் இசைக்காக 1931இல் தனி மாநாடு கூட்டியவர் பெரியார். 1941இல் அண்ணாமலை அரசர், ஆர்.கே.சண்முகம், கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அணைத்துப் போரிட்டு வென்றவர் பெரியார்! அவர் இப்படிக் கூறிடும் வகையில் உள்ள தமிழ்ப் பாடல்களை விடுத்து நல்ல பாடல்களை எழுதலாமே! ஏற்கெனவே அப்படி எழுதப்-பட்டிருக்கும் புரட்சிக்கவிஞரின் பாடல்களைப் பாடலாமே!

    பாரதியாரின் மனைவி தன் காலம் முடிவதை உணர்ந்த நிலையில் தம் மகளை அழைத்துப் பாடச் சொல்லி, அதனைக் கேட்டவாறே இறந்தார் என்ற செய்தி தெரிவிக்கும் இன்னொரு செய்தி. செல்லம்மாள்பாரதி கேட்டு, அவர் மகள் பாடிய பாடல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடல் துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
    இன்பம் சேர்க்க மாட்டாயா

    அப்பேர்ப்பட்ட இனிய, பொருள் பொதிந்த இசைப் பாடல்களை நிறைய எழுதிக் குவித்தவர் புரட்சிக் கவிஞர்.

    அவற்றைப் பாடாமல் தவிர்த்தவர்கள் உண்டு. அவற்றைப் பாட மறுத்தவர்களும் உண்டு. அவற்றைத் துக்கடா என்ற தலைப்பில் இசைத்தவர்களும் உண்டு. மார்கழி மாதம் என்பதால் இதனையும் எழுதவேண்டி வந்தது.

    தமிழ் ஓவியா said...

    மோடிதான் பிரதமருக்கான பிதாமகனா? -

    மோடி நான்காவது முறையும் குஜராத் மாநில முதலமைச்சர் ஆகிவிட்டார்.

    அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை; அடுத்த பிரதமர் தாமோதரதாஸ் நரேந்திர தாஸ் மோடிதான் - இன்றே எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்று ஜோராகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏடுகள் எழுத ஆரம்பித்துவிட்டன.

    மோடி என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார் என்பதை எல்லாம் தம் கண்களுக்கு எதிரே பார்த்துக் கொண்டிருக்கும் 90 விழுக்காடு குஜராத் ஊடகங்கள் உருட்டல் புரட்டல் செய்து, ஆகா மோடியைப் போல் உண்டா என்றுதான் எழுதுகிறார்கள்.

    பிற மாநிலங்களில் உள்ள பார்ப்பன ஏடுகள், முதலாளித்துவ ஊடகங்கள், சங் பரிவார் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மோடியைப் பிரதமராக்கித் தம் ஞானக் கண்களால் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றன.

    குஜராத்தைப் பொறுத்தவரையில் ஒரு காரியத்தில் அவர் திட்டமிட்டு வெற்றிப் பெற்றுள்ளார் என்பதை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.

    இந்து - முஸ்லிம் என்கிற ஒரு நடுக்கோட்டைப் (றிளிலிகிஸிமிஷிகிஜிமிளிழி) போட்டு இரு அணிகளாகப் பிரித்து, இந்து வாக்கு வங்கியை உருவாக்கியதுதான் அவர் செய்த தந்திரம்.

    அதிலும் அவருக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் அண்மையில் சத்பவானா என்னும் பெயரில் கூட்டங்களை ஏற்பாடு செய்து உண்ணாநோன்பு மேற்கொண்டதாகும்.
    அதில் சகல மதத்தவர்களும் மோடியைச் சந்திப்பது, கைகுலுக்குவது, பூங்கொத்துக்களைக் கொடுப்பது, சால்வைகளை அளிக்கச் செய்வது எனும் நாடக அரங்கேற்றமாகும்.

    அவர் அமர்ந்திருக்கும் மேடை அரசு பணம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு சோடணை செய்யப்பட்டிருந்தது. பார்த்தாலே மலைக்க வைக்கும் ஏற்பாடு அது.

    முஸ்லிம்கள், கிருத்தவர்கள் கூட விட்டில் பூச்சிகளாக விழுந்தனராம். அதிலும்கூட இஸ்லாமிய சகோதரர் அளித்த அந்தக் குல்லாயை அணிந்து கொள்ள மறுத்து விட்டார். என்னதான் வேடம் போட்டாலும் உண்மை உணர்வு முன்னுக்கு வந்து அவர் உருவத்தை அம்பலப்படுத்தி விட்டதே.

    குஜராத் மாநிலத்தில் மக்கள் தொகையில் 9 விழுக்காடு முசுலிம்கள். ஆனால், பி.ஜே.பி. சார்பில் ஒரு வேட்பாளர் கூட நிறுத்தப்படவில்லையே.

    உலகில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் முசுலிம்கள் இருப்பது இந்தியாவில்தான்.

    அப்படி இருக்கும்பொழுது அந்த மக்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அறவேயில்லாத ஒருவர் இந்தியாவின் பிரதமராவதை எண்ணிப் பார்க்கவே குமட்டவில்லையா?

    குஜராத்தில் இந்த முறையில் வெற்றி பெற்றுவிட்டதால். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அதனை அரங்கேற்றலாம், வலை விரிக்கலாம் என்று மோடி நினைப்பாரேயானால், அதனைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.

    இன்னும் சொல்லப் போனால், மோடியின் இந்த வஞ்சக நெஞ்சே அவரைத் தனிமைப்படுத்தித் தூக்கி எறியும்.

    இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் மோடியின் மீது இந்த முத்திரை ஆழமான ரணமாகப் பதிந்துவிட்டது.

    மோடிக்கு முதல் முறை விசா மறுத்த அமெரிக்கா, இரண்டாம் முறை அளித்துவிட்டது என்ற ஒரு தகவல் கசிந்த சில நாள்களிலேயே அது உண்மையல்ல என்று அறிவிக்கப்பட்டு விட்டதே!

    மோடியின் முயற்சியால் குஜராத் மாநிலம் சிறுபான்மை மக்களின் குருதி வெள்ளக்காடாக ஆக்கப்பட்ட நிலையில், அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி திருவாய் மலர்ந்தது என்ன?

    எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன் என்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொள்ளவில்லையா?

    ராஜதர்மத்தைக் கடைபிடிக்கவும் என்று அறிவுரை பகரவில்லையா?

    ஏன்? உச்சநீதிமன்றம் இதுவரை யாருக்கும் அளிக்காத கிரீடத்தையல்லவா மோடியின் தலையில் சூட்டியது _ -நீரோ மன்னன் என்ற அந்த கழுவவே முடியாத கறைக் கிரீடம்.

    இன்னுமொரு சாதனைக்குச் சொந்தக்காரர் இந்த மோடி.

    இந்திய வரலாற்றிலேயே மோடியின் அமைச்சரவையில் இருந்த ஒரு பெண்ணுக்குக் கிடைத்திட்ட தண்டனை எதற்காகவாம்?

    நரோடா பாடியா எனும் இடத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைக்காக மாயா பென் கோட்னானி எனும் மோடி அமைச்சரவையில் அலங்கரித்த ஒரு பெண்ணுக்கு 28 ஆண்டுகள் சிறை.

    படுகொலை செய்யப்பட்டவர்கள் 97 பேர்கள் என்றால், அதில் 35 குழந்தைகள்!

