Search This Blog

9.4.15

நான் வள்ளுவனைக் குறை கூறுகிறேன் என்று கருத வேண்டாம்-பெரியார்

இலக்கியங்கள் பெண்களை அடிமைப்படுத்துகின்றன!


மணமக்களின் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியினை இம்முறையில் அமைத்ததோடு, என்னையும் அழைத்து நடத்திக் கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சியானது இதுவரையில் நம்மிடையில் நிகழ்ந்து வந்த நிகழ்ச்சிகளுக்கு முற்றிலும் மாறான தன்மையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பழைய நிகழ்ச்சியினை மாற்ற வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டதென்றால் பழைய நிகழ்ச்சியானது மனிதத்தன்மைக்கு ஏற்றதாக இல்லாமல் பெண்களை அடிமைப்படுத்தவும் - மனிதனைக் காட்டு மிராண்டியாக்கவும், ஜாதி இழிவு அடிமையை நிலைநிறுத்தவும், பொருத்தமும், சம்பந்தமும் அற்ற சடங்குகளோடு விவாகம் - தாராமுகூர்த்தம் - கன்னிகாதானம் என்னும் பெயரால் நடைபெற்று வந்தது.


அரசாங்கத்திலும் மத்ததிலும் - சமுதாயத்திலும் ஆதிக்கம் பெற்றிருக்கிற பார்ப்பனர் தங்கள் ஆதிக்கம் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகப் பெரும்பான்மையான மக்களை மடமையில் ஆழ்த்தி அவர்களை அறிவு பெற ஒட்டாமல் தடுத்து அவர்களைப் பகுத்தறிவற்ற மடையர்களாகச் செய்து தங்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொண்டார்கள். மக்களிடம் அறியாமையை நிலை நிறுத்த வேண்டுமானால் அவர்களை மூடநம்பிக்கைக்காரர்களாக்கினால் தான் முடியும் என்பதை உணர்ந்த பார்ப்பனர்கள், மக்களிடையே மூடநம்பிக்கையினைப் புகுத்தினார்கள்.


கடவுள், மத, சாஸ்திரங்களின் மூலம் புகுத்தி விட்டார்களாததால் பயந்து கொண்டு மக்கள் அதனைப் பின்பற்றி வரலாயினர். இது மாற வேண்டுமென்று இந்தியாவிலேயே எவரும் கருதவுமில்லை - முயற்சிக்கவுமில்லை.


சுயமரியாதை இயக்கம் தோன்றிய பின்தான், அதுவும் சமூகத்தில் சரிசமமான பெண்கள் ஆண்களுக்கு எதற்காக அடிமைப்பட்டுக் கிடக்க வேண்டுமென்று கேட்க ஆரம்பித்த பின் தான் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.


42-வருஷங்களாக சுயமரியாதை இயக்கம் மனிதனின் அறிவிற்கேற்ற சுதந்திரத்திற்கேற்ற எல்லா வாய்ப்புகளும் பெண்களுக்கும் இருக்க வேண்டுமென்று பாடுபட்டதன் காரணமாக, பெண்களுக்கு ஆண்களைப் போல் சமுதாயத்தில் எல்லா உரிமைகளும் இன்று வழங்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் அடிமைகளல்ல, ஆண்களைப் போன்று சம உரிமையுடையவர்கள் என்பதை நிலை நிறுத்தவே இம்முறையாகும்.


ஆதிக்கம் பார்ப்பான் கையில் இருந்தாலும் அவன் கையிலிருந்து மாறினாலும் பார்ப்பன அடிமைகளான காங்கிரஸ்காரன் கைக்கு ஆதிக்கம் போனாலும் 10.000 கணக்கான திருமணம் நடைபெற்றாலும் இதுவரை இத்திருமணம் சட்டப்படிச் செல்லுபடியாக்காமலலே இருந்தது. இப்போது பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் சுயமரியாதைக்காரர்களும் திராவிடர் கழக்காரர்களாகவுமிருந்த தமிழர்களுடைய ஆட்சியானது ஏற்பட்டதால் இத்திருமணமனது சட்டப்படிச் செல்லும் என்று சட்டமியற்றியுள்ளதோடு, இதுவரை இம்முறையில் நடைபெற்ற திருமணங்களும் செல்லுபடியாகுமென்று சட்டமியற்றி உள்ளது. சுயமரியாதைக்காரர்களாகிய நமக்கு மகிழ்ச்சியளிக்கக் கூடியதென்பதோடு இதை செய்த இந்த அரசை ஆதரிப்பது உண்மையான சுயமரியாதைக்காரர்களின் கடமையுமாகும்.


பொதுவாகப் பெண்கள் தங்களுக்குத் திருமணமானால் தாங்கள் ஒரு ஜீவன் என்பதையே மறந்திட வேண்டும். சுற்றத்தாரை மறந்துவிட வேண்டும். எது செய்வதானாலும் தன் கணவனைக் கேட்டுச் செய்ய வேண்டும். கணவனின் மனம் கோணாமல் அவன் சொல்படி கேட்டு அவனுக்கு அடிமையாக இருந்து ஏவல் செய்ய வேண்டும். அவன் அடித்தாலும், உதைத்தாலும் பட்டுக் கொண்டு அவனுக்கு அடங்கி நடக்க வேண்டும். எதற்காக ஒரு பெண் தன் சுதந்திரத்தை இழந்து அடிமையாக இருக்க வேண்டும் என்பது பற்றி எவனுமே இதுவரை சிந்திக்கவில்லை என்பதோடு பெண்கள் இப்படி நடந்து கொள்வது தான் அவர்களின் பதிவிரதா தன்மையாகுமென்று எழுதி வைத்து விட்டான். பெண்கள் அறிவற்றவர்களானதால் அவர்களும் இப்படி நடந்து கொள்வது தங்களின் கடமை என்றே கருதி நடந்து வந்தனர்.


முதலாவது இங்குள்ள தோழர்கள் நான் சொல்பவற்றையெல்லாம் நம்ப வேண்டுமென்று சொல்லவில்லை. எத்தனையோ கருத்துகளில் இதுவும் ஒரு கருத்து என்று கருதிச் சிந்தியுங்கள். இதில் ஏற்றுக் கொள்ளத்தக்க கருத்து என்று உங்களுக்குத் தோன்றுவதை ஏற்று நடவுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன். அநேகம் பேருக்கு நான் சொல்வது அதிசயமாக இருக்கலாம். ஆச்சரியமாகவும் இருக்கலாம். கலவரமாகக் கூட தெரியலாம். இறுதி வரை நீங்கள் நம்பி கடைபிடித்து வந்தவைகளுக்கு முரணாக நேர்மாறாக இருக்கலாம். எனக்குத் தோன்றிய கருத்தினைக் கூறுகின்றேன். ஏற்க முடிந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள்.


பெண்களை அடிமைப்படுத்தும் கொடுமை இம்முறையில் ஒழியவில்லையென்றால் திருமணமே சட்டப்படி குற்றமாக்கப்பட வேண்டும். யோக்கியமான முறையிலே உரிமை இல்லை என்றால் சட்ட விரோதமாக்க வேண்டும். உலகிலே இருக்கிற எல்லா ஜீவராசிகளைப் போலவும் தான் மனிதனுமாகும். மற்ற ஜீவராசிகள் எப்படி நடந்து கொள்கின்றனவோ அதுபோன்று தான் மனிதனும் நடந்து கொள்கின்றான். பொதுவாக ஆண் ஜீவன்கள் உணர்ச்சிக்கு ஆளாகும்போது பெண் ஜீவனைக் கொண்டு திணித்துக் கொள்ளுமே தவிர குட்டிப் போட வேண்டுமென்று கருதுவது கிடையாது. ஜீவராசிகளில் அதிகமான அறிவு என்பதான பகுத்தறிவுடைய மனித ஜீவன் மட்டும்தான் பெண்ணைத் தனக்கு அடிமையாக கொண்டிருக்கிறான். மற்ற எந்த ஜீவனும் இதுபோல் பெண் ஜீவனை அடிமையாக்கிக் கொள்வது கிடையாது.


மனிதனுக்கும் கவலை, தொல்லைகளெல்லாம் ஒழிய வேண்டும். கவலையும், தொல்லையுமில்லாமலிருக்கும் போது அறிவில் சிறந்த மனிதன் மட்டும் கவலையும், தொல்லையும் அடைகிறான் என்றால், அதற்குக் காரணமே அவன் அமைத்துக் கொண்ட இந்த வாழ்க்கை முறையேயாகும். குடும்பம், மனைவி, குழந்தை என்று அவன் வாழ்நாள் முழுவதும் இதற்காகவே தொல்லைப்பட வேண்டியவனாகி விடுகின்றான். மிஷினில் கையைக் கொடுப்பது போல முட்டாள்தனத்திலே போய் மாட்டிக் கொள்கிறான். பிறகு தொல்லைக்கு ஆளாகின்றான்.


மனிதன் எந்த ஜீவராசிகளிலும் ஒத்தவனாக இல்லை. ஜீவராசிகளில் சில ஒரு ஆணோடு பெண்ணோடு இருக்கிறது. மற்றவை நேர்ந்தபடி இருக்க வேண்டியதாயிருக்கிறது. ஒரு ஆணோடு பெண்ணோடு இருப்பதும் இருக்கும் வரை தான். ஒன்று பிரிந்தால் மற்றொன்று தானே வேறென்றைத் தேடிக் கூடிக் கொள்கிறது. அதுபோன்று மிருகத்திலும் சில இருக்கின்றன. அந்த முறையில் மனிதனைப் பார்த்தால் அப்படியில்லை. அவனை எதோடு சேர்ப்பது என்றே புரியவில்லை. ஆனதனால் இயற்கைக்குச் சம்பந்தமில்லாத ஒன்றை இவனாகவே ஏற்பாடு செய்து கொண்டு, அதில் மாட்டிக் கொண்டு எண்ணற்றத் தொல்லைகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாகின்றான். இந்தத் தொல்லைகளும், துன்பங்களும் மனிதனுக்கு நீங்க வேண்டுமானால் திருமணத்தையே நிறுத்தி விட வேண்டும். அப்போதுதான் மனிதன் கவலையற்றவனாக இருப்பான்.


தமிழனின் வாழ்வு முறைக்குக் குறள்தான் என்று சொல்வார்கள். நாம் காட்டு மனிதனாக இருந்த வரை குறள் சரி. நாட்டு மனிதனான பின், பெண்களுக்குத் தான் அதில் கற்பு நீதி சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, ஆண்கள் கற்பு நீதி பற்றி அதில் ஒன்றுமில்லை. குறளைத் தூக்கியெறிய வேண்டியது தான். பெண்கள் முன்னேற்றத்திற்கு ஒரு வார்த்தை கூட அதில் இல்லை. குறளில் மட்டுமல்ல, தமிழ் இலக்கியங்கள் யாவுமே பெண்களை அடிமைப்படுத்தக் கூடியதாகவே இருக்கின்றன என்பதை விளக்கும்போது சின்னத்தம்பி அவர்கள் "அய்யா அவர்கள் மன்னிக்க வேண்டும் குறளில் ஆண்களுக்கும் நீதி சொல்லப்பட்டிருக்கிறது. "பிறர் இல் விழையாமை" என்ற ஓர் அதிகாரமே இருக்கிறது. பிறன் மனைவியை நினைப்பது, தீண்டுவது குற்றமென்று வள்ளுவர் ஆண்களுக்கும் சொல்லியிருக்கின்றார்" எனக் குறிப்பிட்டார்.


தந்தை பெரியார் அவர்கள், "அய்யா சொன்னது ரொம்ப சரி. வள்ளுவன் மற்றவன் திருமணமும் செய்து கொண்டுள்ள பெண்களை நினைப்பது, தீண்டுவது குற்றமென்று சொன்னானே தவிர, திருமணமாகாத பெண்களைத் தீண்டுவது குற்றமென்று சொல்லவில்லையே! பெண்கள் அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு, அதாவது ஆண்களைக் கண்டால் பயந்து கொண்டும், வெட்கப்பட்டும், படிக்காத மடைச்சியாகவும், பிறர் கண்டால் அருவருப்பு அடையும்படியும் இருக்க வேண்டுமென்று சொன்னானே தவிர, மனைவி கடவுளைத் தொழவிட்டாலும், கணவனைத் தொழுபவளாக இருக்க வேண்டுமென்று சொன்னானே தவிர, ஆண்கள் தன் மனைவியைத் தொழ வேண்டும். மனைவி சொல்படி கேட்க வேண்டும் என்று சொல்லவில்லையே. அவ்வை பெண்தான். அப்படி இருந்தும், அவளே "தையல் சொல் கேளேல்" 'பெண் சொல்வதைக் கேட்காதே' என்று தான் எழுதி இருக்கிறாள். 


