tag:blogger.com,1999:blog-1474608369333206681.post5012121398021248169..comments2023-10-29T13:02:52.613+05:30Comments on தமிழ் ஓவியா: தமிழிசை எப்படி இருக்கவேண்டும்? - தந்தை பெரியார்தமிழ் ஓவியாhttp://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comBlogger71125tag:blogger.com,1999:blog-1474608369333206681.post-88625879397200870502013-01-08T18:56:54.576+05:302013-01-08T18:56:54.576+05:30வேலைக்காரி
டில்லி, மும்பை, கொல் கத்தா, பெங்களூரு...வேலைக்காரி<br /><br /><br />டில்லி, மும்பை, கொல் கத்தா, பெங்களூரு, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் கடந்த 15 நாட்கள்பற்றிய ஒரு கணிப்பு வெளி வந் துள்ளது.<br /><br />அந்தக் கணிப்பை மேற்கொண் டுள்ள அமைப்பு அசொச் செம் என்பதாகும். 2500 பெண்களிடம் இந்த அமைப்பு ஆய்வு ஒன் றினை மேற்கொண்டுள் ளது.<br /><br />கடந்த 15 நாட்களில் இந்நகரங்களில் 40 விழுக்காடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாம். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? இந் நகரங்களில் பணியாற் றும் பெண்களில் 80 விழுக்காட்டினர் சூரியன் மறைவதற்கு முன்ன தாகவே வீடு வந்து சேர்ந்து விடுவதுதான்.<br /><br />பெண்கள் மீதான வன்முறை என்பது தனிப் பட்ட பிரச்சினையல்ல. ஒட்டு மொத்தமான சமூ கப் பிரச்சினை. நாட்டின் பொருளாதாரத்தை, உற்பத்தியைப் பறிக்கச் செய்யும் பிரச்சினை என்பது இதன் மூலம் தெரிகிறதா - இல்லையா!<br /><br />ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் என்ன சொல்லுகிறார்? ஆண்கள் வெளி வேலை களைப் பார்த்துக் கொள் வார்களாம் -பெண்கள் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். இது ஓர் ஒப்பந்தமாம். பெண்கள் அந்த ஒப்பந்தத்தை மீறுவ தால் தான் இந்தப் பிரச் சினையே ஏற்படுகிறதாம்.<br /><br />இதற்குள் குடி கொண்டிருந்த இந்துத்துவா மனப்பான்மை பளிச் சென்று வெளிப்படுகிறதா இல்லையா?<br /><br />பெண்கள் என்றால் கூலி பெறாத சமையற் காரி என்பதுதானே இந்துத்துவாவின் கோட்பாடு? ஓர் ஆணுக்கு ஒரு சமையற்காரி - ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி - ஓர் ஆணின் குடும்பப் பெருக்கத்திற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை - ஓர் ஆணின் கண் அழ கிற்கு ஓர் அழகிய அலங் கரிக்கப்பட்ட பொம்மை - என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படு கிறார்கள்? பயன்படுத் தப்படுகிறார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் (குடிஅரசு 27.1.1946 பக்கம் 2) என்றாரே தந்தை பெரி யார்.<br /><br />அதனை இந்த மனு தர்ம சுவீகாரப் புத்திரர்களின் கூற்றோடு, கணிப் போடு பொருத்திப் பாருங் கள். புரியும் பெரியார் கூறும் பொருளின் ஆழம்! - மயிலாடன்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-91681159971477122272013-01-08T05:26:46.406+05:302013-01-08T05:26:46.406+05:30 வெறும் ஜாதி அணி சமூகநீதிக்குக் கைகொடுக்குமா?
ச... வெறும் ஜாதி அணி சமூகநீதிக்குக் கைகொடுக்குமா?<br /><br /><br /><br />சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் சார்பில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.<br /><br />பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், படைப் பாளிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்பு கள், கலைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்குகொண்டு கருத்துகளை எடுத்துச் சொன்னார்கள்.<br /><br />முக்கியமாக அந்தக் கூட்டத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகளின் சாரம் என்று எடுத்துக்கொண்டால்,<br /><br />1. ஜாதி அடிப்படையில் அரசியல் நடத்துவது ஆபத்தானது; அதன் அடிப்படையில் தேர்தல் கூட்டணி அமைப்பது சமுதாயத்தை ஜாதி அடிப்படையில் கூறு போடுவதாகும் - பிளவு ஏற்படுத்துவதும் ஆகும்.<br /><br />2. காதல் என்பது இயற்கையாக அமையக் கூடியதாகும். அதனை எதிர்ப்பது - மறுப்பது என்பது பிற்போக்குத்தனமாகும். இதன்மூலம் இளைஞர்களின் கடுமையான எதிர்ப்புக்கும், வெறுப்புக்கும்தான் ஆளாக நேரிடும்.<br /><br />3. உலகம் அறிவியல் துறையில் எவ்வளவோ வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொருவர் கையிலும் அலைப்பேசி வந்தாகிவிட்டது. இணைய தளம், மடிக்கணினி என்று உலகம் வாயு வேகத்தில் முன்னேற்றத் திசையில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.<br /><br />ஒருவருக்கொருவர் நேரில் சந்தித்துதான் காதல் புரியவேண்டும் என்ற நிலை இல்லை. அலைப்பேசி மூலமாகவும் நடந்துவிடுகிறது. அலைப்பேசியைத் தடை செய்யவேண்டும் என்று கூறப் போகிறார்களா?<br /><br />4. ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள். காரணம் ஜாதி கலப்பு ஏற்பட்டுவிடுமே என்ற அச்சம்; ஜாதி - வர்ணதர்மத்தைக் காப்பாற்றுவது என்பதுதான் சங் பரிவார்களின் அடிப்படைக் கொள்கை யாகும். அதே உணர்வோடு பா.ம.க. செயல்படுவது இந்துத்துவா மனப்பான்மை கொண்டதாகும்.<br /><br />5. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மை மக்களை இணைத்து ஓர் அணியை உண்டாக்க இருப்பதாகக் கூறிக் கொண்டிருந்த பா.ம.க. தலைவர் இப்பொழுது அதிலிருந்து முரண்பட்டு, வெறும் ஜாதிய அமைப்புகளோடு அணி ஒன்றை வரவேற்பது கொள்கை ஏதும் அற்ற சிந்தனையைத்தான் வெளிப்படுத்தும்.<br /><br />6. சமூகநீதி என்று வரும்பொழுதுகூட தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராடும் பொழுதுதான் அதன் பலனை ஈட்ட முடியும். அதைவிட்டு ஜாதிக்கட்சிகளை இணைத்துக் கொண்டு எப்படி உரிய உரிமையினை அடைய முடியும்? தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் என்று சொன்னால், அது அகில இந்திய அளவில் அதன் பிரதி பலிப்பைக் காண முடியும். அதை விட்டுவிட்டு தமிழ்நாடு அளவில் ஜாதிகளை இணைத்து எதனைச் சாதிக்க முடியும்?<br /><br />இதில் இன்னொரு உண்மையும் கவனிக்கத்தக்க தாகும். மாநில அளவைப் பொறுத்தவரையில் ஓரளவு இட ஒதுக்கீட்டின் சதவிகிதத்தை பெற்று இருக்கிறோம். 50 சதவிகிதத்துக்குமேல் இட ஒதுக்கீடு போகக் கூடாது என்று இருந்த சட்ட நிலையையும் கடந்து 69 சதவிகித இட ஒதுக்கீடு சட்டப்படியே தமிழ்நாட்டில் உறுதி செய்யப் பட்டுள்ளது. அதற்காக திராவிடர் கழகம் அளித்த பங்களிப்பு உலகம் அறிந்ததே.<br /><br />இப்பொழுது பிரச்சினையே மத்திய அரசுத் துறை களிலும், தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீட்டில் உரிய சதவிகிதத்தைப் பெறுவதுதான்; அகில இந்திய அளவில் அதன் தாக்கத்தை உருவாக்குவதற்கு ஜாதி அமைப்புகள் பயன்படுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.<br /><br />பதவி உயர்விலும் இட ஒதுக்கீடு என்ற பிரச்சினை முதற்கட்டமாக தாழ்த்தப்பட்டவர்கள் பெறுவதற்கே பெரும் பாடுபடவேண்டியுள்ளது. அடுத்து பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் இந்த வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தவேண்டுமானால் கண்டிப்பாக தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந் தால்தான் வெற்றி கிட்டும்.<br /><br />சமூகநீதிபற்றிப் பேசும் பா.ம.க. நிறுவனர் இது குறித்தும் சிந்திக்க வேண்டியவர் ஆவார்.<br /><br />7. தமிழ்த் தேசியம்பற்றி ஒரு பக்கத்தில் பேசிக் கொண்டு அதில் தாழ்த்தப்பட்டவர்களை இணைக்கா விட்டால் அது என்ன தமிழ்த் தேசியம்? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று பேசும் தமிழ்த்தேசியவாதிகள் பா.ம.க. நிறுவனரின் இந்த நிலைப்பாட்டை எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்த வகையில் கருத்தும் போதுமான அளவில் தமிழ்த் தேசியவாதிகளால் தெரி விக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.<br /><br />நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் இறுதியாக உரையாற்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மானமிகு தொல். திருமாவளவன் அவர்கள் பதற்றப்படாமல், உணர்ச்சி வயப்படாமல், சமூகநீதிக் களத்தில் கைகோர்க்க பா.ம.க.விற்கு அழைப்புக் கொடுத்தது அவரது முதிர்ச்சியைக் காட்டக்கூடியதாகும்.<br /><br />தனிமைப்பட்டுப் போகாமல் பா.ம.க. நிறுவனர் சிந்திப்பாராக!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-26286427916690133162013-01-08T05:24:28.809+05:302013-01-08T05:24:28.809+05:30 கொல்லைப் புறவழி எச்சரிக்கை!
