Search This Blog

25.4.15

பெண்கள் பிள்ளை பெறும் கருவியா?-பெரியார்



முதலில் நீங்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இது மாறுதல் காலம். இதுவரை நாம் மானமற்று - இழிந்து, அடிமைகளாக, மடையர்களாக இருந்து வந்தோம். இன்று சிலரது முயற்சியால் நம்மில் சிலருக்காவது நாம் இழிஜாதியாக சூத்திரத்தன்மையாக இருக்கிறோமே என்கின்ற கவலை ஏற்பட்டிருக்கிறது.


நம்மில் பெரும்பாலான மக்களுக்கு இன்னும் அறிவு இல்லை. நம் பெண்கள் இன்னும் அடிமைகளாக, குட்டிப் போடும் கருவிகளாக, புருஷனுக்கு வேலைக்காரிகளாக இருக்கிறார்கள் என்பதோடு, அப்படி இருப்பதற்காகவே பெண்கள் சமுதாயமானது இருக்கிறது என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள்.


உலகம் எந்த அளவுக்கு மாறுகிறது என்பது யாருக்குத் தெரியும்? உலகத்தின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் எல்லாம் விஞ்ஞானத் துறையில், அறிவு ஆராய்ச்சித்துறையில் போட்டிப் போட்டுக் கொண்டு முன்னேறிக் கொண்டிருக்கும் போது, நாம் காட்டுமிராண்களாக, பகுத்தறிவற்றவர்களாக இருக்கிறோம். நமது பொல்லாத வாய்ப்பு அயோக்கியர்களிடத்தில் பத்திரிகைகள் சிக்கிவிட்டன. நம்மை அடிமைகளாக, அறிவற்றவர்களாக ஆக்க வேண்டுமென்று கருதுகிறவர்களிடமும், அவர்களின் காலைக் கழுவித் தண்ணீர் குடிப்பவர்களிடமும் பத்திரிகைகள் சிக்கியிருப்பதால் அவை கட்டுப்பாடாக நம் அறிவை வளரவிடாமல் செய்வதோடு, முட்டாள்தனமும், மூடநம்பிக்கையும் வளர என்னென்ன செய்ய வேண்டுமோ, அவ்வளவையும் திட்டம் போட்டுச் செய்து வருகின்றனர்.


நம் முயற்சியும், தொண்டும் நம் ஆண்களைத் திருத்திய அளவிற்குப் பெண்களைத் திருத்தவில்லை. அதனால்தான் இந்த விளக்கும், குப்பைக் கூளங்களையும் இங்கு வைத்திருக்கின்றனர். இவை எதற்காகத் தேவை என்பது இங்குள்ள எவருக்குமே தெரியாது. நம் மக்களின் இழிவினையும், அடிமைத் தன்மையையும் நிலை நிறுத்துவதற்காகவென்று பார்ப்பானால் ஏற்பாடு செய்யப்பட்டது தான் இந்தச் சடங்கு முறைகளாகும். தமிழனுக்கு இதுபோன்ற முறையே என்றும் இருந்தது கிடையாது. இப்போது இங்கு நடைபெற்றது போன்றது தான் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பதிவுத் திருமணம் என்பதுமாகும். என்றாலும் பதிவுத் திருமணத்தில் சில தொல்லைகள் நமக்கிருப்பதால் அதை மாற்றி இருவரும் சம உரிமை உடையவர்கள் என்பதை வலியுறுத்தவே இதுபோன்ற வாழ்க்கை ஒப்பந்த விழாவாகும். சுயமரியாதைத் திருமணமாகும்.


இந்த முறையில் கடந்த 40-ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடைபெற்று வந்ததும் கூட, செல்லுபடியற்றவையாகக் கருதப்பட்டு வந்தன. இதுவரை நமக்கிருந்த அரசு பார்ப்பன சார்புள்ள அரசாக இருந்ததாலும், இம்முறையானது சட்டப்படிச் செல்லுபடியற்றதாக இருந்தது. இப்போது அமைந்திருக்கும் ஆட்சியானது மக்களாட்சி என்பதோடு தமிழர்களின் பகுத்தறிவாளர்களின் ஆட்சியானதால், இந்த ஆட்சி சுயமரியாதைத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது. நான் அய்க்கோர்ட் ஜட்ஜ் கைலாசம் அவர்கள் மகள் திருமணத்திற்கு சென்றிருந்தேன். எனக்குப் பக்கத்திலிருந்த சீஃப் ஜஸ்டிஸ் அனந்தநாராயண அய்யர் இந்த முறைதான் சிறந்ததுங்க. என்ன காரணத்தாலோ இதுவரை இதைச் சட்டமாக்காமலிருந்திருக்கிறார்கள் என்று கூறினார்.


நம் புராணங்கள், இலக்கியங்களில் வரும் கதாபாத்திரங்களான சீதை, திரவுபதி, சந்திரமதி, கண்ணகி ஆகிய இவர்களின் திருமணங்கள் யாவும் பொருத்தம், நாள், நட்சத்திரம், ஜாதகம், ஜோசியம், நேரம் எல்லாம் பார்த்துத் தேவர்கள் என்பவர்களால் நடத்தப்பட்டவை தான். இதில் எவள் ஒழுங்காக வாழ்ந்தாள்? சீதை திருமணமான சில நாட்களிலேயே காட்டிற்குச் சென்று இராவணனால் தூக்கிச் செல்லப்பட்டு சினையாகத் திரும்பினாள். திரவுபதை 5-பேருக்கு வைப்பாட்டியாகத் தனது வாழ்நாளை கடத்தினாள். சந்திரமதி தன் கணவனால் அடகு வைக்கப்பட்டாள். கண்ணகி கல்யாணமான அன்றே அவள் கணவன் இன்னொருத்தியோடு சென்று வாழ்க்கை நடத்தினான். இப்படி பொருத்தம், நேரம் எல்லாம் பார்த்துச் செய்த கல்யாணங்கள் எவை வாழ்ந்தன? இந்தப் பொருத்தம் நேரம் என்பதெல்லாம் புரட்டுத்தானே தவிர இவற்றால் எந்தப் பயனும் கிடையாது.


நம் மக்கள் நிலை இப்போது எப்படி இருக்கிறது என்றால், சாஸ்திரம் என்று சொல்லி மனித மலத்தை எடுத்துக் கொடுத்தாலும் சாப்பிடக் கூடிய நிலையில் தான் இருக்கிறது. நம் மக்கள் பகுத்தறிவுவாதிகளாகிக் கீழ் நிலைக்குப் போய்க் கொண்டிருக்கிற நிலை மாறி, மற்ற உலக மக்களைப் போல் வாழ வேண்டுமென்பதற்காகத் தானே நாங்கள் இதை எல்லாம் எடுத்துக் கூறுகிறோம் பாடுபடுகிறோம். மற்றப்படி இதனால் எங்களுக்கு என்ன லாபம்? அந்த அம்மாளே கையிலே தீப்பந்தம் பிடித்துக் கொண்டு பகலில் வெளியே போனால் மக்கள் என்ன நினைப்பார்கள்? அதுபோலத்தானிருக்கிறது இந்தப் பட்டப் பகலில் விளக்கை ஏற்றி வைத்திருப்பதும் என்று குறிப்பிட்டதோடு, மணமக்கள் தங்களின் வாழ்க்கையில் முட்டாள்தனமான மூடநம்பிக்கைக் கருத்துகளுக்குச் சிறிதும் இடம் கொடுக்காமல், பகுத்தறிவோடு நடந்து கொள்ள வேண்டுமென்றும், வருவாய்க்கு மேல் செலவிடக் கூடாது என்றும், அதிகமான குழந்தைகளை பெற்றுக் கொண்டு வாழ்வில் அவதிப்படக் கூடாது.

---------------------------- 05.05.1968- அன்று கந்தன் - தமிழரசி திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 04.06.1968

39 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஞானப்பால்

திருஞானசம்பந்தர் என்ற சிறுவனுக்கு உமை யம்மை (பார்வதி) ஞானப் பால் ஊட்டினாராம் - இப்பொழுதெல்லாம் அது போல் நடப்பது இல் லையே - ஏன் கடவுள் கப்சா எல்லாம் இறந்த காலத்தில் தானா!



Read more: http://www.viduthalai.in/e-paper/100398.html#ixzz3YPrP6rS9

தமிழ் ஓவியா said...

ஆடுகளுக்கு நேர்த்தி உண்டா?



சிவகங்கையையடுத்த திருமலையில் உள்ள ஒரு கோயிலுக்கு 338 ஆடு களைப் பலியிட்டுள்ளனர். (சட்டப்படி சரிதானா?) எதற்காகவாம்?

ஊரில் உள்ள கண்மாய் நிரம்பி வழியவும், விவ சாயம் சிறக்கவும், குழந்தை வரம் வேண்டியும் இந்த நேர்த்திக் கடனாம். ஆமாம், 338 ஆடுகள் பலியிடப்பட்டனவே அதைக் காப்பாற்ற எந்த நேர்த்திக் கடனை செய்வதோ!

தமிழ் ஓவியா said...

அய்தராபாத், ஏப். 26_ ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தி சத்ய சாய்பாபா கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தில் பல அய்யங்கள் இருப்ப தாகவும் இதுபற்றி சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும் என் றும் அவரது உறவினர் கணபதி ராஜு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகி யோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதனை அய் தராபாத்தில் செய்தி யாளர்களிடம் தெரிவித்த கணபதிராஜு மேலும் கூறியதாவது: சத்ய சாய் பாபா மரணத்தில் பல அய்யங்கள் உள்ளன. அதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆதா ரங்களுடன் கடந்த ஆட் சியின் போது அப் போதைய முதல் அமைச் சரிடம் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாபா மரணத்தில் பல சதித் திட்டங்கள் நடந்து உள்ளன. பாபா இறந்து 25 நாட்கள் கழித்துதான் அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டது.

இடைப்பட்ட காலத் தில் அவரது ரூ.ஆயிரம் கோடி சொத்துக்கள் கடத்தப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. சத்ய சாய்பாபா மரணம் குறித்து சி.பி.அய். விசா ரணை நடத்தினால் உண் மைகள் வெளிவரும். எனவே இதுகுறித்து பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் எனது ஆதாரங்களையும் இணைத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/100397.html#ixzz3YPrhadZH

தமிழ் ஓவியா said...

தேவன் சக்தி இவ்வளவுதான்!

இடி தாக்கி ஏசு சிலை உடைந்தது

திருப்போரூர், ஏப். 26 திருப்போரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு 7 மணி முதல் இடிமின்ன லுடன் பலத்த மழை பெய் தது. மேலும் சூறாவளிக் காற்றும் வீசியது.

இரவு 9 மணி வரை கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரி தும் அவதிப்பட்டனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அரு கில் உள்ள கிறிஸ்து மீட்பர் ஆலயத்தில் இடி தாக்கியது. இதில் ஆல யத்தில் உள்ள சுமார் 40 அடி உயர பீடத்தின் மீது இருந்த பைபரால் ஆன ஏசு சிலை உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது.

ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏசு சிலை உடைந்தது கிறிஸ் தவர்கள் மத்தியில் கவ லையை ஏற்படுத்தியது என்றாலும் கோடையில் தவித்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்தது.

தமிழ் ஓவியா said...

இந்தியாவுக்குப் பரதன் பெயரைச் சூட்ட வேண்டுமாம்

உச்சநீதிமன்றத்தில் மனு
புதுடில்லி ஏப்ரல் 25 இந்தியா என்பது ஆங்கி லேயன் வைத்த பெயர்; எனவே, இந்திய இதிகாச மான ராமாயணத்தில் உள்ள பரதன் பெயரை நாட்டிற்கு சூட்ட வேண் டும் என்று மகராஷ் டிராவைச் சேர்ந்த நிரஞ் சன் பட்வால் உச்சநீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:

இந்த நாடு நீண்ட பாரம்பரியத்தைக் கொண் டது, இந்த நாட்டிற்கு என்று சொந்தக்கலாச் சாரம் உள்ளது, இந்துமத நூல்கள் இந்த நாட்டின் புனித நூல்களாக பெரும் பான்மையான மக்கள் ஏற்றுள்ளனர். முக்கிய மான இந்த நாடு ராம, லட்சுமண, பரதன் போன்ற புனிதர்களில் பெயரால் பெரிதும் அறியப்படுகிறது. அரியனை தியாகம் செய்து உலகிற்கே எடுத்துகாட்டாக திகழ்ந்த பரதன் பெயரால் நீண்ட கால மாக அறியப்பட்டது. ஆங்கிலேயர்கள் வருவ தற்கு முன்பு இந்த நாடு பாரத நாடு என்றே அறி யப்பட்டது.

ஆங்கிலேயர் கள் அவர்களின் நிர்வாக வசதிக்காக இண்டியா என்று அழைக்கத் துவங் கினர். பின்னாளில் அதுவே அவர்களின் ஆவணங் களில் எழுதப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு அதே பெயரைத் தொடர்ந்து நேரு தலைமையில் ஆன அரசு பயன்படுத்தி வரு கிறது. இந்து பெரும் பான்மை பாரதவாசி களுக்கு பிடிக்கவில்லை.

ஆகவே நீதிமன்றம் இந் தப்பிரச்சனையில் தலை யிடவேண்டும். அரசியல் சாசனத்தில் பாரத், ஹிந் துஸ்தான், ஹிந்துதேஷ், பாரத்பூமி அல்லது பாரத் வர்ஷ் என்ற பெயரில் ஏதாவது வைக்கவேண்டும்; பாரத் என்பது அனைவரால் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்படும் பெயர் ஆகையால் உடன டியாக அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த மாற் றத்தைக் கொண்டு வர முன் வர வேண்டும். உச்சநீதிமன்றம் உடனடி யாக மத்திய அரசுக்கு இந்த ஆணையை வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசா ரித்த தலைமை நீதிபதி எச்.எச்.தத்து மத்திய அரசுக்கு, அரசியலமைப்பு ஆலோசனைக்குழுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
25-04-2015


Read more: http://www.viduthalai.in/page1/%20100343.html#ixzz3YPwJXImN

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

முரண்பாடு
கண் பார்வைக் குறை நீங்கிட எண் கண் முருகன் கோயிலுக்குச் செல்ல வேண்டுமாம்.
கடவுள் என்றால் சர்வ சக்தி என்று சொல்லி விட்டு, குழந்தைப் பாக்கி யத்துக்கு இந்தக் கோயில், பைத்தியம் தெளிய அந்தக் கோயில் என்கிறார்களே இது முரண்பாடு இல்லையா? கடவுள்களுக்குக் கூட பிராஞ்சு ஆபீசா? பக் தியை மலிவாகப் பரப்பும் வணிக நோக்கம் அல்லவா!



Read more: http://www.viduthalai.in/page1/100344.html#ixzz3YPwWBQbr

தமிழ் ஓவியா said...

எல்லை மீறுகிறது இந்து மகாசபை! துறவி அக்னிவேஷ் தலையை வெட்டி கொண்டு வந்தால் 5 லட்சம் - பரிசாம்


சேவை செய்வது என்பது சாத்திரத்துக்கு விரோதமானதாம்!

ஜிந்த் (அரியானா) ஏப். 25 சமூக சேவகரும் தகவல் உரிமைச் சட்டத்திறகாக போரட்டம் நடத்தியவர் களில் ஒருவருமான துறவி அக்னிவேஷ் தலையை வெட்டிக் கொண்டு வரு பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசாக தருகிறோம் என்று இந்து மகாசபைத்தலைவர் தர்மபால் சிவாஜ் பத்தி ரிகையாளர்களிடம் கூறினார்.

அரியானா மாநில ஜிந்த் என்ற இடத்தில் இந்துமகாசபை தனது நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடியது, நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டாடப்படும் இந்த விழாவின் போது இந்து மகாசபையின் தலைவர் தர்மபால் சிவாஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் பலர் துறவிகள் வேட மிட்டு வருகின்றனர். சமூக சேவை என்ற பெய ரில் துறவிகள் வேட மணியத் தேவையில்லை, இந்துமத்ததில் சேவை என்பது என்ன என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.

கர்மபலனை அனுப விப்பவர்களுக்கு சேவை என்ற பெயரில் எது செய்தாலும் அவர்களின் கர்மபலனால் அந்த சேவை யின் பலன் அவர்களை முழுமையாகச்சென்றடையாது, இது இந்துமத சாஸ் திரங்களில் உள்ளது. ஆனால் சிலர் இந்து மதத் துறவி வேடமிட்டு சாஸ் திரங்களுக்கு எதிராக செயல்பட்டுவருகின்றனர்.

