Search This Blog

14.7.15

கோயில்களையும் கடவுள் சிலைகளையும் உருவாக்கியது தமிழர்களா?


தமிழர் வரலாற்றை மாற்ற முயலும் புது முயற்சி!
நடராஜர் சிலையை சொல்லி- வாட்ஸ்அப் / பேஸ்புக்கில் பரவும் வீடியோ!
தமிழர்களே உஷார்! உஷார்!



சமீபகாலமாக  வாட்ஸ்அப்/முக நூலில் "நடராஜர் சிலையை" சொல்லி தமிழர்களின் வரலாற்றை காக்க வேண்டும்" என்ற ஒரு வீடியோ  செய்யப்படுகிறது.  அது எந்த அளவுக்கு போலியானது என் பதை தமிழர்களுக்கு புரியவைக்க தான் இந்த பதிவு.
அந்த வீடியோவில் நான் ஒரு  Physics Student  என்று சொல்லி. அய்ரோப் பிய அணு ஆராய்ச்சி கழகத்தின் வாச லில் சிதம்பரம் நடராஜர் சிலையை வைத்திருக்கிறார்கள் அது ஏன் என்று தெரியுமா?  என்று ஆரம்பித்து.....
கி.பி. 7, 8 மற்றும் 9ஆம் நூற்றாண்டு களில் சோழர்கள் கட்டிய கோயில்களை தெரிந்து கொள்ள வேண்டும்..... 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறி வியல் அறிஞர் ஆல்பர்ட் அய்ன்ஸ்டின்    தத்துவத்தை தெரிந்துக்கொள்ள வேண்டும்..... இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் சர். சி.வி. இராமன் (1930), அதன் பின் சுப்பிரமணியன் சந்திரசேகர் நோபல் பரிசு பெற்றார் (1983). அவர்கள் இருவருமே தமிழர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்று  சொல்கிறார். ஆனால் எதைபற்றியும் முழுமையாக சொல்லவில்லை.
அடுத்து 1950-களுக்குப் பிறகு திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த தினால் தமிழர்களின் கலாச்சாரமும், கலைகளும் அழிக்கப்பட்டுவிட்டன என்று அரசியல் பேச ஆரம்பித்து. தி.மு.கவும், அ.தி.மு.கவும் இதர திராவிட கட்சிகளும் தமிழ் மொழியை வளர்க்கிறேன் என்ற போர்வையில். தமிழ் கலையையும், கலாச்சாரத்தையும் கிடப்பில் போட்டுவிட்டார்கள்.
திராவிடகட்சி ஆட்சியால் இன்ஜினியரிங் கல்லூரி பெருகிவிட்டது அதனால் தாவரவியல், உயிரியல், வேதியியல் (Botany- Zoology-Chemistry) எல்லாம் அழிந்து வருகிறது. அது மட்டுமல்ல  அடிப்படை அறிவியல் -(Basic-science)- இல்லாமல் போய் விட்டது.
அடிப்படை அறிவியலை  வளர்ப்பதற்கு கோயில்களையும், தமிழ் சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும், யோகா கலையையும் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்று அடிப்படை அறிவியலுக்கு   புது விளக்கத்தைக் கொடுக்கிறார்!
தமிழர்களின் கலாச்சாரத்தையும், கலையையும் வளர்க்க தடையாக இருப்பது திராவிடகட்சிகளின் மொழி-அரசியலும் சாதி-அரசியலும் தான் அதாவது தமிழ்மொழி வளர்ச்சியும், சாதி ஒழிப்பும் தான் தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் கலையை வளர்க்க  தடையாக இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறார்.
அது புரியாமல் நடராஜர் சிலைன்னு கடவுள் பெயரை சொன்ன வுடன் நம்ம தமிழன் அந்த வீடியோவை எல்லாருக்கும் வாட்ஸ்அப்/பேஸ்புக்கில்    பகிர்ந்து வருகிறான்! சரி அவருடைய நோக்கம் என்ன?
1. நடராஜர் சிலையை பற்றி கூற வேண்டுமா? இல்லை.
2.சிற்பக் கலையை வளர்க்க வேண்டுமா? இல்லை.
3. தமிழர் வரலாறை எடுத்து கூற வேண்டுமா? இல்லை.
4. நோபல் பரிசை பற்றி கூறி அறி வியலை வளர்க்க வேண்டுமா? இல்லை.
5. --அடிப்படை அறிவியல் மற்றும் பொறியியல் படிப்பை வளர்க்க வேண்டுமா? இல்லை.
6. சாதிகள் ஒழிந்து எல்லோரும் சமத் துவமாக வாழ வேண்டுமா? இல்லை.
7.தமிழ் மொழியை வளர்க்க வேண் டுமா? இல்லை.
இப்படி எதுவுமே இல்லையென்றால்
1. அவருடைய நோக்கம் தான் என்ன?
திராவிட கட்சிகளை ஒழிக்க வேண் டும். திராவிட சிந்தனையை ஒழிக்க வேண் டும்.
2.    ஏன் ஒழிக்க வேண்டும்?
தமிழர்களிடம் மொழி உணர்வை வளர்த்ததும்! சாதி உணர்வை அழிப் பதும்! திராவிடர் கட்சிகள்தான் அத னால் திராவிட கட்சிகளை ஒழிக்க வேண்டும்.
3. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.  இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983) இருவரும் தமி ழர்களா?
இல்லவே இல்லை!. தமிழ் நாட்டில் வாழ்ந்த ஆரியர்கள் பார்ப்பனர்கள். தமிழ் நாட்டில் வாழ்ந்தவர்கள் நோபல் பரிசு பெற்றுள்ளார்கள் என்பதில் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆனால் அவர்கள் தமிழர்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?
தமிழ்பேச தெரிந்தவர்கள் எல்லாம் தமிழர்கள் என்று ஆகிவிடமுடியுமா?

