Search This Blog

19.4.15

தாழ்த்தப்பட்டோருக்கான வீடுகள் ஊரின் நடுவே அமைத்திட வேண்டும்-பெரியார்



டாக்டர் அம்பேத்கர் பிறந்ததின விழாவில், டாக்டர் அம்பேத்கர் அவர் களை நாம் பாராட்டுவது மட்டும் போதாது; அவரின் தொண்டினைப் பாராட்டவேண்டும். அவர் கொள்கை யினைப் பின் பற்றவேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் பேரறிஞர். செயற்கரிய செய்தவர். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர் ஆற்றிய தொண்டு யாரும் செய்ய முடியாத தொண்டு ஆகும்.

தாழ்த்தப்பட்ட மக்களுடைய எண் ணிக்கை எவ்வளவோ அத்துணை விகிதத்தில் கல்வி,  உத்தியோகப் பதவி களைப் பெற்றுத் தந்தவர் ஆவார்.

உண்மையை உண்மையாக எடுத்துச் சொல்லுவதில் அவருக்கு ஈடு யாரும் இல்லை. சிறந்த படிப்பாளி. தம் மனதில் பட்ட கருத்துகளைத் துணிந்து கூறி வந்தவர். எதிர்ப்புக்காகத் தம் கொள் கையில் இருந்து பின் வாங்காதவர்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எண்ணிக் கைக்குத் தகுந்தாற்போல சலுகைகள் கிடைத்தது அவரின் தொண்டு காரண மாக என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இங்கு அரிஜன நல மாணவர் முன் னேற்றக் கழகம் என்று துவக்கியுள் ளார்கள்.

அதில் எனக்கு ஓர் அதிருப்தி என்ன வென்றால், அரிஜனம் என்ற பெயரை நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது; காந்தி வைத்த பெயர் இது. அரிஜனம் என்றால் கடவுள் சாதி; விஷ்ணுவின் ஜனங்கள் என்று பெயர் வைத்தார்.

அதற்கு முன் உங்களுக்குச் சங்கர சாதி என்று பெயர் இருந்தது. அது சிவ னுக்குச் சம்பந்தம் உள்ளதாக இருப்பதால் காந்தி, விஷ்ணுவுக்குச் சம்பந்தம் இருக்க வேண்டும் என்று அரிஜனங்கள் என்று பெயர் வைத்தார்.


நாங்கள் தான் கண்டித்து எழுதி னோம். நீங்கள் தாழ்ந்தவர்கள் தாழ்த்தப் பட்ட மக்கள். உங்களைத் தாழ்த்தியது இந்த விஷ்ணு, சிவன் முதலிய கட வுள்கள் தான். எனவே, இந்தப் பெயரை ஏற்கக்கூடாது என்று எழுதினேன்.

இதனை ஒரு சமுதாய முன்னேற்ற ஸ்தாபனமாக வைத்துப் பாடுபட வேண் டும். இன்றைக்குச் சமுதாய முன்னேற் றத்துக்குப் பாடுபடுகின்றேன் என்று பலர் பல சங்கங்கள் வைத்து உள்ளார்கள். அதில் ஈடுபட்டு உள்ளவர்கள் தாங்கள் முன்னேறப் பார்க்கின்றார்களே ஒழிய, சமுதாய முன் னேற்றத்தில் அக்கறை அற்றவர்களாகவே இருக்கின்றார்கள்.

காரணம், அரசியலில் ஈடுபட்டவர் களாக இருக்கின்றதனால் ஓட்டுக்காக, பதவிக்காகக் காரியம் ஆற்றுகின்றவர்களாக இருக்கின்றார்கள்.

எனவே, நீங்கள் அரிஜன மாணவர் நல முன்னேற்றக் கழகம் என்பதை விட்டு விட்டுத் தாழ்த்தப்பட்டோர் மாணவர் நலமுன்னேற்றக் கழகம் என்று வைத்துக் கொள்ளவேண்டும். இந்தப் பேர் கூட நான் முயற்சி பண்ணி வைத்தது.

அதற்கு முன்பு பின் தங்கிய வகுப்பார், தாழ்ந்த வகுப்பார் என்றுதான் இருந்தது. நான் தான் கூறினேன், எழுதினேன். எப்படிப் பின் தங்கிய வகுப்பார் என்ப வர்களைப் பிற்படுத்தப்பட்டோர் என்று கூறப்படுகின்றதோ, அதுபோலத் தாழ்ந்த வகுப்பார்களைத் தாழ்த்தப்பட்டோர் என்று அழைக்கவேண்டும் என்று. நீங்களாகத் தாழ்ந்தவர்கள் அல்லவே. மேல் சாதிக்காரர் களால் தாழ்த்தப்பட்டவர்கள் ஆக்கப்பட் டவர்கள்தானே, ஆகவே தாழ்த்தப்பட் டோர் என்றே நீங்கள் போடவேண்டுமே ஒழிய அரிசனங்கள் என்பதை ஏற்றுக் கொள்ளக் கூடாது.

உங்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக - இழிமக்களாக ஆக்கியது கடவுள் காரண மாகத்தானே! நாங்கள் கடவுளின் ஜனங்கள் என்பதை ஒத்துக் கொண்டு  நான் ஏன் இழிமகன், தாழ்த்தப்பட்ட மகன் என்று கேட்டால் என்ன நியாயம்?

இன்றைக்குத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகக் கூறிக் கொண்டு, அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டித் தருகின்றேன் என்று கூறி ஊருக்கு வெளியே, ஒதுக்குப் புறத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றார்கள்.

முன்பு ஊருக்கு வெளியே சேரியில் குடி இருக்கின்றதற்கும் இதற்கும் என்ன வித்தி யாசம். தாழ்த்தப்பட்ட மக்களைப் புதிய சேரியில் தனியாகக் குடி ஏற்றுவதாகத் தானே ஆகின்றது.

அரசாங்கம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு வசதி செய்து கொடுக்க வேண்டும். மற்ற மக்களோடு கலந்து வாழச் செய்ய வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்களாகிய நீங்கள் குடிசை வீட்டில் குடி இருந்தாலும் ஊருக்கு நடுவில் இருப்பதையே பெரிதாகக் கருத வேண்டுமே ஒழிய, ஊருக்கு  வெளியே கட்டிக் கொடுக்கக் கூடிய வீட்டினை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

காரணம், இந்த முறை மேலும் உங்களை ஒதுக்கி வைக்கத்தானே உதவுகின்றது.

தோழர்களே, இன்றைக்கும் தாழ்த்தப் பட்ட மக்களுக்குத் தமிழகத்தில் கூட தீண் டாமை, தொல்லைகள் முற்றிலும் இல்லை என்று கூறமுடியாது.

தொல்லைகள், கொடுமைகள் நடந்து கொண்டு தான் வருகின்றன.

பார்ப்பான் மட்டும் அல்லவே; பார்ப் பனர் அல்லாத மக்களும் கூட முட்டாள் தனமாகத் தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சில இடங்களில் கொடுமை இழைக்கின்றார்கள்.

முட்டாள்தனமாக இப்படிச் செய்கின் றார்கள். பார்ப்பான் அவனைச் சூத்திரன் என்றால் நான் எப்படி சூத்திரன் என்று கேட்கின்றவன், தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் எப்படித் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்று கூறமுடியும்? தாழ்த்தப்பட்ட  மக்கள் படித்துவிட்டு வெள்ளையும், சள்ளையுமாக வெளியே போவதைப் பார்த்து ஆத்திரப்படுவது முட்டாள்தனம் ஆகும்.

தாழ்த்தப்பட்ட மக்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.

உங்களுக்குக் கடவுள் நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ இருக்கக்கூடாது. உங்களை இந்தத் தாழ்ந்த நிலைக்கு ஆக்கியது இந்துக் கடவுளும், மதமும் தான் என்பதை உணர வேண்டும்.

நீங்கள் உங்கள் அறிவையே பிரதான மாக நம்ப வேண்டும். உங்களை ஈடேற் றுவது உங்கள் அறிவே தவிர கடவுளும், மதமும் அல்ல.

உங்கள் முன்னேற்றத்திற்காக அரசாங் கம் பல நல்ல காரியங்களைச் செய்து வருகிறது. இவற்றை முழுமையும் பயன் படுத்திக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும். இந்த அரசாங்கமானபடியால் இதன் ஆட்சிக் காலத்திலேயே  நீங்கள் வளர்ச்சி அடைந்தால் தான் உண்டு. மற்றவர் ஆட்சியில் இந்த அளவு உங்களுக்குச் சலுகை கிடைக்காது.

மேல்சாதி என்று கருதிக் கொண்டு இருக்கின்ற பார்ப்பனர் அல்லாத மக்களுக் கும் கூறுவேன். நீங்களும் தாழ்த்தப்பட்ட மக்களையும் மனிதர்கள் நம் இனத்தைச் சார்ந்தவர்கள் என்று  கருதவேண்டும். அவர்களிடம் அன்பாக இருக்கவேண்டும். அவர்கள்  முன்னேற உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இருக்கிற சாதி இழிவு மட்டும் அல்ல, உங்களுக்கும் இருக்கின்ற சாதி இழிவும் ஒழியும். சாதிகள் அற்ற சமுதாயம் ஏற்படவும் வழி பிறக்கும்.

------------------------------------------------------23.6.1972 அன்று நொய்யலில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய 
சொற்பொழிவு "விடுதலை",  3.7.1972)


Read more: http://www.viduthalai.in/page-2/100004.html#ixzz3XlUIygAT

17 comments:

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

ஞானப்பால்

திருஞானசம்பந்தர் என்ற சிறுவனுக்கு உமை யம்மை (பார்வதி) ஞானப் பால் ஊட்டினாராம் - இப்பொழுதெல்லாம் அது போல் நடப்பது இல் லையே - ஏன் கடவுள் கப்சா எல்லாம் இறந்த காலத்தில் தானா!



Read more: http://www.viduthalai.in/e-paper/100398.html#ixzz3YPrP6rS9

தமிழ் ஓவியா said...

ஆடுகளுக்கு நேர்த்தி உண்டா?



சிவகங்கையையடுத்த திருமலையில் உள்ள ஒரு கோயிலுக்கு 338 ஆடு களைப் பலியிட்டுள்ளனர். (சட்டப்படி சரிதானா?) எதற்காகவாம்?

ஊரில் உள்ள கண்மாய் நிரம்பி வழியவும், விவ சாயம் சிறக்கவும், குழந்தை வரம் வேண்டியும் இந்த நேர்த்திக் கடனாம். ஆமாம், 338 ஆடுகள் பலியிடப்பட்டனவே அதைக் காப்பாற்ற எந்த நேர்த்திக் கடனை செய்வதோ!

தமிழ் ஓவியா said...

அய்தராபாத், ஏப். 26_ ஆந்திர மாநிலம் புட்ட பர்த்தி சத்ய சாய்பாபா கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி மரணம் அடைந்தார்.

அவரது மரணத்தில் பல அய்யங்கள் இருப்ப தாகவும் இதுபற்றி சி.பி.அய். விசாரணை நடத்த வேண்டும் என் றும் அவரது உறவினர் கணபதி ராஜு மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகி யோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதனை அய் தராபாத்தில் செய்தி யாளர்களிடம் தெரிவித்த கணபதிராஜு மேலும் கூறியதாவது: சத்ய சாய் பாபா மரணத்தில் பல அய்யங்கள் உள்ளன. அதனை தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆதா ரங்களுடன் கடந்த ஆட் சியின் போது அப் போதைய முதல் அமைச் சரிடம் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாபா மரணத்தில் பல சதித் திட்டங்கள் நடந்து உள்ளன. பாபா இறந்து 25 நாட்கள் கழித்துதான் அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டது.

இடைப்பட்ட காலத் தில் அவரது ரூ.ஆயிரம் கோடி சொத்துக்கள் கடத்தப்பட்டுள்ளன. இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. சத்ய சாய்பாபா மரணம் குறித்து சி.பி.அய். விசா ரணை நடத்தினால் உண் மைகள் வெளிவரும். எனவே இதுகுறித்து பிரதமர் மோடி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் எனது ஆதாரங்களையும் இணைத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.



Read more: http://www.viduthalai.in/e-paper/100397.html#ixzz3YPrhadZH

தமிழ் ஓவியா said...

தேவன் சக்தி இவ்வளவுதான்!

இடி தாக்கி ஏசு சிலை உடைந்தது

திருப்போரூர், ஏப். 26 திருப்போரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் நேற்று இரவு 7 மணி முதல் இடிமின்ன லுடன் பலத்த மழை பெய் தது. மேலும் சூறாவளிக் காற்றும் வீசியது.

இரவு 9 மணி வரை கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் பெரி தும் அவதிப்பட்டனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் பேருந்து நிலையம் அரு கில் உள்ள கிறிஸ்து மீட்பர் ஆலயத்தில் இடி தாக்கியது. இதில் ஆல யத்தில் உள்ள சுமார் 40 அடி உயர பீடத்தின் மீது இருந்த பைபரால் ஆன ஏசு சிலை உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது.

ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஏசு சிலை உடைந்தது கிறிஸ் தவர்கள் மத்தியில் கவ லையை ஏற்படுத்தியது என்றாலும் கோடையில் தவித்த மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை அளித்தது.

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

முரண்பாடு
கண் பார்வைக் குறை நீங்கிட எண் கண் முருகன் கோயிலுக்குச் செல்ல வேண்டுமாம்.
கடவுள் என்றால் சர்வ சக்தி என்று சொல்லி விட்டு, குழந்தைப் பாக்கி யத்துக்கு இந்தக் கோயில், பைத்தியம் தெளிய அந்தக் கோயில் என்கிறார்களே இது முரண்பாடு இல்லையா? கடவுள்களுக்குக் கூட பிராஞ்சு ஆபீசா? பக் தியை மலிவாகப் பரப்பும் வணிக நோக்கம் அல்லவா!