எல்லாம் கர்ம பயன்தானாம்
அவர் செல்லும் இடங் களில் எல்லாம் சாஸ்தி ரங்களுக்கு எதிரான செயல்களையே செய் கிறார். தரித்திரன் ஒருவன் இருக்கிறான் என்றால் அது அவன் சென்ற பிற வியில் செய்தபாவத்தின் பலன். இப்பிறவியில் அவனுக்கு உதவச்சென்றால் அந்த தரித்திரம் பிறருக் கும் வந்து சேரும், ஆனால் அக்னிவேஷ் துறவி வேடத்தில் இருந்துகொண்டு தர்மத்திற்குக் களங்கம் விளைவிக்கிறார். ஆர்ய சமாஜம் இவரை இந்துமதத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளதாக அறிவிக்க வேண்டும், சாஸ்திர விதிகளைப் பின்பற்றாத எவரும் இந்து அல்ல, இந்த நாடு இந்து நாடு ஆகையால் இந்துமதத் திற்கு எதிராக செயல் படுபவர்கள் தேசத் துரோ கிகள் ஆவர்.

நாங்கள் ஆர்யசாமாஜ்மீது வேண்டு கோள் விடுக்கிறோம். இவரை உடனடியாக இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் இல்லை என்றால் ஆர்ய சமாஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். இவர் முஸ்லீம் தலைவர் களைச் சந்தித்து வரு கிறார். ஒரு துறவியாய் இருந்து முஸ்லீம் மதத் தலைவர்களை எப்படி சந்திக்கலாம்? இப்படிப் பட்ட துரோகி நாட்டிற்கு தேவையில்லை, இவரது தலையை வெட்டி யார் கொண்டுவந்தாலும் அவருக்கு ரூ.5 லட்சம் இனாமாக இந்து மகா சபை தரும். இது குறித்து நாங்கள் யாருக்கும் அச்சப் படத் தேவையில்லை. ஒரு தேசத் துரோகியை தேச பக்தியுடைய யாரும் தட்டிக் கேட்கலாம் என்று கூறினார்.

கொண்டு வா தலையை வெட்டி!

ஸ்வாமி அக்னிவேஷ், மேதாபட்கர் இவர்கள் இணைந்து வட இந்தி யாவில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அன்னா ஹசாரேவின் போராட் டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தகவல் உரிமை சட்டம் கொண்டுவருவதற்கு முக்கியகாரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

வனப்பாதுகாப்பு, நதிநீர் இணைப்பு, பெண் கல்வி போன்ற பிரச் சினைகளை மய்யமாக வைத்து தொடர்ந்து போராடிவருகிறார். அன்னா ஹசாரே மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படுவது தெரிந்து அந்தக்குழுவில் இருந்து விலகி தனித்து போராடி வருகிறார். சமீபத்தில் காஷ்மீரில் உள்ள ஹூரி யத் தலைவர்களை ஸ்வாமி அக்னிவேஷ் சந்தித்தார். இந்த சந்திப்பை ஆர். எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப் புகள் கடுமையாக கருத வேண்டும்.

இந்த நிலை யில் இந்துமகாசபா ஒரு படி மேலே போய் அவ ரது தலையை வெட்டிக் கொண்டுவர பரிசுத் தொகையை அறிவித்துள் ளது. இந்துமத சாஸ்திரங் களின் படி ஏழைப் பார்ப் பானுக்கு மாத்திரம் உதவி செய்யவேண்டும், சூத்திரர் களாக பிறப்பது அவர் களின் சென்ற பிறவியில் செய்த பாவத்தின் பலன், சூத்திரர்களுக்கு உதவி செய்தால் அவர்களின் கர்மபலன் தனக்கும் பிடித்து தானும் அடுத்த பிறவியில் சூத்திரனாய் பிறப்பான் என்று எழுதி யுள்ளது குறிப்பிடத்தக்க தாகும்.



Read more: http://www.viduthalai.in/page1/100337.html#ixzz3YPwqcIrI

தமிழ் ஓவியா said...

முட்டாள்தனம்

மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத் திலேயே மாறும். அவன் சந்ததிக் காலத்திலும் மாறும். ஆகவே, அதைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள் தனம்.
(விடுதலை, 28.4.1943)

தமிழ் ஓவியா said...

கருப்பு என்றால் வெறுப்பா?

சமீபத்தில் வெளியான ஒரு நகைக்கடை விளம்பரம், அதில் பிரபல நடிகையும் விளம்பர மாடலுமான அய்ஸ்வர்யா ராய் மாடலாக நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் ஒரு அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது கருப்பு நிறமுள்ள ஒரு சிறுமி அய்ஸ்வர்யாவிற்கு ஒரு கையில் குடைபிடித்தும் மறுகையில் சாமரம் வீசுவதும் போன்ற அந்த காட்சி கூறுவது என்ன? கருப்பு நிறம் என்றாலே அடிமை நிறம், கருப்பு நிறமுடையவர்கள் அனைவருமே அடிமைகள் என்ற ஒரு மாயையை உருவாக்கி வருகிறார்கள் என்பது பொருள். கருப்புச் சட்டையைக் கொளுத்துவோம் என்றும் கருப்புச் சட்டையை கழற்றுவோம் என்றும் சிலர் கூச்சலிடுகிறார்கள்.

இப்படி பல தளங்களிலும் கருப்பு நிறத்தை ஏளனம் செய்து வருகிறார்கள். 1700-களில் உலகெங்கும் கருப்பின மக்களும் இந்தியர்களும் அடிமைகளாக வேலைக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். ஜெண்ட் வென்ஸர் என்ற டச்சு மாலுமி தனது அனுபவத்தை எழுதும் போது ஆப் பிரிக்கக் கரும்புத் தோட்டங்களில் வேலை பார்க்க இந்தி யாவில் இருந்து நான்கு பேர் மட்டும் அடைத்து வைக்கும் கூண்டுகளில் 10 நபர்களைத் திணித்து மாதக் கணக்கில் கப்பல் பயணம் செய்தோம்; அப்போது போர்ச்சுகீஸிய எஜமானிகளுக்காக கப்பலின் மேல் தளம் முழுவதுமே அலங்காரம் செய்து வைத்திருப் போம். கூண்டில் உள்ள பெற்றோர்களின் குழந்தை களை அந்த எஜமானிகளுக்கு பணிவிடை செய்ய அனுப்பி வைப்போம் என்று எழுதியுள்ளார்.

1800-களில் இந்த கருப்பினச்சிறுவர் சிறுமிகளை வெள்ளைக்கார எஜமானிகள் தங்களின் அடிமைகளாக வைத்திருப்பது மிகவும் அதிகரித்தது. சில வக்கிரக் குணம் கொண்ட வெள்ளைக்கார எஜமானிகள் குழந் தைகளை சித்திரவதை செய்து அவர்கள் வேதனையில் கதறுவதைக் கண்டு ரசித்த சம்பவங்கள் எல்லாம் வெளி உலகத்திற்குத் தெரிந்த பிறகு, அடிமைத்தனத்திற்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கின. இங்கிருந்து தான் அடிமைத்தனத்திற்கு எதிரான சுதந்திரம் என்ற ஒரு மய்யக் கருத்து உருவானது. கடந்த ஆண்டு மரணமடைந்த நெல்சன் மண்டேலா; இந்தக் கருப்பு நிறவெறிப் போராட்டத்தின் காரணமாக தனது இளமைக்காலம் அனைத்தையும் இருண்ட சிறைக்குள் கழித்தார். வேதங்களில் ஆரியர்கள், திராவிடர்களைக் கறுப்பர்கள் என்றும், அவர்களைக் கொல்ல வேண்டும் என்றும் இந்திரனை வேண்டிக் கொள்ளும் சுலோ கங்கள் இருக்கின்றன.

ஒ இந்திரனே! பிப்ரு மிருகாய அசுர அரசர்களை ஆரிய மன்னரான விதாதின் புத்திரன் ரிஜீஷ்வனுக்கு அடிமைப்படுத்தினாய்! அய்ம்பதாயிரம் கறுப்புப் படைகளை அழித்தாய்; முதுமை உயிரை மாய்ப்பது போல அனேகக் கோட்டைகளையும் பாழாக்கினாய்
(ரிக் வேதம் - மண்டலம் 17, ஸ்லோகம் 12)
இதுபோல திராவிடர்களைக் கறுப்பர்கள் என்று கூறும் சுலோகங்கள் ஏராளம், ஏராளம்!
உலகமெங்கும் இப்போது நிறவெறி மறைந்து வருகிறது, அமெரிக்க அதிபராக கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா இருந்து வருகிறார். இந்த நிலையில், இந்தியாவில் புதிதாக பதவியில் அமர்ந்த பாஜக அரசு மதரீதியாக மக்களைப் பிரிக்கும் செயலில் இறங்கிவருகிறது. சமீபகாலமாக நிறவெறித் தனமாக மத்திய அமைச்சர்களே பேசிவந்தனர். கிரிராஜ் என்ற மத்திய அமைச்சர் கருப்பு நிறப்பெண்கள் பற்றி மட்டமான பேச்சு ஒன்றை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அதே போல் கோவா முதலமைச்சர் கருப்பு நிறப்பெண்களை யாரும் கல்யாணம் செய்து கொள்ள மாட்டார்கள். அவர்கள் தவறான வழியில் செல்பவர்கள் என்று கூறியிருந்தார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் நிறம் பற்றியும் மத்திய அமைச்சர் கிரிராஜ் பேசினார் - வேறு வழியின்றி மன்னிப்பும் கோரினார். இந்த விவகாரம் அடங்கும் முன்பே நகைக்கடை விளம்பரம் ஒன்று மீண்டும் கருப்பு நிறத்தை வைத்து தனது வியாபார விளம்பரத்தைத் தொடங்கி யுள்ளது. தமிழகத்தில் புதிதாக நகைக்கடை திறக்கும் இதே நிறுவனம் வேலைக்குஆள் தேவை என்று விளம்பரம் செய்யும் போது சிவப்பு நிறமுள்ள அழகான ஆண்கள் விற்பனைப் பகுதி வேலைக்குத் தேவை என்று கொடுத்திருந்தனர். அதாவது கருப்பு நிற விற்பனைப் பிரதிநிதி இருந்தால் விற்பனை சரியாக நடக்காதாம்; இது எங்கே என்றால் தமிழகத்தின் தலைநகர் சென்னையில்! இப்படி ஒரு நிறபேதம் உள்ளூர நச்சுமரமாக வளர்ந்துகொண்டு இருக்கிறது. நகைக்கடை விளம்பரம் பிரச்சினையாக வெடித்த தால், அந்த விளம்பரத்தை விலக்கிக் கொண்டுள்ளனர். விழிப்பாக இல்லாவிட்டால் குதிரை ஏறி விடுவார்கள் எச்சரிக்கை!

25-04-2015

Read more: http://www.viduthalai.in/page1/100351.html#ixzz3YPxTwrc1

தமிழ் ஓவியா said...

ஆசிரியருக்குக் கடிதம் >>>

ஓ.கே.யா தினமணி?
அயோக்கியதனத்திற்கு அளவில்லையா?

தினமணி என்றொரு ஏடு! நம் பார் வையில் அது இனமணி. ஒவ்வொரு நாளும் அதன் ஒலிப்பில் இதை உணர்த் துகிறது.
நெஞ்சினில் நஞ்சு வைத்து நாவினில் அன்பு வைத்து நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே! என்ற வரிக்கு தினமணி வைத்தியநாத அய்யர் சரியான சான்று!

தமிழ்ப் பற்றாளர் போல் காட்டுவார். ஆனால், தமிழை உள்ளூர அழித்தொழிக் கும் வேலையை அரவமின்றிச் செய்வார்.
நடுநிலையாளர் போல் காட்டுவார். ஆனால், அப்பட்டமாக தன் சார்பு நிலையை வெளிப்படுத்துவார்.

தாலி அகற்றும் நிகழ்ச்சிக்கு காவல் துறை தடை போட்டால், முதல் பக்கத்தில் செய்தி போடுவார். உயர்நீதிமன்ற நீதிபதி அதற்கு தடைவிதித்தால் செய்தியே போடமாட்டார்.

தி.மு.க. மீது ஊழல் வழக்கு வந்தாலே நடந்துவிட்டது போல பக்கம் பக்கமாக எழுதுவார். ஆனால், செயலலிதாவுக்கு தண்டனையே வழங்கப்பட்டாலும் அதை எப்படியெல்லாம் மறைத்தும், மாற்றியும் எழுத முடியுமோ அப்படி எழுதுவார்.
தாலி அகற்றுதல் சிந்தனை வறட்சி என்று கட்டுரை வெளியிடுவார். அதற்கு மறுப்பு எழுதினால் அதை மறைத்து, ஆசிரியர் கடிதத்தில் நான்குவரி வெளியிடுவார்.

உளச் சான்று உறுத்தலே இல்லாமல் மதியென்ற மண்டூகத்தை விட்டு கேலிப் பேசுவார். பெரியார் படத்தையே போட மாட்டார். சங்கராச்சாரியை தெய்வமாகத் தூக்கிப் பிடிப்பார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸில் ஊறி, சோவிடம் ஆசிபெற்று, தினமணியுள் நுழைந்து விட்டவர் இப்படித்தான் இருப்பார் என்பது நமக்குத் தெரிந்ததே. ஆனால், அயோக்கி யத்தனத்தின் உச்சமாய், அபாண்டமாய், ஒரு மாபெரும் இயக்கத்தின் தலைவரை கேவலப்படுத்துவதும், மாண்பின், பண் பாட்டின் உறைவிடமான அவரை, அவரது செயலைத் திரித்து, அவர் சமுதாய, பண் பாட்டுக்கு எதிரிபோலவும், சமூகம் தறி கெட்டுப் போக அவரே காரணம் என்பது போல கேலிக் கருத்து வெளியிடுவதும்

அயோக்கியத்தனத்தின் உச்சமல்லவா?

தாலி என்பது அடிமைச் சின்னம் என்பது திராவிடர் கழகத்தின் கொள்கை, கணிப்பு. இதை பல பெண்கள் மகிழ்வுடன் ஏற்று தாலியை மறுக்கின்றனர்.

சுயமரியாதைத் திருமணச் சட்டமே தாலியில்லாத் திருமணத்தை ஏற்கிறது.
பதிவுத் திருமணம் செய்து கொள்வதை சட்டம் ஏற்கிறது. அதற்கு தாலி கட்டாயம் கட்ட வேண்டியதில்லை.

உண்மைகள் இப்படியிருக்க, தாலி கட்டுகிறவர்கள், கட்டிக் கொள்கிறவர்கள் எல்லாம் கண்ணியவான்கள், ஒழுக்கச் சீலர்கள் போலவும், தாலி கட்டாதவர்க ளெல்லாம் கண்டபடி கண்டவர்களோடு வாழ்பவர்கள் போலவும், அதை தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் தூண்டுவது போலவும், ஆதரிப்பது போலவும் முதல் பக்கத்தில் கருத்து வெளியிடுகிறார்கள் என்றால் அவர்களை எதனால் அடிப்பது?

நான் தாலியில்லாமல் திருமணம் செய்தேன். நானும் என் மனைவியும் ஒருவர் ஒருத்தியென்ற ஒழுக்க நெறியில் இன்றளவும் வாழ்கிறோம். ஒரு புலனாய்வு வைத்து வேண்டுமானால் ஆய்வு செய்து கொள். ஆனால், தாலி கட்டி திருமணம் செய்தவர்கள் எல்லாம் சுத்த சுயம் பிரகாசம் தானா? என்னென்ன ஒழுக்கக் கேடு புரிகின்றார்கள். ஒழுக்கக் கேடு அங்கு இல்லையா? வை(பை)த்தியநாத அய்யருக் கும், மதியென்ற மண்டூகத்திற்கும் தெரி யாதா?

இன்றைக்கு நடக்கின்ற ஒழுக்கக் கேடு களை புரிகிறவர்கள் எல்லாம் தாலி கட்டியவர்களா? கட்டாதவர்களா?
சூடு சொரணை நாணயத்தோடு பதில் சொல்ல வேண்டும்!
தாலி அணிய விருப்பமில்லை, அதை கழற்றி விடுகிறேன் என்று ஒரு பெண் சொன்னால், அப்படிப்பட்ட பெண், ஊர் ஊரா சுத்தலாம் இச் இச் என்று எத்தனை முத்தம் வேணா குடுத்துக்கலாம்; ஹோட் டல்ல தங்கலாம்; வேறு என்ன வேணாலும் பண்ணிக்கலாம், என்று முடிவுக்கு வந்து விட்டாள் என்று அந்த பெண் சொல்கிறாள் என்று பொருள் என்று உங்கள் அகராதி சொல்கிறதா?

இதைக் கேட்டால் அந்தப் பெண் உங்களை முச்சந்தியில் நிறுத்தி முகத்தில் உமிழ மாட்டாரா?
இதைத்தான் திராவிடர் கழகம் சொல்கிறது என்கிறீர்களே என்றைக்கு இப்படி திராவிடர் கழகம் சொன்னது? ஆதாரம் காட்ட முடியுமா? அற்பத்தனத் திற்கும் அயோக்கியத் தனத்திற்கும் அளவில்லையா?