ஜாதி மறுப்புத் திர... கொல்லைப் புறவழி எச்சரிக்கை!<br /><br /><br /><br />ஜாதி மறுப்புத் திருமணம் அல்லது கலப்புத் திருமணம் செய்து கொண்ட காதலருக்குப் பிறக்கும் ஒரு குழந்தை, தொடர்ந்து தன் தந்தையான ஜாதி அடையாளத்தை ஏற்கும் என்றால் என்ன பயன்? வெறும் இடஒதுக்கீடு சலுகை மட்டும் தானா? அப்படியானால் ஜாதி எப்படி ஒழியும்? என்ற வினாவை தினமணி (21.12.2012) நடு பக்கக் கட்டுரை ஒன்று தொடுத்திருக்கிறது.<br /><br />முழு கட்டுரையைப் படிக்கும் பொழுது அதில் பதுங்கியிருக்கும் பார்ப்பனீயத்தை புரிந்து கொள்ளலாம்.<br /><br />திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில் தொடர்ந்து தன் கருத்தைப் பதிவு செய்து வந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி தருமபுரியில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் சரி.<br /><br />போடிப் பகுதியில் ஜாதிக்கலவரம் நடைபெற்றபோது தமிழ் நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் சரி, ஒரு கருத்தினைத் தெளிவாக எடுத்துச் சொல்லி வந்திருக்கிறது. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர் என்று பதிவு செய்து, அவர் களுக்குக் குறிப்பிட்ட அளவுக்கு இடஒதுக்கீடு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.<br /><br />ஜாதி மறுப்புத் திருமணத்தில் இணைய ருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு அளிக்கப் படும் இடஒதுக்கீட்டின் அளவு வளர்ந்து கொண்டே போக வேண்டும். ஜாதி அடிப்படையி லான இடஒதுக்கீட்டின் அளவு குறைந்து கொண்டு வர வேண்டும் என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடாகும்.<br /><br />தினமணியின் கட்டுரை இடஒதுக்கீட்டைக் குறை கூறுவதில் தன் கவனத்தைச் செலுத்து கிறதே தவிர, இப்படி ஒரு கருத்தைக் கூற வரவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.<br /><br />இரண்டாவதாக தினமணி முன் வைக்கும் குற்றச்சாற்று - ஏற்கெனவே இடஒதுக்கீடு பெற்றுப் பயனடைந்து வசதியான நிலையில் உள்ளவர்கள் கலப்புத் திருமணத் தம்பதிகளின் குழந்தைகள்தான் இடஒதுக்கீடு சலுகையில் அதிக பலன் பெறுகின்றனர் என்பதைக் குற்றச்சாற்றாக முன் வைக்கிறது தினமணி.<br /><br />இந்த வளர்ச்சிப் போக்கை வரவேற்க வேண்டுமே தவிர குறையாகக் கூறக் கூடாது. இதன் மூலம் ஜாதி மறுப்புத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து மகிழ்ச்சி அடையத்தானே வேண்டும்.<br /><br />எம்.ஜி.ஆர். கொண்டு வந்த வருமான வரம்பு என்ற அளவுகோலை ஆதரிக்கும் சன்னமான இழை இதற்குள் ஓடுவதையும் கவனிக்கத் தவறக் கூடாது.<br /><br />இதற்குள்ளே இருக்கும் தந்திரம் என்ன வென்றால், பிற்படுத்தப்பட்டவர்களில் தகுதி உடையவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்று கூறி அந்த இடங்களைப் பொது இடத்திற்கும் கொண்டு செல்வதாகும்.<br /><br />மத்திய அரசு துறைகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோர்க்கு அளிக்கப்பட்டு இருந்தும் பிற்படுத்தப்பட்டவர் கள் இன்னும் ஏழு விழுக்காடு இடங்களைத் தாண்டவில்லையே!<br /><br />பொருளாதார அளவுகோலைத் திணித்து இந்த 7 சதவிகிதத்தில்கூட எட்ட முடியாத அளவுக்குத் தந்திரக் குழியை வெட்டும் வேலைதான் இது.<br /><br />ஜாதி ஒழிப்பில் ஆர்வம் உள்ளவர்கள்போல் ஒரு பக்கத்தில் காட்டிக் கொண்டு, இன்னொரு பக்கத்தில் இடஒதுக்கீட்டுக்குக் குழி பறிக்கும் எத்துவேலை இது.<br /><br />இடஒதுக்கீட்டை வெளிப்படையாக எதிர்க்க முடியாது என்று உறுதிபட்ட நிலையில், அதனை கொல்லைப்புறமாக ஒழிக்கப் பார்க்கின்றனர் - எச்சரிக்கை! 22-12-2012தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-3316785924303666452013-01-08T05:21:20.449+05:302013-01-08T05:21:20.449+05:30மோடிவித்தை!
இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல், அய...மோடிவித்தை!<br /><br />இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல், அயூப்கான் சைவ உணவகம், காந்தியார் சாராயக் கடை, அன்னை தெரசா பயில்வான் கூடம்; திருவிக சுருட்டுக்கடை, சீனிவாச அய்யங்கார் கசாப்புக் கடை என்றெல்லாம் பெயர் இருந்தால் சிரிப்பு மட்டுமா வரும்? அடுத்த நொடியில் எரிச்சல்கூட பீறிட்டுக் கிளம்பும்.<br /><br />இப்பொழுது ஒரு செய்தி குஜராத்திலிருந்து வெளிவந்திருக்கிறது.<br /><br />உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்தி குஜராத் காந்திநகரில் காந்தி யாருக்குப் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்படும் என்பதுதான் அந்தச் செய்தி.<br /><br />பரவாயில்லையே. நற்செய்தி தானே இதில் என்ன பிரச்சினை என்ற வினா எழக்கூடும்;<br /><br />இந்த அறவிப்பைக் கொடுத்தவர் யார் என்பதுதானே முக்கியம். குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரபாய் தாமோதரதாஸ் மோடிதான். (மோடி வித்தை என்பது இது தானோ!) இந்த அறிவிப்புக்குச் சொந்தக்காரர்.<br /><br />இராமலிங்க விலாஸ் மிலிட்டரி ஓட்டல் என்பதோடு இப்பொழுது இதனைப் பொருத்திப் பார்த்தால் உண்மை பட்ட வர்த்தனமாகப் புலப்பட்டு விடுமே!<br /><br />பகவத் கீதையிலிருந்து சுலோகத்தை எடுத்துக்காட்டி காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்திய நாதுராம் கோட்சே கதை ஒருபுறம் இருக்கட்டும்.<br /><br />நாட்டில் நல்லவர், வல்லவர் என்று பீற்றிக் கொள்ளும் அடல் பிஹாரி வாஜ்பேயி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்தக் கூட்டம் மும்பை, டில்லி போன்ற முக்கிய நகரங்களில் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்களே நினைவிருக்கிறதா?<br /><br />மை நாதுராம் கோட்சே போல்தா என்பதுதான் அந்த நாடகத்தின் பெயர். நான் தான் நாதுராம் கோட்சே பேசுகிறேன் என்பது தலைப்பு.<br /><br />நான் காந்தியார் என்ற மனிதனைக் கொல்லவில்லை; காந்தியார் என்ற அரக்கனைக் கொன்றேன் என்று அந்த நாடகத்திலே கோட்சே கூறுகிறான். காந்தியாரைக் கொன்ற கோட்சே மகான் என்பது தான் அந்த நாடகத்தின் அடிநாதம் உச்சகட்டம் .<br /><br />இந்தக் கூட்டம் காந்தியாருக்கு உலகப் பல பகுதிகளிலிருந்தும் மண்ணையும், தண்ணீரையும் கொண்டு வந்து பிரம்மாண்ட நினைவுச் சின்னம் எழுப்புகிறது என்றால் இதன் பொருள் என்ன?<br /><br />படிப்பவர் புத்திக்கே விட்டு விடுவோம்!<br /><br />---------------- மயிலாடன் அவர்கள் 29-4-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரைதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85976535758159635722013-01-07T20:28:31.426+05:302013-01-07T20:28:31.426+05:30
இயற்கைத் தடைகள்
நாளைக்கு வேண்டும் என்று தேடும் ...<br />இயற்கைத் தடைகள்<br /><br /><br />நாளைக்கு வேண்டும் என்று தேடும் தன்னம்பிக்கையற்ற தன்மை யும், எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற ஆசை அடிமைத்தன்மையும், மனிதனின் பிறப்புரிமையாகிய தன் மானத்திற்கு இயற்கைத் தடைகள்.<br />(குடிஅரசு, 9.1.1927)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52407449898436869242013-01-07T20:22:18.465+05:302013-01-07T20:22:18.465+05:30
கபடி - பல்லாங்குழி விளையாட்டா?
கேள்வி: உலகக் கோ...<br />கபடி - பல்லாங்குழி விளையாட்டா?<br /><br /><br />கேள்வி: உலகக் கோப்பை கபடிப் போட்டி யில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா மூன் றாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளதே?<br /><br />பதில்: ரொம்ப மகிழ்ச்சி. இதுபோல எப் படியாவது கஷ்டப்பட்டு பெண்கள் போட்டியில் பல்லாங்குழி ஆட்டத் தைச் சேர்த்து விட்டோ மேயானால், அதிலும்கூட இந்தியாதான் முதலிடத் தில் வரும்; சேம்பியன் பட்டத்தைப் பெறும். நாம் மீண்டும் சந்தோஷப்பட் டுக் கொள்ளலாம். (துக்ளக் 9.1.2013 பக்கம் 29)<br /><br />எதிலும் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் பார்வையா? இதுதான் தி.க.வின் வேலையா என்று சில அதிமேதாவி ஆசாமிகள் அவசரக் குடுக் கையாக பேசுவார்கள்.<br /><br />ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புப் போதையில் அகப்பட்டவர்கள் திரு சோவின் இந்தப் பதிலுக்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்?<br /><br />கபடி - என்பது பல்லாங் குழி விளையாட்டா? அப்படிச் சொல்லுகிற கூட்டத்தைச் சேர்ந்த பார்ப்பனர்களில் ஒரே ஒருவரை கபடி ஆடச் சொல்லுங்கள் பார்ப்போம் - பல்லாங்குழியா? பல் காணாமல் போகும் விளை யாட்டா என்பது அப்பொ ழுது தெரிந்து விடுமே!<br /><br />முட்டாள்கள் விளை யாடுகிறார்கள் - 11 ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கிறார்கள் என்று கிரிக்கெட்டைப் பற்றி அறி ஞர் பெர்னாட்ஷா சொன் னதுண்டு.<br />ஒரே நேரத்தில் இருவர் (விக்கெட் கீப்பரைச் சேர்த்து மூவர் என்றும் வைத்துக் கொள்ளலாம்) விளையாடுவர்; மற்றவர் களோ மைதானத்தில் பேன் குத்திக் கொண்டு இருப் பார்கள் - இந்த விளை யாட்டுக்குப் பெயர்தான் கிரிக்கெட் (டு).<br /><br />கபடியோ, கால் பந்தோ அப்படியல்ல; மைதானத் தில் உள்ள அத்தனைப் பேரும் ஆவேசத்துடன் அதி சுறுசுறுப்புடன் விளை யாடியே தீர வேண்டிய வர்கள். கிரிக்கெட் சோம் பேறிகளின் கூடாரமாக இருப்பதால்தான் அந்த விளையாட்டைப் பார்ப் பனர்கள் தேடிக் கொண்டு விடுகிறார்கள். அதுவும் இல்லாமல் அது பணம் காய்ச்சி மரம். கொட்டிக் கொண்டே இருக்குமே!<br /><br />தேர்வுக் குழுவிலும் பார்ப்பனர்கள் (பி.சி.சி.அய்) என்பதால் தோளைத் தட் டிக் கொடுத்து, பூணூலைத் தடவிப் பார்த்து தேர்வு செய்வார்கள்.<br /><br />பல்லாங் குழியோடு கபடியை ஒப்பிட்டுச் சொல் கிறாரே திருவாளர் சோ. இதுவரை ஒரே ஒரு பார்ப்பனர் சடுகுடு பக்கம் தலை வைத்துப் படுத்ததாக எடுத்துக்காட்டுக்குகூடச் சொல்ல முடியுமா?<br /><br />நாலு பேர் அமுக்கிப் பிடிப்பான் ஆவேசமாக; புளியோதரைகள் தாக்குப் பிடிக்குமா? ஏனிந்த வீண் வம்பு? நமக்குத்தான் இருக் கவே இருக்கு - கிரிக்கெட் என்னும் சோம்பேறி விளையாட்டு - பணம் கொட்டும் பிழைப்புக்கு வசதி இருக்கும்போது கால் முறியுமோ, கை முறியுமோ, விலா எலும்பு முறியுமோ என்னும் ஆபத்தான விளை யாட்டை வரித்துக் கொள்ள அவாள் என்ன பைத்தியக் காரர்களா?<br /><br />ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண் டுல்கர், ராகுல் டிராவிட், சவ்ரவ் கங்குலி, ஜவகர் சிறீநாத், வெங்கடேஷ் பிரசாத், அணில்கும்ளே, வி.வி.எஸ். இலட்சுமணன், கிருஷ்ணமாச்சாரி சிறீகாந்த், சுனில் ஜோஷி, மனோஜ் பிரபாகர், அஜீத் அகர்கர், ரோஹித் சர்மா, இஷாத் சர்மா, சிறீகாந்த், ரவீந்திர அஷ்வின், சடகோ பன் ரமேஷ், நிலேஷ் குல் கர்னி, சிவராமகிருஷ்ணன், வெங்சர்க்கார் டபுள்யூ வி. ராமன் = இப்படி ஒரு நீண்ட அக்கிரகாரப் பட்டியல். இவர்களையடுத்து இவர் களின் பிள்ளைகளும் களத்தில் இறக்கப்படுவதும் உண்டு. இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இவ்வளவுப் பார்ப்பனர்கள் இருந்தும் ஒரு கபில்தேவ், ஒரு எம்.எஸ். தோனி என்று பார்ப்பனர் அல்லாதார் (ஏதோ விதி விலக்காக இவர்கள்) அணிக்குத் தலைமையேற்றபோதுதான் உலகக் கோப்பை இந்தியா வுக்குக் கிடைத்தது!<br /><br />(எம்.எஸ். தோனியை அணித் தலைவர் பதவி யிலிருந்து ஒழித்துக் கட்ட குழிபறிக்கும் வேலையில் பார்ப்பன ஊடகங்கள் இறங்கியுள் ளன).<br /><br />அணி வெற்றி பெற வேண்டும் என்பதைவிட தன்னலத்தின், அடிப் படையில் விளையாடி பரிசுகளைத் தட்டிச் செல் லுவதும் பார்ப்பனர் களுக்கே உரித்தான ஒன்றாகும்.<br /><br />விசுவநாதன், ஆனந்த் என்ற பார்ப்பனர் செஸ்லில் வெற்றி பெற்றால் சோ கூட்டத் திற்கு இனிக்கிறது; நம் பெண்கள் பல்லாங்குழி விளையாடினால் வேர்க் கிறதோ! அதில்கூட பெண்களை மட்டம் தட்டும் மனுதர்மப் புத்தி.<br /><br />இந்த நுணுக்கங் களை எல்லாம் ஈரோட் டுக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்தான் துல்லிய மாக விளங்கும்.<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-31690002057143817862013-01-06T18:47:44.292+05:302013-01-06T18:47:44.292+05:30சிங்கால்களின் திசை திருப்பங்கள்!