நான் வள்ளுவனைக் குறை கூறுகிறேன் என்று கருத வேண்டாம். அவன் வாழ்ந்த காலம் அப்படிப்பட்டது. மனிதனெல்லாம் காட்டுமிராண்டியாக இருந்த காலம். அப்போதிருந்த நிலைமைக்குத் தக்கபடி அப்போதுள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்றபடி அவன் எழுதி இருக்கின்றான். இது அவன் குற்றமல்ல. அப்போதிருந்த நிலை அப்படிப்பட்டது. அதுவே இன்றைக்கும் என்பது தான் தவறாகும். மனிதன் 2,000-ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இன்றில்லை. தனது வசதிக்கும், வாய்ப்பிற்கும், தேவைக்கும் ஏற்ப உணவு, உடை, உறையுள் மற்ற எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டிருக்கின்றான். இதை மட்டும் மாற்றிக் கொள்ள மாட்டேனென்றால் இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? நீங்கள் நன்றாகச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மனிதன் எதில் மாறாமல் இருக்கின்றான்? நன்றாகச் சிந்தியுங்கள். உங்களுக்கு ஏதாவது தோன்றினால் எடுத்துச் சொல்லுங்கள். மாற்றிக் கொள்ளக் கூடியதாக இருந்தால் எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

மணமக்கள் தங்களின் வாழ்க்கையில் வரவிற்கு மேல் செலவிடக் கூடாது. முட்டாள்தனமாகக் கோயில் - குளங்களுக்குச் செல்லக் கூடாது. கூடுமானவரை குழந்தை பெறுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மிஞ்சினால் ஒன்றிரண்டோடு நிறுத்திக் கொள்வது அவர்களுக்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே நன்மையாகும்.

 ------------------------------02.06.1968-அன்று நடைபெற்ற கொட்டையூர் திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 15.06.1968

30 comments:

தமிழ் ஓவியா said...

14ஆம் தேதி நிகழ்ச்சி ஆதித் தமிழர் பேரவை ஆதரவு


சென்னை,ஏப்.9- வரும் 14ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் தாலி அகற்றம், மாட்டுக்கறி விருந்து நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்து ஆதித் தமிழர் பேரவை சார்பில் கழகத் தலைவருக்கு எழுதப்பட்ட கடிதம் வருமாறு:

எங்கள் இனமான பெரியார் வழித்தோன்றல் மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, ஆதித்தமிழர் பேரவையின் பணிவான வணக்கங்கள்.

தமிழனுக்கு மானத்தையும், அறிவையும் ஊட்டுகின்ற வகையிலே 2000 திராவிடர் எழுச்சி வட்டார மாநாடுகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை அளித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

முத்தாய்ப்பாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் சென்னை பெரியார் திடலில் நடைபெறும் மாட்டுக்கறி விருந்து மற்றும் தாலி அகற்றம் நிகழ்ச்சியில் எங்கள் நிறுவனர் அய்யா இரா. அதியமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஆதித் தமிழர்களும், ஆதித் தமிழச்சிகளும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளோம் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி! வணக்கம்!!

- செங்கை குயிலி

மாநில உதவிப் பொதுச் செயலாளர், ஆதித் தமிழர் பேரவை

Read more: http://viduthalai.in/e-paper/99372.html#ixzz3WoOCyONG

தமிழ் ஓவியா said...

உ.பி. மீரட்டையடுத்து, ராம்பூரில் தாழ்த்தப்பட்டோர் இஸ்லாம் தழுவுகின்றனர்

ராம்பூர்(உபி), ஏப்.10- தலித்துகளின் குடியி ருப்பை இடித்து விட்டு வணிகவளாகமாக்கும் செயலை தேசிய நெடுஞ் சாலைதுறை மேற் கொள்ளவிருக்கிறது, இதற்கு எதிர்ப்பு தெரி வித்து 200-க்கும் மேற்பட் டோர் இஸ்லாம் மதத் திற்கு மாறவுள்ளனர்.

நகரங்களுக்கு அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலை கள் விரிவுபடுத்தப்பட்டு அங்கு வணிக வளாகங் களும், வாகனங்கள் நிறுத் தங்களும் அமைக்கப்படும் என்று தேசிய நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கடந்த மாதம் அறிவித்திருந்தார்.

இதன் ஒரு பகுதியாக பதோனி-ஜவன்பூர் சாலை யில் உள்ள ராம்பூர் என்ற நகராட்சி நகரத்தில் எல்லையில் உள்ள தலித் துகளின் குடியிருப்பை சட்டவிரோத குடியிருப் பாக அறிவித்து, அதை இடிக்கும் நடவடிக்கையில் இறங்கியது.

வால்மிகி சேவா சங்கத்தினர்

அரசின் இந்த நட வடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த வால்மிகி சேவா சங் உறுப்பினர் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது, கடந்த 1980- ஆம் ஆண்டு அரசு நகர தூய்மைப் பணியில் ஈடு பட்டுள்ள எங்களுக்கான குடியிருப்புகளை ஒதுக்கிக் தந்தது, சுமார் 30 ஆண்டு களுக்கு மேல் நாங்கள் இங்கு குடியிருந்து வருகி றோம். நகராட்சி வரி, மின்சாரம் மற்றும் தண் ணீர் வரிகள் அனைத்தும் கட்டியுள்ளோம்.

இந்த நிலையில் அரசு எங்கள் குடியிருப்புகளை சட்ட விரோத குடியிருப்பு என்று கூறி எங்கள் வீடு களை இடிக்க உத்தரவிட் டுள்ளது. மேலும் இந்தப் பகுதியில் தேசிய நெடுஞ் சாலை வரவிருப்பதாலும் வாகன நிறுத்தம் மற்றும் வணிக வளாகங்கள் அமை யப்போவதாக கூறுகின்றனர்.

உயர் ஜாதி தொழிலதிபர்கள்

இது குறித்து மாவட்ட ஆட்சியாளரிடம் மனு கொடுத்த போது அவர் வாங்க மறுத்துவிட்டார். சுமார் 200 குடும்பங்கள் உள்ள எங்களது குடியி ருப்பை சட்டவிரோதம் என்று திடீரென்று எப் படி கூற முடியும்? இத் தனைஆண்டுகளாக எங்களிடம் வரிவாங்கும் போது தெரியவில்லையா? சாலை விரிவாக்கத்திற்கு எங்கள் குடியிருப்புதான் கிடைத்ததா?

பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாலைக்கும் எங்கள் பகுதி குடியிருப்பிற்கும் தொடர்பில்லாத நிலையில் எங்கள் குடியி ருப்பை அகற்ற நினைப் பது சில தனியார் நிறு வனத்தின் அழுத்தத்தில் தான்; மத்திய மாநில அரசு இரண்டுமே இந்த விவகாரத்தில் எங்களுக் குத் துரோகம் செய்து விட்டன.

தொடர்ந்து இங் குள்ள அரசும் சில உயர் ஜாதி தொழிலதிபர்களும் எங்களுக்கு விரோதமா கவே செயல்பட்டு வரு கின்றனர்.

பல ஆண்டு களாக நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த எங்களை விரட்ட நினைக் கிறார்கள். நாங்கள் அனைவரும் ஏழைகளாக இருப்பதால் எங்களின் வாழ்வாதாரத்தை சிதைக்க முயல்கின்றனர் என்று கூறினர். நீதியற்ற அரசின் போக்கை எதிர்த்து அம் பேத்கர் ஜெயந்தி அன்று நாங்கள் அனைவரும் இஸ்லாம் மதத்தைத் தழுவ உள்ளோம், என்று கூறினார்.

திங்கள் கிழமை முதல் குடியிருப்பில் உள்ள அனைவரும் நகரில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் உண்ணா விரதமிருக்க உள்ளனர்.

மீரட்டில் கடந்த மாதம் தலித்துகளை ஆலயம் நுழைய அனுமதிக்காத தால் 300தலித் குடும்பங் கள் இஸ்லாத்திற்கு மாறி னார்கள். இதனை அடுத்து இரண்டாவது பெரிய மதமாற்ற நிகழ் வாக இது பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த மாநில அரசும் மத்திய நெடுஞ் சாலை துறை அதிகாரி களும் எந்த கருத்தும் கூற மறுத்து விட்டனர்.

Read more: http://viduthalai.in/e-paper/99445.html#ixzz3WzC8Otio

தமிழ் ஓவியா said...

முரளி மனோகர் ஜோஷியை காணவில்லை என்ற சுவரொட்டியால் பரபரப்பு

கான்பூர், ஏப்.10 பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் முரளி மனோகர் ஜோஷி. இவர் உ.பி.யில் உள்ள கான்பூர் தொகுதி யில் இருந்து எம்.பி.ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை காணவில்லை என்று அங்கு வீதியெங் கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. கான்பூர் பகுதி பா.ஜனதா பிரிவு சார்பில் ஒட்டப் பட்ட இந்த சுவரொட்டி களில், முரளி மனோகர் ஜோஷியை கண்டுபிடித் துக் கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்றும் அச்சடிக்கப்பட்டிருந்தது. ஜோஷி, வரும் 18 ஆம் தேதி தனது தொகுதியில் சுற்றுப்பயணம் மேற் கொள்ள திட்டமிட் டுள்ள நிலையில், இவ் வாறு ஒட்டி அவரை அவமதிக்கும் செயலுக்குக் கட்சியின் கான்பூர் பிரிவு தலைவர் சுரேந்திர மைதானி கண்டனம் தெரி வித்துள்ளார். இந்த சுவ ரொட்டிகளுக்கும் தங்க ளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், பா.ஜனதா கட்சியில் உள்ள எதிர்ப்பு கோஷ்டி யினர் செய்த சதி என்றும் அவர் தெரிவித்தார்.

Read more: http://viduthalai.in/e-paper/99444.html#ixzz3WzCVL1Lc

தமிழ் ஓவியா said...

அண்ணா நூலகத்திலும் அரசியலா?

அண்ணா நூற்றாண்டையொட்டி சென்னை கோட்டூர்புரத்தில் தி.மு.க ஆட்சியில் ஆசியாவிலேயே சிறந்த நூலகம் ஒன்று ரூ.180 கோடி செலவில் 8 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டது. அன்றைய முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அண்ணா பிறந்த நாளிலேயே திறந்து வைத்தார் (15.9.2010).

12 லட்சம் நூல்கள் இடம் பெறக் கூடிய வசதியோடு இந்த நூலகம் உருவாக்கப்பட்டது. அன்றைய கல்வி அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் ஒவ்வொரு நாளும் அங்கு சென்று பார்த்துப் பார்த்து உருவாக்கினார் என்று கூடச் சொல்லலாம்.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களும் அமைச்சரோடு ஆக்க ரீதியாகக் கலந்து பேசியதுண்டு பலமுறை நேரில் சென்று பார்த்ததும் உண்டு.

3 லட்சத்து 33 ஆயிரம் சதுர அடி கொண்ட அந்நூலகம் நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப் பட்டது. தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் அறிவுச் சோலையாக மணம் வீசியது.

சிறுவர்கள் அமர்ந்து படிப்பதற்கான சூழலும் உருவாக்கப்பட்டது. அய்.ஏ.எஸ். தேர்வுக்குத் தயா ராகும் மாணவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது. வெளியிலிருந்து நூல்களை எடுத்து வந்து படிப் போருக்கும் தனிப் பகுதி ஒதுக்கப்பட்டு இருந்தது.

அண்ணா பெயரில் உள்ள ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தையே சிதைக்க விரும்பியது என்றால் யாராவது நம்புவார்களா?

ஆனாலும், நம்பும்படியாக அவசர அவசரமாக வேலை நடந்தது. அந்த நூலகத்தைக் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றிட அ.இ.அ.தி.மு.க. அரசு துடித்தது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.அய் வளாகத்துக்கு மாற்றிட முடிவு செய்யப்பட்டது.

கட்சிக்கு அப்பாற்பட்ட முறையில் பொது மக்கள் பெரும் அதிர்ச் சிக்கு ஆளாயினர்; கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், நூலக விரும்பிகள் நொந்து போனார்கள்.

அ.இ.அ.தி.மு.க. அரசின் இந்த முடிவை எதிர்த்து பொது நல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. மனித உரிமை ஆர்வலர்களான வழக்குரைஞர் பி. புகழேந்தி வழக்குரைஞர் பிரபாகரன் ஆகியோர் தனித் தனியாக பொது நல வழக்கினைத் தொடர்ந்தனர்.