அப்படியென்றால் ஆங்கிலம்பேச தெரிந்தவர்கள் எல்லாம் ஆங்கிலே யர்கள் ஆகிவிடமுடியுமா?
மொழி என்பது ஒரு கருவி. அதை கற்றுக்கொண்டால் யார் வேண்டு மானாலும் பேசலாம். ஆனால் இனம் என்பது மக்களை அவர்களின் வரலாற்று நாகரிகத்தின்படி பிரிக்கப் படுவது. சர்.சி.வி. இராமன் நோபல்பரிசு பெற்ற ஆண்டு 1930, அப்போது தமிழர்களுக்கு பள்ளிக்கூடமே கிடையாது! படிக்கவும் முடியாது! ஆரிய-பார்ப்பனர்கள் மட்டும்தான் படிக்க முடியும் அப்போது குலக்கல்வி முறை இருந்த காலகட்டம்!
அந்த அநீதியை எதிர்த்து தமிழர்கள் படிக்க உரிமை வேண்டும் என்று போராடியவர் தந்தை பெரியார்! அப்போது தோன்றியது-தான் திராவிடர் இயக்கம்!
இப்படி அய்யர் படிக்க முடிந்த காலத்தில் தமிழர்கள் படிக்கவே முடியாதபடி அடிமையாக வாழ்ந்த வரலாற்றை மறைத்து விட்டு.
நோபல்பரிசு வாங்கும் அளவுக்கு தமிழர்கள் இருந்துள்ளார்கள் என்று கூறுவது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி!

4.    கோயில்களை, பரத நாட் டியத்தை, தமிழ் சங்கீதத்தை பாடமாக சொல்லி கொடுக்க வேண் டும் என்பதன் நோக்கம் என்ன?
அப்போதுதான் மத சிந்தனையை வளர்க்க முடியும்; காரணம்
கோயில்கள்; கடவுள் என்ற நம்பிக் கையை வளர்க்க புராணக் கதையின் அடிப்படையில் உருவானது!

