Search This Blog

23.1.13

திராவிடர் கழகம் நம்பர் 1 எதிரி!

தற்காப்புக்குக் கத்தி வைத்துக்கொள்ள தீர்மானம் போட்ட ஆத்தூருக்கு வாரீர்!
திராவிடர் கழகம் நம்பர் 1 எதிரி!

துவேஷத்தில் ஊறிய மூட்டைப் பூச்சிகள் - எறும்புகள் - நசுக்கவேண்டும் இப்படியெல்லாம் கூடப் பேசி இருப்பார்களா? என்று இன்றைய இளைய தலைமுறையினர் கேட்கக்கூடும்.

ஆம்! பேசி இருக்கிறார் - பேசி இருப்பவரும் சாதாரணமானவர் அல்லர். அன்றைய சென்னை மாநிலத்தின் முதலமைச்சர், உடம்பெல்லாம் மூளை உடையவர் என்று அக்கிரகார உலகத்தால் தூக்கிப் பேசப்படும் ஆச்சாரியார்தான் (ராஜாஜி) இப்படிப் பேசினார். அவர் பேச்சைக் கேளுங்கள்! கேளுங்கள்!!

சில காலத்திற்கு முன் எனது முதல் நம்பர் எதிரி கம்யூனிஸ்ட்கள் என்று கூறினேன். இப்போது அதை மாற்றிக் கொள்கிறேன். கம்யூனிஸ்ட்கள் முதல் நம்பர் எதிரியல்ல. திராவிடர் கழகத்தினர் தான் முதல் நம்பர் எதிரி.
இந்நாட்டில் ஜாதிப் பிரச்சினைதான் மிகத் தொல்லை கொடுக்கக் கூடியதாக இருந்து வருகிறது. ஜாதிப் பிரச்சினையை வைத்துக் கொண்டு திராவிடர் கழகம் நாட்டில் துவேஷப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது.

ஜாதி வித்தியாசங்கள் இப்போது மறைந்து போய்விட்டன. மறைந்து போன ஒன்றை அதாவது பிரேதத்தை வைத்துக்கொண்டு திராவிடர் கழகம் ஜாதி வித்தியாசமிருந்து வருகிறதாக பிரச்சாரம் செய்து வருகிறது.

திராவிடர் கழகத்தின் இத்தகைய விஷப் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தவேண்டு மென்று உங்களை (காங்கிரஸ் ஊழியர்களை) மண்டியிட்டு, தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.

அவர்களது நடவடிக்கைகள்மீது நீங்கள் பார்வையைச் செலுத்துங்கள் என்றால், அவர்களை ஒரு கை பாருங்கள் என்பதாக கிராமாந்தர மக்கள் கருதுவதுபோல் கருதி விடாதீர்கள்.

நீங்கள் பார்த்துக் கொள்ளவேண்டிய தெல்லாம் இவர்களது பிரச்சாரம் அரசியலிலே கலக்காமல் பார்த்துக் கொள்வதுதான்.

இதனால் நீங்கள் ஒற்றுமையாயிருக்க வேண்டியது அவசியமாகும்.
இனி கம்யூனிஸ்ட்களைக் குறித்து நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. கம்யூனிஸ்ட்களைவிட கழகத்தார்தான் அபாயகரமானவர்கள். இவர்கள் பிரச்சாரம்தான் சாதாரண மக்கள் மனதைப் பற்றிக் கொள்கிறது. நம் சிறுவர்கள், சிறுமிகள் மனம் இதில் பெருமளவுக்கு கவ்வியிருக்கிறது.
இப்போது ஆந்திரர்கள் போய்விட்டார்கள். இனி தமிழ்நாட்டில் தங்கள் பிரச்சாரத்திற்கு நல்ல வாய்ப்பிருக்கிறதாக அவர்கள் நினைக்கலாம். இதற்கு இடம் தரலாகாது.

ஒவ்வொரு இலாகாவிலும் எத்தனை பிராமணர்? எத்தனை வடகலை? எத்தனை தென் கலை? ஸ்மார்த்தர்கள் எத்தனை பேர்? என்ற பட்டியலைப் போட்டுக் காட்டலாம். அவர்களின் முக்கிய நோக்கமே, காங்கிரஸ்காரர்களின் மனதைக் கெடுக்கவேண்டுமென்பதுதான்.

இதெல்லாம் பார்க்கும்போதுதான், மந்திரி சபையை விரிவுபடுத்தவேண்டுமென்று கருதுகிறேன்.

சாதாரண நபர் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட உத்யோகத்தைக் கொடுத் தால்கூட, அவர் எந்த வகுப்பு? எந்த ஜாதி? என்பனபோன்ற ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறார்கள். உடனே கிளர்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.
திராவிடர் கழகப் பத்திரிகைகள் தினம் துவேஷப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இவைகளைத் தண்டிப்ப தென்றால், தினம் தண்டனை கொடுத்து வரலாம். தண்டனை கிடைத்தால் உடனே பெரும் கூச்சல் போட ஆரம் பித்துவிடுவார்கள்.

திராவிடர் கழகத்தினர் இனிமேல் அதிக கோபப்படுவார்கள். அதைச் சமாளிக்க உங்களுக்கு மனோ தைரியம் வேண்டும்.

இனி தமிழ்நாடு சந்தோஷமாக இருக்கவேண்டுமானால், எப்படியாவது திராவிடர் கழகக் கணக்கை கட்டி வைத்துவிட வேண்டும். அவர்களது கணக்குப் புத்தகத்தை மூட்டை கட்டி வைத்துவிட வேண்டும். அவர்கள் செய்கை இனி வரலாற்றில்தான் இடம்பெற வேண்டுமேயல்லாது, நாட்டில் காணுமாறு விடக் கூடாது. இதற்கான நடவடிக்கையை காங்கிரஸ்காரர்களாகிய நீங்கள் எடுக்க வேண்டும்.

                            --------------------(சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் சென்னை மாநில முதலமைச்சர் சி.இராசகோபாலாச்சாரியார் - விடுதலை, 4.10.1953)

மூட்டைப் பூச்சிகள் - எறும்புகள்!

துவேஷத்தில் ஊறிப் போய் வகுப்புத் துவேஷத்தைப் பரப்பும் திராவிடர் கழகம் போன்றவை எறும்புகளுக்கும், மூட்டைப் பூச்சிகளுக்கும் சமம். ஆனால், எறும்புகளும், மூட்டைப் பூச்சிகளும் மறைந்திருந்து நம்மைக் கடிக்காதபடி வெளிப்படையாக வந்து கடிக்கின்றன. கடி பலமாக இருக்கும்போது இவைகளை நசுக்கவேண்டியது இயற்கையே.