    இந்த அரும்பெரும் வீர தீரச் செயலை முன்னின்று ஒரு பெண் செய்ததற்காக அவருக்கு அளிக்கப்பட்ட வெகுமதி என்ன தெரியுமா? மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்!

    ஆகா, மோடியின் திறமையே திறமை! குழந்தைகளைக் கொன்று குவித்தவருக்கு குழந்தைகள் நலத்துறை!

    தமிழ் ஓவியா said...

    அந்தப் பெண்மணி ஒரு டாக்டர் என்பதால், கொலைகள், பிணங்களைக் கண்டு அஞ்சமாட்டார் என்று மோடி நினைத்திருக்கலாமோ!

    இந்த மனிதாபிமானமும், சாமர்த்தியமும் மோடியைத் தவிர வேறு யாருக்குத்தான் வரும்?

    இந்தப் பெண்மணியைக் காப்பாற்ற என்னென்ன தில்லுமுல்லுகளை எல்லாம் மோடி செய்தார் என்பதை நீதிபதியே அம்பலப்படுத்தி விட்டாரே!

    மாயா கோத்னானிக்கு அப்போதையை விசாரணை அமைப்புகள் அனைத்தும் (அதாவது உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பதற்கு முன்பு) உதவியாக இருந்துள்ளன. பலியானவர்களைப்பற்றிக் கவலைப்படாமல், பாதிப்பை ஏற்படுத்தியவரைப் பாதுகாக்கும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்-பட்டன. கோத்னானியின் பெயர்கூட இந்தச் சம்பவத்தில் வந்துவிடாதபடி காக்கக் கடுமையாக முயன்றுள்ளனர் என்பது மோடியின் முகத்தில் நீதிபதி கொடுத்த சாட்டையடியல்லவா?

    ஒருக்கால் இந்துத்துவா பல்கலைக் கழகத்தில் மோடிக்குக் கிடைத்திட்ட சிறப்புப் பட்டம் போலும்! எனவே, இத்தகைய மேதாவிதான் இந்தியாவுக்குப் பிரதமராகத் தகுதி படைத்த கோமான் என்று குருமூர்த்தி கம்பெனிகள் சொன்னாலும் சொல்லும்.
    மோடியின் அமைச்சரவையில் இருந்தவருக்குத் தண்டனை. மோடிக்கு அல்லவே என்று கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு சோ போன்றவர்கள் பூணூலால் எழுத முயற்சிக்கலாம்.

    அதுவும் உண்மையல்ல. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் ராஜு ராமச்சந்திரன் தம் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளது என்ன? மோடி குற்றவாளிதான், அவர்மீது கீழ்க்கண்ட தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும் என்று கூறவில்லையா?

    மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையில் பகைமையை ஏற்படுத்தியது தொடர்பாக இந்தியக் குற்றவியல் சட்டம் இ.பி.கோ. பிரிவு 153-ஏ(1) மற்றும் பி, பிரிவின்கீழும், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் ஏற்படுத்த முனைந்தது தொடர்பாக 153-பி(1), சட்டத்துக்குக் கீழ்ப் படியாத அரசு ஊழியர் என்ற முறையில் 166 பிரிவின்கீழும், பகைமையும், வெறுப்பையும் விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக 505(2) பிரிவின் கீழும், வழக்குத் தொடரலாம் என்று உச்சநீதிமன்றத்திற்கு உதவியவர் கிவிமிசிஹிஷி சிஹிஸிமிகிணி அறிக்கை கொடுத்துள்ளாரே!

    மக்களிடையே பகைமையை வளர்த்தவர் இந்திய ஒருமைப்பாட்டைக் குலைத்தவர் போன்ற குற்றங்களுக்குரியவர்தான் பாரதத் திருநாட்டின் பிரதமருக்கான மகாபுத்திரர் என்று இந்நாட்டுப் பார்ப்பன ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்!

    இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள் சார். -மோடி குஜராத் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவரவில்லையா?

    இந்தியாவின் பிரதமரானால் குஜராத்தைப்போல முதல் இடத்திற்கு நகர்த்திவிடுவார் என்று பிரச்சாரப் புழுதி ஒரு பக்கம்.
    உண்மையா? உண்மையா?

    பொருளாதார நிபுணர் அபுசலே ஷெரீப் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார் (பிப்ரவரி 2012).

    இந்தியாவின் ஏழை மாநிலமான உத்தரப்பிரதேசத்தைவிட குஜராத்தில்தான் பசிப் பட்டினிக்காரர்கள் அதிகம் என்று கொடுத்த புள்ளி விவரத்திற்கு இதுவரை பதில் உண்டா?

    2011 இல் இந்தியத் திட்டக்குழு சொன்னது என்ன?

    நுண்ணூட்டச் சத்து குறைப்பாட்டில் குஜராத் மாநிலம் இன்னொரு சோமாலியா என்று கூறியுள்ளதே! குஜராத் மாநிலத்தில் 44.6 விழுக்காடு குழந்தைகள் (5 வயதுக்குட்பட்டவர்கள்) சத்துக் குறைபாட்டால் அல்லல்படுகின்றனர் என்ற அறிக்கைக்கு நாணயமான மறுப்பு இல்லையே!

    மொத்த உற்பத்தியில் 3 ஆவது இடத்தில் இருக்கும் குஜராத் தனி நபர் பங்களிப்பில் 9 ஆவது இடம்.

    கல்வியில் 14 ஆவது இடம். பரப்பளவில் 7 ஆவது மாநிலமாக இருக்கும் இம்மாநிலத்தில் அமைக்கப்பட்ட சாலைகளின் நீளம் என்ற கணக்கீட்டில் பத்தாவது இடத்தில்தான் இருக்கிறது. ஊட்டச் சத்து இல்லாமையால் எடை குறைந்த மக்கள் என்பதில் 11 ஆம் இடம். தனி நபரின் சராசரி ஆயுட்காலம் என்பதிலும் இந்தியாவில் 10 ஆவது இடத்தில்தான் குஜராத் இருக்கிறது.

    இந்த உண்மைகளை எல்லாம் திரையிட்டு மறைத்துவிட்டு, மோடி ஆட்சியில் குஜராத் முதல் மாநிலம் என்பதெல்லாம் அசல் கயிறு திரிப்பே! அக்கிரகாரவாசிகளின் கைகளில் பதுங்கிக் கிடக்கும் ஊடகங்களின் உருட்டல் புருட்டல் போக்கு.

    வளர்ச்சிதான் இப்படி தளர்ச்சி என்றால், ஊழல் இல்லாத நிருவாகம் என்று சான்றிதழாவது கொடுக்க முடியுமா?

    மாநில அரசின் ஊழலை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் மாநில லோகா யுக்தாவுக்கு நீதிபதியை நியமனம் செய்வதில் என்ன உதறல்?

    ஆளுநர் அத்தகையப் பதவியைப் பூர்த்தி செய்தபோது, நீதிமன்றம் சென்று குட்டு வாங்கியவர்தானே இந்த நரேந்திர மோடி.

    தமிழ் ஓவியா said...

    சி.ஏ.ஜி. அறிக்கை, சி.ஏ.ஜி. அறிக்கை என்று மற்றவர்கள் விடயத்தில் ஊளையிடுகிறார்களே,

    மோடி அரசின் ஊழல்பற்றி அதே சி.ஏ.ஜி. என்ன சொல்லியிருக்கிறது?

    பல்வேறு விஷயங்களில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே (ஏப்ரல் 2012).


    தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை குஜராத் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:
    விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.

    தமிழ் ஓவியா said...