பரதநாட்டியம், தமிழ் சங்கீதம் போன்றவை உடல்மொழியை வெளிப் படுத்தும் ஒரு கலை! அறிவியல்; அறிவின் அடிப்படையில் விஞ்ஞானத்தை வளர்ப் பது! இப்படி ஒன்றுக்கொன்று தொடர் பில்லாததை பாடத்திட்டத்தில் வைத்தால் அறிவியல் சிந்தனையைவிட ஒரு மதத்தின் சிந்தனையைதான் அதிகமாக வளர்க்க முடியும்.
காரணம்  கோயில், பரதநாட்டியம், தமிழ்சங்கீதம் மூன்றும் இந்து மதத்தின் அடிப் படையில் போற்றப்படுபவை!.
5. கோயில்களையும் கடவுள் சிலைகளையும் உருவாக்கியது தமிழர்களா?
கடவுள் சிலையை செதுக்கிய சிற்பி யும், கோயிலை கட்டிய கொத்தனார்கள் மட்டும்தான் தமிழர்கள்! ஆனால், கோயிலை கட்டச்சொல்லி மன்னர் களுக்கு ஆலோசனை கூறியது ஆரி யர்கள் பார்ப்பனர்கள்!
அதனால்தான் அந்த காலத்தில் கோயிலை கட்டிய தமிழனே கோயிலுக் குள் போகமுடியாத நிலை இருந்தது. அது பெரியார் போராட்டத்தின் விளைவாக ஒழிக்கப்பட்டு இன்று நாம் கோயிலுக்குள் போக முடிகிறது. அதற்கு உதாரணம் தான் இப்போ தும் தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய இராஜராஜசோழன் சிலை கோயிலுக்கு வெளியில் உள்ளது.
அதுமட்டுமல்ல இன்றும் நாம் சாமி சிலை இருக்கும் கருவறைக்குள் செல்ல முடியாதே! அங்கு அய்யர் மட்டும்தான் செல்ல முடியும். அதனை எதிர்த்து திராவிட இயக்கம் மட்டும் தான் போராடி வருகிறது.
அதே போன்று கடவுளுக்கு அர்ச் சனை செய்யும் உரிமையும் தமிழுக்கு கிடையாது. ஆரியர்களின் சமஸ்கிருத மொழிக்கு தான் உண்டு! கோவிலையும் கடவுளையும் தமிழன் கண்டுபிடித் திருந்தால் அர்ச்சனை செய்யும் மொழி யாக தமிழ் இருந்திருக்கும். அந்த கட வுளுக்கும் தமிழ்மொழி புரிந்திருக்கும்!
அதனை வெளிக்காட்டுவது தான் திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்! திருக்குறளில் எந்த ஒரு கோயி லையும், கடவு ளையும், சிலை யையும், மதத் தையும் போற்றி புகழக்கூடிய குறள் இல் லையே.
அதனால் தான் திருக்குறள் "உலகப் பொது மறை" நூலாக பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட் டுள்ளது.
மேலும் ஒரு உதாரணம் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார்.  அவர் உரு வாக்கிய சமரச சன்மார்க்கத்தில் உருவவழிபாடு கிடையாதே! ஒளி வழிபாட்டை போற்றி அருட் பெருஞ் ஜோதி! தனிப்பெருங் கருணை! என்று தான் கூறுகிறார்.  திருவருட்பா அனைத்தையும் தமிழில் தான் எழுதினார்! பாடினார்!. சமஸ்கிருதத்தில் பாட வில்லையே! தமிழர் பண்பாட்டில் சிலைவழிபாடு இல்லை என்பதற்கான அடையாளம் தான் அது!
6. ஏன் மொழி அரசியல் என்று கூறுகிறார்?
தமிழ்மொழி உணர்வு வளரக் கூடாது. மொழியால் தமிழர்கள் ஒன்று படக்கூடாது, தமிழர்களின் வரலாற்றை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் தான்.
ஓர் இனத்தில் தாய்மொழி உணர்வை குறைத்து விட்டால் அந்த இனத்தில் ஒற்றுமை வளராது. ஓர் இனத்தை அழிக்க வேண்டுமென்றால் அல்லது அந்த இனத்தின் வரலாற்றை அழிக்க வேண்டுமென்றால். முதலில் அந்த இனத்தின் மொழியை அழிக்க வேண்டும்.
அதற்கு ஒரு சிறந்த உதாரணம்தான் இன்று தமிழர்களின் வயதை தமிழ் வருடபிறப்பின்படி கணக்கிட முடியாது. காரணம் தமிழ் புத்தாண்டை "எண் களின்". அடிப்படையில் கொண்டாடா மல் சமஸ்கிருத பெயர்களின் அடிப் படையில் கொண்டாடுகிறோம் இது ஆரிய பண்பாட்டு கலப்பினால் வந்த விளைவு.
அதுவும் பெயரை வைத்தும் தமிழர்களின் வரலாற்றைக் கணக்கிடக் கூடாது என்பதற்காக வெறும் அறுபது ஆண்டுகள்தான் தமிழ்ஆண்டுகள் என்று ஆபாச புராணகதைகளை கூறி உருவாக்கி வைத்துள்ளார்கள். இதை விட கேவலம் வேறு உண்டா?
அதை மாற்ற வேண்டும் என்று தான் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் ஐந் நூறுக்கு மேற்பட்ட தமிழ் அறிஞர்கள், புலவர்கள், சான் றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி முடி வெடுத்து இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பே திருவள்ளுவர் பிறந்துள்ளார். அதனால் திருவள்ளுவர் பெயரில் தமிழ் ஆண்டை கணக்கிட்டு  தை மாதம் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என முடிவு செய்தார்கள்.
அந்த கணக்குபடி இப்போது நடப்பது. திருவள்ளுவர் ஆண்டு 2046 ஆகும். இந்த வரலாறு எத்தனை இளை ஞர்களுக்கு தெரியும்? அப்படியே தெரிந் தாலும் அதன்படி நாம் கடைப் பிடிக்கிறோமா?
சிந்தியுங்கள்! இப்படி முடிவு செய்த வர்கள் யாரும் கடவுள் மறுப்பாளர்கள் அல்ல. கடவுள் மீது நம்பிக்கை உள்ள வர்கள் என்பதை நன்கு உணர வேண்டும். காரணம் கடவுள் நம்பிக்கை என்பது வேறு. நம் இனத்தின் வரலாறு என்பது வேறு.
7.    மொழி அரசியல், சாதி அரசியல் என்று குற்றம்சாட்டுபவர் ஏன் மத அரசியலை பேசவில்லை?
மத அரசியலை பேசினால் R.S.S., B.J.B. போன்ற இந்து அமைப்புகளைக் குற்றம் சொல்ல வேண்டும். அப்படி குற்றம் சொன்னால் இந்து மத சிந் தனையை வளர்க்க முடியாது என்ற காரணத்தினால் திராவிடர் கட்சி களைத் திட்டுகிறார்கள். காரணம் திராவிடர் நாகரிகத்தில் கடவுள், மதம், சாதி என்று மனிதனை பிரிக்கக் கூடிய எந்த முறையும் கிடையாது.
ஏனென்றால் "திராவிடர்" என்பது ஒரு மதத்தை போற்றும் சொல் அல்ல அது ஒரு நாகரிகத்தை குறிக்கும் சொல். அப்படியொரு உயர்ந்த நாகரிகத்தின் மூத்த குடிமக்கள் தான் தமிழர்கள்.  அந்த நாகரிகத்தின் சிறப்பைதான் வள்ளுவர் குறள் 972-இல்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

