Search This Blog

14.1.13

பெரியாரின் பொங்கல் விண்ணப்பம்

பொங்கல் விண்ணப்பம்

ஆரியம் திராவிடத்தைவிட்டு அடியோடு அகன்றால் ஒழிய, திராவிடத்திற்கு மீட்சி இல்லை, வாழ்வு இல்லை, மானமில்லை, மனிதத் தன்மை இல்லை என்று தூக்குமேடையில் நின்று கிட்டியை மாட்டிக்கொண்டு கூடக் கூறுவோம்.
திருஇடம் என்னும் திராவிடம் இன்று தீண்டப்படாதத் தன்மை எய்தி, அதன் மகன் பிறவி சூத்திரன், பஞ்சமன் என்னும் நிலை அடைந்ததற்கு ஆரியமல்லாமல் வேறு எதனை காரணமாகக்  கூறமுடியும்? ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற் பட்ட ஆராய்ச்சிச்  சுவடிகளில் இருந்தும், அதற்கும் முற்பட்டதான கண்டு பிடிப்புச் சின்னங்களில் இருந்தும் ஆரியத்தாலேயே திராவிடம் அழிந்து பட்டு  ஈன நிலைமைக்கு வந்தது என்பதைப் புலவர்கள், அறிஞர்கள், சாதாரண பகுத்தறிவாளர்கள் அய்ய மற அறிந்திருந்தும், அனுபவத்தில், நடைமுறையில் கண்டுவந்தும் வீழ்ந்து கிடக்கும் நிலையில் இருந்து திராவிடம் எழுச்சிபெற்ற நிலைக்கு வர வேண்டு மானால், ஆரியர் அருளால்தான் முடியும் என்று ஆரியருக்கு அனுமாராக அடிசுமந்து நிற்பதானால் இதைவிட மதியீனத்தன்மை வேறு என்ன இருக்கமுடியும்?
காட்டுமிராண்டித் தன்மையில் இருந்த நாடுகளும், காட்டுமிராண்டி மக்களும் இன்று மனிதத்தன்மை பெற்று மேன்மைவாழ்வு வாழ்கின்ற இந்தக் காலத்தில்  திராவிடம் சாதா ரண மனிதத்தன்மைபெற மக்களைக் கோவில்களுக்குள் நுழைப்பதும், அதையே மாபெரும் மனிதத் தொண்டாகக் கருதுவதுமாயிருந்தால் திராவிடத்திற்கு என்றாவது எழுச்சி ஏற்படும் என்று யார்தான்  கருதமுடியும்?
திராவிடத்தின் சமுதாய முயற்சி இதுவாய் இருந்தால் இனி அரசியல் முயற்சி எப்படி இருக்கின்றது என்று பார்ப்போமேயானால், அது மகாமகா மோசமான மடத்தன்மையதாய் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். இன்றைய அரசியல் பிரச்சினை என்ன என்று பார்ப்போம். அதுபெரிதும் இந்துக்கள் - முஸ்லிம்கள் போராட்டம் என்பதல்லாமல் வேறு என்ன என்று சொல்லமுடியும்? இந்துக்கள் - முஸ்லிம் போராட்டம் என்ன என்று பார்ப்போமானால் ஆரியத்திற்கும் ஆரியமல்லாததற்கும் அல்லது ஆரியர் களுக்கும் ஆரியர்கள் அல்லாதவர் களுக்கும் போராட்டம் என்பதல்லாமல் வேறு உள் கருத்து என்ன என்று சொல்லமுடியும்?