    அரசின் பட்ஜெட்டில் 19 இனங்களில் ரூ.1,444 கோடி சேமிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரூ.2,045 கோடி செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.601 கோடி கூடுதலாகத் திரும்ப ஒப்படைக்கப்-பட்டுள்ளது. இது அரசின் பட்ஜெட் தொடர்பான செயல்பாடு சரியில்லை என்பதையே காட்டுகிறது.

    முறையான விளையாட்டுக் கொள்கை வகுக்கப்படவில்லை. பயிற்சியாளர்கள் அனைவரும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான விளையாட்டு விடுதிகள் செயல்பாட்டில் இல்லை.

    குடிநீர்க் கொள்கையும் சரியாக வரையறுக்கப்-படவில்லை. தேசிய நதி நீர் பாதுகாப்புத் திட்டம், எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்-படவில்லை. சபர்மதி ஆற்று நீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாகக் கண்காணிக்கவில்லை.

    நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்களை, தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கவில்லை.

    நிர்வாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங்கள் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட ரூ.71.8 கோடியை வருவாய்த்துறை பயன்படுத்தவே இல்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சங் பரிவார் கணக்குப்படி _- பார்ப்பனர்களின் ஆசைப்படி இந்தியாவின் பிரதமர் எப்படிப்-பட்டவராக இருக்கவேண்டும்?

    1. மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை-யற்றவராக இருக்கவேண்டும்.

    2. சிறுபான்மை மக்களைக் கொன்று குவிப்பவராக இருக்கவேண்டும்.

    3. வேதனைகளை சாதனைகளாக உருமாற்றிக் காட்டவேண்டும்.

    4. அப்படி என்றால் நூற்றுக்கு நூறு இந்தியாவுக்குப் பிரதமராக இருக்க லாயக்குள்ளவர் சாட்சாத் தாமோதரதாஸ் நரேந்திர தாஸ்மோடிதான்!

    - கலி.பூங்குன்றன்

    மனித உரிமை ஆர்வலர்களைக் கண்டால் மோடி ஓட்டம்...?

    அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வையாளர் கிறிஸ்தோப் ஹேன்ஸ் குஜராத் இனப்படுகொலைகளுக்குப் பின் முஸ்லிம்கள் முற்றாக குஜராத்திலிருந்து ஒழிக்கப்படுகின்றார்கள் என்பதை அறிந்தார்.

    உடனேயே அவர் குஜராத்தையும் சுற்றிப் பார்க்க ஏற்பாடுகளைச் செய்தார்.

    தமிழ் ஓவியா said...

    2002 முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி ஏற்பாடுகளையெல்லாம் செய்வதுபோல் நடித்தார்.

    கடைசி நிமிடத்தில் அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வையாளர், குஜராத் வரக்கூடாது எனக் கூறிவிட்டார். தன்னை குஜராத்திற்குள் அனுமதிக்கவில்லை என்பதை ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார், அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வையாளர்.

    தமிழ் ஓவியா said...

    முஸ்லிம்கள் _ கிறிஸ்தவர்கள் _ தலித்கள் பழங்குடியினர், பெண்கள் _ இவர்களின் உரிமைகள் சதா சர்வகாலமும் ஆபத்தில்தான் இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.

    Source: 1 Statement of UN Social Rapportaeur.
    TH: 31/3/2012 - MGM.

    வாக்கு குறைந்தது

    மோடியின் வெற்றியை ஊடகங்கள் ஆஹா.. ஓஹோ... எனக் கொண்டாடிவிட்டன. ஆனால், உண்மை என்ன தெரியுமா? சென்ற தேர்தல்களை விட இந்த முறை மோடிக்கு வாக்குகள் குறைந்துவிட்டன. 2002ல் 49.9 விழுக்காடு பெற்ற பா.ஜ.க. 2007ல் 49.1 விழுக்காடும், இந்த முறையான 2012ல் 47.9 விழுக்காடுமே பெற்றுள்ளது. எம்.எல். ஏக்களின் எண்ணிக்கையும் முறையே 127, 117, 115 என குறைந்துள்ளது. குஜராத்தில் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்குமான 9 விழுக்காடு வாக்கு வேறுபாடுக்கு அந்த மாநிலத்தின் தலைவர் ஒருவரை காங்கிரஸ் முன்னிறுத்தாததே காரணம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ராகுலுக்கும், சோனியாவுக்கும் நாடாளு மன்றத்தேர்தலில் வாக்குகள் கிடைக்கலாம். ஆனால், குஜராத்தில் உள்ளூர் தலைவரையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு என இருக்கும் தனிப்பட்ட பலம் என்பதைவிட காங்கிரசின் பலவீனமே மோடி போன்றவர்களை மீண்டும் வெற்றிபெறவைக்கிறது



    நீரோ மன்னன் மோடியின் மோசடி

    குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சமூக இணைய தளங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரது டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தில் பத்து லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள், அதுவும் அவர் கணக்கு துவங்கி குறுகிய காலத்தில் இது நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மோடி கூறுகையில், இது வெறும் எண்ணிக்கை அல்ல மாறாக உங்களது அன்பு என்று பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது கணக்கில் 50 சதவீதம் போலி கணக்கு என்பது தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில் ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதள பொறியாளர்கள் குழு ஒன்று இதுகுறித்து ஆய்வு செய்ததில் மோடியின் டிவிட்டர் கணக்கில் 50 சதவீதம் போலி பயனாளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள்.

    அதாவது அவரது கணக்கில் 46 சதவீதம் போலி கணக்கும், 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்காளர்கள் எனவும் கூறியுள்ளனர். மீதமுள்ள 13 சதவீதம் பேர் மட்டுமே உண்மையாக பின் தொடர்பவர்கள் என்பது தெரிகிறது.

    மோடியின் டிவிட்டர் கணக்கு 2010ஆம் ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இணைந்திருந்தனர். 2011ஆம் ஆண்டு முடிவில் நான்கு இலட்சம் பேர் இணைந்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டுமே அதிகமானவர்கள் இணைந்திருப்பதாக காணப்பட்டது. இப்போது அது போலித்தனமாக காட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவது போல பா.ஜ.க. முன்னணி தலைவராக திகழும் மோடியின் மோசடி ஒட்டுமொத்த பா.ஜ.கவுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்!

    தமிழ் ஓவியா said...

    வடபுலத்திலிருந்து ஒரு முற்போக்குக் குரல்


    பெண்கள் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க இரவு வெளியே செல்லக்கூடாது, ஒரு துணையோடுதான் செல்லவேண்டும் என்றெல்லாம் சொல்லி மீண்டும் வீட்டுக்குள் ளேயே பெண்களை முடக்க முயன்றுகொண்டிருக்கும் இந்துத்துவாக்களின் பிற்போக்குக் குரல்களுக் கிடையே வடபுலத்திலிருந்து ஒரு முற்போக்குக் குரல் ஒலித்துள்ளது. சோசலிசக் கொள்கை யிலிருந்து வந்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ``தற்காப்பு கலைகளை, பெண்கள் கற்று கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். பாட்னாவில், பள்ளி மாணவர் களுக்கான, டேக்வாண்டோ தற்காப்பு கலை, தேசிய போட்டியை துவக்கி வைத்த நிதிஷ்குமார்,`` ஜுடோ, கராத்தே, டேக்வாண்டோ போன்ற தற்காப்பு, சண்டை பயிற்சிகளை அனைவரும் கற்று கொள்ள வேண்டும். ஈவ்-டீசிங் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க, பெண்கள் கண்டிப்பாக, இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், நல்ல உடல் நலம், உஷார் நிலை, சுயபாதுகாப்பு போன்றவை பெண்களுக்கு கிடைக்கும். அதனால் தான், சில ஆண்டுகளுக்கு முன், பள்ளிகளில், தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகளை என் அரசு துவக்கியது, என்று பேசி பெண்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டியிருக்கிறார்.