என்று எழுதி பிறப் பினால் வேற் றுமைபடுத் தாமல் "பிறப் பினால் அனைவரும் சமம்" என்கிறார். அதனால் புரிந்து கொள்ளுங்கள். திராவிடர் கட்சிகளை ஒழிக்க வேண் டும், திராவிடர் சிந்தனையை ஒழிக்க வேண்டும். மொழி உணர்வை ஒழிக்க வேண்டும். என்று கூறினால் அதன் பொருள் தமிழர் நாகரிகத்தை ஒழிக்க வேண்டும், தமிழர் வரலாற்றை அழிக்க வேண்டும் என்பதன் நோக்கமாகும்.
அதனால் தமிழர்களே! இளை ஞர்களே விழிப்போடு இருங்கள்! வர லாற்றை கொஞ்சம் தெரிந்து கொள் ளுங்கள்.
திராவிட இயக்கம் ஒன்றும் திடீ ரென்று வானத்திலிருந்து குதிக்க வில்லை. அது ஒரு உயர்ந்த நாகரிகத்தின் பெயரில் தோன்றிய இயக்கம்!  அதனு டைய தோற்றம் ஒரு பரிணாம வளர்ச்சி போன்றது.
தமிழர்களின் நாகரிகத்தை  வாழ்வி யலுக்கு வழிகாட்டும் நெறியாக வள்ளுவர் திருக்குறளில் எழுதினார்.  "அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங் கருணை!" என்று சொல்லி தமிழர்கள் சாதி மத மூட நம்பிக்கையற்ற சமத்துவ சமூதாயமாக  வாழவேண்டும். என்று வள்ளலார் சமரச சன்மார்க்கத்தை தோற்றுவித்தார்.
சமஸ்கிருதத்தை புறக்கணித்து தமிழ்மொழியை காக்க வேண்டும் என்று கூறி தமிழர் வரலாற்றை காக்க தை- 1-_யை தமிழ் புத்தாண்டாக கொண் டாட வேண்டும் என்று மறைமலை அடிகளார் சொன்னார்.
இப்படி திருவள்ளுவர் காலம் முதல் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரை தமிழர்களின் முன்னேற்றத்துக்கு வழிகாட்டிய தமிழ் அறிஞர்கள் நிறைய உண்டு ஆனால் அவர்களால் தமிழர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்ததே தவிர பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை காரணம் மதம் கடவுள் என்ற பயத்தை ஏற்படுத்திய ஆரியர் களின் சூழ்ச்சி.
அந்த சூழ்ச்சியை முறியடிக்கத் தான் 20ஆம் நூற்றாண்டில் பெரியார் சுயமரியாதை இயக்கம் என்று தொடங்கி திராவிடர் நாகரிகத்தின் பெயரில் திராவிடர் கழகத்தை தோற்றுவித்தார். அதன் தொடர்ச்சியாக திராவிடர் இயக்கங்கள் அரசியலில் தோன்றியது,
அதன் விளைவு பல மாற்றங்கள் அடைந்து இன்று தமிழர்கள் ஏற்றம் பெற்றுள்ளார்கள்! இன்னும் நிறைய ஏற்றம் பெறவேண்டியுள்ளது. உங் களுக்கு தெரியுமா?
திருக்குறள் உலகறிய பரவியது திராவிடர் இயக்கத்தினால்.