சென்னை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு இடைக்கால தடையை வழங்கி நல்லோர் நெஞ்சில் எல்லாம் பாலை வார்த்தது.

நீதிமன்றம் தடை விதித்த நிலையில், நூலகக் கட்டடத்தைப் பாழ்படுத்த வேண்டாமா? என்ன செய்தது அஇஅதிமுக ஆட்சி?

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கெல்லாம் கொடுக்க ஆரம்பித்தது. அதற்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. திருமண நிகழ்ச்சி களுக்கு முன் பணம் வாங்கப்பட்டு இருந்தால், அது திருப்பித் தரப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஓர் ஆட்சி இந்த நிலைக்கு ஆளானது எல்லாம் ஆட்சிக்குப் பெருமை சேர்க்கக் கூடியதுதானா?

நூலகம் சரிவரப் பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாற்று பொது மக்கள் மத்தியில் எழுந்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த அதிகாரியும் ஆய்வுக்கு வரவில்லை என்றால் இந்த அரசு அண்ணா பெயரில் அமைந்த நூலகத்தை எந்தப் பார்வையில் பார்த்தது என்பது சொல்லாமலே விளங்கும்.

நாள் ஒன்றுக்கு 2000 வாசிப்பாளர்கள் வந்த இடத்தில் இப்பொழுது மிகப் பெரிய சரிவுக்கு ஆளாகி விட்டது.

இந்த நிலையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் இன்று நடைபெறுகிறது. அண்ணாவின் பெயரில் அமைந்த நூலகத்தை சீரமைக்க வேண்டும் என்பது தான் இந்தப் போராட்டத்தின் நோக்கமாகும்.

தி.மு.க. முன்னின்று இந்தப் போராட்டத்தை நடத்தினாலும், இதில் பொது மக்களின் உணர்வும் அடங்கியுள்ளது என்பதுதான் உண்மை.

தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற நாட்டு மக்களுக் கான நற்பணிகள் எல்லாம், அதனைத் தொடர்ந்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் சிதைக்கப்படுகின்றன - இது ஓர் ஆரோக்கியமான நிலையல்ல; ஓர் ஆட்சி போய் மற்றொரு ஆட்சி வருவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். நிர்வாகம் என்பது தொடர்ச்சி யாக அமைய வேண்டிய ஒன்று என்பதும் பால பாடமே!

ஆனால், இந்த அரசியல் ஜனநாயக நடைமுறை என்பது எல்லாம் அ.இ.அ.தி.மு.க.வுக்கு என்ன என்றே தெரியாது. அது தெரிந்து வைத்துள்ளதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்வே - அப்பட்டமான காழ்ப் புணர்வே!

ஊடகங்கள்கூட இது குறித்தெல்லாம் வாய்த் திறக்காதது வருந்தத்தக்கது.

இந்தப் போக்கை ஊடகங்கள் மேற் கொண்டால் ஊடகங்களின் மீதான பொது மரியாதையும் நம்பிக்கையும் கீழே போய்விடும் என்பதை மறந்து விடக் கூடாது.

எழுத்தாளர்களும், கல்வியாளர்களும் ஒன்று சேர்ந்து கூட பொதுவான அறிக்கைகளை வெளியிட லாம். அறிவை நேசிப்போம் - அழுக்காறைத் தூஷிப்போம்!

தமிழ் ஓவியா said...

நம் உரிமையை பறிக்க எவருக்கும் உரிமையில்லை
- குடந்தை கருணா

இந்திய நாட்டின் சூத்திர, பஞ்சம மக்களின் பெருவாரியான வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்துள்ள மோடி தலைமையிலான மத்திய அரசின் உள்துறை அமைச்சர், நாட்டில் பல்வேறு மாநிலங் களில் நிகழும் வன்முறைகள், அதன் காரணமாக ஏற்பட்டுவரும் மனித பலிகள், மராட்டிய மாநிலத்தில் விவசாயிகளின் தற்கொலைகள் இவற்றை பற்றியெல்லாம் மாநிலங் களோடு பேசி, தீர்வு காண்பதை விட்டு, நாட்டின் எல்லையோரத்தில் நின்று கொண்டு, பக்கத்து நாடான பங்களா தேஷ்க்கு மாடுகளை அனுப்பிவிடா தீர்கள் என்கிறார்; அனைத்து மாநில அரசும், பசுவதைத் தடை சட்டம் நிறைவேற்ற மத்திய அரசு வலியுறுத்தும் என்கிறார்.

அப்படி என்ன இதில் அவ்வளவு அக்கறை?

கேட்டால், பசு புனித மானது என்கிறது சங் பரிவார். வேத காலத்தில், பசுவை கொன்று யாகம் செய்தீர்களே என்று கேட்டால், அது அப்போ, இது இப்போ என வடிவேலு வசனம் பேசுகிறார்கள்.

பசு புனிதம்; மற்ற விலங்குகள் கொல்லப்பட்டால் பரவாயில் லையா? அவைகளால் எந்த நன்மையும் இல்லையா என்றால், அதற்கு பதிலைக் காணோம். காலங்காலமாக, மாடுகளை வளர்த்தும், வயல்களில் பயன்படுத்தியும், வணங்கியும், அவைகளுக்கு விழா எடுத்தும் இயற்கை வாழ்வு வாழ்ந்து வந்த இந்த திராவிட பெருங்குடி மக்களுக்கு, அந்த மாடுகளின் இறைச்சியும் உணவாக காலந்தொட்டு இருந்துதானே வருகிறது.

இதிலே, சம்பந்தமில்லாமல், மூன்று சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் உள்ளே நுழைந்து, இது புனிதம் அதை தொடாதே, சாப்பிடாதே என்றால், அதை ஏன் மீதம் உள்ள 97 விழுக்காடு மக்கள் ஏற்க வேண்டும்.

இப்படித்தானே, இந்த சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வியைக் கொடுக்காதே என்று இந்த மூன்று சதவிகித பார்ப்பனர்கள் சட்டம் தயாரித்து, மன்னர்கள் துணையுடன் ஆயிரம் ஆண்டுகளாக நிறைவேற்றி வந்தனர். அதே சட்டத்தின் துணை யுடன், பஞ்சம மக்களை தொடக் கூடாது, பார்க்கக்கூடாது என ஆக்கி வைத்தனர்.

குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பெண்கள் மார்பு சீலை அணியக் கூடாது என்று சொன்னதும் இவர்கள் தானே; நம்மை கோயிலைக் கட்ட வைத்து, அதிலே நம்மை வெளியே நிறுத்தி, நம் இனப் பெண்களை நடனம் ஆட விட்டு ரசித்து, பின்பு அவர்களை கேவலப்படுத்தியதும் இந்த கூட்டம் தானே. மன்னர் ஆட்சி ஒழிந்து மக்கள் ஆட்சி வந்தாலும், ஆட்சியில் நமக்கான உரிமை என்கிற நமது குரலை நசுக் குவதும் இந்தக் கூட்டம் தானே.

அன்று மனுவின் பெயரால், ஆட்சியாளர்களை வளைத்துப்போட்டு, பெரும்பான்மை மக்களான சூத்திர, பஞ்சம மக்களின் உரிமையை நசுக்கிய, கல்வி உரிமையை மறுத்த அதே மூன்று விழுக்காடு பார்ப்பனர் கூட்டம்தான், இன்று மத்தியில் தங்களின் ஆட்சி வந்துவிட்ட தைரியத்தில் நாம் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்று சட்டம் போடத் துணிகிறது. நாம் என்ன மொழி பயில வேண்டும் என அதிகாரம் செய்கிறது. என்ன எழுத வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

பெரும்பான்மை மக்களாகிய நாம், எல்லோருமே, தினமும் மாட்டுக்கறியும், ஆட்டுக்கறியும், மீனும் சாப்பிடுவ தில்லை; பலர் சாப்பிடுகிறார்கள்; இன்னும் சொல்லப்போனால், இவற்றை சாப்பிடாமல் வாழக்கூடியவர்கள் நம்மில் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அதுவல்ல பிரச்சினை;

மகாராட்டிர மாநிலத்தில் பார்ப் பனர் முதல்வராக வந்தவுடன், மாட் டுக்கறி சாப்பிடக்கூடாது என சட்டம் கொண்டு வருகிறார். இந்தியாவிலேயே, வேறு எந்த மாநிலத்திலும், வலுவான எதிர்ப்புக் குரல் இல்லை; தமிழ் நாட்டில், ஒரு தொலைக்காட்சியில் தாலி குறித்து விவாதம் நடத்த முடிவு செய்தால், அதனை எதிர்த்து வன் முறை செய்கிறார்கள். பெரியார் பிறந்த மண்ணில், கருத்துச் சுதந்திரம் தடை செய்வதை அனுமதிக்கக்கூடாது எனும் நோக்கில், திராவிடர் கழகம், தாலி அகற்றல் மற்றும் மாட்டுக்கறி உண்ணும் விழாவை ஏற்பாடு செய்கிறது.

தமிழ் ஓவியா said...


இதற்குப் பார்ப்பனர்கள் கோபம் கொள்வதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சில சூத்திரர்களும் அவர்களோடு சேர்ந்து ஆத்திரப்படுவதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

மக்களாட்சி நடைபெறும் இந்தக் காலகட்டத்திலும், மிகச் சொற்பமாக இருக்கக்கூடிய பார்ப்பனர் கூட்டம், பெரும்பான்மை மக்களின் ஒவ்வொரு உரிமையையும் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை தோலுரிக்கவே, திராவிடர் கழகம் இந்த நிகழ்வை நடத்துகிறது.

பார்ப்பனர்களின் இந்த முயற்சியை நாம் முறியடிக்காவிட்டால், பிறகு, நான் வெங்காயம், பூண்டு சாப்பிடுவதில்லை; ஆகவே, நீங்கள் அனைவரும் சாப்பிடக் கூடாது என்பார்கள். நாம் இந்த நாளில் எந்த உடை அணிய வேண்டும் என்று சொல்வார்கள்.

நம் பிள்ளைகள் என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று சொல் வார்கள். அவற்றிற்கும் ஆயிரம் விளக்க மும் அவர்களால் சொல்ல முடியும்.

மிக நெடிய போராட்டத்தின் மூலம்தான், சூத்திர, பஞ்சம மக்களாகிய நாம் சில உரிமைகளை பெற்றிருக்கி றோம். குறிப்பாக தமிழ் நாட்டில், பெரியார் ஏற்படுத்திய தாக்கத்தால், இந்த விழிப்புணர்வு இருக்கிறது.

ஏப்ரல் 14 அன்று பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்வு, வெறும் உணவு உண்ணும் நிகழ்வு அல்ல; நம் உரிமையை பறிக்க எவனுக்கும் உரிமையில்லை என உரக்கச் சொல்லும் நிகழ்வு.

நீங்கள் சாப்பிடுகிறீர்களோ, இல் லையோ, நிகழ்வில் கலந்து கொண்டு, உங்களை அடையாளம் காட்டிக் கொள்ளுங்கள்.

Read more: http://viduthalai.in/page-2/99433.html#ixzz3WzDKDHcA

தமிழ் ஓவியா said...

முக்கியம்


தைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப் பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.
(விடுதலை, 22.11.1964)

Read more: http://viduthalai.in/page-2/99426.html#ixzz3WzDo5CbQ

தமிழ் ஓவியா said...

நாத்திகம் பற்றி வெளிநாட்டு அறிஞர்கள்

நாத்திகன் வாழ்க்கையை நடத்த குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் தெரியாதவன். கண்ணுக்குப் புலப்படாத வருவாய் இல்லாதவன்.
(ஜான் புச்சன், ஸ்காட்லாந்து வரலாற்று ஆசிரியர்)

நான் ஒரு நாத்திகன் பல அறிவிலிகள் கண்மூடித் தனமாக நம்புவதை நானும் நம்புவதாக நடிக்கமாட்டேன்.
(க்ளாரென்ஸ்டாரோ, வழக்கறிஞர்)

ஆண்களைக் கவரும் அழகை இழந்த பெண் முதுமையில் கடவுள் பக்கம் திரும்புகிறாள்
(பால்காக், ஃப்ரெஞ்சு நாவலாசிரியர்)

தோல்வி ஏற்படும் போது கடவுள் பெயரைச் சொல்லாதே, வெற்றி ஏற்படும் நேரம் பார்த்துச் செயலாற்று.
(ஆம்ப் ரோஸ் பியர்ஸ், அமெரிக்க எழுத்தாளர்)

கல்லினாலும் மரத்தினாலும் ஆண், பெண் கடவுள் களைப் படைப்பதால் எந்தப் பயனும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
(ஜான் பில்லிங்ஸ் என்ற புனைப் பெயர் கொண்ட என்றி வீலர் ஷா என்னும் அமெரிக்க நகைச்சுவை எழுத்தாளர்)

கடவுள் என்பது அகராதியில் கடவு(வழி) என்னும் சொல்லுக்கு அடுத்து உள்ளது
(சாமுவேல் பட்லர், ஆங்கில நாவலாசிரியர்)

மருத்துவர் நோயை குணப்படுத்துகிறார். நன்றி ஆண்டவனைச் சேருகிறது.
(ஃப்ரங்களின், அமெரிக்க விஞ்ஞானி)

இருப்பவையெல்லாம் கடவுள் அல்ல. இல்லாத ஒன்றே கடவுள்
(கூர்மான்ட், ஃப்ரெஞ்சு தத்துவ நூலாசிரியர்)


Read more: http://viduthalai.in/page-7/99462.html#ixzz3WzE8fuv8

தமிழ் ஓவியா said...