    தமிழ் ஓவியா said...

    ”டென் பர்சண்ட் கட்


    முன்பு ஒருமுறை அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 10 சதம் சம்பளத்தில் வெட்டு இருந்திருக்கிறது. அந்தச் சமயத்தில் இவர்கள் நடத்திய நாடகத்தை முன் வரிசையில் ராஜாஜி உள்பட பல அய்.ஏ.எஸ். அதிகாரிகள் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.

    நாடகத்தின் முதல் சீனில் என்.எஸ் கிருஷ்ணனுக்கு மதுரம் காபி கொண்டு வந்து கொடுப்பார். அன்று கொடுக்கப்-பட்ட காபியில் சர்க்கரை போட மறந்துவிட்டார்கள். கிருஷ்ணன் ஒரு வாய் காபியைக் குடித்துவிட்டு காபியிலே சர்க்கரையே இல்லையே? என்று கேட்டார். மதுரம் சற்றும் நிதானிக்காமல், டென் பர்சன்ட் கட் என்று சாதுர்யமாக பதிலளித்தாராம். இதைக் கேட்டு ராஜாஜி உள்பட எல்லா அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தார்களாம்.

    -மு.அன்புக்கரசன், பெரியகுளம்

    தமிழ் ஓவியா said...

    வாக்கு வங்கி அரசியல் ஓட்டுப்பயிற்சியாளர்களை ஓரங்கட்டுங்கள்!


    கடும் நோய்க்கான கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்த மருந்துகளில்கூட அளவான அளவே பயன்படுத்தப்பட வேண்டிய ஜாதி என்ற விஷத்தை, மருந்தை மறந்து விட்டு விஷத்தை மட்டுமே குடித்தால் நீங்கள் என்னாவீர்கள்?

    தந்தை பெரியாரும், அம்பேத்கரும் கூறியபடி, பிற்படுத்தப்பட்ட ஜாதி சூத்திரர்களும், அடுக்கின் வெளியே தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகும் பஞ்சமர்கள் என்ற இரு சகோதரர்களும் கைகோர்த்துப் போராட வேண்டிய சகோதரர்கள் அல்லவா? அதைவிட்டு உட்ஜாதி - அரசியல் லாபத்திற்காக - தேர்தல் அரசியலில் வாக்கு வங்கிகளைத் தேடி சந்தர்ப்பவாத சதிக்குப் பலியானால் இதுவரை நீங்கள் பெற்றுள்ள - இனி பெற வேண்டிய சமூக நீதி உரிமைகள் - இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்புகள் திடீரென்று காணாமற்போகும் என்பதை நினைத்து, வீடு எரிவதைப் பார்த்து, புரியாத சிறுபிள்ளைகள் கூத்தும் கும்மாளமும் கொள்வதுபோல ஆடாதீர்!

    பார்ப்பனர்கள் - ஊடகங்கள் - உங்களில் சிலரை கொம்பு சீவி விட்டு மோத விட்டு, ரத்தம் குடிக்கக் காத்திருக்கும் நரிகளாகி உசுப்பேற்றுகின்றனர்! ஏமாறலாமா?

    மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் முழுவதும் அமுலாகி விட்டவனவா? யோசித்துப் பார்த்தீர்களா?

    இளைய பெருமாள் கமிட்டி (மத்திய அரசு கமிட்டி) செயல் வடிவம் கண்டு விட்டதா?

    உச்சநீதிமன்றத்திலும், பல மாநில உயர்நீதிமன்றங்களிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நீதியரசர்கள் போதிய அளவுக்கு Adequate Representation அடைந்து விட்டார்களா?

    பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் இவர்கள் இடஒதுக்கீடு கேட்பார்கள்; பார் பார் இதோ இவற்றை தனியார் மயமாக்கி இடஒதுக்கீட்டிற்கு - சமூக நீதிக்குச் சமாதி கட்டுகிறோம் என்று ஓசைபடாமல் திட்டமிட்டு வெற்றி பெறுகிறதே ஆரியமும் அதில் நுழைந்த அதிகார வர்க்க ஆட்சியும்! புரிந்து கொண்டீர்களா?

    மத்திய அரசுப் பதவிகளில் செயலாளர்கள் என்ற சக்தி வாய்ந்த பதவிகளில் 132ல் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்தான் ராஜ்யம் என்பது போல ஒருவர்கூட இல்லை என்று துறை சார்ந்த அமைச்சரே 6.12.2012இல் நாடாளுமன்றத்தில் கூறியது கேட்டு, உங்களைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முயலும் சிலர் அவர்கள் திருவாசகங்களில் கூறுவதானால் ஓட்டுப் பொறுக்கிகள் அந்தத் தலைவர் விரிக்கும் வலையில் வீழ்ந்து வாழ்வுரிமையை -வளர்ச்சியை - முன்னேற்றத்தை இழக்கத் துடிக்கலாமா?

    மண்டல் குழுப் பரிந்துரைகளுக்காகவும், இளைய பெருமாள் கமிட்டி பரிந்துரைக்காகவும் திராவிடர் இயக்கம் போராடியபோது இவர்கள் எங்கே போய் இருந்தனர்? வீட்டின் கதவைச் சாத்திக் கொண்டு வீணைக் கச்சேரி அல்லவா கேட்டுக் கொண்டிருந்தனர்; இப்போது இப்படி வீண் கச்சேரி நடத்தி, மாயையை உருவாக்கி, உங்களுக்கு ஜாதிப் போதையை ஏற்றும் மயக்கப் பானங்களை அல்லவா தரத் துடிக்கிறார்கள்?

    நியாயந்தானா? சிந்தியுங்கள்! 18 வயது வந்த பெண்ணுக்குத் தனது வாழ்விணையரைத் தேர்வு செய்யத் தகுதி இல்லை என்பது உங்கள் வாதமானால், 18 வயதில் வாக்குரிமையை - ஓட்டுப் போடும் வாய்ப்பை - மாற்றிட நாடு தழுவிய அளவில் பிரச்சாரம், போராட்டம் செய்ய முன் வருவீர்களா? சட்டத்தை மாற்றிடப் போராடுவீர்களா?

    21 வயது பெண் மாற்று ஜாதியில் காதல் செய்தால் அதை ஏற்பீர்களா?

    பெற்றோர்களைக் கேட்டுத்தான் காதல் திருமணம் வயது வந்தபெண் முடிவு செய்ய வேண்டும் என்றால், இது மகளிரை மறுபடியும் அடிமையாக்கும் சமூக அநீதி அல்லவா?

    பெற்றோர்கள் கூறுகிறபடி 18 வயது வந்த ஆண் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பெற்றோர்கள் ஆணைப்படி- சம்மதம் பெற்ற பிறகே அவர்கள் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுவீர்களா?

    அப்படிக் கூறுவது எப்படி நியாய விரோதம், சட்ட விரோதம், மனித உரிமைப் பறிப்புக் குற்றமோ, அது போன்றது தானே மகளிர் உரிமையைப் பறிப்பதும்?