இப்படியெல்லாம் எழுதினாலும் தண்டிக்கப்படக் கூடாது என்று தலையங்கம் வேறு இன்று எழுதுகிறாய். உங்களை மட்டும் எவனும் தண்டிக்கக் கூடாது. ஆனால், மற்றவர்களெல்லாம் தப்பு செய்யாமலே தண்டிக்கப்பட வேண்டும். இதுதானே ஆரிய தர்மம். பத்திரிகை இருக்கிறது என்பதால் எதை வேண்டுமானாலும் எழுதுவதா? இது பேனா ரவுடித்தனம் இல்லையா?
உடம்பெல்லாம் நெய்யைப் பூசிக் கொண்டு எவனோடு வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம் என்பதும், மனிதனை மட்டுமல்ல குதிரையோடு படுத்துக்கூட பிள்ளை பெறலாம் என்பதும் உங்கள் கலாச்சாரமே ஒழிய திராவிடர் கலாச்சாரமல்ல.
ஓகே தினமணி!
- மஞ்சை. வசந்தன்

25-04-2015

Read more: http://www.viduthalai.in/page1/100380.html#ixzz3YPxjfoc6

தமிழ் ஓவியா said...

முக நூலில் ஒரு கருப்புச் சட்டையின் நன்றியுரை

நீ கொடுத்த அறிவுச் சுடர் கொண்டு காவிக் குப்பையைக் கொளுத்துவோம்
ஷீ அறிவழகன் கைவள்ளியம்
உணர்வுப்பூர்வமாக நான் ஒருபோதும் பெரியாரை அணுகி யதே இல்லை, அவர் அப்படிச் சொல்லியதும் இல்லை, ஓரளவுக்கு விவரம் தெரிந்த பிறகு முன்னோர் களின் வரலாற்றை வாய் வழிச் செய்திகளின் மூலமாக அறியத் துவங்கினேன், பல வீடுகளில் இருந்த கடவுளர் படங்களுக்கும், ராமாயண மகாபாரதக் கதைகளுக் கும் பதிலாக எனது கிராமத்து வீட் டின் எல்லா

இடங்களிலும் மார்க் சும், ஏங்கெல்சும், கார்க்கியும், அம் பேத்கரும், உலக வரலாறும் பெருகிக் கிடந்தன.
வயற்காடுகளில், காடு, கழனி களில் உழைப்பையும், விவசாயத்தை யும் மட்டுமே நம்பிக் கிடந்த தலை முறை இந்தக் கிழவனின் வரவுக்குப் பிறகுதான் கல்வியும், அரசியலும், பொருளாதார மேம்பாடும் சக மனி தர்களின் வாழ்க்கையைப் போல எமது உரிமை என்கிற உணர் வையே இந்தக் கிழவன் தான் எமது கிராமத்துக்குள் கொண்டு வந்து சேர்த்தவன், அரசியல் இயக்கங்கள், கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள் என்று தெரி யாத பல்வேறு சொற்களை கிழ வனின் வருகைக்குப் பிறகுதான் அறிந்திருக்கிறார்கள் எமது முன் னோர்கள்.

நமது வயல்களுக்கும், குடிசை களுக்கும் அப்பால் ஒரு மிகப்பெரிய உலகம் இயங்கிக் கொண்டிருக் கிறது என்கிற உண்மையை உணர்ந்தவர்களில் பலர் மேற் கல்வியை நோக்கி நகர்ந்தார்கள், இன்று வயற்காடுகளில் இருந்து உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவிக் கிடக்கும் எமது குடும்பத் தின் மீது அன்று விரவத் துவங்கிய கருப்பின் சாயல் அறிவின் நிழல்.

கறுப்புச் சட்டை பெருகி இருந்த இடங்களில் சாதியும், மதமும் அருகிப் போயிருந்தது, கறுப்புச் சட்டை அணிந்த இடங்களில் எல் லாம் சமநீதியும், சுயமரியாதையும் நிறையக் கிடைத்தது, ஒவ்வொரு பொதுக் கூட்டங்களும், ஒவ்வொரு கலந்துரையாடல் வெளிகளும் உலகின் அறிவுச் சாளரங்களைத் திறந்து பாரடா எம்முடன் பிறந்த மானுடப் பரப்பை என்று உச்சத் தில் உணர வைத்தது.

தந்தை பெரியாரும், அவர் எமக்குக் கொடையளித்த கறுப்புச் சட்டையும் வெறும் நிறமல்ல, இந்த தமிழ்ச் சமூகத்தில் எமக்குக் கிடைத்த மதிப்பும், நீதியும். சில காலமாக எனது உள்ளத்தை அரித் துக் கொண்டிருந்த ஒரு விஷயம்,
"இந்தக் கிழவன் இந்த சமூகத்தை ஒரு சுயமரியாதை உள்ள சமூகமாக மாற்றவும், இந்த தமிழ்க் குடியின் பண்பாடுகளையும், பெருமைகளை யும் மீட்டெடுக்கத் தானே அத் தனை வலியோடும் பேசினான், எழு தினான், அலைந்து திரிந்து அல்லும் பகலும் அயராது உழைத்தான்" அந்த நன்றியையும், அந்த உழைப் பையும் இந்த சமூகம் மறந்து போனதே என்று தவித்த பொழு துகள் உண்டு.

ஆனால், இப்போது இந்த சொற்றொடரை எழுதிக் கொண்டி ருக்கும் இந்தக் கணத்தில் நிறை வாகவும், மகிழ்ச்சியாகவும் இருக் கிறது, எமது இளைய தலைமுறை, எமது மாணவப் பிஞ்சுகள், எமது குழந்தைகள், பல்லாயிரம் தமிழ்க் குடியின் சொந்தங்கள் என்று எல்லாத் தரப்பையும் எமது கிழவன் எப்படி வென்றிருக்கிறான், இணைய வெளியில் எங்கு நோக்கினும் அதே கருப்பின்

நிழல்......
நன்றி மறப்போம் என்று நினைத்தாயோ ஐயா........நீ கொடுத்த அறிவுச் சுடர் கொண்டு காவிக் குப்பையைக் கொளுத்துவோம் அய்யா, விடாது கருப்பு...



Read more: http://www.viduthalai.in/page1/100356.html#ixzz3YPxxXlgZ

தமிழ் ஓவியா said...

ஆதிதிராவிடர் இல்லையா?

அடுத்த மார்ச்சு, ஏப்ரல் மாதத்தில் நிர்வாக சபையில் ஓர் இடம் காலியாகும் என்று ஏஷ்யம் கூறப்படுகிறது. இக்காலியாகும் இடத்தில் யார்? உட்காருவது என்பதுபற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஏஷ்யம் கூறி, சிலர் பெயரை சிபார்சும் செய்கிறது.

வகுப்புத் துவேஷத்தை வெறுக்கும் சகவர்த்தமானியான சுதேசமித்திரன் ஒரு அய்யங்கார், அல்லது அய்யர் கனவான் பெயரைச் சிபார்சு செய்வதுடன், முன்பு பனகால் காலத்தில் காபினெட்டில் ஒரு பிராமணர் இருக்கவேண்டு மென்பதற்காகவே மந்திரியாக ஒரு பிராமணரை நியமித்ததாகவும் அந்நியாயப்படி இன்று ஒரு பிராமணர் அவசியம் என்று கூறுகிறது.

இதுவரை பெரிய உத்தியோகங்களில் அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார் எல்லாம் நீண்ட நாள் இருந்து பார்த்துவிட்டார்கள். அதைப்போன்றே முஸ்லிம், கிருஸ்துவர், முதலியார், நாயுடு, தமிழர், தெலுங்கர், கேரளர் முதலிய யாவரும் இருந்து பார்த்து விட்டார்கள் என்று நமது சகவர்த்தமானிக்கு இவைகளைக் கூறுகிறோம்.

ஆனால், இதுவரை இந்நாட்டில் ஜனசங்கையில் நாலில் ஒரு பாகத்தி னரான ஆதிதிராவிடர் என்பவர்களில் ஒருவர்கூட இது வரையில் அங்கு இருந்து பார்த்ததில்லை. இன்று ஆதி திராவிட முற்போக்கைக் குறித்து எங்கும் பலத்த கிளர்ச்சி இருக்கிறது. ஆதலால் சகலரும் ஒன்றுசேர்ந்து ஆதிதிராவிட கனவான் ஒருவர் அங்கு வர முயற்சிக்கக் கூடாதா? என்பதே!

நமது மாகாண ஆதிதிராவிட சமுகத் தலைவர்கள் தங்களுக்குள்ள அற்ப அபிப்பிராய பேதங்களை விட்டொழித்து ஒரு ஆதிதிராவிட கனவான் அங்குவர முயற்சிப்பார்களா? அல்லது இன்றுள்ளதுபோன்ற உயர்தர ராஜதந்திரிகளின் முன்னோடும் பிள்ளையாக மட்டும் இருந்தும் தங்கள் காலத்தைக் கடத்த ஆசைப்படுகிறார்களா? ஆதிதிராவிடர்கள் ஒன்றுபட்டால் இது கிட்டாது போகுமென்று நாம் நினைக்கவில்லை.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934



Read more: http://www.viduthalai.in/page1/100365.html#ixzz3YPzwbvEB

தமிழ் ஓவியா said...

பொக்கிஷ மெம்பர் பொய்யரா?
நாட்டில் மிராசுதாரர்கள் துயரச் சத்தம் மிகவும் பலமாகப் போய்விட்டது. நிலவரி மட்டுமல்ல, தண்ணீர் வரியையும் சேர்த்து நூற்றுக்கு 25 விகிதம் குறைக்கவேண்டுமென்று நேற்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவ்வாதத்தில் மிராசுதார்களோ வரிகொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள் என்கிறார்கள்.

கவர்ன்மெண்டு பொக்கிஷ மெம்பர் அவர்களோ மிராசுதார் கூச்சல் வெறுங்கூச்சல் என்கிறார். இருக்கும் ரிசர்வு பண்டைக்காலி செய்வதற்காகவே நிலவரி குறைக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

இவ்விரண்டில் எது உண்மை என்பதும், உண்மையாகவே கஷ்ட நிலையிலுள்ள விவசாயிகளைச் சர்க்கார் கவனிக் கிறார்களா? இல்லையா? என்பதும் நம்முடைய விவாதமல்ல. பொக்கிஷ மெம்பர் சொல்வதில் சிறிது உண்மையுண்டு.

அத்துடன் மிராசுதார்களுக்கே இவ்வளவு கஷ்டமானால், மிராசுதார்களிடம் வேலை செய்யும் சோகமுடைய விவசாயக் கூலிகளின் நிலைமை என்ன? என்பதைச் சிந்திக்க மிராசுதார்கள் தவறமாட்டார்கள் அல்லவா? அவர்கள் குறைகளைச் சொல்ல எந்த சட்டசபை இருக்கிறது!

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934



Read more: http://www.viduthalai.in/page1/100365.html#ixzz3YQ05MrHR

தமிழ் ஓவியா said...

தோழர் ஜவகர்லாலும், சர்.சி.பி.யும்



சர்.சி.பி ராமசாமி அய்யர் ஆதியில் ஆடிய ஆட்டங்களும், அவர் பிரபல தேசியவாதியாக விளங்கிய கதையும், ஹோம் ரூல் கிளர்ச்சிக்காரராக விளங்கிய கதையும், பனகால் அரசர் அவர் களால் அடக்கி விடப்பட்ட கதையும் அகில உலகம் அறிந்த விஷயம்.

சர்.சி.பி.சென்னை மயிலாப்பூர் வாசியாக கருதப்பட்ட போதிலும், தஞ்சை ஜில்லாவிலுள்ள திருப்பனந்தாள் மடத்து பழைய ஏஜண்ட் ராம சுவாமி அய்யரின் பௌத்திரர் என்ற முறையில் தஞ்சை ஜில்லாவாசிதான் என்பதை நாம் அறிவோம். இந்தக் கனவான் அரசியல் உலகில் எந்தப்படித் தரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது, பொது ஜனங்களுக்கு நன்கு தெரியும்.

இப்பெருமான் காந்தியின் ஒத்துழையாமை முழு வேகமாய்கூட இருந்து சட்டசபைகளுக்கு அபேட்சகர்களாக நிற்பதிற்குக்கூட ஆட்கள் கிடைக்காத காலத்தில், பெல்லாரி ஜில்லாவின் பிரதிநிதியாக இந்திய சட்டசபைக்குச் சென்று காந்தியை விடவேண்டுமா? வேண்டாமா? என்ற பிரச்சினை ஓட்டுக்கு விடப்பட்ட காலத்தில், நடுநிலைமை வகித்து உலக மக்களின் முழு கவனத்தையும் பெற்ற ராவ்பகதூர் ஒருவர் தலைமையில் இந்திய அரசியல் நிலையைப் பற்றி பேச முற்பட்டது வெகு பொருத்தமான தென்றே கருதுகிறோம்.

தலைமை வகித்த ராவ்பகதூர் சுப்பிரமணிய பந்துலு அவர்களோ, பிரசங்கம் செய்த சர்.சி.பி. ராமசாமி அய்யரோ நாட்டிற்குச் செய்துள்ள தொண்டினையும், தோழர் ஜவஹர்லால் அவர்கள் செய்துள்ள தொண்டினையும் ஒத்திட்டுப் பார்ப்போமானால், தோழர் ஜவகர் தலைசிறந்து விளங்குவார்.

தோழர் ஜவகர்லால் முன்னுக்குப்பின் முரணான கொள்கைகளை நாட்டில் பரப்புவதாக விஷமப்பிரச்சாரம் செய்யும் அய்யர், ஜவகர்லால் நேரு அவர்களின் பொது உடைமைக்கொள்கையைக் கண்டு கொண்ட பீதியின் காரணமாகவே எழுந்த பிதற்றலாகக் கருதுகிறோம்.

எனினும் தோழர் ஜவகர், காந்தியின் கீழ்நின்று சமதர்மத் திட்டங்களை, எவ்வளவு உயர்த்திக் கூப்பாடு போட்டாலும் செயலளவில் பொது ஜனங்களுக்குப் பயன்படாது என நிச்சயமாக நாம் நன்கு அறிந்தாலும், நிச்சயமாக இந்நாட்டில் செய்யப்பட வேண்டிய ஒரு முக்கிய வேலையை தைரியமாய் வெளிப்படுத்திய காங்கிரகாரர் என்ற முறையில் தோழர் ஜவகர்லால் அவர்களைப் போற்றுகின்றோம்.

ஜாதி, சமய சங்கடங்கள் அழிக்கப்பட்டு, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசங்களுக்கு அடிப்படையாக இருந்துவரும் பொரு ளாதார அமைப்புகள் மாற்றப்பட வேண்டிய அவசியத்தை வற்புறுத்திய தோழர் ஜவஹர்லால் நேருவைச் சமதானாதிபதி களின் அறியாமையை ஆயுதமாக உபயோகித்து சுகபோகங்களை அனுபவித்து வரும் அய்யர் கூட்டத்தார் வெறுப்பது சகஜமே.

- புரட்சி - செய்திவிளக்கம் - 22.04.1934



Read more: http://www.viduthalai.in/page1/100369.html#ixzz3YQ0flHkD

தமிழ் ஓவியா said...

தோழர் ஜவகர்லாலும், சர்.சி.பி.யும்



சர்.சி.பி ராமசாமி அய்யர் ஆதியில் ஆடிய ஆட்டங்களும், அவர் பிரபல தேசியவாதியாக விளங்கிய கதையும், ஹோம் ரூல் கிளர்ச்சிக்காரராக விளங்கிய கதையும், பனகால் அரசர் அவர் களால் அடக்கி விடப்பட்ட கதையும் அகில உலகம் அறிந்த விஷயம்.

சர்.சி.பி.சென்னை மயிலாப்பூர் வாசியாக கருதப்பட்ட போதிலும், தஞ்சை ஜில்லாவிலுள்ள திருப்பனந்தாள் மடத்து பழைய ஏஜண்ட் ராம சுவாமி அய்யரின் பௌத்திரர் என்ற முறையில் தஞ்சை ஜில்லாவாசிதான் என்பதை நாம் அறிவோம். இந்தக் கனவான் அரசியல் உலகில் எந்தப்படித் தரத்தில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பது, பொது ஜனங்களுக்கு நன்கு தெரியும்.

இப்பெருமான் காந்தியின் ஒத்துழையாமை முழு வேகமாய்கூட இருந்து சட்டசபைகளுக்கு அபேட்சகர்களாக நிற்பதிற்குக்கூட ஆட்கள் கிடைக்காத காலத்தில், பெல்லாரி ஜில்லாவின் பிரதிநிதியாக இந்திய சட்டசபைக்குச் சென்று காந்தியை விடவேண்டுமா? வேண்டாமா? என்ற பிரச்சினை ஓட்டுக்கு விடப்பட்ட காலத்தில், நடுநிலைமை வகித்து உலக மக்களின் முழு கவனத்தையும் பெற்ற ராவ்பகதூர் ஒருவர் தலைமையில் இந்திய அரசியல் நிலையைப் பற்றி பேச முற்பட்டது வெகு பொருத்தமான தென்றே கருதுகிறோம்.

தலைமை வகித்த ராவ்பகதூர் சுப்பிரமணிய பந்துலு அவர்களோ, பிரசங்கம் செய்த சர்.சி.பி. ராமசாமி அய்யரோ நாட்டிற்குச் செய்துள்ள தொண்டினையும், தோழர் ஜவஹர்லால் அவர்கள் செய்துள்ள தொண்டினையும் ஒத்திட்டுப் பார்ப்போமானால், தோழர் ஜவகர் தலைசிறந்து விளங்குவார்.