பார்ப்பனர் பற்றி வேதநாயகம்!

ஒருநாள் இரண்டு பிராமணர்கள் மிஞ்சின போஜனம் அருந்தினதால் கீழே குனியக்கூட முடியாமல் அண் ணாந்து கொண்டு மேல்நோக்கின பார்வையாய்த் தெருவில் போகும் போது,

அவர்களில் ஒருவனுக்குக் காலில் மிதியடியிருக்கிறதா இல்லையா வென்கிற சந்தேகமுண்டாகி மற்றொரு வனை நோக்கி தம்பி, சுப்பு! என் காலில் மிதியடியிருக்கிறதா பார் என்றானாம் அந்த பிராமணனும் குனியமுடியாமல் அண்ணாந்து கொண்டு போனதால் அண்ணா! ஆகாச மண்டலம் வரையிலும் பார்த்தேன்; மிதியடியைக் காணோம் என்றானாம்,

- மாயூரம் ச.வேதநாயகம் எழுதிய சுகுண சுந்தரி (சமூக நாவல்)
தகவல்: ஆ.கணேசன், சென்னை -21

Read more: http://viduthalai.in/page-7/99462.html#ixzz3WzEFbWDn

தமிழ் ஓவியா said...

மோட்சம் வேண்டுமா?

இளம் பெண்களை விதவைகளாக வைத்திருப்பதைத் தடுக்க பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் ஆகிய மூன்று கடவுளர்களாலுமே முடியாது. தங்கள் தங்கள் மனைவியர் இருக்க, பிறர் மனைவியர் - பெண்களுக்குப் பின்னால் அலைந்து திரியும் அந்தத் தெய்வங்கள் எந்த முகத்தைக் கொண்டு தடுக்க முடியும்?

இளம்பெண்களை விதவைகளாக வைத்திருப்பதின் தவிர்க்க முடியாத விளைவு கர்ப்பச்சிதைவு - ஏனெனில் மறுமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று வளர்க்கத்தான் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லையே! இந்தப் பயத்தினால், பிராமணர்களும், சத்திரியர்களும் சேர்ந்து தங்கள் உயர்வுத் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் புதுவழியை கண்டுபிடித்தார்கள்.

அதுதான் கணவனை இழந்த பெண்களை உயிரோடு கொளுத்துவதை அவர்கள் மகாபாவம் என்று கருதவில்லை. பெரிய புண்ணியம் என்று கருதினார்கள். வருடந்தோறும் ஆயிரக்கணக்கான யுவதிகளை நெருப்பிலே போட்டுப் பொசுக்குவதைக் கண்டு மனமிளகாத தெய்வங்கள்,

அவற்றின் உருவங்களைப் போலவே உண்மையிலேயே கற்கள்தானா? அல்லது இல்லவே இல்லையா? பெண்கள் தங்கள் மனப்பூர்வமாகவே சதியாகிவிடுகிறார்கள் என்று இந்தப் பார்ப்பனர்கள் சொல்கிறார்கள் அயோக்கியர்கள்! சூழ்ச்சிக்கார நாரதர்கள்! ஏன் இவ்வளவு பொய்யைச் சொல்ல வேண்டும்? அரசர்களின் அந்தப்புரங்களிலே.

ஒரே ஒரு முறை தவிர அவன் முகத்தையும் பார்த்து அறியாத ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் ஆயுள் முழுவதும் கைதிபோல் வைத்திருக்கும் அந்த நரப்பிசாசுகளிடம் அன்பு செலுத்துகிறார்களா? அவனிடத்திலே காதல் கொண்டு அவன் பிரிவைத் தாங்க முடியாமல் நெருப்பிலே குதிக்கிறார்களா? சூழ்ச்சிக்காரப் புரோகிதர்களே! நீங்கள் நாசமாக போவீர்கள்! இது தற்கொலைத் தர்மமா?

பிரயாகையிலே ஆலமரத்திலிருந்து யமுனையில் குதித்து இறந்தால் சுவர்க்கத்திற்குப் போகலாம் என்று உபதேசம் செய்திருக்கிறீர்களே. அதைக் கேட்டு வருடந்தோறும் ஆயிரக்கணக்கான பயித்தியங்கள் ஆற்றிலே விழுந்து சாகின்றனவே:

கேதாரநாத்தின் உச்சியிலிருந்து பனிப்படலத் திலே வீழ்ந்து மடிவதும் மோட்சத்திற்கு வழியென்று உபதேசித்து, வருடந்தோறும் நூற்றுக்கணக் கானவர்களைக் கொல்லுகிறீர்களே இதெல்லாம் தர்மமா? - வால்காவிலிருந்து கங்கை வரை நூலில் பக்கம் 342 - 343.

Read more: http://viduthalai.in/page-7/99466.html#ixzz3WzEM1Vg7

தமிழ் ஓவியா said...

பிராமணர்களின் உதடுகளில் உலாவுவது என்ன?

நமது நாட்டில் எவனாவது கீழ்ச் சாதியிற் பிறந்தவனாக இருப்பானாகில் அவனுக்கு மேற்கதி கிடையாது. (ஏன்? இக் கொடுமையென்ன?) இந்நாட்டில் (அமெரிக்காவில்) ஒவ்வொருவனுக்கும், உயருவதற்கு வழியும், சந்தர்ப்பமும், நம்பிக்கையுமிருக்கின்றன.

இன்று ஒருவன் எளியவனாகக் காணப்படுகின்றான். நாளை அவன் செல்வனும், கற்றறி வாளனும், மதிப்புடையோனுமாகக் கூடும். இங்கு ஒவ்வொரு வரும் ஏழைகளுக்கு உதவக் கவலையுடையவர்களாக விருக்கின்றனர்.

நாம் எல்லோரும் ஏழைகள் என்ற பேரிரைச்சல் இந்தியாவெங்கும் முழங்குகின்றதே. ஆனால், ஏழைகளின் நன்மைக்காக எத்தனை தரும மடங்களிருக்கின்றன? இந்தியாவிலுள்ள லட்சக்கணக்கான ஏழைகளின் துன்ப துயரத்திற்காக எத்தனை பேர் உண்மையாகக் கண்ணீர் வடிக்கின்றனர்? நாமும் மனிதர்களா?

அவர்களுடைய முன்னேற்றத்திற்காகவும் ஜீவனத்திற்காகவும் நாம் என்ன செய்கின்றோம், நாம் அவர்களைத் தீண்டுவதில்லையே! அவர்களை நாம் நெருங்குவதில்லையே! நாம் மனிதர்களா? அந்த ஆயிரக்கணக்கான பிராமணர்கள், அவர்கள் இந்தி யாவில் அதோகதியடைந்திருக்கும் எளிய ஜனங்களுக்காக என்ன செய்கிறார்கள்?

தீண்டாதே தீண்டாதே என்ற ஒரே மொழியன்றோ அவர்களுடைய உதடுகளில் சதா உலவு கின்றது? நமது ஸநாதன மதம் அவர்களுடைய கையிலகப் பட்டுக் கொண்டு எவ்வளவு இழிவுற்றுப் பங்கமடைந்து விட்டது? நமது மதம் இப்பொழுது எந்நிலையிற் கிடக் கின்றது? அது இப்பொழுது தீண்டாதே மதத்தில்தான் புரள்கின்றது; மற்றெங்குமன்று....

அன்பும் நல்லெண்ணமுமடைய உங்கள்

விவேகாநந்தா

(சுவாமி விவேகாநந்தரின் கடிதங்கள் முதற்பாகம், பக்கம் 112, ராமகிருஷ்ண மடம், சென்னை)

- குன்றவாணன் குறிப்பு: தோழர் குன்றவாணன் இதன் நகலை ஞானபூமிக்கும் அனுப்பி உள்ளார்.

Read more: http://viduthalai.in/page-7/99468.html#ixzz3WzEUDx2Y

தமிழ் ஓவியா said...

யாகம் செய்தால் மழை வருமா?

மழை வேண்டி நடத்தப்படும் யாகங்களுக்கு அறிவியல் பூர்வ அடிப்படை இருக்கிறதா என்று, ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரைச் சேர்ந்த விர்ஸ்தி விஞ்ஞான் மண்டலைச் சேர்ந்த எச்.பி.சர்மா இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

யாகத்தில் சில வகையான மரச்சுள்ளிகளையும், பிற பொருள்களையும் ஹோமத்தில் சேர்த்து எரிப்பதால் வெளியாகும் வாயு மற்றும் சாம்பல் ஆகியவற்றின் காரணமாக ஈரத்தன்மையுடைய நீர்த் துகள்கள் விண்ணில் ஏற்படலாம் என்ற அனுமானத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மதுரா நகரில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட பகுதியில் மேகங்கள் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரத்திற்குள் சேர வேண்டும்.

மேகம் திரளத் தொடங்கியதிலிருந்து மூன்று நாட்களுள் சில சென்டிமீட்டர்களாவது மழை பெய்ய வேண்டும். யாகம் முடிந்த ஓரிரு நாள்களுக்குப் பின்னர் கூட மேகம் திரளலாம். இந்த ஆராய்ச்சிக்கான இலக்கு 10 மைல் சுற்றளவாய் இருந்தது. பத்து மைல்களுக்கு அப்பாலும் மழையின் அளவைக் கணக்கிட்ட இந்திய வானியல் ஆராய்ச்சி நிலையத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சீதோஷ்ண நிலை, ஈரப்பதம், வானத்தின் நிலை போன்ற வானியல் அளவு கோல்கள் அவ்வப்போது அளவிடப்பட்டன. ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட பகுதிக்கருகில் காலை ஆறு மணியி லிருந்து இரவு ஏழு மணி வரை, குழுமிய நீர்த்துகள்கள் போன்றவற்றின் விவரங்களும் சேகரிக்கப்பட்டன.

எனினும் இந்த ஆராய்ச்சியின் போது அப்பகுதியில் எந்த வித மேகக் கூட்டமும் திரளவில்லை என்று செயற்கைக் கோள் அறிக் கைகள் தெரிவிக்கின்றன. மழை பெய்வதற்கான சாதகமான ஈரப்பதத்தின் அளவு கூட அதிகரிக்கவில்லை. தினமணி, 6.6.1988

Read more: http://viduthalai.in/page-7/99466.html#ixzz3WzEbH5VW

தமிழ் ஓவியா said...

கற்பனையே!

இராமாயணமும், பாரதமும் கற்பனையே, என்று பார்ப்பன ஏடு ஆனந்தவிகடன் கூறுகிறது. பாண்டவர் களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே குருஷேத்திரத்தில் ஒரு பிரமாண்டமான போர் நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இந்தியத் தொல்பொருள் ஆராய்ச்சியின் பின்னணியில் பார்த்தால் அந்த மகாபாரத யுத்தத்தை உண்மையான சரித்திர சம்பவமாகக் கருத முடியாது.

அப்படி ஒரு யுத்தம் நடந்ததற்கான ஆதாரம் ஒன்றுமில்லை! கி.மு. 1100க்கு முன்பு இரும்பு என்றால் என்னவென்று தெரியாத நிலை. போர்க்கருவிகள் பற்றிக் குறிப்புகள் வருகின்றன.

இராமாயணமும் மகாபாரதமும் இரண்டிலும் அவ்வப்போது பல சமஸ்தான கவிஞர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டிப் பலவற்றைப் புகுத்தி யிருக்கிறார்கள். இப்போதுள்ள பதிப்புகள் கி.பி.4 அல்லது 5ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையே

ஆதாரம்: 12.10.75 ஆனந்த விகடன் (மெயில் செய்தி)

Read more: http://viduthalai.in/page-7/99468.html#ixzz3WzEhVOV2

தமிழ் ஓவியா said...