    தமிழ்ப் பாங்கு, தமிழன், தமிழினம் என்று கூறும் இவர்களால் காதல் இல்லாமல், குறுந் தொகைப் பாடல்கள் இல்லாத தமிழ் இலக்கியங்கள் உண்டா? குறளின் காமத்துப் பாடல் எழுதி, கண்ணொடு கண் நோக்கொக்கின் குறளும் குற்றமானதா?

    வாக்குவங்கி அரசியலில் நடத்தும் ஒட்டுப் பசியாளர்களை ஓரங்கட்டுவீர்!

    உண்மையான உரிமைகளை வென்றெடுக்க, திராவிடர் கழகத்தின் - திராவிடர் இயக்கத்தின் பெரியார் தத்துவங்களின் கொள்கையை ஏற்பீர்! வலங்கை, இடங்கைகளைப் பிரிக்காதீர்!

    பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்களையும் மோதவிட்டு அரசியல் பதவிப் பசியைத் தீர்க்க எண்ணாதீர்!

    இணைப்பீர்!
    இணைப்பீர்!

    இன்றேல் வீழுவது நாமே!

    வாழ்வது ஆரியமே, அவாளே! புரிந்து கொள்வீர்.

    சிந்திப்பீர், செயல்படுவீர் தனியார் துறை இடஒதுக்கீட்டுப் போர்க் குரல் கொடுக்க ஆயத்தமாவீர்!

    பெரியார் நினைவு நாள் சூளுரை இதுவே!



    கி.வீரமணி
    ஆசிரியர்

    தமிழ் ஓவியா said...

    திலகர் சொல்கிறார் . . .

    சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் உணர்வு தோன்ற அதன் எதிரொலியாக மகாராட்டிரத்திலும் அந்த உணர்வு தலை தூக்கியது. அப்பொழுது (1918) இந்தத் திலகர் என்ன பேசினார் தெரியுமா?

    "இப்பொழுது எல்லோரும் சட்ட சபைக்குச் செல்லல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத் தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுகிறவனும், வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவனும் () சட்டசபைக்குப் போக வேண்டுமென்று ஏன் முயற்சி செய்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா?" என்று பேசினார்.

    ஆதாரம்: டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ''காந்தியாரும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?'' என்ற நூல்.

    தமிழ் ஓவியா said...

    பார்ப்பனரின் இனப்பற்று

    வட இந்திய நகர் ஒன்றில் சாலை விபத்தில் ஒருவன் இறந்து விட்டான். இறந்தவன் ஒரு நிறுவனத்தில் சுருக்கெழுத்துத் தட்டச்சராக இருந்தவன் என்பது அவனுடைய சட்டைப் பைக்குள் கிடந்த அடையாளச் சீட்டிலிருந்து தெரிய வந்தது. அதைப் பார்த்து அந்தக் கணத்திலேயே மற்றொரு பிராமணன் சைக்கிளில் அஞ்சல் நிலையத்துக்குப் பஞ்சாய்ப் பறந்தான் ""................ அலுவலகத்தில் சுருக்கெழுத்துத் தெரிந்த தட்டச்சர் வேலை காலியாக உள்ளது. உடனே புறப்பட்டு வா"" என்று திருவரங்கத்தில் உள்ள தன் தம்பிக்குத் தந்தி அடித்தானாம். இது கதை அன்று. நகைச்சுவைத் துணுக்கும் அன்று. இடையிடையே நிகழும் உண்மைச் சம்பவம்.

    (ஆதாரம்: ""வட மாநிலங்களில் தமிழர்"" . - ஆசிரியர் சோமலே. பக்கம் 2)

    தமிழ் ஓவியா said...

    சிங்கால்களின் திசை திருப்பங்கள்!


    சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது என்ற பழமொழி உண்டு. அதனை அப்படியே பின்பற்றுபவர்கள்தான் சங்பரிவார கும்பலான ஹிந்துத்துவாவாதிகளான பார்ப்பனர்களும் அவர்தம் தாசானுதாசர்களும்!

    பாலியல் வன்கொடுமைகளுக்கு நாட்டில் கடுமையான தண்டனை தர சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    பெண்களை வெறும் உடைமையாக்கியும், அடிமையாக்கியும், கொச்சைப்படுத்திய நிலை ஆரிய சனாதன மத நூல்களான இராமா யணம், பாரதம், பகவத் கீதை மனுசாஸ்திரம் மற்றும் புராணங்களில் வண்டி வண்டியாக உள்ளன!

    இந்துக் கடவுள்களின் லீலா வினோதங் கள் ஏராளம் உண்டு; அத்தனையும் இ.பி.கோ. என்ற இந்திய கிரிமினல் சட்டத்தின்கீழ் வராத குற்றங்களே அரிதேயாகும்.

    இந்த லட்சணத்தில், விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் (பார்ப் பனர்) நேற்று துறவிகள் (?) மாநாட்டில் பேசியுள்ளார். (இதில் சங்கராச்சாரியாரும் பாலியல் வன்கொடுமைபற்றி அலசிப் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்!)
    மேற்கத்திய கலாச்சாரத் தினால் தான் இப்படிப் பல பாலியல் வன்கொடுமைகள் நடை பெறுகின்றன என்று கூறியுள்ள அசோக் சிங்கால்களுக்கும் அவரது தொண்டரடிப் பொடி களுக்கும் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்.

    1. ஆண்டவன் அவதாரமான பகவான் கிருஷ்ணன் இளவய திலேயே, ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலைகளைத் திருடி, மரத்தின்மேல் வைத்துக் கொண்டு, நீருக்குள் இருந்த பெண்களை ஆடையில்லாத நிலையில் நீருக்கு மேலே வரச் சொன்னது, பாலியல் வன்கொடுமைக்கு முன்னோடி அல்லவா?

    2. தாருகாவனத்து ரிஷி பத்தினிகளை (3000 பேர்கள் - அப்பாடி!) கற்பழித்த சிவ லீலை ஹிந்து தர்மத்தின் சிறப்புகளா?

    3. அகலிகையைக் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிட - தேவர்களின் தலைவன் இந்தி ரன் முனிவர் வடிவம் ஏற்று, தவறாக அகலி கையும் நடந்து கொண்ட கதை - மேற்கத்திய கலாச்சாரமா? ஹிந்து கலாச்சாரமா?

    4. முன்பு இந்திய பிரிட்டனில் இந்திய ஹை கமிஷனராக இருந்த பண்டிட் விஜயலட்சுமி அவர் களுக்கு, பிரிட்டிஷ்காரர் ஒருவர் விருந்து வைத்தார். அப்போது அவரிடம் இந்த அம்மையார் உங்கள் படையெடுப்பில்தான் எங்கள் கலாச்சாரம் கெட்டது என்றாராம். அவர் அதற்கு மிகுந்த மரியாதையுடன், இருக் கலாம் மேடம், ஆனால் நாங்கள் அங்கே வந்திருக்காவிட்டால் நீங்களே உயிருடன் இருந்து இங்கே வந்து என்னுடன் தேநீர் அருந்த முடியாமற் போயிருக் கும் என்று பட்டென்று பதிலளித்தாராம்!

    அதாவது விதவையான இவரை சதி என்ற உடன்கட் டையில் ஏற்றி எரித்திருப்பார் களே, அதைச் சட்டம் போட்டு, சதி அல்லது உடன்கட்டை ஏற்றுதலை ஒழித்துக் கட்டியது வெள்ளைக்கார ஆட்சிதானே! என்ற பொருளில் கூறியது கேட்டு, வெட்கி வெலவெலத்துப் போய் விட்டார் இந்த விதவையரான அம்மணி!

