Search This Blog

9.1.13

வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம்? பெரியாரின் இராமாயண ஆராய்ச்சி

இராமாயண ஆராய்ச்சி வால்மீகிக்கும் சீதைக்கும் சம்பந்தம்

- சித்திரபுத்திரன்
இராமன் தன் மனைவியின் நடத்தைக் கேட்டினால் அவளை 4 மாத சினை (கர்ப்பம்)யுடன் ஆளில்லாத காட்டில் கண்களை மூடி கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி தம்பிக்கு கட்டளை இட்டு மனைவியை தம்பியுடன் காட்டுக்கு அனுப்பி விட்டான்.
தம்பி இலட்சுமணன் அண்ணன் உத்தரவிற்கு விரோதமாக சீதையை வால்மீகி முனிவன் வாழும் காட்டில் கொண்டு போய் வால்மீகியிடம் விட்டு விட்டு வந்துவிட்டான்.
அதன் பிறகு சீதை காட்டில் இரட்டை பிள்ளை பெற்றாள் என்று வால்மீகி இராமாயணத்தில் காணப்படுகிறது.
மற்றொரு இராமாயணம்:
மற்றொரு இராமாயணத்தில் சீதை காட்டில் ஒரு பிள்ளைதான் பெற்றாள் என்றும் மற்றொரு பிள்ளை வால்மீகியால் உண்டாக்கப்பட்டது என்றும் காணப் படுகிறது.
இந்த இரண்டாவது பிள்ளையின் கதையை பகுத்தறிவுபடி பார்த்தால் இது சீதைக்கு வால்மீகியின் சம்பந்தத்தால் ஏற்பட்ட பிறந்த பிள்ளை என்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனென் றால் இந்த இரண்டாவது பிள்ளையின் கதை அவ்வளவு முட்டாள்தனமான கட்டுக் கதையாகவே காணப்படுகிறது.
என்னவென்றால் வால்மீகி முனிவருடன் சீதை காட்டில் வாழ்கிறாள். அப்போது அவளுடைய (ஒரு) குழந்தையை வால்மீகியைப் பார்த்துக் கொள் ளும்படி சொல்லி ஒப்புவித்து விட்டு தண்ணீர் கொண்டு வர நதிக்குப் போகிறாள். வால்மீகி குழந்தையை கவனித்து வருகிறான். அப்படி கவனித்துக் கொண்டு இருக்கும் போதே வால்மீகி நிஷ்டையில் இறங்கி விட்டான். அதாவது கண்ணை மூடிக் கொண்டு ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டான்.
இதன் மத்தியில் தண்ணீர் கொண்டு வர நதிக்கு சென்ற சீதை வழியில் ஒரு பெண் குரங்கு தனது குட்டி வயிற்றில் தொத்திக் கொண்டிருக்க நடந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தாள். இந்த குரங்குக்கு இருக்கிற புத்திகூட நமக்கு இல்லையே! குரங்குக் குட்டியை தன்னுடன் வைத்துக் கொண்டே அல்லவா நடக்கிறது, நாம் குழந்தையை விட்டு தனியே தண்ணீருக்குப் போகிறோமே; இது எவ்வளவு அன்பு அற்ற தன்மை என்று நினைத்து உடனே வால்மீகி ஆசிரமத்திற்கு திரும்பி வந்து தன் குழந்தையை எடுத்துக் கொண்டு நதிக்குச் சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தாள்.
ஆசிரமத்திற்கு வந்தவுடன் அங்கு மற்றும் ஒரு குழந்தை இருக்கக் கண்டாள். இந்த குழந்தை எது? என்று வால்மீகியை சீதை கேட்டாள் அதற்கு வால்மீகி சீதையைப் பார்த்து நீ தண்ணீர் எடுத்து வரச் சென்றபோது உன் குழந்தையை என்னிடம் விட்டுவிட்டு  சென்றாய். உடனே நான் நிஷ்டையில் இறங்கி விட்டேன். நிஷ்டை முடிந்து கண் திறந்து பார்த்ததும் குழந்தையைக் காணவில்லை. நீ வந்து குழந்தை எங்கே என்று என்னைக் கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று கவலைப்பட்டு, குழந்தையை ஏதோ ஒரு காட்டு மிருகம் தூக்கிக் கொண்டு போய்த் தின்றிருக்கும் என்று கருதி உடனே என் தவ மகிமையினால் ஒரு தர்ப்பைப் புல்லைக் கிள்ளிப் போட்டு அதை ஒரு குழந்தையாக ஆகச் செய்து இவனுக்கு குசன் என்று பெயர் இட்டு விட்டேன். இதுதான் இந்த இரண்டாவது குழந்தையின் உற்பத்திவிவரம் என்று சொன் னான். (குசம் என்றால் தர்ப்பைப்புல்)
உடனே சீதை மகிழ்ந்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தாள். இந்த குழந்தைகளுக்குப் பெயர் லவ, குசா. இவற்றுள் வடமொழியில் குசம் என்றால் தர்ப்பைக்குள் பெயர்.
இதைப்பற்றி சிந்திப்போம்
வால்மீகிமுனி ஞான திருஷ்டி உள்ளவன். இராமாயணத்தில் வால்மீகி ஞான திருஷ்டியால் பல காரியங்களை அறிந்து நடந்தார் என்று காணப்படுகிறது. அப்படிப்பட்டவருக்கு நிஷ்டை முடிந்தவுடன் பக்கத்தில் இருந்த குழந்தை என்ன ஆயிற்று என்று கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்குமா?
மற்றும் அங்குள்ள மற்ற முனிவர்கள், ரிஷிகள் வால்மீகி சீதை விஷயமாய் நடந்துகொண்ட விஷயம்பற்றி வால்மீகியை குறை கூறி இருக்கிறார்கள். இதற்கு வால்மீகி சீதைத் தவறாக நடக்கவில்லை என்று சோதனை காட் டியதாகவும் இராமாயணத்தில் காணப் படுகிறது.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது சீதையின் இரண்டாவது குழந்தை வால் மீகியால் சீதைக்கு சினை  உண்டாக்கப் பட்டது என்று தான் கருத வேண்டி யிருக்கிறது.
குறிப்பு: இராமாயணம் கட்டுக்கதை என்றுக் கருதினாலும் இந்தக் கருத்துடன் தான் அந்தக் கதை கட்டப்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது.

  -------------------சித்திரபுத்திரன் என்ற பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை

17 comments:

தமிழ் ஓவியா said...


சனவரி 12 - ஆர்ப்பாட்டம் ஏன்?


அந்தக் காலத்து மனு முதல் இந்தக் காலத்து ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்வரை பார்ப்பனர்களின் சிந்தனையில் எந்தவித மாற்றமும் இல்லை, இல்லை.

மாதர் ஆடவரிடத்தில் அழகையும், பருவத்தையும் விரும்பாமலே ஆண் தன்மையை மாத்திரம் முக்கியமாக எண்ணி, அவர்களைப் புணருகிறார்கள். (மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 9; சுலோகம் 14).