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல்
தாலி அகற்றும் நிகழ்ச்சி, மாட்டிறைச்சி விருந்தில் பங்கேற்போர் பட்டியல்
தமிழர் தலைவர் முன்னிலையில் கழக மகளிர் உற்சாகப் பெருவெளளம்

சென்னை, ஏப்.10_ தமி ழர் தலைவர் ஆசிரியர் அறிவிப்பிற்கிணங்க 14.4.2015 அன்று சென்னை பெரியார் திட லில் மகளிரை அடி மைப்படுத்தும் சின்ன மாக உள்ள தாலி அகற் றிக் கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் மாட்டிறைச்சி விருந்து விழாவாக சிறப் பாக நடத்த முழு ஒத் துழைப்பு வழங்குவதாக சென்னை மண்டலம் மற்றும் பல்வேறு மாவட் டங்களின் சார்பில் மக ளிரணி,

மகளிர் பாசறை யினரின் கலந்துரையாட லில் உற்சாகத்துடன் கழக மகளிரணித் தோழி யர்கள் கூறினார்கள்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறைத் தோழி யர்களின் கலந்துரை யாடல் நிகழ்ச்சி நேற்று (9.4.2015) மாலை பெரி யார் திடலில் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடை பெற்றது.

கடவுள் மறுப்பு

சென்னை மண்டல மாணவரணிச் செயலா ளர் பா.மணியம்மை கட வுள் மறுப்பு கூறினார்.

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தஞ்சையில் மகளிரணிக் கலந்துரையாடல் கூட் டத் தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு தக வல்களை எடுத்துரைத் தார்.

தமிழர் தலைவர் கருத்துரை

தலைமை ஏற்று சிறப் புரை ஆற்றும்போது தமிழர் தலைவர் தம் உரையில் குறிப்பிட்ட தாவது:

பெண்ணடிமைச் சின்னமான தாலியை அகற்றிக் கொள்வது மற்றும் மாட்டிறைச்சி விருந்து நடத்துவது என் கிற நம்முடைய அறி விப்பு வழக்கம்போல நடைபெறுவதுதான் இருந்தாலும், சாதாரண மாக நடைபெறுவதாக இருந்ததை,

எதிரிகள் நன்றாக விளம்பரப் படுத்தி சிறப்பான நிகழ்ச் சியாக நடத்தப்படும் அளவில் உலக அளவில், இணையதளங்களில் என்று எல்லோரும், எல்லா இடத்திலும் பேசக்கூடிய அளவில் இப்போதே நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

மீண்டும் ஒரு இராவணலீலா

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங் கேற்றவர்களின் குடும் பத்தினரை அன்னை மணி யம்மையார் அவர்கள் நேரில் சென்று சந்தித் தார்கள். அவர்களுடன் சென்றிருந்தோம். அம்மை யாருடைய துணிச்சல் கழக மகளிர் அத் துணை பேருக்கும் இருக்க வேண்டும்.

இதனையடுத்து மீண் டும் ஒரு இராவணலீலா நடத்தக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 14 அன்று நிகழ்ச்சியை கழக மகளிரணி, மகளிர் பாசறைத் தோழியர்கள் சிறப்பாக நடத்தவேண் டும். தஞ்சாவூரில் நடை பெற்ற மகளிரணி, மக ளிர் பாசறைக் கலந் துரையாடலில் கழகத் தோழியர்களில் பலரும் நாங்கள் தாலி கட்டா மல் திருமணம் செய்து கொண்டோம்.

இன்னும் பலர் திருமணத்துக்குப் பிறகு தாலியை அகற்றி விட்டோம். நாங்கள் இப்போது நடக்கும் விழாவில் என்ன செய் வது என்று கேட்டார் கள். ஆகவே, மூன்று வகையான கழக மகளி ரின் அணிவகுப்பாக அன்றைய தினம் நடை பெறும். திருமணம செய்தபோதே தாலி அணியாதவர்கள்,

திரு மணத்துக்குப் பிறகு ஏற்கெனவே தாலியை அகற்றிக்கொண்டவர்கள், இப்போது நடைபெறக் கூடிய நிகழ்ச்சியில் தாலியை அகற்றிக் கொள்பவர்கள் என்று 3 வகையினர் அணிவகுப் பாக பங்கேற்க வேண் டும் என்று கூறியுள் ளேன். அதன்படி மகளி ரணி மற்றும் மகளிர் பாசறைத் தோழியர்கள் அதற்காக சிறப்பாக நடத்த முன்வாருங்கள்.

_இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் உரையின்போது குறிப்பிட்டார்கள்.

பங்கேற்றவர்கள்

பிரச்சாரச் செயலா ளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, சென்னை மண்டல மகளிர் அணி உமா செல்வராசு, கலைத்துறை செ.கனகா, சி.வெற்றிச் செல்வி, கு.தங்கமணி, யாழ்மொழி, வழக்குரை ஞர்கள் வீரமர்த்தினி, அருள்மொழி, தங்க.தன லட்சுமி,

சுமதி கணே சன், மீனாட்சி, பசும் பொன், இறைவி, ஓவியா, மோகனப்ரியா, மு.சந் திரா, மு.தமிழ்ச்செல்வி, சாமுண்டீசுவரி, லதா, இந்திரா, செல்வி, ரோஸ் குழந்தை தெரேஸ், முகப் பேர் சாந்தி, வித்யா, குடியாத்தம் தேன்மொழி, ச.ஈசுவரி, ச.ரேவதி, பெரம்பூர் ரமணி, நதியா, கூடுவாஞ்சேரி நூர்ஜகான்,

கலந்துரையாடலில் பங்கேற்ற மகளிர் அணியினர் மற்றும் மகளிர் பாசறையைச் சேர்ந்தவர்கள்

தாம்பரம் மு.நாகவல்லி, தென் சென்னை சண்முக லட் சுமி, வளர்மதி, மு. பவானி, ப.கலைமதி, பி. பவானி, ராணி, சி. ஜெயந்தி, ப.சோபனா, பூவை செல்வி, க.வனிதா உள்பட ஏராளமான வர்கள் தென்சென்னை, வடசென்னை, ஆவடி, தாம்பரம் கழக மாவட்டங்களிலிருந்து கலந்து கொண்டனர்.

தமிழர் தலைவர் அவர்கள் அறிவித்துள் ளபடி தாலி அகற்றிக் கொள்ளும் விழாவில் பங்கேற்கும் மகளிர் பட்டியலை அளிப்பது என்றும், தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி மற்றும் மாட்டிறைச்சி விருந்து ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் சிறப் பாக பெருமளவில் மக ளிர் தோழியர்களுடன் பங்கேற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

Read more: http://viduthalai.in/page-8/99478.html#ixzz3WzFDAfxA

தமிழ் ஓவியா said...

மாட்டிறைச்சிக்குத் தடையா!
பெங்களூரில் போராட்டம் பிரியாணி விருந்தும் நடைபெற்றது

பெங்களூரு, ஏப்.11_ டவுன் ஹால் வளகத்தில் நேற்று (9.4.2015) மகா ராட்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் ஓர் அங்கமாக மாட்டிறைச்சி பிரியாணியை அதே இடத் தில் சமைத்து அனை வரும் சாப்பிட்டார்கள். அந்தப் போராட்டத் தில் புகழ்பெற்ற எழுத் தாளரும், நாடக ஆசிரிய ருமான கிரிஷ் கர்னாட் கலந்துகொண்டார்.

அதைத்தொடர்ந்து கிரிஷ் கர்னாட் உறவினர் முறையில் உள்ளவரான எம்.வாசுதேவராவ் காஸ் யபா என்பவர் கிரிஷ் கர்னாட்டுக்கு எதிராக அளித்துள்ள புகாரில் அவர் மதத்துக்கு எதிராக தூண்டியுள்ளதாக புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

மாட்டிறைச்சித் தடையை எதிர்த்து நடை பெற்ற போராட்டத்தை சிபிஎம் இளைஞர் அமைப்பு (டிஒய்எப்அய்) ஏற்பாடு செய்திருந்தது. இந்துத்துவவாதிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட் டத்தில் அனைவருக்கும் வழங்குவதற்காக முதல் கட்டமாக சமைக்கப்பட்டி ருந்த மாட்டிறைச்சி பிரியாணியை காவல் துறை பறிமுதல் செய்தது. ஆனாலும் போராட்டக் காரர்கள் அதோடு அடங்கி விடாமல் விடுதி களிலிருந்து மாட்டிறைச்சி பிரியாணிப் பொட்டலங் களை வரவழைத்து அனை வருக்கும் வழங்கினார்கள். தொடர்ந்து போராட் டத்தையும் நடத்தினார்கள்.
உயர்நீதிமன்றத்தில் இந்துத்துவவாதிகள் இந்தப் போராட்டத்துக் குத் தடையை கோரியி ருந்த போதிலும், தடை உத்தரவு பெறுவதற்கு முன்பாகவே போராட்டக் காரர்கள் விருந்து உண்டு களித்துவிட்டார்கள்.

காவல்துறை ஆணை யர் எம்.என்.ரெட்டி கூறும் போது, வன்முறை ஏற் படாதவகையில் பாதுகாத் திட அந்த இடத்தில் சமைக்கப்பட்ட மாட்டி றைச்சி பிரியாணியைப் பறிமுதல் செய்தோம். போராட்டக்கரர்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முயன்ற பாஜகவினர் சிலரைக் கைது செய்தோம். ராம் சேனா தலைவர் பிரமோத் முத்தலிக் என்பவர் தாக்குதல் நடத் தப்போவதாக எச்சரித்து இருந்தார். ஆனால், போராட்டம் நடைபெற்ற இடத்தில் அவர் காணப் படவேயில்லை..

தமிழ் ஓவியா said...

நாத்திகன்


நாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.
(விடுதலை, 26.3.1951)

தமிழ் ஓவியா said...

அடுத்தக் கட்ட மோதல் தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக்கோரி வழக்காம்

ஆக்ரா, ஏப். 11- தாஜ்மகாலை சிவன் கோவிலாக அறிவிக்கக் கோரிய வழக்கில், பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு ஆக்ரா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப் பியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை சிவன் கோவிலாக (தேஜோ மகாலயா) அறிவிக்க வேண்டும் எனக்கூறி வழக்குரைஞர் ஹரிசங்கர் ஜெயின் தலைமையில் வழக்குரைஞர் ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், 1212ஆ-ம் ஆண்டு ராஜா பரமர்திதேவ் தேஜோ மகாலயாவை கட்டினார். பின்னர் ஜெய்ப்பூர் மன்னர் ராஜா மான்சிங் இதை கைப்பற்றினார். அவருக்குப்பின் அதை ராஜா ஜெய்சிங் நிர்வகித்தார். 1632-ஆம் ஆண்டு ஷாஜகான் இதை கைப்பற்றினார். அதன் பிறகு அங்கு மும்தாஜின் நினைவு சின்னம் ஆக்கப்பட்டு, முகலாய பாணிக்கு கட்டிடங் களில் மாற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ளனர்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, இது குறித்து அடுத்த மாதம் (மே) 5-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு, கலாசார அமைச்சகம், உள்துறை செயலாளர் மற்றும் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணையை மே 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

முன்னதாக, தாஜ்மகாலுக்கு உரிமை கோரி வழக்கு தொடர அனுமதிக்கும்படி வழக்குரைஞர்கள் தாக்கல் செய்த மனுவை இதே நீதிமன்றத்தின் நீதிபதி தள் ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

Read more: http://viduthalai.in/page-2/99526.html#ixzz3X18OfyoZ

தமிழ் ஓவியா said...

பெண்கள் ஜாம் விற்றால் அதிக லாபம் பார்க்கலாமாம் பிரதமர் மோடியின் பேச்சுக்குக் கண்டனம்!

