Search This Blog

17.4.15

இதுதான் தினமணியின் யோக்கியதை!தினமணியின் ஈனப்புத்தி!



'தினமணி' உட்பட பல ஊடகங்கள் திராவிடர் கழகத்தைக்  கொச்சைப்படுத்தும் வகையில் தாலி அகற்றிக் கொள்ளும் திராவிடர் கழக நிகழ்ச்சியை தாலி அறுக்கும் போராட்டம் என்று எழுதி வந்தன.

இந் நிலையில் திராவிடர் கழகம் நடத்துவது தாலியறுப்புப் போராட்டமல்ல; தாலியகற்றும் நிகழ்ச்சி, தவறாக தாலியறுக்கும் போராட்டம் என்றெல்லாம் வெளியிடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைமை நிலையம் சார்பில் அனைத்து ஊடகங்களுக்கும் அறிக்கை கொடுக்கப்பட்டது (1.4.2015).


அந்த அறிக்கையை தினமணியும் (2.4.2015) வெளியிட்டது. ஆனால் பத்திரிகா தர்மம் பேசும் அதே இனமணி (12.4.2015) முதல் பக்கத்தில் கார்ட்டூன் போடுகிறது.

வீரமணி தலைமையிலே தாலியறுக்கும் நிகழ்ச்சியாம்!

இந்தப் பணியைத் தான் கழகங்கள் சார்பாக பல வருஷங்களா நாம் பண்ணிக்கிட்டிருக்குமே! இது எதுக்குத் தனியா? என்று கழகங்கள் கூறுவதாக எழுதுகிறது தினமணி.

2ஆம் தேதி கழகத்தின் மறுப்பு அறிக்கையை வெளியிடும் தினமணி 12ஆம் தேதி மீண்டும் தாலியறுப்பு என்று போடுகிறது. இதுதான் இனமணியின் யோக்கியதை!

கணவன் செத்து விட்டால் அவன் கட்டிய தாலியை அறுப்பதற்கென்றே தனிச் சடங்கு வைத்து, அந்தப் பெண்ணின் வளையல்களை உடைத்து, பூவையும், பொட்டையும் பறித்து, தாலிக் கயிறை அறுத்து, முண்டச்சி என்றும் அமங்கலி என்றும் மொட்டைப் பாப்பாத்தி என்றும் அசிங்கப்படுத்தும் கும்பலா, அடிமைத்தளையென்று கூறி தாங்களாகவே முன்வந்து தாலியை அகற்றிக் கொள்ளும் பெண்களை, நிகழ்ச்சியைக் கொச்சைப்படுத்துவது?


சங்கிலித் திருடன் தாலியை அறுப்பதை, திராவிடர் கழகம் நடத்திய தாலியகற்றும் நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு  இன்று தினமணி கார்ட்டூன் போடுகிறது.

இப்படிப் போடுகிறவர் பெயர் மதியாம்; மொட்டை யனுக்குப் பெயர் சவுரிராசன் என்று வைப்பதில்லையா?


எப்ப புருஷன் சாவான், அவன் பெண்டாட்டியைத் தாலியறுக்கச் செய்து, கருமாதி சடங்கு நடத்தி, சுரண்டிக் கொழுக்கலாம் என்று சுடுகாட்டுக்கு வரும் பிணங்களைக் கணக்கெடுத்துக் கொண்டிருக்கும் கழுகுகளா பெண்ணுரிமை நிகழ்ச்சியைக் கேவலப்படுத்துவது?


தாலியறுக்கும் பணியைத் தான் பல வருஷங்களாக கழகங்கள் செய்கின்றனவாம் - போகிற போக்கில் கந்தப் பொடி தூவுவது என்ற கீழ்த்தரத்தில் ஈடுபடும் தினமணி என்னும் இனமணிக் கும்பலைக் கேட்கிறோம்.


புருஷன் செத்தால் ஆத்துக்காரியின் தாலியை அறுத்து, வெள்ளைச் சேலை உடுத்தச் செய்து மொட்டைப் பாப்பாத்தி என்று மூலையில் உட்கார வைத்தீர்களே - அதை மாற்றியதுகூட திராவிடர் இயக்கம்தான் - தந்தை பெரியார்தான் என்பதே மறந்து விட்டு பூணூலால் படம் போட்டு திராவிடர் இயக்கத்தை நையாண்டி செய்கிறது  - கொச்சைப்படுத்துகிறது இனமணி என்பதுதான் உண்மை.


சங்கரராமன் மனைவியின் தாலியை அறுத்த பெரிய வால்கள் யார் என்று உலகுக்கே தெரியுமே!

எதைச் சொல்லி என்ன பயன்? பார்ப்பானுக்குத்தான் நல்ல புத்தியும் நல்லொழுக்கமும் கிடையாதே!

                             ---------------------------------- கறுஞ்சட்டை “விடுதலை” 16-04-2015 இல் எழுதிய கட்டுரை


Read more: http://www.viduthalai.in/e-paper/99811.html#ixzz3Xc3OhTcc

0 comments: