Search This Blog

15.9.14

ஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள்


 

திராவிட நாடு இதழில் (16.1.1944)  மூடநம்பிக்கை, கடவுள், மதம், ஆரியத் திற்கு எதிராக அண்ணா எழுப்பிய கேள்விகள் வருமாறு:

1) நமது நாட்டில் சைவ சமயத்திற்கு முன்னால் ஏதாவது சமயம் இருந்ததா?
2) அது எது?
3) சைவ சமயம் என்பது எப்போது உண்டாயிற்று?
4) அதற்கு முதல் கர்த்தா அல்லது சமயாச்சாரி என்பவர் யாவர்?
5) சைவ சமயத்திற்கு மற்ற சமயத்தில் இல்லாத தனிக் கொள் கைகள் என்ன?
6) அதற்கு ஆதாரம் யாது?
7) சைவம் என்பது சிவன் என்னும் ஒரு உருவமுள்ள கடவுளை, வழிபடு கடவுளாகக் கொண்டதா?
8) அல்லது தனித் தெய்வமில் லாமல் ஏதாவது கொள்கைகளை மாத்திரமோ, அல்லது குணத்தை மாத்திரமோ அடிப்படையாகக் கொண்டதா?
9) சிவன் என்பது ஒரு கடவுள் பெயரா?
10) ஒரு தன்மையா?
11) ஒரு குணமா?
12) சிவனுக்கு உருவம் சொல்லப்படுகிறதே- அது ஏன்?
13)    அதற்குப் பெண்டு பிள்ளைகளும் இருப்பதாக காணப்படுகிறதே, ஏன்?
14) சைவ சமயம் சம்பந்தமான பல கடவுள்களுக்கு உள்ள ஆயிரக்கணக்கான பெயர்கள் வட மொழியில் இருப்பானேன்?
15) ஆயிரக்கணக்கான கடவுள்களுக்கும் அவர் களது பெண்டு பிள்ளைகளுக்கும் வேறு வேறு  பெயர்கள் ஏன்?
16) சைவத்திற்கும், சமணக் கொள்கைகளுக்கும், பவுத்த கொள்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
17)  ஆரிய வேதத்தையும், ஜீவபலி வேள்வியையும் சைவம் ஒப்புக் கொள்ளுகின்றதா? மறுக்கின்றதா?
18) சைவ சமயாச்சாரியர்கள் என்பவர்கள் ஆரிய வேதத்தையும், அதில் காணும் வேள்வி களையும் ஒப்புக் கொள்கின்றனரா? மறுக் கின்றனரா?
19)    சமணர்கள் வேத வேள்வியை நிந்தனை செய் தார்கள் என்றால் அது எந்த வேதத்தையும், வேள்வியையும்?
20) சைவ சமயத்திற்குள்ள சித்தாந்தமும், ஆகமமும் வடமொழியா? தென் மொழியா?
21)  சைவ சமயத்தையே சேர்ந்த சைவக் கடவுள்கள் இருக்கும் தனித்தனி ஊர்களுக்கு தனித்தனி பெருமை ஏன்?
22)    சமயாச்சாரிகள் என்போர்களால் பாடப்பட்ட ஊர்களுக்கும், பாடப்பட்ட கடவுள்களுக்கும் மாத்திரம் அதிக மதிப்பு ஏன்?
23)    சைவ சமயாச்சாரியார்களும், சைவ சமய பக்தர்களும், பவுத்தர்களையும், சமணர் களையும் துன்புறுத்தியதேன்?
24) துன்புறுத்தவில்லையானால் தேவாரம் முதலியவைகளில் அவர்களை கண்டபடி இழித்துக் கூறி வைத்திருப்பதேன்?
25)    வடமொழிக் கதைகளையும் வடமொழி புராணங்களையும் தள்ளி விட்டால் சைவர் களுக்கு ஏதாவது கடவுள் உண்டா?
26)    சைவத்திற்கு ஏகக் கடவுள் வணக்கமா? பல கடவுள் வணக்கமா?
27) எத்தனைக் கடவுள்கள் இது வரை கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன?
28) இதோடு தீர்ந்ததா? இனியும் உண்டாகுமா?
29) சைவ சமயத்திற்கு கோயில் கொள்கை உண்டா?
30) விக்ரக ஆராதனை உண்டா?
31) வேறு ஒருவன் அர்ச்சகனாக இருந்துதான் கடவுளை வணங்க வேண்டுமா?
32) ஆகிய இவைகளுக்கு ஆதாரம் ஏது?
33) சைவர்களில் ஒவ்வொருவரும் அவரவர் வணங்க வேண்டிய கடவுளை நேரில் பூசனை புரிய அவரவருக்கு உரிமையுண்டா?
34) சைவத்தில் ஜாதி வித்தியாசம் உண்டா?
35) சைவக் கோயில்களில் இப்போது ஜாதி வித்தியாசம் பாராட்டப்படுகின்றதா?
36)    அது சைவத்திற்கு முரணானது அல்லவா?
37)    முரணானால் அம்முரணுக்கு இதுவரை சைவர்கள் ஏதாவது பரிகாரம் செய்தார்களா?
38) கடவுளை வணங்க கற்பூரம் கொளுத்தி வைத்து வணங்க வேண்டும் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? எந்த ஆகமத்தில் சொல்லுகிறது?
39)    ஏதாவது ஓர் ஆகமத்தில் சொல்லப்பட்டால் அது  ஆரியர்களின் ஆகமமா? தமிழர்கள் ஆகமமா?
40) கற்பூரம் கொளுத்தும் வழக்கம் எது முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது?
41)    பிள்ளையார் என்ற ஒரு கடவுளுக்குச் சைவத்தில் இடம் இருக்கின்றதா?
42) கந்தபுராணத்தைச் சைவர்கள் ஒப்புக் கொள் ளுகின்றனரா?
43) ஒப்புக் கொள்ளுவதானால் அது சைவத்தில் பொருந்தியதுதானா?
44) சைவர்கள் சிவரகசியத்தையும் சிவ மகா புராணத்தையும், சிவபராக்கிர மத்தையும் ஒப்புக் கொள்ளுகின்றார் களா?
45)    நால்வர்கள் பிரம்மாவையும், விஷ்ணுவையும் ஒப்புக் கொள்ளுகின் றார்களா?
46)    அவை தனித்தனி கடவுள்களா?
47)    நால்வர்கள் விஷ்ணுவைத் தாழ்த்திப் பாடி இருந்தால் அது மதத் துவேஷம், அல்லவா?
48)    மனு ஸ்மிருதியையும், பராசர ஸ்மிருதியையும் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
49) சமணர்கள் கழுவேற்றப்பட்டதைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா? கோயில்களில் இன்னமும் திருவிளையாடல் புராண கதை உற்சவங்கள் நடக்கின்றதை மறுக்கின்றார்களா?
50) திருநீறு எதற்காகப் பூசுவது?
51)    இலிங்கத்திற்கும், ஆவுடையாருக்கும் சொல் லும் கதையை ஒப்புக் கொள்ளுகின்றார்களா, இல்லையா?
52) ஒப்புக் கொள்ளாவிட்டால் அந்தப் பழக்கம் உள்ள வடமொழி ஆதா ரத்திற்கு என்ன பதில் சொல்லக் கூடும்?
53)    இலிங்கம் எனும் வார்த்தை என்ன பாஷை? அதற்கு என்ன அர்த்தம்? எந்த ஆதாரப்படி?
54) கைலயங்கிரி எது? சுப்பிரமணியன் எது? கந்தன் எது? குமரன் எது?
55)    மலையரசன் மகனென்றால் என்ன?
56)    இப்பொழுது இதுவரை நடந்து வந்த கோயில் முறை, பூசை முறை, உற்சவ முறை முதலியவை களால் ஏற்பட்ட நன்மைகள் என்ன?
57) இவை இப்படியே நடக்க வேண்டியது தானா?
58)    இவைகளின் பேரால் பல லட்சம் ரூபாய்கள் செலவாகின்றதே நியாயம் தானா?
59)    அதை நிறுத்தி அச்செலவையும், காலத்தையும் வேறு வழியில் திருப்பலாமா? அல்லது இப் படியே இருக்க வேண்டுமா?
60)    சைவர்கள் மேல்லோகத்தை ஒப்புக் கொண் டார்களா?
61)    மறுபிறப்பை ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
62)    திதிகளை ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
63)    பிராமணர்களை ஒப்புக்கொள்ளுகின்றார்களா?
64)    சமயாச்சாரிகளின் அற்புதங்களை எல்லாம் அப்படியே நடந்ததாகவே ஒப்புக் கொள்ளு கின்றார்களா?
65) மற்றும் சைவப் புராணங்களில் உள்ள எல்லா அற்புதங்களையும் நடந்ததாகவே ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
66) ஒவ்வொரு கோயிலுக்கும், ஒவ்வொரு சாமிக்கும் ஏற்பட்ட ஸ்தல மூர்த்தி, தீர்த்த புராணங்களை உண்மை என்பதற்காக ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
67) சைவர்களுக்குச் சரியான முறை எது?
68)    சைவர்களுக்கு அல்லது சைவ சாமிகளுக்குத் தேவதாசி முறைகள் உண்டா?
69)    வருணாசிரமம் உண்டா?
70)    உண்டென்றால் ஆதாரம் எது?
71)    இல்லை என்றால் ஆதாரம் எது?
72) இப்பொழுது அமலில் இருப்பதற்குக் காரணம் என்ன?
73)    சைவ மடங்கள் எதற்கு?
74) அவை இதுவரைச் சாதித்த தென்ன?
75) அம்மடங்கள் இனியும் அப்படியே இருக்க வேண்டியதுதானா?
76)    இம்மடங்களைத் திருத்த இதுவரை எந்த சைவராவது முயற்சி செய்தது உண்டா?
77)    இப்பொழுதுள்ள சைவர்களில் சைவ சம யத்தைப் பற்றி அபிப்ராயம் சொல்ல நிபுணர் யார்?
78)    அருகதை உடையவர் யார்?
79)    பாரதம், இராமாயணம், பாகவதம் முதலிய வைணவப் புராணங்களில் வரும் சிவனைச் சைவர்கள் ஒப்புக் கொள்ளுகின்றார்களா?
80) வடமொழியும், அம்மொழியில் உள்ள நூல் களும் இன்றி சைவத்தை விளக்க முடியுமா?

                                  -----------------நன்றி: திராவிட நாடு இதழ் 16.1.1944

7 comments:

தமிழ் ஓவியா said...


அண்ணா வெறும் படமல்ல - பாடம்! அவற்றைப் படிப்போம் - செயல்படுத்துவோம்! தமிழர் தலைவர் அறிக்கை


அறிஞர் அண்ணாவின் 106ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அறிஞர் அண்ணாவின் 106ஆம் பிறந்த நாள் பெரு விழா! (செப்.15- 2014) இன்று.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் தலை சிறந்த மாணவராகத் திகழ்ந்து, அவர் கண்ட பகுத்தறிவு - சுயமரியாதை இயக்கத்தின் தளபதியாய் உயர்ந்து, பிறகு கோலோச்சும் நிலைக்கு மக்கள் ஆட்சியின் மகத்தான வாய்ப்புக் காரணமாக உயர்த்தப்பட்ட நிலையில், இளமையில் கற்ற பாடங்களை மறக்காது, ஆட்சியின் அரிய திட்டங்களாக - சட்டங்களாக ஆக்கி, தன்னை ஆளாக்கிய தலைவனின் பாராட்டையும், வாழ்த்தையும் பெறும் அளவுக்கு வாழ்ந்து காட்டி, வரலாறு படைத்தவர் அறிஞர் அண்ணா. ஆட்சி அவருக்கு அலங்கார பீடமல்ல; அவனியோர்க்கு ஆற்ற வேண்டிய மனித நேயக் கடமைக்களுக்கான வாய்ப்பு ஆகும்.

அப்படித்தான் செயற்கரிய செய்து குறுகிய காலத்தில் சாதனைச் சரித்திரம் படைத்தார்.

இன்றோ அண்ணாவைப் பற்றிய வெளிச்சங்கள், வாண வேடிக்கைகள் அதிகம்; ஆனால், அண்ணா எந்த பகுத்தறிவுக் கொள்கையை இறுதி மூச்சடங்கும் வரை ஆட்சியில் இருந்தபோதும் செயல்படுத்துவதில் சமரசம் விரும்பாத தலைவராக இருந்தாரோ, அந்தப் புரிதலும் அதை ஒட்டிய செயல்பாடும் தேடித் தேடியும், காணாமற் போனவைகளாகி விட்டது - வேதனைக்கும் வெட்கத் திற்கும் உரியது!

கடவுள் படங்களை நீக்கச் சொன்னார்

ஆட்சிக்கு வந்தவுடன், மதச் சார்பின்மை என்பது ஆட்சியின் தத்துவம் ஆனதால், அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்களை மாட்டியிருப்பது தவறு; அவைகளை அகற்றிட வேண்டும் என்று சுற்றறிக்கையே அனுப்பி தலைமைச் செயலகத்திலேயே அதனை செயல்படுத்தவும் வற்புறுத்தினார் 1967-இல்.

அவருக்கு ஆதரவு கொடுத்த ஆச்சாரியார் - ராஜாஜி அவர்களேகூட இந்தச் சுற்றறிக்கையை பின் வாங்கிட வேண்டும் - தமிழக அரசு என்று அறிக்கை விட்டு, எதிர்ப்புத் தெரிவித்ததையும் பொருட்படுத் தாது, ஆட்சியைத் தொடர்ந்த துணிச்சலின் சொந்தக்காரராக முதல் அமைச்சர்அண்ணா திகழ்ந்தார்!

ஆனால், அது பிறகே செயல்பாடற்றுப் போனது - வேதனையான நிலையே!

தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே பார்ப் பனர் இல்லாத அமைச்சரவையை அமைத்து வெறும் 9 பேர்களையே (முதல்வர் உட்பட) கொண்டு ஆட்சியை நடத்தி, அகிலத்தையே வியக்க வைத்தார்!

எங்கும் பகுத்தறிவு முழக்கம் செய்தார்; பட்டமளிப்பு விழாக்கள் என்றாலும் சரி, பாராட்டு விழாக்களானாலும் சரி, அதை ஒரு முக்கிய கடமையாகவே செய்து சரித்திரம் படைத்தார்! கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற சொற்களையும் அண்ணாவையும் பிரித்துப் பார்க்க முடியாது!

ஆனால், இன்று அண்ணா பெயரைப் பயன்படுத்தியும், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், கொடியில் பொறித்தும் நடத்துகின்றவர்கள் இம்மூன்றையும் கடைப் பிடித்து ஒழுகும் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் தானா என்று நெஞ்சில் கைவைத்து கேள்வி கேட்டு நேர்மையான விடை காண முயல வேண்டும்.

அண்ணா வெறும் படம் அல்ல.
பாடம்! பாடம்! படிப்பினை
பெரியார் வாழ்க! அண்ணா விரும்பிய புதிய சமுதாயம் மலர்க!

சென்னை
15.9.2014

கி. வீரமணி
தலைவர்,திராவிடர் கழகம்

Read more: http://www.viduthalai.in/e-paper/87808.html#ixzz3DOLbVtcU

தமிழ் ஓவியா said...

அண்ணா பிறந்த நாளில்....


அறிஞர் அண்ணாவின் 106ஆம் ஆண்டு பிறந்த நாள் இந்நாள். தமிழ் நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. தந்தை பெரியார் பிறந்த நாளும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளும் அடுத்தடுத்து வருகின்றன.

இருவர் விழாவையும் இணைத்துக் கொண்டாடும் வாய்ப்பு இயல்பாகவே அமைந்து விட்டது. தந்தை பெரியார் அவர்கள் தத்துவக் கர்த்தா என்றால் அதனை எடுத்துப் பரப்பியதில் ஆற்றல் வாய்ந்த தலை மகனாக ஒளி விட்டவர் அண்ணா ஆவார்.

செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் அல்லர் அண்ணா; அந்தக்கால கட்டத்தில் எம்.ஏ. படிப்பு என்பது சாதாரண மானதல்ல; ஒரு நடுத்தரக் குடும்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற எவரும் அரசுப் பணியில் அமர்ந்து கை நிறைய பொருளீட்டி தம் குடும்பத்தவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதுதான் எதார்த்தமாகும்.

ஆனால், அண்ணா அந்த மலிவான - பெரும்பாலோர் எண்ணக் கூடிய அந்தச் சுயநல சிறைக்குள் தன்னைச் சிக்க வைத்துக் கொள்ளாமல், சமூகப் புரட்சியாளர் தந்தை பெரியார் அவர்களின் கரம் பிடித்து, காடுமேடுகள் எல்லாம் சுற்றித் திரிந்து, ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக நம்மை தளைப்படுத்திய பழைமைவாத வைதீக முதலைப் பிடியிலிருந்து விடுதலை செய்விக்க அரும்பெரும் தலைமைப் பிரச்சாரகராக விளங்கினார்.

தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றில் அவருக்கு இருந்த தனிப் பெரும் ஆற்றல் - சொற்பொழிவிலும், எழுத்திலும் போட்டிப் போட்டுக் கொண்டு முகிழ்த்து நின்றன. இளைஞர்களை ஈர்த்தன! வைதீகப்புரியைக் குலை நடுங்க செய்தது; சங்கராச்சாரியாரின் மடம் அமைந்த அந்தக் காஞ்சியிலே தான் அண்ணாவும் பிறந்தார்.

சங்கராச்சாரியார்பற்றி அண்ணா எழுதியவை அனந்தம் சங்கராச்சாரி பதவி தற்கொலை என்று திராவிட நாடு இதழில் (19.4.1942) அண்ணா எழுதியதுண்டு.

ஈட்டிய பொருளில் வாழ்க்கைக்குத் தேவையானது போக மீதியைச் சொத்தாகவும், சுகபோகக் கருவியாகவும் மாற்றாமல், ஏழைகள் உய்யச் செலவிட வேண்டும் என்ற உருக்கமான இந்த உபதேசம்; துறவு நிலை பூண்டு உள்ளவரால் இல்லறவாசிகளுக்கு எடுத்து ஓதப்படுகிறது. மிகச் சரி! ஆனால் சுவாமிகளின் நிலைமை என்ன?

தமிழ் ஓவியா said...


அவர் வாழ்க்கை இருக்கும் விதம் எப்படி? மேனி வாடாது, பாடுபடாது பல்லக்குத் தூக்கிகள் வேகமாகச் செல்லவில்லையே, பக்தக் கோடிகள் மேலும், மேலும் பணம் தரவில்லையே, சூடிய பூ வாடிற்றே, பட்டாடையின் பளபளப்பு மங்குகிறதே, மணியின் மெருகு குலைகிறதே, பஞ்சணையில் மல்லிகையின் காம்பு உறுத்துகிறதே என்ற கவலைகள் தவிர, வேறு கவலையற்றுப் பாதத்தைப் பலர்தடவிக் கண்களில் ஒத்திக் கொள்ள பகவானின் பிரதி நான் என்று கூறிக் கொண்டு கரி, பரி காவலருடன் காடு உலவி வரும் ராஜபோகமன்றோ சங்கராச்சாரியாருடையது! முதல் இல்லா வியாபாரம்!

சோகமில்லா வாழ்வு! உழைப்பு கிடையாது! உல்லாசத்திற்குக் குறைவு கிடையாது; இங்ஙனம் இவர் வாழ்ந்து கொண்டு மிராசுதார், வியாபாரி மற்றவர் ஆகியோருக்குக் கீதை உபதேசம் புரிவது, ஏதேனும் பொருளுடையதாகுமா? கன்னக் கோலன் கள்வன் கேடு பற்றியும், காமவண்ணத்தான் ஒழுக்கப் போதனையும், கசடன் கற்றதனால் ஆன பயனையும் எடுத்துக் கூறுவது எள்ளி நகையாடக் கூடியதன்றோ! என்று அழகு தமிழில் அருமையான கருத்துக்களைக் குழைத்துத் தந்தவர்தான் அறிஞர் அண்ணா!

அவர் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போதும் அடிப்படையில் ஈரோட்டுக் குருகுலத்தில் அவர் கற்றவற்றை, ஆழ்ந்து உணர்ந்தவற்றை - இந்தச் சமுதாயத்துக்கு ஆற்றப்பட வேண்டியவை என்று ஆழமாக அவர் உணர்ந்தவற்றை அவர் ஆட்சியில் அமர்ந்திருந்த அந்தக் குறுகிய காலத்திலேயே சட்ட வடிவமாக்கி, தன் ஆசான் தந்தை பெரியார் அவர்களின் திருமுன்னே அளித்து, ஆட்சி யையே காணிக்கையாக்கிய வாய்ப்பு எந்தக் காலத்தில் நடந்திருக்கிறது?

சட்டமன்றத்தின் படிக்கட்டுகளை மிதிக்காத தலை வருக்குச் சட்டமன்றம் - அமைச்சரவை காணிக்கையாக் கப்பட்டது அசாதாரணமானது.

அண்ணா அவர்களின் மறைவிற்குப் பிறகு ஆட்சி பொறுபுக்குவந்த மானமிகு கலைஞர் அவர்களோ இது சூத்திரர்களுக்காக ஆளப்படும் சூத்திரர்களின் அரசு! என்று சூளுரைத்தது காலத்தையும் தாண்டி எதிரொலித்து கொண்டுதானிருக்கும்! இதுதான் திமுகவின் பலம் என்பது ஒரு புறம் இருந்தாலும், இன எதிரிகள் இனம் கண்டு தாக்குவதற்கும் காரணமாகும்; இது தவிர்க்க முடியாத ஒன்றே!