இந்து - முஸ்லிம் என்பது  ஒரு மதத் தத்துவ வேறுபாடேயாகும். என்னவென் றால் ஒரு கடவுள் வழிபாடு - பல கடவுள் வழிபாடு; உருவக் கடவுள் வழிபாடு - அருவக் கடவுள் வழிபாடு; மக்கள் சமுதாயத்தில் ஒரு ஜாதி - மக்கள் சமுதாயத்தில் பல ஜாதி வகுப்பு; மக்கள் யாவரும்  பிறவியில் சமம் - மக்கள் யாவரும் பிறவியில் வேறுபட்டவர்கள் என்பனவாகிய இந்தத் தன்மை பேதங்கள்தான் முஸ்லிம் மதமாகிய இஸ்லாத்திற்கும் இந்து மதமாகிய ஆரியத்திற்கும் இருந்துவரும் அடிப்படை பேதங்கள் ஆகும். இந்த அடிப்படையை வைத்து நடத்தப்படும் ஆரியர்கள், ஆரியரல்லாதவர்கள் (முஸ்லிம்கள்) என்கின்ற மக்கள் போராட்டத்தில், திராவிடத்தின் - திராவிடரின் கடமை என்ன என்று கேட்கிறோம்.
இந்தப் போராட்டத்திற்குத் திராவிடன் ஆரியத்திற்கு அடிதாங்கி நிற்பது அறிவுடை மையா அல்லது எதிர்த்து நிற்பது அறிவுடைமையா என்று சிந்திக்கும்படி திராவிடப் புலவர்களையும் திராவிடக் காளைகளையும் இறைஞ்சு கின்றோம். இந்திய  அரசியல் போராட்டமானது இந்து - முஸ்லிம் போராட்டம் என்னும் தன்மையை வெளிப்படையாய் அடைந்த வுடன் உண்மைத்திராவிடர் இந்திய தேசிய அரசியலைவிட்டு உடனே விலகி இருக்க வேண்டியதல்லவா? மறத் திராவிடனின், மணிப் புலவனின் கடமையாக இருந்திருக்கவேண்டும்.
இஸ்லாம் மதம் அதாவது ஆரிய எதிர்ப்பு மதம் இன்று இந்தியாவில் இல்லாதிருக்குமானால், கிறிஸ்தவ மதம் இன்று  இந்தியாவில் இல்லாதிருந் திருக்குமானால், திராவிட தேசியத் தோழனே! இன்று உனது கதி, நிலை, வாழ்வு, மானம் எப்படி இருந்திருக்கும் என்பதை வெளிக் கண்ணை மூடிக் கொண்டு மனக்கண்ணால் சற்று உன்னையே பார். என்ன காணும்? நீ வேசிமகனாக, வைப்பாட்டி மகனாக, உண்மையில் அட்டியாக, அடிமையாக, இழிமகனாக, கடையனாக இருந்திருப் பாயா இல்லையா? இன்னமும் உன் உடன்பிறந்த சோதரிகள் பலர் வேசிகள் என்பதையும், சோதரர்கள் பலர் வேசி மக்களே என்பதையும், உறவினர் பஞ்சமர், சண்டாளர், இழிநிலையர் என்பதையும், பெயராக இடமாகக் கொண்டு உண்மை யிலேயே சட்டத்தில் சாத்திரத்தில் நடப்பின் அந்தப்படி நடத்தப்படு கிறார்களா? இல்லையா? சிந்தித்துப்பார். கோபப்படாமல் ஆத்திரப்படாமல் வெட்கப் பட்டுச் சிந்தித்துப்பார்.
ஆரிய இழிவில் இருந்து, கொடுமையில் இருந்து  திராவிடம் மீள வேண்டுமானால் திராவிடநாடு ஆரிய நாட்டுச் சம்பந்தத்தில், பிணையில் பிடிப்பில் இருந்து பிரியவேண்டும் என்று திராவிடர் கழகம் சொன்னால் கல்யாண சுந்தரங்களுக்கும், மீனாட்சி சுந்தரங் களுக்கும் மற்றும் புலவர் மணிக் குழாங் களுக்கும் ஏன் கோபம் வரவேண்டும்? கோபிப்பவர்கள் புலவர்களாக இருக்க முடியுமா? எங்களுக்குப் புலையர் பட்டம் வேண்டாம் என்று நாங்கள் சொல்லு வதைத் தடுப்பவர்கள் எப்படிப் புலவர் களாக இருக்க முடியும்? எப்படித் தேசிய வீரர்களாக இருக்கமுடியும்? ஆரியம் ஒழிந்தால் ஒழிய அல்லது ஆரியத்தில் இருந்து விடுபட்டால் விலகினால் ஒழியத் திராவிடர்களுக்கு எப்படிப் புலையர்ப்பட்டம் நீங்க முடியும்? தேசியக் காளைகளே! நீங்கள்தான் சிந்தித்துப் பாருங்கள்.