வள்ளுவருக்கு உருவம், சிலை, கோட்டம் வந்தது திராவிடர் இயக்கத் தினால்.
வள்ளுவருக்கு பூணூல் போட்டு அய்யராக்கும் முயற்சி தடுக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்

வள்ளலாரின் ஒளி வழிபாட்டை ஒழித்து சிலைவழிபாடாக மாற்றும் முயற்சி தடுக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்!

மறைமலை அடிகளாரின் திருவள் ளுவர் ஆண்டு கணக்கீட்டை அரசு அலுவலகங்களில் நடைமுறைக்கு வந்தது திராவிடர் இயக்கத்தினால்!
தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது திராவிடர் இயக்கத்தினால்!
சென்னை மாகாணம் "தமிழ்நாடு" என்று பெயர் மாறியது திராவிடர் இயக்கத்தினால்!

பெண்கள் உரிமைபெற முடிந்தது திராவிடர் இயக்கத்தினால்!

தமிழ்முறை சுயமரியாதை திருமணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது திராவிடர் இயக்கத்தினால்!

கோயிலுக்குள் செல்ல முடிந்ததும் திராவிடர் இயக்கத்தினால்!
நாம் எல்லோரும் படிக்க முடிந்ததும் திராவிடர் இயக்கத்தினால்!
இப்படி சொல்லிகொண்டே போகலாம்............