பெண்கள் பெரும்பாலும் விபச்சார தோஷம் உள்ளவர்கள் என்று அநேக சுருதிகளிலும், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கின்றன.
(மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 9; சுலோகம் 19).

இந்த மனுவின் சிந்தனையிலிருந்து இதுவரை எந்தப் பார்ப்பனர் விலகி நிற்கிறார்? சொல்லுங்கள் பார்ப்போம்!

திருவாளர் துக்ளக் சோ ராமசாமி இன்றுவரை தொடர்ந்து மனுதர்மத்திற்குப் பூச்சூட்டி ஒவ்வொரு வாரமும் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வருகிறார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரெங்கநாத் மிஸ்ரா பேசினாரே - நினைவில் இருக்கிறதா?

பிரம்ம குமாரிகள் மாநாட்டில் (8.11.1990) அவ்வளவுப் பெரிய பதவியில் இருந்தவர் உதிர்த்தது என்ன தெரியுமா?

Women should go back to their homes and not think of competing with men on everything.

Since the lady is more capable of building the home, What is necessary that there must be a switch over from office to the home.

பெண்கள் வீட்டு வேலைகளை நிருவாகம் செய்வதில் திறமை உள்ளவர்கள் ஆதலால், அவர்கள் அரசு அலுவல்கள் பணிகளிலிருந்து விடுபட்டு அவரவர்கள் வீட்டுக்குச் சென்று அந்தப் பணியில் ஈடுபடவேண்டும். எதற்கெடுத்தாலும் ஆண்களோடு போட்டிப் போடும் மனோபாவத்தைக் கைவிடவேண்டும்!

- என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கக் கூடியவர் பேசினாரே!

இப்படி அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே பேசினார் என்றால், சட்டத்தையும் தாண்டி அவாளின் பூணூல் பேசுகிறது என்றுதானே பொருள்!

அதனைக் கண்டித்து கண்டனப் பேரணிகள் நடத்திட கழகத் தலைவர் அறிக்கை வெளியிட்டாரே! அவரைப் பதவி விலகச் செய்யவேண்டும் என்று திராவிடர் கழகப் பொதுக்குழுவில் (24.11.1996) தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதே! எப்பொழுதெல்லாம் பெண்களுக்கு எதிராகப் பிரச்சினைகள் எழுகிறதோ அப்பொழுதெல்லாம் எரிமலையாவது திராவிடர் கழகம் மட்டுமே!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய அதையேதான் - அப்படியே நகலெடுத்து இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருக்கக் கூடிய பார்ப்பனரான மோகன் பகவத்தும் வாந்தி எடுக்கிறார்.

தந்தை பெரியார் பிறந்த மண் - இந்தப் பிற்போக்குவாதிகளின் முகத்திரையைக் கிழிக்கவேண்டாமா?

அதற்காகத்தான் வரும் 12 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!!

சென்னை, திருச்சி, கோவை, திருவாரூர் மாவட்டங்களில் மண்டல அளவில் நடக்கட்டும்! நடக்கட்டும்!!

பெரியார் பிறந்த மண்ணின் உக்கிரம் என்ன என்பதைத் தெரிந்துகொள்ளட்டும்! திராவிடர் கழகத்தின் தீச்சுடர் எத்தனை டிகிரி என்பதையும் புரிய வைப்போம்! புரிய வைப்போம்!!

ஆயத்தமாவீர், தோழர்களே! (ஆண் - பெண் இருபாலரையும் சேர்த்துத்தான்!). 9-1-2012

தமிழ் ஓவியா said...


பரிதாபமே!


இந்து மத எதிர்ப்புக்கோ, இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ, ஆரியர் - திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பனத் துவேசம் காரணமல்ல. மக்கள்மீது உள்ள பரிதாபமே காரணம்.----பெரியார் (குடிஅரசு, 8.9.1940)

தமிழ் ஓவியா said...

கலைஞர் பேட்டி: சில தேன் துளிகள்


கேள்வி: தந்தை பெரியாருக்கு இலக்கிய ஈடுபாடு எந்த அளவுக்கு இருந்தது? அவர் மிகவும் விரும்பிப் படித்த நூல் எது?

கலைஞர்: திருக்குறள் மாநாடு நடத்திடும் அளவுக்கு பெரியாருக்கு இலக்கிய ஈடுபாடு இருந்தது. அவர் மிகவும் படித்த நூல்கள் இராமாயணமும், மகாபாரதமும், இதிகா சங்களும் தான்; ஆனால் விரும்பிப் படித்த நூல்கள் என்று கூற முடியாது. அவற்றிலே உள்ள மூடநம்பிக்கை மற்றும் பகுத்தறிவுக் கொவ்வாத குறிப்புகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி மாய வலையிலிருந்து மக்களை விடு விப்பதற்காகத்தான் அந்த நூல்களையெல் லாம் திரும்பத் திரும்பப் படித்தார்.

கேள்வி: உங்கள் அண்மைக்கால படைப்பு களில், ஆன்மீக வாசனை லேசாக வீசுகிறதே, இது நீங்கள் அறிந்தே வருகிறதா? அறியாமல் வருகிறதா?

கலைஞர்: ஆன்மீக வாசனை லேசாகவும் இல்லை; பலமாகவும் இல்லை. இருக்கவும் இருக்காது. கேள்விக்கு காரணம்; புரிதல் பிழையாக இருக்கலாம்.

கேள்வி: தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் நீங்கள் சாதீயத்துக்கு எதிரான சிந்தனைகளை விதைத்து, தமிழ் மண்ணை சலவை செய்தீர்கள். அப்படியிருந்தும் இன்று சிலர் காதல் திருமணங்கள் கூடாது என்கிற குரலை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்களே, இது எதைக் காட்டுகிறது?

கலைஞர்: சுயநலத்தால் ஏற்பட்ட விரக்தி மனப்பான்மையைக் காட்டுகிறது. இது விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது. இந்த விரக்தி விரைவிலேயே கரைந்து போகும்.

நன்றி: முரசொலி, 9.1.2013

(இனிய உதயம் திங்களிதழுக்கு கலைஞர் அளித்த பேட்டி)

தமிழ் ஓவியா said...


பெரியார் ஆயிரம் வினா-விடை தொகுப்பு கி.வீரமணி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பிற இதழிலிருந்து

பெரியார் ஆயிரம் வினா-விடை தொகுப்பு கி.வீரமணி

எல்லாவற்றையும் கேள்வி கேட்டவர் பெரியார். அவரைப் பற்றிய கேள்விகள் இவை. அவரது 95 வயது வாழ்க்கையைப் பற்றிய வினாக்கள் தொகுக்கப்பட்டு, அதற்கான பதில்கள் நிரம்பிய புத்தகம் இது.

அவர் மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று பாரதிதாசன் எழுதினார்.

குழந்தைப் பிறப்பை கடவுளின் பாக்கியம் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்த காலத்தில், பிள்ளைப்பேறுக்கு ஆண், பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும், புதிய நுட்பமும், அழகும், திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக (பொலிகாளைகள் போல் தேர்ந்தெடுத்து) மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி குழந்தைகளை பிறக்கச் செய்யலாம் என்று அவர் சொல்லி 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் டெஸ்ட் டியூப் பேபி பிறந்தது.