புலவர் தோழர்களே! தேசிய வீரத் தோழர்களே! இந்துஸ்தான் - பாகிஸ்தான் என்பது ஆரியஸ்தான ஆரியமல்லாதஸ்தான் என்பதல்லாமல் அதன் உண்மைக் கருத்து வேறு என்ன? ஆரிய மல்லாதஸ்தான் என்பதற்குப் பதிலாக அதாவது அல்லாத என்கின்ற வார்த்தை கூடாது என்பதற்காக அதாவது நாம் எப்படிப் பார்ப்பனர் அல்லாதார் என்று சொல்வது இழிவு என்று கருதித் திரா விடர் என்ற சரித்திர கால ஆராய்ச்சிப் பெயரைப் பயன்படுத்துகிறோமோ அதுபோல் ஆரியத்தை வெறுத்தவர்கள், ஆரியத்தை ஏற்காதவர்கள் பாகிஸ்தான் என்று பெயர் சொல்லுகிறார்கள். அதுபோல்தான் நாமும் ஆரியமல்லாத நாடு என்பதற்குப் பதிலாக திராவிட நாடு என்கின்றோம்.
ஆகவே பாகிஸ் தான் என்பதும் திராவிட நாடு என்பதும் ஒரே அடிப்படையை ஒரே கருத்தைக் கொண்ட சொற்களே தவிர வேறுவேறு கருத்துக்கள் இலட்சியங்கள் கொண்ட வைகள் அல்ல. அப்படி இருக்கத் திராவிட நாட்டில் திராவிட மக்கள் இடையில் பாகிஸ்தான் இந்துஸ்தான் பிரச்சினையைப் புகுத்தி அதன் சாக்கில் இந்து - முஸ்லிம் கலவரங்களை வெறுப் புகளை உண்டாக்கி இருப்பதானது ஆரியர்கள் சூழ்ச்சியே ஒழிய அதில் திராவிட நாட்டுக்கோ, திராவிட மக்களுக்கோ ஆகும் நலமான காரியம் ஒன்றுமே இல்லை; கேடேயாகும். பாகிஸ்தான் பிரச்சினை பற்றித் திராவிட நாட்டில் திராவிடர்கள் இடையில் எதிர்ப்புப் பேசப்படுவது வேண்டப்படாத காரியமேயாகும்.
இன்று திராவிடநாட்டில் அரசியல் பிரச்சினை உண்மையானதாகவும் யோக்கிய மானதாகவும் ஒன்று இருக்க வேண்டுமானால் அது ஆரியப்பிடியில், சம்பந்தத்தில் இருந்து திராவிடநாடு விலகவேண்டும், விடுபடவேண்டும் என்பதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. திராவிடநாடு விடுபடுவதைத் தடுப்பதும் எதிர்ப்பதுமான காரியமே தான் திராவிடநாட்டில் பாகிஸ் தான் எதிர்ப்புப் பிரச்சினையைக் கொண்டு வந்து ஆரியர்கள் புகுத்தியதாகும். திராவிட மக்கள் உண்மை உழைப்பாளி களானால் ஆரியத்தில் இருந்து அடி யோடு விடுபடமுயலும். ஆரியரல்லா தார், ஆரியம் வேண்டாதார் ஆகிய எல்லோருடனும் ஒத்துழைத்து உதவி செய்யவேண்டியதுதான் யோக்கியமான தொண்டு ஆகும்.
ஆதலால் புத்தாண்டு நினைவுக் குறியாகவும், பொங்கல்விழா படிப்பினைக் குறியாகவும் திராவிட புலவர்களுக்கும் திராவிட காளைகளுக்கும் நாம் மனம் நிறைந்த வேண்டுகோள் சேதியாக மகிழ்ச்சிப் பொங்கலோடு விண்ணப்பித்துக் கொள்ளுகிறோம்.
                      -------------------தந்தைபெரியார் -”குடிஅரசு” - தலையங்கம் - 18.01.1947

