Search This Blog

9.12.12

இந்தியா அடிமைப்பட காரணம்?கடவுள் செய்த அக்கிரமம் என்ன?


கேள்வி    :    நாம் பாடுபட்டாலும் வயிற்றுக்குப் போதும் படியான ஆகாரம்கூடக் கிடைப்பதில்லை. ஆனால் பார்ப்பனர்கள் பாடுபடாவிட்டாலும் அவர்களுக்கு வயிறுபுடைக்கக் கிடைக் கின்றது. இதற்கு என்ன காரணம்?

பதில் :    நமது மதமும் ஜாதியும்.

கேள்வி    :    நாம் பாடுபட்டுச் சம்பாதித்தும் நம் பிள்ளைகள் படிக்க முடியாமல் நம்மில் 100க்கு 90 பேருக்கு மேலாக தற்குறிகளாயிருக்கிறோம். ஆனால்,  பாடுபட்டுச் சம்பாதிக்காமல் பிச்சை எடுக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 100பேர் படித்திருக்கிறார்கள். இதன் காரணம் என்ன?

பதில் : மதமும் ஜாதியும்.

கேள்வி    : நமது பணக்காரக் குடும்பங்கள் வரவரப் பாப்பராய்க் கொண்டே வருவதற்குக்  காரணமென்ன?

பதில் : வினையின் பயன். அதாவது நம்மவர்கள் தங்கள் சமுகத்தார் பட்டினி கிடப்பதையும், கல்வி அறிவு இல்லாமல் இருப்பதையும் சிறிதும் கவனியாமல் பார்ப்பானுக்கே போட்டு அவர்களுக்கே படிப்புக்குப் பணமும் கொடுத்து வந்த பாவமானது அந்தப் பார்ப்பனர்களே வக்கீலாகவும், ஜட்ஜுகளாகவும் வந்து, மேற்படி பார்ப்பனரல்லாதார்களைப் பாப்ப ராக்குகிறார்கள். அதற்கு யார் என்ன செய்யலாம்?

கேள்வி    : எந்தவிதமான விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்?

பதில் : வெளியார்க்கு தெரியும்படியாகச் செய்த விபசாரம் குற்றம் சொல்லத் தகுந்ததாகும்.

கேள்வி    :    கிறிஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?

பதில்:    ஒரு கெடுதியும் இல்லை. ஆனால், மதத்தின் பேரால் குடிக்க வேண்டாம்.

கேள்வி    : மகம்மதியனாவதில் என்ன கெடுதி?

பதில்: ஒரு கெடுதியுமில்லை. ஆனால் பெண்களுக்கு மூடிபோடாதே.

கேள்வி    :    உண்மையான கற்பு எது?

பதில்:    தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கி இருப்பதே உண்மையான கற்பு.

கேள்வி    :    போலிக் கற்பு என்றால் எது?

பதில்:    ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாதபோது இணங்கி இருப்பதே போலிக்கற்பு.

கேள்வி    :    மதம் என்றால் என்ன?

பதில்:    இயற்கையுடன் போராடுவதும், அதைக் கட்டுப்படுத்துவதும்தான் மதம்.

கேள்வி    :    தொழிலாளர்களுக்குப் பண்டிகை நாள்களில் ஏன் ஓய்வு(லீவு) கொடுக்கப் படுகின்றது?

பதில்:    பாடுபட்டுச் சம்பாதித்து மீதி வைத்ததைப் பாழாக்குவதற்காக.

கேள்வி    :    பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?

பதில்:    அவர்களுக்கு அறிவு இல்லை, ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காக.

கேள்வி    :    மனிதனுக்குக் கவலையும், பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்:    பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்கு முழுச்சுதந்திரம் கொடுத்து விட்டால் ஆண்களுக்கு அநேக தொல்லைகள் ஒழிந்துபோகும்.

கேள்வி    :    பெண்களுக்கு நேரம் மீதியாக வேண்டு மானால் என்ன செய்ய  வேண்டும்?

பதில்:    தலைமயிரை வெட்டி விட்டால் அதிக நேரம் மீதியாகும்.