வகுப்பு வித்தியாசங்கள்தான் அந்த எறும்பு களுக்கு வெல்லம்போல் இருக்கிறது. அந்த வெல்லத்தை அகற்றி விரட்டினால் எறும்புகள் நம்மை விட்டுச் சென்றுவிடும். இவ்வேலையை காங்கிரஸ் ஊழியர்கள் மேற்கொள்ளவேண் டும். கம்யூனிஸ்ட்களை நாம் அடக்கிவிட்டோம். இந்த எறும்பு, மூட்டைப் பூச்சிகளையும் ஒழித்துக் கட்டவேண்டும்.

            --------------------(திருப்பூர் காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஆச்சாரியார் - விடுதலை, 6.10.1953)

கருஞ்சட்டைகள் பேசினால் துவேஷம் - காழ்ப் புணர்ச்சி. பேசியிருப்பவர் ஆச்சாரியாயிற்றே - அதுவும் மாண்புமிகு முதலமைச்சர் ஆயிற்றே - அதுவும் அக்கிரகாரவாசியாராயிற்றே - அக்னியைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிற்றே- அவர்கள் ஆயிரம் பேசலாம் நாம் கேட்டுக் கொண்டுதானிருக்க வேண்டும் - அப்படித் தப்பித் தவறிப் பேசிவிட்டால் நாயக்கர் கட்சிக்காரர்கள் அல்லவா - அப்படித்தான் பேசுவார்கள்;
நாக்கில் நரம்பின்றிப் பேசுவார்கள் என்று அவர்கள் கைகளில் உள்ள பத்திரிகை ஜடாயுதத்தைக் கொண்டு தாக்குவார்கள்.

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் சேலம் ஆத்தூரில் சுயமரியாதை - திராவிடர் கழக மாநாடு நடத்தப்பட்டது (10, 11.10.1953).

அந்த மாநாட்டின் சிறப்பு என்ன தெரியுமா? அதிக தீர்மானங்கள் கிடையாது. ஒரே ஒரு தீர்மானம் முத்தாய்ப்பான தீர்மானம்.

பார்ப்பனர்கள் திராவிடர் கழகத்தை ஒழிப்பதற்காக திராவிட மக்களுக்குள்ளாகவே கலக மூட்டவும், தூண்டிவிடவும் முயல்வதால், கழகத் தோழர்கள் நிராயுதபாணிகளாக இருக்கிறார்கள் என்று கருதி காலித்தனம் - பலாத்காரம் செய்யத் தூண்டுமாதலால், திராவிடர் கழகத்தினர் சட்டத் துக்குக் கட்டுப்பட்ட அளவுக்கு ஒவ்வொருவரும் ஆணும் - பெண்ணும் ஒரு கத்தியைத் தற்காப்புக்காக அவசியம் எப்போதும் மடியில் வைத்திருக்க வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. 10, 11.10.1953 ஆத்தூர் (சேலம்) சுயமரியாதை - திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

(முதலமைச்சரே திராவிடர் கழகத்தினரை எறும்பு, மூட்டைப் பூச்சி போல் நசுக்கவேண்டும் என்றும், அவர்களின் கணக்கை முடிக்கவேண்டும் என்றும், போலீசார் தலையிடமாட்டார்கள் என்றும் வெளிப்படையாகச் சொன்ன நிலையில்தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கியமாகும்).

அதே சேலம் ஆத்தூரில்தான் வரும் ஞாயிறன்று (27.1.2013) திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் எழுச்சி மண்டல மாநாடு.

காலம் மாறிவிட்டதே- அன்று ஆச்சாரியார் கக்கிய விஷத்தை இன்றைக்குப் பார்ப்பனர்கள் மறுபதிப்புச் செய்கிறார்களா என்று கேட்கலாம்.
அதிலென்ன சந்தேகம்? முன்பைவிட சாமர்த்தியமாகச் செய்கிறார்கள் - நுட்பமாகச் செய்கிறார்கள் - திட்டமிட்ட வகையில் செய்கிறார்கள்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற சட்டம் ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திலே ஒருமுறையல்ல - இருமுறை நிறைவேற்றப்பட்டும் இருமுறையும் உச்சநீதிமன்றம் சென்று முடக்கியவர்கள் யார்?
பார்ப்பனர்கள்தானே!

கோவிலில் வழிபாட்டு மொழி தமிழில் என்றால், அதனை எதிர்த்தும் நீதிமன்றம் சென்றவர்கள் யார்?

பார்ப்பனர்கள்தானே!

தமிழ் செம்மொழி என்றால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வருமா என்று எழுதும் ஏடு எது?

பார்ப்பன தினமலர்தானே!

தமிழ்நாட்டு வணிக நிறுவனங்களின் பெயர் தமிழில் இருக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்தால், இது ஒரு மொழி நக்சலிசம் என்று எழுதும் சோ  யார்?
பச்சைப் பார்ப்பனர்தானே!

ஜாதித் தீயை விசிறி விடுகிறார் பா.ம.க. நிறுவனர் என்றவுடன், அவருக்கு வக்கீலாக வந்து வாதாடுபவரும் சோ பார்ப்பனர்தானே!

இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்? என்று இன்றைக்கும் புத்தகம் வெளியிடுகிறதே விஜயபாரதம்   கம்பெனி? அவர்கள் யார்?
சாட்சாத் பார்ப்பனர்கள்தானே!

சென்னை அண்ணாநகரில் பச்சையாக பிராமணர் மாநாடு போட்டு, அரிவாளைத் தூக்கிக் காட்டி ஆணவ ஆரியக் கொள்ளிகளாக தங்களை அடையாளப்படுத்த வில்லையா?

எழுத்தாளர் சுஜாதா, இயக்குநர் பாலச்சந்தர் போன்றவர்கள் எல்லாம் அந்த மாநாட்டில் பங்கேற்று, ஆம், நாங்கள் பிராமணர்கள்தான் - பூணூல்காரர்கள் தான்!  என்று அடையாளம் காட்டிக் கொள்ளவில்லையா?

நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதே (1976) நினைவிருக்கிறதா?
சட்டைப் பனியனுக்குள் ஒளித்து வைத்திருந்த பூணூலை அந்தக் காலகட்டத்தில் சட்டைக்கு வெளியே தெரியும்படி காட்டி நம்மைப் பார்த்து பழிப்புக் காட்டினார்களே, மறந்துவிட முடியுமா?

விடுதலையில் தந்தை பெரியார் என்று போடக் கூடாது என்று தணிக்கை செய்தவர்கள் யார்?

சங்கராச்சாரியாரின் சீடர்களான பார்ப்பனர்கள் தானே?

மானமிகு கலைஞர் அவர்களைப் பார்த்து ஜென்மப் பகைவர் என்று சொன்னவர்தானே இன்றைய முதலமைச்சர் -
அவரும் பார்ப்பனத்திதானே!

இன்றுவரை ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புது முறுக்குடன் புதுப்பித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

வடக்கே - வி.பி. சிங், லாலுபிரசாத்
தெற்கே - கலைஞர், வீரமணி

என்றால், இன்றுவரை பார்ப்பன ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள் - எரிச்சலைக் கொட்டிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.