சந்தடி சாக்கில்...சிங்கால்களின் திசை திருப்பங்கள்!<br /><br /><br />சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவுவது என்ற பழமொழி உண்டு. அதனை அப்படியே பின்பற்றுபவர்கள்தான் சங்பரிவார கும்பலான ஹிந்துத்துவாவாதிகளான பார்ப்பனர்களும் அவர்தம் தாசானுதாசர்களும்!<br /><br />பாலியல் வன்கொடுமைகளுக்கு நாட்டில் கடுமையான தண்டனை தர சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.<br /><br />பெண்களை வெறும் உடைமையாக்கியும், அடிமையாக்கியும், கொச்சைப்படுத்திய நிலை ஆரிய சனாதன மத நூல்களான இராமா யணம், பாரதம், பகவத் கீதை மனுசாஸ்திரம் மற்றும் புராணங்களில் வண்டி வண்டியாக உள்ளன!<br /><br />இந்துக் கடவுள்களின் லீலா வினோதங் கள் ஏராளம் உண்டு; அத்தனையும் இ.பி.கோ. என்ற இந்திய கிரிமினல் சட்டத்தின்கீழ் வராத குற்றங்களே அரிதேயாகும்.<br /><br />இந்த லட்சணத்தில், விசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக்சிங்கால் (பார்ப் பனர்) நேற்று துறவிகள் (?) மாநாட்டில் பேசியுள்ளார். (இதில் சங்கராச்சாரியாரும் பாலியல் வன்கொடுமைபற்றி அலசிப் பேசிய கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்!)<br />மேற்கத்திய கலாச்சாரத் தினால் தான் இப்படிப் பல பாலியல் வன்கொடுமைகள் நடை பெறுகின்றன என்று கூறியுள்ள அசோக் சிங்கால்களுக்கும் அவரது தொண்டரடிப் பொடி களுக்கும் சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறோம்.<br /><br />1. ஆண்டவன் அவதாரமான பகவான் கிருஷ்ணன் இளவய திலேயே, ஆற்றில் குளிக்கும் பெண்களின் சேலைகளைத் திருடி, மரத்தின்மேல் வைத்துக் கொண்டு, நீருக்குள் இருந்த பெண்களை ஆடையில்லாத நிலையில் நீருக்கு மேலே வரச் சொன்னது, பாலியல் வன்கொடுமைக்கு முன்னோடி அல்லவா?<br /><br />2. தாருகாவனத்து ரிஷி பத்தினிகளை (3000 பேர்கள் - அப்பாடி!) கற்பழித்த சிவ லீலை ஹிந்து தர்மத்தின் சிறப்புகளா?<br /><br />3. அகலிகையைக் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிட - தேவர்களின் தலைவன் இந்தி ரன் முனிவர் வடிவம் ஏற்று, தவறாக அகலி கையும் நடந்து கொண்ட கதை - மேற்கத்திய கலாச்சாரமா? ஹிந்து கலாச்சாரமா?<br /><br />4. முன்பு இந்திய பிரிட்டனில் இந்திய ஹை கமிஷனராக இருந்த பண்டிட் விஜயலட்சுமி அவர் களுக்கு, பிரிட்டிஷ்காரர் ஒருவர் விருந்து வைத்தார். அப்போது அவரிடம் இந்த அம்மையார் உங்கள் படையெடுப்பில்தான் எங்கள் கலாச்சாரம் கெட்டது என்றாராம். அவர் அதற்கு மிகுந்த மரியாதையுடன், இருக் கலாம் மேடம், ஆனால் நாங்கள் அங்கே வந்திருக்காவிட்டால் நீங்களே உயிருடன் இருந்து இங்கே வந்து என்னுடன் தேநீர் அருந்த முடியாமற் போயிருக் கும் என்று பட்டென்று பதிலளித்தாராம்!<br /><br />அதாவது விதவையான இவரை சதி என்ற உடன்கட் டையில் ஏற்றி எரித்திருப்பார் களே, அதைச் சட்டம் போட்டு, சதி அல்லது உடன்கட்டை ஏற்றுதலை ஒழித்துக் கட்டியது வெள்ளைக்கார ஆட்சிதானே! என்ற பொருளில் கூறியது கேட்டு, வெட்கி வெலவெலத்துப் போய் விட்டார் இந்த விதவையரான அம்மணி!<br /><br />இன்னமும் ராஜஸ்தானில் ரூப் கன்வார்கள் எரிக்கப்பட்ட - சதி மாதா கோயில் உள்ளது! குழந்தை மணங்கள் குஜராத் உட்பட பல பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் நடைபெற்ற வண்ணமே உள்ளன!<br /><br />இவை எல்லாம் மேற்கத்திய கலாச்சாரமா? மேற்கத்திய கலாச்சாரம்தான் காப்பாற்றியும் உள்ளது. மனுதர்மத்திலேயே மாதர், ஆடவர் நிலை பற்றி வெவ்வேறு விதமாகத் தண்டனை கூறியுள்ளதே! உபநிஷத்துக்களில் குருபத்தினி - சீடர்கள் ஒழுக்கக் கேட்டிற்குத் தண்டனை பற்றி வேறுவிதமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள் ளதே! அது எதைக் காட்டுகிறது?<br /><br />இந்தப் பாலியல் வன்கொடுமை மிகவும் பழைமையான புராதன நடப்பு ஹிந்து கலாச் சாரத்தில் என்பதைத்தானே காட்டுகிறது?<br /><br />இதனை ஏன் மேற்கத்திய கலாச்சாரத்தின் விளைவு என்று திசை திருப்புகின்றனர் - இந்த மதவாதிகள்? இன்னும் எத்தனையோ கூற முடியுமே!<br /><br />- ஊசி மிளகாய்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85078601043208479872013-01-06T12:52:28.832+05:302013-01-06T12:52:28.832+05:30பார்ப்பனரின் இனப்பற்று
வட இந்திய நகர் ஒன்றில் சால...பார்ப்பனரின் இனப்பற்று<br /><br />வட இந்திய நகர் ஒன்றில் சாலை விபத்தில் ஒருவன் இறந்து விட்டான். இறந்தவன் ஒரு நிறுவனத்தில் சுருக்கெழுத்துத் தட்டச்சராக இருந்தவன் என்பது அவனுடைய சட்டைப் பைக்குள் கிடந்த அடையாளச் சீட்டிலிருந்து தெரிய வந்தது. அதைப் பார்த்து அந்தக் கணத்திலேயே மற்றொரு பிராமணன் சைக்கிளில் அஞ்சல் நிலையத்துக்குப் பஞ்சாய்ப் பறந்தான் ""................ அலுவலகத்தில் சுருக்கெழுத்துத் தெரிந்த தட்டச்சர் வேலை காலியாக உள்ளது. உடனே புறப்பட்டு வா"" என்று திருவரங்கத்தில் உள்ள தன் தம்பிக்குத் தந்தி அடித்தானாம். இது கதை அன்று. நகைச்சுவைத் துணுக்கும் அன்று. இடையிடையே நிகழும் உண்மைச் சம்பவம்.<br /><br />(ஆதாரம்: ""வட மாநிலங்களில் தமிழர்"" . - ஆசிரியர் சோமலே. பக்கம் 2)தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-62003515927445132322013-01-06T12:52:04.858+05:302013-01-06T12:52:04.858+05:30திலகர் சொல்கிறார் . . .