Read more: http://www.viduthalai.in/page1/100344.html#ixzz3YPwWBQbr

தமிழ் ஓவியா said...

விகடனே தோல் உரிக்கிறது

பல் இளிக்கும் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கும் திட்டம்!
'உலகளவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியை விட அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி பாஜக' என்று சமீபத்தில் அறிவித்துக்கொண் டது பா.ஜ.க. காரணம், மிஸ்டுகால் திட்டம் மூலம் உறுப்பினர் களைச் சேர்த்ததுதான் என்று, தங்களை தாங்களே புகழ்ந்து கொண்டார்கள்.

அதேசமயம் இந்த மிஸ்டுகால் திட் டத்தில் நிறைய தில்லுமுல்லுகள் நடை பெறுவதாக புகார்கள் கிளம்பி வரு கின்றன.
உறுப்பினராக சேர்க்கிறோம் என்பதை நேரிடையாக சொல்லாமல், பொய்யான வாக்குறுதிகளை கூறி அப்பாவி மக்களை மிஸ்டு கால் மூலம் தங்கள் கட்சி உறுப் பினர்களாக பா.ஜ.க வினர் மாற்றுவதாக புகார்கள் கிளம்பியுள்ளன. சமீபத்தில் மதுரையில் நடந்த சம்பவம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம் என்று சொல்லலாம்.

மதுரை மாநகராட்சியில் 93ஆவது வார்டில் அமைந்திருப்பது முத்து பட்டி. நடுத்தர மக்கள், உடல் உழைப்பு தொழி லாளர்கள் அதிகம் வசிக்கும் இங்கு சில நாட்களுக்கு முன் நடந்ததை, அப் பகுதியை சேர்ந்த ஆமினா, மாரியம்மாள், லதா, தனலட்சுமி ஆகியோர் நம்மிடம் விவரித்தார்கள்.

ஒருநாள் சாயங்காலம் சில ஆண் களும் பெண்களும் கார்ல வந்து இறங்குனாங்க.
ரெண்டு பொம்பளைங்க வீடு வீடா வந்து, 'எல்லோரும் ஊர்மந்தைக்கு வாங்க, மத்திய அரசு உங்க ஊருக்கு நிறைய திட் டங்களை அறிவிச்சிருக்காங்க, அதை யெல்லாம் எப்படி வாங்கனும்னு விளக்கிச் சொல்லப் போறோம்னு சொன்னாங்க. வரும்போது, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, செல்போன் எல்லாத்தையும் கொண்டு வாங்க' என்று கூறிச் சென்றனர்.

கவர்மெண்டு திட்டம் எல்லாமும் நமக்கு கிடைக்கப் போகுதுன்னு ஆசை ஆசையா எல்லா வேலைகளை யும் விட்டுப்புட்டு ஓடினோம். 'வீட்டுக்கு ஒரு லட்சம் லோன், அதுல பாதி மானியம், செல்வமகள் திட்டத்துல மத்த ஊர்ல யெல்லாம் புள்ளைய பெத்தவங்கதான் பணம் கட்டணும்.

ஆனால், உங்களுக்கு மட்டும் மோடியே பணம் கட்டிடுவாரு(???). அடுத்து, கல்யாணம் காதுகுத்து எல்லாத் துக்கும் நீங்க பேங்குல போய் பணம் வாங்கிக்கலாம். இதெல்லாம் உங்களுக்கு கிடைக்கணும்னா, உங்க செல்போன் லருந்து நாங்க சொல்ற நம்பருக்கு கால் பண்ணுங்க, அது பேங்குகாரங்களுக்கு போயிடும். அப்பத்தான் உங்க நம்பரை பார்த்து லோனை வீடு தேடி வந்து கொடுப்பாங்க' னு சொன்னாங்க.

இதை நம்பி நாங்களும் மை வச்ச ஆளுங்க மாதிரி செல்போனை அவங்க கையில கொடுத்து பார்த்தா, கொஞ்ச நேரத்துல எங்களுக்கு அதுல எஸ்.எம்.எஸ். வந்தது. இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருந்ததால எங்களுக்கு அதுல என்ன போட்டுருக்குன்னு புரியலை. செல்போன் இல்லாத பொம்பளைங்க வெளியில போயிருந்த அவங்க புருஷன்மாரு, புள்ளைகளோட செல்போனை வாங்கிட்டு வந்து கொடுத்துச்சுங்க, ஆம்பளை யாளுங்க திரண்டு வந்தபிறகுதான் இது லோன் தரதுக்கு இல்லை. அவங்க கட் சிக்கு ஆளு சேர்க்கிறதுன்னு தெரிஞ்சது.

கட்சிக்கு ஆள் சேர்க்கிறோம்னு முன் னாடியே சொல்லியிருந்தா விரும்புறவங்க மட்டும் வந்திருப்பாங்க. மத்தவங்க அவங்க சோலியை பார்க்க போயிருப் பாங்க. அதை விட்டு இப்படி ஆசை வார்த்தை சொல்லி எங்களை ஏமாத்த லாமா? ஏன்னா, எங்கள்ல எல்லா கட்சி ஆதரவாளர்களும் இருக்காங்க. அப்படி யிருக்கும் போது ஒரு நொடியில கட்சி மாத்தலாமா? என்று புலம்பினார்கள்.

மணி என்பவர், நான் தேமுதிக கட்சிக்காரங்க. இப்ப நான் பாஜகவில் சேர்ந்துட்டதா மெசேஜ் வந்திருக்கு. என் வீட்டு பெண்களிடம் செல்லை கொண்டு வரச்சொல்லி இப்படி பண்ணிட்டாங்க. இது மோசடி இல்லையா? இவங்க கட்சியில பேர் வாங்க, விவரம் தெரியாத ஜனங்களை இப்படியா ஏமாத்துறது? கொஞ்சம் விட்டிருந்தா ஊர்ல எல்லோரையும் பிஜேபியில மாத்திட்டு போயிருப்பாங்க.

நல்ல வேளை அன்னைக்கு போலீஸ் வந்து எச்சரிச்ச தால இடத்தை காலி பண்ணிட்டாங்க. விவரமான மக்கள் வாழுற தமிழ் நாட்டுலேயே இப்படீன்னா, விவரமில்லாத வட நாட்டு பக்கம் என்ன வெல்லாம் சொல்லி கட்சிக்கு மெம்பர் சேர்த்தாங்களோ?
நன்றி : விகடன்.காம் (25.4.2015)



Read more: http://www.viduthalai.in/page1/100345.html#ixzz3YPwfobIm

தமிழ் ஓவியா said...

எல்லை மீறுகிறது இந்து மகாசபை! துறவி அக்னிவேஷ் தலையை வெட்டி கொண்டு வந்தால் 5 லட்சம் - பரிசாம்


சேவை செய்வது என்பது சாத்திரத்துக்கு விரோதமானதாம்!