காலம் மாறுகிறது - ஆனாலும் பார்ப்பனர்களின் முறைகளில் மாற்றம் இருக்கிறதே தவிர, அடிப்படையில் அணு அளவும் மாற்றமில்லை. பா.ஜ.க. எனும் பசப்பு அரசியல் வேடம்தாங்கி பார்ப்பனீயம் பாசிச வாயை அகலமாகத் திறந்துகொண்டுதானே திரிகிறது!

நம் பணி வேறு எந்தக் காலகட்டத்தைக் காட்டிலும் இப்பொழுது மிக அதிகமாகவே தேவை! தேவை!!

அந்தத் தேவையின் வீச்சை வெளிப்படுத்துவோம் வாருங்கள், சேலம் ஆத்தூருக்கு.

வரும் ஞாயிறன்று எழுச்சிமிகு ஊர்வலம் - ஏற்றமிகு மாநாடு.
தமிழர் தலைவர் கருத்துரை தருகிறார் - 1953-க்குப் பிறகு மீண்டும் ஓர் எழுச்சியைத் தரட்டும் ஆத்தூர்.

மாநாட்டுப் பணிகளைத் தடபுடலாகச் செய்துகொண்டு இருக்கிறது கருஞ்சட்டைச் சேனை!

ஆத்தூரில் சந்திப்போம், அரிமாக்களே!

அவசியம் வாருங்கள் - குடும்ப உறுப்பினர்களோடு வாருங்கள்! வாருங்கள்!!

             -----------------------------"விடுதலை” 23-1-2013  இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

12 comments:

தமிழ் ஓவியா said...


பெண்களின் தர்மம்...


சாத்திரச் சம்பிரதாயங்களில் பெண்களின் தர்மம் என்ன என்று பார்த்தால் நிபந்தனையற்ற அடிமையாக அடங்கி ஒடுங்கி வாழ்பவளே மோட்சத்திற்குப் போவாள் என்று கூறப்பட்டுள்ளது. ----------பெரியார்(விடுதலை,5.4.1961)

தமிழ் ஓவியா said...


பெண்ணுரிமைக் கோட்பாடுகள்


திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (19.1.2013) மூன்று முக்கியப் பிரச்சினை களை முன்னிறுத்தித் தொடர் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதில் ஒன்று பெண்ணுரிமைக் கோட்பாட்டை முன்னிறுத்துவதாகும்.

பெண்கள் மனித சமூகத்தின் சரி பகுதி - ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை மதங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்வதில்லை.

இந்தியாவில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகளாக இருந்தவர்கள்கூட - பெண்கள் என்றால் அவர்கள் அடுப்பங்கரைக்குள் முடங்கிக் கிடக்கவேண்டும் என்றே எதிர்பார்க்கிறார்கள்.

இப்படிப் பெண்களை ஒன்றுக்கும் உதவாதவர் களாக அடிமைப்படுத்திய காரணத்தால் மனதள விலும், உடல் அளவிலும் பலகீனமானவர்களாக ஆக்கப்பட்டு விட்டனர்.

கடும் போராட்டங்களின் காரணமாக பல வகையான உரிமைகள் கல்வி, வேலை வாய்ப்பில் கிட்டி வந்தாலும் ஆண்களின் ஒடுக்குமுறை ஓய்ந்த பாடில்லை.

அதன் தீய விளைவுதான் புதுடில்லியில் மருத் துவக் கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகும்.

அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளிலும் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் பெண் கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும், உயர்ஜாதி ஊடகங்கள் அவற்றை இருட்டில் பதுக்கிவிட்டன; ஆம், இந்த ஊடகப் பூனைகள் கண்களை மூடிக்கொண்டு பூலோகம் இருண்டு போய்விட்டதாகக் கற்பனையுலகில் சஞ்சரித்துக் கொண்டுள்ளன.

பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை யிலிருந்து அவர்கள் மீட்கப்படவேண்டும்; நிரந்தரப் பரிகாரம் காணப்படவேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

எதற்கும் முதற்படி என்பது விழிப்புணர்வும், தன்னம்பிக்கையும், தன் பலமும்தான். படித்த பெண் களாக இருந்தாலும் உடல் அளவில் ஆண் களுக்கு நிகராகப் பலம் பெற்றிருக்கவில்லை. அதற்குப் பல வகையான வரலாற்றுக் காரணங்கள், உளவியல் ரீதியான காரணங்கள் சொல்லப்படலாம்.

எவ்வளவு காலத்திற்கு இந்தச் சமாதானங்களைச் சொல்லிக் கொண்டு இருக்க முடியும்? திராவிடர் கழகம் தீர்மான வடிவமாகச் சொல்லும் தற்காப்புப் பயிற்சி - குறிப்பாக கராத்தே பயிற்சி கல்வி நிறு வனங்களில் தொடக்கப்பள்ளி முதலே கட்டாயமாக அளிக்கப்படவேண்டும். (பெரியார் கல்வி நிறுவனங் கள் இதனைச் செய்து வருகின்றன) துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்து உடனடியாக அதற்கான அனுமதி யையும் அளிக்கவேண்டும்.

நான்கு இடங்களில் பெண்களிடம் வாலாட்டிய கொடியவர்கள் பதிலடி கொடுக்கப்பட்டனர் என்ற செய்தி வந்தால் போதும், இந்த ஆண் சூராதி சூரர்கள் இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளியக் கூடியவர்கள்தாம்.

மற்றொரு முக்கிய வாய்ப்பு என்பது சட்டமன்றங் களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்குரிய 33 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை நிறை வேற்றி, பெண்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக அவர்களே குரல் கொடுக்கும் பொழுதுதான் அதற்கான விடிவு விரைவில் கிடைக்கும்.

மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பெண் உறுப்பினர்கள் என்பது குறைந்தபட்சமாகும். அந்த நிலை ஏற்பட்டால், நாடாளுமன்றமே கிடுகிடுக்காதா?

எருதின் புண் காக்கைக்குத் தெரியாது. பெண் களுக்கான உரிமைகள், குறைபாடுகள் எந்த அள வுக்கு ஆண்களால் உணரப்பட முடியும்? அப்படியே உணர்ந்தாலும் அவர்கள் பெண்களுக்காக முன்வந்து போராடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதே!

1996 ஆம் ஆண்டு முதல் இதற்கான மசோதா நிலுவையில் உள்ளதே. மாநிலங்களவையில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவையிலும் நிறைவேற்றப்படவேண்டும். அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் அந்தச் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

தேர்தல் நேரம்... அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தால், அனேகமாக எந்த அரசியல் கட்சியும் பெண்களுக்கு எதிராகச் செயல்படாது என்று எதிர்பார்க்கலாம்.