சென்னை மாநிலத்தில் பார்ப்...திலகர் சொல்கிறார் . . .<br /><br />சென்னை மாநிலத்தில் பார்ப்பனர் அல்லாதார் உணர்வு தோன்ற அதன் எதிரொலியாக மகாராட்டிரத்திலும் அந்த உணர்வு தலை தூக்கியது. அப்பொழுது (1918) இந்தத் திலகர் என்ன பேசினார் தெரியுமா?<br /><br />"இப்பொழுது எல்லோரும் சட்ட சபைக்குச் செல்லல வேண்டுமென்று முயற்சி செய்கிறார்கள். செருப்புத் தைக்கிறவனும், எண்ணெய் செக்கு ஆட்டுகிறவனும், வெற்றிலைப் பாக்குக் கடை வைத்திருப்பவனும் () சட்டசபைக்குப் போக வேண்டுமென்று ஏன் முயற்சி செய்கிறார்கள்? யார் யார் எது எதற்குப் போக வேண்டுமென்று ஒரு வரைமுறை கிடையாதா?" என்று பேசினார்.<br /><br />ஆதாரம்: டாக்டர் அம்பேத்கர் அவர்களின் ''காந்தியாரும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?'' என்ற நூல்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-15668208499029088662013-01-06T12:50:40.966+05:302013-01-06T12:50:40.966+05:30வாக்கு வங்கி அரசியல் ஓட்டுப்பயிற்சியாளர்களை ஓரங்கட...வாக்கு வங்கி அரசியல் ஓட்டுப்பயிற்சியாளர்களை ஓரங்கட்டுங்கள்!<br /> <br /><br />கடும் நோய்க்கான கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்த மருந்துகளில்கூட அளவான அளவே பயன்படுத்தப்பட வேண்டிய ஜாதி என்ற விஷத்தை, மருந்தை மறந்து விட்டு விஷத்தை மட்டுமே குடித்தால் நீங்கள் என்னாவீர்கள்?<br /><br />தந்தை பெரியாரும், அம்பேத்கரும் கூறியபடி, பிற்படுத்தப்பட்ட ஜாதி சூத்திரர்களும், அடுக்கின் வெளியே தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகும் பஞ்சமர்கள் என்ற இரு சகோதரர்களும் கைகோர்த்துப் போராட வேண்டிய சகோதரர்கள் அல்லவா? அதைவிட்டு உட்ஜாதி - அரசியல் லாபத்திற்காக - தேர்தல் அரசியலில் வாக்கு வங்கிகளைத் தேடி சந்தர்ப்பவாத சதிக்குப் பலியானால் இதுவரை நீங்கள் பெற்றுள்ள - இனி பெற வேண்டிய சமூக நீதி உரிமைகள் - இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்புகள் திடீரென்று காணாமற்போகும் என்பதை நினைத்து, வீடு எரிவதைப் பார்த்து, புரியாத சிறுபிள்ளைகள் கூத்தும் கும்மாளமும் கொள்வதுபோல ஆடாதீர்!<br /><br />பார்ப்பனர்கள் - ஊடகங்கள் - உங்களில் சிலரை கொம்பு சீவி விட்டு மோத விட்டு, ரத்தம் குடிக்கக் காத்திருக்கும் நரிகளாகி உசுப்பேற்றுகின்றனர்! ஏமாறலாமா?<br /><br />மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் முழுவதும் அமுலாகி விட்டவனவா? யோசித்துப் பார்த்தீர்களா?<br /><br />இளைய பெருமாள் கமிட்டி (மத்திய அரசு கமிட்டி) செயல் வடிவம் கண்டு விட்டதா?<br /><br />உச்சநீதிமன்றத்திலும், பல மாநில உயர்நீதிமன்றங்களிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நீதியரசர்கள் போதிய அளவுக்கு Adequate Representation அடைந்து விட்டார்களா?<br /><br />பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் இவர்கள் இடஒதுக்கீடு கேட்பார்கள்; பார் பார் இதோ இவற்றை தனியார் மயமாக்கி இடஒதுக்கீட்டிற்கு - சமூக நீதிக்குச் சமாதி கட்டுகிறோம் என்று ஓசைபடாமல் திட்டமிட்டு வெற்றி பெறுகிறதே ஆரியமும் அதில் நுழைந்த அதிகார வர்க்க ஆட்சியும்! புரிந்து கொண்டீர்களா?<br /><br />மத்திய அரசுப் பதவிகளில் செயலாளர்கள் என்ற சக்தி வாய்ந்த பதவிகளில் 132ல் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்தான் ராஜ்யம் என்பது போல ஒருவர்கூட இல்லை என்று துறை சார்ந்த அமைச்சரே 6.12.2012இல் நாடாளுமன்றத்தில் கூறியது கேட்டு, உங்களைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முயலும் சிலர் அவர்கள் திருவாசகங்களில் கூறுவதானால் ஓட்டுப் பொறுக்கிகள் அந்தத் தலைவர் விரிக்கும் வலையில் வீழ்ந்து வாழ்வுரிமையை -வளர்ச்சியை - முன்னேற்றத்தை இழக்கத் துடிக்கலாமா?<br /><br />மண்டல் குழுப் பரிந்துரைகளுக்காகவும், இளைய பெருமாள் கமிட்டி பரிந்துரைக்காகவும் திராவிடர் இயக்கம் போராடியபோது இவர்கள் எங்கே போய் இருந்தனர்? வீட்டின் கதவைச் சாத்திக் கொண்டு வீணைக் கச்சேரி அல்லவா கேட்டுக் கொண்டிருந்தனர்; இப்போது இப்படி வீண் கச்சேரி நடத்தி, மாயையை உருவாக்கி, உங்களுக்கு ஜாதிப் போதையை ஏற்றும் மயக்கப் பானங்களை அல்லவா தரத் துடிக்கிறார்கள்?<br /><br />நியாயந்தானா? சிந்தியுங்கள்! 18 வயது வந்த பெண்ணுக்குத் தனது வாழ்விணையரைத் தேர்வு செய்யத் தகுதி இல்லை என்பது உங்கள் வாதமானால், 18 வயதில் வாக்குரிமையை - ஓட்டுப் போடும் வாய்ப்பை - மாற்றிட நாடு தழுவிய அளவில் பிரச்சாரம், போராட்டம் செய்ய முன் வருவீர்களா? சட்டத்தை மாற்றிடப் போராடுவீர்களா?<br /><br />21 வயது பெண் மாற்று ஜாதியில் காதல் செய்தால் அதை ஏற்பீர்களா?<br /><br />பெற்றோர்களைக் கேட்டுத்தான் காதல் திருமணம் வயது வந்தபெண் முடிவு செய்ய வேண்டும் என்றால், இது மகளிரை மறுபடியும் அடிமையாக்கும் சமூக அநீதி அல்லவா?<br /><br />பெற்றோர்கள் கூறுகிறபடி 18 வயது வந்த ஆண் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பெற்றோர்கள் ஆணைப்படி- சம்மதம் பெற்ற பிறகே அவர்கள் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுவீர்களா?<br /><br />அப்படிக் கூறுவது எப்படி நியாய விரோதம், சட்ட விரோதம், மனித உரிமைப் பறிப்புக் குற்றமோ, அது போன்றது தானே மகளிர் உரிமையைப் பறிப்பதும்?<br /><br />தமிழ்ப் பாங்கு, தமிழன், தமிழினம் என்று கூறும் இவர்களால் காதல் இல்லாமல், குறுந் தொகைப் பாடல்கள் இல்லாத தமிழ் இலக்கியங்கள் உண்டா? குறளின் காமத்துப் பாடல் எழுதி, கண்ணொடு கண் நோக்கொக்கின் குறளும் குற்றமானதா?<br /><br />வாக்குவங்கி அரசியலில் நடத்தும் ஒட்டுப் பசியாளர்களை ஓரங்கட்டுவீர்!<br /><br />உண்மையான உரிமைகளை வென்றெடுக்க, திராவிடர் கழகத்தின் - திராவிடர் இயக்கத்தின் பெரியார் தத்துவங்களின் கொள்கையை ஏற்பீர்! வலங்கை, இடங்கைகளைப் பிரிக்காதீர்!<br /><br />பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்களையும் மோதவிட்டு அரசியல் பதவிப் பசியைத் தீர்க்க எண்ணாதீர்!<br /><br />இணைப்பீர்!<br />இணைப்பீர்!<br /><br />இன்றேல் வீழுவது நாமே!<br /><br />வாழ்வது ஆரியமே, அவாளே! புரிந்து கொள்வீர்.<br /><br />சிந்திப்பீர், செயல்படுவீர் தனியார் துறை இடஒதுக்கீட்டுப் போர்க் குரல் கொடுக்க ஆயத்தமாவீர்!<br /><br />பெரியார் நினைவு நாள் சூளுரை இதுவே!<br /><br /> <br /><br />கி.வீரமணி<br />ஆசிரியர்<br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-42367664800501678872013-01-06T12:50:13.736+05:302013-01-06T12:50:13.736+05:30 ”டென் பர்சண்ட் கட்
முன்பு ஒருமுறை அய்.ஏ.எஸ். அ... ”டென் பர்சண்ட் கட்<br /> <br /><br />முன்பு ஒருமுறை அய்.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு 10 சதம் சம்பளத்தில் வெட்டு இருந்திருக்கிறது. அந்தச் சமயத்தில் இவர்கள் நடத்திய நாடகத்தை முன் வரிசையில் ராஜாஜி உள்பட பல அய்.ஏ.எஸ். அதிகாரிகள் அமர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தனர்.<br /><br />நாடகத்தின் முதல் சீனில் என்.எஸ் கிருஷ்ணனுக்கு மதுரம் காபி கொண்டு வந்து கொடுப்பார். அன்று கொடுக்கப்-பட்ட காபியில் சர்க்கரை போட மறந்துவிட்டார்கள். கிருஷ்ணன் ஒரு வாய் காபியைக் குடித்துவிட்டு காபியிலே சர்க்கரையே இல்லையே? என்று கேட்டார். மதுரம் சற்றும் நிதானிக்காமல், டென் பர்சன்ட் கட் என்று சாதுர்யமாக பதிலளித்தாராம். இதைக் கேட்டு ராஜாஜி உள்பட எல்லா அய்.ஏ.எஸ். அதிகாரிகளும் விழுந்து விழுந்து சிரித்து மகிழ்ந்தார்களாம்.<br /><br />-மு.அன்புக்கரசன், பெரியகுளம்தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-64185445527675236312013-01-06T12:49:10.684+05:302013-01-06T12:49:10.684+05:30வடபுலத்திலிருந்து ஒரு முற்போக்குக் குரல்
பெண்கள...வடபுலத்திலிருந்து ஒரு முற்போக்குக் குரல்<br /> <br /><br />பெண்கள் பாலியல் தொல்லைகளில் இருந்து தப்பிக்க இரவு வெளியே செல்லக்கூடாது, ஒரு துணையோடுதான் செல்லவேண்டும் என்றெல்லாம் சொல்லி மீண்டும் வீட்டுக்குள் ளேயே பெண்களை முடக்க முயன்றுகொண்டிருக்கும் இந்துத்துவாக்களின் பிற்போக்குக் குரல்களுக் கிடையே வடபுலத்திலிருந்து ஒரு முற்போக்குக் குரல் ஒலித்துள்ளது. சோசலிசக் கொள்கை யிலிருந்து வந்த பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ``தற்காப்பு கலைகளை, பெண்கள் கற்று கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். பாட்னாவில், பள்ளி மாணவர் களுக்கான, டேக்வாண்டோ தற்காப்பு கலை, தேசிய போட்டியை துவக்கி வைத்த நிதிஷ்குமார்,`` ஜுடோ, கராத்தே, டேக்வாண்டோ போன்ற தற்காப்பு, சண்டை பயிற்சிகளை அனைவரும் கற்று கொள்ள வேண்டும். ஈவ்-டீசிங் தொந்தரவுகளில் இருந்து தப்பிக்க, பெண்கள் கண்டிப்பாக, இந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம், நல்ல உடல் நலம், உஷார் நிலை, சுயபாதுகாப்பு போன்றவை பெண்களுக்கு கிடைக்கும். அதனால் தான், சில ஆண்டுகளுக்கு முன், பள்ளிகளில், தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகளை என் அரசு துவக்கியது, என்று பேசி பெண்களுக்குத் தன்னம்பிக்கையை ஊட்டியிருக்கிறார்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-66509743375369858612013-01-06T12:48:32.162+05:302013-01-06T12:48:32.162+05:30முஸ்லிம்கள் _ கிறிஸ்தவர்கள் _ தலித்கள் பழங்குடியின...முஸ்லிம்கள் _ கிறிஸ்தவர்கள் _ தலித்கள் பழங்குடியினர், பெண்கள் _ இவர்களின் உரிமைகள் சதா சர்வகாலமும் ஆபத்தில்தான் இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.