கம்பி இல்லாத் தந்தி சாதனம் அனைவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் இருக்கும். உருவத்தை தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக் கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும் என்று அவர் எப்போதோ சொன்னார். இன்று கம்ப்யூட்டர், செல்போன், டோங்கோ வசதியை அனைவரும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். அத்தகைய தீர்க்கதரிசியை முழுமையாக அறிந்து கொள்ள வழிகாட்டியாய் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது

மிக மிக நீண்டது பெரியாரின் வரலாறு. அவரே சொல்லி இருப்பதுபோல, தான் வாழ்ந்த காலத்தில் அனைத்தையுமே அவர் எதிர்த்து இருக்கிறார். நான் எதையாவது எதிர்க்காமல் இருந்திருக்கிறேனா என்று யோசித்துப் பார்க்கிறேன். எதுவுமே எனக்குப் புலப்படவில்லை என்கிறார். அப்படிப்பட்டவரின் குடும்ப வாழ்க்கை, காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து நடத்திய வைக்கம் சேரன்மாதேவி, காஞ்சிபுரம் மாவட்டங்கள், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், அதன் தத்துவங்களாக முன்மொழியப்பட்ட கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, மத நிராகரிப்பு போன்ற கனமான விஷயங்களை எளிமையான கேள்வி, பதில் வடிவில் திரட்டிக் கொடுத்துள்ளனர். பெரியாரின் சிந்தனைகளை திராவிடர் கழகம் ஏராளமான தொகுதிகளாக வெளியிட்டு உள்ளது. அவரது வரலாற்றை கவிஞர் கருணானந்தம் நாள் வரிசைப்படி பெரும் தொகுதியாக வெளியிட்டார். இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார் கி.வீரமணி.

இவை அனைத்தையும் ஒரு சேரப் படித்தால் உணர முடிகிற அனைத்துத் தகவல்களும் இந்தச் சிறு புத்தகத்தில் கேப்சூல் வடிவில் தரப்பட்டுள்ளது.

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந் திய மொழிகளில் முதலில் எந்த மொழியில் (தமிழில்) வெளியிடப்பட்டது என்பது முதல் பெரியாருக்குப் பிடித்தமான நொறுக்குத் தீனி எது (எள்ளுருண்டை!) என்பது வரை இருக்கும் 1,000 கேள்விகளும் கடந்த 100 ஆண்டு தமிழக அரசியலைப் படிக்கத் தூண்டும் நல்ல கேள்விகளாகவே அமைந்துள்ளன. பெரியாரின் கண்ணாடியில் கடந்த காலத்தைக் காட்டுகின்றன!

- புத்தகன்


நன்றி : “ஜூனியர் விகடன் 9.1.2013

தமிழ் ஓவியா said...


வீதிக்கு வாருங்கள் வீராங்கனைகளே!


பெண்களை இழிவுபடுத்துவது - கொச்சைப்படுத்துவது என்பது பார்ப் பனர்களின் குருதியில் கலந்துவிட்ட கேவலமான சமாச்சாரம்.
பெண்களுக்கு வேதம் ஓத உரிமை கிடையாது என்று கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண்ணை மேடையிலிருந்து விரட்டிய பூரி சங்கராச்சாரியாரின் கொடும் பாவியைத் தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகத் தோழர்கள் எரித் ததுண்டு. (17.2.1994) தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி உட்படத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

கொலை வழக்கில் ஜெயிலுக்கும், பெயிலுக்குமாக இப்பொழுது அலைந்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன இலேசுப்பட்ட பேர் வழியா?

விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்களே என்று தினமணி தீபாவளி மலருக்குப் பேட்டி கொடுத்தவர் தானே!

வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று கெட்ட வார்த்தை பேசியவர்தானே!

காஞ்சிபுரம் மடத்தின்முன் சகோதரி திருமகள் தலைமையில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியதே!

மகளிரணி சகோதரிகள் புலிவலம் இராசலட்சுமி மணியம், ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், கு. தங்க மணி, அ. சித்ரா காஞ்சி ஜெயச்சுந்தரி, மு. மாலதி என்று பெரிய மகளிர் பட்டாளமே கிளர்ந்து எழுந்ததே! (9.3.1998).

விதவைப் பெண்களை தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டதற்காக தினமணியில் (12.1.1998) பிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் கண்டித்து சிறப்புக் கட்டுரை எழுதி னாரே.

ஹிட்லரும், சங்கராச்சாரியாரும் என்று தலைப்பிட்டு இந்தியா டுடே! இதழில் கண்டித்து எழுதினாரே பிரபல எழுத்தாளர் வாஸந்தி.

பிரதமர் இந்திரா காந்தி கணவரை இழந்தவர் என்பதற்காக மறைந்த சூப்பர் சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கிணற் றுக்குப் பக்கத்தில் (தோஷம் கழிப்ப தற்காகவாம்!) உட்கார வைத்துப் பேசவில்லையா?

திராவிடர் கழகத்தைப் பொறுத்த வரை அவ்வப்பொழுது சாட்டையடி கொடுத்துக் கொண்டு தானிருக் கிறது.

ஆனாலும் அவாளின் குருதியில் கலந்துவிட்ட இந்துமதச் சாக்கடை என்னும் துரு நாற்றத்திலிருந்து வெளியேறத் தயாராக இல்லை.

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருந்த குப்பஹள்ளி சீத்தாராமையா சுதர்ஸன் (சுருக்கமாக கே.எஸ். சுதர்ஸன்) பி.ஜே.பி.யின் அனல் பேச் சாளர் என்று கூறப்படும் உமாபாரதி, அக்கட்சியிலிருந்து விலகிய நேரத் தில் என்ன சொன்னார் தெரியுமா?

அந்தப் பெண்ணின் குடும்பம் - வளர்ப்பு முறை சரியில்லை என்று ஜாதி உணர்வுடன் கூறவில்லையா?

அதனைக் கண்டித்து உமாபாரதி யின் உடன்பிறப்பு கன்யாலால் கருத்துச் சொல்லவில்லையா? (தி இந்து 12.4.2005 பக்கம் 11)

சுதர்சனையடுத்து ஆர்.எஸ். எஸின் தலைவராக இப்பொழுது இருக்கக் கூடிய மோகன்பகவத் அதே பாணியில் பெண்கள் வீட்டு வேலைக் குத்தான் லாய்க்கு - அதிலிருந்து பிறழ்வதால்தான் பெண்கள் மீதான வன்முறை நடக்கிறதாம் - சொல் கிறார் அரை டவுசர்!

இந்த அறிவுரையை அவாளின் அக்ரகாரத்துப் பெண்மணிகளிடம் சொல்ல வேண்டியதுதானே!

நீதிபதிகளாகவும், டாக்டர்களாக வும், அய்.ஏ.எஸ்.களாகவும், ஏ.ஜி. அலுவலகத்திலும், வருமான வரித்துறையிலும், சுங்கத் துறையிலும் - மிக முக்கியமான அலுவலகங்களி லும், அய்.டி.அய்.களிலும் ஆக்ரமித்துக் கொண்டிருக்கும் அக்கிரகாரப் பெண்களே - வெளியில் வாருங்கள் - ஒழுங்காக வீட்டுக்குள்ளிருந்து புருஷனுக்கும், பிள்ளைகளுக்கும் சமைச்சிக் கொட்டுங்கள் - கரண்டி பிடிக்க வேண்டிய கைகள் ஏன் பேனா பிடிக்க வேண்டும் என்று கேட்க வேண்டியதுதானே!
அக்கிரகாரப் பெண்களிடம் கேட்டால் தெரியும் சேதி அப்பொழுது!

ஒருக்கால் தாழ்த்தப்பட்ட, சமூகப் பெண்களும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் இப்பொழுதெல்லாம் படிக்கிறார்களே. உத்தியோகம் பார்க்கிறார்களே என்ற ஆத்திரத்தில் அக்கிரகார ஆர்.எஸ். எஸ்., தலைவரின் பூணூல் துடிக் கிறதோ!

கருஞ்சட்டைக் குடும்பங்கள் (இரு பாலரும்) நாளை மறுநாள் (12.1.2013) வீதிக்கு வாருங்கள்! வாருங்கள்!! வேதியர் கூட்டத்தின் வீண் வம்புக்குப் பதிலடி கூறுங்கள்! கூறுங்கள்!! (ஆர்ப்பாட்ட முழக்கம் 3ஆம் பக்கம் காண்க)

தமிழ் ஓவியா said...


முழக்கங்கள்!
சனவரி 12 - ஆர்ப்பாட்டம் ஏன்?

(பெண்கள் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கென்று கொச்சைப்படுத்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பக வத்தின் கூற்றுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்கள்!) (12.1.2013)

1. வாழ்க வாழ்க வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

2. வாழ்க வாழ்க வாழ்கவே!
அன்னை மணியம்மையார் வாழ்கவே!

3. வாழ்க வாழ்க வாழ்கவே!
தமிழர் தலைவர் வீரமணி வாழ்கவே!

4. வெல்க வெல்க, வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

5. வெடிக்கட்டும் வெடிக்கட்டும்
பெண்ணுரிமைப் புரட்சி
பெண்ணுரிமைப் புரட்சி
வெடிக்கட்டும், வெடிக்கட்டும்

6. பெண்கள் என்றால் பேதைகளா?
ஆண்கள் கண்ணில்
ஆண்கள் கண்ணில்
போதைகளா, போதைகளா?

7. கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்
வீட்டு வேலைக்கே
வீட்டு வேலைக்கே
பெண்கள் லாயக்கென்று பெண்கள் லாயக்கென்று
கொச்சைப்படுத்தும் கொச்சைப்படுத்தும்
ஆர்.எஸ்.எஸ். தலைவர்
ஆர்.எஸ்.எஸ். தலைவர்
மோகன் பகவத்தை
மோகன் பகவத்தை
கண்டிக்கிறோம்
கண்டிக்கிறோம்!

8. வேலைக்காரியா -
வேலைக்காரியா?
கூலிப் பெறாத
கூலிப் பெறாத
வேலைக்காரியா-
வேலைக்காரியா?
பெண்கள் வேலைக்காரியா-
வேலைக்காரியா?

9. சமையல்காரியா -
சமையல்காரியா?
சம்பளம் இல்லாத
சம்பளம் இல்லாத
சமையல்காரியா?
சமையல்காரியா?
பெண்கள் சமையல்காரியா-
சமையல்காரியா?

10. ஒழிக ஒழிக ஒழிகவே!
பெண்களை இழிவுபடுத்தும்
பெண்களை இழிவுபடுத்தும்
மனுதர்ம சாஸ்திரம்
மனுதர்ம சாஸ்திரம்
ஒழிக, ஒழிக, ஒழிகவே!

11. கொளுத்துவோம், கொளுத்துவோம்!
மனுநீதியை மனுநீதியை
கொளுத்துவோம், கொளுத்துவோம்!
பேயென்று பேயென்று
பெண்களை பெண்களை
சாற்றுகின்ற சாற்றுகின்ற
சாத்திரங்களை சாத்திரங்களை
கொளுத்துவோம்! கொளுத்துவோம்!
கொள்கைத் தீயால், கொள்கைத் தீயால்
கொளுத்துவோம்! கொளுத்துவோம்!

12. வேண்டும் வேண்டும்
இடஒதுக்கீடு இடஒதுக்கீடு
பெண்களுக்கு பெண்களுக்கு
50 விழுக்காடு, 50 விழுக்காடு
வேண்டும், வேண்டும்!

13. கடவுளின் பேராலே, கடவுளின் பேராலே
மதத்தின் பேராலே, மதத்தின் பேராலே
சாத்திரத்தின் பேராலே, சாத்திரத்தின் பேராலே
போட்டிடும் தடைகளை
போட்டிடும் தடைகளை, பூட்டிடும் விலங்குகளை, பூட்டிடும் விலங்குகளை
உடைப்போம், உடைப்போம்
உறுதியாய் உடைப்போம்-
உறுதியாய் உடைப்போம்!

14. தடை செய், தடை செய்!
விளம்பரம் என்ற பேராலே
விளம்பரம் என்ற பேராலே
பெண்கள் உடலை, பெண்கள் உடலை
வணிகப்படுத்தும், வணிகப்படுத்தும்
விளம்பரங்களை, விளம்பரங்களை
தடை செய்! தடை செய்!!

15. கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
பெண்களை இழிவுபடுத்தும்
பெண்களை இழிவுபடுத்தும்
இந்துத்துவா வாதிகளை
இந்துத்துவா வாதிகளை
கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம்!

16. வேண்டும் வேண்டும்
துப்பாக்கி வேண்டும்
துப்பாக்கி வேண்டும்

17. மத்திய அரசே, மாநில அரசே
அனுமதி கொடு, அனுமதி கொடு!
துப்பாக்கிக்கு அனுமதி கொடு!

18. பயிற்சி கொடு, பயிற்சி கொடு
பள்ளிகளில் பள்ளிகளில்
பெண்களுக்கு, பெண்களுக்கு
பயிற்சி கொடு, பயிற்சி கொடு!
கராத்தே பயிற்சி கொடு -
கராத்தே பயிற்சி கொடு!

19. வாழ்க, வாழ்கவே!
தந்தை பெரியார் வாழ்கவே!

20. வெல்க வெல்கவே!
திராவிடர் கழகம் வெல்கவே!

21. வெடிக்கட்டும், வெடிக்கட்டும்
பெண்கள் புரட்சி, பெண்கள் புரட்சி!
வெடிக்கட்டும், வெடிக்கட்டும்!

- திராவிடர் கழக மகளிரணி -மகளிர் பாசறை

தமிழ் ஓவியா said...

விவேகானந்தர் - 150


விவேகானந்தரின் 150ஆம் ஆண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று பரப்புரை செய்து வந்தவர் சுவாமி விவேகானந்தர் என்று பெருமையாகப் பேசுவார்கள்.

பல பேர் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் நடத்தப்பட்ட விழாவுக்கு அங் கிருந்து இவருக்கு ஏதோ தனி அழைப்பு வந்த தென்று.. அதெல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை.

அமெரிக்கா உருவாகி 400ஆம் ஆண்டு விழா ஒன்று ஏற்பாடாகி இருந்தது. உலகில் பல நாடு களிலிருந்து பொருட்காட்சிகள் நடத்தினார்கள்; பல நாட்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நிகழ்ச்சி இடம் பெற்றது.

ஒரு நாள் உலக மதங்களில் பிரதிநிதிகளைக் கொண்ட மாநாடு 1893இல் சிகாகோவில் நடத்தப்பட்டது. இந்து மதத்திலிருந்து யாரையாவது ஒருவரை அழைக்க நினைத்தார்கள்.

பார்ப்பனர் ஒருவருக்குத் தான் அழைப்பு வந்தது. கடல் தாண்டி செல்லுவது தோஷம்! என்பதால் செல்ல மறுத்த நிலையில், பார்ப்பனர் அல்லாதாரான விவேகானந்தர் சிக்கினார். அதுதான் உண்மை.

வெள்ளைக்காரர்கள் லேடீஸ் அண்ட் ஜென்டில் மென் என்று அழைப்பார்கள். இந்தியாவிலிருந்து சென்ற விவேகானந்தரோ பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ் என்று ஆங்கிலத்தில் அழைத்து விட்டாராம். அடேயப்பா, இதுதான் இந்தியாவின் கலாச்சாரம்; இதுதான் இந்து மதத்தில் தகத்தகாய தத்துவம் என்று வானத்தை கிழித்து எழுதி வருகிறார்கள்.

உண்மையிலே இந்து மதம் மக்களை சகோதர சகோதரிகளாகக் கருதுகிறதா?

பிறப்பின் அடிப்படையில் பேதம் விளைவிக்கும் ஒரு வருணாசிரம மதத்தில் சகோதரத்துவம் என்பதற்கு எள் மூக்கு முனை அளவுக்கு இடம் உண்டா?

பிறப்பில் ஒரு குழந்தையின்மீது அத்துமீறித் திணிக்கப்பட்ட ஜாதி, அந்தக் குழந்தை பெரியவ ராகி செத்த பிறகு எரிக்கப்படும், அல்லது புதைக் கப்படும் இடுகாடு - சுடுகாட்டில் கூடத் தொடர்கிறதே.

மனிதன் சாகிறான்; ஆனால் பிறப்பின் போது அவன்மீது திணிக்கப்பட்ட ஜாதி சாவதில்லையே! இந்த யோக்கியதை உள்ள ஒரு மதத்தில் ஏதோ சகோதரத்துவம் இருப்பதாக விவேகானந்தர் சொன்னார் என்றால், அது உண்மைக்கு மாறாக பொய்யாக இன்னொரு நாட்டில் எடுத்துக்காட்டிச் சொல்லப்பட்ட பொய்யுரையாகும்.

விவேகானந்தரைப் பொறுத்தவரையில் பார்ப்பனர்பற்றி பல நேரங்களில் அம்பலப்படுத் தினார் என்பது என்னவோ உண்மை. ஆனால் அதனை எளிதில் வெளியில் சொல்ல மாட்டார்கள்.

அமெரிக்கா சென்று இந்து மதத் தத்துவத்தை உலகறியச் செய்தார் என்று மட்டும் திருப்பித் திருப்பிச் சொன்னால் பொய்யும் உண்மையாகும் என்ற தந்திரப்படி பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை.

இந்து மதத்திலிருந்து மற்ற மதத்திற்குச் செல்லுவதற்குக் காரணம் என்ன என்பது குறித்து விவேகானந்தர் கூறும் கருத்தினை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பார்ப்பன அமைப்புகள் ஏற்றுக் கொள்கின்றனவா?

பூணூல் என்பது கோவணம் கட்டும் அரைஞாண் கயிறு என்று சொல்லி இருக்கிறாரே - அதைப்பற்றி எல்லாம் வெளியிடுவதுதானே!

ஆதி சங்கரர் ஆணவக்காரர் - இதயமில் லாதவர் - புத்தரோ கருணைக் கடல் என்று விவேகானந்தர் கருத்துத் தெரிவித்துள்ளாரே அதையும் எழுத வேண்டியதுதானே!

தந்தை பெரியாரைச் சந்தித்த அமெரிக்கர் ஒருவர் விவேகானந்தரின் நூற்றாண்டு விழா அமெரிக்காவிலேயே பிரமாதமாகக் கொண்டாடப் படுவது குறித்து சிலாகித்துச் சொன்ன பொழுது, முட்டாள்கள் என்ன இந்தியாவுக்கே சொந்தமா? என்று எதிர் கேள்வி போட்டு மடக்கிய நிகழ் வெல்லாம் உண்டு.

இந்து மதத்தை எந்த வகையில் எவர் ஏற்றுக் கொண்டு இருந்தாலும், அவரிடம் அளப்பரிய திறமைகள் குடி கொண்டிருந்தாலும் அதனை மதிக்கத் தேவையில்லை.

மதம் மிருகங்களுக்குப் பிடிக்கட்டும் - மனிதனுக்கு வேண்டாம்!12-1-2013

தமிழ் ஓவியா said...


பாடுபடுவான்


இந்த நாட்டில் மனிதன் மற்றொரு மனிதனால் எவ்வளவு இழிவாய்க் கருதப்படுகிறான் என்பதை ஒரு மனிதன் உணருவானானால், அவனுக்குக் கடுகளவு சுயமரியாதை யாவது இருக்குமானால், அவன் மனித இழிவைப் போக்கத்தான் முதலில் பாடுபடுவான். - (குடிஅரசு, 3.5.1936)

தமிழ் ஓவியா said...


சாதி ஒழிப்புக்கு அய்யாவின் திட்டங்கள்


1. சாதியைக் குறிக்கும் பெயர்களை (முதலியார், பிள்ளை, கவுண்டர்) சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும்.

2. புதிதாகத் திருமணம் புரிந்துகொள் வோர் கலப்புமணம் செய்யுமாறு சட்டமியற்ற வேண்டும்.

3. ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உதவிகள் தரக்கூடாது.

4. சாதிகளைக் குறிக்கும் நெற்றிக்குறி போன்ற சின்னங்களைச் சட்டவடிவத்துடன் தடுக்க வேண்டும்.

5. உயர்ந்த பதவிகளை, காவல்துறைப் பதவிகளைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும்.

6. தாழ்த்தப்பட்டவர்களை அக்கிரகாரத் தில் குடியிருக்க செய்ய வேண்டும்.

7. தீண்டாமையைப் பாராட்டாத சிறந்த கிராமங்களுக்குப் பரிசளிக்க வேண்டும்.

8. தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி இருப்பதை ஒழிக்க வேண்டும்.

தந்தை பெரியார் (விடுதலை 10.1.1947

தமிழ் ஓவியா said...