கேள்வி    :    பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்:    அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும். (இல்லாவிட்டால் அடிக்கடி மார்புச் சேலையை இழுத்து இழுத்துப் போடுவதே வேலையாகும்)

கேள்வி    :    எல்லோருக்கும் போதுமான அளவு ஆகாரம் இருக்க வேண்டுமானால் என்ன  செய்ய வேண்டும்?

பதில்:    ஒருவனும் தன் தேவைக்கு மேல் எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டிய அளவு கிடைத்துவிடும்.

கேள்வி    :    பெரிய மூடன் யார்?

பதில்:    தனது புத்திக்கும், பிரத்தியட்ச அனுபவத்திற் கும் தோன்றுவதை நம்பாமல் எவனோ ஒருவன், எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன்  பெரிய மூடன்.

கேள்வி    :    ஒழுக்கம் என்பது என்ன?

பதில் :    ஒழுக்கம் என்பது தனக்கும், அந்நியனுக்கும் துன்பம் தராமல் நடந்து கொள்வதாகும்.

கேள்வி    :    சமயக் கட்டுப்பாடு - ஜாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?

பதில்:    மனிதனைத் தன் மனச்சாட்சிக்கும், உண் மைக்கும் நேராய் நடக்க  முடியாமல் கட்டுப்படுத் துவதுதான் ஜாதி சமயக் கட்டுப்பாடாய் இருக்கின்றது.

கேள்வி    :    உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

பதில்:    கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து, அவரைக்காக்க பிரயத்தனம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக்  காணப்படுகிறது.

கேள்வி    :    ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?

பதில்:    தடி எடுத்தவன் தண்டல்காரனென்பது தான் ஜனநாயக ஆட்சி.

கேள்வி    :    நம் நாட்டில் ஜனசங்கை பெருக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

பதில்:    அதிகமாக பிள்ளை பெறுவதை நிறுத்தி, விதவைகளுக்கு மறுமணம்  செய்தால் நல்ல திடகாத்திரமுள்ள ஜனசங்கை பெருகும்.

கேள்வி    :    நம் நாடு சீர்ப்பட என்ன வேண்டும்?

பதில் :    நம் நாடு சீர்ப்பட்டு நாமும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால், நாஸ்திகமும், நிபந் தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண் டியனவாகும்.

கேள்வி    :    இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?

பதில் :    இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய்ப் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும், கடவுள்களுமேயாகும்.

கேள்வி    :    கிறிஸ்தவ மதத்தில் சில ஆபாசக் கொள்கைகள் இருந்தும் அவர்கள் எப்படி உலகை ஆளுகிறார்கள்?

பதில்:    கிறிஸ்தவ மதத்தில் எவ்வளவு ஆபாசமும் முட்டாள்தனமுமான கொள்கைகளும்  இருந்த போதிலும் அதைப்பற்றி  நமக்குக் கவலை இல்லை.  ஏனெனில், அவர்கள் பெரும்பாலும் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்களாகி விட்டார்கள். அவர்கள் வாழ்க்கைக்கோ, மன  உணர்ச்சிக்கோ சிறிதும் மதத்தை லட்சியம் செய்வதில்லை. ஆதலால் அவர்கள் மதத்தைப் பற்றி நாம் பேசுவது பயனற்றதும் முட்டாள்தனமுமாகும்.

கேள்வி    ;    பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்குவர முடிந்தது?

பதில்:    மத விஷயத்தில் அவர்களுக்கு கிடைத் துள்ள உயர்ந்த நிலையால்  அவர்கள் (பார்ப் பனர்கள்) எல்லோரையும்விட முன்னேறியிருக்க முடிந்தது. மத விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகி விடுவார்கள். ஏனெனில், அவர்களுக்குப் பாடுபடத்  தெரியாது. ஆகவே, சோம்பேறிகளின் கதியே அடைய வேண்டியவர்களாவார்கள்.

கேள்வி    :    ஆண் விபசாரர்கள் விபூதி பூசுவதின் மூலம் மோட்சத்திற்குப்போக நேர்ந்து விட்டால், அங்குபோய் தங்கள் விபசாரத்திற்கு என்ன செய்வார்கள்?