<br /><br />Source: 1 Statement of UN Social Rapportaeur.<br />TH: 31/3/2012 - MGM.<br /><br />வாக்கு குறைந்தது<br /><br />மோடியின் வெற்றியை ஊடகங்கள் ஆஹா.. ஓஹோ... எனக் கொண்டாடிவிட்டன. ஆனால், உண்மை என்ன தெரியுமா? சென்ற தேர்தல்களை விட இந்த முறை மோடிக்கு வாக்குகள் குறைந்துவிட்டன. 2002ல் 49.9 விழுக்காடு பெற்ற பா.ஜ.க. 2007ல் 49.1 விழுக்காடும், இந்த முறையான 2012ல் 47.9 விழுக்காடுமே பெற்றுள்ளது. எம்.எல். ஏக்களின் எண்ணிக்கையும் முறையே 127, 117, 115 என குறைந்துள்ளது. குஜராத்தில் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்குமான 9 விழுக்காடு வாக்கு வேறுபாடுக்கு அந்த மாநிலத்தின் தலைவர் ஒருவரை காங்கிரஸ் முன்னிறுத்தாததே காரணம் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.<br /><br />ராகுலுக்கும், சோனியாவுக்கும் நாடாளு மன்றத்தேர்தலில் வாக்குகள் கிடைக்கலாம். ஆனால், குஜராத்தில் உள்ளூர் தலைவரையே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு என இருக்கும் தனிப்பட்ட பலம் என்பதைவிட காங்கிரசின் பலவீனமே மோடி போன்றவர்களை மீண்டும் வெற்றிபெறவைக்கிறது<br /><br /> <br /><br />நீரோ மன்னன் மோடியின் மோசடி<br /><br />குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி சமூக இணைய தளங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார். அவரது டிவிட்டர் என்ற சமூக வலைதளத்தில் பத்து லட்சம் பேர் இணைந்திருக்கிறார்கள், அதுவும் அவர் கணக்கு துவங்கி குறுகிய காலத்தில் இது நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து மோடி கூறுகையில், இது வெறும் எண்ணிக்கை அல்ல மாறாக உங்களது அன்பு என்று பதிவு செய்திருந்தார். ஆனால் அவரது கணக்கில் 50 சதவீதம் போலி கணக்கு என்பது தற்போது தெரியவந்துள்ளது. லண்டனில் ஸ்டேட்டஸ் பீப்பிள்ஸ் என்ற இணையதள பொறியாளர்கள் குழு ஒன்று இதுகுறித்து ஆய்வு செய்ததில் மோடியின் டிவிட்டர் கணக்கில் 50 சதவீதம் போலி பயனாளர்கள் இருப்பதாக கூறியுள்ளார்கள்.<br /><br />அதாவது அவரது கணக்கில் 46 சதவீதம் போலி கணக்கும், 41 சதவீதம் பேர் பயன்படுத்தப்படாத கணக்காளர்கள் எனவும் கூறியுள்ளனர். மீதமுள்ள 13 சதவீதம் பேர் மட்டுமே உண்மையாக பின் தொடர்பவர்கள் என்பது தெரிகிறது.<br /><br />மோடியின் டிவிட்டர் கணக்கு 2010ஆம் ஆண்டு வரை ஒரு லட்சம் பேர் இணைந்திருந்தனர். 2011ஆம் ஆண்டு முடிவில் நான்கு இலட்சம் பேர் இணைந்திருந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களில் மட்டுமே அதிகமானவர்கள் இணைந்திருப்பதாக காணப்பட்டது. இப்போது அது போலித்தனமாக காட்டப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்று சொல்லுவது போல பா.ஜ.க. முன்னணி தலைவராக திகழும் மோடியின் மோசடி ஒட்டுமொத்த பா.ஜ.கவுக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும்!தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52719137613754643172013-01-06T12:48:25.349+05:302013-01-06T12:48:25.349+05:302002 முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி ஏற்பாடுகளையெல...2002 முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடி ஏற்பாடுகளையெல்லாம் செய்வதுபோல் நடித்தார்.<br /><br />கடைசி நிமிடத்தில் அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வையாளர், குஜராத் வரக்கூடாது எனக் கூறிவிட்டார். தன்னை குஜராத்திற்குள் அனுமதிக்கவில்லை என்பதை ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார், அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வையாளர்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-29000049340927558952013-01-06T12:48:14.327+05:302013-01-06T12:48:14.327+05:30அரசின் பட்ஜெட்டில் 19 இனங்களில் ரூ.1,444 கோடி சேமி...அரசின் பட்ஜெட்டில் 19 இனங்களில் ரூ.1,444 கோடி சேமிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், ரூ.2,045 கோடி செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.601 கோடி கூடுதலாகத் திரும்ப ஒப்படைக்கப்-பட்டுள்ளது. இது அரசின் பட்ஜெட் தொடர்பான செயல்பாடு சரியில்லை என்பதையே காட்டுகிறது.<br /><br />முறையான விளையாட்டுக் கொள்கை வகுக்கப்படவில்லை. பயிற்சியாளர்கள் அனைவரும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான விளையாட்டு விடுதிகள் செயல்பாட்டில் இல்லை.<br /><br />குடிநீர்க் கொள்கையும் சரியாக வரையறுக்கப்-படவில்லை. தேசிய நதி நீர் பாதுகாப்புத் திட்டம், எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்-படவில்லை. சபர்மதி ஆற்று நீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாகக் கண்காணிக்கவில்லை.<br /><br />நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்களை, தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கவில்லை.<br /><br />நிர்வாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங்கள் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட ரூ.71.8 கோடியை வருவாய்த்துறை பயன்படுத்தவே இல்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />சங் பரிவார் கணக்குப்படி _- பார்ப்பனர்களின் ஆசைப்படி இந்தியாவின் பிரதமர் எப்படிப்-பட்டவராக இருக்கவேண்டும்?<br /><br />1. மதச்சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை-யற்றவராக இருக்கவேண்டும்.<br /><br />2. சிறுபான்மை மக்களைக் கொன்று குவிப்பவராக இருக்கவேண்டும்.<br /><br />3. வேதனைகளை சாதனைகளாக உருமாற்றிக் காட்டவேண்டும்.<br /><br />4. அப்படி என்றால் நூற்றுக்கு நூறு இந்தியாவுக்குப் பிரதமராக இருக்க லாயக்குள்ளவர் சாட்சாத் தாமோதரதாஸ் நரேந்திர தாஸ்மோடிதான்!<br /><br />- கலி.பூங்குன்றன்<br /><br />மனித உரிமை ஆர்வலர்களைக் கண்டால் மோடி ஓட்டம்...?<br /><br />அய்க்கிய நாடுகள் சபையின் சிறப்புப் பார்வையாளர் கிறிஸ்தோப் ஹேன்ஸ் குஜராத் இனப்படுகொலைகளுக்குப் பின் முஸ்லிம்கள் முற்றாக குஜராத்திலிருந்து ஒழிக்கப்படுகின்றார்கள் என்பதை அறிந்தார்.<br /><br />உடனேயே அவர் குஜராத்தையும் சுற்றிப் பார்க்க ஏற்பாடுகளைச் செய்தார்.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-60664894771335383422013-01-06T12:47:51.798+05:302013-01-06T12:47:51.798+05:30சி.ஏ.ஜி. அறிக்கை, சி.ஏ.ஜி. அறிக்கை என்று மற்றவர்கள...சி.ஏ.ஜி. அறிக்கை, சி.ஏ.ஜி. அறிக்கை என்று மற்றவர்கள் விடயத்தில் ஊளையிடுகிறார்களே,<br /><br />மோடி அரசின் ஊழல்பற்றி அதே சி.ஏ.ஜி. என்ன சொல்லியிருக்கிறது?<br /><br />பல்வேறு விஷயங்களில் முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதே (ஏப்ரல் 2012).<br /><br /><br />தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கை குஜராத் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்:<br />விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-52143291652578552412013-01-06T12:47:40.183+05:302013-01-06T12:47:40.183+05:30அந்தப் பெண்மணி ஒரு டாக்டர் என்பதால், கொலைகள், பிணங...அந்தப் பெண்மணி ஒரு டாக்டர் என்பதால், கொலைகள், பிணங்களைக் கண்டு அஞ்சமாட்டார் என்று மோடி நினைத்திருக்கலாமோ!<br /><br />இந்த மனிதாபிமானமும், சாமர்த்தியமும் மோடியைத் தவிர வேறு யாருக்குத்தான் வரும்?<br /><br />இந்தப் பெண்மணியைக் காப்பாற்ற என்னென்ன தில்லுமுல்லுகளை எல்லாம் மோடி செய்தார் என்பதை நீதிபதியே அம்பலப்படுத்தி விட்டாரே!<br /><br />மாயா கோத்னானிக்கு அப்போதையை விசாரணை அமைப்புகள் அனைத்தும் (அதாவது உச்சநீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்பதற்கு முன்பு) உதவியாக இருந்துள்ளன. பலியானவர்களைப்பற்றிக் கவலைப்படாமல், பாதிப்பை ஏற்படுத்தியவரைப் பாதுகாக்கும் வகையில் அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடப்-பட்டன. கோத்னானியின் பெயர்கூட இந்தச் சம்பவத்தில் வந்துவிடாதபடி காக்கக் கடுமையாக முயன்றுள்ளனர் என்பது மோடியின் முகத்தில் நீதிபதி கொடுத்த சாட்டையடியல்லவா?<br /><br />ஒருக்கால் இந்துத்துவா பல்கலைக் கழகத்தில் மோடிக்குக் கிடைத்திட்ட சிறப்புப் பட்டம் போலும்! எனவே, இத்தகைய மேதாவிதான் இந்தியாவுக்குப் பிரதமராகத் தகுதி படைத்த கோமான் என்று குருமூர்த்தி கம்பெனிகள் சொன்னாலும் சொல்லும்.<br />மோடியின் அமைச்சரவையில் இருந்தவருக்குத் தண்டனை. மோடிக்கு அல்லவே என்று கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு சோ போன்றவர்கள் பூணூலால் எழுத முயற்சிக்கலாம்.<br /><br />அதுவும் உண்மையல்ல. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் ராஜு ராமச்சந்திரன் தம் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளது என்ன? மோடி குற்றவாளிதான், அவர்மீது கீழ்க்கண்ட தண்டனைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்படவேண்டும் என்று கூறவில்லையா?<br /><br />மதத்தின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களுக்கு இடையில் பகைமையை ஏற்படுத்தியது தொடர்பாக இந்தியக் குற்றவியல் சட்டம் இ.பி.கோ. பிரிவு 153-ஏ(1) மற்றும் பி, பிரிவின்கீழும், தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் ஏற்படுத்த முனைந்தது தொடர்பாக 153-பி(1), சட்டத்துக்குக் கீழ்ப் படியாத அரசு ஊழியர் என்ற முறையில் 166 பிரிவின்கீழும், பகைமையும், வெறுப்பையும் விளைவிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டதற்காக 505(2) பிரிவின் கீழும், வழக்குத் தொடரலாம் என்று உச்சநீதிமன்றத்திற்கு உதவியவர் கிவிமிசிஹிஷி சிஹிஸிமிகிணி அறிக்கை கொடுத்துள்ளாரே!