    இன்னமும் ராஜஸ்தானில் ரூப் கன்வார்கள் எரிக்கப்பட்ட - சதி மாதா கோயில் உள்ளது! குழந்தை மணங்கள் குஜராத் உட்பட பல பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற வண்ணமே உள்ளன!

    இவை எல்லாம் மேற்கத்திய கலாச்சாரமா? மேற்கத்திய கலாச்சாரம்தான் காப்பாற்றியும் உள்ளது. மனுதர்மத்திலேயே மாதர், ஆடவர் நிலை பற்றி வெவ்வேறு விதமாகத் தண்டனை கூறியுள்ளதே! உபநிஷத்துக்களில் குருபத்தினி - சீடர்கள் ஒழுக்கக் கேட்டிற்குத் தண்டனை பற்றி வேறுவிதமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள் ளதே! அது எதைக் காட்டுகிறது?

    இந்தப் பாலியல் வன்கொடுமை மிகவும் பழைமையான புராதன நடப்பு ஹிந்து கலாச் சாரத்தில் என்பதைத்தானே காட்டுகிறது?

    இதனை ஏன் மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவு என்று திசை திருப்புகின்றனர் - இந்த மதவாதிகள்? இன்னும் எத்தனையோ கூற முடியுமே!

    - ஊசி மிளகாய்

    தமிழ் ஓவியா said...


    கபடி - பல்லாங்குழி விளையாட்டா?


    கேள்வி: உலகக் கோப்பை கபடிப் போட்டி யில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா மூன் றாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளதே?

    பதில்: ரொம்ப மகிழ்ச்சி. இதுபோல எப் படியாவது கஷ்டப்பட்டு பெண்கள் போட்டியில் பல்லாங்குழி ஆட்டத் தைச் சேர்த்து விட்டோ மேயானால், அதிலும்கூட இந்தியாதான் முதலிடத் தில் வரும்; சேம்பியன் பட்டத்தைப் பெறும். நாம் மீண்டும் சந்தோஷப்பட் டுக் கொள்ளலாம். (துக்ளக் 9.1.2013 பக்கம் 29)

    எதிலும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பார்வையா? இதுதான் தி.க.வின் வேலையா என்று சில அதிமேதாவி ஆசாமிகள் அவசரக் குடுக் கையாக பேசுவார்கள்.

    ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புப் போதையில் அகப்பட்டவர்கள் திரு சோவின் இந்தப் பதிலுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்?

    கபடி - என்பது பல்லாங் குழி விளையாட்டா? அப்படிச் சொல்லுகிற கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களில் ஒரே ஒருவரை கபடி ஆடச் சொல்லுங்கள் பார்ப்போம் - பல்லாங்குழியா? பல் காணாமல் போகும் விளை யாட்டா என்பது அப்பொ ழுது தெரிந்து விடுமே!

    முட்டாள்கள் விளை யாடுகிறார்கள் - 11 ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கிரிக்கெட்டைப் பற்றி அறி ஞர் பெர்னாட்ஷா சொன் னதுண்டு.
    ஒரே நேரத்தில் இருவர் (விக்கெட் கீப்பரைச் சேர்த்து மூவர் என்றும் வைத்துக் கொள்ளலாம்) விளையாடுவர்; மற்றவர் களோ மைதானத்தில் பேன் குத்திக் கொண்டு இருப் பார்கள் - இந்த விளை யாட்டுக்குப் பெயர்தான் கிரிக்கெட் (டு).

    கபடியோ, கால் பந்தோ அப்படியல்ல; மைதானத் தில் உள்ள அத்தனைப் பேரும் ஆவேசத்துடன் அதி சுறுசுறுப்புடன் விளை யாடியே தீர வேண்டிய வர்கள். கிரிக்கெட் சோம் பேறிகளின் கூடாரமாக இருப்பதால்தான் அந்த விளையாட்டைப் பார்ப் பனர்கள் தேடிக் கொண்டு விடுகிறார்கள். அதுவும் இல்லாமல் அது பணம் காய்ச்சி மரம். கொட்டிக் கொண்டே இருக்குமே!

    தேர்வுக் குழுவிலும் பார்ப்பனர்கள் (பி.சி.சி.அய்) என்பதால் தோளைத் தட் டிக் கொடுத்து, பூணூலைத் தடவிப் பார்த்து தேர்வு செய்வார்கள்.

    பல்லாங் குழியோடு கபடியை ஒப்பிட்டுச் சொல் கிறாரே திருவாளர் சோ. இதுவரை ஒரே ஒரு பார்ப்பனர் சடுகுடு பக்கம் தலை வைத்துப் படுத்ததாக எடுத்துக்காட்டுக்குகூடச் சொல்ல முடியுமா?

    நாலு பேர் அமுக்கிப் பிடிப்பான் ஆவேசமாக; புளியோதரைகள் தாக்குப் பிடிக்குமா? ஏனிந்த வீண் வம்பு? நமக்குத்தான் இருக் கவே இருக்கு - கிரிக்கெட் என்னும் சோம்பேறி விளையாட்டு - பணம் கொட்டும் பிழைப்புக்கு வசதி இருக்கும்போது கால் முறியுமோ, கை முறியுமோ, விலா எலும்பு முறியுமோ என்னும் ஆபத்தான விளை யாட்டை வரித்துக் கொள்ள அவாள் என்ன பைத்தியக் காரர்களா?

    ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண் டுல்கர், ராகுல் டிராவிட், சவ்ரவ் கங்குலி, ஜவகர் சிறீநாத், வெங்கடேஷ் பிரசாத், அணில்கும்ளே, வி.வி.எஸ். இலட்சுமணன், கிருஷ்ணமாச்சாரி சிறீகாந்த், சுனில் ஜோஷி, மனோஜ் பிரபாகர், அஜீத் அகர்கர், ரோஹித் சர்மா, இஷாத் சர்மா, சிறீகாந்த், ரவீந்திர அஷ்வின், சடகோ பன் ரமேஷ், நிலேஷ் குல் கர்னி, சிவராமகிருஷ்ணன், வெங்சர்க்கார் டபுள்யூ வி. ராமன் = இப்படி ஒரு நீண்ட அக்கிரகாரப் பட்டியல். இவர்களையடுத்து இவர் களின் பிள்ளைகளும் களத்தில் இறக்கப்படுவதும் உண்டு. இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இவ்வளவுப் பார்ப்பனர்கள் இருந்தும் ஒரு கபில்தேவ், ஒரு எம்.எஸ். தோனி என்று பார்ப்பனர் அல்லாதார் (ஏதோ விதி விலக்காக இவர்கள்) அணிக்குத் தலைமையேற்றபோதுதான் உலகக் கோப்பை இந்தியா வுக்குக் கிடைத்தது!

    (எம்.எஸ். தோனியை அணித் தலைவர் பதவி யிலிருந்து ஒழித்துக் கட்ட குழிபறிக்கும் வேலையில் பார்ப்பன ஊடகங்கள் இறங்கியுள் ளன).

    அணி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட தன்னலத்தின், அடிப் படையில் விளையாடி பரிசுகளைத் தட்டிச் செல் லுவதும் பார்ப்பனர் களுக்கே உரித்தான ஒன்றாகும்.

    விசுவநாதன், ஆனந்த் என்ற பார்ப்பனர் செஸ்லில் வெற்றி பெற்றால் சோ கூட்டத் திற்கு இனிக்கிறது; நம் பெண்கள் பல்லாங்குழி விளையாடினால் வேர்க் கிறதோ! அதில்கூட பெண்களை மட்டம் தட்டும் மனுதர்மப் புத்தி.