தோழர் ஜவகர்லால் முன்னுக்குப்பின் முரணான கொள்கைகளை நாட்டில் பரப்புவதாக விஷமப்பிரச்சாரம் செய்யும் அய்யர், ஜவகர்லால் நேரு அவர்களின் பொது உடைமைக்கொள்கையைக் கண்டு கொண்ட பீதியின் காரணமாகவே எழுந்த பிதற்றலாகக் கருதுகிறோம்.

எனினும் தோழர் ஜவகர், காந்தியின் கீழ்நின்று சமதர்மத் திட்டங்களை, எவ்வளவு உயர்த்திக் கூப்பாடு போட்டாலும் செயலளவில் பொது ஜனங்களுக்குப் பயன்படாது என நிச்சயமாக நாம் நன்கு அறிந்தாலும், நிச்சயமாக இந்நாட்டில் செய்யப்பட வேண்டிய ஒரு முக்கிய வேலையை தைரியமாய் வெளிப்படுத்திய காங்கிரகாரர் என்ற முறையில் தோழர் ஜவகர்லால் அவர்களைப் போற்றுகின்றோம்.

ஜாதி, சமய சங்கடங்கள் அழிக்கப்பட்டு, ஏழை பணக்காரன் என்ற வித்தியாசங்களுக்கு அடிப்படையாக இருந்துவரும் பொரு ளாதார அமைப்புகள் மாற்றப்பட வேண்டிய அவசியத்தை வற்புறுத்திய தோழர் ஜவஹர்லால் நேருவைச் சமதானாதிபதி களின் அறியாமையை ஆயுதமாக உபயோகித்து சுகபோகங்களை அனுபவித்து வரும் அய்யர் கூட்டத்தார் வெறுப்பது சகஜமே.

- புரட்சி - செய்திவிளக்கம் - 22.04.1934



Read more: http://www.viduthalai.in/page1/100369.html#ixzz3YQ0flHkD

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இந்துக் கடவுள்

கைகளில் கொலைக் கருவிகளை, ஆயுதங் களை வைத்திருக்கும் இந்துக் கடவுளிடமிருந்து எப்படி அன்பையும் அரு ளையும் எதிர்பார்க்க முடியும்?



Read more: http://www.viduthalai.in/page1/100280.html#ixzz3YQ1Wh2aD

தமிழ் ஓவியா said...

மனிதன்

பலவிதக் கருத்துகளையும், நிகழ்ச்சி களையும்பற்றிச் சிந்தித்து இது நல்லது, இது தீயது என்று உணரக்கூடிய சக்தி பெற்று, நல்லனவற்றைக் கடைப்பிடிக்கக் கூடியவன் எவனோ அவனைத்தான் மனிதன் என்று கூற முடியும்.
(விடுதலை, 9.6.1962)



Read more: http://www.viduthalai.in/page1/100265.html#ixzz3YQ2t85vP

தமிழ் ஓவியா said...

மழை பொழியவில்லை என்றால்...


மழை பொழியவில்லை என்றால், கொடும்பாவி கட்டி இழுப்போமா, கோபால பஜனை செய்வோமா, என்று தான் புத்தி போகிறது. இது வெறும் ஏமாளிப் புத்தி. இதிலேயே, எத்தரின் புத்தியும் வேலை செய்ய ஆரம்பித்தால் மழை பெய்வதற்கு வருண ஜெபம் செய்வது என்று ஆரம்பிக் கிறார்கள். இப்படிப்பட்ட விதமாகத்தான் நம்மவர்களின் சிந்தனை சென்று கொண்டிருக்கிறதேயொழிய, மேனாட்டு விஞ்ஞானிகள் போலவா, மழை இயற்கை நிகழ்ச்சிதான் என்றாலும், அதையே ஏதேனும் செயற்கை முறையால் நாம் உண்டாக்க முடியாதா, என்று செல்கிறது. அவர்களின் சிந்தனை அந்தத் துறையிலேயும் சென்று, இப்போது மழையை உண்டாக்கும் முறையையும் விஞ்ஞான ரீதியாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் - இனி இத்துறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்திய வண்ணம் இருக்கின்றனர்.

இங்கு வான மழை போலே, மேனி வண்ணம் கொண்டான் என்று பாடிக்கொண்டே காலந்தள்ளுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஒரு ஊரில், மழை இல்லாமல் போகவே, அவ்வூர் புத்திசாலிகள், சூரியன் மீது கல்லை விட்டெறிந்தார்கள். மழை வேண்டும் என்று, பயிர் வளரவில்லை எதிர்பார்த்தப்படி என்றால், விதையால் வந்த தவறா, உழவுமுறையால் வந்த தவறா, ஏதேனும் பூச்சி புழு அரிக்கிறதா, அல்லது மண்ணின் சத்தே கெட்டுவிட்டதா என்பன போன்றவைகளிலே நம்மவர்களின் எண்ணம் போவதில்லை - பச்சையம்மனுக்கு பொங்கலிடுவது, அரசமரத்துக்கு மஞ்சள் பூசுவது என்று இப்படி ஏதாவதொரு அர்த்தமற்ற விஷயத்தின் மீது தான் எண்ணம் போகிறது.

தமிழ்நாட்டுப் பிற்கால மன்னர்கள் பலர், மழை காலா காலத்திலே பொழியாமற் போனால் என்ன செய்வதென்று, பயந்து மழையைச் பொழியச் செய்ய, வருண ஜெபம் செய்வதற்காகவே, அவர்களுக்கு மானியங்கள் - இனாம்கள் தரப்பட்டன. தஞ்சை மாவட்டத்திலே, இப்படி வருண ஜெபம் செய்வதற்காக அளிக்கப்பட்ட இனாம்கள், இன்றும் அந்தப் பரம்பரையினரிடம் உள்ளன
(நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)

எந்த அரசர்கள் பிற்போக்காளராயிருந்து வருண ஜெபம் செய்தனர் என்று அண்ணா அவர்கள் குற்றசாட்டுகிறார் களோ, அதே அண்ணா பெயரைக் கட்சியில் தாங்கிய கட்சி - ஆட்சி அதே வருண ஜெபத்தைச் செய்கிறது என்றால் அண்ணாவைப் புரிந்த அழகும் அவரை மதிக்கும் அழகும் மிகப் பரிதாபமாகும்.

இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் இந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ் செழியன் அவர்கள் இயற்கையை நோக்கி வழிபாடு செய்வோரை படு கிண்டல் செய்து எழுதி இருக்கிறார். இயற்கையையோ அல்லது இயற்கைப் பொருட்களின் பண்புகளையோ வழிபாட்டுரையால் நாம் மாற்றிவிட முடியுமா? வழிபடுவதன் மூலம் கலைகளை விரிவு படுத்துவதோ அல்லது அடக்கி வைக்கவோ நம்மால் ஆகுமா? பலியிடுவதன் மூலம் காற்றுகளின் திசையை மாற்றிட நம்மால் இயலுமா? மண்டியிடுதல் நமக்குச் சொத்துகளைச் சேர்த்து தருமா? வேண்டுதலைச் செய்வதன் மூலம் நாம் நோயைப் போக்கி கொள்ள முடியுமா? சடங்கு நிறைவேற்றுவதன் மூலம் நாம் அறிவைப் பெருக்கிக் கொள்ள இயலுமா? படையல் போடுவதன் மூலம் நன்மையையோ அல்லது மதிப்பையோ நாம் பெற்றுவிடக் கூடுமா? (மதமும் மூட நம்பிக்கையும் பக்கம் 23)

இவ்வளவையும் எழுதிய நாவலர் இரா.நெடுஞ்செழியன் தான் மாண்புமிகு நிதி அமைச்சராக இருக்கிறார். இந்த ஆட்சியில்தான் மழை பொழிவதற்காக வழிபாடு நடத்தப்படுகிறது. அறிவிலும் இல்லை
அய்யா வழியுமில்லை
அண்ணா வழியுமில்லை
என்றாலும் இந்த ஆட்சியில் வருண ஜெபம் நடக்கிறது!
(நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)



Read more: http://www.viduthalai.in/page1/100266.html#ixzz3YQ4EhJsw

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு வினாக்கள்


உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு மனிதனும் செத்துப் போவது உண்மைதான் என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சியும் அவன் துவக்கிய காரியமும் செத்துப் போய் விடுவதில்லை; அதுவும் அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பி விட்டால் அந்த எண்ணம் ஒரு போதும் அழியாது


Read more: http://www.viduthalai.in/page1/100268.html#ixzz3YQ4mBaGs

தமிழ் ஓவியா said...

பசுக்களைப் பாதுகாக்கும்போது, பெண் சிசுக்களை ஏன் பாதுகாக்கக்கூடாது?

பிவானி, ஏப்.24_ மூன்று மாநிலங்களில் செல்வாக் கான ஜாதியான காப் அல் லது ஜாதிக்குழுக்களின் ஆணாதிக்கம் மட்டுமே நிலவிவரும் காப் பஞ்சாயத் துக் கூட்டத்தில் பழைமை களைத் தகர்த்து இரண்டு பெண்கள் பெண்சிசுக் கொலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.

பசுவதைக்கு எதிராக கடுமையான சட்டத்தைப் போட்டு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் அதேநேரத் தில் பெண் சிசுக்கொலை ஏன் கடுமையான நடவடிக் கைகளை அரசுகள் எடுக்க வில்லை என்று அவர்கள் கேட்கின்றனர்.
அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களுக்கான காப் இனத்தவருக்கான ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் மகா பஞ்சாயத்து (மாபெரும் சபை) சார்பில் 100பேருக்கும்மேல் காப் பஞ்சாயத்தார் கூடிய கூட் டத்தில், பழைமையை உடைத்துக்கொண்டு இரண்டு பெண்கள் எழுந்து கேள்வி கேட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் சனவரி மாதத்தில் பானிப்பட்டில் பெண் குழந்தைகள் எண் ணிக்கைச் சரிவைத் தவிர்ப் பதற்காக பெண் குழந்தை கள் நலத் திட்டங்களை மோடியின் அரசு அறிவித் திருந்தது. பெண்குழந்தை களை காப்போம், வளர்ப் போம் என்கிற திட்டத் தைத் தொடங்கினார். அத்திட்டத்தை முன்னெ டுக்கவும் அக்கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.

நாட்டிலேயே அரி யானா மாநிலத்தில்தான் பெண்கள் எண்ணிக்கை குறைந்து பாலியல் விகிதத் தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
மான் பகுதியைச் சேர்ந்த ஜாட் மகாசபாவின் பொதுச் செயலாளர் ஓம்பிரகாஷ் கூறுகையில், பசுவைப் பாதுகாப்பதுபோன்று, அரியானா அரசு பெண் சிசுக்கொலையில் ஈடுபடுப வர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முன்வரவேண்டும். மேலும், குற்றம் நிரூபிக்கப்படும் போது, அவர்களுக்கு அதிக பட்ச தண்டத்தொகை விதிக்கப்படவேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, பசுவதையைத் தடுப்பதற்கு கடுமையான சட்டத்தை இயற்றும் போது, பெண்சிசுக்கொலை யைத் தடுப்பதற்கு கடுமை யான சட்டம் ஏன் இல்லை? அந்த பெண் சிசுக்களுக்கு உலகையே காணக்கூட வாய்ப்பு அளிக்கப்படாமல் கருவிலேயே கொல்லுபவர் கள்மீது நடவடிக்கை எடுப் பதற்கு கடுமையான சட்டம் தேவை இல்லையா? என்றார்.

அரியானாவில் விலங்கு களைக் கொல்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை யிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. விலங்கு களைக் காப்பதற்கும், அவை களைப் பராமரிப்ப தற்கும் கடந்த மாதத்தில் அரியானா சட்டமன்றத் தில் பசு வதைத் தடைக்காக சட்ட வரைவு தாக்கலாகி உள்ளது.

காப் பஞ்சாயத்தார்கள் என்பவர்கள் ஜாதீயக் குழுக்களின் ஆதிக்கங் களைக் கொண்டுள்ளவர் கள். ஆனால், அவர்கள் அளித்த தீர்ப்புகளால் பெரிதும் முரண்பாடுகள் உள்ளவர்களாவார்கள். அவர்களைவிட கீழ்நிலை யில் வைக்கப்பட்டுள்ள சாதியினரான கோத்ரா (துணை ஜாதியினர்) ஜாதி யினருடன் திருமணம் புரிந்துகொள்வது, அலை பேசிகள் வைத்திருப்பது மற்றும் பிற பிரச்சினை களில் முரண்பாடுகளுடன் இருப்பவர்களாகவே இருக் கிறார்கள்.

பிரகாஷ் மேலும் கூறு கையில், பெண் குழந்தை களின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை மக்களிடையே பரப்புவதற்கு குழுக்களை அமைப்பதென பஞ்சாயத் தில் முடிவு செய்யப்பட் டுள்ளது. மாவட்டம், ஒன் றியம் மற்றும் கிராமங்கள் தோறும் சென்று பெண் குழந்தைகள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. என்றார்.
மேலும் அவர் கூறும் போது, பெண் சிசுக் கொலை செய்தால் அவர் களை சமூகத்தைவிட்டுத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ள னர். பெண் குழந்தை களுக்கு கல்வி அளிப்பதில் போராடும் நிலையே உள்ளது.

கறையாக உள்ள வரதட்சணை முறைகுறித் தும் மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்த வேண் டும். பெண்களுக்கு போதிய பாதுகாப்பை அளிக்கும் சமூகமே ஆரோக்கியமான மாக இருக்கும். பெண் சிசுக்கொலை குறித்து தகவல் அளிப்பவர்கள் காப் பஞ்சாயத்தார் சார்பில் கவுரவிக்கப்படு வார்கள் என்று கூறினார்.



Read more: http://www.viduthalai.in/page1/100255.html#ixzz3YQ57SRoY

தமிழ் ஓவியா said...

தாலி அகற்றிய செயலுக்குப் பதிலடியாம்!

இன்றைய தினமலர் 11ஆம் பக்கத்தில் மேற்கண்ட தலைப்பில் ஒரு செய்தி வெளி வந்துள்ளது.

14ஆம் தேதி பெரியார் திடலில் நடந்த தாலியகற்றும் நிகழ்ச்சிக்கு பதிலடி கொடுக்கப் போகிறார்களாம், இதனை செய்யப் போவது அடி யார்கள், பக்தர்கள் கூட்டமைப்பாம்.

சரி... என்ன செய்யப் போகிறார் களாம்? சென்னையில் அடிமைத் தளையாம் தாலியை அகற்றிக் கொண்டவர்களின் கணவன்மார்கள் இறந்து விட்டதாகக் கருதி, வரும் 29ஆம் தேதி திருவண்ணாமலை ரமணாசிரமம் அருகே கருமகாரியம் செய்யப் போகிறார்களாம்.

ஆகா! என்ன பரந்த பெருந் தன்மையான குணம்! தாலியை அகற்றிக் கொண்டவர்களின் துணைவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்கள் - தங்கள் துணைவரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுதான் தாலியை அகற்றினார்கள். அதற்கான காரணங் களையும் விளக்கிக் கூறினார்கள்.

தங்களுக்குப் பிடிக்கவில்லை அல்லது சீரணித்துக் கொள்ள முடிய வில்லை என்பதற்காக உயிரோடு இருக்கும் அந்தப் பெண்களின் துணைவர்களை செத்தவர்களாகக் கருதி கருமக் காரியங்களைச் செய் கிறார்களாம்?

உயிரோடு இருப்பவர்களை சாகடிக்கத் துடிக்கும் இந்தப் பக்த கே(கோ)டிகளின் பரந்த உள்ளத்தைக் கவனித் தீர்களா? ஆகா! அதில் எவ்வளவுப் பெரிய மனிதாபிமானம் குடிகொண்டு இருக்கிறது. நாத்திகர் களுக்கு வைத்தியம் பார்க்காதே என்று காஞ்சி சங்கராச்சாரியார், சந்திரசேக ரேந்திர சரஸ்வதி கூறவில்லையா - அத்தகையவர்களின் சீடர்கள் இப்படித் தான் குரூரமாக நடத்து கொள்வார்கள்.

நமக்கு ஒரு சந்தேகம்! இந்து மத சடங்குப்படி, இறந்து போன தந்தைக்கு மகன்தான் கரும காரியங்களைச் செய்வான். அப்படியானால் திருவண் ணாமலையில் கரும காரியங்களைச் செய்பவர்கள் இவர்களுக்குப் பிறந்த வர்களா? (ஆசை வெட்கமறியாது என்பது பழமொழி).