<br /><br />மக்களிடையே பகைமையை வளர்த்தவர் இந்திய ஒருமைப்பாட்டைக் குலைத்தவர் போன்ற குற்றங்களுக்குரியவர்தான் பாரதத் திருநாட்டின் பிரதமருக்கான மகாபுத்திரர் என்று இந்நாட்டுப் பார்ப்பன ஊடகங்கள் முடிவு செய்துவிட்டன போலும்!<br /><br />இதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள் சார். -மோடி குஜராத் மாநிலத்தை முன்னுக்குக் கொண்டுவரவில்லையா?<br /><br />இந்தியாவின் பிரதமரானால் குஜராத்தைப்போல முதல் இடத்திற்கு நகர்த்திவிடுவார் என்று பிரச்சாரப் புழுதி ஒரு பக்கம்.<br />உண்மையா? உண்மையா?<br /><br />பொருளாதார நிபுணர் அபுசலே ஷெரீப் ஒரு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளார் (பிப்ரவரி 2012).<br /><br />இந்தியாவின் ஏழை மாநிலமான உத்தரப்பிரதேசத்தைவிட குஜராத்தில்தான் பசிப் பட்டினிக்காரர்கள் அதிகம் என்று கொடுத்த புள்ளி விவரத்திற்கு இதுவரை பதில் உண்டா?<br /><br />2011 இல் இந்தியத் திட்டக்குழு சொன்னது என்ன?<br /><br />நுண்ணூட்டச் சத்து குறைப்பாட்டில் குஜராத் மாநிலம் இன்னொரு சோமாலியா என்று கூறியுள்ளதே! குஜராத் மாநிலத்தில் 44.6 விழுக்காடு குழந்தைகள் (5 வயதுக்குட்பட்டவர்கள்) சத்துக் குறைபாட்டால் அல்லல்படுகின்றனர் என்ற அறிக்கைக்கு நாணயமான மறுப்பு இல்லையே!<br /><br />மொத்த உற்பத்தியில் 3 ஆவது இடத்தில் இருக்கும் குஜராத் தனி நபர் பங்களிப்பில் 9 ஆவது இடம்.<br /><br />கல்வியில் 14 ஆவது இடம். பரப்பளவில் 7 ஆவது மாநிலமாக இருக்கும் இம்மாநிலத்தில் அமைக்கப்பட்ட சாலைகளின் நீளம் என்ற கணக்கீட்டில் பத்தாவது இடத்தில்தான் இருக்கிறது. ஊட்டச் சத்து இல்லாமையால் எடை குறைந்த மக்கள் என்பதில் 11 ஆம் இடம். தனி நபரின் சராசரி ஆயுட்காலம் என்பதிலும் இந்தியாவில் 10 ஆவது இடத்தில்தான் குஜராத் இருக்கிறது.<br /><br />இந்த உண்மைகளை எல்லாம் திரையிட்டு மறைத்துவிட்டு, மோடி ஆட்சியில் குஜராத் முதல் மாநிலம் என்பதெல்லாம் அசல் கயிறு திரிப்பே! அக்கிரகாரவாசிகளின் கைகளில் பதுங்கிக் கிடக்கும் ஊடகங்களின் உருட்டல் புருட்டல் போக்கு.<br /><br />வளர்ச்சிதான் இப்படி தளர்ச்சி என்றால், ஊழல் இல்லாத நிருவாகம் என்று சான்றிதழாவது கொடுக்க முடியுமா?<br /><br />மாநில அரசின் ஊழலை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் மாநில லோகா யுக்தாவுக்கு நீதிபதியை நியமனம் செய்வதில் என்ன உதறல்?<br /><br />ஆளுநர் அத்தகையப் பதவியைப் பூர்த்தி செய்தபோது, நீதிமன்றம் சென்று குட்டு வாங்கியவர்தானே இந்த நரேந்திர மோடி.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-27605913671481339412013-01-06T12:47:27.145+05:302013-01-06T12:47:27.145+05:30மோடிதான் பிரதமருக்கான பிதாமகனா? -
மோடி நான்காவது ...மோடிதான் பிரதமருக்கான பிதாமகனா? -<br /><br />மோடி நான்காவது முறையும் குஜராத் மாநில முதலமைச்சர் ஆகிவிட்டார்.<br /><br />அதில் ஒன்றும் சந்தேகம் இல்லை; அடுத்த பிரதமர் தாமோதரதாஸ் நரேந்திர தாஸ் மோடிதான் - இன்றே எழுதி வைத்துக்கொள்ளுங்கள் என்று ஜோராகப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஏடுகள் எழுத ஆரம்பித்துவிட்டன.<br /><br />மோடி என்னென்ன அக்கிரமங்களை செய்கிறார் என்பதை எல்லாம் தம் கண்களுக்கு எதிரே பார்த்துக் கொண்டிருக்கும் 90 விழுக்காடு குஜராத் ஊடகங்கள் உருட்டல் புரட்டல் செய்து, ஆகா மோடியைப் போல் உண்டா என்றுதான் எழுதுகிறார்கள்.<br /><br />பிற மாநிலங்களில் உள்ள பார்ப்பன ஏடுகள், முதலாளித்துவ ஊடகங்கள், சங் பரிவார் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் மோடியைப் பிரதமராக்கித் தம் ஞானக் கண்களால் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றன.<br /><br />குஜராத்தைப் பொறுத்தவரையில் ஒரு காரியத்தில் அவர் திட்டமிட்டு வெற்றிப் பெற்றுள்ளார் என்பதை வேண்டுமானால் ஒப்புக்கொள்ளலாம்.<br /><br />இந்து - முஸ்லிம் என்கிற ஒரு நடுக்கோட்டைப் (றிளிலிகிஸிமிஷிகிஜிமிளிழி) போட்டு இரு அணிகளாகப் பிரித்து, இந்து வாக்கு வங்கியை உருவாக்கியதுதான் அவர் செய்த தந்திரம்.<br /><br />அதிலும் அவருக்கு ஏற்பட்ட சந்தேகம்தான் அண்மையில் சத்பவானா என்னும் பெயரில் கூட்டங்களை ஏற்பாடு செய்து உண்ணாநோன்பு மேற்கொண்டதாகும்.<br />அதில் சகல மதத்தவர்களும் மோடியைச் சந்திப்பது, கைகுலுக்குவது, பூங்கொத்துக்களைக் கொடுப்பது, சால்வைகளை அளிக்கச் செய்வது எனும் நாடக அரங்கேற்றமாகும்.<br /><br />அவர் அமர்ந்திருக்கும் மேடை அரசு பணம் கோடிக்கணக்கில் செலவு செய்யப்பட்டு சோடணை செய்யப்பட்டிருந்தது. பார்த்தாலே மலைக்க வைக்கும் ஏற்பாடு அது.<br /><br />முஸ்லிம்கள், கிருத்தவர்கள் கூட விட்டில் பூச்சிகளாக விழுந்தனராம். அதிலும்கூட இஸ்லாமிய சகோதரர் அளித்த அந்தக் குல்லாயை அணிந்து கொள்ள மறுத்து விட்டார். என்னதான் வேடம் போட்டாலும் உண்மை உணர்வு முன்னுக்கு வந்து அவர் உருவத்தை அம்பலப்படுத்தி விட்டதே.<br /><br />குஜராத் மாநிலத்தில் மக்கள் தொகையில் 9 விழுக்காடு முசுலிம்கள். ஆனால், பி.ஜே.பி. சார்பில் ஒரு வேட்பாளர் கூட நிறுத்தப்படவில்லையே.<br /><br />உலகில் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தில் முசுலிம்கள் இருப்பது இந்தியாவில்தான்.<br /><br />அப்படி இருக்கும்பொழுது அந்த மக்களுக்குப் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அறவேயில்லாத ஒருவர் இந்தியாவின் பிரதமராவதை எண்ணிப் பார்க்கவே குமட்டவில்லையா?<br /><br />குஜராத்தில் இந்த முறையில் வெற்றி பெற்றுவிட்டதால். இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அதனை அரங்கேற்றலாம், வலை விரிக்கலாம் என்று மோடி நினைப்பாரேயானால், அதனைவிடப் பைத்தியக்காரத்தனம் வேறு ஒன்றும் இருக்க முடியாது.<br /><br />இன்னும் சொல்லப் போனால், மோடியின் இந்த வஞ்சக நெஞ்சே அவரைத் தனிமைப்படுத்தித் தூக்கி எறியும்.<br /><br />இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் மோடியின் மீது இந்த முத்திரை ஆழமான ரணமாகப் பதிந்துவிட்டது.<br /><br />மோடிக்கு முதல் முறை விசா மறுத்த அமெரிக்கா, இரண்டாம் முறை அளித்துவிட்டது என்ற ஒரு தகவல் கசிந்த சில நாள்களிலேயே அது உண்மையல்ல என்று அறிவிக்கப்பட்டு விட்டதே!<br /><br />மோடியின் முயற்சியால் குஜராத் மாநிலம் சிறுபான்மை மக்களின் குருதி வெள்ளக்காடாக ஆக்கப்பட்ட நிலையில், அன்றைய பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி திருவாய் மலர்ந்தது என்ன?<br /><br />எந்த முகத்தை வைத்துக்கொண்டு நான் வெளிநாடு செல்லுவேன் என்று முகத்தைத் தொங்கப் போட்டுக்கொள்ளவில்லையா?<br /><br />ராஜதர்மத்தைக் கடைபிடிக்கவும் என்று அறிவுரை பகரவில்லையா?<br /><br />ஏன்? உச்சநீதிமன்றம் இதுவரை யாருக்கும் அளிக்காத கிரீடத்தையல்லவா மோடியின் தலையில் சூட்டியது _ -நீரோ மன்னன் என்ற அந்த கழுவவே முடியாத கறைக் கிரீடம்.<br /><br />இன்னுமொரு சாதனைக்குச் சொந்தக்காரர் இந்த மோடி.<br /><br />இந்திய வரலாற்றிலேயே மோடியின் அமைச்சரவையில் இருந்த ஒரு பெண்ணுக்குக் கிடைத்திட்ட தண்டனை எதற்காகவாம்?<br /><br />நரோடா பாடியா எனும் இடத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைக்காக மாயா பென் கோட்னானி எனும் மோடி அமைச்சரவையில் அலங்கரித்த ஒரு பெண்ணுக்கு 28 ஆண்டுகள் சிறை.<br /><br />படுகொலை செய்யப்பட்டவர்கள் 97 பேர்கள் என்றால், அதில் 35 குழந்தைகள்!<br /><br />இந்த அரும்பெரும் வீர தீரச் செயலை முன்னின்று ஒரு பெண் செய்ததற்காக அவருக்கு அளிக்கப்பட்ட வெகுமதி என்ன தெரியுமா? மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர்!<br /><br />ஆகா, மோடியின் திறமையே திறமை! குழந்தைகளைக் கொன்று குவித்தவருக்கு குழந்தைகள் நலத்துறை!<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84435182789558502072013-01-06T12:46:43.698+05:302013-01-06T12:46:43.698+05:30இந்த காமக் கவிதைகளைக் கோதைத் தமிழ் என்கிறார்கள். ப...இந்த காமக் கவிதைகளைக் கோதைத் தமிழ் என்கிறார்கள். பகவத் கீதை என்கிறார்கள். காமக்கொடூரன் கண்ணன் பாடியது பகவத் கீதையாம். காமவெறியள் பாடியது பகவதி கீதையாம். ஏகாதசியன்று இவளுக்கு 108 புடவைகள் போர்த்துகிறார்கள். அவள் பாடிய முலைகள் உள்பட முழுவதும் மூடப்படுமோ?<br /><br />ஆனாலும் இவளை வெம்பல் எனப் பாடியுள்ளார் மணவாள மாமுனி. பாடலைப் படியுங்கள்.<br /><br />அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்<br />தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய் _ பிஞ்சாய்ப்<br />பழுத்தாளை ஆண்டாளை பக்தியுடன் நானும்<br />வழுத்தாய் மனமே மகிழ்ந்து.<br /><br />பிஞ்சிலே பழுத்தது வெம்பல். அதனை யாரும் தின்பதில்லை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் திருப்பாவை, நாச்சியார் வாய்மொழி என்று தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள்.<br /><br />இம்மாதிரியான தமிழ்ப் பாடல்களைப் பாடிச் சங்கீதத்தை வளர்க்க வேண்டும் என்று அண்மையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தினமணி நாளேட்டின் ஆசிரியர் பைத்தியநாதன்கூட பேசியிருக்கிறார். தமிழில் இவர் வைத்தியநாதன். வடமொழியில் (வ எழுத்து இல்லாததால்) பைத்தியநாதன். (இந்தச் சொல்லுக்கும் அவரது செயல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று நம்புங்கள்)<br /><br />புரிந்த மொழியில் இந்த வகைக் கடவுள் பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, புரியாத மொழியில் கடவுளைப் பற்றிப் பாடலாம் என்பதாக, வருத்தப்பட்டுப் பெரியார் கூறினார். தமிழ் இசைக்காக 1931இல் தனி மாநாடு கூட்டியவர் பெரியார். 