புதுடில்லி ஏப்ரல் 11 விவசாயிகள் பயிர்செய்யவேண்டும் விவசாயி வீட்டுப் பெண்கள் வியாபாரத்திற்கு சென்றால் அதிக லாபம் பார்க்கலாம் என்று பேசிய மோடிக்கு நாடுமுழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பிவருகிறது. புதன் கிழமையன்று முத்திரா வங்கி திட்ட துவக்க விழாவில் மோடி கூறியதாவது:

இன்னும் எத்தனை நாளைக்கு விவசாயி விவசாயம் செய்து கொண்டே இருப்பார், அவருக்கு சில மாற்றங்கள் தேவை, ஒரு விவசாயி மாம்பழம் விவசாயம் செய்தால் அதை விற்பனை செய்யவேண்டும். மாம்பழமாக விற்பனை செய்வதை விட மாம்பழங்களை ஜாம் செய்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும்,


விவசாயி தனது விவசாய வேலை களை விட்டுவிட்டு ஜாம் செய்ய வரக் கூடாது. ஜாம் செய்து அழகிய பாட்டில்களில் அடைத்து தனது வீட்டுப் பெண்களை வியாபாரத்திற்காக அனுப்பினால் மாம்பழ ஜாம்கள் அதிகம் விற்பனையாகும்.சாலையில் பெண்கள் ஜாம் பாட்டில்களை கையில் வைத்துக்கொண்டு நின்றால் அதிகம் விற்பனையாகும், இதனால் விவசாயி பொருளாதார வசதியைப் பெறு வார்கள். ஆகையால் விவசாயிகளின் வீட்டுப்பெண்கள் அனைவரும் விற்பனைப் பிரதிநிதிகள் ஆகவேண்டும் என்று கூறியிருந்தார். மோடியின் இந்த மட்டரகமான பேச்சிற்கு மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே கடுமையான எதிர்ப்பு துவங்கியுள்ளது. இது குறித்து டில்லியைச் சேர்ந்த பெண்ணுரிமை அமைப்பைச்சேர்ந்த அனுபம் என்பவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் கூறும்போது இந்தியா போன்ற நாட்டில் இன்றளவும் பெண்களின் மீதுசமூகத்தின் பார்வை ஒரு வியாபாரப் பொருளாகத்தான் இருக்கிறது,

சமமான வாய்ப்பு கிடைக்கவில்லை. அனைத்து அரசுகளும் பெண்களின் உரிமைக்காக பேசிக்கொண்டு இருக்கும் போது நாட்டின் பிரதமரே பெண்களைப் பற்றி பேசி இருப்பது பெண்களை பற்றிய அவரது தரம் தாழ்ந்த பார்வை யையே காண்பிக்கிறது.

நதி,மலை, இதர ஜடப்பொருட்களை மாதா என்று கூறும் பிரதமர் மோடி உயிருள்ள பெண்களைப் பற்றி இப்படி ஒரு வியாபார நிறுவன தலைவர் போல் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும். அவர் பார்வையில் பெண் என்பவள் பொருட்களை விற்கவும், பிள்ளை பெறவும், ஆண்களுக்கு அடிமையாக இருக்கத்தான் பெண்கள் என்று தோன்றுகிறதோ என்னவோ என்று கூறினார்.

முத்திரா வங்கி குறித்துப் பேசிய மோடி ஆண்கள் அனைவரும் பொருட்களைத் தயாரிப்பவர்களாகவும் பெண்களை விற்பனைப் பிரதிநிதி களாவும் வைக்கவேண்டும் அப்பொ ழுதுதான் நன்கு விற்பனையாகும் என்றும் கூறியிருந்தார்.

Read more: http://viduthalai.in/page-2/99530.html#ixzz3X18X4Eqj

தமிழ் ஓவியா said...

அதிமுக நடத்திய பூஜையில் மாவட்ட ஆட்சித் தலைவரா? திமுக தலைவர் கலைஞர் கருத்து


கேள்வி :- அ.தி.மு.க. நடத்திய "பூஜை" யில் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்ட புகைப்படம் ஏடுகளில் வெளி வந்திருக் கிறதே?

கலைஞர் :- ஏற்கெனவே ஒரு சில மாவட்டங்களிலே உள்ள ஆட்சித்தலைவர்கள் அ.தி.மு.க. வினர் கட்சி சார்பில் நடத்தும் இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப்பற்றி ஏடுகளிலேயே செய்திகள் வந்திருந்தன. அதிலே ஒன்றுதான் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரைப்பற்றியதும்! தற்போது நடைபெறும் ஆட்சியில், முதலமைச்சர் முதல், மற்ற அமைச்சர் களானாலும், மாவட்ட ஆட்சித்தலைவர்களானாலும் எப்போது தங்கள் பதவி பறிக்கப்படும், மாற்றப் படுவோம் என்ற நெருக்கடியிலேயே இருக்கிறார்கள் போலும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக் கோட்டை மாவட்டச்செயலாளர் இதைப் பற்றிக் கூறும்போது, "அனைத்துத்தரப்பு மக்களின் நலனுக் காகவும் பணியாற்றக்கூடிய மாவட்ட ஆட்சியர் ஒரு அரசியல் கட்சி நடத்துகின்ற யாக பூஜையில் கலந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது ஜன நாயகத்திற்கு விரோதமானது இது குறித்துத் தமிழக அரசு துறை ரீதியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். எனக்கு என்னவோ, அந்த மாவட்ட ஆட்சித் தலைவருக்குத்தான் இந்த ஆண்டின் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற விருது, அடுத்த ஆண்டாவது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாடு நடை பெற்றால், அதிலே வழங்குவார்கள் என்று நம்புகிறேன்.
முரசொலி 11.4.2015

Read more: http://viduthalai.in/page-3/99541.html#ixzz3X19dMIqV

தமிழ் ஓவியா said...

தோழர் ஓ.சி. சீனிவாசன் மறைவு

கொச்சி ஈழச் சமுதாய வீரரும் பிராமணரல்லாதார் இயக்கத்தின் உயரிய மேம்பாட்டிற்கு ஆரம்ப காலம் முதல் பெரிதும் உழைத்தவரும் சமதர்ம இலட்சியத்தில் தீவிர பற்றுடையவருமாகத் திகழ்ந்த சென்னை தோழர் O.C. சீனிவாசன் அவர்கள் 18-01-1934ல் பஸ் விபத்தால் அகோர மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வருந்துகிறோம்.

தோழர் ளி.சி. சீனிவாசன் அவர்கள் பாழான வருணாசிரமதர்மத்தையும் அதைப் போன்றதான இன்றைய முதலாளி - தொழிலாளி - பணக்காரன் - ஏழை என்ற கொடுமைகளையும் அறவே அகற்றப்பெரிதும் துணிவோடு தொண்டாற்றிய வாலிப வீரராவார்.

வாலிப உலகம், ஆண்மை, தியாகம் ஆகிய இரு குணங்களையும் பின்பற்றுவதற்கு அவர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர். உதாரணமாகச் சென்ற மூன்று வருஷங்களுக்கு முன்பு கொச்சி சமஸ்தான S.N.D.P. யோகத்தில் தலைமை தாங்கி மதப்பிரச்சாரத்தையும் உயர்வு தாழ்வுக்கான பொல்லாத வருணாசிரமத்தையும் பற்றி வடநாட்டு, பெருத்த பழுத்த வைதிகப் பண்டிதர் மதன் மோகன்மாளவியா அவர்கள் நெஞ்சில் மான,

ஈனமில்லாது பேசியகாலையில் நமது அருங்குணங்களமைந்த வீரர் ஆண்மையோடு தீப்பொறி பறக்கத் தனது தொப்பியை (ழயவ) அவர் முகத்திற்கு நேரே வீசி அவரது பிரச்சாரம் சிறிதும் செலாவணியாக விடாமல் மாளவியாவை உடனே மலையாள நாட்டை விட்டு விரட்டிய பேராற்றல் மிக்கவரில் குறிப்பிடத்தக்க முக்கியஸ்தராவார்.

நாற்பது ஆண்டுகளே நிறைந்த வீர சீனிவாசனை வாலிப உலகம் இழந்து பெரிதும் துயருகிறது என்பதில் அய்யமில்லை. அண்மையில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய ஆசார சீர்திருத்த மகாநாட்டில் தான் தமிழர்களின் உயரிய வாழ்க்கைக்கு வீரகர்ஜனை செய்து மைலாப்பூர் பார்ப்பனியத்துக்குக் குழி தோண்டி புதைத்து, தமிழர்களின் ஆண்மைக்கு ஆக்கம் தேடிக் கொடுத்த சீரியராவார்.

இப்பேர்க்கொத்த நமது தோழர் சீனிவாசன் அவர்கள் மறைவுக்கு வருந்துகிறோமெனினும் இயற்கையின் போக்கை உணர்ந்த நாம் அதன் மூலமே ஆறுதலுறுவதோடு அவரது அருமை மனைவியாரும், குடும்பத்தாரும் ஆறுதல் பெறுமாறும் வேண்டுகின்றோம்.

- புரட்சி - துணைத்தலையங்கம் - 21.01.1934

Read more: http://viduthalai.in/page-7/99533.html#ixzz3X1AYr5pz

தமிழ் ஓவியா said...

தந்தைபெரியார் பொன்மொழிகள்



மனிதன் யார் என்றால் நன்றி விசுவாச முடையவன் எவனோ அவன் மாத்திரமே மனிதனாவான். மற்றவர்கள் நரி, பூனை, பாம்பு, தேள், கொசு, மூட்டைப் பூச்சி முதலிய அதாவது மற்றவர்களை ஏய்த்தும், துன்புறுத்தியும், இரத்தம் உறிஞ்சியும், வாழும் ஜீவப் பிராணிகளேயாகும்.

மனிதன் - பிறந்தவன் சாவதென்பது இயற்கை. பிறக்கிறவன் எவனும் நிலைத்து வாழ்வது இல்லை. கடைசியில் செத்தே தீருவான். உலகத்தில் தோன்றும் எந்தப் பொருளும் மறைந்தே போகும். உலகத்தின் அடிப்படையே தோற்றமும் மறைவுமாகும். சாவது இயற்கை.

இருப்பதுதான் அதிசயம்! சாவதால் ஏன் துயரப்படுகிறோம்? சாகிறவன் இருந்தால் ஏற்படுகிற இன்ப துன்பங்களைக் கணக்குப் போட்டுத்தான் விசனப்படுகிறோம். அதாவது வியாபார முறையில் கணக்குப் போடுகிறோம்.

Read more: http://viduthalai.in/page-7/99533.html#ixzz3X1AfcB1m

தமிழ் ஓவியா said...

மன்னார்குடி மகாநாடு

நமது மாகாண சமதர்ம மகாநாடானது 4-ஆந் தேதி ஞாயிறன்று மன்னார்குடியில் சிறப்பாக நடந்தது. மகாநாட்டுக்கு சமதர்மத் தோழர் எம். சிங்காரவேலு அவர்கள் தலைமை வகிப்பதாக இருந்தும் திரேக அசவுக்கியத்தினால் அவர் வர முடியாமல் போனதினால் 3ஆம் தேதியன்று மகாநாடு நடைபெறவில்லை.

ஆனால் அன்று மகாநாட்டுக் கொட்டகையில் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில், வந்திருந்த இரண்டாயிரத்துக்கதிகமான பிரதிநிதிகளைக் கொண்டு ஒரு பொதுக் கூட்டம் நடந்தேறியது.

4ஆம் தேதியன்று மகாநாட்டுக் கொட்டகையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. வரவேற்புத் தலைவர் தோழர் எம். தருமலிங்கம் அவர்களின் வரவேற்புத் தலைவர் பிரசங்கம் நடந்ததும், தோழர் எ. ராமநாதன் எம்.ஏ.பி.எல் அவர்கள் மகாநாட்டுக்குத் தலைமை வகித்தார்.

முன், தலைமை வகிக்கவிருந்த தோழர் எம். சிங்காரவேலு பி.ஏ.பி.எல். அவர்களால் தயாரிக்கப்பட்டிருந்த அச்சடித் திருந்த அக்கிராசனப் பிரசங்கத்தைத் தோழர் எ. இராம நாதன் அவர்கள் வாசித்தார். அக்கிராசனார் முன்னுரைக்குப் பின் மகாநாட்டுத் தீர்மானங்களைத் தயாரிப்பதற்கு விஷயாலோசனைக் கமிட்டி நியமிக்கப்பட்டது.

பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணி வரை விஷயா லோசனைக் கமிட்டிக் கூட்டம் தோழர் எ. ராமநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விஷயாலோ சனைக் கமிட்டிக் கூட்டத்தில் முதலில் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, நமது ஈரோடு சமதர்ம வேலைத் திட்டத் தீர்மானமாகும்.

தோழர் எ. ராமநாதன் அவர்கள் வழக்கம் போல் வேலைத் திட்டத்தை எதிர்த்தார். இரண்டொரு தோழர்கள் அவர் கூறியதற்கு ஆதரவு காட்டினார்கள். நீண்ட விவாதத்திற்கு பின்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மற்ற தீர்மானங்கள் தயாரிக்கப்பட்ட பின்பு விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டம் முடிந்தது.