2 comments:

தமிழ் ஓவியா said...

விஷம் கக்கும் வேதிய விரியன் பாம்பு


ஒன்று தமிழர்களின் தேசியத் திருநாளான பொங் கலன்று பொங்கிப் பிரவாகித்துள்ளது. அந்த நல்ல' பாம்பு வேறு யாருமல்லர். திருவாளர் சோ' இராமசாமிதான்.

(1) காங்கிரசில் ஊழல்வாதிகள் அதிகம்; ஆனால் பா.ஜ.க.வில் நேர்மைவாதிகள் அதிகமாம்.

எந்த அளவு மீட்டரை வைத்துச் சொல்லுகிறார். அவாளுக்கே வெளிச்சம். இராமாயண காலத்திலிருந்து - மனுவாதி காலத்திலிருந்து ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் குல்லூகப் பட்டர் கும்பலாயிற்றே!

(1) மகா யோக்கியர் அடல் பிஹாரி காலத்தில் என்ரான்' ஊழலில் ஆரம்பித்து பெங்களூரு எடியூரப்பா காலந்தொட்டு ஊழல் சாக்கடை யார் என்று தெரியாதா?

(2) அடுத்தவன் மனைவியை என் மனைவி என்று கூறி வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பிய கும்பல் எது?

(3) பெரிய முதலாளிகளிடத்தில் பெருந்தொகை பெற்றுக் கொண்டு, அவர்களுக்காகக் கேள்வி கேட்டதில் முதல் பரிசைத் தட்டிச் சென்றது பா.ஜ.க.வின் பார்ப்பனக் கும்பல்தானே!

(4) சவப்பெட்டியில் கூட ஊழல் செய்யக் கூடிய ஒண் ணாம் நம்பர் பேர்வழிகள் யார்? யார்? யானை லத்தியில் என்ன முதல் லத்தி, இரண்டாம் லத்தி? ஊழல் செய்வதில் காங்கிரஸ் அதிகம் - பிஜேபி கொஞ்சம் என்று சொல்லு வதன் மூலம் ஊழல் முத்திரையிலிருந்து சோவாலேயே' பிஜேபியைக் காப்பாற்ற முடியவில்லை என்றுதானே பொருள்?

(5) ஊழல் என்பது வெறும் பணப் பிரச்சினைதானா?

மதச்சார்பின்மை கூறும் இந்திய அரசமைப்புச் சட்டத் தின்மீது சத்தியம் கூறிப் பதவிப் பிரமாணம் எடுத்த பிஜேபி கும்பல் 450 ஆண்டு கால வரலாற்றுப் புகழ் பாபர் மசூதியை இடித்தது எந்த அடிப்படையில் சரி? தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த வழக்கிலிருந்து தன்னை விலக்கிக் கொள்ள முயன்றாரே அத்வானி, அதற்கு என்ன பெயராம்?

உலக நாடுகளின் முன் வெட்கித் தலை குனியச் செய்ய வில்லையா? பாபர் மசூதி இடிப்பு வழக்கை நேர்மையான முறையில் சந்திக்கத் திராணியின்றி 20 ஆண்டுகாலமாக ஓடி ஒளிந்து திரியும் கேவலத்திற்கு என்ன பெயர்?

(1) குஜராத் முதல்வர் மோடிக்குப் பிரதமர் ஆகும் எல்லாத் தகுதிகளும் இருக்கின்றன என்கிறார், சோ.

ஆமாம். இந்தியாவுக்கு ஒருவர் பிரதமராகும் தகுதி என்ன தெரியுமா? இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறு பான்மை மக்களைக் கொன்று குவிக்க வேண்டும்.