பெண்கள் அமைப்புகளும் இத்திசையில் குரல் கொடுப்பார்களாக! திராவிடர் கழகம் தொடர் பிரச்சாரத்தில் இதனை முன்னெடுத்துச் செல்ல உள்ளது - ஆதரவு தாரீர்! 23-1-2013

தமிழ் ஓவியா said...


இரிடியமா?


அய்யய்யோ, கோவில் கலசங்களில் இருப்பது இரிடி யம் அல்ல, அல்ல! என்று இந்து அறநிலையத் துறை அலறுகிறதே, ஏன்? அவசர அவசரமாக அந்தத் துறை அறிவிப்புகளை அளிக்கிறதே - ஏன்?

வேறு ஒன்றும் இல்லை. இரிடியம் என்பது மிகவும் விலை உயர்ந்த பொருள். அதைத் திருடிக் கொண்டு போய் விற்றால் கொள்ளைப் பணம் கிடைக்கும் என்று சிலர் வாயூறி நிற்கின்றனர்.

இதற்கு இப்பொழுது ஏற் பட்டுள்ள அவசியம் என்ன தெரியுமா? விருத்தாசலத் தையடுத்த மங்கலம்பேட்டை - எடைச்சித்தூரில் கேசவப் பெருமாள் கோவில் இருக் கிறது. அந்தக் கோவில் கல சத்தில் இரிடியம் இருக்கிறது என்று நினைத்து அதனைத் திருடுவதற்கு முயற்சி செய் ததாக சென்னையைச் சேர்ந்த கணவனும், மனைவி யும் கைது செய்யப்பட்டுள்ள னர்.

இதுபோன்ற முயற்சிகள் பல இடங்களிலும் மேற் கொள்ளப்படுகின்றன என் பதை அறிந்த நிலையில்தான், இந்து அறநிலையத் துறை, அதெல்லாம் இரிடியமும் கிடையாது - ஒரு மண்ணாங் கட்டியும் கிடையாது - கோவில் கலசத்தில் இருப்ப தெல்லாம் என்ன தெரியுமா? கம்பு, கேழ்வரகு, அரிசி, எள், கொள் போன்ற நவதானி யங்கள்தான் கலசத்தில் வைக்கப்படுகின்றன; மேலும், அந்தக் கலசம் என்பது வெறும் செம்பாலானது! என்று இந்து அறநிலையத் துறை அறிக்கை கொடுத் துள்ளது.

இதனை நினைத்தால் வயிறு குலுங்க சிரிப்புதான் வருகிறது. ஒரு கோவிலின் கலசத்தைக் காப்பாற்றிட, அந்தக் கோவிலில் குடி கொண்ட கடவுளுக்குத் துப்பு இல்லை - சக்தியில்லை என்பதை இதன்மூலம் இந்து அறநிலையத் துறை அதி காரபூர்வமாக அறிவிப்ப தாகத்தானே அர்த்தம்!

இன்னொன்று, அப்படித் திருட நினைப்பவர்களும் கடவுள் மறுப்பாளர்கள் - கடவுள் நம்பிக்கையற்றவர் களும் அல்லவே!

அப்படி இருந்தும் அவர் கள் திருடுகின்றனர் என் றால், அவர்களுக்கு ஒன்று நன்றாகவே தெரிந்திருக் கிறது - கடவுளாவது கத் தரிக்காயாவது - வெறும் பொம்மை என்பதை நூற் றுக்கு நூறு தெரிந்து வைத் துள்ளனரே!

குமுதம்: பெரிய மற்றும் சிறு கோவில்களில் அடிக்கடி கொள்ளை, கொலை போன்ற விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன. இதற்கு என்ன காரணம்? மக் களுக்குக் கடவுளின்மீது உள்ள பக்தி போய்விட்டதா?

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி: கொலை, கொள்ளை செய்யத் துணிகிறவர்களில் அனேகம் பேர் பக்தர்களா கவே இருந்து ஆண்டவனி டத்தில் பிரார்த்தனை செய்து கொண்டு தப்பித்துக் கொள் வதற்கு வழி தேடுகிறார்கள். நாத்திகத்திற்கும், இப்படி எடுத்துப் போவதற்கும் சம் பந்தம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. பொது வாக பேராசை ஜாஸ்தியாகி விட்டது... பணமுடை அதி கரித்துள்ளது. (குமுதம், 12.9.1996)

நாம் சொல்லுவதைத் தானே சங்கராச்சாரியாரும் வேறு வார்த்தைகளில் சொல்லுகிறார், புரிகிறதோ!

- மயிலாடன் 23-1-2013

தமிழ் ஓவியா said...


அவாள் ஏடே சான்று!


கேள்வி: பி.ஜே.பி. ஆளும் மாநிலங்கள் எதுவும் குஜராத்தைப் போல ஏன் முன்னேறவில்லை?

பதில்: குஜராத் மாநிலத் தில் ஓரளவு முன்னேற்றம் தெரிவதற்கு பி.ஜே.பி. காரணம் அல்ல.... மோடி. அவரையும், குஜராத்தையும் மட்டுமே காட்டி, மத்திய அரசைக் கைப்பற்றிவிட லாம் என்று பி.ஜே.பி. நினைப்பது நகைப்பிற்கு உரியது. அங்கேயும் ஊழல் நிழல்கள் அதிகம் உண்டு. எதிர்க்கட்சி என்பதால் அவை அமுங்கிக் கிடக்க லாம்.

- ஜூனியர் விகடன், 23.1.2013, பக்கம் 10

தமிழ் ஓவியா said...


ஷிண்டேமீது குதறுபவர்கள், இதற்கென்ன பதில் சொல்வார்கள்?


தீவிரவாதத் தாக்குதலில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பு

பட்டியலிட்டார் மத்திய உள்துறை செயலாளர்

புதுடில்லி, ஜன.23- சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு தீவிரவாத தாக் குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்குத் தொடர் புள்ளதாக அறிவித் துள்ள மத்திய அரசு அவற்றில் தொடர்பு டைய 10 பேர் பெயர் களையும் வெளியிட் டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில், காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வு மாநாடு நடை பெற்றது. இந்த மாநாட் டில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை அமைச் சர் சுஷில்குமார் ஷிண்டே, இந்துத் தீவிரவாதம் குறித்து வெளியிட்ட தக வலை வைத்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.

இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கட்சி உடன டியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள் துறை அமைச்சர் ஷிண் டேவை பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும், பாரதீய ஜனதா வற் புறுத்தி வருகிறது. இந்த நிலையில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல் மான் குர்ஷித், ஷிண்டே வின் கருத்தை நேற்று ஆதரித்தார்.