    இந்த நுணுக்கங் களை எல்லாம் ஈரோட் டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் துல்லிய மாக விளங்கும்.

    தமிழ் ஓவியா said...


    இயற்கைத் தடைகள்


    நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மை யும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன் மானத்திற்கு இயற்கைத் தடைகள்.
    (குடிஅரசு, 9.1.1927)

    தமிழ் ஓவியா said...

    மோடிவித்தை!

    இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல், அயூப்கான் சைவ உணவகம், காந்தியார் சாராயக் கடை, அன்னை தெரசா பயில்வான் கூடம்; திருவிக சுருட்டுக்கடை, சீனிவாச அய்யங்கார் கசாப்புக் கடை என்றெல்லாம் பெயர் இருந்தால் சிரிப்பு மட்டுமா வரும்? அடுத்த நொடியில் எரிச்சல்கூட பீறிட்டுக் கிளம்பும்.

    இப்பொழுது ஒரு செய்தி குஜராத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.

    உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி குஜராத் காந்திநகரில் காந்தி யாருக்குப் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்படும் என்பதுதான் அந்தச் செய்தி.

    பரவாயில்லையே. நற்செய்தி தானே இதில் என்ன பிரச்சினை என்ற வினா எழக்கூடும்;

    இந்த அறவிப்பைக் கொடுத்தவர் யார் என்பதுதானே முக்கியம். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடிதான். (மோடி வித்தை என்பது இது தானோ!) இந்த அறிவிப்புக்குச் சொந்தக்காரர்.

    இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்பதோடு இப்பொழுது இதனைப் பொருத்திப் பார்த்தால் உண்மை பட்ட வர்த்தனமாகப் புலப்பட்டு விடுமே!

    பகவத் கீதையிலிருந்து சுலோகத்தை எடுத்துக்காட்டி காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்திய நாதுராம் கோட்சே கதை ஒருபுறம் இருக்கட்டும்.

    நாட்டில் நல்லவர், வல்லவர் என்று பீற்றிக் கொள்ளும் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்தக் கூட்டம் மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்களே நினைவிருக்கிறதா?

    மை நாதுராம் கோட்சே போல்தா என்பதுதான் அந்த நாடகத்தின் பெயர். நான் தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன் என்பது தலைப்பு.

    நான் காந்தியார் என்ற மனிதனைக் கொல்லவில்லை; காந்தியார் என்ற அரக்கனைக் கொன்றேன் என்று அந்த நாடகத்திலே கோட்சே கூறுகிறான். காந்தியாரைக் கொன்ற கோட்சே மகான் என்பது தான் அந்த நாடகத்தின் அடிநாதம் உச்சகட்டம் .

    இந்தக் கூட்டம் காந்தியாருக்கு உலகப் பல பகுதிகளிலிருந்தும் மண்ணையும், தண்ணீரையும் கொண்டு வந்து பிரம்மாண்ட நினைவுச் சின்னம் எழுப்புகிறது என்றால் இதன் பொருள் என்ன?

    படிப்பவர் புத்திக்கே விட்டு விடுவோம்!

    ---------------- மயிலாடன் அவர்கள் 29-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

    தமிழ் ஓவியா said...

    கொல்லைப் புறவழி எச்சரிக்கை!



    ஜாதி மறுப்புத் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதலருக்குப் பிறக்கும் ஒரு குழந்தை, தொடர்ந்து தன் தந்தையான ஜாதி அடையாளத்தை ஏற்கும் என்றால் என்ன பயன்? வெறும் இடஒதுக்கீடு சலுகை மட்டும் தானா? அப்படியானால் ஜாதி எப்படி ஒழியும்? என்ற வினாவை தினமணி (21.12.2012) நடு பக்கக் கட்டுரை ஒன்று தொடுத்திருக்கிறது.

    முழு கட்டுரையைப் படிக்கும் பொழுது அதில் பதுங்கியிருக்கும் பார்ப்பனீயத்தை புரிந்து கொள்ளலாம்.

    திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து தன் கருத்தைப் பதிவு செய்து வந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி தருமபுரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் சரி.

    போடிப் பகுதியில் ஜாதிக்கலவரம் நடைபெற்றபோது தமிழ் நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் சரி, ஒரு கருத்தினைத் தெளிவாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர் என்று பதிவு செய்து, அவர் களுக்குக் குறிப்பிட்ட அளவுக்கு இடஒதுக்கீடு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

    ஜாதி மறுப்புத் திருமணத்தில் இணைய ருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப் படும் இடஒதுக்கீட்டின் அளவு வளர்ந்து கொண்டே போக வேண்டும். ஜாதி அடிப்படையி லான இடஒதுக்கீட்டின் அளவு குறைந்து கொண்டு வர வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடாகும்.

    தினமணியின் கட்டுரை இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதில் தன் கவனத்தைச் செலுத்து கிறதே தவிர, இப்படி ஒரு கருத்தைக் கூற வரவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

    இரண்டாவதாக தினமணி முன் வைக்கும் குற்றச்சாற்று - ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்றுப் பயனடைந்து வசதியான நிலையில் உள்ளவர்கள் கலப்புத் திருமணத் தம்பதிகளின் குழந்தைகள்தான் இடஒதுக்கீடு சலுகையில் அதிக பலன் பெறுகின்றனர் என்பதைக் குற்றச்சாற்றாக முன் வைக்கிறது தினமணி.

    இந்த வளர்ச்சிப் போக்கை வரவேற்க வேண்டுமே தவிர குறையாகக் கூறக் கூடாது. இதன் மூலம் ஜாதி மறுப்புத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து மகிழ்ச்சி அடையத்தானே வேண்டும்.

    எம்.ஜி.ஆர். கொண்டு வந்த வருமான வரம்பு என்ற அளவுகோலை ஆதரிக்கும் சன்னமான இழை இதற்குள் ஓடுவதையும் கவனிக்கத் தவறக் கூடாது.

    இதற்குள்ளே இருக்கும் தந்திரம் என்ன வென்றால், பிற்படுத்தப்பட்டவர்களில் தகுதி உடையவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்று கூறி அந்த இடங்களைப் பொது இடத்திற்கும் கொண்டு செல்வதாகும்.

    மத்திய அரசு துறைகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர்க்கு அளிக்கப்பட்டு இருந்தும் பிற்படுத்தப்பட்டவர் கள் இன்னும் ஏழு விழுக்காடு இடங்களைத் தாண்டவில்லையே!

    பொருளாதார அளவுகோலைத் திணித்து இந்த 7 சதவிகிதத்தில்கூட எட்ட முடியாத அளவுக்குத் தந்திரக் குழியை வெட்டும் வேலைதான் இது.

    ஜாதி ஒழிப்பில் ஆர்வம் உள்ளவர்கள்போல் ஒரு பக்கத்தில் காட்டிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் இடஒதுக்கீட்டுக்குக் குழி பறிக்கும் எத்துவேலை இது.

    இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்க்க முடியாது என்று உறுதிபட்ட நிலையில், அதனை கொல்லைப்புறமாக ஒழிக்கப் பார்க்கின்றனர் - எச்சரிக்கை! 22-12-2012

    தமிழ் ஓவியா said...

    வெறும் ஜாதி அணி சமூகநீதிக்குக் கைகொடுக்குமா?



    சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

    பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், படைப் பாளிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பு கள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்குகொண்டு கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.