1941இல் அண்ணாமலை அரசர், ஆர்.கே.சண்முகம், கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அணைத்துப் போரிட்டு வென்றவர் பெரியார்! அவர் இப்படிக் கூறிடும் வகையில் உள்ள தமிழ்ப் பாடல்களை விடுத்து நல்ல பாடல்களை எழுதலாமே! ஏற்கெனவே அப்படி எழுதப்-பட்டிருக்கும் புரட்சிக்கவிஞரின் பாடல்களைப் பாடலாமே!<br /><br />பாரதியாரின் மனைவி தன் காலம் முடிவதை உணர்ந்த நிலையில் தம் மகளை அழைத்துப் பாடச் சொல்லி, அதனைக் கேட்டவாறே இறந்தார் என்ற செய்தி தெரிவிக்கும் இன்னொரு செய்தி. செல்லம்மாள்பாரதி கேட்டு, அவர் மகள் பாடிய பாடல் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடல் துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ<br />இன்பம் சேர்க்க மாட்டாயா<br /><br />அப்பேர்ப்பட்ட இனிய, பொருள் பொதிந்த இசைப் பாடல்களை நிறைய எழுதிக் குவித்தவர் புரட்சிக் கவிஞர்.<br /><br />அவற்றைப் பாடாமல் தவிர்த்தவர்கள் உண்டு. அவற்றைப் பாட மறுத்தவர்களும் உண்டு. அவற்றைத் துக்கடா என்ற தலைப்பில் இசைத்தவர்களும் உண்டு. மார்கழி மாதம் என்பதால் இதனையும் எழுதவேண்டி வந்தது.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-84629006138618681142013-01-06T12:46:36.469+05:302013-01-06T12:46:36.469+05:30எனக் கேட்டவள் ஆண்டாள்! மாதவனின் வாய் நாறுமா? கர்ப்...எனக் கேட்டவள் ஆண்டாள்! மாதவனின் வாய் நாறுமா? கர்ப்பூரம் போல் மணக்குமா? எனக்குச் சொல் என்று சங்கைக் கேட்கிறாள்! இந்தச் சங்கு (பாஞ்சசன்யம்) கிருஷ்ணன் தன் வாயில் வைத்து ஊதும் சங்கு. ஆகவே அதற்கு அவன் வாயின் நாற்றம் தெரியும் அல்லவா? பல்லாயிரம் பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கடவுள் வாயில் வைத்துக் கொள்கிறாராம் சங்கை! ஆகவே இந்தச் சங்கை கெட்ட (வெட்கங்கெட்ட) கேள்வியாம்! விரிவுரை வேறு தருகிறாள் ஆண்டாள்!<br /><br />பெண்ணின் வருத்தம் அறியாத<br />பெருமான் அறையின் பீதக<br />வண்ண ஆடைகொண்டு எந்தன்<br />வாட்டம் தணிய வீசீரே!<br />ஆராஅமுது அணையான்தன்<br />அமுதவாயில் ஊறிய<br />நீர்தான் கொணர்ந்து புலராமே<br />பருக்கி இளைப்பைத் தீரீரே!<br />நெடுமால் ஊதி வருகிற<br />குழலின் தொளைவாய் நீர்கொண்டு<br />குளிர முகத்துத் தடவீரே!<br />அவன் மார்பு அணிந்த வனமாலை<br />மார்பிற் கொணர்ந்து புரட்டீரே<br />அவன்<br />அடிபட்டான் பொடிதான் கொணர்ந்து பூசீர்காள்!<br />என்றெல்லாம் பாடுகிறாள் ஆண்டாள்!<br /><br />கண்ணன் இடுப்புத் துணியால் வீசிறுங்கள். அவன் வாய் எச்சிலை எனக்குக் குடிக்கக் கொடுத்து என் தாகம் தணியுங்கள். அவன் புல்லாங்குழலிலிருந்து வழியும் எச்சிலால் என் முகத்தைத் துடையுங்கள். (சிவப்பழகு கிரீமா அது?) அவன் மார்பில் போட்டிருந்த மாலையை என் மார்பில் போட்டுப் புரட்டி எடுங்கள். அவன் காலடி மண்ணால் என் உடல் மீது பூசுங்கள். (லக்மே பவுடரோ?)<br /><br />மனிதர்களின் உளவியல்பற்றி ஆய்ந்து சிக்மண்ட் ஃபிராய்டு எழுதிய நூல், உலகின் போக்கை மாற்றிய முப்பெரும் நூல்களில் ஒன்று என்பார்கள் அறிஞர்கள். அந்த நூலில் அவர் விளக்கிய உளவியல் ஆசைகள், கோளாறுகள் பலவகை. தம் மனதின் ஆசைகளை ஆண்களும் பெண்களும் வெளிப்படுத்தும் செயல்வகைகளை விவரித்-திருப்பார். அவையெல்லாம் ஆண்டாளின் பாடல்களில் இடம் பெற்றுள்ளன. அதிகமாக ஆண்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள்தான் வெளிவரும். பெண்கள் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படுத்துவதைச் சமூகம் அனுமதிக்கவில்லை. அத்தகைய மரபு மீறிய செயலை ஆண்டாள் எழுத்து வடிவிலேயே செய்திருக்கிறாள். பக்தியின் பெயரால் அது சகித்துக் கொள்ளப்படுகிறது. அனுமதிக்கப்-படுகிறது.<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-85203285303875346882013-01-06T12:46:24.193+05:302013-01-06T12:46:24.193+05:30குற்றமற்ற முலை தன்னைக் குமரன்
கோலப் பனைத் தோளோடு
அ...குற்றமற்ற முலை தன்னைக் குமரன்<br />கோலப் பனைத் தோளோடு<br />அற்ற குற்றம் அவைதீர<br />அணைய அமுக்கிக் கட்டீரே<br />என்ற விபரீதமான வேண்டுகோளை வைக்கிறாளே! இவளுடைய மார்பகத்தோடு அவனுடைய தோள்கள் எப்போதும் சேர்ந்திருக்கும் வகையில் சேர்த்துக் கட்டுங்களேன் என்று கேட்கிறாளே! வெட்கங்கெட்டு இப்படிப் பேசுகிற பெண்ணை யாராவது கேட்டிருக்கிறீர்களா? இந்நாட்டின் பக்தி வேகம், மோகமாகி மாறி இப்படியெல்லாம் புலம்பச் சொல்கிறதே!<br /><br />அதனால்தான் பெரியார், பக்தியைவிட ஒழுக்கம் முக்கியம் என்றார்.<br /><br />ஆண்டாளின் வேண்டுகோளை ஆண்டவன் நிறைவேற்றவில்லை. பக்தர்களும் கூட்டி வைக்கவில்லை கோவிந்தனோடு! என்ன செய்வாள் அவள்?<br /><br />உள்ளே உருகினை வேனை<br />உளவோ, இவளோ என்னாத<br />கொள்ளைக் கொள்ளிக் குறும்பனைக்<br />கோவர்த்தனனைக் கண்டாக்கால்<br />கொள்ளும்பயன் ஒன்றில்லாத<br />கொங்கை தன்னைக் கிழங்கோடும்<br />அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்<br />எறிந்தென் அழலைத் தீர்வேனே<br /><br />எனப் பாடிவிட்டாள்! இவ்வளவு ஆசை வைத்திருக்கும் என்னை இருக்கிறாளா, போய்விட்டாளா எனக்கூடப் பார்க்காத இந்த கோவர்த்தனனை (அவன் கண்ணில் கொள்ளி வைக்க...)ப் பார்த்தேன் என்றால்.... எதற்கும் பிரயோசனப்படாத இந்த மார்பகங்களை வேரோடு (மரவள்ளிச் செடியின் வேரைக்கிழங்கு என்று சொல்கிறோம்) பிடுங்கி அவன் மேலே விட்டெறிந்து, என் எரிச்சலைத் தீர்த்துக் கொள்வேன் என்றே கூறிவிட்டாள். பாவம், காமம் என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்!<br /><br />அதிவீரராமனின் கொக்கோகப் பாடல்களைப் படித்துத் தெரிந்து கொண்டு பாடியிருப்பாளோ? வாத்ஸ்யாயனின் காமசூத்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆண்டாள் காலத்திலேயே வந்துவிட்டதோ? இவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாகப் பாடிய ஆண்டாளைத்தான் ரங்கமன்னார் கல்யாணம் பண்ணிக் கொண்டாராம்! (திருவில்லிப்புத்தூரில் கடவுளின் பெயர் ரங்கமன்னார்) என்ன பாடுபட்டாரோ? என்ன பாடுபடுத்தினாரோ?<br /><br />கர்ப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ<br />திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ<br />மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும்<br />விருப்புற்றுக் கேட்கிறேன் சொல்லாழி வெண்சங்கே<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-63453775988524989852013-01-06T12:46:12.472+05:302013-01-06T12:46:12.472+05:30அவரைப் பிராயம் தொடங்கி
ஆதரித் தெழுந்த என் தடமுலைகள...அவரைப் பிராயம் தொடங்கி<br />ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்<br />துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்<br />தொழுதேன்...<br /><br />என்கிறாள். பெரிய மார்பகங்கள் அவனுக்கே என உறுதிபடக் கூறுகிறாள். தமிழில், ஆண்டாள் அந்த உறுப்பைக் குறிப்பிட்டு விட்டாலும் நான் எழுத வெட்கப்பட்டு மார்பகம் எனக் குறித்துள்ளேன். இடக்கரடக்கலுக்குப் பிற-மொழிகள் வசதியாக வாய்த்திருக்கின்றன.<br /><br />ஊனிடை ஆழிசங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்<br /><br />என்று அந்த உறுப்புகள் வளர்ந்த கதையைக் கூறுகிறாள்.<br /><br />முலைகள் எனத் தம் கவிதைத் தொகுப்புக்குப் பெயர் வைத்த கவிஞரைத் தம் பாண்பாட்டுப் பாதுகாப்பு எழுதுகோல்களால் குத்திச் சீண்டிய மாரல் போலீஸ்காரர்கள் (ஒழுக்கக் காவலர்கள்) இதற்கு ஏன் மூச்சு விடுவதில்லை? ஓ! இது கடவுளின் பேரால் நடக்கிறதா?<br /><br />சாயுடைவயிறும் என் தடமுலையும்<br />திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்<br />தரணியில் தலை புகழ் தரக்கற்றியே<br />என்ன வகை ஆசை பாருங்கள், திருமணம் ஆகாத பெண்ணுக்கு! மேலேயும் கீழேயும் அவன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்! ஏன் தடவிக் கொடுக்க வேண்டுமாம்?<br />முத்தன்ன மெம்முறுவல் செய்யும் வாயும்<br />முலையும் அழகழிந்தேன் நான்<br />இவன் தடவிக் கொடுக்காததால், அந்த உறுப்புகளின் அழகே அழிந்து விட்டனவாம்! அழகைப் பெறத் தடவிக் கொடுக்க வேண்டியது தேவைதானே!<br /><br />பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்<br />புணர்வதோர் ஆசையினால்<br />கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து<br />ஆவியை ஆகுலம் செய்யும்...<br />என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்<br />பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ<br /><br />ரங்கமன்னாரோடு உடல் உறவு கொள்ள வேண்டுமாம்! அந்த ஆசை மனதில் மேலோங்கி வளர்ந்துவிட்டதால், மார்பகம் வருந்துகிறதாம், குதூகலிக்கிறதாம், உயிரை எடுக்கிறதாம், ஆகவே எதையாவது செய்து நாள்தோறும் நாராயணனைப் புணர்வதற்கு உத்தரவாதம் கொடுங்களேன் என்று பெண் (ஆண்டாள்) கேட்கிறாள்! இது பக்தியா? ஆபாச ஆசைகளின் வெளிப்பாடு அல்லவா?<br /><br />கொங்கைமேல் குங்குமத்தின் குழம்<br />பழியப் புகுந்து ஒரு நாள்<br />தங்குமேல் என் ஆவி தங்குமென்று உரையீரே<br />மார்பகத்தில் பூசப்பட்டிருக்கும் குங்குமம் குழைய, அழியத் தொட்டு அழுத்தினால் ஒழிய என் ஆவி உடலில் தங்காது என்பதை அரியிடம் கூறுங்களேன் என்ற வேண்டுகோளைப் பக்தர்களிடம் விடுக்கிறாள்!<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-25178462914256786252013-01-06T12:46:02.294+05:302013-01-06T12:46:02.294+05:30மார்கழியில் ஆண்டால் மார்க்கச்சை