பதில்:    அதற்காக எந்த விபசாரகனும் விபூதி பூசுப வரும் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், அங்கு இந்த விபூதிப் பக்தர்களுக் கென்றே ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ ரம்பையர்கள் இருக்கிறார்கள். அன்றியும் சமையல் செய்யவேண்டிய வேலைகூட இல்லாமல் இதே வேலையாய் இருக்கலாம். ஏனென்றால், காமதேனு, கற்பக விருட்சம் கேட்டதெல்லாம் கொடுத்துவிடும்.

கேள்வி    :    பார்ப்பனர்களில் ஒருவகையாருக்கு ஏன் முகம் சூப்பையாயிருக்கின்றது.

பதில்:    அவர்கள் அனுமந்த தேவரை பூஜிக்கிறார்கள். படுக்கை வீட்டில் அனுமார் படம் வைத்திருக்கின்றார்கள். அதனால், அவர்கள் முகம் சூப்பையாய் இருக்கின்றது.

கேள்வி    :    பெண் விபசாரிகள் விபூதி பூசியதன்மூலம் மோட்சத்திற்குப் போய்விட்டால் அங்கு அவர்களுக்கு வழி என்ன?

பதில் :    கடவுள் இருக்கிறார், போதாக்குறைக்கு அங்குள்ள மற்ற தேவர்களைக் கொண்டு சரிப் படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

கேள்வி    :    கடவுள் ஏன் காண முடியாதவராயிருக்கிறார்?

பதில் :    அவர் பண்ணும் அக்கிரமத்திற்கு யார் கைக்காவது கிடைத்தால் நல்ல உதை கிடைக்கு மென்றுதான்.

கேள்வி    :    கடவுள் செய்த அக்கிரமம் என்ன?

பதில் :    ஏன்? மூட்டைபூச்சி, கொசு இரண்டை யும் அவர் உற்பத்தி செய்த அக்கிரமம் ஒன்றே போதாதா?

--------------------------------------- குடிஅரசு- 15.01.1949 இதழில் சித்திர புத்திரன் என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கேள்வி பதில்

2 comments:

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழகத்தின் சார்பில் தருமபுரியில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு கருத்தரங்கம் மாபெரும் மாநாடு தொடங்கியது


தருமபுரி, டிச. 9- திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று (9.12.2012) காலை தருமபுரியில், ஜாதி - தீண்டாமை ஒழிப்பு கருத்தரங்கம் மற்றும் மாபெரும் மாநாடு தொடங்கியது. கருத்தரங்கில் தமிழர் தலைவர் நிறைவுரையாற்றினார்.

தருமபுரி மாவட்டத்தில் நத்தம் காலனி, அண் ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் ஜாதி வெறியர்களால் தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்புகள் கொள்ளையடித்தும், தீ வைத்து எரித்தும் நாசம் செய்யப்பட்டன. 250க்கும் மேற்பட்ட வீடுகள் (7.11.2012) சாம்பலாயின. பல கோடி ரூபாய் சொத்துக்கள் அழிக்கப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு என்பதை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாகி விட்டது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் கழகப் பொறுப் பாளர்களுடன் (14.11.2012) அன்று நேரில் சென்று உண்மை நிலவரத்தை அறிந்து வந்தார். டிசம்பர் 9ஆம் தேதி தருமபுரியில் ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்றும் அன்றே தமிழர் தலைவர் அறிவித்தார்.