மாலையில் மகாநாட்டுக்குத் தோழர் ஈ.வெ. கிருஷ்ண சாமி அவர்கள் தலைமையில் மகாநாடு ஆரம்பமாயிற்று. சகல தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மாகாண மகாநாட்டுக்குப் போதுமான விளம்பரம் இல்லாவிட்டாலும் பல ஜில்லாக்களி லிருந்தும் 200, 300க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் ஜில்லாவின் பல பாகங்களி லிருந்தும் 500, 600க்கு மேற்பட்ட பிரதிநிதிகளும் விஜயஞ் செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.

சமதர்ம வேலைத் திட்டமானது தயாரிக்கப்பட்ட ஓராண்டு முடிவுக்குள் மாகாணச் சமதர்ம மகாநாட்டைக் கூட்டி வேலைத்திட்டத் தீர்மானங்களை நிறைவேற்ற முன்வந்த மன்னார்குடி வரவேற்பு கமிட்டியைப் பாராட்டு கிறோம்.

சமதர்மத் திட்டமோ, லட்சியமோ பயனற்றது என்றும் அத்தீர்மானங்கள் ஒழுங்குப்படி அமைக்கப்படவில்லை யென்றும் வீண்புகார் கூறுகிறவர்களுக்குத் தலைவர் எம். சிங்காரவேலு அவர்களின் ஆராய்ச்சி மிகுந்த தலைமை பிரசங்கமானது தக்க பதிலளிக்கப் போதுமானதாகும்.

அறியாமையாலோ, பொறாமையாலோ, பயத்தினாலோ இவைகள் ஒன்றுமில்லை என்றால் சுயநலத்தாலோ நமது திட்டத்தைப் பற்றி வீண் புகார் சொல்லும் நண்பர்கள் இருந்தால் அவர்களுக்கும் தலைவரின் பிரசங்கமானது தக்க பதிலை எடுத்துக் கூறுவது போல் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

சமதர்ம திட்டம் ஒன்றினாலல்லது வேறு எத்திட்டத்தாலும் ஒரு காது ஒடிந்த ஊசி அளவு கூட இந்நாட்டு ஏழை மக்களுக்குப் பலன் இல்லை என்பதற்குத் தலைவரின் நீண்ட பிரசங்கமே போதுமானதாகும்.

வரவேற்புக் கழகத் தலைவர் தோழர் தர்மலிங்கம் அவர்களைப் பற்றி தஞ்சை ஜில்லாவாசிகள் நன்கறிவார்கள். அந்த ஜில்லா அரசியல் பார்ப்பனர்களால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகியும் தமது கொள்கையில் விடாப் பிடியாக உறுதியுடன் நிற்குமவரின் பிரசங்கம் வேறொரு இடத்தில் பிரசுரித்திருக்கிறோம்.

மன்னார்குடியில் வரவேற்புக் கமிட்டியார் எதிர்பார்த்த தைவிட ஏராளமான பிரதிநிதிகள் விஜயம் செய்தும் சகலருக்கும் தக்கவிதம் சவுகரியங்கள் அமைத்துக் கொடுத்த வரவேற்புக் கழகத் தலைவர் எம். தர்மலிங்கமவர்களைப் பாராட்டுவதைப் போல் காரியதரிசிகளையும் பாராட்டுகிறோம்.

மகாநாட்டுத் தீவிர முயற்சி எடுத்துக் கொண்டவர்களின் தலைவர்களாக உள்ளவர்களில் தோழர் இராமையாவையும் சொங்கண்ணாவையும் பாராட்டுகிறோம்.

நமது தலைவர் சிறை புகுந்த ஒரு மாதத்துக்குள் இரண்டு தாலுகா மகாநாடு களும் ஒரு மாகாண மகாநாடும் நடந்ததொன்றே! நமதியக்கமானது தலைவருடன் மறையும் என்ற பொய் பிரச்சாரர்களுக்குத் தக்கபதிலாக இருக்குமென்று நம்புகிறோம். தமிழ் நாடெங்குமுள்ள நமது தோழர்களும் சங்கங்களும் மாகாண மகாநாட்டின் தீர்மானங்களைக் கவனித்து அனுஷ்டானத்தில் கொண்டு வர முயல ஆசைப்படுகிறோம்.

- புரட்சி - தலையங்கம் - 11.03.1934

Read more: http://viduthalai.in/page-7/99534.html#ixzz3X1AnbEHF

தமிழ் ஓவியா said...

விதவையிலும் பணக்காரனியமா?

நமது சட்டசபையில் கனம் கல்வி மந்திரியவர்கள் அய்ஸ்அவுஸ் என்பதிலுள்ள விதவைகள் விடுதிக்கு வருடம் செலவுக்கும், உபகாரச் சம்பளத்துக்கும் ரூபாய் 27-ஆயிரம் செலவாவதாகக் கூறியிருக்கிறார்.

அத்துடன் அவ்விதவை விடுதியில் பிராமணப் பெண்கள் 62-பேர் என்றும், பிராமணரல்லாதார் விதவைகள் பன்னிரண்டே பேர் களென்றும் கூறியுள்ளார்.

விதவைகள் மணத்தை எதிர்க்கும் வைதிகம், வைதிகப் பிராமணியம் இவர்களிடம் நாம் எதுவும் சொல்லவில்லை. சீர்திருத்த விதவை மணத்தை, விதவைகள் முற்போக்கை விரும்புகிறவர்களுக்கே கூறுகிறோம். விதவைகளில்கூடவா பணக்காரனியமும், பார்ப்பனியமும் இருக்கவேண்டும்.

இதற்குக் காரணர் விதவைகள் விடுதியில் தலைமை உத்தியோகம் ஒரு பிராமண விதவை அம்மாளிடமும், விதவை விடுதியில் உள்ள உபாத்தியாயினிகளில் பெரும் பாலும் பிராமண அம்மாள்களாலேயே நிரப்பப்பட்டி ருக்கிறதென்றும் ஜஸ்டிஸ் பத்திரிகையில் பலமுறை செய்தி வந்திருக்கிறது.

கனம் கல்வி மந்திரியவர்கள் விதவை விடுதி தலைமையைத் திருத்தியமைத்து வருடந்தோறும் வரும் பிராமணரல்லாத விதவைகள் மனுக்கள் குப்பைத் தொட்டிக்குப்போகாதிருக்கச் செய்ய இனியாவது தவறக் கூடாதென்று கூறிகிறோம்.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934

Read more: http://viduthalai.in/page-7/99535.html#ixzz3X1AzNb4l

தமிழ் ஓவியா said...

கேள்வி முறை ஏது?



சென்ற சட்டசபையில் கூட்டத்தில் இனாம்தார்கள் குடிகள் சம்பந்தமாக ஒரு மசோதா செய்யப்பட்டதை எல்லாவிடங்களிலும் கண்டித்துத் தீர்மானங்கள் அனுப்பப் படுகிறது. பத்திரிகையின் செல்வாக்கு இனாம்தார்களின் குடிகள் நன்மையை விட, இனாம்தார்கள் நன்மை கோரியே பெரிதும் உபயோகப்படுத்தப்படுகிறது.

சர்க்கார் இம்மசோ தாவுக்கு ஆதரவு காட்டியபோதிலும் அதைப் பயன்படா தடிக்கச் செய்யப்படும் முயற்சி மிக அதிகமாகும். இதற்குக் காரணம் இனாம்தார்கள்தான். பெரும்பாலும் பத்திரிக்கை யைப் படிக்கும், ஆதரிக்கும் கூட்டமாக இருக்கிறார்கள்.

இனாம்தார்கள் குடிகளில் பெரும்பான்மையானவர் களுக்குத் தங்களுக்கெல்லாம் நன்மையைக் கொடுக்கக் கூடிய திட்டம் ஒன்று வந்திருக்கிறதென்பதே தெரியாத விஷய மாகும். இனாம்தார்களின் குடிகள் அவர்களின் நலம் கருதி செய்யப்பட்ட மசோதாவின் செய்தியை அறியும்படிச் செய்ய சர்க்கார் விளம்பர அதிகாரிகளாவது முயல வேண்டும்.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934

Read more: http://viduthalai.in/page-7/99535.html#ixzz3X1B5dayf

தமிழ் ஓவியா said...

நம்மில் ஓர் அளவுக்குப் பக்குவம், மனிதத் தன்மை அடைந்தவுடன் கவுன்சிலர் ஆகவேண்டும்; சட்டசபை மெம்பர் ஆகவேண்டும்; மந்திரியாக வேண்டும்;

ஏதாவது செய்து உயர்வு பெற்றுச் செல்வ வாழ்வு வாழ வேண்டும் என்று கருதுகிறார்களே ஒழிய, முயற்சிக்கிறார்களே ஒழிய, ஆகிறார்களே ஒழிய, மானத்தைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லையே.

Read more: http://viduthalai.in/page-7/99534.html#ixzz3X1BGiHT2

தமிழ் ஓவியா said...

சரிகிறார் நரேந்திர மோடி

மத்தியில் மோடி ஆட்சி அமைந்து முன்னூறு நாட்கள் ஆனதன் அடிப்படையில் மோடி ஆட்சி பற்றி மக்களிடம் எத்தகைய எண்ணம் உள்ளது என இந்தியா டுடே ஆங்கில நாளிதழ் மற்றும் இன்னொரு தனியார் நிறுவனம் சிசேரோ மூட் ஆப் தி நேஷன் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில்,

மோடி ஆட்சியில் மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளித்து கர் வாப்சி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டதன் காரணமாக மோடியின் தனிப்பட்ட செல்வாக்கே சரிந்துள்ளது என எடுத்துக்காட்டியுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த நாடாளு மன்றத் தேர்தலின்போது நாடு முழு வதும் மோடி அலை வீசியது. தமிழ் நாடு, மேற்கு வங்காளம் தவிர பல மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெற்று மிகப் பெரும் பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில் மோடியின் செல்வாக்கு எப்படி? அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்பது குறித்து பிரபல ஆங்கில வார இதழ் ஒன்று மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. அதன் முடிவு வெளியிடப்பட்டது.

அதில் கடந்த 300 நாள் ஆட்சியில் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந் துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு நடத்தியபோது மோடியின் செயல்பாடு பிரமாதம் என்று தெரி வித்தவர்கள்கூட தற்போது தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். அதே போல் சிறப்பான ஆட்சி என்று கடந்த ஆகஸ்ட் மாதம் 51 சதவீதம் பேர் கூறியிருந்தனர். தற்போது அது 38 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஆட்சி சராசரியாக உள்ளது என்று முன்பு 28 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். இப்போது அது 26 சதவீத மாகக் குறைந்துள்ளது.

மிகவும் மோசம் என்று ஆகஸ்ட் மாதம் 6 சதவீதம் பேர் கருத்து தெரி வித்தனர். தற்போது மிகவும் மோசம் என்று 11 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

இதே போல் கடந்த 6 மாதத்தில் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளதா? என்று கேட்ட போது, அதுவும் கடந்த ஆண்டைக் காட்டிலும் 1 சதவீதம் பேர் குறைந்து இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.

இப்போதைய சூழ்நிலையில் நாடாளு மன்றத் தேர்தல் நடத்தினால் பாஜகவுக்கு ஏற்கெனவே கிடைத்த தொகுதிகளில் 27 தொகுதிகள் குறையும் என்றும், அதே சமயம் காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கூடுதலாகக்கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

மோடி அரசில் பாதுகாப்பாக உணர்கிறீர்களா? என்று கேட்கப்பட்ட தற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 78 சத வீதம்பேர் ஆம் என்று தெரிவித்தனர். தற்போது அது 61 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பாதுகாப்பு இல்லை என்று ஏற்க னவே 19 சதவீதம் பேர் தெரிவித்து இருந்தனர். அது 26 சதவீதமாக அதி கரித்துள்ளது. வளர்ச்சி திட்டம் தொடர்பாக முன்பு 70 சதவீதம் ஆதரவு இருந்தது. இப்போது 47 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மதரீதியான விமர்சனங்கள் முன்பு 21 சதவீதமாக இருந்தது. இப்போது 39 சதவீதமாக அதிகரித்துள்ளது.

சிறந்த முதல்வர் யார்? என்று கேள்விக்கு நாடு முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 17 சதவீதம் பேர்ஆதரவு தெரிவித்துள்ளனர். டெல்லியில் மட்டும் 56 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நவீன் பட்நாயக்குக்கு நாடு முழுவதும் 5 சதவீதம் பேரும், சொந்த மாநிலத்தில் 69 சதவீதம் பேரும் ஆதரவுதெரிவித்துள்ளனர்.

மதரீதியான விமர்சனங்கள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலையீடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றைபெரிய பிரச்னையாக பெரும்பாலானவர்கள் கருதுகிறார்கள். இவற்றில் தலையிட்டு தீர்வு காண பிரதமர்மோடி முயலாமல் இருப்பதே, பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிவுக்கு காரணம் என்று அந்தகருத்துக்கணிப்பு கூறுகிறது.