உலகப் பணக்காரர்க...மார்கழியில் ஆண்டால் மார்க்கச்சை<br /><br /><br />உலகப் பணக்காரர்களைத் தரம் பிரித்துப் பட்டியலிடும் பணியைச் செய்துவரும் ஃபோர்ப்ஸ் ஏடு வெளியிடும் செய்திகளை வெளியிட்டு மகிழும் இந்திய ஏடுகள் வசதியாக ஒன்றை மறந்துவிடுகின்றன. மறைத்து விடுகின்றன. மிகப்பெரிய பணக்காரன் திருப்பதியில் இருக்கிறான் என்பதைத் தெரிவிக்கவில்லை. அதனால் ஃபோர்ப்ஸ் ஏடு அதை வெளியிடுவதில்லை. முதலாளிகளைக் கடுமையாகப் பேசுவதற்காகவே பிறந்தவர்கள் அல்லது பிறப்பிக்கப்பட்டவர்கள் என்று பேசும் இந்தியாவின் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இதைப் பற்றிப் பேச மாட்டார்கள். காரணம் அந்தப் பணக்காரன், கடவுள் என்று கற்பிக்கப்பட்டிருக்கிறான். இவர்களுக்கு அதனிடம் அச்சம். கல் முதலாளிபற்றி வாய் திறக்க மாட்டார்கள். அது கிடக்கட்டும்.<br /><br />திருப்பதியில் இருக்கும் உலக மகா பணக்காரன் பாலாஜி வெங்கடாசலபதி _ முதல் ஏதும் போடாமலே கோடிக்-கணக்கான கோடிகள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். பணத்தைச் செலவு செய்ய வழி தெரியாமல் கல்லையெல்லாம் தங்கத்தால் மூடிக்கொண்டிருக்கிறான். மதில் சுவரையெல்லாம் தங்கத்தால் கட்டிக்கொண்டு இருக்கிறான்.<br /><br />குவைத் மன்னர்களும் சவூதி மன்னர்களும் தங்கள் அரண்மனைகளில் தங்கக் குளியலறை, தங்கத் தண்ணீர்க்குழாய், தங்கத்தட்டுகள், தங்க நாற்காலி என்று வைத்திருப்பவர்கள் என்று கண்டனம் செய்பவர்கள் திருப்பதியானைப் பற்றிப் பேசுவதில்லை. பிரான்சு நாட்டின் லூயி மன்னர்களின் ஆடம்பரம்பற்றி எழுதுபவர்கள், வர்சேல் அரண்மனையின் ஆடம்பரங்கள்பற்றி எழுது-பவர்கள்கூட தங்கக்கட்டில்பற்றி எழுதுவார்களே தவிர, ஏழுமலையானைப்பற்றி எழுதுவதில்லை.<br /><br />காரணம் இந்த உலக மகா பண முதலாளி கடவுளாக்கப்பட்டிருக்கிறான்.<br /><br />இருந்தாலும் இவன் கடன்காரனாம். தன் கல்யாணத்திற்காகக் கடன் வாங்கினானாம். (அப்படி ஒரு கல்யாணம் இவனுக்குத் தேவையா?) கடனுக்கான வட்டியைத் தருவதற்காகத்தான் இவனுக்குக் கோடிக்கணக்கான கோடி ரூபாயைக் கொட்டிக் குவிக்கிறார்களாம்! உலக மகாபணக்காரனுக்கே கடன் கொடுத்த பணக்காரன் குபேரனாம்! இந்த கந்துவட்டிக்காரன் பிரபஞ்ச மகா பணக்காரன் என்று ஏன் ஃபோர்ப்ஸ் எழுதுவதில்லை? இவர்கள் ஏன் எழுதக் செய்வதில்லை? விசாரிக்க வேண்டும். சரி, ஏழுமலையான் விவகாரத்திற்கு வருவோம்.<br /><br />இவ்வளவுப் பணம் இருந்தும் இவனை எழுப்ப ஓர் அலாரம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அறிவே கிடையாது. இவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பக் குரல் கொடுப்பதற்கு என்றே சம்பளம் கொடுத்து ஆள்களை வைத்து இருப்பதால் அவர்கள் இந்தத் தூங்குமூஞ்சியைப் பாட்டுப்பாடி எழுப்புகிறார்கள். இந்தப் பாட்டைத்தான் சுப்ரபாதம் என்று வடமொழியில் கூறுகிறார்கள். இசைத்தட்டு, இசைநாடா என்று வந்திருக்கும் இதனை எல்லாக் கோயில்களிலும் மார்கழி மாதத்தில் ஒலிக்கச் செய்கிறார்கள்.<br /><br />நமக்கும் தூக்கம் கெட்டுவிடும். மார்கழி மாதக் குளிரில் கதகதப்புக்குத் துணிப்போர்வை, உயிர்ப்போர்வையுடன் தூங்கிக் கொண்டிருக்கும்-போது இக்கூச்சல் எரிச்சலைக் கிளப்பும்.<br /><br />இந்த எரிச்சல் இனிமேல் ஏழுமலையானுக்கு ஏற்படாதாம். சுப்ரபாதம் இந்த மார்கழி மாதத்தில் ஏழுமலைக்கோயிலில் பாடப்பட மாட்டாதாம். பதிலுக்குத் திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படுமாம். நப்பின்னைக் கொங்கைமேல் கைவைத்துக் கிடந்தவனைத் தமிழில் பாடி எழுப்பப் போகிறார்களாம். தமிழ்த் தேசியங்களுக்குப் பக்திப் பிரவாகத்தோடு, பாஷைப் பிரவாகமும் பொங்கி ஓடும்! பாஷை, பிரவாகம் இரண்டுமே வடசொல், தமிழ்ச்சொல் அல்ல! நமக்குத் தெரியும். தமிழுக்கு அடுத்துத் தேசம், தேசியம் என்று சொல்லிக் கொள்பவர்களுக்காக எழுதவேண்டி நேரிட்டது.<br /><br />நம் தமிழர்கள் க்ஷமிக்க வேணும்!<br /><br />நப்பின்னையின் கொங்கைகளைப்பற்றி மட்டுமே ஆண்டாள் எனும் பெண் பாடியிருப்பதாக யாரும் கருதிக் கொள்ளாதீர்கள். நம் இலக்கியவாதிகள் மாபெரும் சபைகளிலே சிலாகித்துப் பேசும் பக்தி இலக்கியம் பலவற்றையும் பாடுகிறது. நாயகன் _ நாயகி பாவம் என்றெல்லாம் இவர்கள் வர்ணிக்கும் ஆண்டாளின் விரகதாபம் (காம வெளி என்று தமிழில் கூறலாம்) எந்த எல்லையைத் தொட்டது என்பதை ஆண்டாளின் கவிதை மூலமே பார்க்கலாமா?<br /><br />தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-9605502461599203882013-01-06T12:45:05.891+05:302013-01-06T12:45:05.891+05:30போதனை யாருக்கு
`உணவை வீணடிப்பது பாவம் என்று மதங...போதனை யாருக்கு<br /> <br /><br />`உணவை வீணடிப்பது பாவம் என்று மதங்கள் போதிக்கிறது அவ்வாறு நிகழச் செய்யும் அனைத்தையும் தவிருங்கள்-இது அண்மையில் மத்திய நுகர்வோர் நலத்துறை வெளியிட்ட விளம்பரத்தின் வாசகம். ஒரு மதச்சார்பற்ற நாட்டின் துறை இப்படி மதங்களை முன்னிறுத்தி விளம்பரம் கொடுக்கலாமா?<br /><br />இந்து மதக் கோவில்களில் கல்லால் ஆன கடவுள் சிலைகளின் மீது கொட்டி வீணாக்கப்படும் பால், இளநீர், பழங்கள், நெய், எண்ணெய், தயிர், மஞ்சள், நவதானியங்கள் போன்றவை உணவுப் பொருட்கள் இல்லையா? கடவுளுக்காக சாலைகளில் உடைக்கப்படும் தேங்காய்; திருஷ்டி கழிக்க உடைக்கப்படும் பூசணிக்காய், எரிக்கப்படும் மிளகாய், உப்பு ஆகியவையெல்லாம் என்ன?<br />மதங்களின் பெயரால் இந்தியாவில் உணவை வீணடித்து உற்பத்தி நாசம் செய்யும் நாடு உலகில் வேறெதுவும் உண்டா? மக்களுக்கு சிக்கனத்தைப் பற்றிப் போதிக்கும் அரசின் உணவுத்துறை முதலில் இந்து மத நிறுனங்களுக்கும், இந்து மதாபிமானிகளுக்கும் உணவை வீணடிக்காதீர்கள் எனப் போதிக்கட்டும்.தமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1474608369333206681.post-87622498708443930982013-01-06T12:44:41.999+05:302013-01-06T12:44:41.999+05:30
ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு வி...<br />ஆண் நண்பர்களுடன் ஷாப்பிங் மால் செல்வதும், இரவு விருந்துக்குச் செல்வதும் அவரது உரிமை. ஆனால், இரவு 9.30 மணிக்கு, ஒரு தனியார் சொகுசுப் பேருந்தில், அதுவும் பெண்களே இல்லாமல் முரட்டு வாலிபர்கள் மட்டுமே இருந்த தனியார் பேருந்தில் பயணம் செய்யும் அளவுக்கு அறியாமையில் இருந்திருக்கிறார். அந்த இரவு வேளையில் அதைப்போன்ற ஆபத்தை அழைக்கும் செயல் வேறேதுமில்லை என்பதை அந்த மாணவியோ, அல்லது அவரது ஆண்-நண்பரோ ஏன் உணர்ந்திருக்கவில்லை? ... ... ... உடலை அதிகம் வெளிப்படுத்தும் ஆடைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், பெண்கள் மதுக்கூடங்களைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்வதும், நேரத்தோடு வீடு திரும்ப வேண்டும் என்பதும் ஆணாதிக்க உலகத்தால் பெண்களுக்கு விதிக்கப்படும் தடைகள், கட்டுப்பாடுகள் என்று பெண்ணியவாதிகள் விமர்சனம் செய்கிறார்கள். வீட்டுக்குள்ளேயே பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்து-கொண்டிருக்கும்போது வெளியுலகில் எத்தனை எச்சரிக்கையுடன் இருந்தாக வேண்டும்? என்ற அறிவுறுத்தல் என்பதைப் புரிந்து-கொள்வதில்லை. ... ... ... சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால், பெண்கள் சில சுயக்கட்டுப்பாடுகளால் பெறும் விழிப்பு நிலையும், உள்ளுணர்வும் அவர்களைப் பல்வேறு பாலியல் வன்முறைச் சூழலில் சிக்காதபடி பாதுகாக்கும். தீதும் நன்றும் பிறர்தர வாரா. (தினமணி 20.12.2012)<br /><br />அந்தக் கடைசி வரியை இன்னொரு முறை படிச்சுப் பாருங்க.... என்ன சொல்ல வர்றாரு தெரியுதா?<br /><br />அந்தப் பொண்ணு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு வேற யாரும் காரணமில்லை... அந்தப் பொண்ணே தான் காரணம்னு சொல்றாரு வைத்தியநாதய்யரு! அங்க மட்டுமில்லை... எங்க பாலியல் வன்முறை நடந்தாலும் அதுக்கு அதுக்கு அந்த பொண்ணுங்க தான் காரணமா? அதுக்கு எவ்ளோ அயோக்கியத் தனமா புறநானூற்றுப் பாட்டுல இருந்து வரியை எடுத்துப் போடுறாரு? அசாம்ல நடந்ததுக்கும், டெல்லியில நடந்ததுக்கும் அந்தந்தப் பொண்ணுங்க தான் காரணம்னா தூத்துக்குடியில நடந்ததுக்கும் அந்த 13 வயசு சின்னப் பொண்ணு தான் காரணமா?<br /><br />உரிய பாதுகாப்பு தராத அரசையும், பாலியல் கல்வியைக் கத்துக் கொடுக்கக்-கூடாதுன்னு கத்துற மதவாதிகளையும், மனநிலை சரியில்லாத பாலியல் பொறுக்கிகளா ஆண்களை வளர்த்துக்கிட்டிருக்கிற சமூகத்-தையும் கண்டிக்காமல், நீ லேட்டா போனதால தான் உன்ன ரேப் பண்ணியிருக்கான்.. நான் அங்க இருந்தா நானும் அப்படித் தான் பண்ணியிருப்பேன்னு சொல்ற மாதிரி எழுதுறதுக்குப் பேரு ஒரு தலையங்கம்.. அதுக்கு ஒரு ஆசிரியரு...? அடச்சீ...<br /><br />ஜாதி, ஆணாதிக்கத் திமிர், மதவெறி, அடக்குமுறைன்னு பல காரணங்களால ஒவ்வொரு நாளும் நடக்கிற பாலியல் வன்கொடுமைகள் பெருகிக்கிடக்குற இந்த நாட்டுல காந்தி என்னமோ சொன்னாருன்னு சொல்றாங்களே! அதைக் கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா... இன்னும் 9:30 மணி சுதந்திரத்துக்கு இந்த நாடு தகுதியில்லையே! பகல்-ல போன பொண்ணைத் தூக்கி வன்கொடுமை செஞ்சிருக்கிற இந்த நாடு என்னைக்கு 12 மணி சுதந்திரத்தை அடையுறது? எல்லாருக்கும் தேவை - பாலியல் கல்வி! பெண்களுக்கு அவசியம் தேவை தற்காப்புங்கிற ஆயுதம்! அதை செய்யலைன்னா... பட்டப் பகல் 12 மணிக்கு, பல பேரு முன்னிலையிலயே பாலியல் வன்முறை நடக்கும். அப்பவும், பெண்கள் மேல குற்றம் சொல்ற இதே பூணூல் எழுதும். அதைத் தடுக்க முடியாது!<br /><br />- பவானந்திதமிழ் ஓவியாhttps://www.blogger.com/profile/14608694080821167765noreply@blogger.com