ஆர்.எஸ்.எஸ். தொடர்புள்ள 10 பேர்

இதற்கிடையில், தீவி ரவாத தாக்குதல்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத் துக்குத் தொடர்பு இருப் பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, மத்திய உள் துறை செயலாளர் ஆர்.கே.சிங் நேற்று மாலை அறிவித்தார். சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி மற்றும் (அஜ்மீர்) தர்கா ஷரீப் பில் நடந்த தீவிரவாத குண்டு வெடிப்பு தாக்கு தல்களில், குறைந்தபட் சம் ஆர்.எஸ்.எஸ். இயக் கத்துடன் தொடர்பு டைய 10 பேர் ஈடுபட்ட தற்கான ஆதாரங்கள் உள்ளன என்று, அவர் தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப் பைச் சேர்ந்த சுனில் ஜோஷிக்கு (இவர் இப் போது உயிருடன் இல்லை) சம்ஜெதா ரயில் குண்டு வெடிப்பு மற்றும் அஜ் மீர் ஷெரீப் தர்கா குண்டுவெடிப்பில் தொடர்புள்ளது.

இவர் 1990 முதல் 2003 வரை மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கப் பணிகளை மேற்கொண்டார். சந்தீப் தாங்கே என்பவருக்கு (தலைமறைவாக உள்ளார்) சம்ஜெதா, மெக்கா மசூதி, அஜ்மீர் ஷெரீப் தர்கா குண்டு வெடிப்பில் தொடர்புள்ளது. இவர் இந்தூர் உள் ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக ராகச் செயல்பட்டார். அதே போன்று லோகேஷ் சர்மா, சுவாமி அசீமானந்த், ராஜேந்தர் என்ற சமுந்தர், முகேஷ் வாசனி, தேவேந்தர் குப்தா, சந்திரசேகர், கமல் செகான், ராம்ஜி கல்சங்ரா ஆகியோருக்கு இந்த மூன்று குண்டு வெடிப்பு சம்பவங்களிலோ அல்லது ஏதாவ தொன்றிலோ தொடர்புள்ளது. இவர்களில் ராம்ஜியை தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார் ஆர்.கே. சிங். ஜனார்த்தன் திவிவேதி

உள்நாட்டின் காவி தீவிரவாத சர்ச்சை ,தீவிரம் அடைந்து வரும் நிலையில், தீவிரவாதத்துக்கு ஜாதியோ மதமோ இல்லை என்ற தனது கருத்தில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருந்து வருகிறது. இந்தத் தகவலை தெரிவித்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜனார்த்தன் திவிவேதி, இந்த பிரச்சினையை நீண்ட காலத்திற்கு முன்பே காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தி இருப்பதாக தெரிவித்தார். தீவிரவாதத்திற்கு எந்த மதமும் இல்லை என்பதே காங்கிரசின் கருத்து என்று ஜனார்த்தன் திவிவேதி தெரிவித்தார்.

தமிழ் ஓவியா said...


கடவுளால் முடியாதது மனிதனால் நடக்கட்டும்


திருப்பதி, ஜன. 23- திருப்பதி ஏழுமலை யான் கோவில் அறங் காவலர் குழு கூட்டம் திருமலை அன்னமயா பவனில் நேற்று முன் தினம் நடந்தது. இதில் பல்வேறு முடி வுகள் எடுக்கப்பட்டன. அதன்படி திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர் மாரடைப்பால் மரணம் அடைந்தாலும் விபத்து ஏற்பட்டு உயிர் இழந்தாலும் அவரது குடும்பத்துக்கு தேவஸ்தானம் சார்பில் ரூபாய் ஒரு லட்சம் நிதி வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
கடவுள் என்னும் குத்துக்கல்லால் முடியா தது மனிதர்களால் மனி தாபிமானத்தோடு நடக் கட்டும்.

தமிழ் ஓவியா said...


மாணவர்களே, அறிவியல் உணர்வோடு வாழுங்கள்!



புதிய கண்டுபிடிப்பு ஒன்று உங்களால் நிகழ வேண்டும்

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வெள்ளி விழாவில் மேனாள் குடியரசுத் தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம் ஆய்வுரை நீங்கள் அனைவரும் கனவு கண்டு அவையனைத்தும் சாதனைகளாக மாறவேண்டும். நீங்கள் விரும்பும் எல்லையை அடைய மற்றும் போதியஅறிவைப் பெறவேண்டும். கடின உழைப்பு, சாதனைப் படைப்பு, தோல்விகளால் துவளாமை, வெற்றிகளையே உங்கள் இலட்சியங்களாக்க வேண்டும். விண்வெளி சாதனை யில் உங்கள் தொலை நோக்கு என்ன? என்பதைச் சிந்தியுங்கள்!

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விண்வெளி திருவிழாவில் பங்கேற் பதில் பெருமகிழ்வு எய்துகிறேன். மாணவருடன் கலந் துரையாடி அவர்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இந்த விழா அமையும் என நான் நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துக்கள். நான் விண்வெளி ஆய்வுக் குடும்பத்தில் ஒரு உறுப்பி னராக நாற்பது ஆண்டுக்காலம் பணி செய்துள்ளேன். என்னோடு பணி செய்த சிறந்த விண்வெளி ஆய்வு முன்னோடிகளையும் தொழில்நுட்ப வல்லுநர் களையும் இப்போது நினைவு கூர்கிறேன். அவர்களுள் மிகவும் முக்கியமானவர் டாக்டர் விக்ரம் சாராபாய் டாக்டர் ஹம்ம பிரகாஷ், டாக்டர் சத்தீஷ் டவான், ஆகியோர் விண்வெளி அனுபவங்கள் வெற்றிகரமாக செலுத்தியபோது பெருமகிழ்வு அடைந்திருக்கிறேன். அதே நேரத்தில் ஒருசில கூட்டுத்திட்டங்கள் தோல்வி யடைந்த போது மிகவும் மனம் வருந்தியிருக்கிறேன். எங்களுடைய வெற்றிகளிலும் தேவைகளும் என்னோடு பணியாற்றியவர்கள் அர்ப்பணிப்பு உணர் வோடு பணியாற்றினார்கள் இன்று இப்பகுதியைச் சார்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவருடன் நான் விண்வெளித்துறையில் பெற்ற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். நண்பர்களே உங்களையெல்லாம் காணும்போது எனக்கு ஒன்று! ஞாபகத்திற்கு வருகிறது புதிய கண்டுபிடிப்புகளும் புதிய தயாரிப்புகளும் என் கண் முன்னே நிற்கின்றன கண்டுபிடிப்பாளர்கள். புதிய சாதனை படைத்தவர்கள்

1. விமானத்தைக் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள்

2. படச்சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மேன்

3. மின் விளக்கைக் கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன்

4. தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம் பெல்

புதிய கண்டுபிடிப்புகள் உருவாக்கியவர்கள்

1. ஆல்பர்ட் அய்ன்ஸ்டின் கண்டுபிடித்த சக்தி தொடர்பான சூத்திரம் E = Mc2

2. எண்கணிதத்தில் சீனிவாச ராமானுசம் கண்டறிந்தவை.