ஜிந்த் (அரியானா) ஏப். 25 சமூக சேவகரும் தகவல் உரிமைச் சட்டத்திறகாக போரட்டம் நடத்தியவர் களில் ஒருவருமான துறவி அக்னிவேஷ் தலையை வெட்டிக் கொண்டு வரு பவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசாக தருகிறோம் என்று இந்து மகாசபைத்தலைவர் தர்மபால் சிவாஜ் பத்தி ரிகையாளர்களிடம் கூறினார்.

அரியானா மாநில ஜிந்த் என்ற இடத்தில் இந்துமகாசபை தனது நூற்றாண்டுவிழாவைக் கொண்டாடியது, நாடு முழுவதும் தொடர்ந்து கொண்டாடப்படும் இந்த விழாவின் போது இந்து மகாசபையின் தலைவர் தர்மபால் சிவாஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, நாட்டில் பலர் துறவிகள் வேட மிட்டு வருகின்றனர். சமூக சேவை என்ற பெய ரில் துறவிகள் வேட மணியத் தேவையில்லை, இந்துமத்ததில் சேவை என்பது என்ன என்று தெளிவாகக் கூறியுள்ளனர்.

கர்மபலனை அனுப விப்பவர்களுக்கு சேவை என்ற பெயரில் எது செய்தாலும் அவர்களின் கர்மபலனால் அந்த சேவை யின் பலன் அவர்களை முழுமையாகச்சென்றடையாது, இது இந்துமத சாஸ் திரங்களில் உள்ளது. ஆனால் சிலர் இந்து மதத் துறவி வேடமிட்டு சாஸ் திரங்களுக்கு எதிராக செயல்பட்டுவருகின்றனர்.

எல்லாம் கர்ம பயன்தானாம்
அவர் செல்லும் இடங் களில் எல்லாம் சாஸ்தி ரங்களுக்கு எதிரான செயல்களையே செய் கிறார். தரித்திரன் ஒருவன் இருக்கிறான் என்றால் அது அவன் சென்ற பிற வியில் செய்தபாவத்தின் பலன். இப்பிறவியில் அவனுக்கு உதவச்சென்றால் அந்த தரித்திரம் பிறருக் கும் வந்து சேரும், ஆனால் அக்னிவேஷ் துறவி வேடத்தில் இருந்துகொண்டு தர்மத்திற்குக் களங்கம் விளைவிக்கிறார். ஆர்ய சமாஜம் இவரை இந்துமதத்தில் இருந்து விலக்கி வைத்துள்ளதாக அறிவிக்க வேண்டும், சாஸ்திர விதிகளைப் பின்பற்றாத எவரும் இந்து அல்ல, இந்த நாடு இந்து நாடு ஆகையால் இந்துமதத் திற்கு எதிராக செயல் படுபவர்கள் தேசத் துரோ கிகள் ஆவர்.

நாங்கள் ஆர்யசாமாஜ்மீது வேண்டு கோள் விடுக்கிறோம். இவரை உடனடியாக இந்து மதத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் இல்லை என்றால் ஆர்ய சமாஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும். இவர் முஸ்லீம் தலைவர் களைச் சந்தித்து வரு கிறார். ஒரு துறவியாய் இருந்து முஸ்லீம் மதத் தலைவர்களை எப்படி சந்திக்கலாம்? இப்படிப் பட்ட துரோகி நாட்டிற்கு தேவையில்லை, இவரது தலையை வெட்டி யார் கொண்டுவந்தாலும் அவருக்கு ரூ.5 லட்சம் இனாமாக இந்து மகா சபை தரும். இது குறித்து நாங்கள் யாருக்கும் அச்சப் படத் தேவையில்லை. ஒரு தேசத் துரோகியை தேச பக்தியுடைய யாரும் தட்டிக் கேட்கலாம் என்று கூறினார்.

கொண்டு வா தலையை வெட்டி!

ஸ்வாமி அக்னிவேஷ், மேதாபட்கர் இவர்கள் இணைந்து வட இந்தி யாவில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகின்றனர். அன்னா ஹசாரேவின் போராட் டத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தகவல் உரிமை சட்டம் கொண்டுவருவதற்கு முக்கியகாரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.

வனப்பாதுகாப்பு, நதிநீர் இணைப்பு, பெண் கல்வி போன்ற பிரச் சினைகளை மய்யமாக வைத்து தொடர்ந்து போராடிவருகிறார். அன்னா ஹசாரே மோடி அரசுக்கு ஆதரவாக செயல்படுவது தெரிந்து அந்தக்குழுவில் இருந்து விலகி தனித்து போராடி வருகிறார். சமீபத்தில் காஷ்மீரில் உள்ள ஹூரி யத் தலைவர்களை ஸ்வாமி அக்னிவேஷ் சந்தித்தார். இந்த சந்திப்பை ஆர். எஸ்.எஸ், விஷ்வ இந்து பரிஷத் போன்ற அமைப் புகள் கடுமையாக கருத வேண்டும்.

இந்த நிலை யில் இந்துமகாசபா ஒரு படி மேலே போய் அவ ரது தலையை வெட்டிக் கொண்டுவர பரிசுத் தொகையை அறிவித்துள் ளது. இந்துமத சாஸ்திரங் களின் படி ஏழைப் பார்ப் பானுக்கு மாத்திரம் உதவி செய்யவேண்டும், சூத்திரர் களாக பிறப்பது அவர் களின் சென்ற பிறவியில் செய்த பாவத்தின் பலன், சூத்திரர்களுக்கு உதவி செய்தால் அவர்களின் கர்மபலன் தனக்கும் பிடித்து தானும் அடுத்த பிறவியில் சூத்திரனாய் பிறப்பான் என்று எழுதி யுள்ளது குறிப்பிடத்தக்க தாகும்.



Read more: http://www.viduthalai.in/page1/100337.html#ixzz3YPwqcIrI

தமிழ் ஓவியா said...

முட்டாள்தனம்

மனிதனின் செல்வம், புகழ், பெருமை நிலைக்கக் கூடியதல்ல. அவன் காலத் திலேயே மாறும். அவன் சந்ததிக் காலத்திலும் மாறும். ஆகவே, அதைச் சம்பாதிப்பதே முடிந்த முடிவு என்றெண்ணுவது முட்டாள் தனம்.
(விடுதலை, 28.4.1943)

தமிழ் ஓவியா said...