இதையெல்லாம் யார் செய்தார்கள்? என்று யோசிக்காமல். ஏன் செய் தார்கள்? என்று யோசித்து பாருங்கள் அப்போது புரியும் தமிழர்களின் வரலாறு. காரணம் கடவுள், மதம், அர சியல் இவைகளுக்காக நம் வரலாற்றை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. அதனுடைய ஒரு வடிவம்தான் இது போன்ற வீடியோக்களும்.
எதிலும் அரசியல் பார்வை என்பது வரலாற்றை மறைக்கவும், அழிக்கவும் உதவும், ஆனால் வரலாற்று பார்வை என்பது அந்த அரசியலையே மாற்றவும், தமிழர்களின் உரிமையை காக்கவும், மீட்கவும் உதவும். அதனால் சிந்தியுங்கள்!
நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம் இன்னும் மாற்றம் பெற வேண்டியது நிறைய இருக்கிறது. போட்டி நிறைந்த இந்த உலகத்தில் நாம் மேலும் அறிவு பெற்று முன்னேற சிந்திக்க வேண்டும், செயல்பட வேண் டும்! அதற்கு பதிலாக நாம் வளர்ந்து வந்த நாகரிக முறையும்,  நம்மை வளர்த்த திராவிடர் சிந்தனையும், இயக் கத்தையும் ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால். ஒழிவது திராவிடர் இயக்கம் கிடையாது. தமிழர் இனம் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்! போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்!
திராவிடர் நாகரிகத்தை தமிழர் வரலாற்றை
அழித்தும் திரித்தும் ஆரியத்தை புகுத்தியவர் ஆரியர்! ஆய்ந்து ஆதாரமாக்கி நூலாக தந்தவர் ஆங்கிலேயர்!

அழிந்து ஒழிந்துவிடாமல் போராடி வென்றவர் பெரியார்!

அவரால் பிறந்து வளர்ந்தது திராவிடர் இயக்கம்! தமிழர் நாகரிகத்தை வளர்ப்பது ஒன்றே நோக்கம்!

தமிழர் உரிமையை காக்கும், மீட்கும் இயக்கம்!

இதை நாம் புரிந்தால் நீங்கும் ஆரிய மயக்கம்! போற்றினால் ஓங்கும் சுயமரியாதையெனும் ஒழுக்கம்!

இது வரலாற்று உண்மை! இதை தெரிந்து- புரிந்து நடப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை!

-------------------- ------------க.பூபாலன்  04-07-2015 "விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

6 comments:

தமிழ் ஓவியா said...

காமராசருக்கு சூட்டப்பட வேண்டிய மாலை!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை




இன்று கல்வி வள்ளல், சமூகநீதிச் சரித்திரம் படைத்த, குலக் கல்வித் திட்டத்தை, விரட்டியடித்த மாவீரர் - அனைவருக்கும் அனைத்தும் என்ற சுயமரியாதை இயக்கத்தின் முழக்கமான தந்தை பெரியார் கொள்கையை தனது ஆட்சிக் காலத்தில் நிலை நாட்டிய நீள் புகழ் நிர்மலர் காமராசரின் 113ஆவது பிறந்த நாள் இந்நாள்!

கல்வி நீரோடையை நாடெலாம் பாயச் செய்தவர்!

திராவிடர் இயக்க ஆட்சியான நீதிக்கட்சி ஆட்சியில் துவங்கிய கல்விப் புரட்சியை ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டம் என்ற கிரகணம் மறைத்த இருட்டினை விரட்டி அடித்து, கல்வி நீரோடை நாடெல்லாம் பாய விட்ட தமிழ்நாட்டின் அருந் தலைவர் காமராசரின் ஆட்சி மிகச் சிறப்பானது.

தகுதி, திறமை பேசி நம் மக்களை மட்டந் தட்டி வைத்தவர்களை வாயடைக்கச் செய்த நடை முறைச் செயல் வீரர்!

தந்தை பெரியார் என்ற மாபெரும் மனிதநேயத் தலைவரின் வற்புறுத்தலால் ஆட்சிக் கட்டிலில் தயங்கித் தயங்கி ஏறி, தன்னிகரற்ற ஆட்சி புரிந்து வரலாறு படைத்தவர்.
கும்பலில் கோவிந்தாவா?

காமராசரை டில்லியில் உயிருடன் (வீட்டில்) கொளுத்தி கொலை செய்ய முயன்ற கூட்டம் கூட (நவம்பர் 7 1966) இன்று காமராசருக்கு விழா எடுத்து கும்பலில் கோவிந்தா  போடுகிறது.

காமராசர் - பலருக்குப் பாடம் - சிலருக்கோ படம்!

இதைப் புரிந்து, காமராசர் விரும்பிய  ஜாதி, தீண்டாமை ஒழிந்த புதிய சமதர்ம, சமுதாயத்தை உருவாக்க உழைப்போம்.

எது அற்புத மாலை?

மதவெறி சக்திகளை மண் கவ்வச் செய்வதே, காமராசருக்குச் சூட்டும் அற்புத மாலையாகும்.
வாழ்க காமராசர்!