3. சந்திரசேகர் எல்லை என்று கண்டறிந்த எஸ்.சந்திரசேகர்

4. ராமன் விளவை கண்டறிந்த சர்.சி.வி.ராமன்

5. புத்தாக்க உருவாக்கமும் கண்டு பிடிப்புகளும் படைப்பாற்றல் கொண்ட மனித மூளையில் உருவான சிந்தனை தான் கண்டுபிடிப்புகளை உருவாக்குகின்றன. அதிக அளவு சிந்தனை மனம் கொண்டவர்கள் இருந்தால் அந்நிறுவனம் விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த சாதனைகளை உருவாக்க முடியும்.

தமிழ் ஓவியா said...

விண்வெளித் திட்டங்கள்

நம்மிடம் உள்ள வளங்களைக் கொண்டே விண்வெளித் துறையில் நாம் வளர்ந்து ஓங்கியிருந் தோம். இச்சாதனைகளுக்கு அடித்தளம் இட்ட டாக்டர் விக்ரம் சாரா பாய் அவர்களைத் தொடர்ந்து தலைமையேற்ற டாக்டர் சத்தீஷ் தவான் டாக்டர் பி.ஆர்.ராவ் டாக்டர் கே.கஸ்தூரிரங்கன், டாக்டர் மாதவன் நாயர், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகிய வல்லுநர்கள் இந்திய விண்வெளி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியவர்கள். அவர்கள் அனைவருடனும் நான் பல்வேறு சமயங்கள் சேர்ந்து பணி செய்துள்ளேன். இந்நினைவுகளை ஒவ்வொரு வினாடியும் சிந்தித்து அவர்களோடு நான் பெற்ற அனுபவங்களை எண்ணிப் பார்க்கிறேன். குறிப்பாக மிகச்சிறந்த மனிதர்களாகவும் சத்தீஸ் தவான் அவர்களைப் போற்றுகிறேன். விண் வெளித் தொழில்நுட்பம் என்பது பல அடையாளங் களை சார்ந்திருக்கிறது. தொலைநோக்கு உயர்தொழில் நுட்பம் கட்டுபாடுகளும் சரிசமம் . தலை சிறந்த மனிதமூளைகளின் கலவை சாதனையே விண்வெளித் தொழில்நுட்பம் ஆகும். இளைஞர்கள் சிந்தனைப் பொலிவுடன் செயல்படுங்கள் நண்பர்களே உங்களைப் போன்ற இளைஞர் களிடம் இந்தியாவில் ஒரு இந்தியா அமெரிக்காவும் கண்ட கனவை பற்றி சொல்லப்போகிறேன். புது டில்லியில் 2005ஆம் ஆண்டு அனைத்துலக குழந் தைகள் போட்டியில் கலந்துகொண்டேன்.

இது சங்கர் அமைப்பால் நடத்தப்பட்டது. அப்போட்டியில் 13 வயதுடைய அரித்திரா கிருஷ்ணா என்ற பெண் தொலைநோக்கு சிந்தனையோடு கி.பி.மூவாயிரத்தில் உலகம் எப்படி இருக்கும் என்று சொல்லியிருந்தாள். அதில் மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு குடியேறு வதாகவும் அங்கு மனித பண்பாடு செழித்து ஓங்குவ தாகவும் சொல்லியிருந்தார்கள். இந்த குடியேற்றங்கள் வியாழக்கிரகத்தினால் உண்டான விண்கற்களல் தகர்த்தெறியப்பட்டது. இறுதியில் செவ்வாய் கிரகம் அழிந்து போகாது. விஞ்ஞானிகள் இவ்வழிவை தடுத்து செவ்வாய் கிரகத்தை காப்பாற்றுவதற்கு ஆவன செய்கிறார்கள். ஒரு இளயமனதில் ஏற்பட்டது இந்த அருமையான சிந்தனை! அரித்தரா கிருஷ்ணாவுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. இந்த கற்பனையை கண்டு நான் வியந்தபோது ஒரு உண்மையான விண்வெளி சோதனை நடத்தப்பட்டது. 2005 ஜுலை 4 ஆம் நாள் விண்வெளியில் ஓர் அற்புதம் நடந்தது.

தமிழ் ஓவியா said...

நாசா அனுப்பிய விண்கலம் (Deep Impact ) டெம்பில் 1 என்ற மற்றொரு கலத்தோடு மோதி ஒரு கால் பந்தாட்ட மைதானத்தைப் போன்ற அளவிற்கு பள்ளத்தை உருவாக்கியிருந்தது. அதனுடைய ஆழம் 14 மாடி கட்டிடத்தின் அளவிற்கு இருந்தது. 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ல் நான் அமெரிக்காவில் உள்ள பாசதெனா என்ற இடத்தில் இருந்த போது செவ்வாய் கிரக ரோவர் விண்கல சோதனை அங்கு ஒரு பெண் அதை பற்றிய விவரங்களையெல்லாம் தெளிவாக சொன்னார். அவர் பெயர் ஜென்னி. இயந்திர பொறியியல் படித்தவர் அவருக்கு செவ்வாய் கிரக இயந்திர மனித சோதனை சாவடியில் வேலை கிடைத்தது. அவர் செவ்வாய் கிரக ஆய்வு விண்கல வடிவமைப்பில் பெரும் பங்காற்றியது குறித்து மகிழ்ந்தார்.

சந்திராயன் 1

சந்திராயன் 1 என்ற செயற்கைக்கோள் சந்திர மண்டல ஆய்வுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்தியா அமெரிக்கா கூட்டுத் திட்டம். இது ஒரு சிறந்த வெற்றிகரமான திட்டமாகும். நாசா தலைமை விஞ்ஞானி என்னிடம் சொன்னார். அமெரிக்காவை போன்று பல நாடுகள் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். ஆனால் அம்முயற்சியில் தோல்வி கண்டனர். இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து கூட்டு முயற்சியில் ஆய்வு செய்ததில் தண்ணீர் இருப்பதை கண்டறிந்தோம். ஆகவே கூட்டு முயற்சிக்கு சிறந்த பலன் கிடைத்தது. விண்வெளியையும் நாம் தாய் அன்போடு அணுகவேண்டும். நாம் வசிக்கும் இப்பூமியையும் வறுமையற்ற போர்க்களமற்ற மகிழ்வான வாழ் விடமாக நாம் செய்யவேண்டும்.

தமிழ் ஓவியா said...