இன்றைய நிலை என்ன? இந்தியாவின் தென் பகுதியில் முகிழ்த்த சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் எடுத்துக் கொடுத்த - பகுத்தறிவு - சுயமரியாதை, சமத்துவ - சமதர்மக் கொள்கைகள் இந்தியா முழுமையும் இன்று தேவை - அவசியம் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்துத்துவாவாதம் எழுந்து நிற்கிறது. இந்துத்துவா பற்றிக்கூட இந்து இட்லரிஸம் என்ற கட்டுரையில் தம் கருத்தினைப் பதிவு செய்துள்ளார் அண்ணா (திராவிட நாடு 29.7.1942).

இந்தக் கால கட்டத்தில் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று ஆரியத்தின் தொங்கு சதையாக இருந்து ஆரம்பித்துள்ள திராவிட இயக்கத்தால் பலன் பெற்ற சில தமிழர்கள்.

இராவணன் காலத்திலேயே விபீடணர்கள் தோன்றிட வில்லையா? இதனை அய்யாவும், அண்ணாவும் எடுத்துக் காட்டியதில்லையா? இத்தகையவர்களை - திராவிடத்தால் பலன் பெற்ற நம் மக்கள் அடையாளம் கண்டு ஒதுக்குவார்கள் என்பதில் அய்யமில்லை.

மற்றொருபுறம் அண்ணாவின் பெயரால் கட்சியை வைத்துக் கொண்டு, அண்ணாவின் உருவத்தைக் கட்சியின் கொடியில் பொறித்துக் கொண்டு, திராவிட இனக் கலாச்சார சொல்லையும் ஒட்டிக் கொண்டு, இவற்றிற்கு எதிரான ஒரு கட்சி (அகில இந்திய அண்ணா திமுக ஆட்சி அதிகாரத்திற்கும் வந்து விட்ட - அவலம்). எந்த அளவுக்கு அந்தக் கட்சி ஆரிய ஊடுருவலாக ஆகி விட்டது என்றால் அக்கட்சி நடத்தும் அதிகாரப் பூர்வமான நாளேட்டில் (Dr. நமது எம்.ஜி.ஆர்.) பூணூலின் தத்துவம் என்று கூறி, படம் போட்டு விளக்கம் சொல்லும் அளவுக்கு அக்ரகாரத் தனமாக விளங்குகிறது.

திராவிடர் இயக்கத்தில் ஆரிய ஊடுருவலால் ஏற்பட்ட விபரீதம் இது! அய்யா, அண்ணா பிறந்த நாள் என்கிற போது அவர்களை என்றும் படமாக பார்க்காமல், அவர்கள் நாட்டு மக்களுக்குப் போதித்த பாடங்களை ஆழமாக படித்து உணர்ந்து, அவர்கள் காண விரும்பிய சமு தாயத்தை படைக்க உறுதி எடுத்து உறுதியாக செயலாற்று வதுதான் மிக முக்கியம்!
வாழ்க பெரியார்! வாழ்க அண்ணா!!

Read more: http://www.viduthalai.in/page-2/87809.html#ixzz3DOMAoiIR

தமிழ் ஓவியா said...


பெருமை

மந்திரிப் பதவி பெரிதல்ல; பணக் காரனாக இருப்பதும் பெரிதல்ல; மனிதனாக வாழ்வதுதான் பெருமை. இழிவற்றவனாக வாழ்வதுதான் பெருமை.

- (விடுதலை, 10.10.1973)

Read more: http://www.viduthalai.in/page-2/87810.html#ixzz3DOMSSGWU

தமிழ் ஓவியா said...


ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம்!


ரகசியம் என்றாலே அனைவரும் அதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவோம். அதில் தற்போது பெரும்பாலானோர் தெரிந்துகொள்ள விரும்பும் ஒன்று ஒல்லியாக இருப்பவர்கள் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்பதுதான்.

ஒல்லியாக இருப்பவர்கள் நன்கு சாப்பிடுவார்கள். ஆனால், ஒரே சமயத்தில் வயிறு நிரம்ப சாப்பிடாமல் அவ்வப்போது ஏதேனும் சிறிது சிறிதாக சாப்பிடுவார்கள். இப்படி போதிய இடைவெளி விட்டு சாப்பிடுவதால், செரிமான மண்டலம் சீராக இயங்கி, கொழுப்புகள் தங்குவதைத் தடுக்கிறது.

அதேசமயம் தண்ணீரை அதிகம் குடிப்பதோடு உடற்பயிற்சி, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். ஒல்லியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரைக் குடிக்கவேண்டும். இதனால் உடலில் தங்கியுள்ள நச்சுக்களானது உடலில் இருந்து வெளியேறி, உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும்.

மேலும் டயட்டில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சேர்த்து வர வேண்டும். இதனால் அதில் உள்ள சிட்ரஸ் ஆசிட்டானது உடலில் தங்கியுள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்துவிடும்.