மோடியின் அணுகுமுறை, இப்போது உள்ளதுபோல் தொடர்ந்து மதவாத சக்திகளுக்கு ஊக்கம் அளிக்கும் போக்கு நீடித்தால்,பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில், பாஜகவிற்கு மக்கள் தக்க பாடம் அளிப் பார்கள் என்பதற்கான முன்னோட் டமே இந்த கருத்துக் கணிப்பு.

மக்களின் இந்த மன ஓட்டத்தை, மதசார்பற்ற அமைப்புகள் ஒன்றுபட்டு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய நிலையில், தமிழ் நாட்டில் திராவிடர் கழகத்தால் மாநிலம் முழு வதும் நடைபெற்று வரும் திராவிடர் விழிப்புணர்வு மாநாடும்,

ஏப்ரல் 14-ஆம் தேதி பாபாசாகிப் அம்பேத்கரின் 125-ஆம் ஆண்டு பிறந்த நாளில் நடைபெற உள்ள தாலி அகற்றல் மற்றும் மாட்டிறைச்சி விருந்து விழாவும் பாசிச சக்திகளை தமிழ் நாட்டில் தடுத்து நிறுத்திடும் கேடயம் என்பதையும் இங்குள்ள அனைத்து மதசார்பற்ற அமைப்புகளும் புரிந்து, அதற்கான முழு ஒத்துழைப்பையும் தர வேண்டியது சமூகக் கடமையாகும்.

- குடந்தை கருணா

Read more: http://viduthalai.in/page3/99492.html#ixzz3X1CEpmOg

தமிழ் ஓவியா said...

மதமா? மார்க்கமா?

அய்ந்தறிவு ஆடும் மாடும் - வாழ
அசைத்து உணவு உண்ணும்
ஆறறிவு ஆட்கள் அதை உண்டு
ஆருயிர் காப்பர் அறிவீரே!

ஊரெல்லாம் உருவச்சிலை - கருங்
கல்லெல்லாம் கடவுள் சிலை - அதை
காண்போர்க்கெல்லாம் கஞ்சியும் இல்லை
தினம் கால்கடுக்க காத்திருப்பர்
திருப்பதியில்!

மதம் மார்க்க மாமனிதர்கள் - தம்
மதம் சேர்க்க நித்தம் நாடுகின்றனர்
மதம் சேர்ந்து சிலை நிலை கண்டாலும்
அதை கண்டவர் விண்டிலர் தானே!

இங்குள்ளது ஆங்கில்லை
அங்குள்ளது இங்கில்லை
ஏனிந்த ஈனப்பிறவிகள்
இல்லாததை காண ஏன் இந்த
திக்குமுக்கு தக்கு தாளம்?

- வணங்காமுடி, தருமபுரி

Read more: http://viduthalai.in/page3/99493.html#ixzz3X1ChSjha

தமிழ் ஓவியா said...

சமூகவலைதளத்திலிருந்து....

சமூகவலைதளத்திலிருந்து....
வீட்டில் நகை பணங்களை பீரோ வில் வைத்து பூட்டி விடுவது திருடர் களுக்குப் பயந்து அல்ல, வீட்டுப் பிள்ளைகளிடமிருந்து அவைகளைப் பாதுகாப்பாக வைக்கத்தான் - மோடி

(என்னே கண்டுபிடிப்பு!)

......

தாவரங்களில் உயிர் உள்ளது என்று ஆங்கிலேய அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறியும் முன்பே மகாபாரதம் மற்றும் ராமாயணத்தில் கூறி விட்டார்கள் - மோடி

(விஞ்ஞான பூஷணம் என்று பட்டம் கொடுக்கலாமா?)

Read more: http://viduthalai.in/page3/99495.html#ixzz3X1CsfBBc

தமிழ் ஓவியா said...

ஓரம்போ! ஓரம் போ!!
அத்வானி, ஜோஷிக்கு அழைப்பிதழ் இல்லை

பாஜக கட்சி 35-ஆவது ஆண்டு விழாவில் பாஜக மூத்த தலைவர்களான அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி கலந்துகொள்ளவில்லை. இதற்கு முக்கிய காரணமாக அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பபடவில்லை என்று பாஜக டில்லி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. புதுடில்லியில் கடந்த அய்ந்தாம் தேதி பாஜக கட்சியின் 35-ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் பாஜக தலைவரான அமித்ஷா உட்பட நாடுமுழுவதிலும் இருந்து முக்கிய பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிறுவப்படும் போது அதன் நிறுவனத்தலைவராக இருந்த அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொள்ள வில்லை.

அழைப்பிதழில் இவர்களின் படங்களும் பெயர்களும் இடம்பெற வில்லை. அதே நேரத்தில் இவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பபடவில்லை. 2000 அழைப்பிதழ்கள் அச்சடித்து அனுப்ப சுமார் 13 லட்சம் செலவு செய்யப்பட்டது. அழைப்பிதழின் இறுதிவடிவத்திற்கு அமித்ஷா ஒப்புதல் அளித்தபிறகே அச்சடிக்கப்பட்டது.

ஆகையால் பாஜக இன்றை தலைவரான அமித்ஷாவின் நேரடி உத்தரவின் பேரில் தான் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி பெயர்கள் இடம்பெறவிலை. இதுகுறித்த பாஜவின் மூத்த தலை வர்கள் சிலர் தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவிக்கும்போது அத்வானி முரளிமனோகர் ஜோஷி போன்றோர் தொடர்ந்து கட்சியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த 1980ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்கள் இந்த கட்சியை உரு வாக்கினர் என்பதை மறந்து விடக் கூடாது என்று அத்வானி ஆதவாளர் கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதே நேரத்தில் கட்சியின் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் தேசிய செயற்குழுவில் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டதால் அழைப்பிதழை யார் யாருக்கு அனுப்பவேண்டும் என்று தீர்மானிக்க போதிய அவகாசமில்லை. அதே நேரத்தில் அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷிக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டோம் என்று கூறியிருந் தனர்.

தேசிய செயற்குழுவைத் தொடர்ந்து அடுத்த ஓரிரு நாட்களிலேயே கட்சியின் முக்கிய நிகழ்ச்சியான நிறுவன நாள் விழாவில் அத்வானி புறக்கணிக்கப் படுவது இது இரண்டாவது நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த விழாவில் வெங்கய்யா நாயுடு உள்பட ஏராளமான மத்திய அமைச்சர்கள், பாஜக உயர்மட்ட தலைவர்கள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

(தி எக்னாமிக் டைம்ஸ் - 7.4.2015 பக்.4)

Read more: http://viduthalai.in/page7/99503.html#ixzz3X1EbY0do

தமிழ் ஓவியா said...

இந்தியாவில் மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இண்டியா ஸ்பெண்ட் என்ற பத்திரிகை குழுமம் தரும் ஆய்வு அறிக்கை

மத்திய பிஜேபி அரசு அதிர்ச்சி

புதுடில்லி ஏப்ரல் 12, இந்தியாவில் திடீரென மாட்டிறைச்சி உண்போ ரின் எண்ணிக்கை அதிக ரித்து வருவதாக இந்திய பத்திரிகையாளர் குழுமம் நடத்திய கருத்துக்கணிப் பில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடைச் சட்டம் நிறைவேற்றிய பிறகு இந்தக் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இண்டியாஸ்பெண்ட் கருத்துக் கணிப்பு

மக்களிடையே மாட்டிறைச்சி ஆர்வம் குறித்து பத்திரிகையாளர் கள் குழுமம் அடங்கிய கருத்துக்கணிப்பு நிறுவன மான இண்டியாஸ்பெண்ட் என்ற நிறுவனம் இந்தியா முழுவதும் மக்களிடையே அசைவ உணவு குறித்த கருத்துக்கணிப்பை நடத்தியது, இந்த கருத் துக்கணிப்பின் படி சமீப காலமாக மாட்டிறைச்சி உண்பதில் இந்திய மக்கள் ஆர்வம் காட்டத் துவங்கி யுள்ளனர் என்ற உண்மை வெளிவந்துள்ளது. மேலும் 2005 முதல் 2012 வரை தொடர்ந்து இந்தியாவில் மாட்டி றைச்சி உண்பவர்களின் சதவீதம் அதிகரித்து வரு கிறது என்றும் தெரிவந் துள்ளது. முன்பு கிராமப் புறங்களில் மாட்டிறைச்சி அதிகம் உண்ணும் வழக்கம் இருந்து வந்தது, தற்போது நகரங்களிலும் மாட்டிறைச்சியை உண் ணும் மக்கள் அதிகரித்து வருகின்றனர். 2013 களில் 70 விழுக்காடாக இருந்த மாட்டிறைச்சி உண்பவர் களின் மொத்த புள்ளி விவரம் சமீபகாலமாக 82 விழுக்காட்டை தாண்டி யுள்ளது.

தற்பொது நகர்ப் புறங்களில் 17 விழுக்காடா கவும், கிராமப்புறங்களில் 39 விழுக்காடாகவும் மாட்டிறைச்சி உண்பவர் களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளதாக அந்த இண்டியாஸ்பெண்ட் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சைவத்திலிருந்து அசைவம்!

மாட்டிறைச்சி உண்ணு பவர்களில் பலர் சைவ உணவில் இருந்து நேரடி யாக அசைவ உணவிற்கு மாறியவர்கள் என்ற ஒரு புள்ளி விவரமும் கிடைத் திருக்கிறது, முக்கியமாக நகர்ப்புறங்களில் படித்த வர்களின் மத்தியில் மாட் டிறைச்சி பயன்பாடு அதிகரித்துள்ளது. அசைவ உணவில் முதலிடம் கோழி, இரண் டாமிடம் மீன் மூன்றாமி டம் ஆட்டிறைச்சி இருந் தாலும், ஆட்டிறைச்சிக்கு பதிலாக மாட்டிறைச்சியை உண்பவர்கள் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது.

தற்போது மக்களிடையே மாட்டிறைச்சி உண்ணும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் விலைவாசி உயர்வு மற்றும் அடிக்கடி பத்திரிகைகளில் மாட்டிறைச்சி குறித்த செய்தி வருதும் என்று அந்த புள்ளிவிபரம் தெரி விக்கிறது, சாப்பிட்டுத் தான் பார்ப்போமே என்ற நிலையில் பலர் சாப்பிடத் துவங்கி பிறகு தொடர்ந்து சாப்பிட ஆரம்பிக்கின்ற னர். சமீபகாலமாக மாட் டிறைச்சி விற்பனை அதி கரித்துள்ளதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

பாஜகவிற்கு உள்ளூர உதறல் சமீபத்தில் நடந்த இந்த கணக்கெடுப்பில் மாட்டி றைச்சி உண்போர் அதி கரித்து வருவது குறித்து பாஜகவிற்கு பயம் ஏற்பட் டுள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் 11 மாநி லங்களில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது. இந்த நிலையில் தங்களது மாநிலங்களில் விரைவில் தடை கொண்டு வரா விட் டால் மாட்டிறைச்சி உண் போரின் எண்ணிக்கை அதிகரித்து விடும் ஆகை யால் மாட்டிறைச்சி தடை குறித்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்திவருகிறன.

இந்தியாவில் மொத்த இறைச்சி ஏற்றுமதில் 52 விழுக்காடு மாட்டிறைச்சி ஏற்றுமதியாகிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதி மாத்திரமல்லாமல் தோல் மற்றும் கொழுப்பு, எலும்பு கொம்பு போன்றவைகளும் ஏற்றுமதியில் முக்கியபங்கு வகிக்கின்றன. 24 மார்ச் 2015 அன்று வெளியான எக்னாமிக் டைம்ஸ் இதழில் இந்திய மருத்துவத்துறையில் மாடுகளின் உடலில் இருந்து பெறப்படும் பொருட்களின் பயன்பாடு குறித்து பட்டியலிடப் பட்டது.

அதில் உடலில் எளிதில் கரையும் கப்சூல் கள் முதல் ஜெலட்டின், தோல் நோய்க்கு பயன் படுத்தும் களிம்புகள், ஜெல் (மென்கூழ்ம) போன்ற வைகள் மாட்டின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. அதே நேரத்தில் மாட்டின் எலும்பில் இருந்து பெறப் படும் கால்சியம் மற்றும் எலும்புச் சாம்பல் மாத் திரைகள் எளிதில் கரைய உதவும் துணைப் பொருட் கள் ஆகும்.

Read more: http://viduthalai.in/e-paper/99574.html#ixzz3X5ovRVJB