ஆத்மா, மோட்சம், நரகம், மறு பிறப்பு, பிதுர்லோகம் ஆகியவற்றைக் கற்பித்தவன் அயோக்கியன் என்று சொல்கிற கருஞ்சட்டைக்காரர்களுக் குக் கரும காரியம் செய்பவர்களை எந்தப் பட்டியிலில் தான் சேர்ப்பது? பக்தி மார்க்கத்தில் கிடந்து உழன்ற ரமண ரிஷியே புற்றுநோய் கண்டுதான் சித்திரவதைபட்டுச் செத்தார். இந்த நிலையில் ரமண ரிஷி ஆசிரமம் அருகில் கரும காரியங்களைச் செய்யப் போகிறார்களாம்.

சரி, கரும காரியங்களை எந்த வகையில் செய்யப் போகிறார்களாம்? 21 பசுக்களுக்கு 21 சாதுக்கள் கொண்ட குழுக்கள் மூலம் பிண்டதானம் வழங்கப்படுகிறதாம்.

எப்படியென்றாலும், பார்ப்பான் வயிற்றில் அறுத்துக் கொட்டும் வேலை மட்டும் தங்கு தடையின்றி நடந்தாக வேண்டும். உயிரோடு இருப்பவர்களுக் குக் கரும காரியம் செய்தால் அந்தப் பாவம் கரும காரியங்களைச் செய்ப வர்களுக்கு வந்து சேரும் என்று இந்து சாஸ்திரங்களில் சொல்லப்பட வில்லையா?

தாலியைப்பற்றி இப்படியெல்லாம் செய்தியை வெளியிடும் தினமலரின், அதே செய்தியில் இன்னொரு தகவ லும் இடம் பெற்றிருக்கிறது (வசதியாக மாட்டிக் கொண்டீர்களா?)

பெண்ணின் கற்புக்குப் பாதகம் ஏற்பட்டால் அவளைக் காப்பாற்றுவ தற்கு அடையாளமாக, காட்டுக்குச் சென்று கொடிய விலங்கைக் கொன்று, அதன் பற்களை எடுத்து வருவதுதான் என்று கூறப்பட்டுள்ளது.
தாலிக்காகத் தாண்டிக் குதிக்கும் த(அ)டியார்களே! நீங்கள் குறிப்பிட் டுள்ள இந்த நிபந்தனையை ஏற்கத் தயாரா?

காட்டுக்குச் சென்று புலியையோ, காட்டு விலங்கையோ கொன்று அதன் பல்லைக் கொண்டு வந்து தாலி கட்டி விட்டு அதற்குப் பிறகு கருப்புச் சட் டைக்காரனுக்குச் சவால் விடுங்கள் - அதுதான் யோக்கியமான செயல்! ஒழுக்கமான செயல்!

கல்யாணம் ஆனவர் பெண் ணென்று மட்டும்தான் தெரிய வேண் டுமா?

ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் என்பது அந்தப் பெண்ணின் தனிப் பட்ட பிரச்சினை; அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப் பதே வக்கிரப்புத்திதானே?

கல்யாணம் ஆகி விட்டது ஓர் ஆணுக்கு என்பதற்கு அடையாளம் வேண்டாமா? அதிகமாக ஊர் சுற்று பவன் பெண்களைவிட ஆண்கள் தானே!

பெண்ணே முன்வந்து தாலியை அகற்றிக் கொள்ளும்போது அதுபற்றிக் கருத்துச் சொல்ல ஆண்களுக்கு உரிமை ஏது? அப்படி சொல்லு கிறார்கள் என்றால் அதற்குப் பெயர் தான் ஆணின் எஜமானத்துவம் அதிகப் பிரசங்கித்தனம் என்பது!

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு? ஜாண் பிள்ளையா னாலும் ஆண் பிள்ளை என்கிற ஆண் ஆதிக்கப் புத்தியெல்லாம் ஆழமான குழிக்குப் போய் வெகு நாட்கள் ஆகி விட்டன. ஆண்கள் ஆட்டம் போட வேண்டாம்.

தாலியைக் கட்டுவதே கணவன் இறந்த பிறகு அறுத்து அந்தப் பெண்ணை அவமானப்படுத்துவ தற்குத்தானே! முண்டச்சி என்று முத்திரை குத்தி மூலையில் உட்கார வைப்பதற்குத்தானே! பெத்த பிள்ளை கல்யாண காட்சிகளைக் கூடக் காணக் கூடாது அபசகுனம் என்று காட்டுவ தற்காகத்தானே!

திராவிடர் கழகத் தோழர்கள் வீட்டுத் திருமணங்களில் விதவையர் களை முன்னிறுத்தித் திருமணத்தை நடத்துவதுண்டு என்பது தெரியுமா? விதவையர்க்குப் பூச்சூட்டு விழா நடத்தி வருவதும் திராவிடர் கழகம் என்பது தெரியுமா? ஒன்றைக் கொடுத்து ஒன்பதை வாங்கிக் கொள்ள வேண்டாம் - எச்சரிக்கை

- கருஞ்சட்டை

தமிழ் ஓவியா said...

விஜயகாந்துக்கு கி.வீரமணி பாராட்டு

கருநாடகத்தில் அணை கட்டுவதைத் தடுக்க எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து பிரதமரை சந்திப்பதற்கான முயற்சியில்

கேப்டன் விஜயகாந்த் ஈடுபட்டு இருப்பது வரவேற்கத்தக்கது

எதிர்க்கட்சித் தலைவர் என்பதற்கு இதுதான் அடையாளம்

தொடரட்டும் இத்தகைய சிறப்பான பணிகள்!

தமிழர் தலைவர் ஆசிரியர் பாராட்டு



கருநாடக மாநிலத்தில் தமிழ்நாட்டைப் பாதிக்கும் வகையில் அணை கட்டப்படுவதைத் தடுப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர் களையும் நேரில் சந்தித்து ஒருங்கிணைத்து பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்துள்ள தே.மு.தி.க. தலைவர் திரு.விஜயகாந்த் அவர்கள் மேற்கொண் டுள்ள முயற்சியைப் பாராட்டி, வரவேற்று இத்தகைய பணிகள் மேலும் தொடர வேண்டும் என்ற வேண்டு கோளையும் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள், முயற்சி எடுத்து சில தமிழ்நாட்டு மக்கள் நலன், மற்றும் மனித உரிமைகள் பற்றிய பிரச்சினையில், மத்திய அரசுக்கு தமிழ்நாட்டு சார்பாக நம் உரிமைகளை வற்புறுத் திட, அரசியல் கட்சித் தலைவர்களை அவரவர்களின் அலுவலகம் (வீடு) முதலியவைகளில் நேரில் சென்று சந்தித்து, மேகதாது அணை கட்டுதல் போன்ற பல்வேறு முக்கிய தமிழ்நாட்டு நலனுக்கு விரோதமான முயற்சிகளை கருநாடக மாநிலம் கைவிட வேண்டும் - மக்களின் வாழ் வாதாரம் (மீனவ மக்கள்) உட்பட என்பதை வலியுறுத்து வதற்கு பிரதமரை நேரில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார்.

ஆக்கப்பூர்வமான செயல்பாடு

இது ஒரு ஆக்கப்பூர்வமான நல்ல எடுத்துக்காட்டான செயல்பாடு!

பல்வேறு கட்சிகள், கொள்கைகளால் மாறுபடும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எல்லாம் அவ ருடன் சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். மத்தியில் ஆளும் பா.ஜ.க. உட்பட அதில் கலந்து கொண்டு, சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய ஒத்துழைத்ததும் வரவேற்க வேண்டிய ஒரு நல்ல முன் மாதிரியான எடுத்துக்காட்டு ஆகும்!

கருநாடகத்தில் முன்னாள் இந்நாள் முதல் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் ஓர் அணியில் - ஓர் குரலில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக் கூடாது; அனுமதி இல்லா மலேயே மேகதாது அணை கட்டுவோம் என்று ஒன்று சேரும்போது - தமிழ்நாட்டு (அ.தி.மு.க.) ஆளுங் கட்சி ஓர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பிரதமரைச் சந்தித்து, பொதுப் பிரச்சினைகளை வலியுறுத்திடுவதுதான் சரியான ஜனநாயக அணுகுமுறை என்று நம்மைப் போன்ற பலரும் பலமுறை தமிழக அரசுக்கு, முன்னாள், இந்நாள் முதல் அமைச்சர் களுக்குச் சுட்டிக் காட்டிய போது, அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே சென்றது.

எதற்கும்தானே தான் என்ற பெருமையை ஏகபோகமாக அனுபவிக்க வேண்டும் என்ற பிடிவாத பேராசை காரணமாக, ஆளுங் கட்சி செய்யத் தவறியதை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்கள் செய்துள்ளார்.

தமிழ் ஓவியா said...

எதிர்க்கட்சி என்பது என்ன?

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு என்பது ஜனநாயகத்தில் அவருடைய கட்சிக்கு மட்டுமல்லாமல், சட்டமன்றத் தில்கூட மற்ற அனைத்துக் கட்சிகளின் உரிமைக் குரலாய் செயல்பட வேண்டும் என்பதே ஜனநாயக அரிச்சுவடி (இங்கிலாந்து நாட்டுப் பாராளுமன்ற மரபும் வழியும் தத்துவமும் ஆகும்).

பா.ஜ.க.வாக இருந்தாலும்...

இவரால் தூதுக்குழுவில் தயங்காமல் இடம் பெற்றுள்ள தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், த.மா.க., புதிய தமிழகம், அய்.ஜே.கே., புதிய நீதிக்கட்சி போன்றவைகளோடு பா.ஜ.க. கூட்டணியில் தற்போது உள்ள சில கட்சிகளும் (பத்து கட்சிகள்) கூட கலந்து கொண்டுள்ளனர்.

பா.ஜ.க.வினர்தான் இந்த ஏற்பாட்டுக்குப் பின்புலமாக உள்ளனர் என்று ஒரு செய்தி வந்துள்ளது.

அப்படியே அது உண்மையாகவே இருந்தாலும் தமிழ்நாட்டு உரிமைப் பிரச்சினைப் பாதுகாப்பில் அனைவரும் ஒன்று சேர்வதோ, முயற்சிப்பதோ, ஆதரவு தருவதோ வரவேற்கத்தக்கதே தவிர, அதில் அரசியல் கொள்கைப் பார்வை நமக்குள் தேவை இல்லை என்பது திராவிடர் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்!

அந்தக் கடமையை சற்று காலத் தாழ்ந்து செய்துள்ள கேப்டன் திரு. விஜயகாந்த் Better Late than Never
என்று ஒரு ஆங்கிலப் பழமொழியின் காலம் தாழ்ந்தாலும் பரவாயில்லை, சரியான முயற்சிதான்.

கேப்டனுக்கு ஒரு வேண்டுகோள்

அவருக்கு நமது அன்பான வேண்டுகோள்.

உங்களை சட்டமன்றத்திற்குள்ளேயும் வெளியும் பல வழிகளில் ஆத்திரமூட்டுவார்கள் பலர். அதற்குப் ஆட்பட்டு விட்டால், அது உங்களின் அரிய பணியின் முக்கியத்துவத்தைப் பின்னுக்குத் தள்ளி மறைத்து விடும். எனவே, எதிரிகள் வெட்டும் குழியில் விழாமல் எச்சரிக்கை யாய் செயல்பட்டு இலக்கை அடைய இது போன்ற கூட்டு முயற்சிகள் எப்போது எல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அதில் தயங்காமல் ஈடுபடுங்கள். தங்கள் பணி காலத்தால் செய்யப்பட்ட பணி.

ஆளுங்கட்சி செய்யத் தவறியதை எதிர்க்கட்சித் தலைவர் செய்தார் என்ற பெருமை உங்களுக்கு ஏற்படும்; அன்பான வாழ்த்துக்கள்!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை,
28.4.2015



Read more: http://www.viduthalai.in/e-paper/100497.html#ixzz3YbUlCVb0

தமிழ் ஓவியா said...

நாணயமாய்


வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக் கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பவர்கள்.
(குடிஅரசு, 19.9.1937)



Read more: http://www.viduthalai.in/page-2/100485.html#ixzz3YbVp7cRA

தமிழ் ஓவியா said...

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றும் நிகழ்ச்சி ஏன்?



ஏப்ரல் 14ஆம் தேதி பாபா சாகேப் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களது 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா!

அந்நாளில் திராவிடர் கழகத்தின் சார்பில், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகிய இருபெரும் ஒப்பற்ற புரட்சியாளர்களின் சிந்தனைகளைச் செயலாக்கும் வகையில் விழா நடத்துவதே பொருத்தமாக இருக்கும் என்பதால், இரண்டு முக்கிய நிகழ்வுகளை திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

1. தங்களது கொள்கைக்கும், விருப்பத்திற்கும் மாறாக, திருமணத்தின்போது அணிவிக்கப்பட்ட தாலி என்ற பெண்ணடிமைச் சின்னத்தை, ஜாதியைப் பாதுகாக்கும் சின்னத்தை, தங்களுக்கு உண்டான விழிப்புணர்வு, துணிவு, தெளிவு, அச்சமின்மை காரணமாக, அன்றைய நாளில் பெரியார் திடலுக்கு வந்து, அந்நிகழ்வில் தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்வைப் பகிரங்கமாக, மக்கள் முன்னிலையில் நடத்திக் காட்டுவது, இதில் விருப்பமுள்ள தாய்மார்கள், திருமணமானவர்கள் முன்கூட்டியே அனுமதி பெற்று வந்து கலந்து கொள்ளலாம் என்று அறிவித்ததற்கிணங்க, ஏராளமான திருமணமான வாழ்விணையர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து வருகிறார்கள்.

எந்தவித நிர்ப்பந்தமோ, கட்டாயமோ அல்லது அவர்களுக்கான லாப நோக்கோ _- இந்த நிகழ்வில் இல்லை.

2. தந்தை பெரியார் அவர்களும், அண்ணல் அம்பேத்கரும், உண்மையான திராவிடர் இயக்கங்களும், கொள்கையாளர்களும், முற்போக்குச் சிந்தனையாளர்களும் விரும்பும் புரட்சிகர பெண்ணடிமை ஒழிந்த ஒரு புதிய சமூகத்தின் விடிவெள்ளியாகவே இந்த நிகழ்வு.

இதுபோல தனித்தனியே திராவிடர் கழக மாநாடுகளிலும், கழகப் பிரச்சாரக் கூட்ட மேடைகளிலும் ஆங்காங்கே தாலி அகற்றும் நிகழ்ச்சி நடந்து வந்திருக்கிறது! இது புதுமையும் அல்ல; முதல் தடவையும் அல்ல!

3. இப்போது ஏன் நடத்தப்படுகிறது என்றால், சென்னையில் உள்ள ஒரு தொலைக்காட்சியில் தாலி அணிவது பொருத்தமா? என்பதுபற்றி விவாதம் நடைபெறும் என்று அறிவிப்புத் தரப்பட்ட நிலையில், அதற்கு மிரட்டல், எதிர்ப்புக் காட்டினர் ஹிந்துத்துவாவைப் பரப்பும் பல மதவெறிகள் _- காவி அணிந்த அமைப்பினர். பிறகு அடுத்த-கட்டமாக அந்தத் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் டிபன்பாக்ஸ் வெடிகுண்டை எறிந்து, வெடித்தனர்.

நாங்கள்தான் செய்தோம்; இனியும் இதைவிட அதிகமாகவே செய்வோம் என்று பட்டாங்கமாய் அறிக்கையை அந்த அனாமதேய, பாசிச சமூக விரோதிகள் வெளியிட்டு வருகிறார்கள்.

அவர்கள்மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்க வேண்டாமா? தமிழ்நாட்டின் அமைதியைக் குலைத்து, சமூக நல்லிணக்கத்தைப் பாழாக்கிட முயல்கின்றவர்களிடம் அரசு எப்படி நடந்து கொள்கிறது? பாம்புக்கும் நோகாமல் பாம்படிக்கும் கோலுக்கும் நோகாமல் என்றபடி நடந்துகொள்கிறது!

தமிழ் ஓவியா said...

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை இத்தகைய அச்சுறுத்தல்களால் பலியாகலாமா?

இந்தக் கருத்து பரவக்கூடாது என்று மிரட்டப்பட்டதன் எதிர்வினையாகத்தான் 14ஆம் தேதி சென்னை, பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது விருப்பமுள்ள பெண்களின் தனி உரிமை. மற்றவர்கள் கூச்சல் போட என்ன உரிமை உள்ளது?

தாலி என்பதற்கு இவர்கள் கூறும் ஹிந்து மதத்தின் எட்டு வகைக் கல்யாணங்களில் தாலி எங்காவது கட்டாயம் என்றோ, ஆதியில் இருந்த முறை என்றோ காட்ட முடியுமா?

சங்க இலக்கியத்தில்கூட அகநானூறு இலக்கியத்தின் இரண்டு பாடல்களில் அக்கால மணமுறைபற்றி உள்ளனவே, அந்த முறையில் இந்தத் தாலி கட்டும் பழக்கம் உண்டா? (அ) பழைமையில் இருந்தது என்றுகூட வாதத்திற்கு ஒப்புக்கொண்டால்கூட, முந்தைய பழைமை முறைகளை எல்லா ஹிந்துத்துவா வீட்டுப் பெண்களும், தூண்டிவிடும் பார்ப்பனர்களும் இன்று பின்பற்றுகிறார்களா?