பெரியாரின் இலட்சியங்கள்! -ஜி.டி.நாயுடு-


பெரியார் செய்யும் பணிகள் அநேகர் எண்ணுகின்றபடி அரசியலில் ஈடுபட்டதல்ல. மக்களுக்கு பகுத்தறிவை உபயோகிக்கக் கற்றுக் கொடுக்கும் அறிவுப்பிரச்சாரம் தான். எனக்கும் எந்த அரசியல் கட்சிகளில் சேர்ந்தாலும் அதிக நன்மை செய்யக் கூடும் என்ற நம்பிக்கையில்லை.

அதனாலே பெரியாரால் வகுக்கப்பட்ட அநேக கொள்கை களை வெகுகாலமாக ஆதரித்து சில கொள்கைகளை நடைமுறையில் அவரை விட அதிவேகத்தில் கடைப்பிடித்தும் வந்திருக்கின்றேன். இவருடைய லட்சியங்களில் அநேகம் நம்நாட்டிற்கு அவசியம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வயதிலும், அறிவிலும் மிகப் பெரியவர். மிக்க இளவயதுள்ள முறுக்கமான வீரனைப்போல் தைரியத்தோடு தீவிரமாகச் செல்கின்றார். இவருடைய லட்சியங்களை எல்லோரும் ஒப்புக் கொள்ளுவார்கள் என்பதற்கு அறிகுறியாகவே இன்று அரசாங்கம் காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் கூட பெரியாருக்கு எந்த எதிர்ப்பும் இன்றி அமோகமான வரவேற்போடு ஊராண்மைக் கழகம், நகராண்மைக் கழகங்கள் முதலிய பல கழகங்கள் அழைத்துக் கொண்டிருப்பதே சான்றாகும்.

(4.7.54-இல் வேலூர் நகரமன்றத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து ஜி.டி.நாயுடு அவர்கள், விடுதலை 6.7.1954)

தமிழ் ஓவியா said...

தோழர் ஈ.வெ.ரா. ஸ்டேட்மெண்டு சமதர்மப் பிரச்சார உண்மை விளக்கம்


இ.பி.கோ. 124-ஹ செக்ஷன்படி தொடரப்பட்டுள்ள, பொதுவுடமை பிரசாரத்திற்காகவும், இராஜ நிந்தனை என்பதற்காக வுமுள்ள வழக்கு கோவையில் 12ஆம் தேதி ஆரம்பிக் கப்பட்டபோது தோழர் ஈ.வெ.இராமசாமி அவர்கள் கோவை ஜில்லா கலெக்டர் G.W.வெல்ஸ் I.C.S. அவர்கள் முன் தாக்கல் செய்த ஸ்டேட்மெண்ட்:-

என் பேரில் இப்போது கொண்டுவரப் பட்டிருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது.

2. வழக்குக்கு அஸ்திவாரமான 29.10.1933 தேதி குடிஅரசின் தலையங்கத்தை இப் போது பல தரம் படித்துப் பார்த்தேன். அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்.

3. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்காவது வாக்கியங்களுக்காவது ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால் இன்றைய அரசாங்க முறை, நிர்வாக முறை முதலியவைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ, அவற்றால் மக்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ யாருக்கும் சுதந்திரம் கிடையாது என்றுதான் முடிவு செய்யப்பட்டதாகும்.

தமிழ் ஓவியா said...

4. என்ன காரணத்தைக்கொண்டு என்மேல் ஆதாரமற்ற இந்தப் பிராது தொடரப் பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் என்னுடைய சமதர்மப் பிரசாரத்தை நிறுத்திவிடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டி யிருக்கிறது. வியாசத்தின் விஷயத் திலாவது பதங்களிலாவது நோக்கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது.

5. முக்கியமாய் அதில் சொல்லப்பட்ட விஷயம் எல்லாம் கல்வி இலாகாவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்கு கல்விச் செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளை வதில்லை என்றும், ஏழைகளுக்கு கல்வி பரவ சவுகரியம் இல்லை என்றும், இப்படிப்பட்ட முறை யால் லாபம் பெறும் பணக்காரர்களும், அதிகார வர்க்கத்தாரும், உத்தியோகஸ்தர்களும் சொல்லு வதைக் கேட்டு ஏமாந்து போகாமல் வரப்போகும் (சீர்திருத்த) எலெக்ஷன்களில் ஜாக்கிரதையாய் நடந்து கொள்ளவேண்டும் என்று ஏழை பொது ஜனங்களுக்கு எடுத்துக் காட்டியதேயாகும்.

6. நான் 7, 8 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்க சமதர்ம பிரசாரம் செய்துவருகிறேன். சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழ வேண்டுமென்பது அப்பிரசாரத் தின் முக்கிய தத்துவமாகும்.

7. நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதும் அவ்வுற்பத்திக் காக செய்யப்பட வேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லோரும் சக்திக்குத் தக்கபடி பாடுபடவேண்டும் என்பதும் அத்தத்துவத்தின் கருத்தாகும்.

8. அவ்வியக்க லட்சியத்திலோ, வேலைத் திட்டத்திலோ பிரசாரத்திலோ அதற்காக நடைபெறும் குடிஅரசுப் பத்திரிகை யிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை, இடம் பெற்றிருக்கவில்லை. எந்த விதத்திலாவது அவை நமது நாட்டில் இடம் பெறுவது என்பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று.

9. இதற்கு அத்தாட்சி வேண்டுமானால் பல வருஷங்களாக இரகசியப் போலீஸ் இலாகா சுருக்கெழுத்து அறிக்கைக்காரர்கள் எனது பிரசங்கத்தை விடாமல் குறித்துவைத்திருக்கும் அறிக்கைகளையும் சுமார் பத்து வருஷத்திய குடிஅரசு பத்திரிகையின் வியாசங்களை யும் சர்க்கார் கவனித்துவந்தும் என்மேல் இத்தயை வழக்கு இதற்குமுன் ஏற்படுத்தியதில்லை என்பதே போதும்.

10. அரசாங்கமானது முதலாளித்தன்மை கொண்டதாய் இருப்பதால் அது இத்தகைய சமதர்மப் பிரசாரம் செய்யும் என்னையும் எப்படியாவது அடக்கவேண்டுமென்று முயற்சி எடுத்துக்கொண்டிருப் பதில் அதிசயமில்லை. தற்கால அரசாங்க ஆட்சியில் பங்குபெற்றுப் போகபோக்கியமும், பதவியும், அதிகாரமும் அடைந்துவரும் பணக்காரர்களும் மற்றும் மதம், ஜாதி, படிப்பு என்கிற சலுகைகளைக் கொண்டு முதலாளிகளைப் போலவே வாழ்க்கை நடத்துகின்றவர் களும் இப்படிப்பட்ட அரசாங்கத்திற்கு நேர்முகமாகவும், மறைமுகமாக வும் உதவிசெய்து தீரவேண்டியவர்களாய் இருப்பதால் அவர்களும் இம்முயற்சிக்கு அனுகூலமாய் இருப்பதிலும் அதிசயமில்லை.

11. பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும் இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலைநிறுத்தப் பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப்பையும் பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும் அவற்றை மாற்றி அமைத்தாலொழிய மக்கள் வாழ்க்கையில் உள்ள அனேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த்தி யாகி சவுக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாது என்பது எனது உறுதி.

12. இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப்படுவதும் அதற்காக பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரசாரம் செய்வதும் குற்றமாகாது.

தமிழ் ஓவியா said...


13. ஏதாவது ஒரு கொள்கைக்கு பிரசாரம் பரவ வேண்டுமானால் அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக்கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில்போய் கஷ்டத்தைக் கோரி எடுத்துக்கொள்ளக்கூடாது; என்றாலும் தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்துவிடக்கூடாது.

இந்தப் பிரசாரத்தை தடுக்க வேண்டுமென்று கருதி இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆதலால் அவர்கள் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம், வெறுப்பு, பலாத்காரம் முதலியவைகள் இருப்பதாக கற்பனை செய்து தீரவேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். அந்தப்படி செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக என்மீது நம்பிக்கையும் நல்ல எண்ணமும் உடையவர் களும் சிறப்பாக எனது கூட்டுவேலைக்காரத் தோழர்களும் தப்பான அபிப்பிராயம் கொள்ளக்கூடுமாதலால் அப்படிப்பட்ட கற்பனைகளை மறுத்து உண்மையை விளக்கிவிட வேண்டுமென்றே இந்த ஸ்டேட்மெண்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனானேன்.

14. இதனால் பொதுஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமா வதோடு அவர்களது ஆதரவும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்குப் பலமேற்படக் கூடுமாதலால் என்மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்டை மாத்திரம் கொடுத்துவிட்டு எதிர் வழக்காடாமல் இப்போது கிடைக்கப்போகும் தண்டனையை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

15. இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தாலும் சரி அல்லது இந்தப் பிராதுக்கு போதிய ஆதாரமில்லை என்று நியாயத்தையும் சட்டத்தையும் லட்சியம் செய்து, வழக்கைத் தள்ளி விட்டாலும் சரி இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர் களுக்கு வழிகாட்ட எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தைப்பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.

- புரட்சி, 21.01.1934

தமிழ் ஓவியா said...


திருவள்ளுவர் ஆண்டு


- மறைமலையடிகளார்

வள்ளுவனார் இற்றைக்குக் குறைந்தது 1900 ஆண்டுகட்கு முன் பிறந்தவர் என்பது பற்றி யான் விரி வான ஆராய்ச்சி செய்து, திருக் குறளாராய்ச்சி என்று முன்னர் எழு திய முற்பகுதியிலும், மாணிக்க வாசகர் காலமும் வரலாறும் என்ற நூலிலும் எழுதியுள்ளேன். அவற்றிற் குறித்துள்ள சான்றுகளை எல்லாம் ஈண்டெடுத்துக் கூறி விளக்கக் காலம் போதாது. ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதி கார ஆசிரியராகிய இளங்கோவடிகள் காலத்திலேயே எழுதப்பட்ட நூலாகும் என்பது சிலப்பதிகாரத்தின் இறுதியில் ஆசிரியர் மணிமேகலை மேலுரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம் முற்றும் என்பதனால் அறியப்படும் நூலொன்றை இயற்ற எண்ணங் கொண்டவராய் ஆசிரியர் கோவலன் கதையைக்கூறி, அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற்றாவதும் உரைசால் பத்தினிக் குயர்ந்தோரேத்தலும், ஊழ் வினை யுருத்துவந்தூட்டு மென்பதூஉஞ், சூழ் வினைச் சிலம்பு காரண மாகச் சிலப்பதிகாரமென் னும் பெயரானாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுளென, முடிகெழு வேந்தர் மூவர்க்குமுரிய தடி கணீரே யருளுக என உரைசால் அடிகள் அருள மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன், என் பது உற்று நோக்கற்பாலது.

சாத்தனார் பாண்டியன் அவைக் களப் புலவர்; அவர் சிலப்பதிகாரம் இயற்றப்புகுவராயின் பாண்டியனைக் குறைத்துப் பேச நேருமாதலால் அதற்கு உளமிசையாராய், இளங் கோவடிகளைப் பாடச் சொன்னார் என்பதும், துறவிக்கு வேந்தன் துரும் பாதலின், துறவியாகிய அடிகட்கு அஃது எளிதாம் என்பதும் உய்த் துணரற் பாலனவாம். வேந்தர் மூவர்க்குமுரிய தடிகணீரே யருளு கென்றாற்கு என்பதற்குரை கூற வந்த உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தான் பாடக் கருதி வினாவின் சாத்தற்கு அங்ஙனங் கூறாது இங்ஙனக் கூறினாரென்க என் சொல்லியவாறோவெனின் இச்செய் கின்ற காப்பியம் மூவேந்தர்க்குமுரிய தென்பதனால் ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின், யாம் காப்பியஞ் செய்யக் கடவேமென்பது கருதி, நீரே, அருளுகென ஏகார வினாப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு அவர் கருதிய பொருளிற்கு உடம்படாது சொல்லிற்கு உடம்பட்டாரென் பதாயிற்று என ஊரை எழுதிப் போந்தமையுங் குறிப்பிடற்பாற்று.

இளங்கோவடிகள் சேர நாட்டில் வஞ்சி நகரத்திலிருந்து அரசு புரிந்த சேரலாதனென்னும் அரசனுடைய இளைய மகனார்; சேரன் செங்குட் டுவனின் இளவல் ஒரு நாள் அரச வையில் இவர் தம் தந்தையுடனும் தமையனுடனும் வீற்றிருந்த காலை ஒரு நிமித்தகன் வந்து இவரை அடி முதல் முடி வ ரை நெடிது நோக்கி, அரசு வீற்றிருக்கும் இலக்கணம் இவர்க்குண்டென, அதுகேட்ட தமையன் செங்குட்டுவன் அழுக்காறு மிகுந்த கண்ணெரி தவழ அண்ணலை, நோக்குவதைக் கண்ட இவர். உடனே தமையனுக்குத் துன்பம் வராதபடி அரசு துறந்ததைக் கூறிக் குணவாயிலிற் சென்று துறவு பூண்டு.

சிந்தை செல்லாச் சேணெடுந் தூரத் தந்தமி லின்பத்தரைசார் வேந்த ராயினார். இத்தகைய பெரியாராகிய இளங்கோவடிகளும் கூலவாணிகள் சாத்தனாரும் சிலப்பதிகாரக் கதைத் தலைவியாகிய கண்ணகிக்குக் கல் நாட்டு விழா நடைபெறுங் காலை இலங்கைக் கயவாகு முதலாவன் வந்திருந்தான் என்று குறிப்பிடப்பட் டுள்ளது.

அவனுடைய காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று இலங்கை மகா வமிசத்தினாலும் பிற ஆராய்ச்சியினாலும் கணிக்கப் பட்டுள்ளது. எனவே, சிலப் பதிகார காலம் இரண்டாம் நூற்றாண்டே என்பது பெறப்படும்.