    முக்கியமாக அந்தக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் சாரம் என்று எடுத்துக்கொண்டால்,

    1. ஜாதி அடிப்படையில் அரசியல் நடத்துவது ஆபத்தானது; அதன் அடிப்படையில் தேர்தல் கூட்டணி அமைப்பது சமுதாயத்தை ஜாதி அடிப்படையில் கூறு போடுவதாகும் - பிளவு ஏற்படுத்துவதும் ஆகும்.

    2. காதல் என்பது இயற்கையாக அமையக் கூடியதாகும். அதனை எதிர்ப்பது - மறுப்பது என்பது பிற்போக்குத்தனமாகும். இதன்மூலம் இளைஞர்களின் கடுமையான எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும்தான் ஆளாக நேரிடும்.

    3. உலகம் அறிவியல் துறையில் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொருவர் கையிலும் அலைப்பேசி வந்தாகிவிட்டது. இணைய தளம், மடிக்கணினி என்று உலகம் வாயு வேகத்தில் முன்னேற்றத் திசையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.

    ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துதான் காதல் புரியவேண்டும் என்ற நிலை இல்லை. அலைப்பேசி மூலமாகவும் நடந்துவிடுகிறது. அலைப்பேசியைத் தடை செய்யவேண்டும் என்று கூறப் போகிறார்களா?

    4. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள். காரணம் ஜாதி கலப்பு ஏற்பட்டுவிடுமே என்ற அச்சம்; ஜாதி - வர்ணதர்மத்தைக் காப்பாற்றுவது என்பதுதான் சங் பரிவார்களின் அடிப்படைக் கொள்கை யாகும். அதே உணர்வோடு பா.ம.க. செயல்படுவது இந்துத்துவா மனப்பான்மை கொண்டதாகும்.

    5. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மை மக்களை இணைத்து ஓர் அணியை உண்டாக்க இருப்பதாகக் கூறிக் கொண்டிருந்த பா.ம.க. தலைவர் இப்பொழுது அதிலிருந்து முரண்பட்டு, வெறும் ஜாதிய அமைப்புகளோடு அணி ஒன்றை வரவேற்பது கொள்கை ஏதும் அற்ற சிந்தனையைத்தான் வெளிப்படுத்தும்.

    6. சமூகநீதி என்று வரும்பொழுதுகூட தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராடும் பொழுதுதான் அதன் பலனை ஈட்ட முடியும். அதைவிட்டு ஜாதிக்கட்சிகளை இணைத்துக் கொண்டு எப்படி உரிய உரிமையினை அடைய முடியும்? தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் என்று சொன்னால், அது அகில இந்திய அளவில் அதன் பிரதி பலிப்பைக் காண முடியும். அதை விட்டுவிட்டு தமிழ்நாடு அளவில் ஜாதிகளை இணைத்து எதனைச் சாதிக்க முடியும்?

    இதில் இன்னொரு உண்மையும் கவனிக்கத்தக்க தாகும். மாநில அளவைப் பொறுத்தவரையில் ஓரளவு இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தை பெற்று இருக்கிறோம். 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்று இருந்த சட்ட நிலையையும் கடந்து 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படியே தமிழ்நாட்டில் உறுதி செய்யப் பட்டுள்ளது. அதற்காக திராவிடர் கழகம் அளித்த பங்களிப்பு உலகம் அறிந்ததே.

    இப்பொழுது பிரச்சினையே மத்திய அரசுத் துறை களிலும், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டில் உரிய சதவிகிதத்தைப் பெறுவதுதான்; அகில இந்திய அளவில் அதன் தாக்கத்தை உருவாக்குவதற்கு ஜாதி அமைப்புகள் பயன்படுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

    பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்ற பிரச்சினை முதற்கட்டமாக தாழ்த்தப்பட்டவர்கள் பெறுவதற்கே பெரும் பாடுபடவேண்டியுள்ளது. அடுத்து பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தவேண்டுமானால் கண்டிப்பாக தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந் தால்தான் வெற்றி கிட்டும்.

    சமூகநீதிபற்றிப் பேசும் பா.ம.க. நிறுவனர் இது குறித்தும் சிந்திக்க வேண்டியவர் ஆவார்.

    7. தமிழ்த் தேசியம்பற்றி ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு அதில் தாழ்த்தப்பட்டவர்களை இணைக்கா விட்டால் அது என்ன தமிழ்த் தேசியம்? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பேசும் தமிழ்த்தேசியவாதிகள் பா.ம.க. நிறுவனரின் இந்த நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வகையில் கருத்தும் போதுமான அளவில் தமிழ்த் தேசியவாதிகளால் தெரி விக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

    நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் பதற்றப்படாமல், உணர்ச்சி வயப்படாமல், சமூகநீதிக் களத்தில் கைகோர்க்க பா.ம.க.விற்கு அழைப்புக் கொடுத்தது அவரது முதிர்ச்சியைக் காட்டக்கூடியதாகும்.

    தனிமைப்பட்டுப் போகாமல் பா.ம.க. நிறுவனர் சிந்திப்பாராக!

    தமிழ் ஓவியா said...

    வேலைக்காரி


    டில்லி, மும்பை, கொல் கத்தா, பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் கடந்த 15 நாட்கள்பற்றிய ஒரு கணிப்பு வெளி வந் துள்ளது.

    அந்தக் கணிப்பை மேற்கொண் டுள்ள அமைப்பு அசொச் செம் என்பதாகும். 2500 பெண்களிடம் இந்த அமைப்பு ஆய்வு ஒன் றினை மேற்கொண்டுள் ளது.

    கடந்த 15 நாட்களில் இந்நகரங்களில் 40 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? இந் நகரங்களில் பணியாற் றும் பெண்களில் 80 விழுக்காட்டினர் சூரியன் மறைவதற்கு முன்ன தாகவே வீடு வந்து சேர்ந்து விடுவதுதான்.

    பெண்கள் மீதான வன்முறை என்பது தனிப் பட்ட பிரச்சினையல்ல. ஒட்டு மொத்தமான சமூ கப் பிரச்சினை. நாட்டின் பொருளாதாரத்தை, உற்பத்தியைப் பறிக்கச் செய்யும் பிரச்சினை என்பது இதன் மூலம் தெரிகிறதா - இல்லையா!

    ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் என்ன சொல்லுகிறார்? ஆண்கள் வெளி வேலை களைப் பார்த்துக் கொள் வார்களாம் -பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். இது ஓர் ஒப்பந்தமாம். பெண்கள் அந்த ஒப்பந்தத்தை மீறுவ தால் தான் இந்தப் பிரச் சினையே ஏற்படுகிறதாம்.

    இதற்குள் குடி கொண்டிருந்த இந்துத்துவா மனப்பான்மை பளிச் சென்று வெளிப்படுகிறதா இல்லையா?

    பெண்கள் என்றால் கூலி பெறாத சமையற் காரி என்பதுதானே இந்துத்துவாவின் கோட்பாடு? ஓர் ஆணுக்கு ஒரு சமையற்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்திற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை - ஓர் ஆணின் கண் அழ கிற்கு ஓர் அழகிய அலங் கரிக்கப்பட்ட பொம்மை - என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படு கிறார்கள்? பயன்படுத் தப்படுகிறார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் (குடிஅரசு 27.1.1946 பக்கம் 2) என்றாரே தந்தை பெரி யார்.

    அதனை இந்த மனு தர்ம சுவீகாரப் புத்திரர்களின் கூற்றோடு, கணிப் போடு பொருத்திப் பாருங் கள். புரியும் பெரியார் கூறும் பொருளின் ஆழம்! - மயிலாடன்