உணவில் அவ்வப்போது கசப்பான உணவுகளையும் சேர்த்து சாப்பிடவேண்டும். இவ்வாறு சாப்பிட்டால் உடலில் கொழுப்புகள் தங்குவதில்லை. மேலும் எவ்வித நோயும் அவ்வளவு எளிதில் தாக்குவதில்லை. நேரம் கிடைக்கும் போது ஏதேனும் ஒரு விளையாட்டு, நடனம் அல்லது உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடவேண்டும். இரவில் சரியாக தூங்காமல் இருந்தால் உடல் பருமனடையும். எனவே குறைந்தது தினமும் 7 மணி நேர தூக்கமானது மிகவும் அவசியம். ஒல்லியாக இருக்க நினைப்பவர்கள் அதிகம் இனிப்பு வகைகளைச் சாப்பிடக்கூடாது.

உடற்பயிற்சிக்கு பின் சாப்பிடக்கூடாதவை: முட்டை ஒரு சத்தான உணவுதான். ஆனால் உடற்பயிற்சிக்கு பின் முட்டை, தயிர், சாக்லெட், பீட்சா போன்றவற்றை சாப்பிடக் கூடாது. குளுட்டென், சர்க்கரை அதிகம் இருக்கும் பிரட் சாப்பிட்டால் உடலில் சர்க்கரை அளவு சர்ரென்று ஏறிவிடும் ஆபத்து உள்ளது.

செரிமானத்திற்கும் நல்லதல்ல. உடற் பயிற்சிக்குப் பின், நம் உடலில் ரத்தமானது வயிற்றுக்குள் செல் லாமல் வெளியே பாய்ந்து கொண்டிருக்கும். அப்போது ஒரே ஒரு ஸ்பூன் வெண்ணெய் மட்டும் சாப்பிட்டால் போதுமானது. அதற்கு மேல் சாப்பிட்டால் செரிமானத்திற்கு நல்லதல்ல.

தமிழ் ஓவியா said...


நீரிழிவைக் கட்டுப்படுத்தும் வெந்தயம்


மேதி என்று அழைக்கப்படும் வெந்தயம் ஒரு மாமருந்து. கீரைவகையில் இருந்து கிடைக்கும் விதையாகும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களிலும் வெந்தயம் விளைகிறது. வாரம் ஒருமுறை வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல், வாயு, கபம், இருமல், சீதக்கழிச்சல், வெள்ளைப்படல், இளைப்புநோய் என எந்த நோயும் அண்டாது. இது தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது.

வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், செரிமானமின்மை போன்றவை ஏற்படாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்தப் பொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். நாம் அன்றாட உணவில் பயன்படுத்தும் பொருள்களில் வெந்தயம் முக்கிய பங்கு வகுக்கிறது.

இது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடலுக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் வெந்தயத்தில் உள்ளது. வெந்தய விதைகளில் போலிக் அமிலம், ரிபோபிளேவின் (பி2), வைட்டமின் ஏ, பைரிடாக்சின், வைட்டமின் சி, செலினியம், துத்தநாகம், மாங்கனீஷ், இரும்பு சத்து, தாமிரச்சத்து, பொட்டாசியம், உலோகச் சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளன.

வெந்தயம் உடலுக்குக் குளிர்ச்சி அளிப்பதுடன், உடல் வெப்பத்தை சமநிலையில் வைக்கவும் உதவுகிறது. இரவில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில், அந்தத் தண்ணீரை பருகி வந்தால் உடல் குளிர்ச்சியாகவும், மலச்சிக்கலை போக்கவும் நல்ல மருந்தாக பயன்படுகிறது. கோடைக்காலத்தில் மோரில் வெந்தயத்தை ஊற வைத்து குடித்து வர நீரிழிவு, வயிற்றுப்புண், வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.

பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சினையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரைமணி நேரம் தலையில் தடவி குளித்து வந்தால் முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்யும்.

பொடுகு பிரச்சினை, அரிப்பு குறைவதோடு, முடி உதிர்வது நீங்கி தலைமுடி நன்கு வளரும். வெந்தய காபி, வெந்தய தேநீர் குடிக்கலாம். வெந்தயத்தில் ஹைட்ரோ அய்சோலியூசின் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பை தூண்டக் கூடிய தன்மை உடையது.

தாவர வகைகளிலேயே வெந்தயத்தில் மட்டுமே இந்த அமினோ அமிலம் உள்ளது. இது கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

தமிழ் ஓவியா said...