பார்ப்பன விதவைகளை மொட்டைப் பாப்பாத்திகளாக்கி - வெள்ளைச் சேலையில் காட்சியளிக்க வைத்தனரே, அது இன்று உண்டா?

புனிதத்தைத் தேடும் இந்தப் புரட்டர்கள் அங்கே போய் எதிர்ப்புக் காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினரா?

பொட்டும், பூவும் வைத்துக்கொள்ளும் கணவனை இழந்த பெண்களின் முற்போக்கு மனிதநேய சிந்தனைகளை, செயற்பாடுகளை எதிர்த்து கிளர்ச்சியா செய்தனர்?

சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு எழுதிய இரண்டு பார்ப்பன நீதிபதிகள், நாரதர், பராசரன், யாக்ஞவல்கியர் போன்றவர்களின் பல சுலோகங்களைக் காட்டி, சப்தபதிபற்றித்தான் கூறினார்களே தவிர, தாலி கட்டாயம் ஹிந்து திருமணத்திற்கு என்று கூறவில்லையே!

விதவை மறுமணம் வந்ததே, அதை எதிர்த்தனரா?

இன்னமும் பெண்களுக்கு 9 வயதுக்குள் திருமணம் பால்ய விவாகம் செய்துவிட வேண்டும் என்று காஞ்சி சங்கராச்சாரியார்கள் கூறுகிறார்களே, அதைப் பகிரங்கமாகச் செய்தால், தண்டனை கிரிமினல் குற்றம் என்று உள்ளதே!

அதை எதிர்த்து இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரிகள் குரல் கொடுப்பார்களா? சட்டத்தை எதிர்த்து புனிதம், மத ஆச்சாரம் கெட்டுவிட்டது என்று கூறுவார்களா?

இன்னும் சில அரைவேக்காடுகளும், புதிதாக தமிழ்த் தேசிய வியாதிகளும் தமிழன் வீரத்தின் அடையாளம் என்று கூறி, ஆகா, தாலியை எதிர்ப்பதா? என்று உளறுகிறார்களே, அந்த வீரர்கள் திருமணத்திற்குத் தாலியை நகைக் கடைகளில் வாங்குகிறார்களா? அல்லது காட்டிற்குச் சென்று புலியோடு போராடி, சாகடித்துப் புலிப் பல்லைப் பிடுங்கிக்கொண்டு வந்து வீரத்தின் அடையாளம் இதோ என்று கட்டுகிறார்களா?

அந்த நிபந்தனை இன்று வைக்கப்பட்டால், திருமணமே வேண்டாம் என்றுதானே ஆண்கள் ஓடி ஒளிவார்கள்.

எனவே, ஒத்த கருத்தாளர்கள் அனைவரும் வந்து கலந்துகொள்ள அழைப்பை விடுக்கிறோம்.

கருத்து மோதலுக்குத் தயாரா?

கருத்து மோதலுக்குத் தயார்! தயார்!! வேறு மோதலுக்குத்தான் தயார் என்றால், காவல்துறை பார்த்துக் கொள்ளும்; மீறி அவர்களால் முடியாத நிலை ஏற்பட்டால், மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

தயார்! தயார்!!

- கி.வீரமணி,
ஆசிரியர்

தமிழ் ஓவியா said...

ஊன்றிப் படிக்க உண்மையை உணருக!


வந்தவர் மொழியா? செந்தமிழ்ச் செல்வமா?

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்



தெய்வம் தெய்என் கிளவி கொள்ளலும் கோறலும் என்பதொரு நூற்பா பிங்கலந்தைப் பழம் பதிப்பில் காணப்பட்டது.

இதே நூற்பா தெய்யென் கிளவி கோறலும் தெய்வமும் என்று வேற்றுமையுடன் வேறு பதிப்பில் காணப்படுகின்றது. ஆதலின், தெய் என்பதற்குக் கொல்லுதல், தெய்வம் என்பன பொருளாகக் கொண்டால் இழுக்கில்லை. இதனால் நாம் அறியக் கிடக்கும் செய்தி என்ன எனில் கூறுவோம். அறிவு நிரம்பாத பண்டை நாளில், பெருங் காற்றையும், கனலையும், காட்டாற்றையும், துன்புறுத்தும் வெங்கதிரையும், பெருமழையையும், விலங்குகளின் எதிர்ப்பையும் தெய் என்று சொல்லி வந்தார்கள்.

அறிவு நிரம்ப நிரம்ப அவற்றின் பெரும் பயனை அறிந்து அவற்றைப் பயன்படுத்துவாராயினர். அறிவு நிரம்பாத போது வெறுப்புப் பொருளில் வழங்கப்பட்ட தெய் அறிவு நிரம்பிய பிறகு விருப்புப் பொருளில் வழங்கலாயிற்று. தெய் என்ற சொல் அம் இறுதி நிலையும் வ் என்ற இடைநிலையை பெற்றுத் தெய்வம் என்று சுருங்கிற்று.

(தெய்+வ்+அம்) அறிவு நிரம்பாதபோது வெப்புறுத்திய ஞாயிற்றையும், நிலவுறுத்திய திங்களையும், துன்புறுத்திய தீயினையும் அறிவு நிரம்பிய காலத்து எவ்வாறு போற்றினார் என்பது நோக்கத்தக்கது. கொடி நிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும் கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே. என்ற இந்தத் தொல்காப்பிய நூற்பாவால் ஞாயிறு, தீ, திங்கள் ஆகிய மூன்றையும் வடுநீங்கு சிறப்புடைய தெய்வங்கள் என்று வாழ்த்தியது புலனாகிறதன்றோ! மழையைத் தெய்வமாகக் கொண்டனர்; போற்றினர்.

புனலைத் தெய்வமாகக் கொண்டனர்; போற்றினர். இங்கு அறியத்தக்க மற்றோருண்மை என்னெனில், தெய்வம் என்ற சொல்லால் இந்நாள் சொல்லப்படுவன பயன் பொருள்களும் கண்ணையும் கருத்தையும் கவர்கின்ற பொருள்களும் ஆம். பசு தெய்வம், நிலம் தெய்வம், நீர் தெய்வம், சொல் தெய்வம், பெரியவர் அருளிய நூல் தெய்வம் பிறவும் தெய்வங்கள்.

சமயக் கணக்கர் இத் தெய்வங்களை எல்லாம் மேல் நின்று நடத்துவதோர் பெரிய பொருள் உண்டென்றும் அது கடவுள் இயவுள் என்றெல்லாம் பெயர் என்றும் கூறினாராக. அச் சமயக்கணக்கு முற்றிய வழித்தாம் தாம் கண்ட கடவுள் இப்படி இப்படி என்று கூறுவாராகி, உலகில் கலம் பல விளைத்து வருவாராயினர். தெய்வம் தூய தமிழ்ச்சொல் என்பதில் தமிழர்க்கு ஏதேனும் அய்யமிருக்க முடியுமா? முடியாதன்றோ! ஆனால், பார்ப்பனனும் அவன் வால் பிடித்துத் திரியும் சில தமிழர்களும், தெய்வம் வடசொல் என்று உளறி வருகிறார்கள்.

தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு வருமாறு: தொல்காப்பிய நூன்மரபு 29-வது நூற்பா, ய்,ர்,ழ், என்னும் மூன்று மெய்யின் முன், க,த,ந,ம,ச,வ,ஞ,ய,ப என்ற ஒன்பது எழுத்துகளும் தனித்தனி வந்து நிற்கும் என்று கூறுகையில் ய் முன் வா வருவதற்கு எடுத்துக்காட்டாக தெய்வம் என்ற சொல் காட்டப்பட்டுள்ளது. எனவே தெய்வம் தூய தமிழ்ச் சொல் என்பதை எவராலும் மறுக்க முடியாதன்றோ?

- (குயில், 17.6.58)

தமிழ் ஓவியா said...

கருத்து

Print Email


நம் நாட்டில் அறிவியல் துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதன் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். இதற்காக சிறந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் கருதி அரசு இதைச் செய்ய வேண்டும்.

- சி.என்.ஆர்.ராவ், அறிவியலறிஞர்



முஸ்லிம்கள், கிறித்தவர்கள், தலித்துகள், ஆதிவாசிகள் இவர்கள் யாருக்கும் இந்திய சுதந்திர வரலாற்றில் இடமே இல்லையா? அம்பேத்கர், பெரியார், நாராயண குரு, கான் அப்துல் கஃபார் கான், சந்தால் இன மக்கள் எல்லாம் இந்திய வரலாற்றுப் பக்கங்களிலிருந்து வலுக்கட்டாயமாக நீக்கப்படுவதற்கும் மறைக்கப்படுவதற்கும் என்ன காரணம்? இந்துத்துவம் என்பது சிறுபான்மையினரையும் அவர்களின் அடையாளங்களையும் அழித்தொழிப்பதா?

- தீஸ்டா செட்டில்வாட், மனித உரிமைப் போராளி



தொழில் நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்கள் பணியாற்றத் தேவையான பணிச் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதுதவிர, தொழிலாளர் சட்டங்களை முறையாக அமல்படுத்துவதன் மூலம் தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க முடியும். ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.

- எஸ்.கே.கௌல், தலைமை நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.



தாய்லாந்தில் ராணுவ ஆட்சியை விலக்கும் முடிவை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இடைக்காலத் தலைவருக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறோம்.

- அல் ஹுசைன், அய்.நா.மனித உரிமை குழுத் தலைவர்.



நம் நாடு உலகளாவிய போட்டித் தன்மைப் பட்டியலில் 79ஆம் இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியல்களில் நம் நாடு முதல் 10 இடங்களில் இடம் பெறுவதற்குப் படைப்பாற்றல் கல்வி, புத்தாக்கம், தொழில் முனைவு, கூட்டு முதலீட்டு முறை ஆகியவற்றைச் செயல்-படுத்துவதன் மூலம்தான் முடியும்.

- அப்துல்கலாம், மேனாள் குடியரசுத் தலைவர்.



ம.பி.யில் மணல் மாபியாக்களின் அநியாயம் தாங்க முடியவில்லை. பா.ஜ. அரசும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. குற்றவாளிகளும் போலீசாரும் கைகோர்த்துத் திரிந்தால் மாநிலம் எப்படி உருப்படும்? இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்க யாருமே இல்லையா?

- ஜோதிராதித்யா சிந்தியா, மேனாள் மத்திய அமைச்சர்

தமிழ் ஓவியா said...

கழுதைக்கும் கழுதைக்கும் தாலி கட்டியபோது எங்கே சென்றார்கள்?


தாலி கட்டாத பல ஜாதிகள் குறிப்பாக தென்மாவட்டங்களில் உள்ளனவே அங்கே போய் அவர்களிடம் புனிதம்பற்றிப் பேசுவார்களா? கழுதைக்கும், கழுதைக்கும், நாய்க்கும், நாய்க்கும் புரோகிதர்களைக் கூப்பிட்டு, (அதற்கும் தட்சணை வாங்குகிறார்களே!) காதலர் தினத்தில் நடத்தினார்களே, படங்களும் வெளிவந்தனவே!

கழுதைக்குத் திருமணம் நடத்தி, தாலி கட்டிப் படம் எடுத்துத் தங்கள் உறவை வெளிச்சம் போட்டனரே - அப்போது எங்கே போனது இந்தப் புனிதம்?

மார்வாரி வட்டிக் கடையில், டாஸ்மாக்கில் குடிப்பதற்கு மனைவியை அடித்து உதைத்துத் தாலியை அடமானம் வைத்துக் குடிக்கிறார்களே, அதைத் தடுக்க புனிதம், புடலங்காய்கள் எல்லாம் எங்கே போனார்களாம்? ஒன்றைக் கொடுத்து ஒன்பது பெறத் தயாரா?

தமிழ் ஓவியா said...

குட்டிக்கதை : உனக்கு ஆசைதான்!


- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்



கொட்டைப் பாக்கு அளவு தலை. கொய்யாக்காய் உடல் _ இந்தச் சிறிய கோழிக் குஞ்சு குப்பையில் மேய்ந்திருந்தது.

அது தனி; தாயுமில்லை, தகப்பனுமில்லை. உடன் பிறந்தாருமில்லை. தன்னந்தனியே மேய்கிறது. குப்பை சீய்க்கவும் தெரியவில்லை; இரை விழுங்கவும் முடியவில்லை.

காக்கை ஒன்று அதை அடித்துக் கொண்டுபோக அணுகிற்று; அதன் நிலையைக் கொஞ்சம் ஊன்றி நோக்கியது. காக்கையின் நெஞ்சம் இளகிற்று.

காக்கை, கோழிக்குஞ்சை நோக்கி: ஏன் குழந்தாய்! உன் தாய், தந்தை, கூடப் பிறந்தவர் எங்கே?

கோழிக்குஞ்சு சொல்லுகிறது: என் தகப்பனைச் சாமிக்கு விட்டிருந்தார்கள். அதனால் ஒரு நாள் சாமிக்கு அறுத்துவிட்டார்கள்.

புதையல் கிடைத்தது, ஒருவர்க்கு. அந்தப் புதையலைக் காத்திருந்த சாமிக்கு என் தாயை அறுத்தார்கள்.

சனிக்கிழமை ஒருத்தன் இறந்துவிட்டான். அந்தக் கண்மூடிச் சாமி துணைப்பிணம் தேடாதிருக்க என்னுடன் பிறந்த கோழிக்குஞ்சைப் பிணத்தோடு கட்டி அனுப்பி விட்டார்கள்.

நான் தனி, என்னைச் சாமிதான் காப்பாற்ற வேண்டும்.

காக்கைக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அது சொல்லுகிறது;

அட இழவே, உன் பெற்றோரையும் உடன் பிறப்பையும் வாயிற் போட்டுக் கொண்ட சாமியா உன்னைக் காப்பாற்றும்?

வந்துவிடு என் வயிற்றுக்குள், கோழிக் குஞ்சே என்று கூறிற்றுக் காக்கை!

குஞ்சு _ நான் பிழைத்திருக்க ஆசையாய் இருக்கிறது.

காக்கை _ உனக்கு ஆசைதான்! சாமிக்கு? நான் யார் தெரியுமா! சாமி! சனியன் சாமி, ஏறுஞ்சாமி.

காக்கைச் சாமி, ஏழைக் குஞ்சை ஒழித்துவிட்டது.

- குயில், 15.5.1948

தமிழ் ஓவியா said...

தமிழ் வளர்ச்சி : நீங்கள் செய்தது என்ன?

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

வெண்ணெய் வாழைதான் ஆனால் குலை தள்ள வேண்டும்



சட்டாம் பிள்ளைச் சண்முகம் எனது பாடசாலை நண்பர்.

நான் ஒரு நாள் அவர் வீட்டுக்குப் போனேன். அப்போது அவர் தமது வீட்டுக்குப் புறத்திலிருந்த தோட்டத்தில் இருந்தார். நான் வந்தது அவருக்குத் தெரிந்தது. என்னை அவர் தோட்டத்திற்கு அழைத்துப் போனார். மரம், செடி, கொடிகள் தோட்டத்தில் அடர்ந்திருந்தன. நான் அவைகளைச் சுற்றிப் பார்த்து வரும்போது நண்பர் என்னை ஓர் இடத்தில் நிறுத்திக் கீழ்வருமாறு சொன்னார் : பழம் ஒன்று முக்கால்முழ நீளமிருக்கும்; பச்சை நாடானை ஒத்த நிறம், வாட்டம். அதை வாழைப்பழமென்றே சொல்வதற்கில்லை. அதன் தோலை உரித்துக் கீழே போட்டபின் கையில் வெண்ணெய்தான் மீதியிருக்கும். அந்த உரித்த பழத்தைச் சுடு சோற்றில் போட்டால் உருகி விடும். இனிப்பில் தேன்; ஒருவித நறுமணம்!

பழுத்திருப்பதை நண்பர் அடுக்குப் பானையிலிருந்து எடுத்துவரப் போகிறார் என்றுதான் நான் நினைத்தேன். அவர் அந்த மரந்தான் இது என்று தரையைக் காட்டினார். நான் தரையைக் குனிந்து பார்த்தேன். அகலத்தில் மாவிலையையும் நீளத்தில் பலா இலையையும் ஒத்த அய்ந்தாறு வாழையிலைகள் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிருந்தன. இதுதானா வெண்ணெய் வாழைமரம்!

என்ன நண்பரே! இதுதானா குலை தள்ளிற்று? அதுவும் பழுத்ததா? நீரும் தின்றீரா? என்று கேட்டேன். சண்முகம் சிரித்தார். வாழையைப் பற்றி நான் சொன்னதில் ஒன்றும் பொய்யில்லை; ஆனால் வளர வேண்டும் பழம் தரவேண்டும் என்று கேலி பேசினார்.