முக நூலில் ஒரு கருப்புச் சட்டையின் நன்றியுரை

நீ கொடுத்த அறிவுச் சுடர் கொண்டு காவிக் குப்பையைக் கொளுத்துவோம்
ஷீ அறிவழகன் கைவள்ளியம்
உணர்வுப்பூர்வமாக நான் ஒருபோதும் பெரியாரை அணுகி யதே இல்லை, அவர் அப்படிச் சொல்லியதும் இல்லை, ஓரளவுக்கு விவரம் தெரிந்த பிறகு முன்னோர் களின் வரலாற்றை வாய் வழிச் செய்திகளின் மூலமாக அறியத் துவங்கினேன், பல வீடுகளில் இருந்த கடவுளர் படங்களுக்கும், ராமாயண மகாபாரதக் கதைகளுக் கும் பதிலாக எனது கிராமத்து வீட் டின் எல்லா

இடங்களிலும் மார்க் சும், ஏங்கெல்சும், கார்க்கியும், அம் பேத்கரும், உலக வரலாறும் பெருகிக் கிடந்தன.
வயற்காடுகளில், காடு, கழனி களில் உழைப்பையும், விவசாயத்தை யும் மட்டுமே நம்பிக் கிடந்த தலை முறை இந்தக் கிழவனின் வரவுக்குப் பிறகுதான் கல்வியும், அரசியலும், பொருளாதார மேம்பாடும் சக மனி தர்களின் வாழ்க்கையைப் போல எமது உரிமை என்கிற உணர் வையே இந்தக் கிழவன் தான் எமது கிராமத்துக்குள் கொண்டு வந்து சேர்த்தவன், அரசியல் இயக்கங்கள், கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள் என்று தெரி யாத பல்வேறு சொற்களை கிழ வனின் வருகைக்குப் பிறகுதான் அறிந்திருக்கிறார்கள் எமது முன் னோர்கள்.

நமது வயல்களுக்கும், குடிசை களுக்கும் அப்பால் ஒரு மிகப்பெரிய உலகம் இயங்கிக் கொண்டிருக் கிறது என்கிற உண்மையை உணர்ந்தவர்களில் பலர் மேற் கல்வியை நோக்கி நகர்ந்தார்கள், இன்று வயற்காடுகளில் இருந்து உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவிக் கிடக்கும் எமது குடும்பத் தின் மீது அன்று விரவத் துவங்கிய கருப்பின் சாயல் அறிவின் நிழல்.

கறுப்புச் சட்டை பெருகி இருந்த இடங்களில் சாதியும், மதமும் அருகிப் போயிருந்தது, கறுப்புச் சட்டை அணிந்த இடங்களில் எல் லாம் சமநீதியும், சுயமரியாதையும் நிறையக் கிடைத்தது, ஒவ்வொரு பொதுக் கூட்டங்களும், ஒவ்வொரு கலந்துரையாடல் வெளிகளும் உலகின் அறிவுச் சாளரங்களைத் திறந்து பாரடா எம்முடன் பிறந்த மானுடப் பரப்பை என்று உச்சத் தில் உணர வைத்தது.

தந்தை பெரியாரும், அவர் எமக்குக் கொடையளித்த கறுப்புச் சட்டையும் வெறும் நிறமல்ல, இந்த தமிழ்ச் சமூகத்தில் எமக்குக் கிடைத்த மதிப்பும், நீதியும். சில காலமாக எனது உள்ளத்தை அரித் துக் கொண்டிருந்த ஒரு விஷயம்,
"இந்தக் கிழவன் இந்த சமூகத்தை ஒரு சுயமரியாதை உள்ள சமூகமாக மாற்றவும், இந்த தமிழ்க் குடியின் பண்பாடுகளையும், பெருமைகளை யும் மீட்டெடுக்கத் தானே அத் தனை வலியோடும் பேசினான், எழு தினான், அலைந்து திரிந்து அல்லும் பகலும் அயராது உழைத்தான்" அந்த நன்றியையும், அந்த உழைப் பையும் இந்த சமூகம் மறந்து போனதே என்று தவித்த பொழு துகள் உண்டு.

ஆனால், இப்போது இந்த சொற்றொடரை எழுதிக் கொண்டி ருக்கும் இந்தக் கணத்தில் நிறை வாகவும், மகிழ்ச்சியாகவும் இருக் கிறது, எமது இளைய தலைமுறை, எமது மாணவப் பிஞ்சுகள், எமது குழந்தைகள், பல்லாயிரம் தமிழ்க் குடியின் சொந்தங்கள் என்று எல்லாத் தரப்பையும் எமது கிழவன் எப்படி வென்றிருக்கிறான், இணைய வெளியில் எங்கு நோக்கினும் அதே கருப்பின்

நிழல்......
நன்றி மறப்போம் என்று நினைத்தாயோ ஐயா........நீ கொடுத்த அறிவுச் சுடர் கொண்டு காவிக் குப்பையைக் கொளுத்துவோம் அய்யா, விடாது கருப்பு...



Read more: http://www.viduthalai.in/page1/100356.html#ixzz3YPxxXlgZ

தமிழ் ஓவியா said...

ஆதிதிராவிடர் இல்லையா?

அடுத்த மார்ச்சு, ஏப்ரல் மாதத்தில் நிர்வாக சபையில் ஓர் இடம் காலியாகும் என்று ஏஷ்யம் கூறப்படுகிறது. இக்காலியாகும் இடத்தில் யார்? உட்காருவது என்பதுபற்றி எல்லாப் பத்திரிகைகளும் ஏஷ்யம் கூறி, சிலர் பெயரை சிபார்சும் செய்கிறது.

வகுப்புத் துவேஷத்தை வெறுக்கும் சகவர்த்தமானியான சுதேசமித்திரன் ஒரு அய்யங்கார், அல்லது அய்யர் கனவான் பெயரைச் சிபார்சு செய்வதுடன், முன்பு பனகால் காலத்தில் காபினெட்டில் ஒரு பிராமணர் இருக்கவேண்டு மென்பதற்காகவே மந்திரியாக ஒரு பிராமணரை நியமித்ததாகவும் அந்நியாயப்படி இன்று ஒரு பிராமணர் அவசியம் என்று கூறுகிறது.

இதுவரை பெரிய உத்தியோகங்களில் அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார் எல்லாம் நீண்ட நாள் இருந்து பார்த்துவிட்டார்கள். அதைப்போன்றே முஸ்லிம், கிருஸ்துவர், முதலியார், நாயுடு, தமிழர், தெலுங்கர், கேரளர் முதலிய யாவரும் இருந்து பார்த்து விட்டார்கள் என்று நமது சகவர்த்தமானிக்கு இவைகளைக் கூறுகிறோம்.

ஆனால், இதுவரை இந்நாட்டில் ஜனசங்கையில் நாலில் ஒரு பாகத்தி னரான ஆதிதிராவிடர் என்பவர்களில் ஒருவர்கூட இது வரையில் அங்கு இருந்து பார்த்ததில்லை. இன்று ஆதி திராவிட முற்போக்கைக் குறித்து எங்கும் பலத்த கிளர்ச்சி இருக்கிறது. ஆதலால் சகலரும் ஒன்றுசேர்ந்து ஆதிதிராவிட கனவான் ஒருவர் அங்கு வர முயற்சிக்கக் கூடாதா? என்பதே!