தமிழ்த் தேசியம் என்று ஒரு பக்கம் பேசிக் கொண்டு பிறவியிலேயே ஆண்டாண்டுக் காலமாகத் தீண்டத்தகாத மக்களாக, ஒடுக்கப்பட்ட மக்களாக ஆக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மற்றவர்களை ஒன்றுபடுத்துவதை முறியடிக்கவும், மனிதனை மனிதனாகப் பார்க்காமல் ஜாதி வெறிக் கண் கொண்டு பார்ப்பது பாசிச நோயின் சேட்டையாகும் இதை கண்டித்தும் இன்று (9.12.2012) தருமபுரியில் ஜாதி ஒழிப்பு தீண்டாமை ஒழிப்பு கருத்தரங்கம் மற்றும் மாபெரும் மாநாடு தொடங்கியது. காலையில் தருமபுரி பெரியார் மன்றத்தில் அமைக்கப்பட்டிருந்த சுயமரியாதை சுடரொளி என்.எஸ். உசேனி பீரான் நினைவரங்கில் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராட வேண்டும் ஏன்? என்ற பொதுத் தலைப் பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு பாரதிதாசன் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ. ஜெகதீசன் தலைமை வகித்து உரையாற்றினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி வரவேற்று உரையாற்றினார். கோ. திராவிடமணி, இரா. பரிமளம், துரை. சித்தார்த்தன், விஜி. இளங்கோவன், ம. கிருட்டிணன், கே.ஜெ. கிஷோர்குமார், மு. பரமசிவம் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் சமூகநீதிப் பார்வையில் என்ற தலைப்பில் திராவி டர் கழகப் பொதுச் செயலாளர் பிறைநுதல்செல்வி, அண்ணல் அம்பேத்கர் பார்வையில் என்ற தலைப்பில் ஆதவன் தீட்சண்யா, புரட்சிக்கவிஞர் பார்வையில் என்ற தலைப்பில் இரா. கண்ணிமை, தந்தை பெரியார் பார்வையில் என்ற தலைப்பில் முனைவர் அதிரடி க அன்பழகன் ஆகியோர் உரையாற்றினர்.

இக்கருத்தரங்கில் திராவிடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, பொதுச் செய லாளர் தஞ்சை ஜெயக்குமார் மாநில மாணவரணி துணைச் செயலாளர் மு. சென்னியப்பன் மாநில மகளிர் பாசறை அகிலா உள்ளிட்டோர் கருத்துரை யாற்றினர். கழக நிர்வாகிகள் வேட்ராயன், சிவாஜி, ஊமை ஜெய ராமன், பீம. தமிழ்பிரபாகரன், கிருஷ்ண மூர்த்தி, கதிர் செந்தில், அ. தமிழ்ச்செல்வன், கரு. பாலன், தீர்த்த கிரி சாந்தா ராமமூர்த்தி, காமராஜ், மு. தியாகராசன், கதிர், சிசுபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ் ஓவியா said...


சென்னை புரசைவாக்கத்தில் பகுத்தறிவு திருவிழா


தமிழர் தலைவர் கி.வீரமணி, ஆ. இராசா எம்.பி., ரமேஷ் பிரபா பங்கேற்பு

அறிவியல் மனப்பான்மையைப் பெற்று சுயமரியாதை சிந்தனையோடு வாழ வேண்டும்
மாணவர்களுக்கு தமிழர் தலைவர் கருத்துரை


சென்னை, டிச.9- சென்னை புரசைவாக் கத்தில் நடைபெற்ற பகுத்தறிவு திருவிழாவில் திராவிடர் கழகத் தலை வர் கி.வீரமணி, நாடா ளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா, கல்வியாளர் ரமேஷ் பிரபா ஆகி யோர் பங்கேற்று சிறப் பித்தனர். இவ்விழாவில் பேசிய தமிழர் தலைவர் மாணவர்கள் அறிவியல் மனப்பான்மை பெற்று சுயமரியாதை சிந்தனை யோடு வாழ வேண்டும் என கேட்டுக் கொண் டார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர் களின் 80ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி நேற்று (8.12.2012) சென்னை புரசைவாக் கம் தாணா தெருவில் மாலை 6 மணியளவில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, திராவிடர் மாணவர் கழகம் சார்பில், இன மானப் பெருவிழா - பகுத் தறிவுத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் பிரபல கல்வியாளரும் ஊடக வியலருமான ரமேஷ் பிரபா, தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. இராசா ஆகியோர் சிறப் புரையாற்றினர். இவ் விழாவில் நிறைவுரை யாற்றிய திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்:

இவ்விழாவை சட் டக் கல்லூரி மாணவர் கள் பகுத்தறிவு பிரச்சார விழாவாக நடத்தியுள் ளனர். மதவாதிகள் கட வுளர்களுக்கு பிறந்த நாள் என்ற பெயரில் மூட நம்பிக்கையை வளர்க்க ஆண்டு தோறும் பல் வேறு விழாக்களை நடத்துகின்றனர்.

பிறந்த நாள் என்றால் மக்களிடையே அறிவுபூர்வமான செய்தி களை பரப்பி சமுதா யத்தை மாற்ற வேண்டும். அத்தகைய பணிகளைத் தான் தந்தை பெரியார் அவர்கள் மக்களி டையே உண்மையான கருத்துக்களை எடுத்துச் சொல்லி பகுத்தறிவை வளர்த்தார்.

சுயமரியாதை இயக் கம், திராவிடர் கழகம் என்றாலே உண்மை பேசுகின்ற இயக்கம் என்று பொருள். தந்தை பெரியார் அவர்கள் சமுதாயத்தில் உள்ள மூடப் பழக்கங்களை கண்டித்ததோடு, உண் மைகளை எக்ஸ்ரே கருவி போல் உள்ளதை உள்ளபடியே எடுத்துக் காட்டினார். அந்த பணி களை தொடர்ந்து செய் கின்ற இயக்கமாக திரா விடர் கழகம் இருக்கிறது.

மாணவர்களுக்கு இயல்பாக பகுத்தறிவு, சிந்தனை வர வேண்டும், அறிவியல் மனப்பான் மையை மாணவர்கள் பெற்று சுயமரியாதை சிந்தனையோடு வாழ வேண்டும் என்று தமிழர் தலைவர் கேட்டுக் கொண்டார்.

நூல்கள் வெளியீடு

இவ் விழாவில், முன் னாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா கீழ்க்கண்ட நூல்களை வெளியிட் டார். அய்யாவின் அடிச் சுவட்டில் - பாகம் - 2 எனும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் தன் வர லாறு நூலினை தொழி லதிபர் ஆர். கருணாநிதி பெற்றுக் கொண்டார். அய் யாவின் அடிச் சுவட்டில் பாகம் - 3 எனும் நூலினை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் த. வீரசேகரன் பெற்றுக் கொண்டார். திராவிடர் கழகத் துணைத் தலை வர் கவிஞர் கலி. பூங் குன்றன் அவர்கள் எழு திய பார்ப்பன புரட்டுக் குப் பதிலடி எனும் நூலினை வளர் தொழில் இதழின் ஆசிரியர் க. ஜெயகிருஷ்ணன் பெற் றுக் கொண்டார்.

இவ்விழாவிற்கு திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் தலைமை தாங்கினார். சட்டக் கல்லூரி மாணவர் ச. மலர்மன்னன் முன் மொழிந்து பேசினார். மாணவி பி. கவி நிலவு வழி மொழிந்து பேசி னார். இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி இரா. பரஞ்ஜோதி, திரா விடர் கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசி னர். மாநில ஊடகத் துறை செயலாளர் ச. பிரின்சு என்னாராசு பெரியார் தொடக்க உரை ஆற்றினார். முன்ன தாக திராவிடர் கழக மாநில மாணவரணி துணைச் செயலாளர் நம்பியூர் மு. சென்னியப் பன் அனைவரையும் வரவேற்று பேசினார். சட்டக் கல்லூரி மாணவி ம.வீ. அருள்மொழி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில் திராவிடர் கழக சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா. மணி யம்மை நன்றி கூறினார்.

கலை நிகழ்ச்சி

முன்னதாக இந்த இனமானப் பெரு விழாவின் தொடக்க மாக முரசொலி முகிலன் கலைக் குழுவினர் வழங்கிய ஈரோட்டு பூகம்பம் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தோழர் - தோழியர் மற்றும் பொது மக்கள் திரளாக பங்கேற்று இக்கலை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

இவ்விழாவில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செங்கை சிவம், பகுதிச் செயலா ளர் கோ. ஏகப்பன், திரா விடர் கழகச் சென்னை மண்டலத் தலைவர் தாம்பரம் இரா. ரத் தினசாமி, செயலாளர் வெ. ஞானசேகரன், தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா. வில்வ நாதன் செயலாளர் செ. பார்த்தசாரதி, இணைச் செயலாளர் கோ.வீ. ராகவன், வட சென்னை மாவட்டத் தலைவர் திருவள்ளுவன், செய லாளர் கி. இராமலிங் கம், தலைமைச் செயற் குழு உறுப்பினர்கள் க. பார்வதி, திருமகள் மற் றும் சி. வெற்றிச்செல்வி, கு. தங்கமணி, மனோ ரஞ்சிதம் புரசை அன்பு செல்வன், க. மீனாட்சி, பசும்பொன் மற்றும் ஏராளமான கழகத் தோழர் - தோழியர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.