வருக அவர் விரும்பிய சமதர்ம சமுதாயம்!!

கி.வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்


முகாம்: சிங்கப்பூர்

15.7.2015

தமிழ் ஓவியா said...

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி
தந்தை பெரியாரின் கூற்று மெய்யா? பொய்யா?

இதுவரை நடைபெற்ற கூட்ட நெரிசல் விபத்துகள்..

2015  ஜூலை 14: ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளனர். (பலி எண்ணிக்கை உயரலாம்) 20 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.

2014 ஆகஸ்ட் 25: மத்தியப் பிரதேசம் சாத்னா மாவட்டம் சித்ரகூட் பகுதி கோயி லில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 10 பேர் உயிரிழந்தனர்.

2013 அக்டோபர் 13: மத்தியப் பிர தேசம் டாடியாவில் உள்ள ரத்னாகர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 115 பேர் பலியாகினர்.

2013 பிப்ரவரி 10; உத்தரப்பிரதேசம் அலகாபாதில் நடைபெற்ற கும்பமேளா வின்போது ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் 36 பேர் பலியாகினர்.

2012 நவம்பர் 19: பிஹார் தலைநகர் பாட்னாவில் சாத் பண்டிகையின்போது நெரிசல் ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்தனர்.

2012 செப்டம்பர் 24: ஜார்க்கண்ட் மாநிலம் டியோகர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமத்தில் ஏற்பட்ட நெரிசலில் 8 பெண்கள் உட்பட 9 பக்தர்கள் பலியாகினர்.

2012 பிப்ரவரி 19: குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் உள்ள கோயிலில் மகா சிவராத்திரி விழாவில் பக்தர்கள் முண்டி யடித்ததில் 6 பேர் இறந்தனர்.

2011 நவம்பர் 8:  ஹரித்வாரில் கங்கை நதிக் கரையில் உள்ள ஹர்-கி-பாரி என்ற இடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் பலியாகினர்.

2011 ஜனவரி 14: கேரளாவின் சபரி மலையில் நெரிசல் ஏற்பட்டு 106 பக்தர்கள் பலியாகினர்.

2011 ஜனவரி 8: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை  நதியில் புனித நீராட கூட்டம் அலைமோதிய போது 22 பேர் உயிரிழந்தனர்.

2010 மார்ச் 4; உத்தரப் பிரதேசம், பிரதாப்கர் பகுதியில் ராம் ஜானகி கோயி லில் அன்னதானம், இலவச உடைகளை வாங்கச் சென்ற 63 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.

2008 செப்டம்பர் 30: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள மலைக் கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 120 பேர் உயிரிழந்தனர்.

2008 ஜூலை: ஒடிசா மாநிலம் பூரியில் ஜெகநாதர் ஆலய யாத்திரை யின்போது நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் பலியாகினர்.

2007 ஆகஸ்ட் 15: குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் மாவட்டம் பவகாத் மலைப் பகுதியில் உள்ள மகாகாளி கோயிலில் நெரிசல் ஏற்பட்டு 11 பக்தர்கள் இறந்தனர்.

2006 ஆகஸ்ட் 3: இமாச்சலப் பிர தேசம் நயினா தேவி கோயிலில் மக்கள் கூட்டம் சிதறி ஓடியதில் 160 பேர் உயிரிழந்தனர்.

2005 ஜனவரி 26:  மகாராஷ்டிராவில் சத்தாரா மாவட்டத்தில் உள்ள மாந்தெர் தேவி கோயில் விழாவில் கூட்ட நெரி சலில் சிக்கி 350 பேர் பலியானார்கள். 200 பேருக்கு மேல் காயம் அடைந்தனர்.

2003 ஆகஸ்ட் 27: மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கல் நடைபெற்ற கும்ப மேளா விழாவில் நெரிசல் ஏற்பட்டு 40 பக்தர்கள் இறந்தனர்.

1992 பிப்ரவரி 18: தமிழகத்தின் கும்பகோணத்தில் நடைபெற்ற மகாமக விழாவில் நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர்.
கடவுளை நம்பியோர் கைவிடப் பட்டார்களே!