அக்காலத்தே சாத்தனார் பாத்திரமாகிய மணிமேகலை யுமாகும். அம்மணி மேக லையில், தெய்வம் தொழா அள் கொழுநற் றொழுதெழு வாள். பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றப் பொய்யில் புலவன் பொருளுரை என்று திருவள்ளுவரையும் அவர் நூலாகிய திருக்குறளையும் ஆசிரியர் சுட்டிக் கூறியுள்ளார்.

எனவே, திருவள்ளுவனார் காலம் 2ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தென்பது எளிதிற் பெறப்படும். கிறித்துப் பிறப்பதற்கு 31ஆண்டுகட்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடிவாகும்.

தமிழ் ஓவியா said...


சிந்துவெளி மக்கள்


சிந்துவெளி மக்கள் தம் ஆண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்று வழங்கினர். பிற்காலத்தில் இதுவே திருவள்ளுவர் ஆண்டு பிறப்பும்ஆயிற்று.
- விஞ்ஞானி நெல்லை சு. முத்து

தை முதல் மார்கழி வரை உள்ள பன்னிரண்டு மாதங்களும் தமிழ்ப் பெயர்களே. இவை தொல்காப்பியர் காலத்திலேயே ஆட்சியிலிருந்தன.
- முனைவர் சி. இலக்குவனார்

தமிழ் ஓவியா said...


திருவள்ளுவர் ஆண்டு


இந்த 60 ஆண்டு சுழல் முறை யால் தமிழ்மொழி, மரபு, மாண்பு, பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும், இழிவும் எண்ணிப் பார்த்து, சிந்தித்து, உணர்ந்து, தெளிந்த தமிழ் அறி ஞர்கள், புலவர்கள், சான்றோர்கள் 1921ஆம் ஆண்டு சென்னைப் பச் சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலைஅடிகள் தலைமையில் கூடிய மாநாட்டில் ஆராய்ந்தார்கள். பேராசிரியர் கா. நவச்சிவாயர் அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.

திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது; திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.

இந்த முடிவுகள் எந்த அடிப்படையில் எடுக்கப்பட்டன என்று முத்தமிழ்க் காவலர் முனைவர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களை வினவினேன். மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அறிஞர்களின் அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் ஆகியவையே அடிப்படை என்று குறிப்பிடுங்கள் போதும் என்று விளக்கம் தந்தார்.

இந்த முடிவு செய்தவர்கள் தலைமையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க்கடல் மறைமலை அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார், தமிழ்க் காவலர் கா. சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் கா. நமச்சிவாயர், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

1921ஆம் ஆண்டில் நடந்த மாநாட்டில் எடுத்த முடிவை 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள் ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்துவ ஆண்டுடன் 31அய்க் கூட்டல் வேண்டும் என்று கூறி, திருவள்ளுவர் ஆண் டைத் தொடங்கி வைத்தார். 1935+31 = 1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறி ஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஏழு கிழமைகளில் புதன், சனி தவிர மற்றவை தமிழ். புதன் - அறிவன்; சனி - காரி. ஆங்கில ஆண்டுடன் 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2006+31=2037. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழி லும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல கங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

தையே முதற்றிங்கள்; தைம் முதலே ஆண்டுமுதல்
பத்தன்று; நூறன்று; பன்னூறன்று
பல்லாயிரத் தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம் முதல் நாள் பொங்கல் நன்னாள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டு
தரணி ஆண்ட தமிழர்க்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு

- புரட்சி கவிஞர் பாரதிதாசன்

தமிழ் ஓவியா said...


தைத் திங்கள் முதல் நாளே தமிழாண்டுத் தொடக்கம்!


- தமிழ் நம்பி

1921ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தலைமையில் தமிழறிஞர்கள் கூடி ஒரு மனதாக வரையறை செய்து வெளியிட்ட வரலாற்று சாசனம்தான் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பது.

கிருஷ்ணன் - நார தருக்குப் பிறந்ததாகக் கூறும் 60 ஆபாச ஆண்டுகளை அப்புறப் படுத்தவே இம்முடிவு எடுக்கப்பட்டது. எனவே, சித்திரை முதல் நாளில் தொடங் கும் புத்தாண்டு என்பது இந்துத்துவாவாதிகள் தமிழர்கள்மீது நடத் திய திணிப்பே ஆகும்.

திருவள்ளுவர் பெய ரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக் கொள் வது; திருவள்ளுவர் காலம் கி.மு.31; தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம் தை முதல் நாள் என்று மறைமலையடிகளார் 18.1.1935இல் உறுதி செய்துள்ளார்.

1971 முதல் தமிழ் நாடு அரசு நாட்குறிப் பிலும், 1972 முதல் தமிழ்நாடு அரசிதழி லும், 1981 முதல் தமிழ் நாடு அரசின் அனைத்து அலுவல கங்களிலும் நடை முறைப்படுத்தி வருகிறது.

ஆனால், சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து, தமிழக அரசு தொடர்ந்து விடுமுறையும் அளித்து வருகிறது.

தமிழக அரசு அதி காரபூர்வமாக, தை முதல் நாளைத் தமி ழாண்டுத் தொடக்க மாக அறிவித்து, அந் நாளில் விடுமுறையும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி - பம்மல் நாகல்கேணித் தமிழ்ச் சங்கம், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து சென்னை பல்லாவரத்தில் 16.12.2000 அன்று ஒரு நாள் அடையாளப் பட்டினிப் போராட்டத்தை நடத்தியது.

அவ்வண்ணமே, மலேசியாவின் தலைநகராம் கோலாலம்பூரில் 6.1.2001 அன்று உலகப் பரிந்துரை மாநாட்டினை மலேசியா திராவிடர் கழகம், மலேசியத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம் போன்ற இயக்கங்கள் முகாமையாக இருந்து மேலும் தமிழின உணர்வடைய 15 இயக்கங்களும் சேர்ந்து இக்கருத்தை வலியுறுத்தியுள்ளது.

அய்ந்தாம் முறை யாக அரியணை ஏறி யுள்ள கலைஞர் அவர்கள் தை முதல் நாளை தமிழ்ப் புத் தாண்டு என அறி வித்தது தமிழை அரியணை ஏற்ற மறுத்தே வந்துள்ளார். 2007ஆம் ஆண்டு விடுமுறை நாள்களை அறிவித்த தமிழக அரசு சித்திரை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து அந்நாளில் விடுமுறையும் அளித் துள்ளது.

கடந்த 15.12.2006 அன்று மதுரை காம ராசர் பல்கலைக் கழகம், கலைஞருக்கு வழங்கிய முனைவர் பட்டத்தில் தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள் தமிழில் கையொப்ப மிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் இதன் மூலம் கலை ஞருக்கு உணர்த்து வதுதான் என்ன?

நான் தமிழராக வாழத் தொடங்கி விட்டேன், தமிழக முதல்வராகிய தாங்கள் இனியேனும் தமிழை வாழச் செய்யும் தமிழ ராக, முதல்வராக மாற வேண்டும் என்பதுதான், சரிதானே, தமிழர்களே!

- மறைமலையடிகளார்
யாதும் ஊரே மார்கழி 2036 - சனவரி 2007