(2) சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்களை வன்புணர்ச்சி செய்யத் தங்குதடையற்ற லைசென்சு கொடுக்கப்பட வேண்டும். கர்ப்பிணிப் பெண்களாக இருந்தால் அவர்களின் வயிற்றைக் கிழித்து, அந்தச் சிசுவைத் தீயில் பொசுக்கிக் குத்தாட்டம் போட வேண்டும்.

இப்படிப்பட்ட 'வீராதி வீரர்', 'சூராதி சூரர்' மோடியன்றி - இந்தியாவுக்குப் பிரதமர் ஆக வேறு தகுதியுள்ள ஒருவர் கிடைப்பது என்பது அரிதினும் அரிதாயிற்றே.

இன்னொன்று, அப்படிப் பிரதமர் ஆகக் கூடியவர் உச்ச நீதிமன்றத்தில் நீரோ மன்னன் என்று மகுடம் சூட்டப்பட வேண்டும். சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சக அமைச்சர் 28 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனை பெற்றிருக்க வேண்டும்.

வெளிநாட்டு அரசுகள் அப்படிப்பட்ட பேர்வழிக்கு விசா மறுக்கும்' அளவுக்கு அநாகரிக ஆட்சி புரிந்தவராக இருக்க வேண்டும்.

(1) அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம், அரசு ஊழியர் நியமனம், போலீஸ் தேர்வு ஆகியவற்றில் எந்த ஒரு புகாரும் நிகழவில்லை, தமிழ்நாடு தேர்வாணையத் தலைவராக நட்ராஜ் நியமிக்கப்பட்ட பின் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். இதுவும் சோ'வின் காண்டக்ட் சர்டிபிகேட்' - அதிமுக ஆட்சிக்கு.

(2) தனது ஆட்சி வந்தவுடன் அதற்கு முந்தைய ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்களை ஆயிரக்கணக்கில் சீட்டுக் கிழித்து அனுப்பி ஆனந்தப்பட வேண்டும். பல்லாயிரக்கணக் கான மக்கள் நடுரோட்டில்' நிற்க வேண்டும். அல்லது பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.

இந்தப் பாதிப்புப் பட்டியலில் எந்த ஒரு பார்ப்பானும் இடம் பெறப் போவதில்லையே.

நட்ராஜ் தேர்வாணையத் தலைவராக வந்ததும் நிருவாகம் அவ்வளவு சுத்தமாம்!. தேர்வின்போது கேள்வித்தாள் அவுட்' என்ற சாதனையை விஞ்ச வேறு சாதனை உண்டோ சொல்வீர்!

உதயசந்திரன் அய்.ஏ.எஸ். என்ற நேர்மையான அதிகாரியை தேர்வாணையத்திலிருந்து வெளியேற்றிய மர்மம் என்ன? சோ' கும்பலுக்குத்தான் வெளிச்சம்.

இப்பொழுது கூட தமிழ்வழியில் படித்தவர்களுக்குப் பணியமர்த்தம் செய்வதில் ஏகப்பட்ட குளறுபடிகள். ஆயிரம் இருந்தாலும் நட்ராஜ் தோளில் பூணூல் தொங்குகிறதே - சோ'வின் பேனா புகழ்மாலை தொடுக்கத்தானே செய்யும்!

(

தமிழ் ஓவியா said...

1) அ.தி.மு.க. ஆட்சியில்தான் சட்டம் ஒழுங்கு சீரடைந்து இருக்கிறதாம் - பேசி இருக்கிறார் சோ.

இதைச் சொல்லாமல் இருந்திருந்தால் கூட ஓ, 'சோ' சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்குமோ என்று சில அப்பாவிகள் நம்பக் கூடும்.

அதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு அழகைச் சிலாகித் துள்ளாரே - இது ஒன்று போதும் சோ' என்பவர் மிகப் பெரிய பொய்யர் என்று விளங்கிக் கொள்வதற்கு. பொழுது விடிந்து பொழுது போனால் கொலை, கொள்ளை, திருட்டு என்ற வைபவங்கள்' தானே ஏடுகளை ஆக்ரமித்துள்ளன?