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

அவநம்பிக்கை

பூரிஜெகந்நாதக் கோயில் திருவிழாவை யொட்டி பக்தர்கள் அதி காரிகளுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எதைக் காட்டுகிறது? கடவுள் சக்தியின்மீதான அவநம்பிக்கையைத் தானே காட்டுகிறது!

தமிழ் ஓவியா said...

கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை


- கி. தளபதிராஜ்



பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15.  இவர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற் காலம். தொழில்துறையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டது. ஏராளமான கல்விச்சாலைகளை திறந்து மாணவர் களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டை யையும் மீறி புத்துயிர் ஊட்டினார்.

ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளோடு மேலும் ஆயிரக்கணக் கான பள்ளிகளை திறந்து தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக்கண்ணை திறந்தவர் காம ராஜர்!. அதனால் "பச்சைத்தமிழர் காமராஜர்" எனப் பாராட்டி உச்சி முகர்ந் தார் பெரியார்!.

நான் தீமிதி, பால் காவடி, அப் படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட் சிக்குத் தங்கத்தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக் கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளி யாத்தா இடுப்புக்குக் கட்டி விடறான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்க லாமில்லையா? அதையெல்லாம் செய்ய மாட்டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தி வைக்குதே தவிர, தன்னம் பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன். கடவுள் இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்யறது நல்ல காரியமாக இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணி கிட்டு கோயிலுக்குக் கும்பா பிஷேகம் பண்ணிட்டா சரி யாப் போச்சா? எனக் கேட்டவர் காமராசர்

இடஒதுக்கீட்டு கொள் கையினால் தகுதி போயிற்று என கூக்குரலிட்டவர்களுக்கு, "டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எஞ்சி னீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சு போச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத் தாலும் இஞ்சினியரும் ஆகலாம். டாக்டரும் ஆகலாம்னேன்." என பொட்டிலடித்தார் போல் பதிலளித்தார் காமராசர்.

காரியம் காமராஜர்! காரணம் பெரியார்! என ஆனந்த விகடனே எழுதியது. எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியை கொடுக்காதே என்கிற ஆரி யத்தின் ஆணி வேர் பிடுங்கப்பட்டது. ஆச்சாரியாருக்கு ஆத்திரம் பீறிட்டது. சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராஜாஜி அந்த கருப்பு காக்கையை கல்லால் அடித்து வீழ்த் துங்கள் என்று பெருந் தலைவர் காமராஜரை விமர்சித்துப் பேசினார்.

தந்தை பெரியார் உடல் ராஜாஜி மன்றத்தின் மேடையில் இருந்தபோது, செய்தியாளர்கள் காமராசரிடம் கேள் விகள் எழுப்பிட முயன்றபோது குடலே அறுந்து கிடக்கிறது. இப்பொழுது என்ன பேட்டி வேண்டியிருக்கு? என்றாரே பார்க்கலாம். தந்தை பெரியார்மீது காமராசர் கொண்டிருந்த மதிப்பு சாதாரணமானதல்ல. பெரியார் போட்டுத் தந்த பாதையில்தான் என் ஆட்சி என்று கூடச் சொன்னவர் காமராசர் ஆயிற்றே! அதனால்தான் கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று கல்கி கார்ட்டூன் போட்டது.

தமிழ் ஓவியா said...

காரணம்

வட நாட்டு மக்களையும், தென்னாட்டு மக்களையும், அவர்களின் திறமை, அபிலாஷைகளையும் புரிந்து கொள்ள முடியாதவாறு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து கொண்டே வந்திருக்கிறார்கள். பத்திரிகைகள் என்ற ஒரே ஆயுதம் அவர்களிடம் சிக்கி விட்டிருப்பதே அதற்குக் காரணம்.
(விடுதலை, 28.8.1963)

தமிழ் ஓவியா said...

கட்சிகளின் நிலைமை


கட்சிகள் இந்த நாட்டில் பெரும்பாலும் ஜாதி - இனத்தைப் பற்றியவையாக இருப்பதால், பொதுமக்கள் நலத்தைவிட அவரவர்கள் கட்சி நலத்தையே கருதி அரசியல் நடத்தவேண்டியதாகப் போய்விட்டது.
_ (குடிஅரசு, 18.12.1943)