க்யூரியா சிட்டி விண்கலம்

ஆகஸ்ட் 5, 2012 ல் நாசா தொழில்நுட்ப வல்லுநர்கள் வெற்றிகரமாக ஒரு சோதனைச் சாலையை விண்வெளியில் அமைத்தார்கள். இதில் க்யூரியா சிட்டி என்ற தானியங்கி ஆகஸ்ட் 5 அன்று 10.32 மணியளவில் இறங்கியது. இந்த தானியங்கி செவ்வாயில் உள்ள உயிர்வாழ் இனங்களைப் பற்றி செய்திகளைத் தரும். க்யூரியா சிட்டியின் வெற்றி ஒருங்கிணைந்த முயற்சியின் வெற்றி செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விண்வெளி ஆய்வு மய்யத்தில் நான் பணியாற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் 1971 அக்டோபர் 9 அன்று நம்நாடு ராக்கெட்டை முதன்முதலில் விண்ணில் செலுத்தியது இதற்காக ஏவுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுதளத்திற் கான பணி செய்த சிறந்த நண்பர்களை நினைத்து பார்க்கிறேன். சாலிடுமோட்டார் வளர்ச்சிக்கு உதவிய வர்களை நினைத்துப் பார்க்கிறேன். ராக்கெட்டை விண்வெளியில் செலுத்தும்போது ஏற்படும் குறு குறுப்பு அதைத் தொடர்ந்து அச்சம் உத்வேகம் இவையெல்லாம் வரலாற்றில் பதியபட்டவையாக என்மனதில் ஆழமாக பதிந்துள்ளன.

எதிர்காலத் திட்டம்

திரும்பவும் பயன்படுத்தக்கூடிய தானியங்கி செலுத்து இயந்திரங்கள் கீழ்க்காணும் அய்ந்து அம்சங்கள் தொடர் ஆய்வை மேற்கொள்ள செய்தது. அவை அனைத்தும் வேளாண்மை, உணவை பதப்படுத் துதல், கல்வி, நலவாழ்வு, செய்திதொடர்பு, கட்டமைப்பு உருவாக்கம் என்பனவாகும். இதுபோன்று மின் ஆளுமைத்திட்டம், நகர அமைப்பு திட்டம் ஆகிய வையும் செப்பம் செய்ய வேண்டும்.

என்னை உற்சாகப்படுத்திய விஞ்ஞானிகள்

தமிழ் ஓவியா said...

அணுதொடர்பு பற்றிய அய்ன்ஸ்டின் கொள்கை ஸ்டிபன் ஹாக்கின் அவர்களின் வானியல் ஆய்வுகள் ஸ்காட் நிக்கட்சியின் பாபி மிக்கட்சன் ஆகியோ ருடைய ஆய்வுகள் சிந்திக்கத்தக்கன.

நோபல்பரிசு பெற்ற (2006) விஞ்ஞானி டாக்டர் ஜான்சி மேத்தர் அவர்களை ஒரு சமயம் நான் சந்தித் தேன். அவருடைய கொள்கைகள் ஆய்வுகள் செயற்கை கோள் தொடர்பானவை

அறிவியல் மேம்பாடு

இயற்பியல் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் அவர்களுடைய அறிவியல் கொள்கைகள் நம்மை வியக்க வைக்கின்றன. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டபோது நேரில் வந்து பெறாமைக்கு அவர் சொன்ன காரணங்களைப் பார்ப்போம்.

பாரத ரத்னா விருதை நான் நேரில் வந்து பெற்றுக்கொள்ளாமைக்கு காரணம் என்னுடைய மாணவருடைய ஆய்வேட்டை முடிக்க இருந்ததால் நான் நேரில் வர இயலவில்லை என்று சொன்னார். அவரின் ஆய்வு மனப்பான்மை பாராட்டத்தக்கது. அறிவியலே வாழ்வியல் வானியல் இயற்பியல் வளர்ச்சியில் சந்திரசேகர் சுப்ரமணியன் விண்மீன் பற்றிய ஆய்வை செய் துள்ளார். அவருக்கு 1983ல் நோபல் பரிசு வழங்கப் பட்டது. சந்திரசேகருடைய மாணவர்கள் சுங்தேவ் மற்றும் சென்ஜிங்யாவ் ஆகியோர் சிறப்பான ஆய்வினை செய்தனர். இவர்களும் 1951ல் நோபல் பரிசுக்கான இடம் பெற்றவர்கள். சந்திரசேகருக்கு அறிவியலே வாழ்வியல்; இது போன்ற விஞ்ஞானிகள் இளைஞர்களை உருவாக்கு கிறார்கள் இதுபோன்று நீங்களும் அறிவியல் உணர்வோடு வாழவேண்டும். நண்பர்களே நீங்கள் எப்படி இந்த உலகால் அறியப்பட முடியும்? உங்களை நீங்களே தயார்செய்து கொள்ள வேண்டும். மனித வரலாற்றில் நீங்கள் ஒரு பக்கத்தையாவது நிரப்ப வேண்டும். அது ஒரு புதிய கண்டு பிடிப்போ அல்லது புதிய சிந்தனையாகவோ இதனால் சமூகம் மாற்ற பெற வேண்டும் இதுவே உங்களுக்கு தரும் அழைப்பாகும். இத்தகையை ஓர் பேருரையை அறிஞர்களோ அன்றி பொதுமக்களும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் கேட்டு மகிழ்ந்தனர்.

வேந்தர் கி.வீரமணி

முன்னதாக தலைமையுரையாற்றிய வணக்கத்துக் குரிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தமது உரையில்:- கிராமப்புற மாணவர்களுக்கு விண்வெளி சார்ந்த செய்திகளை தெரிந்து கொள்வதற்காக இவ்விழா நம்முடைய பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக குறிப்பிட்டார். பிரமோஸ் ஏவுகணையை அனைவரும் அறிந்துக்கொள்ளக்கூடிய வகையில் பிரமோஸ் ஏவுகணை இங்கு காட்சிப்பொருளாக வைத்திருப்பது பெருமை நாம் பெருமைப்படக்கூடிய செய்தியாகும். மேலும் தொழிலகங்களுக்கும் தொழிற் சாலைகளுக்கும் வழிகாட்டக்கூடிய தானியங்கி தொழில்நுட்பத்தை பாஸ்ரெக்ஸ்ராத் நிறுவனத்தின் மூலம் நம்முடைய பல்கலைக்கழகத்தில் அறிமுகப் படுத்தியுள்ளமையும் மிகவும் பாராட்டத்தக்கதாகும். மேலும் மேனாள் குடியரசு தலைவர் ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் அய்ந்தாவது முறையாக நம்முடைய பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து சிறப்பிப்பது நம்மிடையே அவர்கள் கொண்டிருக் கின்ற பற்றுதலை சமூதாயத்திற்கு எடுத்துக்காட்டுவதாய் அமைகிறது. எதிர் காலத்தை நிர்ணயிக்ககூடியவர் களாகிய நீங்கள் சிறந்த தொழில்நுட்ப ஆராய்ச்சி யாளர்களாவும் விஞ்ஞானிகளாகவும் விளங்க வேண்டும் என்றும் அதற்கு இதுபோன்ற தொழில் நுட்ப திருவிழாக்கள் உங்களுக்கு வழிகாட்டக்கூடிய அளவிற்கு வாய்ப்பாக அமையும் எனக்கேட்டுக் கொண்டார்.