அந்த வெண்ணெய் வாழையைச் சண்முகம் சுண்ணாம்புக் கற்களுள்ள தரையில் நட்டிருந்தார். அதனால் அதை நட்டு ஒரு வருஷம் ஆகியும் அது வளரவில்லை. அதை நட்டபோது வேறிடத்தில் நட்ட வாழைகள் நல்ல பலன் அளித்தன. வெண்ணெய் வாழை வளர்ச்சியடைந்து நல்ல பலன் கொடுக்க வேண்டுமானால் அதைப் பெயர்த்து வேறு நல்ல இடத்தில் வைக்க வேண்டும்.

பல்லாவரத்தில் கூடியிருக்கும் பண்டிதர்களே, தமிழ் இனிமையானது, ஆக்ஷேபமில்லை. ஆனால் அது வளர்ச்சியடையவில்லை. குலை தள்ளவில்லை. மக்கட்கு நலன் அளிக்கவில்லை. அதை நீங்கள் நட்டிருக்கும் இடம் தீயது. ஜாதி மதம் மூடப் பழக்க வழக்கங்கள் ஆகிய சுண்ணாம்புக் கற்கள் உள்ள தரையில் நட்டிருக்கிறீர்கள். அவ்விடத்தினின்று அதைப் பெயர்த்தெடுங்கள். வேறு பொது இடத்தில் நடுங்கள்! அப்போது தமிழ் தரையோடு தரையாய் ஒட்டிக் கொண்டிராமல் வளர்ச்சியடையும். குலை தள்ளும். பழம் தரும். மக்கள் நலன் அடைவார்கள்.

தமிழ் தற்கால நிலையில் இனிக்கிறதென்று நீங்கள் சொல்லுகிறீர்களா? வளர்ச்சியடையாமல் கல்லுப் பிள்ளையார் போலிருக்கும் தமிழ் வளர்ச்சியடைந்து வரும் மக்களுக்கு இனிமை தருவதெப்படி? சொல்லுங்கள்! தமிழ் இனிக்கவில்லை யாதலால்தான் நீங்கள் அதை இனியது இனியது இனியது என்று எப்போது பார்த்தாலும் வேலையற்றுப் போய் உளறிய வண்ணமிருக்கிறீர்கள். அது வளர்ச்சியடையாத-தால்-தான், நீங்கள் பழைய விஷயத்தையே பணம் சம்பாதிக்கத் திரும்பத் திரும்பச் சொல்லுகிறீர்கள். அது குலை தள்ளாததால்-தான் நீங்கள் படித்ததாய்ச் சொல்லிக் கொண்டாலும் ஒன்றுமறியாத முட்டாள்கள் என்று பிற பாஷைச் சிறுவர்களால் இகழப்படுகிறீர்கள்.

நீங்கள் தமிழின் அதிகாரிகளாக ஆசைப்படுகிறீர்கள். சைவப் பெரியாராகவும் பிரியப்படுகிறீர்கள். சைவத்தோடு தமிழை ஒட்டி விடுகிறீர்கள்.

அதனால் சைவரல்லாத பிற மதத்தவர் உங்கள் சைவத்தை ஓச்சும் கோடாலி தமிழின் கிளைகளையும் குறைக்கின்றது. வைஷ்ணவத்துடன் தமிழ் ஒட்டப்-பட்டிருக்கிறது. அதனால் வைஷ்ணவத்தை நோக்கிப் பிற மதத்தினர் கொட்டும் நெருப்பானது தமிழின் வேரிலும் படுகிறது. புத்த மதத்தை அறுக்கப் போகும்போது அதனோடு ஒட்டிய தமிழ் அறுபடுகிறது. மதங்களுக்கு அப்பால் தமிழ் இல்லாதபடி செய்த _ செய்கின்ற தமிழ்ப் பண்டிதர்களே! தமிழுக்கு நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய வேலைகளில் ஒன்றாவது செய்ததுண்டா!

மத நூல்களைப் புகைப்படம் பிடிப்பதுண்டு; வெளியிடுவதுண்டு.

மதத்தின் அப்புறத்தில்தான் விசால எண்ணங்கள், விரிந்த தத்துவங்கள், அறிவு வளர்ச்சிக்குரிய திட்டங்கள், போகப் பொருள்களை விளைக்கும் நுட்பங்கள் உண்டு என்பதை நீங்கள் அறியவில்லையானால், உங்களை என்னவென்று சொல்லுவது? தமிழை அரிக்க வந்த பண்டிதச் செல்லுப் பூச்சிகளே! இந்தியனாகிய மகம்மதியனும், இந்தியனாகிய கிறிஸ்தவனும் தமிழை வெறுக்க வைத்தது எது தெரியுமா? அதனோடு சம்பந்தப்படுத்தி வைத்திருந்த மதம். மதக்காரர்கள் மூலபலஞ் சண்டையிடுகிறவர்கள்.

அதற்குள்ளே சிக்கலாகிக் கிடக்கும் தமிழும் அழிந்து போகிறது. வளர்ச்சி அடைவது எப்படி?

புது இலக்கணம், புது இலக்கியங்கள், புதிய நிகண்டுகள், அகராதிகள், தமிழின் நடையில் ஓர் புதுத்திறன்! இவ்வரிசையில் எதிலாகிலும் உங்கள் கவனம் சென்றதுண்டா? இன்னும் யோசியுங்கள்.

- புதுவை முரசு, 16.2.1931

தமிழ் ஓவியா said...

தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன சொல்லுகிறார்?



அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா என்று சிலர் கேட்பது புரிகிறது. ஒரு புரட்சியாளரின் பிறந்த நாளைப் புரட்சிகரமாகக் கொண்டாடுவதுதான் _ அந்தப் புரட்சியாளருக்குக் கொள்கைரீதியாக நாம் காட்டும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.
இதோ பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார் :

மலபார் மற்றும் அஞ்செங்ரோ கெஜட் டீரின் ஆசிரியரான திரு.சி.ஏ.இன்னஸ் சென்னை அரசாங்கத்தின் அனுமதியோடு பின்வருமாறு கூறுகிறார்: மருமக்கள்தாயம் என்னும் முறையைப் பின்பற்றும் எல்லா வகுப்பினரிடையேயும் அதேபோன்று மக்கள்தாயத்தைக் கடைப்பிடிப்போரில் பலரிடையேயும் தாலிகட்டும் திருமணம் என்னும் மற்றொரு ஏற்பாடு நடை முறையில் இருந்து வருகிறது. மலையாளி களின் திருமணப் பழக்க வழக்கங்க ளிலேயே இது நூதனமானது, தனித்தன்மை வாய்ந்தது என வருணிக்கப்படுகிறது. இதன் படி, ஒரு யுவதி பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்னர் அவள் கழுத்தில் தாலி (தங்கத்தாலோ அல்லது வேறு ஏதேனும் உலோகத்தாலோ செய்யப்பட்ட பதக்கம் போன்ற ஒரு சிறு ஆபரணம் நூல்கயிற்றில் கட்டப்படுவது) கட்டப்படுகிறது. அதே ஜாதியை அல்லது உயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவனால் இவ்வாறு தாலி கட்டப்படு கிறது.

இவ்வாறு செய்த பிறகுதான் அந்த இளம் பெண் சம்பந்தம் செய்துகொள்ள முடியும். தாலி கட்டுபவனுக்கு அல்லது மணவாளனுக்கு (மணமகன்) அந்தப் பெண் ணுடன் கூடி வாழும் உரிமை அளிப்பதற் காகவே இந்தச் சடங்கு செய்யப்படுவதாக பொதுவாகக் கருதப்படுகிறது.

கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்கு பூதேவர்களும் (அதாவது பிராமணர்களும்), சத்திரியர்களும் உரிமை கொண்டாடி வந்ததிலிருந்தும் இந்த வழக்கம் தோன்றியிருக்கக் கூடும். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 16, பக்கம் 333.)

செய்திகளை பகிர்ந்து கொள்ள

தமிழ் ஓவியா said...

புரட்சிக்கவிஞரின் நகைச்சுவை




- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

ஜனோபகாரிகள்

மேல்நாட்டில் பிறந்து வளர்ந்த ஓர் இந்தியர்: (தோட்டியைக் காட்டி) இவர் யார்?

உள்ளூரார்: இவர் வீட்டிலுள்ள அசுத்தங்களை எடுத்துப் போகிறார்.

மே.இந்: (வண்ணானைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர் வீட்டிலுள்ள அழுக்குத் துணிகளையெல்லாம் எடுத்துப் போகிறார்.

மே.இந்: திரும்பவும் சலவை செய்துவந்து கொடுப்பாரா?

உள்: ஆமா!

மே.இந்: (புரோகிதரைக் காட்டி) இவர் யார்?

உள்: இவர், வீட்டிலுள்ள அரிசி, பருப்பு முதலியவைகளை மூட்டை கட்டிக்கொண்டு போகிறார்.



மே.இந்: சமையல் செய்து கொண்டுவந்து கொடுப்பாரா?

உள்: திரும்பக் கொடுப்பதில்லை.

மே.இந்: அடித்துக்கொண்டா போகிறான்?

உள்: ஆம்.

மே.இந்: அடித்துக் கொண்டு போவதைப் பார்த்துக் கொண்டா இருப்பார்கள்?

உள்: ஆம், ஆம்!

மே.இந்: அடித்துக் கொண்டா......

உள்: ஓய், எத்தனை தரம் சொல்லுவது! அடித்துக் கொண்டுதான் போகிறான்! அடித்துக்கொண்டுதான் போகிறான்! ஆயிரம் வருடமாக இப்படி!

ராகு காலப் பயன்



ஒருவன்: நான் ராகு காலத்தில் வெளிக் கிளம்பினதால்தான், பத்து ரூபாய் நோட்டு விழுந்துவிட்டது.

மற்றவன்: நான் ராகு காலத்தில்தான் அந்தப் பத்து ரூபாய் நோட்டைக் கண்டெடுத்தேன்!

வேடத்தின் பயன்



சு.ம.காரன்: பண்டித அய்யர்வாள்! உலோகம் என்றால் என்ன?

அய்யர்: பூமிக்குப் பெயர்_பொன், வெள்ளி இவைகளுக்கும் பெயர்.

சு.ம.: உலோக குரு என்பதிலுள்ள உலோகத்திற்குப் பின்னைய அர்த்தமே பொருத்தம்.

அய்யர்: அவைகளுக்காகத்தானே......

பயனற்றதால் வணங்கப்படுகிறது



ஒருவன்: எல்லாப் பக்ஷிகளும் இருக்க, ஆழ்வார் (பருந்து) மாத்திரம் வணங்கப்படுவதற்குக் காரணம் தெரியுமா?

பிறன்: தெரியும்! அது கறிக்கு உதவாது.

ஒரு விஷயம் புரிந்தது



சோமசுந்தரக் கடவுள் மதுரையில் கல் யானையைக் கரும்பு தின்னச் செய்தார். இப்போதும் பார்ப்பனர் கல் சாமிகளைச் சோறு தின்னச் செய்கிறார்கள். இவ்விரு விஷயத்தில் ஒரு விஷயம் புரிந்து போயிற்று. இந்த அய்யர், சாமி தின்பதாகத் தாமே அடித்துக் கொண்டு போகிறார் _ அந்த அய்யர், கரும்பைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு போனதை யாரும் பார்த்ததில்லை.

சர்வம் விஷ்ணுமயம்



பாகவதர்: அப்பா, சர்வம் விஷ்ணுமயம் ஜகத் அல்லவா?
சிஷ்யன்: பன்றி மலந்தின்னுவதை, நான் வராகவதாரம் பூமியைப்

பெயர்த்தெடுப்பதாகவே காண்கிறேன். மச்சாவதாரத்தைத்தான், என் வயிற்றில் செலுத்துகிறேன்!

சாமிக்குக் காது செவிடு



அன்பர்: செட்டிமேல் சாமி வந்திருக்கிறது. நீ நினைத்திருப்பதைக் கேள்.

கேட்க வந்தவர்: சுவாமி! நான் ஒன்றை நினைத்து வந்திருக்கிறேன்.

சாமி: என்ன?

கேட்க வந்தவர்: பணம் காணாமல் போயிற்று. எப்போது அகப்படும்?

சாமி: சீக்கிரம் சௌக்யமாய்விடும்.

கேட்க வந்தவர்: இதென்ன அய்யா, சாமி இப்படிச் சொல்லுகிறதே?

அன்பர்: அவருக்குக் காது செவிடு! நீ கூவிக் கேட்கவில்லை.

தமிழ் ஓவியா said...

பெரியாரின் அதிர்ச்சி வைத்தியம்


மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே?

தேசியக் கட்சிகள் எனச் சொல்லப்படுகிற காங்கிரஸ், பா.ஜ.க., பொதுவுடைமைக் கட்சிகள் ஆகியவை, மாநிலங்களின் தனித்தன்மையை மறுக்கக் கூடியவையாக உள்ளன. அதுதான் இந்தத் தேசம் வளராமல் போனதற்கும் அந்தக் கட்சிகள் வளராமல் போனதற்கும் காரணம். தேசிய இனங்களின் சிக்கலை அவை அங்கீகரிக்காமல், அதற்கான தீர்வையும் அலட்சியப்படுத்துகின்றன. மாட்டு இறைச்சியைப் பயன்படுத்தத் தடை விதிப்பது இந்திய தேசத்தின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது போன்றது. கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர் என, சங்க இலக்கியப் பாடல் சொல்கிறது.

கொழுப்பான பசு மாட்டைத் தின்றதற்கான சாட்சி வார்த்தைகள் இவை. இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான புரதம், மாட்டு இறைச்சியில் இருந்துதான் கிடைக்கிறது. அதற்குத் தடைவிதிப்பது, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கை.

ஜாதிக் கட்டமைப்பின் பலம் என்ன...

அது ஒழிய என்ன செய்ய வேண்டும்? ஜாதி என்பது என்ன?

எதுவரை நீங்கள் திருமண உறவு வைத்துக் கொள்ளலாமோ... அதுதான் உங்கள் ஜாதி எல்லை. அந்தத் திருமண உறவுக்கான கட்டமைப்புதான் ஜாதியின் பலம். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்பது நமது விருப்பம். ஆனால், அது அவ்வளவு எளிது அல்ல என்பதுதான் அடிமட்ட யதார்த்தம். நம்பிக்கையான, சுயநலமற்ற தலைவர்கள் நம்மைத் தொடர்ந்து வழிநடத்தாதது ஒரு குறை. ஜாதியை ஒழிக்க, தொடர்ச்சியான போராட்டம் தேவை. பெரியாரின் அதிர்ச்சி மதிப்பீடுகள் அதைச் செய்தன. ஆண்தான் தாலி கட்ட வேண்டுமா? ஆணுக்கு, பெண் தாலி கட்டட்டும் என்றார். அப்படித்தான் சில திருமணங்-களை அவர் நடத்திவைத்தார். அவருடைய உறுதி, அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் அவரை ஏற்றுக்-கொண்டு, அவரைப் பின்தொடரவைத்தன. மன உறுதிமிக்கவராக இருந்தார்.

அவருடைய அதிர்ச்சி வைத்தியங்களுக்கு ஆதரவு இருந்தது. பெரியாரின் கட்டளையை ஏற்று, தேவதாசிப் பெண்களை பல பெரிய மனிதர்கள் மணந்தனர்.

குத்தூசி குருசாமி, பூவாலூர் பொன்னம்-பலனார், நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பெரியவர்கள் எல்லாம் தேவதாசிஇனப் பெண்களை மணந்தனர். திருமண உறவுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஒரு ஜாதியை, திருமண உறவுக்குள் மாற்றியதில் பெரியாருடைய பங்களிப்பு எத்தகையது என்பதைப் பாருங்கள். அப்படியான தொடர்ச்சியான அதிர்ச்சி மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்வதில், நம் தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, ஓட்டுக்காக ஜாதியை வளர்த்தார்கள்.

நன்றி: ஆனந்தவிகடன், 8.4.2015

தமிழ் ஓவியா said...

பெரியாரின் அதிர்ச்சி வைத்தியம்


மகாராஷ்டிராவில் மாட்டு இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதே?

தேசியக் கட்சிகள் எனச் சொல்லப்படுகிற காங்கிரஸ், பா.ஜ.க., பொதுவுடைமைக் கட்சிகள் ஆகியவை, மாநிலங்களின் தனித்தன்மையை மறுக்கக் கூடியவையாக உள்ளன. அதுதான் இந்தத் தேசம் வளராமல் போனதற்கும் அந்தக் கட்சிகள் வளராமல் போனதற்கும் காரணம். தேசிய இனங்களின் சிக்கலை அவை அங்கீகரிக்காமல், அதற்கான தீர்வையும் அலட்சியப்படுத்துகின்றன. மாட்டு இறைச்சியைப் பயன்படுத்தத் தடை விதிப்பது இந்திய தேசத்தின் பெரும்பான்மை மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துவது போன்றது. கொழுப்பா தின்ற கூர்ம்படை மழவர் என, சங்க இலக்கியப் பாடல் சொல்கிறது.

கொழுப்பான பசு மாட்டைத் தின்றதற்கான சாட்சி வார்த்தைகள் இவை. இந்தியாவில் உழைக்கும் மக்களுக்கான புரதம், மாட்டு இறைச்சியில் இருந்துதான் கிடைக்கிறது. அதற்குத் தடைவிதிப்பது, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கை.