டில்லியில் ஒரு மாணவியின் பாலியல் வன் கொடுமைக்குஆளான செய்தியால் நாடே கிடுகிடுத்ததே. அதிமுக ஆட்சியில் எத்தனை எத்தனைக் கொடூரங்கள் இந்த வரிசையில். பார்ப்பன ஊடகங்கள் அந்தச் செய்திகளைக் கழுத்தை நெரித்துக் குழியில் போட்டு மூடி விட்டனவே!

சோவும், அவரின் துணைவியாரும் அக்னிக் கரங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அம்மையாரின் ஆட்சியாயிற்றே - காப்பாற்ற வேண்டாமா?

மத்திய அமைச்சரவையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தும் தமிழன் நலம் சார்ந்த காவிரி, முல்லைப்பெரியாறு, மத்தியத் தொகுப்பிலிருந்து மின்சாரம் ஆகியவற்றைப் பெற்றுத் தரவில்லையாம்.

(1) மத்திய ஆட்சியில் அதிமுக இருந்தபோது காவிரி நீர்ப் பிரச்சினையைத் தீர்த்ததா?

மத்தியில் அதிமுக ஆட்சி இருந்த காலத்தில் அந்தக் காலகட்டம் எனக்குப் பெரிதும் மன உளைச்சலை ஏற்படுத்திய காலகட்டம் என்ற பிரதமர் வாஜ்பேயிக்கு சோ'வின் பேச்சு சமர்ப்பணம் ஆவதாகுக.

தமிழர்களின் நீண்டகால கனவுத்திட்டமான தமிழர்கள் நலன் சார்ந்த சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை - ராமன் பாலம் என்று சொல்லி முடக்கும் கூட்டமா, தமிழ்நாட்டின் நலன் பற்றிப் பேசுவது?

(2) கருணாநிதி சங்கர மடத்தை அடிக்கடி இழுப்பார். அங்கு யாரும் வாரிசுகளை நியமிப்பது இல்லை. சிறுவனாக இருக்கும்போது வேதங்கள் அறிந்திருக்க வேண்டும். குடும்பத்தில் பாசம், ஆசை இல்லாதவராக இருக்க வேண்டும். பல கட்டுப்பாடுகள் இருக்கின்றனவாம் - இதுவும் சோ'வின் பேச்சுதான்.

(3) அப்படி எல்லாம் 'பொறுக்கி' எடுக்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார்கள் கதை கூவத்தை விட நாறவில்லையா?

காமகோடிகளின் காம விகாரத்தை பார்ப்பனப் பெண் எழுத்தாளரான அனுராதா ரமணனை அல்லவா கேட்க வேண்டும்!

ஜெயலலிதாவைப் பாராட்டும் திருவாளர் சோ' காஞ்சி சங்கராச்சாரியார்களை எதற்காக கைது செய்து ஜெயிலில் தள்ளினாராம்?

உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பாப்பாத்தி போல முழிக்கிறார் திருவாளர் சோ'.

மானமிகு கலைஞர் அவர்கள் காலத்தில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு, தமிழ் செம்மொழி அங்கீகாரம், சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதப் பார்ப்பனர்களின் சுரண்டலிலிருந்து மீட்பு, சிதம்பரம் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடலாம் என்ற ஆணை - வடலூர் வள்ளலாரின் சத்ய ஞானசபையிலிருந்து பார்ப்பனரை வெளியேற்றியது - பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் - இவையெல்லாம் சூத்திரக்' கலைஞரின் சூத்திரர்' பண்பாட்டுக்கான - தந்தை பெரியார் கொள்கை வழிச் செயல்பாடுகள் அல்லவா? சோ' பாம்பு விஷம் கக்காமல் என்ன செய்யும்?

தமிழன் தன் தோலைக் கிள்ளிப் பார்த்தாவது சொரணை பெற வேண்டாமா?

தமிழா, இனவுணர்வு கொள்!

தமிழா, தமிழனாக இரு!!


- மின்சாரம் - 16-1-2013