டாக்டர் கு.தமிழ்மணி

பின்னர் சிறப்புரையாற்றிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் தலைமை நிர்வாகி டாக்டர் கு.தமிழ்மணி அவர்கள் பேசுகையில்:- இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்ட அறிவியல் கண்டு பிடிப்புகள் இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருவது சிறப்புக் குரியதாகும். இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட விமானங்களும் ஹெலிகாப்டர்களும் இன்று உலகம் முழுவதும் பறக்கின்றன என்றார். பிரமோஸ் ஏவுகணைத் திட்ட தலைமை நிர்வாகி டாக்டர் ஏ.சிவதாணுப்பிள்ளை அவர்கள் பேசுகையில் சூரிய சக்தியை நாம் முழுமையாக பயன்படுத்த வேண்டும். தற்போது விண்வெளியில் பயணிக்கும் திட்டம் குறித்த ஆய்வுகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அதில் இந்தியாவின் பங்கு குறிப்பிட தக்கதாகும் . செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் ஆய்வுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக குறிப்பிட்டார். முன்னதாக வரவேற்புரையாற்றிய பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன் அவர்கள் தமது உரையில் பெரியார் மணி யம்மை பெண்கள் தொழில்நுட்ப கல்லூரியாக உரு வெடுத்து பல்கலைக் கழகமாக வளர்ந்துள்ள நிலையில் கடந்த 25 ஆண்டுகளாக பணி செய்து இன்று வெள்ளி விழாவின் துவக்கமாக இத்திருவிழா நடைபெறுவது மகிழ்ச்சிக் குரியதாகும். இதுபோன்று பல்வேறு திருவிழாக்களை இவ்வாண்டில் நடத்த திட்டமிட் டுள்ளதாகவும் தம்முடைய உரையில் பெருமையுடன் குறிப்பிட்டார். பிரமோஸ் ஏவுகணை திட்டத்திற்கு தேர்தெடுக்கப் பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தேன்மொழி, அருண்பிரகாஷ் ஆகியோருக்கு மேனாள் குடியரசு தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து களை தெரிவித்தார். ஆராய்ச்சிப் புல முதன்மையர் நன்றி கூறினார்.

தமிழ் ஓவியா said...


திராவிடர் கழக - இணைய தள வலைப்பதிவு பயிற்சி முகாம்

திருச்சி, ஜன.23- பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங் கோவன் அவர்களின் முன்னேற்பாட்டில், திருச்சி பெரியார்-மணியம்மை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் , திராவிடர் கழக- இணைய தள வலைப்பதிவு செய்தல் குறித்த பயிற்சி முகாம் 12.01.2012 சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு வந்திருந்தோர் அனைவரையும் பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் முனைவர் வா. நேரு வரவேற்றார். புதுச்சேரி தமிழ்ப்பேராசிரியர், முனை வர் மு.இளங்கோவன் அவர்கள் வருகை தந்து , இணையத்தில் வலைப்பதிவு, மற்றும் சமூக குழுக்கள் (Facebook, Twitter) போன்ற வற்றில் எப்படிப் பதிவது என்பது குறித்தும், தமிழ்மணம், தமிழ்வெளி போன்றவற்றில் நமது வலைத்தளங்களை எப்படி இணைப் பது என்பது போன்றவற்றை கணினி முன் அமர்ந்து செய்முறைப் பயிற்சி மூலமாக பயிற்சி அளித்தார்.

தமிழோவியா என்னும் பெயரில் இணைய தளத்தில் அரும்பணியாற்றும், பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தலைவர் வ. மாரிமுத்து தன்னுடைய அனுபவங்களைத் தோழர்களோடு பகிர்ந்து கொண்டார். மற்றும் மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் சுப.முருகானந்தம், மாவட்ட துணைச்செயலாளர் பா.சட கோபன் , ஆசிரியர் மணி மற்றும் லால்குடி மாவட்டத்தை சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டு மிக்க பயன் பெற்றனர்.

பகுத்தறிவாளர் கழகத்தின் வலைத்தளம் http://www.pagutharivaalarkazhakam.blogspot.in/ சீரமைக்கப்பட்டது. விடுதலை இணைய தளத்தின் சிறப்புத் தன்மைகள் விளக்கப் பட்டன. செய்தியினை படத்துடன் அனுப்புவது, படத்துடன் வலைத்தளத்தில் செய்தியினை ஏற்றுவது குறித்து முனைவர் மு.இளங் கோவன் அவர்கள் விவரித்தார்.

தலைமை வகித்த டாக்டர் சோம.இளங் கோவன் அவர்கள் கணினி பயிற்சியின் தேவை பற்றியும், இன்றைக்கு நம்முடைய எதிரிகள் இணையதளத்தில் செய்யும் அவ தூறுகளுக்கு மாற்றாக உண்மையை உரக் கக் கூறுவதற்கு பயிற்சி தேவைப்படுகிறது என்றும், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் தன்மையில் நம்முடைய தோழர் கள் இணையத்தில் தமிழில் எழுத பயிற்சி இங்கு கொடுக்கப்படுகிறது.

சுந்தரமூர்த்தி நாயனார் கிரிமினல் வழக்குகள் போன்ற புத்தகங்களில் உள்ள செய்திகளைப் படித்து அதனை இணையத்தில் நகைச் சுவை கலந்து எழுத வேண்டும் என்றும், மாவட்டந்தோறும் இந்த மாதிரியான பயிற்சிகளை பகுத்தறிவாளர் கழகம் மற்றும் திராவிடர் கழகம் நடத்த வேண்டும் என்றும், அதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பை பெரியார் பன்னாட்டு மய்யம் தரத் தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

ஆசிரியர் அவர்களின் ஏற்பாட்டில்தான் முதன் முதலில் தமிழில் இணைய தளத்தில் விடுதலை பத்திரிக்கை வந்தது என்பதை யும், நிறைய நமது எதிரிகளுக்கு பதில் தர வேண்டிய அவசியம் இருக்கிறது என்பத னையும் எடுத்துரைத்தார். இன்றைய தேவை இணைய தளத்தின் வாயிலாக நமது இயக்க கொள்கைகளைப் பரப்புதல், அதற்குத் துணை நிற்கும் குழுவை நாம் மாவட்டந்தோறும் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருச்சி பெரியார் கல்வி நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பி. சுப் பிரமணியம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக பெரியார் மணியம்மை மேல் நிலைப்பள்ளியின் முதல்வர் மற்றும் கணி னித் துறை ஆசிரியர்களால் செய்யப்பட்டி ருந்தது. லால்குடி மாவட்ட திராவிடர் கழ கத் தலைவர் ஆல்பர்ட் அவர்கள் நிகழ்வில் இளந்தோழர்களோடு கலந்து கொண்டார்.