ஜாதிக் கட்டமைப்பின் பலம் என்ன...

அது ஒழிய என்ன செய்ய வேண்டும்? ஜாதி என்பது என்ன?

எதுவரை நீங்கள் திருமண உறவு வைத்துக் கொள்ளலாமோ... அதுதான் உங்கள் ஜாதி எல்லை. அந்தத் திருமண உறவுக்கான கட்டமைப்புதான் ஜாதியின் பலம். ஜாதிகள் ஒழிய வேண்டும் என்பது நமது விருப்பம். ஆனால், அது அவ்வளவு எளிது அல்ல என்பதுதான் அடிமட்ட யதார்த்தம். நம்பிக்கையான, சுயநலமற்ற தலைவர்கள் நம்மைத் தொடர்ந்து வழிநடத்தாதது ஒரு குறை. ஜாதியை ஒழிக்க, தொடர்ச்சியான போராட்டம் தேவை. பெரியாரின் அதிர்ச்சி மதிப்பீடுகள் அதைச் செய்தன. ஆண்தான் தாலி கட்ட வேண்டுமா? ஆணுக்கு, பெண் தாலி கட்டட்டும் என்றார். அப்படித்தான் சில திருமணங்-களை அவர் நடத்திவைத்தார். அவருடைய உறுதி, அவர் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் அவரை ஏற்றுக்-கொண்டு, அவரைப் பின்தொடரவைத்தன. மன உறுதிமிக்கவராக இருந்தார்.

அவருடைய அதிர்ச்சி வைத்தியங்களுக்கு ஆதரவு இருந்தது. பெரியாரின் கட்டளையை ஏற்று, தேவதாசிப் பெண்களை பல பெரிய மனிதர்கள் மணந்தனர்.

குத்தூசி குருசாமி, பூவாலூர் பொன்னம்-பலனார், நெ.து.சுந்தரவடிவேலு போன்ற பெரியவர்கள் எல்லாம் தேவதாசிஇனப் பெண்களை மணந்தனர். திருமண உறவுகளுக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த ஒரு ஜாதியை, திருமண உறவுக்குள் மாற்றியதில் பெரியாருடைய பங்களிப்பு எத்தகையது என்பதைப் பாருங்கள். அப்படியான தொடர்ச்சியான அதிர்ச்சி மதிப்பீடுகளை முன்னெடுத்துச் செல்வதில், நம் தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, ஓட்டுக்காக ஜாதியை வளர்த்தார்கள்.

நன்றி: ஆனந்தவிகடன், 8.4.2015

தமிழ் ஓவியா said...

மான்கறி சாப்பிட்ட ராமனும், சீதையும்


- கோவி.லெனின்



நான் என்ன சாப்பிடுறதுங்கிறதை சர்க்கார் யார் முடிவு செய்ய என்று, அதனாலேயே மாட்டுக்கறி விருந்து நடத்துகிறார்களே, அதுக்கு முன்னாடியே மான் கறி சாப்பிடக் கூடாதுன்னு தடை இருக்கே, அப்போது எங்கே போனார்கள் இவர்கள். வீரமணி போன்றவர்கள் மான்கறி விருந்து நடத்துவார்களா? என்று கேட்டிருக்கிறார் ஒரு அக்கிரகாரத்து அரை வேக்காடு.

இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களான ஏழை, எளிய மக்களின் உணவான மாட்டுக்கறியை, மத வெறியின் அடிப்படையில் தடைசெய்யும் போக்கையும், அரிய உயிரினங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் மான்கறி தடை செய்யப்பட்டிருப்பதையும் ஒன்று போல காட்டும் புரட்டு இது என்பது சற்றேனும் சிந்திப்போருக்குத் தெரியும்.

எளிய மக்களின் சத்தான உணவு தடுக்கப்படுகிறதே என்ற கவலை நமக்கு! அதனால் மாட்டுக்கறியைத் தடை செய்யக் கூடாது என்கிறோம். எதிர்த்துக் குரல் கொடுக்கிறோம். போராடுகிறோம்!

ஆனால், அப்படி என்ன மான் கறியில் இவர்களுக்குப் பற்று என்று சிந்தித்தால், அப்போது வெளிப்படுகிறது குட்டு!

இந்துத்துவா கும்பலின் இஷ்ட தெய்வங்களான ராமனும், சீதையும் மான் கறியை எப்படியெல்லாம் விரும்பிப் புசித்தார்கள் என்பதை விவரிக்கிறது வால்மீகி ராமாயணம். மாரீசன் என்னும் மாய மானை விரும்பிக் கேட்டாரே வைதேகி. எதற்கென்று நினைக்கிறீர்கள்? தமிழ்ப்பட கதாநாயகிகள் போல கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கவா? அல்ல... அல்ல... அள்ளி எடுத்து அதன் கறியைச் சுவைப்பதற்காக!

கங்கைக் கரையிலும், யமுனைக் கரையிலும் ஏராளமாக மது உண்டும், புலால் புசித்தும் வாழ்ந்த சீதை விரும்பிய மான் கறியைக் கொண்டு வருவதற்காகத் (அதனால் பின் விளைவுகள் வரும் என்று தெரிந்தும்) தான் மானைத் தேடிச் சென்றான் ராமன் என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து (3.42.21) ஆதாரம் காட்டுகிறார் The Righteous Rama நூலின் ஆசிரியர் ப்ராக்கிண்டன்.

அது மட்டுமா, ராமனும் லட்சுமணனும் எந்தெந்த வகை மான்களைப் புசித்தனர் என்று வால்மீகி காட்டுகிறார் தெரியுமா? முதன்மையான நான்கு மான் இனங்களிலிருந்து ஒவ்வொன்றையும் வேட்டையாடிப் புசித்தனர். (அயோத்தியா காண்டம் 2 _- 52 _- 102).



Having hunted there four deer, namely Varaaha, Rishya, Prisata; and Mahaaruru (the four principal species of deer) and taking quickly the portions that were pure, being hungry as they were, Rama and Lakshmana reached a tree to take rest in the evening.

Alternative translation: Being famished, Rama, Lakshmana hunted and killed a boar, a Rishya animal (a white footed male antelope), a spotted deer and a great deer with black stripes and quickly partaking the pure meat reached a tree by the evening to spend the night.

யமுனை நதிக்கரையில் ராமனும் லட்சுமணனும் மான் கறி சுவைத்ததைச் சொல்லுகிறது அயோத்தியா காண்டம் (2 - _55_-32/33)



Translation: Thereafter having travelled only a couple of miles the two brothers Rama and Lakshmana killed many consecrated deer and ate in the river-forest of Yamuna.

Alternative translation: After travelling a distance of two miles further in the forest on the bank of Yamuna, those two brothers slew deers worthy for sacrifice for food and ate them. Ayodhya Kanda 2-55-32/33

காட்டியிருப்பது ஒரு சில எடுத்துக்-காட்டுகள் மட்டுமே! அவர்கள் குடித்துக் களித்த மது வகைகள் பற்றியும், உண்டு மகிழ்ந்த கறி வகைகள் பற்றியும் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.

இப்படி காவிக்கூட்டம் போற்றும் கடவுளர் சாப்பிட்ட மான் கறியைத் தடை செய்தால் அவர்களுக்குக் கோபம் வருவது இயற்கைதானே!

மான் கறி தடை செய்யப்பட்டிருப்பதில் மாற்றுக் கருத்து அக்கிரகாரத்தில் இருக்குமாயின் அவர்கள்தானே அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

கடவுளின் உணவு தடுக்கப்படுமானால் அதற்காகக் கொந்தளித்து அவர்தானே மான் கறி விருந்து நடத்த வேண்டும்? எதிர்பார்க்கிறோம்....

ஹெச்.ராஜா நடத்தும் மான் கறி விருந்து அறிவிப்பை!

தமிழ் ஓவியா said...

வாழ்வில் உயர்வுகொள்!


- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்



சுயமரியாதைகொள் தோழா! - நீ
துயர்கெடுப்பாய் வாழ்வில் உயர்வடைவாயே! - (சுய)
உயர்வென்று பார்ப்பனன் சொன்னால், - நீ
உலகினில் மக்கள் எலாம்சமம் என்பாய்; துயருறத் தாழ்ந்தவர் உள்ளார் என்று
சொல்லிடுந் தீயரைத் தூவென்று உமிழ்வாய்!
அயலொரு கூட்டத்தார் ஆள்வோர் - சிலர்
ஆட்பட்டிருப்பவர் என்று சொல்வோரைப்
பயமின்றி நீதிருந் தச்சொல்! - சிலர் பழமைசொன் னால்புது நிலைநலம் காட்டு! (சுய)

சேசு முகம்மது என்றும்! - மற்றும்
சிவனென்றும் அரியென்றும் சித்தார்த்த னென் றும்,
பேசி வளர்க்கின்ற போரில் - உன்
பெயரையும் கூட்டுவர் நீஒப்ப வேண்டாம்! காசைப் பிடுங்கிடுதற்கே - பலர்
கடவுளென் பார்! இரு காதையும் மூடு!
கூசி நடுங்கிடு தம்பி! - கெட்ட
கோவிலென்றால்ஒரு காதத்தில் ஓடு! (சுய)

கோவில் திருப்பணி என்பர் - அந்தக் கோவில் விழாவென்று சொல்லியுன் வீட்டு
வாயிலில் வந்துனைக் காசு கேட்கும்
வஞ்சக மூடரை மனிதர் என்னாதே!
வாயைத் திறக்கவும் சக்தி இன்றி
வயிற்றைப் பிசைந்திடும் ஏழைகட் கேநீ தாயென்ற பாவனை யோடும் - உன்
சதையையும் ஈந்திட ஒப்புதல் வேண்டும். (சுய)
கடவுள் துவக்கிக் கொடுத்த - பல
கவிதைகள், பதிகங்கள் செப்பிய பேர்கள்,
கடவுள் புவிக்கவ தாரம், - அந்தக் கடவுளின் தொண்டர்கள், லோக குருக்கள்,
கடவுள் நிகர் தம்பிரான்கள் - ஜீயர்,
கழுகொத்த பூசுரர், பரமாத்து, மாக்கள்
கடவுள் அனுப்பிய தூதர் - வேறு
கதைகளி னாலும் சுகங்கண்டதுண்டா? (சுய) அடிமை தவிர்ந்ததும் உண்டோ? - அன்றி
ஆதிமுதல் இந்தத் தேதி வரைக்கும்,
மிடிமை தவிர்த்ததும் உண்டோ? - அன்றி
மேல்நிலை என்பதைக் கண்டதும் உண்டோ?
குடிக்கவும் நீரற் றிருக்கும் - ஏழைக் கூட்டத்தை எண்ணாமல்; கொடுந்தடி யர்க்கு
மடங்கட்டி வைத்ததினாலே - தம்பி!
வசம்கெட்டுப் போனது நமதுநன்னாடு. (சுய)

உழைக்காத வஞ்சகர் தம்மை - மிக
உயர்வான சாதுக்கள் என்பது நன்றோ? விழித்திருக் கும்போதி லேயே - நாட்டில்
விளையாடும் திருடரைச் 'சாமி'என் கின்றார்!
அழியாத மூடத் தனத்தை - ஏட்டில்
அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை
முழுதாய்ந்த பாவலர் என்பார் - இவர் முதலெழுத்தோதினும் மதியிருட் டாகும்! (சுய)

--------------------------

40,600 பாடல் வரிகள்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மொத்தம் 40 ஆயிரத்து 600 பாடல் வரிகள் பாடியுள்ளார். அவை கீழ்க்காணும் வகையின என்று ஆய்வாளர்கள் ஆய்ந்து அறிவித்துள்ளனர்.

அகவல் பாக்கள் - 12,808 அடிகள்
விருத்தப் பாக்கள் - 12,283 அடிகள்
சிந்து இசைப்பாக்கள் - 8,705 அடிகள்
வெண்பாக்கள் - 6,086 அடிகள்
பிறவகைப் பாக்கள் - 718 அடிகள்
_ _ _ _ _ _ _ _ _

40,600 அடிகள்
_ _ _ _ _ _ _ _ _

(தகவல்: சு.அறிவுக்கரசு எழுதிய இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார் நூலிலிருந்து...)

தமிழ் ஓவியா said...

அன்பார்ந்த பெண்ணுலகமே



ஆபத்து நெருங்குகிறது. மதவாதி களின் பிடியிலே மக்களாட்சி. ஒட்டுமொத்த மக்களின் கருத்துரிமை மறுக்கப்படுகிறது. பேச்சுரிமை ஒடுக்கப் படுகிறது. எழுத்துரிமை நசுக்கப் படுகிறது. தனிமனிதனின் சுயமரியாதை தாக்கப்படுகிறது.

மதத்தின் ஆட்சியிலே ஆரம்ப கட்ட நிலைதான் இது. இன்னும் வளர்ந்தால் பேராபத்தை சந்திக்க வேண்டி வரும். குறிப்பாக பெண்கள் மிகமிக எச்சரிக்கையாகவும், விழிப் போடும் இருக்கவேண்டிய காலமிது. உடல்ரீதியான தாக்குதல்கள் ஒருபுறம், மதரீதியான தாக்குதல்கள் மறுபுறம்.

இரண்டையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் பெண்ணுலகம். இதில் மதரீதியான தாக்குதல்களை பெண்கள் அதிகமாக எதிர்கொள்ள வேண்டியுள்ளது

ஏற்கெனவே மதத்தின் பெயராலும் முடை நாற்றமெடுக்கும் மூடத்தனத்தின் மொத்த உருவமாய் பெண்கள். எனவே மதரீதியான தாக்குதலில் பலியாக்கப்படுவோரும் பெண்களே. படித்த பெண் களும் பாமரர்களுக்கு இணையாய் மூடநம்பிக்கை யிலே. எச்சில் இலைமீது உருளுவதும் ,காலில் அணிய வேண்டிய செருப்பை உடல்மீது வைத்துக் கொண்டு தரையில் வீழ்ந்து கிடக்கும் அவலத்தின் உச்சியிலே இன்னமும் பெண்கள்.

கழுதைக்கு திருமணம் செய்ய வேண்டி முன்ன ணியில் பெண்கள்.கழுதையின் கழுத்திலேயும் தாலி ,பெண்கள் கழுத்திலேயும் தாலி.சூடு சுரணையற்ற நிலையில் பெண்ணுலகம். தாலி அணிவதும் ,அணியாமல் இருப்பதும் பெண்களின் தனிப்பட்ட உரிமை.அதைப்பற்றி விவாதம் செய்யவும் விமர்சிக் கவும் பெண்களுக்கு முழு உரிமை உண்டு என்பதை அனைத்து பெண்களும் உணர வேண்டும்.

அதை சமூகத்திற்கு உணர்த்தவேண்டிய கடமை பெண் களிடம் தான் உள்ளது.கழுதையின் கழுத்தையும் நாயின் கழுத்தையும் அலங்கரிக்கும் தாலி பெண்களுக்கு தேவையா? சிந்தித்து பாருங்கள். பகுத்தறிவுக் கொள்கையை ஏற்று உள்ளவர்களும், மூடநம்பிக்கை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துடைய வர்களும் பெருந்திரளாக போராட களம் இறங்கவேண்டிய நேரமிது.

இல்லையென்றால் எத்தனையோ போராளிகளும் புரட்சியாளர்களும் பாடுபட்டு கிடைத்த பெண்ணுரிமை களை மதத்தின் கீழே தொலைக்க வேண்டி வரும். மதவாதிகள் ஆன்மீகத்தின் மீதான பாசிசத்தை பலமாக எழுப்ப துடித்துக் கொண்டுள் ளனர். அதை அனுமதித்தால் முதலில் பாதிக்கப் படுவது பெண்கள் தான் என்பதை பெண்கள் உணர வேண்டும்.

சமூகத்தில் சரிபாதியாய் உள்ள பெண் இனத்தை ஒரு பார்வையாள ராக வைத்துக் கொண்டு ஒரு போராட்டத்தில் ஈடுபட்டால் அந்த போராட்டம் வெற்றி பெறாதுஎன்ற தந்தை பெரியாரின் கூற்றை நினைவுகொள்வோம். நாடு தழுவிய வட்டார மாநாடுகளை தமிழர் தலைவர் அறிவித்துள்ளார்.

பெண்கள் பெருந் திரளாக பங்கேற்போம். ஒவ்வொரு மேடையிலும் பகுத்தறிவு பரப்ப பெண்களின் பங்கேற்பு இருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான சமூக அவலங்களுக்கு எதிராக பெண்களே போராட வேண்டும்.இது நம் அடுத்த தலைமுறைக்கான ஒரு பாதுகாப்புப்பணி.

ஆரோக்கியமான வாழ்வோடு மத ஆளுமை யில்லாத ஒரு உண்மையான ஒரு சுதந்திரத்தை நம் அடுத்த தலைமுறை அனுபவிக்க போராட வேண்டியது நம் கடமை.

- ந.தேன்மொழி, குடியாத்தம்



Read more: http://www.viduthalai.in/page1/99587.html#ixzz3YbkW2tT5