நமது மாகாண ஆதிதிராவிட சமுகத் தலைவர்கள் தங்களுக்குள்ள அற்ப அபிப்பிராய பேதங்களை விட்டொழித்து ஒரு ஆதிதிராவிட கனவான் அங்குவர முயற்சிப்பார்களா? அல்லது இன்றுள்ளதுபோன்ற உயர்தர ராஜதந்திரிகளின் முன்னோடும் பிள்ளையாக மட்டும் இருந்தும் தங்கள் காலத்தைக் கடத்த ஆசைப்படுகிறார்களா? ஆதிதிராவிடர்கள் ஒன்றுபட்டால் இது கிட்டாது போகுமென்று நாம் நினைக்கவில்லை.

- புரட்சி - செய்தித்துணுக்கு - 04.02.1934



Read more: http://www.viduthalai.in/page1/100365.html#ixzz3YPzwbvEB

தமிழ் ஓவியா said...

இன்றைய ஆன்மிகம்?

இந்துக் கடவுள்

கைகளில் கொலைக் கருவிகளை, ஆயுதங் களை வைத்திருக்கும் இந்துக் கடவுளிடமிருந்து எப்படி அன்பையும் அரு ளையும் எதிர்பார்க்க முடியும்?



Read more: http://www.viduthalai.in/page1/100280.html#ixzz3YQ1Wh2aD

தமிழ் ஓவியா said...

முக நூலில் இருந்து....

கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரை எப்படி ஆதரிக்கிறீங்க?

- பொறியாளர் ஆன்டனி வளன்

கடவுளே இல்லை என்று சொன்ன பெரியாரை எப்படி ஆதரிக்கிறீங்க?

பெரியார் எல்லா மதத்தையும் திட்டினார்.ஏன் உங்க கிறிஸ்தவ மதத்தையும் சேர்த்து தானே திட்டினார்.கடவுளே இல்லை என்று தான் சொன்னார்.

அப்புறம் நீங்க எப்படி பெரியார் பெரியார் என்று கொடி பிடிக் கிறீங்க?

ஹ..ஹா...நல்ல அருமையான கேள்வி.

ஆனால் பெரியாரை மிகச் சரியாக புரிந்து கொண்டால், பெரியார் இந்த சமூகத்துக்கும், எனக்கும் என்னவெல்லாம் செய் திருக்கிறார் என்பதை முழுமையாக அறிந்திருந்தால்,இந்த கேள்வியே எழுந்திருக்காது.

பெரியார் ஒரு வந்தேறி போன்ற அரை வேக்காடுகளின் கூச்சல்களும் எழாது.

பெரியாரை நேசிக்க என்ன காரணம்?

இட ஒதுக்கீடு என்ற ஒன்று இல்லாமால் இருந்திருந்தால்,நான் கல்வி கற்று இருப்பேனா,கணினி முன் அமர்ந்து இருப்பேனா அல்லது என் குலத் தொழிலையே செய்திருப்பேனா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி!

அப்படியானால் உன் குலத் தொழில் இழிவானதா? ஹ..ஹா.. அப்படி அல்லவே அல்ல.எந்த தொழிலும் இழிவானது அல்ல. ஆனால் கல்வியா,என் குலத் தொழிலா என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும்.இரண்டில் எதை ஏற்க வேண்டும்,மறுக்க வேண்டும் என்பது எனது விருப் பமாக இருக்க வேண்டுமே ஒழிய எனக்கான வாய்ப்பே மறுக்கப் படக்கூடாது.

எவர் ஏற்றாலும்,ஏற்கா விட் டாலும், பெரியாரும் திராவிட இயக்கங்களும் இல்லாமல் இருந் திருந்தால், நான் விரும்பிய கல்வியை தாராளமாக கற்பதற்கான வாய்ப்பும், சூழலும் எனக்கு கிடைக்காமல் போய் இருக்கும் என்பது தான் நிதர்சனம்.

கல்வியின் சுவடே அறியாத பாரம்பரியத்தில் பிறந்த, முதல் தலை முறை பட்டதாரி பிள்ளைகளுக்கு தெரியும் பெரியார் எவ்வளவு முக்கியம் என்று.

பெரியாரை ஆதரிக்க வேண்டிய அனைத்து காரணங்களையும், அவர் இந்த சமூகத்துக்கு செய்த தொண்டு களையும் குறித்து புதிதாய் நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

ஆனால் நான் பெரியாரை ஆதரிக்க என் கல்வி மற்றும் சுய மரியாதை என்ற ஒற்றை காரணம் போதுமானது. கூடவே அவரது பல்வேறு சமூகத் தொண்டுகள் அவரைத் தீவிரமாக ஆதரிக்க எனக்கு காரணங்களாய் இருக்கிறது.

மற்றபடி கடவுள் குறித்த பெரியாரின் பார்வைகளையும்,அவர் அபப்டி சொல்லிய கால கட்டங்களில்,மதத்தின் பெயரால் இங்கே நடந்த,ஏன் இப்போதும் நடக்கிற கொடுமைகளையும் வைத்து, அவரது கடவுள் மறுப்பிற்கான காரணத்தையும்,அவரையும் என்னால் புரிந்து கொள்ள முடியும்.

அவர் கிறிஸ்தவத்தை திட்டட்டும், கடவுளே இல்லை என்று சொல்லட்டும். ஆனால் அவர் சொல்வதையே, ஏற்பதும் ஏற்கா ததும் என் விருப்பம் என்பதை அவரே தெளிவாய் சொல்லி விட்டார். அப்புறம் என்ன?

பெரியாரைப் போற்ற ஆயிரம் காரணங்கள் எனக்கு இருக்கும் போது, கடவுள் மறுப்பு குறித்த அவரது பார்வையை முன் வைத்து அவரை வெறுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

குணம் நாடி குற்றமும் நாடி தான்....

குறள்: எந்நன்றி கொன்றார்க்கும் உய் வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

***சாதிகளையும், மதங்களையும், மார்க்கங்களையும் கடந்து நேசிக் கப்படத் தக்கவன் அந்த ஈரோட்டுக் கிழவன்**



Read more: http://www.viduthalai.in/page1/100277.html#ixzz3YQ2VaPgy

தமிழ் ஓவியா said...

மழை பொழியவில்லை என்றால்...


மழை பொழியவில்லை என்றால், கொடும்பாவி கட்டி இழுப்போமா, கோபால பஜனை செய்வோமா, என்று தான் புத்தி போகிறது. இது வெறும் ஏமாளிப் புத்தி. இதிலேயே, எத்தரின் புத்தியும் வேலை செய்ய ஆரம்பித்தால் மழை பெய்வதற்கு வருண ஜெபம் செய்வது என்று ஆரம்பிக் கிறார்கள். இப்படிப்பட்ட விதமாகத்தான் நம்மவர்களின் சிந்தனை சென்று கொண்டிருக்கிறதேயொழிய, மேனாட்டு விஞ்ஞானிகள் போலவா, மழை இயற்கை நிகழ்ச்சிதான் என்றாலும், அதையே ஏதேனும் செயற்கை முறையால் நாம் உண்டாக்க முடியாதா, என்று செல்கிறது. அவர்களின் சிந்தனை அந்தத் துறையிலேயும் சென்று, இப்போது மழையை உண்டாக்கும் முறையையும் விஞ்ஞான ரீதியாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் - இனி இத்துறையில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடத்திய வண்ணம் இருக்கின்றனர்.