அரிசியும் நோய் தீர்க்கும்

தென்னிந்திய மக்களின் மிக முக்கிய உணவுப் பொருள் அரிசி. நம்மில் பெரும்பாலா னோருக்கு ஒரு வேளையாவது அரிசி சாதம் சாப்பிட்டே ஆகவேண்டும். அண்மைக் காலமாக அரிசிக்குப் பதில், அரிசியைக் குறைத்துக்கொண்டு கோதுமையை அதிக உணவாகப் பயன்படுத்தும் பழக்கம் பெருக ஆரம்பித்திருக்கிறது. அரிசியை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று சிந்திப்பதே தவறு.

பதார்த்தகுண சிந்தாமணி போன்ற மருத்துவ நூல்களில் 25-க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் மருந்தாகவும், உணவாகவும் பயன்படும் முறை விளக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நெல் மற்றும் அரிசியின் பயன்பாடும் நம் முன்னோர்களிடையே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அரிசியையும் மற்ற தானியங் களையும் அவற்றின் தன்மைகளுக்கேற்ப எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உணவாக்கிக் கொள்வது நல்லது.

அரிசி என்றால், மேலோட்டமாய் புழுங்கல் அரிசி, பச்சரிசி, பாசுமதி அரிசி, சிகப்பரிசி இவைகளைத்தான் நம்மில் பலர் அரிசி என்று தெரிந்து வைத்திருக்கிறோம். இவைதவிர வெவ்வேறு சூழல்களில் வளரக்கூடிய பல்வேறு வகையான நெல் வகைகள் அந்தந்தச் சூழலின் மண்ணின் தன்மையையும் சிறந்த மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பதை நாம் அறிந்திருக்கவில்லை.

கருங்குறுவை என்றொரு அரிசி கறுப்பு நிறத்திலும் செங்குறுவை என்றொரு அரிசி சிகப்பு நிறத்திலும் இருக்கும். இவைபோல வண்ண அரிசி வகைகளும் நம் பாரம்பரியத்தில் இருந்தன. அரிசியில் மட்டுமல்ல, எந்தப்பொருளிலுமே நிறமிகளிருந்தால் அவற்றில் ஆன்டி ஆக்சிடென்ட் தன்மை நிறைவாக இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

அரிசியின் மேல் இருக்கும் தவிடு, உமி, அன்னக்காடி இவை எல்லா வற்றிலும் நல்ல மருத்துவக் குணங்களும் உடலுக்குத் தேவையான சத்துக்களும் நிறைந்துள்ளன. பருமனாக இருக்கும் அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருக்கும். இவ்வகை பருமனான அரிசி வேக அதிக நேரம் எடுக்கும் என்பதும் அதேபோல் செரிமானத்துக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவை ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவை. உதாரணத்துக்கு மணிச்சம்பா அரிசியை கூறலாம். இதுபோல், மாப்பிள்ளைச் சம்பா அரிசியில் சாதம் சமைத்து மதிய உணவு சாப்பிட்டால் இளவட்டக்கல்லைத் தூக்கும் அளவுக்கு உடல் உறுதியும், வலிமையும் பெறலாம்.

புரதச்சத்து, நார்ச்சத்து, தாதுச்சத்து, உப்புச்சத்து எல்லாம் இந்த அரிசியில் நிரம்ப உள்ளன. விஷமுறிவுக்கு கருங்குருவை, பாலூட்டும் தாய்மார்களுக்கு நீளச்சம்பா, பொலிவான தோற்றத்திற்கு அன்னம் அழகி, வாதத்தை போக்க (கெட்ட நீரைப் போக்க) சீரகச்சம்பா உள்ளிட்ட அரிசிகள் உள்ளன. வயிறு தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் பச்சரிசி சாதம் சாப்பிடக்கூடாது.

கைக்குத்தல் அரிசி என்பது தவிடு பிரியாமல் இருக்கக் கூடியது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. கூடவே ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையும் உள்ளது. புழுங்கல் அரிசி எளிதில் செரிமானமாகும். மலச்சிக்கல் ஏற்படுத்தாது. அரிசி சாதம் மட்டுமல்ல அரிசிப் பொரியும் பித்தத்தைச் சமப் படுத்தக்கூடியது தான்.

அவல் வாதத்தைச் சமப்படுத்தும் மாவுச்சத்து மிகுந்தது. அரிசியை முற்றிலுமாகத் தவிர்க்காமல் அதனூடாகவே மற்ற பல தானியங்களையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.