இங்கு வான மழை போலே, மேனி வண்ணம் கொண்டான் என்று பாடிக்கொண்டே காலந்தள்ளுகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வடக்கே ஒரு ஊரில், மழை இல்லாமல் போகவே, அவ்வூர் புத்திசாலிகள், சூரியன் மீது கல்லை விட்டெறிந்தார்கள். மழை வேண்டும் என்று, பயிர் வளரவில்லை எதிர்பார்த்தப்படி என்றால், விதையால் வந்த தவறா, உழவுமுறையால் வந்த தவறா, ஏதேனும் பூச்சி புழு அரிக்கிறதா, அல்லது மண்ணின் சத்தே கெட்டுவிட்டதா என்பன போன்றவைகளிலே நம்மவர்களின் எண்ணம் போவதில்லை - பச்சையம்மனுக்கு பொங்கலிடுவது, அரசமரத்துக்கு மஞ்சள் பூசுவது என்று இப்படி ஏதாவதொரு அர்த்தமற்ற விஷயத்தின் மீது தான் எண்ணம் போகிறது.

தமிழ்நாட்டுப் பிற்கால மன்னர்கள் பலர், மழை காலா காலத்திலே பொழியாமற் போனால் என்ன செய்வதென்று, பயந்து மழையைச் பொழியச் செய்ய, வருண ஜெபம் செய்வதற்காகவே, அவர்களுக்கு மானியங்கள் - இனாம்கள் தரப்பட்டன. தஞ்சை மாவட்டத்திலே, இப்படி வருண ஜெபம் செய்வதற்காக அளிக்கப்பட்ட இனாம்கள், இன்றும் அந்தப் பரம்பரையினரிடம் உள்ளன
(நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)

எந்த அரசர்கள் பிற்போக்காளராயிருந்து வருண ஜெபம் செய்தனர் என்று அண்ணா அவர்கள் குற்றசாட்டுகிறார் களோ, அதே அண்ணா பெயரைக் கட்சியில் தாங்கிய கட்சி - ஆட்சி அதே வருண ஜெபத்தைச் செய்கிறது என்றால் அண்ணாவைப் புரிந்த அழகும் அவரை மதிக்கும் அழகும் மிகப் பரிதாபமாகும்.

இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால் இந்த ஆட்சியில் நிதியமைச்சராக இருக்கும் டாக்டர் நாவலர் இரா.நெடுஞ் செழியன் அவர்கள் இயற்கையை நோக்கி வழிபாடு செய்வோரை படு கிண்டல் செய்து எழுதி இருக்கிறார். இயற்கையையோ அல்லது இயற்கைப் பொருட்களின் பண்புகளையோ வழிபாட்டுரையால் நாம் மாற்றிவிட முடியுமா? வழிபடுவதன் மூலம் கலைகளை விரிவு படுத்துவதோ அல்லது அடக்கி வைக்கவோ நம்மால் ஆகுமா? பலியிடுவதன் மூலம் காற்றுகளின் திசையை மாற்றிட நம்மால் இயலுமா? மண்டியிடுதல் நமக்குச் சொத்துகளைச் சேர்த்து தருமா? வேண்டுதலைச் செய்வதன் மூலம் நாம் நோயைப் போக்கி கொள்ள முடியுமா? சடங்கு நிறைவேற்றுவதன் மூலம் நாம் அறிவைப் பெருக்கிக் கொள்ள இயலுமா? படையல் போடுவதன் மூலம் நன்மையையோ அல்லது மதிப்பையோ நாம் பெற்றுவிடக் கூடுமா? (மதமும் மூட நம்பிக்கையும் பக்கம் 23)

இவ்வளவையும் எழுதிய நாவலர் இரா.நெடுஞ்செழியன் தான் மாண்புமிகு நிதி அமைச்சராக இருக்கிறார். இந்த ஆட்சியில்தான் மழை பொழிவதற்காக வழிபாடு நடத்தப்படுகிறது. அறிவிலும் இல்லை
அய்யா வழியுமில்லை
அண்ணா வழியுமில்லை
என்றாலும் இந்த ஆட்சியில் வருண ஜெபம் நடக்கிறது!
(நூல் ஆதாரம்: புராண மதங்கள் பக்கம் 73, 74)



Read more: http://www.viduthalai.in/page1/100266.html#ixzz3YQ4EhJsw

தமிழ் ஓவியா said...

பகுத்தறிவு வினாக்கள்


உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா?
குழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்? ஏன்?
எல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்?
எல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்?
ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்?அன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு?முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்?ஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்?மயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்?நோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்?
எல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா? தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை?

அய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?அக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்?
பச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா?
சிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா?

தமிழ் ஓவியா said...

உங்களுக்குத் தெரியுமா?

தந்தை பெரியார்
சூத்திரன் பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு தவம் செய்யாமல் கடவுளை நினைத்துத் தவம் செய்வதற்காக, ராமன் சம்புகன் என்ற சூத்திரனைச் சித்திரவதை செய்து கொன்றான். அதாவது சூத்திரனுக்கு (திராவிடனுக்கு) கடவுள் பார்ப்பான்தான். பார்ப்பானைக் கடவுளாகக் கொண்டு வணங்காதவனைப் பார்ப்பான் அரசன் கொல்ல வேண்டும். இது இராமயண தர்மம் மாத்திரமல்லாமல் மனுதர்மமு மாகும். எனவே இராமாயணம் இருக்க வேண்டுமா?
**************
பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நான்கு ஜாதிகளை நான் படைத்தேன் என்றும், பிராமணனுக்குச் சூத்திரன் அடிமைப்பணி செய்ய வேண்டும்; செய்யாவிட்டால் நரகத்தில் புக வேண்டும் என்பதாகவும் பாரதத்தில் (கீதையில்) கிருஷ்ணன் சொல்லி இருக்கிறான். எனவே பாரதம் இருக்க வேண்டுமா?
**************
சூத்திரன் என்பவன் தாசி புத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன். இதுதான் மனுதர்மம்; மனுதர்ம மாத்திரமல்ல, இந்து லாவும் இப்படித்தான் சொல்லுகிறது.

ஆன்மா அடங்காத ஒன்றா?
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஞானேந் திரியங்களும் (அறிவுக்கருவிகள்) வாக்கு, பாணி, பாதம், குதம், குய்யம் ஆகிய கர்மேந்திரயங்களும் (தொழிற் கருவிகள்) இவ்வுடல் அடங்கும் பொழுது தாமாகவே அடங்கி விடுகின்றன அல்லவா? அங்ஙனமிருக்க ஆன்மா மட்டும் ஏன் அடங்காது?
ஆன்மா ரூபமுடையது என்பீரேல், சரீரப் பிரமாணத்ததா, அப்படியானால் சரீரத்துக்குள் புகாது. காரணம்? ஒரே அளவுள்ள இரு குடங்கள் ஒன்றினுள் ஒன்று புகமுடியாது போலாம் என்றறிக!
ரூபம் அற்றது என்றாலோ ரூபமற்ற ஆன்மா ரூபமாகிய சரீரத்துக்குள் புக முடியாது.
ரூபமாகவும், அரூபமாகவும் உள்ளது என்றாலோ, இரு வகைத்தும், குற்றமே என்றறிக.
- (நீலகேசி, மொக்கலவாதச் சருக்கம், பக்கம் 3)



Read more: http://www.viduthalai.in/page1/100268.html#ixzz3YQ4bPODR

தமிழ் ஓவியா said...

ஒவ்வொரு மனிதனும் செத்துப் போவது உண்மைதான் என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சியும் அவன் துவக்கிய காரியமும் செத்துப் போய் விடுவதில்லை; அதுவும் அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பி விட்டால் அந்த எண்ணம் ஒரு போதும் அழியாது


Read more: http://www.viduthalai.in/page1/100268.html#ixzz3YQ4mBaGs

தமிழ் ஓவியா said...

பசுக்களைப் பாதுகாக்கும்போது, பெண் சிசுக்களை ஏன் பாதுகாக்கக்கூடாது?

பிவானி, ஏப்.24_ மூன்று மாநிலங்களில் செல்வாக் கான ஜாதியான காப் அல் லது ஜாதிக்குழுக்களின் ஆணாதிக்கம் மட்டுமே நிலவிவரும் காப் பஞ்சாயத் துக் கூட்டத்தில் பழைமை களைத் தகர்த்து இரண்டு பெண்கள் பெண்சிசுக் கொலைக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கி உள்ளனர்.

பசுவதைக்கு எதிராக கடுமையான சட்டத்தைப் போட்டு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் அதேநேரத் தில் பெண் சிசுக்கொலை ஏன் கடுமையான நடவடிக் கைகளை அரசுகள் எடுக்க வில்லை என்று அவர்கள் கேட்கின்றனர்.
அரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் டில்லி ஆகிய மாநிலங்களுக்கான காப் இனத்தவருக்கான ஆண்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் மகா பஞ்சாயத்து (மாபெரும் சபை) சார்பில் 100பேருக்கும்மேல் காப் பஞ்சாயத்தார் கூடிய கூட் டத்தில், பழைமையை உடைத்துக்கொண்டு இரண்டு பெண்கள் எழுந்து கேள்வி கேட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் சனவரி மாதத்தில் பானிப்பட்டில் பெண் குழந்தைகள் எண் ணிக்கைச் சரிவைத் தவிர்ப் பதற்காக பெண் குழந்தை கள் நலத் திட்டங்களை மோடியின் அரசு அறிவித் திருந்தது. பெண்குழந்தை களை காப்போம், வளர்ப் போம் என்கிற திட்டத் தைத் தொடங்கினார். அத்திட்டத்தை முன்னெ டுக்கவும் அக்கூட்டத்தில் முடிவெடுத்துள்ளனர்.

நாட்டிலேயே அரி யானா மாநிலத்தில்தான் பெண்கள் எண்ணிக்கை குறைந்து பாலியல் விகிதத் தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
மான் பகுதியைச் சேர்ந்த ஜாட் மகாசபாவின் பொதுச் செயலாளர் ஓம்பிரகாஷ் கூறுகையில், பசுவைப் பாதுகாப்பதுபோன்று, அரியானா அரசு பெண் சிசுக்கொலையில் ஈடுபடுப வர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முன்வரவேண்டும். மேலும், குற்றம் நிரூபிக்கப்படும் போது, அவர்களுக்கு அதிக பட்ச தண்டத்தொகை விதிக்கப்படவேண்டும் என்றார்.

மேலும் அவர் கூறும் போது, பசுவதையைத் தடுப்பதற்கு கடுமையான சட்டத்தை இயற்றும் போது, பெண்சிசுக்கொலை யைத் தடுப்பதற்கு கடுமை யான சட்டம் ஏன் இல்லை? அந்த பெண் சிசுக்களுக்கு உலகையே காணக்கூட வாய்ப்பு அளிக்கப்படாமல் கருவிலேயே கொல்லுபவர் கள்மீது நடவடிக்கை எடுப் பதற்கு கடுமையான சட்டம் தேவை இல்லையா? என்றார்.

அரியானாவில் விலங்கு களைக் கொல்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் முதல் பத்து ஆண்டுகள் வரை யிலும் சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது. விலங்கு களைக் காப்பதற்கும், அவை களைப் பராமரிப்ப தற்கும் கடந்த மாதத்தில் அரியானா சட்டமன்றத் தில் பசு வதைத் தடைக்காக சட்ட வரைவு தாக்கலாகி உள்ளது.

காப் பஞ்சாயத்தார்கள் என்பவர்கள் ஜாதீயக் குழுக்களின் ஆதிக்கங் களைக் கொண்டுள்ளவர் கள். ஆனால், அவர்கள் அளித்த தீர்ப்புகளால் பெரிதும் முரண்பாடுகள் உள்ளவர்களாவார்கள். அவர்களைவிட கீழ்நிலை யில் வைக்கப்பட்டுள்ள சாதியினரான கோத்ரா (துணை ஜாதியினர்) ஜாதி யினருடன் திருமணம் புரிந்துகொள்வது, அலை பேசிகள் வைத்திருப்பது மற்றும் பிற பிரச்சினை களில் முரண்பாடுகளுடன் இருப்பவர்களாகவே இருக் கிறார்கள்.

பிரகாஷ் மேலும் கூறு கையில், பெண் குழந்தை களின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு பெண் குழந்தைகளுக்கான திட்டத்தை மக்களிடையே பரப்புவதற்கு குழுக்களை அமைப்பதென பஞ்சாயத் தில் முடிவு செய்யப்பட் டுள்ளது. மாவட்டம், ஒன் றியம் மற்றும் கிராமங்கள் தோறும் சென்று பெண் குழந்தைகள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டுள்ளது. என்றார்.
மேலும் அவர் கூறும் போது, பெண் சிசுக் கொலை செய்தால் அவர் களை சமூகத்தைவிட்டுத் தள்ளிவைக்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ள னர். பெண் குழந்தை களுக்கு கல்வி அளிப்பதில் போராடும் நிலையே உள்ளது.

கறையாக உள்ள வரதட்சணை முறைகுறித் தும் மக்களிடையே விழிப் புணர்வை ஏற்படுத்த வேண் டும். பெண்களுக்கு போதிய பாதுகாப்பை அளிக்கும் சமூகமே ஆரோக்கியமான மாக இருக்கும். பெண் சிசுக்கொலை குறித்து தகவல் அளிப்பவர்கள் காப் பஞ்சாயத்தார் சார்பில் கவுரவிக்கப்படு வார்கள் என்று கூறினார்.



Read more: http://www.viduthalai.in/page1/100255.html#ixzz3YQ57SRoY